ப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பெண்களுக்கு எதிரான ஜனநாயக உரிமையை மறுக்கின்ற வகையில் கடுமையான சட்டங்களையும், கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றனர். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து 40-க்கும் மேற்ப்பட்ட பெண்கள், ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சகத்தை முற்றுகையிட முயன்றனர்.

“ஆகஸ்ட் 15 கறுப்பு நாள்” என்ற பேனரை ஏந்தியும், அரசியலில் பங்கேற்கவும், வேலைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ரொட்டி, சுதந்திரம், கல்வி, வேலை வேண்டும் என்றும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. “நீதி வேண்டும், நீதி வேண்டும்; நாங்கள் அறியாமையால் சலிப்பு அடைந்துவிட்டோம்” எனவும் முழக்கமிட்டனர்.

படிக்க : ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

அப்போராட்டம் நடைபெற்றதை அறிந்த தலிபான்கள் அப்போரட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள்.  அப்பெண்களை அச்சுறுத்த  தலிபான்கள் வானத்தை நோக்கி தூப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பெண்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றாலும் அவர்களை பின்தொடர்ந்த தலிபான்கள் துப்பாக்கியால் அடித்து துன்புறுத்தினார்கள்.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வளவு அடக்குமுறையை ஏவினால் போராட்டத்தில் கலந்து கொண்ட முனிசா முபாரிஸ், “பெண்களுக்கான உரிமை பெறும் வரை போராட்டம் தொடரும்” என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் “தலிபான்கள் எங்கள் குரலை அடக்க நினைக்கிறார்கள், அது சாத்தியமில்லை. நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்து போராட்டத்தை நடத்துவோம்”என்று கூறினார்.

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பெண்களின் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பள்ளி கல்வியை மறுத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்க மறுத்துள்ளனர். பெண்களின் அரசு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான கொலை, பாலியல் வன்கொடுமைகள் என்பது அதிகரித்து இருக்கிறது. பெண் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பணியில் இருந்து அனுப்பப்படுகின்றனர்.

வேலை மற்றும் அரசியல் பங்கேற்புக்கான உரிமைகளை கோரி, ‘ஆகஸ்ட் 15 ஒரு கருப்பு நாள்’ என எழுதப்பட்ட பதாகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பொது இடங்களில்  ஆண், பெண் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது, பூங்காக்களுக்கு செல்லத் தடை, அரசியலில் பெண்கள் பங்கேற்கக் கூடாது, உச்சதலை முதல் உள்ளங்கால் வரை புர்கா அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் போன்ற கடும் கட்டுபாடுகளை எதிர்த்து பேரணியாக சென்றனர். ஆப்கான் பெண்களின் வாழ்க்கை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டதுபோல உள்ளது என மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் பத்திரிகை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என RSF இயக்குநர் கிறிஸ்டியன் மிர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. நூற்றூக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். ஆப்கானில் ஜனநாயக உரிமைகள் தலிபான்களால் அடக்கி ஒடுக்குப்படுகின்றன. தற்போதைய தலிபான்கள் ஆட்சி 1996 – 2001 வரையிலான தலிபான்களின் காட்டுமிராண்டிதனமான ஆட்சியை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். மதவாத பாசிஸ்ட்டுகள் தங்களது மரபு என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை  தீவிரமாக அமல்படுத்துகின்றனர்.

இந்தியாவின் மதவாத பாசிஸ்டுகள்:

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய சிறுமி ஆசிஃபா, உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி போராடியது, இஸ்லாமிய பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பொது அழைப்பு விடுப்பது, பில்கிஸ் பானோ  கர்ப்பிணி பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்; அவரது குழந்தையையும் குடும்பத்தினரையும் கொலை செய்தவர்கள் பார்ப்பன பாசிஸ்டுகள். தலிபான்களை விட ஒருபடி மேலான கொடூர எண்ணம் கொண்டவர்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.

படிக்க : தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !

மதவாத பாசிஸ்டுகள் பெண்களுக்கு எதிரானவர்கள் மட்டும் அல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள், மனித குலத்துக்கே எதிரானவர்கள். இம்மாதவாத பாசிஸ்டுகளை எதிர்த்து துணிச்சலோடு போராடுகின்ற ஆப்கான் பெண்களின் போராட்டத்தை நாம் ஆதாரிப்போம். நம் நாட்டில் அரங்கேறி கொண்டிருக்கும் காவி பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைகளுக்கு அமைதி காத்து நிற்காமல் ஆப்கானிஸ்தான் பெண்களின் போராட்ட உணர்வை வரித்து கொண்டு நாமும் பார்ப்பன பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக களமிறங்கிப் போராடுவோம்.

ராமசாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க