privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதா படுகொலை : ஓசூர் - விருதை - திருவாரூர் ஆர்ப்பாட்டங்கள்

அனிதா படுகொலை : ஓசூர் – விருதை – திருவாரூர் ஆர்ப்பாட்டங்கள்

-

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – அடிமை அதிமுக – உச்சிக்குடுமி நீதிமன்றம் –
இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!

தமிழகத்தை ஒழித்துக்கட்டாமல் விடாது பி.ஜே.பி! பி.ஜே.பி யை
ஒழித்துக்கட்டாமல் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது!

தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினா ஆக்குவோம்!

என்ற முழக்கங்களை முன்வைத்து ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், நீட் தேர்வை அடியோடு ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பு. ஜ.தொ.மு-வின் கமாஸ் வெக்ட்ரா கிளைச்சங்கத் தலைவர் தோழர் செந்தில், பு.ஜ.தொ.மு-வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினர்.

பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பலரும் கலந்துக்கொண்டு விண்ணதிர முழங்கி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யும்வரை தாங்கள் போராடுவதாக உறுதியளித்தனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம், தொடர்புக்கு – 97880 11784

 ***

நீட்: அனிதா படுகொலை !
மோடி-எடப்பாடி இவர்கள்தான் குற்றவாளிகள் !
குற்றவாளிகளை தண்டிக்க தமிழகமே திரண்டெழு !!
– என விருதையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம்
***
அரியலூர் மாவட்டம் செந்துரை – கொழுமூர் மாணவி அனிதாவின் BJP அ.தி.மு.க-வின் நீட் தேர்வால் நடந்த படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் கோவைப் பகுதியில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட 02.09.2017 அதிகாலை கோவை நகரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காலை 11.30 மணிக்கு மேற்கண்ட இடத்தில் பெண்கள் உட்பட 22 பேர் மக்கள் அதிகாரம் பேனர்கள் மற்றும் கொடிகளுடன் கண்டன முழக்கமிட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தியின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மக்கள் அதிகாரம்
கோவை
 ***
மாணவி அனிதா படுகொலை !
மத்திய மோடி அரசும் – மாநில எடப்பாடி அரசும் தான் கொலையாளி !
கண்டன ஆர்ப்பாட்டம்!
மாணவி அனிதா படுகொலையை கண்டித்து திருவாரூரில் 03.09.2017 அன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவாரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி தலைமையில்  நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களை தெரியப்படுத்தினர்.
இப்படுகொலைக்கு மத்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் தான் காரணம் என்றும், தொடர்ச்சியாக நடக்கும் மோடி அரசின் ஜனநாயக விரோத – தமிழர் விரோதப் போக்கை – கண்டித்தும்,  NEET தேர்வில் இருந்து முற்றிலுமாக விலக்கு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினர்.
நயவஞ்சகமாக தமிழகத்தில் நுழையும் பா.ஜ.க. கும்பலுக்கு, தமிழக காற்றைக்கூட சுவாசிக்க விடக்கூடாது, நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று பங்கேற்றவர்கள் உறுதி ஏற்றனர்.
 
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்

————————————————————–

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க