Wednesday, July 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 534

பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் !

0

ன்டியாஸ்பென்ட் பத்திரிக்கை ஆய்வின்படி உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் இராஜஸ்தான் ஆகிய ‘பாரத தேச’த்தின் பார்ப்பனிய மாநிலங்கள் பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 மற்றும் தேசியக் குற்றப்பதிவு மையத்தின் மாதிரிப்பதிவு மதிப்பாய்வு – 2014 லுள்ள எட்டு குறியீட்டு எண்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வறிக்கையை அப்பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகிறது
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகிறது

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகின்றது. அதுவே மேற்குவங்கத்தில் 13 இலட்சமாகவும் பீகாரில் 12.5 இலட்சமாகவும் இருக்கிறது. நான்கில் ஒரு இராஜஸ்தான் பெண்ணிற்கு 18 வயது முடியும் முன்னரே திருமணம் நடக்கிறது.

மேற்குவங்கத்தில் பெண்களின் சராசரித் திருமண வயது 19.3 ஆக இருக்கிறது. உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் சராசரி திருமண வயது 19.4 ஆக இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில் பிரசவிக்கும் ஒவ்வொரு இலட்சம் பெண்களில் 29 பெண்கள் உயிரிழக்கிறார்கள். அடுத்தநிலையில் இராஜஸ்தானில் 23.9 பெண்களும், பீகார் மற்றும் ஜார்கண்டில் 21.4 பெண்களும் பலியாகின்றனர்.

ஜூன் – 2016 -ல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஒருத்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தனியார் மருத்துவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி ஏழை இந்தியப்பெண்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கவேண்டும் என்பதுதான் அது. அதாவது வருடம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடித்து விட்டு மாதம் ஒரு நாள் இலவச உபாசம் இருந்து ஏழைகளுக்கு அருள்பாலிக்க வேண்டுமாம்.

அரசு மருத்துவமனைககளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளைப் மேம்படுத்துதல் போன்ற இன்றியமையாத செயல்திட்டங்கள் மூலமே ஏழைகளைப் பாதுகாக்கமுடியும். இதை மறுத்து விட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சுரண்டலை மறைப்பதற்கு இப்படி ஒரு நாடகம்!

இராஜஸ்தானில் ஐந்தாவது வகுப்பு செல்லும் முன்னரே 40 விழுக்காட்டு பெண் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான இந்திய மக்கள் கருதுவதை விட அதிகமாக பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பெண் குழந்தைகளை சுமையாக கருதுவதால் பதின்மபருவத்தை எட்டும் முன்னரே திருமணம் செய்கின்றனர். இந்தியாவில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்களுக்கு 18  வயதிற்கு முன்னரே திருமணம் செய்யப்படுகின்றது.

பதினைந்து வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும் இந்தியப்பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் அதிகமாகும் (2014-ம் ஆண்டின் படி). இது 2001 ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 1.7 இலட்சத்தை விட 88 விழுக்காடுகள் அதிகமாகும். இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.  எந்த மதமாக இருந்தாலும் பிற்போக்காக இருப்பதில் பெரிய வேறுபாடு இல்லை. இதில் கூடுதலாக முசுலீம்கள் பிற்போக்கான நடவடிக்கைகளை பின்பற்றுவதாக உதார் விடும் இந்துமதவெறியர்களே இந்தயாவின் பெண்ணடிமைத்தனத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர்.

இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.
இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.

இந்தியாவில் ஆண்-பெண் பாலின விகித வேறுபாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரியானாவில் குழந்தை பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 834 பெண்களாகவும், அதுவே பஞ்சாப்பில் 846 ஆகவும் இருக்கிறது. புள்ளிவிவரங்களில் சிற்சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்தியா முழுதும் இதே அவலநிலைதான். குறிப்பாக பார்ப்பனிய இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் வட இந்திய (இந்து பேசும்) மாநிலங்களே பெண்களை ஒடுக்கி ஆளும் காட்டுமிராண்டித்தனத்தில் முன்னணியில் இருக்கின்றன. பெண்ணை தாயாக போற்றும் இந்துத்துவ மரபின் உண்மை முகம் இதுவே.

இந்தியப் பெண்களில் 1.9 கோடி பேர்கள் ஏழு குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே 10 ஆண்டுகளை உத்திரப்பிரதேசப் பெண்கள் செலவிடுகின்றனர். உத்திரபிரதேச மக்களின் சராசரி ஆயுட்காலமான 60 ஆண்டுகளில் ஆறில் ஒரு பங்கு இப்படியாக வீணாகிறது.

பெண்களுக்கு கிடைக்கும் உயர் கல்வியறிவு குழந்தைப்பிறப்பு விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தாக்கத்தைச் செலுத்துகிறது. பட்டதாரியாக உள்ள பெண்களின் குழந்தைப் பிறப்பின் விகிதம் 1.9 ஆக இருக்கும் அதேநேரத்தில் கல்வியறிவு மறுக்கப்பட்ட பெண்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் 3.8 ஆக இருக்கிறது.

பெரும்பாலான இந்தியப்பெண்கள் பள்ளிப்படிப்பை முடித்து பட்டதாரியாவதற்கும் பணிக்குச் செல்வதற்கும் இந்தியச்சமூகத்தில் நிலவும் சாதி,மத மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் தடையாய் இருக்கின்றன. இந்தியாவின் நகரங்களில் நூற்றில் 14 பெண்களும் கிராமபுறங்களில் நூற்றில் ஒருப்பெண் மட்டுமே 12 ம் வகுப்பை முடிக்கிறார்கள் என்று தனியார்த் தொண்டுநிறுவனத்தின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

பீகார், இராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள், பெண்களின் கல்வியறிவில் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. 2010-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி இந்தியப்பெண்களின் சராசரி பள்ளிவாழ்க்கை 4.1 ஆண்டுகளாகவும் ஆண்களின் சராசரி பள்ளிவாழ்க்கை 6.1 ஆண்டுகளாகவும் ஆகவும் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் மேட்டுக்குடி கல்விக்காக இந்திய அரசு செலவழிக்கும் பணத்தை ஒப்பிட்டு பாருங்கள்!

ஐக்கியநாடுகளுக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்(UNESCO) தகவலின்படி பெண்குழந்தைகளின் வருகைப்பதிவு தொடக்கப்பள்ளியில் 81 விழுக்காடாக இருக்கிறது. அதுவே இரண்டாம் நிலைப்பள்ளிகளில் 49 விழுக்காடுகளாக தேய்ந்துவிடுகிறது. சமூகப்பொருளாதர ஏற்றத்தாழ்வு சீரழிவில் சிக்கித்திணறும் இந்தியச்சமூகத்தில் பாலின வேறுபாடு சிறுவர்களின் கல்வியையும் விட்டுவைப்பதில்லை. பெண்கள் வேலைக்கு போகக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவரும், சங்கரசாச்சாரிகளும், வகாபிய மதவெறியர்களும் பத்வாக்களை விதிப்பதின் சமூக அவலமே மேற்கண்ட நிலை.

15 வயது முதல் 25 வயது வரையிலான இந்தியப்பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் படிப்பறிவு மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்ற ஒரு பொது இலக்கை அடைவதில் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் கூறுகிறது.

மோடியின் ஆட்சி ஆடி கார் கிடைக்குமிடமாக இந்தியாவை மாற்றியிருக்கிறதே அன்றி பெண்கள் முன்னேறும் நாடாக மாற்றவில்லை! மூச்சுக்கு மூச்சு பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண்களுக்கு கழிப்பறைகள் என்று உச்சாடனம் செய்யும் ஆளும் வர்க்கம் நம் நாட்டின் சரிபாதி மக்களான பெண்களை எவ்வளவு கொடிய நரகத்தில் தள்ளியிருக்கின்றன என்பதற்கு இவ்விவரங்களே சான்று!

இந்துமதவெறியர்களின் இருப்பு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை பெண்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் ஒழிப்பு போரில் பெண்கள் படையாக கிளம்பி வரவேண்டும்!

– சுந்தரம்

செய்தி ஆதாரம்:
Uttar Pradesh, Bihar, Rajasthan: Worst States For Women, J&K Catching Up
Centre launches scheme for pregnant women 13 days after PM Modi moots idea at rally
16,000 ‘illegal’ hysterectomies done in Bihar for insurance benefit30% women married under age 18
19 Million Women In India Have 7+ Child Births
84% Of 12 Million Married Children Under 10 Are Hindus
Uttar Pradesh, Bihar, Rajasthan: Worst States for Women, J&K Catching Up

காவிரியை அழிக்கும் காவி மேலாண்மை வாரியம்

0

று என்பது
பயன்பாடு மட்டுமா?
பண்பாடும் கூட.

Cauveryஆறு காய்ந்தால்
ஊர் காயும்
உறவு காயும்,
ஒவ்வொரு செடி, கொடி
பேர் காயும்,
தாவரம் அண்டிய
பல்லுயிர் மாயும்.

மரமென ஒன்றிருந்தால்
வந்து
பறவைகள் கூடும்,
நிழலிடை அறிமுகத்தால்
மனித உறவுகள் நீளும்.

மரங்களின் வேர்வந்து
நதியும் பொசியும்
நதியின் தோள்வந்து
மரம் நிழல் கசியும்
இயற்கையின்
இயங்கியல் உறவில்
பல மனங்கள்
இணையும்!

cauvery-delta-sliderஆறு அற்றுப்போனால்
மரங்கள் பட்டுப்போகும்
மரம் பட்டுப்போனால்
மழைஅற்றுப்போகும்
மழைஅற்றுப்போனால்
ஊர் நிலையற்றுப்போகும்
ஊர் நிலையற்றுப்போனால்
உறவுகள் கிளை அற்றுப்போகும்.

மண்ணுள் விரவி
கடல்நீர் உவர்ப்பை
தன்னுள் தகர்த்து
விளைநிலம் பெருக்கி
விழையும் தாய், தந்தை
தமக்கை, மாமன்,
பெயரன், பெயர்த்தி
உறவுகள் செழிக்க
காவிரி வேண்டும்!

ஆடிப்பெருக்கில்
கலந்த மஞ்சளை
தேடித்தழுவி
செவுள்களில்
திருப்பித்தரும்
சிறுமீன்கூட்டம்
ஈரம் தேடித்தேடி
கருமணல் துளைத்து
துடித்துச் சாவது
ஊர்மரணத்தின்
ஆழ் குறியீடு!

cauvery-parchedகாவிரி இழந்தோம்
கலை இழந்தோம்….
தண்ணீரைத் தவிர
மற்ற எல்லாம் வருகிறது
காவிரியில்

தண்ணீர் வரும் போது
வருகிறது கழிவு
தண்ணீர் வராதபோது
சு. சாமி, ஆர்.எஸ்.எஸ்.
சமஸ்…

பழங்குடித்திராவிடர்
பராமரித்த அணைகளை
‘அம்பை விட்டு உடை’ – என்று
இந்திரனிடம் வேண்டிய
ஆரிய ரிக் வேத ஓதல்கள்
மாறிய பொருளில்
ரீ ரிக்கார்டிங் ஆகின்றன
இப்போது –
‘அணையை அடை’!

Subramanian-Swamy_1
கடல்நீரை குடிநீராக்கு – என்பது சு. சாமியின் திமிர்வாதம்

உரிமையைக் கேட்டால்
போய்
கடல்நீரை குடிநீராக்கு – என்பது
சு. சாமியின் திமிர்வாதம்,
கேட்பதற்கே
தமிழினத்திற்கு தகுதியில்லை – என்பது
சமஸ் திமிரின் பிடிவாதம்.

அனல் வாதம், புனல் வாத்ததால்
அன்று சமணர்கள் கொலை
ஆர். எஸ். எஸ். பரிவாரத்தால்
இன்று காவிரிக்கொலை!

காவிரி மேலாண்மை வாரியத்தை
மட்டுமல்ல
காவிரியையே அழிக்கும்
காவி மேலாண்மை வாரியம்.

நீரிழிவுதுடைக்க
பேரழிவு தடுக்க,
தடம் அழிக்க வரும் பகையை
குறிவைத்து
கரை உடைக்கும் காவிரி
நம்மிடம் பொங்கட்டும்!

– துரை. சண்முகம்

Indian Constitution and Secularism

0

apsc

Ambedkar-Periyar Study Circle
(An independent student body recognized by IITMadras)

Indian Constitution and Secularism

 

 

Every now and then we can hear the cry for “Uniform Civil Code” being raised by the Hindutva leaders. More recently they have re-initiated their propaganda about the need for uniform civil code. The hindutva forces give uniform civil code an importance equal to what they give for the Ayodhya issue, as they believe that it would take them to their goal of Hindu Rashtra. By targeting the polygamy and triple talaq practices of the Muslim men, they are trying to portray the Hindu personal law as more progressive.

civil-code-1
பொது சிவில் சட்டம் குறித்த புதிய கலாச்சாரம் வெளியீட்டு நூலின் அட்டைப் படம்

“If India is a true secular state then why not bring a civil code that is common for all Indians” is the question put forth by the allies of Hindutva, and this is the question that their opponents always wish to skip from answering. Hence the Hindutva forces conclude that, this is pseudo-secularism and in fact this argument makes most of the ‘Hindus’ to think so. For this purpose they put forth a fraudulent description for secularism as “To treat all religions equally”. But the true meaning of secularism is “To forbid any religion from controlling the government, its administration and the civil society”.

The question here is whether the Indian constitution and the judiciary is truly secular? The answer for this question would eventually be ‘No’, if we take a look at the recent supreme court verdicts on most of the sensitive issues that took national attention. It has been proved in many occasions that the Articles 25 and 26 of the constitution that speaks about the Freedom of Religion, Religious Belief and Religious Institutions can be interpreted and used in favor of implementing “Sanatana Dharma” over the demands for social justice.

Ayodhya case is an apt case which shows, how these Articles in the Indian Constitution can be effectively used in favor of Hindutva Propaganda. Not only the 2010 Allahabad HC verdict that fixed the exact birth place of Ram at the disputed Ayodhya site, but also the previous verdicts in the same case by the lower courts were based on these Articles. The 1949 verdict that allowed entry to perform daily worship for the Idols that were placed inside the Mosque by the Hindu Nationalists, restrained Muslims from entering, based on the above secular Articles from the Indian Constitution. In 1992, when the Babri Masjid was demolished the Hindutva groups had in fact got permission for assembling near the disputed site on the pretext of performing bhajans. Permission for the so called bhajan on December 6 was in fact given by the supreme court, and this too was based on the Articles in Indian Constitution.

common-civil-code-2Same is the case with Afzal Guru, as stated in the Supreme Court judgment, he was awarded capital punishment to satisfy the collective conscience of the society, though there was no direct evidence amounting to criminal conspiracy and all evidences against him were circumstantial. And the collective conscience of the society that was mentioned in the Supreme Court verdict is in fact the Hindu conscience that was crafted by the Hindutva propaganda and the Afzal Guru was hanged to satisfy this Hindu conscience.

Last year, a request by a bunch of Non-Brahmin, archaka students from Tamilnadu, to be appointed as temple priests was turned down by Supreme Court. The verdict in fact said Non-Brahmins can also be temple priests, but only if it is not against the Agamas. While media reports proclaimed that the supreme court has ordered in favor of the students, nobody bothered to point out that if such an appointment is made, then it can be easily proved that it is against Agamas and the appointment can be cancelled by vested Brahminical interests.

The Ram Sethu project was stalled with the court accepting Puranas as evidence against the scientific reasoning and the then DMK government of Tamilnadu faced the ire of Supreme Court for being rational. Same happened with the Chidambaram temple case where Article 26 was used to handover the temple and its properties to the corrupt Dikshitars who were actually looting this public property.

uniform-civil-code-2Though the preamble to the Constitution of India states that it is secular, there is no clear definition for religion and secularism in the Indian Constitution and the Supreme Court’s definition for religion or religious beliefs in its judgments is a polar opposite to the true meaning of Secularism.

We can cite many such cases, of different backgrounds, verdicts from different courts, but all the verdicts have one thing in common, the psychology that binds these verdicts comes from the Upper Caste Hindu Mentality. The Indian Constitution, the Indian Criminal Law and the Indian Penal Code all exists but in papers. It is the Hindu conscience that rules the heart of the Indian judiciary.

Indian constitution and secularism

Indian Constitution and Secularism
Talk By Justice D. Hari Paranthaman

Justice D Hari Paranthaman is a retired judge of the Madras High Court. After graduating from the Madras Law College, as a lawyer he became very active in fighting cases in support of workers and also took part in many democratic struggles against the corruption within the judicial system and against casteism and communalism. During his tenure as High Court judges from 2009 to 2016, he gave many judgements establishing social justice and protecting the rights of oppressed people including women, dalits, loan-burdened students from poor families and low-level workers.

Venue : HSB 356
Time : 26th Oct, 5:15 pm

apsc.iitm@gmail.com
apsc@smail.iitm.ac.in

1991 தனியார்மய சீர்திருத்தம் – பலன் யாருக்கு ? சிறப்புக் கட்டுரை

3
Global-poverty

1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ? இரண்டாம் பாகம்

ந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதவாது 140.78 இலட்சம் கோடி ரூபாய்கள். இது 1991இல் புகுத்தப்பட்ட தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளின் சாதனையால் வந்தது என்கின்றன ஆளும் வர்க்க பத்திரிக்கைகள்.

1991 சீர்திருத்தம், இந்தியாவில் வறுமையை ஒழித்ததா? என்ற கேள்விக்கு சென்ற கட்டுரையில் விடையளிக்க முயற்சி செய்தோம். தி இந்து ஆங்கிலே நாளேடு டெண்டுல்கர் கமிட்டி ஆய்வை மட்டும் எடுத்துக்கொண்டு 1993இல் 45.3% ஆக இருந்த வறுமைக் கோடு சதவீதம் 2012இல் 21.9% ஆக குறைந்திருக்கிறது என்று செய்த பிரச்சாரம், தனியார்மயத்தை ஆதரிப்பதற்காக பல்வேறு வறுமைக்கோடு குறித்த ஆய்வுகளை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறது என்று பார்த்தோம்.

இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 80%, 60% 50%, 21.9% மற்றும் 15% என்ற பல ஆய்வு முடிவுகளுள் எதை எடுத்துக் கொள்வது என்பதில் ரமேஷ் டெண்டுகல்கரின் ஆய்வு முறை, மோசடியானது என்பதுடன் இத்தகையவர்களின் வறுமை கோடு குறித்த ஆய்வு முறையே பொதுநலத்திட்டங்களிலிருந்து அரசு விலகிக்கொண்டு ஏகாதிபத்திய தனியார் தரகு முதலாளிகள் சூறையாடுவதை நியாயப்படுத்துவதற்காக எழுதப்பட்ட கள்ளக் கணக்கு தான் என்று வலியுறுத்தியிருந்தோம்.

அப்படியானால் இந்தியாவின் வறுமை நிலைதான் என்ன? செல்போன், கார், பைக், கம்ப்யூட்டர், கலர் டிவி, ஏரோபிளேன், ஸ்பிளிட் ஏசி, ஆன்லைனில் கோபி மஞ்சூரியன், வீட்டு லோன், நீரிழிவு, வழுக்கைத் தலை மற்றும் ஆண்மைக் குறைவிற்கு அதிநவீன சிகிச்சை, பாலீதின் பாக்கெட்டுகளில் பாரம்பரிய குதிரைவாலி, கஸ்தூரி மஞ்சள் வியாபாரம், அமெரிக்க மாப்பிள்ளை,  சாப்ட்வேர் வேலை, ஊபர், ஓலா போன்ற பன்னாட்டு கம்பெனிகளில் டிரைவராக வேலை பார்க்கும் வாய்ப்பு, கோக-கோலா, பெப்சி போன்ற தாகம் தீர்க்கும் பானங்கள், தலித்துகளை தொழில்முனைவோர்களாக மாற்றும் மோடியின் ஸ்டேண்டப்-இந்தியா போன்றவையல்லாம் 1991 சீர்திருத்தத்தின் சாதனைகள் என்கிறார்கள்.

இப்படிச் சொல்பவர்கள் யார்? நாட்டின் மொத்த ஜி.டி.பியான 140.78 இலட்சம் கோடியில் ஒவ்வொருவரும் பெற்ற பங்கு என்ன? மக்கள் என்ன நிலையில் வாழ்கிறார்கள்? 1991 சீர்திருத்தத்தால் பலனடைந்தவர்கள் யார்? என்பதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

அதற்கு 1991 தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கைகள் என்ற பெயரில் இந்தியாவில் என்ன செய்தார்கள் என்பதை இதுவரை தனியார்மய சீர்திருத்தம் பற்றி தெரியாத வாசகர்களுக்காக கீழ்க்கண்ட ஐந்து கருத்துக்களை சுருக்கமாக தொகுத்துக் கொள்வோம்.

1991 சீர்திருத்த கொள்ளை(கை)கள்!

  1. உலக பன்னாட்டு நிதி முனையத்தின் (IMF) கட்டளையின் படி 1991 சீர்திருத்தம், இந்தியாவின் பணமதிப்பை ஜூலை-1991 அன்று 25% குறைத்தது. அதாவது ஒரு தொழிலாளி ஒரு நாள் கூலியாக ரூ. 40 பெற்றுக்கொண்டு 10 ரூபாய்க்கு அரிசி, 10 ரூபாய்க்கு உடை, 10 ரூபாய்க்கு மருத்துவம், 10 ரூபாய்க்கு கல்வி என செலவழிப்பார் எனில் 1991 சீர்திருத்தம், தொழிலாளி உணவிற்கோ, உடைக்கோ, மருத்துவத்திற்கோ, அல்லது கல்விக்கோ செலவிடமுடியாதபடி பகிரங்கமாக கொள்ளையிட்டிருக்கிறது. இப்படித்தான் உலக ஏகாதிபத்தியக் கும்பல்கள் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் (1936, 1950, 1975, 1983, 2008), இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் பணமதிப்பை குறையவைத்து, மக்களின் வாயிலும் வயிற்றிலும் அடித்து தங்களது பணப்பையை நிரப்புகின்றனர். இதை நிறைவேற்ற ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகள் நரசிம்மராவ், மோடி போன்ற புல்லுருவி அரசாங்கங்களை வைத்துக்கொண்டு ஐ.எம்.எப் மற்றும் உலகவங்கி மூலமாக நிறைவேற்றுகின்றனர். இவ்வாறு 1991 காலகட்டம், இந்திய நாடு, ஏகாதிபத்தியக் கும்பலால் சிறைபடுத்தப்பட்டு மறுகாலனிய நிலைக்குள் புகுந்ததைக் காட்டுகிறது.
  2. 1991, ஜூலை 4-18 தேதிகளுக்கிடையில் கிட்டத்தட்ட இந்தியாவின் 47 டன் தங்கம் ரகசியமாக மக்களுக்கு தெரியாமல் இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டது. இந்த நாளில் இருந்து, தங்கம் மட்டுமல்லாது பிற கனிம வளங்கள், காடுகள், இந்தியாவின் இயற்கை வளங்கள் பன்னாட்டு நிதி முதலைகள் சூறையாடும் வண்ணம் சட்டப்பூர்வமாக திறந்துவிடப்பட்டது. இதற்கு தாராளமயக் கொள்கை என்று பெயர்.
  3. பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவதற்கு ஜூலை 4, 1992இல் இந்தியாவின் தொழிற்துறை கொள்கை வெளியிடப்பட்டது. இறக்குமதி தொடர்பான விதிகளை இரத்து செய்து, தனியார் முதலாளிகள் கொள்ளையிடும் வண்ணம் பொருளாதாரக் கொள்கை வடிவமைக்கப்பட்டது. ஜூலை 24, 1991 மன்மோகன் சிங்கின் பட்ஜெட், பல்வேறு மானியங்களை வெட்டுவது, விலைவாசியை ஏற்றுவது என்று மக்களை கசக்கி பிழியும் அறிவிப்புகளை ஒருபக்கம் வெளியிட்டுவிட்டு மறுபக்கம் இறக்குமதி வரிச்சலுகை, நாட்டுவளம் சூறையாடல், பணமதிப்பு சரிவு வரை கார்ப்பரேட்டுகள், நிதிமூலதனக் கும்பல்கள் சார்பாக, உலக வங்கி எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்தது.
  4. தனியார்மய தொழிற்துறை கொள்கையாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கொந்தளித்து நாடெங்கிலும் போராட்டங்களை நடத்துவார்கள் என்பதற்காக 1991 சீர்திருத்த பட்ஜெட், இராணுவத்திற்கு மட்டும், பாதுகாப்பு படைகளை மேலும் உருவாக்கிட 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது! இன்று மோடி கும்பல் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், அன்னிய நேரடி முதலீடு போன்றவற்றை அமல்படுத்தவும் ஆர்.எஸ்.எஸ் அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றவும் அதை எதிர்க்கும் இந்திய நாட்டு மக்களை ஒடுக்கவும் இராணுவத்திற்கு மட்டும் 2.58 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை ஒப்பிட்டு பார்த்தால் சீர்திருத்தத்தம் என்பது யாருக்கானது? சீர்திருத்தத்தின் விளைவுகள் எப்படிப்பட்டவை? என்பது தெரியவரும்.

மேற்கண்ட 1991 சீர்திருத்த கொள்கைகள் தான் இன்றைய 140.78 இலட்சம் கோடி ரூபாய் ஜி.டி.பிக்கு காரணம். இப்பொழுது ஒவ்வொருவரின் பங்கை ஆராய்வது நமக்கு எளிதாகும்.

1991 சீர்திருத்தம்-இந்திய விவசாயத்தின் நிலை

இந்தியா ஒரு வேளாண்மை நாடு என்பதால் முதலில் விவசாயத்துறையை எடுத்துக்கொள்வோம். நீங்கள் விவசாய வர்க்கத்தைச் சார்ந்தவர் என்றால் உங்களின் நிலையை உங்களுக்கே விளக்கி காட்ட வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒட்டுமொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் என்னவாக இருந்தது என்பதற்கு தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த வரைபடத்தை மீண்டும் தமிழ்படுத்தி வரைந்தோம்.

விவசாயத் துறை

1951-52இல் மொத்த உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 51.45% ஆகும். 1991 சீர்திருத்தம் புகுத்தப்படும் பொழுது வேளாண்மையின் பங்கு 28.54% ஆக குறைந்து, கடந்த 25 ஆண்டுகளில் வேளாண்மையின் பங்கு உருத்தெரியாமல் 15.4% ஆக குறைந்திருக்கிறது. 1991 சீர்திருத்தம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அடித்து ஒடித்திருக்கிறது.

இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் ‘தனியார்மயம் போற்றி!’ என்று ஜால்ரா தட்டும் எந்த அடிவருடிகளும் மண்வாசனை அறியாத தற்குறிகள் என்று இதிலிருந்து உங்களுக்கு எளிதில் நிரூபணம் ஆகியிருக்கும் இல்லையா? அப்படியானால் விவசாயிகளின் நிலை என்ன?

