Monday, June 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 486

நடிகர் திலீப் கைது : ஒரு பார்வை

1

செவ்வாய்க்கிழமை ‘இந்துக்களுக்கு’ நல்ல நாள் இல்லை. ஆனாலும் ஜூலை 11 செவ்வாய் அன்றுதான் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டு கொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். “மத்திய சிறைக்கு வரவேற்கிறோம் – வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்” என்ற பதாகைகளுடன் மக்கள் அவரை வரவேற்றனர். உண்மையில் 2016-ம் ஆண்டில் திலீப் நடித்த படத்தின் தலைப்பும் அதுதான்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் – படம் பிடித்து பிரச்சினை வெளியே வந்த பிப் – 2017-க்கு பிறகு நிறைய செய்திகள் – கதைகள்! அவற்றில் அரை உண்மைகளோடு அரை பொய்களும் இருந்ததால் கதையின் விறுவிறுவிப்பைக் கூட்டின.

இந்திய சினிமாக்களில் நாற்பது வயது இயக்குநர்கள் எடுத்தே ஆகவேண்டிய இரு மனைவி – காதல் – முக்கோணக் கதையும், அதிக வருமானத்தை சொத்தாக்கும் கூட்டணி பிரச்சினையும், குற்றத்தை மறைக்கும் பிரபலங்களின் அதிகாரமும், அந்த அதிகாரம் தோற்றுவிக்கும் ஆணாதிக்கமும் இதில் இருக்கின்றன.

திலீப்பின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். ஏனைய மலையாள நடிகர்கள் பலரைப் போல இவரும் அடிப்படையில் ஒரு மிமிக்கிரி – பலகுரல் கலைஞர். மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பலகுரல் கலையால் நிகழ்ச்சி நடத்திய திலீப்புக்கு உறுதுணையாக இருந்தவர் நண்பர் நாதிர்ஷா. இவரும் பாவனா மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

கொச்சி மகாராஜா கல்லூரியில் பட்டம் முடித்த கோபாலகிருஷ்ணன், கொச்சிக்கு அருகே இருக்கும் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர். முதலில் உதவி இயக்குநராக மலையாள திரையுலகில் கால் பதிக்கிறார். ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1992-ல் “என்னோடு இஷ்டம் கொள்ளாமோ” படத்தில் கேமராவிற்கு முன்னால் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றுகிறார்.

1995-ம் ஆண்டில் அவர் நடித்த மனதே(தி?) கொட்டாரம் படத்தில்தான் அவரது பாத்திரத்தின் பெயரான திலீப் அவரது இன்றைய பெயரானது. மஞ்சுவாரியருடன் 1996-ம் ஆண்டில் அவர் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற “சல்லாபம்” திலீப்பை நட்சத்திர கிளப்பில் சேர்த்தது. பிறகு 1996-ல் மஞ்சுவாரியரை மணக்கிறார். அப்போது நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தாலும் ‘குடும்பப் பெண்ணின் இலட்சணப்படி’ நடிப்பிலிருந்து விலகுகிறார் மஞ்சு. திலிப்போ சம்பாதிக்க வேண்டிய ‘புருஷ இலட்சணப்படி’ 130-க்கும் மேற்பட்ட படங்களை முடித்து விட்டார். அவற்றில் பல பெருவெற்றி பெற்ற படங்கள்.

பிறகென்ன? பிரபலம், வருமானம், தயாரிப்பாளர் முதலான அந்தஸ்துகள். 2015-ம் ஆண்டில் மஞ்சு வாரியரை விட்டு பிரிகிறார். 2016-ல் நடிகை காவ்யா மாதவனை மணக்கிறார். காவ்யாவும் பல வெற்றிப்படங்களில் திலீப்போடு ஜோடியாக நடித்தவர்.

இந்த பிரிவு – புதிய மணத்தை வைத்து ஏகப்பட்ட நேரம் அச்சிலும், காட்சியிலும் மலையாள மக்கள் பல வதந்தி, கதைகளை பேசி, கேட்டு, கழித்தனர்.

திலீப்பின் சில படங்களை இயக்கிய இயக்குநர் வினயன், “ திலீப் எனும் நடிகர் தனது முடிவுகளை மறுக்கும் எவரையும் திரைப்படத்துறையில் நீடிக்க முடியாத படி செய்து விடுவார். இத்துறையில் அவரது செல்வாக்கு காரணமாக திரைத்தொழில் சங்கங்கள் பல திலீப் மீதான பல புகார்களை கவனிக்கத் தவறிவிட்டன” என்கிறார்.

வினயன் சொல்வது போல திலீப் எவரையும் ஒதுக்கிவிடும் வல்லமை உடையவரா? மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், அகில இந்திய பிரபலம் அசின், தென்னிந்திய பிரபலம் நயன்தாரா, இன்ன பிற பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நிறுவனங்கள்.. இவர்களையெல்லாம் திலீப் ஓரங்கட்ட முடியுமா என்ன? நிச்சயம் முடியாது. இவர்களெல்லாம் திலிப்பை விட அதிகமோ இல்லை சற்று குறைவாகவோ செல்வாக்கு கொண்டவர்கள்தான்.

ஆயினும் மலையாளத் திரையுலகைப் பொறுத்த வரை திலீப் ஒரு தாதா போன்ற அதிகாரத்தை கொண்டிருந்தார் என்றால் அது மிகையல்ல. “மலையாள சினிமாவின் சில தவறான முன்மாதிரிகள் திலீப்போடு ஆரம்பித்தன. அவரது படத்தில் யார் நாயகி, படக்குழுவினர் எவர் என்பதையெல்லாம் திலீப்தான் முடிவு செய்வார். இதை மலையாள திரையுலகில் ஆரம்பித்து வைத்தது அவர்தான்” என்கிறார் இயக்குநர் ராஜசேனன்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி திரையுலகில்தான் இதெல்லாம் எம்ஜிஆர், ராஜ்கபூர், ராமாராவ், ராஜ்குமார் காலத்திலேயே வந்துவிட்டன. எனினும் மலையாள சினிமாவின் வர்த்தகம் சற்றே சுருங்கியது என்பதால் இந்த மாதிராயான சூப்பர் ஸ்டார் துதிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். உலகமயமாக்கம் வந்த பிறகு வளைகுடா, இணைய சந்தைகள் உருவான பிறகு மலையாளமும் ஜோதியில் கலந்து விட்டது. எனினும் இதை துவக்கி வைத்தவர் என்ற முறையில் திலீப் இங்கே குறிப்பிடப்படுவதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

திலிப் அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மலையாள திரையுலகில் அவர் நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று அனைத்து பாத்திரங்களிலும் அடித்து விளையாடியதால் அவரது பிரபலத்தை வைத்து முழு திரையுலகையும் கட்டுப்படுத்தவோ, செல்வாக்கை கூட்டிக் கொள்ளவோ முயன்றார்.

அது வெறுமனே தலைமையை பிடிக்கும் தேர்தல் அல்ல. தொழிலில் யார் ஆதிக்கம் செய்வது என்ற ஏகபோக போட்டி. திரையரங்க வசூலில் தங்களது பங்கை அதிகரிக்க வேண்டுமென்று இவ்வாண்டு ஜனவரியில் வினியோகஸ்தர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, அதை முறியடிக்க திலீப் வினியோகஸ்தர்களுக்கான தனிச் சங்கத்தையே துவக்கி விட்டார். இது அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு  முன்பு நடந்தது.

மலையாள திரை நடிகர்களின் சங்கமான “அம்மா”வின் பொருளாளராக இருக்கும் திலீப், அச்சங்கத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவாராம். ஆரம்பத்தில் பாவனாவுக்கு நேர்ந்த குற்றம் குறித்து பேச்சு வருகையில் இந்த “அம்மா’ சங்கம் திலீப்புக்கு ஆதரவாக பத்திரிகையாளர் கூட்டம் நடத்தியது.

ஆக வெறும் நடிகர் என்று இல்லாமல் அனைத்தும் தழுவிய திரையுலக அதிகாரத்தை வளைக்கும் ‘சாமர்த்தியம்’ திலீப்புக்கு இருந்தது. அதன் பிறகு அவர் தனிப்பட்ட காரணங்களால் பாவனா மீது பகை கொண்டிருக்கிறார். அதில் வணிக, சொத்து காரணங்கள் கூட இருக்கலாம். எனினும் திலீப்போடு ஒப்பிடுகையில் பாவனா வெறும் நடிகர் மட்டுமே. அதுவும் பல நடிகைகளில் ஒருவர். காவ்யா மாதவன் கூட திலிப் சேர்ந்து கொண்டு மஞ்சு வாரியருக்கு துரோகமிழைக்கிறார் என்று பாவனாதான் மஞ்சுவிடம் தெரிவித்தார். அதனால் திலீப் பாவனா மீது ஜன்மப் பகை கொண்டார் என்று அனைவரும் எழுதுகின்றனர்.

பல்சர் சுனி

இவையெல்லாம் சில பொறிகள் மட்டுமே. ஏனெனினல் பாவனாவை பழிவாங்க திலீப் போட்ட திட்டம் போல மற்றவர் போட்டிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. “பல்சர் சுனி” எனும் கூலிப்படை ஆளை பல இலட்சங்களில் விலை பேசி, பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து, நிர்வாணமாக்கி படம் பிடித்து, பாவனாவின் திருமணத்தை நிறுத்துவது என்று மலையாள த்ரில்லர் படக்கதை போல போகிறது விசாரணை உண்மைகள்.

இந்த குற்றம் குறித்து போலீசின் சிறப்பு விசாரணைக் குழுவினர் அமைதியாக திலீப்பை வளைத்திருக்கின்றனர். பல்சர் சுனியோடு திலீப்பும், அவருக்கு நெருக்கமானவர்களும் பேசியது எல்லாம் ஆதாரங்களாக போலீசிடம் இருக்கின்றன. எனினும், ஒரு சதிவலையில் தன்னை சிக்கவைத்து விட்டனர் என்று திலீப் கைதுக்கு பிறகு கூறியிருக்கிறார்.

சற்றே புன்னகையுடன் அவர் காணப்படுவதால் விசாரணையோ இல்லை தீர்ப்போ முற்றிலும் திலீப்புக்கு எதிராகத்தான் வரும் என்று சொல்வதற்கில்லை. மேலதிகமாக குற்றம் நிகழ்த்தப்பட்ட பாவனா கூட நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு என்று அமெரிக்கா போல தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு.

திலீப்பின் குற்றத்தை ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் இழைத்த குற்றமாக கருதும் பலர், இதை பெண்ணிய நோக்கில் பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று வழமையான கருத்துக்களில் பார்க்கின்றனர். இவையெல்லம் இல்லாமல் இல்லை. ஆனால் இவையே பிரதானமாகவோ இல்லை அடிப்படையாகவோ இல்லை. பல்சர் சுனி எடுத்த வீடியோ பதிவு காய்வா மாதவன் நடத்தும் துணிக்கடையில் கொடுக்கப்பட்டது, காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயாருக்கும் குற்றத்தில் பங்கு இருக்கிறது, அவர்களும் கைது செய்ய்யப்படுவார்கள் என்பதை வைத்துப் பார்க்கும் போது இங்கே பெண்ணுக்கு குற்றமிழைத்த கூட்டத்தில் பெண்களும் இருக்கிறார்கள்.

அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்போர் செய்யும் குற்றங்களை அந்த அதிகார மட்டத்தை வைத்தே பரிசீலிக்க வேண்டும். மோனிகா லிவின்ஸ்கியோடு தவறாக நடந்து கொண்ட கிளிண்டன், அந்த பெண்ணுக்கு பெரிய வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். வெள்ளை மாளிகை எனப்படும் இந்த உலகிலேயே அதிக அதிகாரம் கொண்ட ஒரு கட்டிடத்தின்  தலைவனுக்கு ஒரு பணிப்பண்ணை ஏமாற்றுவது எவ்வளவு எளிது!

நீதிபதி கங்குலி, தெகல்கா தருண் தேஜ்பால், என்று பல வகைகளில் பார்த்தாலும் குறிப்பிட்ட துறைகளில் செல்வாக்கும் அதிகாரமும் இருப்போர் இத்தகைய குற்றங்களை திட்டம் போட்டு செய்கிறார்கள். அல்லது குற்றம் வெளியே வந்த பிறகு அதை சகஜமாக எதிர்கொண்டு தங்களது பெயரை காப்பாற்ற முனைகிறார்கள். இவர்களெல்லாம் வெறும் ஆண்கள் மட்டும் தானா?

இல்லை. திலீப்பின் கதையையே எடுத்துக் கொள்வோம். தொழிலாளர் உரிமைகளுக்கு பெயர் போன ஒரு மாநிலத்தில் திரைப்படம் தொடர்பான அனைத்து சங்கங்களையும் அவர் தீர்மானிக்கிறார். திரைப்படம் தொடர்பான வர்த்த்கம், வினியோகம், தயாரிப்பு போன்றவற்றில் அவர் இருக்கிறார். இவையெல்லாம் சேர்ந்து அவர் அத்துறையில் சக்கரவர்த்தி போல அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார். அவரது வர்த்தகத்தோடு தொடர்புடைய அந்த சங்கங்கள் அவரது தவறுகளை துறை ரீதியாக விசாரிக்க கூட இல்லை.

ஆகவே அவரை எதிர்ப்போர் மட்டுமல்ல, எதிர்க்கும்  சங்கங்களும் கூட வலுவலிழக்கின்றனர். எதிர்ப்போரை வீழ்த்துவது மட்டுமல்ல, எதிர்க்கும் சங்கங்களுக்கு போட்டியாக புதுச் சங்கங்களையே உருவாக்குகிறார். இப்பேற்றப்பட்ட நபர் பாவனாவை என்னவெல்லாம் செய்ய தீர்மானிகத்திருப்பார்?

சுருங்கச் சொன்னால் வர்த்தகம் தொரடர்பான முதலாளித்துவத் துறைகளில் இருப்போரை வழிநடத்துவது அல்லது பொறுப்பாக்குவது ஜனநாயகம் அல்ல. பணம் அல்லது வர்த்தகம். அவர் வெற்றிகரமான நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்பாதலேயே அவரது ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் ஏற்கப்படுகின்றன.

பாவனா பிரச்சினையில் ஆரம்பத்தில் திலீப்பை ஆதரித்த அம்மா நடிகர் சங்கம் இப்போது அவரை நீக்கியிருக்கிறது. திலீப் தன்னை எதிர்ப்போரை காலி செய்தது முன்னாடியே அம்மா சங்கத்திற்கு தெரியாமலா இருக்கும்? அகப்படாதவரை அவர் உத்தமர், அகப்பட்ட பிறகு அவர் குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வளவுதான். நாளைக்கே திலீப் விடுதலையானால் அம்மா அவரை இரண்டு பங்கு உச்சத்தில் கொண்டு போய் வைக்கும்.

தற்போது பெண் நடிகைகளுக்குஎன்று தனி அமைப்பெல்லாம் கேரளாவில் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் வர்த்தகம் கொலேச்சும் திரைத்துறையில் ஜனநாயகத்தை கொண்டு வர வழியில்லாத போது யாருக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

ஒரு சினிமா என்பது தயாரிப்பு, நடிகர் சம்பளம், இலாப பகிர்வு போன்றவற்றோடு சூதாட்டத்தையும் விஞ்சும் விதிகளோடு இயங்கும் துறை என்பதால் சூப்பர் ஸ்டார்களையோ இல்லை பெரும் முதலாளிகளையோ அங்கே எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

ஆரம்ப கால மலையாள சினிமா உலகில் நல்ல படங்கள் வந்தன, நல்ல படைப்பாளிகள் இருந்தனர், என்பதெல்லாம் பழங்கதையாக மாறியதற்கும் திலீப் ஒரு திரைத்துறை தாதாவாக மாறியதற்கும் பெரும் வேறுபாடு இல்லை.

மற்ற துறைகளைப் போலக் கூட சினிமாவைக் கட்டுப்படுத்த முடியாது என்றால் இங்கே திலீப்புகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

பசு பாதுகாவலர்களை எல்லைக்கு அனுப்புங்கள் – கேலிப்படம்

2

பசு பாதுகாவலர்களை எல்லைக்கு அனுப்புங்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே

அங்க யார அடிச்சி என்னத்த புடுங்குறது ஜி…

கேலிப்படம்: வேலன்

இணையுங்கள்:

தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு ! கேலிப்படம்

0

காசு…பணம்…துட்டு…மணி மணி…

செத்த மொழின்னா சும்மா பாடு…
செம்மொழின்னா துட்ட குடு…

தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு

கேலிப்படம்: வேலன்

இணையுங்கள்:

மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல் – கொதித்தெழும் விவசாயிகள்

1

சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாட்டு வியாபார்கள் சங்கப் பிரதிநிதிகள், தங்களது தொழிலில் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளையும், தற்போது புதியதாக வெளியிடப்பட்டிருக்கும் மத்திய அரசின் மாடு விற்பனைக்கான ஒழுங்குமுறை அரசாணையைத் தொடர்ந்து தமிழகத்தில் இத்தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் குறித்துப் பேசியுள்ளனர். இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை “ரெட் பிக்ஸ்” என்ற “யூ-டியூப்” சேனல் பதிவேற்றியுள்ளது.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மாட்டு வியாபாரிகளின் சங்கப் பிரதிநிதிகள், மத்திய அரசு வெளியிட்டுள்ள மாடு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை உபயோகித்து தமிழகத்தில் இந்துமுன்னணி, பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள் மாட்டு வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கிறார்கள். என்பதையும் இத்தொழிலில் ஆரம்பம் முதலே அரசு ஒழுங்குமுறைக்கான வழிவகைகள் எதையும் செய்து தராமல் இருப்பதையும் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். இந்த நேர்காணலின் சாராத்தை இங்கே தொகுத்திருக்கிறோம்.

டந்த மே மாதம் பாஜக அரசு மாட்டு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை வெளியிட்ட பின்னர், பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாமியார்கள், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்துமத அமைப்புகள், மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வியாபாரிகளின் மாடுகளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.

இதில் குறிப்பாக இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவைச் சேர்ந்தவர்கள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அரசாணை இத்தகைய கும்பல்களுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, மாட்டை பாதுகாப்பதற்காக அல்ல.

சமீபத்தில் பழனியில் ஒரு விவசாயி வீட்டிற்கு எடுத்துச் சென்ற மாட்டை வாகனத்தோடு மடக்கி போலீசு நிலையத்திற்கு ஒரு இந்து மதச் சாமியார் கொண்டு சென்றுள்ளார். இதே போல, கிருஷ்ணகிரி, பெருந்துறை எனப் பல இடங்களிலும் நடந்து வருகிறது.

மாடு பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கி வரும் இத்தகைய ரவுடிகளுக்கும், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் ஆதரவாக மாநில அரசும் மவுனம் சாதிக்கிறது.
தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசாணையால், சுமார் பத்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கே தண்ணீர் இன்றி கடும் பிரச்சினைக்குள் விவசாயிகள் சிக்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் எப்படி பால் கொடுப்பதை நிறுத்தி விட்ட மாடுகளைப் பாதுகாக்க முடியும்? பால் உற்பத்திக்கு புதிய மாடுகளை வாங்க வேண்டுமெனில், அவர்கள் பழைய மாடுகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லை. தற்போதைய சட்டத்தால் அவர்களால் உபயோகப்படாத மாடுகளை விற்க முடிவதில்லை.
அதே போல், ஆம்பூர், வாணியம்பாடி தோல் தொழிற்சாலை மற்றும் அது சார்ந்த தொழில்கள், மாதம் சுமார் 8000 கோடி பணம் ஈட்டக் கூடியவையாகும். அந்தத் தொழில்களும் இதனால் நசிந்து போயுள்ளது. மாட்டு எலும்பை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 இலட்சம் பேர் பாதிக்கப்படுவர்.
இந்த அரசாணை வெளியான பிறகு கடந்த 10 நாட்களாக போலீசும் வாகனங்களில் கால்நடைகளை ஏற்றக் கூடாது எனக் கெடுபிடி விதிக்கிறது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றக் கூடாது என்பது குறித்து பதிலேதும் கூறாமல், மொட்டையாக கலவரம் வரும் என்பதால் அனுமதிக்க முடியாது என்கிறது போலீசு. கலவரத்தைத் தடுப்பது தான் போலீசின் வேலை. அதை விட்டுவிட்டு, கலவரம் வரும் என்பதால் மாடுகளை வாகனங்களில் ஏற்றக் கூடாது என்று சொல்வது தான் போலீசின் வேலையா? அப்படியெனில் இந்த அரசு கலவரக்காரர்களுக்கு பயப்படும் அரசாக இருக்கிறதா?

