விவசாயத்தை அழித்துவிட்டு பணத்தையா சாப்பிட முடியும்? -ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நாட்டின் வளர்ச்சியாக நியாயப்படுத்தும் ஆளுங்கும்பலின் கருத்தை கேலிசெய்யும் விதத்தில் வாழை இலையில் காசு, பணத்தை வைத்துச்சாப்பிடும் போராட்டத்தை நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்கள்.
காவிரிப் பிரச்சினையாலும் மணல் கொள்ளையாலும் கச்சா எண்ணெய், எரிவாயு துரப்பணவுத் திட்டங்களாலும் அழிவை நோக்கித் தள்ளப்படும் தமிழத்தின் நெற்களஞ்சியத்தின் மீது பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்ற அணுகுண்டை வீசியிருக்கிறது, எடப்பாடி அரசு. தமிழக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் வேளையில், அவர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதிக்கொண்டு, நாகை, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கும் திமிர்த்தனம் சகிக்கவொண்ணாதது.
விவசாயத்தை அழித்துவிட்டு பணத்தையா சாப்பிட முடியும்? -ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நாட்டின் வளர்ச்சியாக நியாயப்படுத்தும் ஆளுங்கும்பலின் கருத்தை கேலிசெய்யும் விதத்தில் வாழை இலையில் காசு, பணத்தை வைத்துச்சாப்பிடும் போராட்டத்தை நடத்தும் கதிராமங்கலம் கிராம மக்கள்.
கிராமமும் இருக்கும், தொழிற்சாலையும் இருக்கும் என வழமையான முறையில் இம்மண்டலத்தைப் புரிந்துகொள்ளக் கூடாது. ஒரு பெட்ரோ கெமிக்கல் மண்டலம் என்பது ஏறத்தாழ 250 சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பாகும். இம்மண்டலம் அமைய நாம் அனுமதித்தால், விவசாயம் அழிந்து போவது மட்டுமல்ல; அக்கிராம மக்கள் ஊரையே காலிசெய்து விட்டு அகதிகளாக வெளியேறும் நிலைகூட ஏற்படக் கூடும்.
இது மிகைப்படுத்தப்பட்ட ஊகமல்ல. பத்து பதினைந்து ஆடி ஆழத்தில் சுவையான நீர் கிடைத்துவந்த கதிராமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று 150 அடி தோண்டினாலும் பருகுவதற்கோ, பயிருக்கோ பயன்படுத்த முடியாத எண்ணெய் கலந்த நீர்தான் கிடைப்பதாகக் கூறுகிறார்கள், அக்கிராம மக்கள். 11 எண்ணெய்க் கிணறுகளைக் கொண்ட கதிராமங்கலத்தின் நிலையே இதுதான் என்றால், பத்துக்கணக்கான பெரும் தொழிற்சாலைகள் அமையவுள்ள நாகை, கடலூர் மாவட்டக் கிராமங்களின் கதி என்னவாகக் கூடும்?
”அம்மண்டலத்தில் துரப்பணவுப் பணிகள் எதுவும் நடைபெறாது. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் ஆலைகள் மட்டுமே அமையப் போவதாக” -த் தமிழக அரசும் மத்திய பா.ஜ.க. அரசும் விளக்கமளிக்கின்றன. ”மண்ணெண்ணெய்தான் எடுக்கப் போவதாகக் கூறி கதிராமங்கலத்திற்கு நுழைந்த ஓ.என்.ஜி.சி. இப்பொழுது மீத்தேனைத் தேடிக் கொண்டிருப்பதாக” அப்பகுதி மக்கள் சந்தேகிக்கிறார்கள். யோக்கியனைப் போலப் பேசும் பா.ஜ.க.வைத் தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.
துரப்பணவு தொடங்கி சுத்திகரிப்பது வரையிலான எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்காமல் செய்துமுடிக்க முடியாது. டெல்டா மாவட்டங்களோ கடல் மட்டத்திலிருந்து வெறும் ஒரு மீட்டர் உயரத்தில்தான் அமைந்திருக்கின்றன.
கடந்த நூறாண்டுகளில் டெல்டாவில் வண்டல் மண் போதிய அளவில் படியாததாலும், பருவ நிலை மாறுபாடுகளாலும், அம்மாவட்டப் பகுதிகள் பூமிக்குள் இறங்கத் தொடங்கி, கடல் நீர் உள்ளே புகும் அபாயத்தை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கடலையொட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் ஏற்கெனவே நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.
இப்படிபட்டதொரு நிலையில் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கும் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைப் புல் பூண்டுகூட முளைக்க இலாயக்கற்ற உவர் நிலமாக மாற்றும் சதி தவிர வேறில்லை. காவிரியில் தனது உரிமையைக் கோரும், டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரிவரும் தமிழக மக்களைச் சீண்டிப் பார்க்கும் மாபெரும் அநீதி இது.
‘சோழ நாடு சோறுடைத்து‘ என்ற வரலாற்றுப் பெருமை கொண்டது காவிரி டெல்டா பகுதி. இப்பகுதியின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது நெல் விவசாயம்தான். தமிழர்களின் இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கழிப்பறை காகிதம் போலக் கசக்கி எறியத் துணிந்திருக்கிறது, பாரதப் பண்பாடு பேசும் பா.ஜ.க.
விவசாயிகளின் பூமியை கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காடாக மாற்றியே தீருவது என்ற வெறியோடு செயல்படுகிறது, அக்கட்சி. நீட் தேர்வு, இந்தி சமஸ்கிருதத் திணிப்பு என்ற வரிசையில் தமிழர்களின் உரிமைக்கும் சுயமரி யாதைக்கும் எதிராகப் பார்ப்பன பாசிசக் கும்பல் நடத்திவரும் போரில் மற்றுமொரு முனைதான் இப்பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்.
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா? விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
பஞ்சாபில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி, அம்மாநிலத்தின் பதிண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
விவசாயக் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கை, ஆளும் கட்சிகள் தொடங்கிப் பொருளாதார வல்லுனர்கள், வங்கியாளர்கள் வரையிலான கனவான்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ‘விவசாயக் கடன் தள்ளுபடி, மக்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் பண்பைக் கெடுத்து, கடன் தள்ளுபடிக்காகக் காத்திருக்கும் மோசமான பழக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும், ‘இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்’ என்றும் பலவாறான வாதங்களை விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எதிராக இவர்கள் முன்வைக்கின்றனர்.
இப்படி வாதிடுபவர்கள் யாரும் வங்கிக் கடனை விவசாயியால் ஏன் கட்டமுடியவில்லை என்பது குறித்தோ, இப்பிரச்சினையின் பின்னணி என்ன என்பது குறித்தோ பேச விரும்புவதில்லை.
விவசாயிகளுக்கு ஏற்படும் கடன் சுமை இயற்கைச் சீற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. விளைச்சல் அதிகரிக்கும்போதும் விளைபொருட்களின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்து கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் விலை வீழ்ச்சி மக்களிடம் முழுமையாகப் போய்ச் சேருவதில்லை. விலை வீழ்ச்சியினால் இடையில் உள்ள வணிகர்களே பலனடைகின்றனர். இங்கு வணிகர்கள் என நாம் பொதுப்படக் குறிப்பிடுவது, பன்னாட்டு வேளாண் வணிக நிறுவனங்கள், உள்நாட்டு கார்ப்பரேட் நிதிக் கூட்டமைப்புகள் மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுமே ஆவர்.
விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலை கோரி மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய சாலை மறியல் (கோப்புப் படம்)
விவசாயிகளின் கடன் பிரச்சினையைச் சுலபமாகப் புரிந்து கொள்ள ஒரு சிறு கடன் கணக்கைப் பார்ப்போம். உற்பத்தி இயல்பாக இருக்கும்போது, ஒரு விவசாயி வங்கியில் இருந்து ரூ.100 கடன் பெறுகிறார். அக்கடனைக் கொண்டு தானிய வகைகளை உற்பத்தி செய்து, அதனைச் சந்தையில் ஒரு வணிகரிடம் ரூ.100 -க்கு விற்பனை செய்கிறார். அவ்வணிகர் அச்சரக்கை நுகர்வோரிடம் விற்பனை செய்கிறார். விவசாயி, தான் பெற்ற கடன் தொகையான ரூ.100 -ஐ வங்கிக்குத் திருப்பிச் செலுத்துகிறார். இதில் வங்கிக்கடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமுகமாக முடிகிறது.
தற்போது விளைபொருள் உற்பத்தி வழக்கத்தைவிட 10% அதிகரித்திருக்கிறது எனக் கணக்கில் கொள்வோம். தற்போது இதே கடன் கணக்கு என்னவாகிறது எனப் பார்க்கலாம்.
இம்முறையும் விவசாயி வங்கியில் ரூ.100 கடன் பெற்று, அதனைக் கொண்டுதான் விவசாயம் செய்திருப்பார். அவர் விளைவித்த சரக்கின் மதிப்பு ரூ.100. ஆனால் 10% மிகை உற்பத்தியின் காரணமாக விளைபொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30% வரை வீழ்ச்சியடைகிறது. வணிகர் அந்த விளைபொருட்களை ரூ.70 கொடுத்து வாங்குகிறார். ஏறக்குறைய விளைபொருளின் மதிப்பான ரூ.100 -க்கு அதனை நுகர்வோரிடம் வணிகர் விற்றுவிடுகிறார். தற்போது விவசாயி தனது மூதலீடான (வங்கிக்கடன்) ரூ.100 -ல் வெறும் ரூ.70 -ஐத் தான் திரும்பப் பெற்றிருக்கிறார். அத்தொகையை விவசாயி வங்கிக்குச் செலுத்துகிறார். விளைபொருளின் மதிப்பில் மீதித் தொகையான ரூ.30 தற்போது வணிகர் கையில் இருக்கிறது.
தன்னிடம் விவசாயி பெற்ற கடன் தொகையான ரூ.100 -ல், விவசாயி செலுத்திய ரூ.70 போக, மீதிக் கடன் தொகையான ரூ.30 -ஐச் செலுத்துமாறு விவசாயியை நிர்பந்திக்கிறது வங்கி. ஆனால், அந்தப் பணம் இப்போது வணிகரிடம்தான் உள்ளது. வணிகரிடமிருந்து அந்தத் தொகையைப் பறித்தெடுக்க விவசாயிக்கும் அதிகாரமோ, சக்தியோ கிடையாது. அதேபோல, வங்கியும் வணிகரிடமுள்ள ரூ.30 -ஐப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் வழிவகைகளும் கிடையாது.
வங்கிகள் தாம் கொடுத்த கடனைத் திரும்பப் பெற விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல்களிலும், ஆட்களை விட்டு மிரட்டும் செயல்களிலும் ஈடுபடுகின்றன. விவசாயிக்கு இருக்கும் ஒரே வழி தற்கொலை செய்து கொள்வதேயாகும். இக்கொடுநிலையைத் தவிர்க்கவே விவசாயிகள் கடன் தள்ளுபடியைக் கோருகின்றனர்,
ஆகவே விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையைப் பரிசீலிக்கையில், கீழ்க்கண்ட மூன்று விசயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போவதற்கான காரணம், கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற மெத்தனமோ அல்லது கடனைத் திரும்பச் செலுத்த விரும்பாத கெடுமதியோ அல்ல.
தற்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், வெகு விரைவில் இதே நிலைமை மீண்டும் வரும். இதன் காரணம், ஒருமுறை கடன் தள்ளுபடி செய்தால், மீண்டும் மீண்டும் கடன் தள்ளுபடி கேட்கும் பேராசை அல்ல. மாறாக, இந்தப் பொருளாதாரத்தின் கட்டமைப்பே அப்படித்தான் இருக்கிறது. எப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் கடன் தள்ளுபடி அவசியமானதாகிறது.
வங்கிகள் விவசாயிகளுக்குக் கொடுத்த கடன் காற்றில் கரைந்து மறைந்துவிடவில்லை. அவை வணிகர்களின் கையில் இலாபமாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்தப் பணத்தின் மீது வங்கிகளும் கைவைக்க முடியாது. விவசாயிகளும் கைவைக்க முடியாது
இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக, இந்திய உணவுக் கழகம் 22 வகையான பயிர்களுக்கு ஆதார விலையை நிர்ணயித்து வந்தது.
பஞ்சாபில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி, அம்மாநிலத்தின் பதிண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
பணப்பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப் பல்வேறு வாரியங்கள் இயங்கி வந்தன. தேயிலை வாரியம், காஃபி வாரியம், ரப்பர் வாரியம் போன்றவை தாமே கொள்முதல் மற்றும் விற்பனைப் பணியை மேற்கொண்டு, விலை வீழ்ச்சியின் போது அவை நேரடியாகத் தலையிட்டன.
புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும், அவர்கள் கடன் தள்ளுபடி கோருவதற்கான காரணமும் பின்னணியும் இவைதாம். இன்று விவசாயிகள் கோரும் கடன் தள்ளுபடிக்கு எதிராகக் கம்பு சுழற்றும் பொருளாதாரப் புலிகளுக்கு இவையெல்லாம் தெரியாதா என்ன?
வங்கிகளில், கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் நடத்தக் கடன் வாங்கி, அதனை வேறு தொழில்களுக்கும், தனிப்பட்ட சொத்துக்கள் வாங்குவதற்கும் திருப்பிவிடுகின்றனர். பின்னர், நட்டக்கணக்குக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் தயக்கம் காட்டாத அரசு, மறுபுறமோ, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது மற்றும் அப்பொருட்களைக் கொள்முதல் செய்வது ஆகிய தமது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, விவசாயிகளைக் கடன் சுமைக்குக் காவு கொடுக்கிறது.
(“The Question of Farm Loan Waiver” என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் சி.பி.எம். இன் கட்சிப் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி -யில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு.)
விவசாயிகளின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
உலகம் முழுவதும் பெருகிவருகிற அதீத உடல் பருமன் பிரச்சினையை நிறுத்த விஞ்ஞானிகள் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். இப்பிரச்சினை கொழுப்பையும் தாண்டி மிக அபாயகரமாக இருப்பதை புதிய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அல்ஜசீராவின் தொழில்நுட்பத்தை அறிவோம் (Tech Know) குழு சர்க்கரையின் அறிவியலை ஆராய்கிறது.
சர்க்கரை, இது உலகெங்கெலும் உள்ள குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டுவரும் ஒரு பொருளாகும். இது மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில், ஆற்றல் மூலங்களில் முக்கிய பகுதியாகவும் உள்ளது. ஆனால், உலகளவிலான பெருகிவரும் உடல்நல நெருக்கடிக்கு முக்கிய குற்றவாளியாகவும் உள்ளது.
பெருமளவில் அதிகரித்து வரும் அதீத உடல் பருமனுக்கும், நீரிழிவு நோய்க்கும் காரணமாக சர்க்கரை, குறிப்பாக சர்க்கரைக் கரைசல் பானங்கள் (பாட்டில் குளிர்பானங்கள்) இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் 190 கோடிப் பேர் அதிக எடையுடனும், அதில் 60 கோடிப் பேர் அதீத உடல் பருமனுள்ளவர்களாகவும் உள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் 2014-ம் ஆண்டுத் தரவுகளின் படி உலகில் பெரியவர்களில் மூன்றில் ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறார். 2015-ம் ஆண்டின் தரவுகளின் படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 4.2 கோடி பேர் அதிக எடையுடனும் அவர்களில் 48 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ளனர்.
மெக்சிக்கோவைப் பொறுத்தவரை, பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது. மெக்சிக்கோவின் தேசிய பொது சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி சுமார் 70 சதவீத பெரியவர்கள் அதிக எடையுடன் அல்லது அதீத உடல் பருமனுள்ளவர்களாக உள்ளனர். மெக்சிக்கர்கள் உலகிலுள்ள வேறு எவரையும் விட அதிக சோடா பானங்களை குடிக்கிறார்கள். ஒரு மெக்சிக்கர், ஆண்டுக்கு சுமார் 163 லிட்டர் பானத்தை குடிக்கிறார். இது ஒரு அமெரிக்கர் ஆண்டுக்கு நுகரும் 118 லிட்டரை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.
இதைக் கட்டுப்படுத்த மெக்சிக்கோ அரசு அந்த பானங்களுக்கு 10% சுங்கவரி விதித்துள்ளது. மெக்சிக்கோவை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்றும், ‘உலக சர்க்கரை வரி’ விதிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மெக்சிக்கோவை அடுத்து இன்றளவில் பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் சர்க்கரை பானங்களுக்கு வரிக் கட்டுப்பாடுகள் விதிக்க பரிசீலித்து வருகின்றன.
இந்தியாவிலும், சோடாவின் விற்பனை 1998 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்து வருகிறது. ஒரு இந்தியருக்கு ஆண்டுக்கு 11 லிட்டர் சோடா என்றளவில் நுகர்வு உள்ளது. 1980-களில் இருந்து குப்பை உணவு எனப்படும் பொதியப்பட்ட உணவின் நுகர்வும் அதிகரித்து வந்துள்ளது. இதுவே இங்கு அதீத உடல்பருமன், நீரிழிவு மற்றும் இதயநோய் அதிகரிப்பிற்கான காரணமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அதிக சர்க்கரை உணவு அதாவது அதிக கார்போ-ஹைட்ரேட் உணவு உடல் நலத்திற்கு தீங்கானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக சர்க்கரை உணவுக்கும் இதய நோய்க்குமான தொடர்ப்பு பற்றிய 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சர்க்கரை, சோடா பானங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கார்போஹைட்ரேட் உணவுப் பழக்கங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவ்வாய்வில் இதய நோய் மற்றும் இறப்பிற்கான வாய்ப்புகள் கணிசமாக உயர்ந்தது கண்டறியப்பட்டது.
***
சர்க்கரை என்றவுடன் நம்மில் பெரும்பாலானோருக்கு வெள்ளை நிற கன படிகங்கள் (ஜீனி) தான் நினைவுக்கு வரும். ஆனால், சர்க்கரை கார்போ-ஹைட்ரேட்டுகள் எனப்படும் கார்பன் (C), ஹைட்ரஜன் (H) மற்றும் ஆக்சிஜன் (O) அணுக்களின் வேதிப் பிணைப்பினால் உருவாகும் கரிம மூலக்கூறுகளின் ஒரு வகையாகும்.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் கார்போ-ஹைட்ரேட்டுகளை உருவாக்குகின்றன. பகலில் ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி அதை சூரிய ஆற்றலின் உதவியுடன் நீருடன் வினையாற்றச் செய்து கார்போ-ஹைரேட்டுகளையும், ஆக்சிஜனையும் உருவாக்குகின்றன.
குளுக்கோஸ், ஃப்ரக்ட்டோஸ், காலக்டோஸ் போன்ற எளிமையான மூலக்கூறுகள் ஒற்றை சர்க்கரைகள் (Monosaccharides: Mono – ஒற்றை; saccharides – சர்க்கரைகள்) என்றழைக்கப்படுகின்றன. சுக்ரோஸ், லாக்டோஸ், மால்டோஸ் இரண்டு மூலக்கூறுகள் கொண்ட சேர்மங்கள் இரட்டை சர்க்கரைகள் என்றழைக்கப்படுகின்றன.
