காவிரி உரிமைக்கான போராட்டம் மீண்டும் வெடிக்கட்டும் !

04.07.2021

பத்திரிகைச் செய்தி

ர்நாடக அரசு 9,000 கோடி செலவில் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு அனைத்து முயற்சியும் செய்து வருகின்றது. இந்த அணையின் மூலம் 4.75 டி.எம்.சி. தண்ணீரை குழாய் மூலம் பெங்களூருக்கு எடுத்துச் செல்வதும், 400 மெகாவாட் அளவில் புனல் மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சென்ற மாதம் செய்தித்தாள் ஒன்றில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்து வருவதாக செய்தி வெளிவந்தது.

மேகதாட்டுவில் சட்டத்துக்குப் புறம்பாகவும் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராகவும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், அங்கு கட்டுமான பணி நடைபெறுகிறதா என்று குழு ஒன்றை சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. இக்குழு ஜூன் 7-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தரவேண்டும் என்றும் சொல்லியிருந்தது.

படிக்க :
♦ டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ
♦ சேலம் படுகொலை : போலீஸின் அதிகாரத்துக்கு எதிராக அணிதிரள்வோம் || மக்கள் அதிகாரம்

இதனை எதிர்த்து கர்நாடக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்குழுவை கலைப்பதாக அறிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மேகேதாட்டுவில் அணை கட்டுவதன் மூலமாக காவிரி நதிநீரை நம்பி விவசாயம் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இதை உடனடியாக கர்நாடக அரசு கைவிட வேண்டும். ஓட்டுப் பொறுக்குவதற்காகவும், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காகவும் பாரதிய ஜனதா கட்சி, மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநிலத்துக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசி வருகிறது.

மார்கண்டேய நதியில் அணையை கட்டியதன் மூலம் கர்நாடக அரசு அந்த நதியின் கடைமடை பகுதியான கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது. இதனால் 870 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

1966 ஹெல்சிங்கி தீர்மானத்தின்படி, நதி உருவாகும் இடத்தில் உள்ள மக்களுக்கு இருக்கும் அதே சம உரிமை கடைமடைப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் உள்ளது.

காவிரி, மார்கண்டேயா, பாலாறு, முல்லைப் பெரியாறு என நதிநீர் பிரச்சனைகளில் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு தமிழக மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.

எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் முற்போக்கு அமைப்புகளும் ஜனநாயகவாதிகளும் உழைக்கும் மக்களும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இதன் ஒரு பகுதியாக வருகின்ற 6/7/2021 விருதாச்சலம் பாலக்கரையில் 10:30 மணி அளவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குழுவை கலைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


தோழமையுடன்,
தோழர் முருகானந்தம்,
கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தொடர்புக்கு : 9791286994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க