விவசாய நிலத்தை யாருக்கு விலை பேச போகிறாய் ? விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்
மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் 127 டெசிபெல்(Decibel) அளவு “Free Palestine” என்றோ இந்திய மக்கள் மீது ஏவப்படும் பாசிச தாக்குதலுக்கு எதிராக “NO BJP” என்றோ போர்க் குரல் உயர்த்தியிருந்தால் நாம் தேசபக்தி மிக்க இந்தியர்கள் என்று கூறலாம்.
போர்...!
எப்போது குண்டு விழுமோ என்று
அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன்
கால்கள் களைத்து
இரைந்து கேட்கிறது ஓய்வை
உழைக்க ஓடிய கால்களும்
ஓடியாடி விளையாடிய கால்களும்
உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன
அப்பாவின் அப்பா இறந்து போனதை
அவரின் கால்தழும்புகள் தான் அடையாளமாய் தெரியப்படுத்தின
அப்பா அடிக்கடி சொல்லுவார்
வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை
நாடில்லா வாழ்க்கை நரகம் என்பார்
எப்போதும் அவர் உடலில்
எதையாவது கிறுக்கியபடி இருப்பார்
ஏனென்று கேட்டால்
குண்டுகளில் சிக்கி
இறந்து போனால்...
உடம்பில் சிறுநீர் கழிக்கப்பட்ட சிறுவனிடமா?
எதற்கு சண்டை
என கேட்டதற்கே வெட்டு வாங்கியவனிடமா?
உலக சாதனையில் ஒவ்வொரு சொட்டா
எண்ணெய் சேகரித்தவர்களிடமா ?
கோவில் கருவறையில் கொல்லப்பட்ட
ஆசிபாவிடுமா?
இல்லை
ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும்
ஒரு குழந்தை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற காசாவிடமா?
எப்படி சொல்வது இவர்களிடம்
"குழந்தைகள் தின வாழ்த்தை"
பரியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
கூடப்படிக்கும் நண்பன் கேட்டது நீ எப்பொழுது உன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வாய்...
நான் எப்படிப் புரியவைப்பேன்...
அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று...
அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று...
குனிந்துகூடச் செல்ல முடியாத குட்டிஜப்பான் என்
வீடு...
தவழ்ந்துதான் செல்லமுடியும் அந்த தாஜ்மஹாலின் உள்ளே...
நம்ம ஊரு ரோடு போல வீட்டின் உள்ளே ஆங்காங்கே பள்ளங்கள்...
பள்ளங்களைப் பார்வையிடும் அதிகாரிகள் போல எலிகளும் மூட்டைப் பூச்சிகளும்...
எனக்கு மட்டுமே கிடைத்த வரம் வீட்டினுள் அருவி... கரையான் கடித்த கழிகள்...
கூரையின் மேல் பறவையின் எச்சங்கள்...
இரவில் ரோந்து வரும் போலீசு போல...
வீட்டிற்கு ரோந்து வரும் வௌவால்கள்...
ஆம்புலன்ஸ் சத்தம்...
அந்த ஒரு நாளுக்காக
அந்த வாரம் முழுவதுமே ஆரவாரம்...
ஆடை கடைக்கும் ஆபரண கடைக்கும் அணிவகுக்கும் அப்பாக்கள்...
விதவிதமான வெடிகளை வாங்கி குவிக்கும் வேடிக்கை அப்பாக்கள் ஒருபுறம்...
அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க... நான் மட்டும் சிந்தனை கடலில் மூழ்கியிருந்தேன்... (தம் தந்தை எங்கே)...
ஆப்பம் சுட்டாச்சா.., ஆடை எடுத்தாச்சா.., பட்டாசு வாங்கிட்டியா...
பாலுவின் கேள்வி அம்புகள்
என்னை நோக்கிப் பாய...
அம்புக்கு பயந்து அம்மாவிடம் கேட்டேன்......
எழுபது மணிநேர உழைப்புக்குப்பின்
காலையோ மாலையோ என்றறியாமல்
கண்ணயர்ந்தேன் எதோ ஒரு ஞாயிற்றில்!
உலகம் கணினியின் கட்டுப்பாட்டில் இயங்க
அணுகுண்டுகளின் அலையோசை
பற்றிப் படர்ந்து அனைத்து அணுக்களிலும் கேட்டது!
அந்தக் காட்சியை அகோரம் என்பதா?
கோரம் என்பதா?
முலையிழந்த தாயின் மார்பில்
பாலைத் தேடுகிறது பச்சிளம் குழந்தை!
முதுகெலும்பில் கணக்குப் படித்தவர்கள்
இடுப்பெலும்பையும் சேர்த்து கணக்குப் படிக்கிறார்கள்
எழுபது மணிநேர பணி நியமனத்தில்!
உழைத்தே அருகிப்போன பாட்டாளிகளின்
எழும்புகளில் விறகடுக்கிச் சமைக்கிறது
பிணந்திண்ணிக் கழுகுகள்!
ஆற்றுநீர் உபரியாகச்...
தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை
அழகான சிவப்பு ரோஜாக்களுடன்
புன்னகை பூக்கும் பாதைகளினூடே
காசா பிள்ளைகளை பெறுகிறது
அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில்
உலாவிக் கொண்டிருக்கிறார்கள்
காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது
ஆனால்
காசாவின் கருவுக்கல்லவா
சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள்
காசாவின் தாய்மார்கள் எல்லாம்
கதி கலங்கிப் போயிருக்கிறார்கள்
ரத்தம் வழிந்த
கைகளின் ஊடாக
குழந்தைகள் மீது
போர்வைகளைப் போர்த்துகிறார்கள்
ஆனால் சிலரோ
ராக்கெட்டுகளை அல்லவா
அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்
இவர்களின் பாசாங்குத்தனத்தால்
தாய்மார்களின் செவிப்பறைகள்
கிழிந்து போயிருக்கின்றன
ஆனாலும் நீதி
ஆடையின்றி அம்மணமாய்
உலாவிக் கொண்டிருக்கிறது
எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை
உங்களது பெரும் வெறுப்பால்
எமது...
ஏன் குண்டு வீசி குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள்?
என் மகளின் கேள்விக்கு
ஒரு தாயாய் நான்
எப்படி பதில் கூறுவேன்!
எப்படிச் சொல்வது?
வியட்நாம்
ஈராக்
சிரியா
ஆப்கானிஸ்தான்
ஈழம்
பாலஸ்தீனம் …
நாளை இங்கேயும்
அந்த குண்டுகள்
விழக்கூடும் மகளே என்று!
எப்படிச் சொல்வது?
கிரிக்கெட் போட்டியை
ரசிப்பது போல்
குண்டுகள் வீசப்படுவதை
குழந்தைகள் கொல்லப்படுவதை
ரசிப்பவர்கள் இங்கேயும்
உண்டு என்று!
எப்படிச் சொல்வது?
இஸ்ரேல்
அமெரிக்க
இந்திய
உலக உழைக்கும் மக்கள்
போரை வெறுக்க
ஆள்பவர்கள் போரை மட்டுமே
விரும்புகிறார்கள் என்று?
ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன்
என் மகளுக்கு ஆணித்தரமாக!
உழைக்கும் மக்களின்
கரங்கள் ஒன்றிணையும்...
சொற்களின் கூட்டுக்குள்
ஓர் மௌனப் பறவை!
தனிமைப் பெருவெளியில் நின்றபடி
பெயர் தெரியாத அப்பறவை
பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது!
துடைத்தெறிய முடியாத துயரம்
அதன் கண்களில்!
நூற்றாண்டு களைப்பைச்
சுமந்திருந்தது அதன் உடல்!
துயரத்தின் நிலத்திலிருந்து
வந்திருக்க வேண்டும் அப்பறவை!
நான் கேட்டபோது
மெல்ல என் காதுகளில்
பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்!
ஈழத்திலிருந்து
என்றது மற்றொரு சமயம்!
பொய் சொல்கிறதா
உற்றுப் பார்த்தேன்!
அதன் சிறகுகளில்
குண்டு துளைத்த
துளைகள் இருந்தன!
அலகின் நுனி பெயர்ந்து
உணவைக் கொத்துவதற்கு
சிரமப்பட்டது!
ஒற்றைக் கால்
சேதமடைந்திருந்தது!
அதிகமாகப் பேசவில்லை
அப்பறவை!
உனக்கு ஏற்பட்ட துயரத்தை...
அவர் ஆளுநராம்..
அவர் இருப்பது மாளிகையாம்..
அதன் மீதாம்..
குண்டாம்..
வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்)
ரவுடி காணவில்லையாம்..
போலீஸ் தேடுகிறதாம்..
அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்..
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்..
தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட
இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்!
ஜம்புத்தீவு
பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது
வரலாறு
மருது
உயிர்த்தெழக் கோருகிறது
மருது உயிர்த்தெழும்போது கூடவே
தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள்
இப்போது சற்று அமைதியாக இருப்போம்
ஊமைத்துரைக்கு அடைக்கலம்
கொடுக்க வேண்டாம்
அன்றும் சாத்தியமானவைகளை பற்றி
பேசாமலா இருப்பர்?
மருதிருவர் சாத்தியமானவையை அல்ல;
சரியைப் பேச வேண்டும் என்றார்கள்
ஈன ஐரோப்பியரை அழித்து ஒழிக்காமல் வாழ்வில்லை என்றான் சின்ன மருது
அதிகாரப் பீடத்தை நத்திப் பிழைப்போர் தலையில் இடியாய்
இறங்கியது மருதுவின் குரல்
இரத்த சொந்தங்கள் 500 பேருடன்
திருப்பத்தூர்...
மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன.
ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் அந்த மைதானத்திலேயே கலவரம் வெடித்திருக்கலாம். அதற்கும் சங்கி கும்பல் தயாராகவே இருந்திருக்கிறது என்பதுதான் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து சங்கிகள் ஜெய்ஸ்ரீராம் கோசமிட்டது நமக்கு உணர்த்துகிறது.