ரூபே (RUPE) அரசியல்பொருளாதார ஆய்வதழில், 1991 சீர்திருத்தம், விவசாயிகளின் வாழ்வை எப்படி சூறையாடியது என்பதை மனாலி சக்ரபர்த்தி கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறார்.

  • 1995-லிருந்து இதுவரை, 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கடன் தொல்லை, பயிர்களுக்கான மிகப்பெரும் உள்ளீட்டுச் செலவுகள், உரவிலை, உரிய விலை கிடைக்காமை, மான்சண்டோ போன்ற பன்னாட்டு கம்பெனிகளின் விதைக்கும் விதை நெல்லுக்குமான ஏகபோகம், கோக கோலா கம்பெனியின் தண்ணீர் கொள்ளை என ஒவ்வொரு நாளும் விவசாயிகள் பல்வேறு தாக்குதல்களால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் தற்கொலை செய்தவர்களில் விவசாயிகளின் விகிதம் மட்டும் 47% ஆகும்.
  • 1991க்கும் 2001க்கும் இடையில் 70 இலட்சம் விவசாயிகள் விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நகர்புறம் நோக்கி உதிரிப்பாட்டாளிகளாக வீசி எறியப்பட்டிருக்கின்றனர்.
  • 2001-2011க்கு இடையில் இந்திய வரலாற்றின் 90 வருடங்களில் நிகழ்ந்திராத மாபெரும் இடப்பெயர்ச்சி கிராமங்களில் இருந்து நகர்ப்புறம் நோக்கி நடை பெற்றிருக்கிறது. விவசாயிகளை விவசாயத்திலிருந்தே அப்புறப்படுத்திய ஏகாதிபத்திய கும்பலின் மூர்க்கத்தனமான தாக்குதல் இது.
  • ஒவ்வொரு வருடமும் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் மக்கட் தொகை மட்டும் 10 இலட்சம். இதில் 40% பழங்குடியினர், 40% தலித்துகள், 20% கிராமப்புற ஏழைகள்.

1991 தனியார்மயம் சீர்திருத்தம் விவசாயிகளின் வாழ்க்கையை இவ்விதம் புரட்டிப்போட்டிருக்கிறது. அடுத்து இந்தியாவின் உற்பத்தித் துறையின் நிலையைக் கவனிப்போம்.

1991 சீர்திருத்தம்-உற்பத்தித் துறை: ஆலைத் தொழிலாளிகளின் நிலை

உற்பத்தி துறை

1951-52இல் மொத்த ஜி.டி.பியில் உற்பத்தித் துறையின் அளவு 9.05% ஆக இருந்து 1991 காலகட்டத்தில் 14.51% ஆக இருக்கிறது. 1991 காலகட்டத்தில் இருந்து 2015-2016 வரை உற்பத்தி துறையின் அளவு 17.5% ஆக இருக்கிறது. அதாவது 1950-91 இருந்த வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதிலிருந்து 1991 தனியார்மய சீர்திருத்தம் இந்திய தொழிற்துறையை எங்கேயும் வளர்க்கவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது!

வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால் இந்தியாவிற்கென்று தேசிய பொருளாதாரம் என்ற ஒன்று இப்பொழுது வரை இல்லை! இது நாட்டுப்பற்றாளர்களின் கவனத்திற்குரியது.

இந்தியாவில் தேசிய முதலாளிவர்க்கம் என்ற ஒன்று இருந்திருக்குமேயானால் நாட்டின் இயற்கைவளங்கள், காடு கனிகள், உற்பத்திப் பொருட்களைக் கொண்டு பொருளாதார உற்பத்தி முறை என்ற அளவில் முதலாளித்துவம் உற்பத்தியை பெருக்கியிருக்கும்! வ.ஊ.சி ஆங்கிலேயனை எதிர்த்து கப்பல் விட்டமாதிரியாக. இந்தியாவிற்கென்று உற்பத்தி துறை வளராமல், இந்திய புல்லுருவி வர்க்கம் காலனிய ஏகாதிபத்திய கும்பலிடம் இந்தியாவின் வளங்களை அள்ளிக்கொடுக்கவும் தரகு வேலைபார்க்கவும் தரகு முதலாளி வர்க்கமாக மேல் எழுந்து வந்துள்ளது!

1991 சீர்திருத்தம் டாடா, அம்பானி, பிர்லா போன்ற தரகர்களையே மேலும் பெற்றெடுத்தது. டாடாவின் முன்னோர்கள் காலனிய ஆட்சிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். சீனப்போரில் கஞ்சாவெல்லாம் விற்று கஷ்டப்பட்டு முன்னேறினார்கள் என்றால் 1991 சீர்திருத்தம் டாடாவிற்கு நிலக்கரி, மின்சாரம், எரிசக்தி போன்ற இந்திய பொதுச் சொத்துக்களை ஒட்டச்சுரண்ட வாய்ப்பளித்தது. சான்றாக டாடா, இந்திய நிலக்கரி வயல்களை அபகரித்து இந்தோனசிய டாடாவிற்கு விற்று மீண்டும் இந்தோனசியா டாடா, இந்தியாவிற்கு அதிக விலைக்கு விற்றது. இந்தியர்களின் உடமை இந்தியர்களுக்கே பெரும் விலையில் விற்கும் அளவிற்கு 1991 சீர்திருத்தம் தரகு வர்க்கத்தைத் தோற்றுவித்தது. அதாவது உற்பத்தியைச் சாராத கமிசன் வர்க்கம் உருவாகியது.

மறுபுறத்தில் இந்திய ஆலைத் தொழிலாளிவர்க்கம் சின்னாபின்னமாக்கப்பட்டது. தொழிலாளிகளின் கூலியைக் குறைத்து இலாபத்தைக் பிழியும் தாராளமயக் கொள்கையின் விளைவுகள் இவ்வாறு இருந்தன.

தொழிலாளியின் நிலை

1991 தனியார்மய சீர்திருத்த கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதால், தற்பொழுது இந்தியாவின் அமைப்புசார் தொழிற்துறை தொழிலாளர்களின் (Organized manufacturing sector) சதவீதம் வெறும் 3% மட்டுமே. ஒவ்வொரு முறை பொதுத்துறை ஆலைகள் தனியார்மயமாக்கப்பட்ட பொழுது, நிரந்தரத் தொழிலாளிகள் அகற்றப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

2011-2012 கணக்கின்படி, இந்தியாவின் 47.2 கோடி தொழிலாளிகளில் 92% பேர் அமைப்பு சாரா தொழிலாளிகள். இவர்களுக்கு பணிபாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி, மருத்துவம், காப்பீடு, வீட்டு வாடகை, சட்ட உதவி, என்று எந்த உரிமைகளும் கிடையாது. மிகச் சமீபத்தில் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10000 ஆக நிர்ணயிப்பதை இந்திய தரகு முதலாளிவர்க்கம் தடுத்து நிறுத்தியிப்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள். நாட்டின் அறுதிப் பெரும்பான்மையான மக்களை அமைப்பு சாரா தொழிற்துறைக்குள் அடக்கினால் 1991 தனியார்மய சீர்திருத்தம் என்பது எத்துணை பெரிய உழைப்புச் சுரண்டல் என்பது தெரியவரும்.

மற்றபடி 3% அமைப்புசார் தொழிற்துறைத் தொழிலாளர்களின் நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்வோம். மனாலி சக்ரபர்த்தியின் கட்டுரையின் படி, 1980இல் அமைப்புசார் தொழிலாளிகளின் கூலிக்கும் முதலாளிகளின் இலாபத்திற்கும் இடையே இருந்த விகிதம் 2.73 என்ற அளவில் இருந்து பத்து மடங்கு குறைந்து 2012இல் கூலி/இலாப விகிதம் 0.25 ஆக உள்ளது. அதாவது ஒரு ஆலை, தொழிலாளர்களுக்கு 5 கோடி சம்பளம் வழங்கி 2 கோடி இலாபம் அடைந்தால் கூலி/இலாப விகிதம் 2.5 ஆகும். 1991 தனியார்மய சீர்திருத்தம் 2012ஆம் ஆண்டு கூலி/இலாப விகிதத்தை 0.25 என்று காட்டுகிறது என்றால் வெறும் 50 இலட்சம் கூலி கொடுத்து 2 கோடி இலாபம் அடைந்திருக்கிறது என்றாகிறது. இது எப்படி சாத்தியம்?

  • மாபெரும் ஆட்குறைப்பு செய்வது (Mass Layoff),
  • நாட்டின் தொழிற்பட்டாளத்தை உதிரி பாட்டாளிகளாக்கி கொடூர உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்குவது,
  • கூலியைக் குறைப்பது,
  • வேலை நேரத்தை அதிகரிப்பது,

ஆகியவற்றின் மூலமாக கூலி/இலாப விகிதம் பத்து மடங்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

எஸ். சக்ரபர்த்தி எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் எழுதிய கட்டுரை, கூலி உயர்வின் தன்மையை விரிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது. 1981-82லிருந்து 2011-2012 வரை உண்மை கூலி உயர்வு (Real Wage Increase) வருடத்திற்கு 0.82% ஆக இருக்கிறது. அதே சமயம் ஒவ்வொரு வருடமும் தொழிலாளர்கள் பெறும் கூலி அல்லாத பணிப்பலன்கள் [Nonwage Benefits] (காப்பீடு, வீட்டு வாடகை, மருத்துவம் போன்றவை) 0.18% என்ற விகிதத்தில் குறைந்து கொண்டே வருகிறது. ஆக உண்மை கூலி உயர்வு வருடத்திற்கு 0.69% ஆக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் தனிநபர் வாங்கும் திறன் அல்லது சராசரி தனிநபர் வருவாய் ஒவ்வொரு வருடமும் 3.6% சதவீதம் அதிகரித்து வருகிறது.

சராசரி தனிநபர் வருவாய் (Per capita income) என்பது ஒவ்வொருவரும் பெறும் சராசரி வருவாய் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி (ஜிடிபி) மதிப்பை அந்நாட்டின் மொத்த மக்கட் தொகையால் வகுத்தால் கிடைக்கும் தொகைதான் தனிநபர் வருவாய் அல்லது வாங்கும் திறன். ஒரு வருடத்திற்கு 140.78 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள பொருளை உற்பத்தி செய்திருப்பதால் அதைவாங்கும் 140 கோடி மக்களது ஒவ்வொரு கையிலும் குறைந்தது வருடத்திற்கு ஒரு இலட்சமாவது இருக்க வேண்டும் என்பது இதன் கணக்கு!

இப்பொழுது அமைப்புசார் தொழிற்துறைத் தொழிலாளர்களின் கூலி உயர்வு ஆண்டுக்கு 0.69% என்று இருந்து சராசரி தனிநபர் வருவாய் ஆண்டுக்கு 3.6% என்ற அளவில் வளர்ந்தால் ஆலைத் தொழிலாளியின் நிலைமை என்னவாக இருக்கும்? எஸ். சக்ரபர்த்தியின் தரவுகளின்படி 1980களில், ஓர் ஆலைத் தொழிலாளி, தனிநபர் சராசரி வருவாயை விட நான்கு மடங்கு கூலி பெற்றிருந்தார். 2012-2013 கணக்கெடுப்பின் படி, இந்த நான்கு மடங்கு விகிதம் 1.7 ஆக குறைந்திருக்கிறது. 80களின் வாழ்நிலைமை 2013-இல் 2.3% அளவிற்கு குறைந்திருக்கிறது. அதாவது 1.7 விகிதத்தை 1 இலட்சம் எனும் தனிநபர் வருவாயோடு பெருக்கினால் ஓர் ஆலைத் தொழிலாளி வருடம் ஒன்றிற்கு 1.7 இலட்சம் கூலி பெறுகிறார். அதாவது மாதம் ஒன்றிற்கு பெறும் கூலி 14167 ரூபாய்.

ஆனால் இதே ஓர் ஆலைத் தொழிலாளி உருவாக்கும் பொருட்களின் மதிப்பு 2012-2013 கணக்கின் படி, தான் வாங்கும் கூலியை விட 15.5 மடங்கு அதிகமாகும். இதுதான் ஆலைத் தொழிலாளியின் இன்றைய நிலைமையும் மொத்த ஜி.டி.பியில் ஆலைத் தொழிலாளி வகிக்கும் பாத்திரமும்!

1991 சீர்திருத்தம்-சேவைத் துறையின் நிலைமை

பொருளாதாரம் என்ற வகையில் விவசாயமும், உற்பத்தித் துறையும் மொத்த ஜி.டி.பியில் சொற்ப அளவிலான பங்கையே பெற்றிருக்கும் பொழுது, சேவைத்துறைகளின் பங்கு 64.1 சதவீதமாக இருக்கிறது. 1950களிலிருந்து தற்பொழுதுவரை நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது என்பதை கீழ்க்கண்டபடம் காட்டுகிறது.

சேவைத் துறை

சேவைத்துறை என்பது அடிப்படையில் உழைத்துப் பிழைக்காத சிறு கும்பல் நாட்டுமக்களை கமிசன், கடுவட்டி, கருப்புப் பணம், கட்டப்பஞ்சாயத்து, அதீத நுகர்வு, ஊழல் மூலம் சுரண்டிக் கொழுக்கும் பல்வேறு துறைகளை உள்ளடக்கியிருக்கிறது. அவற்றுள் சில வர்த்தகம், நட்சத்திர விடுதிகள், மருத்துவம், கல்வி, போக்குவரத்து, சேமிப்பு, தொலை தொடர்பு, நிதி நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தக சேவை, சமூக, தனிநபர் சேவைகள், கட்டுமானம் என்று பரந்து விரிந்துள்ளது.

சேவைத்துறைக்குள் குதித்து பலன் பெற்ற உழைப்பாளிகளுள் பச்சமுத்து, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, பாபா ராம்தேவ், அதானி, அம்பானி, டாடா பிர்லா, கல்வி வள்ளல்கள், அரசு அதிகார வர்க்கம், இராணுவத் தளபதிகள், பார்ப்பன மடங்கள், ஆதினங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் இதில் அடக்கம். மொத்த ஜி.டி.பியில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த தரகு முதலாளிக்கூட்டமே. இது எத்துணை சதவீதம் என்பதை அடுத்து பார்க்கும் முன் சேவைத்துறையில் தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மென்பொருள் பணியாளர்கள்-வெளுப்பு சட்டைத் தொழிலாளிகள்

மென்பொருள் பணியாளர்களின் வாழ்க்கை 1991 சீர்திருத்தால் இலட்சங்களில் சம்பளம், புது வீடு, கார் லோன் என்று புது நடுத்தர வர்க்கமாக உருவாகியுள்ளது எனினும் ‘சாயந்திரம் புதுசு சாயம் போனா பழசு’ என்ற கதையாக மென்பொருள் பணியாளர்கள் இன்றைக்கு வெளுப்பு சட்டைத் தொழிலாளிகள் (White collar Workers) அல்லது வெளுப்பு சட்டை அடிமைகள் (White collar Slaves) என்றே அழைக்கப்படுகிறார்கள்.

மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் வித்தியாசம் எதுவுமின்றி குறைந்த பட்ச பணிபாதுகாப்புமின்றி ஒட்டச் சுரண்டப்படும் வெளுப்பு சட்டைத் தொழிலாளிகள் கால் ஊன்ற ஓர் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு இலாபம் குறைந்தால் மோடியை குந்த வைத்து அமெரிக்காவுடன் நாஸ்காமால் பஞ்சாயத்து பேச முடிகிற பொழுது, தங்களுடைய வேலை பறிபோவதையும், உழைப்புச் சுரண்டப்படுவதையும் எதிர்க்க துணியாமல் வெளுப்பு சட்டை தொழிலாளிகள் கழுத்தில் கயிறு மாட்டி தொங்குகிற அளவிற்கு தைரியமற்ற கோழைகளாக சமூகத்தில் அன்னியமாகிப் போயிருக்கின்றனர்.

யார் யாருக்கு எவ்வளவு கிடைத்தது?

விவசாயியாக, ஆலைத்தொழிலாளியாக, ஒப்பந்த தொழிலாளியாக, சேவைத்துறையில் வெளுப்புச் சட்டை தொழிலாளியாக இருப்பவர்களுக்கு நாட்டு உற்பத்தியில் பெரிதான எந்த பங்கும் போய்ச் சேரவில்லை என்பதை மேலே பார்த்தோம். அப்படியானால் 1991 சீர்திருத்தால் பலனடைந்தவர்கள் யார்?

ஒவ்வொருவரிடமும் உள்ள வருவாயைக் கணக்கிட்டு இந்தியாவில் சொத்துள்ளவர்களை 10 படிநிலைகளாக பிரித்தால் நமக்கு கீழ்க்கண்ட வரைபடம் கிடைக்கிறது.

சொத்து கையிருப்பு விகிதம்

முதல் படி நிலையில் உயர் 10% சதவீத அடுக்கில் வருபவர்களிடம் (அதாவது 90%-100%) மட்டுமே நாட்டின் 74% சொத்து இருக்கிறது. 80-90% படிநிலையில் இருப்பவர்களிடம் 9.4% சொத்தும், 70%-80% படிநிலையில் இருப்பவர்களிடம் 5.7% சொத்தும் இதர வர்க்கங்களிடம் 10.9% சொத்தும் இருக்கின்றன. இதில் இதர வர்க்கத்தினரை மேலும் 7 படிநிலையாக பிரித்தால் கீழ் மட்ட படிநிலையில் இருப்பவர்களிடம் உள்ள சொத்துக் கையிருப்பு வெறும் 0.2% மட்டுமே. இந்த கீழ்மட்ட படிநிலையில் தான் விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அடங்கி இருக்கிறார்கள்.

மாறாக உயர் 10% பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த பதினைந்து ஆண்டுகளில் கீழ்க்கண்டவாறு அதிகரித்திருக்கிறது.

பணக்காரர்களின் சொத்து அதிகரிப்பு விகிதம்

2000த்தில் உயர் 10% பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு இந்தியாவின் சொத்து மதிப்பில் 65.9% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 74% ஆக அதிகரித்திருக்கிறது. உலக பெருமந்தம் தொடங்கிய 2008வது ஆண்டிலும் கூட இவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்ததேயன்றி குறையவில்லை. ஆனால் இதே 2008 பெருமந்தத்தால் வேலையிழந்து நலிவுற்று இக்கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் அனேகம் பேர் இங்கு இருப்பீர்கள்.

1991 சீர்திருத்தம்: 1% பணக்காரன்

சொத்துக் கையிருப்பு சதவீதத்தை மேலும் பகுத்து புரிந்து கொள்வதற்காக உயர் படிநிலையான 90%-100% இருப்பவர்களுள் 1% சதவீதம் பேரிடம் மட்டுமே உள்ள சொத்து மதிப்பை கணக்கில் எடுத்துகொள்வோம். இவர்கள் நாட்டின் அதி உயர் பணக்காரர்கள் ஆவர். இந்திய நாட்டின் 1% பணக்காரர்களிடமும், உலக அளவில் 1% பணக்காரர்களிடமும் கடந்த 14 வருடங்களுள் சேர்ந்த சொத்து மதிப்பு கீழ்க்கண்டவாறு உள்ளது.

இந்தியப் பணக்காரனும் உலகப் பணக்காரனும்

 

2000 ஆம் ஆண்டில் 1% உயர் பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு இந்தியாவின் மொத்த சொத்தில் 36.8% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 49% ஆக அதிகரித்திருக்கிறது. இதுவே உலக அளவில் 2000ஆம் ஆண்டில் 1% உயர் உலக பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு உலகத்தின் ஒட்டுமொத்த சொத்தில் 48.7% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 48.2% ஆக இருக்கிறது. மூன்றாம் உலகநாடுகளில் புகுத்தப்பட்ட தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள், இந்தியாவையும் உலகையும் மிக மிக சொற்பமானவர்களின் கைகளில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது.

இதில் உலகின் ஒட்டுமொத்த உயர் 1% சதவீத பணக்காரர்களுள் அமெரிக்காவில் மட்டும் 38.33% பேர் இருக்கிறார்கள். இதே சீனாவில் 3.36% பேரும் இந்தியாவில் 0.8% பேர் மட்டுமே 1% சதவீத பணக்காரர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் இறுதி அம்சமாக இந்தியாவின் 1991 தனியார்மய சீர்திருத்தம் பன்னாட்டு கார்ப்பரேட் கும்பலுக்கு எவ்வளவு தோதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

உயர் அடுக்கு பணக்காரர்கள்

1991 சீர்திருத்தம்: இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு

1991 சீர்திருத்தத்தில் தாராளமயம் என்பது இந்தியாவில்

  • குறைந்த கூலிக்கு ஆட்கள்,
  • சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் தண்ணீர் மின்சாரம் போன்ற சலுகை,
  • பொது நலத்திட்டங்கள் அனைத்திலும் தனியாரை அனுமதிப்பது,
  • பல்வேறு வரிகள் இரத்து,
  • விவசாயிகளிடமிருந்து நிலம் அபகரிப்பு,
  • பன்னாட்டு மருந்துகம்பெனிகளுக்கு இந்திய மக்கள் சோதனை எலிகளாக இருத்தல்,
  • கருப்பு பணத்தை பதுக்குவதற்கு ஏற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கை,
  • வரியில்லா சொர்க்கங்களில் முதலீடு அனுமதி மற்றும் இரட்டை வரி விலக்கு ஒப்பந்தம் என்று இந்தியா உலக கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடப்பட்டது.

இதனால் இந்தியாவிற்குள் புகுந்த அன்னிய நேரடி முதலீட்டு வரத்து கடந்த பதினைந்து வருடங்களுள் கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

அன்னிய நேரடி முதலீடு

2000-மாவது ஆண்டு இந்தியாவிற்குள் புகுந்த அன்னிய முதலீடு கிட்டத்தட்ட 5000 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2008 பொருளாதார குமிழி வெடிப்பிற்கு பின்பான உலக பெருமந்த காலத்தில் இந்தியாவிற்குள் உச்சபட்சமாக 41,738 மில்லியன் டாலர்கள் உள்ளே வந்திருக்கின்றன. உலகின் பிற நாடுகளில் பொருளாதாரம் சீட்டுக்கட்டாக சரிகிற பொழுது, மூலதனபாய்ச்சல் கண்டம் விட்டு கண்டம், நாடு விட்டு நாடு, ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளி என இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை நோக்கிப் பாய்கிறது. ஏனெனில் இங்குதான் சுரண்டுவதற்கு வாய்ப்பு அதிகம். குறைவான கூலிக்கு இங்குதான் ஆட்கள் அதிகம். இங்குதான் தனக்குத்தோதான இறையாண்மையற்ற புல்லுருவி அரசுகளை நிர்ணயிப்பது எளிது.

2008 பெருமந்தத்திற்கு பிறகு, மோடி கும்பலை வைத்து தற்பொழுது மேக்-இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்டப் இந்தியா, இந்தியாவில் நிரந்தரக் குடியுரிமை என்று அடுத்த கட்ட நகர்வை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதன் ஒருபகுதியாக 2015-2016 நிதியாண்டில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்கிறார்கள். இதில் இந்தியாவிற்கு சிங்கப்பூரிலிருந்து 13.69 பில்லியன் அமெரிக்க டாலர்களும், மொரிசியஸ்ஸிலிருந்து 8.35 பில்லியன் அமெரிக்க டாலர்களும் அமெரிக்காவிலிருந்து 4.19 பில்லியன் அமெரிக்க டாலர்களும் நெதர்லாந்திலிருந்து 2.64 பில்லியன் அமெரிக்க டாலர்களும் ஜப்பானிலிருந்து 2.61 பில்லியன் அமெரிக்க டாலர்களும் அன்னிய நேரடி முதலீடாக வந்திருக்கின்றன.

இதில் மொரிசியஸ், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து நாடுகள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் உருவாக்கிய வரியில்லா சொர்க்கங்களாகும். சான்றாக இஸ்ரோவின் ரூ. 60,000 கோடி அலைக்கற்றை ஊழலில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள் தேவாஸ் மல்டி மீடியா கம்பெனியை மொரிசீயஸில் தான் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்தியாவின் விண்வெளித்துறை விஞ்ஞானிகள் இந்தியாவில் குடிமகனாகவும் மொரிசீயஸ் நாட்டு பன்னாட்டு முதலாளியாகவும் இருப்பதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது  1991 ஆம் ஆண்டு தனியார்மய-தாராளமய-உலகமய சீர்திருத்தமே. இதைப் புரிந்து கொள்ளாமல் இந்தியாவின் எந்த ஊழல்களையும் புரிந்துகொள்ள இயலாது!

1991-கதையை நாம் இதற்கு மேலும் நீட்டிக்கலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட விவசாயம், தொழிற்துறை உற்பத்தி, சேவைத்துறை, அன்னிய முதலீடு என எதிலுமே நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எதையும் பெறவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது அல்லவா? அப்படியானால் நமது விடிவு காலத்தின் தொடக்கத்திற்கு தேவையான முடிவுரையை இங்கு எழுதிவிடுவோம்.

தனியார்மயம் நல்லதா? கெட்டதா? என்று விவாதிக்கிறவர்களை காலம் குப்புறத்தள்ளி பலகாலம் ஆகிவிட்டது. அந்தக் காலம் காலாவதியாகிவிட்டது ! 1991 தனியார்மய தாராளமய உலகமய சீர்திருத்தம் உலக ஏகாதிபத்திய கும்பல்களுக்கானது;  தரகு முதலாளிகளுக்கானது.

தனியார்மயத்தால் பலனடைந்தேன் என்று மார்தட்டுகிறவர்கள் யார்? விவசாயி, ஆலைத்தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி போன்ற உழைக்கும் மக்களா? தரகு முதலாளி, பன்னாட்டு நிறுவனங்கள் போன்றோரா?  இந்திய உழைக்கும் மக்கள் தனியார் மயத்தால் பலனடையவில்லை என்பது மட்டுமல்ல உண்மையில் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த அழிவில்தான் இந்தியாவின் புதிய பணக்காரர்கள் தமது டாம்பீகத்தை காட்டுகிறார்கள். ஒரு விவசாயி – தொழிலாளியின் அழிவை அவர் செல்பேசியில் பாட்டு கேட்டுக் கொண்டே இறக்கிறாரே என்று நீரோக்கள் வியக்கலாம். நீங்கள்?

– இளங்கோ

1991 சீர்திருத்தம் – வறுமையின் நிலை என்ன ?முதல் பாகம்

( செய்தி ஆதாரங்கள் )

நீதிக்கு குரல் கொடுத்தால் வழக்கறிஞர்களுக்கு ஆயுள் தடையா ?

