த்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் மீண்டும் செய்தியில் பேசு பொருளாகியுள்ளது. இந்த முறை 50 வயது மதிக்கத்தக்க அவனிஷ் குமார் சர்மா எனும் விவசாயி பட்ட பகலில் கொலை செய்யப்பட்ட நிகழ்வை ஒட்டியே பேசுபொருளாக மாறியுள்ளது ஹத்ரஸ். ஹ்ரைச் மாவட்டத்தில் வசிக்கும் கவுரவ் ஷர்மா 5 பேருடன் இணைந்து அவனிஷ் குமார் ஷர்மாவை உரிமம் பெறாத துப்பாக்கிகளால் பலமுறை சுட்டு கொலை செய்துள்ளான்.

கடந்த 2018-ம் ஆண்டு தன் 23 வயது மகளை பாலியல் சீண்டல் செய்த கவுரவ் ஷர்மாவிற்கு எதிராக அவனிஷ் தொடுத்திருந்த வழக்கை வாபஸ் வாங்க மறுத்த காணத்தினால்தான் இந்தக் கொலை நடந்திருப்பதாக இறந்தவரின் சகோதரரான சுபாஷ் சந்திர ஷர்மா, தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

அந்த 5 குற்றவாளிகளின் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் லவரத்தை தூண்டுதல், கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தைத் தூண்டுதல், ள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

அந்த குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பியிருப்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்க கூடும். ஆனால், இந்த வழக்குகளில் போலிசு நடவடிக்கை எடுக்காமலிருப்பது இன்னும் மிகுந்த நெருடலுக்கு உரியதாக இருக்கிறது. வ்னிஷ் ஷர்மாவை வழக்கை வாபஸ் வாங்குமாறு பலமுறை கவுரவ் ஷர்மா மிரட்டிதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.

அவனிஷின் மகள் அந்த கொடூரமான நிகழ்வை விவரித்தும் இதற்கு நீதி கேட்டும் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைராலானபோது, மூத்த போலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவரை கைது செய்தனர். எங்கள் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்ய முடியாவிட்டாலும், முதன்மை குற்றவாளி கவுரவ் ஷர்மா கைதுசெய்யப்படுவதுதான் என் தந்தையின் மரணத்திற்கான நீதியை உறுதிபடுத்துவதாக இருக்கும் என்றார், அந்த 23 வயது பெண்.

படிக்க:
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்
♦ ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !

தி வயர் இணையதளத்திடம், பாலியல் தொல்லைகளை தான் எதிர்கொண்ட 2018 –ம் ஆண்டு காலத்தில் மனம் சோர்ந்து தளர்ந்து போயிருந்ததாக அப்பெண் கூறினார். ‘’என் தந்தை ஒருவர்தான் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் மற்ற தந்தைகளை போன்றவர் அல்ல. அவர் கிராமப் புறங்களில் உள்ளவர்கள் போல்பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான தனது மகளுக்காக போராட பயப்படவோ, வெட்கப்படவோ இல்லை. அவருடைய நடவடிக்கை எனக்கு நம்பிக்கை அளித்தது. அதனை தொடர்ந்து வழக்கு தொடுக்க நான் முன்வந்தேன்.’’

கவுரவ் ஷர்மாவும், அந்த 23 வயது பெண்ணும் ஒரு சில அண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக சில செய்திதாள் செய்தி வெளியிட்ட சமயத்தில் அந்த பெண்ணின் உறவினர் அது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அந்தக் குற்றவாளி விருப்பம் தெரிவித்திருந்தான். ஆனால், அப்பெண்ணின் குடும்பத்துக்கும், அப்பெண்ணுக்குமே விருப்பம் இல்லை . மறுப்பு தெரிவித்த பிறகும் அவனுடைய பாலியல் தொல்லைகள் தொடர்ந்தன”, என்றார்.

‘’என்னை முகநூலில் அவனுடைய நண்பராகுமாறு கேட்டு முதன்முதலாக தொடங்கினான். நான் மறுத்தபோது என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போது அவன் சிறைக்கு அனுப்பபட்டான். வெகு விரைவில் வெளியே வந்தான். அதே ஆண்டு அவன் அந்த வழக்கை வாபஸ்வாங்குமாறு வற்புறுத்தினான்’’ என்று நினைவு கூர்கிறார் அந்த 23 வயது பெண்.

2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இதச பிரிவுகள் 452 (காயம் ஏற்படுத்துவற்கு தயாரிப்போடு வந்து அத்துமீறி நுழைதல், தாக்குதல் அல்லது வன்முறை பிரயோகம் , 354 ( ஒரு பெண்ணின் மாண்பை கெடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஒரு குற்ற செயல்) மேலும் 506 ( கிரிமினல்தனமான மிரட்டல்). குற்றம் நிரூபிக்கப்பட்டால் 354 பிரிவு இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும். பிரிவுகள் 506 மற்றும் 452 ஆகியவை 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும்.)

