Saturday, August 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 487

அண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் !

0

னிதாவின் ‘படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (04.09.2017) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாணவர்களை கலைக்க ஜேசிபி வாகனத்தைக் கொண்டு வந்து மிரட்டிப் பார்த்தது காவல்துறை. மாணவரகள் கலைந்து செல்லாமல், எதிர்த்து நின்றனர். பின்வாங்கியது போலீசு. இன்றும் (05.09.2017) காலையில் போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்களைக் கலைக்க, முன்னணியாளர்கள் 6 பேரைக் கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் மற்ற மாணவர்களையும் மிரட்டிக் கலைக்க முயற்சித்து வருகிறது.


***

தர்மபுரியில் புமாஇமு தோழர்கள் கைது !

மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மோடி – எடப்பாடி அரசை கண்டிக்கும் விதமாகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களை போராட ஒருங்கிணைக்கும் வேலையை பு.மா.இ.மு. தோழர்கள் செய்து வந்தனர். அதற்காக கல்லூரி வாயிலில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தோழர்களைத் தடுத்தது கல்லூரி நிர்வாகம், அணிதிரளும் மாணவர்களை மிரட்டிக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், போலீசையும் அங்கு வரவழைத்தது.

அதன் பின்னர் தோழர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசு, தோழர்களைத் திரும்பச் செல்லும்படி மிரட்டியது. ஆனால் அதனை மறுத்து தங்களது கருத்தைத் தோழர்கள் வலியுறுத்திப் பேசவே தோழர்கள் மலர்கொடி மற்றும் அன்பு ஆகிய இருவரையும் கைது செய்தது போலீசு.

பகத்சிங் நினைவு நாளில் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர்கள் அன்பு மற்றும் மலர்கொடி ( கோப்புப் படம் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அனிதா படுகொலை – நெல்லை, கும்பகோணம் மாணவர்கள் போராட்டம் !

0

னிதாவை படுகொலை செய்த மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 04.09.2017 போராட்டத்தில் ஈடுபட்டனர்.

***

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 04.09.2017 அன்று நீட் தேர்வை ரத்து செய்யுமாறும் அனிதாவை படுகொலை செய்த மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அடையாளம் எது ?

30

கொடியங்குளம் ‘கலவரம்’, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது அரசியல் அரங்கிற்கு வந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி சென்றாலும் அவரால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளவுக்கு கூட சாதிக்க முடியவில்லை. இறுதியாக ஆண்டையான ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் தஞ்சம் அடைந்து அடையாள அரசியல், இந்துத்துவ அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்.

அதன் உச்சமாக அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பாஜக – அதிமுக கும்பலை காப்பாற்றும் அடியாட்பணியை மேற்கொண்டு வருகிறார். அனிதா ஏன் தற்கொலை செய்தாள், வேறு படிக்கலாமே, அவளை உச்சநீதிமன்றம் கொண்டு சென்று வழக்காட வைத்தவர்களே தற்கொலைக்கு காரணம் என்று நாக்கூசாமல் பேசுகிறார். இணையம் முழுவதுமே தமிழக மக்கள் அவரை திட்டித் தீர்த்தாலும் கிருஷ்ணசாமி அவற்றை சட்டை செய்வதில்லை. அமித்ஷா மூலம் ஏதாவது மாநிலங்களவை உறுப்பினர், தமிழகத்தில் ஏதாவது ஒரு எம்பி, பிறகு அமைச்சர், ஐநா சபை உரை என்று கனவில் மிதக்கிறார். தற்போது அவரது மகளது மருத்துவர் படிப்பிற்காக ஜெயாவிடம் சிபாரிசு செய்து இடம் வாங்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த தகவல் குறித்த உண்மை நிலவரம் நமக்குத் தெரியாது என்றாலும் கிருஷ்ணசாமி அப்படி சீட் வாங்க கூடியவர் என்பதில் ஐயமில்லை. அதனால்தான் அவர் நீட்-ஐ ஆதரிக்கிறார்.

இன்று அவர் சார்ந்த தேவேந்திர குலமக்களே அவரை காறி உமிழ்கின்றனர். முழு தமிழகமுமே நீட்டை எதிர்த்தும், மோடி – எடப்பாடி அரசுகளை கண்டித்தும் போராடி வரும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் கிருஷ்ணசாமியை இறக்கி அவதூறுகளை வீசி வருகிறது.

போகட்டும், டாக்டர் கிருஷ்ணசாமியின் அடையாளம் இனி என்னவாக இருக்கும்?

தேவேந்திர குல வேளாளர்களின் விடிவெள்ளியாக போற்றப்படுவார்

ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் அடியாளாக அறியப்படுவார்

 

மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் அதிகாரம் – படங்கள்

0

மாணவி அனிதா படுகொலைக்கு நீதி வேண்டும் !

பாஜக – அதிமுக கொலைகார அரசுகள் எதிரிகளும் துரோகிகளும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்க கூடாது !

இன்னும் எத்தனை பலிகளுக்காக காத்திருப்பது ?

– என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.

மாணவி அனிதா
மாணவி அனிதா தூக்கிட்டு கொண்ட மின்விசிறி
இறந்துப்போன அனிதாவின் தாயார்
அனிதாவின் புத்தகங்கள்
அனிதாவின் தந்தை, அண்ணன் மற்றும் உறவினர்கள்

மக்கள் அதிகாரம்  தோழர்கள் குழுமூரில் இறுதி அஞ்சலி செலுத்தும் ஊர்வலம்

தகவல் : மக்கள் அதிகாரம்
திருச்சி

அனிதா படுகொலை : ஓசூர் – விருதை – திருவாரூர் ஆர்ப்பாட்டங்கள்

0

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – அடிமை அதிமுக – உச்சிக்குடுமி நீதிமன்றம் –
இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!

தமிழகத்தை ஒழித்துக்கட்டாமல் விடாது பி.ஜே.பி! பி.ஜே.பி யை
ஒழித்துக்கட்டாமல் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது!

தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினா ஆக்குவோம்!

என்ற முழக்கங்களை முன்வைத்து ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், நீட் தேர்வை அடியோடு ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பு. ஜ.தொ.மு-வின் கமாஸ் வெக்ட்ரா கிளைச்சங்கத் தலைவர் தோழர் செந்தில், பு.ஜ.தொ.மு-வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினர்.

பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பலரும் கலந்துக்கொண்டு விண்ணதிர முழங்கி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யும்வரை தாங்கள் போராடுவதாக உறுதியளித்தனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம், தொடர்புக்கு – 97880 11784

 ***

நீட்: அனிதா படுகொலை !
மோடி-எடப்பாடி இவர்கள்தான் குற்றவாளிகள் !
குற்றவாளிகளை தண்டிக்க தமிழகமே திரண்டெழு !!
– என விருதையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம்
***
அரியலூர் மாவட்டம் செந்துரை – கொழுமூர் மாணவி அனிதாவின் BJP அ.தி.மு.க-வின் நீட் தேர்வால் நடந்த படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் கோவைப் பகுதியில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட 02.09.2017 அதிகாலை கோவை நகரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காலை 11.30 மணிக்கு மேற்கண்ட இடத்தில் பெண்கள் உட்பட 22 பேர் மக்கள் அதிகாரம் பேனர்கள் மற்றும் கொடிகளுடன் கண்டன முழக்கமிட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தியின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மக்கள் அதிகாரம்
கோவை
 ***
மாணவி அனிதா படுகொலை !
மத்திய மோடி அரசும் – மாநில எடப்பாடி அரசும் தான் கொலையாளி !
கண்டன ஆர்ப்பாட்டம்!
மாணவி அனிதா படுகொலையை கண்டித்து திருவாரூரில் 03.09.2017 அன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவாரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி தலைமையில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களை தெரியப்படுத்தினர்.
இப்படுகொலைக்கு மத்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் தான் காரணம் என்றும், தொடர்ச்சியாக நடக்கும் மோடி அரசின் ஜனநாயக விரோத – தமிழர் விரோதப் போக்கை – கண்டித்தும்,  NEET தேர்வில் இருந்து முற்றிலுமாக விலக்கு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினர்.
நயவஞ்சகமாக தமிழகத்தில் நுழையும் பா.ஜ.க. கும்பலுக்கு, தமிழக காற்றைக்கூட சுவாசிக்க விடக்கூடாது, நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று பங்கேற்றவர்கள் உறுதி ஏற்றனர்.
 
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்

————————————————————–

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மாணவி அனிதா ’ படுகொலை ’- தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

4
செப்-2, கண்டன ஆர்ப்பாட்டம்

ரியலூர் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால்,  நீட் தேர்வு எழுதினார். அதில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.

மோடி – எடப்பாடி குற்றவாளிகள்

இதனால் அவருடைய மருத்துவ வாய்ப்பு பறிபோய், இறுதியில் தற்போது தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.  இது தற்கொலையல்ல – படுகொலையே!  ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்த போதும், நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துவிட்டன மோடி – எடப்பாடி கும்பல். இவர்கள் தான் அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்.

இந்தக் குற்றவாளிகளை உழைக்கும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டவும், தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களே! இளைஞர்களே! தொழிலாளர்களே! ஜனநாயக சக்திகளே! கொதித்தெழுந்து வாருங்கள்!

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை,
செப்டம்பர் – 2, காலை 11 .30 மணி

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9445112675
——————————————

விருதாச்சலத்தில் இன்று (செப்டெம்பர்-1) மாலை, ”நீட்: மாணவி அனிதா ’படுகொலை’, மோடியும் எடப்பாடியும் தான் குற்றவாளிகள்” என்ற முழகத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மோடியும் எடப்பாடியும் தான் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-1
விருதாச்சலம் புமாஇமு ஆர்ப்பாட்டம்-2

இதில் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த புமாஇமு தோழர்கள் பங்கேற்றனர்.

————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !

1
ரொகெட் டி லிஸ்லி

பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறாமாண்டை ஒட்டி (1789 – 1989) புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

– வினவு

ந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.

பிரெஞ்சு புரட்சி
பிரெஞ்சு புரட்சி

படைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள்.

”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். மனிதனது மூளையும் (தலையும்) அதன் சிந்தனையால் வந்தடையப்பட்ட கோட்பாடுகளும் நாங்கள் தான் மனிதனின் எல்லா உறவுகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படை என்று அறைகூவின. மதம், விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – எதுவாக இருந்தாலும் சரி, அவை ஈவு இர்க்கமின்றி விமரிசிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அறிவின் சன்னதியில் தங்கள் யோக்கியதையை நிருபிக்க வேண்டும் இல்லையேல் ஒழிந்து போகவேண்டும். ஆம்! உலகம் உண்மையிலேயே தலை மேல் தான் நின்றது.

வாழ்வதற்குத் தகுதியிழந்த முடியாட்சியும், மத ஆதிக்கமும் அவற்றின் அதிகார பீடங்களிலிருந்து கேலிக் குரல்களின் நடுவே இழுத்து வீசியெறியப்பட்டன. சமுதாயம் தலைகீழாக மாற்றப்பட்டது. உலகம் உண்மையிலேயே தன் தலைமீது தான் நின்றது.

தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை பிரான்ஸ் உசுப்பிவிட்டது ”இதோ இதுதான் நிகழ்ச்சிநிரல் முன்னோக்கிச் செல்” என்று ஆணையிட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரபுக்களையும் மன்னர்களையும் சக்ரவர்த்திகளையும் தன் முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்து தள்ளடிக் கொண்டிருந்த மனிதனை நிமிர்ந்து நில், நீ சுதந்திர மனிதன் என்ற பிரான்சின் அறைகூவல் நிமிர்த்தியது.

பொருட்களை அடமானம் வைத்து உணவை பெறுகின்றனர்.
பாரிஸை சேர்ந்தவர்கள் கடுமையான பசியானால் உணவை வாங்க பொருட்களை விற்கின்றனர்.

மாபெரும் பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சி, இரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னும் சுதந்திரத்தையும் விடுதலையையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் தனது கம்பீரமான சிம்மாசனமாக்கிக் கொண்டது.

”மக்கள் இங்கே புல்லைத் தின்று உயிர் வாழ்கிறார்கள் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும். பிச்சைக்காரர்களுக்கும் மன்னராயிருப்பவரை மாட்சிமை தாங்கிய சக்ரவர்த்தி என்று எப்படி அழைக்க முடியும்?” –

1725 இல் 15ம் லூயி மன்னனின் பிரான்சைப் பற்றி ஒரு கிறித்தவ மதகுரு கொடுத்த நற்சான்றிதழ் தான் இது. அவனது மகன் 16ம் லூயி மன்னனின் ஆட்சியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.

“இரு கழுதைகளை அவன் ஓட்டிச்
சென்றான்.
ஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய
மூட்டை.
இன்னொரு கழுதையின் முதுகிலோ
உப்பு வரி ரசீது கட்டுகள்.”

”Third Estate” மக்கள் மீது கடுமையான வரிச்சுமை செலுத்தப்பட்டது
நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.

என்று விவசாயிகளின் அவலநிலையைப் பாடினான் ஒரு கவிஞன். பண்ணைகளும், குறுநில மன்னர்களும் கிறித்தவ மடாலயங்களும் நாட்டைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தன. விவசாயி ஒண்ட வந்தவனைப் போல துண்டு நிலத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்தான் காடுகளும் புல்வெளிகளும் மேட்டுக்குடியினரின் பரம்பரைச் சொத்தாக இருந்தது. வன விலங்குகளோ மேட்டுக்குடி இளவல்களின் வேட்டை விளையாட்டுக்காக பாதுகாக்கப்பட்டன. ஆம் கண்ணைப் போல் போற்றி வளர்த்த தனது பயிரை குழி முயல்கள் நாசம் செய்தாலும் அவற்றைக் கொல்லும் விவசாயி குற்றவாளியானான்.

வேட்டையாடுவதற்கு குதிரை மீது பவனி வந்த மன்னர்குலக் கொழுந்துகள் விவசாயிகளின் வயல்களை நாசம் செய்தனர். வேட்டையாடிக் களித்தனர். விவசாயியின் வியர்வையையும் ரத்தத்தையும் குத்தகையாகப் பிழிந்து குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர். பூலோகத்தில் வாழ்வதற்கு லூயி வரி வசூலித்தான். பரலோகத்தில் இடம் போடுவதற்கு பாதிரிகள் வரிவசூல் செய்தனர். விவசாயிகள் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். தங்கள் எதிரியைக் கொல்வதற்கோ நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.

