‘வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இதைச் செய்யும்?’ கம்போடிய நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச நீதியை நாடுகிறார்கள்.

“தீடிரென அரசுத்தரப்பிலிருந்து வந்தவர்கள் நாங்கள் ஒரு சமூகமாக வாழும் அந்த இடத்தை சுற்றி வளைத்துக் கொண்டு எங்களிடம் நீங்கள் எல்லோரும் இந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டிருக்கீறீர்கள்” என்றதில் இருந்து ஆரம்பித்தது எல்லாப் பிரச்சனைகளும்” என்கிறார் 2020 ஜீனில் சாயி கிம்சுரூர்.

“நாங்கள் இங்கே 1995-லிருந்து குடியிருந்து வருகிறோம். ஆனால், திரும்பவும் ஆறுமாதம் கழித்து வந்தவர்கள் எனது ஏரியை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது “இது எங்கள் நிலம்” என அரசு தரப்பிலிருந்து வந்தவர்கள் அறிவித்தார்கள். அந்தப் பகுதியிலிருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

படிக்க :
♦ கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

அந்த சமயத்தில் அந்த ஏரியில் மீனும் முதலையும் வளர்த்து வந்தார் கிம்சுரூர் பியோங் சாம்ரோங். இது ஒரு சிறிய சமூகமாக குடும்பங்கள் வாழுமிடம். ஃபனாம் பேன் பகுதியின் புறப் பகுதியில் வடமேற்கே இருக்கிறது. ஒரே கூரையின் கீழ் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவரது மூன்று ஏரிகளில் இரண்டு ஏரிகளை தூர்க்கும் வரை அவரது குடும்பம் வாழ்ந்து வந்ததே இந்த நீராதார வணிகத்தினால்தான் என்கிறார். இந்த நிலம் உண்மையில் அரசு-பொது நிலம் என்று கூறி, அதிகாரிகள் கோருகிறார்கள், ஒரு பூங்காவைக் கட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது.

“அவர்கள் எனக்குச் சொந்தமான இடத்தில் என்னை கேட்காமலே சாலை போட்டனர். அவையெல்லாம் எனது ரத்தத்தை வியர்வையாக்கி நான் உழைத்து சம்பாதித்த எனக்கு சொந்தமான சொத்துக்கள். வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இது மாதிரியான கொடுமைகளை செய்யும்?” என்கிறார் கிம்சுரூர்.

“முனிசிபல் துறையிலுள்ள நில நிர்வாகம் அமைத்து தந்துள்ள அதிகாரத்துவ நிர்வாக செயல்முறைகளை கடந்துப் போவதற்குள் தனது நிலத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தை இழந்துள்ளதாகவும் அதேசமயம் தனக்காக வாதிட ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவும் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று மார்ச் 2021-ல் கிம்சருர் உறுதி செய்கிறார்.

“அரசு இழப்பீடு தருவதாக சென்ற ஆண்டிலிருந்து (2020) உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த நிலம் பல பத்தாண்டுகள் என்னுடையதாக இருந்தது. இழப்பீடு எப்போது வரும்?” என்று ஆற்றாமையுடன் கேட்கிறார்.

2020 ஜூன் மாதம் அவரது அனுமதியின்றி அழிக்கப்பட்ட அவரது நிலத்தை டச் சோயுன் பார்க்கிறார்.

ஜீலை 2020-ல் டச்சோயுன் மக்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் புல்டோசர்கள் தங்கள் பகுதிக்கு வந்துவிடும் என்ற பயத்தில்தான் எழுந்திருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்த புல்டோசர்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் வந்தன. தன்னிடம் வடக்கு பேனம்பென்-னின் அருகேயிருக்கும் போயங் சௌக் என்ற குக்கிராமத்தில் அங்கிருக்கும் பெயர் தெரியாத ஒரு சொத்து மேம்பாட்டாளரது நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

“அந்த சமயத்தில் புல்டோசர்கள் ஆறு வீடுகளின் குறுக்காகக் கிழித்து இடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீட்டு சொந்தக்காரருக்கு மாரடைப்பு வந்து விட்டது.” என மக்களின் பரிதாப நிலைகளை சோயுன் விவரித்தார்.

“கடந்த மாதம் (ஜீன்-2020) சிட்டி ஹாலுக்கு நான் சமர்பித்த புகார் மனு பற்றி இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால், புல்டோசர்கள் திரும்ப வந்துவிட்டால் என்ன நடக்குமோ எனப் பயத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறோம்” என்று ஜீலை மாதம் அவர் தெரிவித்தார். “எங்களது சமூகம் ஒற்றுமையாக இருக்கிறது. எங்களது வீடுகளை அவர்கள் அபகரிக்காமல் தடுக்க நாங்கள் ஒன்றாக தயாராகிக் கொண்டிருக்கிறோம் பார்ப்போம்” என்று மேலும் தெரிவித்தார்.

