பணமதிப்பழிப்பின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை! நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு.
இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி, திருப்பூர் வட்டாரம், வணிகர் சங்கங்கள் என மாநிலமெங்கும் வரியை எதிர்த்து போராட்டங்கள்!
ரயில்வே தனியார்மயத்தின் தொடக்கமாக ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. லாபத்தில் இயங்கும் ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்படுகிறது. திறன் நகரங்களுக்கான திட்டப்படி நகராட்சிகளின் நடவடிக்கைகள் தனியார்மயமாக்கப்பட்டு பங்குச் சந்தையில் சேர்க்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட 1925-ம் வருடத்தின் நூற்றாண்டுக்குள் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்டிரம்’ ஆக்க விரும்புகிறதாம் பார்ப்பன பாசிசக் கும்பல். ராஜஸ்தானில் மாடு வாங்கச் சென்ற தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் இந்துமதவெறியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பசுவின் பெயரால் கொலை செய்வதைக் கண்டிப்பதைப் போல மோடி நடித்து முடிப்பதற்குள் ஜார்க்கண்டில் மாட்டின் பெயரால் ஒரு கொலை நடக்கிறது.
இந்தித் திணிப்பு, பாடத்திட்டங்கள் இந்துமயமாக்கம், நீட் தேர்வு என கல்வித் துறையிலும் பா.ஜ.கவின் நிகழ்ச்சி நிரல்கள் அதிவேகமாக அமலாகின்றன. உ.பியில் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கத்தில் தலித்துக்களும், முசுலீம்களும் அன்றாடம் தாக்கப்படுகின்றனர். மோடியின் குஜராத் டீக்கடை வரலாகிறது. தமிழகத்தின் கீழடி ஆய்வு குப்பைக் கூடைக்குள் எறியப்படுகிறது.
அனைத்தும் பார்ப்பனமயம், பன்னாட்டு நிறுவனமயம் என்று மாறி வரும் இந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்த சிறு வெளியீடு.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
மோடி அரசின் தாக்குதல்கள் ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
சுற்றுலா வளர்ச்சி ; காதில் பூ சுற்றும் மோடி அரசு
யோகி ஆதித்யநாத் சொகுசுப் பேர்வழியின் எளிமை நாடகம்
ரஜினியின் காலா, பி.ஜே.பி.யின் வால்தான் – ஆதாரம்
ஸ்மார்ட் சிட்டி : பாஜக-வின் புது அக்கிரகாரங்கள்
மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி!
பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர்
ஆதித்யநாத்திற்கு கருப்புக்கொடி காட்டியதுபயங்கரவாதமாம் – என்னடா நாடு இது?
துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் -SBI அறிக்கை
தமிழக அதிகாரிகளை உதைத்த ராஜஸ்தான் RSS ரவுடிகள்
பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம்!
மலம் கழிப்போரை “ஃபோட்டோ எடுக்கும் வக்கிரம் பிடித்த பாஜக அரசு
மகிழ்ச்சித் துறைக்கு ஒரு மந்திரியாம் ம.பி. – பா.ஜ.க. அரசின் கேலிக்கூத்து
ஜனாதிபதி வேட்பாளர் கோவிந்துவின் தலித் விரோதம் – ஆதாரங்கள்
எண்ணுர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும்மோடி அரசு
ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது இராஜஸ்தானில் கட்டாயம்
பங்குச் சந்தையில் திறன் நகரங்கள் : நகராட்சிகளும் இனி தனியார்மயம்
பாஜக ஆட்சியில் கொலைகள் – குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?
சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை
மத்தியப் பிரதேசம் : பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை
தில்லி முதல் குமரி வரை ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து தீவிரமாகும் போராட்டங்கள்
மோடி டீக்கடை வரலாறு என்றால் கீழடி ஆய்வு என்ன குப்பையா?
ஆதித்யநாத்தின் விவசாயக் கடன் தள்ளுபடி – ஒரு ஏமாற்றுத் தந்திரம்!
குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின்
EPW ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி-அதானி கூட்டணி
கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ் வங்கி
கேரளா : மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு அணுகவேண்டிய தரகன் பாஜக
அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடைபோடும் மத்திய அரசு
கறி போடுவதால்தான் ஏர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா?
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
“விவசாயியை வாழவிடு !” மக்கள் அதிகாரம் சார்பில் ஆகஸ்ட் 5, 2017 அன்று நடைபெற்ற மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரை.
இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள், ”நீங்கள் மாநாடு நடத்துங்கள் நாங்கள் ஆதரவு தருகிறோம் , அடுத்தது என்ன செய்ய வேண்டுமெனக் கூறுங்கள், ” எனஆதரவளித்தனர். கடந்த மூன்று மாத காலமாக தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்துள்ளோம். ஒரு பிரசுரம் கூட மக்களால் கீழே போடப்படவில்லை.
இந்தக் கூட்டத்திற்கு “விவசாயியை வாழ விடு” என நாம் அறைகூவல் விடுத்ததால் மக்கள் வரவில்லை. மாறாக, அரசு தான் ”விவசாயியை வாழவிட மாட்டோம்” என்று கூறி இந்த மக்கள் இங்கு திரள்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.
”குடிக்கத் தண்ணி இல்லன்னு போராடினதுக்காக பேராசிரியர் ஜெயராமன் மீது கேசு போடுகிறீர்களே, இது நியாயமா?” என்று மக்கள் கேட்கிறார்கள், எதிரிகளால் பதில் சொல்ல திராணி இல்லை. ஆகையால் போலிசை வைத்து மக்களை அச்சுறுத்தப் பார்க்கிறது அரசு. ஆனால் மக்கள் பயப்படுவதில்லை. போலீசும், மோடியும், எடப்பாடியும் பயப்படுகிறார்கள். அதனால் தான் ஒரு பிரசுரம் கொடுத்ததற்காக வளர்மதி என்ற மாணவி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். அதே போல, இந்த மாநாடு நடைபெறக் கூடாது என்று பயப்படுகிறார்கள். நாம் இங்கு மாநாடு நடத்துகிறோம். போட்டிக்கு, போலீசு செந்தமிழன் சீமானை வைத்து கும்பகோணத்தில் உழவர் மாநாடு, கருத்தரங்கம், பேரணி நடத்துகிறது.
சீமான், கமல், தனுஷ் , விசால் என யார் வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் என்ன பேசுகிறார்கள்? எடப்பாடியிடம் கோரிக்கை, மோடியிடம் கோரிக்கை, கடைசியாக தன்னை முதல்வராக்க மக்களிடம் கோரிக்கை. இதே சிஸ்டத்திற்குள் இருந்து தான் தீர்வு காணக் கூறுகிறார்கள். இந்த சிஸ்டமே டயர் வெடித்த பேருந்து போல உபயோகமற்று நிற்கிறது. அதில் இனி யாரும் பயணம் செய்ய முடியாது. ”என்னை ஓட்டுனராக்குங்கள். நான் ஓட்டிக் காட்டுகிறேன்” என்கிறார்கள் இவர்கள்.
எங்களால் அப்படி வெறும் வாய்ச்சவடால் அடித்து விட்டுப் போய்விட முடியாது. யார் எதிரி யார் நண்பன், யாரிடம் கோரிக்கை வைக்க முடியும் என்பதை நாங்கள் மக்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். டாஸ்மாக் கடைகளை மூட மக்கள் எத்தனை வழக்குகள், தடியடிகளை சந்தித்தார்கள்? யார் தாலி அறுந்தாலும் டாஸ்மாக் நடத்தியே தீருவேன் என்று அரசு, நிற்கிறது. போலீசு அதன் அடியாளாகவே இருக்கிறது.
தொழிற்சாலையில் புதிய இயந்திரங்களை புகுத்தி, ஆட்குறைப்பு செய்கிறார்கள். அதே போல் விவசாயத்தில் தற்போதைய உற்பத்திக்கு, இவ்வளவு ஆட்கள் தேவை இல்லை எனக் கூறி, விவசாயிகளை வெளியேற்றுகிறான். 1990 -களில் காட் ஒப்பந்தம் போடப்படும் போதே 40 கோடி பேரை விவசாயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என வெளிப்படையாகச் சொல்கிறது. இன்று விளை பொருளுக்கு உரிய விலை கிடையாது, கடன் சுமை என எல்லா வகையிலும் விவசாயியை நெருக்கி தள்ளுகிறது இந்த அரசு.
மோடி அரசு விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்கிறது. மோடி எதை சொன்னாலும் நாம் நம்பக்கூடாது. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதைப் போல மோடிப் புளுகு என்ற சொற்றொடரை இனி நாம் வைத்துக் கொள்ளலாம். மோடி, விவசாயிக்கு வேலை கொடுக்க வேண்டாம், விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டாம். ஆனால் நெடுவாசல், கதிராமங்கலம் திட்டத்தையாவது நிறுத்தலாமே.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி என்று அடுத்தடுத்த தாக்குதலைகளை நம் மீது தொடுக்கிறது மோடி அரசு. எல்லாவற்றிற்கும் வரிக்கு மேல் வரி போட்டு மக்களைக் கொல்லுகிறார் மோடி. மக்கள் வாழ்வதற்கு வழி கிடையாது. ஆனால் அவர்களிடம் பிடுங்குவதற்கு மட்டும் இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?
எல்லாம் தனியார்மயம். கார்ப்பரேட்மயம் ஆன பிறகு நாம் தனித்தனியாக போராடுகிறோம். விசயங்களை நாம் இணைத்துப் பார்ப்பதில்லை. மோடியின் எடுபிடி எடப்பாடியிடம் போய் நாம் கோரிக்கை வைக்கலாமா? எத்தனை வகைப் போராட்டம் நடத்தினாலும் மக்கள் சாகட்டும் என அமைதி காக்கிறது அரசு. இவருக்கு நம்மை ஆள என்ன தகுதி இருக்கிறது?
தண்ணீர், பள்ளிக்கூடம், மருத்துவம், உணவு உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கி நம்மைக் கார்ப்பரேட்டுகளிடம் பணிய வைக்க நினைக்கிறது மோடி அரசு. நமது தண்ணீரை எடுத்து நமக்கே லிட்டர் 22 ரூபாய்க்கு கார்ப்பரேட் விற்கிறான். இவன் கையில் அரிசி சென்றால் நம் கதி என்ன? இவர்களால் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய முடியுமா? மன்னனோ, அரசோ விவசாயத்தை உருவாக்கவில்லை. விவசாயம் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சி. அதனை அழிக்கப் பார்க்கிறது மோடி அரசு.
காலனியாட்சிக் காலத்தில் இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுயிக், தனது வீடு, வாசல், சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார். இன்று, ஐந்து மாவட்ட விவசாயிகள் அந்த அணையால் பயன்பெறுகிறார்கள். நம்மிடம் வரி பிடுங்கும் இந்த அரசு விவசாயிகளுக்காக என்ன செய்துள்ளது?
கடந்த 5 வருடங்களாக காவிரி வரவில்லை. 20 ஆண்டுகாலமாக இவர்களால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியவில்லை. வருடா வருடம் விவசாயிகள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். வழக்கு நடைபெறுகிறது. இது என்ன கிரிமினல் வழக்கா? மேல்முறையீடு செய்து பின்னர் விசாரிப்பதற்கு? இது விவசாயிகளின் உரிமை சம்மந்தப்பட்ட பிரச்சனை. இதனை பற்றி யாரும் டீவியிலோ வேறெங்குமோ பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மாறாக யார் முதல்வர், யார் பொதுச்செயலாளர் என்ற பிரச்னையை தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் தினந்தோறும் இதே கூத்து தான் நடக்கிறது.
தனியார் மயம் வேலை வாய்ப்பைப் பெருக்கும் என்று கூறினார்கள், இன்று பி.எஹ்ச்டி. (முனைவர் பட்டம்) படித்தவன் டாஸ்மாக்கில் சரக்கு ஊற்றிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான். இது தான் இவர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு.
மண்ணோடு உறவாடும் விவசாயி மண்ணாகவே இருக்கிறான். மழை, வெயில், விலை பொருளுக்கு விலை இல்லை என்று எதனால் நஷ்டமடைந்தாலும் அரசு ஏதாவது தராதா என்று எதிர்பார்த்து விட்டுப் போய் விடுகிறார்கள். விவசாயிகள் கொஞ்சம் முன்முயற்சி எடுக்க வேண்டும், எதிர்த்துப் போராட வேண்டும். நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் முன்முயற்சி செய்தார்கள். இன்றைக்கு தமிழகமே அவர்களுக்கு அதரவு தருகிறது.
கடன் தள்ளுபடி செய்யச் சொல்லிப் போராடும் விவசாயிகளை சொந்தக் காலில் நிற்க சொல்கிறது இந்த அரசு. அதனை முதலாளிகளிடம் சொல்வது தானே? அரசு விவசாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை கைவிட்டு விட்டது. விவசாயத்தை முன்னேற்ற அதனிடம் எதாவது திட்டம் உள்ளதா? அரசைப் பொறுத்தவரையில் நாம் அனைவரும் குடிமக்கள் இல்லை. நுகர்வோர். எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்கும் ஒரு நுகர்வோர். மொழி, உரிமை, பண்பாடு என எதுவும் பேசாதே என்பது தான் அரசின் கொள்கை.
ஒ.பி.எஸ். முதல் எடப்பாடி வரை அனைவரும் ஏரியா ரவுடி போல் அரசியலில் உருவாகி விட்டனர். இவர்களுக்குள் இருக்கும் போட்டியே பாஜக காலை நக்கிப் பிழைப்பதில் தான் இருக்கிறது. மக்களும் இவர்களுக்கு மாற்று, இன்னொரு மாற்று என தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னை முதல்வராக்கினால் பிரச்னையை தீர்ப்பேன் என வாய்ச்சவடால் அடிக்கிறவன், எப்படித் தீர்ப்பேன் எனச் சொல்ல வேண்டுமல்லவா ? இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள் ?
சரி உடனடிப் பிரச்சினைக்கு வருவோம். கடன் தள்ளுபடி இப்போது அவசியம். கந்துவட்டி முதல், மைக்ரோ பைனான்ஸ் வரை எல்லாக் கடன்களையும் கட்ட மறுப்போம். தஞ்சாவூர் மாநாட்டில் சொல்லிவிட்டார்கள் என கடன்களை நாமே தள்ளுபடி செய்து கொள்ளுவோம். கட்ட முடியாது என்றால் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம். கந்து வட்டிக்காரனோ, மைக்ரோ ஃபைனான்ஸ் காரனோ, வங்கிக் காரனோ யாராவது ஒருவர் வீட்டில் வந்து கடனைக் கேட்டு அவமானப்படுத்தினால் அனைவரும் ஒன்று கூடுங்கள்.
மக்கள் அதிகாரம் கூட்டம் நடத்துவதற்குப் போலீசு ஏன் பயப்படுகிறது? மக்கள் அதிகாரம் தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகளை உடைக்கவில்லை. ஆனால் மக்களுக்கு அறைகூவல் விட்டது,. “ குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே.. தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே .. மூடு கடையை.. எவன் வருவான் பார்ப்போம்.. “ என்றோம். மக்கள் அதன் பின்னர் ஒவ்வொரு போராட்டத்திலும் கையில் கடப்பாறைகளோடு புறப்பட்டனர். தமிழகமே போர்க்கோலம் பூண்டது.
நீதிமன்றத்தில் இந்த மாநாடு நடத்த விடாமல் தடுப்பதற்கு பல வித காரணங்களைச் சொன்னது போலீசு. நாம் தஞ்சையில் மாநாடு நடத்துவது அவர்களுக்குப் பயத்தை அளிக்கிறது. கதிராமங்கலத்தில் இருந்தும் நெடுவாசலில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என அஞ்சி நடுங்குகிறது. அதனால் தான் கும்பகோணத்தில் சீமானை வைத்து விவசாயிகள் மாநாடு ஒன்றை நடத்துகிறது. அதனால் தான் மாநாட்டிற்கு வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது.
