நான்கு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் |
தோழர் வெற்றிவேல் செழியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

நான்கு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பொட்டலூரணி மக்கள் போராட்டம் |
தோழர் வெற்றிவேல் செழியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

21 நாள் பாலியல் சீண்டல்: குற்றவாளிக்குத் துணைபுரியும் விருத்தாச்சலம் போலீசு | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram


14.10.2024
மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான
பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட
விருத்தாச்சலம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்!
பத்திரிகை செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மனவளர்ச்சிக் குறைபாடுடைய (Intellectual Disability 50%) இளம் பெண் ஒருவர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக விருத்தாச்சலம் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 20 நாட்கள் கழித்து விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவரால் கண்டறியப்பட்டார். அன்றைய நாள் மாலையில் விருத்தாச்சலம் போலீசு நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை ஒப்படைத்தனர்.
அந்தப் பெண் காணாமல் போகவில்லை. ஆண்டனி ஆகாஷ் என்பவரால் மேற்படி தேதியில் திருமண ஆசை காட்டி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மேற்கண்ட குற்றத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண் பிறவியிலேயே மனநலம் குன்றியவர் என்பதால் அதற்கேற்ற வகையில் விசாரித்து வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் எனப் புகார் கொடுத்தும் புகார் மீது நடவடிக்கை இல்லை. நிகழ்வு நடந்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் முதல் தகவல் அறிக்கை பாலியல் வன்புணர்வு வழக்கு பிரிவின் கீழ் திருத்தம் செய்யப்படாமல் உள்ளது. இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தப்ப வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளது போலீசு. குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதில் தனக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான அதிகாரத்தை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்ணையும் அவர் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறது விருத்தாச்சலம் போலீசு.
ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளாமல் தடயங்களை அழிக்கும் வேலையில் விருத்தாச்சலம் போலீசு ஆய்வாளர் முருகேசன் ஈடுபட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த குற்ற சம்பவத்தில் விருத்தாச்சலம் போலீசு ஆய்வாளரை இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாகக் கருதி அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய பெண்ணை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆண்டனி ஆகாஷ் என்ற நபர் மீது மேற்படி புகாரின் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் இச்சூழலில் மனவளம் குன்றிய இப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் போலீசுத்துறையின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகச் செயல்படும் போலீசுத் துறையினரையும் அதே வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
விருத்தாச்சலம் போலீசு ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்களின் திட்டமிட்ட தடயங்கள் அழிப்பு போன்ற குற்றச்செயல்கள் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தமிழ்நாடு அரசு ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். முதல் தகவல் அறிக்கையானது மன வளர்ச்சி குன்றிய பெண்ணை கடத்தியது, பாலியல் வன்புணர்வு செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் திருத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணைக்கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் ஆண்டனி ஆகாஷ் உடனே கைது செய்யப்பட வேண்டும். அந்தப் பெண்ணை பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்குத் தமிழ்நாடு அரசு, அரசு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதை உடனே நடைமுறைப்படுத்த வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
ஜனநாயக சக்திகள், பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடக்கூடியவர்கள், சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், பெண்கள் அமைப்புகள் என அனைவரும் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் கோருகிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

சாம்சங் நிறுவனத்தை மட்டும் குறி வைக்கிறதா CITU | தோழர் வெற்றிவேல் செழியன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த அநீதி | குற்றவாளிகளை காப்பாற்றும் போலீசு | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

பாசிச மோடி கும்பல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, குறிப்பாக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடூரங்கள் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உ.பி மாநிலத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் பயங்கரவாதத்தை முடிவு கட்டும் முயற்சியாக “பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06.10.2024 மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓட்டேரி பகுதியில் தெருமுனைக்கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்தது.
தோழர் துணைவேந்தன் பு.மா.இ.மு அவர்கள் கூட்டத் தலைமையை முன்மொழிய, மக்கள் அதிகாரம் ஓட்டேரி பகுதி தோழர் சகுபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக ஓட்டேரி பகுதி சிறுவர்கள் உடன் ம.க.இ.க.வின் சிவப்பு அலை கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு அழகியல் நிறைந்த இளம் இன்னிசை உடன் தொடங்கியது.
தோழர் சகுபர் சாதிக் தனது தலைமையுரையில், “பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் எமது தோழமை அமைப்புகள் இணைந்து பரப்புரைகள் மேற்கொண்டு அதன் ஒரு பகுதியாக தெருமுனைக்கூட்டத்தை நடத்தி வருகிறோம். எமது அமைப்பு பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்தை முடிவு கட்ட 15 முழக்கங்களை முன்வைத்து உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது தான் தீர்வாக அமையும் என்று கூறுகிறது” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தோழர் புரசை அன்புச்செல்வன், வட சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம் அவர்கள் பேசுகையில் மூட நம்பிக்கை பற்றியும், பெண்கள் உடன் கட்டை ஏறுதல் போன்ற சனாதன விசயங்களை எதிர்த்துப் பேசினார். சாதி மறுப்பு திருமணங்களின் அவசியத்தையும், பெண்கள் விடுதலையில் பெரியாரின் பங்கை வலியுறுத்தியும் பேசினார். தற்பொழுது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் மூளையை வறுத்து உண்ணும் மிருகங்களாக மாறியுள்ளதையும் அம்பலப்படுத்திப் பேசினார். பெரியாரின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இது போன்ற ஒன்றிணைந்து கூட்டங்களையும் மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேலும், தோழர் ஏ. அப்துல் ஷபிக், தமிழக வாழ்வுரிமை கட்சி, வட சென்னை மாவட்டச் செயலாளர் அவர்கள் பேசுகையில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்க பரிவார கும்பல் தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. சாதி ரீதியாக, மதரீதியாக, இனரீதியாக மக்களைப் பிரித்து கலவரத்தை நடத்துகின்றன.
மேலும் விளையாட்டுத் துறையிலும் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க-வைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்தனர். ஆனால் தண்டிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டங்களையும் நடத்தி ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறினார். சதித்தனமாக பதக்கத்தையும் பறித்துக் கொண்டது இந்த பி.ஜே.பி கும்பல். மேலும் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் யூட்யூப் சேனல்களையும் பிரபலங்களையும் தடை செய்வதற்கான மக்கள் அதிகாரம் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கூறி உரையை முடித்துக் கொண்டார்.

தோழர் ஆதிமொழி, வி.சி.க கருத்தியல் பரப்புத் துணைச் செயலாளர் அவர்கள் பேசுகையில், இந்தியாவை ஆட்சி செய்வது பி.ஜே.பி எனும் அரசியல் கட்சி அல்ல; ஆர்.எஸ்.எஸ் எனும் பார்ப்பனிய சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் பாசிச கும்பல் தான். 2020இல் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் 12 நிமிடங்களுக்கு ஒரு முறை பாலியல் பண்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான அடிப்படை காரணம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். நாட்டை ஆள்வது மனுநீதி, மனுஸ்மிருதி எனும் பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் சித்தாந்தம் தான். இதனுடன் கஞ்சா மது போதைப் பொருட்கள் என இணைந்து மனிதர்களை மிருகமாக்குகின்றது என்று பேசினார்.
தோழர் குணங்குடி முஹைதீன் மாவட்ட தலைவர் மனித நேய மக்கள் கட்சி, வடசென்னை, மேற்கு மாவட்டம், பேசுகையில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள துண்டறிக்கையில் குறிப்பிட்டது போல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடூரங்கள் அதிகரிப்பதற்கான ஒரு காரணம் மது போதை அதனைத் தமிழ்நாட்டில் திமுக அரசாங்கம் நடத்தி வருகின்றது. மதுவினால் வருகின்ற வருமானத்தினால் தான் பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் அறிவித்து வருகின்றனர். இது ஏற்புடையது அல்ல. திமுக அரசு கட்டாயம் பூரணம் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

தோழர் ஆ.கா.சிவா மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு. அவர்கள் பேசுகையில், ஒரு பெண் தொழிலாளி ஆலையில் வெறும் உழைப்பு சுரண்டலுக்கு மட்டும் ஆளாகவில்லை ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் போல உழைப்பு சுண்டல் ஒரு புறமும் பாலியல் சுரண்டல் மறுபுறமும் ஆளாக்கப்படுகின்றார்கள். மறுகாலணியாக்கப் பொருளாதாரக் கொள்கை திணிக்கப்படுவதால் பார்ப்பனிய சித்தாந்தமும் முதலாளித்துவ சீரழிவுக் கலாச்சாரங்களும் பெண்கள் மீது போர் தொடுக்கின்றது. பெண்கள் மீதான பயங்கரவாதத்துக்கு மூலாதாரமான காரணமான அந்நிய ஏகபோக மூலதன பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக, இதனால் ஆதாயம் அடையும் அதானி அம்பானி கார்ப்பரேட் ஊடகங்களுக்கு எதிராகவும் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் ஒரு மாற்றுக் கட்டமைப்பான பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி முன்னேற வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

தோழர் அமிர்தா மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் பேசுகையில், தொடர்ந்து பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் பயங்கரவாதிக்குத் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கு அல்ல, பாசிச பி.ஜே.பி தோட்ட பெண் தொழிலாளர் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டான், அவன் தலைமறைவாகியுள்ளான். சென்னையில் 14 வயது சிறுமியின் மீது 16 வயது சிறுவர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்ததைக் குறிப்பிட்டு, இதுபோன்று பல்வேறு உதாரணங்களை முன் வைத்தார்.
மேலும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வில் இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. பெண்கள் வாழத் தகுதியில்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறி வருகிறது. ஆளும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலின் இந்துராஷ்டிர கனவான உத்தரப்பிரதேசம் விளங்குகிறது. குஜராத், உத்தரப்பிரதேசம் என இவர்கள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு, தலித் சிறுமிகளுக்கும், முஸ்லிம்களுக்கும், பழங்குடியினப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இவர்கள் பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுபவர்கள் இவர்கள் சித்தாந்தம் என்பது அது தான்.
பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளுக்கு அரணாக இருக்கின்றது. பிரஜ்வல் ரேவண்ணா முதல் மணிப்பூர் வரை இவர்கள் குற்றவாளிகளின் பக்கம் நிற்கிறார்கள். காஷ்மீரில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்காக ஊர்வலம் சென்றவர்கள் இவர்கள்; உ.பி-யில் இரவோடு இரவாக பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்தவர்கள்; பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தவர்கள். இவர்களை ஒழிக்காமல் பெண்களின் நிலையை மாற்ற முடியாது என்றும் சமூக ரீதியான காரணிகளில் ஆபாச வீடியோக்களை தடை செய்ய வேண்டும், கல்லூரிகளில் மாணவர் தேர்தல் ஏன் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.
இறுதியாக, ம.க.இ.க.வின் சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக தோழர். வின்செண்ட் நன்றியுரை வழங்கினார்.
தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
9176801656
![]()
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram


மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமையும்
விருதாச்சலம் போலீசின் செயல்பாடும்
உண்மை அறியும் குழு அறிக்கை
உறுப்பினர்கள்:
வெளியீடு:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
பேச : 9962366321
Fb: Makkal Athikaram
Youtube: Makkal Athikaram
***
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடுடைய (Intellectual Disablity 50%) இளம் பெண் ஒருவர் கடந்த 18.05.2024 அன்று காணாமல் போனார். இது தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இப்பிரச்சினைத் தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பெண் காணாமல் போனார் என்ற அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை 265/2024 பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அப்பெண் 08.06.2024 அன்று விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவரால் கண்டறியப்பட்டார். அன்றைய நாள் மாலையில் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை ஒப்படைத்தனர். அப்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை அவரது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் மீது அன்றைய தேதி முதல் தற்போது வரை சுமார் ஐந்து மாதங்கள் கடந்த பின்னரும் முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்படாமல் – அதே நேரத்தில் மனவளம் குறைபாடுடைய பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கு உரிய பிரிவுகள் பதிவு செய்யப்படாமல் – உள்ளது. இது தொடர்பாக உண்மையை அறியும் வகையில் இக்குழு அமைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், அவரது உறவினர்கள் மற்றும் மனநல மருத்துவர், அரசியல் கட்சி தலைவர், விருத்தாச்சாலம் பகுதி நபர்களின் கருத்துக்களிலிருந்து உண்மையை அறியத் தொடங்குவோம்.
மனநல மருத்துவர் ராதிகா முருகேசன்
ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அதிலும் intellectual disability 50% – ஆக இருந்தால் அவரை விசாரிக்கும் போது கட்டாயமாக உளவியல் நிபுணர் ஒருவர் அருகில் இருக்க வேண்டும். விசாரிக்கக் கூடிய நபர்கள் அவர்களிடம் விசாரணை என்ற முறையில் செய்யாமல் ஒரு குழந்தையிடம் பேசும் தோரணை மட்டும் தான் இருக்க வேண்டும். அதிலும் முக்கியமான கேள்விகள் கேட்கும் போது அவருடைய உறவினர்களிடம் மட்டும் தான் கேட்க வேண்டும். அவர் எந்த வயது நபராக இருந்தாலும் intellectual disability என்பது குழந்தைத்தனம் மட்டுமே உடையவராக இருப்பார்.. எனவே அவரைஒரு குழந்தையாக மட்டுமே அணுக வேண்டும்.
பெயர் கூற விரும்பாத உளவியல் நிபுணர்
50 % மன நலம் குறைபாடுடைய (intellectual disability 50%) ஒரு பெண் என்பவர் எவ்வித முடிவையும் எடுக்கத்தெரியாதவர் ஆவார். அவருக்கு சரி, தவறு எதுவும் தெரியாது. அவரை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே கருத வேண்டும். அவர் ஒரு தவறு செய்து விட்டார் என்று அவரைக் குற்றம் சாட்ட முடியாது. இப்படிப்பட்ட வழக்குகளில் அப்பெண்ணை காவலர்கள் ஒரு போதும் விசாரணை செய்யக்கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மனநல மையம் மூலமாகவே விசாரணை செய்ய வேண்டும். மேலும் அப்பெண் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டதை அறிந்தால் அக்குழுவில் ஒரு பெண் உளவியல் நிபுணரும் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா – திருமதி ஜெயா
என்னுடைய கணவர் கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். மாதம் ஒருமுறை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அவரை நான் அழைத்துச் செல்கிறேன். என்னுடைய ஊதியம் மாதம் ரூ 6,500/- ஆகும். எனக்கு இரண்டு மகள்கள், முதல் பெண்ணுக்கு திருமணம் செய்துவிட்டேன். இரண்டாவது பெண் மன வளக்குறைபாடு உள்ளவர். விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாமாண்டு படித்து வருகிறார். நான் துப்புரவுப் பணியாளராக பள்ளி விடுதியில் ஒப்பந்த முறையில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். கல்லூரியில் பருவத்தேர்வின் கடைசித் தேர்வு எழுத சென்ற என்னுடைய பெண் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என்று அவருக்காகத் தேர்வு எழுதும் நபர் தகவல் கூறினார் (பாதிக்கப்பட்ட பெண்ணால் சொந்தமாக எழுத முடியாது அவர் கூற இன்னொருவர் எழுதுவார்). நாங்கள் எங்காவது வெளியில் சென்று இருப்பார் என்று நினைத்தோம். அதன் பிறகு இரவு வரையும் வராததால் காவல் நிலையத்தில் சென்று என் மகளை காணவில்லை என்று 18.05.2024 – ஆம் தேதியன்று புகார் கொடுத்தோம். அதன் பிறகு பல முறைகள் காவல்துறையிடம் சென்று விசாரித்துக் கொண்டே இருந்தோம். காணாமல் போன என்னுடைய பெண்ணை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா என்று கேட்டுக் கொண்டே இருந்தோம், ஆனால் காவல்துறையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் பின்னர் ஜூன் 8 – ஆம் தேதி தூய்மைப்பணியாளராக பணியாற்றும் என்னுடைய உறவினர் ஒருவர் என்னுடைய பெண்ணையும் இன்னொரு ஆண் நபரையும் விருதாச்சலம் பஸ் ஸ்டாண்டில் பிடித்து வைத்துக்கொண்டு எனக்கு போன் மூலம் தகவல் கூறினார். அவன் (ஆண்டனி ஆகாஷ், அருமை நல்லூர், பூதப்பாண்டி, நாகர்கோயில்) என்னுடைய மகளை வந்து விடும்போது என்னுடைய உறவினர் பார்த்து விட்டதால் உடனடியாக அவனை பிடித்தார். ஆனால் அவன் தப்பிச் செல்ல முயன்று அந்த நேரத்தில் அவனுடைய செல்போனை மட்டும் பிடுங்கி வைத்துக்கொண்டார். அதிலிருந்து தான் அவர்கள் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் எங்களுக்குக் கிடைத்தன. பின்னர் காவல் நிலையம் சென்று எனது மகள் வந்து விட்டாள் என்று அந்தப் பையனைப் பற்றிய தகவலை கொடுத்தோம். உடனடியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கவும் என்று கூறினோம்.
அதற்கிடையில் அந்த பையன் சித்தப்பா தங்கராஜ் எங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் பெண்ணை ஏதுக்காக ஹாஸ்டலில் தங்க வச்சீங்க?. கல்யாணம் செய்ய வக்கில்லாமல் யாரையாவது கூட்டிக்கிட்டு போகட்டும்னு நினைச்சீங்களா? என்றும் தகாத முறையில் பல விஷயங்களை பேசினார். நாங்கள் தான் குற்றம் செய்தோம் என்றும் என்னுடைய மகள் தான் குற்றம் செய்தார் என்ற அடிப்படையில் பேசினார்.
அதன் பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அவர் பையனை எதுவும் செய்து விடாதீர்கள். உங்கள் மகளை நாங்கள் எனது அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறினார்கள். அதன் பிறகு நான் முதலில் இங்கு வாருங்கள். எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று கூறினேன்.
அதன் பின்னர் அவர் மகன் அருமை நல்லூருக்கு சென்ற பிறகு எங்களை எதுவும் பண்ண முடியாது என்று கூறினார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால் காவல்துறையிடம் பேசினோம். காவல்துறையினர் எங்களால் இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது. நீங்க வேணா கன்னியாகுமரியில் போய் அங்க உள்ள காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் கொடுங்க என்று கூறினார்கள்.. அதனால நாங்கள் 10 ஆயிரம் பணம் செலவு செய்து விருத்தாச்சலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்களை அழைத்துச் சென்றோம். நாகர்கோயில், பூதப்பாண்டி காவல்துறையினர் ஆண்டனி ஆகாஷ் வீட்டில் சென்று விசாரித்தனர். ஆனால் ஆகாஷ் வீட்டில் இல்லை என்று தெரிவித்த அவனது அம்மா வேறொருநாளில் விருத்தாச்சலம் அழைத்துக்கொண்டு வருகிறோம் என்றும் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்தார்.
சுமார் 20 நாட்கள் கழித்து ஆண்டனி ஆகாஷ், அவரது அப்பா, சித்தப்பா, வழக்குரைஞர்கள் ஆகியோர் விருத்தாச்சலம் காவல் நிலையம் வந்தனர். ஆகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யாமல், விருத்தாச்சலம் போலீசு வேண்டுமென்றே தப்ப வைத்து விட்டனர். ஆகாஷ் விருத்தாச்சலத்தில் அடகு வைத்த நகையை மீட்டுக்கொண்டு சென்றுள்ளார். நான் 20 முறைகளுக்கு மேல் காவல் நிலையத்திற்கு அலைந்து விட்டேன். ஒரு முறை கூட எங்களை மரியாதையாக உட்கார வைத்து பேசவில்லை. முதல் தகவல் அறிக்கையைக் கேட்டுப் பல முறை அலைந்த போது, விருதாச்சலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வேல்முருகன், முதல் தகவல் அறிக்கையை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கிண்டலாகப் பேசினார். காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் எப்போதும் மரியாதையாக நடத்தியதே இல்லை. எந்தக் கட்சிக்காரனையும் கூட்டிட்டு வரக்கூடாது, அவனுங்க பெரிய மயிரா? என்று திட்டினார். ஆனால் இதுவரை பெண் காணாமல் போன முதல் தகவல் அறிக்கையே உள்ளது. அதைத் திருத்தம் செய்யாமல் வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.
இதுவரை மூன்று முறை டி.எஸ்.பி.யிடம் சென்றுள்ளோம். அவர்கள் ஒவ்வொரு முறையும் புதியதாகக் கேட்பது போல கேட்கிறார்கள். (இக்கால கட்டத்தில் இரண்டு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பணியாற்றினர். இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்). பெண் டிஎஸ்பி ஒருவரிடம் காவல் ஆய்வாளர் முருகேசன் வேண்டுமென்று ஆண்டனி ஆகாஷை கைது செய்யாமல் உள்ளார் என்று நான் புகார் கூறிய போது, இவ்வழக்கை மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றுவதாகக்கூறினார். மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றால், இவ்வழக்கை நாங்கள் விசாரிக்கவே முடியாது என்கிறார்கள்.
ஆண்டனி ஆகாஷை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து காவல் நிலையம் செல்வதால் உங்களுக்கு என்னதான் வேணும் என்று பேசுகிறார் ஏட்டு வேல் முருகன். உதவி ஆய்வாளர் ரவிக்குமார் என்பவர் ”உன்னுடைய பெண்ணுக்கு வயது அதிகம், பையனுக்கு வயது குறைவு. இதுக்கு மேல நடவடிக்கை வேண்டுமென்றால் உன் பொண்ணைத்தான் கைது செய்யணும்” என மிரட்டுகிறார். இவை அனைத்தும் காவல் ஆய்வாளர் முருகேசன் முன்னிலையிலேயே நடைபெறுகின்றன.
காவல்துறையினரின் ஒத்துழைப்போடுதான் ஆண்டனி ஆகாஷ் குடும்பத்தினர் இதுவரை பாதுகாப்பாக இருக்கின்றனர். எனவே காவலர்கள் ஜெயக்குமார், வேல்முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் முருகேசன் மீதும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையாக இருக்கிறது. புற்று நோயாளியான எனது கணவரையும் பார்த்துக் கொண்டு என் மகளுக்கும் நீதியை தேடி நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா திரு. சுப்பிரமணி
எனக்கு வயது 57. நான் சிபிஎம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாலிகிராமம் பகுதியில் எட்டாவது மன்ற உறுப்பினராக இருக்கிறேன் .வெளிநாட்டில் மெக்கானிக்காக வேலை செய்தேன். பிறகு இங்கு பெயிண்டராக இருந்தேன். 2019 இல் எனக்கு கேன்சர் கண்டறியப்பட்டது. வெறும் திரவஉணவு மட்டும்தான் உண்ணக்கூடிய நிலையில் உள்ளேன். உடம்பு மிகவும் முடியாமல் போய்விட்டதால் என்னால் எந்த வேலைகளிலும் ஈடுபட முடியவில்லை. என் மனைவி ஆசனூரில் 6,500 ரூபாய் சம்பளத்துக்கு சுகாதாரப் பணியாளராக வேலை செய்து கொண்டிருக்கிறார். நான் கேன்சர் நோயாளி என்பதால் எனக்கு அரசிடம் இருந்து 1000 ரூபாய் நிதி வருகிறது. பாதிக்கப்பட்டப் பெண்ணான என்னுடைய சிறிய மகள் ஒரு மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் ரூபாய் 1200 அரசிடம் இருந்து நிதியாக வருகிறது. என்னுடைய பெரிய பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுத்ததில் அதிகக் கடனாகியது. எங்கள் குடும்பத்தின் மாத வருமானமாக ரூபாய் 8,700 வருகிறது. அந்தத் தொகையில் 4,500 வட்டிக்கே கட்டிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள தொகையில் தான் எங்களது குடும்ப செலவு, மகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
என் மகள் காணாமல் போனது முதல் இப்போதுவரை 20 முறைக்கு மேல் காவல் நிலையம் சென்றும் எந்த ஒரு முழுமையான நடவடிக்கையும், எந்த ஒரு பதிலும் காவல்துறை தரப்படமிருந்து இல்லை.
நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். என் மகளைக் கட்டாயப்படுத்தியும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆகாஷ். முதலில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் முருகேசன் இருந்தார். அப்பொழுது ஏட்டு வேல்முருகன் தான் முதலில் இதை விசாரித்து நாங்கள் கூறும் புகார்களை எழுதினார். ஏமாற்றிய அந்தப் பையனின் போனை அந்த ஏட்டு கையில் தான் கொடுத்தோம். ஆகாஷ் 50 ஆயிரம் பணத்தை கொடுப்பதாகவும் அதை வாங்கிக் கொண்டு செல்லுபடியும் அவன் கூறியதாக ஏட்டு வேல்முருகன் என்னிடம் கூறினார். திருமணம் செய்து கொள்ள வேண்டும், அல்லது ஜெயிலுக்குப்போக வேண்டும். எனக்குப் பணம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அந்த ஆகாஷுக்கு சாதகமாகத்தான் காவல்துறை நடந்து கொண்டதாக தெரிகிறது.
விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட எங்களை உட்கார வைக்கவில்லை, நிற்க வைத்து கொண்டே பேசினார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே. இப்பிரச்சினைக்குப் பின்னர் நடத்தை சரியில்லை என்று என் மகளை கல்லூரி விடுதியில் இருந்து நீக்கிவிட்டனர். மன வளர்ச்சி, குன்றிய அவர் இரண்டு பேருந்து மாறி 27 கிலோமீட்டர் பயணம் செய்து இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வர வேண்டிய சூழல் என்பது ஏற்பட்டுள்ளது.
வேல்முருகன், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மாமா
பெண் காணாமல் போனது தொடர்பான எஃப் ஐ ஆர் போடுவதற்கே நான்கு முதல் ஐந்து முறை போலீஸ் ஸ்டேஷனில் அலைந்திருக்கிறோம் பையனை காணவில்லை என்று பூதப்பாண்டியில் பையன் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் எங்களிடம் பேசினார். பெண் கிடைத்த ஜூன் 8-ம் தேதி மாலை விருதாச்சலம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. அய்யனாரிடம் பெண்ணையும் ஃபோனையும் ஒப்படைத்தோம்.
பாதிக்கப்பட்டப் பெண்ணை அந்த எஸ்.ஐ விசாரித்தார். ஆண்டனி ஆகாஷுக்கு போன் செய்து விசாரித்தார். ஆண்டனி ஆகாஷ் தரப்பினர் ஒரு வாரத்தில் வருவதாகக் கூறி வரவில்லை. 15 நாட்கள் கழித்து நாங்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்ற பிறகு, அந்தப் பையனின் வீட்டிற்கு செல்ல முடிவு எடுத்து பூதப்பாண்டி சென்றோம். அங்கு உள்ள காவல் நிலையத்தில் தகவல் கூறிவிட்டு அருமைநல்லூரில் உள்ள ஆண்டனி ஆகாஷ் வீட்டிற்கு சென்றோம். சுமார் 20 நிமிடம் கதவை திறக்கவில்லை அதற்குள் ஆண்டனி ஆகாசை அவருடைய அம்மா தப்ப வைத்து விட்டார்.
ஆண்டனி ஆகாஷின் அம்மா இறுதியில் பூதப்பாண்டி போலீஸ் ஸ்டேஷன் வந்து குறிப்பிடுகிற தினத்தில் விருதாச்சலம் போலீஸ் ஸ்டேஷனில் பையனை ஒப்படைக்கிறோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு போனார்.
அதற்குப் பிறகு 15 நாட்கள் கழித்து போலீஸ் விசாரணைக்கு ஆண்டனி ஆகாஷ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வருவதாக எனக்கு தகவல் கூறினார்கள். நாங்கள் வருவதற்குள்ளாகவே அவர்கள் உணவு சாப்பிடுவதாக கிளம்பி விட்டு அப்படியே தப்பித்து விட்டார்கள்.
மனவளர்ச்சிக் குறைபாடுடைய பெண்ணை அழைத்துச் சென்றது, அந்தப் பெண்ணை வன்புணர்வு கொண்டது ஆகிய கிரிமினல் குற்றங்களை புரிந்த ஒரு கிரிமினலை போலீஸ் சாப்பிடுவதற்கு வெளியே அனுப்பியது அவரை தப்ப வைப்பதற்கான முயற்சி என்று கருத முடிகிறது.
இதுவரை இரண்டு டிஎஸ்பி- களிடம் மனு கொடுத்து விட்டோம் .ஏற்கனவே இரண்டு முறை விருதாச்சலம் காவல் நிலையத்தில் மனு கொடுத்திருக்கிறோம். நான்கு முறை புகார் மனுவை கேட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல அந்தப் பெண்ணை விசாரணை செய்கிறார்கள்.
பெயர் குறிப்பிட விரும்பாத நபர் -1
இந்தப் பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் போலீசுக்கு கொஞ்சமும் இல்லை. பெண்ணை ஏமாற்றிய நபர் கன்னியாகுமரியில் இருந்து வந்த போதும் அந்த நபரிடம் விருத்தாச்சலம் போலீசு முழுமையாக விசாரணை நடத்தி அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
விருதாச்சலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் என்பவர், பெண்ணுக்கு வயது அதிகம், பையனுக்கு வயது குறைவு ஆகவே நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பெண்தான் அந்தப் பையனை அழைத்துக் கொண்டு சென்றார் என்றும் மனவளர்ச்சி குறைபாடுடைய பெண்ணை குற்றம் சுமத்தினார்.
இப்பிரச்சனை தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆரோக்கியராஜ், கிரியா சக்தி ஆகிய இரு டி.எஸ்.பி.-க்களிடமும் புகார் கொடுத்தும் எவ்விதத்தீர்வும் இல்லை
எத்தனை மேல் அதிகாரியிடம் புகார் கொடுத்தாலும் நாங்கள் குற்றம் சாட்டக்கூடிய விருத்தாச்சலம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்தான் மீண்டும் விசாரணைக்கு என்று நாங்கள் நிற்க வேண்டி உள்ளது.
இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் செல்லும்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கண்டவனை எல்லாம் அழைத்து வராதே என்று பெற்றோர்களை கடுமையாக மிரட்டுகிறார்.
இந்த பிரச்சனை நடந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. இத்தனை நாட்களில் போலீஸ் ஒழுங்காக வழக்கு நடத்தி இருந்தால் மற்ற அமைப்பினர் கட்சியினர் வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. காவல் ஆய்வாளர் முருகேசன் அதையும் செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆதரவாக எந்த கட்சிகளும் வரக்கூடாது என்று மிரட்டுவது தவறு.
பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரையும் பாதிப்பு ஏற்படுத்திய நபரையும் முதல் சுற்றிலேயே பேசி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வேண்டுமென்றே இந்த வழக்கை தொய்வாகவே விருத்தாச்சலம் போலீசார் நடத்தியுள்ளனர். விருத்தாச்சலம் காவல் நிலையத்தை பொறுத்தவரை மக்கள் பிரச்சினைகளில் எதையும் கண்டுகொள்ளாமல் செயல்படும் போக்கே நீடிக்கிறது. அதுவும் பட்டியலின மக்கள் என்றால் அவர்களுக்கு வழக்கினை நடத்துவதே மிகப்பெரிய சுமையாக இருக்கிறது.
திரு.அய்யாத்துரை,விடுதலை சிறுத்தைகள் கட்சி
விருதாச்சலம் காவல் நிலையத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பிசிஆர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு வழக்கிலும் இதுவரை குற்ற பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாகப் பேசிய ஒரு ஊடகவியலாளரின் ஆடியோ வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது நான் அளித்த புகார் இதுவரை ஏற்கப்படவில்லை. அவர் மீது பிசிஆர் வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை.
கணபதி குறிச்சி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். ஆதிக்கச் சாதியை சேர்ந்த ஒருவரிடம் அவரின் மகன் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியப் பிரச்சினையில் அந்த ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டைப் பூட்டி விட்டார்கள். செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இப்பிரச்சனைத் தொடர்பாக இன்று வரை (08.10.2024) எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
கடந்த ஆண்டு சாத்துக்குடல் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்கச் சாதியினர் மீது நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நான்கு பேர் உட்பட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விருத்தாச்சலம் காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சிந்தனையில் செயல்படுகின்றனர்.
பெயர் கூற விரும்பாத நபர் 2
விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் முருகேசன் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய பல வழக்குகளையும் கிடப்பில் போடுகிறார். பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றவாளியாக்கும் வேலையைச் செய்கிறார். பாதிப்பை ஏற்படுத்திய நபர்கள் பணக்காரனாகவோ முதலாளியாகவோ இருந்தால் அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது போன்ற வேலைகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
காவல்துறை அதிகாரிகளே ஆதிக்கச் சாதி வெறியில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிப்பு என்று வந்தால் கண்டு கொள்வது இல்லை. கஞ்சா போதை கலாச்சாரம் மிகவும் அதிகமாக இந்த பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் டாஸ்மாக் மது எந்த தடையும் இல்லாமல் விற்பனையாகிறது. இதன்மீதும் விருத்தாச்சலம் காவல் ஆய்வாளார் முருகேசன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையம்
இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே மாநில எஸ்.சி / எஸ்.டி ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் புகார் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ஆணைய அலுவலர்களைச் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்தப் புகார் மீது ஆணையத்தின் சார்பில் விசாரணை மேற்கொள்ள 18.10.2024 அன்று பாதிக்கப்பட்டப் பெண்ணையும் அவரது தாயையும் அழைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்
இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே மாநில மகளிர் ஆணையத்திற்கு பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் புகார் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி. குமாரி அவர்கள் அலுவலகத்தில் இல்லாததால் (09.10.2024 காலை 11 மணி) அங்கு இருக்கும் உதவியாளர்களிடம் இது பற்றி விசாரித்தோம்.
”நாங்கள் மேற்கொண்டு கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றும், சம்பந்தப்பட்டக் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றி விசாரிப்பார் என்றும், நாங்கள் அனுப்பிய கடிதம் உங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களில் வந்து சேரும் என்று பதில் அளித்தனர்.
தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள்,
மாநிலச்செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
மனவளர்ச்சி குன்றிய 21 வயது பெண் காணாமல் போனதாக கொடுக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் விருதாச்சலம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டது. 5 மாதங்கள் நெருங்கும் நிலையில் இது நாள் வரை திருத்தப்படவில்லை என்பதுதான் இப்பிரச்சினையின் மையம் ஆகும் .
அந்தப் பெண் காணாமல் போகவில்லை. ஆண்டனி ஆகாஷ் என்பவரால் மேற்படி தேதியில் திருமண ஆசைக் காட்டி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மேற்கண்ட குற்றத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண் பிறவியிலேயே மனநலம் குன்றியவர் என்பதால் அதற்கேற்ற வகையில் விசாரித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தும் புகார் மீது எந்த நடவடிக்கையையும் விருத்தாச்சலம் போலீஸ் இன்றுவரை எடுக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட நபரை தப்பிக்க வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பதில் தனக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான அதிகாரத்தை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்ணையும் அவர் குடும்பத்தாரையும் மிரட்டி வருகிறது விருதாச்சலம் போலீசு.
ஒரு பெண் பாலியல் உறவுக்கு அல்லது வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் மருத்துவப்பரிசோதனையை மேற்கொள்ளாமல் தடயங்களை அழிக்கும் வேலையில் விருதாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஈடுபட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த குற்ற சம்பவத்தில் விருதாச்சலம் காவல் ஆய்வாளரே இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாக கருதி அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனவளர்ச்சிக் குன்றிய பெண்ணை ஏமாற்றி திருமண ஆசைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆண்டனி ஆகாஷ் என்ற நபர் மீது மேற்படி புகாரின் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் இச்சூழலில் மனவளம் குன்றிய இப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் அதிர்ச்சியடைய வைக்கிறன. இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு எதிராகப் செயல்படும் காவல் துறையினரையும் அதே வழக்கில் குற்றவாளியாக சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டப் பெண் 21 வயது நிறைவடைந்தாலும் அவர் எதிலும் முடிவெடுக்கும் திறன் அற்றவராக உள்ளார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாதவராகவே உள்ளார். தற்போதுவரை தனக்கு நேர்ந்த கொடுமைகள் புரியாமல் கல்லூரிக்கு சென்று வருகிறார். அவருடன் இயல்பாகப் பேசி அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை அறிய முடிகின்றது.
ஒரு தாய் மனவளர்ச்சி குன்றிய தன்னுடைய பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடுகிறார். அவரின் கோரிக்கை மிகச்சிறியதுதான். உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே. ஆனால் ஆணாதிக்க, ஆதிக்கச் சாதி வெறிபிடித்த காவல் துறையில் உழைக்கும் மக்களின் மிகச்சிறிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூட முட்பாதைகளின் வழியே பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடக்கவேண்டியுள்ளது.
உண்மை அறியும் குழு வந்தடைந்த முடிவுகள்
பரிந்துரைகள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