கர்நாடகா, மே.வங்கம், கேரளம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இந்த அரசாணையைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி அவர்களோ அரசாணை வெளியிடப்பட்ட உடன் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கோரினால், அதனை முழுமையாகப் படிக்கவில்லை என்றார். அரசாணை வெளியிடப்பட்டு 2 மாதம் ஆகியும் இன்னமும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

மே மாதத்திற்குப் பின்னர் பல்வேறு இடங்களில் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இடைமறித்து போலீசு நிலையத்திற்கு இட்டுச் செல்கின்றனர். கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதியன்று, பொன்னேரியில் மாடு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்து காவல் நிலையத்திற்கு கொண்டு போய் 7 பேர் மீது வழக்கு தொடுத்து, 51 மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட மாடுகளை கோசாலைகளுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மாடுகளை மாநகராட்சி கோசாலைகளுக்கு அனுப்பாமல், தனியார் கோசாலைகளுக்கு அனுப்பினர். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது அங்கு கொண்டு போய் சேர்க்கப்பட்ட 51 மாடுகளில் 10 மாடுகள் இறந்து விட்டதாக தனியார் கோசாலை நடத்துபவர்கள் கூறுகின்றனர். குறுகிய காலகட்டத்தில் 10 மாடுகள் இறந்திருக்கின்றன என்றால், தனியார் கோசாலைகளில் மாடுகளின் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

தமிழகத்தில் பல்வேறு தனியார் கோசாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டேரியில் பல தனியார் கோசாலைகள் செயல்படுகின்றன. இராஜஸ்தானிலிருந்தும் இங்கு வந்து கோசாலைகள் நடத்துகிறார்கள். இவர்கள் மாடுகளை ஒழுங்காகப் பராமரிப்பது கிடையாது. கோசாலைகள் என்ற பெயரில் மாடுகளைக் கடத்தி விற்கிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் சுமார் பத்தாயிரம் மாடுகள் கோசாலைகளில் இறக்கின்றன என்று கூறுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், மாட்டு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கால்நடை இயக்குனரகம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் படி பறிமுதல் செய்யப்படும் மாடுகள் அரசாங்க கோசாலைகளுக்குத் தான் அனுப்பப்பட வேண்டும். ஆனால் அந்த விதிமுறை எப்போதுமே பின்பற்றப்படுவதில்லை.

பொதுவாக, மாடுகள் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்படுவதில் விதிமீறல்கள் குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறும் சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும். அவ்வழக்குகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றங்கள் மாடுகளை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கூறி உத்தரவிடுவர். வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் அரசாங்கக் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தால், அவை உடனடியாக திருப்பித் தரப்படுகின்றன. ஆனால் தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்ட மாடுகள் இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகச் சரித்திரம் இல்லை.

தனியார் கோசாலைகள், மாடுகளை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க நீதிமன்றங்கள் போடும் உத்தரவுக்கு முட்டுக்கட்டையாக, உடனடியாக வேறு ஒரு நீதிமன்றத்தில் தவறான தகவல்களைக் கூறி வேறு ஒரு வழக்கைப் போட்டு மாடுகளை ஒப்படைக்காமல் தப்பிவிடுகின்றன. இப்படிப்பட்ட பல மோசடியான வழக்குகள் இன்னமும் நிலுவையிலேயே உள்ளன. அதனால் தான் தனியார் கோசாலைகள் மூடப்பட வேண்டும் என மாட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாடுகளை ஏற்றிச் செல்ல அரசு அளித்துள்ள விதிமுறை மீறல்களுக்காக போலீசால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டால், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கடத்தப்பட்ட மாடுகள் பறிமுதல் என்று செய்திகளை வெளியிடுகின்றன. வெளிமாநிலங்களுக்கோ, உள்ளூரிலோ கொண்டு செல்லப்படும் மாடுகள் அனைத்தும் முறையான இரசீதோடு தான் கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறை மீறலுக்காக பறிமுதல் என்று எழுதாமல், மாட்டு வியாபாரிகளைக் கடத்தல்காரர்களைப் போல் சித்தரித்து ஊடகங்கள் எழுதுகின்றன. பணம் கொடுத்து வியாபாரிகள் வாங்கி வரும் மாடுகளை கோசாலை என்ற பெயரில் தடுத்து நிறுத்தி நீதிமன்ற வழக்குகளின் துணையோடு வியாபாரிகளிடம் இருந்து மாடுகளைப் பறித்துச் செல்லும், தனியார் கோசாலைகளே கடத்தல்காரர்கள்.

விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி, மாடுகளை ஏற்றிச் செல்வதற்கு அச்சட்டம் விவரிக்கின்ற நீளம், அகலம், உயரம் கொண்ட வாகனங்கள் இந்த நொடி வரையிலும் இந்தியாவில் எங்கும் உற்பத்தியிலோ, விற்பனையிலோ இல்லை. ஆனால் அப்படி ஒரு வாகனத்தில் தான் ஏற்றிச் செல்லவேண்டும் என சட்டம் சொல்கிறது. இதற்கு வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் கால்நடை இயக்குனரகம் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி 16 மாடுகளை ஒரு லாரியில் ஏற்றிச் செல்லலாம். என அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு நடைமுறையில் 16 மாடுகளை ஏற்றுவதை அனுமதிக்க மறுக்கிறார்கள். அந்த தீர்மானத்தை சட்டமாக்கவும் மறுக்கின்றார்கள்.

மாடுகளை லாரிகளில் ஏற்றிச் செல்லும் போது ‘ஓவர்லோடு’ கணக்குப் பார்த்து லாரிகளை பறிமுதல் செய்கிறார்கள். ஆனால் மனிதர்களின் போக்குவரத்திற்காக அரசாங்கம் இயக்குகிற பேருந்துகளில் சட்டப்படி 55 பேர் தான் பயணிக்க வேண்டும், ஆனால் அன்றாடம் நூற்றுக்கணக்கான பேர் தொங்கிக் கொண்டு போகிறார்கள். அவ்வாறு மக்களை அள்ளிச் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலோ, மற்ற தனியார் போக்குவரத்துகளின் மேலோ, இரயில்வேயின் மீதோ எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை.

கால்நடைகள் குறித்து ஒரு சட்டம் இயற்றுவதற்கு முன்னால், அது சம்பந்தப்பட்ட நபர்களிடம் (வியாபாரிகள், விவசாயிகள்) கருத்துக் கேட்டு, கலந்துரையாடி அதன் பின்னர் தானே சட்டம் இயற்றவேண்டும்? ஆனால் இங்கு அப்படி என்றுமே நடைபெறுவதில்லையெனில் இது என்ன ஜனநாயகமா அல்லது மன்னராட்சியா?
மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திடம் ஏற்கனவே மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் பின்வருமாரு:

  • போலீசு, வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவதற்கு விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
  • தமிழகத்தில் இருக்கும் தனியார் கோசாலைகளை இழுத்து மூட வேண்டும். மாநிலம் முழுவதும் தமிழக அரசே கோசாலைகளை நிறுவ வேண்டும். தனியார் கோசாலைகளில் இதுவரை இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையையும், நிலைமைகளையும் பெற்று தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்
  • கடந்த ஆண்டுகளில் தனியார் கோசாலைகளிடம் ஒப்படைக்கப்பட்ட மாடுகளை, விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.
  • மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
  • ஒரு மோட்டார் வாகனத்தில் 20 கால்நடைகள் வரை ஏற்றிச் செல்வதற்கு அனுமதியளித்து மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதியளிக்க வேண்டும்.
  • மாட்டை முன் வைத்து அரசியல் செய்யும் மதவாத அமைப்புகளை தமிழக அரசும் காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
  • கால்நடைச் சந்தைகளில் கால்நடைகளைப் பராமரிப்பதற்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்திருக்கும் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர், இதன் மீது அரசு கவனம் செலுத்தாவிட்டால், அடுத்தகட்டமாக தமிழகம் தழுவிய அளவில், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர்.

குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

6

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செய்தியாளர் ருப்ஸா சக்ரவர்த்தி, இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தில் மாமிச உணவு சாப்பிடுவதற்கு தான் பட்ட பாட்டை விவரிக்கிறார்.

மோடி பிரதமரானால் இந்தியாவையே குஜராத் ஆக்கிவிடுவார் என்றார்கள் சங்கிகள். குஜராத் ஆக்கிக் கொண்டுதான் இருக்கிறார் மோடி. முழுவதுமாக குஜராத் ஆனால் எப்படி இருக்கும்? இது ஒரு சாம்பிள்.

000

2014 மார்ச். சுட்டெரிக்கும் வெயில்.  பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத்தில், இளம் பத்திரிக்கையாளராக நான் கால் பதித்தேன். நகரம் இந்திய அரசியல் சூழலின் மையப்புள்ளியாய் மாறியிருந்தது,  அது இந்தியாவைப் புரட்டிப்போட்ட மக்களவைத் தேர்தல் நேரம். ஒரு இளம் பத்திரிகையாளராக    செய்தியறையின் அதீத பரபரப்பை நேரில் காண்பதென்பது  அத்துறையில் என்னை முன்னேற்றிக் கொள்ளக் கிடைத்த அருமையானதொரு வாய்ப்பு. எனக்குள் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.

ஆனால், என்னுடைய நாக்கில் குடிகொண்டிருந்த நாசமாய்ப்போன கறி தின்னும் ஆசை, என் மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடப்போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

மார்ச், 12, 2014. அன்றுதான் அகமதாபாத் நகரில் எனது முதல் நாள். கம்மியான வாடகைக்கு ஒரு அறை கிடைக்குமா என்று தேடி அலைவதில் அன்றைய பொழுது கழிந்தது.  கடைசியில், முஸ்லீம்கள் அதிகம் வாழும் வேஜல்பூருக்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியில் என்னுடைய பட்ஜெட்டுக்கு தோதான வாடகையில் ஒரு வீட்டைக் காட்டினார் தரகர்.  எனது புதிய அலுவலகத்திலிருந்து மிக அருகில் இருந்ததால் அந்த வீட்டை தெரிவு செய்தேன்.

வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுநாள் வந்தேன்.  கண்டிப்பான குரலில் கேள்விகளை அடுக்கத் தொடங்கினார் வீட்டின் உரிமையாளர். கல்யாணம் ஆகிவிட்டதா, குடிப்பழக்கம் உண்டா, என்ன படித்திருக்கிறாய், என்ன வேலை, நண்பர்களெல்லாம் எப்படி… ? ஒரு கேள்விக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த கேள்வி. இறுதியில் அவர்  கடைசியாக கேட்ட கேள்விக்கும் நான் பதிலளித்தேன். என் பதிலைக் கேட்டவுடன் அவர் முகம் மலர்ந்தது. முதன்முறையாக அவர் முகத்தில் புன்முறுவலைக் கண்டேன்.

என்ன மதம் என்று கேட்டார்.

நான் ஒரு இந்து, பிராமின் என்று பதிலளித்தேன்.

அப்போதுதான் அவர் புன்னகைத்தார். அதோடு சரி. அப்புறம் வேறு கேள்விகளே கிடையாது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் வாடகை ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார்.

குஜராத்தில் பார்ப்பனர்கள் பொதுவாக சைவ உணவுப் பேர்வழிகள்.  ஆனால் வங்காளத்திலோ அப்படியே தலைகீழ். மீன் தான் எங்கள் பிரதான உணவு.  தண்ணீர் இல்லாமல் கூட எங்களால் வாழ முடியும்: ஆனால் மாமிச உணவில்லாமல் முடியாது.  என் வீட்டு உரிமையாளருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

என் போதாத காலம், இங்கே பக்கத்துல  மீன் மார்க்கெட் எங்கே சார் இருக்கிறது என்று கேட்டு விட்டேன்.  உடனே அவரது முகம் வெளிறிப் போனது. கையில்  ஒப்பந்தப் பத்திரத்தைப் பிடித்தபடி, “நீ ப்ராமின் என்கிறாய். அப்படியானால் உனக்கு மீன் மார்க்கெட்டில் என்ன வேலை?” என்று கோபமாகக் கேட்டார்.

என் தவறு என்ன என்று மண்டையில் உரைத்து விட்டது. விளக்கம் கேட்பதற்கெல்லாம் அவர் தயாராக இல்லை. ஒப்பந்தம் ரத்து.

அதிருஷ்டவசமாக, அதே பகுதியில் அன்றைக்கே இன்னொரு வீட்டை தேடித் தந்தார் தரகர். இங்கே குழப்பமே கிடையாது. அசைவத்துக்கு அனுமதியில்லை என்ற தெளிவான முன் நிபந்தனையுடன்தான் அந்த இடம் கிடைத்தது.

முதலில் நடந்த சம்பவத்தைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அது ஏதோ ஒரு விதி விலக்கான நிகழ்வு என்றெண்ணி விட்டு விட்டேன். ஆறு மாதத்துக்குப் பின், என் சக ஊழியருடன் சேர்ந்து தங்க முடிவெடுத்தேன்,  அப்போது வேறு பகுதியில் ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்தேன்.

மீண்டும் அதே இக்கட்டான நிலைமை. ஆம், வீட்டு உரிமையாளரிடமிருந்து மீண்டும் அதே கேள்விகள் வர, நானும் அதே பதில்களைக் கூறினேன்.

“நான் ஒரு இந்து.”

“நான் ப்ராமின்.”

“நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன்.”

“நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன்.”

என் வாழ்க்கையில் முதல் முறையாக என் பெற்றோருக்கு நன்றி கூறினேன். அவர்கள் பார்ப்பன சாதியில் பிறந்திருக்கிறார்களே, அதற்காக.

புது வீட்டுக்கு குடிபோன பின்னர் தினமும் காலையில் அப்பகுதியிலுள்ள டீக்கடைக்குச் சென்று டீ குடிப்பது பழக்கமாகிப் போனது. அப்படியே கடைக்கார ரோடு கொஞ்சம் அரட்டை. ஒரு நாள் என்னுடைய கேள்வியின் விபரீதம் புரியாமல், பக்கத்தில் கறிக்கடை, மார்க்கெட் ஏதாவது இருக்கிறதா என்று அந்த டீக்கடைக்காரரிடம் கேட்டு விட்டேன். அவர் என் கேள்வியையோ காதில் போட்டுக் கொள்ளவில்லை. எனக்கு எரிச்சல் வரவே, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.

“கொஞ்சம் பொறும்மா, அந்தாள் போகட்டும்,,,, அப்புறம் சொல்றேன் ” என்று கிசுகிசுத்தார் கடைக்காரர்.  அந்த ‘அவர்’ யாரென்று  சுற்றிமுற்றிப் பார்த்தேன்.  சற்று தள்ளி 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் என்னை முறைத்த படி நின்றிருந்தார். என் கேள்வியை அவர் ஒட்டுக் கேட்டிருக்கிறார்.  அந்தாள், அருகிலுள்ள கோயிலின் அர்ச்சகராம். காலை நேரத்தில் இறைச்சி உண்பவரின் நிழலைக்கூட மிதிக்க மாட்டாராம். இந்த விசயம் அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது.

“நானும் ப்ராமின்தான், இப்போ அதுக்கென்ன” என்று கடைக்காரரிடம் அவசரமாகப் பதிலுரைத்தேன்.

22 மாத கால குஜராத் வாசத்தில், நாக்கை அடக்கி, அசைவ உணவின் மீதான என் ஆசையை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன்.  குடியிருக்கும் பகுதியிலுள்ள சூழலுக்கு பயந்து, வீட்டிலும் அசைவம் சமைப்பதில்லை. வெளியிலிருந்து வரவழைத்தும் சாப்பிடுவதில்லை. அதற்கு நாங்கள் துணியவில்லை. நல்ல வேளையாக, என்னுடைய ரூம் மேட்டும் தீவிர அசைவ உணவுப் பிரியை. எனவே, அவ்வப்போது இருவரும் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பத்தியார் கலிக்கு சென்று விடுவோம். அது அகமதாபாதில் சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற பகுதி. அசைவ உணவுக்கு அதுதான் மையம். அலுவலகத்தில் மற்ற ஊழியர்களையும் அசைவ ஆசை பிடித்தாட்டுவதை தெரிந்து கொண்டேன். பிராமினாக இருந்து கொண்டு அசைவ உணவை எப்படி விரும்பலாம் என்று யாரும் என்னை ஒரு அருவெறுப்பு பார்வை பார்க்கவில்லை. தங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, நான் அசைவ உணவு உண்பதை இயல்பாக அங்கீகரித்தனர்.

2012 ல், உயர்கல்விக்காக கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு வந்து 3 வருடங்கள் தங்கியிருந்தேன். அங்கு எனது பார்ப்பன அடையாளத்தை பயன்படுத்த வேண்டிய தேவையோ அசைவ உணவு சாப்பிட மாட்டேன் என்று பொய் சொல்லவேண்டிய தேவையோ ஏற்படவில்லை. கொல்கத்தா,  பெங்களூரு அல்லது மற்ற நகரங்களில் அகமதாபாத்தில் நடந்ததைப் போன்ற  சம்பவங்களே நடப்பதில்லை என்று நான் சொல்லவில்லை.  அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் வேறெங்கும் ஏற்படவில்லை.

ஒவ்வொரு புதிய நகரத்திலும், இந்தியன் எனப்படுபவன் புதுப்புது விதங்களில்  வகைப்படுத்தப் படுவதை நான் காண்கிறேன். கொல்கத்தாவைப் பொருத்தவரை, அரசியல் ஈடுபாடு உள்ள இந்தியர்கள், மற்றும் அரசியலற்ற இந்தியர்கள். பெங்களூருவில், வட இந்தியர்கள் அல்லது தென்னிந்தியர்கள் என்ற வகைப்பாடு. ஆனால், குஜராத்தில் தான் சைவ உணவு சாப்பிடும் இந்தியர்கள் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்கள்  என்ற புதியதொரு பிரிவினையை நான் தெரிந்து கொண்டேன்.

மாட்டுக்கறி உண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 50 வயது மனிதர் ஒருவர்,  மதத்தின் பெயரால், தாத்ரியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழும் வரை, எனக்கு ஏற்பட்ட குஜராத் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அசைவ உணவு ஒருவரை மதமற்றவராக்குகிறதா?  நான் ப்ராமின் தான். எனினும், மட்டன் கீமா, சில்லி சிக்கன், மீன் வறுவல் மற்றும் மாட்டின் கால் போன்றவைகளை  சாப்பிட எனக்குப் பிடித்திருக்கிறது. அதனாலென்ன?

இத்தகைய வகைப்பாடுகளும் பிரிவினைகளும் நமக்குள் ஊறியிருக்கின்றன. அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்தில் வீடு கிடைக்காமல் திண்டாடும் ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதற்கும், ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கும் தயங்காத அளவுக்கு நம்முள் ஊறியிருக்கின்றன. 

பல்வேறு சாதிகளாகவும் மதங்களாகவும் இந்தியா ஏற்கனவே பிளவுண்டு கிடக்கிறது. கூடுதலாக, உணவின் அடிப்படையில் இன்னொரு பிரிவினையையும் சேர்த்துக் கொள்வது அவசியம்தானா?

நன்றி: ரூப்ஸா சக்ரவர்த்தி, யூத் கி ஆவாஸ் இணையதளத்தில், 5.11.2015 அன்று வெளியான கட்டுரை.
I’m A Non-Veg Brahmin And Here’s Why I Never Dared To Bring Meat In My Gujarat Home
மொழியாக்கம்: சங்கரி.

இந்துத்துவாவை கொத்து புரோட்டா போடும் தமிழ் ஃபேஸ்புக் !

23

எஸ்.வி.சேகருக்கு மட்டுமல்ல, இந்துத்துவத்திற்கும் போதாத காலமிது. மயிலாப்பூர் மாமாக்களின் அரட்டைகளை வைத்து சபா நாடகம் என்றொரு மொக்கை பூமியில் துட்டு பார்த்த சேகர் அம்மா கட்சியில் இருந்து கடைசியில் தனது தாய்க்கட்சியான பாஜகவில் சேர்ந்தாலும் சேர்ந்தார். பிறகென்ன, தமிழக பாஜகவை வச்சு செய்வதற்கு அன்னார் பெரும்பாடு படுகிறார்.

