காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!
”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்"
பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்
பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.
காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால் பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.
பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!
இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம்.
இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!
இஸ்ரேலின் போலிப் பிரச்சாரக் குழு #HAMASisISIS மற்றும் #StandWithIsrael என்ற ஹேஷ்டேக்குகளுடன் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் கிம் கர்தாஷியன், மடோனா, கேல் கடோட், கேசி நீஸ்டாட் மற்றும் பல பிரபலங்கள் ஏற்கனவே இப்போலிப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் பாலஸ்தீன மக்கள்: இரட்டைவேடம் போடும் ஐநா சபை
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு உட்பட்டே ஐநாவின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்திருக்கிறது என்பதை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.
மலையகம் 200
மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.
யூதர்கள் சொல்கிறோம் காசா மீதான போரை நிறுத்து!
ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் காசா பகுதிக்குள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்துசெய்திருக்கிறது, அமெரிக்கா.
தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!
தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்!
அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!
★ ஜாதி, மதம், இனம் எனும் அடையாள அரசியல், போதை, இணையதளம், சினிமா எனும் வலைப்பின்னலில் உலக மக்களை அடைத்துக்கொண்டிருக்கிறது கார்ப்பரேட் உலகம்!
★ லாபவெறி பிடித்த மிகை...
ரஷ்யா: போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.
போர் என்பது மோதல் அல்ல; போர் என்பது கொள்ளை லாபம் | பேரா.நோம் சாம்ஸ்கி, பேரா.விஜய் பிரசாத்
போர் நீடிக்க நீடிக்க மிகப் பெரும் பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை அலுவலகங்களில்; ராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறு வனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை யகங்களில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. அவர்க ளது வரலாற்றில் இதுவரை இல்லாத லாபத்தால் குதூகலம் அடைந்திருக்கிறார்கள்.
லிபியா பேரழிவு: இரத்தவெறிபிடித்த அமெரிக்காவும் நேட்டோவுமே முதல் குற்றவாளிகள்!
லிபியாவில் கடாஃபியை ஒழித்துக் கட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. அதன் காரணமாகத்தான் லிபியாவில் தற்போது வரை உள்நாட்டுப் போர் தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போர் சூழலால்தான் லிபியாவில் ஒரு நிலையான அரசு அமையவில்லை. இதனால் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் பின்தங்கியுள்ளன.
இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு!
பாலஸ்தீனிய குடிமக்கள் உரையாற்ற அழைக்கபட்டாலும் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை குறிப்பிடாமல் பேச ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் போராட்டத்தில் பாலஸ்தீன கொடிகள் ஏந்த அனுமதியில்லை.
ரணில்: இலங்கையின் மோடி!
இந்தியாவுடன், குறிப்பாக அதானியுடன் பல திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதன் மூலம் அதானிக்கு இலங்கையை அடமானம் வைப்பதுடன் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கு இலங்கையை பலி கொடுக்கிறார் ரணில்.
பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!
கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்