நகரம் ரொட்டி கிடைக்காமல் செத்துக் கொண்டிருந்தது. வியாபாரிகள், வழக்கறிஞர்கள், பட்டறை முதலாளிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பட்டறைத் தொழிலாளிகள், உதிரி வேலை செய்வோர், கைவினைஞர்கள் விதிவிலக்கின்றி அனைவரின் வெறுப்பும், ஆத்திரமும் மன்னராட்சியின் மீதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினர் மீதும் ஒன்று குவிக்கப்பட்டிருந்தது.

மன்னனின் வரம்பில்லாத அதிகாரத்திற்கு எதிராகவும், மத நிறுவனத்திற்கு எதிராகவும் வால்டேர் எழுப்பிய போர்க்குரல் தனது படையணியில் ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. தீத்ரோவின் நாத்திகப் பிரச்சாரமும் பொருள் முதல்வாதக் கருத்தும் அறிவுஜீவிகளையும் மதக் கொடுங்கோன்மைக்கு ஆளாகியிருந்த மக்களையும் தன்பால் வெகுவேகமாக ஈர்த்தது.

மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?"
மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?”

”வன்முறையைப் பயன்படுத்த முடியும் வரையில்தான் கொடுங்கோலன் எசமானனாக இருக்க முடியும். அவன் வெளியே துரத்தப்பட்டால் அவன் (தனக்கெதிராக) வன்முறை பயன்படுத்தப்பட்டது குறித்துப் புகார் செய்ய முடியாது…. வன்முறை மட்டுமே அவனை அதிகாரத்தில் வைத்திருந்தது. வன்முறை மட்டுமே அவனை வீழ்த்துகிறது” என்று ரூசோவின் விரல் செல்ல வேண்டிய பாதையைக் காட்டிக் கொண்டிருந்தது.

1789 – பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்து கிடந்தது; தேசம் திவாலாகி விட்டது. உடனடியாக சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் மந்திரிகள்.

மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?” நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் பீதாம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், பாதிரிகளின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளி ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கோரப்பட்டனர். மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல; மன்னராட்சியை!

மன்னர்களாலும், மத குருமார்களாலும் பன்னூறாண்டு காலமாக கறைப்படுத்தப் பட்ட தங்கள் இனிய தேசத்தை, அந்த மேட்டுக்குடிப் பன்றிகளின் ரத்தத்தைக் கொண்டே கழுவினார்கள் பிரெஞ்சு மக்கள்.

1789 முதல் 1794ஆம் ஆண்டுவரையிலான காலம் முழுவதும் துப்பாக்கி வேட்டுச் சத்தமே மக்களின் இசையாக இருந்தது.

பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி
பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி

ஆம்! புரட்சி வெடித்தது – திடீரென்று அல்ல; எதிர்பாராமல் அல்ல. வால்டேரும். தீத்ரோவும், ரூசோவும் தோற்றுவித்த அறிவொளி இயக்கம் திரியில் வைத்த தீயாகப் பிடித்துப் புகைந்து, எரிந்து பின்னர்தான் வெடித்தது. ’பாஸ்டி’ சிறை தகர்க்கப்பட்ட போதுதான் அந்த வெடிச்சத்தத்ததை உலகம் கேட்டது.

”சகோதரர்களே அணிதிரளுங்கள் சுதந்திரம் உங்களை அழைக்கிறது” என்று முழங்கினார்கள் புரட்சியாளர்கள். மன்னனின் வாளையும், மதகுருவின் சிலுவையையும் நெற்றியில் கட்டிக்கொண்டிருந்த தேசம் இப்போது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற தங்களின் லட்சியம் பொறித்த பதாகையுடன் முன்னேறிச் சென்றது.

பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் மன்னனையும், மதத்தையும், சட்டத்தையும், அரசையும், பிரபுக்கள் சபையையும் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரெஞ்சு மக்களோ தங்கள் அரசாங்கத்தை எதிர்த்தார்கள். பாதிரிகளை இகழ்ந்தார்கள். பிரபுக் குலத்தை வெறுத்தார்கள் சட்டங்களுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி, இலக்கண சுத்தமாக, துப்புரவாக நிலப்பிரபுத்துவத்தை துடைத்தெறிந்தது.

அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அனைத்து விஷயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளாய் விவசாயிகளின் பக்தி நிறைந்த உதடுகளால் முத்தமிடப்பட்ட சிலுவை. காலால் மிதிப்பதற்கும் தகுதியற்ற மலத்தைப் போல வெறுத்தொதுக்கப்பட்டதென்றால் மற்றவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

”மக்களை மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்வானேன்? அவர்கள் அங்கிருந்து தங்கள் சாம்ராச்சியத்தைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களைக் கீழே இறக்கி அவர்களுக்கு உரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் உட்காருவார்களா?” என்று மன்னராட்சிக்கு வக்காலத்து வாங்கிய அறிஞன் ஒருவன் எச்சரித்தான்.

ஆனால், அது காலங்கடந்த எச்சரிக்கையாகிப் போனது.

பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.
பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.

18ம் நூற்றாண்டின் அறிஞர்களால் அறிவொளியூட்டப்பட்ட மக்கள்திரள் சிகரத்தின் உச்சியிலிருந்து தங்கள் சாம்ராச்சியத்தை பார்த்ததுடன் நிற்கவில்லை. தங்களைக் கீழே இறக்கிவிடுவதற்குள் அவர்கள் சிகரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த பதினாறாம் லூயியை – மன்னராட்சியை – கீழே தள்ளினர். சிவப்பு. வெள்ளை, நீல நிறத்தில் தங்கள் கொடியை அங்கே பறக்கவிட்டனர். எல்லா மனிதர்களும் சம உரிமையுடன் தான் பிறக்கிறார்கள் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களைப் பேசவும், எழுதவும், அச்சிடவும் – அவை கேடாகப் பயன்படுத்தப் படாதவரை – உரிமை உண்டு என்று அறிவித்தனர்.

அடக்கி வைக்கப்பட்டிருந்த கருத்துச் சுதந்திரம் பீறிட்டுக் கிளம்பியது. முடியாட்சியை எதிர்த்த போராட்டத்தில் உழைப்பாளி மக்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டு மக்களுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான் மாரட் என்ற இளம் பத்திரிகை யாளன். ”நான் ஒரு குடியரசுவாதி, மன்னர்களை எதிர்த்து எழுதுபவன். நான் ஒரு குடியரசுவாதி என் தாயின் கருப்பையிலிருக்கும்போதே நான் ஒரு குடியரசுவாதி” என்று முழங்கினான் லாவிகோம்டே என்ற பத்திரிக்கையாளன். மன்னன் அதிகாரத்திலிருந்து முற்றிலும் தூக்கியெறியப்படாத போதே தன் உயிரைத் தூசாக மதித்து ”மன்னர்களின் கிரிமினல் குற்றங்கள் – க்ளோவி முதல் பதினாறாம் லூயி வரை” என்று கட்டுரை எழுதினான். ”பத்திரிகையாளனை தண்டிப்பதற்கு எங்கே அரசுக்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கே கொடும் குற்றமிழைத்த அதிகாரிகளைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை எழுத முடியாது” என்று முழங்கினான் ரோபஸ்பியே என்ற புரட்சியாளன். ஆனால் எதிரிகள் விஷயத்தில் புரட்சியாளர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மன்னராட்சிக்கு ஆதரவான துதிபாடிகள் வாய் திறந்தால் தூக்கிலேற்றப்படுவர் என்று எச்சரித்தனர்.

அச்சத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்தப்பட்டிருந்த மக்களை நோக்கி அறைகூவினான் ஒரு எழுத்தாளன். ”மாபெரும் மனிதர்கள் எனப்படுவோர் அப்படித் தோன்றக் காரணம் என்ன தெரியுமா? நாம் மண்டியிட்டிருப்பதுதான். எழுந்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான். விவசாயிகள் எழுந்து நின்றனர்.

இளவரசர்கள், பிரபுக்கள். மத குருமார்களின் மாளிகைகளில் ஆயுதம் தரித்த விவசாயிகள் புகுந்தனர். தங்களுடைய பாஸ்டி சிறைகளை அவர்கள் தகர்த்தெறிந்தனர். ”பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர். காடுகளையும். குளங்களையும் ஆறுகளையும் பண்ணைகளின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள். மனிதனையும் முயலையும் ஒன்றாகக் கருதும் அறிவுக்குப் புறம்பான மனித சமுதாயத்துக்கே இழுக்கான அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள்” என்ற குரல் எழுந்தது. ”பிரபுக்குலத்தோரின் பட்டாக்கள் அனைத்தும் மூன்றூ மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவை நகர கவுன்சில் மற்றும் மக்களின் முன்னிலையில் கொளுத்தப்பட வேண்டும்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.
அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களுக்கு நட்டஈடு கிடையாது என்பது மட்டுமல்ல. மீண்டும் இவற்றை விலைகொடுத்து வாங்கும் உரிமையும் பிரபுக்களுக்கும் மதபீடங்களுக்கும் அடையாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் புரட்சிக்கு இலக்கணம் படைக்கப்பட்டது.

சொத்துக்களை இழந்த கத்தோலிக்க மதபிடம் பொறுமிக் கொண்டிருந்தது. போப் புரட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் கண்டனக் குரல் எழுப்புவதற்காகப் பாதிரிகள் வாய் திறப்பதற்குள் அடுத்த அடி விழுந்தது.

பிராட்டஸ்டென்டுகள், யூதர்கள் மற்றும் கறுப்பின மக்கள் மீது கத்தோலிக்க மடாலயம் செலுத்திவந்த ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. கிறித்தவர்களிடம் ஊட்டப்பட்டிருந்த யூத எதிர்ப்பு வெறியை எதிர்த்து கிரெகோ என்பவர் பேசினார்: “உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் சொத்தில் யூத எதிர்ப்பு வெறியும் இடம்பெறப் போகிறதா? யூதர்களின் ஊழல்களையும், குற்றங்களையும் பற்றி பேசுபவர்களே கேளுங்கள்! அவர்களது ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் தோற்றுவாய் நீங்கள்தான் – கிறித்தவர்களாகிய நீங்கள் தான் உங்கள் பாவத்துக்கும், உங்கள் முப்பாட்டன்களின் பாவங்களுக்கும் கழுவாய் தேடுங்கள்! அவர்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றுவதற்கும் நீங்களே முயல்வதன் மூலம் அதைச் செய்யுங்கள்”

உள்நாட்டின் சமூக நிலை பற்றி மட்டும் பேசுவதுடன் புரட்சிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. மனித சமூகத்தின் சுதந்திரத்துக்கு எதிராக எவ்வித ஆக்கிரமிப்புப் போரிலும் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்தார்கள்.

ரொகெட் டி லிஸ்லி
ரொகெட் டி லிஸ்லி

”குடியரசின் கைக்கூலிகளிடம் இருந்து புரட்சியைப் பாதுகாக்க இளைஞர்கள் போர் முனைக்குச் செல்லுங்கள். மணமான ஆண்கள் ஆயுதங்களைத் தயார் செய்யுங்கள். சிப்பாய்களுக்கு உணவு கொண்டு செல்லுங்கள். பெண்கள் பாசறைகளை அமைக்கட்டும் மருத்துவமனைகளில் சேவை செய்யட்டும். சிறுவர்கள் காயங்களுக்குக் கட்டுப் போடும் துணிகளை சேகரிக்கட்டும். முதியவர்கள் வீதிமுனைகளில் நின்று சிப்பாய்களை உற்சாகப்படுத்துங்கள் சக்ரவர்த்திகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். நாட்டின் ஒற்றுமைக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள்” என்று அறைகூவல் விட்டது புரட்சி அரசு.

விஞ்ஞானம், கலை, கல்வி என்று பண்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதுமலர்கள் பூத்தன. புரட்சிப் படையணியின் கீதமாக இறவாப் புகழ்பெற்ற ’மார்செயில்ஸ்’ கீதத்தை உருவாக்கியதன் மூலம் கோஸ்ஸெக் புரட்சியின் இசையமைப்பாளன் ஆனான். சுதந்திரத்திற்கு சமத்துவத்திற்கு, மனித சமூகத்திற்கு தாய் நாட்டிற்கு இயற்கைக்கு என்று அவனது இதயத்துடிப்பையே இசையாக மாற்றி அர்ப்பணித்தான். விஞ்ஞானமோ முன்னெப்போதும் கண்டிராத அளவு முன்னோக்கிப் பாய்ந்து சென்றது. பால்சாக், ஹியூகோ போன்ற மாபெரும் எழுத்தாளர்களை பிரான்ஸ் கருத்தரித்தது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, உயிர்வாழும் உரிமை, ஆயுதம் ஏந்தும் உரிமை அனைத்தையும் வென்றெடுத்த பிரான்ஸ் அன்றைய மனித நாகரிகத்தின் முன்வரிசையில் எக்காளமிட்டு சென்று கொண்டிருந்தது. நூற்றாண்டுகளை நொடிகளில் கடந்து சென்று கொண்டிருந்தது புரட்சி. அகன்ற விழிகளுடனும், நின்று போன இதயத் துடிப்புடனும் பிரான்சைப் பார்த்துக் கொண்டிருந்தது உலகம். ஆம்! பிரான்சில் தோன்றிய புரட்சிப் பூகம்பம் மனித சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கி ”வா… என்பின்னே” என்று ஆணையிட்டது.

பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது என்பதும் அது முதலாளித்துவ ஜனநாயகம் மட்டுமே என்ற விஷயமும் நாம் அறிந்தது தான். ஆனால் தொழில்துறை முதலாளிகளாலேயே தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்ட புரட்சி என்றோ, புரட்சியின் தத்துவ ஆசிரியர்களான ருஸோ, தித்ரோ பாபெஃப் போன்றோர் முதலாளிவர்க்கத்தின் உணர்வு பூர்வமான சேவகர்கள் என்றோ புரிந்து கொள்வது தவறு.

1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.
1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.

