மக்கள் அதிகாரம்
மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !
விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறுவயது குழந்தைகளோடு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மக்கள் அதிகாரம் தோழரை கைது செய்ய முயன்ற போலீசின் சதி முறியடிப்பு !
மக்களுக்காகப் போராடுபவர்களை தேசவிரோதிகள் என அரசும் போலீசும் என்ன முத்திரை குத்தினாலும், மக்கள் உண்மையான போராளிகள் பக்கம் இருப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம்.
அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !
ஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது தினமலரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அதிகாரத்தை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை
மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!
போராடும் மக்களை முடக்கவே மக்கள் அதிகாரத்தின் மீதும் தொடர்ந்து அவதூறுகளையும், அடக்குமுறையையும் ஏவி வரும் காவியையும் காக்கியையும் கண்டித்து எல்லா கட்சி இயக்கங்களும் தமிழச்சமூகமும் எதிர்த்து நிற்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா ? உரை | வீடியோ
மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்களின் வீடியோ மூன்று பாகங்களாய்...!
இன்று மதியம் மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | நேரலை | Live streaming
மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணி குறித்து விளக்கம் அளிக்க மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பு. 03-07-2018, செவ்வாய்க்கிழமை, காலை 12:30 மணி. வினவு நேரலை !
மக்கள் அதிகாரத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறு மீனவ சங்க பிரதிநிதிகளை மிரட்டிய போலீசு !
மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மக்கள் அதிகாரத்தின் மீதும், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகிய இருவர் மீதும் கொடுத்த புகார்மனு போலீசின் மிரட்டலால் கொடுக்கப்பட்டது – மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
தருமபுரி : 8 வழிச்சாலையை எதிர்த்துப் பிரச்சாரம் | மக்கள் அதிகாரம் 8 தோழர்கள் சிறை
சேலம் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் அதிகாரம் தோழர்களை, வன்முறைக்கு தூண்டியதாகவும், மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்தது போலீசு. பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : ஜூலை – 1 மணப்பாறையில் இரங்கல் கூட்டம் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வரும் ஜூலை 1,2018 அன்று (ஞாயிற்றுக் கிழமை) மணப்பாறையில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கோவை மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் புரிந்த 13 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு விழுப்புரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இரங்கல் கூட்டம் கடந்த 23.06.2018 அன்று நடத்தப்பட்டது. அதன் செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்!
பா.ஜ.க + மதுரை ரயில்வே போலீசால் புனையப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு
இரயிலில் பிரச்சாரம் செய்ததற்காக பி.ஜே.பி. கும்பலின் தூண்டுதலின் பேரில் பொய்வழக்கில் கைது செய்த மதுரை ஆர்.பி.எஃப். போலீசின் சதியை முறியடித்திருக்கிறார்கள், மணப்பாறை மக்கள் அதிகாரம் தோழர்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : தியாகிகளுக்கு கடலூரில் இரங்கல் கூட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் களப்பலியான தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் 24.06.2018 ஞாயிறு அன்று கடலூர் டவுன் ஹாலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதன் செய்தி - புகைப்படங்களின் தொகுப்பு!
தொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் !
"போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் நிதிக்கு எங்கே போவது உங்களைத் தவிர." மக்கள் அதிகாரம் வழக்கு நிதி கோரிக்கை!
ஜெயங்கொண்டம் மக்கள் அதிகாரம் தோழர் கதிரவன் தேசத் துரோக வழக்கில் கைது !
ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக பிரசுரம் கொடுத்தார் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்று, தோழர் கதிரவனை 153(a),124(a) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையிலடைத்துள்ளது, அடிமை எடப்பாடி அரசு.