24.07.2023

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் வீடு உள்ளிட்ட
24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

மக்கள் அதிகாரம் கண்டனம்

2019-ல் கும்பகோணம் மாவட்டம் திருபுவனம்  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்று கூறி நேற்றைய தினம் தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்  – இன் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது .தேசிய புலனாய்வு முகமை நடத்திய இந்தச் சோதனையின் போது பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் – க்கு எதிராக செயல்படுபவரை அச்சுறுத்துவதற்காக மட்டுமே.

அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட துறைகள் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரானவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவே இயங்குகின்றன. 2019 இல் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக தற்பொழுது 24 இடங்களில் சோதனை செய்வது என்பது தேசிய புலனாய்வு முகமையின் அடுத்த கட்ட சதித்திட்டமாகும். இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

மேலும் தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க