ஒரு நோட்டீசு கொடுத்ததற்கு கைது செய்கிறது. ஆர்.கே.நகரில் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்த வழக்கில் ’ஏ1’ எடப்பாடி தான். அவரை ஏன் கைது செய்யவில்லை ? சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கில் மாட்டிய, மெத்தப்படித்த IPS உயரதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை ? சகாயம், ரஜினி, கமல், சீமான் என எல்லாரும் சொல்கிறார்கள் சிஸ்டம் சரியில்லை என்று. ஆனால் இவர்கள் தங்களை இந்த சிஸ்டத்திற்குள்ளேயே அங்கீகரிக்கச் சொல்லுகிறார்கள். சரியில்லாத இந்த சிஸ்டத்திற்குள்ளேயே எப்படித் தீர்வு காண முடியும் ?
சேலம் இரயிலில் 5 கோடி பணம் கொள்ளை போனதற்குப் போலீசின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. SVS கல்லூரி மோசடிக்கு உடந்தையாக இருந்த துணைவேந்தர் சீதாலட்சுமிக்கு பி.சி.ராய் விருது வழங்கியிருக்கிறார்கள். புதுச்சேரியில் தெய்வசிகாமணி என்றொரு எஸ்.பி., கூலிப்படைகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள அவருக்கு ஜனாதிபதி விருது கொடுக்கிறான். கோவை ஹவாலா பணத்தைப் போலீசே கடத்தியது வரை எல்லாம் இந்த அதிகாரவர்க்க கும்பல் தான் செய்கிறது. இவர்களால் எப்படி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தர முடியும்?
மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் அரசு, மக்களை வேட்டையாடுவதிலேயே குறியாக இருக்கிறது. ஊருக்குள் புகுந்த வெறிபிடித்த மிருகத்தை இடைவெளி கொடுக்காமல், சுற்றி வளைத்து நின்று அடிப்பது போல் இந்த வெறி பிடித்த அரசின், ஓ.என்.ஜி.சி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய பல்வேறு வடிவங்களில் வரும் கார்ப்பரேட் மயம் என்னும் மிருகத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடித்துக் கொல்ல வேண்டும்.
நாம் மக்கள் சக்தியை ஆக்கப் பூர்வமாக பார்க்கிறோம். விவசாயிகளை இச்சமூகத்தின் மூத்த குடிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அரசோ விவசாயிகளை ’செத்து ஒழி’ என்கிறது. விவசாயம் ஒழிந்தால், அதனைச் சார்ந்து உள்ள சிறு தொழில்களும் அதனை நம்பியுள்ள கோடிக்கணக்கான சிறு தொழில் வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். ஆக மாணவர்களும், சிறு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒன்றிணைந்து போராடும் போது தான் தீர்வு கிடைக்கும். இது ஒரு நாளில் தீரக்கூடிய பிரச்சினை அல்ல. அதனால் தான் “விவசாயியை வாழவிடு” என மக்கள் அதிகாரம் ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. மக்களாகிய நீங்கள் தலைமை தாங்குங்கள். உங்கள் பின்னே நாங்கள் அணிதிரள்கிறோம்.
ஜெயராமனை சிறையில் அடைத்துப் பிணை வழங்காமல் இருக்கும் நீதிமன்றத்தின் முன் நின்று போராட வேண்டும். ’வாழவிடு’ என நீதிமன்றம் முதல் ஆட்சியாளர்களின் வீடு வாசல் வரை அவர்களைத் தூங்கவிடாமல் செய்ய வேண்டும். இனி அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. போராடித் தான் ஆக வேண்டும். ஏனெனில் அறிவிக்கப்படாத ஒரு உள்நாட்டுப் போரை நம் மீது பாஜக-கார்ப்பரேட் அரசு தொடுத்துள்ளது. இந்த மிருகத்தை நாம் அனைவரும் இணைந்து அடித்து விரட்ட வேண்டும் ! விரட்டுவோம் !!
மக்கள் அதிகாரம் தமிழகத்திற்கு ஒரு கலங்கரை விளக்காக மாறும். நெடுவாசல், கதிராமங்கலம் தொடங்கி வரவிருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் வரை, ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க அரசை அனுமதிக்க முடியாது என அரணாக நாம் அனைவரும் நிற்கவேண்டும். மக்கள் அதிகாரம் என்ற இந்த அரசியல், இந்த அமைப்பு தமிழகத்தில் தலைமை தாங்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் . அதற்கான தொடக்கமாக இந்த மாநாடு அமையும் !!
– வினவு செய்தியாளர்கள்
_____________
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி !
ஆதார் எண் இல்லாவிட்டால் எனக்குமரணசர்டிஃபிகேட்தரமுடியாது என்றுசொல்லிவிட்டார்கள்.
நான் சரியாக
இன்று மாலை ஆறு மணிக்கு
இறக்கவிருப்பதாக முடிவெடுத்து
அனைவருக்கும் சொல்லி அனுப்பி விட்டேன்.
கடைசி நேரத்தில் வழிமறித்து
ஒரு எண்ணைக் கேட்டு
நிர்பந்திக்கிறார்கள்.
என்னிடம் இறப்பதற்கு
போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன
சாதிச்சான்றிதழ் இருக்கிறது
மதச் சான்றிதழ் இருக்கிறது
ரேஷன் கார்டு இருக்கிறது
கல்விச் சான்றிதழ் இருக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது
நான் பிறந்திருப்பதாலேயே இறக்க நேர்கிறது
என்பதையாவது
அரசரே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது
நான் இன்று இறந்து விடுவேன் என்று
என் நண்பர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை
நான் நிறைவேற்றியே தீரவேண்டும்.
அரசரே
உங்கள் அக்கறை எனக்குப் புரிகிறது
நான் சொர்கத்திற்கு போவதாக இருந்தாலும் சரி
நரகத்திற்குப் போவதாக இருந்தாலும் சரி
அங்கே என் ஆதார் எண்ணைக் கேட்பார்கள்
என்பதற்காகத் தானே நீங்கள் அவசரப்படுகிறீர்கள்
நான் எங்கும் போகாமல்
இங்கேயே ஆவியாக சுற்றித் திரிந்தாலும்
ஆதார் எண் தேவை என்பதை
எனக்கு நீங்கள் புரிய வைக்கிறீர்கள்.
ஒரு மனிதன் இறந்து விடுகிறான்
அரசரே நீங்கள் அவனிடம் வருகிறீர்கள்
அவனது விழித்திரையை
திறந்து பார்க்கிறீர்கள்
அதை படம் எடுத்துக் கொள்கிறீர்கள்
பிறகு அந்த பிரேதத்தை படம் எடுக்கிறீர்கள்
பிறகு அந்தப் பிரேதத்தின் படத்தை ஒட்டிய
ஒரு ஆதார் அட்டையை
அதன் கையில் திணிக்கிறீர்கள்
இந்தக் காட்சி பயங்கரமாக இருக்கிறது
நீங்கள் பிணங்களிடமிருந்து திருடுகிறவர்களை போல
ஏன் நடந்து கொள்கிறீர்கள்?
அல்லது பிணங்களிடமிருந்து திருடும் பழக்கத்தை
ஏன் உங்களால் கைவிட முடியவில்லை?
அரசரே
ஆதார் எண் இல்லாமல்
என்னைச் சாக அனுமதியுங்கள்
சாவுக்கு பிறகு எனக்கு நிறைய
ரகசியத் திட்டங்கள் இருக்கின்றன
நான் ஒரு பூனைக்குட்டியாக பிறந்து
என் காதலிகளைத் தேடி செல்லவிருக்கிறேன்
ஒரு கழுகாக பிறந்து
உங்கள் தலைக்கு மேல் பறக்க விரும்புகிறேன்
கடவுள் எனக்கு இழைத்த அநீதிக்காக
அவரை வீடு தேடிச் சென்று பழி தீர்க்க திட்டமிட்டிருக்கிறேன்
நீங்கள் என்னை ஆதாரில் இணைத்துவிட்டால்
சாவுக்குப் பின் நான் செய்யக்கூடிய
அனைத்தும் கண்காணிக்கலாம் என்பது தானே
உங்கள் திட்டம்
அரசரே
சாவு என்பது அந்தரங்கமானது
சாவு என்பது அதிகாரத்திலிருந்து விடுபடுவது
சாவு என்பது தண்டனைகளை புறக்கணிப்பது
சாவு என்பது சட்டங்களுக்கு வெளியே இருப்பது
சாவு என்பது ஒழுங்குகளை கடைபிடிக்காதது
சாவு என்பது பூர்வீக நிலைகளுக்கு திரும்புவது
சாவு என்பது அரசர்கள் இல்லாத ஒரு தீவில் தனித்திருப்பது
அரசரே
நேற்று நீங்கள் என்னை
வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்
மனது வைய்யுங்கள்
எனக்கு இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது
இந்திய அரசியலில் மக்களால் அதிகம் கேலி செய்யப்பட்ட வாக்குறுதி, திருவாளர் மோடியின்“உங்கள் வங்கிக் கணக்கில் கருப்புப் பணத்தை போடுவேன்” என்பதுதான். அதன் பிறகு இந்தா, அந்தா என பந்தாவாக மாதம் ஒரு அறிவிப்பு வரும். அதாவது கருப்புப்பணத்தை மீட்க ராணுவம் தயாராகி விட்டது, ஒப்பந்தம் ரெடி, மோடி சிண்டைப் பிடித்து விட்டார் என்று எதாவது ஒன்றை அடித்து விடுவார்கள்.
பனாமா லீக்ஸ் ஊழல் வந்த போது அதானி முதல் அமிதாப் வரை பலர் சிக்கினாலும் அனைவரும் இன்று வரை பாதுகாப்பாகவே உள்ளனர். ஜனநாயகம் முதிராத நாடு என்று இந்திய ஊடகங்களால் இகழப்படும் பாக்கிலேயே நவாஸ் ஷெரிஃப் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இங்கோ மோடியின் பணமதிப்பழிப்பு காலத்திலேயே பண மழை பொழிந்து திருமணம் நடத்திய கர்நாடக ரெட்டி சகோதரர்கள் மீது ஒரு துரும்பு கூட படவில்லை.
இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. ஜூன் மாதம் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி இனிமேல் சட்டவிரோதமாக கருப்பு பணத்தை போடும் இந்தியர்கள் குறித்த தகவலை சுவிஸ் அரசு இந்திய அரசுக்கு தெரிவிக்குமாம்.
இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுடன் சுவிஸ் அரசு இனிமேல் “தானியங்கி தகவல் பரிமாற்ற வசதியை” அறிவித்திருக்கிறதாம். இதன்படி இந்தியாவில் இருந்து ஒருவர் அங்கே பணம் முதலீடு செய்தால் நம் நாட்டிற்கு தானாகவே அந்த தகவல் வந்துவிடுமாம். இந்த புதிய வசதி 2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2019 ம் ஆண்டில் முதல் தகவல் கிடைக்குமாம்.
ஏற்கனவே கருப்புபணம் என்பது சட்டபூர்வமாக பார்ட்சிபேட்ரி நோட்டாக உள்ளே வருகிறது. பனாமா போன்ற நாடுகளில் சட்டப் பூர்வ முதலீடாக உலகெங்கும் பறக்கிறது. இப்படி கொள்ளையே நவீனமாக மாறி வரும் நிலையில் இனி 2019 முதல் சுவிஸ் அரசின் தகவல் அளிப்பால் யாருக்கு பயன்?
இந்த அறிவிப்பு வந்த பிறகு எவன் அங்கே கருப்பாக போடுவான்? இருப்பினும் புதிய 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் கோடு இருப்பதால் கருப்பு எங்கே போகிறது என்று ரூட் போட்டு மோடி பிடிப்பார் என்று சில அறிஞர் பெருமக்கள் நம்பத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய ஜனநாயக உரிமையை மதித்து சுவிஸ் அரசு அறிவிப்பு குறித்து இன்றைய கருத்துக் கணிப்பு! வாக்களியுங்கள்!
சுவிஸ் அரசின் அறிவிப்பால் என்ன நடக்கும் ?
கருப்புப் பணத்தை மோடி மீட்பார்.
இந்திய மக்களுக்கு கருப்புப் பணம் கிடைக்காது.
கருப்பு பண மீட்பில் ஏதோ கொஞ்சம் முன்னேற்றம்.
________________
இந்தக் கருத்துக் கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்து வரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டுவதையே ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெள்ளை நிற அட்டை, பச்சை நிற அட்டை என ரேசன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் படிப்படியாக ஒழித்துக்கட்டப்பட்டது. மானிய விலையில் அடிப்படை உணவுப் பொருட்களைப் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்சிங் அரசு.
இதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 29/- க்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் ரூ.23/-க்கு அதிகமாகவும் வருமானம் உள்ள அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்டக் கமிசன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொது விநியோக முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது அன்றைய மன்மோகன்சிங் அரசு.
இதன்படி நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 30/-க்கு அதிகமாக வருமானம் உள்ள ‘பெரும் பணக்காரர்களுக்கு’ ரேசன் மானியத்தை இரத்து செய்தது மன்மோகன் சிங் அரசு. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் ரேஷன் கடைகளை இழுத்து மூடுவது தான் என்பதை இச்சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்தே ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல்ரீதியில் ஆளும்கட்சி தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்பதையும், ரேஷன் கடைகளை இழுத்து மூடினால், அடுத்த தேர்தலில் தமது கட்சிக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது என்பதையும் அன்றைய ஜெயலலிதா அரசு அறிந்திருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” தமிழகத்தின் பொது விநியோக முறைக்கு எதிராக உள்ளதென குறிப்பிட்டு அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மறுத்து வந்தது தமிழக அரசு. அதன் தொடர்ச்சியாக, மாதந்தோறும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வரும் அரிசி ஒதுக்கீட்டில் சுமார் 1.26 இலட்சம் டன் அரிசி, சந்தை விலையான ரூ.22.53-க்கு மட்டுமே இனி தரப்படும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தது மோடி அரசு. இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா அரிசி வழங்குவதற்கான மானிய நிதிச்சுமை அதிகரித்தது.
தற்பொழுது தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே மூன்று இலட்சம் குடும்ப அட்டைகளுள் ஒரு கோடியே தொண்ணுத்தொரு இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. அதிலும் கூட பல்வேறு பொருட்கள் அறிவிக்கப்படாமலேயே இரத்து செய்யப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மலிவு விலையில் உளுந்தம் பருப்பு வழங்குவது முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முதல் வாரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளது. 10ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பெரும்பான்மையான பொருட்கள் கிடைக்காத நிலை தான் தற்போது உள்ளது. எனினும் பெயரளவிற்காவது இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில்” சேர்ந்து விட்டதால், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத வருமானம் ரூ.8,334 -க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உட்பட எந்த பொருட்களும் வழங்க முடியாது எனப் பெரும்பான்மை தமிழக மக்களின் தலையில் கல்லைத் தூக்கி போட்டுள்ளது எடப்பாடி அரசு.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் பெற முடியாது. தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள், பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும். அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இவ்வுத்தரவின் படி, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இனி ரேசன் பொருட்கள் கிடையாது. தமிழகத்தில் நன்செய், புன்செய் நிலம் என்ற அடிப்படையில் பயிரிடப்படுகிறது. புன்செய் நிலத்தில் மழை பெய்யும் போது செய்யப்டும்“மானாவரி” விதைப்பு தான் நடக்கும். இதற்காக வாங்கப்பட்ட கடன்களைக் கூட அடைக்க முடியாத அவலநிலையில் தான் விவசாயிகள் உள்ளனர். இதில் ஒரு விவசாயி எந்த அளவிற்கு நட்டமடைகிறார் என்று சமீபகாலமாக தற்கொலைக்குள்ளாகும் தமிழக விவசாயிகளே சாட்சி. இவர்களில் பெரும்பான்மையானோர் ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் தான். ஆக, வறட்சி உள்ள காலங்களில் இதுவரை விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த அரை வயிற்று ரேசன் அரிசிக் கஞ்சியையும் இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தடுத்து விடும்.
