முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
நீட்டப்படும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தின் கொடுங்கரங்களை உடைக்க உழைக்கும் மக்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபடுவோம்! மாணவர்களே நாம் இப்போது விட்டால் எப்போதும் அடிமைதான்!
பாசிச மோடி அரசால் உருவாக்கப்படும், அர்பன் சங்கிகளின் பதுங்கு குழிகள் இவை.குறிப்பாக, ஊழலில் டாக்டர் பட்டம் பெற்ற பெருச்சாளிகள் பதுங்கியுள்ள இடம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றியவர் சாமிநாதன். இந்த காலகட்டத்தில் பேராசிரியர் மற்றும் விரவுரையாளர் பணிகளுக்கு 154 பேர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணிக்கு 47 பேர் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட அவர்களைத் தேர்ந்தெடுத்து சான்றிதழ் தணிக்கை செய்யப்பட்டது. இந்த தணிக்கையில் போலி சான்றிதழ்களை கொண்டு தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2016 முதல் 2019 ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டுகளில் முறையான கட்டமைப்பு இல்லாத கல்லூரிகள் தொடங்கவும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் முறைகேடாக அனுமதி அளித்து இருப்பது அம்பலமாகியுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 5 கல்லூரிகளில் ரூபாய் 3.26 கோடி வரை லஞ்சம் வாங்கி மாட்டினார்.
பதிவாளர் அங்கமுத்து தன் மீதான புகார்களுக்கு பயந்து கடந்த 2017-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி இதன் கதை நீளூ..கிறது.
எதிர்காலத்தில் டெல்லியில் மோடி பதுங்க உருவாக்கப்படும் விஸ்டா மர்ம்மாளிகையின் தப்பிக்கும் பின் வாசல்களாக(மூளையாக) இயங்குபவைதான் இந்த பல்கலைக்கழகங்கள்.