“ஆனால், இப்போது போயுங் சௌக் கிலுள்ள 22 குடும்பங்களும் பதைபதைப்புடன் முடிவை எதிர்நோக்கிய வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மார்ச் 2021 நிலவரப்படி இவர்களது வழக்கில் எவ்வித முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. அதோடு, அதிகாரிகள் இவர்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் முரட்டுத் தனமாக இருப்பதோடு காலி செய்தால் இழப்பீடு வழங்கப்படும் என பசப்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சோயுன்.

“இப்போதைய நிலவரப்படி பிரச்னையில்லாமல் வாழ்வதாக நினைக்கிறோம். முதலில் வீட்டைப் பிளந்து நாசப்படுத்திய நிகழ்வு நடந்து ஒன்பது மாதங்களாகிவிட்டது. என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. ஆனால், இங்கிருந்து வெளியேற எங்களுக்கு விருப்பமில்லை” மார்ச் 2021-ல் அவர் சொன்னார்.

சர்வதேச நீதிக்கான சாத்தியம்

கம்போடியாவில் கிம்சருர் சோயுன் ஆகியோரதுப்போன்ற சோகங்களேப் பொதுவாக எல்லோரிடமும் நிலவுகிறது. சர்வதேச மனித உரிமைகள் கழகம் (FIDH) கூறுவது படி 2014-ல் 77,000 மக்கள் இந்த நிலஅபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 4 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் மக்களிடமிருந்து பிடுங்கியெடுக்கப் பட்டுள்ளதாகவும் அதில், பேனம் பென் பகுதியில் மட்டும் 1,45,000 ஹெக்டேர் நிலங்கள் பறித்தெடுக்கப் பட்டுள்ளன என்றும் தெரிய வருகிறது.

நன்கு ஆவணப்படுத்தப்பட்ட அரசியல்மயமாக்கப்பட்ட கம்போடியாவின் நீதித்துறை நீதி வழங்குவதில் ஏமாற்றத்தையே தருகிறது. நில சம்பந்தமானப் பிரச்னைகள் அடிக்கடி வந்தாலும் நீதிமன்றம் மிக அரிதாகவே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

FIDH, along with Global Witness and Climate Counsel உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகருடன் ஒரு திறந்த கடிதத்தை மார்ச் 16 அன்று சர்வதேச கிரிமினல் நீதிமன்ற (ஐசிசி) தற்போதைய வழக்கறிஞர் படாவ் பென்சௌடாவுக்கு அனுப்பியுள்ளனர். அதில் கம்போடியாவின் நில அபகரிப்புகள் பற்றி முதல் கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

கம்போடியாவின் இப்போதைய நிலைமை ஐ.சி.சி-க்கு மனித இனம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தனிப்பெரும் பயங்கரத்தை (கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலை) சந்திக்கின்ற ஒருங்கிணைந்த சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது” என எழுதுகின்றனர்.

மேலும், ”நிலப் பறிப்பு என்பது அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளைப் பலவந்தமாக மிரட்டி வெளியேற்றுவது பற்றி மட்டுமல்ல அல்லது அவர்களை அடித்தல், கொலை செய்தல் அல்லது நிலப் பாதுகாப்புப் போராளிகளை சட்டவிரோதமாக சிறையிலடைப்பது என்பதோடு முடிவதல்ல” என்று அதில் எழுதுகின்றனர்.

FIDH, Global Witness and Climate Counsel (உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகர்) அக்டோபர் 2014-ல் தனது நடைமுறைகளைத் துவங்கியது. அதன் முதல் தகவல் தொடர்பை ஐ.சி.சி வழக்கறிஞருக்கு அனுப்பிய போது – தொடர்ந்து ஜீலை 2015-ல் இரண்டாவது தகவலை அனுப்பியபோதும் – அது பற்றிய நடவடிக்கை என்னவோ மிக மோசமாக மெதுவாகவே நடந்தது. FIDH சமீபத்தியக் கடித்ததில் பென்சௌடாவின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக அதாவது, ஜீன் 15, 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

“வழக்கறிஞருக்காக நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது” என்ற ஆன்ட்ரியா ஜியோர் ஜெட்டா FIDH-ன் ஆசியப் பகுதிக்கான இயக்குநர்.