அதோடு, உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதும், இந்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் பெரும்பான்மை விவசாயிகள் பாதிக்கப்படுவர். நாட்டில் 70% பேர் நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாயை மட்டும் கூலியாகப் பெறும் நிலையில் இத்திட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பட்டினிச் சாவை நோக்கியே தள்ளும்.
மாநிலத்தின் வரி வருவாய் மூலம், இதுவரை விலையில்லா அரிசியை வழங்கி வந்த தமிழக அரசு, தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் தனது சொந்த வரி வருவாயையும் இழந்துள்ளது. இச்சூழலில் தான் ”தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், அனைவருக்குமான பொது விநியோக முறையும், விலையில்லா அரிசித் திட்டமும் தொடரும்” என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வாய்க்கூசாமல் பேசுகிறார்.
அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை எனக் கூறி இத்தகைய நடவடிக்கைகளை வளரும் நாடுகள் கைவிட வேண்டும் என உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன.
அதனை அட்சரம் பிசகாமல் நடைமுறைப்படுத்தி வருகிறார் மோடி! மோடியின் ஏகாதிபத்திய – கார்ப்பரேட் விருந்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது அடிமைகளின் கூடாரமான எடப்பாடி அரசு!! இனியும் பொறுத்துக் கொள்ளப் போகிறோமா ? என்பதே நம் முன் உள்ள கேள்வி!!!
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
தமிழ் சினிமாவில் அடிப்படைத் தொழிலாளிகளுக்கான ஒரே அமைப்பு “தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்”. சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற “பில்லா பாண்டி” படப்பிடிப்பில் பயணப்படி கேட்டு தொழிலாளிகள் போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர் தரப்பில் பயணப்படியை உயர்த்துவதற்கு மறுத்து விட்டதால் பெப்சி தொழிலாளிகள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் நடிகர் விஷால் தலைமையில் நடந்தது. இதில் வேலை நிறுத்தம் செய்யும் பெப்சி தொழிலாளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு வேறு தொழிலாளிகளை வைத்து படப்பிடிப்புகளை நடத்துவோம் எனத் தயாரிப்பாளர்கள் மிரட்டினார்கள்.
தொழிலாளர் சங்கமாக இருந்தாலும் இன்னமும் ஒரு தொழிலாளியின் சுயமரியாதையை வைத்திராத சங்கமாக இருக்கும் பெப்சி உடனே தயாரிப்பாளர் சங்க தீர்மானத்தால் பின்வாங்கியது. அதன்படி “பில்லா பாண்டி” படப்பிடிப்பை நிறுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தது. ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளர் ஏ.சண்முகம், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் கூடிய பெப்சி தனது முடிவை அறிவித்தது. கடந்த 2, 3 மாதங்களாக இழுபறியில் இருக்கும் சம்பள பேச்சு வார்த்தைகளை பேசி முடித்து ஊதிய உயர்வு குறித்து பொது விதிகள் முடிவு செய்து புத்தகமாக அச்சிட வேண்டும் என பெப்சி தெரிவித்தது.
சமாதானமாக போக விரும்பினாலும் தயாராப்பாளர் சங்கம் அதை பொருட்படுத்தவில்லை என்பதால் ஜூலை 1, 2017 முதல் வேலை நிறுத்தம் செய்வோம், இதில் 25 ஆயிரம் தொழிலாளிகள் கலந்து கொள்வார்கள் என பெ பெப்சி அமைப்பு அறிவித்திருக்கிறது.
தற்போது ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட பலர் நடிக்கும் 35 படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெப்சி தொழிலாளிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஆர்.கே.செல்வமணி கூறினார்.
தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் கூறும் போது, “பெப்சி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை பார்ப்போம் என்பதை ஏற்க மாட்டோம். தொழிலாளிகளின் சம்பள உரிமையோடு எங்களது உரிமை குறித்துப் பேசவும் தகுதியுள்ளது” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது, “எங்கள் படப்பிடிப்பிற்கு பெப்சி உறுப்பினர்கள் தடங்கல் ஏற்படுத்தினால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
1995-ம் ஆண்டில் இதே போன்று பெப்சி தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்த போது அதை படைப்பாளிகளின் படைப்புரிமை என்று திசை திருப்பினார்கள். தற்போதும் அதே போன்றதொரு பார்வையில் பேசுகிறார்கள். விஷால், பிரகாஷ் ராஜ் போன்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களாவும் இருப்பதால் ஒரு முதலாளியின் குரலில் கொக்கரிக்கிறார்கள்.
வேலை நிறுத்தம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை எந்த தொழிலாளியும் பொழுது போக்கிற்காகவோ, அடிக்கடியோ பயன்படுத்துவதில்லை. நியாயமான ஊதியம் கிடைக்காத போதே அவர் அந்த ஆயுதத்தை எடுக்கிறார். இங்கே நியாயம் பேசும் விஷால் போன்ற சண்டியர்கள் கேரளாவில் போய் இப்படி எந்த தொழிலாளியை வைத்தாவது வேலை செய்வோம் எனக் கூறி முடியுமா? பேசினால் அங்கே வாய் இருக்காது. அந்த அளவுக்கு அங்கே தொழிலாளிகளின் உரிமையும், பாதுகாப்பும் இருக்கின்றது.
தமிழப் படங்களில் வரும் பண்ணையார்களைப் போலவே இந்த நடிகர்கள் – தயாரிப்பாளர்கள் தெனவெட்டாக பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில் ஈழம், தமிழுரிமை, முற்போக்கு, தலித், பெண்ணுரிமை எனக் குரல் கொடுக்கும் முற்போக்கு இயக்குநர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் தொழிலாளிகளுக்காக குரல் கொடுப்பதில்லை. இதுதான் இவர்களது உண்மை முகம்.
தற்போது அதிமுக ஊழலை எதிர்க்கும் கமலஹாசனோ, அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டும் ரஜினியோ, தொழிலாளிகளுக்கு பிரியாணி போட்ட புகழ் அஜித்தோ, அடுத்த முதல்வர் ஆசையில் இருக்கும் விஜய்யோ யாரும் தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள்.
பெப்சி சம்மேளனத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் சங்கம் போன்ற ஓரிரண்டு சங்கங்களை பிரித்து இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் செய்ய முயல்கிறார்கள். எனினும் லைட்மேன், சமையல் உதவியாளர் சங்கம் போன்ற அடிப்படைத் தொழிலாளிகள் இதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இதில் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்?
இந்தக் கருத்துக் கணிப்பு செய்திப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
“இந்திய விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது. ஏனென்றால், பொருளாதார வளர்ச்சி என்பதே இப்படித்தான் நடக்கும்.
அதிகமான உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, மழையை நம்பி நடைபெறுகின்ற, உற்பத்தித் திறன் குறைந்த இந்த விவசாயத்தை தலைமுழுகிவிட்டு, விவசாயிகள் வெளியேறட்டும். தொழிற்சாலை வேலை அல்லது சேவைத்துறை வேலை என்பன போன்ற உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் அதைச் செய்யட்டும்.”
என்கிறது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலக முதலாளி வர்க்கத்தின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
இதையே வழிமொழிந்து ”நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யலாம்” என்கிறார் தமிழக பாஜக -வின் முன்னாள் தலைவர் இல.கணேசன். ஒரு படி மேலே சென்று கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினைகளைப் பேசினாலே வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது எடப்பாடியின் அடிமை அரசு.
இந்த நிலையில் ”விவசாயத்தை அழிக்கும் காவி பரிவாரமே வெளியேறு !” எனப் போர்க்குரலாக ஒலிக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு?” பாடல். பாருங்கள், பகிருங்கள்!
வீடியோவைப் பதிவிறக்கம் செய்ய
பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________
இந்தப் பாடல் வீடியோ உங்களுக்குப் பிடித்திருக்கிறதா! விவசாயிகளுக்கு ஆதரவான ம.க.இ.க பாடல்களை இசைக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
ஃபோர்ப்ஸ் – அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலக முதலாளி வர்க்கத்தின் பத்திரிகை. சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் இது.
இந்திய விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது. ஏனென்றால், பொருளாதார வளர்ச்சி என்பதே இப்படித்தான் நடக்கும்.
அதிகமான உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, மழையை நம்பி நடைபெறுகின்ற, உற்பத்தி திறன் குறைந்த இந்த விவசாயத்தை தலைமுழுகிவிட்டு, விவசாயிகள் வெளியேறட்டும். தொழிற்சாலை வேலை அல்லது சேவைத்துறை வேலை என்பன போன்ற உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் அதைச் செய்யட்டும்.
கோடிக்கணக்கான குறு, சிறு விவசாயிகளையும் அவர்களது உடலுழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு சிதறுண்ட அளவில் நடந்து வரும் இந்திய விவசாயம்.
இந்த மாற்றத்தை முடிந்த அளவுக்கு துன்பமில்லாமல் சாதிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இந்த மாற்றத்தை தடுப்பதென்பது நம் எல்லோரையும் தேவையில்லாமல் வறுமையில் வைத்திருக்கிறது. ஒரு தொழிலை செய்து வாழ முடியவில்லை என்றால், வேறு தொழிலுக்கு மாறிக்கொள்ள வேண்டும். இது சொல்லிப் புரிய வைக்க வேண்டிய விசயமா என்ன? நீ காலாவதியாகிப்போன சாட்டைக்குச்சி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும் சரி, விவசாயத்தில் ஈடுபட்டிருந்தாலும் சரி, இதுதான் நியதி.
மகாராட்டிர முதல்வர் 30,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கிறார். ம.பி. முதல்வர் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்.… இவையெல்லாம் விவசாயத்தை ஒரு நடவடிக்கை என்ற முறையில் காப்பாற்றும். ஆனால் அந்த நடவடிக்கை, உற்பத்தி திறன் குறைந்த, உழைப்பாளிகள் அதிகம் தேவைப்படுகின்ற நடவடிக்கையாகவே இருக்கும். அதுதான் நமக்குத் தேவையில்லை என்கிறோம். ஒவ்வொரு மணி நேர மனித உழைப்பின் உற்பத்தி திறனும் அதிகரிக்க அதிகரிக்கத்தான் நம்முடைய வாழ்க்கைத்தரம் உயரும். விசயம் மிகவும் எளிமையானது. அதிகமாக உற்பத்தி செய்தால்தான் அதிகமாக நுகர முடியும்.
உற்பத்தி திறன் அதிகரித்தால் பயனடைபவர்கள் யார்? உற்பத்தி செய்பவர்கள்தான். பால் குருக்மேன் கூறுவதைப் போல, உழைப்பின் உற்பத்தி திறன் அமெரிக்காவில் இருப்பதைப் போலவே உலகெங்கும் இருக்குமானால், ஒரு வேலைக்கு அமெரிக்காவில் கிடைக்கின்ற ஊதியம் அனைவருக்கும் கிடைக்கும். ம.பி. முதல்வரை சந்தித்திருக்கும் விவசாய சங்கத் தலைவர் தேவ் நாராயண் படேல், கடன் தள்ளுபடி கேட்டிருப்பதாகவும், குறைந்த பட்ச ஆதரவு விலை கேட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கடன் என்பது விவசாயத்தின் உள்ளீடு பொருளுக்கான செலவுகளில் ஒன்று. விலை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு. உற்பத்திச் செலவுகளைக் காட்டிலும் பொருளின் விலை குறைவாக இருக்கிறது என்றால், அந்த வியாபாரம் நட்டத்தில் நடக்கிறது என்று பொருள். இந்த விசயத்தை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் செல்லுங்கள். ஒரு பொருளாதாரத்தில் நட்டத்தை ஏற்படுத்துபவர்கள், மதிப்பை குறைக்கிறார்கள். அதன் மூலம் நம் அனைவரையும் அவர்கள் ஏழையாக்குகிறார்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன தெரியுமா? அது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு அல்ல. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பிலிருந்து, உற்பத்திக்கான உள்ளீடு பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி செலவுகளை கழித்தால் கிடைப்பதுதான் அது. அது மட்டும்தான் கூட்டப்பட்ட மதிப்பு. நட்டம் என்பது என்ன? நட்டம் என்பது குறைக்கப்பட்ட மதிப்பு. அது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறைக்கிறது.
ஒரு பொருளாதாரத்தில் நாம் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பைத்தான் நுகர்கிறோம். நட்டம் ஏற்படுத்துகின்ற (விவசாய) நடவடிக்கைகளினால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு குறைகின்றது என்றால், நாம் குறைவான மதிப்பை நுகர்கிறோம் என்று பொருள். நாம் ஏழையாக்கப்படுகிறோம்.
ம.பி. முதல்வர் அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதம் இருக்கிறாராம். காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க. அரசின் விவசாயி விரோத கொள்கையை எதிர்த்து உண்ணாவிரதமாம். இதன் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் நமக்குப் புரியாமல் இல்லை.
சுமார் 50% க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த விளங்காத உற்பத்தி திறன் குறைந்த விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஓட்டும் இருக்கிறது. அதனாலென்ன, பொருளாதார விதிகள் ஓட்டுக்கு கட்டுப்படுவதில்லை. அதனால்தான் சொல்கிறோம், விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள். உருப்படியான, உற்பத்தித் திறன் கூடிய வேறு ஏதாவது ஒரு தொழிலைச் செய்யுங்கள்.
நிலங்கள் சிதறிப் போகாமல் பரந்த அளவிலும், மிக நவீன முறையிலும் அமெரிக்காவில் நடந்துவரும் முதலாளித்துவ பண்ணைகள்.
விவசாயத்துறை வல்லுநர் தேவிந்தர் சர்மா கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டுவதை அரசு விரும்பவில்லை. ஏனென்றால், தனது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அது உகந்ததாக இல்லையென அரசு கருதுகிறது.” “கடந்த பல ஆண்டுகளாக விவசாயத் துறையை அரசு திட்டமிட்டே போண்டியாக்கியிருக்கிறது. நமது பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைக்கு குறைந்த கூலியில் ஆட்கள் வேண்டும் என்பதற்காக, விவசாயத்திலிருந்து மக்களை வெளியேற்றி நகர்ப்புறத்தை நோக்கித் துரத்துகிறார்கள். பண வீக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உணவுப் பொருட்களின் விலைகள் உயர விடாமல் வேண்டுமென்றே தடுக்கிறார்கள்.”
“தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையிலான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இந்திய விவசாயம் ஒத்துவரவில்லை. விவசாய வருமானம் அதிகரித்தால், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரந்து விடும். அப்படி நடக்கக் கூடாது என்பதுதான் அரசின் விருப்பம். மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.”
பொருளாதாரத்தில் என்ன நடக்க வேண்டும் என்று நாமும் விரும்புகிறோமோ, அதை தேவிந்தர் சர்மா தெளிவாகச் சொல்லியிருக்கிறார் – இரண்டு சிறிய விசயங்களைத் தவிர.
முதலாவதாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் வெளியேற்றத்தை அவர் எதிர்க்கிறார். நாமோ இதுதான் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இரண்டாவதாக, தொழில்துறைக்கு குறைந்த கூலியில் தொழிலாளர்கள் வேண்டும் என்பதற்காக விவசாயிகளை விவசாயத்தை விட்டு நாம் வெளியேற்றுவதாக அவர் சொல்கிறார். அது தவறு. நாம் அவர்களுக்கு அதிக ஊதியம் அளிக்க விரும்புகிறோம். விவசாயத்தைக் காட்டிலும் உற்பத்தித் திறன் கூடிய பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அதை செய்ய விரும்புகிறோம். நமக்கு கொஞ்சம் விவசாயிகள் போதும் என்கிறோம். பெரும்பாலான மற்றவர்கள் வேறு காரியங்கள் செய்யலாம் என்கிறோம்.அதானால்தான் விவசாயத்தில் தொடர்ந்து நீடிக்கும்பொருட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதை நாம் விரும்பவில்லை.
