மிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகிறது. வரும் 2022-23 கல்வியாண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
10-ம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் 9-ம் வகுப்பிற்கான ஊரக திறனாய்வுத் தேர்வு – TRUST தேர்வு – மதிப்பெண்கள், 9-ம் வகுப்பிற்கான சேர்க்கப்படும் மாணவர் 8-ம் வகுப்பில் தேசிய வருவாய் வழித்திறன் தேர்வு – NMMS தேர்வு – மதிப்பெண்கள், 11-ம் வகுப்பிற்கான சேர்க்கப்படும் மாணவர் 10-ம் வகுப்பிற்கான NTSE தேர்வு மதிப்பெண் மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் ஆகிய பட்டியலின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்படும். இதில், மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாதிரிப் பள்ளிகளில் பயிற்சி தேர்வுகள் என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு தயார் படுத்துகிறோம் என்கிறார்கள். மாதிரிப் பள்ளிகள் 32 மாவட்டங்களில் மிகக் குறைவுவான அளவில்தான் உள்ளன. அப்படி என்றால், மற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிப்பதற்கு தகுதியற்றவர்களா?
படிக்க :
♦ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !
♦ ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்
கோச்சிங் சென்டர் – மார்க் – மெரிட் – நுழைவுத்தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களை தயார்படுத்தம் நடைமுறைக்காக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பலன் என்னவோ தனியார் பள்ளிகளுக்கும், கோச்சிங் சென்டர்களுக்கும்தான் சென்றடையப்போகிறது என்பதே உண்மை.
உதாரணமாக, நீட் தேர்வு அறிவித்தவுடன் தனியார் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல்போல முளைத்தன; ஆதிக்கம் செலுத்தின. இன்று விளம்பரங்களைபோட்டு பெற்றோர்களை கவர்ந்து இழுக்கின்றன. பல ஆயிரக்கணக்கான கோடிகளை பெற்றோர்களிடமிருந்து பிடுங்கி கொண்டிருக்கின்றன. இதேபோல, பல தனியார் பள்ளிகள் ஆரம்பத்திலிருந்தே நீட் கோச்சிங் தருகிறோம் என்று சொல்லி பல இலட்சங்களை பெற்றோர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கின்றன.
தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வில் கோச்சிங் நடத்தப்படுகிறது. தற்போது மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்கிறது தமிழக அரசு. இதன்மூலம், தனியார் பள்ளிகளை போலவும் கோச்சிங் சென்டர்களைப் போலவும் அரசுப் பள்ளிகளை மாற்றியமைத்து ஒட்டுமொத்த பள்ளி கட்டமைப்பையே “காசு இருந்தால்தான் கல்வி” என்ற அடிப்படையில் மாற்றியமைக்க வழி அமைத்துக் கொடுக்கிறது அரசு. இதையேதான் புதிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது.
மற்றொருபுறம், தரமான உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க அம்பானிக்கும் அதானிக்கும் வழி அமைத்து கொடுத்து மக்களை கொள்ளை அடிக்க ரூட்டு போட்டும் கொடுக்கிறது புதிய கல்விக் கொள்கை. இதில், உழைக்கும் – ஏழை – பின்தங்கிய மாணவர்கள் கல்வியில் இருந்தே வெளியேற்றப்படும் அபாயம்தான் உள்ளது.
***
இன்னொருபுறம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசே நிதியளித்து வருகிறது. இதன்மூலம் தனியார் கல்விதான் சிறந்த கல்வி என்ற தோற்றத்தை அரசே ஏற்படுத்திவிட்டது.
எல்.கே.ஜி – யு.கே.ஜி போன்ற மழலை வகுப்புகளை தொடர்ந்து நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது திமுக அரசு. ஆனால், அதற்கு முன்பு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதனால் 2321 எல்.கே.ஜி – யு.கே.ஜி அரசுப் பள்ளி ஆசிரியர்களை இடை நிலைப் பள்ளிக்கு மாற்றுகிறோம் என்றது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் பின் வாங்கிக் கொண்டது. இப்போது எல்.கே.ஜி – யு.கே.ஜி-க்கு ஆசிரியர்கள் வேண்டும் இடை நிலைப் பள்ளிக்கு ஆசிரியர்கள் வேண்டும் என்ன செய்ய போகிறது தமிழக அரசு.
படிக்க :
♦ 2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
இதுபோக, கொரோனா காலகட்டம் முடிந்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கான கூடுதல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ள இந்த இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஏற்றார்போல் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதையெல்லாம் ஏறெடுத்துக் கூடப் பார்க்காத தமிழக அரசுதான் இன்று ரூ.150 கோடி செலவில் மத்திய அரசின் நிதி உதவியுடன் புதிதாக 25 மாதிரிப் பள்ளிகளை அமைக்கப் போகிறோம் என்கிறார்கள்.
பெரும்பாலான உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகள் கல்வியில் இருந்து வெளியேற்றப்படுவதுதான் இவர்களைப் பொறுத்தவரை தகுதி தரம். கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த தேசபக்தர்கள் உழைக்கும் மக்களின் வீட்டு பிள்ளைகளையும் தரம் உயர்த்த போகிறோம் என நாடகமாடுகிறார்கள்.
கல்வி தனியார்மயமாக்களையும், அதை தீவிரப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையையும் முறியடிக்க ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர்கள் ஓர் கூட்டமைப்பாக இணைந்து களமிறங்க வேண்டியது அவசியம்.

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க