2

வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக தண்டிக்கப்படுவதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

துரை வழக்கறிஞர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது, வழக்கறிஞர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக வழக்கறிஞர் மில்டன், பார்த்தசாரதி இருவருக்கும் வழக்கறிஞர் தொழில் புரிய வாழ்நாள் தடையும், வழக்கறிஞர் மகேந்திரனுக்கு மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-posterஏற்கனவே மதுரை வழக்கறிஞர்கள் 5 பேருக்கு தொழில் புரிய‌ வாழ்நாள் தடையும், 8 பேருக்கு 3 ஆண்டுகளும் தடை விதித்து தீர்ப்பளித்திருந்தனர்.

இந்த அநீதியான தீர்ப்பை கண்டித்தும், தடையை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் 18-10-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளாக வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். தங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

***

வாழ்நாள்தடை தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களின் கருத்துக்கள்

கண்டன ஆர்ப்பாட்டத்திலிருந்து….

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-1”இது ஒட்டுமொத்த வழக்கறிஞர்களை மிரட்டுவதற்கு போடப்பட்ட தீர்ப்பு!”

”வாழ்நாள் தொழிற்தடை என்பது பொருளாதார தடை. இது மரண தண்டனைக்கு இணையானது என்கிறது உச்சநீதிமன்றம்.

கோஷமிடுவது என்பது மரணதண்டனைக்கு இணையான குற்றமா? இது ஒட்டுமொத்த வழக்கறிஞர்களை மிரட்டுவதற்கு போடப்பட்ட தீர்ப்பாகும். இத்தீர்ப்பை வன்மையாக கண்டிக்கிறேன்!

வழக்கறிஞர் பாரதி

****

”இப்பொழுது போராடவில்லையென்றால் இதுவே தான் நாளை நமக்கும்!!”

”இன்று மில்டன். பார்த்தசாரதி. நேற்று மதுரை வழக்கறிஞர்கள். இப்பொழுது போராடவில்லையென்றால் இதுவே தான் நாளை நமக்கும்! இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து பெரிய அளவில் கொண்டு செல்லவேண்டும்”

வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், நூலகர்

****

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-2”காலில் விழுந்தால் தண்டனை குறைப்பு. வழக்கை நடத்தினால் ஆயுட்கால தடை!”

”தீர்ப்பை படித்துப்பார்த்தேன். உண்மையில் சட்டவிரோதமான தீர்ப்பு. கோசம் போட்டது தான் அனைவர் மீதும் உள்ள குற்றச்சாட்டு. இதில் காலில் விழுந்தால் தண்டனை குறைப்பு. வழக்கை தீவிரமாக நடத்தினால் ஆயுட்கால தடை என்று யூகிக்கும் அளவிற்கு தீர்ப்பு எழுதியது வன்மையாக கண்டிக்ககூடியது! ”

வழக்கறிஞர் குமணராஜா

****

”தடையை நீக்கும்வரை போராட தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது!”

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-3வரலாற்றில் மக்கள் விரோத அரசுகளாலும் அதிகார வர்க்கங்களாலும் கடுமையான தண்டனைகளை போராளிகள் அனுபவித்தும், அனுபவித்து கொண்டும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் போராளிகளான மில்டனும், பார்த்தசாரதியுனுடைய வாழ்நாள் தடையானது வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடியதன் விளைவாக வழக்கறிஞர்களின் உரிமைகளை நசுக்கும் விதமாக தண்டித்துள்ளனர்.

இத்தடையை நீக்கும்வரை போராட்டங்களை தொடரவில்லையென்றால் வரலாறு நம்மை மன்னிக்காது!

– வழக்கறிஞர் பார்வேந்தன்

****

”நமது உரிமைகளுக்காக போராடியதாலேயே மில்டன், பார்த்தசாரதிக்கு இந்த வாழ்நாள்தொழில் தடை தண்டனை!”

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-4வழக்கறிஞர்களாகிய நமது உரிமைகளுக்காக போராடியதாலேயே மில்டன், பார்த்தசாரதிக்கு இந்த வாழ்நாள்தொழில் தடை தண்டனை. இதனை நாம் எல்லோரும் தான் சுமக்கவேண்டும். என் சார்பாக போராட்ட நிதியாக ரூ.10000 தருகிறேன்.

– வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ்

****

வழக்கறிஞர்களுக்கு தொழில் புரிய வாழ்நாள் தடை சட்ட விரோதமானது

– மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

https://www.facebook.com/prpcmilton/videos/350054122003571/

****

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-5சமூக வலைதளங்களிலிருந்து…

The punishments of removal from the rolls of Bar Council of Tamil Nadu and Puducherry imposed against 2 High Court lawyers and against 5 Madurai lawyers by Karnataka Bar Council are highly excessive, disproportionate and unjust. The lawyers community as a whole has to ponder over all past developments, unite together and take appropriate decisions to explore all legal and democratic means to set aside the orders and restore the practice of the affected lawyers.

C.Vijayakumar,
President,
Lawyers Centre for Democracy &Social Causes.

****

என்ன செய்யலாம்.. இனிய நண்பர்களே…?

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவில் தமிழக வழக்கறிஞர்கள் கொடூரமாக நசுக்கப்படுகிறார்கள்.

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-6ஏழு வழக்கறிஞர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் செய்யக் கூடாது என்று தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு வழக்கறிஞர் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்தபின்பும் இன்னமும் தொழில் செய்யக் கூடாது என்று தடைசெய்யப்பட்டுள்ளார்.

ஒன்பது வழக்கறிஞர்கள் மூன்று வருடம் தொழில் செய்யக்கூடாது என்று தண்டிக்கப்பட்டுள்ளனர்.அதுவும் ஏற்கனவே ஓராண்டு காலமாக தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர்களுக்கு, அந்த ஓராண்டு காலத்தை கழிக்காமல் மொட்டையாகமூன்று. வருடம் என்றால் ஆக மொத்தம் நான்கு வருடங்கள் பணிநீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள்.

இன்னமும் விசாரணை முடியாமல் தற்காலிக பணிநீக்கத்தில், தண்டனைக் கத்தி தலைக்குமேல் தொங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் பலர்.

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-7என்னதான் செய்தார்கள் இவர்கள்..? ஏன் இவ்வளவு கொடூரமாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்..?

ஏறத்தாழ எழுபதாயிரம் வழக்கறிஞர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஏன்.. இவர்கள் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்..?

கற்றறிந்த வழக்கறிஞர் பெருமக்களே இவர்கள் செய்த குற்றம்என்ன…?

பறவைகள் அற்றுப்போன நகரத்தில்கூட ஒரு காக்கைக் குஞ்சு இறந்துவிட்டால் போதும் எங்கிருந்து எப்படி தகவல் தெரிந்து வருகின்றன என்று தெரியாது அவ்வளவு பெரிய காக்கைக் கூட்டத்தினை நம்மால் பார்க்க முடியும்.. அதுகளின் அலறல் நம் அடி நெஞ்சை கலக்கிஎடுத்துவிடும்

எங்கே போயின நமது எழுபதாயிரம் கறுப்புப் பறவைகள்..?

எப்படி இது சாத்தியமாயிற்று..? சட்டங்களை எல்லாம் கரைத்துக் குடித்துள்ள சட்ட ஜாம்பவான்கள் உள்ள நம் மத்தியில் வானத்திற்கு கீழ் உள்ள எந்த பிரச்சனை என்றாலும் வாருங்கள் நியாயத்தை, உரிமையை அதன் சட்டையை பிடித்து உலுக்கிவாங்கித் தந்துவிடுவோம் என்று வழக்காடிகளிடம் எக்காளமிட்டு பணம் வாங்கி.. ஏகபோகமாக தொழில் நடத்திக்கொண்டிருக்கும் கற்றறிந்த வழக்கறிஞர் பெருமக்களே இவர்கள் செய்த குற்றமென்ன..?

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-8நமது சொந்த வழக்கறிஞர் சமூகத்திற்கே நியாயத்தை பெற்றுத் தர முடியாத நமது பலஹீனமான சட்ட மனசாட்சி நம்மைப் பார்த்து கைகொட்டிச சிரிக்கிறது நண்பர்களே….

இவர்கள் யாரும் தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனையின் அடிப்படையிலோ, தனிப்பட்ட ஒழுங்கீனமான காரணத்திற்காகவோ, வழக்காடிகளை ஏமாற்றி பணம்பறித்த குற்றத்திற்காகவோ, தண்டிக்க்கப்படவில்லை.

சங்கத்தின் பொதுக்குழு கூடி, தீர்மானங்கள் நிறைவேற்றி அதன்அடிப்படையில் போராடியவர்கள், போராட்டத் தலைமையேற்றவர்கள்… இன்னும் சொல்லப்போனால் சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள், உபதலைவர், உதவிச்செயலாளர் என்று சங்கநிர்வாகிகள்…

பின் ஏன்… கைவிட்டீர்கள்… கற்றறிந்த வழக்கறிஞர் பெருமக்களே…பின் ஏன்.. கைவிட்டீர்கள்..?

எதிரியின் எக்காளத்தினைவிட நண்பர்களின் மௌனம் ஒருவரை கொடூரமாகக் கொன்றுவிடும்..மௌனத்திற்கான காரணம் என்ன?

கற்றறிந்த வழக்கறிஞர்களே…. தீர்ப்பு சரிதான் என்கிறீர்களா..? தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான் என்கிறீர்களா..? நமக்கெதற்கு என்ற பச்சைப் பயமா..? யாரும் எக்கேடும கேட்டுப்போகட்டும் நாமுண்டு நம்தொழில் உண்டு என்ற வயிற்று வாதமா..? முன்னது இரண்டு என்றால் வாருங்கள் விவாதிக்கலாம்… பின்னது இரண்டு என்றால்… பாவம் முத்துக்குமார்… நம்மைப் போராளிகள் என்று நம்பி நம்மிடம் தனது பிணத்தைக் கொடுக்கச் சொன்னானே… அவன் இப்பொழுதுதான்… ஈரக்குலை கருகி செத்திருப்பான்….

என்ன செய்யாலாம் இனிய நண்பர்களே…

விசாரணையும், தீர்ப்பும், தண்டனையும், தேர்வு செய்து தரம் வாரியாக தண்டிக்கப்பட்டவர்களும்… எதோ இயல்பானதோ.. சாதாரணமானதோ..இல்லை..

அன்புடன்.
பெ. கனகவேல்,
வழக்கறிஞர், மதுரை

*****

“அச்சநிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக தரப்பட்ட தீர்ப்பு”

“மில்டனும், பார்த்தசாரதியும் உறுதிமிக்க தோழர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒரு அச்சநிலையை உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்டதேயன்றி, அது நிரந்தரமில்லை. அவர்கள் மீது போராடியது தவிர வேறெந்த குற்றச்சாட்டுமில்லை”.

– பெரியார் வேந்தன்,
வழக்கறிஞர், மதுரை

*****

I condemn the order of dismissal of Advocates from roll.

Although I have some difference of opinion with Milton and Parthasarathy, I seriously condemn the order of Bar council in dismissing both of them permanently making their legal practice at stake. The fact that they have raised slogans near the court hall is not a grave offence to dismiss them from the Bar. Raising slogans is followed for decades by our legal fraternity and on the alleged day, several lawyers have raised slogans, but taking action only against the these young bar members is suspicious. The Bar council should reconsider its way.

Even though the term of the office bearers of MHAA has come to an end , I request the secretary to convene an EC Meeting and invite M/s Milton, Parthasarathy and Mahendran for the meeting and to get their valuable inputs for preferring an appeal.

G. Rajesh, Advocate, Chennai

*****

“வாழ்நாள்தடை தீர்ப்பு: எரிகிற நமது நெஞ்சில் இன்னும் எண்ணெயை ஊற்றுவது”

“The news about the debarring of advocates Milton and Parthasarathy by our Tamil Nadu Bar Council is adding oil to the fire already burning our hearts due to the debarring of Madurai advocates by Bar Council of Karnataka …

I tried to talk to P.T.R. but he is abroad. I talked with Thanjai Sivasubramanian and he told me that P.T.R. will be back in India in the next week and we will call for a meet to discuss and take all necessary steps in this regard…

The sentence is disproportionate and exorbitant to the acts committed …It is the view of majority of advocates…”

– Tamil Rajendran,
Advocate

****

வழக்கறிஞர்களுக்கு தண்டனை…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மில்டன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய இருவரும் வாழ்நாள்முழுவதும் வழக்கறிஞர் பணி செய்யக்கூடாதென தமிழ்நாடு பார்கவுன்சில்
தண்டனை விதித்துள்ளது..

மேற்கூறிய வழக்கறிஞர்கள் இருவருமே பண்பாடு காத்து பழகுபவர்கள். தமிழ் மொழி உரிமை, ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிர்ப்பு, வழக்கறிஞர்கள் உரிமை தொடர்பான போராட்டங்களில் முன்நின்று குரல் கொடுத்தவர்கள்.

மதுரை வழக்கறிஞர்கள் மீது விசாரணை நடத்தும்போது வெளிப்படையாக நடத்தவேண்டும் என்றும் தங்களை விசாரணை நடந்த நீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதற்காக வழக்கறிஞர் பணி செய்யக்கூடாது என்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

வழக்கறிஞர் சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

– அருள்மொழி, வழக்குரைஞர்
****

”உள்ளாட்சி தேர்தலுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் பதவிகாலம் முடிந்த பார்கவுன்சிலுக்கு ஏன் மாற்றை அமுல்படுத்தவில்லை?

குற்றம் சுமத்தபட்டவர்கள் மீது அந்த குற்றத்திற்கான சரியான காரணம் இல்லையெனில், சட்டத்தை அதிகாரம் கையில் எடுத்து கொள்கிறது. இது ஒரு அசிங்கமான அதிகாரம். கண்டனத்துக்கு உரியது.

– MHAA Muruga Velu, Advocate, Chennai

****

தோழர் மில்டன், தோழர் பார்த்தசாரதியை வழக்கறிஞர் சமூகம் பாதுக்க வேண்டும்

– Thambi Prabakaran, Advocate, Chennai

****

வன்மையாக கண்டிக்கத்தக்கது….., உள்ளாட்சி தேர்தல் பதவிகாலம் முடிந்ததால் அதற்கு மட்டும் தனி அதிகாரிகளை நியமிக்க உத்திரவிட்ட நீதிமன்றம் ஏன் பதவிகாலம் முடிந்த பார் கவுன்சிலுக்கு மாற்றை அமல்படுத்தவில்லை.?

Sasin Kumar, Advocate, Thirunelveli

பூக்களை வெட்டிவிடலாம்!
வசந்தகாலத்தை?

வழக்கறிஞர்கள் மில்டன், பார்த்தசாரதி
கொண்ட கொள்கையில் இருவரும் இரட்டையர்கள்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
உயிர் துறந்த கட்டபொம்மனின் ஊர்காரர்கள்.

யார் இவர்கள்?

‘மூடு டாஸ்மாக்கை’ என பாடிய‌
மக்கள் பாடகர் கோவனை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்த பொழுது
அரசின் மூக்கை உடைத்ததில் முக்கியமானவர்கள்.

குடி கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை நொறுக்கிய‌
மாணவர்களையும் பொதுமக்களையும்
சிறையிலிருந்து மீட்க‌
இரவும் பகலும் உழைத்தவர்கள்.

‘சுதந்திர’ தினத்தன்று தங்களின் உரிமைகளுக்காக‌
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட
157 தொழிலாளர்களை மீட்க‌
விடுமுறை நாளான ஞாயிறன்றும்
நீதிமன்றத்தை இயங்க வைத்தவர்கள்.

சமச்சீர் பாடப்புத்தகங்களை
ஜெயலலிதா தடை செய்த பொழுது
புத்தகங்களை கொடு என
போராடிய மாணவர்களோடும், மக்களோடும் களத்திலும்,
உச்சநீதிமன்றம் வரை உறுதியோடு போராடியவர்கள்

மக்களின் போராட்டங்களில் முன்நின்றவர்கள்
ஊழல் நீதிபதிகளை சந்திக்கு இழுத்த‌
சக வழக்கறிஞர்கள் இழிவுபடுத்தப்படுவதை
எதிர்த்து குரல் கொடுத்த
‘குற்றத்திற்காக’

ஆந்திராவிற்கு ஓடிப்போன,
ஒளிந்துகொண்டு அம்பு வீசுகிற
இராமனின் ‘தம்பிகளும்’
பார்கவுன்சிலில் அதிகாரத்தில் இருக்கும்
எட்டப்பன்களும் இணைந்து
கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு
வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்திருக்கிறார்கள்.

மில்டனும் பார்த்தசாரதியும்
சத்தியத்தின் துணையோடும்,
மக்களின் துணையோடும்,
சக வழக்கறிஞர்களின் துணை கொண்டும்
சதிகள் உடைத்து மீண்டும் எழுவார்கள்.

துரோகிகளும் எதிரிகளும்
ஒன்றை மறந்து போகிறார்கள்.
அவர்கள் பூக்களை வெட்டிவிடலாம்.
வசந்தகாலம் வருகிறது!
என்ன செய்வார்கள்?
*****

குறிப்பு: ஊழல் நீதிபதிகளை அம்பலப்படுத்தி ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் நடத்திய மதுரை பேரணியில், கலந்துகொண்ட ‘குற்றத்திற்காக’ 5 வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய வாழ்நாள் தடையும், 8 வழக்கறிஞர்களுக்கு 3 ஆண்டுகளும் தடை விதித்திருக்கிறார்கள்.

சென்னையில் வழக்கு நடந்த பொழுது, வழக்கறிஞர்களை இழிவாக நடத்தியதை எதிர்த்து நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் குரல் கொடுத்தார்கள். அதில் 7 பேரை மட்டும் திட்டமிட்டு தேர்ந்தெடுத்து, ஓராண்டு வழக்கு நடத்தி, இப்பொழுது மில்டன், பார்த்தசாரதி இருவருக்கும் தொழில் செய்ய வாழ்நாள் தடையும், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் தடையும் விதித்திருக்கிறார்கள்.

நன்றி : “பூக்களை வெட்டிவிடலாம், வசந்த காலத்தை?” கடனாய் தந்த மக்கள் கவிஞர் பாப்லோ நெருதாவிற்கு!

– செல்வம் ராம்கி

*****

அபாண்டமாய் தலைகுனியும் மோடி – கேலிச்சித்திரம்

5
modi-cartoon-slide

தலித் மக்கள் மீதான தாக்குதல்களால் என் தலை அவமானத்தில் தொங்குகிறது !    – மோடி.

modi-cartoon

 

சாதி இந்துக்கள் யாரும் சீரியசா எடுத்துக்காதீங்கபா. உ.பி தேர்தல் முடிஞ்சதும் ‘தல’ தானா நிமிந்துடும் !

ஓவியம் : முகிலன்

இணையுங்கள்:

காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா ?

12

மஸ் ஒரு தத்துவ ஞானி. சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். “ஏம்பா கொஞ்சம் உப்பு கொண்டு வா” என்று எளிமையான முறையில் அதற்குத் தீர்வு கண்டுவிடுவீர்கள். அவரைப் பொருத்தவரை அப்படி தீர்வு காண்பது அவரது தகுதிக்கு குறைவானது. உப்பு ஏன் குறைந்தது? இது தமிழ்ச் சமூகம் சொரணை மரத்துப் போனதன் குறியீடா? அன்றி உப்புக்கே உவர்த்தன்மை குறைந்து வருகிறதா – என்பன போன்ற அறவியல், அறிவியல் சார்ந்த வினாக்களை எழுப்பி, குறைந்த பட்சம் அரைப்பக்க அளவிலாவது ஒரு கட்டுரை எழுதாமல், அவரால் சாம்பாரில் கை நனைக்க முடியாது.

Samas
சாம்பாரில் உப்பு சேர்ப்பதற்கே கட்டுரை எழுதும் தத்துவஞானி சமஸ்!

உப்புப் பெறாத விசயங்களுக்கே அப்படி என்றால், காவிரி பிரச்சினையின் பால் அவர் தனது கவனத்தைத் திருப்பினால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது சரி, உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா” என்று தமிழ் இந்துவில் அக். 21, 2016 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

கட்டுரையின் முதல் பத்தி பாரதிராஜா படம் மாதிரி காவிரியில் புதுப்புனல் வரும் சீனுடன் தொடங்குகிறது. அப்புறம் தஞ்சை விவசாயிகளின் வியர்வை மணத்தை உலகுக்கு காட்டிய கும்பகோணம் தி.ஜானகிராமனுக்கு ஒரு துதி. அடுத்த பாராவில் அப்படியே காமெராவைத் திருப்பி மணற்கொள்ளை, ரசாயனக்கழிவு, சாக்கடை, புதர்கள் மண்டிய காவிரியைக் காட்டுகிறார். ‘’எந்தச் சமூகமாவது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் கழிவுகளை வலிய எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுமா? நாம் சாப்பிடுகிறோம்! உரிமை குறித்து முழங்குவதற்கான தகுதி தமிழர்களுக்கு இருக்கிறதா?’’ என்று டெர்ரராக உறுமுகிறார்.

நாம் என்பது யார் சமஸ் அவர்களே!

ரொம்ப நியாயமான கோபம்தான். ஆனால் “நாம் நாம்” என்று சொல்கிறாரே சமஸ் அந்த “நாம்” யார்? அவரா, நீங்களா, நானா?

பொத்தேரியை ஆக்கிரமித்தது யார்? ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போரூர் ஏரியை தாரை வார்த்தது யார்? மணற்கொள்ளை ஆறுமுக சாமியும், பாஸ்கரும், கரூர் பழனிச்சாமியும் யார்?  நீங்களா, நானா, நாமா?

தலைமைச் செயலர் முதல் தாசில்தார் வரை இவற்றுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகள் யார்? நாமா?

மணற் கொள்ளைகளை ஆசீர்வதித்து அனுமதி வழங்கிய நீதிபதிகள் யார், நாமா?

மணற் கொள்ளை உள்ளிட்ட சகல விதமான கொள்ளைகளையும் தலைமை தாங்கி நடத்தும் அம்மா யார்? நாமா?

மணற்கொள்ளை
மணற் கொள்ளை உள்ளிட்ட சகல விதமான கொள்ளைகளையும் தலைமை தாங்கி நடத்தும் அம்மா யார்? நாமா?

மேற்படி சமூக விரோதிகளின் பெயர்கள் சமஸுக்கு தெரியாதா? அல்லது அவர்களுடைய புனிதத் திருநாமங்களை உச்சரிக்கக் கூடாது என்பதற்காக “நாம்” என்று தமிழ்ச் சமூகத்தின்மீது பழி போடுகிறாரா? யாருடைய நலனுக்காக அவர்களைக் மறைக்கிறார் சமஸ்?

அவர்களுடைய பெயர்களை தமிழ் இந்துவில் சமஸ் வெளியிடுவாரா? அல்லது கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் அவை ஏரி குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையா என்று விசாரித்து, அவ்வாறாயின் அத்தகைய சமூக விரோதிகளின் விளம்பரங்களை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிர்வாகத்திடம் கோருவாரா?

தன்னுடைய ஊதியத்தையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் உள்ளிட்ட எல்ல ரகங்களையும் சார்ந்த சமூக விரோதக் கழிசடைகள் யார் என்று தெரிந்தாலும், அவர்களுக்கு முன்னால் பல்லிளித்து நிற்பதையும் அவர்களை கவுரவப்படுத்துவதையும் தமது தொழில் தருமமாகவே கொண்டிருக்கும் சமஸ் போன்றோர் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிப் பேசுமுன் தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

உங்களுக்கும் கருத்துக் கூற உரிமை இருக்கிறது – தகுதி இருக்கிறதா?

தனது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் தமிழ் மக்களா கழிவுகளை எடுத்து வைத்துக் கொண்டார்கள்? எடுத்து வைத்தவர்கள் சமூக விரோதிகள். முதல்வரென்றும், தொழிலதிபரென்றும், வெங்காயமென்றும் போற்றிப் புகழ்ந்து அத்தகைய குற்றவாளிகளை புனிதர்களாக அடையாளம் காட்டி மக்களை மடமையில் ஆழ்த்தி வைக்கிறீர்களே அந்த சமூகவிரோதிகள்தான். அவர்கள் விட்டெறியும் விளம்பரக் காசிலும், இந்த மக்கள் விரோத அரசின் தயவிலும் வயிறு வளர்க்கும் நாளேடுகளுடைய கருத்து கந்தசாமிகள், தங்களுடைய சாப்பாட்டுத் தட்டில் நிரம்பியிருப்பது சோறா, கழிவா என்பதை முதலில் முகர்ந்து பார்க்கட்டும்.

காவிரி உரிமை கிடக்கட்டும். கருத்துரிமை கூட எல்லோருக்கும்தான் இருக்கிறது சமஸ் அவர்களே, அந்த உரிமையைப் பயன்படுத்தும் “தகுதி” உங்களுக்கு இருக்கிறதா என்று முதலில் சிந்தியுங்கள். அப்புறம் பொங்கலாம்.

மணற்கொள்ளையையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்துப் போராடும் தமிழ் மக்கள் காவிரி உரிமைக்காகவும் போராடுகிறார்கள். எதற்கும் போராடாமல் தன் பிழைப்பை மட்டும் பார்க்கும் தி.ஜானகிராமனின் ரசிகர்கள்தான் கும்பகோணம் காவேரி ஸ்நானத்தின் வழியாக காவிரியை நினைவு கூர்ந்து சமஸ் கட்டுரையை சிலாகிக்கிறார்கள்.

காவிரியும், தமிழகத்தின் நீராதாரங்களும் இப்படி சீரழிக்கப்படுகின்றனவே என்ற நியாயமான கோபம் தமிழகத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் இருக்கிறது. தன்னுடைய கோபமும் அதுதான் என்பதைப் போல ஒரு தோற்றம் காட்டி விட்டு, நைச்சியமாக நஞ்சைக் கக்கத் தொடங்குகிறார் சமஸ்.

காவிரி தமிழகத்துக்கு இரவல் நதியா?

தி. ஜானகிராமன்
தன் பிழைப்பை மட்டும் பார்க்கும் தி.ஜானகிராமனின் ரசிகர்கள்தான் கும்பகோணம் காவேரி ஸ்நானத்தின் வழியாக காவிரியை நினைவு கூர்ந்து சமஸ் கட்டுரையை சிலாகிக்கிறார்கள்.

“எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒரு கருத்து உண்டு; ரொம்பக் காலத்துக்கு இப்படி நீதிமன்றங்களில் வழக்காடி தண்ணீர் தேவையைத் தீர்த்துக் கொள்ளும் உத்தியை நாம் கையாள முடியாது – தமிழகத்துக்குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலான கட்டமைப்புக்கு நாம் மாற வேண்டும் என்பதே அது.”