அவரால் எளிமையான அண்ணாச்சி என்று புகழப்பட்ட தாது மணற்கொள்ளையர் வைகுண்டராசன், மல்லையா – ஜெயாவின் சாராய ஆலைகள், அதானியின் புறம்போக்கு வளைப்புக்கள், பாஜக தலைவர்களின் கசமுசா சமாச்சாரங்கள் போன்ற பதக்கங்களை குத்தியிருக்கும் சேகர், இவ்வகை ஊழல்களை வைத்து திராவிடம் என்றால் என்ன என்று விளக்கியிருந்தார். அதில் திராவிட இயக்கத்தின் பெயரில் ஓட்டுக் கட்சி ஊழல்களை பட்டியலிட்டிருந்தார். இந்த ஊழலில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதே பாஜகதான் என்பது அந்த முகரக்கட்டைக்கு தெரியவில்லை.

பிறகென்ன? தமிழ் ஃபேஸ்புக் மக்கள் #இந்துத்துவா ஹேஷ்டேக் போட்டு, சேகரை கதறக் கதற குதறி எடுத்து விட்டார்கள். அந்த சுவையான கொத்துப்புரோட்டாவை உங்களுக்காக சூடாக பரிமாறுகிறோம்.சுவைத்துப் பாருங்கள்! பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிருங்கள்! குறையிருந்தால் சொல்லுங்கள், நம் மக்கள் அடுத்த பந்தியில் இன்னும் சுவையைக் கூட்டுவார்கள்!

_______________________________

LR Jagadheesan

அம்மன் #திராவிடம்
அம்பாள் #இந்துத்வா

எம் எஸ் சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் #இந்துத்வா
எல் ஆர் ஈஸ்வரியின் செல்லாத்தா #திராவிடம்

பஞ்சகச்சம்; பஞ்ச கவ்யம் #இந்துத்வா
லுங்கி, மாட்டுக்கறி பிரியாணி #திராவிடம்

மதுரைவீரனை வாசல்படிக்கு வெளியே நிறுத்தி வைத்தது #இந்துத்துவா
அவன் பேரன் பேத்திகளுக்கு இடஒதுக்கீடளித்து இணைத்துக்கொண்டது #திராவிடம்

நாராயணனை மோகித்த நாரதனை அலியாக்கி அவமதித்தது #இந்துத்துவா
அலியை அரவாணியாக்கி பின் திருநங்கையாக கொஞ்சி மகிழ்ந்தது #திராவிடம்

“பிரம்மனின் உடலுக்கு வெளியே பிறந்தவர் (?!) பஞ்சமர் என்றும் அவரை பார்த்தாலே தீட்டென்றும், தொட்டால் இழுக்கென்றும் தள்ளிவைத்தது #இந்துத்துவா
திராவிடருக்கெல்லாம் ஆதிதிராவிடர் அவர்களென உரிமைகொண்டாடியது #திராவிடம்.

பெண்களுக்கு பொட்டுகட்டி பொதுமகளிராக்கியது #இந்துத்துவா
தேவதாசிகளையே அடியோடு ஒழித்து எல்லா பெண்களுக்கும் சொத்தில் சரிபாதி உரிமையை சட்டப்படி அளித்தது #திராவிடம்

தமிழ் ஒரு நீசபாஷை என கேலிபேசியது #இந்துத்துவா
உலக செம்மொழிகளில் தமிழும் ஒன்றென நிலைநாட்டி நிறுவியது #திராவிடம்

சகோதரனையும் சடுதியில் கொல் என்ற கீதையை வேதம் என்றது #இந்துத்துவா
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழரின் வாழ்நெறி என்றது #திராவிடம்

வாளோடு இந்தியாவுக்குள் வந்தமதம் இஸ்லாம் என்றது #இந்துத்வா
திரைகடலோடிய தமிழனோடு வந்த திரவியங்களில் அதுவும் ஒன்றென்றது #திராவிடம்

கற்பிக்காத கல்விக்குக்கூட கட்டைவிரலை காணிக்கை கேட்டது #இந்துத்வா
எல்லோருக்கும் உணவுடன் கூடிய இலவசக்கல்வியளித்தது #திராவிடம்

சிவனின் தொலைதூர தரிசனம் கோரி வந்த நந்தனை உயிரோடு எரித்துக்கொன்றது #இந்துத்வா
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டமியற்றியது #திராவிடம்

தம்மைத்தவிர மற்ற அனைவரையும் தள்ளிவைக்கும் அக்கிரஹாரங்களை உருவாக்கியது #இந்துத்வா
எல்லா ஜாதிக்காரர்களும் சேர்ந்து வாழும் சமத்துவபுரங்களை அரசு செலவில் உருவாக்கியது #திராவிடம்

பேரிலிருந்தும் ஊரிலிருந்தும் ஜாதியை விரட்ட பாடுபட்டது #திராவிடம்
கருவறை துவங்கி கல்லறை வரை ஜாதியை பாதுகாக்க பாடுபடுவது #இந்துத்வா

ராமராஜ்ஜிய கனவுகண்ட காந்தியையே சுட்டுக்கொன்றது #இந்துத்வா
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் காந்திதேசமென பெயரிடச்சொன்னது #திராவிடம்

உடன்கட்டையை ஊக்குவிக்கச்சொன்னது #இந்துத்வா
கைம்பெண் மறுமணத்துக்காக ஓங்கிக்குரல் கொடுத்தது #திராவிடம்

இறைவனுக்கு சமஸ்கிருதம்; இசைக்கு தெலுங்கு; இந்தியாவுக்கு இந்தி என்றது #இந்துத்வா
இறைக்கும் இசைக்கும் தமிழ்; இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகுக்கும் ஆங்கிலம் என்றது #திராவிடம்

******

Thameem Tantra

இந்துத்துவம் என்றால் என்ன ?

இனிமே திருட்டுத்தனமா திங்க முடியாது என்பதற்காக முட்டையை வெஜிடேரியனில் சேர்த்தது, #இந்துத்துவா !

சைக்கிள்ல ஏன்டா லைட் எரியலனு கேட்டா, பின்னாடி ஒருத்தன் சைக்கிலே இல்லாம வர்ரான் அவன கேட்டையா என்பது #இந்துத்துவா !

தனக்கு மூத்திரம் குடிக்க புடிச்சிருக்கு என்பதற்காக, மூத்திரத்துல ஷக்தி இருக்கு என்று சொல்வது #இந்துத்துவா !

இந்தியாவிற்கு முகலாயர்கள் வந்தபோது கவ்பாய்யாகவும் மிஷன்னறிகள் வந்தபோது அவர்களுடன் doggy செய்தது #இந்துத்துவா !

சாராய புரோக்கர் மாமா சோ ராமசாமிதான் என் குருநாதர் என்று சொல்வது, அவர் செத்தவுடன் நாந்தான் அடுத்த மாமா என்று தன்னை தானே நினைத்துக்கொள்வதுதான் #இந்துத்துவா !

மாட்டுக்காக மனிதனை கொலை செய்தால் மூடிக்கொண்டு இருந்துகொண்டு , பாஜக அல்லாத எந்த கட்சி ஊழல் செய்தது என்ற செய்து கேட்டால் கூட ஐயோ பெருமாளே, நாடு எங்க போகுதுதன்னு தன் கணபதி பேக்கரியில் புலம்புவது #இந்துத்துவா !

தான் சார்ந்திருக்கும் காவி கொள்கையை வெளிய வெளிப்படையாக சொல்ல கூச்ச பட்டுக்கொண்டு, டே ஏன்டா மாப் மெண்டாலிட்டியில் இருக்கீங்கோவ், போய் வாழ்க்கையை பாருங்கோ என்று நமக்கு இன்பாக்ஸில் வெண்ண வெட்டி அட்வைஸ் செய்வது #இந்துத்துவா !

நச்சுனு பூணுல் போட்டு ஆவணி ஐட்டம் கொண்டாடிவிட்டு, எதுக்கு தேவை இல்லாம ஜாதி பேசறீங்கோ ? என்று வெக்கமே இல்லாமல் உளறுவது #இந்துத்துவா !

All Saffron Terrorists are Brahmins,
But not all Brahmins are Saffron Terrorists.
#spreadlove #PlsdontGeneralize #plspls #plspa #இந்துத்துவா !

தன் குடும்ப குலத்தொழிலான சாராய புரோக்கர் தொழிலலை கொண்டு தானும் தன் இறுதி மூச்சுவரை சாராய புரோக்கர்ராகவே வாழ்ந்த சோ ராமசாமிக்கு பத்மா புருஷன் விருது வழங்குவது #இந்துத்துவா !

தன் குடும்ப குலத்தொழிலான சாராய புரோக்கர் தொழிலலை கொண்டு தானும் தன் இறுதி மூச்சுவரை சாராய புரோக்கர்ராகவே வாழ்ந்த சோ ராமசாமிக்கு பத்மா புருஷன் விருது வழங்குவது #இந்துத்துவா !

சாஸ்தரம் ,கோத்திரம் அண்ட் மூத்திரம் is #இந்துத்துவா !

facebook description ல tambrahm, பில்டர் காப்பி addict,இங்கிலிஷ்ல caffeine addict, தச்சி மம்மு, பப்பு சாதம் is #இந்துத்துவா !

நீங்க ஏன் offend ஆறேல் ? நீங்களும் சாதி பேரு போட்டுக்கோங்கோ is #இந்துத்துவா !

மாட்டு ரத்தத்தை நெய்யாக உறுஞ்சி, மூத்திரத்தை சைடு டிஷ்சாக குடித்துவிட்டு, மூத்திர போதையில் மாடுதான் அம்மா என்று உளறுவது #இந்துத்துவா !

போட்டோஷாப்லையே வாழ்ந்து , இன்னமும் சீனாவை குஜராத்தாக நம்புவது #இந்துத்துவா !

Fake ID is #இந்துத்துவா !

******

Yuvan Swang
சிம்பிளா சொல்லனும்னா நீ என்னதான் கஷ்டப்பட்டு எவ்வளவு உயரத்துக்கு வந்தாலும் நீ துவங்கிய இடத்துக்கே உன்னை கொண்டு செல்ல காத்திருக்கும் பரமபத பாம்புதான் #இந்துத்துவா.

நீயும் நானும் ஒரே பைக்கில் போய் அடிபட்டு செத்தாலும் ஒரே மார்ச்சுவரியில் போஸ்ட்மார்ட்டம் செய்தாலும் உன் பொணத்தையும் என் பொணத்தையும் தனித்தனி சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வது #இந்துத்துவா.

Prakash JP
#இந்துத்துவா பார்பனீயம்ன்னா என்ன??

உள்நாட்டுல மாட்டுக்கறிய எதிர்த்துட்டு, மாட்டு கறியா வெளுத்து கட்டுற அமெரிக்கா, ஐரோப்பாவுல படிப்புக்கும், வேலைக்கும், தொழில் முதலீடுகளுக்கும் லைன் கட்டி, கையேந்தி நிற்பது… மாட்டுக்கறி சாப்பிடுறவுங்க கண்டுபிடிச்ச தொழில்நுட்ப வசதிகள வெக்கம்மே இல்லாம பயன்படுத்துவது..

Rajarajan RJ
#இந்துத்துவா னா என்ன அண்ணே? புருசன் செத்தா பெண்டாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து உடன்கட்டை ஏத்திவிட்டுறது!

Babu Shanthi
#இந்துத்துவா னா என்னவோய் ?

தேசத் தந்தைய கொன்னவனுக்கு சிலை வைக்க சொல்றவாளும்…
பசுவை கொல்ல கூடாதுன்னு சொல்லிண்டு, பிரியானி அண்டாவ திருடுறவாளும் தான்வோய் இந்துத்துவா…

Thananjayan Venkatraman
எதுக்காக பிரச்சினை பண்ணுதுனு நேரடியா சொல்லாது, பார்டருக்கு போ, பாகிஸ்தானுக்கு போனு சம்பந்தமில்லாம உளரும்.#இந்துத்துவா

Parimala Rajan
கொலை செய்த கோட்வுக்கு சிலை, கொலை செய்யப்பட்ட காந்திக்கு மாலை ! #இந்துத்துவா.

********

வாசுகி பாஸ்கர்…

* நையா பைசா வாங்காமல் பார்ப்பனருக்கு bouncer ஆ தன்னை அர்ப்பணித்த அடிமை இந்துத்துவா

* ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்க முடியுமா என அம்பேத்கர் கேட்ட போது, “நீ மதமே மாறிக்கோ” என மௌனம் காத்தது இந்துத்துவா

* சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்துத்துவா

* பெண்ணுக்கு சொத்தில் பங்கு கொடுத்த போது பெண்கள் சீரழிந்து விடுவார்கள் என்று சொன்ன சாடிஸ்ட்டை சாமியாக வணங்கும் கூட்டம் இந்துத்துவா

* இந்தியாவில் ஒரே ஒரு பணிக்கு மட்டும் “நீ பிறப்பெடுத்து வர வேண்டும்” என்பது இந்துத்துவா

* இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை விழுங்கி செரித்தது இந்துத்துவா

* அடிமைத்தனத்தை புன்முறுவலோடு ஏற்கச்செய்தது இந்துத்துவா

* மாதவிடாய் ரத்தத்தில் பிறந்து அந்த ரத்தத்தையே தீட்டு என்றது இந்துத்துவா

* கோவிலுக்கு வெளியே வாங்கினால் பிச்சை, உள்ளே வாங்கினால் “தட்சணை” என்று கௌரவ பிச்சை எடுப்பது இந்துத்துவா

* உணவு உடை மொழி என அனைத்தையுமே அரசியலாக்கியது #இந்துத்துவா

******

Vel Kumar
மணியாட்ட மெஷின் கண்டுபிடிப்பானுங்க!மலம் அள்ள மனுஷன அனுப்புவானுங்க..!#இந்துத்துவா

********

Shanmugapriyan Sivakumar

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணா ?…

பனியா பொருளுதவியில் ஆர்யப்பார்ப்பண கருத்திற்கு அதிகாரத்தின் ஆணிவேரான உளவுத்துறை வழிகாட்டலில் சூத்தராள்ஸ் அடிதடி போன்ற அடிமை சேவகம் செய்யுறது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணா ?…

கருவறைக்குள் சென்று நம்மை சாமி கும்பிட முடியாத நிலையில் வெளியே வைத்திருப்பதும்
கருவறைக்குள் சென்று சாமி சிலையில் காண்டத்தை வைத்து சல்லாபம் செய்ய அய்யர் தேவநாதனை அனுமதித்திருப்பதும் தானம்மா …

இனவழிப்பாளனை தான் செய்த இன அழிப்பின் பரிசாக பிரதமராக்குவற்கு பெயர் தான்

#இந்துத்துவா என்றால் காமக்கொடூரனை ஜெகத்குரு என்றும்
கஞ்சாவியாபாரியை சத்குரு என்றும் சொல்வதாகும் !…

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

இவ்வளவு காரித்துப்புகளையும் முகத்தில் வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் பொது மக்கள் ஏமாறுவார்களா !? என எதிர்ப்பார்த்து கொண்டே நின்றிருந்து “Hinthuva or Hinthuism is not a religion its a way of life” நல்ல ஆங்கிலத்தில் திரும்ப ஏமாற்ற வருவது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

சமஸ்கிருதத்தை தேவபாஷைன்னும் தமிழை நீசபாஷன்னும் சொல்லி அலைஞ்சி திரிஞ்சிட்டு அரசியல் புழப்புக்காக இன்னிக்கு தமிழ் தமிழன்னு சொல்லிக்கிட்டு வர மைலாப்பூர் மாமாக்கள் தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

இராப்பகலு பாக்காம கஷ்ட்டப்பட்டு படுச்சி நல்ல மார்க் வாங்கி IIT ல IIM ல இட ஒதுக்கீட்டில் படிக்கப்போன நம்ம வூட்டு புள்ளைங்கள பிணமா வீட்டுக்கு திருப்பி அனுப்புறது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

உனக்கும் எனக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை தனதாக்கிக் கொண்டு உன்னையும் என்னையும் சூத்திர பஞ்சமராய் பிரித்து ஆளுறது பெயரு தாம்மா

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

சாமியார்கள் + மடங்கள் + சல்லாபம் + கொலை + கொள்ளை + அரசியல் அதிகாரம் + ஆரியப்பார்ப்பணீயம் + உளவுத்துறை + வஞ்சம் + ஊடக லாபி + தரகு முதலாளித்துவம் இது தாம்மா .

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

குண்டு போட்ட சங் பரிவார இந்து சாங்கி பெண் சாமியாரை விடுதலை செய்துவிட்டு சகோதரன் செய்த குற்றத்திற்கு முஸ்லிம் என்ற காரணத்திற்காக தம்பி மேமனை தூக்கில் போடுவது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

ஆரிய பூமி என்ற பொய் புரட்டு கதைகள் வெளியாகிடும் என்கிற பயத்தில் தொல் தமிழர் வரலாறான சிந்து சமவெளி நாகரீகத்தை ஆதிச்சநல்லூர் புதைப் பொருட்களை மதுரை கீழடி நாகரீகத்தை அதன் தொண்மையை மூடி மறைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வரும் வந்தேறி மனப்பான்மை தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் எதிர்ப்பு போராட்டம் செய்த கூட்டத்தில் தலையைக் காட்டிய காரணத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பொழுது “மன்னித்துக்கொள்ளுங்கள் மேன்மைத் தாங்கிய ராணி அவர்களே !…” என்று கடிதம் எழுதிவிட்டு சிறையில் இருந்து வெளியாகி விடுதலைக்கு போராடியவர்களை காட்டிக்கொடுத்துவிட்டு “நாங்கல்லா அந்த காலத்துல சுதந்திர போராட்டத்துல வெள்ளைக்காரனை எதிர்த்து …” அப்படினு இப்போ வீரவணம் பேசிக்கிட்டு திரியுறது தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

சக்தி – லக்ஷ்மி – சரஸ்வதி என்று பெண்களை தெய்வமாக புமாதேவி என்று பூமியை கங்கை – காவிரி – கோதாவரி என்று நதிகளை சமுத்திரா தேவி என்று கடலை பாரத மாத என்று தாய் நாட்டை வணங்கும் மதம் என்று சொல்லிக்கொண்டு அம்மதத்தின் தலைமை மட்டமான “காஞ்சி சங்கர மட”த்தில் அபலைப் பெண்களை அவமதிக்கும் வன்புணர்வு செய்யும் ஆதிக்க அதிகாரம் அநீதி தாம்மா…

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

“ஹிந்து கடவுள்” மநு தர்மத்தில் சொன்னபடி பெண்களை அதிகாரத்தை கைப்பற்ற ஆண்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் அஃற்றிணை உயிராக தேவைக்கான போகப்பொருளாகவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்தும் பெண்ணடிமைத்தனம் தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

குண்டிக்கழுவ தண்ணீரும் குடிக்கக் கஞ்சியும் அற்ற வக்கற்ற நிலையில் தமது மக்களை நிற்க வைத்துவிட்டு இராமருக்கு கோவிலும் படேலுக்கு சிலையும் வைக்க நிதி ஒதுக்கி வல்லரசு கனவு காணும் நிலை தாம்மா …

#இந்துத்துவா ன்னா என்னா அண்ணே?…

காலம் முழுதும் எதிர்த்து நின்ற சித்தர்களை புத்தர்களை சமணர்களை வெட்கமே இல்லாமல் ஹிந்துத்துவ மஹான்கள் என்று புளுகி திரிகிறது தாம்மா …

***********

ஞானக் கிறுக்கன்

இந்து மதத்தில் தீன்டாமை இல்லை #இந்துத்துவா

அப்புறம் என்ன கூந்தலுக்கு பொன்னார் கிழே உட்கார்ந்து இருக்காரு இதற்கு என்ன விளக்கம் கொடுக்க போறிங்க #காவி_டவுசர்ஸ்…

கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !

0

மார்க்ஸ் பிறந்தார் – 8
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

4. “உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்”
ஆ) கார்ல் மார்க்ஸ் புறப்பட்ட பாதையின் தவிர்க்க முடியாத தர்க்கவியல் இதுவே

வினவு குறிப்பு: இந்த அத்தியாத்தில் கார்ல் மார்க்சின் அங்கதம் கருக் கொண்ட காலத்தினை ஆய்வு செய்கிறோம். சோம்பேறிகள் உழைப்பாளிகளை விமரிசிப்பதற்கும் சோம்பேறித்தனம் கொண்டதால் “இவனையெல்லாம் பேசி என்ன பயன்?” என்று ஒதுங்கிக் கொண்டது போலவே அற்பவாதிகள் பல்வேறு துறைகளிலும் ஆர்ப்பாட்டமாக தோன்றுகின்றனர். உண்மையை நோக்கும் பாதையிலும், பதர்களாக தடுக்கும் அற்பவாதிகளை விமரிசிப்பதிலும் உயர்தரம் கொண்ட அங்கதம் மார்க்சிடம் தோன்றுகிறது. அற்பவாதத்தில் முதன்மையான பலவற்றில் கடவுளும் மதமும் ஒன்று. யதார்த்தம் பற்றிய ஆய்வும் விமரிசனமும் செய்யும் எவரும் கடவுளை கேள்வி கேட்காமல் கடக்க முடியாது. இங்கே கார்ல் மார்க்ஸ் தனது கவிதைகளில் கேட்கிறார். மார்க்சின் அங்கதம் எழுத்தில் மட்டுமல்ல, அவரோடு பழகிய நண்பர்கள் பலரும் மார்க்சின் நகைச்சுவை வாதங்களை சிரித்துக் கொண்டே கேட்ட இனிமையான காலங்களை நினைவு கூர்கிறார்கள். படித்துப் பாருங்கள்!

