த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி ஆகஸ்டு 31 வரை தவணை மற்றும் வட்டியை வசூலிக்கக் கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை மீறி பஜாஜ், மகேந்திரா, உஜ்ஜிவன், கிராம விடியல், கிராம சக்தி உள்ளிட்ட மைக்ரோ பைனான்ஸ் நுண்கடன் நிறுவனங்களும் வாகன கடன் நிறுவனங்களும் பொது மக்களிடம் கட்டாய வசூல் செய்தும் அவமானப்படுத்தியும் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் செய்து வந்தனர்.

விருதாச்சலம் வட்டார மக்கள் அதிகாரம் சார்பாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மக்கள் வாங்கிய நுண்கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடனை நிறுத்தி வைக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் 23.06.2020 அன்று மனு அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் அமைப்பின், வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். வட்டார பொருளாளர் தோழர் செந்தாமரைக்கண்ணன், கம்மாபுரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள், விஜயமாநகரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் தனசேகரன் பூவனூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மற்றும் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக சார் ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.