“தமிழகத்துக்குள்ளான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது” என்று சமஸ் கூறுவதன் பொருள் என்ன? காவிரி “தமிழகத்துக்குள்ளான” நீராதாரம் இல்லையா? கர்நாடகத்துக்கு சொந்தமான காவிரி நீரை அடித்துப் பிடுங்குவதற்காகத்தான் நாம் நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருக்கிறோமா?

ரொம்பக் காலத்துக்கு வழக்காடும் உத்தியைக் கையாள முடியாதாம். உத்தியை கையாள்கிறோமா, வழக்காடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோமா? சர்வதேச நதிநீர்ச் சட்டங்கள் முதல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரையிலான எதற்கும் கட்டுப்பட முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருவதால் வழக்காடுகிறோம். மத்திய அரசு இந்த அயோக்கியத்தனத்துக்கு உடந்தையாக இருப்பதால் வழக்காடுகிறோம். தனது தீர்ப்புகள் அவமதிக்கப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உச்ச நீதிமன்றமே பித்தலாட்டம் செய்வதால் வழக்காடுகிறோம்.

ஆனால் சமஸின் பார்வை வேறு. தமிழகம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று மிகவும் பொறுப்புடன் பேசுவது போன்ற தோரணையில் அவர் கூறும் கருத்தின் உட்பொருள், “தமிழகத்துக்கு காவிரி இரவல் நதி” என்பதுதான். அதை வெளிப்படையாக சொல்லாமல் சூசகமாக சொல்கிறார். சமஸ் சொல்வதைத்தான் கர்நாடக அரசும் சொல்கிறது. “காவிரி எங்கள் ஆறு, எங்களுக்கு மிஞ்சித்தான் தான தருமம்” என்று பேசுகிறது.

துரதிருஷ்டவசமாக சர்வதேச சட்டமோ, மரபுகளோ சமஸின் கருத்துக்கு ஆதரவாக இல்லை. காவிரியில் தமிழகத்துக்கு சம உரிமை இருக்கத்தான் செய்கிறது.

முன்னாள் நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் சமஸுக்கு பதிலளிக்கிறார்!

தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழகத்துக்கு சார்பாக பேசாதவரான முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் இது பற்றி என்ன கூறுகிறார்?

“சம உரிமை (சம பங்கு அல்ல) என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டையும், சமத்துவமான பயன்பாடு என்ற ஐ.நா தீர்மானத்தையும் கர்நாடகம் ஏற்க மறுப்பதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன. தமிழகத்துடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவே கர்நாடகம் மறுக்கிறது. எங்களுக்குப் போக எவ்வளவு தர முடியும் என்றுதான் பேசுகிறது. அதையும் தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகிறது. அதனால்தான் மேலே உள்ள பகுதிகள் ஒரு ஆற்றின் இயல்பான நீரோட்டத்தை தடுப்பதாக (அணை) இருந்தால், கீழே உள்ள பகுதிகளின் ஒப்புதல் இன்றி செய்யக்கூடாது என்ற சர்வதேச நெறியை அது மீறுகிறது. கர்நாடக நீர்ப்பாசனத்துறை செயலரும் சரி, கர்நாடக முதலமைச்சரும் சரி வெளிப்படையாகவே இந்த நெறியை மீறிப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. இதன்படி பார்த்தால் இந்தியாவைக் கேட்காமலேயே பிரம்மபுத்திராவுக்கு குறுக்கே சீனா அணை கட்டிக்கொள்ளலாம் என்று ஆகிவிடும்.”

கர்நாடக அரசின் நிலையை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையையும் விமரிசனம் செய்திருக்கிறார்.

“நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்தான். ஆனால் நடுவர் மன்றத்தில் தமிழகம் இடைக்கால நிவாரணம் கோரியபோதும் சரி, ஆணையத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் மறுத்தபோதும் சரி, தமிழகம் எழுப்பிய சட்டரீதியான கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்காமல் நழுவியது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக 2007-ல் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 262 இன் படி தனக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். மாறாக, மேல்முறையீட்டை அனுமதித்து அதனைக் கிடப்பில் போட்டிருக்கிறது” என்று சாடியிருக்கிறார்.

Ramaswamy
முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர்

இரு மாநில விவசாயிகளையும் இணைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியாக, சென்னை மிட்ஸ் (MIDS) அமைப்பின் பேரா.ஜனகராஜனுடன் இணைந்து “காவிரி குடும்பம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதைப் பாராட்டுகிறார். அதன் முன்னோடியாக இருந்த கர்நாடக விவசாயி புட்டண்ணையா என்பவரும், பின்னாளில் “தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது” என்று போராடத் தொடங்கிவிட்டதை விமரிசிக்கிறார். கடைசியில் கோமாளித்தனமானது என்று கூறிக்கொண்டே வேறொரு தீர்வையும் முன்வைக்கிறார்.

“கர்நாடகம் செய்வது சரியல்ல. இருந்த போதிலும் நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக கர்நாடகம் கருதுவதால், அவர்களுடைய மனப்போக்கை மாற்றும் பொருட்டு, 192 டி.எம்சி யில், 20 டி.எம்.சி தண்ணீரை குறைத்துக் கொள்வதாக தமிழகம் தானே முன்வந்து கூறலாம். இதன் மூலம், இதற்குத் நிரந்தரத்தீர்வு காண முயற்சிக்கலாம். மாதம் தோறும் முறையாக தண்ணீர் திறந்து விடக் கோரலாம்” என்கிறார்.

கிட்டத்தட்ட பிச்சையெடுக்கும் நிலை அது. ராமசாமி ஐயர் கூறிய நிலையைக் காட்டிலும் தாழ்ந்த, நாயினும் தாழ்ந்த நிலைக்குத் தற்போது தமிழகத்தை தள்ளியிருக்கிறது உச்ச நீதிமன்றம். அதற்குப் பின்னரும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனைத் தெரிந்து கொள்ள ராமசாமி ஐயர் இல்லை. அவர் சென்ற ஆண்டே இறந்து விட்டார்.

மேற்கண்ட விவரங்கள் பலருக்குத் தெரிந்திருக்க கூடியவைதான் இருந்த போதிலும் பூ என்றோ புட்பம் என்றோ நாம் சொல்வதைக் காட்டிலும், ஐயர் சொல்றா மாதிரி அதைச் சொல்லும்போதுதானே உலகம் அதை நம்புகிறது! எனினும் ராமசாமி ஐயர் கூறும் விசயங்கள் குறித்த அறிவு இருப்பதற்கான அறிகுறி எதுவும் சமஸின் எழுத்தில் தென்படவில்லை. ஆனாலும் தமிழ் சமூகத்துக்கு அறிவுரை கூறும் “தகுதி” தனக்கு இருப்பதாகவே அவர் கருதுகிறார்.

தமிழகம் கர்நாடகத்தை ஆதிக்கம் செய்கிறதாம் – சொல்கிறார் சமஸ்!

“இன்றைக்கு வரலாற்று நியாயங்களின் அடிப்படையிலேயே நமக்கான தண்ணீரைத் தர வேண்டும் என்று பேசுகிறோம். அந்த வரலாற்றின் அடிப்படை என்ன? அந்த நியாயத்தின் அடிப்படை என்ன? ஒருவகையில் அது ஆதிக்க வரலாறு; ஆதிக்க நியாயம்!” என்கிறார்.

ஆதிக்க வரலாறு, ஆதிக்க நியாயம் என்ற சொற்றொடர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம். பிரிட்டிஷ் அரசுக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் போடப்பட்ட ஒப்பந்தத்தைத்தான் அப்படி மிரட்டலான மொழியில் சொல்கிறார் சமஸ்.

இப்படி ஒரு கருத்து கர்நாடக மாநிலத்தில் பரவலாக நிலவுகிறது என்ற போதிலும், 1924 ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கும்போது அது ஒரு நியாயமற்ற ஆவணமாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் மைசூர் அரசின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு காரணம் பிரிட்டிஷாரின் வலிமை அல்ல. மாறாக, ஆற்றின் தலைக்கட்டுப் பகுதியில் உள்ளவர்கள் மீதுதான் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிந்து நதி விசயத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீது கட்டுப்பாடு அதிகம். அதேபோல கங்கை விசயத்தில் வங்கதேசத்தைக் காட்டிலும் இந்தியா மீதுதான் கட்டுப்பாடு அதிகம். 1924-ல் கர்நாடகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அதற்குப் பின் காவிரியில் வரிசையாக அணைகளைக் கட்டி விட்டனர். இப்போது தமிழகம்தான் பாதிக்கப்பட்ட மாநிலம்.!” என்கிறார் ராமசாமி ஐயர்.

தமிழகத்தின் “ஆதிக்க நியாயத்துக்கு” எதிராக சமஸ் வெளிப்படுத்தும் ஆவேசம் கண்டு நிலை குலையாமல் இருக்க வேண்டுமானால் நமக்கு கொஞ்சம் புவியியல் ஞானம் தேவைப்படுகிறது. பல்வேறு ஆறுகள் உற்பத்தியாகின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் கணிசமான பகுதி கர்நாடகத்தில் இருப்பதால், தமிழகத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிக நீர்வளமிக்கது கர்நாடக மாநிலம்.

தமிழகத்தைப் போல மூன்று மடங்கு நீர்வளம் கொண்டது கர்நாடகம்!

cauvery1
கர்நாடகத்துக்கு ஆறுகள் அளிக்கும் நீராதாரத்தின் அளவு 3,475 டி.எம்.சி. இவற்றில் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும் 13 ஆறுகளிலிருந்து ஓடும் நீரின் அளவு மட்டும் 2,000 டி.எம்.சி. படத்தில் மைசூருவில் ஓடும் காவிரி!

தமிழகத்தின் ஆறுகள் ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட மொத்த நீராதாரங்களுக்கு ஓராண்டில் சராசரியாக கிடைக்கும் நீரின் அளவு – 853 டி.எம்.சி. இதில் வெளி மாநிலங்களிலிருந்து (காவிரி உள்ளிட்ட) ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு 243 டி.எம்.சி. வங்கக் கடலில் கலக்கும் நீரின் அளவு 177 டி.எம்.சி.

கர்நாடகத்துக்கு ஆறுகள் அளிக்கும் நீராதாரத்தின் அளவு 3,475 டி.எம்.சி. இவற்றில் மேற்கு நோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கும் 13 ஆறுகளிலிருந்து ஓடும் நீரின் அளவு மட்டும் 2,000 டி.எம்.சி. இதில் கடலில் கலக்கும் நீரின் அளவு சுமார் 1,500 டி.எம்.சி.  3,475 டி.எம்.சியில் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவு 1,872 டி.எம்.சி.

கர்நாடகத்தின் பதினொரு பெரிய அணைகளின் கொள்ளளவு 705 டி.எம்.சி. தமிழகத்தின் பதினொரு பெரிய அணைகளின் கொள்ளளவு 190 டி.எம்.சி.

கர்நாடகத்தில் மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் காவிரிப் பாசனப்பகுதிக்கு மிக அருகாமையில் ஓடும் ஆறுகள் தரும் நீரின் அளவு மட்டும் 923 டி.எம்சி. காவிரிப் பாசனப்பகுதி மாவட்டங்கள் பலவற்றுக்கு இவற்றைத் திருப்பி விட முடியுமென்று கூறுகிறார் தமிழக பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் சி.எஸ்.சுப்புராஜ். இவ்வாறு அந்த ஆறுகள் சிலவற்றை கிழக்கு நோக்கி திருப்புவதன் மூலம் சுமார் 142 டி.எம்.சி நீரை காவிரிப் பாசனப்பகுதிக்கு கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டத்தை 2002 இல் எஸ்.எம்.கிருஷ்ணா அரசு உருவாக்கியிருந்ததாக கூறுகிறார் முன்னாள் கண்காணிப்புப் பொறியாளர் நடராசன்.

கர்நாடகத்தின் மக்கட்தொகை சுமார் 6.1 கோடி என்பதையும், தமிழகத்தின் மக்கட்தொகை சுமார் 7.21 கோடி என்பதையும் இந்த இடத்தில் நினைவிற் கொள்ள வேண்டும்.

எனவே கர்நாடகம் தனது பாசனப்பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கான நீராதாரத்தை வழங்காமல் தமிழகம் பறித்துக் கொள்வதைப் போல சமஸ் உருவாக்கும் சித்திரம் உண்மைக்கு மாறானது. பெங்களூருவைச் சேர்ந்த சமூகப் பொருளாதார ஆய்வுக்கழகம் 2013 இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக நாளொன்றுக்கு 140 கோடி லிட்டர் காவிரி நீர் எடுக்கப்படுகிறது. அதில் 48% நீர் வீணடிக்கப்படுகிறது. குடிநீரை வீணடிப்பதில் நாட்டிலேயே கல்கத்தாவுக்கு முதலிடம் (50%). பெங்களூருவுக்கு இரண்டாமிடம்.

இதைப்பற்றி கேள்வி எழுப்புவதற்கான தகுதி தமிழகத்துக்கு உண்டா, அல்லது “கர்நாடகத்துக்குள்ளான” நீராதாரம் பற்றி நாம் கேள்வி எழுப்பக் கூடாது என்று சமஸ் கூறுவாரா? மகாராட்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் ஆந்திரம் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கும் கிருஷ்ணா நதி, எந்த “மாநிலத்துக்குள்ளான” நீராதாரம்? மகாராஷ்டிரத்துக்கு 666 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 911 டிஎம்சி, ஆந்திரத்துக்கு  1,001 டிஎம்சி  என்று கிருஷ்ணா நதி தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருப்பதை சமஸ் அறிவாரா?

காலையில் பெங்களூருவின் கழிவுநீர், மதியம் தமிழகத்தின் குடிநீர்!

Nityanand_Jayaraman
பெங்களூருவின் கழிவறைகளிலிருந்து காலையில் வெளியேற்றப்படும் கழிவு நீர், அன்று மதியம் நமக்கு குடிநீராக வந்து சேருகிறது என்று எழுதுகிறார் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்.

“காவிரி குடும்பம்” என்ற முயற்சியின் அங்கமாக பல முறை கர்நாடகத்துக்கு சென்று வந்துள்ள ரங்கநாதன், அங்கே புன்செய் நிலங்களில் கரும்பு போன்ற நன்செய் பயிர்களை வலியப் பயிர் செய்து, கோடையில் கூட ஏராளமான தண்ணீரை வீணடிப்பதாக கூறுகிறார். அங்கே பாசனப்பரப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், காவிரி டெல்டாவின் நெல் உற்பத்தி 38 லட்சம் டன்னிலிருந்து 18 லட்சம் டன்னாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. கூலி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 80 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கிறது. இவை 2013-ல் ரங்கநாதன் கூறியவை. இன்று அதற்கும் வழியில்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நெல் விளைவதற்கு மட்டுமே ஏற்ற பகுதியான டெல்டாவில் மாற்றுப் பயிர்களைப் பற்றி யோசிக்குமாறும் நீர் மேலாண்மை சரியில்லை என்றும் அறிவுரை சொல்கிறார் சமஸ்.

பெங்களூருவின் கழிவு நீர் ஆண்டொன்றுக்கு 20 டி.எம்.சி, விருஷபாவதி ஆற்றில் விடப்பட்டு, காவிரி நீராக கணக்கிடப்பட்டு மேட்டூருக்கு அனுப்பப்படுகிறது. பெங்களூருவின் கழிவறைகளிலிருந்து காலையில் வெளியேற்றப்படும் கழிவு நீர், அன்று மதியம் நமக்கு குடிநீராக வந்து சேருகிறது என்று எழுதுகிறார் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்.

“விருஷபாவதி ஆற்றங்கரையில் புளியஞ்சாதம் சாப்பிட்ட சுகானுபவம்” பற்றி தி.ஜானகிராமன் யாருக்காவது “லட்டர்” எழுதியிருந்தால், அந்த இலக்கியத்தை உடனே சமஸுக்கு அனுப்பி வையுங்கள். அப்புறமாவது கர்நாடகத்தின் தகுதி குறித்த்து அவர் கேள்வி எழுப்புகிறாரா பார்ப்போம்.

தமிழகம் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அணை கட்டி விட்டதாம், அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால்தான் அணை கட்டியிருக்கிறார்களாம். “காலத்தால் முன்னேறிய மாநிலம், தங்களுடைய முன்னுரிமை தொடரவேண்டும் என்று பேசுவதுதான் சமூக நீதியா?” என்று வருண சாதி ஆதிக்கம் செய்வோரின் இடத்தில் தமிழகத்தையும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் இடத்தில் கர்நாடகத்தையும் வைத்து சமூக நீதி அரசியலை தாக்குகிறார் சமஸ்.

VRISHABHAVATH
பெங்களூருவின் கழிவு நீர் ஆண்டொன்றுக்கு 20 டி.எம்.சி, விருஷபாவதி ஆற்றில் விடப்பட்டு, காவிரி நீராக கணக்கிடப்பட்டு மேட்டூருக்கு அனுப்பப்படுகிறது.

புல்லரிக்கிறது! எச்.ராஜா, நாராயணன், ராகவன், சுமந்த் சி ராமன், மாத்ருபூதம்,  பெருமாள்மணி, பானு கோம்ஸ் உள்ளிட்ட அறிஞர்கள் அனைவரும் ரூம் போட்டு யோசித்திருந்தாலும் திராவிட இயக்கத்தை மடக்குவதற்கு இப்படி ஒரு கேள்வி அவர்களுடைய மூளையில் உதித்திருக்குமா?

கட்டுரையின் முடிவில் சமஸுடைய தத்துவஞானத்தின் ஒளி குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி பரவத் தொடங்குகிறது.

“இன்றைக்கு சிந்து நதி உடன்பாட்டில், பாகிஸ்தானுடனான பகிர்வை ஏன் மாற்றிப் பரிசீலிக்கிறோம்? வளரும் காஷ்மீரின் தேவைகளுக்கு ஏற்ப நமக்கான நீரை அதிகம் எடுத்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கான பகிர்வைக் குறைக்க வேண்டும் என்று எந்த நியாயத்தின் அடிப்படையில் பேசுகிறோம்? இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு இந்த நியாயமே கோலோச்சும்” என்கிறார் சமஸ்.

துருக்கி யூப்ரடிஸ் நதியைத் தடுத்து இராக் மக்களைத் தவிக்க விட்டது போல, ஜோர்டான் நதியைத் தடுத்த இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைத் தவிக்கச் செய்ததைப் போல,  சிந்து நதியைத் தடுப்பதும் நியாயமாம். ஆனால் அது பாகிஸ்தானை தண்டிப்பதற்காக இல்லையாம். காஷ்மீரை முன்னேற்றுவதற்காம்!

பாருங்கள்! மோடிக்கும் ராஜ்நாத் சிங்குக்கும் தெரியாத இரகசியம் சமஸுக்குத் தெரிந்திருக்கிறது.

“இந்தியா சிந்து நதியைத் தடுப்பது எப்படி நியாயமோ, அப்படி கர்நாடகம் காவிரியை தடுப்பதும் நியாயம்” என்று விளக்குகிறார் சமஸ். எப்படியோ பாகிஸ்தானின் இடத்துக்கு தமிழ்நாட்டைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். சென்ற இதழ் (அக்டோபர் 2016) புதிய ஜனநாயகத்தின் தலையங்கம், “பாஜக-வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?” என்று கேள்வி எழுப்பியிருந்தது. “ஆமாம்” என்று அதற்கு பதிலளித்திருக்கிறார் சமஸ்.

அவருடைய கட்டுரையின் கடைசிப் பத்தி இப்படி முடிகிறது.

samas with vadivelu
உங்க அளவுக்கு நடிக்கிறது ரொம்ப கஷ்டம் சமஸ் சார்!

“அது காவிரியோ, கிருஷ்ணாவோ, முல்லைப்பெரியாறோ நதிநீர்ப் பகிர்வில் நமக்குள்ள உரிமைகள் தனி. அவற்றை நாம் பறிகொடுப்பதற்கில்லை. ஆனால் உரிமைகளைப் பேசுவதற்கான தார்மீகத்தகுதி தமிழினத்துக்கு இருக்கிறதா?”

இந்த வரிதான், சமஸ் யாரென்பதை அனைவருக்கும் அடையாளம் காட்டும் முத்திரை வாக்கியம். தொலைக்காட்சி விவாதத்தில் “அக்லக்கை கொன்றது சரியா?” என்று பா.ஜ.க நாராயணனிடம் நெறியாளர் கேட்டால், “யாரைக் கொலை செய்தாலும் அதை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று நாராயணன் பதில் சொல்வார். ஒரு சிறிய இடைவெளி விட்டு அக்லக் பசுமாட்டைக் கொன்றிருக்கிறாரே அதை கண்டிக்காத உங்களுக்கு என்னைக் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறதா?” என்று திருப்பியும் கேட்பார். இதுதான் சங்க பரிவார மூளை. சமஸின் மூளை.

“எந்தச் சமூகமாவது சாப்பாட்டுத் தட்டின் ஓரத்தில் கழிவுகளை வலிய எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுமா?” என்று சமஸ் எழுப்பியிருக்கும் கேள்விக்கு நமது பதில் – சாப்பிடும், சமஸ் அவர்களே, சாப்பிடும்.

“சிந்து நதியைப் போல காவிரியைத் தடுப்பதும் நியாயமே” என்று கூறும் உங்கள் எழுத்தை மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல் படிக்க முடிந்த தமிழ்ச் சமூகம், தனது தட்டின் ஓரத்தில் கழிவை வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்கா கூச்சப்படப் போகிறது?

  • சூரியன்

கட்டுரை ஆதாரங்கள்:

மரபீனிக் கடுகு – சிறப்புக் கட்டுரை

0

மரபீனிக் கடுகு: இந்திய உணவுச்சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும்
வல்லரசுகளின் இன்னுமொரு ஆயுதம்!

2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது 2016-ல் மரபீனிக் கடுகு வந்திருக்கிறது!

CitizenCattle
பன்னாட்டு நிறுவனங்களுக்கு பால் கறக்கும் மாடாக குடிமக்கள் (மரபீனி விதைகள், கடன், போலீஸ் அடக்குமுறை அரசு, பொய்கள்…..)

டெல்லி பல்கலைக் கழகத்தின் ‘தாவரங்களின் மரபியல் ஆராய்ச்சி’ப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பெண்டல் மற்றும் அவரது குழுவினர், DMH-11 (DHARA MUSTARD HYBRID-11) எனப்படும் மரபீனிக் கடுகுப் பயிரை, தங்கள் கண்டுபிடிப்பு என உரிமை கொண்டாடி, வர்த்தகப் பயன்பாட்டுக்கு அனுமதிகோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

மரபீனிப் பயிர்களை நம் நாட்டில் அனுமதிப்பதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் அதிகார அமைப்பான ‘மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு’(GEAC), மரபீனிக் கடுகு பற்றி முடிவெடுக்க, தனியாக ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழுவை நியமித்தது. இத்துணைக் குழு “மரபீனிக் கடுகுப் பயிரை நம் நாட்டில் பயிரிட அனுமதிக்கலாம்” என பரிந்துரை செய்துள்ளது! மனிதனுக்கோ,விலங்குகளுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை என மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகமும் அறிவித்து விட்டது! ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பியதை அடுத்து கடந்த 24-6-2016-ல் இந்தியாவில் பயிரிடுவதற்கு அனுமதிக்கும் முடிவை தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளது ‘மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு’(GEAC)!

no-gmo
“கொலைகார மரபணு மாற்ற விதைகள்”

ஏற்கனவே நாடு முழுவதும் எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக பி.டி.கத்திரியை மத்திய அரசு நிரந்தரமாகத் தடை செய்ததுள்ள நிலையில், அடுத்தடுத்து மரபீனிப் பயிர்களுக்கான ஆராய்ச்சிகள் தொடர்வதற்கு காரணம் என்ன? இந்த ஆராய்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம் என்ன?

மரபீனிக் கடுகு என்பது மண்ணில் இயற்கையாக உயிர்வாழும் “பேசில்லஸ் அமைலொ லிக்யுபாசியன்ஸ்” (bacillus amyloliquefaciens) என்ற பாக்டீரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ‘பர்னாஸ்’, ‘பர்ஸ்டர்’, மற்றும் ‘பார்’ ஆகிய மூன்று ஜீன்களை உள்ளடக்கியது!. இதில் பர்னாஸ் ஜீன், ஆண் பூக்களின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியது. பர்ஸ்டர் ஜீன், தாய் தாவரத்தில் உள்ள ஆண் மலட்டுத்தன்மையை தடுத்து பெண்பூக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பார் ஜீன், என்பது குளுஃபோசினேட் (glufocinate) என்ற களைக் கொல்லியை எதிர்த்து கடுகுப்பயிர் வளர்வதற்கு உதவும். இம்மூன்று ஜீன்களையும் ஒன்றாக இணைத்து DMH-11 என்ற மரபீனிக் கடுகுப்பயிரை உருவாக்கியுள்ளார்கள்!

களவாணிளும்-கைக்கூலிகளும்!

Grinding-Mustard-Seed-for-oil
கடுகிலிருந்து எண்ணெய் எடுக்கும் பாரம்பரிய முறை

மரபீனிக் கடுகுக்கு டெல்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பெண்டால் குழுவினர் உரிமைக் கொண்டாடினாலும், ஏற்கனவே, இது, “2002-ல் பேயர் நிறுவனத்தின் ப்ரோ-அக்ரோ விதைக்கம்பெனி உருவாக்கிய மரபீனிக் கடுகின் தொழில்நுட்பம்தான்” என்று பல சமூகவியலாளர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். மேலும் இந்த பெண்டால் கருத்து திருட்டுக்காகவும், தொழில்நுட்ப திருட்டுக்காவும் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர் என்பதும் அமபலமாகியுள்ளது! கண்டுபிடிப்பாளர்களே திருடர்கள் என்றால், இதற்குப் பரிந்துரை செய்த துணைக்குழு உறுப்பினர்கள் கைக்கூலிகளாகத்தானே இருக்க முடியும்!

  • K.வேலுத்தம்பி – துணைக்குழுவின் தலைவரான இவர், ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் நிதியுதவில் நடைபெறும் நோய்தாக்குதலை எதிர்த்து வளரும் மரபீனி அரிசி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்.
  • SR.ராவ்- சின்ஜென்டா நிறுவனத்தின் நிதியுதவியில் நடைபெறும் தங்க அரிசி ஆராய்ச்சியில் பணிபுரிந்து வருபவர்.
  • B.செசிகெரன்- பேயர், மான்சாண்டோ, பி.எ.எஸ்.எஃப்,போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினராக உள்ள ‘சர்வதேச வாழ்வியல் அறிவியல் கழக’த்தின் உறுப்பினர்! மத்திய அரசின், தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின்(NIN) முன்னாள் இயக்குனர்!

இவர்களைப் போன்ற, பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளின் கையில்தான், நமது தாவரங்களின் மரபியல் ஆய்வுகளும், எதிர்கால விவசாயமும் சிக்கியுள்ளது!