பிற்காலத்தில் மார்க்ஸ் எழுதிய லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் என்ற புத்தகத்தில் இளமைப் பருவத்தில் தன்னிடம் தோன்றிய அங்கதச் சித்திரத்துக்குத் திரும்புகிறார்: “உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன; மாபெரும் தலைவர்களும் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள் என்று ஹெகல் எழுதியுள்ளார். அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பத்தில் சோகக் கதையாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார். டன்டோனுக்குப் பதிலாகக் கொஸிடியேர் ரொபெஸ்பியேருக்குப் பதிலாக லுயீ பிளாங்; 1793ம் வருட முதல் 1795ம் வருடம் முடிய இருந்த மலைக் கட்சிக்குப் பதிலாக 1848-51ம் வருடத்திய மலைக் கட்சி; மாமனுக்குப் பதிலாக மருமகன். புரூமேர் பதினெட்டின் இரண்டாம் பதிப்பை ஒட்டிய சந்தர்ப்பங்களிலும் அதே கேலிச்சித்திரம் தோன்றுகிறது.”(1)

அற்பவாதி எப்பொழுதும் மூலச்சித்திரத்தைக் காட்டிலும் கேலிச்சித்திரத்தையே விரும்புகிறார். புயற்காற்று அவருக்குப் பீதியைக் கொடுக்கிறது; ஆனால் அதற்குப் பிறகு மிஞ்சுகின்ற புழுதி அவரிடம் குதூகலத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறுபடியும் எல்லாவற்றையும் “முறைப்படி செய்யத்” தொடங்குகிறார்; புயல் முழுவதையும் புத்தகங்களில் அடைத்து விட வேண்டும், அதை வாங்கிப் படிக்க ஆள் சுலபமாகக் கிடைக்கும். இளம் மார்க்ஸ் தன்னுடைய அங்கதச் செய்யுளில் இந்தக் கருத்துக்கு அடிக்கடித் திரும்புகிறார்.

ஜெர்மானியர்கள் மெய்யாகவே கிளர்ந்தெழுந்தார்கள்;
மக்கள் வெற்றி ஓங்கியது.
எல்லாம் முடிந்த பிறகு ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மூலையிலும் அறிவிப்பைப் படித்தனர்.

“அதிசயங்கள் நடைபெறப் போகின்றன-
எல்லோருக்கும் இரண்டுக்குப் பதில்
மூன்று கால்கள் முளைக்கும்!”
செய்தி அவர்களைக் கலக்கியது,
ஆழ்ந்த வருத்தம் மேவியது:
“ஒரு நொடியில் அதிகம் செய்துவிட்டோம்,
நாம் மறுபடியும் ஒழுங்காக நடக்க வேண்டும்.
மற்றவற்றை அச்சிட்டு வெளியிடுவோம்,
வாங்கிப் படிக்க ஆளா இல்லை!’’(2)

இந்த நூல்களில் இளைஞரான மார்க்ஸ் தன்னுடைய அரசியல் உணர்ச்சிகளை வெளியிடுகிறார். பிற்போக்குவாதத்தைச் சகித்துக் கொள்ள மறுத்தல், புரட்சிப் புயல் மற்றும் மக்களின் வெற்றி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கோழைத்தனம் மற்றும் அரசியல் அக்கறையின்மையைப் பற்றி அவருடைய விமர்சனம், புத்தகங்களில்-வாழ்க்கையில் அல்ல-புரட்சியை ஏற்படுத்துவதில் ஜெர்மானியர்களின் குறிப்பிடத்தக்க திறமையைப் பற்றி அவருடைய கிண்டல் ஆகியவற்றை இவற்றில் காண்கிறோம்.

கேதே

மார்க்சின் தொட்டிலில் கலைத் தேவதைகள் வளமான பரிசுகளை வைத்தனர்; ஆனால் கவித்திறமை அவற்றில் இல்லை என்று ஃப்ரான்ஸ் மேரிங் கூறுவது முற்றிலும் சரியல்ல. மார்க்சின் கவிதைகளில் பல மற்றவர்களைப் பின்பற்றி எழுதப்பட்டவை என்றாலும், அவை பொதுப்படையாகவும் தெளிவில்லாமலும் இருக்கின்றன என்று மார்க்சே கருதியபோதிலும் “வெகு தொலைவிலுள்ள தேவதையின் அரண்மனையைப் போலப்” பளிச்சிடுகின்ற கவிதைத் துணுக்குகளைக் கொண்டிருக்கின்றன. “இனிய, என்றும் அன்பு நிறைந்த” ஜென்னிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தன்னுணர்ச்சிக் கவிதைகளிலும், குறிப்பாக அவருடைய சிந்தனைத் திறனும் கோப உணர்ச்சியும் வெளிப்பட்ட அங்கதக் கவிதைகளிலும் இவை உள்ளன. அவருடைய ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளில் ஷீல்லரின் உணர்ச்சிக் கனிவான புத்தார்வவாதத்தின் தாக்கம் இருந்தது என்றால் அவருடைய பிற்காலக் கவிதைகளில் கேதே மற்றும் சிறப்பாக ஹேய்னெயின் முத்திரைகள் இருக்கின்றன.

அற்பவாதியின் ஆன்மிக ஆசிரியர்களான மதகுருக்களின் போலியான கூற்றுக்களை மார்க்ஸ் கூர்மையாகக் கிண்டல் செய்கிறார். லூதர்வாத மரபைச் சேர்ந்த புஸ்ட்குஹென் என்ற போதகர் 1820க்களில் கேதேயின் வில்ஹெல்ம் மேய்ஸ்டர் என்ற நாவலை நையாண்டி செய்து ஒரு புத்தகம் எழுதினார். அந்த மாபெரும் ஜெர்மானியக் கவிஞருடைய நூல் “ஒழுக்கக்குறைவுடையது” என்று குற்றஞ்சாட்டினர். மார்க்ஸ் இவரைக் கிண்டல் செய்து சில அங்கதச் செய்யுள்கள் எழுதினார்.

போதகர் புஸ்ட்குஹென் தன்னுடைய ஓட்டைப் பிரசங்கங்களைக் கொண்டு மாதாகோவில் சமையலறையில் அப்பம் சுட்டு அவற்றைத் தன்னுடைய விசுவாசமிக்க கூட்டத்தினரிடம் கொடுக்கட்டும். ஆனால் “குள்ளர்கள்” எப்பொழுதுமே தற்பெருமைக் கோளாறு உடையவர்கள், அவர்கள் ஒரு “இராட்சதனுடன்” மோதுவதற்கு வீண் முயற்சிகளைச் செய்வார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த அளவுகோல்களை உபயோகித்து அவரைக் குறை சொல்வார்கள். அவருடைய மாபெரும் காலணிகளில் உள்ள புழுதியை மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். பிறகு இந்தக் “குள்ளர்கள்” அகம் பாவத்தோடு இரங்கியருள்வார்கள். “இராட்சதனின்’’ சிறப்பான அம்சங்களை அவர்கள் குறைகள் என்று கருதுவார்கள்; “குள்ளர்களாகிய’’ தாங்கள் மதிக்கின்ற அம்சங்கள் அவரிடம் இல்லாதிருப்பதைக் காண்பார்கள். பிறகு அவர்கள் அவரை எதற்காக கெளரவிக்க வேண்டும்? கேதே ஒரு தோத்திரப் பாடல் கூட எழுதாமலிருக்கும் பொழுது அவரை எப்படி மிகவும் உயர்வாக நினைக்க முடியும் என்று புஸ்ட்குஹென் தன்னுடைய ஆழமான ஆன்மிக எளிமையில் நினைப்பதாக மார்க்ஸ் ஏளனம் செய்கிறார். கேதே இயற்கையைக் கற்றார்; அவர் லூதரின் கோட்பாட்டை அல்லவா கற்றிருக்க வேண்டும், அதைப் பற்றியல்லவா கவிதை எழுதியிருக்க வேண்டும்.

கேதே என்றால் சீமாட்டிகளுக்கு பயம்,
முதிய மகளிர் படிப்பதும் சரியல்ல.
அவர் இயற்கையைக் கற்றார்,
சண்டை இதுதான்.
ஆனால் மத போதனையுடன் ஏன் முடிக்கவில்லை?
அவர் லூதர் கோட்பாட்டை மனப்பாடம் செய்திருக்க வேண்டும்,
அதைக் கொண்டு கவிதை புனைந்திருக்க வேண்டும்.
அவரிடம் அழகான, சில சமயங்களில்
விசித்திரமான, சிந்தனைகள் இருந்தன;
“எல்லாம் கடவுளின் அருள்”
என்று முடிக்கத் தவறினார்.

அவருடைய நூல்களிலிருந்து கிடைக்கும் பயன் என்ன? கடைசியில் “ஒரு கணக்கு அவரைப் புரட்டிவிட்டது”!

கேதேயை மென்மேலும் உயர்த்துகின்ற
விருப்பம் மிகவும் விசித்திரமே,
உண்மையில் அவர் சாதனை கீழானது.
ஒரு தோத்திரமாவது எழுதினாரா?
ஒரு விவசாயியோ ஆசிரியனோ
விளக்குவதற்கு கேதேயிடம் என்ன
இருக்கிறது? எங்கே காட்டுங்கள்.
ஆண்டவனின் அருளைப் பெறாத மேதை,
ஒரு கணக்கு அவரைப் புரட்டிவிட்டதே!(3)

ஃபாவுஸ்டு நாடகம் பற்றி என்ன கூறுவார்? “பாவங்கள் மனிதனைப் பிசாசிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றன’’ என்ற நீதியைக் கூறுவதற்கு, ஒருவர் தன்னுடைய ஆன்மா கடைத்தேறுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று எடுத்துக்காட்டுவதற்கு எவ்வளவு சிறப்பான கதை. ஆனால் கேதே எல்லாவற்றையுமே தவறான முறையில் சித்திரிக்கிறார். அவருடைய ஃபாவுஸ்டு “கடவுளையும் உலகத்தையும் பற்றிச் சந்தேகிப்பதற்குத் துணிந்தான்”, “இளம் பேதை கிரெட்ஹென் அவன் பிசாசுக்கு இரையாகிவிட்டான், கடைசித் தீர்ப்பு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று எடுத்துக்காட்டாமல் அவரைப் போற்றினாள்.”

ஃபாவுஸ்டின் அதிகாரபூர்வமான கதையைப்
படியுங்கள். கவிஞர் எழுதியது
வெறும் வக்கரிப்பு: அவன் கடனாளி,
ஒழுக்கக்கேடன், பந்தயம் வைத்துச்
சீட்டாடுவான். மேலிருந்து உதவியில்லை,
எல்லாவற்றையும் முடிக்க விரும்பினான்.
ஆனால் நரகத்தை நினைத்துக் கலங்கினான்.
அறிவு, செயல், வாழ்க்கை, மரணம்,
நரகத்தைப் பற்றி நன்றாகக் கற்றான்;
இவற்றைப் பற்றிக் கூடார்த்தமாக
அவன் பலவாறாக எழுதினான்.
கடன் வாங்கினால் பிசாசு, நரகம்
நிச்சயம் என்று கவிஞர் சொல்லியிருக்கக் கூடாதா?
கடனில் சிக்கியவர்களுக்கு நிரந்தரமாகக்
கடைத்தேற்றம் இல்லையென்பது தெரியாதா?(4)

ஷீல்லர் சமாசாரம் வேறு! “ஷீல்லர் பைபிளை அதிகமாகப் படித்திருந்தால் இவ்வளவு மட்டமாக எழுதியிருக்க மாட்டார்.”(5)

கேதேயின் பெருஞ்சிறப்பு புஸ்ட்குஹென் ரகத்தைச் சேர்ந்த தற்புகழ்ச்சிக் “குள்ளர்களுக்கு” எரிச்சலேற்படுத்துகிறது, அவர்களுடைய கடமையுணர்ச்சிக்கு ஊறு செய்கிறது, குறைந்த பட்சம் அவருடைய செல்வாக்கைக் “குறைத்தால் தான்” அவர்கள் ஆனந்தமடைவார்கள்!

புஸ்ட்குஹென்களின் இழிவான, பழமைவாத உலகத்தை விமர்சனம் செய்வது அத்தகைய மனிதர்களை வளர்த்த ஆசாரமான மத கவிதை உணர்ச்சியை விமர்சனம் செய்வதாகவும் இருந்தது; இது தவிர்க்க முடியாதபடி மதத்தைப் பற்றிக் கேள்விகளை எழுப்புவதற்கு இட்டுச் சென்றது.

மார்க்ஸ் 1837ம் வருடக் கவிதைகளில் மதகுருமார்களின் தீவிரமான முட்டாள்தனத்தின் மீது போர் தொடுத்த பொழுது அவர் தலைமையான பாசாங்குக்காரரும் மிக உயர்ந்த கொடுங்கோலருமாகிய கடவுள் மீதும் போர் தொடுத்தார்.

மதத்துடன் இறுதியாக முறித்துக் கொள்ளாமல் அற்பவாத உலகக் கண்ணோட்டத்துடன் பரிபூரணமாக முறித்துக் கொள்ள முடியாது. கருத்துமுதல்வாத நிலைகளிலிருந்து மதத்தைப் பற்றி முரணற்ற, ஈவிரக்கமற்ற விமர்சனத்தைச் செய்ய முடியாது; ஏனென்றால் அது யதார்த்தத்தைப் பற்றிய விமர்சனத்தோடு சம்பந்தப்படுகிறது. கார்ல் மார்க்ஸ் புறப்பட்ட பாதையின் தவிர்க்க முடியாத தர்க்கவியல் இதுவே.

1830க்களின் இறுதியில் அவருடைய மிக நெருங்கிய நண்பர்களான “டாக்டர்கள் கழகத்தின்” இளம் ஹெகலியவாதிகளைப் போலவே அவருடைய கவனமும் பிரதானமாக மதத்தை விமர்சிப்பதை நோக்கித் திரும்பியது. டேவிட் ஷ்டிராவுஸ் 1835இல் வெளியிட்ட இயேசுவின் வாழ்க்கை என்ற நூல் மதத்தின் மீது தத்துவஞானத் தாக்குதலைத் தொடங்கியது. சுவிசேஷங்கள் “தெய்வீகத் தன்மை” கொண்டவை என்பதை அவர் மறுத்தார். அந்த “டாக்டர்கள் கழகத்தில்” மார்க்சின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான புரூனோ பெளவர் இன்னும் முன்னேறிச் சென்று நான்கு சுவிசேஷங்களிலும் வரலாற்று ரீதியான உண்மை அணுவளவு கூட இல்லை என்று கூறினார்.

ஃபாயர்பாஹ் மற்றும் ஹெகல்

அதே சமயத்தில் லுட்விக் ஃபாயர்பாஹ் Halische Jahrbicherஇல் (“ஹாலே வருடாந்தர சஞ்சிகை”) எழுதிய கட்டுரைகளில் மதம் மற்றும் தத்துவஞானத்தின் ஒருமையைப் பற்றி ஹெகலின் ஆய்வுரையை விமர்சித்தார். அவருடைய விமர்சன நிலைகள் சீக்கிரத்திலேயே அவரைப் பொருள்முதல்வாதத்துக்கு இட்டுச் சென்றன.

பிரெடெரிக் கோப்பென் மார்க்சின் மூத்த நண்பர்களில் ஒருவர். அவர் 18ம் நூற்றாண்டின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அறிவியக்கத்தின் மரபுகளை மீண்டும் நிறுவுவதற்காகப் போராடினார். அவர் 1840இல் வெளியிட்ட ஒரு பிரசுரத்தை “என்னுடைய நண்பர், டிரியரைச் சேர்ந்த கார்ல் மார்க்சுக்கு” என்ற சமர்ப்பணத்துடன் வெளியிட்டார்.

“டாக்டர்கள் கழகத்தின்” உறுப்பினர்களிலேயே மார்க்ஸ்தான் மிகவும் குறைந்த வயதுடையவர். எனினும் அந்தப் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் மத்தியில் முக்கியமான நிலையை அவர் மிகவும் சீக்கிரத்தில் அடைந்தார். அவருடைய அசாதாரணமான அறிவுத் திறனை, வன்மையான தற்சிந்தனையை, சுதந்திரமான சிந்தனைப் போக்கை அவர்கள் உணர்ந்தார்கள். அவருடைய பல்துறை அறிவை, துணிச்சல் நிறைந்த தீர்ப்பை, அவருடைய நகைச்சுவை உணர்ச்சியை அவர்கள் பாராட்டினார்கள். புரூனோ பெளவர் ஏற்கெனவே உதவிப் பேராசிரியராகவும் இளம் ஹெகலியவாதிகள் இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் இருந்தார். அவர் பானிலிருந்து மாணவராகிய மார்க்சுக்கு மரியாதை கலந்த கடிதங்களை எழுதினார். “டாக்டர்கள் கழகத்தின்” “அறிவுத்துறை அக்கறைக்கு” இணையாக வேறு எதுவுமில்லை என்று எழுதினார்;(6) “உங்களுடன் சாலையைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது கூட நான் பெர்லினில் சிரித்ததைப் போல ஒருபோதும் சிரித்ததில்லை” என்று மார்க்சுக்கு எழுதினார்.(7)

இளம் ஹெகலியவாதிகள் மதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் கார்ல் மார்க்ஸ் தீவிரமாகப் பங்கெடுத்தார். இறையியல் பேராசிரியர் ஒருவரைப் பற்றி மார்க்ஸ் காரசாரமான புத்தகத்தைக் கூட எழுதினார்; ஆனால் அதை வெளியிடவில்லை. எனினும் அவருடைய கருத்துக்கள் சுவடில்லாமல் மறைந்துவிடவில்லை; அவருடைய மூத்த சகாக்கள் அவற்றை எடுத்துக் கொண்டு மேலும் வளர்த்தனர். கோப்பென் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் இதை ஒப்புக் கொள்வதைப் பார்க்க முடியும். கோப்பென் தன்னைப் பற்றிச் சிரித்துக் கொண்டு, மார்க்ஸ் பானுக்குப் போன பிறகு கடைசியாக “நானே சுதந்திரமாகச் சிந்தித்து சில கருத்துக்களை” (அதாவது மார்க்சிடமிருந்து கடன் வாங்காத சில கருத்துக்களை) உருவாக்கினேன் என்று 1841இல் மார்க்சுக்கு எழுதினார். Halische Jahrbicherஇல் புரூனோ பெளவர் எழுதிய மிகவும் சிறப்பான கட்டுரைக் கூட மார்க்சிடமிருந்து கடன் வாங்கிய கருத்துக்களைக் கொண்டதே என்று கோப்பென் குறிப்பிடுகிறார். “நீங்கள் ஒரு சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைப் பட்டறை, அல்லது ஒரு பெர்லின் வாசியைப் போல எடுத்துக் கூறுவதென்றால், கருத்துக்களின் காளைத் தலை”(8) என்று அவர் அக்கடிதத்தின் இறுதியில் எழுதினார்.

காரல்மார்க்ஸின் இளவயது தோற்றம்

மார்க்ஸ் மாணவராக இருந்த காலத்திலேயே அறிவு நோக்குடைய இளம் மாணவர்கள் மத்தியில் தலைமையான செல்வாக்குப் பெற்றிருந்தார். இடது ஹெகலியவாதிகளின் இடது முனைக்கோடியில் அவர் இருந்தார். அவருடைய நண்பர்கள் கூட அவரை “வெறி கொண்ட புரட்சிக்காரர்”(9) என்று கருதினார்கள்.