விளைபொருட்களுக்கு இலாபம் அளிக்கக்கூடிய விலையை நிர்ணயம் செய்யுமாறு அரசை வலியுறுத்தி கோபியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் முன்பாக அப்பகுதி சிறு விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
ஒரு நாட்டிடமோ, மக்களிடமோ செல்வம் கொழிக்கவேண்டும் என்று நாம் விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? அதிக உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, உற்பத்தித் திறன் குறைந்த விவசாயத்திலிருந்து வெளியேறி, உற்பத்தி திறன் மிகுந்த வேறு தொழில்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும். பணக்கார நாடுகளான அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் முறையே 1%, 2% மக்கள்தான் விவசாயத்தில் இருக்கிறார்கள். அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கும் 1%, 2% தான். அதனால்தான் பொருளாதாரத்தின் மற்ற துறைகளில் உள்ளவர்கள் சராசரியாக எந்த அளவு உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு உற்பத்தித் திறன் வாய்ந்தவர்களாக அங்கே விவசாயிகளும் இருக்கிறார்கள். மொத்தமாக பார்க்கும்போது, அந்த நாடுகளின் பொருளாதாரங்களில், மதிப்பு எவ்வளவு கூட்டப்படுகிறதோ கிட்டத்தட்ட அதற்கு சமமான அளவுக்குத்தான் உழைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவைப் பாருங்கள். இங்கே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15% தான் விவசாயத்திலிருந்து வருகிறது. ஆனால் இதில் ஈடுபட்டிருக்கும் மக்கள் தொகையோ 50% க்கும் மேல். மற்ற பணக்கார நாடுகளைப் போல இந்தியாவும் பணக்கார நாடாக மாற வேண்டுமானால், உழைப்புக்கும் உற்பத்தி செய்யப்படும் மதிப்புக்கும் இடையிலான விகிதம் பணக்கார நாடுகளில் உள்ளதைப் போல மாற வேண்டும். செல்வச் செழிப்பு அடைவது என்பதன் பொருள் அதுதான். இந்திய மக்கள் தொகையின் பெரும்பான்மையினர், கழனிச் சேற்றில் நின்று கொண்டிருப்பதை விட்டு விட்டு, அதைக்காட்டிலும் உருப்படியான வேறு ஏதாவது தொழிலை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.
விவசாயம் செய்து பிழைக்க முடியவில்லையா? வேறு எதையாவது செய். இதை சொல்லித்தான் புரிந்து கொள்ள வேண்டுமா? இந்தியாவில் இந்த மாற்றம் சுமுகமாக நடந்தேறினால் நல்லது. ஆனால், அவர்கள் விவசாயியாக நீடிப்பதற்காக அவர்களுக்கு மானியம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
(But India’s Farmers Should Go Bust, That’s How Economic Development Works, Tim Worstall, Forbes, 6.11.2017 கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்)
*****
இக்கட்டுரையைப் படித்த வாசகர்களில் பலர் ஆத்திரமடைந்திருக்கலாம். இந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பவையெல்லாம் இந்திய விவசாயம் பற்றிய அந்தக் கட்டுரையாளரின் கருத்துகள் மட்டுமல்ல, இதுதான் நேற்றைய மன்மோகன் அரசின் கருத்து, இன்றைய மோடி அரசின் கருத்து. நரசிம்ம ராவ் ஆட்சிக்காலத்தில் காட் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் இந்த திசையில்தான் இந்திய விவசாயத்தை இழுத்துச் சென்றுகொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டுரையை படித்து முடித்துவிட்டு, இதே இதழில் வெளியிடப்பட்டிருக்கும் “விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – எந்தப் பாதையில்?” என்ற கட்டுரையையும் சேர்த்துப் படித்துப் பாருங்கள். ஃபோர்ப்ஸ் இதழ் கூறும் கருத்தைத்தான் மோடி அரசு வரிக்கு வரி வழிமொழிகிறது என்பதை அந்தக் கட்டுரையில் நீங்கள் ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஃபோர்ப்ஸ் கட்டுரை, இந்திய விவசாயத்தை எப்படி மாற்றியமைத்தால் அது முதலாளித்துவத்துக்கு இலாபம் தரும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பிரச்சினையைப் பரிசீலிக்கிறது. “விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – எந்தப் பாதையில்?” என்ற கட்டுரை, விவசாயத்திலும், தொழில்துறையிலும் என்னவிதமான மாற்றங்களைக் கொண்டுவந்தால், விவசாயிகளுக்கு நலம் பயக்கும் என்ற கண்ணோட்டத்திலிருந்து பிரச்சினையைப் பரிசீலிக்கிறது.இரண்டும் இரண்டு விதமான வர்க்கப் பார்வைகள்.
“இந்திய விவசாயி உற்பத்திப் பொருளின் மதிப்பைக் கூட்டவில்லை” என்று குற்றம் சாட்டுகிறார் கட்டுரையாளர். விவசாய விளைபொருளின் மதிப்பை வேண்டுமென்றே குறைத்து வைத்திருப்பதற்கு பொறுப்பு இந்த அரசு. இதனால் ஆதாயமடைபவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள், கமிசன் மண்டிக்காரர்கள். விளைபொருளின் “பரிவர்த்தனை மதிப்பு”க்கு, அதன் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத விவசாயியைப் பொறுப்பாக்குகின்ற இந்த அயோக்கியத்தனத்தின் பெயர்தான் முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடு.
மைய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் உணவு மானியம் குறு, சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்திய மக்களின் பசியை ஆற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முதலாளித்துவப் பொருளாதாரப் பார்வை தோற்று சந்தி சிரித்து விட்டது. கட்டுரையாளரின் கருத்துகள் அபத்தமானவை. இதைச் சொல்வதற்கு ஒருவர் பொருளாதார வல்லுநராக இருக்கத் தேவையில்லை. அதனை மக்கள் தமது சொந்த அனுபவத்திலேயே கூறிவிட முடியும்.
சுதந்திரமான சந்தை ஒன்று நிலவுவது போலவும், வேண்டல் – வழங்கல் அடிப்படையிலான பொருளாதார விதிகள் மட்டுமே சந்தையை இயக்குவது போலவும், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட விவசாயிகள் மறுப்பதைப் போலவும், சுதந்திரச் சந்தையின் விதிகளுக்குப் புறம்பாக அவர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கிக் காப்பாற்றிக் கொண்டிருப்பதைப் போலவும் கட்டுரையாளர் படம் காட்டுகிறார்.
இவை அத்தனையும் வரிக்கு வரி பொய். அரசியல் அதிகாரத்தால் வளைக்கப்படாத “சுதந்திரச் சந்தை” என்று ஒன்று எங்கும் இல்லை. உலக வர்த்தகக் கழகத்தின் ஒருதலைப்பட்சமான விதிமுறைகளில் தொடங்கி டிரம்பின் “கொள்கை” வரை இதைப் புரிந்து கொள்ள நம்முன் ஆயிரம் சான்றுகள் இருக்கின்றன. உள்நாட்டில் மோடி அரசின் துணையுடன் இயற்கை வளங்களை, பொதுத்துறைகளை, வங்கி சேமிப்புகளைத் திருட முடியும், சட்டங்களை வளைக்க முடியும் என்பதற்கு அதானியும் அம்பானியும் சான்று கூறுகிறார்கள்.
இந்தியத் தரகு முதலாளிகளாகட்டும், பன்னாட்டு முதலாளிகளாகட்டும், இவர்கள் தொழில் தொடங்குவதற்கு சாலை, மின்சாரம், கடன் எல்லாம் கொடுத்து, இலாப உத்திரவாதமும் கொடுக்கிறது அரசு. இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்து போடப்படும் பிச்சை. சப் பிரைம் நெருக்கடி என்ற திருட்டின் விளைவாக போண்டியாகிப்போன பன்னாட்டு வங்கிகளும் தொழில்களும் தத்தம் நாட்டு அரசாங்கங்களிடம் பிச்சை எடுத்துத்தான் பிழைத்துக் கொண்டன.
உலகத் தொழிலாளர்கள், விவசாயிகளின் மானியத்தில் (அல்லது திருட்டில்) வயிறு வளர்க்கும் முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ஃபோர்ப்ஸ் கட்டுரையாளராகட்டும், நம்மூர் வெங்கய்யா நாயுடுவாகட்டும், விவசாயிகள் சலுகை கோருவதாக இவர்கள் விமரிசிப்பது பின் வாயால் சிரிப்பதற்கு மட்டுமே தகுதியான நகைச்சுவை.
“அதிகமாக உற்பத்தி செய்தால்தான் அதிகமாக நுகர முடியும்” என்கிறார் கட்டுரையாளர். அதிகமாக உற்பத்தி செய்வதன் விளைவு – பட்டினி என்ற விசித்திரத்தைச் சாதித்திருப்பதே முதலாளித்துவம்தான் என்கின்ற பாலபாடம் கூடத் தெரியாமல் அவர் உளறுகிறார்.
வெங்காயம் முதல் தானியங்கள் வரை அனைத்தையும் விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்யவில்லையா? கிலோ 11 பைசா என்று வெங்காயத்தின் விலை வீழ்ந்ததற்கு யார் பொறுப்பு? இதற்கும் விவசாயிதான் பொறுப்பு என்கிறார் கட்டுரையாளர். சந்தை விலையைக் காட்டிலும் குறைவான செலவில் உற்பத்தி செய்யத் தவறியது விவசாயியின் பொறுப்பாம். இதனால் ஜி.டி.பி. வீழ்ந்து நாட்டு மக்கள் எல்லோரும் ஏழையாகி விட்டார்களாம்.
விலை வீழ்ச்சியினால் விவசாயிகள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கும்போது, ஜி.டி.பி. வீழ்ந்துவிட்டதாகப் பேசும் மனிதனை, பைத்தியம் என்றோ, இரக்கமற்ற கயவன் என்றோ நீங்கள் கருதலாம். எதுவாக இருந்தாலும், அது, அந்தக் கட்டுரையாளர் மட்டுமல்ல, மோடி அரசும்தான் அதன் பொருளாதார வல்லுநர்களும் கூடத்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
விவசாயத்தில் உற்பத்திச் செலவு அதிகமாவதற்குக் காரணம் சிறுவிகித உற்பத்தியாம். எல்லாவற்றையும் கார்ப்பரேட் பண்ணைகளாக மாற்றினால்தான் விவசாயம் இலாபகரமாக இருக்குமாம். அதாவது, “விவசாயிகளையெல்லாம் விவசாயத்தை விட்டு விரட்டினால்தான், விவசாயம் இலாபகரமாக இருக்கும்” என்பதே கட்டுரையாளர் கருத்து. மோடி அரசின் கருத்தும் அதுதான்.
நாடு முழுவதும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் வறட்சி மற்றும் அரசு புறக்கணிப்பு காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போகின்றனர். அரசோ அந்த மரணங்களை தனிப்பட்ட மரணம் என்று கணக்கு காட்டுகின்றது.
கால்நடைகள் கூட மேயப் பசுமையின்றி, பருக நீரின்றி மடிகின்றன. மழை தேவைப்படாத பனைமரங்களே பட்டுப் போகின்றன. இந்நிலையில் தமிழக விவசாயத்தை முற்றாக அழிக்கும் வண்ணம் காவிரி டெல்டாவின் களஞ்சியங்கள், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்கிறது காவிக் கும்பல்.
வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யுங்கள் என்கிறார் இல.கணேசன் நமது மண்ணை, நமது ஊரை ஏன் விட வேண்டும்? அந்த விவசாயிகளின் போர்க்குரலாய் ஒலிக்கிறது இப்பாடல். இப்பாடலின் முன்னோட்டம் இன்று… முழுப் பாடல் வரும் திங்கள் 31.07.2017 அன்று வெளியாகும்
பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________
இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா! விவசாயிகளுக்கு ஆதரவாக ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
போராடுபவர்களையும், மாணவர்களையும் ஆள்தூக்கி குண்டர் சட்டத்தைக் கொண்டு ஒடுக்க நினைக்கிறது தமிழக அரசு. மணல் கொள்ளை, குட்கா ஊழல் மற்றும் வருமானவரிச் சோதனையில் சிக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் திமிருடன் உலாவருகின்றனர். ஆளும் அண்ணா அதிமுகவின் குண்டர்கள் இன்று போராடும் மாணவர்களை ஒடுக்குகிறார்கள். போராடத் தூண்டினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வேன் என்று கொக்கரிக்கிறார்கள். இதற்கு தமிழக மாணவர்கள் அஞ்சமாட்டார்கள். தொடர்ந்து போராடுவார்கள். அவர்களின் போராட்டப் பாடலாக இந்த பாடல் மாற வேண்டும் என்பதற்காக “கரோக்கி – சேர்ந்து பாடலாம்” வடிவத்தை வெளியிடுகிறோம்.
இதில் பின்னணி இசையும் காட்சிகளும் வரும். பாடல் வரிகள் வரும் இடத்தில் குரல் இருக்காது, அதன் வரிகள் மட்டும் வரும். இதை பதிவிறக்கம் செய்து நீங்களும் பாடலாம்.
அடுத்து இந்தப் பாடலை சமூகவலைத்தளங்களில் விரிவாக கொண்டு செல்ல உங்கள் ஒத்துழைப்பு தேவை. இந்தப்பாடலை பதிவிறக்கம் செய்து ஆடத்தெரிந்த நண்பர்கள் ஆடலாம். நடனம் என்பது கானா, வெஸ்ட்ரன், செவ்வியில் என எந்த வடிவமாகவும் இருக்கலாம். அதை செல்பேசி அல்லது வீடியோ காமராவில் HD ஃபார்மெட்டில் தரமாக ஒளிப்பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள். தெரிவு செய்யப்படும் வீடியோக்களை வெளியிடுகிறோம்.
பின்னணி இசையோடு பாடுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், சினிமா பாடகர்கள், மேடைப் பாடகர்கள், இயக்கப் பாடகர்கள் என அனைவரும் முன்வந்து பதிவு செய்து அனுப்புங்கள். தெரிவு செய்யப்படும் ஆடியோ – வீடியோக்கள் வினவு தளத்தில் வெளியிடப்படும். அதை உங்களது சமூகவலைத்தள கணக்குகளிலும் வெளியிடுங்கள். போராட்டப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள்
ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி!
குண்டாஸ் குண்டாஸ்
ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்
ஊழல் பண்ணி தின்ன காசில
அமைச்சர் வயிறு அண்டாஸ்
ஆத்து மணலை ஆட்டையப்போட்ட
அமைச்சர் தலையில முண்டாசு
ஐ.டி ரெய்டில் சிக்கினவங்க
ஆக்கங்கெட்ட கூவாஸ்
கூவத்தூரு கும்மாளத்தில்
வேட்டிய தூக்கி பிரேக் டான்ஸு
குட்கா விற்க லஞ்சம் வாங்கின
ஐ.பி.எஸ் க்கு போனசு
கதிராமங்கலம் நெடுவாசல்
அக்கா குடுத்திச்சி நோட்டீசு – அரசை
ஆதரிச்சா எழுத முடியும்
மூளை கெட்ட முண்டாஸ்
குண்டாஸுக்கும் அண்டாஸுக்கும்
பந்தோபஸ்து போலீசு
ஓ.பி.எஸ் இ.பி.எஸ்
பி.ஜே.பி க்கு லெக் பீஸ்
ஆறு கேஸ் வாங்கினாக்கா
ஸ்டூடண்டுக்கே குண்டாஸ் – உங்க
ஆத்தா மேல நூறு கேஸ்
இன்னா…ங்கடா டமாஸ்
சின்னம்மாவை உள்ளே வச்சும்
ஊஹும் ஊஹும் நோ யூஸு
இந்த அக்யூஸ்டெல்லாம் ஒண்ணா சேந்து
நமக்கு போடுது குண்டாஸ்.
பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________
இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா! அடக்குமுறைக்கு எதிரான ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
A woman spreads out fodder for rescued cattle at a "goushala", or a cow shelter, run by Bharatiya Gou Rakshan Parishad, an arm of Hindu nationalist group Vishwa Hindu Parishad (VHP), at Aangaon village in the western Indian state of Maharashtra February 20, 2015. Hindu nationalists in India have stepped up attacks on the country's beef industry, seizing trucks with cattle bound for abattoirs and blockading meat processing plants in a bid to halt the trade in the world's second-biggest exporter. Picture taken February 20. REUTERS/Shailesh Andrade (INDIA - Tags: RELIGION BUSINESS ANIMALS) - RTR4R0UD
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் பெரும்பகுதி சிறு உற்பத்தியாளர்களுடையது. ஐ.நா. உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பால்மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் மொத்த எண்ணிக்கை 7.5 கோடி. இதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் ஓரிரு பசு அல்லது எருமை மாடுகள் முதல், அதிகபட்சம் பத்து மாடுகள் வரை வைத்திருப்பவர்கள்.
உலகின் மற்ற நாடுகளில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்திய பால் பண்ணைத் தொழிலுக்கு உண்டு. மற்ற பல நாடுகளில் சிறு உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள் என்ற போதிலும், அவர்கள் தமது பாலை கார்ப்பரேட் பண்ணைகளுக்குத்தான் விற்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்தியாவில்தான் பாலை வாங்கி நுகர்கின்ற மக்கள் கொடுக்கும் பணம் நேரடியாக பால்மாடு வளர்ப்போரின் கைக்குப் போகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பாலில் சுமார் 40 விழுக்காட்டை மாடு வளர்ப்பவர்கள் தமது குடும்பத் தேவைக்கே பயன்படுத்தி விடுகின்றனர். மீதமுள்ள பால்தான் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு சந்தைக்கு வரும் பாலில் 30% தான் கூட்டுறவு பால் பண்ணைகளுக்கும் தனியார் பால் பண்ணைகளுக்கும் விற்கப்படுகின்றன. மீதமுள்ள 70% பாலை உற்பத்தியாளர்கள், அதாவது ‘‘பால்காரர்கள்’’ நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள். இதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பான நிலைமை.
இத்தகைய சிறிய பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் குறித்து தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகம் (NDDB) ஒரு கணக்கீட்டை வெளியிட்டிருக்கிறது. மாட்டின் விலை, தீவனம், மருத்துவம், கறக்கும் பாலின் அளவு, கறவை நின்ற மாட்டை விற்றால் கிடைக்கும் வருவாய் ஆகிய அனைத்தையும் கணக்கிட்டு இந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் என்ன என்பதை அது கூறுகிறது.
அந்த கணக்கின்படி, பத்து பால்மாடுகளை வளர்க்கும் ஒருவர் 7 ஆண்டுகளில் பெறக்கூடிய நிகர லாபம் 11.6 லட்சம் ரூபாய். இந்த தொகையில் 5.5. இலட்சம் ரூபாய் கறவை வற்றிய மாடுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை என்று அந்த கணக்கீடு கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது மோடி போட்டிருக்கும் சட்டத்தின்படி மாட்டை விற்கக் கூடாதென்றால், 11.6 லட்சத்தில் 5.5. இலட்சத்தை கழித்து விடவேண்டும். ஏழாண்டுகளுக்கான அவரது இலாபம் 6 இலட்சம் என்று குறைந்து விடும். அதாவது, பத்து மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்தால், அவருக்கு கிடைக்கும் தொகை ஆண்டுக்கு ரூ.85,000; அல்லது மாதத்துக்கு சுமார் 7,000 ரூபாய்). இது நமது கணக்கல்ல, தேசிய பால் உற்பத்தி கழகத்தின் கணக்கு.
கறவை வற்றிய மாடுகள் குறைந்தது 14 ஆண்டுகள் உயிர்வாழும். அவற்றைப் பராமரிக்க ஒரு மாட்டுக்கு நாளொன்றுக்கு 150 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் பத்து மாடுகளை 14 ஆண்டுகள் பராமரிப்பதற்கு 80 இலட்சம் ரூபாய் தேவை. கறவை வற்றிய மாடுகளை விற்கக் கூடாது என்றால், தொழிலை விட்டு ஓடுவது ஒன்றுதான் பால்மாடு வளர்ப்பவர்கள் முன் இருக்கும் வழி.
ஆனால் பால்மாடு வளர்ப்பவர்கள் அந்த தொழிலைக் கைவிட முடியுமா என்பதுதான் கேள்வி.
பால்மாடு வளர்ப்பது என்பது விவசாயப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதி. விவசாயப் பொருளாதாரம் மென்மேலும் வீழ்ச்சியடைந்த போதும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை சார்ந்திருப்பதற்கு ஒரே காரணம், அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதுதான். 2013 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, மொத்த பயிரிடும் பரப்போ, 1971−72 இல் 11.9 கோடி ஹெக்டேராக இருந்து, 2003−இல் 10.7 கோடி ஹெக்டேராக குறைந்து, 2013−இல் 9.2 கோடி ஏக்கராகத் தேய்ந்து விட்டது. ஆனால் கிராமப்புறத்தில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 2003−ஆம் ஆண்டில் 14.7 கோடி குடும்பங்கள். அது தற்போது 15.6 கோடி குடும்பங்கள் என உயர்ந்திருக்கிறது.
தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பின் வரையறைப்படி 215 சதுர அடி நிலம் கூட இல்லாதவர்கள்தான் நிலமற்றவர்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள். இந்த கணக்குப்படி நிலமற்றவர்கள் இந்திய மக்கள் தொகையில் 7.4% என்பது அரசு கணக்கு.
இதற்கு நேர் எதிராக 46.7% கிராமப்புற நிலங்கள், 7.4% குடும்பங்களிடம் உள்ளன. அதே நேரத்தில் 75.4% விவசாயிகளிடம் குறைந்த பட்சம் 215 சதுர அடி முதல் அதிக பட்சம் ஒரு ஹெக்டேர் (2.5 ஏக்கர்) வரை நிலம்தான் உள்ளது. இதுதான் கிராமப்புற நிலவுடைமை குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தரும் சித்திரம். இந்த 75% விவசாயிகள் நிலத்தை மட்டும் நம்பி வாழ முடியாது என்பது யாரும் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை.
சந்தையில் மாடுகள் விற்பதைச் சுற்றிவளைத்துத் தடை செய்திருக்கும் மோடி அரசின் ஆணையைக் கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
2013−ஆம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வே கணக்கெடுப்பின்படி, 75% கிராமப்புற சிறு விவசாய குடும்பங்களில், குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவராவது நகரத்தில் வேலை செய்யப் போய்விடுகின்றனர். குடும்பம் உயிரோடு இருக்க அவருடைய சம்பளம்தான் உதவுகிறது.
விவசாய வருமானம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்ற கடந்த 15 ஆண்டுகளில் சிறு விவசாயிகள் வாழ்வதற்கு கண்டுபிடித்திருக்கும் இன்னொரு முக்கியமான மாற்று வழி பால்மாடு வளர்ப்பு. கிராமப்புற கால்நடைகளில் சுமார் 90% சிறு, குறு விவசாயிகளிடம்தான் இருக்கிறது என்கிறது 2011−12க்கான தேசிய மாதிரி கணக்கெடுப்பு. வேறுவிதமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோர்தான் மிகப்பெரும் அளவில் கால்நடை பொருளாதாரத்தை சார்ந்திருக்கின்றனர்.
இந்தியாவின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரத்தின் ஆண்டு மதிப்பு 5.7 லட்சம் கோடி ரூபாய். விவசாயப் பயிர் உற்பத்தியின் ஆண்டு மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய். ஏறத்தாழ பயிர் உற்பத்தியில் பாதி அளவை எட்டிவிட்டது கால்நடை வளர்ப்புத் தொழில். 2015−16இல் விவசாயத்துறை 1.2% தான் வளர்ந்திருக்கிறது. கால்நடை வளர்ப்போ ஆண்டுக்கு 15% என்ற வேகத்தில் வளர்ந்து வருகிறது.
பால்மாடு வளர்ப்பும், கால்நடைப் பொருளாதாரமும்தான் கோடிக்கணக்கான விவசாயிகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன மேற்கண்ட புள்ளிவிவரங்கள். இருப்பினும் இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு மாடு தருகின்ற பாலின் அளவு உலக சராசரியோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ பாதி அளவே உள்ளது. போதுமான தீவனமின்மை, மேய்ச்சல் நிலமின்மை, மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல குறைபாடுகள் இதற்கு காரணம்.
மாடுகளுக்கான பசுமைத் தீவனப் பற்றாக்குறை 63%, வைக்கோல் போன்ற உலர் தீவனங்களின் பற்றாக்குறை 24%, பருத்திக்கொட்டை − புண்ணாக்கு போன்ற மற்ற தீவனங்களின் பற்றாக்குறை 76%. பால்மாடு வளர்ப்புக்கான செலவில் 60 முதல் 70% தீவனங்களுக்கான செலவேயாகும். 2020−21இல் இந்தியாவின் பால் சந்தை 36% அதிகரிக்கும் என்றும், இதற்கேற்ப தீவனங்கள் உற்பத்தி செய்யப்படவில்லையென்றால், பால் சந்தையை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் என்றும் கூறுகின்றது ஒரு ஆய்வு.
‘‘ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா’’ என்று பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிடும் அரசால் ஒரு வேலைவாய்ப்பைக் கூட உருவாக்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த நாட்டின் பரம ஏழைகள் தங்களுடைய நிச்சயமற்ற வாழ்க்கை நிலையில், பலவிதமான எதிர்மறையான சூழல்களை எதிர்கொண்டு, எந்தவிதமான ஊக்கமோ ஆதரவோ கிடைக்காத நிலையிலும் சொந்த முயற்சியில் வாழக் கற்றிருக்கிறார்கள். முன்முயற்சியுடன் சவாலை எதிர்கொண்டு தொழில் நடத்தும் ஒருவரைத்தான் நாம் தொழில் முனைவர் என்று அழைக்கிறோம். நம் நாட்டில் சுய தொழில் செய்பவர்கள்தான் அத்தகைய தொழில் முனைவர்கள். ஏழைகளான இந்த தொழில் முனைவோரை வாழவைக்கத் துப்பில்லாத அரசு, அவர்களை மரணத்துக்குத் தள்ளுகிறது.
கறவை வற்றிய மாடுகளை விற்கக்கூடாது என்ற மோடி அரசின் உத்தரவை மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போதுதான் இப்பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்து கொள்ள முடியும். இந்த உத்தரவு பால்மாடு வளர்ப்பை மட்டும் பாதிக்கின்ற உத்தரவு என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது.
விவசாயம் பொய்த்துப் போனதால், கிராமப்புறங்களைவிட்டு வெளியேறிப் பிழைப்புக்காக சென்னை நகரில் குவியும் வட மற்றும் வடகிழக்கிந்திய மாநில இளைஞர்கள். (கோப்புப் படம்)
பால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப் பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் கிராமத்திலேயே நீடிக்க முடியாது. இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் பாதி − அதாவது, சுமார் 12.5 கோடி ஏக்கர் நிலம் சிறு, குறு விவசாயிகளிடம் உள்ளது. பால்மாடு வளர்க்க முடியாது என்றால் இவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தும் தேவையே இல்லாமல், போண்டியாகிப்போன விவசாயிகள் தானாக முன்வந்து நிலத்தை விற்றுவிட்டு வெளியேறும் சூழ்நிலையை மோடி அரசின் உத்தரவு உருவாக்கும். தேசிய அளவில் கார்ப்பரேட்டுகள் நடத்தவிருக்கின்ற அம்மணமான நிலப்பறி நடவடிக்கைதான் மோடி அரசு போட்டிருக்கும் இந்த உத்தரவின் நோக்கமா என்ற கேள்வி எழுகிறது.அவ்வாறு சொல்வது கொஞ்சம் மிகையோ என்று முதலில் தோன்றியது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விவரங்களிலிருந்து பார்க்கும்போது, ‘‘ஆம், இது ஒரு மாபெரும் நிலத் திருட்டுக்கான திட்டம்தான்’’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்துடன் தொடர்பற்ற வேறு நோக்கங்களால் உந்தப்பட்ட நடவடிக்கைகள் போல தோன்றுகின்ற நடவடிக்கைகளின் பின்புலத்தில், வெளியில் தெரியாத பொருளாதார நோக்கங்கள் இருக்கும் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம்.
1991−இல் பாக்தாத் மீது குண்டு வீசிய அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்ஷிடம் அந்தப் போருக்கான நியாயம் பற்றிக் கேட்டபோது, குவைத் மக்கள் மீது இராக் படையினர் நடத்திய கொலைகளை விவரித்த அம்னெஸ்டி இன்டர்நேசனல் அறிக்கையை மேற்கோள் காட்டி, ‘‘இந்தப் போரின் தார்மீக நோக்கத்தை அந்த அறிக்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’’ என்றார்.
அப்போது குவைத்தின் எண்ணெய் வயல்களைப் பற்றி புஷ் பேசவில்லை. ‘‘குவைத்தில் எண்ணெய் வயல்களுக்கு பதிலாக காரட் விவசாயம் நடந்திருந்தால், நாம் எதற்காக அங்கே போரிடப் போகிறோம்?’’ என்று பின்னாளில் கூறினார் அமெரிக்காவின் துணை இராணுவ அமைச்சர் லாரன்சஸ் கோத்.
‘‘புனித பூமியை மீட்பது’’ என்ற பெயரில் ஐரோப்பா நடத்திய சிலுவைப்போரில் படை திரட்டப்பட்ட வெறி பிடித்த கிறித்தவர்கள், உண்மையில் யாருக்குப் பயன்பட்டனர்? திருச்சபையின் உலகயாத நலன்களுக்கும் இத்தாலிய வியாபாரிகளுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்குமே அவர்கள் பயன்பட்டனர்.
பசுப் பாதுகாவலர்கள் நடத்திவரும் கொலைகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் பாருங்கள்.
இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா? விவசாயிகளின் தோழன் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
முற்றும் துறந்தவர்களே சாமியார்கள் என்று பெருமை பேசும் ‘பாரதத்தில்’ இன்று கார்ப்பரேட் சாமியார்களே செல்வாக்கு செலுத்துகின்றனர். பாலியல் வன்முறையாக இருக்கட்டும், இயற்கை வளத்தை அழிப்பதாகவோ ஆக்கிரமிப்பிதாகவோ இருக்கட்டும், கருப்புப்பணம் – ஹவாலா மோசடியாக இருக்கட்டும், கல்வி-நுகர் பொருள் விற்பனையில் இருக்கட்டும் இவர்கள்தான் இன்று முன்னணி வகிக்கின்றனர்.
“சுதந்திரத்தின் புகலிடம், அனைவருக்கும் வரம்பில்லா வாய்ப்புகள், முதலாளித்துவத்தின் சொர்க்கம்” என்று முதலாளித்துவ அறிஞர்களால் போற்றப்படுகிறது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவின் வரலாறும், இன்றைய அரசியலும் அடிமை உழைப்பு சுரண்டலையும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஈவு இரக்கமின்றி நடத்தப்படுவதையும் அம்பலப்படுத்துகின்றன. 1865-ல் அடிமைமுறை சட்ட பூர்வமாக ஒழித்துக் கட்டப்படுவதற்கு முன்பும் பின்பும் இந்த நிலை தொடர்கிறது.
அடிமை முறை சட்ட பூர்வமாக ஒழிக்கப்பட்டதன் 150-வது ஆண்டை ஒட்டி Counter Punch தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பையும் இங்கு தருகிறோம்.
