பத்திரிக்கைச் செய்தி

பெண்களை மிரட்டும் நுண்கடன் நிறுவனங்கள்! பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச சட்ட உதவி !

கொரானா பேரிடரின் காரணமாக தொடர் ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமலும், வேலை இழப்பு ஏற்பட்டும் கடுமையான நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் இலவச அரிசி, மாதம் ஆயிரம் ரூபாய் என சில மாதங்கள் கொடுத்தன. இதை வைத்து உயிர் வாழ முடியாது எனினும் அருகமையில் கிடைக்கும் விவசாய வேலைகள், 100 நாள் வேலைகள், கட்டிட வேலைகளின் மூலம் அற்பான அளவு சம்பாதித்து மூன்று வேலை உணவு உட்கொள்வதே முடியாத நிலையில் பல குடும்பங்கள் உள்ளன.

இந்த நிலையில் தான் மத்திய ரிசர்வ் வங்கி 6 மாதங்கள் வரை அதாவது ஆகஸ்டு 31 வரை அனைத்து வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள் என அனைத்தும் மக்களை கட்டாயப்படுத்தி தவணைகளை வசூலிக்கக் கூடாது என உத்திரவிட்டுள்ளது. ஆகஸ்டு 31 வரை அவகாசம் போதாது, ஆகவே இன்னும் பல மாதங்கள் வரை அவகாசம் வேண்டும் என பல பொருளாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக அரசுக்கு ஆலோசனை கொடுத்துவருகின்றனர்.

எதையும் காதில் வாங்காத நுண்கடன் நிறுவனங்கள் மிரட்டியதால் பல இடங்களில் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டப்பிறகு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்டு 31 வரை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவும் பிறப்பித்தனர். இது அனைத்து பத்திரிக்கையிலும் செய்தியாக வெளிவந்தன. இந்த நிலையில் நுண்கடன் நிறுவனங்கள் தவணைகளை பெண்களை கட்டாய்படுத்தி வசூல் செய்து வருகின்றன.

போதாதக்குறைக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என்று கொடூரமாக சுரண்டுகின்றன. சில மாதங்கள் வீட்டில் உள்ள நகையை விற்றோ, கடன் வாங்கியோ கட்டி வந்தனர். தற்போது எந்த வாய்ப்பும் அவர்களிடம் இல்லை. ஆனால் இந்த நிறுவனங்களின் மேலாளர்கள், ஏஜென்டுகள் பெண்களை அவமானப்படுத்துவது, பல இடங்களில் கெட்ட வார்த்தைகளைக் சொல்லி திட்டும் நிலையும் பார்க்கிறோம். பலர் பெண்களின் வீட்டின் முன்னனால் இரவு வரை அடாவடியாக உட்கார்ந்து விடுகின்றனர்.

படிக்க:
நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்
தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !

இதை மனுவாக எழுதி பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், காவல் துறை கண்டு கொள்ளாமல் விடுவதோடு, “பணம் வாங்குனா கட்டிதானே ஆகனும்” என்று நிறுவனத்திற்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர். அரசும் இது வரை கண்டு கொள்ளவில்லை. ஆகவே வேறு வழியின்றி பெண்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகி செய்வதறியாது உள்ளனர்.

திருபனந்தாள், பேரளம் ஆகிய இடங்களில் தூக்குமாட்டி, தீக்குளித்து இரு பெண்கள் இறந்துள்ளனர். போலீசு இதை தெரிந்தும் மறைப்பதிலே குறியாக உள்ளது. ஆகவே இந்த நிலையில் தான் சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் நாங்கள் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவியும், அவர்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனையும் கொடுப்பதற்கு முன்வந்துள்ளோம்.

இதற்காக “பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்” என்கிற அமைப்பின் கீழ் பெண்களின் பிரச்சனையை முன்னெடுப்பதோடு, இலவச சட்ட உதவியையும் கொடுக்க தயாராக உள்ளோம்.

பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டிய சட்ட உதவி எண்கள்:

தஞ்சை மாவட்டம்:
1. வழக்கறிஞர் E. சதீஷ்குமார் M.A.B.L., – 9865873426
2. வழக்க றிஞர் M. நாகேந்திரன் B.A.B.L., – 9894598561

குடந்தை வட்டம்:
வழக்கறிஞர் சிவ.குருமூர்த்தி
B.A.B.L., – 9345571278

திருவாரூர் மாவட்டம்:
வழக்கறிஞர் K. பிரகாஷ் B.A.B.L., – 9865320348

நாகை மாவட்டம்:
வழக்கறிஞர் சரவணத்தமிழன் BSc., BL., – 8903659941

இப்படிக்கு,
வழக்கறிஞர் E. சதீஷ்குமார் M.A.B.L.,
சட்ட ஆலோசகர், பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்.
தஞ்சாவூர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க