சுக்ரோஸ் ஒரு குளுக்கோசும், ஒரு ஃப்ரக்டோசும் சேர்ந்த சேர்மமாகும். நாம் பயன்படுத்தும் வெள்ளை நிற கன படிகங்களாகட்டும், நாட்டுச் சர்க்கரை எனப்படும் மஞ்சள் நிற சர்க்கரை, வெல்லம் எதுவாயினும் அது சுக்ரோஸ் என்ற இரட்டை சர்க்கரைகள் (Disaccharides) வகையைச் சேர்ந்ததாகும். பாலில் இருக்கும் சர்க்கரை லாக்டோசாகும். இது ஒரு குளுக்கோசும், ஒரு காலக்டோசும் சேர்ந்த சேர்மம். அதே போல் பார்லி போன்ற தானியங்களில் இருந்து கிடைக்கும் மால்டோஸ் என்பது இரண்டு குளுக்கோஸ் மூலக்கூறுகள் சேர்ந்த இரட்டை சர்க்கரையாகும். இவை அனைத்தும் எளிமையான சர்க்கரைகள் அல்லது எளிமையான கார்போ-ஹைட்ரேடுகள் எனப்படுகின்றன.
தாவரங்கள் உருவாக்கும், மாச்சத்து (Starch-ஸ்டார்ச்), நார்ச்சத்து (Fibre-ஃபைபர்) போன்றவை ஆயிரக்கணக்கான ஒற்றை சர்க்கரைகள் இணைந்த சிக்கலான ஒரு மூலக்கூறு வகையைச் சேர்ந்தவை. அதனால் இவை சிக்கலான கார்போ-ஹைட்ரேடுகள் (Polysaccharides) எனப்படுகின்றன.
நாம் உண்ணும் கார்போ-ஹைட்ரேட்டுகள் செரிமானத்திற்கு முதலில் ஒற்றை சர்க்கரைகளாக உடைக்கப்பட வேண்டும். கார்போ-ஹைட்ரேட்டுகளின் செரிமான நிகழ்ச்சிப் போக்கு நமது வாயிலிருந்து துவங்கிறது. முதலில் உமிழ்நீரில் உள்ள நொதியில் அவை நீர்பகுப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. பின்னர் சிறுகுடலுக்கு சென்றபின் அங்கு கணையநீர் நொதியினால் ஒற்றை சர்க்கரைகளாக உடைத்து உறிஞ்சப்பட்டு அவை இரத்தத்தில் கலக்கின்றன.
இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸ் என்ற ஒற்றை சர்க்கரை உடலெங்குமுள்ள செல்களின் ஆற்றல் மூலங்களாக இருக்கிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் கலந்தவுடன், இன்சுலின் (Insulin) என்ற இயக்குநீரை (harmone) கணையம் சுரந்து இரத்தத்தில் கலக்கிறது. இன்சுலின் கல்லீரல் மற்றும் தசைகளுக்கு இரத்தத்திலுள்ள குளுக்கோசை எடுத்துக் கொள்ளும் படி சமிக்ஞை கொடுப்பதுடன், அதை ஆற்றலாக மாற்றவும் உதவிபுரிகிறது. செல்கள் அவற்றை எரித்து உடனடி ஆற்றல் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.
மீதமிருக்கும் சர்க்கரைகள் திசுக்களிலும், கல்லீரலிலும் க்ளைக்கோஜென்களாக (Glycogen) சேமிக்கப்படுகிறது. நாம் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொள்ளும் போது க்ளைக்கோஜென்களை சேமிக்கும் சேமிப்பிடங்கள் நிறைந்த பின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இன்னும் மீந்திருக்கும். இப்போது இன்சுலின் கல்லீரலுக்கு சமிக்கை கொடுத்து அங்கு அவை கொழுப்பாக மாற்றப்படுகின்றன. இந்த செயல்முறைக்கு கொழுப்பாக்கல் (Lipogenesis) என்று பெயர். இந்தக் கொழுப்பு முதலில் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.
***
கலிஃபோர்னியா, டேவிசில் (Davis) இருக்கும் ஆய்வகத்தில் நடத்தப்படும் ஆய்வு காரணம் – விளைவை முதன்முறையாக வெளிப்படுத்துவதாக உள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியியல் துறையும், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன.
இதில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் சர்க்கரையை (கார்போ-ஹைட்ரேட்) பத்து வாரங்களுக்கு உணவு முறையாகக் கொடுத்து, பின்னர் அதன் விளைவுகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அளவிடுகின்றனர். நல்ல உடல் நலத்துடன் 20-வயதுகளில் உள்ள இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
பேராசிரியர் கிம்பர் ஸ்டான்ஹோப்
பேராசிரியர் கிம்பர் ஸ்டான்ஹோப் (Kimber Stanhope) தலைமையில் நடக்கும் இவ்வாய்வில், பங்குகொள்ள கல்லூரி மாணவர்களின் சிறு குழு வந்துள்ளது. அவர்கள் இங்கு தங்கள் வகுப்புக்களுக்காக வரவில்லை; மாறாக தங்களையே ஆய்வில் உட்படுத்திக் கொள்ள தன்னார்வலர்களாக வந்துள்ளனர்.
இது ஒற்றை கண்மூடிய (Single Blinded) சோதனை. அதாவது யார் யார் என்னென்ன உட்கொள்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் மட்டுமே அறிவார்கள். ஆய்வு துவங்கிய முதல் நாளில் இருந்து மிகமிக கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விஞ்ஞானிகள் கொடுக்கும் உணவை மட்டுமே பத்துவாரங்களுக்கு சாப்பிட வேண்டும். வெளி உணவுகளுக்கு அனுமதி இல்லை. மொத்தம் 60 பேரில், 15 பேர்களாக குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சர்க்கரை விகிதத்தில் உணவுகள் வழங்கப்பட்டன. சர்க்கரை உட்கொள்ளும் உணவுப் பழக்கம் மட்டுமே ஆய்வுக்குட்பட்ட பொருளென்பதால் உடற்பயிற்சி செய்வதற்கும் அனுமதியில்லை.
கல்லீரல் ட்ரைகிளிசரைட்களின் (triglycerides) அளவை ஒழுங்குபடுத்துகிறது. கல்லீரலில் அதிக கொழுப்பு சேமிப்பு அதிகமான ட்ரைகிளிசரைட்களை உற்பத்தி செய்யும். இரத்தத்தில் ட்ரைகிளிசரைட்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அது இரத்த நாளங்களில் அடைப்புக்கான சாத்தியத்தை அதிகரித்து கொடிய இதய நோய் அபயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக ஃப்ரக்டோஸ், கல்லீரல் கொழுப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
அதனால் முதல் நாளில் இருந்து ஒழுங்கான இடைவெளிகளில் காந்த ஒத்திசைவு படமெடுத்தலின் (MRI) மூலம் அவர்களின் உடலுறுப்புகள், குறிப்பாக கல்லீரல் படமெடுக்கப்பட்டு ஒப்பீட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. கதிரியக்க நோய் கண்டறிதல் துறையில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஜான் மெக்கன் (John McGann) இதை மேற்பார்வையிடுகிறார்.
உணவுக்குப் பின் அவர்களின் மூச்சுக் காற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதாவது, ஒருவர் தனது மூச்சுக் காற்றில் எவ்வளவு ஆக்சிஜனை உறிஞ்சி நுகர்கிறார்; எவ்வளவு கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்து வெளியிடுகிறார் என்பது நவீன தொழில்நுட்பக் கருவியின் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் மூலம், அவருடைய உடல் எந்த விகிதத்தில் கொழுப்பை, எரிக்கிறது என்பதை அக்கருவி கணக்கீடு செய்யும். கல்லீரலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைந்து அதாவது எரிந்து ட்ரைகிளிசரைட்களை உற்பத்தி செய்கிறது.
அதே போல அவர்களது இரத்தம் சேகரிக்கப்பட்டு, அதிலுள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவு ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. டாக்டர் கேண்டஸ் ப்ரைஸ் (Candace price) இரத்தத்திலுள்ள கொழுப்பமிலங்களின் ஆய்வகத்தின் பொறுப்பாளராக இருக்கிறார்.
அதிகளவிலான கார்போ-ஹைட்ரேட் உணவுகள் ஒருவரின் உடல் பருமன் அதிகரிக்காவிட்டாலும் கூட கொடிய இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வந்தடைந்துள்ளனர்.
முடிவாக கார்போ-ஹைட்ரேட்டுகள் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அது வெள்ளை, மஞ்சள், பழுப்பு என எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் விளைவுகள் ஒன்று தான். அவற்றையும் செயற்கை இனிப்பூட்டிகளையும் அவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். உடலின் ஆற்றல் (கார்போ-ஹைட்ரேட்) தேவைக்கு அளவாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் டாக்டர் கிம்பர் ஸ்டான்ஹோப்.
***
கார்போ-ஹைட்ரேட்டுகளின் மூலாதாரங்களாக தாவரங்களே உள்ளன. மிகை கார்போ-ஹைட்ரேட் உணவுப் பழக்கம், உடல் நலத்திற்கும், உயிருக்கே கூட தீங்கானது என்கிறது அறிவியல்.
இயற்கை விவசாயம், இயற்கை உணவு போன்ற குழுமங்கள் “வெள்ளை சர்க்கரை உடல் நலத்திற்கு தீங்கு, மஞ்சள், பழுப்பு, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினையில்லை” என்று பிரச்சாரம் செய்கின்றனர். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட, சுத்தமான ஆர்கானிக் சர்க்கரை அதிக விலையில் நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து சந்தைப்படுத்தப்படுகிறது. அவர்களும் அதை நம்பி ஏமாறுகின்றனர்.
கடந்த 100, 150 ஆண்டு கால அறிவியலின் வருகைக்குப் பிறகு நமது பழமை சீரழிக்கப்பட்டதன் விழைவுகள் தான் அதீத உடல்பருமன், நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள். அதனால், அதுகாறும் இருந்த பழைய பண்பாடுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்கின்றனர் நாம் தமிழர் சீமான் போன்ற சிலர். இது அறிவியல் முன்னேற்றத்தை கொச்சைப்படுத்துவதாகும். எல்லா கார்போ-ஹைட்ரேட்டுகளையுமே உடல் ஆற்றல் தேவையைவிட மிகையாக எடுத்துக் கொள்ளும் போது அது உடல்நலத்திற்கு கேடானதுதான்.
வெள்ளை சர்க்கரையில் இருக்கும் சுக்ரோசின் அளவை விட நாட்டுச் சர்க்கரையில் இருக்கும் சுக்ரோஸ் அளவு குறைவாக இருக்கலாம். அதாவது இனிப்புச் சுவைக்கு காரணமாக சுக்ரோஸ் இரண்டிலும் இருக்கிறது. இனிப்புச் சுவை அதிகம் வேண்டுவோர் நாட்டுச் சர்க்கரையை அதிகம் போட்டு பயன்படுத்துவர். குறைவாக இனிப்பு சாப்பிடுபவர் அது வெள்ளை சர்க்கரையாக இருந்தாலுமே அளவாக எடுத்துக் கொள்வார்.
மறுபுறம், நமது நாட்டில் புரதம் நிறைந்த இறைச்சி உணவு உடல் நலத்திற்கும், குணநலன்களுக்கும் தீங்கானது என்று அறிவியலுக்குப் புறம்பாக பொய்யைப் பரப்பிவைத்துள்ளது பார்ப்பனியம். அதோடில்லாமல், மாட்டுக்கறிக்கு தடை விதிப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் புரதத் தேவையை பூர்த்தி செய்யவிடாமல் தடுக்கவும் செய்கிறது.
இதனால் புரதம் சாப்பிட முடியாத மக்கள், எளிய கார்போ-ஹைட்ரேட் உணவு வகைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்களை இதுவரை பெரிய அளவில் அவர்களுக்கில்லாத உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்ற உடல் நலப் பிரச்சினைகளுக்குள் தள்ளியுள்ளது.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சென்னை ஐ.ஐ.டி.யில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அது குறித்து விசாரிக்க ஐஐடி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி, நடப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், நடந்த சம்பவங்கள் குறித்த தனது பார்வையையும், குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ’தண்டனை’களையும் குறிப்பிட்டுள்ளது.
தாக்கப்பட்ட மாணவர் சூரஜ் – ஐ.ஐ.டி. இயக்குனர் வீட்டு முன் மாணவர்களின் போராட்டம் – பேரணி
மத்திய அரசு, கறிக்காக மாடு விற்கத் தடை விதித்து இயற்றிய அரசாணையை எதிர்த்து ஐஐ.டி. சென்னையில் கடந்த மே மாதம் சில மாணவர்களால் மாட்டுக்கறித் திருவிழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளே அவ்விழாவில் பங்கேற்ற சூரஜ் என்ற மாணவர், ஐ.ஐ.டி. வளாகத்திற்குள்ளேயே, மணீஷ் என்ற ஹிந்துத்துவ வெறியனால் தாக்கப்பட்டார். இது தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். அதோடு ஜூன் மாதத் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் மாட்டுக்கறித் திருவிழாவை நடத்தினர்.
இத்தாக்குதல் குறித்து விசாரிக்க, சென்னை ஐ.ஐ.டி.-ன் இயக்குனர், விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி ஒன்றை உருவாக்கினர். இச்சம்பவத்தை விசாரிக்க 2 முழு மாதங்களை எடுத்துக் கொண்ட அக்கமிட்டி, கடந்த வாரத்தில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் சூரஜ் மீது தாக்குதல் தொடுத்த மணீஸ்-ற்கு விடுதியில் தங்குவதற்கு ஆறு மாத காலத்திற்குத் தடையையும், ’கடும் கண்டனத்தையும்’ கமிட்டி விடுத்துள்ளது. அதே போல, தாக்குதல் சம்பவம் குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த ’குற்றத்திற்காக’, தாக்கப்பட்ட சூரஜ்-ன் நண்பர் ஒருவருக்கும் ’கடும் கண்டனத்தைத்’ தெரிவித்துள்ளது. இத்தகைய ’கடும் கண்டனத்தை’ இரண்டு முறை ஒரு மாணவர் பெற்றால், அவருக்கு விடுதியில் தங்க அனுமதி மறுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்த்துவா கிரிமினல் மணீஷ்
தாக்குதல் தொடுத்த குற்றவாளி மணீஷுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ள தண்டனை என்பது மிகச் சாதாரணமானது. விடுதியில் மது அருந்தினாலோ, புகை பிடித்தாலோ கொடுக்கப்படும் தண்டணை தான் ”கடும் கண்டனம்” தெரிவிப்பது. சக மாணவர் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்த ஒருவனுக்கும் அதே தண்டனை தான் என்றால் அது எவ்விதத்தில் நியாயமானது?
இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனத்தில் ஒரு மாணவனைக் கொலை வெறியோடு தாக்க முயற்சித்த ஒரு கிரிமினலை, நியாயப்படி கல்லூரியை விட்டு நிரந்தரமாக நீக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சமாக அந்தக் கிரிமினல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, பாதிக்கப்பட்ட மாணவரிடம் மன்னிப்புக் கேட்டு, அவரும் அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இடை நீக்கமாவது செய்ய வேண்டும். ஆனால் இங்கு வெறும் அறிக்கையில் “கடும் கண்டனத்தை’த் தெரிவித்து தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி.
மேலும் அவ்வறிக்கையில், நடந்த தாக்குதல் சம்பவத்தை ’வெவ்வேறு கருத்தியல்களைக் கொண்ட இருதரப்பு மாணவர்களுக்கு இடையிலான மோதல்’ எனக் குறிப்பிட்டுள்ளது. அதோடு மாணவர்கள் சக மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என்று புத்திமதியும் கூறியிருக்கிறது.
இந்த அறிக்கை குறித்து சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், தமது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டியின் இந்த அறிக்கையை முழுக்க முழுக்க பொய்யும், வஞ்சகமும் கலந்த அறிக்கை எனச் சாடியிருக்கிறது.
நடந்த சம்பவத்தை இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதல் என்று குறிப்பிடுவதன் மூலம், சூரஜ்ஜையும் குற்றவாளியாக்க முயற்சிக்கிறது விடுதி ஒழுங்குமுறைக் கமிட்டி. அதாவது குற்றவாளியிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக புகாரும், முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளியாக்கி, வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் போலீசு கிரிமினல்களின் அதே உத்தியை ‘தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனத்தின்’ நிர்வாகமும் செய்துள்ளது.
மாட்டுக்கறி திருவிழாவில் மாட்டுக்கறி சாப்பிட்ட ஒரு மாணவரிடம், ’மாட்டுக்கறி திருவிழாவில் பங்கேற்ற அனைவரையும் கொன்று விடுவேன்’ என மறுநாள் பகிரங்கமாக மிரட்டியிருக்கிறான் மணீஷ். அது குறித்து அம்மாணவர் ’மாணவர்களுக்கான டீன்-னிடம்’ மணீஷ் கொலை மிரட்டல் விடுப்பதாகப் புகார் அளித்துள்ளார். அது குறித்து டீன் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மறுநாள் தான் மணீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சூரஜ்ஜைத் தாக்கியுள்ளான். இதில் இருதரப்பு மோதல் என்பது எங்கே இருந்து வந்தது?
இந்த விவகாரத்தில் சென்னை ஐ.ஐ.டி.யைப் பொறுத்தவரையில், அதன் நிர்வாகம் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.-ன் ஒரு ’ஸ்லீப்பர் செல்’-லாகவே வேலை பார்த்துள்ளது. இப்பிரச்சினையை விசாரித்த மாணவர்களுக்கான ’டீனு’ம், இணைப் பதிவாளர் ஜெயக்குமாரும், வளாகத்தின் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குமாறு சூரஜை நிர்பந்தித்திருக்கின்றனர். அதற்கு உடன்படாமல் மறுத்த சூரஜ்ஜுக்கு ’தண்டணை வழங்கப் போவதாக’ மிரட்டியுள்ளார் ஜெயக்குமார். அப்படியிருந்தும் பணியாத அவருக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு சமாதானப்படுத்தி கையெழுத்துப் பெற முயற்சித்து இருக்கின்றனர், ஐ.ஐ.டி. நிர்வாகத்தினர். இப்போது சொல்லுங்கள், இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் ’ஸ்லீப்பர் செல்’லா இல்லையா ?
ஏற்கனவே மணீஷின் மிரட்டல்கள் குறித்து டீன் அலுவலகத்தில் புகார் செய்யச் சென்ற மற்றொரு மாணவரிடம், அவரது முகநூலில் உள்ள அரசியல், சமூகக் கருத்துக்களை நீக்குமாறும், அவையே இப்படிப்பட்ட பிரச்சினைகளை வளர்க்கின்றன என்றும் மாணவர்களுக்கான டீன் கூறியுள்ளார். ஆனால் மணிஷை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. இது தான் மாணவர்களுக்கான டீனின் இலட்சணம். சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படி இருக்கையில், அங்கிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பான “மாணவர் சட்டசபை மன்றம்” நிர்வாகத்திற்கு அப்பட்டமான ஊதுகுழலாகவே இருந்து வந்திருக்கிறது.
சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்
சென்னை ஐ.ஐ.டியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ’ஃபிஃப்த் எஸ்டேட்’ (Fifth Estate) என்ற இணையதளத்தின் செயல் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட வருண் ஸ்ரீதர் என்ற மாணவரின் நியமனத்தை இரத்து செய்திருக்கிறது மாணவர் சட்டசபை மன்றம். அம்மாணவர் செய்த குற்றம் என்னவெனில், சூரஜ்ஜின் மீதான தாக்குதலைக் கண்டித்து ”மாட்டுக்கறியும் தாக்குதலும்: சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது?” என்ற கட்டுரையை வேறொருவருடன் இணைந்து எழுதியது தான். ஒரு பானைச் சோற்றுப் பதத்திற்கான ஒரு சோறு தான் இந்தப் பொய்.
ஏற்கனவே மாணவர்களின் பிரச்சினைகளுக்காகவும், சமூக, அரசியல் பிரச்சினைகளுக்காகவும், ’அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச்’ சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பிரசுரங்கள் கொடுத்து வந்ததைத் தடுக்க இதே மாணவர் சட்டசபை மன்றத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் உபயோகித்தது. ’பிரசுர காகிதங்களால்’ ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மான்களுக்கு உடல் உபாதை ஏற்படும் என்ற ’அரிய கண்டுபிடிப்பை’ முன் வைத்து பிரசுரங்கள் கொடுப்பதைத் தடை செய்தது மாணவர் சட்டசபை மன்றம்.