மரபீனிக் கடுகின் இலக்கு இந்தியாவின் எண்ணெய்ச் சந்தை!

அறிவியல் ரீதியாகவே மரபணு தொழில்நுட்பம் ஆபத்தானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. “ஊடுருவித் தாக்கும் மரபணு தொழில்நுட்பம் ஒரு நாட்டின் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப உருவாகி வளர்ந்த மரபணுப் பயிர்களை அழித்து, அந்நாட்டின் பல்லுயிர் தன்மையை ஒழித்துக்கட்டிவிடும். ஒரு முறை இத்தகைய மாற்றம் நடந்துவிட்டால், அதன் பிறகு எப்போதுமே அதை மீட்டெடுக்கவே முடியாது.!” என்று அறிவியலாளர்களே அலறுகிறார்கள்.

“மனித உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும். இயற்கையின் சமநிலை சீர்குலையும். நிலமும் நீரும் நஞ்சாகிவிடும். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்! குளுஃபோசினேட் களைக்கொல்லியை தொடர்ந்து பயன்படுத்துவதால் எதற்கும் கட்டுப்படாத வீரிய களைச்செடிகள் உருவாகும்!”என்று உலகம் முழுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்!

கடுகு விவசாயம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கனடாவின் செர்ப்ரூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில், மரபீனி சோளம் பயிராகும் பகுதியில் வாழும் 93% கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் பி.டி மரபீனியின் விஷம் பரவி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்!

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய மரபணுப் பொறியியலின் தந்தை என்று கருதப்படும் டாக்டர் புஷ்ப பார்கவா, “மரபணுக் கடுகு தொடர்பான ஆய்வில் பல ஓட்டைகள் உள்ளன, உயிரிப் பாதுகாப்பு சோதனைகள்(BIOSAFTY) போதாது, ஒழுங்குமுறை/ கட்டுப்பாடு சரியில்லை” என்று குற்றம் சாட்டுகிறார்!

கார்ப்பரேட் ஆதிக்கம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களோ, தமக்கு லாபம் ஈட்டித்தராத எந்த அறிவியலையும் (இயற்கை, சுற்றுச்சூழல், விவசாயம் பற்றிய அறிவியலை) கண்டு கொள்வதில்லை! அவர்களின் ஒரே குறிக்கோள் சந்தையும், லாபமும்தான்! மரபீனிக் கடுகின் இலக்கு இந்திய சமையல் எண்ணைச்சந்தை!

கடுகு விவசாயம் ஒரு பார்வை

packaged-oil-prices
இந்திய உணவு எண்ணெய்ச் சந்தை

இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்களில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை முக்கிய சமையல் எண்ணெயாக பயன்படுவது போல, வடக்கு, கிழக்கு மாநில மக்கள் பாரம்பரியமாக கடுகு எண்ணெயைத்தான் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். ராஜஸ்தான்,ம.பி, ஹரியான,உ.பி, மாநிலங்களில் அதிகளவில் கடுகு விவசாயம் நடக்கிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களிலும், சில இடங்களில் சிறு விவசாயிகளால் கோதுமையின் ஊடுபயிராகவும் கடுகு பயிரிடப்படுகிறது. இவ்வாறு நாடு முழுவதும் சுமார் 60.36 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 80 லட்சம் டன் கடுகு அறுவடையாகி வருகிறது. பெரும்பாலும் பாரம்பரிய முறையிலான எண்ணெய் பிழியும் 7000-9000 தொழில்கூடங்களில் தான் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது. மிகக் குறைந்த அளவிலேயே நவீன தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய்யப்படுகிறது.

உற்பத்தியும் இறக்குமதியும்

இயல்பில், அதிக காரநெடியும், பிசுபிசுப்புத் தன்மையும் கொண்ட கடுகு எண்ணெயில் இருதய நோய்க்குக் காரணமான கரையாத கொழுப்புகளைக் கரைக்கும் வேதியியல் பொருள்கள் உள்ளன என இந்திய கடுகு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது! இதன் புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், இலைகள் மக்களின் கீரை உணவாகவும் பயன்படுகிறது! மக்களின் இந்த பாரம்பரிய உணவுப் பழக்கத்தை 1990-ல் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை தலைகீழாய் புரட்டிப் போட்டுவிட்டது!

பன்னாட்டுக் கம்பெனிகளின் காவல் நாயாக மத்திய அரசு!

parm-oil-imported
இறக்குமதி செய்யப்படும் பாம் ஆயில்

“உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியைக் குறைத்து, தாராள இறக்குமதியை ஊக்குவிப்பது” என்ற மக்கள்விரோதக் கொள்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால், பாமாயில், சோயா எண்ணைகளை பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியச் சந்தையில் இறக்கிவிட்டன. 1998-ல் சர்வதேச சந்தையில் ஒரு டன் 150 டாலருக்கு விற்ற சோயா எண்ணெய்க்கு, அமெரிக்கா 190 டாலர் மானியம் கொடுத்து தனது எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தது! ஏசியான் நாடுகளுடன் இந்தியா செய்து கொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு மலேசியா, இந்தோனேசியா நாடுகள் மிகக் குறைந்த விலையில் பாமாயிலைக் கொண்டுவந்து குவித்தன! இதனால் உள்நாட்டு சமையல் எண்ணெய்கள் விலையிழந்து, எண்ணெய் வித்து உற்பத்தி செய்யும் விவசாயமும் அழியத் தொடங்கிவிட்டது! இத்துடன், நிறம், வாசனை, ருசியற்ற சோயா, பாமாயில் எண்ணெய்களை, நம் உள்நாட்டு எண்ணெய்களுடன் எளிதாகக் கலந்து விற்கும் கலப்பட எண்ணெய் மோசடிகளும் அதிகரித்தது!

import-of-vegetable-oils
எண்ணெய் இறக்குமதி நிலவரம்

நமது நாட்டின் சமையல் எண்ணெயின் ஒருவருடத்தேவை சுமார் 217 லட்சம் டன். இதில் உள்நாட்டு உற்பத்தி 89.78 லட்சம் டன். மீதி 127.31 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது!  (அட்டவணை கட்டுரையின் இறுதியில்) அதாவது, உள்நாட்டின் 68% தேவைக்கு அந்நிய நாடுகளை நம்பியே இருக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள் ளோம்! ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 கோடி ரூபாயை சமையல் எண்ணை இறக்குமதிக்காக மத்திய அரசு செலவிடுகிறது!

ஆண்டுக்கு 20% என அதிகரித்து வரும் இறக்குமதி சந்தையை முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நோக்கத்திற்காகவே தனது உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயத்தை திட்டமிட்டு ஒழித்துக்கட்டி வருகிறது மத்திய அரசு!

edible-oil-situation
உற்பத்தியும் இறக்குமதியும்

2005-06-ல் உள்நாட்டின் சமையல் எண்ணெய் உற்பத்தி 83.16 லட்சம் டன்னாகஇருந்தது. ஒன்பதாண்டுகள் முடிவில் 2014-15-ல் சுமார் 5 லட்சம் டன்கள் மட்டுமே உயர்ந்து 89.78 லட்சம் டன்னாக இருந்தது! இதே காலத்தில் சமையல் எண்ணெய்யின் இறக்குமதி 40.91 லட்சம் டன்னிலிருந்து 127.31 லட்சம் டன் என மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது! பன்னாட்டுக் கம்பெனிகளின் காவல் நாயாக மத்திய அரசு செயல்படுவதை, மேற்கண்ட மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களே நிரூபிக் கின்றன!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“பூச்சி,நோய் தாக்குதல் இல்லாதது”, “25% அதிக விளைச்சல் திறன்”, என்ற வழக்கமான விளம்பரங்களுடன் வரும் மரபீனிக் கடுகுப் பயிரைவிட கூடுதல் விளைச்சல்தரும் உள்நாட்டுரகங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதைக்கூட புறக்கணித்துவிட்டு, மரபீனிக் கடுகை அனுமதிக்க முயல்வது, உள்நாட்டு விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யும் பச்சைத் துரோகம்! கடுகு எண்ணெய்ச் சந்தையை, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இறக்குமதி எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ருச்சி, காத்ரெஜ், அதானி, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் சதி!

மோடியே பன்னாட்டு நிறுவனங்களின் மரபணுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வீரிய ரகம்தான்! இதனுடன் ‘இந்துத்துவா’ மரபணுவை சற்று தூக்கலாக பிணைத்துவிட்டால் கிடைப்பதுதான் ‘இந்தியாவின் வீரிய வளர்ச்சி’! இப்போது சொல்லுங்கள் மோடி வளர்ச்சியின் நாயகனா? இல்லையா?

எண்ணெய் வருடம்

நவம்பர்அக்டோபர்

எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி*

உள்நாட்டின் மொத்த .. உற்பத்தி அளவு.

இறக்குமதி **

மொத்த பயன்பாடு

2005-2006

279.79

83.16

40.91

124.07

2006-2007

242.89

73.70

46.05

119.75

2007-2008

297.55

86.54

54.34

140.88

2008-2009

277.19

84.56

74.98

159.54

2009-2010

248.83

79.46

74.64

154.1

2010-2011

324.79

97.82

72.42

170.24

2011-2012

297.98

89.57

99.43

189

2012-2013

309.43

92.19

106.05

198.24

2013-2014

328.79

100.80

109.76

210.56

2014-15

266.75

89.78

127.31

217.09

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

ஐ.எஸ் – சவுதி கூட்டணி அமெரிக்காவுக்குத் தெரியும் !

0

சுலாமிய ஜிஹாதுக்கு இருபத்தோராம் நூற்றாண்டுக்கான புதிய விளக்கங்கள் படைத்தளித்த அமெரிக்கா, ஆப்கானிய முஜாஹிதீன்கள், தாலிபான்கள் உள்ளிட்ட ‘போராளிகளையும்’ உலகிற்கு படைத்தளித்த பெருமைக்கு உரியது. மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை தடையின்றி உறிஞ்சுவது, பெட்ரோல், டாலரின் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வது உள்ளிட்ட நோக்கங்களுக்காக வளைகுடா நாடுகளைத் தனது அடிவருடிகளாக போற்றி வளர்த்து வருகின்றது அமெரிக்கா. அதோடு கூட, தனக்கு படியாத வளைகுடா நாடுகளில் ‘ஜனநாகத்தின் சுவிசேஷத்தை’ அறிவிக்கும் வஹாபிய காலாட்படைகளுக்கு தத்துவார்த்த போதகராகவும் சவுதி உள்ளிட்ட வளைகுடா அடிவருடிகளைப் பயன்படுத்தி வருகிறது.

isisflagஅந்த வகையில் ரசிய சார்பு சிரியாவுக்கு ’ஜனநாயக’ பாடம் எடுக்க அமெரிக்க ஏற்பாட்டிலும் சவுதி ஷேக்குகளின் மேற்பார்வையிலும் களமிறக்கப் பட்ட ஐ.எஸ் கும்பல், ஒருகட்டத்தில் கையை மீறிச் சென்றவுடன், அவர்களை பயங்கரவாதிகள் என்று ஒழிப்பதாக மாற்றிக் கொண்டது அமெரிக்கா. அல் – கைதா, ஐ.எஸ் போன்ற இசுலாமிய அடிப்படைவாத – பயங்கரவாத கும்பல்கள் அமெரிக்க மூளைகளின் குறைப்பிரசவங்கள் என்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்ட அடிப்படைவாத இசுலாத்திற்கென்றே சொந்த முறையிலான இயங்குமுறை இருக்கின்றது. அமெரிக்க நோக்கமும் அது பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகளின் நோக்கமும் தன்னியல்பாகவே ஒருகட்டத்தில் முரண்பட்டாக வேண்டும். அந்த முரண்பாடுகளை தனது நலனுக்காக அமெரிக்க பயன்படுத்தவும் செய்கிறது.

தற்போது ஐ.எஸ். இயக்கத்திற்கு எதிராக தீவிரமாக களமாடுவதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, அதன் தத்துவ குருமார்களின் ஒத்துழைப்பு பூரணமாக தனக்குக் கிட்டவில்லையே என ஆத்திரப்படுகிறது. அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடு அமெரிக்க அதிகாரவர்க்கத்தினரிடையே எதிரொலிப்பதையே RT இணையத்தில் வெளியான இந்தக் கட்டுரை உணர்த்துகிறது. கொலை வழக்கில் ஒன்றில் சவுதி இளவரசர் ஒருவர் சமீபத்தில் மரணதண்டனை பெற்றது குறித்து இசுலாமிய மதவாதிகள் அந்த நாட்டின் நீதி வழுவாமையை போற்றுகின்றனர். ஆனால் உலகெங்கும் அப்பாவி முசுலீம்களைக் கொல்லும் அமெரிக்கா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கூட்டாளியாக சவுதி விளங்குவதை மறைக்கின்றனர். – வினவு

சவுதியும் கத்தார் நாடும் ஐ.எஸ்-சுக்கு ’இரகசிய’ உதவி அளிப்பதை ஹிலாரி கிளிண்டன் அறிவார் – விக்கி லீக்ஸ்

ஹிலாரியும் அவருடைய தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரான ஜான் பொடெஸ்டோவும் பரிமாறிக் கொண்ட  மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஐ.எஸ்-சுக்கு எதிராக தொடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் போரின் திரைமறைவு வேலைகள் அம்பலமாகியுள்ளன. வெளிடப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில், சவுதியும் கத்தாரும் ஐ.எஸ்-க்கு “நிதி மற்றும் பொருள்” உதவிகள் செய்ததை ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.

சவுதியும் கத்தாரும் ஐ.எஸ்-சுக்கு உதவப்போவதில்லை என்று ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தன. இந்நிலையில் அதை மீறி இவ்விரு நாடுகளும் ஐ.எஸ் மற்றும் பிற சன்னி பிரிவு இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்கு கள்ளத்தனமாக ஆயுதம் மற்றும் பொருளுதவிகளை செய்கின்றன எனத் தாம் கருதுவதாக ஹிலாரி, பொடெஸ்டோவுக்கு மறுமொழி எழுதியுள்ளார்.

மேலும் ஹிலாரி ” ஐ.எஸ்-க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்திருந்தாலும், நாம் நம்முடைய தலைமைத்துவத்தையும், பழைய பாரம்பரிய வகைப்பட்ட இராஜதந்திரங்களையும் பயன்படுத்தி சவுதி மற்றும் கத்தார் நாடுகளுக்கு மேலதிக அழுத்தங்களைத் தரவேண்டும். ஏனென்றால் இவர்கள் ஐ.எஸ் மற்றும் சன்னி இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு ஏராளமான பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் இரகசியமாகச் செய்து கொண்டு வருகின்றனர்” என்று பொடெஸ்டோவிடம் குறிப்பிட்டுள்ளார்.

”இராஜதந்திர அழுத்தங்களோடு குர்து தேசிய அரசாங்கத்திற்கு கூடுதல் உதவிகளையும் செய்ய வேண்டும். சவுதியும், கத்தாரும் இதன்மூலம் தங்களுடைய சன்னி மார்க்க அடிப்படைவாதத்தை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கட்டுப்படுத்த வைப்பது மேலும் அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்கிறார் ஹிலாரி.

Arab wealthy princesசவுதி அரேபியா இதற்கு முன்னரும் அல் குவைதா, தலிபான்கள் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்து வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை, பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றுவது போன்ற பல்வேறு அட்டூழியங்களையும் ஐ.எஸ்-சுக்கு நிகராகச் செய்து வருகின்றது.

சவுதி, கத்தார் நாடுகளுக்கெதிராக அமெரிக்கா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஐ.நா-வின் ”குழந்தைகளின் உரிமைக்கான கமிட்டி” சவுதியின் மனித உரிமை மீறல் குறித்து வெளிட்டுள்ள கடுமையான அறிக்கையின் மேல் அமெரிக்கா நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற நாடுகள் இதில் தலையிட வேண்டி வரும்.

2016-ம் ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் ஐ.எஸ்-சுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை என்ற பெயரில் பி-52 ரக குண்டு மழை பொழியும் போர் விமானங்களை அல் உதீத் ஏவு தளத்தில் நிறுத்தி வைத்திருந்தன.

சவுதி அரேபியாவும் தன் பங்குக்கு அமெரிக்காவுடன் இணைந்து ஐ.எஸ்-சுக்கு எதிராகப் போர் புரிவதாக அறிவித்தது. எனினும், இவையெல்லாம் வெற்று பம்மாத்துகளாக இருந்தனவே தவிர எதார்த்தத்தில் எதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் 2016 அன்று அல் நுஸ்ரா தளபதி அபு அல்-ஈஸ் “ அமெரிக்காவும் அதன் வளைகுடா கூட்டாளிகளும் தங்களுக்கு ஆயுதங்களை வழங்கினர்” என்று அம்பலப்படுத்தினார்.

இதை அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில், ”சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் குழுக்களை சிலர் ஆதரிக்கின்றனர், ஆயுதங்களும் கொடுக்கின்றனர். ஆனால் நிச்சயம் அமெரிக்கா அப்படிச் செய்யவில்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்த அந்நாட்டின் அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், இது நிலைமையை மேலும் சிக்கலாக்குவதாகவும் குறிப்பிட்டார்.

சவுதி, கத்தார் நாடுகள் தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்வது குறித்து  பொடெஸ்டோ மட்டுமல்ல, பிரிட்டனும் குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணைக்குழு ஒன்று அரபு நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் நாடுகளுடைய அரச பரம்பரையினர் தீவிரவாதக்குழுக்களுக்கு உதவி செய்வதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் சட்டங்கள் இயற்றவேண்டும் என அழுத்தம் கொடுத்தது.

அரச குடும்பங்களுக்கும், அரசாங்கத்துக்குமான பணப்பட்டுவாடா குறித்து அறிந்து கொள்வது மிக மிகச் சிரமமானது என்கிறார் பிரிட்டனின் வெளி நாட்டு குடிமைப் பணி தலைவரான டான் சக்(Dan Chugg). மேலும் அவர் கூறுகையில்  முந்தய காலங்களில் சவுதி தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்துள்ளது என்பதைக் வலியுறுத்தினார். மேலும், பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை தனது வளைகுடா பங்காளி நாடுகளின் சட்டங்கள் ஐ.எஸ். அமைப்புக்கு சென்று சேரும் நிதியாதாரங்களைத் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் எதிர்காலத்திலாவது ஐ.எஸ் நிதி பெறுவதைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ், அல் நுஸ்ரா போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு மட்டும் அரபு நாடுகள் நிதிப் புரவலர்களாக இருக்கவில்லை. அடிப்படைவாத மதகுருமார்களை களமிறக்கி தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கோசோவாவில் வகாபியத்தை அறிமுகம் செய்வதற்கும் சவுதி, கத்தார், குவைத் போன்ற நாடுகள் ஏராளமாக நிதியுதவி செய்து வருவதை கடந்த  மே மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

பால்கன் போரினால் பாதிக்கப்பட்ட கோசோவாவில் திடீரென இசுலாமிய தொண்டு நிறுவனங்கள் முளைக்கத் துவங்கின. இத்தொண்டு நிறுவனங்கள் போரினால் பாதிப்புள்ளான மசூதிகளை மீண்டும் நிர்மாணிக்க உதவி செய்ததற்கு கைமாறாக கொசோவோ இசுலாமியர்களுக்கு பர்தா உள்ளிட்ட பிற்போக்கான மதச்சட்டங்களை அறிமுகம் செய்து வைத்தன.

ஒருவேளை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குப் பணத்தை வாரி இறைத்ததைப் போல கோசோவாவிலும் வகாபிசத்தை விரிவடையச்செய்து, நிதியையும் கொட்டினால் அமெரிக்கா மேலும் சில பெரும் போர்களுக்குத் தயாராக வேண்டிய நிலை வரும். உதாரணமாக சவுதியால் நிதி உதவி செய்யப்படும் அல் வாக்ஃப்-அல் இஸ்லாமி நிறுவனம் 2000 முதல் 2012-ம் ஆண்டு வரை ஏறக்குறைய 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகத் திரட்டியுள்ளது.

தமிழாக்கம்: தரணி

மேலும் படிக்க :

இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குமா பொம்மை ? சிறப்புக் கட்டுரை

0
வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)

இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குவதாகக் கருதிக் கொண்ட பொம்மை!

கேஜ்ரிவாலைச் சந்தித்திருக்கிறார் இரோம் சர்மிளா. ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தனது 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்டபோது, தனது போராட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும், போராட்ட முறையை மாற்றி, தேர்தலில் போட்டியிட்டு மணிப்பூர் முதல்வராகி, அதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகவும் பத்திரிகையாளர்களிடம் அவர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியே கேஜ்ரிவாலுடனான இந்தச் சந்திப்பு.

அதாவது, டில்லி போலீசு கான்ஸ்டபிளின் மீது கூட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரமில்லாத நிலையில் உள்ள கேஜ்ரிவாலிடம், இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழியை சர்மிளா கேட்டறியப் போகிறார் என்றும் இந்த சந்திப்புக்குப் பொருள் கொள்ளலாம்.

குறிப்பிட்ட அரசியல் – சமூக சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத போராட்ட முறைகளும், தீர்வுகளும் அவற்றை முன்னெடுக்கின்ற நல்லெண்ணம் கொண்ட மனிதர்களை எங்ஙனம் பரிதாபத்துக்குரிய வகையில் ஒரு சுழலில் சிக்க வைத்து விடுகின்றன என்பதற்கு இரோம் சர்மிளா ஒரு எடுத்துக்காட்டு.

நாவில் தேனைத் தடவித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் இரோம் சார்மிளா.
நாவில் தேனைத் தடவித் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் இரோம் சார்மிளா.

நாசித்துவாரமே உணவுக்குழலாக மாற்றப்பட்ட நிலையில், நாவில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடப் படாமலும் மருத்துவமனையின் நிரந்தரத் தனிமையிலும் 16 ஆண்டு காலம் தாக்குப்பிடித்து நின்ற அந்தப் பெண்ணின் உறுதி மணிப்பூர் மக்களுக்குப் பெருமை சேர்த்தது. சர்மிளாவின் 16 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டம், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தையும், அந்த சட்டத்தை நியாயப்படுத்துகின்ற அதிகார வர்க்கம், ஓட்டுக்கட்சிகள், நீதிமன்றம் உள்ளிட்ட இந்த அரசமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும் போராட்டமாக அது இருந்தது.

இன்னொருபுறம், அந்தப் போராட்டம் நிறுவனமயமாகிக் கொண்டும் இருந்தது. மணிப்பூர் அரசின் அங்கமாகவே இந்திய இராணுவம் மாற்றப்பட்டிருப்பதைப் போலவே, இராணுவச் சட்டத்துக்கு எதிரான சர்மிளாவின் போராட்டத்தையும் இந்திய அரசு நிறுவனமயமாக்கியது. ஆண்டுக்கு ஒருமுறை சர்மிளா விடுவிக்கப்படுவதும், மீண்டும் கைது செய்யப்படுவதும், அன்றைக்கு மட்டும் தொலைக்காட்சி காமெராக்கள் அவரை மொய்ப்பதும், காலப்போக்கில் ஒரு சடங்கிற்குரிய உணர்ச்சியற்ற நிலையை எய்தி விட்டன. இந்த நிலையில்தான், சர்மிளா போராட்டத்தைக் கைவிடுவது என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

சர்மிளாவின் உயிரைப் பாதுகாப்பதற்கா? மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதற்கா?

மணிப்பூரில் ஒரு இலட்சம் இராணுவத் துருப்புகள் – பல பத்து ஆயுதக்குழுக்கள் – 80 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் சட்டமன்றத் தேர்தல் – அரசு அதிகாரத்திலமர்ந்து தின்றுகொண்டே, ஆயுதக்குழுக்களுடன் இரகசிய உறவு வைத்துக் கொள்ளும் கட்சிகள் – என முரண்பட்டவை போலத் தோற்றம் தரும் பல போக்குகள், தமக்குள் ஒரு ஒத்திசைவை எய்தியிருந்த பின்புலத்தில், இரோம் சர்மிளாவின் போராட்டத்தை நாம் பார்க்கவேண்டும்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்து உரையாடும் இரோம் சர்மிளா.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்து உரையாடும் இரோம் சர்மிளா.

ஐந்து மருத்துவர்கள், 12 செவிலியர்கள், 2 சிறைத்துறை மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய சுமார் 40 பேர் அடங்கிய குழு சர்மிளாவைப் பராமரித்து வந்தது. அவரது மூக்கு வழியாக உட்செலுத்தப்பட்ட ஊட்டச்சத்து உணவுக்காக மட்டும் மணிப்பூர் அரசு மாதம் 10,000 ரூபாய் செலவிட்டிருக்கிறது. இத்துடன் மேற்கூறிய 40 அலுவலர்களின் ஊதியத்தையும் சேர்த்துக் கணக்கிடுவோமேயானால், இரோம் சர்மிளாவைப் பராமரிக்கும் பொருட்டு அரசு ஆண்டுதோறும் சில கோடிகளைச் செலவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் செலவு, மணிப்பூர் மக்களின் உயிர்வாழும் உரிமைக்காகப் போராடிய சர்மிளாவின் உயிரைப் பாதுகாப்பதற்கான செலவு அல்ல; மணிப்பூர் மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதற்கு இந்திய அரசு பெற்றிருக்கும் அதிகாரத்தின் தார்மீக நியாயத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கானது. இது சர்மிளாவின் போராட்டத்திற்கு அரசு அளித்த மதிப்பு அல்ல, அவமதிப்பு.

இந்த உண்மை இரோம் சர்மிளாவுக்கு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் புரிந்திருக்கிறது என்று கூறவியலாது. 16 ஆண்டுகளுக்கு முன் மைலோம் படுகொலையின் கொடூரத்திற்கு எதிர்வினையாக சர்மிளா தொடங்கிய போராட்டம் என்பது ஒரு இளம்பெண்ணின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினை. தான் நடத்தும் போராட்டம் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அகற்றும் வல்லமை பெற்றதா என்று யோசித்து தொடங்கப்பட்டதல்ல அந்தப் போராட்டம். ஆனால் இன்று அவர் எடுத்திருப்பது நன்கு யோசித்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு.

போகாத ஊருக்கு வழி என்பது போராட்ட வடிவம் குறித்த பிரச்சினை அல்ல!