திமுக அரசின் போலீசு சாம்சங் தொழிலாளர்கள் போராடும் இடத்தில் நேரடியாக இறங்கி போராட்டத்தைக் கலைத்து தொழிலாளர்களைக் கைது செய்து வருகின்றது. போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று வழக்கமான ஒரு பொய்யைச் சொல்லி தொழிலாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து கிரிமினல்களைப் போல் கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். இன்னும் பல மோசமான அடக்குமுறைகளை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்திற்கு அடியாளாக நின்று உண்மையில் அந்நிய மூலதன வளர்ச்சிக்கு திமுக அரசு சேவை செய்கிறது.
தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக அந்நிய மூலதனத்தை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்ததையும் இந்தத் தருணத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.
“அந்நிய தொழில் முதலீடுகள் வருகின்றன. இதனால் வேலை வாய்ப்பு உருவாகும். அதன் வழியாக தொழிலாளர்கள் வளர்வார்கள். நாடும் பொருளாதாரமும் வளரும்” என்றே பொது புத்தியில் ஒரு புரிதல் உள்ளது.
உண்மையில் அந்நிய தொழில் மூலதனம் தொழிலாளர்களுக்கு இந்திய தொழிற்சங்க சட்டங்கள் வழங்கியிருக்கும் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மறுக்கும் விதத்திலான நிபந்தனையுடன்தான் இங்கு வருகின்றன. அதன்படிதான் தமிழ்நாடு அரசுடனும் இந்திய அரசுடனும் ஒப்பந்தம் போடப்படுகின்றது.
இந்த உண்மையைப் பற்றி மட்டும் ஆட்சியாளர்கள் வாய் திறந்து பேசுவதே இல்லை. இதற்குப் பெயர் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
படிக்க: சாம்சங் தொழிலாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை வளங்களைச் சூறையாடுவது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது, அரசின் வரி விலக்குகளையும் சலுகைகளையும் பெறுவது போன்ற போன்ற சலுகைகளோடு வருகின்றன இந்த அந்நிய மூலதனங்கள்.
சிப்காட், சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற கொட்டடிகளை அரசே உருவாக்கிக் கொடுத்து இங்கு தொழிலாளர்கள் கசக்கி பிழியப்பட்டு சக்கையாகத் தூக்கி வீசப்படுகின்றனர்.
அந்நிய மூலதன வருகை என்பது தொழிலாளர்களுக்கும் நாட்டிற்குமான வளர்ச்சி அல்ல. அந்நிய மூலதனமானது நமது தொழிலாளர்களின் உழைப்பை ஒட்டச்சுரண்டி தன்னை மேலும் வளர்த்துக் கொள்ளவே இங்கு வருகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட திமுக அரசிற்கு இது நன்றாகவே தெரியும் ஆனால் இந்த உண்மையை மக்களிடம் சொல்ல முடியாது.
இந்தியச் சட்டங்களை மதிக்காமல் சட்டவிரோதமாகச் செயல்படும் சாம்சங் நிறுவனத்தைப் பாதுகாத்து, சட்டப்படியான உரிமைகளுக்காகப் போராடும் சொந்த நாட்டின் தொழிலாளர்களை திமுக அரசின் போலீசு கிரிமினல்களைப் போல் நடத்துவதிலிருந்தும், ஒடுக்குவதிலிருந்தும் புரிந்து கொள்ள முடியும்.
நிதி மூலதன கும்பல்களுக்கான உலக வங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற நிறுவனங்களோடு நமது ஆட்சியாளர்கள் நமது நாட்டுக்கும் தொழிலாளர்களுக்கும் கேடு விளைவிக்கும் ஒப்பந்தங்களைப் போடுகின்றன. இந்த நிதி மூலதன கும்பல்கள்தான் நம்மை ஆட்சி செய்கின்றன. நாம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் அரசியல் பிரதிநிதிகளும், அரசும் நமக்கு ‘ஜனநாயகம்’ வழங்குவதாகக் கூறிக்கொண்டு நிதி மூலதன கும்பல்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அடிபணிந்து வேலை செய்கின்றனர்.
![]()
வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

“பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து” என்ற முழக்கங்களின் அடிப்படையில் பெரியாரிய உணர்வாளகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு 10.10.2024 காலை 10:30 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ரவி தலைமை தாங்கினார். இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பாசிச மோடி அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
படிக்க : புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!
இந்நிகழ்வில் சுதந்திரத்திற்கான விவசாய சங்கத்தின் மூத்த தோழர் குமரேசன் கண்டன உரையை பதிவு செய்தார். RMPI தோழர் களஞ்சியம், CPIML தோழர் சந்தானமேரி, தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் தோழர் ரவிச்சந்திரன், CPIML MASS LINE மாநில குழுத் தோழர் யோகேஸ்வரன், வீரகுல தமிழர் படையின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கீழை பிரபாகரன், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் செய்யது இப்ராகிம், புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் தமிழ் முருகன், பெரியார் பேரவை தலைவர் தோழர் நாகேசுவரன், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம், ஆதித்தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் தோழர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பேச்சாளர் சகோ முகமது அயூப் புகாரி இமாம் அவர்கள் விரிவான வரலாறுகளை எடுத்துரைத்து நாம் போராட வேண்டிய தேவையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
படிக்க : கொல்கத்தா: மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்!
கலந்து கொண்டு பேசிய அமைப்புகளின் தோழர்களும் கலந்து கொண்டனர். முழக்கத்துடன் கூட்டம் இறுதி நிகழ்வை எட்டியது. தமிழ் புலிகள்கட்சியின் சார்பாக கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் ரஞ்சித் அவர்கள் நன்றி உரையுடன் கூட்டம் முடிவடைந்தது.
நேரலையை காண :
தகவல் : மக்கள் அதிகாரம்
ரூட்டு கலாச்சாரத்தின் பின்னணியை விளக்கும் தோழர் தீரன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