ஆனால் அது இன்னும் தத்துவ ரீதியான புரட்சியைப் பற்றிய, முதலாவதாகவும் முதன்மையாகவும் மதத்தைப் பற்றிப் “புரட்சிகரமான” அணுகுமுறையைப் பற்றிய பிரச்சினையாகவே இருந்தது என்பது உண்மையே. ஆனால் இங்கே பெளவர், கோப்பென் மற்றும் அவர்களுடைய குழுவினரைக் காட்டிலும் மார்க்ஸ் அதிகமான தூரம் முன்னால் போய்விட்டார். அவர் மாணவராக இருந்த கடைசி மூன்று வருடங்களில் மதத்தின் பொய்களை மறுக்கின்ற நிலையிலிருந்து மதத்தை அடியோடு நிராகரிக்கின்ற நிலைக்கு முன்னேறிவிட்டார். கிறிஸ்துவ மதம் “அறநெறி அற்றது” என்று மார்க்ஸ் கூறுகிறார், அவரும் பெளவரும் ஃபாயர்பாஹும் பழைய கடவுளே வானத்திலிருந்து தூக்கியெறிந்துவிட்டு நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்போகிறார்கள் என்று கியோர்கு யூன்க் என்ற இளம் ஹெகலியவாதி 1841இல் அர்னோல்டு ரூகேக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.(10)

கடவுளை வானத்திலிருந்து தூக்கியெறிவதற்கு, மதக் கடவுள்களை ஒழிப்பதற்கு மார்க்ஸ் தயாரிப்புச் செய்து கொண்டிருந்த பொழுது, மிக முந்திய காலமான 1838இலேயே பண்டைக் காலத்தின் மாபெரும் நாத்திகர்களான எபி கூரஸ், லுக்ரேத்சியஸ் காருஸ் ஆகியோரை நோக்கித் திரும்பினார். அவர்கள் துணிவுடன் கடவுளுக்கு விட்ட சவால் அக்காலகட்டத்தில் அவருடைய தேடலுக்கு மிகவும் கவர்ச்சியூட்டியது. “மதத்தின் இறுக்கமான முடிச்சுகளிலிருந்து மனிதர்களின் அறிவை விடுவிப்பதற்கும்”(11) அதன் மூலம் “கடவுளின் அடிமையை” வானத்துக்கு உயர்த்துவதற்கும் அவர்கள் முயற்சித்தது அவரைக் கவர்ந்தது.

மார்க்ஸ் டாக்டர் பட்டம் பெறுவதற்குச் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எபிகூரஸ் “கிரேக்க அறிவியக்கத்தின் மாபெரும் பிரதி நிதி” என்று லுக்ரேத்சியஸ் எழுதிய சிறப்பான வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார்:

மனித வாழ்க்கை மதத்தின் மரணச் சுமையினால்
பூமிப் புழுதியில் அடிமையாகக் கிடந்த பொழுது
ஒரு கிரேக்கன் முதலில் தலைநிமிர்ந்து நின்றான்
சவால் விட்டுச் சண்டை போட்டான்.
கடவுள் கதைகள் அவனை நசுக்கவில்லை,
வானத்திலிருந்து மின்னல் வெட்டவில்லை…
ஆகவே மதம் அவன் காலுக்கடியில் நசுங்கிக் கிடக்கிறது;
அவன் வெற்றியினால் நாம் வானத்துக்குச்
சமமாக உயர்த்தப்பட்டோம்.(12)

எபிகூரஸ் காலத்துக்கும் 1830க்களின் இறுதியில் ஜெர்மனியில் மதத்தைப் பற்றி நிலவிய “புயல் மற்றும் தாக்குதல்” என்ற சகாப்தத்துக்கும் இடையில் பொதுவான கூறுகள் அதிகமுண்டு. பண்டைக் கால கிரீசில் எபிகூரசைத் தவிர மற்றவர்களும் மதத்தைத் தாக்கியதுண்டு; ஆனால் அவர்கள் கோழைத்தனமான, முரண்பாடான முறையில்தான் தாக்கினார்கள். உதாரணமாக, ஸ்டோயிக்குகள் (Stoics) – இளம் ஹெகலியவாதிகளைப் போலவே-தமக்கே உரிய ஊக முறையில் பழங்கால மதத்தை ஏற்றுக் கொண்டனர். எபிகூரஸ் சலுகைகளைச் செய்யவில்லை, “சாமர்த்தியமாகவோ” அல்லது “தந்திரமாகவோ” நடந்து கொள்ளவில்லை, “உலகத்தைப் பொறுத்தமட்டில் அவர் பகிரங்கமான நாத்திகராக” இருந்தார், “அதன் மதத்தை நேரடியாகத் தாக்கினார்”, அதற்காகவே சமயத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாக அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் அவரைப் பாராட்டினார்.(13)

குறிப்புகள் :

(1)கா.மார்க்ஸ், லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1983, ப. 12.
18ம் நூற்றாண்டின் கடைசியில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான டன்டோனையும் ரொபெஸ் பியேரையும் 1848ம் வருடப் புரட்சியின் போது தலைமையான பாத்திரத்தை வகிப்பதற்கு முயற்சி செய்த அரை மனதுடைய, குட்டி முதலாளி வர்க்க அரசியல்வாதிகளான கொஸிடியேருடனும் லுயி பிளாங்குடனும் மார்க்ஸ் இங்கே கிண்டலான முறையில் வேறுபடுத்திக் காட்டுகிறார்.
(2)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 577
(3) Ibid., p. 579.
(4)Ibid.
(5)Ibid., p. 578.
(6)Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband 2, S. 235
(7)Ibid., S. 236.
(8)Ibid., S. 257.
(9)Ibid., S. 262.
(10)Ibid., S. 261-62.
(11)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 468.
(12)Ibid., p. 73.
(13) Marx, Engels, Collected Works, Vol. 5, p. 142.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?

மோடி ரஜினி கிரிக்கெட் பிரியங்கா ஊடகம் – 6 கருத்துக் கணிப்பு முடிவுகள் !

0

சென்ற மாதம் (ஜூன் 2017) வினவு தளத்தில் வெளியான மோடி, பிரியங்கா சோப்ரா சந்திப்பு, அய்யாகண்ணு, ரஜினி, தீபா, ஊடகங்கள்… ஆறு கருத்துக் கணிப்பின் முடிவுகள்

I) மோடி – பிரியங்கா சோப்ரா டிஸ்கஷன் : சப்ஜெக்ட் என்ன ?

1. ஆன்மீகம்.
2. அரசியல்.
3. பொருளாதாரம்.
4. இதில் எதுவுமில்லை.

பதிவான வான வாக்குகள்

மொத்த வாக்குகள் : 505

1. 2. 3. 4.  

**********

II) இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

1. கிரிக்கெட்டில் ஆர்வமில்லை
2. தேசபக்தியுடன் கொண்டாடினேன்
3. விளையாட்டாக மட்டும் பார்க்கிறேன்
4. ஸ்பான்சர் நிறுவனங்களுக்கு ஆதாயம்

பதிவான வான வாக்குகள்

மொத்த வாக்குகள் : 304

1.
2.
3.
4.  

**********

III) ஆபாசத்தில் விஞ்சி நிற்பது மோடி நாமம் பொறிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கோட்டா? பிரியங்கா சோப்ராவின் குட்டைப் பாவாடையா ?

பதிவான வான வாக்குகள்

மொத்த வாக்குகள் : 441

1.  
2.  

**********

IV) தமிழக மக்களை சுரணையற்ற இளித்தவாயர்களாக கருதுவோரில் முதலிடம் யாருக்கு ?

1. ஊடகங்கள்
2. ஜெயலலிதா
3. தீபா
4. தமிழகப் போலீசு

பதிவான வான வாக்குகள்

மொத்த வாக்குகள் : 641

1.
2.
3.
4.  

**********

V) அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம் – என்ன பலன்?

1. அய்யாக்கண்ணுவின் சுயவிளம்பரம்
2. ரஜினிக்கு விளம்பரம்
3. விவசாயிகளுக்கு அவமானம்
4. விவசாயிகளுக்கு பயன்படும்

பதிவான வான வாக்குகள்

மொத்த வாக்குகள் : 531

1.
2.
3.
4.  

**********

VI) மோடியின் வழக்கமான ஏமாற்றுப் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?

1. மோடியை அம்பலப்படுத்துவதற்கு பயம்
2. மோடியை ஆர்.எஸ்.எஸ்-க்கு அப்பாற்பட்ட நியாயவானாக காட்டுவது
3. மோடியின் பேச்சு மீது உண்மையிலேயே நம்பிக்கை

பதிவான வான வாக்குகள்

மொத்த வாக்குகள் : 589

1.
2.  
3.  

மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்

94

ல்லையில்
பதட்டம் நீடிக்கிறது
எல்லையில் நாங்கள்
ஒரு சிறிய யுத்தத்தை
நடத்திக்கொள்கிறோம்

1962 ல் இருந்ததுபோல இல்லை
இப்போது எங்கள் மார்புகள்
அவை 56 இஞ்சுகளாக விரிந்துவிட்டன
மஞ்சள் தேகத்தினரே
எமது இந்த சவடால்கள் கண்டு நீர்
கோவிக்க வேண்டாம்
அவை உள் நாட்டு தேவைகளுக்கானவையே தவிர
உமக்கானவையல்ல

நமக்குள் என்ன சண்டை
நாங்கள் பல் குத்தும் குண்டுசி
நீங்கள் செய்ததுதான்
நாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
நீங்கள் செய்ததுதான்
எங்கள் குழந்தைகள் விளையாடும்
பொம்மையும் நீங்கள் செய்ததுதான்
ஏற்கனவே முழு நாடும்
உங்கள் கையிலிருக்கும்போது
எல்லையில் ஒரு துண்டு நிலத்தை ஆக்ரமித்து
உங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை
என்பதை அறியாதவரா நீங்கள்?

எல்லையில் எங்களுக்கு
இப்போது அவசரமாக
ஒரு யுத்தம் தேவைப்படுகிறது

தேசபக்த ஒலிப்பெருக்கியின்
பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டது
செல்லாத நோட்டுகளுக்குப்பின்
தேச விரோதிகள் அதிகரித்துவிட்டார்கள்
ஜிஎஸ்டிக்குப் பின் மக்கள்
எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்கிறார்கள்
மாட்டுக்கறிக்காக தோல் உறிக்கப்படும் மனிதர்கள்
அதிகமாக கூச்சல் போடுகிறார்கள்
விவசாயிகள் ஜட்டி போடாமல்
பிரதமர் அலுவலகம் முன் வந்து நிற்கிறார்கள்

எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால்
எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில்
எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்

கார்கில் போரில் பனிபடந்த மலைகளில்
வெற்றிடத்தில் பீரங்கிகள் சுடுவதை
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தோம்
நாடாளுமன்ற தாக்குதலின் போது
இந்தியா எழுச்சியடைந்து
தனது எல்லாக் கவலைகளையும்
மறந்ததுபோல இப்போதும்
நாங்கள் எழுச்சியடைய விரும்புகிறோம்

அனுமதியுங்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தத்தை நடத்திகொள்கிறோம்
யாரோ சில அப்பாவி பலியாடுகள்
இரு புறமும் இறப்பார்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு அவ்வப்போது
தியாகங்கள் முக்கியம்
சமாதானத்திற்குப் பிறகு
புதிய இந்தியா இன்னொரு முறை பிறக்கும்
அரசர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட
உங்கள் தேசத்திற்கு வெற்றி வீரனாக வருவார்

இப்போது அவசரமாக எங்களுக்கு
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் தேவைப்படுகிறது
நீங்கள் இப்போது எங்களை
ஒரு சிறிய யுத்த்திற்கு அனுமதித்தால்
நாங்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது
ஒரு சிறிய யுத்தத்தை அனுமதிப்போம்

அண்டை நாடுகளுடனான
எங்கள் வெளியுறவுக்கொள்கையை
இதைவிட எளிமையாக
என்னால் விவரிக்க முடியாது

நல்லெண்ணத்தின் அடிப்படையில்
அன்பு கூர்ந்து
ஒரு சிறிய யுத்தத்தை எங்களுக்கு
அனுப்பி உதவுங்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – புதிய கலாச்சாரம் சிறப்பு வெளியீடு

2

ன்பார்ந்த நண்பர்களுக்கு

புதிய கலாச்சாரம் வெளியீடாக இதுவரை 24 நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஜூலை 2017-ல் 25-ஆவது வெளியீடு வருகிறது. நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா? என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்”  எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது.

பரவலான வாசகர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வழக்கமாக வெளிவரும் மலிவுப் பதிப்பு வெளியீட்டு வடிவத்திலும், நூலக புத்தகமாக சேமித்து வைப்போருக்காக தரமான தாள், கட்டமைப்புடன் கூடிய நூலாகவும் கொண்டு வருகிறோம். இந்த நூல் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று  07.07.2017 அன்று வெளிவருகிறது.
நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை:

“நீங்கள் என்ன சோப்பை பயன்படுத்துகிறீர்கள் என்பதை விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன” – இது நுகர்வுக் கலாச்சாரத்தில் விரும்பியே சிக்கும் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை விளக்கிய நேற்றைய கருத்து. “நீங்கள் என்ன மாதிரியான வாழ்வில் பயணிப்பீர்கள் என்பதை செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும்.” – இது நான்காம் தொழிற்புரட்சியை முன்வைத்து ஏகாதிபத்திய உலகம் உருவாக்க முயலும் புதிய ஆக்கிரமிப்பு.

நான் விரும்பாமலே என்னை யார் வடிவமைக்க முடியும் என்று மறுக்கிறீர்களா?

முடியும். அன்றாட வாழ்வில் நீங்கள் ஈடுபடும் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள், இணையம் உள்ளிட்ட செல்பேசி பயன்பாடுகள், தொலைக்காட்சி – சமூக வலைத்தளங்களில் உங்களது பங்களிப்பு, அலுவலகத்தில் உங்களது வேலைத் திறன் – என அனைத்தும் மின் தரவுகளாக இணைக்கப்பட்டு உங்களைப் பற்றிய பகுப்பாய்வை அதிநுட்ப மென்பொருள் நிரல்கள் அதி வேகத்தில் செய்கின்றன. வாழ்நாள் முழுதும் நீங்கள் சம்பாதிக்கப் போகும் பணம், அதற்காக செலவழிக்கப்படும் நேரம், வருமானத்தை செலவழிக்கப் போகும் விதம் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.

மீப்பெரும் மின்தரவுப் பகுப்பாய்வு தொழில்நுட்பம், ரோபொட்டிக்ஸ் எனப்படும் தானியங்கிப் பொறி, வேலைகள் தானியங்கிமயமாக்கம், நானோ எனப்படும் மீநுண் தொழில்நுட்பம், குவையக் கணியத் தொழில்நுட்பம், முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் துறை……… இவை அனைத்தும் மிச்சமிருக்கும் உலகை நேர்த்தியாக கபளீகரம் செய்ய ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் முதலாளித்துவ உலகத்துக்கும் உதவப் போகின்றன.

இந்த நூல் நான்காம் தொழிற்புரட்சியின் அறிவியலை எளிமையான முறையில் அறிமுகம் செய்கிறது. இது சமூகத்தில் உருவாக்கப் போகும் மாற்றங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. இணையம் – சமூக வலைத்தளங்கள் போன்றவை உங்களை எப்படி வழிநடத்துகின்றன என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.

இறுதியில் ஒட்டு மொத்த மனித குலமும் முதலாளித்துவத்தின் அதி நவீன எந்திர உலகில் சிக்குண்டுவிடும் சாத்தியம் உள்ளதா என்ற அச்சத்தையும் பரிசீலிக்கிறது.

நான்காம் தொழிற்புரட்சி என்றழைக்கப்படும் புதிய அடிமை யுகம் பற்றிய எளிய அறிமுகம் அல்லது எச்சரிக்கையே இந்நூல்.

சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும், நம்மை ஆள நினைக்கும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடுவோர்க்கும் இந்நூல் ஒரு ஆரம்ப நிலைக் கையேடு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்

புதிய கலாச்சாரம்
ஜூலை 2017 வெளியீடு

அழகிய வடிவமைப்பில்,
70 GSM தாளில் 80 பக்கங்கள்.

நூல் வடிவில்

விலை : ரூ.60

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்

புதிய கலாச்சாரம்
ஜூலை 2017 (மலிவுப் பதிப்பு) வெளியீடு

80 பக்கங்கள்

விலை ரூ. 20

அறுபது ரூபாய் மதிப்புள்ள நூலை தபாலில் (உள்நாடு) வாங்க விரும்புவோர் ரூ. 100 அனுப்புக. பதிவு செய்யப்பட்ட அரசு தபால் மூலம் நூல் அனுப்பிவைக்கப்படும். பணத்தை கீழே கண்ட வங்கிக் கணக்கில் அனுப்புங்கள்.

மலிவுப் பதிப்பு நூல் வாங்க விரும்புவோர் புதிய கலாச்சாரம் ஆண்டுச் சந்தா அனுப்புங்கள்.

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

மின்நூலாக பெறுவதற்கு:

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலாக பெறுவதற்கு :

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________________________

சென்னையில் புதிய கலாச்சாரத்தின் நூல்கள் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107. பேச : 99623 90277
(வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் எதிரில், சிவா ஜிம் மாடியில்)

கருத்துக் கணிப்பு : பிக் பாஸ் நிகழ்ச்சியால் யாருக்கு ஆதாயம் ?

0

கருத்துக் கணிப்பு : பிக் பாஸ் நிகழ்ச்சியால் யாருக்கு ஆதாயம்?

  • கோடிகளில் ஊதியம் பெறும் கமல்ஹாசன்
  • டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கும் விஜய் டி.வி
  • மக்கள் கவனம் திரும்ப காத்திருக்கும் பா.ஜ.க
  • புதிய சீரியலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்
  • பிக்பாஸ் நிகழ்ச்சியை நியூசாக போடும் ஊடகங்கள்

 

மணலில் சொட்டுவது எங்கள் ரத்தம் – வெள்ளாறு பகுதியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

0

டலூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் மதகளிர்மாணிக்கம். விருத்தாசலத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செல்லும் வழியெங்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையும் நம்முடன் பயணிக்கும். சில்லென்ற காற்று முகத்தை வருடிக் கொடுத்தவாரே எதிர்கொள்ளும். தென்னை மரங்கள் சூழ வயல்களை ஒட்டியே வீடுகளைப் பார்த்தால் ஒரு  கணம் கேரளாவா என்று தோன்றும். வீடுகளை சுற்றியே நெல் வயல்களையும் காணலாம். வயல்களை சுற்றி நூற்றுக்கணக்கான மயில்கள் தோகை விரித்தாடுவதை நிச்சயம் பார்க்க இயலும். எப்போதும் வயல்களில் மக்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். இக்கிராமத்தின் பசுமை போர்த்திய அழகுக்கு முக்கிய காரணம் வெள்ளாறு.

சேலத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் தோன்றும் வெள்ளாறு, பரங்கிபேட்டையில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வெள்ளாற்றின் வலது கரையோரம் ஆனந்தகுடி, முத்துகிருஷ்ணாபுரம், ஆத்தூர், எசனுர், மதளிர்மாணிக்கம், குணமங்கலம், பூண்டி, கள்ளிப்பாடி, புத்தூர், இனமங்கலம், அம்புஜவல்லிப்பேட்டை, கூடலையாத்தூர், காவாலக்குடி, சோலைவழி, நெடுஞ்சேரி ஆகிய கிராமங்களும், இடது கரையோரம் கார்மாங்குடி, வள்ளியம், சக்கரமங்கலம், கீரனூர், மருங்கூர், காவனூர், கீழப்பாளூர், பவழங்குடி, கீரமங்கலம்,மேலப்பாலையூர்,நேமம், உள்ளிட்ட கிராமங்களும் உள்ளது. அனைத்து கிராமங்களுமே பசுமையாகத் தான் இருக்கின்றன. இந்த வெள்ளாற்றை நம்பி சுமார் 7000 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வருகிறார்கள்.

நெல், கரும்பு போன்றவையும், சாமந்தி, குண்டுமல்லி, சம்பங்கி, கோழி கொண்டை, பட்டன் ரோஸ் ஆகிய பூ வகைகளையும், வெண்டை, கத்தரி, வாழை காய்வகைகள் என அனைத்து வகை பயிர்களும் இங்கு பயிரிடப்படுகின்றன. எந்தப் பயிர் வைத்தாலும் செழித்து வளரும் என்பதே இந்த மண்ணின் சிறப்பு. எந்த ஆறு இந்த வளமான விவசாயத்திற்கு வித்திட்டதோ அந்த ஆற்றை சிதைத்து விவசாயத்தையும் சீரழித்து வருகிறது இந்த அரசு.

வெள்ளாற்றில் கார்மாங்குடி மணல் குவாரியில் மணல் எடுத்த பிறகு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்” மற்றும் கிராம மக்கள் போராட்டத்தின் விளைவாக அந்த குவாரி மூடப்பட்டது. தற்பொழுது கொஞ்ச நஞ்சம் இருக்கும் விவசாயத்தையும் அடியோடு அழிக்க அதே ஆற்றில் மதகளிர்மாணிக்கம் என்ற கிராமத்தில் குவாரி அமைக்க அனுமதி கொடுத்துள்ளது எடப்பாடி அரசு. தங்களின் வாழ்வை அழிக்கும் மணற் குவாரி வேண்டாம் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள் மதகளிர்மாணிக்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள்.