ஒரு போராட்ட வடிவம் பயனற்றது என்றோ, நிறுவனமயமாகிவிட்டது என்றோ புரிந்து கொண்டவுடனே பொருத்தமான மாற்று வடிவம் தெரிவு செய்யப்பட்டு விடுவதில்லை. உண்ணாநிலைப் போராட்டம் தோற்றுவிட்டதால், தேர்தலில் நிற்கப் போவதாகவும், போராட்ட வடிவத்தை மாற்றியிருப்பதாகவும் கூறியிருக்கிறார் சர்மிளா. முதல்வர் பதவியையே கைப்பற்றினாலும், அந்த சட்டத்தை இம்மியளவும் அசைக்க முடியாது என்பது சர்மிளாவுக்குத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மணிப்பூர் தாய்மார்கள், அம்மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள துணை இராணுவப் படை முகாம் முன்பு நடத்திய நிர்வாணப் போராட்டம். (கோப்புப்படம்)
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மணிப்பூர் தாய்மார்கள், அம்மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள துணை இராணுவப் படை முகாம் முன்பு நடத்திய நிர்வாணப் போராட்டம். (கோப்புப்படம்)

இருந்தபோதிலும், ஒரு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதற்கு பதிலாக, “என்னுடைய வரம்பு இதுதான்” என்று தீர்மானித்துக் கொண்டு, அந்த வரம்புக்குட்பட்ட நடவடிக்கைகள் மூலமாகவே நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்பும் தலைவர்கள், அதே நம்பிக்கையை மக்களுக்கும் ஏற்படுத்த முனைகிறார்கள்.

தனது கோரிக்கைக்குப் பொருத்தமான போராட்ட முறையைத் தெரிவு செய்து கொள்ளத் தெரியாத அல்லது அதற்குத் தயாராக இல்லாத சமூகமும், “இது போகாத ஊருக்கு வழி” என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே, இன்னொருபுறம் அதன் மீதே நம்பிக்கையும் வைக்கிறது. வேறு வழியென்ன இருக்கிறது என்று கூறி தனது முரண்பட்ட நிலையை நியாயப்படுத்தவும் முனைகிறது.

ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு, இரோம் சர்மிளாவின் காந்திய போராட்டத்துக்கும் ஆதரவு, சட்டமன்றத் தேர்தலில் 80% வாக்குப்பதிவு – இதுதான் மணிப்பூர் சமூகத்தின் நிலை. மணிப்பூர் மக்களின் இந்த நிலை விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படாதவரை, தமது சொந்த நடைமுறையின் வழியாக அம்மக்கள் தங்களது முரண்பட்ட நிலையைப் புரிந்து கொள்ளாதவரை இதற்கு முடிவில்லை. இது போராட்ட வடிவங்களுக்கிடையிலான முரண்பாடு குறித்த பிரச்சினை அல்ல, மக்களுடைய அரசியல் புரிதலில் நிலவும் முரண்பாடு குறித்த பிரச்சினை.

ஏமாற்றம் மக்களுக்கா, சர்மிளாவுக்கா?

உண்ணாநிலையைக் கைவிட்டு தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்த இரோம் சர்மிளா மீது அதிருப்தி கொண்ட மணிப்பூர் சமூகத்தைப் பற்றி, எழுத்தாளர் ஷிவ் விசுவநாதன் கூறும் கருத்து நம் கவனத்துக்குரியது. “ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் ஒரு சமூகம், தியாகம் செய்யும் உண்மையான நாயகர்களிடம் மட்டும் வாழ்க்கையின் உயிர்த்துடிப்புகள் அனைத்தையும் துறந்த ஒரு நேர்மையை எதிர்பார்க்கிறது” என்று மக்களின் போலித்தனத்தை அவர் சாடுகிறார். இதனை போலித்தனம் என்பதா, அல்லது இலட்சியத் தலைவர்களிடம் மக்கள் கொண்டிருக்கும் வழிபாட்டுணர்வு கலந்த நியாயமான எதிர்பார்ப்பு என்பதா?

வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)
வாக்களிக்கக் காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்: மணிப்பூரின் முரண்பட்ட முகம். (கோப்புப்படம்)

நாயகர்கள் எனப்படுவோரும் மக்களும் எதிரெதிராக நிறுத்தப்படும் இந்த நிலையில், யார் விமரிசனத்துக்குரியவர்கள்? இத்தனை காலம் எந்த மக்களுக்காக உடலை உருக்கிப் போராடினாரோ, அந்த மக்களே தன்னைக் கைவிட்டு விட்டதாகக் கருதுகிறார் சர்மிளா. தேர்தல் அரசியல் சபலங்களுக்கு ஆட்படாத இரும்புப் பெண்மணியாக தங்களால் கொண்டாடப்பட்ட சர்மிளா, தன்னிச்சையாக போராட்டத்தை முடித்துக் கொண்டதுடன், முதல்வராக விரும்புவதாகவும் கூறியதன் மூலம் தாங்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலும் மதிப்பிலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டதாக எண்ணுகிறார்கள் மணிப்பூர் மக்கள்.

காந்திய சாகசம்!

இரோம் சர்மிளாவைப் பொருத்தவரை, அவரே சொல்லிக் கொள்வது போல அவர் ஒரு காந்தியவாதி. “பதினாறு ஆண்டுகள் உண்ணாநிலை” என்ற காந்தியவாதியின் தனிநபர் சாகசம், எதிர்முனையில் மணிப்பூரில் இயங்கும் சுமார் 40 ஆயுதக்குழுக்களின் சாகசம் – இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது மணிப்பூர். காஷ்மீரோடு ஒப்பிடத்தக்க போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டங்கள் எதுவும் மணிப்பூரில் இல்லை. சர்மிளா என்ற தனிப்பட்ட பெண்ணின் போராட்டத்தையே தங்களது போராட்டமாக எண்ணி அம்மக்கள் இறுமாந்து இருக்கக்கூடும். சர்மிளாவை இரும்புப் பெண்மணியாகவும் தெய்வமாகவும் ஆக்கிய சூழல் இதுதான்.

“நான் தெய்வப் பெண் அல்ல, சாதாரணப் பெண்” என்று அவர் கூறிக்கொண்ட போதிலும், தன்னுடைய தியாகத்தின் காரணமாக மணிப்பூர் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தனக்கிருப்பதாக அவர் கருதிக் கொண்டு விட்டார். பட்டினி கிடந்தது அவராக இருக்கலாம். அவர் எதற்காகப் பட்டினி கிடந்தாரோ அந்தக் கோரிக்கை மணிப்பூர் மக்களுடையது.

“யாரும் சொல்லி நான் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. நானாகத் தொடங்கினேன்; நானே முடிக்கிறேன்” என்று தனது விமரிசகர்களுக்கு சர்மிளா கூறியிருக்கும் பதில் அவரது உளப்பாங்கை காட்டுகிறது. “நான் தொடங்கினேன், நான் மூடுகிறேன்” என்பதற்கு இது அவருக்குச் சொந்தமான பெட்டிக்கடை அல்ல, மக்களின் கோரிக்கை.”தொடங்கியவர்களுக்கு முடிக்கும் உரிமை உண்டு” என்று சர்மிளாவின் சார்பில் வாதிடுபவர்கள், “ஆதரித்த மக்களுக்கு எதிர்க்கும் உரிமை உண்டு” என்பதையும் அங்கீகரிக்க வேண்டும்.

“பதினாறு ஆண்டுக்காலம் நாவில் தண்ணீர் கூடப் படாமல் உறுதிமிக்கதொரு போராட்டத்தை நடத்திய ஒரு பெண்ணுக்கு தனது போராட்டத்தை முடித்துக்கொள்ளும் உரிமை கிடையாதா?” என்று யாரேனும் கேள்வி எழுப்பினால், “ஆம், உரிமை கிடையாது” என்று பதில் கூறும் தார்மீக பலம் மணிப்பூர் மக்களுக்கு இல்லை. அதே நேரத்தில், “என் போராட்டத்தை என் விருப்பப்படி நான் முடிக்கிறேன்” என்கிற சர்மிளாவின் ‘ஆணவத்தை’ ஏற்றுக்கொள்ளும் சுயமரியாதையற்ற நிலையிலும் அவர்கள் இல்லை.

மணிப்பூரின் புதல்வியா, சர்மிளாவின் மணிப்பூரா?

தனது போராட்டம் ஊடகங்களில் பிரபலமாகி, “மணிப்பூரின் புதல்வி சர்மிளா” என்பதற்கு பதிலாக “சர்மிளாவின் ஊர் மணிப்பூர்” என்று உலகத்தார் பேசும் நிலை வந்துவிட்டதன் காரணமாக, போராட்டத்தை முடித்துக் கொள்வது பற்றிக் கருத்து கூறும் தகுதி மற்றவர்களுக்கு இல்லை என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

“தங்களது லட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர், தங்களால் இயலாததைச் சாதிப்பவர், தங்களைக் காட்டிலும் நேர்மையானவர்” என்பன போன்ற பல மதிப்பீடுகளின் அடிப்படையில் தலைவர்களுக்கு மக்கள் வழங்கும் அங்கீகாரம்தான் – புகழ். அது ஒரு எழுதப்படாத ஒப்பந்தம். எந்தக் கணத்திலும் ரத்து செய்யப்படும் நிபந்தனையை முதல் சரத்தாக கொண்ட ஒப்பந்தம். “தங்களை விட மேலானவர் தலைவர்” என்று மக்கள் கொண்டிருக்கும் இந்தக் கருத்தை, “தன்னைக் காட்டிலும் கீழானவர்கள் மக்கள்” என்று ஒரு தலைவர் மொழிபெயர்த்துக் கொள்வாரானால், அந்த ஒப்பந்தம் மக்களால் ரத்து செய்யப்பட்டு விடும். ரத்து செய்யப்பட்ட பிறகுதான் தலைவர்கள் அதை தெரிந்து கொள்ளவே முடியும்.

ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தனது போராட்டத்தை முடித்துக் கொண்ட இரோம் சர்மிளா, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். ஆனால் அவருக்கு குடியிருக்க வீடு கொடுப்பதற்கு யாரும் விரும்பவில்லை. “தலைமறைவு ஆயுதக் குழுக்களுக்கு அஞ்சித்தான் மக்கள் இடம் தரத் தயங்கினார்கள்; வெளிமாநிலத்தவர் ஒருவரை சர்மிளா திருமணம் செய்து கொள்வதை மணிப்பூர் மக்கள் ஏற்கவில்லை” என்றெல்லாம் சிலர் இதற்கு விளக்கம் கூறுகிறார்கள். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது என்ற சர்மிளாவின் அரசியல் முடிவு காரணமாக மணிப்பூர் மக்களிடையே அவர் மீது பரவிவிட்ட கசப்புணர்வுதான் இதற்குக் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியவில்லை. தங்குவதற்கு வீடு கிடைக்காமல், 16 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே அவர் மீண்டும் திரும்ப நேர்ந்தது.

சாவியைத் தேடிய முல்லா!

“தேர்தலில் தனக்கு வாக்களித்து முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு மணிப்பூர் மக்களுக்கு விருப்பம் இல்லை என்று பொருள்” என்று கூறினார் சர்மிளா. “மாநில முதல்வர் என்ற பொம்மைப் பதவியில் அமர்ந்து கொண்டு இராணுவத்தின் நிழலைக்கூட தண்டிக்க இயலாது என்பது கூடவா சர்மிளாவுக்குத் தெரியவில்லை?”என்று அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொலைத்த இடம் இருட்டு என்பதால் அங்கே சாவியைத் தேடாமல், “விளக்கு கம்பத்தின் கீழே சாவியைத் தேடிய” முல்லாவின் நிலைக்கு வந்து விட்டார் சர்மிளா. மோசடியும் சுயமோசடியும் இரண்டறக் கலந்த நிலை இது.

பதினாறு ஆண்டுகளாகப் போராட்டத்திலேயே வாழ்ந்த அனுபவத்தின் காரணமாக, மற்றவர்களைக் காட்டிலும் தன்னுடைய புரிதல் மேம்பட்டதாக இருக்கும் என்றுகூட அவர் நினைத்திருக்கக் கூடும். “தாங்கள் நடைமுறையில் இருப்பவர்கள்” என்று அகம்பாவம் கொள்வோர் பலரையும் பீடிக்கும் நோயே இத்தகைய சிந்தனை.

கிணற்றுக்குள்ளேயே வாழ்வதனால் கிணறு பற்றிய தவளையின் ஞானம் மேம்பட்டதாகிவிடாது. அனுபவம் என்பது அறிவியலுக்கு மாற்றல்ல. “ஞானம்” கிணற்றுக்கு வெளியே இருக்கிறது.1991-இல் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச விதிகளுக்கும் எதிராக இருப்பது பற்றி ஐ.நா.வின் மனித உரிமைகள் குழு கேள்வி எழுப்பியபோது, “வடகிழக்கிந்திய மாநிலங்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று விடாமல் தடுப்பதற்கு இது அவசியம்” என்று விளக்கமளித்தார் இந்தியாவின் அட்டார்னி ஜெனரல்.

இந்தக் கருத்தை வழிமொழிபவர்தான் கேஜ்ரிவால். காஷ்மீர் மக்கள் முதல் வடகிழக்கிந்திய மக்கள் வரையிலான யாருடைய பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிக்காத கேஜ்ரிவாலை, தனது வழிகாட்டியாகத் தேடிக் கண்டடைந்திருக்கிறார் இரோம் சர்மிளா. கிணற்றுக்கு வெளியே வந்து அவர் தேடிக் கண்டடைந்திருக்கும் “ஞானம்” இது.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் இரோம் சர்மிளா தொடங்கிய உண்ணாநிலைப் போராட்டம் என்பது மைலோம் படுகொலையின் உணர்ச்சி பூர்வமான எதிர்வினை. அது “சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு” என்ற போதிலும், அந்த நடவடிக்கை இந்திய அரசமைப்பை வெளியிலிருந்து அம்பலப்படுத்தியது. தற்போது சர்மிளா “சிந்தித்து எடுத்திருக்கும் முடிவு”, மணிப்பூரை ஒடுக்குகின்ற இந்த அரசமைப்பின் அங்கமாக அவரை மாற்றுகிறது. இன்றைய ‘சிந்திக்கும்’ சர்மிளாவைக் காட்டிலும், அன்றைய ‘சிந்திக்காத’ சர்மிளாதான் ‘தெளிவாக சிந்தித்திருக்கிறார்’ என்று எண்ணுகிறார்கள் மணிப்பூர் மக்கள்.

“தன்னுடைய கதை, தன்னுடைய முடிவு” என்று கருதுகிறார் சர்மிளா.”கதை தங்களுடையது” என்று நினைக்கிறார்கள் மக்கள். மணிப்பூரில் ஒரு நம்பிக்கை இருக்கிறதாம். “யாராவது ஒரு கதையைச் சொல்லத் தொடங்கி, முறையாக அதனை முடிக்கத் தவறினால், மதம் பிடித்த யானையொன்று கனவிலும் அவரைத் துரத்தும்” என்பது அந்நம்பிக்கை. சர்மிளாவை யானை துரத்திக் கொண்டிருக்கிறது.

யானையால் துரத்தப்படும் அபாயம், முன்னோடிகள் – நாயகர்கள் எனப்படுவோர் அனைவருக்கும் உண்டு.

– மருதையன்

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

சிவகாசி விபத்து : கொன்றது புகையா அரசின் அலட்சியமா ?

0
fire sivakasi

ருடா வருடம் தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு இணையாக பட்டாசு தொழில் விபத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துவதும் அதிகரித்து வருகிறது. சிவகாசி – விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள ராகவேந்திரா பட்டாசு கடையில் 20.10.2016 வியாழனன்று நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

வியாபாரம் என்றால் அதில் சாமி பேர் இருக்க வேண்டும் என்ற விதிக்கு தப்பாத ராகவேந்திர கடையில் நேற்று பட்டாசுகளை வெளியூருக்கு அனுப்பும் முகமாக சிறு லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். பட்டாசு பெட்டிகளில் புகையைப் பார்த்த ஊழியர்கள் அணைக்க முயன்றும் முடியவில்லை. உடனே அவர்களும் அருகாமை கடைக்காரர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

நாற்புறமும் வெடித்துச் சீறிய பட்டாசால் கடை முழுவதும் வெடிக்க ஆரம்பித்தது. அந்த சிறு லாரியும், அருகில் இருந்த 20 இருசக்கர வாகனங்களும் எரிந்து கூடுகளாகின. அருகாமைக் கடைகளும் சேதமடைந்தன.

fire sivakasiராகவேந்திரா கடைக்கு பின்புறம் இருக்கிறது தேவகி ஸ்கேன் மையம். கடையை ஒட்டிய பாதை வழியேதான் இந்த ஸ்கேன் நிலையத்திற்கு செல்ல முடியும். விபத்தில் எழுந்த பிரம்மாண்டமான கரும்புகை ஸ்கேன் நிலையத்தை சூழ்ந்து நிரப்பியது. உள்ளே பணியாளர்களும், மருத்துவ சோதனைகளுக்கு வந்தோரும் அதில் மாட்டிக் கொண்டு மூச்சுவிடமுடியாமல் மாட்டிக் கொண்டனர்.

கண நேரத்தில் புகை அவர்களில் எட்டு பேரை கொன்று விட்டது. ஸ்கேன் நிலையத்தின் மேலாளர் பீட்டர், ஊழியர்களான காமாட்சி, வளர்மதி, புஷ்பகலட்சுமி, ராஜா, பத்மலதா மற்றும் சோதனைகளுக்கு வந்த தேவி, சொர்ணகுமாரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். புகை சூழ்ந்த நேரத்தில் உள்ளே இருந்த 41 மக்களில் 15 பேர் வெளியேற மீதிப்பேர் அரை மற்றும் முழு மயக்கமாகியிருக்கின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 14 பேர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமென்று செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மூச்சுத்திணறல் ஏற்படுத்துமளவு புகை மண்டிவிட்டது. ஏ.சி கருவி மூலம் உள்ளே புகை சென்றது, நிலையத்தின் ஒருவழிப்பாதை எல்லாம் சேர்ந்து உயிரிழப்பை அதிகப்படுத்திவிட்டன.

நிலையத்தின் அபாய ஒலிக்கருவி ஒலித்ததை வைத்தே தீயணைப்புத் துறை வந்திருக்கிறது. இருப்பினும் எட்டு பேர் பலி. பிறகு ராகவேந்திரா கடை உரிமம் வைத்திருப்பவரான ஆனந்தராஜ் மற்றுமை கடையை நடத்திய செண்பகராமன் மீது போலிசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஊடகங்களிலும் செய்தி வெளியாகிவிட்டது. அவ்வளவுதானா?

இது விபத்தா இல்லை தொழிலாளிகள் – மக்கள் மீது அரசும் முதலாளிகளும் சேர்ந்து காட்டும் அலட்சியத்தினால் நடந்த கொலையா?

சிவகாசியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் பல 20 ஆண்டுகளுக்கு முன் உரிமம் பெற்றவை. ஆனால் 2008 வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி எந்த நகருக்குள்ளேயும் கடைகளோ, கிடங்குகளோ இயங்கக் கூடாது. கடைகளுக்கு அருகே குறைந்தது 100 அடி தூரத்திற்கு குடியிருப்பு பகுதியே இருக்க கூடாது என்றெல்லாம் இந்த சட்டம் கூறுகிறது.

மற்ற ஊர்களில் பட்டாசுகளை நேரடியாக விற்கும் போது சிவகாசி கடைகளில் அவற்றை வெளியூருக்கு அதிக அளவில் அனுப்புகிறார்கள். தீபாவளி நெருங்குவதால் இக்கடைகள் இரவு பகலாக அதிக நேரம் அதிக பாரத்தை அனுப்பி வருகின்றன. கொல்லப்பட வேண்டிய மாடுகளை கொண்டு செல்கிறார்கள் என்று வழக்கு போடும் போலீசும், விலங்கு ஆர்வலர்களும், அதிகாரிகளும் உள்ள நாட்டில் பட்டாசுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறார்களா என்று எவரும் பார்ப்பதில்லை.

புதிய சட்டப்படி பட்டாசு வைத்து வணிகம் செய்வோர் உரிமத்தோடு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், இருப்பு பதிவேடு, தீ தடுப்பு கருவிகள் அனைத்தும் உரிய முறையில் வைத்திருக்க வேண்டும். இதை பல அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும்.

புதிய சட்டத்தின்படி பழைய கடைகள் உரிமம் பெற்றார்களா என்றால் இல்லை. அதிலும் இலஞ்சம் – ஊழல். இத்தகைய பண்டிகை காலங்களில் பட்டாசு குறித்த முன் எச்சரிக்கைகளை அதிக கவனத்தோடு செய்ய வேண்டிய உரிய அரசுத் துறைகளுக்கு இதே பண்டிகை காலம் அதிக பணத்தை லஞ்சமாக அள்ளிக் கொடுக்கிறது என்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை.

கடையோ கிட்டங்கியோ ஆலையோ யார் சான்றிதழ் பெற்றிருக்கிறார், அதை அவர் முறையாக கடைபிடிக்கிறாரா என்று ஆய்வுசெய்வதற்கு பதில் முறையாக மாமூல் வருகிறதா என்பதை பார்க்கிறார்கள். உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் அப்பல்லோ தளங்களில் தொழுதிருக்கும் போது கீழே இத்தகைய அபாயம் நிறைந்த தொழில்களில் பலி அதிகமாகத்தான் இருக்கும்.

அம்மாவோ, அமைச்சரோ வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஆயிரம், இலட்சம் சரவெடி வெடிக்கும். இந்த வெடிகளை கேட்கும் போதும் கேட்காமலேயே மாமூலையும் எதிர்பார்க்கும் அ.தி.மு.க கூட்டம் ஆளும் போது சிவகாசி உயிர்பலிகளை நரபலி என்றே குறிப்பிடவேண்டும்.

கருணாநிதி ஏன் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கண்டிக்கும் பா.ஜ.க-வின் தமிழிசை இந்த விபத்து குறித்து என்ன சொல்கிறார்? எதிர்காலத்தில் தடுக்க வேண்டும், தொழிலில் ஈடுபடுவோருக்கு உரிய தற்காப்பு பயிற்சி, விழிப்புணர்வு, பயிலரங்குகள் கொடுக்க வேண்டும், சிவகாசி மருத்துவமனையில் தீப்புண் சிகிச்சை பிரிவு வேண்டும் – இவைதான் அவரது கோரிக்கைகள். இதில் எதிலாவது மத்திய மாநில அரசுகளையோ இல்லை அரசுத் துறைகளையோ கண்டிக்கிறாரா இல்லை! இதன்படி இனி இந்துக்களுக்கு பட்டாசுகள் எனும் அஃறிணைப் பொருட்கள்தான் முக்கியமே அன்றி அதை உருவாக்கும் பாவப்பட்ட ‘இந்துக்கள்’ அல்ல.

முதலாளிகளின் கட்சியான காங்கிரசின் திருநாவுக்கரசர், இழப்பீடு 10 இலட்சம் கொடுக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஒரு வேளை காங்கிரசு மிட்டாமிராசுகள் யாரும் கொல்லப்பட்டிருந்தால் இழப்பீடு பத்து கோடியாக இருக்கும். மேலும் அப்பல்லோவில் இருக்கும் அவரது முன்னாள் கடவுளின் மனம் நோகாமல் இருப்பதை பக்தியாக வைத்திருக்கும் காங்கிரசு தலைவர் ஏன் தமிழக அரசை கண்டிக்கப் போகிறார்?

இறந்தவர்களுக்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்துவும் இரங்கலை தெரிவித்திருக்கிறார். இதன்படி எஸ்.ஆர்.எம்-மில் சேர பணம் கொடுத்தவர்கள் அதை திரும்ப பெற முடியாது என தற்கொலை செய்து கொண்டாலும் அவர் இரங்கல் செலுத்துவார். என்ன ஒரு லேசர் பிரிண்ட் அவுட்டிற்கு பத்து ரூபாய் கூட செலவில்லையே!

அன்புமணி ஒரு படி மேலே போய் நீதி விசாரணை மற்றும் கடை வாகன சேதங்களுக்கும் இழப்பீடு கேட்கிறார். இதன்படி ஒரு நூறு வாக்குகள் கூட கிடைக்குமா என்பது அவர் கவலை. மற்றபடி சின்னையா, தமிழக அரசையோ மத்திய அரசையோ கண்டித்து ஒரு காற்புள்ளி கூட சேர்க்கவில்லை. அம்மாவின் அடிமை சரத்குமாரோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிராறாம்.

இந்த இலட்சணத்தில் தேஷ் பக்தர்களின் சார்பில் பா.ஜ.க மற்றும் அதன் ஊடகங்கள் அனைத்தும் சீன பட்டாசுகளை தவிர்த்து இந்திய பட்டாசுகளை வெடிக்கச் சொல்லி உபதேசிக்கிறார்கள். இவர்களுக்கு இந்திய பட்டாசு வெடிப்பதுதான் முக்கியமே அன்றி இந்திய மக்கள் அதே இந்திய பட்டாசுகளால் கொல்லப்படுவது முக்கியமல்ல. சீனப் போட்டியால் பாதிக்கப்படும் இந்திய முதலாளிகளைக் காப்பாற்றும் அக்கறை இந்திய தொழிலாளிகளையோ இல்லை மக்களையோ காப்பாற்றுவதில் இல்லை.

சீனாவிலோ உலகின் மற்ற நாடுகளிலோ இத்தகைய பண்டிகை கால பட்டாசுகளை தயாரிப்பதற்கும் விற்பதற்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், விதிமுறைகளை வைத்திருக்கும் போது இந்தியாவில் ஏன் இல்லை? ஏனென்றால் இங்கே மக்களின் நலனை முதன்மையாக வைத்து அரசோ, கட்சிகளோ செயல்படுவதில்லை.

பாதாளச் சாக்கடையோ இல்லை பட்டாசுத் தொழிலோ நம் மக்கள் சாகவேண்டுமா? தீபாவளிக்கு வெடிக்க காத்திருக்கும் உள்ளங்கள் சிந்திக்கட்டும்.

– இராசவேல்
படங்கள் நன்றி: நக்கீரன்

உப்பின் கதை

2

“உப்பு இல்லா பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஏனென்றால், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சரியான அளவில் உப்பு இருந்தால் தான் அதனை சுவைத்து சாப்பிட முடியும். இல்லையெனில் அதனை சாப்பிடவே பிடிக்காது. உப்பு சரியாக இல்லையென்றால் “என்ன கொழம்பு வக்கிர, உப்பு ஒறப்பு இல்ல” என்று வீட்டில் வசைபாடுகிறோம்.

salt-uppalam-08
உழைப்பின் உப்பு

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் அண்ணன் ஒத்தை மாட்டு வண்டியில் உப்பினை ஏற்றிக்கொண்டு வந்து வீடு வீடாக கிராமங்களில் விற்பனை செய்ய வருவார். அவர் எப்பொழுது வருவார் என எதிர்பார்த்து நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார்கள். உப்பு வண்டி வந்தவுடன் தானியங்களை கொடுத்து விட்டு உப்பினை வாங்கிச் செல்வார்கள். பண்டமாற்று முறையில் வியாபாரம் இருந்தது. காசோ, தானியமோ எதுவும் இல்லையென்று கடனாக கேட்டாலும் முகம் சுளிக்காமல் உப்பினை கொடுத்து விட்டுச் செல்வார். அதனால் அனைவருக்குமே அவரை பிடிக்கும். வேறுபாடு இல்லாமல் அன்பாக பழகுவார்கள் கிராம மக்கள். பள்ளி செல்லும் மாணவர்களும் அந்த உப்பு வண்டியில் ஏறிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவார்கள். அவ்வளவு ஆனந்தம் அடைவார்கள். மாணிக்கம் அண்ணன் போகும் வழியில் தான் பள்ளிக்கூடம். அங்கே மாணவர்களை இறக்கி விட்டுச் செல்வார். இப்பொழுது மாணிக்கம் அண்ணன் வருவதே இல்லை. உப்பு வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். காரணம் உலகமயமாக்கல் எனும் பெரும்பூதம் அமுல்படுத்தப்பட்டது தான்.

உலகமயமாக்கல் வருகைக்கு பின் இந்தியாவில் உப்பு சந்தை

உலகம் முழுவதும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் நீரைக் கொண்டு தான் உப்பு உற்பத்தி செய்கிறார்கள். உலக அளவில் உப்பு உற்பத்தியில் சீனா தான் முதலிடம். இரண்டாவதாக அமெரிக்கா. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 6.9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டிற்கு சராசரியாக 215.86 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 11,799 உற்பத்தியாளர்கள் உள்ளனர். 1.11 லட்சம் தொழிலாளர்கள் தினசரி கூலிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள்.

உப்பு உற்பத்தி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தியாவில் உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 180 லட்சம் டன் (76.7 %) உற்பத்தி செய்கிறது. இரண்டாவதாக தமிழ்நாடு 25.8 லட்சம் டன் (11.16), ராஜஸ்தான் 17.5 லட்சம் டன் (9.86%), இதர மாநிலங்களான ஆந்திரா. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக, மேற்கு வங்கம் ஆகியவை 2.28 சதவீதம் அளவு உற்பத்தி செய்கின்றது.

சிறு உற்பத்தியாளர்கள் 10 ஏக்கருக்கும் குறைவாக 87.6 சதவிதத்தினரும், நடுத்தர உற்பத்தியாளர்கள் 10 முதல் 100 ஏக்கருக்குள் 6.6. சதவித்த்தினரும், பெரும் உற்பத்தியாளர்கள் 100 ஏக்கருக்கும் மேல் வைத்திருப்பவர்கள் 5.8% பேரும் இருக்கின்றனர்.

இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 62% சிறிய உற்பத்தியாளர்கள் தான் உற்பத்தி செய்கிறார்கள். 28% நடுத்தர உற்பத்தியாளர்களும், வெறும் 10% மட்டுமே பெரிய உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

salt-uppalam-11இந்த பெரும் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக குஜராத்தில் தான் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு உப்பை ஏற்றுமதி செய்யும் மாபெரும் நிறுவனங்களாகவும் இருக்கிறது.

கிருஷ்ணா சால்ட் ஒர்க் குஜராத்தில் உள்ளது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் முழுவதும் நவீன இயந்திரங்களை கொண்டு உற்பத்தியில் ஈடுபடுகிறது. கோஷர் சால்ட், சால்ட் சென்ஸ், சன் ஷைன் சால்ட் என்று பல பிராண்ட் பெயர்களில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

அஹிர் சால்ட், உப்பு வணிகப் பொருளாக்கப்பட்ட 1990 களின் ஆரம்பத்தில் இருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது இந்த நிறுவனம் ஐக்கிய அமெரிக்க, பிரிட்டன், ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என்று 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. டேப்லெட் உப்பு, பேதியுப்பு என்று பலவகையாக தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது.

இண்டோ பிரைன் இண்டஸ்ட்ரியல்.லிமிடெட் என்ற நிறுவனம் 4,50,000 டன் உப்பினை மொரிஷியஸ், மத்திய கிழக்கு நாடுகள், மஸ்கட், இந்தோனோஷியா, சிலோன், ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

salt-uppalam-12கட்ச் பிரைன் செம் இண்டஸ்ட்ரியல் (ஸ்ரீ ராம் குழுமம்) என்ற நிறுவனம் 3 லட்சம் மெட்ரிக் டன் உப்பினை மலேசியா, பங்களாதேஷ், சீனா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு தனது வாடிக்கையாளராக டாடா கெமிக்கல்ஸ், ஸ்ரேயா எக்ஸ்பர்ட் ஸ்டார் சால்ட், ரிலையன்ஸ் ஹோம் புராடெக்ட், சால்ட் டிரேடிங் & கோ உள்ளிட்ட பத்தொன்பது தொழில் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்து வருகிறது.

நாடு முழுதும் உப்பு ஏற்றுமதி செய்யும் முப்பத்தைந்து பெரும் நிறுவனங்களில் குஜராத்தில் மட்டும் பதினைந்து நிறுவனங்கள் உள்ளன. அதற்கடுத்தாக தமிழகத்தில் ஐந்து நிறுவனங்கள் உள்ள

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஏற்றுமதிக்கு தேவையான உப்பினை சிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து மிகவும் குறைவான, அடிமாட்டு விலைக்கு வாங்கி செல்கின்றன. இதற்கென்று சிறிய ஏஜென்சிகளை அமைத்துள்ளன. ஆண்டிற்கு சுமார் 36 லட்சம் டன் உப்பினை ஏற்றுமதி செய்து வருகின்றன. குறிப்பாக இந்த நிறுவனங்கள் எல்லாம் உலமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பாட்ட பிறகு தான் உருவெடுத்துள்ளன.

salt-uppalam-14உப்பு உற்பத்தியில் ஈடுபடுகின்ற இடங்களில் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இந்த குறைபாட்டினை போக்குவதற்காக “ National Indian Dificiency Disorder Condrol Programme (NIDDCP) என்ற திட்டத்தினை 1962-ல் அறிமுகப்படுத்தி அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துமாறு கூறியது மத்திய அரசு. அதன் பிறகு இந்த திட்டத்தை 1984-ல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. இதனை மாபெரும் புரட்சி என்றும் சித்தரித்தனர்.

உண்மை என்னவெனில் 1983-ம் ஆண்டு டாடா நிறுவனம் உப்பு சந்தையை கைப்பற்றுவதற்காக “ டாடா சால்ட்” அயோடின் கலந்த உப்பு . இது “தேசத்தின் உப்பு” என்றெல்லாம் முழக்கமிட்டு தனக்கான சந்தையை விரிவுபடுத்தியது.

salt-uppalam-161984-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி மனித நுகர்வுக்கான தேவை 62 லட்சம் டன் தான் என்ற போதிலும் தற்பொழுது 175 லட்சம் டன்னை உற்பத்தி செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் Salt in Central Excesice & salt act 1994-ல் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர். தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஏற்றவாறு Salt in cess act 1964 no.gsr.639(e) சட்டத்தில் 04.09.2001 ல் மாற்றம் கொண்டு வந்து முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்கு திறந்து விட்டது பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு.

அழிந்து வரும் சிறு உற்பத்தியாளர்கள்.

தென்னிந்தியாவை பொறுத்த வரை 2012-13 ம் ஆண்டில் 27.7 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. 2013-14 ம் ஆண்டில் 25.8 லட்சம் டன்னாக உற்பத்தி குறைந்துவிட்டது. காரணம் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்குவதே.

salt-uppalam-17இது குறித்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பாரம்பரியமாக உப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் தேவி என்பவர் கூறுகையில், “உற்பத்தி செய்யும் மொத்த நிலம் 2500 ஏக்கர் நாயுடு, முதலியாருக்கு சொந்தமானது. நாங்க எட்டு ஏக்கர் குத்தகைக்கு வாங்கி தான் உற்பத்தி பண்ணுறோம். ஏக்கருக்கு ஆறாயிரம் ரூபா குத்தகை கட்டிடுறோம். முதலில் பாத்தியாக கட்டி சேற்றை மிதிச்சி சமன் படுத்திடுவோம். அப்புறம் தரை கடினமா இருக்கணும்னு கடல் மணலை கொட்டுவோம். ஒரு லோடு மாட்டு வண்டிக்கு 600 ரூபா கேட்பாங்க. அண்டை வெட்டி வாய்க்கால் போடுவது, சேறு மிதிக்கிறது சாதாரண வேலை இல்லை. கடுமையான வெயில் வியர்வை சிந்த உழைக்கணும். முதுகு தோல் பட்டை விட்டுடும். உப்பு தண்ணி என்பதால கை கால்கள் எல்லாம் மரத்து விடும்.

ஒவ்வொரு பாத்தியா தண்ணி வைப்போம். நீர் வடிய வடிய உப்பும் உற்பத்தியாகி இருக்கும். அதை வாரி தலையில சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் தூக்கி வருவோம். உடம்பு முழுக்க உப்பா இருக்கும். வெயில் வேற சொல்லவா வேணும். “மழை வந்து தொலச்சாலாவது வீட்டுக்கு போயிடலாம்” அப்படின்னு நினைப்போம் சார். வெயில்ல வேல செய்றதுக்கு பயந்து உப்பு எடுக்க விடிகாலை 2 மணிக்கு கிளம்பி போய்டுவோம் சார்.

salt-uppalam-07உற்பத்தி செஞ்ச உப்பை எல்லாம் பத்தரமா பாதுகாக்கணும். வியாபாரிங்க வந்து வாங்கிட்டு போற வரைக்கும் கடன் வாங்கி தான் எல்லாம் வேலையும் செய்வோம். நான்கு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபா செலவாகிடும். அதனால் இரண்டு, மூணு குடும்பம் சேர்ந்து தான் குத்தகை வாங்குவோம். தனி ஆளா எதுவும் பண்ண முடியாதுங்க. எங்ககிட்ட வாங்குற வியாரிங்க ரொம்ப கம்மி விலைக்கு வாங்குவாங்க. மூட்டை 140,150 ரூபான்னு வாங்குவாங்க. அதுலயே மூட்டைக்கு 14 ரூ படிச்சிகிட்டு தான் மீதி காசு கொடுப்பாங்க. ஜனவரி தொடங்கி ஜூன் வரைக்கும் தான் வேலையே. அதுக்கப்புறம் ஆறு மாசம் வீட்ல தான் இருப்போம். எங்க பிள்ளைங்களை எல்லாம் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம். தனியார் ஸ்கூல்ல படிக்க வக்கிற அளவுக்கு இந்த தொழில்ல வருமானம் இல்லைங்க. எங்ககிட்ட இருந்து வாங்கிட்டு போயிட்டு பாக்கெட் போட்டு விக்கிறவங்களுக்கு தான் சார் லாபம்.

salt-uppalam-03நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புதுசல கிராமத்துல விக்கிறதுக்காக வந்து வாங்கிட்டு போவாங்க. அப்ப செலவுக்கு கையில காசு இருக்கும். இப்ப எல்லாம் பெரிய வியாபாரி வர வரைக்கும் இல்லனா, நல்ல விலை போற வரைக்கும் காத்துகிட்டு இருக்கணும்” என்று கவலையோடு கூறுகிறார்.

குறிப்பாக உற்பத்தியில் ஈடுபடும் கூலித்தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் அறவே இல்லை. இந்தியா முழுவதும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ரத்த சோகை 41% பேருக்கும், பார்வைக்குறைபாடு 42%, பல் சொத்தையாதல் 41.7%, எடைக்குறைவு 19%, முன் கழுத்து கழலை நோய் 19%, தோல் பதிப்பு 91%, சதை மற்றும் எலும்பு செயலிழப்பு பெண்களுக்கு 75% ஆண்களுக்கு 44% போன்ற நோய்களால் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற்கே செலவிட வேண்டியுள்ளது. பெரும்பாலும் இத்தொழிலில் ஈடுபடுபவர்களுடைய குழந்தைகள் பள்ளிப் படிப்பையே முடிக்கவில்லை. ஒன்று பெற்றோர்களுடன் வேலைக்கு செல்வது இல்லையெனில், வெளியில் வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

salt-uppalam-06இத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாளொன்றுக்கு ஆண்களுக்கு ரூ 250, பெண்களுக்கு ரூ 150 என்று வழங்கப்படுகிறது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் ரூ.80 மட்டுமே வழங்கப்படுகிறது.

சிறு உற்பத்தியாளர்களுக்கு மானியமும் வழங்குவது இல்லை. மின்சாரமும் இல்லை. பன்னாட்டு கம்பனிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு இவர்களை கண்டுகொள்வதே இல்லை. டீசல் எஞ்சின் வைத்து தான் உற்பத்தி செய்கிறார்கள். இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. மழை உள்ளிட இயற்கையின்சீற்றத்தால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு டிசம்பரில் பெய்த மழையால் பல லட்சம் மதிப்புள்ள உப்புக்கள் அழிந்தன. இதற்க்கு எந்த வித நஷ்டஈடும் கொடுக்கவில்லை அரசு. இந்த சூழலில் பெரிய நிறுவங்களோடு போட்டி போட முடியாமல் திணறி இத்தொழிலை விட்டே வெளியேறி வருகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பன்னாட்டு கம்பனிகள், உள்நாட்டு தரகு முதலாளிகள் கொள்ளைக்காக புதிய சட்டங்களை கொண்டு வரும் மோடி அரசு தொழிலாளர்களுக்காக கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. கவலைப்பட போவதுமில்லை. எனவே சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஒன்றிணைந்து முதலாளித்துவ லாபவெறிக்கு எதிராக போராடுவது மட்டும் தான் தீர்வு. உப்பிட்டவனை ஒருபோதும் மறவாதே என்பார்கள். இத்தொழிலாளர்கள் உற்பத்தி செய்த உப்பினை சாப்பிட்டவர்கள் சிந்தித்து பாருங்கள். உப்பு உங்களுக்கு உரைத்தால் உப்பளத் தொழிலாளர்களுக்காக நாமும் போராடுவோம்!

செய்தி, படங்கள்:
– வினவு செய்தியாளர்.

இயற்கையை அழித்து யாருக்காக உங்கள் ஆட்சி ? – திருச்சி கருத்தரங்கம்

1

நீர் நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும், என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக 12.10.16 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டம் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்.ப.தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. தி.மு.கவின் திருச்சி வடக்கு மாவட்டச்செயலாளர் திரு.காடுவெட்டி ந.தியாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் தோழர்.த.இந்திரஜித், திரு.திருச்சி.வேலுச்சாமி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.ம.ப. சின்னதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார். தோழர் ஜீவா வரவேற்புரை வழங்கினார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்..தர்மராஜ் உரை:

விவசாயிகளின் வேலை நெல்லை விளைய வைப்பது பிறகு அதற்கு கொள்முதல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்வது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய் மாற்றப்பட்டு உள்ளது. நீர் வேண்டுமானால் போராட வேண்டும், பொருளாதாரத்தை இழக்க வேண்டும், நீதிமன்றத்திற்கு போக வேண்டும், வழக்கு போட வேண்டும், இவையெல்லாம் நாம் செய்ய வேண்டிய வேலையா?  ஆற்று நீரை, ஏரி குளங்களை பாதுகாப்பது யாருடைய வேலை? பொதுப்பணித்துறை வேலை என்ன? பாசனத்துறை, IAS வேலை என்ன? இவர்கள் எங்கே சென்றனர்? இவர்களுக்கு தானே இந்த வேலை. விவசாயிகள் மக்களின் உழைப்பில், வியர்வை சிந்தி கட்டும் வரிப்பணத்தில் தானே சம்பளம் வாங்குகிறார்கள்? அப்படியானால் இந்த மக்களின் உரிமைகளுக்காக தானே நிற்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், கடமையை செய்யவில்லை. இதை யாராவது கேள்வி கேட்கிறார்களா? நமக்கென்ன யாராவது போராடட்டும் என்று ஒதுங்கிப்போவதாக உள்ளது. நமக்கு இவர்கள் தான் எதிரி  நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசு மட்டும் எதிரி அல்ல நமக்கான கடமையை செய்ய தவறிய அதிகாரிகளும் எதிரி தான். இவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டு கடமையை செய்யாததால் தான் இன்று நம் உரிமைகள் கிடைக்காமல் இருக்கிறது என்பது முக்கியமான விசயம்.

தோழர். தர்மராஜ்
தோழர். தர்மராஜ்

அடுத்த உலகப்போரே நீருக்காகதான் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகம் இப்பொழுதே நீருக்கான போராட்டத்தை துவங்கிவிட்டது. இந்த சூழலில் திடீரென வரும் மழை, வெள்ளம் போன்றவற்றை பாதுகாத்து ஏரிகளில் நிரப்பினால் 300 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு பெற முடியும் என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். தமிழ்நாடு முழுவுதும் ஆறு, ஏரி, குளங்கள் 32,000த்திற்கு மேல் இருக்கிறது. இன்று அவை பராமரிக்கப்படுகிறதா? பாதுகாக்கப்படுகிறதா? வரக்கூடிய நீர் மக்களுக்கு முறையாக போய் சேருகிறதா? என்றால் கிடையாது. ஒரு ஆறு எங்கே உருவாகிறதோ அங்கு மட்டும் சொந்தமில்லை. அது ஓடி வரும் கடைமடை பகுதி பாசன பகுதிக்கும் சொந்தம் இந்த காவிரி தமிழகத்திற்கும் சொந்தமானது. இந்த காவேரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். அவன் தரவில்லை என்பது ஒருபுறம். ஆனால் இதற்கு இங்கு இருக்க கூடிய IAS,IPS  இவர்களும் தான் காரணம். இங்கிலாந்தில் கார் கம்பெனிகாரன் ஒருமுறை காரை கழுவி விட்டால் 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இங்கு இங்கிலாந்து காரன் கார் கம்பெனி துவங்கினாலே நாம் 3 ½ லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டுமாம். என்னடா இது கேவலம். இவற்றிற்கு உறுதுணையாக இருப்பது யார் அதிகாரிகள் தான். இவர்களுக்கு எதிராக போராடுவது, ஏரி, குளங்களை மீட்டெடுத்து நம் உரிமைகளை பெற அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்து போராட வேண்டும் என்று தனது தலைமை உரையை முடித்தார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டதலைவர் மா..சின்னதுரை உரை:

மா.ப. சின்னதுரை
திரு. மா.ப. சின்னதுரை

ட்டுப்பூச்சி பூங்காவனம் பகுதிக்கு கட்டாயம் எல்லோரும் சென்று பாருங்கள். இன்று இங்கு எல்லாமும் பட்டு போய்கிடக்கிறது. அதிமுக வினர் இன்று முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று காவடி    தூக்குகிறார்கள். வேல் குத்துகிறார்கள் அது உங்கள் விசுவாசம் பாசம். ஆனால் 1 ½  கோடி உறுப்பினர்களை கொண்ட நீங்கள் காவேரி பிரச்சனைக்கு போராடலாம்ல, ஏன் போராடல? நீங்கள் எங்கள் வேலை காரர்கள் நாங்கள் போட்ட ஓட்டு தான் இன்று நீங்கள் சுகபோகமாக வாழ்வது. இந்த பிரச்சனை துவங்குவதற்கு முன்பே 2014-லில் நானும் மக்கள் அதிகாரத்தின் தோழர். ப.தர்மராஜ்-ம் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை பார்வையிட சென்றோம். அங்கு 42 அடி தோண்டி எடுத்து உள்ளனர். கவுத்தரசநல்லூர் முதல் இடையாற்று மங்களம் வரை. இதை மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று முறையிடும் போது பேச்சே இல்லை. இப்பொழுதே தெரிகிறது எல்லாம் கூட்டு களவாணி என்று. ஏரி குளங்களை பட்டா போட்டதே அரசியல் வாதிகளும் அதிகாரிகளும்தான்.  நதிகரையில் இருந்த மக்களின் நாகரீகத்தையே அழித்து விட்டனர். யாருக்காகடா உங்கள் ஆட்சி எங்கள் இயற்கையை அழித்து விட்டு பின் எப்படி மழை பெய்யும்.  நான் வந்தது மேடை பேச்சுக்காக அல்ல நாட்டை காக்க என் உயிரை கொடுத்தாவது நான் போராடுவேன் என்று தனது முழு ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர் உரை:

திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர்
திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர்

போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய மக்கள் அதிகார அமைப்பினருக்கு நன்றி நாங்கள் அதற்கு முன் பல போராட்டங்கள் செய்து வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது எங்களின் அனைத்து போராட்டத்திலும் மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து பல போராட்டங்கள் செய்துள்ளனர். அரசியல் கட்சிகளை நம்பி இனி பயனில்லை என நீதிமன்றத்திற்கு சென்றோம். 90 மீட்டர் உள்ள அணையை கட்டி கொள்ள அனுமதி கொடுத்தார்கள். காவேரி அணை கட்ட தொடங்கிய உடனே பிரச்சனையும் தொடங்கியது. குடகுபகுதியை அப்பொழுதே தமிழ்நாட்டோடு இணைத்திருக்க வேண்டும் ஆனால் அப்பொழுது நம் ஆட்கள் அதை விட்டு கொடுத்தார்கள். இதில் கர்நாடக காரர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.1928 -ல் இது நடந்தது. தண்ணீர் பிரச்சனை எல்லாம் வராது என்று நினைத்தோம், ஆனால் இன்று வந்து விட்டது. என்ன செய்வது? அன்று கர்நாடககாரர்கள் 5 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்த இடத்திலே இன்று 24 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்கிறார்கள் என்றால் அதற்கான நீர் எங்கே இருந்து வந்தது? ஆனால் இன்று குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வது. மறுபுறம் தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தவேண்டும். மணலை எடுக்க கூடாது என்று நாங்கள் சொல்ல காரணம் மணல் இருந்தால் தான் ஆவியாகி மேலே சென்று மேகத்தை குளிர்வித்து மழை வரும். இந்த பிரச்சனைக்கு காரணம் ஆட்சியாளர்கள் தான். அது நடக்கவில்லை. அதிகார பலத்திலுள்ளவர்கள் எதை பற்றியும் கவலைபடுவதில்லை.  இனி நாம் மக்கள் இயக்கமாக ஒன்றிணைந்து போராடவேண்டும். இதை ஏற்படுத்திய மக்கள் அதிகாரத்தினருக்கு எனது கோடான கோடி நன்றி என்று தனது உரையை முடித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் தோழர்.த.இந்திரஜித் உரை:

தோழர். இந்திரஜித்
தோழர். இந்திரஜித்

ங்கள் தலைப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்குதான் வேண்டும்.தஞ்சை பெரிய கோவிலை கட்டும் போது ராஜராஜசோழன் மக்களிடம் கட்டாய வரி வசூல் செய்தான். தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த காலத்தில் நீர்நிலைகளை மக்கள் தான் பராமரித்தார்கள், பாதுகாத்தார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. இயற்கை அழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது வெள்ளம் வந்தபோது வெள்ளம் புகுந்து விட்டது என்று எல்லாம் சொன்னார்கள். ஆனால் அது தனது அழிக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்துவிட்டது. அதிகமாக பள்ளிகள், கல்லூரிகளுக்குள் தான் வெள்ள நீர் புகுந்துள்ளது. என் முப்பாட்டன் 36ஆயிரம் ஏரி, குளங்களை வெட்டி வைத்தான். ஆனால் இன்று அவை எங்கே? நீர் இன்று வணிக பொருளாக விற்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விட கூடாது என்று போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல இனவெறியர்கள் லும்பன்கள் இவர்கள் அங்கு உள்ள விவசாயிகளுக்காகவோ, மக்களுக்காகவோ போராடுபவர்களும் அல்ல ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து கலவரம் செய்வது மட்டுமே இவர்களின் வேலை.

காவேரி நதி நீர் பிரச்சனைக்கு எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவதே சரியாக இருக்கும். அதை ஏற்பாடு செய்த மக்கள் அதிகாரத்தோழர்களுக்கு நன்றி. 1992-ல் மத்திய அரசு கொண்டு வந்த கொள்கை என்பது நாட்டையே அடகு வைப்பதற்காக போடப்பட்டதுதான். 1976-90வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 1976 வரை 489 டி.எம்.சி தண்ணீர் இருந்தது. பிறகு 389 டி.எம்.சி ஆக குறைந்தது ஆனால் கர்நாடகாவிற்கு 92 டி.எம்.சி  தண்ணீராக இருந்தது 155 டி.எம்.சி ஆக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக பேசும் போதெல்லாம் நமக்குதான் தண்ணீர் குறைந்தது. இருதியாக நமக்கு 323டி.எம்.சி ஆக குறைந்தது. கருநாடகத்திற்கு 293 டி.எம்.சி ஆக உயர்ந்தது. 1956-ல் மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டதில் குடகு காரர்கள் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்றுதான் கேட்டார்கள். ஆனால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டார்கள். இதுதான் உண்மை. உச்ச நீதி மன்றத்தின் மீது எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. கர்நாடக அரசு நீதி மன்றத்தின் தீர்ப்பை ஒருபோதும் மதித்தது கிடையாது. ஆனால் உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் மக்களுக்கானதாக இல்லை. நீருக்காக நாம் ஒன்றிணைந்து போராடியே ஆக வேண்டும் என்ற தருனத்தில் உள்ளோம், நாம் ஒன்றினைந்து போராடுவோம் என்று கூறி தனது உரையை முடித்தார;.

திரு.திருச்சி..வேலுச்சாமி அவர்கள் உரையாற்றும்:

நான் எனது பள்ளி பருவ காலத்தில் பள்ளி விட்டு வரும்போது ஆற்றில் விழுந்து புரண்டுவிட்டுதான் வீட்டுக்கு போவோம், போவதற்குள்ளே துணிகளும் காய்ந்து விடும்.

