ருத்துவ நுழைவுக்கான நீட் தேர்வு, தகுதியின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படுவது என பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் நெடுங்காலமாக கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால் நீட் போன்ற தகுதிகாண் போட்டித் தேர்வுகள், வசதி படைத்த மாணவர்களுக்கு உதவுகிறது என்பதையும் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதிகள் செய்துகொடுகின்றன என்பதையும் பல தரவுகள் அவ்வப்போது அம்பலமாக்கி வருகின்றன.
ஆனாலும் இந்தியாவில் நீட் தேர்வு என்பது தகுதியுள்ள மாணவர்களை தேடிக்காண விழையும் பெரும் முயற்சி என்று இன்னமும் கதை அளந்து விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது முகத்தில் காரி உமிழும் வண்ணம் தற்போது மற்றொரு தரவும் வெளியாகி இருக்கிறது.
கேரீயர்ஸ் 360 (Careers 360) என்ற நிறுவனம் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ‘நீட் தேர்வு என்பதே சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிமுறை’ என்பதனை தரவுகளுடன் அம்பலமாக்கியுள்ளது.
படிக்க :
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடுகிறது என்ற ஆதிக்க சாதி மனோபாவம் எத்தகைய முட்டாள்தனமானது என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐந்து மாநிலங்கல், மருத்துவப் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கடைசி மாணவருடைய தரவரிசை மற்றும் மதிப்பெண் என்ன என்பதை, வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் கடைசியிடம் பெற்ற (என்.ஆர்.ஐ – NRI) மாணவரின் தரவரிசை மற்றும் தகுதி மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்கள்.
அவ்வாறு ஒப்பிட்டு பார்த்ததில், வசதிப் படைத்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் வரக்கூடிய மாணவர்கள், தரவரிசைகளிலும் மதிப்பெண்களிலும் மிகவும் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, தகுதியுள்ள மாணவர்களைத் பொறுக்கியெடுக்கிறோம் என்ற சாயம் வெளுத்துப்போய்விட்டது. எந்த நீட் வந்தாலும் தனியார் கொள்ளையர்கள் புகுந்து மேயலாம், தடையில்லை; காசு இருப்பவன் கல்வி பயிலலாம், தகுதி வெங்காயமெல்லாம் தேவையில்லை என்ற குட்டு வெளிப்பட்டுள்ளது.
ஆய்வின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்:
கடந்த 2020-ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத பதிவு செய்த 16 இலட்சம் மாணவர்களில், 13.6 இலட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் (ஜஸ்ட் பாஸ் ஆனவர்கள் உட்பட) சுமார் 7.7 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர்.
பொதுவாக இவ்வாறு தேர்வாகிறவர்களில் முதல் தரத்தில், முதல் இடத்தில் தேர்வான மாணவர் தொடங்கி அவருக்கு அடுத்து வருபவர் என தரவரிசைப்படியும் மதிப்பெண்படியும்தான் எல்லா மருத்துவ இடங்களும் நிரப்பப்படும் என்று பலரும் நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அப்படி நடப்பது இல்லை.
கேரியர்ஸ் 360 நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட ஐந்து மாநிலங்களில், கர்நாடக மாநிலத்தின் யோக்கியதையை எடுத்துக்காட்டுக்காக கொடுத்துள்ளோம். கீழே பாருங்கள்
(இதர மாநில மருத்துவ கல்லூரிகள் குறித்த புள்ளிவிவரங்கள் மூலக்கட்டுரையில் உள்ளது – NEET: How NRI quota dilutes ‘merit’ but faces none of the flak reservation gets)
2020-ஆம் ஆண்டில், நாட்டிலுள்ள 80,000 இளநிலை மருத்துவ இடங்களில் சுமார் 4௦,௦௦௦ இடங்கள் அரசுக் கல்லூரிகளும் இதர 40,000 இடங்கள் தனியார் கல்லூரிகளும் கொண்டிருந்தன. இந்த தனியார் கல்லூரிகளில், NRI பிரிவிலுள்ள இடங்கள் மட்டும் 1,869.
ஏற்கெனவே, வகுக்கப்பட்ட கொள்கையின்படி NRI பிரிவினியாருக்கான கட்டணம் சுமார் 1௦ லட்சம். அவ்வளவு உயர்ந்த கட்டணத்தில் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சேர்வது இல்லை. முதல் இரண்டு மாணவர் சேர்க்கை சுற்றுகளில் (Counselling) NRI மாணவர்கள் சேராவிட்டால் இந்தக் கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் சேர்க்கப்படும் மாணவர்களிடம் இருந்து சுமார் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரை இக்கல்லூரிகள் வசூலிக்கின்றன.
படிக்க :
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
இதற்காகத்தான் தனியார் கல்லூரிகள் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. சான்றாக, நீட் தேர்வு வேண்டும் என்று முதன்முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சங்கல்ப் அறக்கட்டளை (Sankal Charitable Trust) மருத்துவக் கல்லூரிகள் நடத்துகிறது. நீதிமன்றமோ கொள்ளையடிப்பனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது.
000
பா.ஜ.க.-வினர் மட்டுமின்றி சுமந்த் ராமன், பாலகுருசாமி போன்ற கழிசடை கருத்துசொல்லி பேர்வழிகளும் தரத்தை பற்றியும் தகுதியைப் பற்றியும் சொல்லக்கூடிய அத்தனை வாதங்களும் எப்படி பொய்யானது என்று பாருங்கள்.
இதே தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரும் தாழ்த்தப்பட்ட பிரிவில் கடைசியில் வரும் மாணவர்களைவிட, தரவரிசையில் பல லட்சங்களுக்கு கீழே இருக்கும் ‘ஜஸ்ட் பாஸ்’ பெற்ற வசதிபடைத்த என்.ஆர்.ஐ. மாணவர்கள் எப்படி தரம் உயர்ந்தவர்களானர்கள். கிழிந்து தொங்குகிறது நீட் தேர்வின் தரா‘தரம்’!

தினகரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க