இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது. கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து இதுவாகும். இவ்விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தியாவின் ரயில்வேத்துறை மிகவும் மோசமாக சிதிலமடைந்திருக்கிறது என்பதையே இந்த ரயில் விபத்து நமக்கு உணர்த்துகிறது. ரயில் கழிவறை முதல் தண்டவாளங்கள் வரை அனைத்து முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைய செய்திருக்கிறது அரசு. தனியார்மய – தாராளமய- உலகமய கொள்கையின் விளைவாக அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்தின் விளைவாகவே பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்ட சிதிலமடைய வைக்கப்படுகின்றன. அதன் விளைவாக ரயில்வே சிக்னல் முதல் தண்டவாளம் வரை அனைத்தும் பராமரிக்கப்படவில்லை என்பதே உண்மை.






பரிமளா
நன்றி: அல்ஜசீரா