கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி எறிந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழித்தும் அவர்களின் பிணங்களுக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். அந்த அடிப்படையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.
கிரேட் நிகோபார் திட்டம்: அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அடிமை சேவை!
கிரேட் நிகோபர் என்பது ஒரு நிலம் அல்ல, அது பூமிப்பந்திற்கான உயிர் இருப்பின் அங்கம், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை – பண்பாட்டின் பிண்ணிப்பிணைந்த ஒரு பகுதி. இதனை ஏகபோக போட்டிக்காகவும், அம்பானி – அதானிகளின் வேட்டைக்காகவும் அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் இருந்து குரலெழுப்ப வேண்டும்.
பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா!
“எந்தவொரு சமூகமும் தங்களின் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் ஆரோக்கியத்தையோ, உயிரையோ பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆபத்து என்று நிராகரித்த ஒரு நச்சுப் பொருளை, நம் நாட்டிற்குள் கொண்டு வந்து ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீண்டும் விற்க அனுமதிக்க முடியாது.”
நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் | ம.அ.க
மக்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்
நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.
கென்-பெட்வா திட்டம்: மக்களின் தாகம் தீர்க்கவா? கார்ப்பரேட்டுகளின் தாகம் தீர்க்கவா?
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 10 கிராமங்கள் முழுமையாகவும், பல கிராமங்கள் பகுதியளவிலும் நீரில் மூழ்கும். இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் (கோண்ட் மற்றும் கோல் பிரிவினர்) தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவர்.
உ.பி: 111 உயிர்களைக் காவு வாங்கிய கனமழை, சூறைக்காற்று
இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு!
கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு!
https://youtu.be/N8N973SCH0g
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: பூவுலகின் நண்பர்கள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆலங்கட்டி மழை: இயற்கையின் எச்சரிக்கை… அரசின் துரோகம்!
முன்பெல்லாம் ஆலங்கட்டி மழை என்பது அரிதான, அழகான நிகழ்வு. இனி அது பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தும் ஒரு இயற்கைப் பேரிடராக மாறப்போகிறது. ஆலங்கட்டிகள் சிறிய கட்டிகளாக விழுந்த காலம் போய், இனி பெரிய பாறைகளாக விழும் அபாயம் காத்திருக்கிறது.
பாசிச பா.ஜ.க அரசே! ஒடிசாவில் நடத்திவரும் நரவேட்டையை உடனே நிறுத்து!
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் 13 பேரின் உயிரைக் குடித்த வேதாந்தா நிறுவனத்திற்காக நாடு முழுவதும் மலைகளையும் காடுகளையும் தாரைவார்க்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராகக் களத்தில் ஒன்றிணைவோம்.
வேதாந்தாவின் ‘பாக்ஸைட்’ வெறியும் சிதைக்கப்படும் ஒடிசா பூர்வகுடி மக்களின் வாழ்வும்!
கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் பாசிச பா.ஜ.க அரசின் ஏவல் நாய்களாகச் செயல்படும் இந்தக் போலீசின் துப்பாக்கித் தோட்டாக்களும், அதிகார அடக்குமுறைகளும் நிலத்துக்காகப் போராடும் பூர்வகுடி மக்களின் உறுதியை ஒருபோதும் குலைத்துவிடாது.
பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.
ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை
உச்சநீதிமன்றத்தின் அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்" என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான "நீர்ப்பிடிப்புப் பகுதிகள்" உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம்.
ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
ஊடகக் குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.!
நியூஸ் தமிழ் செய்திக் குழுவை மிரட்டி காரில் கடத்திக் கொண்டுபோய் குவாரி அறையில் அடைத்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சமூக ஆர்வலர் சுடலைக்கன்னு செய்திக் குழு தாக்கப்பட்டது குறித்து தெரிவித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.





















