முத்துகுமாருடன் நீண்டநேர விவாதத்தை முடிக்கையில், அவர் என்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா என்றார். கேளுங்கள் என்று நான் கூறினேன்.

“நான் எனது மனைவியின் நகைகளை ஒரு அடகு கடைகாரரிடம் சிறிது காலத்திற்கு முன்னர் அடகு வைத்தேன். இப்போது எனக்கு வேலை இல்லை. என்னால் இப்போது தவணைக் கட்ட முடியாததற்காக ஏதாவது தள்ளுபடி செய்வார்களா?’’ என்று அவர் கேட்டார். வட்டி அதிகரித்து விட்டதால் அவரால் கடன் கட்ட இயலாத அச்சத்தில் இந்த கேள்வி வருகிறது. அவர் பெற்ற கடன் ரூ.1,20,000. அவரது மாத தவணையோ ரூ14,000.

படிக்க :
கொரோனா  – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !
கொரோனா நெருக்கடியிலும் அதிகாரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு !

அவரும் அவரது மனைவியும் திருப்பூரில் ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தனர். அது துணி ஏற்றுமதிக்காக உலக அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். 12 மணிநேர வேலைக்கு அவர்கள் ரூ.500 கூலியாக பெற்றுவந்தனர். தங்கிக் கொள்வதற்கு ஒரு வீடும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஊரடங்கு இல்லாத நிலையிலும் கடனை உரிய தேதியில் கட்டுவது அவர்களுக்கு மிகவும் சிரமமான விசயம்தான். இப்போதோ ஊரடங்கால் அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளனர்.

“இந்த முறை ஏப்ரலில் ஊரங்கு அறிவிக்கப்பட்டதும் முதலாளி எங்களையெல்லாம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தார்” என்றார் முத்துகுமார். அவரது குரல் தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைப்பாளிகளின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.

சென்ற ஆண்டின் ஊரடங்கை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டபோது, “சென்ற ஊரடங்கின் போது எங்கள் முதலாளி எங்களை அங்கேயே சிலநாட்கள் தங்கவைத்திருந்தார். எங்களுக்கு சாப்பாட்டிற்கு அரிசியும் கொடுத்தார். செலவுக்கும் பணம் கொடுத்தார். ஆனால், தொடர்ந்து நிர்வகிக்க முடியாத போது, எங்களை வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அவ்வாறே இந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே எங்களை அனுப்பிவிட்டார். இப்போது வேலையில்லாமல் ஒரு மாதம் ஆகிவிட்டது” என்றார்.

அவரும் அவரது மனைவியும் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம்தான் கூலி பெற்றனர். அந்த முதலாளி கொடுத்த முன்பணத்திற்காக ஒரு வார சம்பளத்தை பிடித்துக்கொண்டார். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு வருமானமும் இல்லை.

“நாங்கள் வேலை செய்தால் கூலி கிடைக்கும், சில நாட்கள் வேலையில்லாதபோது எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. இது தினக்கூலி வேலைமுறை” என்கிறார் முத்துகுமார்.

மதுரைக்கு அருகில் உள்ள தனது சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு அவர் திரும்ப வந்துள்ளார். முத்துக்குமாரின் குடும்பத்தினர் அம்மா மற்றும் அவரது சகோதரர் வசிக்க கூடிய, பரம்பரையாக உள்ள வீட்டில் வாழ்ந்துவருகின்றனர். அவருடைய சகோதரர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெயிண்ட் அடிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரும் ஊரடங்கால் அங்கு பணியிழப்பு ஏற்பட்டதும் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

“இந்த மாதத்தில் எல்லா பணமும் செலவாகிவிட்டது. அடுத்த மாதத்திற்கு எங்கள் அம்மாவின் சேமிப்பை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. என் அம்மா 100 நாள் வேலைதிட்டத்தில் கூலிவேலை செய்து சம்பாதித்துள்ளார். அதை நம்பித்தான் உள்ளோம்”, தேசிய ஊரக வேலைவாய்ப்பும்கூட கோவிட் இரண்டாம் அலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முத்துகுமாரின் கதை தனிதன்மையானது அல்ல. மீண்டும் இப்போது வரை கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரங்களில் வேலை இல்லாமல் போனதாலும் ஊரடங்கு பயமுறுத்துவதாலும் பலரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். வேலைவாய்ப்பின்மை பற்றிய இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், இந்த ஆண்டு மே மாதத்தில் வேலையி்ன்மை மிக அதிகமாக பெருகிவருவது பற்றி தெளிவாக கூறுகிறது. தமிழ்நாட்டின் மொத்த உழைப்பு சக்தியில் முறைசார்ந்த பிரிவு 7% மட்டுமே வேலை கொடுக்கிறது. மற்ற 93% அமைப்பாக்கப்படாத தொழில் பிரிவுதான் பெரும்பாலான மக்களுக்கு வேலை கொடுக்கிறது.

மதுரை மாவட்டம், அழகர் கோயில் அருகில் வசிக்கும் பொன்னம்மாவின் வாழ்நிலை முத்துகுமாரின் நிலையை ஒத்ததுதான். இவருடைய குடும்பத்தினர், கோயமுத்தூரில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவரும் இவருடன் வேலை பார்த்தவர்களையும் செங்கல் சூளையில் வேலை குறைந்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் மூன்று மாதத்திற்கு முன்னரே வீட்டிற்கு போகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்போழுது சொந்த ஊரிலும் கூட வேலை கிடைக்காததால் அவரும் அவரது குடும்பமும் துயரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது.