ஒரு மாதம் சிறையில் இருந்த கவுரவ் ஷர்மா நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்க பிணையில் விடுவிக்கப்பட்டான்.

தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் உடலை தூக்கிச் செல்லும் பாதிக்கப்பட்ட பெண்

அவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது, அவனுக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது, என்கிறார் அந்த பெண். ‘’ 2019-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அவன் என் தந்தை விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருப்பதை கண்டு அவரை தாக்க முயற்சித்தான். அவன் மீண்டும் ஒரு முறை வழக்கை வாபஸ் வாங்க கூறி மிரட்டினான். என் அப்பா தப்பித்துவிட்டார்.’’ என்றார் அவர்.

அச்சமயத்தில் அவர்கள் போலிசிடம் புகார் அளித்தனர். அந்த நகலை தி வயர் இணையதளத்தால் பெற முடிந்தது. அவனிஷ் குமார் ஷர்மா கொடுத்த புகாரில் ‘’அவன் [கவரவ் ஷர்மா] என்னை கொல்வதற்கு துரத்திக்கொண்டு ஓடி வந்தான். தயவு செய்து விசாரணை செய்யுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இருப்பினும், புகார் கொடுக்கப்பட்டிருந்த சசானி காவல் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு தி வயர் இணைய தளம் இதுகுறித்து கேட்டபோது, ‘’2019 லிருந்து அப்படி ஒரு புகார் அங்கே பதிவு செய்யப்படவில்லை என்றார். 2018-ல் மட்டுமே அந்த பையன் சிறைக்கு ஒரு மாதம் சென்றிருந்த வழக்கில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் கூறிய அவர், அந்த கொலைக்கு பிறகு பாதிக்கப்பட்டவரின் வீட்டருகே காவலர்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர் என்றார். தொடர் அச்சுறுத்தலில் இருந்த போதும் ஏன் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டது என்று தி வயர் ஆசிரியர் கேட்டதற்கு, ‘’அப்படி ஏதும் தாமதம் இல்லை’’ என்று போலீசு கூறியுள்ளது.

அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பல மாதங்களாக கவ்ரவ் ஷர்மாவிடமிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்துள்ளது. அந்த குற்றவாளிக்கு 2020 ல் திருமணம் ஆகி அதன் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தபோது அவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். 23 வயதான அந்த பெண் நினைவு கூர்கிறாள், ’’அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது, இனி இது போல் நடந்துகொள்ள மாட்டான் என்று நான் நினைத்தேன். அவனுக்கு ஒரு ஒரு மகளும் பிறந்துவிட்டது. எனவே இனி வேறு ஒருவருடைய மகளுக்கு அவன் தொல்லை கொடுக்க மாட்டான் என்று நினைத்தேன். ஆனால் நான் அவ்வாறு நினைத்தது தவறாகிவிட்டது.’’

மார்ச் 1 அன்று என்ன நிகழ்ந்தது.?

கொலை நடப்பதற்கு முன்பு, மார்ச் 1 அன்று காலை நேரத்தில் 23 வயதான அந்த பெண்ணும் அவளுடைய மூத்த சகோதரியும் அருகில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கே, அவர்கள் கவ்ரவ் ஷர்மாவின் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் எதிர்பாராத விதமாக எதிர்கொள்ள நேர்ந்தது.‘’ அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கக் கூறி மிரட்டினர், என்னை கெட்ட வார்த்தையால் திட்டினர். இறுதியாக நான் என்னை விடுங்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் இனி இங்கு வன்முறைதான் தீர்வு என்றனர். இதன் பொருள் என்னவென்றால், ஏற்கெனவே நன்கு சிந்தித்து திட்டமிடப்பட்ட ஒரு செயல் தான் அந்தக் கொலை’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த பெண்.

அந்த வாய் சண்டை அந்த கோயிலிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் பாதிக்கப்பட்டவரின் விவசாய நிலத்திற்கு அருகில் நிகழ்ந்தது. ‘’எனது அப்பா தலையிட்டு அமைதியான முறையில் அவர்களை செல்லவிடுங்கள் என்று கேட்டபோது, கவ்ரவ் ஷர்மாவின் மனைவி உன்னை கொன்று விடுவேன், வழக்கை வாபஸ்பெறவில்லை என்றால் சுட்டுகொன்று விடுவேன் என்றாள்,’’ என்று நினைவுகூர்கிறார் அந்த இளம் பெண்.