கடந்த ஆண்டு மாணவர் சட்டசபை உறுப்பினரான, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவரை மாணவர் சட்டசபை மன்றக் கூட்டத்திலேயே, தாக்கியுள்ளான் மணீஷ். மாட்டுக்கறி விவகாரத்திலும், தாக்குதல் தொடுப்பதற்கு முந்தைய நாள் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, திட்டமிட்டு தான் சூரஜ் மீதான தாக்குதலையும் தொடுத்துள்ளான் மணீஷ்.
இப்படிப்பட்ட தொடர் குற்ற வரலாறு கொண்ட ஒரு கிரிமினலை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டிய போலீசோ, வழக்கம் போலக் குற்றவாளியிடம் பொய்ப் புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்கை நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனம் என்று தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளும் ஐ.ஐ.டி.யோ போலீசை விட கேடு கெட்டுப் போய், பொய்க்கதைகளை சித்தரித்து அறிக்கை தயாரித்துக் குற்றவாளிக்கு மொன்னைத் தனமான தண்டனைகளைக் கொடுத்து தமது நிறம் காவி தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
நிகழ்ந்துவரும் நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக நமக்குக் காட்டிச் செல்கின்றன. அரசு, போலீசு, கல்வி, என அனைத்துத் துறைகளும் காவித் தேள்களின் விசக் கொடுக்குகளுக்கு இடையே சிக்கியிருக்கின்றன. மற்றுமொரு குஜராத்தாகவோ, உத்திரப் பிரதேசமாகவோ தமிழகம் மாறாமல் காக்க, ஒட்டுமொத்தத் தமிழகமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது!
—————————————————————————— இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் ! – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மார்க்ஸ் பிறந்தார் –11
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
வினவு குறிப்பு:
இந்தப் பகுதியில் தத்துவஞான ஆராய்ச்சிக்கு தேவையானதையும், தேவையற்றதையும் பார்க்க இருக்கிறோம். ஹெகலின் பிற்போக்கான மாணவர்களோ, மத்திய காலத்தில் அரிஸ்டாட்டிலின் போதனைகளை மதம் போல பாவித்த சிந்தனையாளர்களோ எப்படி தத்துவஞானத்தின் கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது என்பதை விதியாக்கியதை மறுத்தும், கேலி செய்தும் விளக்குகிறார் மார்க்ஸ். கடந்த கால விளக்கத்தை படைப்பூக்கத்துடன் ஆய்வு செய்யாமல், பக்தியுடன் பின்தொடர்ந்தால் நாம் விழுவது பள்ளமே அன்றி சிகரத்தை ஒரு போதும் அடைய முடியாது.
மாறிவரும் புறநிலையோடு, புரிந்து கொள்ளலில் மேம்படும் அகநிலை சேர்ந்து பயணித்தும் ஆய்வு செய்தும் வரும் போது மட்டுமே புதிய புரிதலை கண்டுபிடிக்க முடியும். இல்லை இன்னார் இப்படி சொல்லவில்லை ஆகவே புதிய விசயத்தை ஏற்க முடியாது என்றால் நாம் தேங்கிப் போன இறந்தகாலத்தின் எச்சங்களாக கரைந்து போவோம். அதனை சாக்ரடிசிடம் காண்கிறார் கார்ல் மார்க்ஸ். கேள்வி கேட்பதோடு பதில் சொல்ல மறுக்கும் மரபை தொடர்ந்து கேலி செய்து நீ கேள்வி கேட்டாகத்தான் வேண்டும் என்கிறார் சாக்ரடிஸ். நிதானமாக படியுங்கள்!
“தத்துவஞானம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது”
ஆ) தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
ஹெகலின் அடிமைத்தனமான, சுய புத்தி இல்லாத ஆதரவாளர்களை மார்க்ஸ் அதிகமாக ஏளனம் செய்கிறார். இவர்கள் கீழ்மட்ட மனிதர்கள், எத்தகைய தனித்தன்மையும் இல்லாதவர்கள், இவர்கள் வழக்கமாக “கடந்த காலத்தின் தத்துவஞான மேதைக்குப் பின்னால் மறைந்து கொள்பவர்கள்-ஆனால் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் கழுதை சீக்கிரத்திலேயே கண்டுபிடிக்கப்படுகிறது; இன்று அல்லது நேற்றைய தினத்தின் குள்ளனுடைய ஈனக்குரல் யுகங்களினூடே எதிரொலிக்கின்ற காம்பீரியக் குரலுடன் கோமாளித்தனமான வேறுபாட்டுடன் புலம்புகிறது”.(1)
ஒரு குள்ளன் இரண்டு மூக்குக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு ஒரு மேதையின் பிட்டங்களில் நின்று கொண்டிருக்கும் சித்திரத்தை மார்க்ஸ் ஏளனத்தோடு தீட்டுகிறார்; தான் பார்க்க முடிந்த அதிசயமான காட்சிகளை அவன் பிரகடனம் செய்கிறான்; ஆர்க்கிமிடஸ் புள்ளி இதயத்தில் அல்ல, நான் நின்று கொண்டிருக்கும் “கனமான, உறுதியான அடித்தளத்தில்” இருக்கிறது என்று விளக்குவதற்குக் கோமாளித்தனமான முயற்சி செய்கிறான். “முடி, நகம், விரல், மலம் ஆகியவற்றின் தத்துவஞானிகள் மற்றும் இதரர்களை இப்படித்தான் நாம் அடைகின்றோம்….”(2)
இங்கே மார்க்ஸ் ஒரு பக்கத்தில் வலதுசாரி ஹெகலியவாதிகளின் பரிதாபமிக்க நிலையையும் மறு பக்கத்தில் ஹெகல் வழிபாட்டை, அவருடைய போதனையைத் தனிமுதலானதாக உயர்த்துவதை, ஹெகலியத் தத்துவஞானத்தின் பல்வேறு கூறுகளையும் அம்சங்களையும் விளக்கிக் கூறுகின்ற பாதையில் மட்டுமே எதிர்காலத் தத்துவஞான வளர்ச்சி நடைபெற வேண்டும் என்ற வாதத்தைக் கண்டனம் செய்கிறார்.
அரிஸ்டாட்டில்
அதைப் பொறுத்தமட்டில் ஹெகலின் தத்துவஞானத்தின் விதியை, மத்திய காலத்தைச் சேர்ந்த உரையாசிரியர்களால் சீர்குலைக்கப்பட்ட அரிஸ்டாட்டிலினுடைய தத்துவஞானத்தின் வரலாற்று விதியுடன் ஒப்பிட முடியும். அரிஸ்டாட்டிலின் கருத்துக்கள் ஒரு வகையான தோத்திர நூலாக மாற்றப்பட்டன; மத நம்பிக்கையின் அதிகாரத்தை ஆதரிப்பதற்கு அவருடைய அதிகாரம் உபயோகிக்கப்பட்டது. அவர் எல்லாம் அறிந்தவர் என்ற நம்பிக்கை முட்டாள்தனமான எல்லைகளை எட்டியது. 17ம் நூற்றாண்டில் சூரியனில் கறும் புள்ளிகள் இருக்கின்றன என்பதை தொலைநோக்கு கருவியின் மூலமாகப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளும்படி யேசு சபையைச் சேர்ந்த ஒரு பேராசிரியரிடம் வானவியல் ஆராய்ச்சியாளரான கிர்ஹார் கூறிய பொழுது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “மகனே, அதனால் பயனில்லை. நான் அரிஸ்டாட்டிலைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இரண்டு தடவைகள் படித்திருக்கிறேன். சூரியனில் கறும் புள்ளிகள் இருக்கின்றன என்ற சிறு குறிப்பைக் கூட அரிஸ்டாட்டில் எழுதவில்லை. எனவே அப்படிப்பட்ட கறும் புள்ளிகள் இருக்க முடியாது.”
தத்துவஞானத்தைப் பற்றி-இது “மேதைகளின்” தத்துவஞானமாக இருந்தாலும் கூட-இத்தகைய “பக்திமிக்க” அணுகுமுறை மார்க்சின் விமர்சன அறிவுக்குத் திருப்தியளிக்கவில்லை.“ஒரு தத்துவஞானம் உண்மையில் தத்துவஞானமாக இருக்கும் என்பதை அதிகாரத்தினால் அல்லது நம்பிக்கையினால் மக்களினத்தின் அதிகாரத்தினால் அல்லது நூற்றாண்டுகளின் நம்பிக்கையினால் என்றாலும் கூட-ஏற்றுக் கொள்வது சரியா?”(3) என்று அவர் எழுதினார். எனவே உண்மையான தத்துவஞான ஆராய்ச்சிக்கு முதலில் துணிவான, சுதந்திரமான அறிவு அவசியம்; அது இதுவரையிலும் சாதிக்கப்பட்டவற்றைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது, கடந்த காலப் பாரம்பரியத்தைப் படைப்பாற்றலுடன் பகுத்தாராய்ந்து புதிய சாதனைகளைத் தேட வேண்டும் என்பது மார்க்சின் கருத்தாகும்.
அதனால் தான் தத்துவஞானம் மதத்துடன் பொருந்துவதில்லை. நம்பிக்கை மற்றும் குருட்டுத்தனமான வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட தலைமை அதிகார மரபை அது ஏற்றுக் கொள்வதில்லை.
ஹெகல் அரிஸ்டாட்டிலைப் போன்ற அதே ரகத்தைச் சேர்ந்த மாபெரும் சிந்தனையாளர் என்று மார்க்ஸ் கருதினார். அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய (எபிகூரிய, ஸ்டோயிக் மற்றும் ஐயுறவுவாதத்) தத்துவஞானங்களின் விதிக்கும் ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானத்தின் விதிக்கும் இடையில் பொதுவான அம்சங்கள் இருப்பதை அவர் காண்கிறார். வலதுசாரி ஹெகலியவாதிகள் தத்துவஞானத்தைக் காட்டிலும் மதம் உயர்வானது என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்தனர்; அவர்கள் மேன்மையான ப்ளுடார் கைப் போல தத்துவஞானத்தை “மத அரங்கத்துக்கு” முன்னால் கொண்டு வந்தார்கள்; ஆனால் மார்க்ஸ் தத்துவஞானமே “தலைமை அதிகாரமானது” என்கிறார். “தத்துவஞானத்தின் உலகத்தை அடக்குகின்ற, முற்றிலும் சுதந்திரமான இதயத்தில் ஒரு துளி இரத்தம் துடிக்கின்ற வரையிலும் எபிகூரசினுடைய போர் முழக்கத்தை எதிரிகளிடம் பதிலாக எடுத்துக் கூறுவதற்கு ஒருபோதும் களைப்படையாது: மக்களால் வணங்கப்படுகின்ற கடவுளே மறுப்பவன் அல்ல, மக்கள் கடவுளைப் பற்றி நம்புகின்றவற்றை ஆமோதிப்பவனே உண்மையில் பாவம் செய்தவன்.”(4)
அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய தத்துவஞானம் கிரேக்கத் தத்துவஞானத்தின் தலைமையான சிகரமாகும். அது அடிமையுடைமை உலகத்தின் சீரழிவையும் புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தையும் அறிவித்தது. ஹெகலுக்குப் பிந்திய தத்துவஞானமும் அதே வரலாற்று நிலைமையில் இருந்தது. அது “பிளவடைந்த உலகத்தை” எதிரிட்டது. அதன் இசைக் கருவி “அயோலிய யாழ்”: அந்த யாழின் நரம்புகளைப் புயல் மீட்டியது. “ஆனால் ஒரு மாபெரும் தத்துவஞானத்தை, உலகத் தத்துவஞானத்தைப் பின்தொடர்ந்து ஏற்படுகின்ற இந்தப் புயல் மனக் குழப்பத்தைத் தோற்றுவிப்பதற்கு ஒருவர் தன்னை அனுமதிக்கக் கூடாது. ’’(5)
“புயலைப்” பற்றிய, ஒரு புதிய “பேராற்றல் மிக்க” யுகத்தைப் பற்றிய இந்த எதிர்பார்ப்பு 1830க்களின் கடைசியிலும் 1840க்களின் தொடக்கத்திலும் மார்க்சின் மனோநிலையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அப்பொழுது ஜெர்மனி உறக்கத்திலிருந்து விழிக்கத் தொடங்கியிருந்தது; அதன் பொருளாதார, அரசியல் மற்றும் அறிவுத் துறை வாழ்க்கையின் புத்தாக்கம் தொடங்கியிருந்தது; அது 1848ம் வருடத்தின் புரட்சிகரமான கொந்தளிப்பை முன்னறிவித்தது.
டாக்டர் பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த பொழுது மார்க்சினுடைய “புயலின் முற்பொழுதைப்” பற்றிய மனோநிலை இன்னும் மிகவும் தெளிவற்றதாக, உண்மையான அரசியலிலிருந்து மிகவும் அப்பாற்பட்டதாக இருந்தது என்பது மெய்யே. அது கருத்துமுதல்வாதத் தத்துவஞானத்தின் தெளிவில்லாத வகையினங்களில் தான் வெளிப்பட்டது. அது வெடித் திரியைப் போன்றதே. வெடி குண்டில் இணைக்கப்பட்டிருக்கின்ற திரி மெதுவாகத்தான் எரிகிறது. ஆனால் சீக்கிரத்தில் குண்டு வெடிக்கிறது.
கார்ல் மார்க்ஸ்
மார்க்ஸ் ஒரு “புயலை”முன்னறிவிக்கின்ற பொழுது “ஆசானைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்ற” ஹெகலியவாதிகளின் கோழைத்தனமான நிலையைத் தாக்குவது குறிப்பிடத்தக்கதாகும். “தனிமுதலான ஆன்மா வாடிக்கையாக மிதவாதத் தன்மையில் வெளியாகிறது” என்று அவர்கள் கருதினார்கள். தத்துவஞானத்துக்கும் “உலகத்துக்கும்” இடையில் உள்ள தகராறை “உண்மையான தேவைகளுடன் சமாதான ஒப்பந்தத்தின் மூலம்”, “ஆயுதந்தாங்கிய சக்திகளை வெட்டுவதன் மூலம், அவற்றைப் பிரித்துவிடுவதன் மூலம்” சரிப்படுத்தி விட முடியும் என்று நினைக்கின்ற “அரை குறையான அறிவுடையவர்களின்” கருத்துக்களை அவர் குறை கூறுகிறார்.(6)
“இப்பிரித்துவிடுதல்” குறிப்பாக, தத்துவஞானம் முக்கியமான பிரச்சினைகளைக் கைவிட்டுச் சுய உணர்வு உலகத்துக்குள் பின்வாங்குவதில் வெளிப்படுகிறது; இந்த நிலைமை அரிஸ்டாட்டிலுக்குப் பிந்திய நிலைமையை முற்றிலும் ஒத்ததாகும். உதாரணமாக, மார்க்ஸ் எபிகூரிய, ஸ்டோயிக் தத்துவஞானத்தை விட்டில் பூச்சிக்கு ஒப்பிடுகிறார்: “உலக முழுமைக்கும் வெப்பமளிக்கின்ற சூரியன் மறைந்ததும் விட்டில் பூச்சி தனி மனிதர்களின் விளக்கு வெளிச்சத்தைத் தேடுகிறது.”(7)
ஆனால் மார்க்ஸ் இங்கே எதிர்மறையான அம்சத்தைப் பார்ப்பதுடன் மிகவும் கவர்ச்சிகரமான அம்சத்தையும், தனிநபரிடத்தில், அவருடைய ஆன்மிக உலகத்தில், அறவியல் பிரச்சினைகளில், இதரவற்றில் அக்கறையை, அதாவது கிரேக்க மனிதாபிமானம் என்று சொல்லப்படுவதையும் பார்க்கிறார்.
இக்கண்ணோட்டத்தில் சாக்ரடீசின் ஆளுமையின் மீது அவருடைய அக்கறை சிறப்பானதாகும். தத்துவஞானத்தை அன்றாட வாழ்க்கையுடன் இணைப்பதில் வெற்றி பெற்ற, தத்துவஞானத்தை பண்டைக்கால ஏதன்சின் தெருக்களுக்கும் சதுக்கங்களுக்கும் கொண்டு வந்த அறிஞரின் “இலட்சிய ரீதியான” உருவம் இளம் மார்க்சைக் கவர்ந்தது. “கிரேக்க வாழ்க்கையுடன் கிரேக்கத் தத்துவஞானத்தின் உறவு, ஆகவே அதன் உள்ளீடான வரையறை சாக்ரடீசிடம் வெளிப்பட்ட காரணத்தால் அவர் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார்.”(8)
இயற்கையை, அண்டவெளியைப் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்ட அறிவில் சாக்ரடீசுக்குச் சிறிதும் அக்கறையில்லை. தன்னைப் பற்றி மனிதனுக்கு எதுவுமே தெரியாதென்றால் அவன் உலகத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் எப்படி அறிய முடியும்? “உன்னை அறிந்து கொள்” என்பது சாக்ரடீசின் தத்துவஞானத்தின் முதற்கோட்பாடாகும்.
மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பின்வருவனவாகும்: நன்மை, தீமை என்பன யாவை? அழகு என்பது என்ன? நீதி என்பது என்ன? வாழ்க்கை, மரணம் என்பவை என்ன? காதல் என்பது என்ன? மகிழ்ச்சி என்பது என்ன?
இவை தத்துவஞான ஆராய்ச்சிக்குத் தகுதியில்லாத மிகவும் சாதாரணமான விஷயங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். இங்கேதான் சாக்ரடீஸ் தன்னுடைய கிண்டலையும் இயக்கவியலையும் கையாள்கிறார். அவர் விவாதத்தை விரும்புகின்ற எவருடனும் விவாதம் புரியத் தயாராக இருக்கிறார், மற்றவர்களிடமிருந்து அறிவொளி பெற விரும்புகின்ற அப்பாவியைப் போல நடிக்கிறார், வெகுளித்தனமான ஆனால் சாதுரியமான கேள்விகளைக் கேட்கிறார்; அவரோடு விவாதம் செய்கின்ற, சுயதிருப்தி அடைந்த நபரின் அறியாமையை, இயக்கவியல் ரீதியில் அவரால் சிந்திக்க இயலாமையை, ஒரு நபருடைய கண்ணோட்டத்தையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து ஒரே நடவடிக்கை நன்மையானதாக அல்லது தீமையானதாக இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமையை அவை வெளிப்படுத்துகின்றன.
சாக்ரடீஸ்
சாக்ரடீசின் கிண்டல் (மார்க்சும் எங்கெல்சும் மற்றவர்களுடனும் நடத்திய விவாதங்களில் அதை அடிக்கடி உபயோகப்படுத்தினார்கள்) “செவிலித்தாயின் செயலைப்” போன்றது என்பது மார்க்சின் பொருத்தமான உதாரணமாகும்; அதன் உதவியின் மூலம் தத்துவச் சிந்தனை பிறக்கிறது, வளர்கிறது.