மன்னராட்சியும், மத நிறுவனங்களும் காலத்தின் தேவையை நிறைவு செய்ய வில்லை; அவை அறிவுக்கு ஒவ்வாதவை; இனி இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு அவற்றினிடத்தில் நிரந்தரமான உண்மையும். இயற்கையின் அடிப்படையிலான சமத்துவமும் இழக்கவோ துறக்கவோ இயலாத மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களது லட்சியமாக இருந்தது. அவர்கள் முதலாளி வர்க்கத்திற்காகப் புரட்சி செய்யவில்லை. மனிதகுலம் முழுமைக்குமாகச் செய்வதாகத்தான் அறிவித்தார்கள் அவ்வாறுதான் நம்பினார்கள். அவர்கள் மனிதகுலத்தின் விடுதலை என்று பேசினார்களே ஒழிய பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிப் பேசவில்லை. காரணம் அவர்களால் பேச இயலாது வரலாறு அவர்களது சிந்தனைக்கு விதித்திருந்த வரம்பு அது. ஸ்பார்ட்டகஸ் சோசலிசத்திற்காகப் போராடியிருக்க முடியாது!

தீத்ரோவிடம் இயங்கியலின் துவக்க வடிவம் தென்பட்டதையும், பாபெஃப் இன் கற்பனா சோசலிசத்தையும், ரூசோ புரட்சியில் வன்முறையின் பங்கு குறித்துக் குறிப்பிட்டதையும் எங்கெல்ஸ் நினைவு கூறுகிறார். இவர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களான போராளிகள் புரட்சியின் ஊடாக எழுப்பிய முழக்கங்கள் மனிதகுல விடுதலையைக் கோரும் அவர்களது தணிக்கவொண்ணாத தாகத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. புரட்சியின் உக்கிரமானதொரு கட்டத்தில் அவர்கள் அறிவித்தார்கள். ”எல்லா அரசுகளுக்கும் நாங்கள் எதிரிகள், எல்லா மக்களுக்கும் நாங்கள் நண்பர்கள்” என்று. “முடியாட்சியின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுங்கள் நாங்கள் உதவுகிறோம்” என்று பகிரங்கமாகப் பிற நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்தார்கள். 1793 இல் முடியரசுவாதிகளின் கலகத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார்கள். அவர்களுக்கு ஜனநாயகம் கிடையாது என்பதை பகிரங்கமாக அறிவித்தார்கள். 1794க்குப் பின் எதிர்ப்புரட்சி சக்திகளின் கை மேலோங்கிய போது உவகையுடன் புரட்சியின் நலனுக்காக – மனிதகுலத்தின் நலனுக்காக தம் உயிரை ஈந்தார்கள்.

ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது.
ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் தோன்ற வேண்டியிருந்தது.

அறிவின் ஆட்சி குறித்த தனது கேட்பாடு மக்களுக்கெதிரான பயங்கர ஆட்சியாக மாறும் என்று ரூசோ கற்பனையும் செய்திருக்க முடியாது. ஆனால் நடந்தது அதுதான். தனது ஆற்றலில் நம்பிக்கை இழந்த முதலாளிவர்க்கம் நெப்போலியனின் எத்தேச்சாதிகாரத்திடம் சரணடைந்தது. சுதந்திரம், சிறு விவசாயிகளும் சிறு முதலாளிகளும் தங்கள் சொத்தை விற்பதற்கான சுதந்திரமாக மாறியது. எங்கெல்லின் சொற்களில் சொல்வதானால் வாளுக்குப் பதிலாகத் தங்கம் வந்துவிட்டது, முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவப்பட்டறை அதிபர்களுக்கு மாற்றப்பட்டது.”

ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை  உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சைத் தனது அச்சாகக் கொண்டுதான் உலகம் சுழன்றது என்பதை யாரால் மறுக்க முடியும்?

எனில் 20ம் நூற்றாண்டு? சமீபத்தில் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் செய்யவந்த ஒரு பிரெஞ்சுப் பேராசியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெருமைமிக்க புரட்சிகரப் பாரம்பரியத்தைப் பெற்ற பிரான்ஸில் ஒரு பாசிஸ்டு கட்சி சமீபத்திய தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் 14 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்டார். சிறிதுநேர சிந்தனைக்குப்பின் இல்லை. நாங்கள் ஜனநாயகப் பாரம்பரியமிக்கவர்கள் ஒருபோதும் அங்கே பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரஇயலாது. அனுமதிக்கவும் மாட்டோம் என்று பதற்றத்துடன் கூறினார். ஆம் ரூசோவின் எழுத்துக்களும் ஜாகோயின் புரட்சிக்காரர்களின் முழக்கங்களும் காற்றில் கரைந்துவிடக் கூடியவையா என்ன?

அன்று புரட்சியின் போது ஒரு தத்துவார்த்த பாத்திரம் ஆற்றிய ரூசோ, இன்றைக்கு மற்ற நாடுகளின் சோசலிசப் புரட்சியில் ஒரு கிளர்ச்சிப் பாத்திரம் ஆற்றுகிறார் என்றூ எங்கெல்ஸ் குறிப்பிட்டார். பிரான்சின் புரட்சியாளர்கள் இந்தியப் புரட்சிக்கும் உத்வேகமூட்டுவார்கள். மார்செயில்ஸ் கீதம் இங்கேயும் ஒலிக்கும்.

– சூரியன், புதிய கலாச்சாரம் 1989

 

புரட்சியின் வரலாறு:

பிரஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிறைவேறி விட வில்லை முடியாட்சியும் சட்டெனத் துக்கியெறியப் பட்டு விடவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள், இழுபறி நிலைமைகள், துரோகம் ஆகியவற்றைக் கடந்துதான் புரட்சி வெற்றி பெற்றது. அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பைக் கீழே தருகிறோம்.

பாஸ்டில் தகர்ந்தது!

பாஸ்டில் சிறை தகர்ப்பு
பாஸ்டில் சிறை தகர்ப்பு

1789 மே 5ம் தேதி பிரான்சின் தேசிய அசெம்ளியைக் கட்டுகிறான் மன்னன் தேசிய அசம்பிளியில் மூன்று பிரிவினர் இருந்தனர். பிரபுக்கள், மத குருமார்கள், மக்கள். இதில் அதிக வரி செலுத்தியவர்கள் மக்கள்தான். ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஒட்டு மட்டுமே இருந்ததால் மக்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் கருத்து எப்போதுமே எடுபடுவதில்லை. எனவே ’அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். சில பிரபுக்களும் மத குருமார்களும் கூட அவர்களுடன் சேர்ந்தனர்.

ஜூலை 14 பாரிஸ் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு சென்று பாஸ்டி (Bastile) சிறையைத் தகர்க்கின்றனர். செய்தி கேள்விப்பட்ட மன்னன் ”எதற்காக கலாட்டா செய்கிறார்கள்?” என்று அமைச்சர்களைக் கேட்டானாம். ”கலாட்ட அல்ல மன்னர் பெருமானே இது புரட்சி” என்று பதில் சொன்னாராம் அமைச்சர். சிறை தகர்ப்பைத் தொடர்ந்து நடுத்தரவாக்கத்தினர் அடங்கிய புரட்சிக் கமிட்டி பாரிஸ் நகரத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தது. இதைப் பின்பற்றி நாடு முழுவதும் புரட்சி அரசாங்கங்கள் தோன்றின விவசாயிகள் பிரபுக்களின் மாளிகைகளைக் சூறையாடினர் கடன் பத்திரங்களுக்கும். பிரபுக்களின் நிலப் பட்டாக்களுக்கும் தீ வைத்தனர்.

பிரபுக்கள் ஒட்டம்! குடியரசு மலர்கிறது!

பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு
பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு

ஆகஸ்ட் 4: விவசாயிகளின் எழுச்சியில் பீதியுற்ற பல பிரபுக்கள் நாட்டைவிட்டே ஓடுகிறார்கள் அசெம்பிளி (மக்கள்) கூடுகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட பிரபுக்களில் சிலர் தாங்களே முன்வந்து தங்கள் பரம்பரை சலுகைகளை தியாகம் செய்வதாக அறிவிக்கிறார்கள். பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. டென்னிஸ் அரங்கத்தில் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கத் தொடங்குகி அசெம்பிளி.

அக்டோபர் 5: கடும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் (பெரும்பாலும் பெண்கள்) மன்னனின் வெர்சேய் அரண்மனையை முற்றுகையிடுகிறது. அரசனையும், அரசியையும் பிணையக் கைதிகளாகப் பிடித்து பாரிசுக்குக் கொண்டு வருகிறது.

கிறித்தவ மடங்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப் படுகின்றன. மன்னன் நாட்டைவிட்டுத் தப்பியோட முயன்று எல்லையில் பிடிபடுகிறான். இருந்தும் அவனை மன்னனாக அங்கீகரிக்கிறது அசெம்பிளி.

1791 அக் 1: முதல் குடியரசு அறிவிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரகடனம் வெளியிடப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு தேசிய சபைக்குத் தரப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கோஷ்டி உருவாகின்றது. பெரும் மக்கள் கூட்டம் மன்னனின் அரண்மனையில் புகுந்து அவனது காவலர்களைக் கொல்கிறது. மன்னன் சிறையிலிடப்படுகிறான். எல்லையில் போர் தொடங்குகிறது.

மன்னனுக்கு மரணதண்டனை!

பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்
பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்

1792 செப் 21: பெயரளவில் மன்னனை வைத்துக் கொள்வதும் இல்லையென அறிவிக்கப்படுகிறது. பாதிரிகள் அனைவரும் குடியரசின் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போப் புரட்சிக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரான்சில் இருந்த வாட்டிகனின் (போப்பின்) சொத்துக்கள் பறிகுதல் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே குடியரசின் அமைச்சரவை கவிழ்கிறது. புரட்சிக் கமிட்டிகள் அதிகாரத்தை மேற்கொள்கின்றன. ஓடிப்போன பிரபுக்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் புரட்சியை ஒழிக்க முயல்கின்றனர். லூயி மன்னன் விசாரனைக்குட் படுத்தப்படுகிறான். அந்நியருடன் கூட்டு சேர்ந்து பிரஞ்சு மக்களுக்கு எதிராக சதி செய்ததற்காக அவனது தலை (கில்லட்டினில்) துண்டிக்கப்படுகிறது. அவனது மனைவியான அரசி மேரி அண்டாய்னேட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்படுகிறது. குடியரசுக்கு எதிராகவும், மன்னனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஆயிரக்கணக்கான கைக்கூலிகள் கில்லெட்டினுக்குப் பலியாகின்றனர்.

ஜாகோபின் கழகம்
1789இல் துவக்கப்பட்ட புரட்சிக்குழு. இக்கழகத்தைச் சேர்தவர்கள் தீவிர ஜனநாயகவாதிகள். 1791இல் மன்னன் தப்பியோட முயன்றதிலிருந்து இவர்களின் அரசியல் செல்வாக்கு பெறத்தொடங்கியது. 1792இல் அமைச்சரவை கவிழ்ந்தவுடன் இவர்கள் தான் உறுதியாக நின்று முடியரசுவாதிகளின் கலகத்தையும், அயல் நாட்டு ஆக்கிரமிப்பையும் ஒருங்கே முறியடித்தார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான ரொபாஸ்பியே, மாரட், டாண்டன் ஆகியோர் இக்கழகத்தைச் சேர்ந்தவர்களே!

 

பிரஞ்சு புரட்சியின் முன்னோடிகள்:

வால்டேர் (1694-1778): பிரெஞ்சு எழுத்தாளர் நாடகாசிரியர். முடியாட்சியை

எதிர்த்து எழுதியதற்காகச் சிறைசென்றவர்; நாடு கடத்தப்பட்டவர். மதம் நிறுவனமாக இருப்பதையும், கத்தோலிக்க மதக் கொடுங்கோன்மையையும் சாகும் வரை எதிர்த்தார். எனவே இவரது உடலைப் புதைக்கக்கூட இடுகாட்டில் இடம்தர முடியாதென்று கத்தோலிக்க மடாலயம் மறுத்துவிட்டது.

ரூசோ (1712-1778): பிரெஞ்சு தத்துவவியலாளர். அறிவொளி இயக்கவாதி. ”ஆரம்பத்தில் சமமாக இருந்த மக்கள் நாகரீகம் வளர்ந்தபின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆளாயினர். இந்த ஏற்றத்தாழ்வு விவேகமான அரசு ஒன்றின் மூலம் நீக்கப்பட வேண்டும்” என்பது இவரது தத்துவம்.

தீத்ரோ (1713 – 84): பிரெஞ்சு பொருள்முதல்வாத தத்துவவியலாளர், எழுத்தாளர்.

டான்டன் (Danton): 1787இல் இவர் மன்னரது ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர். 1790 இல் மாரட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜாகோயின் கழகத்தில் இணைந்தார். புரட்சியின் சிறந்த ராஜதந்திரி எனப் போற்றப்படுபவர்.

ரோபஸ்பியே (Robespierre): தனது 31 வயதிலேயே அசெம்பிளி உறுப்பினரான இவர் ரூஸோ’வின் தத்துவத்தைப் பின்பற்றுபவர். ஜாகோபின் கழக முன்னோடி.

மாரட் (Marat): மனிதனும் அடிமைச் சங்கிலியும் எனும் நூலை எழுதியவர். பாரிஸ் புரட்சிக் கமிட்டி உறுப்பினர். மன்னனின் தலையைச் சிவவேண்டும் என முதல் குரல் கொடுத்தவர். முடியாட்சியின் கைக்கூலிப் பெண் ஒருத்தியால் குளியலறையில் கொல்லப்பட்டார். மக்களுக்காக மடிந்த தியாகி என்பதால் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர் பெயரைச் சூட்டினர். ஒவியம், நாடகம், கதை என்று பல வடிவங்களில் மாரட்டின் புகழ் பிரான்சில் நிலை பெற்றுவிட்டது.

__________________________________

இந்த வரலாற்றுக் கட்டுரையை விரும்புகிறீர்களா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ரோஹிங்கியா : உலகம் அறிந்திராத இனப்படுகொலை ! ஆவணப்படம்

0

ரோஹிங்கியா: உலகம் அறிந்திராத இனப்படுகொலை – ஆவணப்படம்

மியான்மரில் தங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறையில் இருந்து தப்புவதற்காக வங்கதேசத்தின் எல்லையை கடக்க முயன்ற ரோஹிங்க்யா மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மியான்மர் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. தாக்குதல் குறித்த காணொளிகளை ஆய்வு செய்த பின்னர் அதை வெளியிட இருப்பதாக ஐரோப்பிய ரோஹிங்கியா சங்கம் (European Rohingya Council) அறிவித்துள்ளது.