மணல் குவாரியை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

இந்த போராட்டத்தில் முன்னணியாக உள்ள தமிழரசன், “19.05.2017 அன்று எங்கள் கிராமத்தில் ஆற்றை சர்வே செய்ய வந்தார்கள். மக்கள் நாங்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தவுடன் நான்கு கல்தூண்களை மட்டும் நட்டு விட்டு சென்று விட்டனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். அதன் பிறகு மீண்டும் 02.06.2017 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் வெட்டும் இயந்திரம், நான்கு லாரிகளுடன் வந்ததால் நாங்கள் குவாரியை முற்றுகையிட்டு போராடினோம்.

ஏற்கனவே கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து கூடலையாத்தூர் வரைக்கும் 2001 – 2015 காலகட்டத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும், சேத்தியாத்தோப்பு முதல் பரங்கிப்பேட்டை வரை சுமார் 20 கிலோ மீட்டருக்கும் மணல் கொள்ளையடித்து விட்டார்கள். 3 அடி தான் அள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி 30 அடி ஆழம் வரை அள்ளியுள்ளார்கள். இரண்டு யூனிட் வரை தான் லாரிக்கு பெர்மிட் வாங்குகிறார்கள். ஆனால் ஆறு யூனிட் வரை அள்ளுகிறார்கள். ஆற்றின் கரையோரம் மணல் அள்ள கூடாது என்ற விதிமுறையை மீறியதன் விளைவு கரையோரம் உள்ள விவசாய நிலங்களளை அறுத்துச் சென்று விட்டது.

விவசாயிகள் புகார் கொடுத்த பிறகு விவசாயிகளின் பட்டா நிலத்தில் தடுப்பணையை கட்டியுள்ளார்கள். மணல் இருக்கும் பொழுது 30 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 300 அடிக்கும் கீழே சென்று விட்டது. இதனால் வெள்ளாற்று கரையோரம் உள்ள 35 கிராமங்களில் 2,450 ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் மூடிவிட்டனர். “விவசாயத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தது போக இப்பொழுது குடிநீருக்கு அலைய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இன்னும் மிச்ச மீதி மணல் இருக்கும் இடம் எங்கள் ஊர் தான். அதனையும் அள்ளிவிட்டு எங்கள் வாழ்வை சூறையாட துடிக்கிறார்கள்”, என்கிறார்.

“சார், ஆத்துல மணல் அள்ளுறதுக்கு முன்னாடி மூணு போகம் பயிர் வச்சோம். இப்ப ரெண்டு மூணு வருசமா கரம்பா தான் கெடக்கு. தண்ணியே இல்ல சார். எங்க போரை பாருங்க. இன்னும் மோட்டார் கூட கெணத்துல தான் இருக்க. சர்விஸ் எல்லாம் இருக்கு. ஆனாலும் எங்களால பயிர் வக்க முடியல. இதை எல்லாம் எப்படி சரி செய்றதுன்னே தெரியல. புதுசா போர் போடணும்னா லட்சக்கணகுல ஆகும். அவ்ளோ பணத்துக்கு எங்க போறது” என்று கேட்கிறார் விவசாயி கருணாமூர்த்தி.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு வலுவாக இருந்ததால் 11.06.2017 அன்று எந்த தகவலும் தெரிவிக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் போலிசை வைத்து மிரட்டினார்கள். “மணலை அள்ளியே தீருவோம், மணலை அள்ளினால் தான் தண்ணீர் இருக்கும்” என்று பேசுகிறார் தாசில்தார். மணல் அள்ளுவதற்கான அரசு ஆவணங்களை கேட்டால் “ மழையில் நனைந்து விட்டது” என்கிறார்கள் அதிகாரிகள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லாமல் நாங்கள் திரும்பி விட்டோம்.

12-ம் தேதி 500 -க்கும் மேற்பட்ட லாரிகள் ஆற்றில் இருந்தது. ஆற்றின் இரு கரைகளிலும் 400 க்கு மேற்பட்ட போலிசை நிறுத்தி யாரும் ஆற்றின் உள்ளே செல்ல முடியாதபடி மிரட்டினார்கள். உளவுத்துறை தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். பதினைந்து நாள் சிறை, ஒரு மாதம் சிறை என்று ஒவ்வொரு நாளும் உளவியல் ரீதியாக மிரட்டியுள்ளார்கள். சாலையில் நடந்து சென்றவர்களை கைது செய்திருக்கின்றனர். போலிசின் இந்த மிரட்டலை எல்லாம் மீறித்தான் வயலுக்குள் புகுந்து மணல் குவாரிக்கு சென்றிருக்கிறார்கள் கிராம மக்கள்.

கீரனூர், வள்ளியம், சக்கரைமங்கலம், கார்மாங்குடி கிராம மக்கள், பெண்கள் யாரும் ஆற்றினுள் வந்து விடாதபடி போலிசு விரட்டியடித்தார்கள். இது அரசு குவாரி தடுத்தால் கைது செய்வோம் என்று நேரடியாக சிதம்பரம் ஆர்.டி.ஒ மிரட்டியிருக்கிறார். இன்று வரை மதகளிர்மாணிக்கத்தில் போலிசு குவிக்கப்பட்டு மக்கள் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 250 பேரை கைது செய்து வேனில் ஏற்றியது போலிசு. கைது செய்து சென்ற வேனை முற்றுகையிட்ட எங்களை எல்லாம் பெண்கள் என்று கூட பார்க்காமல் தரதர வென்று இழுத்துச் சென்ற ஆண் போலிசு, “அரசு மணல் குவாரியையே நீங்க தடுப்பிங்களா? இன்னா திமிர் இருந்தா அரசாங்க ரோட்டுல வண்டிய போக விடாம தடுப்பிங்க”னு அடித்ததாக சொல்கிறார்கள் கிராமத்து பெண்கள்.

“வயலுக்கு செல்லும்போது அடித்தார்கள். நான்கு பேருக்கு மேல் கூடி நின்றால் துரத்தினார்கள். காலை கடன் முடிக்க கூட எங்களால் செல்ல முடியவில்லை. 24 மணி நேரமும் நாங்கள் போலிசின் கண்காணிப்பில் தான் இருந்தோம். ஒரு அகதியைப் போல சொந்த கிராமத்தில் நாங்கள் நடத்தப்பட்டோம்” என்கிறார் போராட்டத்தில் கைதான ஜான்சன் என்ற இளைஞர்.

ஜான்சன்

போராட்டத்தை முன்னின்று நடத்திய கிராம இளைஞர்கள் 6 பேரை காவல் நிலையத்தில் வைத்து “மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜு உடன் செல்லாதீர்கள். அவர்கள் தீவிரவாதத்தை பரப்புகிறார்கள். உங்களை சிறையில் போட்டுவிடுவோம்”, என்கிறார் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் செல்வம். இரவு பன்னிரெண்டு மணிக்கு தான் “மும்முனை இணைப்பு மின்சாரம்” வரும். அதற்காக வயலுக்கு சென்ற விவசாயிகள் நான்கு பேரை கடுமையாக தாக்கியதோடு, “ஊருக்குள் புகுந்த காட்டு யானை மக்களை மிரட்டுவதைப் போல், பயிற்சி எஸ்.ஐ ரங்கராஜன் எங்களை மிரட்டினார்” என்று அப்பகுதி இளைஞர்கள் கூறுகிறார்கள்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மறுநாள் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் தாசில்தாரிடம் “ போலிசு எங்களை மிரட்டுகிறது” என்று புகார் கூறினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை”. 14-ம் தேதி அனைத்து கிராம மக்களும் சேர்ந்து ரேசன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அட்டையை வாங்க மறுத்து விட்டார் தாசில்தார். 15 -ம் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், 16 -ம் தேதி “வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்” சார்பாக ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்து போராடி வருகிறோம்.

மணல் லாரிகளை மக்கள் ஊருக்குள் விடாததால் ஆற்றுக்குள் பாதை அமைக்கும் மணல் மாஃபியாக்கள்

மணல் லாரிகள் ஊருக்குள் வரவிடாமல் நாங்கள் தடுப்பதால் ஆற்றுக்குள்ளேயே பாதை அமைக்கிறார்கள். எம்.பி அருண்மொழி தேவனிடமும், எங்க தொகுதி எம்.எல்.ஏ முருகுமாறனிடமும் குவாரியை மூடச் சொன்னோம். அதற்கு குவாரி இருக்கும், நீங்க கிராமத்துல இருந்தா இருங்க… இல்லனா கிராமத்த காலி பண்ணுங்க” என்கிறார்கள். எங்களின் வாழ்வாதாரத்தையே அழிக்க நினைக்கும் இந்த அரசு எங்களுக்கு எதற்கு” என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

இது தான் எங்களுக்கு மெரினா -கிராம மக்கள்

பரந்து விரிந்த மணற்பரப்பை காட்டி “சென்னைக்கு மெரீனா’னா எங்களுக்கு இந்த ஆறு தான் சார் மெரீனா” இங்கு தான் நாங்கள் வளர்ந்தோம். இதனை வெறும் ஆறாக நாங்கள் பார்க்கவில்லை. “இது தான் எங்களின் வாழ்வாதாரம்”. இதை எப்படி சார் நாங்க விட்டுக்கொடுப்போம் மணிகண்டன் என்ற இளைஞர்.

பி.எஸ்.சி, பி.எட் முடித்துள்ள வெற்றிவேல், “நான் ஏர்டெல் டிஸ்டிபியுட்டராக வேலை செய்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு விரும்பி வந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இந்த வெள்ளாத்த நம்பித்தான் பயிர் செஞ்சிருக்கேன். இப்ப தண்ணி போர்ல விட்டுட்டா என்ன பண்றது? இது மணல் பகுதி சார். நார்மலா போர் போடுற செலவை விட கூடுதலா செலவாகும்.

வெற்றிவேல்

இப்ப முன்னூறு அடிக்கு கீழ தான் தண்ணி இருக்கு. நாம நானூறு அடி போர் போடணும்’னா ஒரு அடிக்கு ரூ.190 மேனிக்கு 400 அடிக்கு ரூ.76,000, போரை சுற்றி பேக்கிங் ஜல்லி கொட்டனும் அதுக்கு ஆறு யூனிட் 36000, 8 அங்குலம் பைப் ஒரு மீட்டர் 1840 x 133 மீட்டர் ரூ.2,44,720., மட்டு ஜல்லி ரூ.6000, 20hp மோட்டார் ரூ.70,000, கருப்பு ஓஸ் பைப் ரூ.1,52,000, கேபிள் வயர் 266 மீட்டர் ரூ.26,600 மொத்தம் 6,11,320 ரூபாய் செலவாகும். “இந்த மணலை வாரி விட்டால் புதுசா தான் நாங்க போர் போடனும். அதுக்கு இதவிட கூடுதல் ஆழம் தான் போடணும். அந்த பணத்துக்கு எங்க போறது, அரசாங்கம் லோனும் தராது” நான் என்ன பண்றது? என்ன விட்டுடுங்க, நான் படிச்சிருக்கேன் வேற வேலை பார்த்தாவது பொழச்சிக்குவேன்.

படிக்காத விவசாயிங்க என்ன பண்ணுவாங்க? விவசாயிகள் ஏன் தற்கொலை பண்ணிகிறாங்கன்னு இப்ப தான் சார் தெரியுது. “இயற்கை எங்களை பாழ்படுத்தியதுன்னா, அதுக்கும் மேல இந்த அரசு இருக்கு சார்.” என்கிறார்.

மணலை அள்ளும் போது சொட்டுவது நீர் அல்ல எங்கள் ரத்தம் கொதிக்கும் பெண்கள்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான பெண்கள், “மணலை அள்ளும் பொழுது சொட்டுவது வெறும் தண்ணீர் இல்லை சார்…. அது எங்களோட ரத்தம். எங்களை புதைத்து விட்டு தான் இந்த மணலை அள்ள முடியும் என்கிறார்கள் பெண்கள். ஆற்றில் இறங்கினால் “காலை தட்டிவிட்டு தான் வெளியேற வேண்டும். இங்கு இருந்து ஒருபிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம்” என்கிறார்கள் கிராம இளைஞர்கள்.

மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்டு கட்டாந்தரையாகிய ஆற்றுப்படுகை
பயிற்களுக்காக பாலாய்ச் சுரக்கும் வெள்ளாற்றின் ஊற்றுகள்
விளைநிலங்கள் வரை மணலை அள்ளிவிட்டார்கள் கொள்ளையர்கள்
மணல் கொள்ளையர்கள் ஆற்றில் உருவாக்கியுள்ள சாலை

தங்களை வாழவைத்த வெள்ளாற்றையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்த அரசை எதிர்த்து போராடினால் தான் முடியும் என்பதை வெள்ளாற்று கரையோர கிராம மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த கட்ட போராட்டத்திற்கும் தயாராகி வருகிறார்கள்.

செய்தி, படங்கள் : வினவு செய்தியாளர்.

கருத்துக் கணிப்பு : மோடியின் ஏமாற்றுப் பேச்சை ஊடகங்கள் வெளியிடுவது ஏன் ?

6

டந்த வாரம் 22.06.2017 அன்று ஹரியாணாவில் ஜூனைத் கான் என்ற சிறுவனையும் அவனுடன் வந்த சகோதரர்களையும், “மாட்டுக்கறி திண்ணும் தேசவிரோதிகள்” என்று கூறி ஓடும் இரயிலிலேயே கத்தியால் குத்தியது ஒரு கும்பல். இதில் ஜூனைத் கான் மரணமடைந்தார், அவரது இரண்டு சகோதரர்கள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளில் பசுவின் பெயரால், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இக்கொலைகளைக் கண்டித்துச் சமூக செயற்பாட்டாளர் ‘சபனம் ஹாஸ்மி’ தனக்கு வழங்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் உரிமைக்கான விருதை திருப்பியளித்தார். அதோடு, இந்தியா முழுவதும் இத்தகைய இந்துத்துவக் கிரிமினல்களின் கொலை வெறியாட்டத்திற்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்தன. “எனது பெயரில் அல்ல” என்ற முழக்கத்தின் கீழ், பல்வேறு தரப்பினரும், ஹிந்துத்துவக் கும்பலின் கொலை வெறியாட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட ஆரம்பித்தனர்.

நாட்டையே உலுக்கிய ஜுனைத் கான் படுகொலை குறித்து வழக்கம் போல அமைதி காத்து வந்த மோடி, பிரச்சினை வலுப்பெறத் தொடங்கிய பின்னர், இனியும் மவுனித்திருக்க முடியாது என்பதை உணர்ந்தார்.  இன்று (29.06.2017) குஜராத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, “பசுக்களின் பெயரால் மனிதர்களைக் கொல்வதை அனுமதிக்க முடியாது. நாம் அஹிம்சையின் நிலத்தைச் சேர்ந்தவர்கள்; வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது; தேசப்பிதா காந்தி, இத்தகைய சம்பவங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளார். இறுதியாக நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம் என்று முடித்துள்ளார்.

இந்த உரையின் பொருள் என்ன? அவர் யாரைக் கண்டிக்கிறார்? யாருக்கு ஆதரவாக பேசுகிறார்?

2002-ம் ஆண்டு குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை குறித்து இன்று வரை வாய் திறவாத மோடி அது குறித்து கரண் தாப்பர் வருந்துகிறீர்க்ளா என்று கேட்ட போது வெளிநடப்பு செய்தார். பிறகு அக்லக், உனா என்று தொடரும் மாட்டுக்கறி வெறுப்பு சங்க பரிவார படுகொலைகள் நடந்த போதும் இது போன்ற கண் துடைப்பு பேச்சுக்களை பேசியுள்ளார்.

இன்றும் அவர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறவில்லை. மறைமுகமாக பசுவின் புனிதத்தை உறுதிப்படுத்தியதோடு, வன்முறையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள் (சட்டமே தண்டிக்கும்) என்று கூறியுள்ளார். இருப்பினும் மோடியின் பேச்சை மாபெரும் கண்டிப்பு போன்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் என்ன?

மோடியின் வழக்கமான ஏமாற்றுப் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?

மோடியை அம்பலப்படுத்துவதற்கு பயம்
மோடியை ஆர்.எஸ்.எஸ்-க்கு அப்பாற்பட்ட நியாயவானாக காட்டுவது
மோடியின் பேச்சு மீது உண்மையிலேயே நம்பிக்கை

வாக்களியுங்கள்!

கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !

1
தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்க்கரன்

ரப்பே தலையன வயக்காடே பஞ்சுமெத்த” இதுதேன் கீதாரிங்க வாழ்க்க. இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தோணலிங்களே” என்று ஒற்றை வரியில் கீதாரிகளின் வாழ்க்கையை சுருக்கினார் தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக்  கிடை போட்டிருந்த பாஸ்கரன்.

ஐயா! நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலையே?

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிதே சொந்த ஊரு. எங்க ஊர ஒட்டிய கிராமங்கள்ல கோனார் சாதிக்காரவுக அதிகம். அவக தொழிலே ஆடு மாடு மேய்கிறதுதேங். கோடையில ஆறு மாசகாலம் தஞ்சாவூரு மாவட்ட பகுதிய சுத்தி உள்ள நெலத்துல ஆடு மாடு மேய்ப்பாக. மீதி ஆறு மாசம் புதுக்கோட்டக் காட்டுப் பகுதிக்கு போயிடுவாக. ஆடு மாடு இல்லாதவுக, காணி(அளவு) காடு வச்சுருக்கவுக சிலபேரு ஊரோட இருப்பாக. ஊருக்கு தேவையிண்டா மட்டுந்தே போவோம். அதாவது சொந்தமுண்டு சொல்லிக்க ஊரு இருக்கும் ஆனா குடும்பம் நடத்துறது என்னவோ வெளியூருலதேன்.

ஏனுங்கையா ஒரே எடத்துல மேய்க்காமெ ஆறு மாச காலத்துக்கு ஒருக்க எடத்தை மாத்துரிங்க?

எங்க ஊரு பக்கம் வறட்சி அதிகம். ஆடு மாடுக மேய்க்கறதுக்கான காடு கழனி கெடையாது. ஆத்துப் பாசன பகுதில அறுப்பு முடிஞ்சு மறுக்க ஆத்துல தண்ணி வரும்வர கழனிக சும்மாத்தேன் கெடக்கும். மேச்சலுங்கு தோதுவா நெலமும் ஆடு மாடுக குடிக்க குளம் குட்டையும் இருக்கும். அங்கனக்குள்ளையே மேச்சு வெள்ளாமெ நெலத்துக்கு கெடையும் கட்டுவாக. ஆத்துல தண்ணி வந்து வெள்ளாமெ தொடங்கிச்சாங்காட்டி மந்தைய புதுக்கோட்டைக்கி ஓட்டிடுவாக. அங்கெ அரசு பாரஸ்ட் மலைக்காடு இருக்கு. எத்தன மழை பேஞ்சாலும் சேறு சகதி இல்லாம மேச்சல் இருக்கும். பகல் பொழுது மலையில மேச்சுட்டு ராத்திரியானா கீழ ஓட்டியாத்துருவாக. (பருவமழை காலத்தில் மலை பகுதியும் கோடை காலத்தில் சமவெளி பகுதியும் கிடை மந்தை கால்நடைகளுக்கான மேய்ச்சல் பகுதியாகும்.)

ஆட்டுக் கிடை போடும் பாஸ்க்கரன்

ஆடு மேச்சு கிடை கட்டும் உங்க தொழில் முன்னைக்கி இப்ப எப்படி இருக்கு?

என்னோட எளவட்ட காலத்துல ஒத்தாளு 500 ஆடுகளோட ஊடாடுவே. அப்பெல்லாம் அறுப்பு முடிஞ்சு எக்கண்டமும் சும்மாத்தேங் கெடக்கும். என்னப்போல முப்பது கீதாரி குடும்பம் இந்த ஊருல தங்கி ஆடு கெட போடுவாக. அம்புட்டு ஆடுகளுக்கு மேச்சலுக்கு எடமிருக்கும். இருவது வருசமாத்தேன் இங்குட்டு போரு (ஆழ்துளை கிணறு) போட்டுட்டாக. திட்டுத்திட்டா வெவசாயம் செஞ்சுருக்காக. பயிறுக்கு போகாமெ ஆடுகள மடக்கி சோலி பாக்க வாய்க்கல. எங்குட்டு திருப்புனாலும் ஊரச் சுத்தி இதே நெலமதேன்.