“எல்லாம் தெரியும் என்ற சுய திருப்தி மனப்பான்மையைக் கொண்ட” “சாதாரணமான நிதான அறிவுக்கு” சாக்ரடீசின் கிண்டல் ஒரு “இயக்கவியல் பொறியாகும்”. “சாதாரண அறிவுக்குச்” சவால் விடுகின்ற அனைத்துத் தத்துவஞானத்துக்கும் இந்தக் கிண்டல் குறியடையாளம் என்பது மார்க்சின் கருத்து.(9)
சாக்ரடீஸ் “தத்துவஞானத்தின் உருவகம்” – முதலாவதாக, அவரிடம் தத்துவஞானம் ஈடேற்றமடைகிறது, வாழ்க்கையின் புறவுருவமாக, செய்முறையாக இருக்கிறது என்ற அர்த்தத்தில், இரண்டாவதாக, தனிமனித சுய உணர்வின் தத்துவஞானம் அது என்ற அர்த்தத்தில். இக்காரணத்துக்காக மார்க்ஸ் அதன் வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளை, அதன் அகநிலைத் தன்மையை, அது தனக்குள் திரும்புவதைக் காண்கிறார். ஆனால் தனிப்பட்ட, மனித மட்டத்தில் அறிவாளியைப் பற்றிய, முரணில்லாத, நேர்மையான தத்துவஞானியைப் பற்றிய இலட்சிய ரீதியான பிம்பத்தை இளம் மார்க்சுக்குக் கொடுத்தது சாக்ரடீசே என்பது வெளிப்படையாகும். அத்தத்துவஞானி உண்மையில் தனக்கே மரண தண்டனை விதித்துக் கொண்டார்; ஏனென்றால் அந்த முடிவு அவருடைய உள் நம்பிக்கைகளிலிருந்து தர்க்க ரீதியாக முன்னேற்றமடைந்தது.
தத்துவஞானிகள் “தாங்களே வாழ்கின்ற பிம்பங்கள், வாழ்கின்ற கலைப் படைப்புகள்”(10), தங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தத்துவங்களின் உயிர்ப்புள்ள விளக்கங்கள் என்ற மார்க்சின் கருத்து மற்றவர்களைக் காட்டிலும் சாக்ரடீசுக்கே அதிகமாகப் பொருந்தும். ஒரு தத்துவஞானியின் ஆளுமை அவருடைய போதனையிலிருந்து சிறிதும் பிரிக்கப்பட முடியாது என்று இளம் மார்க்ஸ் கருதினார்.
குறிப்புகள்:
(1) Ibid., p. 87.
(2) Ibid.
(3) Ibid., p. 506.
(4) Ibid., p. 30.
(5)Ibid., p. 491.
(6) Ibid., pp. 491, 492.
(7) Ibid., p. 492.
(8) Ibid., pp. 438-39.
(9)Ibid., p. 494.
(10) Ibid., p. 436.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
”சுயமரியாதையே இல்லாதவனோடு சண்டை போடுவது கடினம்” என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் கூறியிருப்பதாக நினைவு. இன்று அந்த நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.
ஊழல் வழக்கில் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டபோது, முதல்வர் நாற்காலியில் அமரவைப்பதற்குப் பொருத்தமான ஒரு ”உடல்” ஜெயலலிதாவுக்குத் தேவைப்பட்டது. ”அறிவோ, சொரணையோ, தன்மானமோ கடுகளவும் இல்லாத நபர்” என்று ஜெயா-சசி குற்றக்கும்பலால், தேடி அலசித் தெரிவு செய்யப்பட்ட ”உடல்” தான் பன்னீர்செல்வம்.
அந்த பன்னீருக்கு பல் முளைத்துவிட்டது என்று தெரிந்தவுடன், அரச பதவியில் அமர்த்துவதற்கு பன்னீரைவிடத் தாழ்ந்த அடிமை என்று எடப்பாடி தெரிவு செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவால் வாஜ்பாயி உள்ளிட்ட பலரும் அசிங்கப்பட்டிருந்த போதிலும், மோடி முதலான அனைவருக்கும் அவர் மீது ஒரு பிரமிப்பு இருந்தது. அதற்குக் காரணம் ஜெயலலிதாவும் தங்களைப் போன்ற ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது மட்டுமல்ல; அவர் தனது காலடியில் கிடத்தி வைத்திருந்த சுயமரியாதையற்ற பிண்டங்கள்!
அந்தச் சாதனைதான் சங்க பரிவாரத்தினரை மெய்சிலிர்ப்பில் ஆழ்த்தியது. ஜெயா செத்து, சின்னம்மாவும் உள்ளே போனபின், இந்த அடிமைப் பிண்டங்கள், மோடியின் காலைத் தமது தலையில் எடுத்து வைத்துக் கொண்டு விட்டன.
நீட், ஜி.எஸ்.டி., உதய், உணவுப் பாதுகாப்புச் சட்டம், வறட்சி நிவாரணம், கடலூர் நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் ஆகிய அனைத்திலும் முழுமுற்றான சரணடைவு. காவிரித் தண்ணீர் பற்றி வழமையான வெற்று அறிக்கைகூட இல்லை. பல்கலைக் கழகத் துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுப்பது முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை எந்த ஊரில் வைக்கலாம் என்பது வரை அனைத்தும் டில்லியின் சித்தம். பா.ஜ.க. கை காட்டும் அனைவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
தனக்குப் படியளக்கும் மூலதனமான பெண்ணை வாடிக்கையாளர்கள் எல்லை மீறித் துன்புறுத்தினால், தரகர்கள் கூட பவ்யமான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதுண்டு. அத்தரகர்களைக் காட்டிலும் கேடுகெட்ட ஒரு கும்பல், தமிழகத்தை வைத்துத் தொழில் செய்து கொண்டிருக்கிறது.
தினகரன், சுதாகரன், எடப்பாடி, பன்னீர் என்று அ.தி.மு.க.-வில் பல கோஷ்டிகள். இத்தகைய கோஷ்டித் தகராறுகளின் போது கட்சி உடைந்து ஆட்சி கவிழ்வதைத்தான் நாம் இதுகாறும் கண்டிருக்கிறோம். இங்கேயோ, எத்தனை கோஷ்டிகளாகப் பிரிந்து மோதிக்கொண்டாலும், மிச்சமுள்ள ஆட்சிக்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வதிலும், கொள்ளையைப் பங்கு போட்டுக் கொள்வதிலும் எல்லா அடிமைகளும் கவனமாக இருக்கிறார்கள்.
காண்டிராக்ட் முதல் மணல் கொள்ளை வரை அனைத்திலும் அனைவருக்கும் பங்கு வழங்குவதன் மூலம், அ.தி.மு.க. வில் ”உட்கட்சி ஜனநாயகத்தை” எடப்பாடி உருவாக்கி வருவதாக கூறுகின்றன பத்திரிகைகள். இந்திய நாடாளுமன்றச் சீரழிவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
18 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்த நிலைமையை, இன்றைய சூழ்நிலை நினைவு படுத்துகிறது. பாரதிய ஜனதாக் கட்சிதான் நாம் எதிர் கொண்டிருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி. ”உடம்பில் ஐரோப்பிய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” என அன்றைக்கு சின்ன மருது வெளியிட்ட ”திருச்சி பிரகடனம்”தான் நினைவுக்கு வருகிறது.
இது சுயமரியாதையும் சொரணையுமற்ற தசைப்பிண்டங்களுடன், மானமுள்ள மனிதர்கள் நடத்த வேண்டிய போராட்டம். உடம்பில் அடிமை ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள் !
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா? உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சுதந்திர தினம் குறித்து மக்களின் கருத்தறிய காஞ்சிபுரம் நகரத்தை பெரும் மழையில் வலம் வந்தோம்.
சிலர் சுதந்திர தினம் குறித்து சுதந்திரமாக கருத்து தெரிவிக்கத் தயங்கினர். மக்கள் தங்களது பிரச்சினைகைளக் கூறினாலே “ஆன்டி இன்டியன்” என்று முத்திரை குத்துகிறார்கள் காவிக் கட்சியினர். அதனாலென்ன? “என் போட்டவோட நான் சொன்னத கொட்ட எழுத்துல போடு.. கொண்டாடுறவனுங்க என் வீட்டுக்கு வரட்டும் நான் பாத்துக்கிறேன், என்கிறார்கள் உழைக்கும் பெண்கள்! சிலரோ எந்த பேப்பர்ல போடுவீங்க? நாளைக்கே போட்டுடுவீங்களா? போலிஸ் பிடிச்சுக்குமே என்று கேட்டனர்!
சுதந்திர தின கேள்வி, பேட்டி என்றதுமே போலீசிடம் சிக்கிய கைதி போல அச்சப்படும் தொழிலாளிகள், “நாட்டு நடப்பு அப்படி இருக்குதுப்பா. உண்மைய சொன்னா எங்களுக்குதான் சிக்கல்” என்று ஆரம்பித்து உள்ளக் குமுறலை கொட்டுகிறார்கள். அவர்களில் சிலரை சந்தியுங்கள்.
சங்கர், எம்.பி.ஏ, தனியார் நிறுவன ஊழியர்
நம்ம சுதந்திரத்த நம்ம தான் பாத்துக்கணும். யாரையும் நம்பி பிரயோஜனம் கிடையாது. வெள்ளக்காரன் அப்ப இங்கிருந்து ஆண்டுட்டு இருந்தான். இப்ப, அவன் நாட்டலருந்தே ஆளுறான். அவன் அரசியல்வாதிய ஆளுறான். அரசியல்வாதி நம்மள அடிமையா நடத்துறான். என்ன பொருத்த வரைக்கும் 71 வருசமெல்லாம் ஒரு பெருமை கிடையாது. படிப்புக்கேத்த வேலை இல்லை, சம்பளமும் இல்ல. 71 வருக்ஷம் சுதந்திரம் கிடைச்சு என்ன பலன் சொல்லுங்க?
ரெண்டு ரூமு, பிரிட்ஜ் இருந்தா ரேஷன் கிடையாதாம். கஷ்டபட்டு வயித்த வாய கட்டி கௌரவமா இருக்க ஒரு வீடு கட்டுனா ரேஷன் கட்டாம். அப்ப.. ரோட்டுல பொங்கி… தின்னுட்டு.. நடுத்தெருவுல தான் படுத்துக்கணும் போல. GST -னா இன்னானே தெரியல. இட்லி சாப்பிட்டதுக்கு 40 ரூபான்றான். இனி, பசிக்கு சாப்பிட கூட முடியாது போலருக்கு. என்ன மாதிரியான வேல செய்யுறோம். வீட்லயும் நிம்மதி இல்ல. இவனுங்களும் அவன் பங்குக்கு சாவடிக்கிறானுங்க…
சுதந்திரமல்லாம் எங்களுக்கு கிடையாதுன்னு எழுதிக்கோங்க. இந்த ஆட்டோ என் தெய்வம். இ்ப்ப ஒரு சவாரி போனேன். இறக்கி விட்டுட்டு மீதி வாங்குறதுக்குள் ஒரு போலீஸ் முன்னாடி லத்தியிலயே ஓங்கி அடிச்சுது. புது ஆட்டோ அப்படியே பெரிய கீறல் விழுந்துடுச்சு. கேட்டா,எவ்வளவு நேரம் இங்கயே நிறுத்துவ-ன்னு கேக்குறான். 200 ரூபாயயும் புடுங்கிட்டான். அது மட்டும் இல்ல. அந்த கீறலுக்குடிங்கரிங் பண்ணி பெயிண்ட் அடிச்சா 1000 ரூபா ஆயிடும்.
இதுல எங்கங்க எங்களுக்கு சுதந்திரம்? வயித்துக்கு சாப்பிட முடியல. GST -ன்றான் , வெல எல்லாத்தயும் ஏத்திட்டான். 400 ரூபா சம்பாதிச்சா 200 ரூபா மாமூல். எப்படி கேள்வி கேட்பேன்? குடும்பத்த கவனிக்கனுமே. எவ்ளோ பிரச்சினைகள் இருக்கு.. எத சொல்றதுன்னு தெர்ல.. எப்படி தீக்கிறதுனும் தெரியல.. எல்லா ஆட்டோ காரங்களுக்கும் இதான் நிலை. என்ன சுதந்திரம் இருந்து என்ன பிரயோஜனம். வயித்த கழுவ எதயும் கேள்வி கேட்க முடியல…
குமார், வயது-50, நகராட்சி ஊழியர்
நாடு நாடா சுத்தி நம்ம நாட்ட விக்கிறத தவிர வேற எந்த வேலையயும் செய்யல பிரதமரு. நம்ம நாட்டுல என்ன வளர்ச்சி இருக்கு. ஒண்ணும் கிடையாது.
சின்ன கொழந்தயக் கேட்டாக்கூட சொல்லும், சும்மா ஊர சுத்துர மோடிய பத்தி…வெளிநாட்டு முதலாளிங்க கூட கூட்டு வெச்சு நம்ம நாட்டுல வெளிநாட்டு பொருள விக்கிற ஏஜென்டா இருக்கற மோடியப் பத்தி எனக்கு தெரியாதா? (இப்படியெல்லாம் பேசினா நாளைக்கு உன்ன கூண்டுல போட்றுவாங்க என அருகில் இருந்தவர் சொல்ல) அவன் அப்பவூட்டு காசுலயா எனக்கு சம்பளம் வருது… நான் பயப்பட. வரிப்பணத்துல சம்பளம் தர்றான்.. எனக்கு பயமெல்லாம் கிடையாது. சுதந்திரம் எல்லாம் சும்மா!
விநாயகம்,வயது- 25, சலூன் கடை
என்னோட கருத்து வேற மாதிரி இருக்கும். நம்ம அரசியல்வாதிங்க சரி கிடையாது. சுத்தி, சுத்தி எத்தன கட்சி, எத்தன தலைவரு ஆனா ஜனங்க கஷ்டப்பட்டாதான் சோறு. எல்லாரையும் போலத் தான் நானும்.. வீடு கடை, முடிஞ்சா பிக்பாஸ்னு போய்டுவேன். ஜல்லிகட்டுக்காக சேர்ந்த கூட்டம் ஏன் விவசாயிகளுக்காக சேரலன்றதுதான் என்னோட ஆதங்கம்.
நீ ஏண்டா கொழந்தைக்காக போராடுற மொதல்ல? அம்மாவ காப்பாத்துடா. கொழந்தய அம்மா காப்பாத்திக்கும். அம்மாதான் விவசாயி அவனோட குழந்த மாடு; அம்மாவே இல்லாம குழந்த என்னங்க பண்ணும்? சரி.. சுதந்திர நாள சுதந்திரமா கொண்டாடுறமா? இல்ல, ஏழு அடுக்கு பாதுகாப்பு, எட்டு அடுக்கு பாதுகாப்பு னு போட்டு கொண்டாடுறானுங்க.. விவசாயிய காப்பாத்தவே வழி இல்லாத இந்த நாட்டுல சுதந்திரத்த டிவி -யிலதான் கொண்டாடணும்.
மகேஷ், லோடு வண்டி டிரைவர்
என்ன பொருத்தவரைக்கும் பணக்காரன் கொள்ள அடிக்கறதுதான் சுதந்திரம். குழந்தைக்கு ஒரு கிராம் நகை எடுக்க போனா ஆயிரத்தெட்டு வரி, கூலினு எல்லாத்தையும் நம்ம கிட்ட புடுங்குறான். அதையே திருப்பி கொடுத்தா பாதி விலைக்கு கூட எடுக்க மாட்டான். என்ன மாதிரி டிரைவருங்களுக்கு சவாரிய பொருத்து தான் சாப்பாடு. 35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.
வண்டிக்கு பாக்கி கட்டணும். அதுக்கு GST -யும் சேர்த்து கட்ட சொல்றான். ஆனா என்னுடைய வருமானம் மாறவே இல்ல. கவர்மென்ட் எங்க இருக்குன்னு தெரியில. எந்த வேலைக்கு போனாலும் அலைய விடுறான். ஒரு சர்டிபிகேட்ட வாங்க அங்க போ இங்க போன்னு துரத்துறான். அரசியல்வாதிங்க கிட்ட, அவனுங்கள பத்தி நா சர்டிபிகேட் கேட்டுருக்கணும். அப்படி கேக்காம ஓட்டு போட்டது நம்ப தப்பு!
செய்தி, புகைப்படம் : வினவு செய்தியாளர்
_____________
இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா? உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
பெயர் சுதந்திர தினம்
அணிவகுப்பதோ
அடக்குமுறைக் கருவிகள்.
எங்களிடம்
எத்தனை துப்பாக்கி இருக்கிறது
என்று காட்டுவதா சுதந்திரம்?
எங்கள் பக்கம்
எத்தனை மக்கள் இருக்கிறார்கள்
எனக் காட்டுவதல்லவா சுதந்திரம்!
மக்களோ
உங்களை எதிர்த்து
குண்டாந்தடிக்கு முன்னாடி,
நீங்களோ
குண்டு துளைக்காத
கண்ணாடிக்கு பின்னாடி.
பன்னாட்டு
மூலதன ஆக்கிரமிப்புக்கு
பாதை அமைத்துவிட்டு
உள்நாட்டு பாதுகாப்புக்காக
உனக்கு எத்தனை படைகள் பார்! என்றால்
நம்ப மறுத்து
வேறுபக்கம் அணிவகுக்கிறார்கள்
மக்கள்.
கல்வியுரிமை பறிக்கப்பட்ட
மாணவர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்…
கார்ப்பரேட்டே வெளியேறு
என கனன்று நிற்கும் மக்கள்முன்
மோடியின்
வெள்ளையனே வெளியேறு
பஞ்ச் டயலாக்
பஞ்சராகிக் கிடக்கிறது.
பச்சை பசேல்
பறிக்கப்பட்ட வெறுமையில்
பறக்கும் தேசியக் கொடியையும்
திண்ணப் பார்க்கிறது ஆடு, மாடு.
விளைநிலத்தை
காயப்போடும் நாட்டில்
தியேட்டரில்
தேசியகீதம் போட்டால் மட்டும்
தேசம் விளங்கிடுமா!
எங்கள் மலைகளை
விட்டு விடுங்கள்
என கதறுகிறது நியாம்கிரி.
எங்கள் மணல
விட்டு விடுங்கள்
எனக் கெஞ்சுகிறது
பாலாறு, காவிரி,
எங்கள் மண்ணை
விட்டு விடுங்கள்
என இரைஞ்சுகிறது
நெடுவாசல், கதிராமங்கலம்.
ஆதரித்து
ஒரு துண்டறிக்கை கொடுக்கவும்
சுதந்திரமில்லை,
மனிதக்கறி தின்னும்
காவிகள் உலவும் நாட்டில்
மாட்டுக்கறி திண்ணவும்
சுதந்திரமில்லை
எனது
சாப்பாட்டுத் தட்டில்
செத்துக்கிடக்குது சுதந்திரம்.
எனது
மொழிச் சுதந்திரத்தின் மீது
திணிக்கபடுகிறது சமஸ்கிருதம்
சுதந்திரமாய் வாழ முடியாதது
மட்டுமல்ல
என்னால் சுதந்திரமாக
சாகவும் முடியாது
ஆதார் இருந்தால்தான்
நான் சட்டப்படி சவம்!
விவசாயிக்கு இல்லாத சுதந்திரம்…
தொழிலாளிக்கு இல்லாத சுதந்திரம்…
சுயதொழிலுக்கு இல்லாத சுதந்திரம்…
சுயமரியாதைக்கு இல்லாத சுதந்திரம்…
மொத்தத்தில்,
சொந்த நாட்டு மக்களுக்கு
இல்லாத சுதந்திரம்
வேறு யாருக்காக?
உங்கள்
அடையாள அணிவகுப்பில்
அதையும் காட்டிவிடுங்கள்!
– துரை. சண்முகம்
_____________
இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
தொலைக்காட்சி விவாதங்களில் அந்தக் கனிவான முகத்தை பார்க்காதவர் யாருமில்லை. எண்ணெய் தேய்த்து வாரிய சிகை, மைக்ரோ திருநீறு – நானோ பொட்டு, காட்டன் புடவை என்று பாரதிய கலாச்சாரத்தின் சர்வ லட்சணத்துடன், கொங்கு வழக்கில் ‘இனிய’ குரலில் வாதத்தை எடுத்துவைக்கும் பாங்கு….. அவர்தான் வானதி சீனிவாசன். தமிழக பாரதிய ஜனதாவின் பெண் முகம். தொண்டர்களுக்கு அவர் வானதி அக்கா. ஊடகங்களுக்கு கொள்கைகளை எடுத்தியம்பும் வானதி ‘மேடம்’.
இலக்கிய உலகில் நேர்மை, அறிவு, இலட்சியங்களின் இலக்கணங்களையும், அவ்விலக்கணங்களைப் பின்பற்றும் மேன் மக்கள் குறித்து எடுத்துச் சொல்லும் உரிமையைப் பெற்றிருப்பவர், எழுத்தாளர் திரு ஜெயமோகன். அவரது “அறம்” வரிசை சிறுகதைகள் – மனிதகுலத்தின் இலட்சிய மாந்தர்களைப் பற்றி படிப்போருக்கு நாமெல்லாம் என்றுமே ‘சாதா’தான் என்ற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ‘பேரிலக்கியம்’.
வானதி அக்காவிற்கும் ஜெயமோகனின் அறத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்கள் நுண் ரசனையற்ற முட்டாள்கள்! சென்ற 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது எழுத்தாளர் ஜெயமோகனும், ஜோ டி குரூஸும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தினமலரிடம் கூறியிருந்தார். அதே போன்று அறம் புகழ் ஜெயமோகனின் வெண்முரசு புத்தக வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் நடந்த போது வானதியும் கலந்து கொண்டார்.
இந்த இலக்கிய வேள்வியில் ஐக்கியமாவதற்கு முன்பு அக்கா அன்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ‘அம்மா’ செல்லமாக தடை போட்டதால், சங்க பரிவாரம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே செல்லமாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில்தான் அக்கா ஆவேசமாக முழக்கம் போட்டுவிட்டு, மாலையில் அமைதியாக வெண்முரசு-வில் ஐக்கியமானார்.
சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் அக்கா போட்டியிட்டார். அதே கோவையில் “விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்” எனும் ஜெயமோகனின் ’தீவிரவாதப் படை’ ஒன்று இயங்கி வருகிறது. அந்த வட்டத்தில் முக்கியமான தாதாவாக திகழும் திருவாளர் அரங்கசாமி அவர்கள் அக்காவிற்காக ஒரு வார்டு கவுன்சிலரை விடவும் அதிகமாகப் பிரச்சாரம் செய்தார், வேலை செய்தார். காரணம் காந்திக்கு அடுத்த படியாக கோவையில் ஜனித்த ஒரு மகாத்மா, வானதி அக்காதான் என்பது அவரது கிட்னி முதல் ’அட்ரினல் கிளாண்ட்’ வரை உணர்ந்து கொண்ட ஒன்று.
எனினும் சர்க்கரை அதிகரிப்பினால் கிட்னி செயலிழந்து டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதும் உண்டுதான். ஒருவன் கொழுப்பெடுத்துத் திரிகிறான் என்பது மக்கள் வழக்கில் உண்டு. மருத்துவர ரீதியில் கொழுப்பினால் மாரடைப்பு வருவதும் உண்டு. இங்கோ எளிமையின் சின்னமாக மகாத்மாவாக, அறம் கோஷ்டியனரால் அக்காவாக போற்றப்படும் வானதி சீனிவாசனுக்கு ஊழல் கொழுப்பேறிய கதையைப் பார்க்க இருக்கிறோம்.
பா.ஜ.க மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது (A party with a Difference) என்று பாஜகவினர் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். மற்ற கட்சிகள் எல்லாம், குடும்ப ஆதிக்கம், ஊழல், உட்கட்சி பூசல் போன்றவற்றால் அடையாளம் காணப்படும் போது, பா.ஜ.க அவற்றுக்கு எதிரான கட்சியாக, ஹிந்துப் பண்பாட்டை மீட்கும் கட்சியாக, தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சியாக அடையாளப்படுத்திக் கொள்கிறது.
மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜ.க வேறுபடுவது ஒரு விதத்தில் உண்மைதான். தி.மு.க-வின் ஊழலை அ.தி.மு.க-வும், அ.தி.மு.க-வின் ஊழலை தி.மு.க-வும் வெளியிடுவார்கள். ஆனானப்பட்ட காங்கிரசில் கூட கோஷ்டி மோதலில் வேட்டியை கிழித்துக் கொண்டாலும் அவர்களது ஊழலை எதிர்க்கட்சிகள்தான் அம்பலப்படுத்துவார்கள். ஆனால் பா.ஜ.க-வின் ஊழலை மட்டும் அவர்கள் கட்சியினரே ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்கள்.
திருச்செந்தூரில் 2003-ம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் வானதி சீனிவாசன் மற்றும் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.
வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார். அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.
ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.
“கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.
அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.
அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.
யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.”
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:
அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ. 50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்:
அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.
வானதி அவரது கணவர் சீனிவாசனுடன்.
ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன? அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும்.
ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். “சைலாக் சிஸ்டம்ஸ்” (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன். “சிஸ்டம்” சரியில்லை என்று பா.ஜ.க தனது கட்சிக்குள் சேர்க்க விரும்பும் ரஜினி சொல்லியிருந்தாலும் அவரது சிஸ்டத்தில் பாஜக-வின் இந்த “சிஸ்டமேடிக்” ஊழல் வராது.
சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார். வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.
சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.
சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.
வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி (வலது)
சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.
மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின் நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள். இதன் விரிவான செய்திகளை இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.
காங்கிரசைச் சேர்ந்த கஜநாதன் இந்த ஊழல் நடந்த போது சைலாக் நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார். இந்த பின்னணியில் தான் 2009-2013 காலகட்டத்தில் வங்கிகளில் கடன்களை வாங்கிக் குவித்துள்ளது சைலாக். கஜநாதன், வானதி மற்றும் அவரது கணவர் அனைவருமே காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகனிடம், ஜூனியர் வழக்குரைஞர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். ஆக இது திட்டமிட்ட முறையில் இந்திய வங்கிகளை ஏமாற்றி முறைகேடாக சொத்துக்களை வாங்கிய ஊழல்.
வானதி, அவரது கணவர் மற்றும் சைலாக் இயக்குநர்கள்.
தமிழகத்தில் கூட மாவட்ட அளவில் சட்டவிரோதமாகவும், சட்டப்பூர்வமாகவும் ‘தொழில்’ செய்யும் தி.மு.க – அ.தி.மு.க நபர்களிடையே ‘புரிந்துணர்வு’ இயல்பாக இருக்கும். ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பது அப்புரிந்துணர்வின் தர்மமாகும். அதே விதி காங்கிரஸ் – பா.ஜ.க-விற்கும் உண்டு.
கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.
மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.
மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.
இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.
சைலாக் நிறுவனத்தின் முறைகேடு வெளிவந்த பத்திரிகைச் செய்தி!
இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.
அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இவற்றை பாலசுப்பிரமணிய ஆதித்யன் அம்பலப்படுத்துவதன் அவசியமென்ன என்பதை பின்னர் பார்ப்போம். இவற்றை அம்பலப்படுத்திய உடன் எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழலில் தொடர்புடைய பா.ஜ.கவின் கே.டி ராகவன் தனது ஃபேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து பாலசுப்பிரமணிய ஆதித்யனை விலக்கம் செய்கிறார், கண்டிக்கிறார். அதோடு கட்சிக்குள்ளும், வழக்கு தொடர்பாகவும் வானதிக்கு ஆதரவளிக்கிறார்.
வானதியின் ஊழலை அம்பலப்படுதும் பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் சங்கர நாராயணன்
ஆனால் கே.டி.ராகவனது எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் ஊழல் குறித்து ஒரு ஸ்கீரின் ஷாட் பதிவு போட்ட எஸ்.வி.சேகரை பேஸ்புக் நட்பு பட்டியலில் இருந்து ராகவனால் நீக்க முடியாது. ஏனெனில் அந்த அம்பி இந்த அம்பியை விட பெரிய அம்பி. பாலசுப்பிரமணியனோ திருச்செந்தூரில் வசிக்கும் ஒரு சூத்திரன் என்பதால் சார்வாள் உடனே ஆக்சன் எடுத்து விட்டார்.
இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள். தொட்டதுக்கெல்லாம் திராவிட இயக்கம் தமிழகத்தை நாசமாக்கிவிட்டது என்று முதலைக் கண்ணீர் வடித்தார்கள்.
அரசின் ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பிற்கு குறைவான தொகையை சமர்ப்பிக்கும் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும். இதில் என்ன விதிமீறல் அல்லது முறைகேடு இருக்கிறது. மேலும், ஒரு நிறுவனத்தின் நிறுவனர்கள் செய்த முறைகேடுகளுக்கு வானதியோ அல்லது பாஜகவோ எப்படி பொறுப்பாக முடியும் என்றும் சிலர் வாதிடக்கூடும். இது குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.
மேலும், வானதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாலசுப்பிரமணியனின் குற்றச்சாட்டிற்கு அளித்த பதில் பற்றியும், சைலாக் நிறுவனத்தின் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரைப் பற்றியும் இனி பார்ப்போம்.
ரஜினி நடிக்கும் எந்திரன் – 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல் கம்பெனியின் ஊழல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அந்தப் படத்தின் வசனகர்த்தா சாட்சாத் ஜெயமோகன் என்பதால் அவருக்கு இந்த கார்ப்பரேட் மோசடிகள் குறித்து அதிர்ச்சி ஏதும் இருக்காது. ஏனெனில் அந்தப்படத்தின் முன்னோட்ட விழாவிற்கு மும்பை சென்ற போதுதான் அவர் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை நேரடியாக ஆதரித்தார். அவரது அறமே எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதல்ல, சம்பாதித்த பணத்தில் எப்படி இலக்கிய ரசனையாக வாழ்கிறார்கள் என்பதே!
ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்.
(தொடரும்)
– வினவு புலனாய்வுக் குழு
(இந்த ஊழலின் ஆதாரங்கள் பல திரு பாலசுப்ரமணியன் ஆதித்யனால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டவைதான். அவற்றை சரி பார்த்து, ஆராய்ந்து, வேறு சில தகவல்களை தேடிப் பெற்று தொகுத்து இங்கே தருகிறோம்.)
இதன் அடுத்த பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்
பா.ஜ.க-வின் ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும்
இந்த புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி
“வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோன் உயரும்” – என்றார் ஔவையார்.
ஆனால் 2022–ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்கப் போவதாக மோடி அரசு அறிவித்திருக்கும் காலத்தில்தான் இருப்பதும் பறிபோயிக் கொண்டிருக்கிறது. சமீக காலமாக தற்கொலை செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிப்பே அதற்கான சாட்சி.
இது அரசின் கணக்கில் வராத ஒரு விவசாயியின் கதை.
டெல்டா பகுதியின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணிக்கத்துக்கு நாலு ஏக்கர் நஞ்சை நிலம் இருந்தது. தண்ணீர் தடையின்றி பாயும் பள்ளத்தாக்கான கடைமடைப் பகுதியில்தான் அவரது நிலம் இருக்கிறது. கடும் உழைப்பாளியான மாணிக்கம் மற்றவர்களை விட ஏக்கருக்கு சில மூட்டைகள் கூடுதலாகத்தான் அறுவடை செய்வார். ஆற்றில் தண்ணீர் திறக்கும் தேதி அறிவித்தால் மாணிக்கம் அறுவடை தேதியையே முடிவு செய்யும் அளவுக்கு திறமையான உழைப்பாளி. மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என ஐந்து பேர் கொண்ட மாணிக்கத்தின் குடும்பத்துக்கு நல்லது கெட்டது அனைத்துக்குமான மூலாதாரம் இந்த நாலு ஏக்கர் நிலம்தான்.
2000 –ம் ஆண்டு வாக்கில் காவிரி பிரச்சனையால் கால நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு உருவானது. மண்ணின் தன்மைக்கேற்ப ஒரு போகம் இரு போகம் என இருந்த விவசாய நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அதி வேகமாக வரத் துவங்கியது.
மாணிக்கத்திற்கும் நான்கு வருடம் தொடர்ந்து நட்டத்தை ஏற்படுத்திய விவசாயம் “போர்” போடும் எண்ணத்தை தூண்டியது. ஆனால் ஊரைச் சுற்றி வாங்கி வைத்த கடனோ ஆசையை நிராகரித்தது. அடுத்து வரும் காலங்களிலாவது ஆற்றில் முறையாக தண்ணீர் வரும்போது விட்டதை பிடித்து விடலாம், பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைக்கலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு போர் போடும் எண்ணத்திற்கு தடை போட்டார்.
படிப்பு வராமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தான் மூத்த மகன். தண்ணீர் பிரச்சினையை போக்க ஆழ்துளைக் கிணறு போட வேண்டும் என்றான் மகன். ஏற்கனவே நான்கு வருடம் விவசாயம் பொய்த்ததால் கடனாளியாக இருக்கும் நமக்கு இது மேலும் சுமை என்றார் அப்பா.
மகனோ ஏற்கவில்லை. வங்கியில் நிலப்பட்டாவை வைத்து போர்வெல் கடனும், அதே நிலத்தை ஊர் பணக்காரரிடம் காண்பித்து வட்டிக் கடனும் வாங்கி போர்வெல் போடத் தொடங்கினார்கள். நான்கு லட்ச ரூபாய் செலவில் அனைத்து வேலைகளும் நிறைவேறி பூமிக்குள் இருந்து இரும்பு குழாய் வெளியில் தலைகாட்டி விட்டது. மின்சாரம் வர வேண்டியதுதான் பாக்கி.
மாணிக்கத்தின் வயல் அருகில் மின்சாரத்துக்கான வழி இல்லை. வயல்வெளிக்கு கொண்டு வர சாலையில் இருந்து தனி மின்தடம் அமைக்க வேண்டம். அதற்கு ஒரு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. அந்த தொகைக்கு கடனை தேடியும் தேவைப்பட்ட காலத்துக்குள் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் மேலும் கடன் சுமை ஏறுவதால் பதற்றம் அடைந்த மாணிக்கம் வங்கி அல்லாத கடனுக்கு மட்டுமே மாதம் பத்தாயிரம் ரூபாய் வட்டி கட்டவேண்டும். போர்வெல் நம் தகுதிக்கு தேவையற்ற வேலை என மகனிடம் வாதிட்டார்.
தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி விவசாய முறையை மாற்றி கடன் சுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான் மகன். ஆனால் கைக்கு கிடைக்காத பணம், தடைபோடும் அப்பாவின் பேச்சு, இருக்கும் நிலையில் இது தேவையா என்ற சுற்றாத்தாரின் ஏளனம் தாங்கிக் கொள்ள முடியாமல் குழம்பிப் போனான். விளைவு அவன் போட்ட போர்வலின் தண்ணீரை பார்க்காமலே உயிரை மாய்த்துக் கொண்டான். பத்து ஆள் வேலையை ஒற்றை ஆளாக செய்யும் பலம் பொருந்திய 22 வயது நிறம்பிய அவன் உயிர் 50 மில்லி பூச்சி மருந்துக்கு பலியானது.
மகனின் மரணத்தால் மயான அமைதியோடு அக்குடும்பம் ஒருவருடத்தை கடந்தது. இந்த சூழலில் அரசுப் பள்ளியில் படித்து 1000–க்கு மேல் மதிப்பெண் பெற்ற இளைய மகன் பட்டப்படிப்புக்கு தயாரானான். பி.இ படிக்க ஆசையிருந்தாலும் டிப்ளமோதான் விதி என்றானது.
ஒரு வழியாக மாணிக்கத்துக்கு தாய்மாமன் சீராக வந்த வெளியூர் நிலத்தை விற்று மின்சாரம் வாங்கியதால் போர்வெல் ஓடத் தொடங்கியது. 4 வருடத்தில் பாதி கடனை அடைத்தார் மாணிக்கம். இளைய மகன் பி.இ படித்தே தீருவேன் என்றான். மகளும் பள்ளிப் படிப்பை முடித்தாள். மீண்டும் கடனாளி ஆனார் தந்தை. இளையமகன் பி.இ படித்து முடித்தும் கடனுக்கு ஒரு வழியும் பிறக்கவில்லை. கடன்காரர்களின் தொல்லையாலும், வட்டிக் கொடுத்து மீளமுடியாமலும் போர்வெல்லோடு சேர்த்து நிலத்தையும் 6 லட்சத்துக்கு அடகு வைத்தார்.
மாணிக்கத்தின் நிலத்தை அடகு வாங்கியவர் ஒரு அரசு ஊழியர். இவர் ஐந்து அண்ணன் தம்பிகளை கொண்ட கூட்டு குடும்பத்தைச் சேர்தவர். இந்த ஐந்துபேரின் பட்ட படிப்பிற்காக இவர்கள் பெற்றோர் பரம்பரை சொத்தான எட்டு ஏக்கர் நிலத்தை இழந்தனர். விவசாயத்தில் மிச்சம் ஏதுமில்லை, படித்தால் பெருங்குடி ஆகலாம் என சிறுக சிறுக நிலத்தை விற்றனர். இந்த ஐந்துபேரில் இருவருக்கு மட்டும் அரசு வேலை. மற்றவர்களுக்கு சொல்லும் அளவுக்கு வேலையோ சம்பளமோ கிடையாது.
நிலம் இழந்ததை நினைத்து நினைத்து வருத்தப்படும் பெற்றோரின் மனதறிந்தும் விவசாயத்தின் மேல் உள்ள மரியாதையினாலும் மாணிக்கத்தின் நிலத்தை அடகு வாங்கினார்கள் இந்த அண்ணன் தம்பிகள். வருடத்துக்கு இரண்டு போகம் என இரண்டு வருடம் விவசாயம் செய்தனர். அதற்குமே தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியினால் பாதி நிலம் மட்டும் விவசாயம் செய்தனர். இதுவரை விவசாயம் செய்வதற்கான முதலீட்டை கழித்து விட்டுப் பார்த்தால் அவர்கள் போட்ட முதலை இன்னும் எடுக்கவில்லை.
இந்த வருடம் கோடை நடவு செய்திருந்தனர். பயிரை விட்டு நெல் சூரியனை எட்டிப் பார்க்கும் தொண்டைக்கதிர் தெரியும் பக்குவமான காலம். போர் பழுதுபட்டு தண்ணீர் வரவில்லை. குடும்பமே பதட்டப்பட்டது. மெக்கானிக் தொழிலாளி வரவழைக்கப்பட்டார். பூமிக்குள் இருக்கும் போர்வெல் குழாய்க்குள் அதற்கான பிரத்தியோகக் கருவியும் அதற்கான கேமராவும் கொண்டு பரிசோதித்தார்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மோட்டாருக்கும் கீழே தண்ணீர் போய்விட்டதால் பூமிக்குள் இருக்கும் குழாய் உருகி அதன் வடிவம் சிதைந்து விட்டது.
வீட்டில் ஒருவருக்கு முடியாமல் போய் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் இருக்கும் பதட்டம் அனைவர் முகத்திலும் தெரிந்தது. 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் நகரத்து மருத்துவமனைக்கும் கிராமத்துக்குமாக நடையாய் நடந்தார்கள். மருத்துவரை கூட்டி வருவது போல் போர்வல் மெக்கானிக்கை இருசக்கர வாகனத்தில் வைத்து அவசரமாக அழைத்து வந்தார்கள். முடியாது என்றானதும் அதைவிட திறமையானவர் என்று மற்றவரை அழைத்துவந்தனர். எல்லாம் கொண்டை கதிராக இருக்கும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் வேண்டுமே என்ற கவலைதான்.
