மே 5, 2022 : பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் கார்ல் மார்க்ஸ் 204-வது பிறந்த நாள் !

லக முதலாளித்துவம் உழைக்கும் மக்களைச் சுரண்டி, பல்வேறு நாடுகளின் மீது பொருளாதார தடை விதித்து, சந்தை பிடிக்கும் போட்டியும், போரையும் தீவிரப்படுத்தி வருகிறது.

உலக இயற்கை வளங்கள், கனிம வளங்கள் அழிக்கப்படுவதும், புவி வெப்பமயமாதல் மற்றும் புதிய காலநிலை மாற்றங்கள் போன்ற பேரழிவுகள் அதிகரிப்பதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. இந்த பேரழிவிற்கு காரணமான முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட மார்க்சியம் எனும் ஆயுதத்தை உலக பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து கையிலேந்த வேண்டிய சூழ்நிலையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், தற்போதைய உலக பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மார்க்சியம் மட்டுமே! ஏகாதிபத்தியங்களை வீழ்த்த மார்க்சிய போர்வாளை கையிலேந்துவோம்!

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் !

ஓவியம் : மு.துரை

***

ஓவியம் : தோழர் ரூபாவதி
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

***

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க