“நாங்கள் எங்கள் நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டோம். இன்னும் இந்த சில மாதங்கள் உயிர்வாழ எங்கள் வீட்டையும் அடமானம் வைத்துள்ளோம். வேலை தேட வெளியே செல்ல முயற்சித்தால் போலிசு எங்களை தடுத்துநிறுத்தி மோசமாக நடத்துகிறது. ஆகையால் என் கணவரும் என் மகனும் வேலை தேட செல்லவில்லை” என்றார் பொன்னம்மா.

தமிழ்நாடு அரசு கொடுத்த ரூ.2000 ஒரு மாத செலவுகளை சமாளிக்க சிறிது உதவிகரமாக இருந்தது. இருந்த போதிலும், ஊரடங்கு தொடர்ந்தால் மற்றும் வேலைவாய்ப்புக்கான வழி இல்லை என்றால் அவரது குடும்பம் மிக மோசமான நிலையை அடையும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. மேலும், அவர் கோவிட் தொற்று வந்துவிடுமோ என்பதிலும் பதட்டமாக உள்ளார்.

“ஊராட்சி அதிகாரிகள் வந்து எங்களை பார்வையிட்டு கைகளை முறையாக கழுவவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தினர். வெளியே அதிகமாக எங்கும் போகவில்லை. காய்ச்சல் அல்லது இருமல் வந்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டும்” என்றனர்.

பல இளைஞர்கள் ஆலை மூடல் காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். பலரும் உணவு விடுதிகள், கடைகள் மற்றும் பிற சேவைகள் போன்றவை மூட நிர்ப்ந்திக்கப்படுவதால் கிராம புறங்களில் கூட வேலை இழந்துள்ளனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிடைக்கின்ற ஒரே வேலை விவசாய கூலி வேலைதான். ஆனால், அது எல்லா மாவட்டங்களிலும் கிடைப்பதில்லை.

2020 ஆம் ஆண்டில் முதல் கொரோனா ஊடரங்கில் கடன் பிரச்சனைக்கு எதிராக மதுரை பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்

சிபிஐ எம்எல் (விடுதலை)-யின் மாவட்ட செயலாளர் இளையராஜாவின் கூற்றுப்படி, தேனி மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட அங்கு நல்ல விவசாய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதே நேரத்தில், விவசாயம் என்பது விவசாயம் அல்லாத வேறு துறைகளிலிருந்து அதிகமாக வரும் வேலையாட்களுக்கு வேலையை ஏற்படுத்துவதில்லை. தனது மகனுடன் சேர்ந்து மாடு வளர்க்கும் முத்துகுமார், “பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகிவிட்டது மற்றும் நிலங்களின் மேல் மண் மற்ற பயன்பாட்டிற்கு வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது” என்கிறார். இப்போது பாறைகள் கூட மணலுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார். “விவசாயத்தை மறந்ததால், இப்போது நாங்கள் மாடு மேய்க்க இந்த பாறை நிலத்தில் சிரமப்படுகிறோம்” என்கிறார் அவர்.

கூலி வேலையை அதிகம் கோராத வகையில் தஞ்சாவூர் டெல்டா பகுதி விவசாயம் இயந்திரமயமாக்கப்படுகிறது. பல இளைஞர்கள் கேரளாவிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேலை தேடி தொலைதூரம் செல்லவேண்டியிருக்கிறது. எல்லைகள் மூடப்பட்டு பெருநகரங்கள் மூடப்பட்டு இருக்க பலரும் கிராமத்திற்கு திரும்ப வந்துள்ளனர்.

சென்ற ஆண்டைப் போல், இந்த ஊரடங்கு காலங்களில் செலவுகளை சமாளிக்க சிரம்படுகின்ற இந்த காலங்களில் அவர்கள் சந்திக்கின்ற தவணை, கடன், வட்டி போன்றவற்றை திரும்ப செலுத்துவதில் இந்த ஆண்டு முழுவதும் கூட கட்டமுடியாமல் போகலாம். கோவிட் பெருந்தொற்றைவிட இந்த ஊரங்குதான் அதிக அழிவை கொண்டுவரும் என்பதுதான் உழைக்கும் மக்களின் குடும்பங்களுக்கு முக்கியமான உள்ளுணர்வாக இருக்கிறது.

“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் நான் நேர்காணல் மேற்கொண்ட போது பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்கள்.

குறைவான வருமானம் உள்ள அனேக குடும்பங்கள் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மே மாதத்திற்காக ரூ.2000 பெற்றுள்ளன. இன்னொரு தவனையாக ஜூன் மாதத்திற்கு ரூ.2000 தருவதாக உறுதியளிக்கப்பட்டு்ள்ளது. இருப்பினும், இந்த குறைந்தப் பட்ச தொகை அவர்களுடைய வாடகை தொகையையோ அல்லது கடன் தவணையையோ செலுத்த உதவாது. அவற்றுக்காக ஒரு மாதத்திற்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டியதாக இருக்கிறது.

படிக்க :
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !
முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து  மீள்வது எப்படி ?

அரசாங்கம், நீண்ட ஒரு காலகட்டத்திற்கு உதவியை நீட்டிப்பு செய்து அடிப்படை வருமான வாழ்வாதாரத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை என்றால் இந்த நிச்சயமற்றதன்மை மக்களை மேலும் கடனாளியாகும் நிலைக்கு தள்ளிவிடும்.

விவசாய தொழிலாளர்கள் அல்லாத கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டு சிறு வியாபாரிகள், முறைசார தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் கூட்டமைப்பு, முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் உழைப்பாளர் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10,000 வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளது. மேலும். அது கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட கால அவகாசம் தரவேண்டும், வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும், வாடகை தொகையை கட்ட கூடுதல் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.


மூலக்கட்டுரை : தொழிலாளர் கூடம்
தமிழாக்கம் : முத்துக்குமார்
செய்தி ஆதாரம் : Countercurrents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க