அடிமை வர்த்தகம், காலனிய கொள்ளை, தென் அமெரிக்க தங்க வேட்டை, இங்கிலாந்தில் விவசாயிகளை அவர்களது நிலங்களில் இருந்து பறித்து எறிந்தது இவற்றின் மீது கட்டி எழுப்பப்பட்டது நவீன முதலாளித்துவம். அமெரிக்க முதலாளித்துவம் பற்றிய இந்தக் கட்டுரை முதலாளித்துவத்தின் வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டை நமக்கு காட்டுகிறது.
இன்று அமெரிக்காவின் கருப்பின அடிமைத்தனம் சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டதன் 150 -ம் ஆண்டுவிழா. அடிமைமுறை, மேற்கத்திய முதலாளித்துவத்தின் ஒரு விளைபொருள் என்கிற பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக மேற்கத்திய முதலாளித்துவம் அடிமைத்தனத்தின் ஒரு விளைபொருளாகும்.
அமெரிக்க சுதந்திரத்திற்குப் பிந்தைய 80 ஆண்டுகள் நடைபெற்ற அடிமைத்தனத்தின் விரிவாக்கம், அமெரிக்க பரிணாம வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றுக்கு உந்து சக்தியாக விளங்கியது.
அழிந்துபட்டு வந்த புகையிலை தோட்டங்கள் நிரம்பிய ஒரு சிறிய கடற்கரைப் பகுதியாக விளங்கிய அமெரிக்காவின் தெற்கு, எவ்வாறு ஒரு மனிதனின் சராசரி வாழ்நாள் காலப்பொழுதில் ஒரு மாபெரும் பருத்தி சாம்ராஜ்யமாக உருவானது என்பதையும் அமெரிக்கா நவீன தொழில்துறையிலான முதலாளித்துவ பொருளாதாரமாக வளர்ந்தது என்று வரலாற்றாசிரியரான எட்வர்ட் பாப்டிஸ்ட் விளக்குகிறார்.
அடிமைகளை சித்திரவதைக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாக்குவதன் மூலமாக அடிமை உரிமையாளர்கள், அடிமைகளிடம் இருந்து அதிக உழைப்பை கறந்தனர். இது தொழில்துறை புரட்சியின் முக்கிய மூலப்பொருளான பருத்திக்கான உலகச் சந்தையை கைப்பற்றி கட்டுப்படுத்த உதவியது. இதன் மூலம் அமெரிக்கா ஒரு வளமான சக்திவாய்ந்த நாடாக வளர்ந்தது.
20-ம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தில் நாடுகளின் செல்வத்தை தீர்மானிக்கும் வளமாக எண்ணெய் எவ்வகை முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறதோ, அவ்விடத்தில் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பருத்தி இருந்தது. அமெரிக்காவின் ஏற்றுமதிகளில் 50 சதவிகித இடத்தைப் பருத்தி பிடித்திருந்தது. இதன் மூலம் அமெரிக்கா கடந்து சென்ற பெருமளவு பொருளாதார வளர்ச்சிக்கான அடிக்கொள்ளியாக இருந்தது. இன்று முதல் உலக நாடாக விளங்கும் தனது இடத்துக்கு அமெரிக்கா அடிமைகளுக்கு கடன்பட்டிருக்கிறது.
சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவமும் அடிமைமுறை அடிப்படையிலேயே பிணைந்துள்ளன. முதலாளித்துவம் இலவச உழைப்பு அடிப்படையிலானது, அடிமைமுறை கட்டாய உழைப்பு அடிப்படையிலானது. ஆயினும், நடைமுறையில், அடிமைத்தனம் இல்லாமல் முதலாளித்துவத்துவம் சாத்தியமாகியிருந்திருக்காது.
அமெரிக்காவில், அடிமைகள் பறித்த பருத்தி அல்லது அவர்களால் வெட்டப்பட்ட கரும்பு மூலம் மட்டும் அடிமைமுறை மூலம் ஆதாயம் ஈட்டப்படவில்லை என்பதை அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். இன்றைய அமெரிக்க பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ரியல் எஸ்டேட், காப்பீடு, நிதித்துறை தொழில்களின் நிர்மாணத்திற்கு அடிமை முறை பிரதான பங்களித்திருக்கிறது
வால் வீதி அடிமைமுறையின் மூலம் நிறுவப்பட்டது. ஆப்பிரிக்க அடிமைகள் வால்வீதிக்கு, அதன் பெயரைக் கொடுக்கும் சுவரைக் கட்டினர்; டச்சு காலனியின் வடக்கு எல்லையாக அது உருவாக்கப்பட்டது. தங்களது நிலத்தை மீட்க விரும்பிய மக்களை எதிர்க்கும் வகையிலும் அவர்களை அந்த நிலத்திலிருந்து துண்டிக்கும் வகையிலும் அந்தச் சுவர் வடிவமைக்கப்பட்டது. 1711-ல் நியூயார்க் அதிகாரிகள் வால்வீதியில் ஒரு அடிமைச் சந்தையை நிறுவியிருந்தனர்.
ஜே.பி மார்கன் மற்றும் வச்சோவியா கார்ப் உள்ளிட்ட பல முக்கிய அமெரிக்க வங்கிகள் அடிமைகளை “இணைபொருளாக” ஏற்றுக்கொண்டன. “சுமார் 13,000 அடிமைகளை கடன்களுக்கு ஈடாகவும் சுமார் 1,250 அடிமைகளை விலைக்கு வாங்கியும் தன் வசம் வைத்திருந்ததாக” ஜே.பி மார்கன் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.
அமெரிக்க பள்ளி பாடப்புத்தகங்கள் அடிமைமுறை குறித்து சொல்லும் கதையில் அது வட்டார அளவிலானதாக சித்தரிக்கப்படுகிறது; அமெரிக்க தேசம் முழுவதிலும் அதற்கு பங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அது ஜனநாயகமும், சுதந்திரமும் நிலவிய அமெரிக்க ஆட்சி முறைக்கு ஒரு மிருகத்தனமான பிறழ்ச்சி என்று அடிமைத்தனம் சித்தரிக்கப்படுகிறது. தேசத்தின் நவீன மயம் நோக்கிய பயணத்தில் இந்த அடிமைத்தனம் ஒரு துரதிர்ஷ்டம் என்று சாதிக்கிறது. அதாவது, அடிமைத்தனமானது, அமெரிக்க பொருளாதார செழிப்பைத் தூண்டிவிட்ட இயந்திரம் அல்ல. உண்மையிலேயிருந்து அப்பாற்பட்டது இதைவிட எதுவும் இருக்க முடியாது.
அமெரிக்க முதலாளித்துவத்திற்கு அடிமைத்தனத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, லேமன் பிரதர்ஸ் என்றழைக்கப்படும் அலபாமா உலர்-பொருட்களின் நிறுவனத்தின் கலங்கிய வரலாற்றை மட்டும் பார்த்தால் போதுமானது.
வாரன் பஃபெட், பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்காவின் பணக்கார கோடீஸ்வரரும் ஆவார். பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் முன்னோடி நிறுவனம் ரோட் தீவைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி மற்றும் அடிமைத்தொழில் நிறுவனம் ஆகும்.
வடக்கில், நியூ இங்கிலாந்துதான் அமெரிக்கப் பருத்தி நெசவுத் தொழிலின் தாயகமாகவும் அடிமை ஒழிப்பு வாதத்தின் களமாகவும் விளங்கியது. தென் மாநிலங்களின் பருத்தி விவசாயத்தில், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளின் முதுகில்தான் இந்த வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. இது, நியூ இங்கிலாந்தின் தொழில்துறைப் புரட்சியை கட்டமைத்தவர்கள் பருத்தி விலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஏனெனில், தொலைதூரத் தோட்டங்களில் அடிமைகளின் உழைப்பு இல்லாமல் அவர்களது ஜவுளித் தொழிற்சாலைகள் அழிந்தே போயிருக்கும்.
“Complicity: How the North Promoted, Prolonged, and Profited from Slavery” என்ற “Anne Farrow” எழுதிய புத்தகம் அடிமை முறையும் வடக்கு முதலாளித்துவ வர்க்கமும் கோடிக்கணக்கான இழைகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறது: அடிமை உழைப்பு மூலம் கிடைத்த கரும்புச் சக்கைகளை கொண்டு அவர்களால் தயாரிக்கப்பட்ட ரம் முக்கோண வர்த்தகத்தின் ஒரு பகுதியாக விற்கப்பட்டது; அவர்கள் தெற்கு விவசாயிகளுக்கு பணம் கடன் கொடுத்தார்கள்; பிரிட்டனுக்கு விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான பருத்தி நியூ இங்கிலாந்து துறைமுகங்கள் மூலம் அனுப்பப்பட்டது.
சிவில் உரிமைகளின் நாயகனாக மாறினாலும், கறுப்பர்கள் வெள்ளையர்களுக்குச் சமமானவர்கள் என்று ஆபிரகாம் லிங்கன் நினைக்கவில்லை. லிங்கனின் திட்டம், அமெரிக்க கறுப்பின மக்களை ஆப்பிரிக்காவிற்கு திருப்பி அனுப்புவதாகும். அவர் படுகொலை செய்யப்படாதிருந்தால், ஆப்பிரிக்காவிற்கு கறுப்பர்களைத் திரும்பி அனுப்புவது சிவில் போருக்குப் பிந்தைய அவரது கொள்கையாக இருந்திருக்கலாம். லிங்கன், தனது சொந்த வார்த்தைகளில், அடிமை முறை ஒழிப்பு பிரகடனம் பிரிட்டனை சமாதானப்படுத்துவதற்கான “நடைமுறை யுத்த நடவடிக்கை” மட்டுமே என்று ஒப்புக் கொண்டார்.
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பின அடிமைத்தனம் சட்டரீதியாக முடித்து வைக்கப்பட்டது, அந்த மக்களுக்கு இன்றும் கிடைக்காத ஜனநாயக, பொருளாதார, இன சமத்துவத்திற்கான தேடலின் தொடக்கமாகவே அமைந்தது. இன்றும் அது அவ்வாறே தொடர்கிறது.
இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய சகாப்தத்தில், அமெரிக்க உயர்குடியினர் முதலாளித்துவ நாகரீகத்தை ஒரு இனவாத மற்றும் காலனியாதிக்க நடைமுறையாகவே கருதியது. இன்று வரையிலும், அமெரிக்க முதலாளித்துவத்தை “இனவாத முதலாளித்துவம்” என்று மட்டுமே சித்தரிக்க முடியும்:
நவீன அமெரிக்காவின் வெள்ளை ஆதிக்கமும், முதலாளித்துவமும் கருப்பின அடிமைத்தன மரபோடு ஒரே நேரத்தில் பிணைந்ததிருந்தன.
அமெரிக்காவில், கருப்பின மக்கள் ஒரு இனவாத முதலாளித்துவ அமைப்பில் வாழ்கின்றனர். இனவாத முதலாளித்துவம், போலீசாரின் நவீனகால படுகொலை அணிவகுப்பு மூலமும், இலாப நோக்கிலான பெருவீத சிறைவாசம் மூலமும் , நிறுவன ரீதியான பொருளாதார சமத்துவமின்மை மூலமும் கருப்பு சிறுபான்மையினரின் மீது தனது அதிகாரத்தை செலுத்துகிறது. இனவாத முதலாளித்துவம் சந்தேகத்திற்கு இடமின்றி நவீன மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் ஆகும். .
கருப்பின மக்களின் சமத்துவத்துக்கான குறியீடுகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கா விட்டால்தான் அடிமைகளின் நாட்டில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் தலைமை பதவியில் அமர்வதை கொண்டாட முடியும்.
உண்மையில், ஒபாமாவின் ஆட்சியின் போது கருப்பின வெள்ளை இன குடும்பங்களின் சொத்து இடைவெளி, ஒரு வெள்ளை டாலருக்கு ஏழு கருப்புசென்டுகள் என்ற வீதத்தில் மட்டுமே இருந்தன. ஒபாமா பதவியில் அமர்ந்ததில் இருந்து, கருப்பின மக்களின் வேலையின்மை வீதத்துக்கும் வெள்ளையினத்தவரின் வேலையின்மைக்கும் இடையிலான வேறுபாடு நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அமெரிக்க நாட்டின் காவல்துறை வரலாற்றுரீதியாக இனவாத முதலாளித்துவத்தை அமல்படுத்தி வந்திருக்கிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நடத்தைகளைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட அடிமை ரோந்துகளும் இரவு கண்காணிப்புகளும்தான் அமெரிக்காவின் முதல் நவீன போலீஸ் படைகள் ஆகும்.
உள்நாட்டுப் போருக்கு முன்னர், அடிமை மக்களை ஒடுக்கவும் வெள்ளை அடிமை உரிமையாளர்களின் சொத்துக்களையும், நலன்களையும் பாதுகாப்பதற்கும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே சட்டபூர்வமாக போலீஸ் படை இருந்ததை வரலாறு தெளிவுபடுத்துகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் அடிமை ரோந்துக்கும், நவீன அமெரிக்க போலீஸ் கொடூரத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் அவ்வளவு எளிதில் நிராகரிக்கவோ அல்லது கடந்து செல்லவோ இயலாத அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அமெரிக்காவில் முதல் போலீஸ் படைகள் நிறுவப்பட்ட பின்னர் இனவெறி படுகொலைகள் முதலாளித்துவ சட்ட ஒழுங்குக்கு அடிப்படையாக இருந்தன. அடிமை முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்ட பிறகு, அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பான க்ளூ க்ளக்ஸ் கிளான் (The Klu Klux Klan) அமெரிக்க அரசின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது.
பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இது ஜிம் க்ரோ சட்டங்களின் சகாப்தத்தின் இறுதி வரை நிலவிய இனவாத பயங்கரவாதத்தின் காலாவதியான வடிவம் என்று நம்புகின்றனர். ஆயினும், தடையற்ற கருப்பின மக்கள் மீதான படுகொலைகள் மீதான அமெரிக்காவின் விருப்பம் காலப்போக்கில் மேலும் அதிகரித்து மோசமாகி வந்திருக்கின்றது.
கார்டியன் செய்தித்தாள் சமீபத்தில் வெளியிட்ட செய்தியின்படி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஒரு வாரத்திற்க்கு சராசரியாக 2 கருப்பின மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.
மேலே சொன்னதை அமெரிக்க உளவுத்துறையான FBI-ஆல் தொகுக்கபட்ட அறைகுறை தரவுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதன்படி ஒரு வாரத்தில் 2 முறைக்கு மேல் ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர்கள் கொல்லப்படுகின்றனர். கருப்பின சமுதாயங்களில் போலீஸ் மிருகத்தனம் மிக மோசமாகி வருகிறது, குறையவில்லை என்பதையே இது தெளிவாக்குகிறது.
படுகொலை தூக்கிலிடுவதை மட்டும் குறிக்கவில்லை. அவமானப்படுத்துவது, சித்திரவதை செய்வது, எரிப்பது, துண்டு துண்டாக வெட்டுவது, விதையில் அடிப்பது ஆகியவை அதில் அடங்கும். ஒரு படுகொலை அமெரிக்க பொது சடங்காக இருந்தது, இது பெரும்பாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பொது இடங்களில் பெரிய எண்ணிக்கையிலான கூட்டங்களுக்கு முன்பாக நடைபெற்றது.
அடிமைத்தனம் அகற்றப்பட்டதற்குப் பின்னர், 1899-ம் ஆண்டில் ஸ்ப்ரிங்ஃபீல்ட் வீக்லி செய்தித்தாள் KKK நடத்திய ஒரு படுகொலையை விவரித்தது.
“ஒரு நீக்ரோ அடிமை அவரது காதுகள், விரல்கள் மற்றும் அவரது உடலின் பிறப்புறுப்புப் பகுதிகள் துண்டாக்கபட்டு உயிர் போவதற்கு முன்பே, குளிர்வதற்கு முன்பே உடல் துண்டுகளாக வெட்டப்பட்டது. உடல் வெட்டப் படும் போதே தன்னை விட்டு விடுமாறு அவர் பரிதாபமாக கதறிக் கொண்டிருந்தார். எலும்புகள் சிறு துண்டுகளாக நொறுக்கப்பட்டன. இதயம் பல துண்டுகளாக வெட்டப்பட்டது. அதே போல் அவரது கல்லீரலும்…சிறிய துண்டு எலும்புகள் 25 சென்ட் விலைக்கு விற்றன… “.
