ஃபோர்டு ஆலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! | வீடியோ

ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

ந்த ஃபோர்டு ஆலையை கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் மூடுவதாக சொன்னார்கள். ஆனால் மூடுவது பற்றி தமிழக அரசிடம் எந்த விதமான அறிவிப்பும் கொடுக்கவில்லை. எங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்த வேலை நிச்சயம் எங்களுக்கு வேண்டும். நம் மக்களின் விவசாய நிலங்களின் ஆலை அமைத்துக்கொண்டு, 15 வருடம் மக்கள் வரிப்பணத்தில் வரி சலுகை பெற்றுக்கொண்டு செயல்படுகிறது இந்த ஆலை.

இது போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் 15 வருடம் முடிந்த பிறகு எங்களின் உழைப்பை சுரண்டி விட்டு நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இதில் தமிழக அரசு தலையிடவேண்டும். என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.

செப்டம்பர் 26 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஃபோர்ட் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ் மின்ட் செய்தி ஊடகம் பதிவு செய்து வெளியிட்டுள்ள காணொலியை இங்கு பகிர்கிறோம்.

ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

நன்றி : Tamilmint

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க