Friday, July 31, 2026

சூழலியல்

உலகமய காலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. முதலாளித்துவம் உருவாக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாக சூழலியல் பிரச்சினைகளும் உலகில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

கென் பெத்வா: மோடி அரசைப் பணிய வைத்த இன்னொரு போராட்டம்!

மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இத்திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.

அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!

0
மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பா.ஜ.க. அரசு நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் 430 சதவீதம் அளவிலான கனமழையால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று இயற்கை மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு என்று வரையறுத்துள்ளது.

நாமக்கல்: ‘காப்புக்காடு’ என்ற பெயரில் பறிக்கப்படும் நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களின் நில உரிமை

​கடும் வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் பட்டா இல்லாததால் நிலத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!

ஏசி அறைகளோ, ஊதியத்துடன் கூடிய விடுப்போ இல்லாத இந்த முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் மீதுதான், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையும் ஈவுஇரக்கமின்றித் திணிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் விலையாகக் கொடுத்தே இந்த அதீத வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

ஏலகிரி: அரசின் துணையுடன் முறைகேடாக விற்கப்படும் பழங்குடியினர் நிலங்கள்

நிலங்கள் பெரிய அளவில் (செண்ட் கணக்கில்) பெரும் பணம் படைத்த வெளியாட்களுக்கும், சுற்றுலா நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதால், நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்ளூர் மலைவாழ் மக்களாலேயே நிலங்களை வாங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.

லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்

தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.

கடலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க விண்ணப்பம்! தமிழ்நாட்டை நாசமாக்காதே!

தமிழ்நாடு முழுவதும் கனிம வளங்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எவ்வித கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காதே!

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி எறிந்து கொண்டும், கடற்கரை ஓரத்தில் மீன்பிடி தொழிலில் உள்ள மீனவர்களின் வாழ்க்கையை அழித்தும் அவர்களின் பிணங்களுக்கு மேலே உருவாக்கப்படும் எந்த ஒரு திட்டமும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதுதான். அந்த அடிப்படையில் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.

கிரேட் நிகோபார் திட்டம்: அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அடிமை சேவை!

கிரேட் நிகோபர் என்பது ஒரு நிலம் அல்ல, அது பூமிப்பந்திற்கான உயிர் இருப்பின் அங்கம், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை – பண்பாட்டின் பிண்ணிப்பிணைந்த ஒரு பகுதி. இதனை ஏகபோக போட்டிக்காகவும், அம்பானி – அதானிகளின் வேட்டைக்காகவும் அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் இருந்து குரலெழுப்ப வேண்டும்.

பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா!

0
“எந்தவொரு சமூகமும் தங்களின் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் ஆரோக்கியத்தையோ, உயிரையோ பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆபத்து என்று நிராகரித்த ஒரு நச்சுப் பொருளை, நம் நாட்டிற்குள் கொண்டு வந்து ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீண்டும் விற்க அனுமதிக்க முடியாது.”

நெய்வேலி: நிலம் கையகப்படுத்துவதை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் | ம.அ.க

மக்களுக்கு அதீத பாதிப்புகள் ஏற்படுவதை அரசே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களைக் கையகப்படுத்தி என்.எல்.சி.க்கு கொடுப்பது மக்களுக்கு எதிரான செயலாகும். “எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் நிலத்தை வழங்க மாட்டோம். எங்களின் பூர்வீக நிலங்களில் எங்களை வாழ விடுங்கள்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உலகளாவிய நீர் திவால்நிலையும் இந்தியாவை சூழ்ந்திருக்கும் அபாயமும்

நீர் நெருக்கடி என்பது எதிர்காலத்தில் சரிசெய்ய வேண்டிய நிர்வாகப் பிரச்சினையல்ல; இன்றே தீர்க்கப்பட வேண்டிய வர்க்கப் போராட்டமாகும். நீர் என்பது கார்ப்பரேட்டுகளின் இலாபப் பொருளல்ல; அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார உரிமை என்பது நிலைநாட்டப்பட வேண்டும்.

கென்-பெட்வா திட்டம்: மக்களின் தாகம் தீர்க்கவா? கார்ப்பரேட்டுகளின் தாகம் தீர்க்கவா?

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 10 கிராமங்கள் முழுமையாகவும், பல கிராமங்கள் பகுதியளவிலும் நீரில் மூழ்கும். இதனால் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் (கோண்ட் மற்றும் கோல் பிரிவினர்) தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்படுவர்.

உ.பி: 111 உயிர்களைக் காவு வாங்கிய கனமழை, சூறைக்காற்று

இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு!

கல்பாக்கம் மாதிரி வேக ஈனுலை: அணுக் கதிர்வீச்சு அபாயத்தில் தமிழ்நாடு! https://youtu.be/N8N973SCH0g காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! நன்றி: பூவுலகின் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

அண்மை பதிவுகள்