இனவாத முதலாளித்துவம் நிலைத்திருப்பதன் அடைப்படையாக இனவாத பயங்கரவாதம் உள்ளது. அதனால்தான் இன்றுவரை, அமெரிக்க அரசாங்கம் KKK ஐ உள்நாட்டு பயங்கரவாத அமைப்பு என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறது.
இனவாத பயங்கரவாதம் கருப்பின சமூகங்களை நிறுவன ரீதியாக கட்டுப்படுத்தி சிறைப்படுத்தி வைப்பதுடன் கைகோர்த்து செல்கிறது. போதைப்பொருள் மீதான போர் என்கிற முகாந்திரத்தில், அமெரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எண்ணிக்கை தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியின் உச்சத்தில் இருந்த எண்ணிக்கையை விட அதிகம்.
தனியார் சிறைச்சாலைகள் பணக்காரர்களால் பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டன. இலாபத்திற்கான இந்த சிறைச்சாலை முறை அதன் இருத்தலுக்காக கருப்பினத்தவரை சிறையில் அடைப்பதை சார்ந்துள்ளது. அமெரிக்காவும் இதுபோன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, 1850-ம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர் அடிமைப்படுத்தப்பட்டிருந்த எண்ணிக்கையை விட அதிகமான கருப்பின ஆண்கள் இன்று சிறைச்சாலையில் அல்லது பரோலில் உள்ளனர்.
19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடிமை முறையையும் மீறி நடக்கவில்லை. அடிமை முறையின் மூலம்தான் நடந்திருக்கிறது. அந்த வகையில் அடிமைத்தனத்திற்கு அமெரிக்கா மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது. முதலாளித்துவம் அடிமைமுறையால் உருவானது, அடிமை முறையோ இன்றும் அமெரிக்காவில் தொடரும் இனவாத முதலாளித்துவத்தின் மரபை உருவாக்கியது.
வரலாற்று ரீதியாக அமெரிக்கா உயர்வாக தூக்கிப் பிடிக்கும் கொள்கைளுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வெளிப்படையான நிரந்தர இரண்டாம்-தர நிலைக்கும் இடையே கூர்மையான இடைவெளி உள்ளது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திர தேவி சிலை பல லட்சம் வெளிநாட்டவர்களின் வருகையை நியூயார்க்கில் பார்த்துக் கொண்டிருந்த போது, தெற்குப் பகுதி கருப்பின விவசாயிகளையும் தமது சொந்த மண்ணிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
அமெரிக்கா நாஜிக்களை போரில் தோற்கடித்த பிறகும் அமெரிக்காவில் இனவாத கருத்தியலின் பாசாங்குத்தனம் தொடர்கிறது. இன்றளவும் அமெரிக்காவின் இன சமனிலைக் குறியீடுகளும், இன உறவுகளும், அது ஒரு இனப் பாகுபாடற்ற தேசம் என்று அறியப்படுவதற்கு வெகு தொலைவிலேயே உள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயகப் பரிசோதனைக்கு அச்சுறுத்தலாகவும், மிகப் பெரிய தேசிய இக்கட்டாகவும் நிறவெறி உள்ளது. அடிமைத்தனத்தின் மிக நீண்ட மரபின் தொடர்ச்சியான இனவாத முதலாளித்துவத்தை முழுமையாக அம்பலப்படுத்தி முற்றிலும் அகற்றுவதை வரை கறுப்பின சமூகங்களின் கொந்தளிக்கும் அதிருப்தி ஒரு அபாயகரமான கொதிநிலையை நோக்கி உயர்ந்து கொண்டே செல்லும்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
தமிழகத்தில் போராடுகின்ற அமைப்பினர் மற்றும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்டு பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விடுகிறது தமிழக அரசு. போராடத் தூண்டுபவர்கள் மீது அடக்குமுறை பாயும் என பாசிச ஜெயாவின் ஆவி புகுந்தவராக கொக்கரிக்கிறார் ஜெயாவின் அடிமை எடப்பாடி.
மெரினாவில் அஞ்சலி செலுத்தச் சென்ற திருமுருகன், கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடம் பிரச்சாரம் செய்த கோவை சட்டக்கல்லூரி மாணவர் வினோத், கதிராமங்கலம் – நெடுவாசல் பிரச்சினையயியொட்டி துண்டறிக்கை கொடுத்ததற்காக மாணவி வளர்மதி, முகநூலில் போராட்ட அழைப்புவிடுத்த சிதம்பரம் முனைவர் பட்ட மாணவர் குபேரன் எனத் தொடர்கிறது கைது பட்டியல். ஆனால் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த அதிமுக அமைச்சர்கள் சுதந்திரமாக சுற்றிவருகின்றனர்.
1991 ஜெயா ஆட்சியின் போது எதைப் பேசினாலும் தடா என தன் காட்டாட்சியை நடத்தினார். “அப்போது சிறைமதில்களைத் தாண்டி, அடக்குமுறைக் கொட்டடிகளைத் தாண்டி போராடுபவர்களின் குரலாக” மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இருண்டகானம் ஒலிப்பேழை ஒலித்தது.
இன்று ஜெயாவின் தொடர்ச்சியாக, அடிமைகளின் ஆட்சியாக நீளும் பாஜக பினாமி எடப்பாடி அரசை ஏளனம் செய்கிறது இப்பாடல். பாடலின் முன்னோட்டம் இன்று. முழுப் பாடல் நாளை வெளியாகும்.
_______________________
இந்த டீசர் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா! அடக்குமுறைக்கு எதிரான ம.க.இ.க பாடல்களை இசைக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி
விவசாயத்துறை நெருக்கடியைப் பற்றிப் பேசும்போது, பேசுபவர்கள் அனைவருக்கும் அந்தப் பொருள் குறித்து கருத்தொற்றுமை நிலவுவதாக எண்ணிக் கொள்கிறோம். அது உண்மையல்ல. விவசாயத்துறை நெருக்கடியைத் தீர்ப்பதாக கூறிக்கொள்ளும் ஆளும் வர்க்க திட்டங்கள் அனைத்துமே விவசாயப் பிரச்சினை வேறு, அதில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் பிரச்சினை வேறு என்று இரண்டையும் பிரித்து விடுகின்றன.
எனவே, அவர்கள் முன்வைக்கின்ற தீர்வுகள், எதிர்காலத்தில் விவசாயத் துறையை விழுங்க இருப்பவர்களுடைய லாபத்தையும் உற்பத்தியையும் அதிகரிப்பது என்ற கண்ணோட்டத்திலேயே அமைந்திருக்கின்றன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கூறுவது இந்தப் பொருளில்தான். தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கையையும் உற்பத்தித் திறனையும் உயர்த்துவது பற்றி மோடி பேசவில்லை.
உண்மையைச் சொல்வதென்றால், ஆட்சியாளர்கள் தாங்கள் கொண்டுவர விரும்பும் மாற்றத்துக்கு மிகப்பெரிய இடையூறே விவசாயிகள்தான் என்று கருதுகிறார்கள். விவசாயம் என்ற பெருங்கடலில், கொள்ளை லாபம் தரக்கூடிய சில தீவுகளை பன்னாட்டு மூலதனத்தின் பங்கேற்புடன் உருவாக்குவதுதான் அவர்கள் திட்டம். இதற்கு வெளியே இருக்கின்ற ஆகப் பெரும்பான்மையான இந்த நாட்டின் விவசாயிகள், வேலை தேடி நாடோடிகளாக அலைந்து மெல்ல மக்கி மடியட்டும் என்பதுதான் அவர்களது திட்டம். எனவேதான், ஆளும் வர்க்கத்தின் இந்த திட்டம் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றது.
பஞ்சாபில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி, அம்மாநிலத்தின் பதிண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
விவசாயிகளையோ, தொழிலாளர்களையோ ஆளும் வர்க்கம் எப்படிப் பார்க்கிறது? அரசாங்கமோ அல்லது சந்தையோ அளிக்கின்ற தூண்டுதலுக்கேற்ப உழைத்து, தங்களுக்கு லாபத்தை ஈட்டித் தருவதுதான் அவர்களது பிறவிக்கடன் என்று பார்க்கிறது. ஆனால் விவசாயிகள் ஜடங்கள் அல்ல, அவர்கள் சமூக மனிதர்கள். அவர்களுடைய அறிவும் அனுபவமும் அளப்பரியது. இருப்பினும் நடப்பில் உள்ள சமூக உறவுகள் அவர்களது முழு ஆற்றலையும் வெளிக்கொணர முடியாமல் தடுக்கிறது.
எனவே, விவசாயிகள் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பரிசீலிக்கும்போது, அவற்றை தற்போது நிலவும் சூழலை வைத்து மட்டும் பார்க்கக்கூடாது. அதனை ஒரு நிகழ்ச்சிப்போக்காக பார்ப்பதுடன், பொருளாதாரத்தின் மற்ற துறைகளுடன் இணைத்தும் அதனைப் பார்க்க வேண்டும். விவசாயிகளை எந்த ஜீபூம்பா வேலையாலும் பணக்காரர்களாக்க முடியாது. நாட்டின் மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகளையும் ஊக்கமான பங்கேற்பாளர்களாக்குவதுதான் நமது நோக்கமாக இருக்க முடியும்.
2012−13ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அளிக்கும் புள்ளி விவரத்தின்படி, மொத்த வேலைவாய்ப்பில் விவசாய வேலைவாயப்பின் பங்கு 52%. தேசிய அளவில் தமது உழைப்பின் மூலம் ஒரு தொழிலாளி உருவாக்கும் சராசரி மதிப்பில் 29 விழுக்காட்டைத்தான் ஒரு விவசாயியின் உழைப்பு உருவாக்குகிறது. அதே நேரத்தில் நிதித்துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் உருவாக்கும் சராசரி மதிப்பு, ஒரு விவசாயத் தொழிலாளி உருவாக்கும் மதிப்பைப்போல 25 மடங்கு அதிகம்.
அதே போல தொழிலாளர்களின் 85% அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாதவர்கள். இவர்கள் தமது உழைப்பின் மூலம் உருவாக்கும் மதிப்பு என்பது அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பில் 5.1% அதாவது விவசாயத்திலிருந்து வெளியேறி அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத தொழிலாளிகளாக மாறுபவர்களுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் மேம்படுவதில்லை என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. இன்னொரு முனையில், மிகவும் குறைவான பேர்களுக்கே வேலை வாய்ப்பளிக்கும் நிதித்துறை போன்ற ஒட்டுண்ணித் துறைகள், தேசிய வருமானத்தின் பெரும்பங்கை விழுங்குகின்றன.
வளர்ச்சி என்ற பெயரில் அழிவு
உற்பத்தியை அதிகப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். அல்லது ஒரு தொழிலாளியின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலமும் உற்பத்தியை அதிகரிக்கலாம். உற்பத்தியை அதிகரிக்க எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்ற பார்வையில் உள்ள வேறுபாடுதான், வளர்ச்சி பற்றிய இரண்டு முரண்பட்ட கண்ணோட்டங்களுக்கு காரணமாகிறது. ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் யார் ஆதாயமடைகிறார்கள் என்பதுதான் எந்த வளர்ச்சிப் பாதை என்பதைத் தீர்மானிக்கிறது.
இந்திய ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தின்படி விவசாயமும் அமைப்பு ரீதியில் இல்லாத தொழில்களும் உற்பத்தித் திறன் குறைந்த தொழில்கள். இவற்றின் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலேயே இவற்றில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அவ்வாறு அவர்களை வெளியேற்றினால் மட்டும்தான், போடப்பட்டிருக்கும் முதலீட்டிற்கு கிடைக்கின்ற லாபத்தை அதிகரிக்க முடியும்.
முதலீட்டின் மீதான லாபத்தை அதிகரிப்பது என்பதன் பொருள், கார்ப்பரேட் திட்டங்களுக்காக நிலத்தை கட்டாயமாக கையகப்படுத்துதல், நிலத்தைக் குவித்து பண்ணைகளை உருவாக்குதல், விவசாயம் சார்ந்த வணிகங்களில் கார்ப்பரேட்டுகளை நுழைத்தல், சிறு தொழில்களை அழித்தல், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்தல் – என்பவைதான்.
தமிழகத்தில் உள்ள கதிராமங்கலம் கிராமத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறக் கோரி நடந்துவரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக சிறுவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
விவசாயம் மற்றும் சிறு தொழில்களிலிருந்து வெளியேற்றப்படுவோருக்கு மற்ற துறைகளில் தானாகவே வேலை கிடைத்துவிடும் என்பதுதான் சுதந்திர சந்தையின் விதி என்பது தான் ஆளும் வர்க்க பொருளாதார வல்லுநர்களின் கருத்து. ஆனால் தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த விதி வேலை செய்யவில்லையே, ஏன் என்று கேட்டால், தொழிலாளர் நல சட்டங்கள், நில உச்ச வரம்பு சட்டம், சிறு தொழில்களுக்குப் பாதுகாப்பு என்பன போன்ற சுதந்திர சந்தைக் கோட்பாட்டுக்கு எதிரான சட்டங்களை அகற்றி விட்டால், முழு வேலைவாய்ப்பு உடனே பெருகும் என்கிறார்கள்.
‘‘ஒரு அளவுக்கு மேல் விவசாயத்தால் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே மக்கள்தொகையை விவசாயத்திலிருந்து வெளியேற்றி, விவசாயம் சாராத தொழில்களுக்கு அனுப்புவது மிகமிக அவசியம்’’ என்று கூறுகிறது நிதி ஆயோக்−இன் வல்லுநர் குழு அறிக்கை (மார்ச், 2016).
‘‘இந்தியாவில் எண்ணற்ற சிறு நிறுவனங்கள் தொடர்ந்து சிறு நிறுவனங்களாகவே நீடிக்கின்றன. அவை கவுரமாக செத்துப்போவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சிறிய விவசாய நிலங்கள் போதிய வருவாய் தருவதில்லை. அவற்றை (கார்ப்பரேட் பண்ணைகளுக்கு) குத்தகைக்கு விடவும் (சட்டம்) அனுமதிப்பதில்லை. விவசாயத்துக்கு மென்மேலும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. நகரமயமாக்கத்தை தடுக்கும் பொருட்டு கிராமங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கிறது’’ என்று கூறும் மைய அரசின் 2012−13 பொருளாதார ஆய்வறிக்கை, இதற்கான மாற்றையும் முன்வைக்கிறது.
‘‘விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெரும் பண்ணைகளை உருவாக்கி மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் புகுத்த வேண்டும். தோட்டத்தொழில், பால் பண்ணைகள், இறைச்சித் தொழில் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம்தான் விவசாயத்துறையை ஆரோக்கியமானதாக மாற்ற முடியும்’’ என்கிறது.
நிலச்சீர்திருத்தம் என்ற சொல்லின் பொருள், பெரு நிலக்கிழார்களின் நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு மறு பங்கீடு செய்வது என்பதுதான் வரலாறு.அப்படித்தான் நாம் அறிந்திருக்கிறோம். கார்ப்பரேட்டுகளுக்காக நிலம் கையகப்படுத்துவது, சிறு விவசாயிகள் தமது நிலத்தை கார்ப்பரேட் பண்ணைகளுக்கு குத்தகைக்குவிட வகைசெய்வது என்பன போன்ற தனது ஆலோசனைகளுக்கு நிலச்சீர்திருத்தம் என்று தலைப்பிட்டிருக்கிறது இந்த அறிக்கை.