முற்றிலுமாக சிதைந்துவிட்டது. இனி போர்வல் பயன்பாட்டுக்கு உதவாது என்றனர். உயிருக்கு ஊசலாடும் பயிரைக் காப்பாற்ற பக்கத்து போர்வல் காரரிடம் தண்ணீருக்கு விலை பேசி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் நிலத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறைதான். இருந்தும் நெற்பயிரை பார்க்கையில் ஒரு விசாயியாக அவரால் மறுக்க முடியவில்லை. அவர் பயிர், கதிர் வரும் நிலையில் இல்லை என்பதாலும் கொஞ்சம் காய்ந்தால் கூட உயிர் பிழைத்துவிடும் என்ற நம்பிக்கையிலும் உதவி செய்ய முன்வந்தார்.
எப்படியோ பயிரை காப்பாற்ற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டதில் நிம்மதி. ஆனால் போர்வெல் கேள்விக்குறியானது. கொடுத்த பணத்துக்கான வருமானத்தை நிலத்திலிருந்து எடுக்காத நிலையில் புதுசாக போர்வெல் போட்டுத் தரவேண்டிய நிலை குறித்து அடகு வாங்கியவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஊர் பெரியவர்களிடம் முறையிட்டனர். ஆளுக்கு பாதி பணம் போட்டு மீண்டும் போர் போடலாம் என்று மாணிக்கத்திடம் பேசலாம் என முடிவு செய்யப்பட்டது.
மாணிக்கத்தின் உடல் நிலை போர்வெல் பழுதான சேதியை தாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பையும் நிலத்தையும் மீட்டுவிடுவான் என்று நம்பியிருந்த இளையமகன் பி.இ படித்தும் வேலை இல்லாமல் மேலும் கடன் பட்டு ஏதோ ஒரு வேலைக்காக வெளிநாட்டு பயணத்துக்கு காத்திருக்கிறான். மகள் கல்யாணத்துக்கு காத்திருக்கிறாள். இந்நிலையில் மேலும் ஒரு கடன் அவர் சக்திக்கு அப்பாற்பட்டது.
அடகு வாங்கியவர்கள், மாணிக்கத்திடம் போர்வெல் போட பாதி பணம் தரவேண்டும் என்று வற்புறுத்தவும் இல்லை. மாணிக்கம் மறுக்கவும் இல்லை. ஆனால் பலவீனமான அவர் உடல் நிலை போர்வெல் நிலையறிந்த மறுநாளே உயிரை விட்டு விட்டது.
மாணிக்கத்தின் இறுதி சடங்கு கூட்டத்தில் அவர் மனைவி “நெலம் நெலமுன்னு எங்குடும்பமே அழிஞ்சுப் போச்சு. ஒத்த ஆளு படுத்தான்னா ஒரு வாய்க்கா(ல்) ஒடப்பு மண்ணடைவான் எம்புள்ள. பீமன் மாதிரி இருந்த எம்புள்ள போயி பத்து வருசம் ஆச்சு. எங்களால இன்னும் அவனை மறக்க முடியல. பிள்ளையும் போச்சு வயலும் போச்சுன்னு பொலம்பி பொலம்பி படுத்த படுக்கையானாரு இந்த மனுசன். ஒரு போகமாவது வெள்ளாமெ செய்யாம எவ்வுசுரு போகாதுன்னு சொன்னவரு இன்னைக்கி எங்கள அனாதையாக்கிட்டு போயிட்டாரு”
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அடகு வாங்கிய அரசு ஊழியரின் அம்மா “படிப்புதான் முக்கியமுன்னு நெலத்த எழந்தேன். ஆனா நெலமில்லையேன்னு நெனைக்கும் போது படுத்தா தூக்கம் வராது. தெருவுக்குள்ள நடந்தா அவமானமா இருக்கும். வெவசாயம் பாக்கனும் கொல்லை குடிக்கு போகனுமுன்னு அத்தன ஆசை. எனக்காகதான் எம்புள்ளைங்க இந்த நெலத்த அடகு புடிச்சாங்க. இன்னைக்கி என்ன செய்றதுன்னு தெரியாம நிக்கிறாங்க. எல்லாரும் வெவசாயத்த விட்டுட்டு போகயில நான் மட்டும் ஆசப்பட்டேம் பாரு எம்புத்திய சோட்டால(செருப்பு) அடிக்கணும்.”
இதையெல்லாம் பார்க்க சகிக்காமல் மாணிக்கமும் போய்ச் சேர்ந்து விட்டார். பாருங்கள், ஒரு நிலம், தண்ணீரில்லை, ஃபோர்வெல் போட்டார்கள் இறுதியில் ஒரு உயிர் தற்கொலை, ஒரு உயிர் மனம் வருந்தி மரணம், இருப்பவர்கள் என்ன செய்வதென்று திகைக்கிறார்கள்!
அரசாங்கத்தின் கணக்கில் வராத விவசாயிகளின் மரணம் ஒவ்வொன்றிலும் இதுதான் நிலைமை!
சரசம்மா
(உண்மைக் கதை. பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)
_____________
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
நாளை ஆகஸ்டு 15 -ம் தேதி. இந்தியா “சுதந்திரமடைந்து” நாளையோடு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எழுபது ஆண்டு இந்திய சுதந்திரத்தை எழுபது பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுக் கொண்டாடி உள்ளது பாரதிய ஜனதா. கடந்த ஒரு வாரத்திற்குள் பாரதிய ஜனதா ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு உத்திரபிரதேச மாநில அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கைத் துறை (CAG), பல்வேறு மருத்துமனைகளில் போதுமான மருத்துவ உபகரணங்களும், மருந்துப் பொருட்களும் இல்லை என அறிக்கை சமர்பித்துள்ளது. குறிப்பாக தற்போது படுகொலை நடந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2011 – 2016 காலப்பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 452.35 கோடியில் 426.13 கோடி அளவுக்கே செலவு செய்திருப்பது தெரியவந்தது.
மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை
இதே மருத்துவ மனையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச மருத்துவ உபகரணத் தேவையில் 27 விழுக்காடு பற்றாக்குறையாக இருப்பதும் கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கையில் தெரியவந்தது.
கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தற்போதைய உறுப்பினரான யோகி ஆதித்யநாத், கடந்த ஐந்து பாராளுமன்றத் தேர்தல்களில் வென்றவர் என்பதும், அவரே மாநில முதல்வராகவும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பிறகு ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – ஆதித்யநாத் இன்னமும் அவ்வாறு செய்யவில்லை)
கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கருவிகள் மற்றும் மருத்துகளின் பற்றாக்குறையுடன், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (Annual Maintenance Contract) செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதையும், பல்வேறு உயிர்காக்கும் கருவிகள் செயல்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது. அதே போல் உத்திரபிரதேச மாநிலத்தில் குறிப்பாக கோரக்பூர் பகுதியில் மூளை அழற்சி நோய் தாக்கு 1970 -களில் இருந்தே அசாதாரண எண்ணிக்கையில் உள்ளது.
இறந்த குழந்தையின் உடலைச் சுமந்து செல்லும் உறவினர் ஒருவர்
கடந்த 2010 -ல் இருந்து எடுத்துக் கொண்டால் மொத்தம் 24,678 பேர் மூளை அழற்சி நோய் தாக்குக்கு உள்ளாகியுள்ளனர் – இதில் மொத்தம் 4,093 பேர் இறந்துள்ளனர். இந்த நோயின் காரணமாக 1978 -ல் இருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் தான் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 70 குழந்தைகளும் 13 பெரியவர்களும் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு மரணங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
கடந்த பல மாதங்களாக ஆக்சிஜன் சப்ளை செய்யும் காண்டிராக்டருக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படாத நிலையில் காண்டிராக்டரின் தரப்பிலிருந்து பல்வேறு நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலுவைத் தொகை குறித்து எந்த தகவலும் வழங்கப்படாத நிலையில் ஆகஸ்டு 10 -ம் தேதி ஆக்சிஜன் சப்ளையை காண்டிராக்டர் நிறுத்தியதாகவும், அதன் காரணமாகவே மரணங்கள் நிகழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் காண்டிராக்டரின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா சார்பில் நடந்த கொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது காரணமில்லை என்றும், மூளை அழற்சி நோயே காரணம் என்றும் சொல்லப்பட்டது. அப்படியே பார்த்தாலும், கடந்த பல மாதங்களாக மருத்துவ கல்லூரியின் முதல்வர் மூளை அழற்சி நோய்க்கான மருத்துவத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாதது குறித்து கடிதங்கள் எழுதியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் உயரதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் மூளை அழற்சி நோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக 37.99 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதே கடிதத்தை, மத்திய அரசின் தேசிய சுகாதாரத் துறைக்கும் அனுப்பியுள்ளார். எனினும், மத்திய மாநில அரசுகள் உயிர்காப்பதற்கு அத்தியாவசியத் தேவையான இந்த நிதியை ஒதுக்கீடு செய்யவே இல்லை.
நாடெங்கும் பதிவாகும் மூளை அழற்சி நோயில் சுமார் 60 விழுக்காடு கோரக்பூரில் தான் பதிவாகின்றது. கிட்டத்தட்ட கொள்ளை நோயைப் போல் கோரக்பூரின் குழந்தைகளைத் தாக்கும் மூளை அழற்சி நோயைக் கட்டுப்படுத்தவோ, அதற்கான போதுமான நிதியை ஒதுக்கவோ மத்திய மாநில அரசுகள் எந்த முயற்சியிலும் ஈடுபடவே இல்லை. அதோடு கூட, மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவில்லை.
சுமார் ஐம்பது படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 300 குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவைப் பராமரிக்க குறைந்தது 149 பணியாளர்களும், 10 கோடி வருடாந்திர பட்ஜெட்டும் தேவை என மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை அதற்கான ஒப்புதல் கிட்டவில்லை.
மூளை அழற்சி நோய் அதிகம் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை விவரம்
தற்போது மூளை அழற்சி நோய் தாக்குதலுக்குள்ளான குழந்தைகளைப் பராமரிக்கும் 11 ஊழியர்களுக்கான சம்பளம் கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாத நிலையில் பத்திரிகைகளில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மூளை அழற்சி நோய் சிகிச்சைக்கு அத்தியாவசியத் தேவையான ஆக்சிஜன் சப்ளை ஆகஸ்டு பத்தாம் தேதி மதியம் தீர்ந்து போயுள்ளது. இதைத் தொடர்ந்தே படுகொலைகள் அரங்கேறியுள்ளன.
நடந்திருப்பது பேரழிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை – அதே போல் இந்தப் பேரழிவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு உள்ளதென்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும், நடந்த சாவுகளுக்குக் காரணம் ஆக்சிஜன் சப்ளை இல்லை என்றும், மூளை அழற்சி நோயே காரணம் என்றும் எனவே தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் பாரதிய ஜனதா தரப்பில் சொல்லப்படுகிறது.
இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆக்சிஜன் காண்டிராக்டருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமதப்படுத்தியதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் பல்வேறு நினைவூட்டல் கடிதங்களுக்குப் பின் கடந்த ஆகஸ்ட் 5 -ம் தேதி தான் நிதி ஒதுக்கீடு செய்ய்யப்பட்டுள்ளது. அது சனிக்கிழமை என்பதால் ஒதுக்கப்பட்ட நிதி 7 -ம் தேதி அன்று தான் வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில், காண்டிராக்டருக்கான நிலுவைத் தொகைக்கான ஒப்புதல் வேண்டி மாநில கருவூலத்துக்கு ஆகஸ்ட் 7 -ம் தேதியன்றே கடிதம் எழுதப்பட்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி தான் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதிக்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 9 -ம் தேதி முதல்வர் ஆதித்யநாத் மருத்துவமனைக்கு விஜயம் செய்த நிலையில், அதிகாரிகள் முதல்வரின் வருகைக்கான வேலைகள் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆகஸ்ட் 10 -ம் தேதி வங்கியிடம் காண்டிராக்டருக்கான காசோலையை அனுப்ப கோரிக்கை அனுப்பபட்டுள்ளது. அதே நாள் நிலுவைத் தொகை வந்து சேராததால் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியுள்ளார் காண்டிராக்டர்.
ஆக, நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.
இந்நிலையில் கோரக்பூரில் நடந்துள்ள மனிதப் பேரழிவு உண்டாக்கும் மனவுளைச்சல் ஒருபுறமென்றால், நடந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் கொலைவெறியேற்றுகின்றன.
மருத்துவமனைக்கு விஜயம் செய்த முதல்வர் ஆதித்யநாத், முந்தைய ஆண்டுகளில் நடந்துள்ள சாவுகளின் பட்டியலை வாசித்து “இதெல்லாம் சாதாரணம்” என்கிற போக்கில் பேசியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியோ, மக்களுக்கான சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த அரசு மருத்துவமனைகளால் இயலாதென்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
கோரக்பூர் மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில் நாவில் எச்சில் ஒழுக மதரசாக்களில் “வந்தே மாதரம்” பாடுவது குறித்த விவாதங்களில் திளைத்துக் கிடந்த “தேசிய” ஊடகங்கள், தற்போது பழியை அரசு மருத்துவமனைகளின் “கையாலாகாத்தனம்” குறித்து அங்கலாய்த்து வருகின்றன. இதன் பொருள் அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் கடமையில் இருந்து தவறிய அரசின் அயோக்கியத்தனத்தை மூடி மறைப்பது; தனியார் மருத்துவமனைகளுக்கு ஏழை மக்களை விரட்டியடிப்பதாகும்.
இந்துத்துவத்தின் அதிகாரக் கொடி உயர்ந்து செல்லும் மட்டத்தை உயிர்களின் மதிப்பு குறைந்து வரும் மட்டத்தைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். விரைவில் அமையவுள்ள இந்து ராஷ்டிரத்திற்கு உத்திரபிரதேசத்தில் வரிசையாக அடுக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சடலங்களும், ஊதப்படும் சங்கின் ஒலியும் கட்டியம் கூறுகின்றன.
மரணத்திற்கு நிறமில்லை என்று யார் சொல்வது – இதோ மரணத்தின் நிறம் காவியென்பதை நம் செவுளில் அறைந்து அறிவித்துள்ளனர் மோடியும் ஆதித்யநாத்தும்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாளையக்காரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்த நிலைமையை, இன்றைய சூழ்நிலை நினைவு படுத்துகிறது. பாரதிய ஜனதாக் கட்சிதான் நாம் எதிர் கொண்டிருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனி.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்தும் உத்தரவை அரசிதழில் வெளியிட்டுவிட்டு, வதந்திகளை நம்பாதீர்கள் எனத் துணிந்து புளுகியிருக்கிறார், உணவு அமைச்சர் காமராஜ்.
3. விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் : விவசாயியின் விரலைக் கொண்டே, அவன் கண்ணைக் குத்தும் சதி!
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியஇரண்டும் இந்திய விவசாயிகளை ஒரேயடியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கிடுக்கிப் பிடியில் சிக்க வைக்கின்றன.
4. தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா?
தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு மிகப்பெரும் சூழலியல் பேரழிவின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருப்பதை இந்த கட்டுரை சுட்டிக்காடுகிறது.
5. சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது!
தின்னச் சோறில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, கௌரவத்தோடு வாழ வேலையில்லை என்ற நிலைக்குத் த்ள்ளப்பட்டுள்ள காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி கூலி, ஏழை விவசாயிகளின் வேதனைக் குரலைக் கேட்கவும் ஆளில்லையோ?
6. பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம்: கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம்!
தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அவர்களை இயற்க்கச் சீற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளிலிருந்து காக்க வேண்டிய தனது கடமையைத் தட்டிக் கழிக்கிறது இந்திய அரசு.
கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரப்படும் கடன் த்ள்ளுபடியைக் கைதட்டி வரவேற்கும் முதலாளித்துவ நிபுணர்கள், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பொருளாதாரச் சீர்கேடு என நரம்பின்றிச் சாடுகிறார்கள்.
8. உணவுப் பொருள் இறக்குமதி: ஆதயமடைவது யார்?
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை, இந்தியாவில் விளையும் கோதுமையை விட குறைவான விலைக்கு கிடைக்கும் போது அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரன பொருளாதார அறிவின் மூலமாகவே யாரும் புரிந்து கொள்ள முடியும்.
9. குத்தகை விவசாயி ஆகிறார் அம்பானி!
மோடி அரசு கொண்டுவரவிருக்கும் விவசாய நிலக் குத்தகை சட்டம், சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சமர்ப்பணம் செய்யும் சதித்தனங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
10. விவசாயி தீராத கடனாளியாவது ஏன்?
விவசாயிகள் கடன்பட்டு உற்பத்தியி செய்யும் விளைபொருளின் மதிப்பில் ஒரு பகுதியை உள்ளூர் மண்டி வியாபாரிகள் தொடங்கி பன்னாட்டு வேளாண் கழகங்கள் வரையிலான ஒட்டுண்ணிகள் சட்டபூர்வமாக்வே திருடிக் கொள்கின்றனர்.
11. பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்: மற்றுமொரு பேரழிவு ஆயுதம்!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
பிக்பாஸ் ஆரம்பித்து ஒன்றரை மாதமாகி விட்டது. நமது மக்கள் பல்வேறு கோணங்களில் சில பல ஆய்வுகளையே நடத்தி விட்டனர். யூ டியூப் சானல்கள் பல பிக்பாஸின் அன்றாட நடவடிக்கைகளை திடுக்கிடும் தலைப்புக்களால் போட்டு கம்பெனியை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட்டுகின்றனர். ஃபேஸ்புக்கிலோ முற்போக்கு, பிற்போக்கு, சமூகவியல், பெண்ணியம், உளவியல் என்று எல்லா பிரிவுகளிலும் ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
வாட்ஸ் அப்பில் ஓவியா படை போர் முரசு கொட்டுகிறது. வார நாட்களில் டிவிட்டரிலும், வார இறுதியில் விஜய் டிவியிலும் கமலஹாசன் பேசும் தத்துவங்கள் பல சமூகவலைத்தளங்கள் மட்டுமல்ல, ஊடகங்களாலும் ஆராயப்படுகின்றன. அசைவ உணவு உண்பவர்களை முரடர்களாக கருதுகிறார், சேரி பிகேவியர் வார்த்தைகளை அனுமதிக்கிறார், மனநலம் பாதிக்கப்பட்டோர் கேலி செய்யப்படுவதை ஏற்கிறார் என்றெல்லாம் தொலைக்காட்சி விவாதங்கள் தொடர்கின்றன. அனைத்தையும் கணக்கில் கொண்டு அடுத்த வாரம் பதிலளிக்கிறார் கமல். அந்தக் குற்றங்களுக்குத் தான் காரணமில்லை என்கிறார்.
நேரடியாக போட்டி நடத்துபவர்களையும், விஜய் டிவியையும் மெல்லிய தொனியில் விமர்சிக்கிறார். மக்களுக்கோ இது போட்டி என்பதால் பொழுது போக்காக எடுத்துக் கொள்ளவும், அதே நேரம் சில வாழ்வியல் பாடங்களை கற்கலாமெனவும் முடிந்த மட்டும் வகுப்பு நடத்துகிறார்.
தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு அருகாமைப் பகுதியிலிருந்து வந்த கிராமப்புற தம்பதியினர் இரவு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென நினைவு வந்தவர்கள் போல “ஐயோ இன்று பிக்பாஸ் பார்க்க முடியாதே, ஓவியா காதல் என்னவாகும்” என்று பேசிக் கொண்டனர்.
