துரை யா. ஒத்தக்கடை கொரோனா உதவிக்குழு மூலமாக உலகனேரி, காளிகாப்பான், புதுப்பட்டி, திருமோகூர், ராஜகம்பீரம் மற்றும் ஒத்தக்கடையின் பல பகுதிகள் என ஏழு நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீரும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சொந்தமாக தைத்து 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கான முகக் கவசமும் மக்கள் அதிகாரம் தோழர்கள் விநியோகம் செய்தனர்.

மேலும், நலிந்த தொழிலாளர்கள், உடல் ஊனமுற்றோர், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு “மதுரை மாநகர் கொரோனா உதவிக்குழு” ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் மூலமாக பொருட்கள் பெறப்பட்டு முதல் சுற்றாக- ரூபாய் 1000 மதிப்பளவிலான 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய், பிரட், பிஸ்கட், நாப்கின் மற்றும் மளிகை பொருட்களும் இரண்டாவது சுற்றாக, அடுத்த 20 தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ உளுந்து மற்றும் மளிகைப் பொருட்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மூன்றாவதாக, 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், பிஸ்கட் மற்றும் மளிகை சாமான் அடங்கிய பொருட்களுடன் 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான உதவியை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் மூலமாக பெறப்பட்டு பொருள்கள் வாங்கி விநியோகிக்கப்பட்டது.

யா.ஒத்தக்கடை பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் துணையோடு நன்கொடை பெற்று தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை சமூக இடைவெளியைக் கடைபிடித்து செய்து வருகின்றனர். ஆகையால், இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பட்டினியோடு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி,

மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு : 98943 12290.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க