படிக்க :
♦ ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அந்த விவசாய நிலத்திலிருந்து 200 மீட்டர் தூரம் கூட இருக்காத அவருடை வீட்டிற்கு தன் மகள்களை செல்லுமாறும், சென்று கதவை உட்புறமாக கவனமாக பூட்டிக்கொள்ளுமாறும் அவனிஷ் கேட்டுக்கொள்கிறார். அவர் தனது நிலத்தில் வேலை செய்வதை தொடர்ந்தார். நானும் என் சகோதரியும் எனது அப்பாவிற்கு மதிய உணவு எடுத்து சென்ற போது, கவ்ரவ் ஷர்மா மீண்டும் 11.30 மணிக்கு அழைத்து வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக அவர் எங்களிடம் சொன்னார். அவர் மிகவும் கவலையடைந்திருந்தார். கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிடவில்லை.’’ என்று அந்த பெண் கூறினார்.

சுமார் மதியம் ஒரு மணிக்கு அந்த இளம் பெண் சசானி காவல் நிலையத்தில் உள்ள தர்மேந்திரா என்ற நம்பகமான போலிசு அதிகாரியை அழைத்தார். அந்த காவல் நிலையம் அந்த கிராமத்திலிருந்து 7-8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவர், பாதிக்கப்பட்டவர்களின் அந்த இடத்தை அடைய நேரம் ஆகும் என்பதால் 112 அவசர எண்ணை அழைக்குமாறு கூறினார்.

‘’கவ்ரவ் ஷர்மா வந்து எங்களை மிரட்டினால் 112 எண்ணை அழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் வந்து போது எந்த ஒரு எண்ணிற்கும் தொடர்புகொள்ளும் ஒரு நிலையில் நான் இல்லை.’’ என்று தி வயரிடம் கூறினாள், அந்த பெண்.

மாலை 3.30 மணிக்கு கவ்ரவ் ஷர்மாவும் மற்ற 5 பேரும் ஒரு காரில் வந்தனர். அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவனிஷ்ஷூம் மற்ற தொழிலாளர்களும் வேலை செய்துகொண்டிருந்த நிலத்தை நோக்கி வந்தனர். ‘’அவர்கள் வந்து மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்தும் முகமாக பிஸ்டல் துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டனர். அவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். அவர்களுடைய இலக்கு என் அப்பா. அவர்கள் என் அப்பாவை பலமுறை சுடும் போது, நான் அருகில் உள்ள குழாய் கிணற்றில் ஒளிந்துகொண்டேன். அவர் நிலை குலைந்து கீழே விழுந்த பிறகு அவர்களில் ஒருவன் அவரின் இறப்பை உறுதிசெய்கிற வகையில் மிக அருகில் சென்று சுட்டான். நான் அங்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் பார்த்தேன். நான் அச்சத்தில் உறைந்திருந்தேன்.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த 23 வயது பெண்.

அப்போது அங்கே இருந்த என் அம்மாவை நோக்கி ஒரு புல்லட் குண்டு வந்தது. அதில் என் அம்மா தப்பினாள். வந்த 6 பேரில் 4 பேர் கவ்ரவ் ஷர்மா, லலித் ஷர்மா, நிகித் ஷர்மா, மற்றும் ரோகித் ஷர்மாஎனக்கு அடையாளம் தெரியும் என்று அந்த பெண் கூறினாள்.

துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, ஒரு கூட்டம் கூடியது, போலிசும் வந்தது. கொலையுண்ட நபர் முதலில் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துசெல்லப்பட்டார். அங்கு, இறந்து கொண்டுவரப்பட்டதாக அறிக்கப்பட்டது.

குடும்பத்தின் ஆதாரமானவர் :

அவனிஷ் குமார் ஷர்மாவுக்கு இரு சகோதர்களும், நான்கு சகோதரிகளும் இருந்தனர். அவர்கள் யாரும் கிராமத்தில் இல்லை. ‘’எனது பெரியப்பாவும், சித்தப்பாக்களும் கிராமத்திற்கு வெளியே வசிக்கின்றனர். என்னுடய அப்பாதான் குடும்ப வாழ்வின் முழு ஆதாரம். எங்களுக்கு நிலம் இருப்பது உண்மை. ஆனால், அவரின்றி என் அம்மாவாலோ அல்லது என்னாலோ அங்கே வேலை செய்யமுடியாது. இப்போது, எங்களையும், வீட்டையும் காப்பதற்கு யாரும் இல்லை.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கண்ணீர் மல்க கூறினார் அந்த பெண்.

