உ.பி தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!
குறைந்தபட்ச மாத ஊதியத்தை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தை 21 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
பாசிச பா.ஜ.க அரசே! ஒடிசாவில் நடத்திவரும் நரவேட்டையை உடனே நிறுத்து!
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் 13 பேரின் உயிரைக் குடித்த வேதாந்தா நிறுவனத்திற்காக நாடு முழுவதும் மலைகளையும் காடுகளையும் தாரைவார்க்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராகக் களத்தில் ஒன்றிணைவோம்.
வேதாந்தாவின் ‘பாக்ஸைட்’ வெறியும் சிதைக்கப்படும் ஒடிசா பூர்வகுடி மக்களின் வாழ்வும்!
கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் பாசிச பா.ஜ.க அரசின் ஏவல் நாய்களாகச் செயல்படும் இந்தக் போலீசின் துப்பாக்கித் தோட்டாக்களும், அதிகார அடக்குமுறைகளும் நிலத்துக்காகப் போராடும் பூர்வகுடி மக்களின் உறுதியை ஒருபோதும் குலைத்துவிடாது.
கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!
உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!
ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
விதைகள் மசோதா: விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் கல்லறையில்!
விதை-விவசாயம்-உணவு என்ற சங்கலியை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் பிடியில் கொண்டுசெல்வதற்கான அடித்தளமாகவே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்கொண்டுள்ள பேரபாயமாக முன்னெழுந்துள்ளது.
கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!
2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.
இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்
கார்ப்பரேட் - இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது.
பீகார்: தொழிற்சாலைக் கழிவுகளால் தாய்ப் பாலில் யுரேனியம்
நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ கட்டமைப்பு
முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.
இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/0Gy5walPH-0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/b4FIxfBchwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும் புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா
தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும்
புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா
https://youtu.be/0iNYBz5dcEY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிரா, குஜராத்… அதிகரிக்கும் வேலை நேரமும் தீவிரமாகும் உழைப்புச் சுரண்டலும்
தொழில் உற்பத்தியிலும் வணிகத்திலும் தொழிலாளர்களுக்கு இருந்துவந்த சட்டப் பாதுகாப்புகள் ஒவ்வொன்றையும் வேகமாக ஒழித்துக்கட்டி வருகிறது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.