ரூட் தல பிரச்சினை – மாநிலக் கல்லூரி மாணவர் படுகொலை |
தேவை மாணவர் சங்கத் தேர்தல் | தோழர் தீரன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram


10.10.2024
சாம்சங் தொழிலாளர்கள் மீதான
திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!
சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம்!
கண்டன அறிக்கை
கடந்த 32 நாட்களாக சாம்சங் தொழிலாளர்கள் தங்களின் சிஐடியு சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று போராட்டப் பந்தலை பிரித்து எறிந்த தமிழ்நாடு போலீஸ், நள்ளிரவில் தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து அராஜகமாகக் கைது செய்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
சங்கம் வைப்பதற்கும் போராடுவதற்கும் அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமை வழங்கி இருக்கும் சூழலில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்ற இல்லாத ஒரு காரணத்தைக் காட்டி சாம்சங் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அடியாள் வேலை பார்த்திருக்கிறது திமுக அரசின் போலீஸ்.
இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் செயல்படுவதற்கு அனைத்து விதமான உரிமைகளும் உள்ளன. ஆனால் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனியான சாம்சங் அதை ஏற்க மறுக்கிறது என்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்த நாட்டின் அரசமைப்புக்கு கட்டுப்படாத ஒரு நிறுவனத்தை எப்படி இங்கே அனுமதிக்க முடியும் என்ற கேள்வி தான் எழ வேண்டும்? அதைவிடுத்து விட்டு சாம்சங் வேறு மாநிலத்துக்கு சென்று விடும் என்று புரளி கிளப்புவது அயோக்கியத்தனமானதாகும்.
சமூகநீதி, சமத்துவம் என்று பேசிய திமுக அரசு, சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுப்பது உழைக்கும் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு தொழிற்சங்கங்களின் போராட்டங்களை சீர்குலைத்து, பிளவு படுத்தி பெரும் போலீஸ் படையைக் குவித்து அச்சுறுத்தி கார்ப்பரேட் கம்பெனிக்கு அடியாள் வேலை பார்ப்பதே போலீஸின் முதன்மை வேலையாக இருக்கிறது.
போராடுகின்ற தொழிலாளிகளின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று கைது செய்வது சிறைப்படுத்துவது, போராட்டப் பந்தலைப் பிரித்து எறிவது, போராடுகின்ற நபர்களை யாரும் சந்திக்க விடாமல் கைது செய்வது, தொழிற்சங்கத்தை உடைப்பது – பிளவுபடுத்துவது ஆகிய செயல்களை மேற்கொண்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு அடியாள் வேலை பார்க்கக் கூடிய இந்த போலீசின் நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த 32 நாட்களாகப் போராடிவரும்
சாம்சங் தொழிலாளர்களுக்குத் தோள் கொடுப்போம்!
அடிப்படை உரிமையான போராடும் உரிமையும்
தொழிற்சங்க உரிமையையும் நிலைநாட்டுவோம்!
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

பலராலும் கொண்டாடப்படும் டாடா குழுமத்தின் கோர முகம் குறித்து 2010 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்
***
பகுதி 2
2003 – செப்டம்பரில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் குஜராத் மாநிலம் மித்னாபூர் சோடா உப்பு ஆலையில் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டது. கட்ச் வளைகுடாவில் உள்ள தேசியக் கடற்பூங்காவில் 150 ஏக்கருக்கு மேலான கடற்பகுதிக்கு அது பரவியது. மாந்தோப்புகள், பவளப்பாறைகள், களிமண் வாழ் உயிரினங்கள், திமிங்கலம், சுறா போன்றவைகளைக் கொண்ட மிகவும் பல்வகை உயிரினங்களுக்காக இந்தக் கடற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு டாடா கெமிக்கல்ஸ் ஆலையின் கழிவுகளால் படிந்த திடப் பொருட்கள் காரணமாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் வாழினங்கள் பாதுகாக்கப்படும் பகுதி மாசுபட்டும் சீரழிந்தும் போவிட்டதென்று தேசியக் கடலியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. மித்னாபூர் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்சின் உப்பளங்கள் அங்குள்ள நிலத்தடி நீரைப் பெருமளவு உப்பு நீராக்கிவிட்டன. டாடா கம்பெனியின் உப்புக் கழிவு நீரைக் கொட்டி வைக்கும் திறந்தவெளிக் கிடங்குகளுக்காக பல கிராமங்கள் விவசாய நிலங்களை இழந்துவிட் டிருக்கின்றன.
ஜாம்சேத்பூர் மாநகரில் உள்ள ஜூக்சாலைப் பகுதியின் மையத்தின் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான டன்கள் கொதிகலன் சாம்பலைக் கொட்டி மலை மலையாகக் குவித்திருக்கிறது, டாடா எஃகு ஆலை. கோடை காலத்தில் அச்சாம்பல் மலைகளில் இருந்து பறந்துவரும் கனரக உலோகத் துகள்கள் நிரம்பிய காற்று சாலைகளில் வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பார்வையைப் பதிப்பதோடு, சுவாச நோய்களையும் பரப்புகின்றது. டாடா எஃகு நிறுவன ஒப்புதல்படியே அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டு, அனுமதிக்கப்படும் அளவைவிட மிகையாகக் கடினநீராகி, திடப்பொருட்களின் கரைசல் நிரம்பியதாக உள்ளது.
டாடா, பிர்லா, மற்றும் ஜிண்டால் போன்ற குழுமங்களின் இரும்புக் கனிமச் சுரங்கங்கள் அமைந்துள்ள ஜோடா நகரம் 1950-களில் கனிமவளம் கொழிக்கும் நகராக விளங்கி, பல கூட்டுப்பங்கு நிறுவனங்களின் செல்வவளங்களைப் பெருக்கியது; ஆனால், அதனால் அந்த நகரம் ஒரு பயனும் பெறவில்லை. பத்திரிக்கையாளர் தரும் விவரப்படி, ஜோடா நகரமும் அதற்குச் செல்லும் சாலையும் ஒரு பெரிய பாதாளக் குழியாக உள்ளது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக கனிமச் சுமையேற்றிய லாரிகள், இரவுபகலாக 24 மணிநேரமும் நடக்கும் சுரங்கம் வெட்டுதல் ஆகியவை காரணமாக உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள், பயணிகள் சுவாசிக்க நல்ல காற்றே கிடையாது. மிக மோசமாகத் தூசு கிளப்பும் இந்தச் சுரங்கங்கள் யானைகளும் புலிகளும் புகலிடமாகக் கொண்டுள்ள சித்தமாதா ரிசர்வ் காடுகளின் எல்லையில் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.
மேற்கு பொக்காரோவில் டாடா எஃகு நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. பொக்காரோவில் உள்ள நிலக்கரி கழுவுமிடத்திலிருந்து நிலக்கரி தூசுகள் நிறைந்த கரிக் குழம்புகள் பொக்காரோ ஆற்றுக்குள் கொட்டப்படுகிறது; இதனால் ஆற்றுப்படுகை முழுவதும் நிலக்கரி சாம்பல் படிந்து ஆறே நாசமடையச் செய்து அழிக்கப்பட்டு விட்டது. ஆற்றில் இருந்து பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலக்கரி தூசுக் குழம்பும் கழிவும் கொட்டப்படுகிறது.
1989 மார்ச் மூன்றாம் நாள், டாடா குழுமத்தின் நிறுவனர் நாள் விழாக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது பிரபலங்களின் இருக்கைப் பகுதியில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு விட்டது. அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இத்தீவிபத்தில் 60 குழந்தைகள் மாண்டு போயினர்; 111 பேர் படுகாயமுற்றனர்; மோசமான ஏற்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் போச் சேர முடியாமல் போனது. தீ விபத்து சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, படுகாயமுற்று- தீக்காயத்தில் செத்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதை டாடாக்கள் மறுத்துவிட்டதால் பிரச்சினை மேலும் கடுமையாகியது. டாடா எஃகு நிறுவனம்தான் விபத்துக்கு முழுப்பொறுப்பாகும் என்று ஆலைகளுக்கான ஆய்வகம் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இத்துயரச் சம்பவம் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகியும் பலியானவர்களின் உறவினர்களுக்கோ, படுகாயமுற்றவர்களுக்கோ டாடா நிறுவனம் இன்னமும் நட்டஈடு வழங்கவில்லை. டாடா இரும்பு எஃகு நிறுவனம் ஆலை விபத்துகளுக்குக் கொடுத்து வந்த நட்டஈடுகளை சுட்டிக் காட்டி, அதே அளவு நீதிமன்ற நடுவரிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் பிறப்பித்த ஆணையைக் கூட டாடா நிறுவனம் மதிக்காது மறுத்து வருகிறது.
1920-கள் மற்றும் 1930-களில், டாடா இரும்பு எஃகு கம்பெனியின் ஐரோப்பிய பார்சி நிர்வாகத்துக்கு எதிராகப் பழங்குடித் தொழிலாளர்கள் போர்க்கோலம் பூண்டு பலமுறை போராடியிருக்கிறார்கள். வேலை நிலைமைகள், சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமை ஆகியன அவர்கள் ஒன்று திரண்டு போராடுவதற்கான முக்கியமான மையப் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், பல ஆண்டுகளாக, தொழிற்சங்கங்களை உடைப்பதற்கு அடிக்கடி வன்முறை வழிகளில் ஈடுபடுவதில் டாடா கம்பெனி பெயர்பெற்றதாக விளங்கியது.
1991-இல் ரத்தன் டாடா தலைமைப் பொறுப்பேற்றபிறகு ஆட்குறைப்பு மற்றும் நெறிப்படுத்துவதை மூர்க்கமாக டாடா குழுமம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டு, டாடா ஹைட்ரோ கம்பெனிகள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே மண்ணெண்ணெ ஊற்றிக் கொண்டு டாடா நிறுவனத்தின் தலைமையகத்தின் முன்பு தீக்குளித்தார்கள். டாடா மின்சக்தி கம்பெனியிலிருந்து சட்டவிரோதமாக ஒப்பந்தத் தெழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்தான் அவ்விரு தொழிலாளர்களும் தீக்குளித்து மாண்டனர்.
1980-களில் வீட்டுமனை நிலங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன; மும்பையின் முதன்மை வீட்டுமனை இடங்களில் இருந்த துணி ஆலைகள் அப்போது நலிவடைந்திருந்தன. துணி ஆலைகளைத் தேவைக்கேற்ப புதுப்பிக்கவும் நவீனப்படுத்தவும் ஆலை நிர்வாகங்கள் தவறிவிட்டன. செல்வம் கொழிக்கும் வீட்டுமனை பேரங்கள் ஆலைகளை மூடி பெரும் பணம் பார்க்க உதவும் என்று நம்பிய ஆலை நிர்வாகங்கள், ஆலைகளை இடித்துத் தள்ளுவது என்று முடிவு செய்தார்கள். மும்பையில் இருந்த மிகப் பழமை வாய்ந்த துணி ஆலைகளில் ஒன்றான சுதேசி ஆலையை நடத்திவந்த டாடாக்கள், தமது சொந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை விற்பதற்கான அனுமதியை ஏற்கெனவே பெற்றிருந்தது; அதற்கு டாடாக்கள் சொல்லியிருந்த காரணம், தமது ஆலையில் ஆட்குறைப்பால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு பொதுத்துறை ஆலை, ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பொதுமக்களுக்கான வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றுக்குப் பாதிக்கும் மேலாக நிலம் அளிக்கப்படும் என்பதுதான். ஆனால், அந்த நிலம் விற்கப்பட்டபோது இவையெதுவும் நடக்கவில்லை. விற்கப்பட்ட நிலமும் குறைமதிப்பீடு செய்து விற்கப்பட்டு, ஆலையைப் புனரமைப்பு செய்வதற்காக அல்லது தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென்றிருந்த நிதி டாடாக்களின் வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதென்று தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினார்கள். 2000-ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டு, 28000 ஆலைத் தொழிலாளர்கள் அகதிகளாக வீசப்பட்ட போது, சுதேசி ஆலையின் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
செலவுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பெருமளவு வேலைக்கு அமர்த்தும் காரியத்தில் டாடாக்கள் ஈடுபட்டார்கள் என்று அக்கம்பெனியின் உயர்நிலை அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் நிரந்தரமாக்கும் சட்டத்திற்கு முரணாக, பயிற்சி பெற்ற நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளையும் மற்றும் நிரந்தர நீண்டகால வேலைகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யக்கூடாதவை என்று தடைவிதிக்கப்பட்ட பணிகளையும் கூடச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். தனது நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் இடையே டாடா கம்பெனி பாராபட்சம் காட்டுவதாகத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜாம்சேத்பூர் டாடா எஃகுக் கம்பெனியின் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை விடக் கூடுதல் தரமுடைய உணவைப் பெறுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யும் வேலை, கம்பெனியின் நிரந்தரத் தொழிலாளர்களுடையதைவிட தன்மையில் மாறுபாடானது அல்லவெனினும், சம்பள வித்தியாசம் பெருமளவு வேறுபாடானது. கடினமான வேலைகளை நீண்டநேரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் செய்கிறார்கள். திறமைக் குறைவு மற்றும் வேலைநிர்பந்தங்கள் காரணமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கூடுதலான விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
தொழிற்பாதுகாப்பு தருபவர்கள் என்ற டாடாக்கள் பெற்றிருக்கும் “நல்ல” பெயருக்கு மாறாக, டாடா குழுமத்தின் கார்ப்போரேட் நிறுவனம் பெரிய அளவுக்கு ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. இதற்கு முதன்மை நிறுவனமான டாடா எஃகு ஆலை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1994-இல் டாடாக்களின் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 78,000 ஆக இருந்தது. அதுவே, 1997-இல் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது. 2002-க்குள் மேலும் 15,000 வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டன. 2006-ஆம் ஆண்டில் டாடா நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தொகை 38,000 ஆனது; அதாவது தாராளமயமாக்கம் தொடங்கிய போதிருந்ததில் பாதியளவுக்குச் சற்று மேலாகும். வேலை இழந்தவர்களில் (40,000 பேர்களில்) 25,000 பேர் விருப்பு அடிப்படையில் விலகி அதற்குரிய ஈட்டுத்தொகை பெற்றார்கள். இருப்பினும், அனைவரும் தாமே முன்வந்து விலகும் திட்டத்தின் கீழ் விலகியவர்கள் அல்ல என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். திடகாத்திரமான தொழிலாளர்கள் கூட கடும் உணர்வு நிலை அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தார்கள். விருப்பு விலகல் முறையை ஏற்கவில்லையானால், சாலைகளைப் பெருக்கும்படி ஆசிரியர்கள் கூட நிர்பந்திக்கப்பட்டார்கள் என்று செய்திகள் குற்றஞ்சாட்டுகின்றன.
1989-இல், பூனேயில் உள்ள டாடாவின் டெல்கோ ஆலையில் உள்ள டெல்கோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தார்கள். போட்டித் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு கொடுத்தும், தொழிலாளர் அமைதியின்மை நீடித்ததால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று போராடும் தொழிலாளர்களை மிரட்டியும் வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு, டாடா நிர்வாகம் முயன்றது. 1989, செப்டம்பரில் 3000 தொழிலாளர்கள் காலவரையறையற்ற உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மயங்கி விழுந்ததோடு சமரசத்துக்கான அறிகுறியே இல்லாமல் வேலை நிறுத்தம் முன்னேறியபோது, டாடாக்கள் மற்றும் பிற முதலாளிகளின் கடுமையான நிர்பந்தத்துக்கு மாநில அரசாங்கம் ஆளானது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருள் சூழ்ந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மாநில ரிசர்வ் மற்றும் பூனே நகரப் போலீசார் “தகர்ப்பு நடவடிக்கை”யைத் தொடங்கினர். உண்ணா நோன்பிருந்த தொழிலாளர்களை வளைத்துக் கைது செய்வதற்காக 80 பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. போலீசின் உதவியோடு வேலைநிறுத்தத்தை டாடாக்கள் உடைத்தனர்.
குறைந்தது இரண்டு தொழிலாளர் முன்னணியாளர்கள் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். அப்துல் பாரி மற்றும் வி.ஜி. கோபால் ஆகிய இருவரும் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றபோது போட்டி தொழிற்சங்கத்துக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் டாடா நிர்வாகம் பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டாடா தொழிலாளர்களும் சுயேச்சையான பார்வையாளர்களும் குற்றஞ்சாட்டினர்.
நாட்டின் பல்வேறு இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் அமைப்பதற்கு டாடா கம்பெனி முயற்சித்தபோது, உள்ளூர் மக்கள் அம்முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர் என்ற உண்மையிலிருந்து டாடாவுக்குள்ள அவப்பெயர் தானே விளங்கும். இதற்கு மே.வங்கம் சிங்கூரில் நடந்த போராட்டமும், ஒரிசா கலிங்கா நகரில் நடந்துவரும் போராட்டமும் சமீபத்திய பிரபலமான இரு எடுத்துக்காட்டுகள். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரிசா பழங்குடி மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இராயகடா மாவட்டத்தில் உள்ள புனித பாஃபிளி மாலி மலைகளில் பாக்சைடு கனிமச் சுரங்கம் அமைக்கும் முனைப்பைக் கைவிடும்படி டாடாக்கள் தள்ளப்பட்டார்கள். 2000-ஆம் ஆண்டு அந்த சுரங்கம் அமையவிருந்த பகுதியில் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் நடந்தபோது மூன்று பழங்குடி இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2000-ஆம் ஆண்டு, ஒரிசாவில், கோபால்பூர்-கடல் என்ற கடற்கரை நகரில் ஒரு எஃகு ஆலையை அமைக்கும் முயற்சியில் டாடாக்கள் ஈடுபட்டனர். அந்த ஆலையை நிறுவுவதற்கு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 20,000 பேருக்கு மேல் திரண்டு நடத்திய மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆலைத்திட்டமும் கூட மக்கள் இரத்தம் சிந்திப் போராடிய பிறகுதான் முடிவுக்கு வந்தது. 1997 ஆகஸ்டில் சிந்திகோவன் நகரில் நடந்த டாடா எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, சிதறி ஓடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.
ஒரிசாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள சர்வதேசப் புகழ் பெற்ற சில்கா கடல்நீர் ஏரியின் பெரும் பகுதியை மீன்பண்ணை அமைப்பதற்கு டாடாக்கள் வளைத்துப் போட முயன்றனர். அதற்கு எதிராக 1990-களின் பிற்பகுதியில், சில்கா ஏரியைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்துள்ள 1,20,000 மீனவர்கள் கடுமையாகப் போராடிய பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு “ஓபியம்” என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போய்விட்டன. ஓபியம் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு, ஆங்கிலேயக் காலனியவாதிகளுக்காக டாடா போன்ற தரகர்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். (சீன மக்களை ஓபியம் போதைப் பழக்கத்தில் மூழ்கடித்து அடிமைப்படுத்திக் காலனியாக்கிக் கொள்ள ஆங்கிலேயர்கள் எத்தணித்தபோது அதற்கு எதிராக சீன மக்கள் நடத்தியதுதான் பிரபலமான ஓபியம் போர். ஓபியம் கடத்திக் குவித்த மூலதனத்தைக் கொண்டுதான் துணி ஆலைகளையும் இரும்பு-எஃகு ஆலையையும் டாடா குடும்பம் நிறுவியது – மொ-ர்)
1877, ஜனவரி முதல் நாளில், பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் ஒரு பருத்தி துணி ஆலையை நிறுவியதுதான் டாடாவின் முதல் ஆலை முனைப்பு ஆகும். அந்த நாள்தான் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசியாகப் பிரகடனம் செய்த நாள்; அதைக் கொண்டாடும் முகமாக துணி ஆலைக்கு பேரரசி ஆலை என்று டாடா கம்பெனி பெயர் சூட்டியது.
முதல் உலகப் போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டனின் போர் முன்னெடுப்புகளுக்கு முக்கியத் தேவையாக ஆங்கிலேயப் பேரரசுக்கு ரயில் தண்டவாளங்கள் சப்ளை செய்யும் வேலைக்காக 1906-ஆம் ஆண்டு ஜாம்சேத்பூரில் டாடா இரும்பு எஃகு கம்பெனி தொடங்கப்பட்டது. இந்தியாவில் வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டு பிரபு, போர் முடிந்த பிறகு சொன்னார், “மெசபடோமியா (ஈராக்) மட்டுமல்ல; எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக்கூட டாடா கம்பெனி எஃகுத் தண்டவாளங்கள் கொடுத்துதவ முடியாமல் போயிருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம் என்று கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.”
1865-இல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றது; அது அமெரிக்காவின் தென்மாநிலங்களில் இருந்து இங்கிலாந்தின் துணி ஆலைகளுக்கான பருத்தியை சப்ளை செய்வதற்கு வழிவிட்டது; அந்த ஆலைகளில் இருந்து இந்தியாவுக்கு நூலை அனுப்ப முடிந்தது. இருப்பினும் பல ஆலைகள் இன்னமும் மீள முடியாத நிலையில், 1868-இல் அபிசீனியா (இப்போதைய எத்தியோப்பியா)வில் மக்டாலாப் போரை நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைக்கு உடை, உணவு சப்ளை செய்யும்-லாபம் கொழிக்கும் ஒப்பந்தங்களைப் பெற்று டாடா குடும்பம் மட்டும் வெற்றிகரமாக தொழில்புரிய முடிந்தது.
(முற்றும்)
(போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேசப் பிரச்சாரம் என்ற இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
![]()
புதிய ஜனநாயகம்
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2010 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