முன்னதாக ஆகஸ்டு, 27 அன்று ரோஹிங்கியா ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 12 மியான்மர் பாதுகாப்புப் படையினர் பலியானார்கள். இராணுவத்தின் பதில் தாக்குதலில் 130 ரோஹிங்கியா முசுலீம்கள் கொல்லப்பட்டார்கள். அதில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்றாலும் அனைவரும் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்களே என்று மியான்மர் நட்டு ஆலோசகரான ஆங் சான் சூ கீ கூறியுள்ளார். இவர்தான் மேற்குலகால் சமாதானப் புறவாக பீற்றப்பட்டு நோபல் பரிசு வழங்கப் பட்டவர்.

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அவர்கள் குடியேறியதாக கூறும் மியான்மர் அரசு அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் மறுக்கிறது. ஆனால் அவர்கள் பூர்வகுடிகளா அகதிகளா என்பதையும் தாண்டி உலகின் மிகவும் கொடுமைப்படுத்தபடும் சிறுபான்மை இனமாக ரோஹிங்கியா முமசுலீம்கள் இன்று அறியப்படுகின்றனர்.

பர்மா என்று முன்பு அறியப்பட்ட மியான்மர் சற்றேறக்குறைய 5.1 கோடி மக்களைக் கொண்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கும் பர்மா இனக்குழுதான் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் அவர்களைத் தவிர 135 -க்கும் அதிகமான இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தங்களது சொந்த கலாச்சாரத்துடன் அந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

மியான்மர் அரசின் நடவடிக்கைகளால் நிலங்களை இழந்துள்ள அவர்களில் பலர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இது ஒரு நீண்ட கால முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்.

மியான்மரை ஆளும் பெரும்பான்மை பர்மிய இனத்திற்கும் மியான்மரின் சிறும்பான்மை இனங்களுக்கும் இடையிலான மோதல்களானது உலகின் தொடர்ந்து நடந்து வரும் நீண்டகால மோதல்களுள் ஒன்றாகும்.

அவர்களில் ஒரு இனம் தான் ரோஹிங்கியா முசுலீம்கள். அவர்கள் மியான்மரின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனாலே அவர்கள் எல்லாவற்றிலும் மிக மோசமான பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்றனர். எண்ணிக்கையில் தோராயமாக பத்து அல்லது இருபது இலட்சத்திற்குள் இருக்கும் ரோஹிங்கியா இனத்தவர் நாட்டின் வடக்கில் ரக்கினே மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இந்த ஆவணப்படத்தில், ரோஹிங்கிய மக்களைச் சூழ்ந்துள்ள சூழ்நிலையை ஆய்வு செய்ய அல்-ஜசீராவின் அரபு நிருபர் சலாம் ஹிந்தவி மியான்மருக்கு செல்கிறார்.

ஆங் சான் சூ கீ,

மியான்மர் பலப்பத்தாண்டுகளாக இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளியாட்களை மியான்மர் அரசு எளிதில் அனுமதிக்காததால் நாட்டில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளை அணுகுவதற்கு ஹிந்தவிக்கு பெரும் சிக்கல்கள் உள்ளன.

“மக்கள் வடக்கு மவுங்டாவிற்கு (Maungdaw) [பெரும்பான்மை ரோஹிங்ய மக்கள் வாழும் நகரம்] செல்வதை இராணுவமும் அரசாங்கமும் தடுக்கின்றன. ஏனெனில் மறைப்பதற்கு பயங்கரமான ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்” என்று கூறும் மியான்மரைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் இயக்குனரான டேவிட் மேத்திசன் தற்போது ஒரு சுயாதீன ஆய்வாளராகவும் பார்வையாளராகவும் இருக்கிறார்.

“செயற்கைக்கோள் படங்களும் அரசாங்கத்தின் சொந்த ஒப்புதல்களும் அங்கிருந்து வரும் நம்பகமான அறிக்கைகளும் அங்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதைக் கூறுகின்றன. பொதுமக்களுக்கு எதிரான உரிமை மீறல்களின் அளவை மூடி மறைக்க அவர்கள் விரும்புகின்றனர்” என்று அவர் கூறுகிறார்.

ரக்கினே மாநிலத் தலைநகரான சிட்வேவில் 2012 -ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறை அலையில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் முகாம்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

“ரக்கினே மக்களால் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன” என்கிறார் ரோஹிங்கிய அகதிகளில் ஒருவரான சாண்டர் வின். “ஒரு நண்பரின் வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம், பின்னர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டோம். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக நான் இங்கு இருக்கிறேன்” என்றார்.

“எங்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. எங்கள் வீடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. குளிர்காலத்தில் நாங்கள் தரையில் தூங்குகிறோம்… நோய்கள் வந்து எங்கள் குழந்தைகள் சாகின்றன.” என்று முகாம் மருத்துவர் என்றழைக்கப்படும் முஹம்மது யாசின் கூறுகிறார்.

அவர்கள் நடமாடுவதையும், திருமணம் செய்வதையும், கல்வியறிவு மற்றும் சுகாதார வசதிகளைப் பெறுவதையும் அரசாங்கம் தடுக்கிறது. ஹிந்துவி சந்தித்த அகதிகள் பல ஆண்டுகளாக அந்த முகாமில் இருப்பது போல் தெரிகிறது. மேலும் அந்த குழந்தைகள் வேறு எங்கும் வசித்ததில்லை போலவும் தோன்றுகின்றனர்.

ரோஹிங்கிய மக்களுடைய பிரச்சினைகளின் மையமானது மியான்மரின் குடியுரிமை சட்டங்களில் இருக்கிறது. அது முழுமையான தேசியத்தை அவர்களுக்கு மறுப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளையும் சேர்த்தே மறுக்கிறது. இது அவர்களுக்கெதிரான பரந்துபட்ட அதிகாரப்பூர்வ மற்றும் வெளிப்படையான பாரபட்சத்தைப் பிரதிபலிக்கிறது.

“ஒரு பௌத்தவாதியாக அவர்களுக்காக நான் வருந்துகிறேன்” என்கிறார் பௌத்த துறவியான யு பா பர் மவுன்ட் கா. “ஆனால் மியான்மரில் வாழ்கின்ற இந்த முஸ்லிம்களின் மனித உரிமைகளை மட்டும் நாம் பார்க்க முடியாது. அவர்கள் எங்களது குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடிமக்களாக வாழத் தகுதியற்றவர்கள்… அவர்களை நாங்கள் வெளியேற்றினால் மியான்மரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். உலகின் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. எனவே அந்த நாடுகளின் தலைவர்கள் இந்த மக்களை தங்களது நாடுகளில் ஏற்றுக்கொண்டால் எங்களது நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இருக்காது. இதை நாம் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.” என்று மேலும் அவர் கூறுகிறார்.

இந்த பாகுபாடு, பதட்டத்தை உருவாக்கியதுடன் 2016 -ம் ஆண்டு அக்டோபரில் பங்களாதேசுடனான எல்லையில் நடத்தப்பட்ட பல்வேறுத் தாக்குதல்களில் குறைந்தது 9 மியான்மர் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் “பயங்கரவாதிகளாக” அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் அவர்கள் ஒரு ஆயுதமேந்திய இசுலாமியக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்பட்டது.

அதன் எதிர்வினையாக வன்முறை உடனடியாக ஏற்பட்டது. மவுங்க்டாவில் இராணுவம் முற்றுகையைத் தொடங்கியது. பெருந்திரளான மக்கள் படுகொலைகள், சித்திரவதை, பாலியல் வன்முறைகளைப் பற்றிய அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய மக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் தேடினார்கள்.

இந்த அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதன் பின்னரும் கூட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. ரோஹிங்கிய மக்களை ஒட்டுமொத்தமாக இனவழிப்பு செய்வதுதான் மியான்மரின் தந்திரமாக இருக்கலாம் என்ற கருத்திற்கும் அது இட்டுச்சென்றது. ஒரு உண்மையறியும் குழுவொன்றை அனுப்பும் திட்டத்தை மியான்மருக்கு அது முன்வைத்தது. ஆனால் ஐ.நா ஆய்வில் பங்கு பெரும் அதிகாரிகள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்று அரசாங்கம் ஜூன் மாதத்தில் கூறியது.

முன்னால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூ கீ இப்போது நாட்டின் ஆலோசகர் பதவி வகிப்பதுடன் மியான்மர் அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளார். ஆனால் அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரகராக இருந்த நாட்களிலிருந்தே ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கிய மக்களின் நிலைமையை புறக்கணித்ததாக அவர் குற்றஞ்சாட்டப்படுகிறார்.

“நடந்து கொண்டிருக்கும் பாகுபாடுகள் குறித்து ஒப்பீட்டளவில் [ஆங் சான் சூ கீ] மெளனமாக இருக்கிறார்” என்று மேத்திசன் கூறுகிறார். “ஒரு தலைவராக அவரது குரல் தேவைப்படும் போது உண்மையில் அவர் வருவதில்லை.” என்று கூறுகிறார் அவர்.

மேலும் :

_____________

இந்த ஆவணப்பட அ றிமுகக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தேசப்பற்றுக்கு ஜனகனமண – தோசை சட்னிக்கு ஜி.எஸ்.டி !

1

நாம் வாழும் தேசம்

சுவரொட்டியில்
வீரவசனம்,
சோடையற்ற
மேடைப்பேச்சு,
சொற்கள் மழையில்
சொரணையற்ற
மக்கள் கூட்டம் !

தேர்தல்
சுற்றறிக்கையில்
சொர்க்கம்,
சொந்த ஆட்சியில்
நெற்றியில் ஒற்றை
நாமம்!

தேர்தல் !
படித்தவனுக்கு
விடுமுறை நாள்,
பாமரனுக்கு
திருவிழா !

தேசப்பற்றுக்கு
திரையரங்கில்
ஜனகனமன,
தோசை சட்னிக்கு
உணவகத்தில்
ஜிஎஸ்டி !

மாடு விற்க
ஐந்து ஆவணம்,
மாட்டிகிட்ட
கண்டெய்னருக்கு
மூன்றுமாத
திரைக்கதையில்
மக்கள் காதில்
மலர் ஆரணம் !

கோட்டுக்கு
பத்து லட்சம்,
மலம் கழிக்க
வாழை இலை,
சிலை வைக்க
காசிருக்கு – ஆக்சிஜன்
சிலிண்டர் வைக்க
காசில்லை!

ஊழல் சிறைவாசிக்கு
ஷாப்பிங் சலுகை,
சல்லாப சாமியாருக்கு
சாலை மறியல்
போராட்டம்!

அப்பாவி சிறைவாசிக்கு
தலைமுறை கடந்து
தலை நரை !
பாவமென்று
பரோலில் விட்டால்
வழக்குபோடும்
பன்னாடை
பிறப்புகள் !

ஏன்னு கேட்டா
Anti Nationalist
Uncle Nationalist,
போமா நீன்னு
சொல்லும்
பேமானி அல்லக்கைகள் !

கொதித்தெழாத
குருதி,
நரம்பு தளர்ச்சியில்
நம் மானம்,
தள்ளாடும்
கிழவனாய்
தன்மானம் !

விவசாயிக்கு
வட்டிக் கடன் !
வர்த்தக
முதலைக்கு
வாரா கடன்
வரிவிலக்கு !

நீயே சொல்?
எவன் வந்தால்
விடியல்
நமக்கு ?

-த. ஹாஜி

_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

செப் 1 முதல் ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் : தமிழ்நாடு ஒரு கேனப்பய ஊரு சார் !

3

மிழகத்தில் வரும் 2017, செப்டம்பர் 1 -ம் தேதி முதல் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்களும் தங்களது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை வாகன சோதனையின்போது காண்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டவர், போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர்! தமிழக அரசுப் பேருந்து டிப்போக்களையே வங்கியில் அடமானம் வைத்து ஆட்டம் போடும் அதிமுக அமைச்சர் இவர்.

தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்கள் 13 லட்சம், போக்குவரத்து அல்லாத பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் 2 கோடியே 20 லட்சம் என மொத்தம் 2.33 கோடி வாகனங்கள் உள்ளன. அதேபோல தமிழகத்தில் உள்ள 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 480 பேருக்கு பழகுநர் ஓட்டுநர் உரிமங்களும், 9 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேருக்கு நிரந்தர ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும்பொழுது போக்குவரத்து காவல் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டால் ஓட்டுனர்கள் தங்களின் ஓட்டுனர் உரிம நகலை காண்பிப்பது என்பது தான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நகல் நடைமுறையில் பல மோசடிகள் நடப்பதாக வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வருவதாக கூறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து துறை சார்ந்தவர்கள் கூறுவது என்ன?

சென்னை குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பழகுனர் ஓட்டுனர் உரிமம், மற்றும் புதுப்பித்து வழங்கக்கூடிய வேலையை கடந்த பதினைந்து ஆண்டாக செய்து வரும் ரிஸ்வான்,

“தமிழக அரசின் இந்த திட்டம் ஓட்டுனர்களை கடுமையாக பாதிக்க கூடியது தான். உதாரணமாக சென்னையில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் பெரும்பாலானவை வாடகைக்கு எடுத்து ஓட்டக் கூடியவை. இவர்கள் தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை ஆட்டோ உரிமையாளரிடம் கொடுத்து விட்டு தான் ஓட்டுவார்கள். ஆனால் இந்த முறை அமுல்படுத்தபட்டால் அவர்கள் எந்த நம்பிக்கையில் ஆட்டோக்களை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும், ஒரு முறை உரிமம் தொலைந்து போனாலோ அல்லது போலிசோ, வட்டார போக்குவரத்து அலுவலரோ (RTO) சோதனையின் போது பறிமுதல் செய்தால் திரும்ப பெறுவது மிகவும் கடினம். RTO -விடம் இருந்து பெறுவதற்க்கு ஒரு வாரம் ஆகிவிடும். போலீசிடம் இருந்து பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆகிவிடும்.

அதுபோக தொலைந்து விட்ட உரிமத்தைத் திரும்ப பெறுவதற்கு போலீசில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து அதனை RTO -விடம் ஒப்படைக்க வேண்டும். அந்த RTO, குறிப்பிட்ட இந்த நபருடைய ஒரு லைசென்ஸ் தங்கள் அலுவலகத்தில் உள்ளதா என்று கேட்டு கடிதம் எழுதுவார். அவர்கள் கொடுக்கும் பதிலில் இருந்து தான், புது லைசென்ஸ் கிடைக்கும். இதற்கு அவர் புது உரிமத்தையே எடுத்து விடலாம்.