“இந்த வழக்கு அவரது கவனத்துக்கு பல ஆண்டுகளாகவேக் கொண்டு செல்லப் படுகிறது. எனவே, அவரது முடிவு ஏற்கனவே கொடுக்கப் பட்டிருக்க வேண்டியது – முடிவு என்பது இதுதான் என தெரியாவிட்டாலும் அதிக பட்சமாக ஒரு வழி அல்லது மற்றொன்று என்றுதான் தரப்படும் என நாங்கள் நம்புகிறோம்” என ஒரு தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

“நாம் இது சம்பந்தமாக ஐ.சி.சி வழக்கறிஞர் அலுவலகத்தின் கருத்தை அறிய முயன்றோம். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. டிசம்பர் 2020 தகவல்படி முதற்கட்ட விசாரணை பற்றிய நடவடிக்கைகளில் பென்சௌடா அலுவலகம் இந்த ஆணட்டில் கம்போடியாவின் நிலப் பறிப்புக் குற்றங்கள் உட்பட மேற்கொண்டு விசாரணை தேவைப் படுகிறவை பற்றி தனது ஆலோசனையைத் தெரிவிக்கும்” என அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையில், பிப்ரவரி 17-ல் சர்வதேச மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான நிறுவனத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பென்சௌடா தனது முதன்மை உரையில் கம்போடியா விவகாரத்தில் தனதுப் பணிக்காலம் முடிவடையும் முன் அதாவது ஜீன் 15 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்படும் என்பதை மறுபடியும் உறுதி செய்தார்.

“நாங்கள் தற்போது கம்போடியாவின் நிலப் பறிப்புப் பிரச்னை குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். வெகுவிரைவில், அதற்கானப் பதிலை தருவோம்” என்று தனது உரையினிடையே குறிப்பிட்டார்

சோயனின் வீட்டையும் அங்கு இருந்த மரங்களையும் அழித்துவிட்டார்கள்

கம்போடியாவில் நிலப் பறிப்புப் பிரச்னையில் நீதிகேட்டு போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கையான நம்பிக்கை ஐ.சி.சி செப்டம்பர் 15, 2016-ல் ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் புதுப்பிக்கப்பட்டது. வழக்குகளை தேர்ந்தெடுப்பதிலும் அதை வரிசைப் படுத்துவதிலும் தங்களது நடைமுறையை விரிவாக்கியிருப்பதை அந்த கொள்கை அறிக்கை விவரித்திருந்தது.

ஆதாரங்களை சட்டவிரோதமாகச் சுரண்டுவது அல்லது எங்களது அலுவலகம் ரோம் சட்டகுற்றங்கள் பற்றி விசாரிக்கக் குறிப்பானக் கவனத்தை தரும். அவை, எதனால் எதன் விளைவாக செய்யப்பட்டன, மற்ற செயல்பாடுகளில் சுற்றுப்புறச்சூழலை அழித்தல் இயற்கை சட்டவிரோதமாக நில உரிமையைப் பறித்தல் போன்றவற்றை விசாரிக்க குறிப்பானப் பரிசீலனைகளை தரும் என்று அந்த கொள்கை அறிக்கை குறிப்பிட்டது.

“அதனால்தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்” என்கிறார் ஜியார் ஜெட்டா. மேலும், அவர் “ஏனென்றால் அவர்களது கொள்கை அறிக்கை எந்த மாதிரியான நிலைமைகளை பரிசீலிக்க வேண்டுமென  விவரிக்கிறதோ, அவற்றுக்குள் எங்களது பிரச்சனையும் வருகிறது” என்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டால் ஜியார் ஜெட்டா விரைவாக சுட்டிக் காட்டுவது ஐ.சி.சி தனது அடிப்படை நோக்கங்களை விரிவுபடுத்தவில்லை வழக்கறிஞர் அலுவலக தரப்பில் இன்னமும் ரோம் சட்டத்தின் கீழுள்ளக் குற்றங்களைப் புலன் விசாரணை செய்வதில்தான் முழுதும் ஈடுபட முடிகிறது. மாறாக, தற்போது பட்டியலிடப்பட்ட குற்றங்கள் சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவது அல்லது சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பங்களித்த வழக்குகளுக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க முடியும்.

ஐ.சி.சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியில், வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மட்டுமே தகவல் தொடர்புகளை சமர்ப்பிப்பது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மற்றும் கம்போடியா முழுவதும் நில அபகரிப்பில் ஈடுபடுவோரின் நடத்தையை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது; ஆனால், ஜியர் ஜெட்டா கவனித்தபடி இது அப்படி இல்லை நடந்தது இதற்கு எதிரானது.

அரசு இந்த தகவல்களை அனுமதிக்கவில்லை இதனைப் புறக்கணிப்பதாகத் தெரிகிறது. அரசியல் உறுதி இருக்கவில்லை என்ற செய்தியை மறுபடி உறுதிபடுத்தியது. குறிப்பாக, இந்த பிரச்சனையின் மீது கவனம் செலுத்துமளவு நீதித்துறை சுதந்திரமில்லாதிருந்தது.

இந்த நிகழ்வுகள் குறித்தும் ஐ.சி.சி-யால் பரிசீலிக்கப்படும் நிலப் பறிப்பு விசாரணை குறித்தும் கருத்துக் கேட்கத் தொடர்புக் கொண்ட போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நேத் பீகாட்ரா, பதில் சொல்வதற்கு உரிய நபர் தான் அல்ல என்று மறுத்துவிட்டார். நில மேலாண்மை அமைச்சகத்தின் செங்லாட்டை தொடர்புக் கொள்ள முடியவில்லை. அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் கூட இது பற்றி பொதுவெளியில் பேச மறுக்கின்றன.

அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஃபேசிபான் ஐ.சி.சி-யின் முன்னேற்றம் குறித்து அரசு என்ன நினைக்கிறது என்று பேச மறுத்த்தைப் போல, கம்போடியன் மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் சாக் எய்சான், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோய்குயான்க் மற்றும் அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் ஏக்தா ஆகியோரும் ஏற்கனவே மறுத்திருந்தனர்.

எனவே, பிரதம மந்திரி ஹன் செனின் நிர்வாகத்தில் உள்ள எவரும் குறிப்பாக நில அபகரிப்பில் ஈடுபடுவதை இலக்காகக் கொள்வதில் அக்கறைக் கொண்டுள்ளார்களா என்பதை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில், ஆனால் ஜியர் ஜெட்டா குறிப்பிட்டது போல, சர்வதேச தடைகளின் எதிர்பார்ப்பில் அரசாங்கம் முன்னதாகச் சற்று முன்னேறியது.

இங்கே நாங்கள் பொருளாதார தடைகளைப் பற்றி பேசவில்லை குற்றவியல் பொறுப்பு கூறலைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம் சர்வதேச சமூகம் தனிநபர்களை குறிவைத்து செயல்படும் போது அரசு அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. சில அலுவலர்களும் உயர் அதிகாரிகளும் தங்கள் வியாபாரத்தை மறைக்கிறார்கள் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

வரலாற்று சிக்கல்களும் தீர்வுகளின் பற்றாக்குறையும்

கம்போடியாவில் இனப் படுகொலைக்குப் பிறகு கேமர்ருஜ் பகுதியில் நில உரிமைகள் அழிக்கப்பட்டன. நில உரிமை என்பது நீண்ட காலமாக ஒரு உணர்வு பூர்வமான சமுகப் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நடவடிக்கை நீண்ட காலமாக நீடித்த நில உரிமைகளை 1980-ல் ரத்து செய்வதில் முடிந்தது. ஆனால் 1990-ன் பெரும்பகுதி கம்போடியாவை சூறையாடியக் கசப்பானப் போர் நடந்த போது நிலங்களுக்குத் தரப்பட்ட சலுகைகளின் மதிப்புத் தெளிவாகியது.

கம்போடியாவில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால அதிகார சபையை அடுத்து, பல்வேறு அரசியல் பிரிவுகள் மேலாதிக்கத்திற்கான ஏலங்களுக்கு நிதியளிக்க முயன்றதால், 1991 மற்றும் 1997-க்கு இடையில், அரசாங்கம் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வன சலுகைகளாக ஒதுக்கியது.

கிம்சருர் சோயுன் போன்றோர்கள் 1995-லிருந்தே பேனம் பென் பகுதியின் புறப்பகுதியில் வந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். 1999 வரை நில மேலாண்மை அமைச்சகம் இருந்ததில்லை. கம்போடியா நில சட்டம் 1992-ன் பதிப்பு, அதன் 2001 சட்டத் திருத்தம், அதன் 2001 திருத்தம் வரை பலவீனமான – எந்தவொரு அமலாக்கத்தாலும் பாதிக்கப்பட்டது.

ஆனால், 1995-ஆம் ஆண்டில் நில நன்கொடைகளை வழங்க சர்வதேச நன்கொடையாளர்களின் ஆதரவைக் கோரியப் போதிலும், 2001-ஆம் ஆண்டில் உலக வங்கி கம்போடியாவின் நிலப்பரப்பில் 80 சதிவீதம் அரசின் சொத்தாகக் கருதப்பட்டதாகவும், நிலப் பட்டாக்களுக்கான 4 மில்லியன் விண்ணப்பங்களில் 6,00,000 மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும் மதிப்பிட்டுள்ளது.

2010-ல் ஐ.நா மூலதன மேம்பாட்டு நிதி கம்போடியாவின் 30 சதவீத நிலங்கள் ஒரு சதவீத மக்களிடம் குவிந்திருந்ததாகக் கண்டுபிடித்தது. 2001-ல் சட்டதிருத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். அதுதான் அரசு-பொது நிலங்களை எளிதாக அரசு-தனியார் நிலங்களாக மாற்றிக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தியிருந்தது. ஓரு சில பிரிவுகள் சரியாக இருந்தாலே நிலங்களை விற்பதற்கு அனுமதியளித்தது.

“இப்போது பலவந்தமாக வெளியேற்றலும் நிலப் பறிப்புகளும் விரிவான அளவில் பிரச்சனைகளாக உருவெடுத்ததால், அதன் விளைவாக சர்வதேச கவனத்தை ஈர்த்த்தாலும் அரசாங்கம் நிலச் சலுகைகள் விசயத்தில் தனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள நிர்பந்தப் படுத்தப்பட்டது” என்கிறார் உள்ளூர் நில உரிமைகளுக்கான என்ஜிஓ ஈக்விடபிள் கம்போடியா வின் இயக்குநர் ஏங்க் வுதி.

2020 செப்டம்பரில் நில மேலாண்மை அமைச்சகத்தின் முன் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரானப் போராட்டம்.

“மிக அதிகமான அரசு-பொது நிலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவது. அதோடு, ஆறுகள் ஏரிகள் ஈரநிலங்கள் எல்லாம் தூர்ந்துப்போக வைப்பதையெல்லாம் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்கிறார். இந்த மாதிரியான தனியாருக்கு தாரை வார்க்கும் நிகழ்வுகள் நகர்புறங்கள் மட்டுமின்றி நாடு முழுக்க குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது என்கிறார் கூடுதலாக.

செப் 22, 2020-ல் மூன்று பகுதிகளை சேர்ந்த 400 கம்போடிய மக்கள் பேனம் பென் நில மேலாண்மை அமைச்சகத்தின் வெளியே தீர்க்கப்படாத நிலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும்பாலானப் பிரச்சனைகள் அரசு மக்களிடம் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும்படி உத்திரவிட்டதை அடுத்து ஏற்பட்டவை.

“நிலப் பறிப்பு என்பது நில சலுகைகளாக அரசாங்கத்தால் நியாயப்படுத்தப் படுகிறது. வீட்டு வசதி மேம்பாடு அல்லது உள்கட்டமைப்பு திட்டங்கள், ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிய எந்த புரிதலும் இருப்பதில்லை குறிப்பிடப்பட வேண்டியது கட்டுமானம் ஏதாவது தொடங்கும் போதோ அல்லது இடிக்கப்படும் போதோதான் மக்களுக்கு தெரிய வரும்” என்கிறார் வுதி.

இந்த வழக்குகளில் நீதி கிடைப்பது என்பது அரிதானது அல்லது மிக மெதுவானது. 2010-ல் ஒட்டார் மேன்செய் ஹோகாங் காம்போங் ஸ்பெயு மற்றும் ப்ரே விஹியர் பகுதிகளில் சர்க்கரை தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதை ஒட்டி எழுந்த நிலப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

“”ஒட்டார் மின்சேய் பகுதியில் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களில் பாதிக்கு சற்று மேலானவர்கள் 2 ஹெக்டர் ப்ளாட் நிலம் இழப்பீடாக பெற்றனர். ஹோகான் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 1.5 ஹெக்டர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு நிகழ்வுகளிலுமே இடம் மாற்றி தந்தது மற்றும் இழப்பீட்டு தொகுப்புகள் அந்த சமூகத்தின் தேவையை ஈடுசெய்வதாக இல்லை என்பதுதான் உண்மை” என்கிறார் வுதி.

வுதி மேலும் சொல்வது காம்போங்க் ஸ்பியு மற்றும் ப்ரிய விகியர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கள் நிலங்களை மிகப்பெரிய செல்வந்தரும் சி.பி.பி செனட்டருமான லி யுங்-க்கு தொடர்புடைய சர்க்கரை ஆலைகளுக்காக இழந்த 2130 குடும்பங்களுக்கு இந்த இழப்பீடுகள் கூட கிடைக்கவில்லை.

ரத்னகிரி பகுதியில் வியாட்நாமிய மிகப்பெரிய ரப்பர் கம்பெனி HAGL அங்கு இருக்கக் கூடிய 2000 உள்நாட்டு பழங்குடியினரின் புனித நிலங்களை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

பூர்வீக சமூகங்கள் நிலப் பறிப்பு மூலமாக எதிர்மறையாக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வூதி மேலும் சொல்கிறார் நிலங்கள் எப்போதுமே அவர்களது ஆன்மிக நம்பிக்கை மற்றும் வாழ்க்கைக்கான ஆதாரங்களின் மையமாக உள்ளது. மேலும், கேமர் பாதிக்கப்பட்டவர்களை விடக் குறைவாக நீதி வழங்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பெரிய பிரச்னைகள் மேலும் நீடித்து போகக் காரணம் போதுமான இழப்பீடு கிடைக்காததுதான். பல ஆண்டுகளுக்கு முன்னால் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹோகான் பகுதியிலிருந்த மக்கள் தங்கள் நிலங்களில் சிறிதளவை திரும்பப் பெற்றனர். ஆனால், நிலத்தை திரும்பப் பெற்றதே அவர்களது வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கவில்லை. அவர்கள் எப்போதும் மிகப்பெரியக் கடனில் சிக்கி தவித்து வந்தனர். அதனால், எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் தங்களது வணிகத்தை மீட்டெடுக்க முடியாமல் தவித்தனர். இதனால், தங்களது நிலங்களையாரிடம் பறிக்கொடுத்து மீட்டெடுத்தார்களோ அதே ஆட்களிடம் விற்கும் நிலைக்கு சென்றனர்.

நிலப் பறிப்பாளர்கள் – சுற்றுச்சூழலை கெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

ஐ.சி.சி-க்கு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பில் ஒரு செய்திக் கொண்டு வரப்படாமலேயே இருந்தது. அது கம்போடியாவில் நிலப் பறிப்பு மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளுக்கும் சுற்றுச்சூழலை சீரழித்தல் ஆகியவற்றுக்கும் உள்ளுர உண்மையானத் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.

2016 கொள்கை அறிக்கை மற்றும் சமீபத்தில் டிசம்பர் 2020-ல் ஐ.சி.சி விளக்குவதாக உறுதியளித்திருந்த பிரச்சனை இதுதான் சர்வதேச வழக்கறிஞர் பிலிப்பி சாண்ட்ஸ் மற்றும் ப்ளாரன்ஸ் மும்பா கம்போடியாவின் நீதிமன்றங்களில் சிறப்பு சாம்பர்களில் நீதிபதியாக இருப்பவர் இருவரும் சர்வதேசக் குற்றங்களின் வரிசையில் சுற்றுச்சுழல் மாசுப்படுத்துவர்களை இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் கொடுமைகள் செய்பவர்களாக பொருள்வருமாறு வரைவறிக்கை தயாரிப்பதாக அறிக்கை விட்டுள்ளனர். அவர்களது விளக்கங்கள் இந்த ஆண்டே வரும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அப்போது சுற்றுச்சூழலை அழிக்கும் கொடியவர்களை சர்வதேச நீதியின் முன்னால் நிறுத்த முடியும். தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.

புனோம் சாம்கோஸ் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சமீபத்திய காடழிப்பு.

தொழில்துறை முன்னேற்றம் என்ற நடவடிக்கை கலாச்சார இனப் படுகொலை மற்றும் சுற்றுச்சூழல் அழித்தல் ஆகிய நிலைமைகளை உருவாக்கும் நிபந்தனை என்கிறார் கர்டினி வொர்க் தேசிய சென்க்சி பல்கலைக் கழகத்தில் மனித இனங்களை பற்றி ஆராயும் அறிவுத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிப்புரிபவர். கொடுமைகாரர்கள் மக்களை அல்லது சுற்றுச்சுழலை கொலை செய்ய வேண்டுமென்று வெளிப்படையான நோக்கத்துடன் செய்வதில்லை. குறைந்தபட்சம் அவர்கள் செய்வதை நிரூபிப்பது கடினம். ஆனால், தங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எதையும் செய்கிறார்கள்.

மார்ச் 12-ல் கெமர் படிப்புகளுக்கான மையம் நடத்திய ஒரு இணையவழிக் கருத்தரங்கத்தில் வொர்க் கூறுகிறார் “2000-ம் ஆண்டில் தீடிரெனப் பொழியப்பட்ட நில சலுகைகள் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் அழிய காரணமாயிற்று”. ஒரு கம்போடியன் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். அது “கேமர்ருஜ் தலைவர் போல்பாட் மக்களை கொன்றார். தற்போதைய முன்னேற்றங்களோ – நில சலுகைகளுடன் தொடர்புடைய பெரும்பாலான பணிகள் –  மிச்சம் மீதி இருக்கும் எல்லாவற்றையும் கொல்கிறது.”

“தற்போது ஐ.சி.சி-யில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் சில மாறுபாடுகளை கொண்டுவரக் கூடிய சாத்தியக் கூறுகளைத் தெரிவிக்கின்றன. நமக்கு தேவை தற்போது நடைமுறையிலிருக்கும் நிலைமைகளில் மாற்றம் புதிய சட்டம் அல்ல.” என்கிறார் அவர்.

தங்களுக்குள்ளேயே நெருக்கமான தொடர்பும் அதேவிதமாக அரசாங்கத்துடனும் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டப் பொருளாதார நிலச் சலுகைகள் வொர்க்-ன் கவனத்துக்குரியப் பகுதியாக இருக்கும் ப்ரேலாங் வனவிலங்கு சரணாலாயத்தில் பரவலாகப் பதியப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

ப்ரேலங் என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கும் தங்களது நிறுவனங்களான திங்க் பையோடெக் கின் சேர்மனும் ஆங்கர் ப்ளைவுட் போர்டில் இருப்பவருமான சூ-சங்லு சட்டவிரோத இணைப்பில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதாக சொல்வதை ஒத்துக்கொள்ளவில்லை. அதேசமயம், கம்போடியாவிலோ சர்வதேச ரீதியிலோ சட்டநடவடிக்கைக்கான வாய்ப்புகளுக்குப் பயப்படவில்லை என்றும் கூறுகிறார்.

திங்க் பயோடெக்கின் மர சலுகையின் உள்ளே முதன்முதலில் பெரிய காடுகளை காடழிப்பதைக் காட்டுகின்றன, இது இரை லாங் வனவிலங்கு சரணாலயத்தை கைவிடுகிறது.

“என்னை ஏன் நிறுத்த வேண்டும்? காற்றில் மாசு ஏற்படுத்துமளவு எல்லாவற்றையும் எரிப்பவன் நான் அல்ல” என்கிறார் லூ. மேலும், சொல்கிறார் “காடுகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. நாங்கள் வியாபாரிகள். சட்டவிரோதப் பதிவுகளை நிறுத்த இங்கே நாங்கள் இல்லை” என்கிறார்.

2009-ல் கம்போடியாவில் தனது ஆராய்ச்சியை கம்போடியா முழுவதும் நிலச் சலுகைகளின் விளைவாக ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை அவற்றின் பல வடிவங்களில் உள்ளடக்கியது துவங்கினார். வொர்க் புர்சாட் காம்போங், சனாங் காம்போங் ஸ்பெ மற்றும் ஸ்டங் ட்ரங்க் பகுதிகள் உள்ளிட்டு ஒவ்வொரு பகுதியிலும் பொருளாதார நிலச் சலுகைகளுக்குப் பின்னால் நிலம் உரிமைப் பறிக்கப்படுவது மற்றும் சுற்றுச்சூழல் அழிவுத் தொடர்ந்து உள்ளன.

“1990-களின் முந்தைய வனச்சலுகைகளை விட இவை மிகவும் கொடூரமானவை” என்று அவர் கூறினார், மேலும், கம்போடியாவில் 2012-ஆம் ஆண்டில் வழங்கப்படுவதை நிறுத்தும் வரை பொருளாதார நில சலுகைகள் கம்போடியாவில் 2 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களை எடுத்துக் கொண்டன.

சர்வதேச வளர்ச்சி கம்போடியாவில் தோல்வியுற்றதா?

பொருளாதார நிலச் சலுகைகள், சமூக நிலச் சலுகைகளுக்கு வழிவகுத்தது. இது உலக வங்கியால் முயற்சியெடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. கம்போடியாவில் வளர்ந்து வரும் நிலமற்றோரின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்து அவர்களுக்கு நில அனுபோக காலத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டது. ஆனால், உரிமம் பெற்றவர்களின் செயற்பாட்டாளர்கள் ஏறக்குறைய நிலபட்டாக்களுக்கு சம்பந்தமான எல்லா நல்ல நோக்கங்களுடையத் திட்டங்கள் முறைதவறியதென எச்சரித்தனர்.

உள்ளூர் நில உரிமையாளர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்ததிலிருந்து அவர்களது கருத்தாக நில அபகரிப்புகளைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட சமூகத்தினருக்கு முறையான இழப்பீடு வழிமுறைகளுக்குப் பதிலாக சமூக நிலச் சலுகைகள் பயன்படுத்தபடுவதில்லை என்பது மட்டுமல்ல ராணுவ அலுவலர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் சேர்ந்து நிலங்கள் வழங்கப்படுவதன் மூலம் இது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது எனப் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜீன் (2020) உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென  அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

“உலக வங்கி எந்த அளவிற்கும் தருமசிந்தனையுள்ளதல்ல என்பதில் வியக்க ஒன்றுமில்லை” என்று வொர்க் தனது இமெயிலில் எழுதுகிறார். கம்போடியா தீவிர பிடுங்குவோராக இருந்தாலும் தொடர்ந்து உலக வங்கியிடமிருந்து நிதிப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம் வங்கிகளின் முன்னுரிமை யாருக்கானது என்பதற்கான அடையாளம் ஆகும்.

கம்போடியாவில் இருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் LASED திட்டங்கள் மூலம் நிலம் அளிக்கப்பட்டது தொடர்பாக இவ்வளவு மோசமானப் பிரச்னைகள் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார்கள். LASED-1, LASED-2 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறியதால்தான் மூன்றாவது LASED-3வது திட்டத்திற்கு நிதி அதிகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

SLC நிகழ்வுகளில் நீண்டகாலமாக இணைந்து வேலை செய்ததன் காரணமாக விவரித்தபடி உலக வங்கி எப்போதுமே ஏழை வீட்டுக்காரர்களுக்கு நிலம் சென்று சேருவதற்குப் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருப்பதாக ஒரு இமெயிலில் எழுதியுள்ளார். நிலப் பாதுகாப்பு ஒரு மதிப்புமிக்கப் பாதுகாப்பு வலைபின்னலை COVID-19  பயமுறுத்தும் காலகட்டத்தில் சாதித்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

முதன்மை வனத்தின் பகுதிகள் சமீபத்தில் பீபிமெக்ஸ் சலுகைக்கு வெளியே மற்றொரு பகுதியில் எரிக்கப்பட்டன. யு.எஸ். விண்வெளி நிறுவனமான நாசாவின் தரவுகளின்படி, சலுகையில் தீ செயல்பாடு தொடங்கியது.

முதல் இரண்டு தவணை LASED திட்டங்களுக்கு இதுவரை 39.86 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது 2008-லிருந்து செயல்படுகிறது. LASED-3 2021 முதல் 2026 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு செலவாகும் தொகையாக மொத்தம் 146.8 மில்லியன் டாலர்கள் என திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை 3,362 நிலப் பட்டாக்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கையகபடுத்தப்பட்ட ஒவ்வொரு நிலப் பட்டாவிற்கும் உலக வங்கி செலவழித்த தொகை 12,000 டாலர்கள்.

மார்ச் 12 அன்று, உலக வங்கி சுற்றுச்சூழல் கணக்கியல் கட்டமைப்பிலிருந்து கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இது ஒரு டாலர் மதிப்பை சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் அவற்றைப் பாதுகாக்க உதவும் முயற்சியில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கம்போடியா அரசாங்கம் உலக வங்கியிடம் கம்போடியா வனப் பிரதேசங்களில் 65 சதவீதத்தைப் பாதுகாக்கும் முடிவுக்கு ஆதரவாகப் பொருளாதாரத் தரவுகளைக் கோரியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆய்வு வனப்பாதுகாப்பு மூலம் கிடைக்கும் லாபம் என்பது கரி தயாரிப்புக்காக மரங்களை வெட்டுவதைப் போல 5 மடங்கு அதிகமானது  அல்லது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வனச் சுற்றுச்சூழல் அமைப்புகள் வனப் பராமரிப்பதற்கான செலவை விட 20 மடங்கு அதிக லாபம் பெறும் என்றும் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது

ஆனால், விமர்சனங்கள் உலக வங்கியின் நோக்கங்கள் குறித்து திருப்தியடையவில்லை மற்றும் கம்போடியாவின் பாதுகாப்புத் தொடர்பான உறவில் மாற்றத்தைத் தூண்டும் ஐ.சி.சி.யின் திறனைக் கூட சந்தேகிக்கிறது.

“நேர்மையாக, அவர்கள் (உலக வங்கி) சுற்றுச்சூழல் மதிப்பை அங்கீகரிப்பது பற்றிப் பேசுகிறார்கள், உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு தேவையானதைச் செய்யவில்லை என்பது பயமுறுத்துகிறது என்கிறார் வொர்க். மாற்றம் மற்றும் மதிப்பு குறித்து நிறையப் பேசுகிறார்கள் ஆனால் களத்தில் செயல்பாடுகளில் மிகக் குறைவான மாற்றங்களைத்தான் பார்க்க முடிகிறது. மதிப்பு என்பது பொருளாதாரம் மட்டும்தான். எங்களது கூட்டுத்துவ வாழ்க்கை ஆதரவு அமைப்புகளுக்கு எந்த உள்ளார்ந்த மதிப்பும் இல்லை என்றுதான் தெரிகிறது.

படிக்க :
♦ கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்
♦ கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !

அபிவிருத்தி பங்குதாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள் அல்லது வலுவான சாத்தியமான ஐ.சி.சி வழக்குப் போன்ற எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் இதுவரை அரசாங்கம் தங்கள் பதிலை மாற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார். ஆனால், ஐ.சி.சி சில அரசாங்க அதிகாரிகளை “கொஞ்சம் வியர்த்துக் கொள்ளக் கூடும்” என்றுக் கூறினார்.

“முழு உலக முன்னேற்றத்திற்கானத் திட்டம் தனக்கு தானேக் காட்ட வேண்டியது அதிகம் என நான் நம்பவில்லை” என்று அவர் கூறினார். ஆனால் “இது எல்லாமே கம்போடியாவில் தெளிவாகத் தெரிகிறது நமது உலகளாவியப் பொருளாதார அமைப்பில் எல்லாமே தவறு என்பதற்கான எடுத்துக்காட்டாக ஒளிவீசி நிற்கிறது.”


தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் : news.mongabay.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க