திரு. திருச்சி. வேலுச்சாமி
திரு. திருச்சி. இ. வேலுச்சாமி

எல்லா நதிகளிலும் இன்று அணைகட்டி விட்டார்கள். குடகு மலை அருகில் கூட தமிழர்கள் இருந்தார்கள். அப்பொழுது தமிழகத்திற்கு எல்லா உரிமையும் இருந்தது. இன்று நீர் மீதான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1 ½  கோடி பேர் உள்ளனர். நமக்கு எதிராக செயல்படுவது கர்நாடகா அரசும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பலும்தான். கர்நாடகாவிலிருந்து நீர் கேட்டு போராடுவது ஒருபுறம் இருக்கட்டும். நீர் வந்தால் அதை தேக்கி வைக்க தமிழகத்தில் வாய்க்கால்,ஆறு,ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதா? அதை நாம் கண்டு கொள்கிறோமா? இயற்கை பல வற்றை நாமே அழிக்கிறோம். 40 ஆயிரம் ஏரிகள் இருந்த இடத்தில் இன்று எவ்வளவு உள்ளது. ஓட்டுப்போடுவதிலும் சட்டமன்றத்தில் சென்று கொட்டாவி விடுபவர்களைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.  நான் தேர்தலில் போட்டியிடும் போது வயதான பார்பனர் ஒருவர் என்னை அழைத்து உங்கள் திறமை பற்றி கல்லூரி படிக்கும் போதிலிருந்தே எனக்கு தெரியும். மக்களின் பிரச்சனையை பற்றி தெளிவாக பேசுபவர் நீங்கள் என என்னிடம் பேசினார்.  கேட்ட உடனே எனக்கு உச்சு குளிர்ந்து விட்டது. நான் தான் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால் அவர் அடுத்த வார்த்தை சொன்னார் .நீ வெற்றி பெற மாட்டாய், என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏன் என்று கேட்கும் போது உன்னிடம் பணம் இருக்கா என்றார். இன்று சமூகம் இப்படி மாறி விட்டது. தனது ஓட்டு உரிமையே வியாபாரமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க என்ன செய்வது? ஒன்றிணைந்து போராட வேண்டும். கர்நாடகாவில் கலவரம் செய்த அனைவருமே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான். எனவே மக்கள் அதிகாரம் சொல்வது போல் இந்த கட்டமைப்புக்குள்ளே தீர்வை  தேடக்கூடாது, மாற்று வழிகளை சிந்திப்போம் அது தான் சரியானது என தனது உரையை முடித்தார்.

தி.மு.க வின் திருச்சி வடக்கு மாவட்டச்செயலாளர், திரு.காடுவெட்டி .தியாகராஜன் உரை:

திரு.தியாகராஜன்
திரு.தியாகராஜன்

அனைவருக்கும் வணக்கம். நம்மை நாம் இன்னும் மாற்றி கொள்ள வேண்டும்.  என்ன செய்ய போகிறோம் என்ற விழித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகாரத்திற்கு நன்றி. எனக்கு முன்பு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. நான் முன்பு மக்கள் அதிகாரம் என்றாலே எதோ சும்மா போராடிட்டே இருப்பாங்க என்று தான் நினைத்தேன். ஆனால் இங்க பேசும் போது தான் நான் எல்லாம் என்ன பேசபோகிறேன் என்று திகைத்து போகும் அளவுக்கு இருந்தது. காலமாற்றத்தில் நாமும் மாற வேண்டும். அண்ணா முதல்வராய் இருக்கும் போது அண்ணாவிற்காக உயிரை கொடுக்க 1000 தொண்டர்கள் இருந்தனர். அதே போல் இளைஞர்கள் நிறைய பேர் அண்ணா வழியில் நின்றனர். அதே போல் இன்று இந்த கருத்தரங்கில் இளைஞர்கள் பட்டாளத்தை பார்க்கிறேன். இவர்கள் தான் சமூகத்தை மாற்றப் போகிறார்கள். முதலில் நாம் ஒற்றுமையாக இணைந்து போராட வேண்டும் நமக்குள் எதிரணி இருக்க கூடாது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தி.மு.க ஜெயித்ததிற்காக மந்திரி அந்த தொகுதிக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கலெக்டருக்கு உத்தரவு போட்டார்.  எவ்வளவு கேவலம் இது.

மக்கள் அதிகாரம் சொல்லும் பாதை தான் சரியானது அந்த வகையில் நாம் இணைந்து போராடுவோம் என்றார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரை:

தோழர் .ராஜீ
தோழர் .ராஜீ

னக்கு முன்பு பேசியவர்கள் காவிரி உரிமை, நிலைமை, செய்ய வேண்டிய பணிகள் பற்றி பேசினார்கள். மலரும் நினைவுகளையும், நம்மிடம் முன்பு இருந்த தடங்களையும்  பார்க்கிறோம். ஆனால் கோபம் யாருக்கும் வந்ததாக தெரியவில்லை. இந்த கூட்டத்தை பொதுக்கூட்டமாக நடத்த வேண்டும், இதை மக்கள் அமர்ந்து கேட்பார்கள். நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும், இது நாம் இழந்தது புதிய விஷயம் அல்ல. இந்தியா பாகிஸ்தான் வாகா எல்லையில் இப்பொழுதும் போராட்டம் நடக்கிறது. சரக்கு லாரி சென்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கர்நாடகாவில் என்ன நடக்கிறது. சிந்து நதி உடன்படிக்கையை மறு பரிசீலனை செய்வோம், விட மாட்டோம் என்கின்றார்கள். காவேரி பிரச்சனையை தீர்ப்பதற்காக அதிகாரம் நம் நாட்டில் இல்லை. நீரை வர விடாமல் தடுப்பது என்பது ஓரு போர் குற்றம். இங்கு நடுநிலை என்பதே கிடையாது. நீதிபதி, பிரதமர் அனைவரும் போலீஸ்காரர்கள் போல் தான் பேசுகிறார்கள். நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு போகும் மணல் மீண்டும் வருமா?

இந்த பிரச்சனையை தீர்க்க இங்கு அமைப்பு கிடையாது. போராடுபவர்கள் மீது கேஸ் போட்டுக் கொண்டே இருப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச ஆளே கிடையாது. காவேரி நதி மீது தமிழகத்தின் உரிமை என்ன? மத்திய மாநில அரசுகளின் தவறான நிலைபாடே  காரணமாக உள்ளது. 25 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டபோது. தமிழ்நாட்டை ரௌடி லிஸ்டில் வைத்துள்ளனர். இங்கு நாம் பண்பாடு பேசுவதால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கதை நடக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு கலவரம் செய்ய மட்டும் தான் தெரியும். கலவரம் நடத்தி ஆட்சியை பிடிக்கின்றனர். இந்துக்களுக்கு இங்கு எந்த உரிமையும் இல்லை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்-ஐ நாம் தமிழகத்தில் உள்ளே நுழைய விடாமல் விரட்டி அடிக்க வேண்டும் ஏனென்றால் இவர்கள் தமிழினத்திற்கே எதிரானவர்கள். நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்ந்த நாம் இன்று மிக கேவலமாக உள்ளோம். இயற்கை என்பதே இன்று தலைகீழாக மாறி விட்டது. ஒரு உண்மையான பிரச்சனைக்கு தீர்வு கானும் வகையில் எந்த கட்சிகளும் இல்லை. ஏனென்றால் இங்கு அரசு கட்டமைப்பே நாறித்தொலைகிறது. எனவே மாற்று மக்கள் அதிகாரம் தான் கட்சி பேரும் அதுதான்.

இதன் மீது கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும். ஏனென்றால் கட்டமைப்பின் வெளியே தான் தீர்வு உள்ளது. ஆட்சியாளர்களோ அதிகாரவர்க்கமோ அவர்கள் போடும் திட்டங்களை அவர்களாளே நடைமுறை படுத்தமுடியவில்லை. ஒரு கோவிலை நிர்வகிப்பதில் கூட மத உரிமைதான் கொடுத்துள்ளனர். தில்லை நடராசர் கோவில் வழக்கில் இதை நேரடியாக பார்த்திருக்க முடியும். அறநிலைத்துறை வசம் கோவிலில் இருந்த போது அரசின் கஜானாவிற்கு நிதி போனது. தீட்சதர் கையில் இருக்கும் போது நட்ட கணக்கு தான் காட்டினார்கள். இதை தான் நீதி மன்றம் ஏற்றுக்கொள்கின்றது. மணற்கொள்ளை எடுத்துக்கொண்டால் பொதுப்பணித்துறை மற்றும் அதிகாரிகள் எல்லோரும் கைகோர்த்துதான் செய்கிறார்கள். கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. வெள்ளாற்றில் மணல் அள்ளும்போது அதை தடுத்து நிறுத்தியது மக்கள் அதிகாரம் தான். எங்கெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி கை கோர்த்து நின்று அதிகாரத்தை தன் கையில் எடுத்து போராடுகிறார்களோ அங்கெல்லாம் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளது.

மணற்கொள்ளை, திருட்டு போன்ற எல்லா சமூககுற்றங்களிலும் முன்னனியாக நிற்பது மக்களுக்கான காவலர்கள் என்று சொல்லப்படும் காவல்துறை தான். எங்கு பிரச்சனை நடக்கிறதோ அங்கு நாம் நேரடியாக சென்று ஒன்று திரண்டு போராட வேண்டும். இங்கு ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் கிரிமினல் மயமாகி உள்ளது. ஜியோ சிம் அறிமுகப்படுத்தி இருப்பதும் கூட மக்களை ரிலைன்ஸ் முதலாளி உளவுபார்பதற்காக தான். நாம் என்ன உடை, எந்த அளவில் அணிகிறோம் என்பதை கூட அவன்தான் முடிவு செய்கிறான். இப்படி இருக்கும் நிலையில் யாரிடம் சென்று தீர்வு கேட்க முடியும். மக்கள் அதிகாரம் மட்டும் தான் தீர்வு  என்று தனது உரையை முடித்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர். ஓவியா நன்றியுரை ஆற்றினார்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம், திருச்சி.

“பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள் !

0

ரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தின் தின்கர்ஹெரி கிராமத்தில் ஒரு முசுலீமின் வீட்டிற்குள் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்த பசு பாதுகாப்பு இந்து மதவெறிக் கும்பலொன்று அவர்களிடம், ‘‘ஈத் பண்டிகைக்கு மாட்டுக் கறி சாப்பிடுவியா?” என வக்கிரமாகவும் வன்மத்தோடும் கேட்டு, அக்குடும்பத்தைச் சேர்ந்த இருவரைக் கொலை செய்து, இருவரைக் கொடுங்காயம் ஏற்படும் வண்ணம் அடித்துத் துன்புறுத்தி, சிறுமி உட்பட இரண்டு பெண்களைக் கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, மிகக் கொடூரமான வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

mewat-victims
இந்து மதவெறிக் கும்பலால் கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் பெண்கள்.

கடந்த ஆகஸ்ட் 24 அன்று நள்ளிரவில் நடந்த இத்தாக்குதலில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் ஏழை முசுலீமான இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி ரஷீதா இருவரும் இந்து மதவெறிக் கும்பலால் இரும்புக் கம்பிகள் மற்றும் மரக்கட்டைகளால் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்டனர். வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த இப்ராஹிமின் உறவினர்களான ஆயிஷாவும் மற்றும் அவரது கணவர் ஜாஃப்ரூதீனும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜாஃப்ரூதினின் பதினான்கே வயதான சிறுமி சாஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் மற்றொரு உறவுக்கார பெண் சமீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இக்கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாப்பட்டுள்ளனர். ஆயிஷாவும் ஜாஃப்ரூதீனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், ஜாப்ரூதீன் கோமா நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘‘ஐந்து பேர் எங்கள் அறைக்குள் நுழைந்தார்கள். என் துப்பட்டாவை கொண்டு வெளியில் இருப்பவர்களைக் கட்டினார்கள். நாங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாகவும் அதற்காகத் தண்டிக்கப்படவிருப்பதாகவும் கூறி மிரட்டினார்கள். நான் தப்பித்து ஓட முயன்றேன். ஆனால், என் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். என் அறையில் இருந்த என் மாமாவின் 14 வயதான மகளையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர்”என இக்கொடூரத்தை நாதழுதழுக்க விவரிக்கிறார், சமீனா.

‘‘இப்பெண்கள் போலீசில் புகார் அளித்த பின்னரும் கூட கொலை மற்றும் பாலியல் வன்முறை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக, அத்துமீறி நுழைதல், திருட்டு ஆகிய பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குரைஞர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சமூக ஆர்வலர்களும் கொடுத்த அழுத்தத்திற்கு பிறகுதான் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்” என்கிறார் ஜனதா தளம் கட்சியின் எம்.பி. அன்வர் அலி.

சமூக செயற்பாட்டாளர்களான சப்னம் ஹஷ்மி மற்றும் அன்வர் அலி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்களை டெல்லிக்கு அழைத்து வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய பிறகே இக்கொடூரம் ஊடகங்களில் வெளியானது.

பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றவாளிகளின் முகநூல் பதிவுகளை வெளியிட்ட சப்னம் ஹஸ்மி, குற்றவாளிகளின் அரசியல் பின்புலம் காரணமாக அவர்கள் பாதுகாக்கப்பட சாத்தியம் இருக்கிறது என எச்சரித்தார். அவர் வெளியிட்ட முகநூல் பதிவுகளில் குற்றவாளிகளில் ஒருவனான ராகுல் வர்மா, ‘‘தான் கடந்த ஏப்ரல் முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேலை செய்துவருவதாக”க் குறிப்பிட்டுள்ளான். மற்றொரு குற்றவாளி ராவ், மோடியின் புகைப்படத்துடன், ‘‘முஸ்லீம்கள் போய்விட்டார்கள்”எனப் பதிவிட்டுள்ளான்.

mewat-protest
ஏழை முஸ்லிம் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட இந்து மதவெறித் தாக்குதலை அற்ப விசயமாக ஒதுக்கித் தள்ளிய அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாரைக் கண்டித்து ஆல்வார் நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியல்.

இச்சம்பவம் குறித்து அரியானாவின் பா.ஜ.க. முதல்வர் கட்டாரிடம் கேட்கப்பட்ட போது, ‘‘இது போன்ற அற்ப விசயங்களில் நான் அதிக கவனம் கொடுப்பதில்லை”என்று திமிராகப் பேசி, இத்தாக்குதலை மறைமுகமாக நியாயப்படுத்தினார்.

கடந்த ஆண்டு அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றதும் அம்மாநிலத்தில் அதுவரை அமலில் இருந்த பசுவதை தடைச் சட்டத்தை மேலும் கடுமையாக்கி, 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கக் கூடியதாக அச்சட்டத்தை மாற்றியமைத்தது. அது முதல் அம்மாநிலத்தில் பசுப் பாதுகாப்பு குழுக்கள் என்ற பெயரில் இந்து மதவெறி குற்றக் கும்பல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி, அக்கும்பல் நடத்தும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

அரியானாவில் கடந்த ஜூலை மாதம் மாட்டுக்கறியை கடத்தியதாகக் கூறி இரண்டு முஸ்லீம்கள் வாயில் மாட்டுச்சாணியைத் திணித்து, வீடியோவில் பதிவு செய்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வாகனங்களைச் சோதனையிடுவது, தாழ்த்தப்பட்டோரையும் முஸ்லீம்களையும் தாக்குவது, பணம் பறிப்பது, பாலியல் வன்முறை செய்வது உள்ளிட்டு நகர்புறத்து சல்வாஜூடுமாகச் செயல்பட்டு வருகின்றன, இக்குற்றக் கும்பல்கள்.

அரியானா அரசும் பசு பாதுகாப்பு கும்பலும் கூட்டுச் சேர்ந்துகொண்டு பக்ரீத் பண்டிகையையொட்டித் தெருவோர பிரியாணி கடைகளில் பசு மாமிசம் இருப்பதாகக் கூறிச் சோதனைகளை நடத்தி மக்களிடம் பீதியை ஏற்படுத்தின. இவற்றின் நீட்சியாகத்தான் இப்ராஹிம் குடும்பத்தினர் மீது கொலை மற்றும் கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மாட்டுக்கறி முகாந்திரத்தை வைத்து எந்தக் குற்றத்தையும் செய்யலாம் என்ற நிலைமையை நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். ஆசி பெற்ற மோடி அரசு உருவாக்கியிருக்கிறது. பசு பாதுகாப்பு என்பதை வைத்துக் கொண்டு பல்வேறு பெயர்களில் உருவாக்கப்பட்டு, நடமாடவிடப்பட்டிருக்கும் இந்து மதவெறி அமைப்புகள், சட்டத்தின் ஆட்சி என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் மாண்புகள் அனைத்தையும் தூக்கி கடாசிவிட்டு, தங்களைத் தாங்களே சட்டமாகவும் போலீசாகவும் நீதிமன்றமாகவும் நியமித்துக்கொண்டிருக்கிறார்கள். மைய அரசு, அதன் அமைச்சர்களின் வேலையே இத்தாக்குதலை நியாயப்படுத்துவது, குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக உள்ளன. குறிப்பாக, அரியானா அரசின் அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா, பசு பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் நடத்தப்படும் தாக்குதல்களை இந்து சமுதாயம் விழிப்படைந்து வருவதற்கான உதாரணங்களாகக் கூறுகிறார்.

போலீசும், நீதிமன்றமும் இக்குற்றக் கும்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்டவகளையே குற்றவாளியாக்குகிறது. குறிப்பாக, உ.பி.யில் தாத்ரி பகுதியில் பசுவைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு, தாக்கிக் கொல்லப்பட்ட அக்லக் குடும்பத்தினர் மீது பசுவதைத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உ.பி. மாநில நீதிமன்றத்தாலும், போலீசாலும் அக்லக் குடும்பத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ‘‘இந்த உண்மை உங்களுக்கு எட்டவில்லையா? இப்படி நடப்பது குறித்து நீங்கள் வெட்கப்படவில்லையா? நீங்கள் அனைவரும் நம்பிக்கை துரோகிகளா? இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு நாஜிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட நீதிபதிகள் விசாரிக்கப்பட்டதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்”எனக் கடுமையாகச் சாடியும் எச்சரித்தும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார் படிப்பு வட்டத்தின் மீது விதிக்கப்பட்ட தடை, ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை தொடங்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ராஜதுரோக வழக்கு பாய்ச்சப்பட்டது வரை; சமஸ்கிருத வாரம் தொடங்கி புதிய கல்விக் கொள்கை வரை; தாத்ரியில் அக்லக் படுகொலை செய்யப்பட்டது தொடங்கி ஊனாவில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மேவாட்டில் விவசாயக் கூலியான இப்ராஹிம் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொலை, பாலியல் வல்லுறவு ஈறாக இவையாவும் அரசின் உறுப்புகள் அனைத்தும் மிகமிக வேகமாக பார்ப்பன பாசிசமயமாகிவருவதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும், வீழ்த்தி முறியடிக்கவும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை என்ன என்பதுதான் நம் முன்னுள்ள சவால்.

– அமலன்
____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________

வாமன ஜெயந்தி – வானரங்களுக்கு ஆப்பு !

2

டந்த மாதம் (செப்.2016) கேரள மக்களால் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவித்த பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா, “கேரள மக்களுக்கு இனிய வாமன ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்” என்று தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ மலையாள இதழான கேசரியும் தனது “ஓணம்” சிறப்பிதழில் இதே கருத்தைப் பதிவு செய்திருந்தது. மாவலி மன்னனின் மறுவருகையை வரவேற்கும் ஓணம் பண்டிகையை, வாமனன் அவதரித்த நாளாக மடை மாற்ற முயலும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இப்பார்ப்பனக் குசும்புத்தனத்தைப் பெரும்பான்மையான கேரள மக்களும் ஓட்டுக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் உடனடியாகக் கண்டித்துக் கருத்துக்களை வெளியிட்டன.

bjp-brahminical-mischief
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மாவலியின் நினைவாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தி எனக் குறிப்பிட்டுத் தெரிவித்த வாழ்த்துச் செய்தி

ஓணம் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகளிலிருந்து மாறுபட்ட தொன்மத்தைக் கொண்டதாகும். “கேரளத்தை ஆண்டு வந்த மாவலி என்னும் அசுரகுல மன்னரின் ஆட்சியின்கீழ் மக்கள் பேதமின்றியும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். ஒரு அசுரகுல மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைக் கண்டும், மாவலிக்கு மக்கள் மத்தியில் இருந்த அன்பையும் ஆதரவையும் கண்டும் கொதித்துப்போன தேவர்கள், மாவலியை வீழ்த்த விஷ்ணுவிடம் சென்று வேண்டினர். மாவலி தனது யாகத்திற்காகத் தானம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கு வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு தமக்கு மூன்றடி நிலம் வேண்டும் என யாசகம் கேட்டார். மாவலியின் ராஜகுருவான சுக்கிராச்சாரியார், வந்திருப்பது விஷ்ணு என்றும் அவரது சதித் திட்டத்திற்கு பலியாக வேண்டாம் என்றும் மாவலியிடம் எச்சரித்தார். ஆனால், யாசகம் கேட்டு வந்தவற்கு இல்லை என்று தம்மால் சொல்ல முடியாது என்று கூறி, சுக்ராச்சாரியரின் எச்சரிக்கையை மறுதலித்த மாவலி மன்னன், மூன்றடி நிலத்தைக் கொடுக்கச் சம்மதித்தார். குள்ளமாக வாமன வடிவத்தில் வந்த விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். மூன்றாவது அடியைத் தனது தலை மேல் வைக்குமாறு மாவலி கூறினார். இதற்காகவே காத்திருந்த விஷ்ணு மாவலியின் தலையில் கால் வைத்து அழுத்தி, அவரைப் பாதாளத்திற்குள் தள்ளினார். அப்போது மாவலி விஷ்ணுவிடம், தாம் ஆண்டுக்கொருமுறை தமது குடிமக்களைக் காண பூமிக்கு வந்து செல்ல அனுமதித்து வரமளிக்க வேண்டினார். விஷ்ணுவும் அவ்வரத்தை மாவலிக்கு அளித்தார்” என்பதுதான் ஓணம் பண்டிகையின் பின்னுள்ள புராணக் கதை.

இப்புராணக்கதையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில், திருவோண நட்சத்திர நாளன்று மாவலி மன்னன் தனது குடிமக்களைக் காண வருவது ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கேரள மக்கள் மாவலி மன்னனை வரவேற்க, தங்களின் வீட்டின் முன்பு அத்தப்பூக் கோலமிட்டு, பல்வேறு வகையான உணவு வகைகளைச் செய்து படையல் இடுகின்றனர்.

V0044941 Vamana avatar: Vaman before King Bali and consort. Gouache dவிஷ்ணுவின் அவதாரங்கள் அசுரர்களை வதம் செய்ய எடுக்கப்பட்டவை என்றாலும், அந்த அவதாரங்களிலேயே அயோக்கியத்தனமானது வாமன அவதாரம்தான். ஏனெனில், மற்ற அவதாரங்களில் எல்லாம் தேவர்களுக்கு ‘கொடுமை’ செய்த அசுரர்களைத்தான் விஷ்ணு வதம் செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பார்ப்பனப் புராணப்படியே மக்கள் நலம் பேணும் மன்னனாகச் சித்தரிக்கப்பட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மாவலியை விட்டு வைப்பது தமக்கு ஆபத்து எனக் கருதிய தேவர்கள், விஷ்ணுவோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தந்திரமாக அம்மன்னனை வீழ்த்திய அயோக்கியத்தனம்தான் வாமன அவதாரம்.

நரகாசுரன், மகிசாசுரன் போன்ற அசுரர்களைப் பார்ப்பனக் கடவுளர்கள் கொலை செய்ததைப் போற்றி தீபாவளி, துர்கா பூஜை உள்ளிட்ட இந்துமதப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வெற்றி பெற்ற பார்ப்பனக் கடவுளர்கள்தான் அந்தப் பண்டிகையின் நாயகர்கள். ஆனால் ஓணம் பண்டிகையோ, பார்ப்பனக் கடவுளின் சதியால் கொல்லப்பட்ட அசுர குலத்தைச் சேர்ந்த மாவலியை நினைவுகூர்ந்து வரவேற்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின் நாயகனாக அசுரகுல மன்னன் இருப்பதை உறுத்தலாகக் கருதும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல், அதன் காரணமாகவே ஓணம் பண்டிகைக்கு வாமன ஜெயந்தி என வாழ்த்துத் தெரிவித்து, அப்பண்டிகையின் குறிபொருளையே மாற்றிவிடச் சூழ்ச்சி செய்கிறது.

இந்துமதப் புராணங்களால் கொடுங்கோலர்களாக சித்தரிக்கப்படும் அசுரர்களை, இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் குல தெய்வங்களாக வழிபடுகின்றனர். அவ்வகையில், இராமனால் கொல்லப்பட்ட இராவணனை ஜார்கண்டைச் சேர்ந்த பழங்குடி இன மக்களும், துர்க்கையால் நைச்சியமாகக் கொல்லப்பட்ட மகிசாசுரனை சந்தால் பழங்குடி இன மக்களும் குல தெய்வமாகப் போற்றி வருகின்றனர். கேரளத்திலோ பார்ப்பனர் உள்ளிட்ட எல்லாச் சாதியினரும் மாவலியை கொண்டாடுகிறார்களேயன்றி, வாமனனைக் கொண்டாடுவதில்லை.

தனது கருத்துக்குக் கேரள மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சாக்கில், “கேரளாவில் உள்ள வாமன கோவிலில் மக்கள் அன்றாடம் வழிபடுவதால், வாமன ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறியதில் தவறு ஏதும் இல்லை” என்று பா.ஜ.க. கேரள மாநிலத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் தந்திரமான அறிக்கை அளித்தார். மேலும், ”மாவலியை நினைவுகூரும்போது வாமன அவதாரத்தை நினைவுகூராமல் இருக்க முடியுமா?” என்று அடிமுட்டாள்தனமாகவும் சமாளிக்க முயன்றது ஆர்.எஸ்.எஸ்.

rss-brahminical-mischief-captionஇரண்டாம் உலகப் போர் என்றால் ஹிட்லர் நினைவு வரத்தான் செய்யும். இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கிலேயர்களைப் பற்றியும் சொல்லத்தான் நேரிடும். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வாதப்படிப் பார்த்தால், இந்த வில்லன்களைத்தான் கொண்டாட வேண்டும். அதனுடைய வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைக் கூட காணவியலாத அளவிற்கு ஆரிய – பார்ப்பன வெறி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கண்களை மறைக்கிறது.

இது மட்டுமின்றி, கேரளாவில் இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், சாதி இந்துக்கள் எனப் பெரும்பாலான மக்களின் பொதுவான உணவாக மாட்டுக்கறி இருந்துவரும்வேளையில், மாட்டுக் கறிக்குத் தடை கோரி கேரளாவில் பரப்புரை செய்து வருகிறது, பா.ஜ.க. கேரள மக்களின் பாரம்பரியம், பண்பாடு இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தனது ஆரிய கருத்தியலையும், பண்பாண்டையும் திணிப்பதிலே ஆர்.எஸ்.எஸ். கும்பல் குறியாக இருப்பதைத்தான் இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

தன்னுடைய ஆரிய வெறியைப் புரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலே கேரள மக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இருந்தபோதிலும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான யாரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், “அமித் ஷாவின் கருத்து கேரள மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக” மொன்னையாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். வாமனனின் சூழ்ச்சி தெரிந்தும் அவனுக்கு வரம் கொடுத்த மாவலியை நேர்மையாளன் என்றோ, ஏமாளி என்றோ சொல்லலாம். அமித் ஷாவுக்குச் சலுகை வழங்கும் இவர்களை என்னவென்று அழைப்பது?

– அழகு

_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016
_____________________________________