நீடாமங்கலம் சிபிஐ ஒன்றிய செயலாளர் தோழர் தமிழார்வன் படுகொலை : டெல்டா மாவட்ட மக்கள் மற்றும் ஜனநாயக , முற்போக்கு சக்திகளுக்கு ஒரு எச்சரிக்கை !

பாசிச சக்திகளை வீழ்த்த முற்போக்கு சக்திகள் ஐக்கியமாக ஓரணியில் இணைந்து செயல்படுவது, தத்தமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகும். இதை உணர்ந்து ஒன்றிணைந்து நிற்பது முதலில் செய்ய வேண்டிய பிரதான பணி.
கட்டுரையின் நோக்கம் சிறப்பாக உள்ளது. பாசிச சக்தியான ஆர்.எஸ்.எஸ் – பாஜக தனது காலை தமிழகத்தில் ஊன்ற சாதிய சங்கங்களை ஊக்குவிக்கிறது. அதை கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராடும் முற்போக்கு சக்திகளுக்கு எதிராகத் திருப்பிவிட்டு திட்டமிட்டு படுகொலையை செய்து பயத்தை ஏற்படுத்துகிறது. அதற்கெதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும்; தற்காப்பு தாக்குதல் குழுக்களை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதையும் வலியுறுத்துகிறது.
அதேசமயம், கட்டுரையில் போதுமான விவரங்கள் இல்லை என்றே கருதுகிறேன். அதாவது, தோழர் நடேச. தமிழார்வனின் கார்ப்பரேட் எதிர்ப்பு அல்லது மக்களுக்கான அவரது விடாப்பிடியான போராட்டத்தைக் காட்டியிருக்க வேண்டும். அல்லது வெட்டிக் கொன்ற கஞ்சா வியாபாரியும் ரவுடியுமான ராஜ்குமார் கும்பலின் அரசியல் சமூகப் பின்னணியைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகைய விவரங்களோடு குறிப்பிட்டிருந்தால் கட்டுரை இன்னும் சிறப்பாக இருக்கும்.