அதுமட்டுமில்லாமல் 2016 டிசம்பர் 25 -ம் தேதிக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணங்கள் எல்லாம் அதிகரித்து விட்டன. குறிப்பாக ஆன்லைன் முறை வந்த பிறகு அதிகரித்து விட்டது. அதே போல ஆட்டோக்களுக்கு பெர்மிட் வாங்குவதற்கு ராணுவக்கொடி என்ற பெயரில் 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. ஆனால் வாங்கினால் தான் பெர்மிட் கொடுப்போம் என்ற நிலை வந்து விட்டது. லைசென்ஸ் வாங்குபவர்களிடமும் வசூலிக்கிறார்கள்.

ஆன்லைன் முறை என்பதே இந்த துறையை தனியார்மயமாக்குவதற்கு தான். இன்னும் ஒரு வருடத்தில் இந்த துறை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, போக்குவரத்து அலுவலர், இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற அதிகாரிகளும், புகைப்பட பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களை தவிர மற்ற அனைவரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்”, என்கிறார்.

சோமு, வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் தொலைபேசியில் கேட்டபோது :

இந்த திட்டம் என்பது அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் ஒரு திட்டம் தான். எங்களை போன்ற பயிற்சி பள்ளிகளுக்கு வருமானம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதன் மூலம் பாதிக்கப்பட போவது மக்கள் தான். இந்த திட்டம் அனைத்தும் தனியார்மயமாக்குவதற்கான வேலையை தான் மோடி செய்து வருகிறார், என்கிறார்.

வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் கதிரவன்

வாகனங்களுக்கு வேகக்கட்டுபாடு கருவி பொருத்தும் கதிரவன்,

ஏற்கனவே இந்த துறையை தனியார்மயமாக்க போவதா அறிவிச்சாங்க. அதுக்கான வேலை தான் இதெல்லாம். தனியார்மயமானவுடனே எந்த நிறுவனத்தோட வாகனமோ, அவனே எல்லாத்தையும் முடிச்சி கொடுத்துடுவான். அதுக்கப்புறம் எங்களுக்கெல்லாம் வேலையே இல்ல. மக்கள் அனைவரும் ஒண்ணா சேர்ந்து இந்த திட்டத்தையே எதிர்க்கணும் என்கிறார்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் மதன்,

இந்த திட்டம் சிறப்பானது தான். வாகனம் ஓட்டுபவர்கள் லைசென்ஸ் வைத்திருப்பதே இல்லை. இந்த அறிவிப்பின் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும். மேலும் வாகனம் ஓட்டுவார்கள் பாதிபேர் இன்சூரன்ஸ் போடுவதில்லை. இந்த அறிவிப்பு இன்சூரன்ஸ் எடுக்க வழிவகுக்கும். அவர்களுக்கு இதன் மூலம் நன்மை தான் என்கிறார்.

இன்சுரன்ஸ் போட்டவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்குவதில்லையே என்று கேட்டால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் பதினைந்து நாட்களுக்குள் எங்களுக்கு தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம். இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். காப்பீடு பாலிசிக்காக வலையுடன் அலையும் இந்நிறுவனங்கள், விபத்து இழப்பீடு என்றதும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை கூறி அலைக்கழிக்கிறார்கள். ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் அதே கதைதான்.

ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் கூறுவது என்ன?

குன்றத்தூர் அலுவலகத்திற்கு வந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம்

ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம், அவருடைய மனைவி பேச்சியம்மாள்

நான் மூணு வருசமா வாடகைக்கு ஆட்டோ ஓட்டுறேன். என்னோட லைசென்ஸ் ஓனர்கிட்ட இருக்கு. இப்ப இந்த மாதிரி சொன்னா நாங்க எப்படி பொழைக்கிறது? இப்ப புது ஆட்டோ வாங்கலாம்னு நெனச்சேன். அதுக்கு “பெர்மிட்” வாங்க பேட்ச் இருக்கணும்னு சொல்றாங்க. பேட்ச் வாங்க படிச்சிருக்கணும். நான் படிக்கல. சரி என்னோட மனைவி பேர்ல வாங்கலாம்னு நெனச்சேன். யார் பேர்ல எடுக்கிறோமோ அவங்களும் பேட்ச் போட்டிருக்கணும்னு சொல்றாங்க. இதெல்லாம் என்ன சார் சட்டம். கடைசி வரைக்கும் நாங்க வாடகைக்கு தான் வண்டி ஒட்டணுமா? இந்த மோடி அரசாங்கம் பன்றதெல்லாம் பார்த்தா “தூக்கு போட்டு தற்கொலை” பண்ணிகிற நிலைமை தான் இருக்கு என்கிறார்.

டாடா ஏசி ஓட்டுனர் சுரேஷ்குமார், கேரளா

தமிழ்நாடு ஒரு கேனப்பயன் ஊர் சார். இங்க கேக்க ஆளு இல்ல. இதே கேரளாவுல இந்த மாதிரி அறிவிச்சா உடனே போராட்டம் தான் நடக்கும். சென்ட்ரல் கவர்மெண்டு இன்னா சொல்லுதோ அதை தான் இங்க இருக்கவங்க கேக்குறாங்க. இந்த திட்டம் போலீசு கொள்ளையடிக்க தான் வழிவகுக்குமே… ஜெராக்ஸ் வச்சிருந்தாலே காச புடுங்கிப்பானுங்க. இப்ப ஒரிஜினல் வேற சொல்ல வேணுமா. அவன் என்ன கேக்குரானோ அத கொடுக்கணும். போலிசை எதிர்த்து பேச முடியாது. எல்லாத்தையும் புடுங்கி கொளுத்திட்டு நம்ம கிட்ட எதுவுமே இல்லன்னு கேசு போடுவன். என்ன செய்வது? என்கிறார்.

லாரி ஓட்டுனர் சுரேஷ்குமார்

சுரேஷ்குமார், லாரி ஓட்டுனர்

எங்க வேலையில இதெல்லாம் சாத்தியமே இல்ல. எங்களோட லைசென்ஸ் ஓனர்கிட்ட தான் இருக்கும். ஏன்னா, ஏதாவது ஆக்சிடென்ட் பண்ணிட்டா விட்டுட்டு ஓடிவான்னு வாங்கி வச்சிப்பாங்க. போலிசு கேட்டா நாங்க எதை கொடுக்கிறது? நாங்க எப்பவுமே லுங்கி தான் கட்டிக்கிட்டு இருப்போம். போற இடத்துல படுப்போம். இதை எல்லாம் பத்திர படுத்தி வக்க முடியுமா? காணாம போயிட்டா, திரும்ப வாங்குற வரைக்கும் பொழப்பு இருக்காது. அவ்ளோ சீக்கிரம் வாங்கவும் முடியாது என்கிறார்.

பஞ்சர் கடை ராஜ்குமார்.

ராஜ்குமார், பஞ்சர் கடை

இந்த சட்டத்தால சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. தொலைந்து விட்டால் திரும்ப வாங்குறது தான் கஷ்டம் என்கிறார்.

ராமசாமி, இரும்பு பட்டறை தொழில் செய்பவர்.

இது ஜனநாயக நாடே கிடையாது. ஒரு சர்வாதிகார நாட்டுல தான் இந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் போட்டு மக்களை துன்புறுத்துவாங்க. இப்ப அதுதான் நடக்குது. இந்த சட்டத்தால மோசடிய தடுக்க முடியும்னு சொல்றாங்க. இதுல என்ன பெரிய மோசடிய தடுத்துட போறாங்க. பைக்கை திருடி போலியான ஆர்.சி. புக்கையே ரெடி பண்றாங்க. ஜிஎஸ்டி-ய கொண்டு வந்தது கூட தான் மோசடி. பெட்ரோல் விலை பதினைந்து நாளைக்கு ஒரு முறை ஏற்றப்படும்னு சொன்னாங்க. அப்புறம் தினமும் ஏறும்னு சொன்னாங்க. இன்னைக்கு ரூ.6 ஏறியிருக்கு. இது மோசடி இல்லையா? பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி வரி போடாம விட்டது மோசடி இல்லையா? இந்த அரசாங்கமே மோசடி பண்ற அரசாங்கமா தான் இருக்கு. இந்த சட்டத்தை யாரும் அவங்க பின்பற்றுவது கிடையாது. மக்களத்தான் கொல்றாங்களே.

ஹெல்மட் சட்டத்தை போட்ட நீதிபதிய ஹெல்மட் போட்டு ஓட்ட சொல்லுங்க. அதெல்லாம் ஓட்ட மாட்டாரு. ஹெல்மெட் போட்ட பிறகு எவ்ளோ ஆக்சிடென்ட் நடந்திருக்கு. பைக் ரேஸ்ல எவ்ளோ பேர் செத்து போயிருக்கான். இதையெல்லாம் இவங்க சட்டத்தால கட்டுபடுத்த முடியல. இப்ப ஒரிஜினல் லைசென்ஸ் தான் கட்டுப்படுத்த போகுதா? அரசாங்கத்துக்கு வருமானம் வேணும். அதுக்கு எந்த வழியிலாவது மக்கள் கிட்ட இருந்து புடுங்கனும். அதுக்கு தான் சார் இந்த சட்டமெல்லாம் உதவும் என்கிறார்.

***

ண்மை தான். தமிழத்தில் கடந்தாண்டில் மட்டும் 14 லட்சத்து 62 ஆயிரத்து 873 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு லைசென்ஸ் இல்லாதது, வரி செலுத்தாதது, அதிக பாரம் ஏற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக 2,37,649 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். லைசென்ஸ் இல்லாத காரணத்துக்காக மட்டும் 44,446 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அபராத கட்டணமாக போக்குவரத்து துறை 74 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கிறது.

மேற்கண்ட இந்த வருமானத்தில் மோசடி நடந்துள்ளது என்பதே உண்மை. கடந்த 2013 -ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 33 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரத்து 749 ரூபாய் அரசிற்கு வருமானம் ஈட்டித்ததுள்ளதாக RTO பாஸ்கரன் தெரிவித்தார். இந்த புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை மூலம் வரும் வருமானம் பல மடங்கு அதிரித்திருக்க வேண்டும்.

சென்னையில் திரும்பிய திசை எங்கும் போலீசின் வாகன தணிக்கை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் அதிக பணம் வசூலிப்பதாக மக்கள் புலம்பல் என்ற செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே? பல கோடிகள் கணக்கில் காட்டப்படாமல் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசும் ஏப்பம் விட்டுள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

தற்பொழுது மோடி அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தம் -2017, வாகன பதிவு, எப்.சி., லைசென்ஸ் வழங்குவது, என அனைத்தும் தனியாரிடம் வழங்க வழிவகை செய்துள்ளது. அனைத்து விதமான வண்டிகளையும் குறிப்பிட்ட காலம் மட்டும் தான் இயக்க முடியும். ‘பெர்மிட்’ வழங்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறித்துவிட்டு கார்ப்பரேட் முதலாளிக்கு லட்சக்கணக்கான பெர்மிட் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதன் மூலம் டிரைவர்கள், கனரக, இலகுரக வாகன உரிமையாளர்கள், இருசக்கரம் மற்றும் இரு சக்கர மெக்கானிக், பெயிண்டர், டிங்கர், எலக்ட்ரீசியன், வெல்டர், டயர் பஞ்சர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் கூலி அடிமைகளாக தள்ளப்படுவார்கள் என்ற மாபெரும் அபாயமும் உள்ளது.

எனவே போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கப்படுவதற்க்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளிகளும் ஒரே அணியில் திரண்டு எதிர்ப்பதன் மூலம் மட்டுமே எதிர்வரும் அபாயத்தை முறியடிக்க முடியும்.

நேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வடகொரியா தயாரித்த பயங்கரமான ஆயுதம் ! புகைப்பட ஆதாரங்கள்

0

மெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வடகொரியா எப்படி பிரச்சாரம் செய்து வருகிறது என்பதை 29.08.2017 அன்று வெளியான கார்டியன் நாளிதழ், புகைப்படங்களாக வெளியிட்டிருந்தது.

தி கார்டியன் நாளிதழ் இப்புகைப்படங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பது ஏன்?

‘வடகொரியாவிற்கு அணு ஆயுத பலம் இருக்கிறது’. ‘சின்ன அண்ணன் சீனா பின்னாடி இருக்கிறான்’. ‘வடகொரியா ஒரு கம்யுனிச நாடு’ என்று பல தரப்பினர் தங்களுக்கு தோன்றிய பலவண்ணக் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் இது இங்கு மையமான விசயம் அல்ல.

கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் சுவரொட்டிகளை பிரச்சார பீரங்கிகளாக பயன்படுத்துவதைக் கவனியுங்கள். அணு ஆயுத பலத்தால் அமெரிக்காவை வீழ்த்திவிட முடியாது. அணு ஆயுதத்தை விட பயங்கரமான ஆயுதம் மக்களிடையே ‘அமெரிக்கா ஏகாதிபத்தியம் வீழ்த்தப்பட வேண்டியது’ என்று அரசியல் பிரச்சாரம் செய்வதுதான்.

இப்பொழுது வரை வடகொரியா தயாரித்த மிகப் பயங்கரமான ஆயுதம் இதுவே! இது அமெரிக்காவை அச்சுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை!

இதை ஆங்கிலப்பத்திரிக்கை கார்டியனும் ஆமோதிக்கிறது! பிரச்சாரம் செய்கிறது! பாருங்கள்! பகிருங்கள்!

அமெரிக்கக் கொடியை கிழித்தெரியும் வடகொரிய பெண்: நெற்றித் துணியில் அமெரிக்க ராணுவமே வெளியேறு! பிரகடனம். அமெரிக்க அத்துமீறலை எதிர்ப்போம்.

 

“அமெரிக்க ஏகாதிபத்தியமே அசட்டைத்தனத்தோடு போருக்குத் தூண்டாதே!” எச்சரிக்கும் சுவரொட்டி.

கொட்டை எழுத்துகளில் பிரகடனம் சொல்வது இதுதான்: “நமது நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றுமை பலத்தால் அமெரிக்காவின் அணு ஆயுதப் போருக்கான திட்டத்தை நசுக்குவோம்”

 

“எங்கள் பரம வைரி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு மரணம்!”-முரசு கொட்டும் மற்றொரு சுவரொட்டி

இந்த சுவரொட்டி சொல்லும் செய்தி: “எங்களை நோகடிக்க துணிந்தவர்கள் தக்க தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

 

தந்தை நாட்டை ஒன்றுபடுத்தி அமெரிக்கனை விரட்டியடிப்போம்: வடகொரிய பிரச்சார சுவரொட்டியின் பிரகடனம்.

‘எங்கள் வழியை யாராலும் தடுக்க முடியாது’-துணிச்சலுடன் அறிவிக்கும் மற்றொரு பிரச்சார சுவரொட்டி!

“எங்களுடன் போரைத் தொடங்கு! “முதல் வேளையாக அமெரிக்க இழிமகனைத் தாக்குவோம்.”

நன்றி: தி கார்டியன்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாய் ஒலிக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெழுகுவர்த்தி ஏற்றினால் குண்டர் சட்டமா ? மதுரை கருத்தரங்க செய்தி

1

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பாக கடந்த 26.08.2017 அன்று எங்கே “அரசியல் சட்டத்தின் ஆட்சி?” கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரை நிகழ்த்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் “தமிழகத்தில் மக்களுக்காகப் போராடுவோர் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் இன்று அரியானா, டெல்லி,ராஜஸ்தான், பஞ்சாபில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நடக்கிறது. சுமார் 35-40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடக்கும் என முன்பே தெரிந்தும், பாஜக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் தடுப்புக் காவல் சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை? இதேபோல் விவசாயிகள் லட்சம் பேர் டெல்லியில் நுழைந்தால் விட்டுவிடுவார்களா?

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கச் சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்தும் நிறுவனங்கள் முழுக்க அரசியல் சட்டத்திற்கே விரோதமாக மாறிவிட்டன. காவி பாசிஸ்டுகள் ஆட்சியில், அரசமைப்பு நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும். இதுதான் பிரச்சனை!

அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை எனத் தீர்ப்பு வந்துள்ளது? இது எப்படி அமலாகும்? ஏற்கனவே கருத்துரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காகத்தான் இன்று வளர்மதியும், திருமுருகன் காந்தியும் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். துண்டறிக்கை கொடுப்பதும், மெழுகுவர்த்தி ஏற்றுவதும் குண்டர் சட்டத்தில் வருமா? போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்புக் காவல் சட்டம், இன்று போராடுவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

இதை முதல்வர் சட்டசபையிலேயே அறிவிக்கிறார்! கூவத்தூரிலும், புதுச்சேரியிலும்தான் அரசியல் சட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கேவலத்திற்கு சட்ட நிபுணர்கள் வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசமைப்பு நிறுவனங்கள் தோற்றுவிட்டதற்கு அயோத்தி பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு ஓர் உதாரணம். உலகமே பார்க்க குற்றம் இழைத்த அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோசி மீது இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குற்றம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது!

ஜெயலலிதாவையும் செத்த பின்தான் தண்டித்தார்கள்! காவிரி வழக்கிலும் இதுதான் நிலை! வாழ்வுரிமை அடிப்படை உரிமைதான்! 3,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். அவர்களின் வாழ்வுரிமையை உச்சநீதிமன்றம் கேட்குமா?

அரசமைப்பின் பாராளுமன்றம், சட்டமன்றங்கள், நிர்வாகம், நீதித்துறை என அனைத்து நிறுவனங்களின் தன்மையும் மாறிவிட்டன. இதுதான் ஜெர்மனியில் நடந்தது. ஹிட்லரும் மோடியைப் போல புதிய ஜெர்மனி பேசினார். அவருக்கு அனைத்து அரசமைப்பு நிறுவனங்களும் ஆதரவளித்தன. சட்டப்படிதான் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவிலும் இன்று இதுதான் நடக்கிறது. இதற்கெதிராக ஓர் ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டியுள்ளது. இது எனது கருத்து மட்டுமல்ல!  70 ஆண்டுகால சுதந்திர வரலாற்றை ஆய்வுசெய்து “பிரண்ட் லைன்” பத்திரிக்கை சமீபத்தில் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருப்பதும் “ஜனநாயகப் புரட்சிதான்”. எனவே அனைவரும் ஒன்றிணைவோம்! போராடுவோம்!” என்றார்.

அடுத்துப் பேசிய திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலர் திரு ஆனந்த முனிராஜ் அவர்கள் “நீட் தேர்விலே சட்டத்தின் ஆட்சி இல்லை என்பது தெரிந்துவிட்டது. மனுதர்ம ஆட்சிதான் இங்கு நடக்கிறது. இதை உச்சநீதிமன்றமும் ஆதரிக்கிறது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடி வந்தார்கள்! இன்று போராடவிடாமல் நீதித்துறையால் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர்கள் முன்பு போல் இருந்திருந்தால் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சி நடந்திருக்கும். அது நாடு முழுவதும் பரவியிருக்கும். இதைத் தெரிந்துதான் ஒடுக்கிவிட்டார்கள். நீதிமன்றங்கள் சாதி, மத அடிப்படையில் தீர்ப்பளிக்கின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்வு என காவிகள் அமல்படுத்துகின்றனர்.

இந்தியாவில் இது எப்படி சாத்தியமாகும்? குக்கிராமத்து மாணவனும்,டெல்லியில் சி.பி.எஸ்.சி. -யில் படித்த மாணவனும் ஒன்றா? நீதிமன்றங்கள் ஒழுங்காக இருந்தால் பாதிப் பிரச்சனைகள் சரியாகும். ஆனால் இங்கு  மாற்றப்பட, எதிர்க்கப்பட வேண்டியதே நீதித்துறைதான்! கேரளாவில் ஒரு முசுலீம் பையனும், இந்துப் பெண்ணும் திருமணம் செய்த வழக்கில் “ லவ் ஜிகாத்” என்று சொல்லி தேசியப் புலனாய்வு அமைப்பிடம் விசாரணைக்கு ஒப்படைக்கிறது உச்சநீதிமன்றம் . திருமணம் அவரவர் சொந்த உரிமை. இதில் விசாரணைக்கு என்ன உள்ளது? இது இந்துத்துவத் தீர்ப்புதான். இதைத்தான் நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் “கோவாவில் தேர்வு செய்யப்படுவோர் ஒரு கட்சியினர், ஆட்சியில் அமர்வோர் வேறு கட்சியினர், இது மணிப்பூர், பீகார் எனத் தொடர்கிறது. தமிழகத்திலோ சொல்லவே தேவையில்லை. இந்திய அரசியல் சட்ட முகப்புரையில் சொல்லப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்டவைகளுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது.

நேரு அவர்கள் அன்றே  சொன்னார் “கம்யூனிஸ்டுகளால் இந்திய அரசமைப்பிற்கு ஆபத்தில்லை! ஆனால் வலதுசாரி மதவாதிகளால் ஆபத்துவரும்” என்று. அதுதான் இன்று நடக்கிறது. பசுப்பாதுகாப்பு என்று சொல்லி நாடு முழுவதும் பலர் அடித்தே கொல்லப்படுகின்றனர். ஜீனத் என்ற சிறுவன் டெல்லியில் ஓடும் ரயிலில் அடித்தே கொல்லப்பட்டான். யாரும் தடுக்க முன்வரவில்லை. காசுமீரில் ராணுவ ஜீப்பில் ஒருவர் கட்டி வைக்கப்பட்டு ஊர், ஊராக இழுத்துச் செல்லப்படுகிறார். எத்தனை பெரிய மனித உரிமை மீறல் இது? இதை விடக் கொடுமை, இராணுவத்தை அவமதிக்கக் கூடாது என்று பலர் ஆதரிப்பதுதான்! அரசு மக்களுக்கா? இராணுவத்திற்கா?

இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கருவை பாராளுமன்றம், மாற்ற முடியாது என 13 நீதிபதிகள் அமர்வு கேசவானந்த பாரதி வழக்கில் சொல்லியுள்ளது. இதன்படி மதச்சார்பற்ற அரசு, சமத்துவம் எல்லாம் அடிப்படைகள். ஆனால் நீட் தேர்வில் இது மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு “மாநில அரசுகள் தேவைப்பட்டால் தனியாக  தேர்வு, அட்மிசன் முறை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றக் குழுவும் இதையே தெரிவித்துள்ளது.தற்போது இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை 16 நீதிபதிகள் உட்கார்ந்து மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தின் அடிப்படை இல்லை என முடிவெடுக்கலாம்! இன்றைய நாட்டின் நிலை இப்படித்தான் உள்ளது. இதைத் தடுக்க தனித்தனியாய் புலம்பி பயனில்லை. எல்லோரும் போராட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு மத்திய அரசு அடிபணிந்தது. ஆனால் அதையும் கடைசியில் எல்லோரும் கலைந்த பின்பு, தாக்குதல் நடத்தி இழிவுபடுத்தியது அரசு.

தேசிய நீதிபதிகள் ஆணைய வழக்கில் நீதிபதிகள் நியமனம் உச்சநீதிமன்றத்தைச் சார்ந்தது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், மத்திய அரசு செய்த முயற்சியை தலைமை நீதிபதி திரு.ஹெகர் அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதன்படி தேசப் பாதுகாப்பு எனச் சொல்லி, தான் விரும்பாதவர்களை மத்திய அரசு தடுக்கலாம். மாட்டுக் கறிப் பிரச்சனையிலும் இதுதான் நிலை. நான் ஆஜரான வழக்கில் மாட்டுக்கறி தடை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. மறுநாளே கேரள உயர்நீதிமன்றம் “மாட்டுக்கறிக்கு எங்கே தடை உள்ளது? எனக் கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தது”.ஆனால் விதிகளில் வெட்டுவதற்காக மாட்டை விற்கவோ, வாங்கவோ கூடாது என உள்ளது. இந்தியாவின் முகம் பன்முகத்தன்மைதான். இதை சீர்குலைக்கும் முயற்சி நடக்கிறது. அதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.”

இறுதியாக உரை நிகழ்த்திய  சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் “ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச சட்டத்தின் ஆட்சியும் மோடி வந்த பின்பு போய்விட்டது. தமிழகத்தில் கடந்த ஓராண்டாய் சட்டமே இல்லை.தேர்தல் ஆணையம்,சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. குட்கா ஊழலில் உள்ளவர் டி.ஜி.பி.யாக உள்ளார். தலைமைச் செயலர் வருமான வரித்துறை கடிதமே வரவில்லை என நீதிமன்றத்தில் பொய்சொல்கிறார்.

வினவு என்ற இணையதளத்தில் குண்டாஸ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. அருமையான வெளிப்பாடு. தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைமையில் உள்ள எனக்கு இந்தத் திறமை இல்லையே எனப் பொறாமையாய் உள்ளது. அப்பாடலில் சொன்னது போல “இந்த அக்கூஸ்டு எல்லாம் சேர்ந்து மாணவர்கள் மீது குண்டாஸ்” போடுகிறது. அனைத்து நிறுவனங்களும் சேதமாகி விட்டன. நீதிமன்றங்களில் 5% தான் எப்போதாவது அந்தரங்க உரிமை போன்ற சில தீர்ப்புகள் கிடைக்கின்றன.பத்திக்கைகள் உள்ளிட்ட ஊடகங்கள் விலைபோய்விட்டன.

ஆனால் மாற்று ஊடகமாக சமூக வலைத்தளம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 50% -க்கும் அதிகமான மக்கள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். இதில் 90% பேர் இளைஞர்கள். இவர்கள் மூலம் நாம் கருத்துக்களைக் கொண்டு செல்ல முடியும். மாற்றத்தை உருவாக்க முடியும்”என்று பேசினார்.

இறுதியாக தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டு கருத்தரங்கம் நிறைவுற்றது. வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் :

  • இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையை நசுக்கி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி, மே 17  திருமுருகனை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்.
  • இந்திய அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பணநாயகம் மூலம் தேர்தலை நிறுத்திய கரூர் அன்புநாதன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் மற்றும் மணல் மாபியா சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை மத்திய, மாநில அரசுகள், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
  • அடிப்படை உரிமையான தொழில் உரிமையைப் பறித்து கடந்த சுமார் 200 நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் முருகனை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
  • நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராடும் உரிமையை அரசு பறிக்கக்கூடாது. மக்களின் கோரிக்கையை ஏற்பதுடன், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
  • நீட் தேர்வு என்பது உலக வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மனுநீதியைத் திணிக்கும் செயல். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்விக் கொள்கை என்பது சர்வாதிகாரம். நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். அனைத்து தேசிய இன மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • தடுப்புக் காவல் சட்டத்தை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்ட சரத்து 22(4)(5)(6)(7) நீக்கப்பட வேண்டும். கருத்துரிமை முழுமுற்றான உரிமையாக ஏற்கப்பட வேண்டும். மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் பாசிசத்தை எதிர்த்து நடைபெறும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.

_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

மக்கள் கருத்துரிமையின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !

0
தொலைக்காட்சி ஒளிபரப்பு வாகனத்தை அடித்து நொறுக்கும் வன்முறைக் கும்பல்

குர்மீத் ராம்ரஹீமுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ள ஹரியாணா மாநில சி.பி.ஐ நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குர்மீத் தனது தேரா மடத்தைச் சேர்ந்த இரண்டு பெண் சீடர்களைப் பல ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 28 -ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது தான் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ளதாகவும், எனவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்த குர்மீத் ராம்ரஹீமை போலீசார் தரதரவென்று இழுத்துச் சென்றதாக பத்திரிகை செய்திகள் அறிவிக்கின்றன.

சாமியார் குர்மீத் ராம்ரஹிம்

குர்மீத்தின் குற்றத்தை கடந்த 25 -ம் தேதி வெளியிட்ட தனது தீர்ப்பில் உறுதி செய்தது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்ற பாஜக சொம்புகள் உள்ளிட்டு அனைத்து ஊடகங்களும் களத்தில் இறங்கிக் கம்பு சுழற்றத் துவங்கின. “கடவுளை மனிதன் தண்டிப்பது” சாத்தியமில்லை என நம்பி நீதிமன்ற வளாகத்தை உற்சாகமாகச் சூழ்ந்திருந்த குர்மீத்தின் சீடர்கள் கலவரம் செய்யத் துவங்கவே, வழக்கமான பாஜக ஊதுகுழல்கள் தங்களது சுருதியை மாற்றிக் கொண்டன. “எம்.எல் கட்டர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை” என உச்சஸ்தாயியில் சுருதி சேர்க்கத் துவங்கினார் அர்னாப் கோஸ்வாமி.