ஒவ்வொரு நாளிலும் அந்த இளம் தம்பதியினர் இரவானதும் இரு குழந்தைகளை நல்லபடியாக தூங்க வைத்து விட்டு பிக்பாஸில் பயணிக்கின்றனர். நாள் முழுவதும் அந்தப் பெண் இரு குழந்தைகளை பராமரித்தும், வீட்டு வேலைகளில் மூழ்கியும் போகிறார். அந்தக் கணவரோ அன்றாட வணிக வேலைகளை வாடிக்கையாக செய்கிறார். இரவுதான் அவர்களுக்கு பிக்பாஸ் நினைவுக்கு வருகிறது. பிறகு அவர்களது உலகம் பிக்பாஸ் குடும்ப வீட்டில் நிலை கொள்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் ஏன் பார்க்கிறார்கள்?
சீரியல், சினிமா வகையறாக்களை மக்கள் பார்ப்பது கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக மாறிவிட்ட போது இந்தக் கேள்விக்கே இடமில்லை! ஆனால் சீரியல் – சினிமா இரண்டின் சாயல்களோடு, ‘புதுமை’களையும் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் இன்னும் கூடுதலாக வரவேற்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இந்தப் புதுமை என்பது அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு சூப்பர் சிங்கர், காமடி நிகழ்வுகள், பிரபலங்களின் மேடை போட்டிகள், நடனப் போட்டி போன்ற ரியாலிட்டி தொடர்களை அறிமுகப்படுத்திய விஜய் டிவியின் பிக்பாஸ் மற்றவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபடுகிறது.
மேற்கே அஸ்தமனமான ரியாலிட்டி ஷோக்கள் கிழக்கில் உதிக்கின்றன
அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப் பார்க்கும் மக்களின் பலவீனம்தான் பிக்பாஸ்-ன் பலம் என்று சிலர் இதை எளிமையாக முடித்து விடுகிறார்கள். “எனது படுக்கையறையை எட்டிப் பார்க்காதீர்கள், அது எனக்கானது” என்று கமலஹாசன் முன்பொரு முறை சொல்லியதை எடுத்துப் போட்டு இப்போது அவரே படுக்கையறையை காட்டுகின்றார் என்றும் விமர்சிக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தமது படுக்கையை மட்டுமல்ல, 24 மணி நேரமும் தமது நடவடிக்கைகள் வெளிச்சப்படுத்தப்படுபவதை ஏற்பதாகத்தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்று கமல் பதில் சொன்னார். இது தனக்கு வந்தால் தக்காளி மாதிரியா?
உலகெங்கிலும் செலிபிரிட்டி எனப்படும் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை ஊடகங்களின் முக்கியமான விற்பனைப் பொருள். மேலை நாடுகளில் இத்தகைய செலிபிரிட்டி கிசுகிசுக்கள் இருந்தாலும் மக்களிடையே முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் “தனிநபர்வாதமும்” கொஞ்சம் “ஜனநாயகமும்” இருப்பதால் நமது நாடுகளைப் போல் அங்கே இந்த கிசுகிசுக்களுக்கு பெரிய அசைபோடுதல் இல்லை.
இருப்பினும் ஊடகங்களின் “பேஜ் – 3” வகை நொறுக்குத் தீனி துணுக்குகளில் பிரபலங்களின் பரபரப்பான மசாலா ‘செய்தி’களே இன்றும் உலக அளவில் உத்திரவாதமான விற்பனை உத்தி. கிசுகிசுக்களை தடை செய்துவிட்டால், தமிழகத்தின் தினமலர் – குமுதமோ இங்கிலாந்தின் சன் நாளிதழோ முன்னறிவிப்பு இன்றி செத்துப் போவது உறுதி. யூ டியூபில் தமிழ் சினிமாவின் முக்கல் முனகல்களை பொறுக்கி எடுத்து கிசுகிசுவாக மாற்றி வாந்தி எடுக்கும் நூற்றுக்கணக்கான சானல்களின் வருமானம் சமீபத்திய சான்று.
கிசுகிசுக்கள் என்றால் அவை படுக்கையறையில்தான் ஜனித்தாக வேண்டும். கமலஹாசன் காலையில் இட்லி சாப்பிட்டார், மாலையில் போண்டா தின்னார், இரவில் குளித்தார் போன்றவையை விட அவரது படுக்கையறையை பகிர்பவர் யார் என்பதே ‘சேதி’ மதிப்புடையவை.
இன்றைய கால சினிமாக்களை விளம்பரப்படுத்த ரியாலிட்டி ஷோக்களின் சாயலில், படத்தின் நாயக – நாயகிகளது கிசுகிசுக்களையோ, இல்லை நயன்தாரா பீர்பாட்டில் வாங்குகிறார் போன்ற அதிர்ச்சி மதிப்பீடுகளையோ உண்மை போல வெளியிடுகின்றனர். அடுத்தவர் படுக்கையறையை காண்பித்துத்தான் ஒரு படம் ஓட வேண்டுமா என்று எவரும் இதற்கு பொங்குவதில்லை.
சிம்ரன் – கமல் தொடர்பான கிசுகிசுக்கள் பேசப்பட்ட காலத்தில் அதையே வைரமுத்து பாட்டெழுதி, “பஞ்ச தந்திரம்” படத்தில் ஊரே பார்ப்பதற்கு கமல் அனுமதித்தார். காரணம் என்ன? கிசுகிசுக்கப்படும் சேதிகளில் எந்த அளவுக்கு அடிபடுகிறார்களோ அந்த அளவுக்கு சினிமா மாந்தர்களின் சந்தை “டிஆர்பி” மதிப்பிடப்படுகிறது. அதில் படுக்கையறை, எனது வாழ்க்கை, பெண்ணுரிமை, அநாகரிகம் போன்ற வார்த்தைகளுக்கு மதிப்பேதுமில்லை.
எனினும் சினிமா நடிகர்களும் மனிதர்கள்தானே என்ற சமத்துவ உணர்வு அவர்களுக்கு எப்போதாவது தோன்றும். சந்தை இழந்த பிறகு கண்டிப்பாக தோன்றுவது, உச்சத்தில் இருக்கும் போது சலிப்பு காரணமாகவும் பிதுங்கும். அப்போதெல்லாம் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று செல்லமாக சீறுவார்கள்! கமலஹாசனைப் பொறுத்த வரை போத்தீஸ் விளம்பரம் போல பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்து போக முடியாது.
போத்தீஸ் துணிகளில் உண்மை, நியாயம், நம்பிக்கை இருப்பதாக அவர் சொல்வதை ஒதுக்கி வைத்து விட்டு, கமலின் நடிப்பு, செட், விளம்பர உத்தி குறித்தே மக்கள் அலசுகிறார்கள். பிக்பாசிலோ நாள் ஒவ்வொன்றின் வார்த்தைகளும், திருப்பங்களும், பிரச்சினைகளும், மக்களால் அலசப்படும் போது கமலும் விவாதப் பொருளாகிறார். முக்கியமாக மக்கள் பங்கேற்பை வைத்தே பிக்பாசின் வணிகம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் தனது இமேஜுக்காவும், டிஆர்பிக்காகவும் அவர் சில பல நியாயங்களை பேச வேண்டியிருக்கிறது.
சரி, மக்கள் பிக்பாஸை ஏன் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலே இல்லையா?
அதற்கு நம்மைப் போன்ற ஏழை நாடுகளின் சமூகவியலைக் கொஞ்சம் புரட்டலாம். அதற்காக ‘பணக்கார’ நாடான அமெரிக்காவிற்கு பயணிப்போம்.
பில் கிளிண்டன்
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகை பணியாளரான மோனிகா லிவின்ஸ்கியிடம் முறைகேடாக நடந்து கொண்டார். அந்தப் பெண்ணுக்கு சிறப்பான எதிர்காலத்தை தருவதாக ஆசை காட்டி முயன்றார். இது வெளியே தெரிய வந்து பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணை வரை போனது. குட்டைப் பாவாடையில் விந்துக் கறை இருந்தது உள்ளிட்டு இந்த விசாரணை நுட்பமாக நடக்க நடக்க உலக ஊடகங்களின் உற்சாகம் பீறிட்டு வழிந்தது.
அமெரிக்கா போன்ற “பாலியல் சுதந்திரம்” உள்ள முன்னேறிய நாடுகளில் இதற்கெல்லாமா விசாரணை வைப்பார்கள்? நேரெதிராக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் அதற்கு பிறகும் தி.மு.க பெரிய கருப்பன், அ.தி.மு.க ரமணா சார்பான வீடியோக்கள் வெளிவந்தன. பெரிய கருப்பன் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக வாட்சப்பில் ஓடுவதாக அ.தி.மு.க-வினர் கேலியுடன் பிரச்சாரம் செய்தாலும் தேர்தலில் கருப்பன் பெரு வெற்றி பெற்றார். அதே போன்று ரமணாவின் அமைச்சர் பதவிக்கும் பெரிய ஆபத்தில்லை.
இதே போன்று கே.ஏ.செங்கோட்டையனின் இல்லத்தரசிகளது எண்ணிக்கை கூடும் பிரச்சினையை ஒட்டி ஜெயலலிதா அவர் மீது நடவடிக்கை எடுத்து ஒதுக்கினார். இன்று அவர் கல்வி அமைச்சராக வலம் வருகிறார். எவரும் அவரது பாலியல் உறவுகள் குறித்த விவாதங்களை எழுப்புவதில்லை. பா.ஜ.கவின் இளைய நட்சத்திரமும், மேனகா காந்தி பெற்றெடுத்த சீமந்த புத்திரனுமாகிய வருண் காந்தியின் வீடியோ வெளியானாலும், ஏக பத்தினி விரத ராமனை வைத்து சர்க்கஸ் நடத்தும் பாரதிய ஜனதாவோ, பிரம்மச்சாரி பிரச்சாரக் மோடியோ கண்டு கொள்ளவில்லை.
பாலியல் சுதந்திரம் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் கிளிண்டனுக்கு நடந்த விசாரணை நடப்பதில்லை. அமெரிக்காவில் அதிபரின் ஒழுக்கம் தவறக் கூடாது என்பது இங்கே இல்லை. ஏனிந்த முரண்பாடு? தனிநபர் வாழ்வில் சுதந்திரம், பொது வாழ்வில் கட்டுப்பாடு எனும் அமெரிக்க விதி சொல்வது என்ன?
முதலாளித்துவ நாடுகளில் ‘விதிமுறை’ப்படி சமூக அரசியல் பொருளாதார அமைப்பு இயங்குவது முக்கியம். ராஜிவ் காலத்தில் துவங்கிய ஃபோபார்ஸ், ஃபேர்பாக்ஸ் முதல் வாஜ்பாய் காலத்தில் வந்த கார்கில் சவப்பெட்டி ஊழல் வரை என்ன பிரச்சினை? பன்னாட்டு ஆயுத தளவாட நிறுவனங்கள் இந்தியாவில் ஆர்டரைப் பிடிப்பதற்கு சில தரகர்களை அணுகி கழிவு கொடுத்தனர். இங்கே இத்தகைய தரகுச் சேவைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மேலை நாடுகளில் இத்தரகுகள் மட்டுமல்ல, சூதாட்டம், வரம்புக்குட்பட்ட அளவில் விபச்சாரம் வரை பல விசயங்கள் சட்டப்படியே அனுமதிக்கப்படுகின்றன.
அதாவது இந்தியாவில் லஞ்சம் சட்டப்படி தடை என்றால் அங்கே பல அளவுகளில் சட்டப்படியே கொடுக்கலாம். புஷ்ஷுக்கோ இல்லை ட்ரம்புக்கோ மருந்து, எண்ணைய், ஆயுத அதிபர்கள் பெரும் நன்கொடை அளித்து ஈராக் – ஆப்கான் மீட்புபணி ஒப்பந்தங்களை வளைப்பதற்கு தடை இல்லை. இத்தகைய முதலாளிகளுக்கு எதிர் வரிசை முதலாளிகள் ஜனநாயகக் கட்சி மூலம் சவுண்டு எழுப்பலாமே தவிர சட்டப்படி எதிர்க்க முடியாது.
ரஜத் குப்தா
பங்குச் சந்தையில் எப்படி வேண்டுமானாலும் சூதாடலாமே ஒழிய அதன் உள் வட்ட செய்திகளை எதிர்தரப்பில் கசிய விட்டால் அது குற்றம். அதன்படி இந்திய வமிசாவளியைச் சேர்ந்த (ரஜத் குப்தா திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!) ரஜத் குப்தா தண்டிக்கப்பட்டார். வேறு வகையில் சொல்வதாக இருந்தால், ஒரு முதலாளித்துவ நாட்டில் சட்டப்படியே மக்களைக் கொள்ளையடிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது ‘சட்ட விரோதமாக’ சுருட்ட நினைப்பதை அந்த அமைப்பு அனுமதிக்காது. அதனால்தான் உள்வட்ட வர்த்தக மோசடி குற்றத்திற்காக ரஜத் குப்தாவை விசாரித்த நீதிபதியும், நடுவர்களும் அவருக்காக கிட்டத்தட்ட அழுது கொண்டேதான் தண்டித்தனர்.
அதனால்தான் பாலியல் சுதந்திரம் இருந்தாலும் அதிபர் ஒருவர் மணவாழ்க்கைக்கு வெளியே மண உறவு வைப்பது என்பது அங்கே இலக்கண மீறலாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிலோ சட்டவிரோதமாக கொள்ளையடிப்பதையே மறைமுகமாக சட்டங்கள் அனுமதிப்பதால் இங்கு அனைத்தும் தலைகீழாக இருக்கின்றது. இங்கே பிடிபடாமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதில் சிகரம் தொட்ட அம்பானி இந்திய முதலாளிகளுக்கு ஒரு முன்மாதிரி என்றால் மிகையில்லை.
அமெரிக்காவில் லஞ்சம், ஊழல் சட்ட ரீதியாக்கப்பட்டிருக்கிறது. பொது வாழ்வில் ஒழுக்கம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் லஞ்சம் தடை செய்யப்பட்டிருக்கிறது. பொது வாழ்வில் ஒழுக்கம் வரையறுக்கப்படவில்லை.
நமது அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இப்படி இருப்பதை மக்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – சட்டங்களும் கூடத்தான். மேலும் ஒரு நிலவுடமை சமூகத்தில் இத்தகைய மேன்மக்களின் பாலியல் நடவடிக்கைகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை என்பதை கடவுளர்கள் துவங்கி வார்டு கவுன்சிலர்கள் வரை மக்கள் அங்கீகரிக்கிறார்கள். பத்தினி விரதன் என்பதற்காக இராமன் இந்தியாவில் போற்றப்படுகிறான் என்றால் இந்த நாட்டு மக்களின் மண ஒழுக்கத்தைப் பற்றி மற்ற நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? இப்படி இரண்டு விதங்களிலும் அதாவது மக்கள் தம்மை தாழ்வாக நினைப்பதிலும், மேன்மக்களின் சொந்த வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதிலும் இங்கே கிளிண்டன் வகை பாலியல் முறைகேடுகள் பிரச்சினையாவதில்லை.
மேலும் இங்கே ஜனநாயகம் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒரு சடங்காகவே கொண்டு செல்லப்படுவதால் தமது தனிப்பட்ட வாழ்வில் நீதி நேர்மை நியாயங்களை கடைபிடிக்கும் மக்கள் தேர்தல்களில் அதை புகுத்துவதில்லை. ஆதலால் ஊழல் ராணி ஜெயாவோ, பாலியல் ஊழல் தலைவர்களோ இங்கே நெருப்பாக புடம் போடப்படுவதில்லை.
எப்படிப் பார்த்தாலும் பிக்பாசில் என்னதான் இருக்கிறது? பிக்பாஸ் செட்டில் வாழும் அந்த ‘செயற்கையான’ குடும்பத்தின் சண்டை சச்சரவுகள், காதல் மோதல்கள், சாப்பாடு – வேலை குறித்த அக்கப்போர்கள், பொறாமை – கோள் மூட்டுதல், சகிப்பின்மை, ஆணவம் போன்ற தனிநபர் பிரச்சினைகள், வீட்டில் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் எனப்படும் சோதனைகள் அதனால் வரும் சுவராசியங்கள் அல்லது வேதனைகள்….. இவ்வளவுதானே? இதை ஏன் மக்கள் ஒரு நாள் விடாமல் காத்திருந்து பார்க்க வேண்டும், பேச வேண்டும்?
பிக்பாஸ் தொடர் பெரு வெற்றி அடைந்த இங்கிலாந்தின் சானல் 4 -5 தொலைக்காட்சிகளில் தற்போது அந்த வெற்றி தொடரவில்லை என்கிறார்கள் விமர்சகர்கள். பல்தேசிய இனத்தோர் வாழும் ஐரோப்பாவில் பிக்பாஸ் தொடர் என்பது ஒரு பொழுதுபோக்கு வகையில் வரும் ரியாலிட்டி ஷோ மட்டுமே. சானல் 4 தொலைக்காட்சி பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்பாளர்கள் நிறைய ‘புரட்சிகள்’ செய்து விட்டார்கள். உடலுறவு கொள்வது, அதீத கெட்ட வார்த்தைகள் பேசுவது, நிறவெறி – பாலியல் குறித்த பிரச்சினைகள், ஒரு சீசனில் திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றது என எல்லாப் பரிசோசனைகளும் அங்கே முடிந்து விட்டன.
ஐரோப்பாவிலிருந்து மும்பையில் இறக்குமதியான பிக்பாஸ் நிகழ்வு சுதேசி மண்ணிற்குரிய பாலிவுட் மசாலாவை தூக்கலாக சேர்த்துக் கொண்டது. தொகுப்பாளர் முதல் பங்கேற்பாளர் வரை சினிமா மாந்தர்களை கோத்து விட்ட பிறகு அதன் வீச்சை வணிகமாக்குவதில் பிரச்சினை இல்லை.
பின் நவீனத்துவமாக இருந்தாலும் சரி பிக் பாஸாக இருந்தாலும் சரி மேற்கே அஸ்த்தமித்த பிறகே கிழக்கே உதிக்கின்றன. எப்போதும் அஸ்தமனம் அடக்கத்தோடும், உதயம் ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும் என்பதால் இங்கே பிக்பாஸ் குறித்துப் பேசுவது இருட்டுக் கடை அல்வாவை சிலாகிப்பது போல தேசிய ரசனையாகி விட்டது.
ஸ்ரீ-யின் மௌனம், கஞ்சா கருப்பின் ஏய், அனன்யாவின் ஓபனிங் சரியில்லை பரணியின் நியாயமான கோபம், ஆர்த்தியின் சடசட, நமீதாவின் சீமாட்டித்தனம், ஜூலியின் அழுகை, காயத்திரியின் குழாயடி, ஆரவ்-வின் அது வந்துட்டு, ரைசாவின் நாசுக்கு, ஓவியாவின் சுதந்திரம், சக்தியின் நான்தான், வையாபுரியின் வீட்டு நினைவு, கணேஷின் காரியவாதம், கடைசியாக பிந்து மாதவியின் ஒண்ணுமே இல்லை…..வரை மக்கள் அந்தந்த போட்டியாளர்களை அக்குமேல் ஆணிகளாக அலசுகிறார்கள்.
பிக்பாஸில் பதினான்கு பங்கேற்பாளர்கள் நூறு நாட்கள் தங்கி, உண்டு, கழித்து, பேசி, பஞ்சாயத்தாக்கும் சாதாரண நிகழ்வுகளோடு மக்கள் அசாதாரணமாக ஒன்றுபடுவது ஏன்?
மக்களிடம் எது இல்லையோ, எது மறுக்கப்பட்டதோ, எது சாத்தியமில்லையோ, எது கனவோ அவையெல்லாம் ஆழ்மனம் தொட்டு அன்றாட அசைபோடுதல் வரை அலைக்கழிக்கிறது.
