மிழகத்தின் பல பகுதிகளில் உழைப்பாளர் தினமாம் மே 1 அன்று, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு புரட்சிகர அமைப்புகள் சார்பில் ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்படும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மட்டுமல்லாது, அவர்களின் கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையிலும் போராட்ட நிகழ்வுகளையும் மேற்கொண்டனர்.

***

மே தினத்தில் மதுரை ஒத்தகடை பகுதி வாழ் எவர்சில்வர் தொழிலாளர்கள் மற்றும் அபே ஆட்டோ தொழிலார்கள் வீட்டிலிருந்தே குரலெழுப்பினார்கள். கொராவினாலும் அரசின் புறக்கணிப்பிற்கும் ஆளாகியிருக்கும்  இவர்கள் மாதம் ஆறாயிரம் நிதி வழங்கு!! மக்களை பாதுகாத்திடு!! என்ற பதாகைகளுடனும்.

அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் 40 நாட்களாக முடங்கியிருக்கும்  மக்களை எப்படி பாதுகாக்கும் என்ற கேள்வியுடனும் பரவலாக குடும்பமாக கலந்து கொண்டார்கள். முன்மாதிரியாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் குடும்பங்கள் மற்ற மக்களுக்கும் ஒரு தூண்டுதல்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதே போல மதுரை பகுதி பு.மா.இ.மு மற்றும் ம.க.இ.க தோழர்களும் மே தினத்தில் தோற்றுப்போன முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்ற முழக்கங்களுடனும் வீட்டிலிருந்தே குரலெழுப்பினார்கள்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை, தொடர்புக்கு : 82200 60452, 97916 53200.

***

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லுர் வட்டம் சார்பில் பொய்கையரசூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் மே-1 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தோழர்கள் மக்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மே-நாள் போராட்டத்தை நினைவு கூர்ந்து ஊரடங்கு உத்தரவு என்ற பெயரில் மக்கள் உரிமையை பறிக்கும் இந்திய அரசை கண்டித்து காட்டமான முழக்கமும், உரையும் பதிவு செய்யப்பட்டன.

இறுதியில் பொய்கையரசூர் பகுதியில் இருக்க கூடிய ஜனநாயக சக்கிகளிடம் மக்களை கொரோனா நெருக்கடியிலிருந்து உணவு ரீதியாக பாதுகாக்கும் வகையில் நிதிஉதவி பெற்று குறிப்பாக 45 அரிசி மூட்டை பெற்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ என்ற அடிப்படையில் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் மேலும் நமது அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்பட்த்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இப்படிக்கு
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணைநல்லுர் வட்டாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க