அந்த பெண்ணின் பெரியப்பா சுபாஷ் சந்திர ஷர்மாவின் கூற்றுப்படி, கவ்ரவ் ஷர்மா அரசியல் செல்வாக்குள்ளவன், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர். ‘’ அவன் திரும்ப திரும்ப என் இளைய சகோதரனை அச்சுறுத்தியுள்ளான். கடந்த இரு ஆண்டுகளில் அவரை அவன் பத்திற்கும் மேற்பட்ட முறை அழைத்து மிரட்டியுள்ளான்.’’ என்றார், அவர். கவ்ரவ் ஷர்மாவின் ஒரு மூத்த உறவினரும் அவனிஷ் குமாரை அழைத்து வழக்கை திறும்ப்பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் என் தம்பியிடம்,‘’கவ்ரவ் ஒரு இளம்வயது பையன். அவன் முன்கோபி என்பதனால் அதுபோன்ற ஏதாவது செய்திருப்பான். அதை பெரிதுபடுத்தாமல் விட்டுட்டு போ.’’ என்று கூறியதாக தி வயர் இணையதளத்திடம் கூறினார்.

கவ்ரவ் ஷர்மாவை போலிசு உடனே கைது செய்யவில்லை என்றால் அவன் நேபாள் சென்று தப்பிவிடுவான் என்று சுபாஷ்சர்மா கவலை தெரிவித்தார்.

அந்த பெண்ணின் தாய், ராஜ்குமாரி ஷர்மா பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கூறினார். ‘’எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம். போலிசு பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டதும், அவர்கள் என் கணவரைக் கொன்றது போல், மீண்டும் என் மகளுக்கு தொல்லை தருவார்கள். போலிசு வழக்கம் போல் சம்பவம் நடந்துமுடிந்த பின்னர்தான் வருவார்கள்’’ என்று தி வயரிடம் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் முன்னணி களமாக உத்திர பிரதேசம்.

2020 செப்டம்பரில், 19 வயது தலித் பெண், ஹத்ரஸ் மாவட்டம் பூல்கார்கி கிராமத்தை சேர்ந்த நான்கு ஆதிக்க சாதிவெறியர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஒரு வழக்கு நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட அந்த தலித் பெண்ணை அவருடைய பெற்றோரின் ஒப்புதலின்றி விரைந்து எரியூட்டியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்று உறுதியாக மறுத்தது ஆகிய இரு காரணங்களுக்காக உபி போலிசு மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

பின்னர் டிசம்பர் மாதத்தில் அந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ, தனது குற்றப் பத்திரிகையில் அந்தப் பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்று கூறியது.

தேசிய குற்ற ஆவண மையத்தால் சேகரிக்கப்ட்ட 2019 ஆம் ஆண்டிற்கான தகவல்களின் படி நாட்டில் 2018-ம் ஆண்டில் 3,78,277 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2019-ம் ஆண்டில் 4,05,861 குற்ற வழக்குகளாக அதிகரித்துள்ளது. இதில் உபியில் மட்டும் 59,853 வழக்குகள் பதிவாகி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் .பி. முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 41,550 என்ற எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா 37,144 என்ற எண்ணிக்கையிலும் அடுத்த இடங்களைப் பிடித்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும் சதவீதம் 76% ஆக இருந்த போதிலும் தண்டனை கிடைக்கப்பெறும் சதவீதம் 27.8%-ல் நிற்கிறது.

‘’போலிசு விரும்பினால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். அவர்கள் அதற்கு தகுந்தவாறு செய்வதற்கு போதுமான நிலையில் உள்ளனர்’’ என்கிறார் சீமா மிஸ்ரா. இவர் சமூகசட்ட அமைப்பை நடத்தும் ஒரு குற்றவியல் வழக்கறிஞர். இந்த அமைப்பின் மூலம் சட்ட முன்முயற்சிகளையும் ஆலோசனைகளையும் கொடுத்துவருகிறார். ஜார்கண்ட் ராஞ்சியில் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை நடத்திவருகிறார். மேலும் லக்னோவில் பெண்களின் உரிமைகளுக்கான குழுவைச் செயல்படுத்துகிற ஒரு பெண்ணியவாதியாவும இருக்கிறார் சீமா மிஸ்ரா.

‘’அவர்களின் (போலீசின்) பெண்வெறுப்பு நடவடிக்கை காரணமாகத்தான் பிரச்சினை தோன்றுகிறது. அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக வழக்கம் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். இது நாடு முழுதும் நடக்கிறது. ஆனால், உபியில் அதிகம். தங்களது செயலற்ற தன்மைக்கு அல்லது தங்களின் செயலுக்கு போலீசே பொறுப்பேற்க வேண்டும். ’’ என்று தி வயர் தளத்திடம் கூறினார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு பற்றி பேசுகையில், பிணையில் வெளிவந்த பிறகு தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கவ்ரவ் ஷர்மா தொல்லை கொடுத்துள்ளான். அந்த பிணை ரத்துசெய்யப்பட்டு அவன் சிறைக்கு அனுப்ப ப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.


தமிழாக்கம் : முத்துகுமார்.
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க