பாலியல் தேவைகள் மறுக்கப்படும் போது கனவுப் புனைவுகள் அடக்கப்பட்ட வேகத்துடன் சீறுகின்றன. வாழ்வியல் தேவைகளுக்கு உழலும் போது உண்டு களிக்கும் ரோட்டரி கிளப் செல்வந்தர் வாழ்வு மீது ஏக்கம் எட்டிப் பார்க்கிறது. அநீதியை தட்டிக் கேட்க சக்தியில்லாத போது கானாப் பாடலாக லாவணிக்கிறது. ஜனநாயகம் ஏட்டில் மட்டும் இருக்கும் போது அடிமைத்தனம் இயல்பில் வேர்விட்டு விடுகிறது.
நேற்று யாம் அரசியல் பேசவில்லை என்பது மெய்யே, அஃது முதிரா மழலை, இப்போது முதிரும் பாதையில் இருப்பதால் அதிர்கிறேன், குத்திக் காட்டாதீர்கள் என்பதாக கமல் சொல்வது பொதுவில் அவர் மீது வரும் விமர்சனங்களுக்கான பதில் மட்டுமே. மக்களுக்கோ அந்த கேள்விகளே இல்லை. பெரிய இடத்துப் பிள்ளை தெருவில் கோலி ஆடுது பாரும்மா என்று இரக்கப்படுவார்கள். பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு வாக்கப்பட்டாலும் டயானாவை தமது பிரதிநிதியாக மக்கள் கருதியதால்தான் அவர் பிரபலமானார். ராயல் குடும்பத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியின் ஒரு முகம் இது.
என்ன இருந்தாலும் ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண்மணி என்று அவர்கள் கருதுவது கூட தோலிலும் சூழலிலும் கருப்பே அண்டாத வெள்ளை வசதி கொண்ட ஒரு சீமாட்டி குறித்த அடிமைகளின் வியப்பு. தங்களது வாழ்வில் இல்லாத இன்பத்தையும், விடாத துன்பத்தையும் வாடிக்கையாக வரித்துக் கொண்டு ஓடும் மக்கள் ஜெயா – சசிகலாவை சிறையில் கடிக்கும் கூவத்து கொசு குறித்து வருந்துகிறார்கள். என்ன இருந்தாலும் அந்தக் கொசு அவர்களுக்குரியது அல்லவா!
இந்த உலகில் இன்னமும் நிலவுடமை சமூகத்தின் பாதிப்பில் இருக்கும் நம்மைப் போன்ற ஏழ்மை நாடுகளும் சரி, எந்தப் புரட்சியும் இன்றி தொழிற்துறை நாடாக மாறிய ஜப்பான் போன்ற நாடுகளும் சரி இன்னும் “சென்டிமெண்ட் இடியட்ஸ்” ஆகவே இருக்கின்றன. இது தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிய பண்பல்ல. சீமான் சொல்வது போல காதலும், வீரமும், விருந்தோம்பலும், நாட்டு வைத்தியமும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்களர்கள், சிங்கப்பூர் சீனர்கள், அனைவருக்கும் சொந்தமானதுதான். அது போல “அலைக்கழிக்கும் அற்பவாதிகள்” (சென்டிமெண்ட் இடியட்ஸ்) என்ற நிலையும் மூன்றாம் உலகிற்கு சொந்தமான பொது உணர்ச்சிதான். இங்கே பார்ப்பனியம் இருப்பதால் அந்த உணர்ச்சிகள் இன்னும் தூக்கலாக காட்டுகின்றன.
வளர்ச்சியடைந்த முதல் உலகின் உணர்ச்சியை பணம் எனப்படும் பொருளாதார நிலை தீர்மானிக்கும் போது மூன்றாம் உலகில் பணமே இருந்தாலும் பழைய சமூகத்தின் உணர்ச்சிகள் அவ்வளவு சீக்கிரம் மாறி விடுவதில்லை. மேற்கின் பன்னாட்டு நிறுவனங்கள் தமது நிர்வாகத்தை தொழிற்முறை நிர்வாகிகளைக் கொண்டு இயக்கும் போது இந்தியாவின் தரகு முதலாளிகளது நிறுவனங்களை குடும்ப உறுப்பினர்களே கட்டுப்படுத்துகின்றனர். மேற்குலகு பணத்தால் திறமையை வாங்கிக் கொள்கிறது. கிழக்கோ பணம் மட்டும் போதாது என்று சாதி, இனம், ரத்த உறவு போன்றவற்றையும் கணக்கில் கொள்கிறது.
ரஜினியின் “முத்து” “அண்ணாமலை” படங்களுக்கு கிடைத்த விசிலும், விசும்பலும் தமிழகத்தில் மட்டுமல்ல ஜப்பானிலும் எதிரொலித்தன. இந்திய ஊடகங்களால் நாய்க்கறி டிராகனாக சித்தரிக்கப்படும் சீனாவில், அமீர்கானின் “டங்கல்” படம் வெற்றியடைந்ததற்கு காரணமும் அதே அலைக்கழிக்கும் அற்பவாத அடிப்படையே.
எனவே இன்னமும் சமூகத்தின் அனைத்துத் துறையிலும் ஜனநாயகமயமாக்கம் பூர்த்தியடையாத இந்தியாவில், தமிழகத்தில் நாம் அழுவதும், சிரிப்பதும், இரங்குவதும், பேசுவதும் நம் கையில் இல்லை. அதை பிக்பாஸே தீர்மானிக்கிறார்.
ஒரு பெண்ணை வித விதமாகத் துரத்தும் கதைகள் தமிழ் சினிமாவில் இன்னும் நின்றபாடில்லை. இதை ஐரோப்பாவில் பார்க்கும் ஒரு நபர் “பிளடி இண்டியன்ஸ்” என்று வைது விட்டு பஃபேவுக்கு சென்று துக்கம் அனுசரிப்பார். ஆக காதலோ, அப்பா – அம்மா பாசமோ, அண்ணன் – தங்கச்சி நேசமோ, பணக்காரன் மகள் – ஏழை இளைஞர் கலகக் காதலோ, இங்கே அற்பவாத உணர்ச்சிகள் இடைவெளியில்லாமல் ஆதிக்கம் செய்கின்றன.
இதற்கு மேலாக சாதி, மதம், மொழி இன்னபிற பிரிவுகள் மக்களின் ஜனநாயக வெளியை முடிந்த மட்டும் அழுத்துகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாணவரோ இல்லை இளைஞரோ நம்மவர்கள் போல வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் மூழ்குவதில்லை. அவற்றில் அவர்களுக்கு கணக்கிருந்தாலும் அவைகளுக்கு மொத்த வாழ்வில் சிறுபகுதியையே ஒதுக்குகின்றனர். காரணம் அவர்களது ஏனைய வாழ்க்கையில் பொதுவெளிகளில் கலத்தலும், ஜனநாயக வெளிகளில் சண்டை போடுவதும் சகஜம். ஆகவே வாட்ஸ்அப்பில் வரும் ஒரு வைரல் செய்தியைக் கொண்டு மட்டும் அவர்கள் பொங்க வேண்டியதில்லை.
இங்கோ ஒரு துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்கே குண்டர் சட்டம் என்றால் நம்மவர்கள் மெய்நிகர் உலகை விட்டு ஏன் வெளியேற வேண்டும்? இதனால் தான் இங்கு அரசியலோ இல்லை சினிமாவோ இல்லை போராட்டமோ இல்லை பொதுத்தேர்தலோ அனைத்திலும் நாம் “அலைக்கழிக்கும் அற்பவாதிகளாகவே” இருக்கிறோம். இறுதியில் நம்மிடம் ஜனநாயகம் எனும் பெரிய கோடு இல்லாததால் புனைவுகளில் வரும் தம்மாத் துண்டு நானோ புள்ளிகளை வைத்து திருப்தி கொள்கிறோம்.
விளம்பரங்களின் நீட்சியாகவே திரைப்படமெடுக்கும் ராஜீவ் மேனனின் கதை ஒரு “மல்டி வாட்டர் கலர்” செட்டில் நடந்தால் அதுதான் பிக்பாஸ். வையாபுரியே வியக்குமளவு கணேஷுக்கு பத்து செட்டு ஷூக்கள், பதினைந்து பெட்டியில் ஆடைகள்… என்றால் ஓவியா – ரைசா – நமீதா-க்களது செட் பிராப்பர்டிகளை எடுத்துச் செல்ல ஒரு எய்ச்சர் லாரிதான் வரவேண்டும். பிறகு நுனிநாக்கு ஆங்கிலம். சினிமா மாந்தர்களின் “ஆழ்வார் பேட்டை ஆண்டவா” வகை எல்ஐசி பதினாலாவது மாடியிலிருந்து தெருவைப் பெருக்கும் தொழிலாளியை பார்க்கும் பேச்சுக்கள், தேய்வழக்கான போட்டிகள்…
இதில் சண்டை காதல் சச்சரவு இத்யாதிகள்………..
இத்துடன் முடிந்தால் கூட பிரச்சினை இல்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே போய் பார்ப்பனியம், மேட்டுக்குடி, திராவிடம், தமிழ், மெரினா எழுச்சி என்று ஏகப்பட்ட முன்னெடுப்புகள்….
கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிக்பாஸ் உருவாக்கியிருக்கும் புனைவெளியில் நமது மக்கள் அடைந்திருக்கும் குழப்ப உணர்ச்சி முன்னர் கண்ட “அற்பவாத அலைக்கழிப்புக்களையும்” விஞ்சுகிறது.
இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா? வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி
கொல்லைப்புறத்தின்
குடக்கல்லில்
பாம்புச்சட்டையை
கண்டு பயந்து
குட்டி போட
எட்டிப்பார்த்த நாய்
ஓடிவிட்டது.
மக்கிப்போன புடைமுறத்தை
சுற்றிச் சுற்றி வந்து ஏமாந்து
சுறுசுறுப்பை இழந்து விட்டது எறும்பு.
சீண்ட ஆளின்றி
குப்பைமேனி
காய்ந்த சிரங்காகி கிடக்கிறது.
இற்றுப்போன கூரையின்மேல்
தத்தி வரும் அணில்
ஆள் புழங்கும் ஓசையற்ற
வீட்டின் தனிமை கண்டு
வெலவெலத்து ஓடுகிறது.
வெகுநாளாய்
குழம்பு கொதிக்கும் வாசமற்று
குழம்பிப்போன பூனைகள்
ஆதரிக்க குரல் தேடி
குழந்தைகளாய் அழுகிறது.
பூராணும், தேளும் கூட
புழங்க முடியாமல்
புழுங்கிக் கிடக்கும் சுவரில்
பழைய கருக்கரிவாள்
தழும்பாகத் தெரிகிறது.
ஊர் என்று சொல்ல
ஒரு காக்கை குருவி இல்லை
உறவென்று சொல்ல
ஒரு புழு, பூச்சி இல்லை
யார் என்று கேட்க
குரல் ஒன்றுமில்லை…
மூடிக் கிடக்கும்
வீட்டு வாசலின் முன் நின்று
விவரம் புரியாமல்
விடாது கத்துகிறது மாடு.
வழக்கமாக
தண்ணீர் வைப்பவளின்
குரலைக் கேட்காமல்
அது நகர மறுக்கிறது.
இந்த வீடு மட்டுமல்ல
கிராமத்தில்
பல வீடுகளில்
ஆளில்லை என்பதை
எப்படி புரிய வைப்பது
அந்த மாட்டிற்கு!
– துரை. சண்முகம்
_____________
இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் வினவு தளத்தை
ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட 1947க்கு முன் பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் 1942ம் ஆண்டு காந்தியின் தலைமையில் துவங்கியது வெள்ளையனே வெளியேறு இயக்கம். இவ்வியக்கத்தின் 75-ம் ஆண்டு நேற்று (ஆகஸ்டு 9-ம் தேதி புதன்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, 1942-ன் உணர்வை நாம் மீண்டும் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் வெள்ளையருக்கு எதிராக “செய் அல்லது செத்து மடி” என்கிற முழக்கத்தை காந்தி முன்வைத்திருந்தார்; அதைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து “செய்வோம், நிச்சயம் செய்வோம்” என முழங்கினார் மோடி.
எதைச் செய்வதாம்?
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த உணர்வு மெல்ல மெல்ல வடிந்து போனதால், மக்களிடையே கடமையின் முக்கியத்துவம் குறைந்து உரிமையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர். போக்குவரத்து சிக்னல்களை மீறுவது, எச்சி துப்புவது என மக்கள் அடிப்படை விதிகளை கூட கடைபிடிப்பதில்லை என அங்கலாய்த்துள்ளார் பிரதமர். அதாவது இந்தியா முழுவதும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். பா.ஜ.க அரசின் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். அவர்களை எப்படித் தண்டிக்கலாம் என யோசித்துப் பார்த்த மோடி இறுதியில் அந்நியன் பட இயக்குநர் போல கருட புரணாத்தில் இறங்கி விட்டார் போலும்.
பொது இடங்களில் எச்சி துப்புவது இருக்கட்டும்; எந்த விதிகளின் அடிப்படையில் அதானிக்குக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் நிலங்களும் இன்னபிற அடிப்படை வசதிகளும் சல்லிக் காசுகளுக்கு வாரி வழங்கப்பட்டன என்பதை மாண்புமிகு பிரதமர் குறிப்பிடவில்லை. எந்த விதிகளின் அடிப்படையில் இந்திய வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திய மல்லையா தப்புவிக்கப்பட்டார் என்பதையும் பிரதமர் குறிப்பிடவில்லை. மேலும், எந்த விதிகளின் அடிப்படையில் வியாபம் கொலைகள் நடந்து வருகின்றன என்பதையோ, எந்த விதிகளின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு பொதுத்துறை வங்கிகள் பல்லாயிரம் கோடிக் கடன்களைக் கொடுத்து வருகின்றன என்பதையோ, எந்த விதிகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் மீறி பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகின்றது என்பதையோ பிரதமர் குறிப்பிடவில்லை.
மோடியின் இந்தியாவில், விதிகளை மீறி சாலையில் எச்சி துப்புவது குற்றம்; ஆனால் விதிகளின் மீதே எச்சி துப்புவதன் பெயர் “வளர்ச்சி”
போகட்டும்.
தனது பேச்சின் ஊடே 40-களில் நிலவிய தேச பக்த உணர்வை பலமுறை சுட்டிக் காட்டினார் பிரதமர். இன்றைய இந்தியாவில் ”தேசபக்தியின்” மொத்த குத்தகைதாரர்களாக பரிவாரங்களின் அவதாரங்களே இருப்பதால் இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை – ஆனால், பழைய இந்தியாவிலோ காவிகள் “அந்த” விசயத்தில் கொஞ்சமல்ல நிறையவே ”வீக்” என்பதால் சமூக வலைத்தளங்களில் பலரும் கழுவி ஊற்றினர். குறிப்பாக ட்விட்டரில்.
ஆர்.எஸ்.எஸ் கும்பல் தேச விடுதலைக்கு ஆற்றிய பங்கைக் குறித்து ட்விட்டரில் வெளியான சில கருத்துக்களை கீழே தொகுத்திருக்கிறோம் : படியுங்கள், பரப்புங்கள்.
Dr. Sania
பக்தாள் : ஐயா, இங்கே “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு” என்கிற நூல் எங்கே இருக்கிறது?
நூலகர் : “காமிக்ஸ் பிரிவு” மேலே இருக்கிறது போங்கள்.
******
@RealHistoryPic
வரலாற்றாய்வாளர் ஒருவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் & ஹிந்து மகாசபாவின் பங்கு குறித்த ஆதாரங்களைத் தேடும் படம்.
******
@RealHistoryPic
லார்டு மவுண்ட்பேட்டனின் கொலையைத் திட்டமிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எடுத்த படம்.
******
@RealHistoryPic
”வெள்ளைக்காரனுக்கு மனிப்புக் கடிதம் எழுதிய என்னையெல்லாம் “வீரன்” என்று மக்கள் அழைப்பது ஒரே காமெடியாக இருக்கிறது” – வீர சாவர்கர் (1947)
******
@Trolacharya
கவனமா படியுங்கள் இது தான் ஆர்.எஸ்.எஸ் சுதந்திரப் போராட்டத்தில் களமாடியது குறித்த வரலாற்று நூல்.
******
@mihirssharma
மிஹிர் ஷர்மா என்பவர் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ”தேசபக்தி” குறித்து தொடர் கீச்சு எழுதியுள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து அந்தக் காலத்தில் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துள்ளார். அந்த தொகுப்பில் இருந்து சில
விடுதலைப் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்து என்ன?
சுதந்திரப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வந்த காலங்களில் வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அப்போது ஒருவர் டாக்டர்ஜியிடம் (ஹெட்கேவார்) வந்து தான் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைக்கு செல்லத் தயாராக இருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த டாக்டர்ஜி “நிச்சயமாக (சிறைக்கு) போ. ஆனால் யார் உனது குடும்பத்தைக் காப்பாற்றுவார்?” எனக் கேட்கிறார். அதற்கு அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனது குடும்பம் சிக்கலின்றி நடப்பதற்குத் தேவையான பொருளாதார வசதி இருப்பதாக பதிலளிக்கிறார். இப்போது டாக்டர்ஜி அவருக்கு அளிக்கும் ஆலோசனை: “அப்படியென்றால், நீ (போராட்டத்தில் ஈடுபடாமல்) அந்த இரண்டு வருடங்கள் சங்கத்திற்காக பணி செய்யலாமே” எனக் கேட்டுள்ளார். டாக்டர்ஜியின் “தேசபக்தியைக்” கண்டு மிரண்டு போன அந்த நபர் வீட்டுக்குப் போனதும் அப்படியே அடங்கி விட்டார் – (போராட்டத்தில் ஈடுபட்டு) ஜெயிலுக்கும் போகவில்லை சங்கத்துக்கும் (ஆர்.எஸ்.எஸ்) வரவில்லை.
விடுதலைப் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ் இரண்டாம் தலைவர் கோல்வால்கரின் கருத்து என்ன?
“இந்தியாவில் இருந்து வெள்ளைக்காரர்களை வெளியேற்ற பலரும் உணர்வெழுச்சியோடு பாடுபட்டனர். ஆனால், சுதந்திரத்திற்குப் பின் அந்த உணர்வு படிப்படியாக குறைந்து போனது. சொல்லப் போனால் அந்தளவுக்கு உணர்வெழுச்சி கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதன் ஊடான தேச விடுதலை குறித்து நமது (ஆர்.எஸ்.எஸ்) உறுதிமொழியில் குறிப்பிடுகிறோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதில் வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவது குறித்து நாம் ஏதும் சொல்லவில்லை”
விடுதலைப் போராட்டம் குறித்து சாவர்கரின் கருத்து என்ன?
1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த போது காந்தி மக்களிடம் அரசுப் பணிகளைத் துறந்து விடுமாறு கேட்டார். அப்போது “ஹிந்து சங்கதானிகள் அனைவருக்கும் எனது தீர்மானமான உத்தரவு யாதெனில், நீங்கள் எல்லோரும் உங்களது அரசு பதவிகளை உறுதியாக பற்றிக் கொள்வதோடு உங்களது கடமைகளையும் முறையாகச் செய்ய வேண்டும்” என சாவர்கர் ஹிந்துக்களுக்கு உத்தரவிடுகிறார்.
இந்துத்துவ கும்பலுக்கு மக்களின் மறதியின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே தான் அந்தக் கால மைனர் குஞ்சுகளான தமது முன்னோடிகளை ஏக பத்தினி விரதர்களாக சித்தரித்துப் புளுகி வருகின்றனர்.
மக்களுக்கு நினைவூட்டத்தான் எம்மைப் போன்றவர்கள் இருக்கிறோமே? வரலாற்றை மக்களுக்கு நினைவூட்டுவோம்.
_______________________________
இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி