காபூல் போதை மறுவாழ்வு மையம் மீதான தாக்குதல்: தொடரும் பாகிஸ்தானின் போர்க்குற்றங்கள்
போர் அறிவிக்கப்படுவதற்கு முன்புவரை, தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், போர் தொடங்கிய பின்னர், அப்பாவி பொதுமக்கள் மீதும் வான்வழித் தாக்குதலை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது.
ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா? | மீள்பதிவு
ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு.
தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை
போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
லெபனான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் இன அழிப்புப் போர்
டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் முழுவதிலும் பத்து நிமிடங்களுக்குத் தொடர் தாக்குதலை நடத்தி 300-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதலில் 1,150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லெபனான்: மூன்று பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்த இனவெறி இஸ்ரேல்!
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் அல் மயாதீன் (Almayadeen) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பாத்திமா ஃப்தூணி, அவரது சகோதரரும் ஒளிப்பதிவாளருமான முகமது ஃப்தூணி மற்றும் அல்–மனார் (Al Manar) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அலி ஷோயிப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மீண்டும் “நோ கிங்ஸ்” போராட்டம்: வீதிகளில் இறங்கிய அமெரிக்க மக்கள்!
தற்போது நடைபெற்ற போராட்டத்தில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருப்பது பாசிச டிரம்பிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருவதைத் துலக்கமாக வெளிக்காட்டுகிறது.
காசா: தீவிரமடையும் எரிவாயு தட்டுப்பாடு!
ஏற்கெனவே இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காசா மக்கள், இனவெறி இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் எரிவாயு, உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!
எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் பாலியல் குற்றங்களின் பட்டியல் அல்ல; அவை நாடுகளின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்து, உழைக்கும் மக்களின் வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் லாபிகளின் அப்பட்டமான வாக்குமூலம்.
ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் தீப்பெட்டித் தொழில்!
ஏற்கெனவே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களால் (lighter) தீப்பெட்டித் தொழில் அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தீப்பெட்டி தொழிலை முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு: அமெரிக்க அடிமை மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்
சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறையும்போது அம்பானிகளின் கஜானாவை நிரப்பிய மோடி அரசு, விலை உயரும்போது மட்டும் அந்த பாரத்தை மக்களின் முதுகில் ஏற்றுகிறது. இந்த அமெரிக்க அடிமை - கார்ப்பரேட் சேவக மோடி அரசு, ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்தியாவிற்குப் பேரழிவையே ஏற்படுத்தும்.
ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனி படுகொலை! அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
பாசிச ட்ரம்ப் மற்றும் பாசிச நெதன்யாகு ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டு போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவதே இன்றைய அவசியமான நடவடிக்கையாகும். ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
காசா அமைதி வாரியத்தில் பார்வையாளராக இந்தியா: பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்த மோடி அரசு!
எஜமான் டிரம்பின் கோபத்திற்கு ஆளாகாமல் காசா அமைதி வாரியத்திற்கு ஆதரவாக பார்வையாளராகக் கலந்து கொண்டு டிரம்பிற்கு தன்னுடைய அடிமை விசுவாசத்தைக் காட்டியுள்ள மோடி அரசு, பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.
ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டுச் சர்வாதிகாரம் ஆகிய "இரட்டை எதிரிகளை" ஒரே நேரத்தில் எதிர்கொள்ள, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஒரு பரந்த ஐக்கிய முன்னணியைக் கட்டமைப்பதே காலத்தின் கட்டாயமாகும். இந்த ஐக்கிய முன்னணி என்பது வெறும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல; அது போராடும் வர்க்கங்களின் கூட்டணியாக அமைய வேண்டும்.
பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!
‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.
























