Monday, June 8, 2026

திருநர் சமூகத்தைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் “திருநர் சட்டம் 2026”

புதிய வரையறையானது கின்னர், ஹிஜ்ரா, அரவாணி மற்றும் ஜோக்தா போன்ற குறிப்பிட்ட சமூக-கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்களையும் இடைப்பாலினத் தன்மை கொண்டவர்களையும் மட்டுமே திருநர் என அங்கீகரிக்கிறது. இதன் மூலம் திருநம்பிகள், திருநங்கைகள் சட்ட வரையறையிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.

“கிறிஸ்தவ தலித்துக்கு பட்டியல் சாதி அந்தஸ்து பொருந்தாது” – பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்

மதம் மாறுவதாலேயே சாதிய அடையாளம் நீங்கி விடுவதாகச் சட்டம் கருதினால் சாதியத்தின் பிறப்பிடமே இந்து மதம்தான் என்ற உண்மையைச் சட்டம் ஒப்புக்கொள்வதாகப் பொருள். அப்படியெனில் தடை செய்யப்பட வேண்டியது சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்தானே தவிர, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் அல்ல.

சாத்தான்குளம் தீர்ப்பு: மக்கள் போராட்டத்தின் வெற்றி! | இ-போஸ்டர்

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொட்டடிப் படுகொலை குற்றவாளிகளான ஒன்பது போலீசுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்துடன் கூடிய இரட்டைத் தூக்குத் தண்டனை! மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! மேல்முறையீடுகள் மூலம் தண்டனையை குறைப்பதற்கோ அல்லது  தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர். தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும்! சமூக...

சாத்தான்குளம் கொட்டடிப் படுகொலை தீர்ப்பு: போலீசு பயங்கரவாதம் தடுக்கப்படுமா?

சமூகத்தில் குற்றமிழைக்கும் குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் பொறுப்பை குற்றங்களையே முழு நேரம் பணியாகச் செய்யும் குற்றக் கும்பலான போலீசிடமே ஒப்படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கின்றன அரசின் உறுப்புகள் அனைத்தும். இந்த கட்டமைப்பின் வழியாகக் குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அப்பாவிகள் பலியாவதும் தொடர்வது தவிர்க்க முடியாதது.

பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.

செயற்பாட்டாளர்களை கடத்தி வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டெல்லி போலீசு

0
கடந்த மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்து சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி சிறப்பு போலீசு கடத்தி சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவர்களை பாலியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை: குற்றவாளி போலீசு அதிகாரிகளைக் கொலை வழக்கில் கைது செய்!

சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

கிருஷ்ணகிரி: ஆதியன் பழங்குடியினருக்கு 25 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்!

"ஆதியன் பழங்குடியினர் (ST) சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளோம். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றிப் போராடுகிறோம்" என அம்மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜே.என்.யு மாணவர்கள் மீதான பி.ஜே.பி போலீசின் அராஜக நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!

ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆதிக்கச் சாதி வெறி பிடித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கரின் படத்தைத் திட்டமிட்டு அடித்து உடைத்த போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை

உச்சநீதிமன்றத்தின் அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்" என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான "நீர்ப்பிடிப்புப் பகுதிகள்" உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம்.

யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!

0
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நெல்லை ஆரோக்கியநாதபுரம்: மக்கள் நிலத்தை மோசடியாக அபகரித்த ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம்!

எங்கேயோ சொகுசாக இருந்து கொண்டு ஜோன்ஸ் நிறுவன முதலாளி உள்ளிட்டோர் ஆட்டுவிக்க, உழைக்கும் மக்களை வீதியில் இழுத்து உட்கார வைத்துவிட்டு மாவட்டத்தை நிர்வாகம் செய்கிறோம் என மக்களை ஏய்த்து நிலக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர் அரசு அதிகாரிகள்.

போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” | மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்!

போலீசு அராஜகத்தால் ரத்தான “பெருவிழா” மார்ச் 7-இல் பேருற்சாகத்துடன் நடைபெறும்! https://youtu.be/BgCD1ajGwx4 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு | ம.அ.க. – வி.சி.க. – த.பு.க. கண்டனம்

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | அனுமதி மறுப்பு | ம.அ.க. - வி.சி.க. - த.பு.க. கண்டனம் https://youtu.be/v3Vxb0X8Sl4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சிறார் நீதிச் சட்டம் – 10 ஆண்டுகள் நிறைவு: எதார்த்தம் என்ன?

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வறுமையை மட்டுமே காரணமாகக் கூறுவது ஆபத்தானது. இது குடிசைப் பகுதிகளில் (Slum) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற வகுப்புவாத கருத்துகளுக்கு வழிவகுக்கிறது. வர்க்கப் பாகுபாடு நிறைந்த இத்தகைய பார்வைகள், வேகமான நகரமயமாக்கலினால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்கின்றன.

அண்மை பதிவுகள்