விவசாயத்திலிருந்து வெளியேற்றப்படும் விவசாயிகளுக்கு தொழில்துறை வேலை வாய்ப்பளித்துவிடும் என்பதாக இந்த அறிக்கைகள் தீட்டும் சித்திரம் உண்மைக்குப் புறம்பானது. ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு இன்றைய கணக்கின்படி ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றால், 1980−இல் இதே தொகைக்கு 4.5 வேலைவாய்ப்புகள் உருவானது என்பதே புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை. தொழிலாளிகள் அதிகம் தேவைப்படுகின்ற ஆடைத்தயாரிப்பு, காலணி, சோப்பு தயாரிப்பு போன்ற தொழில்களிலும்கூட முன்னிலும் அதிகமாக எந்திரமயமாக்கம்தான் நிகழ்ந்திருக்கிறது.
அதனால்தான் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் அமைப்புரீதியான உற்பத்தித் துறைகள் சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தே வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் ஆலை அதிபர்களுக்கு சாதகமான முறையில் தளர்த்தப்பட்ட பின்னரும், தொழிலாளர்களின் ஊதியம் குறைந்த பின்னரும், அவர்களை வெளியேற்றுவது எளிதாக்கப்பட்ட பின்னரும், ஆலை முதலாளிகள் தொழிலாளர்களைக் காட்டிலும் எந்திரங்களையே நாடுகின்றனர்.
ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி நகரை நிர்மாணிப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
இதற்குப் பல காரணங்கள் உள்ளன என்ற போதிலும், இரண்டு காரணங்கள் முக்கியமானவை. தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தை தொடர்ந்து எந்திரங்கள் போன்ற மூலதனப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுவிட்டதால், அவை ஒப்பீட்டளவில் மலிவாகிவிட்டன. இரண்டாவதாக, தனியார்மய கொள்கைகளின் விளைவாக சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதால், வாங்கும் சக்தியுள்ள பிரிவினரே தொழில்துறையின் நுகர்வோராகின்றனர். அந்த மேட்டுக்குடி வர்க்கமோ மேற்குலக நுகர்பொருள் சந்தை எதை நாடுகிறதோ, அதையே பின்பற்றுகிறது.மேற்குலகில் செல்வாக்கு செலுத்தும் பிராண்டுகளையே வழிபடுகிறது.
எனவே, கிராமப்புறத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு தொழில்துறை வேலைவாய்ப்பளிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழில்துறைகளில் பரவத் தொடங்கியிருக்கும் தானியங்கிமயமாதல், இந்தியாவுக்கும் வரும் என்பதால் தொழில்துறை வேலைவாய்ப்பு நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
மாற்று அணுகுமுறை
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களை சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது. மாறாக, நமது அணுகுமுறையோ விவசாயிகளை முன்முயற்சியுள்ள குடிமக்களாக, மாற்றத்தின் தூதர்களாகப் பார்க்கிறது. இந்த அணுகுமுறையின் அடிப்படைகள் இரண்டு. முதலாவதாக, அரசின் உதவியுடன் சிறு உற்பத்தியாளர்களாக இருக்கும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி அவர்களது உற்பத்தி திறனை உயர்த்த வேண்டும்.
சிறு விவசாயிகளை ஒரு ஒருங்கிணைந்த அரசியல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் மெல்ல மெல்ல தொழில்துறை உற்பத்தியை நோக்கி கொண்டுவர வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, தனியே திட்டம் போடும் ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறைக்கு மாறாக இந்த அணுகுமுறை உற்பத்தியையும் விநியோகத்தையும் ஒருங்கிணைந்த முறையில் அணுகுகிறது.
விவசாயத்தை முன்னேற்றுவதற்கு அதி நவீன எந்திரங்களும் முதலீடும் வெளியிலிருந்து வரும் என்று காத்திருப்பதற்கு பதிலாக, அரைகுறை வேலைவாய்ப்புடன் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களை நீர் மேலாண்மை, பாசனம் போன்ற பணிகளில் ஈடுபடுத்தி விவசாயத்துறையை முன்னேற்ற முடியும்.
பயனற்றுக் கிடக்கும் மிகப்பெரிய அளவு உழைப்பாளர் சக்தி உண்மையில் அரைகுறை வேலைவாய்ப்பின் காரணமாக மிகப்பெரும் உழைப்பு சக்தி பயனற்று வீணாகிக் கொண்டிருக்கிறது.
இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள நாம் சில சொற்றொடர்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். முழுமையாக வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களை நாம் உழைப்பாளர்கள் (workforce) என்று குறிப்பிடுகிறோம். இவர்களுடைய எண்ணிக்கையுடன் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் கிடைப்பது நாட்டின் மொத்த உழைப்பு சக்தி.
மரபீணி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் திணிக்கப்படுவதை எதிர்த்தும், பன்னாட்டு விவசாய கம்பெனிகளை இந்தியாவிலிருந்து வெளியேறக் கோரியும் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
வேலை கிடைக்காது என்பதால் வேலை தேடுவதைக் கைவிட்டவர்கள் ஏராளம். தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1991−2011 காலகட்டத்தில் 16.7 கோடிப்பேர் புதிதாக வேலைவாய்ப்பு சந்தைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் 9 கோடிப்பேருக்கு கிடைத்திருப்பது பகுதி நேர வேலைவாய்ப்பு. அதாவது, ஆண்டில் பாதி நாட்கள் வேலை இல்லாதவர்கள். இவர்களன்றி மிகமிக குறைந்த வருவாய்க்கு சின்னஞ்சிறு தொழில்களில் வேலை செய்வோர் உள்ளனர். இதனை போக்கிடமற்ற வேலைவாய்ப்பு என்று நாம் கூறலாம்.
மொத்தத்தில் கடல் போன்ற இந்த உழைப்பு சக்தியை விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில், மேம்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட உழைப்பில் ஈடுபடுத்த முடியும். இவர்களுக்கெல்லாம் பெரிய தொழில்நிறுவனங்கள் ஒருபோதும் வேலை தரப்போவதில்லை. இவர்களை விவசாயத்திலும், உள்நாட்டு சந்தைத் தேவைக்கு பொருள்களை உற்பத்தி செய்கின்ற கிராமப்புற சிறு தொழில் நிறுவனங்களிலும் ஈடுபடுத்த முடியும். இத்தகைய தொழில்களைத் தொடங்குவதற்கு அந்நிய மூலதனமோ, இறக்குமதி தொழில் நுட்பமோ தேவையில்லை.
உண்மையான தடை யார்?
மேலே கூறியிருப்பவையெல்லாம் புதிய கருத்துகள் அல்ல. ஐந்தாண்டு திட்டங்களின் தொடக்க காலத்தில் முன்வைக்கப்பட்டவைதான். அவை ஏன் நடக்கவில்லை என்றால், மேற்சொன்ன வளர்ச்சிப் பாதையை விவசாயத்திலும் தொழில்துறையிலும் தற்போது நிலவுகின்ற உடைமை உறவுகள் தடுக்கின்றன.
விவசாயத்திலிருந்து கிடைக்க வேண்டிய உபரியை பெரு நிலவுடைமையாளர்களும், கந்து வட்டி − கமிசன் மண்டிக்காரர்களும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் பல்வேறு வழிகளில் உறிஞ்சி எடுத்து உற்பத்தி சாராத ஊதாரித்தனங்களில் அழிக்கிறார்கள். அவர்களுடைய நலனுக்கு இந்த வளர்ச்சிப்பாதை எதிரானது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.
ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கும் வளர்ச்சிப் பாதையைப் பரிசீலித்துப் பார்ப்போம். இன்றைய புள்ளிவிவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 17% மட்டுமே. (விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றி கார்ப்பரேட் மயமாக்குவதன் மூலம் தங்களது லாபத்தை அதிகரித்துக் கொள்வதுதான் அவர்களது நோக்கமேயன்றி, மொ.உ.உற்பத்தியில் விவசாயத்தின் பங்கை அதிகரிப்பது அல்ல.) அவ்வாறு அதிகரிப்பது ஆளும் வர்க்கத்தின் திட்டத்திலேயே இல்லை.
உழைப்பு சக்தியை மையப்படுத்துகின்ற வேலைவாய்ப்பையும் உழைப்பின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கின்ற நமது பார்வையிலிருந்து இதனைப் பார்க்கும்போது, வேறு முடிவுக்கு நாம் வருகிறோம். இந்தப் பார்வையின்படி நாட்டின் 50% உழைப்பாளர்களுக்கு வேலை கொடுக்கின்ற விவசாயம் நமக்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த துறையாகிவிடுகிறது.
அதேபோல தொழில்துறையை எடுத்துக் கொண்டால், அதில் 85% வேலைவாய்ப்பை வழங்குகின்ற சிறு தொழில்கள் நம் பார்வையில் முக்கியத்துவம் பெறுகின்றன. உழைப்புச் சக்தியை இந்தத் துறைகளில் முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலம் கிடைக்கின்ற உபரியை, இவர்களை உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணி வர்க்கங்களுக்கு செல்லவிடாமல் தடுக்க வேண்டும்.
விவசாயிகள்பால் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை என்பது, அவர்களைச் சடப்பொருளாக கருதுகிறது. எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அவர்களை விவசாயத்திலிருந்து தூக்கி வீசுகிறது. மாறாக, நமது அணுகுமுறையோ விவசாயிகளை முன்முயற்சியுள்ள குடிமக்களாக, மாற்றத்தின் தூதர்களாகப் பார்க்கிறது.
ஆனால், சமூக பொருளாதார ஆதிக்கத்தில் இருக்கும் சுரண்டும் வர்க்கங்கள், ஏழை விவசாய வர்க்கத்தினரின் சுயேச்சையான கூட்டு முயற்சிகள் அனைத்தையும் நசுக்குவார்கள். எனவே இந்த ஒட்டுண்ணி வர்க்கங்களின் ஆதிக்கத்தைத் தூக்கியெறிய, பரந்துபட்ட விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டியமைக்கும் பணியின் வழியாகத்தான், உற்பத்தி துறையில் விவசாயிகளிடையேயான கூட்டுறவையும் உருவாக்குவதும் சாத்தியம்.
தொழில்துறையைப் பொருத்தமட்டில், நிலவுகின்ற அரசமைப்பில் சிறு உற்பத்தியாளர்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை. பெரும்பான்மை மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால், இவர்களுக்கு சந்தை இல்லை, விநியோக வலைப்பின்னல், வங்கிக்கடன் உள்ளிட்ட எதுவும் இல்லை. மேட்டுக்குடி வர்க்கத்தினரின் சந்தையை பெரு வணிக நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்கின்றன.
இவர்களுடன் போட்டி போடவேண்டுமானால், தமது தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதைத் தவிர சிறு தொழில்களுக்கு வேறு வழி இருப்பதில்லை. பலர் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் பணி செய்து கொடுத்தே காலம் தள்ளுகின்றனர். (வேறொரு வகையில் பார்த்தால், பெரும் தொழில் நிறுவனங்கள் தவிர்க்கமுடியாதவை அல்ல என்பதற்கு இது ஒரு சான்று.) தொழில் உற்பத்தி துறையில் 85% பேருக்கு வேலைவாய்ப்பளிப்பவை சிறு தொழில்கள்தான்.
ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கோ வெறும் 22%. சிறு தொழில்கள் வளர வேண்டுமானால், அவற்றின் சந்தையான விவசாயப் பொருளாதாரம் மேம்படவேண்டும். அதற்கு விவசாய உற்பத்தி உறவுகளில் மாற்றம் வேண்டும். நிலப்பங்கீடு, இயற்கை வளங்களின் மீது மக்கள் அதிகாரம், கந்து வட்டி ரத்து, கமிசன் மண்டிகளுக்கு முற்றுப்புள்ளி போன்ற நடவடிக்கைகளின் விளைவாக விவசாயிகளின் வாங்கும் சக்தி சிறிதளவு அதிகரித்தால்கூட அது சிறு தொழில் வளர்ச்சியை பெருமளவுக்கு ஊக்குவிக்கும்.
சந்தையை விரிவுபடுத்துதல்
ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்ப்போம். புடவை, வேட்டி, துண்டு, லுங்கி, சட்டை, காற்சட்டை, சுடிதார், உள்ளாடை, காலுறை, கையுறை, கோட்டு, தொப்பி, போர்வை, தலையணை, கொசுவலை, மிதியடி போன்ற அனைத்துக்கும் சேர்த்து ஒரு கிராமப்புற குடிமகன் ஆண்டொன்றுக்கு செய்யும் செலவு சராசரியாக 964 ரூபாய் என்கிறது தேசிய மாதிரி சர்வே, 2011−12. இது கிராமப்புற பணக்காரர்களையும் உள்ளடக்கி கணக்கிடப்பட்ட சராசரி.
கிராமப்புற மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்த 964 ரூபாய் கூட செலவழிக்க சக்தியில்லாதவர்கள். (ஆனால் கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் வெறும் 25.7% என்கிறது அரசின் 2011−12 புள்ளிவிவரம்.)
இவ்வளவு மோசமான பொருளாதார நிலையிலிருந்து ஏழை விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டால், அவர்கள் துணிமணி போன்றவற்றுக்கு கூடுதலாக செலவழிப்பார்கள். துணி, செருப்பு போன்ற எளிய நுகர்பொருட்களை உற்பத்தி செய்கின்ற சிறிய கிராமப்புற தொழிற்சாலைகள் பல இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்க முடியும். உயர் தொழில்நுட்பமோ, எந்திரமோ, பெரும் மூலதனமோ இவற்றுக்குத் தேவையில்லை.
விவசாயத்துறையில் செய்யப்படும் சீர்திருத்தம் இத்தகைய கிராமப்புறத் தொழில்களை ஊக்குவிக்கும். விவசாய வேலை இல்லாத காலத்தில் இந்த கிராமப்புறத் தொழில்கள் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும். விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் கூட்டுறவு முறையிலான உற்பத்தியிலிருந்து கிடைக்கின்ற உபரி, இந்த சிறு தொழிற்சாலைகளுக்கான முதலீட்டை வழங்க முடியும். இவையெல்லாம் யாரும் அறியாத உண்மைகள் அல்ல. எனினும் இவை காலாவதியானவை என்று ஒதுக்கப்படுகின்றன.
ஏனென்றால், நாம் கூறுகின்ற புரட்சிகரமான விவசாய சீர்திருத்தம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதையும் வழங்காது. மாறாக, கிராமப்புற நிலச்சீர்திருத்தம் கார்ப்பரேட்டுகளின் சந்தையான கிராமப்புற பணக்கார வர்க்கத்தினரின் சந்தையை சுருக்கவே செய்யும்.
முக்கியமாக, புரட்சிகரமான விவசாய சீர்திருத்தம் என்பது இந்திய வரலாறு கண்டிராத ஒரு சமூக கொந்தளிப்பை தோற்றுவிக்கும். சட்டத்தால் புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்கும். மக்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான அமைப்புகளைத் தோற்றுவிக்கும். உழைப்புச் சுரண்டல், அரசு மானியங்கள், இயற்கை வளக்கொள்ளை ஆகியவற்றால் கொழுத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்கு இது மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
ஆகையினால்தான், தொழில் வளர்ச்சி நீடிக்க வேண்டுமென்றால் நிலச்சீர்திருத்தமும் நில விநியோகமும் தேவை என்று முன்பெல்லாம் பேசிக்கொண்டிருந்த பொருளாதார வல்லுநர்கள், இப்போது அதுபற்றி மூச்சே விடுவதில்லை. விவசாய சீர்திருத்தம் என்பதே காலாவதியாகிப்போன விவகாரம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
என்ன விதமான தொழில் வளர்ச்சியை நாம் விழைகிறோம்? கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தை மேலும் கொழுக்க வைக்கின்ற வளர்ச்சியையா அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியையா என்ற கேள்விக்கு முரண்பட்ட இரண்டு பதில்கள் உண்டு. அவை நேர் எதிரான வர்க்கப் பார்வைகளிலிருந்து வருபவை. மக்கள் மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியை வேறொரு புதிய சமூக அமைப்பின் கீழ்தான் நாம் சாதிக்க இயலும்.
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி