திருவாரூர் மாவட்டம் காரைக்காட்டு தெருவில் திருச்சியை மையமாகக் கொண்ட சேரிட் என்கிற கட்டுமான நிறுவனத்தில் பீகாரைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுமார் ஓராண்டுக்கு மேல் வேலைப் பார்த்து வந்தார்.  அவர் கடந்த 05/07/2021 அன்று காலை 8.20 மணி அளவில் தூக்கிடு இறந்துவிட்டார். வழக்குப் பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல் துறை விசாரித்து வருகிறது.

இறந்த தொழிலாளிக்கு ஊனமுற்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். தொழிலாளியின் உடல் 10 நாட்களாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது.

படிக்க :
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
♦ கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் !

தொழிலாளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சரியான முறையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அவர் குடுப்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிட உத்தரவிட வேண்டும். அவருடைய உடலை அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த தொழிலாளியை போன்ற வெளிமாநில தொழிலாளிகள் ஆயிரக்கணக்கானோர் திருவாரூரில் வேலை செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் உயிர் பாதுகாப்பும் இல்லாத நிலை இருக்கிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினர்

போன்ற பல்வேறு கேரிக்கைகளின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு அளிக்கு நிகழ்வில் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் எஸ்.வீரசெல்வன், மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்க. சண்முகசுந்தரம், CPI-ML கட்சியின் தோழர் நீதி தமிழன், மக்கள் அதிகாரம் தோழர் ஆசாத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனடிப்படையில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை மாவட்ட இயக்குனர் தலைமையில் CPI-ML கட்சியின் தோழர் வீரசெல்வம், மக்கள் அதிகாரம் தோழர் தங்க. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடமிருந்து தொழிலாளி குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நஷ்ட ஈடாக பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இறந்த தொழிலாளியின் உறவினர்கள் பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் தொழிலாளியின் உடல் எரியூட்டப்பட்டது. “கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் இறந்த வரை எப்படி பார்ப்பது இந்த குடும்பத்தை எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்று கவலையில் இருந்தோம். ஆனால், எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு உண்மையாக சேவை செய்யும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பது எங்களுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது” என்று தொழிலாளியின் உறவினர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

This slideshow requires JavaScript.

பிழைப்பு தேடி கூலி வேலைக்காக வரும் வெளிமாநில தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு இருக்கிறது. ஆனால் அந்தக் குழு இயங்காமல் இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து குறைந்து ஊதியத்திற்காக அழைத்து வரப்படும் கூலித் தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் 12 மணி நேரம் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களை கடுமையாக வேலை வாங்கும் நிறுவனங்களோ அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுப்பதில்லை. உழைப்புச் சுரண்டலை தடுத்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள தொழிலாளிகள் சங்கம் ஆவது ஒன்றுதான் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

தகவல் :
தங்க. சண்முகசுந்தரம்

மக்கள் அதிகாரம், தஞ்சை மண்டலம்
திருவாரூர் : 63747 41279