குர்மித் ராம்ரஹீமுக்காக நடந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 300 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மலோட் மற்றும் பல்லுவான்னா ஆகிய இரண்டு இடங்களில் உள்ள இரயில் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தில்லி ஆனந்த் விகார் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரேவா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு கோச்சுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. என்.டி.டி.வி, இந்தியா டுடே உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் நேரலை வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மானசா பகுதியில் உள்ள தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் கொளுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு வாகனத்தை அடித்து நொறுக்கும் வன்முறைக் கும்பல்

குர்மித் ராம்ரஹீமுக்கு எதிரான தீர்ப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே; அதாவது ஆகஸ்டு 23 -ம் தேதியில் இருந்தே தீர்ப்பு வெளியாகும் நீதிமன்றத்தையும் அது அமைந்திருக்கும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சகுலா நகரையும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். ஆகஸ்ட் 23 -ம் தேதியில் இருந்தே பஞ்சகுலாவில் குவியத் துவங்கிய ராம்ரஹீமின் பக்தர்களுடைய எண்ணிக்கை, தீர்ப்பு வெளியான அன்று 2 லட்சத்தைத் தொட்டதாக கூறுகின்றன ஊடகங்கள். தீர்ப்பு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே இணைய சேவை நிறுத்தப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சி.ஆர்.பி.எப்பின் 97 அணிகள் (Companies) இறக்கப்பட்டது; சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 16 அணிகளும், சாஷ்த்திர சீமா பால் (Sashtra seema Bal) எனும் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 37 அணிகளும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 21 அணிகளும், இந்தோ – திபெத் எல்லைப் போலீசு படையைச் சேர்ந்த 12 அணிகளும் களத்தில் இறக்கப்பட்டன. 48 மணி நேரத்துக்கு முன்பே 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு முழு அளவிலான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு பாதுகாப்புப் படைகள் களத்தில் நிறுத்தப்பட்ட பின்னும் ஒரு கலவரத்தை உண்டாக்கும் அளவுக்கு குர்மித் ராம்ரஹீம் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா? உண்மையில் பாதுகாப்புப் படைகளின் சக்தியை மீறித் தான் கலவரம் நடந்ததா?

குர்மீத் ராம்ரஹீம் சிங்

டிகர், பாடலாசிரியர், பாடகர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், சமூக சேவகர், “விளையாட்டு” ஆர்வலர் என பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ள 50 வயதான குர்மித் ராம்ரஹீமின் அடையாளம் – சாமியார். பலூசிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா பலோசிஷ்தானி என்பவரால் 1948 -ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு மதவாதக் குழு தேரா சாச்சா சௌதா. சீக்கிய மற்றும் இந்து மத நம்பிக்கைகளைக் கலந்து கிண்டப்பட்ட இந்தக் கிச்சடியின் மேல் இசுலாம் மற்றும் கிருஸ்தவ மதங்களில் இருந்து கடன் வாங்கப்பட்ட சில கருத்துக்களைக் கொத்தமல்லி கருவேப்பில்லையாக தூவப்பட்டிருக்கும்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இடைநிலைச் சாதிகள் மற்றும் தலித்துகளிடையே பிரபலமாக இருக்கும் இந்த மதவாதக் குழுவுக்கு சுமார் 6 கோடி பக்தர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் தலைமைப் பீடத்தில் 1991 -ம் ஆண்டு அமர்கிறார் குர்மீத் ராம்ரஹீம். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் சீக்கிய மதச் சாயல் கொண்ட பல்வேறு மதக்குழுக்களில் இருந்து தேரா சாச்சா சௌதா சற்றே வேறுபட்டதாகும்; மற்ற மதக்குழுக்கள் தமது வெளிப்படையான அரசியல் முடிவுகளை அறிவித்துக் கொள்ளாத நிலையில், தேரா சாச்சா சௌதா ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது உறுப்பினர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிவித்து விடும்.

கடந்த 2014 -ம் ஆண்டுக்கு முன்புவரை வெளிப்படையான காங்கிரசு ஆதரவாளராக இருந்த குர்மீத், அதன் பின் தனது ஆதரவை பாரதிய ஜனதாவுக்கு மாற்றிக் கொண்டார். மற்றபடி பொதுவாக இந்து சாமியார்களும் மடங்களும் பின்பற்றும் அதே வழிமுறைகள் தான் குர்மீத்தினுடையதும். மருத்துவ முகாம்கள், பேரழிவுக் காலங்களில் உதவி செய்வது போன்ற “சமூக சேவைகளுடன்” பிரதமர் நரேந்திர மோடியே புகழும் அளவுக்கு தன்னை தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைத்துக் கொண்டார்.

குர்மீத்தின் குற்றப்பட்டியல்

குர்மீத் ராம்ரஹீம் தற்போது தண்டிக்கப்பட்டிருக்கும் வழக்கு 2002 -ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எழுதப்பட்ட ஒரு கடித்ததில் துவங்கியது. அக்கடிதத்தில், குர்மீத் தன்னையும் மடத்தில் இருந்த பிற பெண் சாமியார்களையும் பாலியல் வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகிறார். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேரா மடத்தின் தீவிர பக்தர்கள் என்றும், குர்மீத்தைக் கடவுளாகவே ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் அப்பெண் குறிப்பிடுகிறார்.

ஹரியானாவின் இடைநிலை சாதிகள் மற்றும் தலித்துக்கள் மத்தியில் செல்வாக்கோடு உள்ளது குர்மீந்தின் தேரா சச்சா சவுதா அமைப்பு – சாமியாருக்கு ஆதரவாக சாலையில் காத்துக்கிடந்த பக்தர்கள்

ஒரு நாள் அந்தப் பெண்ணை தனது இரகசிய அறைக்கு அழைத்துள்ளார் குர்மீத். அங்கே நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்த “கடவுளை” கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அப்பெண். தனது அரசியல் செல்வாக்கை குறிப்பிட்டும் கைத்துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டிய குர்மீத், ஏற்கனவே ‘தேரா’வின் மேலாளர் ‘ஃபக்கீர் சந்த்’தை கொன்று மறைத்ததைப் போல அந்தப் பெண்ணையும் கொன்று விவகாரத்தை எந்த சிக்கலும் இல்லாமல் மறைத்து விட முடியும் என்று மிரட்டியுள்ளார். உயிருக்கு அஞ்சிய அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குர்மீத், சுமார் மூன்றாண்டுகளாக இந்தக் கொடுமையைத் தொடர்ந்து செய்துள்ளார்.

மடத்தில் தங்கியிருந்த தான் மட்டுமின்றி பிற பெண்களும் இதே போல் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அப்பெண், அதை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தார். முதலில் ஹரியாணா ஊடகங்களிலும் பிற இந்திய ஊடகங்களிலும் வெளியான இவ்விவகாரம், வட இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விசயமாக மாறியது.

உள்ளூர் பத்திரிகையாளர் ராம்சந்தர் என்பவர், பாலியல் வல்லுறவு குறித்த கடிதத்தையும் குர்மீத்தின் பிற முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்தார். மக்களிடையே தனது போலி பிம்பம் கலைவதைக் கண்டு ஆத்திரமுற்ற குர்மீத், தனது அடியாட்களைக் கொண்டு ராம்சந்தரை சுட்டுக் கொல்கிறார். பாலியல் வழக்கைத் தொடர்ந்து ராம்சந்தரைக் கொலை செய்ததாக மேலும் ஒரு வழக்கு குர்மீத்தின் மேல் தொடரப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக் கடிதத்தை ஹரியாணா உயர்நீதி மன்றம் தானே முன்வந்து வழக்காக ஏற்றுக் கொண்டு (suo – moto) அதைக் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடுகிறது. தேரா மடத்தை விட்டு வெளியேறிய பல பெண் சாமியார்களை சி.பி.ஐ விசாரித்த போது, இரண்டு முன்னாள் பெண் சாமியார்கள் தாங்கள் குர்மீத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். தான் கிருஷ்ணரின் அவதாரமென்றும், மடத்தில் உள்ள பெண் சாமியார்கள் கோபியர்கள் என்றும் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்த குர்மீத், அவர்களின் பாவங்கள் போக்கப்பட வேண்டும் என்றால் தன்னோடு உறவு கொள்ள வேண்டும் எனச் சொல்லியே பெண் சாமியர்களைப் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ, 2007 -ம் ஆண்டு ஜூலை 30 -ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் சாமியார்களோடு குர்மீத் சிங்கின் உதவியாளர் ஒருவரையும் சாட்சியாக வழக்கில் இணைத்துள்ளது சி.பி.ஐ. பாலியல் குற்றங்களைத் தவிர ஏராளமான முறைகேடுகளில் குர்மீத் ஈடுபட்டுள்ளார். தனது சீடர்கள் பாலியல் ‘நல்லொழுக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மடத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆண் சாமியார்களின் விரைகளை அறுத்த குற்றச்சாட்டும் குர்மீத் சிங்கின் மேல் உள்ளது.

குர்மீத் பாரதிய ஜனதா கூட்டணி

காங்கிரசு ஆதரவு மனநிலையில் இருந்த குர்மீத்தை பாரதிய ஜனதா கடந்த 2014 -ம் ஆண்டு வாக்கில் தனது செல்வாக்குக்குள் வென்றெடுத்தது. அப்போதே பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்களோடு குர்மீத்துக்கு கடுமையான முரண்பாடு இருந்தது. தங்களது மத நம்பிக்கைகளை குர்மீத் இழிவு படுத்துவதாக சீக்கிய குருத்வாராக்கள் தேரா மடத்துடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்தன. எனினும் ஹரியாணாவில் உள்ள ஜாட் சாதியினரின் வாக்கு வங்கியின் கணிசமான சதவீதத்தைப் பெற்றிருந்த பாரதிய ஜனதா, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையேவும் தலித்துகளிடையேயும் செல்வாக்கு பெற்றிருந்த குர்மீத் தங்கள் பக்கமிருப்பது ஆதாயம் எனக் கணக்குப் போட்டது.

பஞ்சகுலாவில் வன்முறையில் ஈடுபடும் குர்மீத்தின் ஆதரவாளர்கள்

பாரதிய ஜனதாவின் தேர்தல் கணக்கு தப்பவில்லை. 2014 -ம் ஆண்டு நடந்த ஹரியாணா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா குர்மீத்தின் ஆசீர்வாதங்களோடு அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்தவுடன் சில பத்து சட்டமன்ற உறுப்பினர்களை தேரா மடத்துக்கு ஓட்டிச் சென்ற எம்.எல் கட்டார், குர்மீத்தின் ஆசிகளை பயபக்தியோடு பெற்றுக் கொண்டார். பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளை மீறி குர்மீத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது “சாதனைகளை” தேர்தல் பிரச்சார மேடையிலேயே பாராட்டிப் பேசினார் நரேந்திர மோடி. சமீபத்தில் மக்களவைக்குத் தேர்வான அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானியின் வெற்றிகளுக்கான பாராட்டுதல்களை குர்மீத் தெரிவித்திருந்தார்.

ஹரியாணா மாநில பாரதிய ஜனதா அரசின் மூன்று அமைச்சர்களான ராம்விலாஸ் ஷர்மா, அனில் விஜ் மற்றும் குரோவர் ஆகியோர் தேரா மடத்துக்கு சுமார் 1.12 கோடி நிதி வழங்கினர். மாநில கல்வித்துறை அமைச்சர் “பாரம்பரிய விளையாட்டுக்களை” வளர்ப்பதற்காக அரசு நிதியில் இருந்து குர்மீத்துக்கு 51 லட்சம் வழங்கியுள்ளார். குர்மீத் பார்ப்பனியத்தின் பாரம்பரிய விளையாட்டான பாலியல் வல்லுறவுகளில் சேம்பியன் அல்லவா?

தீர்ப்பு வெளியான ஓரிரு தினங்களுக்குப் பின் அது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங், கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு கைமாறாக பாலியல் வல்லுறவு வழக்கு திரும்ப பெறப்படும் என பாரதிய ஜனதா சார்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளின் ஆதரவு தங்களது “கடவுளுக்கு” இருப்பதை நன்கு உணர்ந்த்தாலேயே குர்மீத்தின் அடிபொடிகளால் இவ்வளவு பெரிய கலவரத்தை துவங்கி நடத்த முடிந்தது. ஆகஸ்டு 25 -ம் தேதி நீதிமன்றம் குர்மீத்தின் குற்றத்தை உறுதி செய்து நீதிபதி வாசித்த தீர்ப்பின் விவரங்கள் நீதிமன்றத்தைச் சூழ்ந்து நின்ற அவரது சீடர்களுக்கு தெரிய வந்த கணமே கலவரம் துவங்கியது. தீவைப்புகளும், கல்வீச்சுகளும் நடந்து கொண்டிருந்த நேரத்தில் போலீசார் முன்னேறிச் சென்று எச்சரிக்காமலும், தடியடி நடத்தாமலும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.

கலவரம் துவங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் சாவு எண்ணிக்கை உயரத் துவங்கியது. அதே நேரம் குர்மீத்தின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினரோ தங்கள் கடவுளைச் சீண்டினால் இந்தியாவையே துண்டு துண்டாக்கி விடுவோமென தொலைக்காட்சி ஊடகங்களில் சவடால் அடித்துக் கொண்டிருந்தனர். ஜே.என்.யூ மாணவர்கள் இந்தியா ஒழிக என கோஷமிட்டதாக சித்தரிக்கும் ஒரு போலி வீடியோவை முன்வைத்து “தேசபக்தியை” கிண்டிக் கிளறிக் கொண்டிருந்த ஊடகங்கள், குர்மீத்தின் அடியாட்கள் வெளிப்படையாக சவால் விடுவதைக் கண்டுகொள்ளாமல் “வன்முறை, பொது அமைதி, தீவைப்பு, கல்வீச்சு” என நடுத்தர வர்க்க மக்களின் பொதுபுத்தியை சொரிந்து விட்டு டி.ஆர்.பி -யாக கல்லாகட்டினர்.

