“வீட்டில் முடங்கச் சொல்லும் அரசே வயிற்றுக்கு சோறு போடு ! செலவுக்கு காசு கொடு !” என்ற முழக்கத்தை முன்வைத்து வீட்டிலிருந்து குரலெழுப்புவோம் ! என்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் கடந்த 26.04.2020, ஞாயிற்று கிழமை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளிலும், சமூக இடைவெளியுடன் தெருக்களிலும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இப்போராட்டத்தில், மே 17, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக முற்போக்கு சிந்தனை கொண்ட தோழர்களும் கையில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டம் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு… பாருங்கள்… பகிருங்கள்…

***

கொரானாவால் சாவா! பட்டினியால் சாவா!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுர் வட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக கொரோனா நிதியாக மாதம் குடும்பத்திற்கு 6000 ரூபாய் வழங்க கோரியும், மக்களுடைய பட்டினியை போக்க இந்திய உணவு கழகத்தில் தேங்கி இருக்கும் உணவு பொருட்களை இந்தியா முழுவதும் இருக்க கூடிய ஏழை குடும்பங்களை தேர்வுசெய்து உணவு பொருட்களை உடனடியாக பகிர்ந்து கொடுக்க கோரியும் கவன ஈர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

மேலும் கொராரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை பாதுகாக்கின்ற பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மேலும் சமூக ஆதரவாளர்களுக்கு போதிய பாதுகாப்பும் நிதியும் ஒதுக்க கோரி, காரப்பட்டு – பொய்கை அரசூர் ஆகிய பகுதிகளில் கோரிக்கையை பதாகைகளில் பதிவு செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்சியில் மக்கள் அதிகாரம் தலைமையில் தி.மு.க , வி.சி.க , CPM , போன்ற பல்வேறு கட்சிகளின் முன்னணியாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் கிராம பொதுமக்கள், பெண்கள் குழந்தைகள் உள்பட சாலையின் இருபுறமும் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்ற வகையில் இரண்டு மீட்டருக்கு ஒரு கட்டம் என்ற வகையில் நின்று காரப்பட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோரும் , பொய்கை அரசூர் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்டோரும் கலந்துகொண்டு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த நிகழ்சி சுமார் 20 நிமிடம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

படிக்க:
♦ கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
♦ கொரோனா ஊரடங்கு : உதவிப்பணிகள் மேற்கொள்ளும் மதுரை மக்கள் அதிகாரம் !

***

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி  மே 17 இயக்கத் தோழர்கள் கையில் பதாகைகளுடன் பல்வேறு இடங்களில் கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களும் பல இடங்களில் மத்திய மாநில அரசுகளுக்கான கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கையில் பதாகைகளுடன் !

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

க்கள் அதிகாரம் மற்றும் இதர அமைப்புகள் நடத்திய இந்த கவன ஈர்ப்பு நிகழ்வு போராட்டம் குறித்து செய்தித் தாள்களில் வெளியான செய்திகள் !

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க