பலராலும் கொண்டாடப்படும் டாடா குழுமத்தின் கோர முகம் குறித்து 2010 ஆம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்
***
டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2005-ஆம் ஆண்டு கணக்குப்படி 76,500 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.
தாராளமயம் புகுத்தப்பட்டதற்கு முன்புவரை, லைசென்சு (தொழில் துறையின் மீது உரிமக் கட்டுப்பாடு) ஆட்சியில் முடிசூடா மன்னர்களாக டாடாக்கள் இருந்தார்கள். வாரிக் கொடுக்கும் தாராள வள்ளல் தன்மைகள் மூலம் மனித உரிமை மீறல், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் முறைகேடுகள் ஆகிய அவர்களின் திரைமறைவுச் செயல்களை மூடி மறைத்து வந்தார்கள். உலகமயமாக்கச் சூழலில் இத்தகைய உண்மைகள் சாக்கடைக் கழிவுகளாக வெளிப்படத் தொடங்கியபோது, அவர்களின் விசுவாச ஊழியர்கள் உட்பட மேலும் மேலும் கூடுதலான மக்கள் டாடாக்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.
தேசத்தைக் கட்டியெழுப்புவது, கூட்டுப் பங்கு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புகள் ஆகிய டாடாவின் பசப்பு வார்த்தைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். டாடா கம்பெனிகளின் சொந்தப் பங்குதாரர்கள் தவிர, வேறு யாருடைய நலனுக்கும் பொறுப்பானவர்களாக அவர்கள் இல்லை என்பதையும் அறிந்தார்கள். டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் அவர்களின் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்று பின்வரும் தொகுப்புச் செய்திகள் காட்டுகின்றன.
================
1984 டிசம்பரில் போபால் நச்சுவாயு பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்த ஒரு சில இந்தியர்களில் ஒருவராக ஜே.ஆர்.டி.டாடா இருந்தார். செலவுகளைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியதாலும், நச்சு ஆலையில் சோதித்தறியப்படாத தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாலும் நிகழ்ந்த பேரழிவுக்கு ஆண்டர்சன் நேரடிப் பொறுப்பாளராகிறார். முக்கியமாக, போபால் நச்சு ஆலையின் கழிவு மற்றும் பயன்பாட்டுச் சாதனங்கள் டாடா பொறியியல் கம்பெனி (Tata Consulting Engineers) யால் கட்டியமைக்கப்பட்டவை.
போபாலில் உள்ள நச்சு ஆலையில் யூனியன் கார்பைடு கம்பெனி விட்டுச் சென்றுள்ள நச்சுக் கழிவுகளை அகற்றும் தர்ம காரியத்துக்குத் தலைமையேற்று யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கும், அதன் புதிய சொந்தக்காரரான டௌ கெமிக்கல்சின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் 2006 நவம்பரில் ரத்தன் டாடா முன் வந்தார். அக்கழிவுகளை அகற்றுவது டௌ கெமிக்கல்சின் கடப்பாடு என்றும், அதற்காக அந்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசு அப்போது வாதாடிக் கொண்டிருந்தது. டௌ கெமிக்கல்ஸ் கடப்பாடுடையது என்கிற சட்டப்படியான முயற்சியைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் டாடாவின் தர்மகாரிய முன் வருகை. மேலும், இந்த முன்வரவின் நோக்கம் இந்தியாவில் டௌ கெமிக்கல்சின் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கமுடையது என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டதுதான். போபால் நச்சுவாயு வெளியேற்றத்துக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான இயக்கத்தால் இந்தியாவில் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தொழில் திட்டங்கள் நிலைகுலைந்து போகும், அதன் எந்தவொரு தொழில் முனைப்பும் அதிகரித்த சிக்கலுக்குள்ளாகும் என்ற பயத்தின் காரணமாக பெருமளவிலான முதலீடுகளை டௌ நிறுவனம் தானே மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.
இந்தியக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் டாடாவின் கட்டளை:
2005-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகம் ஆகியவற்றின் கார்ப்போரேட் (கூட்டுப் பங்கு) கம்பெனிகளிடம் நட்புப் பாராட்டும் முனைப்புகளால் தூண்டுதல் பெற்று, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு கும்பலைக் கொண்ட இந்திய-அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை என்ற அமைப்பை அமெரிக்கா மற்றும் இந்தியத் தொழில் – வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கின. “தொழில் வர்த்தகத் துறையில் இரு நாடுகளிடையே அதிகரிக்கும் அளவிலான பங்காளிகளாவது மற்றும் கூட்டுறவுக்கான ஒரு பாதை வரைபடத்தை வகுப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதாக அந்தப் பேரவை இருக்கும்” என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு மேலும் சாதகமான வகையில் தற்போதைய சட்டத்தைத் திருத்தியும், புதிய கொள்கைகளை நிறுவியும், புதிய சட்டங்களை வகுப்பதற்கான பல பரிந்துரைகளை, ரத்தன் டாடாவை இணைத் தலைவராகக் கொண்ட அந்தப் பேரவை செய்துள்ளது. பலவீனமான தொழிலாளர் சட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வசதிகள், பட்ட மேற்படிப்புக்குக் கூடுதலான முனைப்பு, நட்டஈடு கடப்பாடுச் சட்டங்களைத் தளர்த்துவது, சர்ச்சைக்குரிய வழக்குகளை-குறிப்பாக போபால் பேரழிவு போன்ற நிகழ்வுகளை ஒட்டி எழும் வழக்குகளை விரைந்து முடிப்பது ஆகியவற்றைப் பேரவை முன்தள்ளுகிறது. இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் உச்சமட்டத்திலான ஒப்பிசைவு காரணமாக இப்போது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டதாகப் பேரவை மாறியுள்ளது.
இந்தியாவிலுள்ள ஒரே ஒரு தனியார் நகரை டாடாக்கள் சொந்தமாகக் கொண்டு நடத்துகிறார்கள். 1904-ஆம் ஆண்டு ஜாம்சேத்ஜி டாடா நிறுவிய ஜாம்சேத்பூர் என்ற எஃகு நகர், ஒரு நகராட்சியோ, தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு எந்த உள்ளூராட்சியோ இல்லாத ஒரு சில இந்திய நகரங்களில் ஒன்று. ஆறு லட்சம் மக்களைக் கொண்ட அந்த நகரை டாடா எஃகு நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாம்சேத்பூர் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் கம்பெனிதான் நிர்வகிக்கிறது. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் 74-ஆவது திருத்தம், நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதோடு, அம்மாதிரியான உள்ளூராட்சிகளுக்குக் காலக்கிரமப்படி தேர்தல்கள் நடத்துவதற்கான சட்டங்களை இயற்றுமாறு எல்லா மாநிலங்களையும் வேண்டுகிறது. ஆனால், அம்மாதிரி ஜனநாயகபூர்வ உள்ளூராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் டாடாவின் கட்டுப்பாட்டிலுள்ள நகரை மாற்றுவதற்கு டாடா எஃகு நிறுவனம் கடும் எதிர்ப்பைக் காட்டியது. ஒரு ஜனநாயக அமைப்பைவிட டாடா எஃகு நிறுவனம் போன்றதொரு பரோபகார ஆட்சியின் கீழ் அந்நகரம் இருப்பதுதான் அதிகப்படியாக விரும்பத்தக்கது என்றார்கள். “ஒரு நூறாண்டு காலம் வெற்றிகரமாக இருந்துவரும் மாதிரிக்கு மாற்றாக, எவ்வளவுதான் உயர்ந்த நோக்கமுடையதாக இருந்தாலும் இன்னமும் சோதித்தறியப்படாத வேறொரு மாதிரியைக் கொண்டுவர நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்கிறார், டாடா எஃகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பி.முத்துராமன்.
அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக உலகே வெறுத்து ஒதுக்கிய மியன்மார் இராணுவ சர்வாதிகார அரசாங்கம் இந்தியாவில் ஒரு நண்பனைக் கொண்டிருக்கிறது-அவன்தான் டாடா. ஜனநாயக சக்திகளுக்கு வழிவிட வேண்டுமென்று மியன்மார் இராணுவ அரசாங்கத்தை நிர்பந்திக்கும் ஒரு முயற்சியாக, பெப்சி கம்பெனி போன்ற பல பன்னாட்டுத் தொழில்கழகங்கள், அந்நாட்டில் இருந்து வெளியேறிய ஒரு சமயத்தில், அந்த ஒடுக்குமுறை ஆட்சிக்கு கனரக மற்றும் மோட்டார் வாகனங்கள் வழங்குவதாக டாடா மோட்டார் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரவலான பாலியல் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், மியன்மாரின் செழிப்பான இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளில் கட்டாயப்படுத்தித் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகவும், மியன்மார் சர்வாதிகார இராணுவக் கும்பல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கிறது. இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக இராணுவ சர்வாதிகார கும்பலுக்கு எதிராகப் பழங்குடிக் குழுக்கள் கடுமையான வன்முறைப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். (தற்போது விடுவிக்கப்பட்டுள்ள – வினவு) நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி, 1989 முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட இராணுவ பாசிச சர்வாதிகாரக் கும்பலுடன்தான் டாடாக்கள் தொழில் வர்த்தகக் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
பூமியைத் தீக்கிரையாக்கும் தந்திரங்கள்
டாடா எஃகு நகரம் உருவாக்கப்பட்ட இடம், சில வளமிக்க இரும்புக் கனிமங்களின் குவியல்களைப் பெற்றுள்ள, அடர்ந்த காட்டு நிலங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது. அந்த நிலங்களுக்கு முன்போ, இப்போதோ உரிமைப் பட்டா, பத்திரங்களைப் பழங்குடியின மக்கள் பெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் சில கிராமங்களை உள்ளடக்கிய 364 ஏக்கர் நிலங்களை 46.32 கோடி ரூபாய்க்கு டாடா கம்பெனி விலைக்கு வாங்கியது. நோவா முடியில் உள்ள இரும்புக் கனிமச் சுரங்கத்துக்காகவும், ஜாம்சேத்பூர் நகரியம் அமைக்கவும் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய அரசாங்கம் டாடாக்களுக்கு நிலங்களைக் கையளித்தபோது பழங்குடி மக்கள் அகற்றப்பட்டார்கள்.
1907-ஆம் ஆண்டு இரும்புக் கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்காக நோவாமுடி பகுதியை டாடாக்கள் கையகப்படுத்தியபோது, உள்ளூர்ப் பழங்குடி மக்கள் இரும்புச் சுரங்கங்களில் வேலை செய்ய மறுத்தனர். அவர்களை அடக்கித் தம் வழிக்குக் கொண்டு வருவதற்காக குசும்காஜ் (கோசம்) என்ற அரக்கு மரங்களை டாடாக்கள் வெட்டிச் சாத்தார்கள். இந்த மரங்களில் கூடு கட்டும் அரக்குப் புழுக்களிடமிருந்து அரக்கு சேகரிப்பதை பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு, இம்மரங்களைத்தான் நம்பி இருந்தனர். நம்பிக்கை இழந்ததனாலும், வாழ்க்கைத் தேவைகளுக்கு வேறு வழியில்லாமல் போனதாலும் பழங்குடி மக்கள் மேலும் மேலும் அதிகமாக டாடாக்களுக்காக இரும்புக் கனிமங்களைத் தோண்டத் தொடங்கினர். 2000-ஆம் ஆண்டு பூமியைத் தோண்டும் புல்டோசர் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியிலிருந்த ஒரு நீரூற்றை டாடாக்கள் அழித்து விட்டார்கள்; அந்த நீரூற்றுதான் டாடாக்களது நிலக்கரி சுரங்கத்தின் விளிம்பில் உள்ள 22 குடிகளைக் கொண்ட குக்கிராமமான அகாடிய தோலாவின் பழங்குடி மக்களுடைய ஒரே நீராதாரமாக இருந்தது. அவர்களுடைய நீராதாரமாக விளங்கியதோடு, அந்த நீரூற்று அருகிலுள்ள கிராமத்தவர்களுக்கான சமூக உறவாடுதலுக்கான மையமாகவும் இருந்தது.
குரோமிய நச்சு
சுகிந்தா பள்ளத்தாக்கை உச்ச அளவுக்கு மாசுபடுத்தப்பட்ட பகுதியாக அங்குள்ள குரோமைட் சுரங்கங்கள் ஆக்கிவிட்டன என்று இந்திய அரசாங்கத்தின் பொதுத் தணிக்கை அதிகாரி தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறார் என்று ‘டவுன் டு எர்த்’ என்ற பத்திரிக்கை எழுதியுள்ளது. அந்தப் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய அளவுக்கு குரோமைட் வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் ஒன்று டாடா கம்பெனியாகும். அளவுக்கு அதிகமாகக் குவித்து வைத்துள்ள கிடங்குகளில் இருந்து கசியும் ஹெக்சாவேலண்ட் குரோமியம் என்ற நச்சு இரசாயனத்தால், அபாய அளவுக்கு மேல் மாசுபட்ட தோம்சாலா ஆறு மற்றும் 30 ஓடைகள் இப்பள்ளத்தாக்கு வழியாக ஓடுகின்றன. சுவாசக் குழாயில் எரிச்சல், மூக்குக் குழலில் புண், எரிச்சலுடன் தோல் புண், மூச்சுத் திணறல், நிமோனியா காச்சல் ஆகியவை ஹெக்சாவேலண்ட் குரோமியத்தால் ஏற்படுகின்றன. ஒரிசா சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் நார்வே அரசாங்க நிதி உதவியுடன் நடந்த ஆய்வுப்படி அப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் 25 சதவீத மக்கள் இந்த மாசுபடுதலால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் புகலிடத்தில் அமைந்துள்ள சொகுசு விடுதி
1990-களில், கர்நாடகா மாநிலம்-நகராஹோல் தேசியப் பூங்கா மற்றும் புலிகளின் புகலிடம் அமைந்துள்ள பகுதியின் மத்தியில் ‘கேட்வே டஸ்கர் லாட்ஜ்’ என்ற சொகுசு விடுதி கட்டுவதற்காக டாடாவுக்குச் சொந்தமான தாஜ் ஓட்டல்கள் குழுமம் ஒரு பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. ஒரு வனமுகாம் என்ற முன்மொழிதலைக் காட்டி, ஆனால் முழுமையான சுற்றுலா வசதிகள், மின்உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டர் மற்றும் கலந்துரையாடல்களுக்கான அறைகள் ஆகியவற்றுடன் கூடிய ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்காகத் திட்டமிடப்பட்டது. ஒரு தேசியப் பூங்காவிற்குள் எந்த நடவடிக்கைக்கும் மிகவும் கண்டிப்பான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவே இல்லை. இத்திட்டத்துக்குப் பெருமளவு பழங்குடி மக்களின் எதிர்ப்பு மற்றும் அதற்கு எதிரான சட்டமுறைப்பாடு காரணமாக இறுதியில், புலிகளின் புகலிடத்திலிருந்து டாடாக்கள் பின்வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.
குவா படுகொலைகள்
பழங்குடி மக்களுக்கு எதிரான அரசு வன்முறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவின் சுரங்கத் தொழில் மாவட்டங்களில் சர்வசாதாரணமானது. நோவாமுடியில் டாடாவின் விமான நிலையம் ஒன்றுக்கு இடமளிப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1980 செப்டம்பர் 7 அன்று, நிலத்தைப் பறி கொடுத்த கிராமத்தவர்கள், டாடா எஃகு நிறுவனத் தலைவர் ரூசி மோடியை எதிர் கொண்டு மனு அளிப்பதற்காக விமான நிலையத்துக்குப் போனார்கள். கும்பலைப் பார்த்ததும், மோடியினுடைய விமானம் அங்கே தரையிறங்காமல் ஜாம்சேத்பூருக்குத் திரும்பியது. இவையெல்லாம் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த, பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியைத் தனிப் பழங்குடி மாநிலமாக்குவதற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நடந்தது. பழங்குடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசாங்கத்தை டாடாக்களும் பிற சுயநலக் கும்பல்களும் நிர்பந்தப்படுத்தின. செப்டம்பர் எட்டாம் நாளே அவ்வாறான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; பழங்குடியினரின் கொந்தளிப்பை அடக்குவதற்காக குவா நகரின் சந்தையில் வைத்து அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; தொடர்ந்து மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நிராயுதபாணிகளான எட்டுப் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
கலிங்காநகர் படுகொலை
2006, ஜனவரி 2 அன்று, ஒரிசா மாநிலம் கலிங்கா நகரில், கொடூரமாக ஆயுதமேந்திய ஒரு போலீசுப் படை பழங்குடி கிராம மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பன்னெடுங்காலமாக பழங்குடியினருக்குச் சொந்தமான நிலத்தில் டாடா எஃகு நிறுவனம் சட்டவிரோதமாக சுற்றுச்சுவர் கட்டியதற்கு எதிராகப் பழங்குடி மக்கள் கண்டனப் போராட்டம் நடத்தியபோது தான் இது நடந்தது. டாடா எஃகு நிறுவனம் அங்கு வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அந்தப் படுகொலைக்கு முன்புதான் டாடா எஃகு நிறுவன நிர்வாகத்தினர் மூன்றுமுறை ஒரிசா முதலமைச்சரைச் சந்தித்தனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என்று சிதைக்கப்பட்ட எட்டு உடல்கள் போலீசாரால் பிரேதப் பரிசோதனைக்கு தரப்பட்டன. இறந்து போயிருந்த ஒரு பெண்ணின் மார்பு அறுத்தெறியப்பட்டிருந்தது; துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு சிறுவனின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. எல்லா உடல்களிலும் இருந்து உள்ளங்கைகள் வெட்டி வீசப்பட்டிருந்தன. “இச்சம்பவம் தீவினைப்பயனானது (துரதிருஷ்டவசமானது)” என்று சொன்ன டாடா, “எதிர்ப்பிருந்தபோதும் அதே இடத்தில் திட்டமிட்டபடி ஒரு எஃகு ஆலை நிறுவுவது தொடரும்” என்று அறிவித்தார்.
சிங்கூர் ஒடுக்குமுறை
2006-ஆம் ஆண்டு டாடாவுக்கு ஒரு பெரும் கொடை கிட்டியது. கொல்கத்தாவுக்கு அருகாமையில் உள்ள சிங்கூரில் 900 ஏக்கர் வளமான பூமி மேற்கு வங்க அரசாங்கத்தால் டாடா மோட்டார் நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது. அங்கே லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் என்ற அறிவிப்புடன் கார் உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதுதான் திட்டம். கட்டாயமாக நிலங்களைப் பறித்து, அவற்றை டாடாவுக்குக் கையளிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். டாடாக்கள் தார்க்குச்சி போட்டதால், மேற்கு வங்க அரசாங்கம் சிங்கூர் விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தது; ஒரு காலத்தில் அமைதி தவழ்ந்த சிங்கூர் கிராமம் போர்க்களமாக மாற்றப்பட்டது; டாடா மோட்டார் நிறுவன இடத்தையும் அதன் ஊழியர்களையும் பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. (தொடரும்)
![]()
புதிய ஜனநாயகம்
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2010 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
