டந்த ஜனவரி 31 அன்று மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட 30 வினாடி வீடியோவில், “மசூதிகளில் அசான்(பாங்கு) ஓதும்போது (அதற்கெதிராக) ஒலிபெருக்கியில் இரைச்சலை ஏற்படுத்துங்கள்” “இந்த வீடியோவை வைரலாக்குங்கள் இந்த செய்தி இந்தியா முழுவதும் செல்ல வேண்டும்” என்று மசூதிக்கு வெளியில் காவி குண்டர் ஒருவர் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அறைகூவல் விடுக்கிறார்.
கடந்த ஜனவரி 29 அன்று ரத்லாம் மாவட்டத்தின் ராவ்தி போலீசு நிலையத்தில் ஒலிபெருக்கிகள் மூலம் ஆசான் ஓதுவதை தடை செய்யக்கோரி புகார் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த இந்து ஜாக்ரன் மஞ்ச் (HJM) உறுப்பினர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோவை பரப்பியுள்ளனர்.
வீடியோ ஒரே இரவில் வைரலானது, அடுத்த நாள் ரத்லம் போலீசார் கிராமத்திற்கு விரைந்து மசூதியின் ஒலிபெருக்கி ஒலியைக் குறைக்குமாறு முஸ்லீம்களை வலியுறுத்தினர். அதே நேரத்தில் மசூதிக்கு வெளியே இந்துமதவெறி அமைப்பினர் வைத்திருந்த ஒலிபெருக்கியை அகற்றினர்.
படிக்க :
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
“நாங்கள் கிராம மக்களிடம் பேசி இரு சமூகத்தினரையும் அமைதி காக்கும்படி வலியுறுத்தினோம். இந்த விவகாரம் அமைதியான முறையில் தீர்க்கப்பட்டதால் சர்ச்சைக்குரிய வீடியோவில் பேசும் இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று ராவ்தி போலீசு நிலையத்தின் டவுன் இன்ஸ்பெக்டர் ராம் சிங் கூறினார்.
அசான் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைக்கான அழைப்பாகும். இந்தியாவில் ஒரு நாளைக்கு ஐந்து முறை மசூதியிலிருந்து அசான் (பாங்கு) ஓதப்படுகிறது.
மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி புகார்கள் சமர்ப்பிக்கப்பட்ட போலீசு நிலையம் ராவ்தி மட்டுமல்ல மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 29-க்கும் பிப்ரவரி 2-க்கு இடையில் இந்து ஜாக்ரன் மஞ்ச் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பிராந்தியத்தின் 15 மாவட்டங்களில் உள்ள 310 போலீசு நிலையங்களிலும் ஒரே மாதிரியான இரண்டு பக்க புகார் கடிதங்களை கொடுத்ததாக HJM-ன் மால்வா மாகாணத் தலைவர் ஆஷிஷ் பாசு கூறினார்.

HJM தவிர ஜனவரி 16 அன்று இந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு ஜூனி போலீசு நிலையம் உட்பட நகரின் பல்வேறு போலீசு நிலையங்களில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் “தொந்தரவாக” இருப்பதால் அவற்றை அகற்ற புகார் அளித்தனர்.
ஜனவரி 24 அன்று, இந்துத்துவ குழுக்களின் உறுப்பினர்கள் இந்தூரின் ராவ்ஜி பஜார் போலீசு நிலையத்தில் இதேபோன்ற புகாரை கொடுத்துள்ளனர். தங்களுக்கு ஆசான் ஓதுவதை கேட்பதில் சிக்கல் இருப்பதாகவும், அது நிறுத்தப்படாவிட்டால், அசான் ஓதும்போது நாங்கள் ஒலிபெருக்கியின் மூலம் உரத்த சத்தத்தை ஏற்படுத்துவோம் என்றும் கூறினர். இதை காரணமாக வைத்து இப்பகுதியில் உள்ள முஸ்லிலீம்களை துன்புறுத்தியுள்ளனர்.
போலீசு நிலையத்தின் டவுன் இன்ஸ்பெக்டரிடம், “இது ஆரம்பம், இது ஒரு தேசிய பிரச்சினையாக மாறும். இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் 7 சதவீதத்திற்கும் குறைவான முஸ்லீம் மக்கள் உள்ளனர். ஆனால் மால்வா நிமார் பகுதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர்.
இந்தூர் ஷஹர் காசி இஷ்ரத் அலி, “ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கு முன்னதாக மதவெறி கலவரங்களை உருவாக்கவே அசான் ஓதுவதற்கு எதிராக முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்” “அசான் என்பது ஒரு மசூதியில் இருந்து மக்களுக்கு நமாஸ் பற்றி நினைவூட்டுவதற்காக ஒரு அறிவிப்பு, அது 2-3 நிமிடங்களுக்குள் முடிவடைகிறது. தவிர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்கள் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமையை உறுதி செய்கிறது” என்றார்.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள், ஆசிரியர்கள் “ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம்” என்று பிரச்சினையை கிளப்பி, ஹிஜாப்-ம் அணியக் கூடாது காவித் துண்டும் அணியக் கூடாது என்று வழக்கமான முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை உத்தரவை பெற்றுள்ளது சங்கப் பரிவாரக் கும்பல்.
படிக்க :
கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!
உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
தற்போது அதே உத்தியை மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற இந்துமதவெறி அமைப்பு மசூதிகளில் அசான் ஓதுவதை வெறுப்பு அரசியலாக மாற்றுகிறது. நீங்கள் அசான் ஓதினால் அதற்கெதிராக நாங்கள் ஒலிபெருக்கியின் மூலம் இரைச்சலை ஏற்படுத்துவோம் என்றும், நாடுமுழுவதும் இதனை அரங்கேற்றும் படியும் அறைகூவல் விடுக்கிறது காவி குண்டர் படை. இறுதியில் ஓதுவதோ ஒலிபெருக்கியில் இரைச்சலை ஏற்படுத்துவதையோ செய்யக் கூடாது என்று மசூதிகளில் ஓதப்படும் அசானை தடை செய்ய முயற்சிக்கிறது சங்கப் பரிவாரக் கும்பல்.
நாடு முழுவதும் வழக்கமாக மசூதிகளில் அசான் ஓதுவதை எதிர்த்து மதக் கலவரங்களை உருவாக்கும் வாய்ப்புகள் மத்தியப் பிரதேசத்தில் மதவெறியர்களில் அறைக்கூவல் நமக்கு உணர்த்துகிறது. முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை முறியடிக்க பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த அனைத்து உழைக்கும் மக்களும் வர்க்கமாய் ஓரணியில் திரளவேண்டிய தருணமிது.

சந்துரு
செய்தி ஆதாரம் :  த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க