மீன் விற்கும் பெண்மணி ஒருவரை பேருந்தில் ஏற்ற மறுத்த ஓட்டுனர், நடத்துனர் மீது தமிழ்நாடு முதல் அமைச்சர் நடவடிக்கை எடுத்தது குறித்து கடந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த மாதத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கோவில் அன்னதானத்தில் அவர்களுக்கு அனுமதி மறுத்தது, அவர்களுக்கு பேருந்தை நிறுத்தாமல் சென்றது குறித்து சமூக ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் அவரை நேரில் சந்தித்து அவருடன் அமர்ந்து கோவில் அன்னதானத்தில் உணவருந்தினார்.

சாதிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட குறவர், இருளர் இன மக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள், பொதுச் சமூகத்தின் மனதில் ஊற வைக்கப்பட்ட பார்ப்பனிய சிந்தனையால் அன்றாடம் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதில் உழைக்கும் வர்க்கமான பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களும் விதிவிலக்கல்ல.

இப்படி ஆட்சியிலிருப்பவர்களும், தவறிழைத்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களின் காலைக் கழுவுவதாலோ, உடனமர்ந்து உணவருந்துவதாலோ இந்த இழிநிலையை சரி செய்ய முடியாது. சாதியத்தைக் காப்பாற்றும் சனாதனப் படிநிலையையும், சுரண்டல் அரசமைப்பையும் தகர்த்தெறிய வேண்டும். அதற்கு பெருவாரியான உழைக்கும் மக்களை சாதிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கருத்துப்படம் : வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க