ஆடுகளுக்கு முன்னப்போல மேச்ச நெலமுண்டு ஒன்னு இல்லிங்க. தண்ணி இல்லாமெ ஆடுக எறப்பு வாங்குது. குளம் குட்ட எங்குட்டு திரும்புனாலும் வறண்டு கெடக்கு. ஆடு மேஞ்சு முடிச்சு பட்டிக்கி திருப்பியாந்தா விடிய முட்டும் படுத்துக்கும். இப்ப அண்டையில உள்ள பயிருக்கு போயிருதுக. பொழப்புக்கு வந்த எடத்துல கீதாரி பயக வெள்ளாமைய அழிச்சுபுட்டாகன்னு ஒரு சேதி வந்துரப்படாதுல்ல. அதுக்காக ஆடுகள சுத்தி இரும்பு கம்பி அடிச்சி வல(லை) கட்டனும். பாலூட்டு குட்டிகள வெய்யிலு அண்டாமெ பாதுகாக்க கூடாரம், நாங்க படுக்க கட்டிலு இதையெல்லாம் அடுத்த கெடகட்டுற எடத்துக்கு தூக்கிட்டு போக வண்டி செலவுன்னு….. ரொம்பவும் செரமமாத்தே இருக்குங்க.

ஐநூறு ஆடு நின்ன எடத்துல 250 ஆடுகதே இருக்கு. முப்பது குடும்பம் வந்த  எடத்துல 4 குடும்பந்தே வந்துருக்காக. 250 ஆட்டுக்கு 7,000 ரூபா கூலி குடுத்து ஒரு மேச்ச ஆளு வச்சுருக்கேன். இது அம்புட்டும் சொந்த ஆடுக அதுனால கூலியாள வச்சு மேய்க்கேன். பத்து இருவது ஆடு வச்சுருக்கவுகளும், மேச்சலுக்கு வர்ர ஊருல சிலபேரும் எங்கக்கிட்ட வாரத்துக்கு ஓட்டி விடுவாக. கூலி கெடையாது ஆடு ரெண்டு குட்டி போட்டுச்சாங்காட்டி ஒன்னு நமக்கு. ஒன்னு அவுகளுக்கு.

ஆட்டுக் கிடைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் செம்மறி ஆடுகள் மற்றும் தங்கும் கூடாரம்

ஆடு வளர்ப்புல லாபமா? கிடை கட்டுறதுல லாபமா?

“ஆடு ஊடாடாமே காடு விளையாதும்பாக”. ஆட்டுக் கெட உரந்தே ஒசந்ததா இருந்தது ஒரு காலம். இப்ப ரசாயன ஒரத்த சக்கரக் கணக்கா வயக்காட்டுல அள்ளி கொட்டுறாக. ஆட்டுப் புளுக்க மூத்தரத்தோட அருமெயெல்லாம் அத்துப் போச்சு. மணலு, வண்டலு, அதிகம் உள்ள கழனிக்கி ஆடு மாடு ஒரமும், கிளாரு மண்ணுக்கு (சுண்ணாம்பு மண்) வாத்து ஒரமும் இடுவாக. நெலத்துக்கு தக்கன வெதையும் ஒரமும் நம்மகிட்டேயே இருந்துச்சு. இப்ப வெதையோட சேத்து ஒரத்தையும் இறக்குமதி பன்றாக. பூச்சி மருந்து கள(ளை)க் கொல்லின்னு, கண்டதும் போட்டாத்தே அதுவும் வெளையுது.

“ஆடு காப்பணம், புழுக்க முக்காப் பணம்னு” சொன்னதெல்லாம் அந்த காலம். இப்ப ஆரும் பெருசா கெட கட்டுவாக கெடையாது. போன வருசம் 250 ஆடு ஒருநா(ள்) கெட கட்ட 300 ரூபா வாங்குனேன். இந்த வருசம் மழத்தண்ணி இல்லன்னு 250 வாங்குரேன். ஒருநா வருமானம் ஒரு வார வெஞ்சனம்(காய்) வாங்க பத்தமாட்டேங்குது. பொறவு மேச்சகாரனுக்கு டீ, சாப்பாடு, வெத்தலபாக்கு, வாரத்துக்கொருக்க பாட்லு இதுக்கெ கெடகூலி பத்தாது. ஆட்டுல நாலு காசு வந்தாத்தே உண்டு. ஒரு ஆடு அஞ்சு அல்லது ஆறு ஆயிரத்துக்கு போகும். வருசத்துக்கு ரெண்டு குட்டி போடும். அத நல்லா மேச்சு குட்டிக்கு பால்குடுத்தா ஆறு மாசத்துல வளந்துரும். இதுலதே குடும்பம் படிப்பு கல்யாணம் எல்லா செலவும்.

கீதாரிகள் ஆடுங்களோட ஊர் ஊரா போறதா சொல்றீங்க, பிள்ளைகள எப்படி படிக்க வைக்கிறீங்க?

எங்க தொழிலே ஊரு ஊரா போறதுதேன். எங்குட்டு பிள்ளைகள ஒரு நெலையா படிக்க வைக்கிறது. ஆடு மாடுகள வாரத்துக்கு மேய்க்காமெ சொந்தமா வச்சு பண்ணையம் பாத்தவுக பிள்ளைங்க காசு, படிப்பு, வேலையின்னு இருக்காக. எங்கப்போல சிறுவ ஆடு வச்சுருக்கும் கோனாருக ஆசப்பட்டு பிள்ளைகள படிக்க வச்சாலும் பள்ளிக்கூடத்த தாண்ட முடியல. கீதாரி தொழிலும் சரிஞ்சு போச்சு. மேல படிக்க முடியாமே டிரைவரு, கண்டெக்டருன்னு வேலைக்கி போறாக.

இந்த ஊருல முப்பது வருசமா எனக்கு பழக்கம். அண்ண வீட்டு தோப்புலதே கூடாரம் போட்டு தங்கிக்கிடுதேன். அம்மி, ஒரலுன்னு சமையலுக்கு தேவையானத கொடுப்பாக. காசு பணமெல்லாம் அவக கிட்டதே குடுத்து வச்சுருப்போம். தாயா பிள்ளையா பழகிகிடுதொம். எங்க மாமா செத்தப்ப இந்த அண்ணெந்தே சாவு கோடி போட்டாக. எங்க வீட்டு நல்லது கெட்டது அவுக இல்லாம நடக்காது, அவுக வீட்டு நல்லது கெட்டது நாங்க இல்லாம நடக்காது.

அந்த பழக்கத்துல பெரியவெ(ன்) இங்கதே ஆறு வருசமா படிக்கிறேன். இந்த வருசத்தோட படிப்பு முடியிது. நாங்க இருக்குற ஆறு மாசம் எங்க கூட இருப்பேன். நாங்க புதுக்கோட்ட பக்கம் போனபொறவு இவக வீட்டுல தங்கிக்கிருவேன். அவுக பிள்ளப்போல பாத்துக்கிருவாக. சின்னவென் ஊருல இருக்கேன். எங்க காலத்தோட இந்த தொழிலு முடிஞ்சுரும் பிள்ளைங்க இனி செய்யாதுக.

ஊருல யாரு பையன பாத்துப்பாங்க? ஆடுங்கள தவிர எதுனா சொத்து இருக்குங்களாய்யா?

காக்காணி நெலமிருக்கு. அத நம்பி நாலு பேரு என்னத்த சாப்புட முடியும். ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும். இருக்கவுகதேன் ஒத்து உணர்ந்து வேலைய பிரிச்சுக்குறனும். எங்கக்கா ஊருல எம்பையனையும் நெலத்தையும் பாத்துக்குறாக. நா அவுக ஆடுகள பாத்துகிடுதேன். ஆடுக நெறையா நின்னா தனிதனியா கெட போடுவாக. ஆடுக கம்மிங்கறதால சேந்து மேச்சுகிடுதோம்.

மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கேன்

ஆட்டு தலையில கலர் கோடு போட்டுருக்கே வேற கிடை ஆட்டோட சேந்துருச்சின்னா கண்டுபிடிக்கற அடையாளமா?

வெய்யிலு காலம் நோயி வருமுண்டு மருந்து குடுத்துருக்கேன். மருந்து குடுத்தது எந்த ஆடுண்டு தெரிஞ்சுக்க அடையாளம் போட்டுருக்கே. மத்த கீதாரி ஆட்டோட கலந்து மேய்க்க மாட்டோம். எல்லாருமே தனிச்சுத்தேன் விடுவோம்.

செம்மறியாட்டு கூட்டத்துல நாளு வெள்ளாடும் நிக்குதே எதுக்குங்கையா?

செம்மறியாடு சாஞ்சா சாஞ்சபக்கம் போகும். போன வழி திரும்பி வரத்தெரியாது. வெள்ளாடுதே வழிகாட்டி ஆடுக. அதுக்கு அறிவு சாஸ்த்தி பயிரு பச்சைக்கி போனா சத்தம் போட்டா திரும்பிரும். பாம்பு, விலங்கு எது வந்தாலும் உசாராயி சத்தம் கொடுக்கும். இதுகளுக்கு ஒன்னு தெரியாது. வெள்ளாடு இல்லாமெ செம்மறியாட மேச்சலுக்கு ஓட்ட மாட்டாக.

பாம்பு, விலங்கு வந்தா என்ன செய்வீங்க?

கோனா(ன்) கோலெடுக்கும் போதே வெசமருந்து கூடவே எடுத்துட்டு போவான்ம்பாக. பாம்பு தீண்டிட்டா ஆடு கத்தும் அத பாத்து கால கீரிவிட்டு மருந்து கொடுப்போம். ஆடுகள கூட்டமா பாக்குற காட்டு வெலங்குக தானா ஒதுங்கி போயிடும். வாகனத்துல அடிபட்டா எங்க வீட்டுக்காரம்மா உப்புக்கண்டம் போட்ருவாக.

இரவு நேரத்துல ஆடுகளோட தனியா படுத்துருப்பிங்க திருட்டு பயம் எதுவும் இருக்குங்களா?

ஆடு களவாடுறது உண்டுதேன். மோட்டார் பைக்குல ரெண்டு ஆட்ட பொத்தி போட்டுகிட்டு போயிருவாக. ஆடு புடிக்கிறாகன்னு தெரிஞ்சாலும் எதுவும் செய்ய முடியாது. ஆயிதத்தோட அஞ்சாறு பேரு வந்துருப்பே தனி ஆளா நிண்டமுட்டா போட்டு தள்ளிருவானுக. எங்களுக்கு ஆடு மேய்ப்பர் யாதவ சங்கம் இருக்கு. ஆடுதுறை வரைக்கும் எங்க ஆளுக பட்டி போட்டு ஆடு மேய்க்கிறாக, அப்புடி எங்க ஆளுக மூலியமா கேசு குடுத்து கண்டுபிடிச்சுகிடுவோம்.

ஒரு நாளு வருசத்துக்கு முன்னால இங்குட்டு(தஞ்சை) உள்ள கள்ளர்மாரு(கள்ளர்) சாதிக்காறவுக ஆட்ட களவாண்டுபுட்டாக. புதுக்கோட்ட பக்கந்தே வெள்ளாமெ வெளச்ச இல்லாம களவாடுவாக. இந்த பக்கமும் அப்படி செஞ்சுபுட்டாக. ஆட்டுக்காற சித்தப்பும், மேச்சக்கார பயலும் படுத்துருந்தாக. வண்டி வச்சு ஆடுகள ஏத்துனத பாத்துட்டு கையில இருந்த அருவாள வீசிபுட்டாரு கீதாரி. காலு நரம்புல பட்டு சுருட்டிகிட்டு விழுந்துட்டாங் களவாணிப்பய. பொறவு மந்திரி வைத்திலிங்கத்துக்கு(அ.தி.மு.க) வேண்டப்பட்டவன்னு சொல்லி கேசல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லிபுட்டாக.

இந்த ஊருக்காரவங்க உங்கள மரியாதையா நடத்துவாங்களா? கூலியெல்லாம் சரியா தருவாங்களா?

கோடையில கெட போட்டா, மறுக்க ஆத்துல தண்ணி வந்து வெவசாயம் பாத்து அறுப்பு முடிஞ்சுதே நெல்ல கெடகூலியா குடுப்பாக. கிட்டத்தட்ட ஒரு வருசம் ஓடிடும். ஆனா மொறையா குடுத்துருவாக. இப்பல்லாம் ஒடனே பணமா குடுத்துருவாக. என்ன ஒன்னு பத்து கெட போட்ட எடத்துல ஒரு கெடைக்கி உண்டான கூலிய தள்ளிக்க கீதாரிம்பாக. தாயா பிள்ளையா பழகிட்டு மறுக்க முடியாது. திருவிழா வருது உங்க படியா ஏதாவது கொடுங்கண்டு உரிமையா கேப்பாக. இந்த ஊருல ஆறு மாசம் ஆடு மேச்சுகிடுதோ நமக்கும் பங்குண்டுன்னு கையில கெடச்சத குடுப்பேன். சாமிக்கி குடுத்தாதானுங்களே மழதண்ணி பேஞ்சு பயிர் பச்ச மொழைக்கும் ஆட்டுக்கு மேச்சலிருக்கும்.

சாமிக்கு காசு கொடுத்தும் மழை தண்ணி இல்லாமெ ஊரே வறண்டு கெடக்கே சாமி ஏமாத்திடுச்சாய்யா?

ஆமான்னும் சொல்லாமல் இல்லைன்னும் சொல்லாமல் அழகாக சிரித்தார்.

– வினவு செய்தியாளர்.

மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?

0
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

மார்க்ஸ் பிறந்தார் – 7
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

குறிப்பு: மார்க்சின் பெற்றோர் மறையும் போது தங்கள் மகனது வாழ்க்கை ஒரு தோல்வி என்றே கருதினர். அறிவில் தேடலும், சிந்தனையில் கூர்மையும், ஆய்வில் சுயதிருப்தியின்மையும் மார்க்சை அலைக்கழித்து வந்தன. ஏற்றுக் கொண்ட சமூக அமைப்பு அங்கீகரிக்கும் வரைகையில் தனது மகன் ஒரு அறிஞராக வாழ்வில் கரை சேர வேண்டுமென்று மார்க்சின் தந்தை விரும்பினார். ஆனால் கார்ல் மார்க்சோ தனது வார்த்தைகளைக் கோர்த்து அதே சமூக அமைப்பை கேலியும், முரண்நகையும் கொண்ட விமர்சனத்தால் பதம் பார்க்கிறார். அதற்கு அவருக்கு கவிதைகள் முதலில் கை கொடுக்கின்றன. மார்க்சின் பிந்தைய எழுத்துக்களில் காணக்கிடைக்கும் உலகத்தரமான நகைச்சுவையை இங்கே காண்கிறோம். படித்துப் பாருங்கள்!

– வினவு

4.“உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்
அ) “உலகின் அகன்ற முகத்துக்கு” முன்னால் இரும்புக் கையுறையைத் தூக்கியெறிந்த மார்க்ஸ்

இரும்புக் கையுறையை வீசி எறிகிறேன்,
உலகின் அகன்ற முகத்தை அருவருப்பாகப் பார்க்கிறேன்,
அரக்கி பூமிக்குள் ஓடுகிறாள்.
என் மகிழ்ச்சியை நசுக்க முடியாது,
அழிந்த நாட்டில் கடவுளைப் போல
வெற்றி முரசொலிக்க நான் வருகிறேன்.
ஒவ்வொரு சொல்லும் செயல், நெருப்பு.
என் மார்பும் கடவுளைப் போன்றதே.
கார்ல் மார்க்ஸ்(1)

கார்ல் மார்க்ஸ் பெர்லினில் மாணவனாக இருந்த வருடங்களில் தத்துவஞான உணர்வில் மட்டுமல்ல அரசியல் உணர்விலும் தீவிரமான வளர்ச்சி அடைந்தார். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்திலேயே அவர் பிற்போக்கான எல்லாவற்றையும் தீவிரமாக வெறுத்தார் என்பதை நாம் கண்டோம். பான் பல்கலைக்கழகத்தில் அவர் இளம் எழுத்தாளர்களின் இலக்கியக் குழு ஒன்றில் சேர்ந்திருந்தார். அந்தக் குழு ஆபத்தானது என்று போலீசு இலாகா கருதியது. பான் பல்கலைக்கழகம் கொடுத்த சான்றிதழில் மார்க்ஸ் “கொலோனில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தார்’’(2) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கார்ல் மார்க்ஸ்

பிரஷ்ய முடியரசின் தலைநகரமான பெர்லினில் நாட்டின் அரசியல் வாழ்க்கையை அதிகக் கூர்மையாக உணரக் கூடிய வாய்ப்பு மார்க்சுக்குக் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் தீவிரவாதப் போக்குடைய இளம் எழுத்தாளர்களோடு பழகினார்; ஹான்ஸ் கேஃப்டரைப் போன்ற மிதவாத ஹெகலியவாதப் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார்; கருத்து வேறுபாடான விஞ்ஞான, அரசியல் மற்றும் மதப் பிரச்சினைகளைப் பற்றி மாணவர்கள் நடத்திய விவாதங்களில் கலந்து கொண்டார்.

கார்ல் தன்னிடம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த அரசியல் ரீதியான சந்தேகங்களைப் பற்றித் தன் தகப்பனாரிடம் பேசியிருக்க வேண்டும். இச்சந்தேகங்கள் ஹென்ரிஹ் மார்க்சிடமும் ஓரளவுக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் தன் மகனிடம் “அதிதீவிரமான இடதுசாரிக்” கருத்துக்கள் ஏற்படக் கூடிய சாத்தியத்தைப் பற்றி சிறு சமிக்கையைக் கண்டால் கூட அவர் பீதியடைந்தார். ஏனென்றால் மகனுடைய எதிர்காலத்துக்கு அதனால் ஆபத்தேற்படலாம். அவர் 1836ம் வருடத்தின் முடிவில் மகனுக்குப் பின்வருமாறு எழுதினார்: “சட்டவியலைப் பற்றி உன்னுடைய கருத்துக்களில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அவற்றை ஒரு அமைப்பாக மாற்றினால் புயல்கள் ஏற்படுவது சாத்தியமே. கல்வியாளர்களிடம் ஏற்கெனவே எவ்வளவு உக்கிரமான புயல்கள் வீசிக் கொண்டிருக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா? மற்றவர்களிடம் எரிச்சலூட்டுகின்றவற்றை முற்றிலும் அகற்றிவிட முடியாது என்ற போதிலும் குறைந்த பட்சம் வடிவமாவது சமரசமாகவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.”(3)

புயல்களை எழுப்பாதே, சமரசமாகவும் உடன்படக் கூடிய முறையிலும் நடந்து கொள், மற்றவர்கள் எரிச்சலடைகின்றவற்றை அகற்றி விடு வெல்ல முடியாத போர்வீரனுக்குரிய வீராவேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்த, புரட்சிகரப் புயல்களின் எதிர்கால “இடிக் கடவுளான”  ஒரு இளைஞனிடம் இப்படி அறிவுரை கூறப்பட்டது!

தகப்பனாருக்கும் மகனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அவர்களுக்கிடையில் ஒரு கண்ணாடித் தடுப்பு உருவாகியிருப்பதைப்  போலத் தோன்றியது. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் பொழுது சிரித்துக் கொண்டார்கள், அவர்கள் பாச உணர்ச்சியினால் இன்னும் கட்டுண்டிருந்தார்கள். ஆனால் ஒருவர் பேச்சை அடுத்தவர் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஏற்கெனவே இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. கார்ல் மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய நீண்ட ஒப்புதல் கடிதத்தைப் பற்றி முந்திய அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். அக்கடிதம் தகப்பனாரிடம் ஏற்படுத்திய விளைவு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

மார்க்ஸ் வருடம் முழுவதும் செய்த தீவிரமான ஆராய்ச்சி, அவருடைய அறிவார்ந்த, கவித்துவம் நிறைந்த தேடல் தகப்பனாருடைய அங்கீகாரத்தைப் பெறவில்லை, அவரிடம் எரிச்சலும் ஆவேசமுமே ஏற்பட்டது. அவர் கண்ணீர் விட்டுக் கொண்டே மகனைக் கடிந்து கொள்கிறார். என் மரணம் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், என்னுடைய இளைய மகன் எட்வார்டு சமீபத்தில் மரணமடைந்திருக்கும் பொழுது, குடும்பத்தின் ஒரே நம்பிக்கையான கார்ல் மிகவும் கசப்பான ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறானே என்று அவர் குமுறினார். அவன் தன்னுடைய நேரத்தையும் பலத்தையும் உடல்நலத்தையும் அர்த்தமற்ற நடவடிக்கைகளில் வீணாக்கிக் கொண்டிருக்கிறான், “அவன் இன்று நிர்மாணிப்பதை நாளைக்கே அழித்து விடுகிறான்”, அவன் “தன்னுடைய சொந்த வேலையைப்” பாராட்டுவதில்லை, “மற்றவர்களுடைய சாதனைகளையும்” தன்வயப்படுத்திக் கொள்வதில்லை, எந்தப் பயனுமே இல்லாத, தெளிவற்ற, சூக்குமமான கருத்தமைப்புகளில், “அர்த்தமில்லாத, உசிதமில்லாத” ஆராய்ச்சிகளில் தன்னுடைய திறமையை வீணாக்கிக் கொண்டிருக்கிறான்.

ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுடைய வாழ்க்கை முறையை நினைத்து வேதனைப்பட்டார்: “ஒழுங்கின்மை, அறிவின் எல்லாத் துறைகளினூடும் நாற்றமெடுக்கும் தேடல்கள், எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் ஊசிப்போன சிந்தனை, ஒரு குவளை பீரைக் குடித்துவிட்டுத் தறிகெட்டு ஓடுவதற்குப் பதிலாக மாணவனின் நீண்ட அங்கியுடன், வாரி விடப்படாத தலைமுடியுடன் அலைதல், எல்லா மரியாதைகளையும்-தகப்பனார் என்ற தகுதியையும்- அலட்சியப்படுத்திவிட்டு மற்றவர்களுடன் கலந்து பழகாமல் ஒதுங்கிக் கொள்ளுதல். உலகத்தோடு உறவாடுவதற்குப் பதிலாகத் துப்புரவில்லாத அறையில் அடைந்து கிடப்பது, அதன் மிகச் சிறப்பான குப்பைகளுக்கு மத்தியில் ஒருவேளை ஜென்னியின் காதல் கடிதங்களையும் கண்ணீருடன் எழுதப்பட்ட தகப்பனாரின் அறிவுரைகளைக் கொண்ட கடிதங்களையும் கிழித்துப் புகைக் குழாயில் போட்டுப் புகைபிடித்தல்….”(4)

நிகழ்காலத்தைப் பற்றி இந்த வர்ணனையே போதுமானது, ஆனால் எதிர்காலத்தைப் பற்றி? “நாகரிகமில்லாத படிப்பாளியுடன்” ஏழைக் குச்சில் நடத்துகின்ற வாழ்க்கை ஜென்னியைப் போன்ற ஒரு பெண்ணுக்குத் தகுதியான எதிர்காலமா? தகப்பனாருடைய வழிகாட்டுதல் இனிமேல் இல்லையென்றால் உலகியலை அறியாதிருக்கின்ற தன் மகனுடைய கதி என்னாகும் என்பதை நினைத்த பொழுது அவருடைய இதயம் புண்பட்டது. “தீங்கான பேய்களை” விரட்டி விட்டு எல்லாவற்றைப் பற்றியும் நிதானமாக, செய்முறை நோக்கில் சிந்திக்க வேண்டும் என்று அவர் மகனிடம் மன்றாடினார். பெற்றோர்களுக்கும் வருங்கால மனைவிக்கும் கார்ல் செய்ய வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் அவர் பட்டியலிட்டார்.

மகன் அவற்றை நிறைவேற்றினால் “சத்தியத்தின் பாதைக்குத்” திரும்புவதற்கு உதவி புரியும் என்று அவர் நம்பினார், அவை, “நாகரிகமில்லாத சிறுவனை ஒழுங்குமிக்க மனிதனாக, அனைத்தையும் மறுக்கின்ற மேதையை உண்மையான சிந்தனையாளனாக, கட்டுப்பாடில்லாத இளைஞர்களின் கட்டுப்பாடில்லாத தலைவனை சமூகத்துக்குத் தகுதியுடைய மனிதனாக மாற்றுவதற்கு உதவி புரியும்; இப்படிப்பட்ட மனிதன் விலாங்கு மீனைப் போல வழுக்கிக் கொண்டு போகாமல் போதிய சுய கெளரவத்தை வைத்துக் கொண்டும் அறவோர்களுடன் கலந்துறவாடுவதன் மூலமாக மட்டுமே தன்னை மிகவும் இனிமையான, சாதகமான முறையில் உலகத்தின் பார்வைக்குக் காட்டுகின்ற கலையைக் கற்க முடியும், மரியாதை, அன்பு, கெளரவத்தை இயன்ற அளவுக்குச் சீக்கிரமாகப் பெற முடியும், இயற்கை அன்னை தன்னிடம் அதிகமான அளவில் வழங்கியிருக்கின்ற திறமைகளை நடைமுறையில் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்குப் போதிய அறிவையும் சாதுரியத்தையும் அடைவான்”.(5)

ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனுக்கு எழுதிய கடைசிச் சொற்கள் இவை. அவர் 1839 மே மாதத்தில் மரணமடைகின்ற வரை படுத்த படுக்கையாக இருந்தார். அவர் சீக்கிரத்தில் மரணமடைந்துவிட்டதனால் தகப்பனாருக்கும் மகனுக்கும் இடையில் கசப்பான மோதல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது, ஆகவே கார்ல் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் தகப்பனாரைப் பற்றி இனிய நினைவுகளைக் கொண்டிருக்க முடிந்தது என்று ஒகுஸ்ட் கொர்நியூ எழுதியிருப்பது சரியாகும்.(6)

கார்ல் மார்க்சின் தாயாரான ஹென்ரி யேட்டா தன் மகனுடைய உடல்நலத்தைப் பற்றி எப்பொழுதும் அதிகமான அக்கறை காட்டினாலும், அவருடைய ஆன்மீகத் தேடல்களைப் பற்றி எதுவுமே புரிந்து கொள்ளாமலிருந்தாள். அவள் 1863 வரை உயிருடன் இருந்தாள். தன் மகன் ஒரு பரிதாபகரமான தோல்வி என்றே கருதினாள். மூலதனத்தைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் சிறிதளவு மூலதனத்தையாவது சேகரிப்பதற்குத் தன்னுடைய மகன் முயற்சி செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று அவள் கசப்புடன் கூறுவது வழக்கம். அவள் கருத்து ஒரு விதத்தில் சரியானதே. ஏனென்றால் மூலதனத்தை எழுதுவதற்காகத் தனக்குக் கிடைத்த சன்மானம் அதை எழுதிய காலத்தில் புகை பிடித்த புகையிலைச் செலவுக்குக் கூடப் பற்றாது என்று மார்க்சே ஒத்துக் கொண்டிருக்கிறார். முதலாளி வர்க்க, அற்பவாத நோக்கில் அவர் தன்னுடைய வாழ்க்கையை சிறிதும் லாபமில்லாத இலட்சியத்துக்கு அர்ப்பணித்துவிட்டார்.

அவர் “கண்ணியமிக்க” அறிவாளி என்ற முறையில் சமூகத்தில் நடமாட வேண்டும், தன்னுடைய அறிவை உபயோகித்து முழுப் பலனையும் (அது “பொது நன்மைக்காகவே”) அடைய வேண்டும் என்பது பெற்றோர்களின் இலட்சியம்; ஆனால் அந்த இலட்சியம் மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சுக்கு அருவருப்பாக, அந்நியமானதாக இருந்தது. அப்படி எத்தனை “அறிவாளிகளே” அவர் உரையரங்குகளிலும் வாழ்க்கையிலும் கவனித்திருக்கிறார்! (மூலதனத்தின் “பட்டம் பெற்ற கைக்கூலிகள்” எத்தனை பேர்களை அவர்களுடைய தகுதிகளுக்கேற்ப அவர் “சிறப்பித்திருக்கிறார்”!)

“கல்வியாளர்களுடன் புயல்களைத்” தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்குப் பதிலளிப்பதைப் போல இளம் மார்க்ஸ் தன்னுடைய கவிதைகளில் ஒன்றில் பின்வருமாறு எழுதினார்:

என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை,
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை,
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்.

கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்.

எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்;

ஓய்வு இல்லை, சோர்வும் இல்லை;
செயல் இல்லாத, விருப்பம் இல்லாத,
கிளர்ச்சியற்ற மெளனத்தில் அல்ல;

வலியெனும் நுகத்தடியின் கீழ்க்குனிந்து
ஏங்குகின்ற மோனத்தில் அல்ல;
ஏக்கம், கனவு, செயல் நமக்கு நிறைவேறும் வழியின்றி.(7)

மார்க்ஸ் எழுதிய கவிதைகள் எவ்விதத்திலும் பரிபூரணமானவை அல்ல; இந்த உண்மையை அந்த இளம் கவிஞரே நன்றாக உணர்ந்திருந்தார். ஆனால் இந்தக் கவிதைகள் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கின்றன, ஏனென்றால் அவை அவருடைய ஆன்மிகக் கிளர்ச்சிக்குக் கண்ணாடியாக இருக்கின்றன; உலகத்தைப் பற்றி அவருடைய அணுகுமுறையை, சமூக விருப்பு வெறுப்புக்களை, அவரிடம் வளர்ந்து கொண்டிருந்த சமூக உணர்வை அவை பிரதிபலிக்கின்றன.

பொதுவாகக் கலையும் சிறப்பாகக் கவிதையும் அரசியல் சூழ்நிலை மாற்றங்களை எப்பொழுதுமே கூருணர்ச்சியுடன் புரிந்து கொள்கின்றன; அவை சமூகக் கொந்தளிப்புக்களின் வெப்பமானியாக இருக்கின்றன. மற்ற வடிவங்களில் அரசியல் நடவடிக்கை தற்காலிகமாகச் சாத்தியமில்லாமலிருக்கின்ற பொழுது இது சிறப்பான உண்மையாகும். 1830-களின் முடிவில் ஜெர்மனியில் இந்த நிலைமையே நிலவியது; அங்கே “ஒவ்வொரு பொதுஜன இயக்கமும்…. மடிந்தது”(8). ஆனால் அது புயலுக்கு முன்பாக இருக்கும் அமைதியைப் போன்றதே.

புதுக்காற்று ஏற்கெனவே வீசத் தொடங்கிவிட்டது. 1835ம் வருடத்திலிருந்து இளம் எழுத்தாளர்களின் குரல் மென்மேலும் பலமாக ஒலித்தது. அவர்கள் இளம் ஜெர்மனி என்ற சங்கத்தின் உறுப்பினர்கள். அவர்கள் பத்திரிகை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் கோரினார்கள். ஹேய்னெவின் அங்கதக் கவிதை ஜெர்மனி முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. பிளாட்டென், ஃபிரெய்லிக்ராத் ஆகியோரின் சுதந்திர வேட்கைக் கவிதைகள் வெளியாகிக் கொண்டிருந்தன, கியோர்கு ஹேர்வெக் கவிதா வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். மேதாவிலாசம் நிறைந்த கவிஞரும் கட்டுரையாளருமான லுட்விக் பெர்னெ வெளிநாட்டிலிருந்து பிரஷ்ய எதேச்சாதிகாரத்துக்கு எதிராக முழங்கிக் கொண்டிருந்தார்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

இந்தக் காலகட்டத்தில் இளம் மார்க்ஸ், இளம் ஏங்கெல்ஸ் ஆகிய இருவருமே கவிதை மீது அசாதாரணமான அக்கறை காட்டுவதை நாம் காண்கின்றோம். அது இயற்கையே. அவர்கள் முதலில் எழுதியது கவிதைகளே; அவர்களுடைய முதல் வெளியீடுகளும் கவிதை நூல்களே. நெடுங்காலம் வரை மார்க்ஸ் தொழில் முறை எழுத்தாளராகவே விரும்பினார்.

இளம் மார்க்சின் கவிதைப் பரிசோதனைகளில் புயல் வீசப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் கலக உணர்ச்சிகளும் நிறைந்திருக்கின்றன. சுற்றிலுமுள்ள உலகத்தின் பால் தீவிரமான வெறுப்பையும் அதைச் சவாலுக்கு அழைப்பதையும் இக்கவிதைகளில் ஒருவர் தெளிவாகப் பார்க்க முடியும். அவருடைய கற்பனை அதிகமான அளவில் கட்டுப்பாடில்லாத, சூடேறிப்போன உணர்ச்சிகளை, துன்பியற் கதாநாயகனின் மிகையான உருவத்தைப் பிரசவித்தது. அந்தக் கதாநாயகன் “நெருப்புச் சக்கரத்தில் முறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறான்”, உலகத்தின் “கொடுமையான வாழ்க்கையைச் சுற்றித்” தன் கரங்களை வீசித் தன்னுடைய “முறுக்கேற்றப்பட்ட சாபத்தின்” மூலம் அதை நொறுக்கிவிடுவதாகக் கனவு காண்கிறான் (Oulanem என்ற சோக நாடகம்).(9) “நானே வாள், நானே நெருப்பு!” என்று ஹேய்னெ பிரகடனம் செய்தார். அவரைப் போல மார்க்ஸ் தன்னுடைய ஒவ்வொரு சொல்லும் “நெருப்பாக, செயலாக”(10) இருக்க வேண்டுமென்று ஏங்குகிறார்.

மனித வாழ்க்கையில் சில சந்திப்புகள் எவ்வளவு விசித்திரமானவை! 1840-களின் நடுப்பகுதியில் மார்க்சைச் சந்தித்தது ஹேய்னெயின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் சம்பவமாக இருந்தது; அவருடைய கவிதைக் கணைகள் அதிகமான அரசியல் கூர்மையை அடைந்தன. அதற்குச் சிறிது காலத்துக்கு முன்னர், 1830-களின் நடுப்பகுதியில், ஹேய்னெயின் கவிதை மார்க்சுக்கு அறிமுகமான பொழுது மார்க்சின் படைப்பு வளர்ச்சியில் அது அதே அளவுக்கு முக்கியமான பாத்திரத்தை வகித்தது.

1837ம் வருடத்திற்குள் 19 வயது நிறைந்த மார்க்ஸ் ஹேய்னெயின் நூல்களை ஏற்கெனவே நன்றாகப் படித்திருந்தார் என்பது ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் ஜெர்மனியில் ஹேய்னெயின் பெயரை உச்சரிப்பது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது. முன்பு மேற்கோள் காட்டிய மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் நாடு கடத்தப்பட்ட கவிஞர் எழுதிய சமாதானம் என்ற கவிதையிலிருந்து, ஷ்பிரேயே ஆற்றின் அழுக்குத் தண்ணீர் “ஆன்மாக்களைக் கழுவுகிறது, தேநீரை நீராளமாக்குகிறது”(11) என்ற வரியை வேண்டுமென்றே எடுத்தாளுகிறார்.

ஜெர்மானியக் கவிதையின் கலகக்காரரான ஹேய்னெ அந்தச் சமயத்தில் மார்க்ஸ் வழிபட்ட “தெய்வங்களில்” ஒன்றாக இருந்தார் என்பதில் ஐயமில்லை; அவர் கவிதைகள் இதைப் பிரதிபலிக்கின்றன. அவற்றில் ஹேய்னெயின் புதிய யாப்புகளையும் அடிக்கடி வருகின்ற சந்தப் பொருத்தமின்மைகளையும் நாம் உணர்கிறோம்; இப்பொருத்தமின்மைகள் மார்க்சிடம் ஏற்பட்டிருந்த “கலக உணர்ச்சியின்” குமுறல்களுடன் முற்றிலும் பொருந்தியிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக ஹேய்னெயின் அங்கதத்தை அவற்றில் உணர்கிறோம். அந்த அங்கதம் புத்தார்வவாதம் மற்றும் “பூமியில் வேரூன்றிய” யதார்த்த வாதம், தன்னுணர்ச்சிப் பாங்கு மற்றும் சமூக உணர்ச்சியின் கலவையாக இருந்தது.

“உலகின் அகன்ற முகத்துக்கு” முன்னால் இரும்புக் கையுறையைத் தூக்கியெறிந்த மார்க்ஸ் அங்கதம், முரண்நகை என்ற வாளைத் தூக்கிப் “பருத்த வயிறுகளைக் கொண்டவர்களின் பொய் ஒழுக்கத்துக்கும் சீர்மைக்கும்” பலமான அடிகளைக் கொடுக்க மறக்கவில்லை. இவ்விஷயத்தில் ஜெர்மன் அற்பவாதத்தையும் “முட்டாள்தனமான, ஊமை ஜெர்மன் பொதுமக்களையும்” அவர் ஏளனம் செய்கின்ற வரிகள் விசேஷமான அக்கறையைக் கொண்டிருக்கின்றன.

ஜெர்மன் மக்கள், முட்டாள் ஊமைகள்
நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
புயல் இங்குமங்கும் சுழன்றடிக்கிறது,
மேகங்கள் இருண்டு தெரிகின்றன, நம்பிக்கையில்லை;
மின்னலடிக்குது, பாம்புகள் மறைகின்றன,
உணர்ச்சிகள் மாறாமல் இருக்கின்றன.

ஆனால் கதிரவன் தோன்றியதும்
காற்று கிசுகிசுக்கிறது, புயல் தணிகிறது;
மக்கள் கடைசியில் எழுகிறார்கள்,
குழப்பம் முடிந்துவிட்டது என்று
புத்தகத்தை எழுதுகிறார்கள்.

அவர்கள் புனைகதையைத் தேடுகிறார்கள்.
எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்வோம்,
நடைபெற்றவை வேடிக்கையே ஆனாலும்
சொர்க்கம் இப்படி விளையாடக் கூடாது.
எல்லாவற்றையும் முறைப்படி செய்ய வேண்டும்;
முதலில் தலை, பிறகு காலைத் தொட வேண்டும்.

குழந்தை போல அவர்கள் நடக்கிறார்கள்:
மாண்டு மறைந்தவற்றைத் தேடுகிறர்கள்!
சொர்க்கமும் பூமியும் தம் வழிகளில் போகட்டும்.
நாம் நிகழ்காலத்தை நேராகப் பார்ப்போம்.
அவை பழகிய பாதைகளில் சென்றன;
கடலலைகள் கரையை அமைதியாகத்
தொட்டுத் திரும்புகின்றன.(12)

ஒரு நபர் தன்னுடைய பணப்பையைப் பத்திரமாக மறைத்து வைத்திருக்கும் பொழுது அவர் தன்னைப் பற்றி எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும் என்று ஜெர்மன் அற்பவாதி நினைக்கிறார். இந்தச் சுயதிருப்தியை மார்க்ஸ் ஏளனம் செய்கிறார். தேளும் ஃபேலிக்சும் என்ற தலைப்பில் அவர் எழுதிய நகைச்சுவை நாவலில் “பழமையான ஜெர்மன் மரபை”, “அதிகமான கிறிஸ்துவத் தன்மை கொண்ட” குடும்பத்தைப் பற்றி ஏளனமாகச் சித்திரிக்கிறார், பிற்போக்கான மனிதர்களையும் மிதவாதத்துக்கு எதிரான போர்வீரர்களையும் கேலி செய்கிறார். மார்க்சின் முதிர்ச்சிக் கால நூல்களில் உள்ள சிறந்த நகைச்சுவையின் சாயல்களை இங்கே நாம் பார்க்கிறோம். சிறந்த ஒவ்வொன்றுக்கும் அதன் எதிரிடை இருக்கிறது, அந்த எதிரிடை அதை அகற்றிவிடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்: இராட்சசனுக்கு எதிரிடை குள்ளன், அதைப் போல மேதைக்கு அற்பவாதி, மாவீரன் சீஸருக்கு நடிப்புப் பேர்வழி ஆக்டேவியனஸ், சக்கரவர்த்தி நெப்போலியனுக்கு முதலாளி வர்க்க அரசன் லுயீ ஃபிலீப், தத்துவஞானி கான்ட்டுக்குப் பெண்களை வட்டமிடுகின்ற குரூக், கவிஞர் ஷீல்லருக்கு ஹோஃப்ரட் ராவுபஹ், லேய்ப்னித்சின் வானத்துக்கு வோல்ஃபின் வகுப்பறை. அதைப் போல, கடலில் அடிக்கின்ற ஒவ்வொரு புயலும் சேற்றையும் புழுதியையும் முன்னனுமானிக்கிறது.(13)

குறிப்புகள்:

(1)Marx, Engels, Collected Works, Vol. 1, p. 586.
(2)Ibid., p. 658.
(3)Ibid., p. 665.
(4)Ibid., p. 688.
(5)Ibid.
(6)Auguste Cornu, Karl Marx und Friedrich Engels, Leben und Werke, Bd. 1, S. 103–104.
(7)Marx, Engels, Collected Works, Vol. l., pp. 525 – 527.
(8)Marx, Engels, Collected Works, Vol. 6, p. 32.
(9)Marx, Engels, Collected Works, Vol.1, p.599.
(10)Ibid., p. 586.
(11) Ibid., p. 18.
(12) Ibid., pp. 575-576.
(13) Ibid., p. 628

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்