காதலர் தினம் என்றவுடன் பலருக்கு ரோஜாவும், சாக்லேட்டுகளும் பரிசுப் பொருட்களும் நினைவுக்கு வரும். சிலருக்கு கைகூடாத காதலின் ஏக்கமும் இன்னும் பலருக்கு காதலை எப்படி சொல்வது என்ற எண்ணமும் வரும்.

ஆனால் அடிப்படைவாதிகளுக்கோ சாதியும், மதமுமே முன் வந்து நிற்கிறது. அதிலும் இக்காலத்தில் சங்கிகளும், ‘திரௌபதியியர்களும்’ கங்கணம் கட்டிக் கொண்டி ‘நாடக காதல்’ கூத்தாடுவார்கள். ஆனாலும் கடற்கரையிலும், பூங்காக்களிலும் காதலர்கள் குவிவதை இவர்கள் யாராலும் தடுக்க இயலாது.

காதல் ஒரு மனித உணர்வு, அது முழுக்க முழுக்க தனிப்பட்ட அன்புணர்ச்சி என்பதெல்லாம் கதைகளிலும், புதினங்களிலும் மட்டுமே சாத்தியம். இன்றும் சரி என்றும் சரி காதல் இரு இதயங்களைத் தாண்டி சமூக நாடித்துடிப்புடன் சம்மந்தப்பட்டதே.

ஆணவக் கொலைகள் அரங்கேறும் இக்காலத்தில் “ஏன் காதல்?” என்று ஒரு பக்கத்திலும். ஆபாச நுகர்வு வெறி சதிராடும் இக்காலத்தில் “எது காதல்?” என்பது மறு புறமும் குத்தீட்டிகளாக நிற்கின்றன. இவற்றுக்கிடையில் காதல் குறித்த புரிதல்களை விவாதிக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். படியுங்கள்… காதலை பகிருங்கள்…

***

லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி

காதல் அனைவரையும் ஏதேனுமொரு சமயத்தில் கிளர்ச்சி கொள்ள வைக்கும் ஒன்று. பதின்மத்தின் ஒருதலைக் காதலுக்காகவோ, திருமணத்தில் முடிவுறாத காதலுக்காகவோ, ‘உண்மையான காதலை’த் தேடியோ பெரும்பாலான மனங்கள் ஏங்கித் தவிக்கின்றன. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்த  தினத்தில் அவருடைய கோட்பாடுகளை விவாதிப்பதைக் காட்டிலும் ஜென்னியுடனான அவருடைய காதலின் மகத்துவத்தை சொன்ன பதிவுகளைத்தான் முகநூலில் அதிகம் காணமுடிந்தது. காதலைக் கொண்டாட எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. இடது, வலது, லிபரல் என வேறுபட்ட கருத்துடையவருக்கும் காதல் மிகக் கிளர்ச்சியூட்டும் வார்த்தை! எது காதல்? அது எப்படிப்பட்ட தன்மையில் இயங்குகிறது? காதல் உணர்வு ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதா? …. முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

… தனது காதல்ஜோடிக்கு முன் தனது தீமைகளை மறைப்பதாக இருக்கட்டும், தனது நல்லெண்ணங்களைகாட்டுவதாக இருக்கட்டும், குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு காட்டுவதாகஇருக்கட்டும், சமூக உறவுகளில் உதவும் பண்பு திடீரென்று உருவவாதாகஇருக்கட்டும், இவையெல்லாம் ஒருகாதல் வயப்பட்ட ஆண், பெண்ணின் மனதில்இயல்பாகத் தோன்றும். மனமே பரிசுத்தமாக மாறியது போலும், பண்பே அடியோடுமாறிப்போனது போலும், இதற்கு முன் இருந்த நானும் இப்போது இருக்கும்நானும் அடியோடு வேறுபடுவதும் போல இருந்தாலும் கொஞ்ச காலத்தில் அந்தகாதல் வழக்கமானதும், அல்லது திருமணம் முடிந்ததும் இருவரதும்உண்மைப்பண்புகளை ஒருவரோருவர் தெரிந்து கொண்டு அவமானமும், சினமும்அடைவதும் அப்புறம் சில ஆண்டுகளில் இந்தப் பகை நிதானமடைந்து பிரிவதற்குவழியில்லாத பார்ப்பனிய சமூகத்தின் தடையில் மற்றவர்களின் குறைகளை சகித்துக்கொண்டு வாழப்பழகுவதும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி ஓடுகிறது… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?

சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?.. முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி

…… ‘முதல் காதல்’ கதைகளை பேசிக் ‘கொல்லும்’ பல ஆண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படியான ‘முதல் காதல்’ அனுபவங்களை விதந்தோதும் ஒரு பெண்ணைக்கூட சந்திக்கவில்லை. பலருக்கு காதல் கைகூடாமல், வேறொரு ஆணுடன் திருமணம் நடந்தபோதும்கூட தங்கள் ‘முதல் காதலை’ தனிப்பட்ட பேச்சிலும்கூட நினைவு கூறியதில்லை. பெண்கள், ஆண்களைக்காட்டிலும் நிதர்சனத்தில் வாழ்கிறவர்களாக இருக்கலாம். அல்லது ஆண்களைப்போல தங்களுடைய காதல் பராக்கிரமங்களை சொல்லிக்கொள்ளும் ‘சுதந்திரம்’ பெண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது பெண்கள் முதல் காதலை நினைப்பதால் உண்டாகும் சிக்கலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை; அவர்களுடைய சமூக வாழ்நிலை அதற்கு இடம்கொடுக்காது. ஆனால், ஆண்கள் முதல் காதலைத் தொடர எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் சமூக வாழ்நிலையும் அவர்களுக்கு பிரகாசமாகவே உள்ளது… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

ஆதலினால் காதல் செய்வீர் !

காதல் வெறும் உடலுறவு அல்லவே. ஆனால், உடலும் சேர்ந்தே காதல். பெண் மற்றும் ஆணின் விரல்கள் தீண்டுதலில் தீண்டுபவை விரல்கள் அல்ல. மாறாக, ஒரு இனத்தின் நாகரிகம் தன்னைத் தானே ஸ்பரிசித்துக் கொள்கிறது என்பதே பொருள்.

பெண்ணின் உலகம் ஆணை நம்பியும் அவன் அன்பை எதிர்பார்த்தே இருந்தது என்பதையும் கூடிய புரிதலோடேயே அந்தப் பழைய இலக்கியத்தை அணுக வேண்டும். அவை உன்னதமானவை அல்ல; மாறாக, அந்தக் காலத்தை உண்மையாக நாடகியமாகச் சொல்பவை. காதல் உலகத்தில் ஆண் ஒரு முதலாளியைப் போல, போலீஸ்காரனைப் போல நடந்துகொள்ளும் போது காதல் துளிர்ப்பதில்லை. காதல் அந்த மனிதரின் விடுதலை கூர் உணர்வில் தோன்றும் இயற்கை விழைவு. இந்த சமுகம் காதலை புரிந்து கொள்ளும் சமூகமாக இல்லை. இந்திய ஜனத்தொகையில் பெருபான்மையோர் வன்புணர்ச்சியில் பிறந்தவர்கள். ஏனெனில் சகாவான பெண் சம்பந்தப்பட்டு தாயாவதில்லை. இந்த தேசத்தில் காதல் தொழிலில் சமபங்கு ஆற்றாத பெண் காதலியாகக் கருதப் படலாமோ எனில் மட்டாள். மாறாக அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்

முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்…

அனைத்து கேலிச்சித்திரங்களையும் காண இங்கே அழுத்தவும்

***

காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !

…. லவ்வர் இருக்கவனுக்கு ஜாலி.. இல்லாதவனுக்கு பொறாமை’ண்ணா…. காதல்-ங்கிறது செம்ம ஃபீல்… அது வேற லெவல்…. அதெல்லாம் இப்படி எதிர்க்கிறவனுங்களுக்கு தெரியாது. நான் கோ-எஜுகேட்லதான் படிக்கிறேன். எல்லாம் ஆல்ரெடி கமிடட். எங்களுக்குத்தான் இன்னும் செட் ஆகல. அதுக்குதான் பார்க் – பார்க்கா சுத்திட்டு இருக்கோம். சீக்கிறத்துல செட் ஆகிடும் ப்ரோ.

காதலர்கள் ஒன்னா இருக்கும்போது தொந்தரவு பண்றவங்கள அடிச்சி விரட்டனும். பசங்க கொஞ்சம் பயப்படுறாங்க. அதுக்கு காரணம், கூட இருக்குற பொண்ணுக்கு பாதிப்பாகிடுமோன்னு யோசிக்கிறாங்க. இல்லன்னா இந்த மாதிரி ஆளுங்கள ஓட விட்டுடுவாங்க. எங்ககிட்ட வந்து அந்த மாதிரி பண்ணா அதுதான் நடக்கும். காதல எதிர்க்கிறவன் எல்லாம் சாதி வெறியனாத்தான் இருப்பான். அதனால தான் பி.ஜே.பி. எதிர்க்குது. அந்த கட்சியில இருக்கவன் எல்லாம் சாதி வெறியனுங்கதான்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

திரை விமர்சனம் : ஆதலால் காதல் செய்வீர் : அனாதையும் ஆணுறையுமா பிரச்சினை ? 

எதார்த்தத்தில் “கலவி கொள்ளலாம் வா” என்று அழைக்கும் காதலனை மறுக்க முடியாத அளவுக்கு துணிவும், அதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு மகாபலிபுரம் கிளம்பும் அளவுக்கு தைரியமும் கொண்ட ஸ்வேதா ஆணுறையின் அவசியம் அறியாத அளவுக்கு அப்பாவியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கதை நடப்பது எங்கோ குக்கிராமத்தில் அல்ல. கதையின் பின்னணியும் வயல்காடும் அல்ல, கதையின் நாயகி கொத்து வேலை செய்பவரும் அல்ல.

மேலும் படத்தில் காட்டப்படுவது போல கருக்கலைப்பு ஒன்றும் அவ்வளவு கடினமானதாக யதார்த்தத்தில் இல்லை. திருட்டுத்தனமாக கருக்கலைப்பு செய்யும் பெண்கள் பலர் இறந்து போகிறார்கள் என்ற அனுபவத்திற்கு பிறகு அரசே இப்போது கருக்கலைப்பை எளிதாக மாற்றியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் கூட பெரிய தடைகள் ஏதுமின்றி யாரும் கலைப்பு செய்து கொள்ள முடியும். பாதுகாப்பாக உறவு வைத்துக் கொண்டால் எய்ட்ஸ் கிடையாது என்று யாருடனும் உறவு வைக்கலாம் அளவுக்கு அரசு மாறியிருப்பது இயக்குநருக்கு தெரியாது போலும்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

தொகுப்பு :