இந்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த போது ஊடகங்களில் பேசிய பாரதிய ஜனதாவின் உ.பி மாநில பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், “கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பாராமல் ஒரு பெண்ணின் வார்த்தைகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுப்பதாக” குமுறினார். மற்றொரு பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமியோ மடங்களின் குருமார்களை இது போன்ற வழக்குகளில் சிக்க வைத்து அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் சதி நடப்பதாக ஓலமிட்டார். இந்தியா டுடே தொலைகாட்சியில் பேசிய பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஷாஸியா இல்மி, “ஓட்டு வங்கி என ஒன்று இருப்பது எதார்த்தம்; இது போன்ற சாமியார்களின் பின்னே வாக்காளர்கள் திரண்டிருப்பது இன்னொரு எதார்த்தம்; எனவே குர்மீத்தின் ஆதரவைப் பெற நாங்கள் அவரது காலில் விழுந்ததில் என்ன தவறு?” என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே காஷ்மீரில் கலரவத்தை “கட்டுப்படுத்த” அப்பாவி மக்களில் ஒருவரை ஜீப் முனையில் கட்டி ஊர்வலம் சென்ற வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான பாதுகாப்புப் படையினரோ குர்மீத்தை பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர். பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே மாடல் ஹெலிகாப்டரில் பறந்த குர்மீத்துடன் அவரது மகள் ஹனிபிரீத்தும் மருமகனும் உடனிருந்தனர்.

மிக நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பின் குற்றம் இழைத்தவர் தண்டிக்கப்பட்டு விட்டார். ஆனால், அவர் குற்றமிழைப்பதற்கான திமிரை வழங்கிய ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை யார் தண்டிப்பது? சந்திரா சாமி துவங்கி பிரேமானந்தா, ஜெயேந்திரன், நித்தியானந்தா, அசாரம் பாபு, குர்மீத் ராம்ரஹீம் உள்ளிட்டோர் அம்பலமாகிவிட்டனர். இவர்களுக்கும் சரி, ஜக்கி, டபுள் சிரீ, பாபா ராம்தேவ் போன்றோருக்கும் சரி – குற்றமிழைப்பதற்கான அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுப்பது பொதுவாக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் என்றாலும் குறிப்பாக இந்துத்துவ பாரதிய ஜனதா தான்.

எரிவதைப் பிடுங்கும் போது, தானாகவே கொதிப்பது அடங்கி விடும் என்பதை மக்கள் உணர வேண்டிய காலம் நம் கண் முன்னே கடந்து கொண்டிருக்கிறது.

மேலும் :

_____________

இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… !

3

டந்த 2016 செப்டம்பர் 23, 24 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கே தலைப்புச் செய்தி ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தன் வாழ்நாளில் மருத்துவமனைக்கே போகாத ஜெ. எப்படி அட்மிட் ஆனார்..? போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போகாமல் அப்போலோ ஏன் போனார்…? என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான பதில்களை ஊடகங்கள் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கோயம்புத்தூர் என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் தலைப்பு செய்தி வேறு ஒன்றாக அமைந்தது.

அது சசிக்குமார் என்ற இந்து முன்னணியை சேர்ந்த பொறுக்கி கொலை செய்யப்பட்ட செய்தி. பிற மாவட்டங்களில் இது ஒரு சாதாரண கொலையாக தெரியலாம். ஆனால் இந்து முஸ்லீம் கலவரம் நடந்த ஊர் தமிழ்நாட்டிலேயே பி‌ஜேபி வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு ஊர் என்ற நிலையிலிருக்கும் கோவை மாநகருக்கு இது ஒரு அபாய அறிகுறி. அதைத்தொடர்ந்து காவல்துறையின் முழு ஆசியோடு 18 கிலோமீட்டர் தூரம் நடந்த சவ ஊர்வலம், கலவரம் கடைகள் சூறை செல்போன் கடையில் திருட்டு கோமாதா பக்தர்களின் கோமாதா பிரியாணி திருட்டு போன்றவை அப்பட்டமாக அம்பலப்பட்டு சந்தி சிரித்த விவகாரங்கள்.

மேற்படி சசிக்குமார் கொலையில் இது வரை இரண்டு முஸ்லீம்களை பிடித்து விசாரித்துக் கொண்டுள்ளார்கள். முழு விவரம் ஒரு வருடமாகியும் வெளிவரவில்லை. ஆனால் இந்த ஒரு வருடத்தில் காவிப் புழுதி கோவையை எட்டு திசைகளிலும் வளைத்து நிற்கிறது. கோவை CPM அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் வி‌எச்‌பி என்ற குண்டர் படையை சேர்ந்த பொறுக்கி ஒருவன் பெட்ரோல் குண்டு வீசுகிறான். அடையாளம் தெரியாத நபர் என்று முதலில் டக்கால்டி விட்டுக் கொண்டிருந்த போலீஸ் பின்பு வேறு வழியில்லாமல் சிசிடிவி பதிவுகள் மூலம் அவனை கைது செய்கிறார்கள். வளர்மதிகளும், திருமுருகன்களும் குண்டர் சட்டத்தில் கைதாகுகையில் பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு குண்டர் சட்டம் இல்லை.

மோகன் பகவத்

கோவை எட்டிமடையில் கடந்த மார்ச் மாதம் அமிர்ந்தானந்த மயி அம்மா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயற்குழு கூட்டம் மோகன் பாகவத் தலைமையில் நடக்கிறது. இந்நிகழ்வுக்காக பல்கலைக் கழகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கிறார்கள். அம்மா அவர்கள் பாகவத் உடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் செய்கிறார்.

கடந்த ஜூலை மாதம் புதிய மாணவன் என்ற மாணவர் பத்திரிக்கையை விற்ற காரணத்திற்காக அதன் முகப்பில் மோடி படம் போட்டிருந்ததற்காக சட்டக்கல்லூரி மாணவர் வினோத் பாஜக வழக்கறிஞர் ஒருவனின் புகாரில் பெயரால் கைது செய்து சிறையிலடைக்கப்படுகிறார். மூன்று முறை ஜாமீன் மறுக்கப்பட்டு பின்னர் 17 நாட்கள் கழித்து கிடைக்கிறது.

கடந்த ஜூலை 10 அன்று ‘அக்கா’ வானதி வீடு இருக்கும் தொண்டாமுத்தூர் அருகே ஈழ அகதிகள் முகாமில் நடந்த சிறு தகராறில் ஒரு நபர் பஞ்சாயத்து பண்ணப் போகிறார். அதில் ஏதோ பிரச்சினை ஏற்பட அந்த நபரின் மகனும் இந்து முன்னணி பகுதி நிர்வாகியுமான பொறுக்கி ஒருவன் சக பொறுக்கிகளை கூட்டி வந்து அகதி முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறான். சாதாரண அடிதடி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடக்கிறது மோகன் பகவத் தலைமையில். கொங்குநாடு, குமரகுரு, அரசுக் கலைக் கல்லூரி போல இன்னும் பல கல்லூரிகளில் நிர்வாக ஒத்துழைப்புடன் காவல்துறை ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., கூட்டங்கள் ஷாகாக்கள் நடக்கின்றன.

பிள்ளையார் சிலை வைக்க சிபிஎம் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய இந்து முன்னணி மீது வழங்கப்பட்டுள்ள புகார்.

போன வாரம் கோவிந்தம்பாளையத்தில் விநாயகர் சிலை வைக்க இடம் இல்லை என்று சி.பி.ஐ.(எம்) கட்சி கொடிக் கம்பத்தை பிடுங்கி எறிந்து அராஜகம் செய்துள்ளார்கள் இந்து மத வெறியர்கள்.

இப்படி தொழில் நகரமான கோவை எந்நேரமும் கலவர நகராக மாற்றப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. மேயராகவோ அல்லது  MLA -வோ ஆகி ஸ்மார்ட் சிட்டி முதல் இன்ன பிற மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்ய நாடி நரம்பெல்லாம் துடிக்க துடிக்க அலைந்து கொண்டிருக்கிறார் வானதி ‘அக்கா’.

தமிழக உரிமை பிரச்சினைகளுக்கெல்லாம் பொங்காத, போராடாத இந்த ‘அக்கா’ ஸ்மார்ட் சிட்டி திட்ட CEO நியமனத்தில் அண்ணா திமுக அரசியல் செய்துவிட்டது என ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதிலும் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பயன்படுத்தி வங்கிகளிலும் இன்னும் பல வொயிட் காலர் ஊழல்கள் மூலம் பணம் சம்பாதித்து ருசி கண்டுள்ளார் வானதி. பாரதிய ஜனதா கிரிமினல் கும்பல் அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தின் மீது தனது அதிகாரத்தை அதன் செப்டிக் டாங்க் வழியே உள்ளே நுழைந்து நிறுவியுள்ள இந்த சூழ்நிலை இந்து முன்னணி பி‌ஜேபி பொறுக்கிகளுக்கு ஸ்டெட்ராய்ட் ஊசி போட்டுக் கொண்டதற்கு இணையான வெறியை அவர்களின் மூளையின் மூலையில் உற்பத்தி செய்துள்ளது.

ஜைலாக் ஊழல் புகழ் வானதி ‘அக்கா’

மிக அபாயகரமானது என்று தெரிந்தும் சசிகுமாரின் சவ ஊர்வலம் பதினெட்டு கிலோ மீட்டர் நடத்த அனுமதித்து இந்த கலவரத்திற்கு காரணமாயிருக்கும் கமிஷனர் அமல்ராஜ்தான்,SFI, DYFI, RSYF, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளை தேச விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கிறார்.  இப்படியான முறையில் அயோக்கியர்கள் + அரசு என்ற இந்த ஆபத்தான கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்நோக்கி இருக்கிறது கோவை.

இதோ விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. கடந்த வருட விநாயகர் சதுர்த்தியில் தடாகம் அருகே இந்து முன்னணி நடத்தும் விழாவில் வந்து மத்தளம் அடிக்க மறுத்ததற்காக கவுண்டர் சாதி இந்து முன்னணியினர் தாழ்த்தப்பட்ட சாதி இந்து முன்னணியினர் மீதே தாக்குதல் நடத்தினர்.

 

இந்த வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையின் மேட்டுப்பாளையம் ரோட்டில் மின்விளக்கு கம்பங்களின் மீது இந்து முன்னணி கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார்கள். பறப்பது கொடி மட்டுமல்ல கோவை காவல் துறையின் காவிக் கோமணமும் தான்.

கோவை முழுக்க இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பாரத் சேனா, இந்து மக்கள் முன்னணி, சிவ சேனா, ஸ்ரீராம் சேனா, விவேகானந்தா பேரவை, விவேகானந்தா மக்கள் இயக்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஏராளமான லெட்டர் பேட் கூலிப்படைகள் மூலம் நகர் முழுக்க 390 சிலைகளும் புறநகரில் சுமார் 1,400 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் தெரு ஓரத்தில் சாக்கடை மீதெல்லாம் மேடை போட்டு பிள்ளையாரை அமர வைத்து காக்கும் கடவுளான பிள்ளையாரை குடிகார பக்தர்களிடமிருந்தும் இன்ன பிற துஷ்ட சக்திகளிடமிருந்தும் துப்பாக்கி ஏந்திய காவல் துறை காவல் காத்துக் கொண்டிருக்கிறது. போலீஸ் மற்றும் பொறுக்கிகள் கூட்டணி உருவாவதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பந்தமாவதும் இரவும் பகலும் சிலையின் கீழே உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் மிதந்து கொண்டும் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான்.

சென்ற முறை விநாயகர் சதுர்த்தி வசூலின் போது துடியலூர் மகாலட்சுமி பேக்கரியிடம் வசூல் செய்துள்ளார்கள் காவிகள். ஆயிரக்கணக்கில் கொடுப்பார் என எதிர்பார்க்க அவரோ 300 கொடுத்து போதும் என அனுப்பியுள்ளார். கறுவிக் கொண்டே வெளியேறிய இந்து முன்னணியினர் சசிக்குமார் சாவு ஊர்வல கலவரத்தில் போலீஸ் துணையோடு ‘இந்துக்கடையான’ மகாலட்சுமி பேக்கரியை சூறையாடிவிட்டனர்.

இந்த முறை போஸ்டர் நோட்டீஸ் அனைத்திலும் மாவீரன் சசிக்குமார் என புகைப்படம் போட்டு நேரடி மிரட்டல் வசூலே நடைபெறுகிறது. போலீஸ் பொத்திக் கொண்டு அனுமதிக்கிறது.

போலீசின் பத்திரிக்கை அறிவிப்பிலேயே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது ; விசர்ஜன ஊர்வலம் என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்களை பார்க்கையில் கமிஷனர் ஆபீஸில் தயாரான அறிக்கையா காவிகள் ஆபீஸில் தயாரான அறிக்கையா என்றே சந்தேகம் வருகிறது.

புறநகரில் 1,000 போலீஸ் மாநகரில் 2,000 போலீஸ்,சிலைகளை கரைக்க தனி இடம், தண்ணீர் வசதி, ஆயிரக்கணக்கில் போலீஸ் பந்தோபஸ்து, தீயணைப்பு துறை என மக்களை முட்டாளாக்க மத வெறியர்களாக்க இயற்கை சுற்றுச்சூழலை மாசுபடுத்த மக்கள் பணத்தோடு நடைபெறும் இந்த அயோக்கியத்தனம் நாளுக்கு நாள் வளர்ந்தே வருகிறது.

பழனிக்கு தைப்பூச நடை, வெள்ளிங்கிரி ஆண்டவரை பார்க்க நடை, காரமடை பந்த சேவ நடை, பங்குனி உத்திரம், குமரன் குன்று, மாசாணி அம்மன் கோவில் நோன்பு என ஏராளமான நிகழ்வுகள் பல லட்சம் பக்தர்களோடு சிறு அசம்பாவிதம் என்ற பேச்சுக்கே இடமின்றி நடக்கிறது. ஆனால், நூறு பொறுக்கிகள் சேர்ந்து நடத்தும் நிகழ்வுக்கு மாநகரே பதட்டம் ஆகும் அளவு சிக்கலாகி வருகிறது.

பார்த்தீனிய செடி; யாரும் வெள்ளாமை செய்யாமல் பரவுவது போல பாசிச கும்பல் கோவை நகரெங்கும் பரவுகிறது. மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் கரம் கோர்த்து இந்த களைகளை வெட்டி வீச வேண்டும். கோவையை மீட்க வேண்டும்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை மாவட்டம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட் தேர்வை ஆட்டுவிக்கும் குடுமி – கேலிச்சித்திரம்

4

பார்ப்பனக் குடுமியில் சிக்கிக்கொண்ட மருத்துவக் கல்வி ! – கேலிச்சித்திரம்

கேசிச்சித்திரம் : முகிலன்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி