Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 561

தோழர் டேப் காதர் மறைவு : முதலாண்டு நினைவஞ்சலி !

0

ருக்கு ஊரு சாராயம்” பாடல் பாடியதற்காகத் தோழர் கோவன் 30-10-2015 அன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அதே நாளில் லாவணிப் பாடகர் தோழர் டேப் காதரின் உயிர் பிரிந்தது. ம.க.இ.க தோழர்கள் மீது காதர் கொண்டிருந்த பாசம் அளவிட முடியாதது. ‘தோழர் கோவன் கைது செய்யப்பட்டார். தோழர் காளியப்பன் தேடப்படுகிறார்’ என்ற செய்தி தோழர் காதரின் இறுதி நாட்களில் சிந்தையையும், இதயத்தையும் தாக்கியது. தோழர் காதர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது.

imagesஅவரை ஒரு லாவணிக் கலைஞராக எனது சிறு வயதிலிருந்தே அறிவேன். 2000-ம் ஆண்டு முதல் தோழராக டேப்காதர் எங்களது எல்லைக்குள் வந்துவிட்டார். அவர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாக அறிவித்தது ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தியது.

தோழர் காதரைப் பற்றிய வலைத்தள, பத்திரிகைச் செய்திகளைத் தொகுத்துக் கொடுத்தபோது படித்து முடித்து விட்டு “லாவணிப் பாடகரைப் பற்றியே லாவணியா?” சிரித்துக் கொண்டே கேட்டார். முதுமை எய்திய காதரைப் பராமரிப்பது என்று நான் முடிவெடுத்து செயல்பட்டு தஞ்சை ம.க.இ.கவின் வேலைச் சுமையைக் கூட்டிவிட்டேன் என்றாலும் அது ஒரு சுகமான வேதனை. அவருடன் பேசும் போதும்,நேரம் செலவழிக்கும் போதும் நமக்கு மிகப்பெரும் அனுபவங்களும், செய்திகளும் மழையெனக் கொட்டும். தென் மாநிலங்கள் மற்றும் இந்தி மாநிலங்களில் சுற்றியதன் மூலம் வளமான அனுபவ அறிவை அவர் பெற்றிருந்தார். அந்த வகையில் அவர் ஒரு தகவல் பெட்டகம்!

“காற்றைப் பிடித்து வைப்பதும், காதரைப் பிடித்து வைப்பதும் சிரமமான காரியம், இசை ஒன்றுதான் அவரை இயக்கும் சக்தி” என்றார் மறைந்த முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர், மூத்த தோழர் தஞ்சை ஏ.வி.ராமசாமி. தோழர் ஜோதிவேல் உதவியுடன் தஞ்சை நஞ்சை கலைக்குழு மூலம் காதரைக் கட்டிப் போட முடிந்தது. காதர் நடமாட்டம் நின்றவுடன் தஞ்சை நஞ்சை கலைக்குழு செயலின்றி முடங்கிப் போனது.

தியாகி சிவராமன் நாடக மன்றத்தை உருவாக்கி இயக்கிவந்த காதரின் நாடக – இசைஅறிவு பிரம்மிப்பிற்குரியது. மு.ராமசாமி தவிர வேறு எந்த நாடக ஜாம்பவான்களும் அவரைப் பற்றி அறிந்திருக்கவில்லை பயன்படுத்தவில்லை என்பது தமிழ் நாடகத் துறையின் அவலம். காதரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி எங்களுக்கும் உண்டு.

kader-1
தோழர் மு.அப்துல் காதர்

தோழர் பி.எஸ்.சீனிவாசராவ் முதல் தஞ்சை மார்க்சிஸ்ட் தோழர் நீலமேகம் வரை பொதுஉடைமை இயக்கத் தோழர்களோடு பழகியவர், திருமூர்த்தியார் மற்றும் பொதுஉடைமை இயக்க நாடக இசைக் கலைஞர்களோடு பயணித்தவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.

“வீரன் சிவராமன் ஆறுமுகம் இன்றும்
இரணியன் கதை கேளீர் – வாரீர்
இரணியன் கதை கேளீர்”

என்ற திருமூர்த்தியாரின் பாடலை அவருடன் இருந்த நாட்களில் அடிக்கடி பாடச் சொல்லிக் கேட்போம். அது எங்களுக்கு சோர்வை நீக்கி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அவர் பாடிய திருமூர்த்தியாரின் பாடல்கள் காவிரிப் படுகை மக்களைத் தட்டி எழுப்பும் சக்தி படைத்தது என்றால் மிகையில்லை.

முதுமையின் காரணமாய் சமூக புறக்கணிப்பு, முதுமைக்கும் இளமைக்கும் உள்ள முரண்பாட்டால் கட்சித் தோழர்களிடம் புறக்கணிப்பு, பொதுஉடைமை இயக்கத் தொடர்பால் குடும்ப புறக்கணிப்பு என்ற சிரம்மான நிலையிலும் கலங்காத திடமான மனதைக் கொண்டிருந்தார். “சொர்க்கத்திலும் இல்லாமல், நரகத்திலும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்ந்தேன்” என்று நகைச்சுவையாக தனது வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி கூறுவார் தோழர் காதர்.

kader-2அவரது பாடற் கலைக்கு போட்டியாக அவரது சமையல் கலையும் இருந்தது. “சோறு கண்ட இடம் சொர்க்கம், திண்ணை கண்ட இடம் தூக்கம்” என்பதுதான் என் வாழ்க்கைச் சுருக்கம் என்று தனது  உடைமை பற்றற்ற வாழ்க்கையைப் பற்றி வரையறுப்பார்.

அவரது மருத்துவச் செலவுக்காகக் தோழர்கள் கொடுக்கும் பணத்தினைத் தனது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட சுற்றுப் பகுதி மக்களின் உணவுத் தேவைக்காக உதவிவிடுவார். அவர் குடும்பத்திலும், கட்சியிலும் பொறுப்பானவராகவே செயல்பட்டு இருக்கிறார் என்று பல சம்பவங்கள் நமக்கு அறிவிக்கின்றன.

கடைசியாகச் சந்தித்த போது தோழர்கள் நலன் குறித்து விசாரித்துவிட்டு “நீங்கள் எல்லோரும் நீண்ட காலம் வாழ வேண்டும். இந்தச் சமூகத்தில் உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். போராட்டத்தில் சாகலாம், நோய்வாய்ப்பட்டுச் சாகக் கூடாது” என்றார்.

தோழர் காதர் இன்று இல்லை.  ஆனால் அவரது பாடல்கள் தஞ்சை மண் முழுவதும் இன்றும் இரண்டறக் கலந்திருக்கிறது. அவரது நினைவுகளுடன் எங்களது அரசியல் பணி தொடரும்!

தஞ்சை இராவணன்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

நுகர்வு – கழிவு – பண்பாடு : புதிய கலாச்சாரம் நவம்பர் 2016

0

puka17_nov_16_wrap

பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்யும் மண்ணில்தான் பத்து இலட்ச ரூபாய் கோட்டை அணியும் மோடி பிரதமர்! முன்னது தனிப்பட்ட காரணங்களுக்கான தற்கொலையாம்; பின்னது பிரதமரின் தனிப்பட்ட விருப்பமாம்!

சுனாமி அழிவுக்குப் பின் பத்தாண்டுகளாகியும் வீடுகள் கிடைக்காமல் அவதிப்படும் மக்களைக் கொண்ட நாடு இது. கட்டுமான நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளில் சிக்கி புது வீடு வாங்கிய நடுத்தர வர்க்கம் ஆயுட்கால கடனாளியாக அலைகின்றது. ஆனால் அம்பானியின் ஆன்டிலியா மாளிகையின் தோராயமான மதிப்பே ஐந்தாயிரம் கோடி ரூபாய்.

ரிலையன்ஸ் துணிக் கடைகளில் இலட்ச ரூபாய் உடைக்குப் போட்டியாக தமிழக பொது வினியோகக் கடைகளில் பொங்கல் வேட்டி சேலைகளை இலவசமாக வாங்கக் கூட்டம் அலைமோதுகின்றது. பாதையோர மக்களை எமலோகம் அனுப்பும் பி.எம்.டபிள்யூ, ஆடி, பென்ஸ் ரகக் கார்கள் கோடிகளில் விற்கப்படுகின்றன. ஓட்டைக் கூரைகளுடன் ஊர்ந்து போகும் அரசுப் பேருந்துகளில் காற்றே புக முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம்! புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அரசாங்கத்திடம் காசில்லையாம்!

எட்டு ரூபாய் தேநீரை “ஒன் பை டூ” என இரண்டு பேர் அருந்தும் உலகில் தாய்லாந்தின் ஐவரி காஃபி ஒரு கிலோ ஒரு இலட்ச ரூபாய்! மராட்டிய விவசாயிகள் தமது பிள்ளைகளின் திருமணத்திற்குக்கூட காசில்லாமல், பத்து – இருபது ஜோடி என கூட்டுத் திருமணம் நடத்தும் நாட்டில், பணக்காரர்களின் “தீம் திருமணங்கள்” சினிமாவின் பிரம்மாண்டத்தையும் விஞ்சுகின்றன.

மக்களுடைய மூளை நரம்பு மண்டலத்தில் ஒவ்வொரு முடிச்சிலும் அமர்ந்து ஆணையிடும் விளம்பரங்கள், நுகர்வுக் கலாச்சாரத்தை அனிச்சைச் செயலாக்கியிருக்கின்றன. மக்கள் கண்டதனைத்தையும் தின்று கழிக்கும் விலங்குகளாக்கப்பட்டு விட்டனர்.

உலகமயம் உலகத்தையே ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து விட்டது என்கிறார்கள். உப்பரிகைகளில் பணக்காரர்களும், தாழ்வாரங்களில் உழைக்கும் மக்களும் புரளுகின்ற ஒரே கூரை இது!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தீம் திருமணங்கள் – அழகின் வக்கிரம் !
  • சுதேசி மோடியின்  விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?
  • ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை !
  • சட்டை ரூ.15,000/, ஜீன்ஸ் 13,000/ கைப்பை 1 லட்சம்… !
  • குடி, கூத்து, ரேப்: இதுதாண்டா ஐ.பி.எல் !
  • ”விளம்பரங்களில் ஆங்கிலம்” – கேள்வி பதில் !
  • பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம் ?
  • தீபாவளி : முற்போக்காளர்களின் ஊசலாட்டம் !
  • விஜய் டி.வி – யின் வை ராஜா வை !
  • பிஞ்சுக் குமாரிகள் ! பி.பி.சி. செய்திப்படம்: “ சாயம் பூசப்பட்ட குழந்தைகள்”
  • ஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !
  • கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?
  • இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள் : நாடு ‘ முன்னேறுதாம் ’ !
  • உங்கள் சிந்தனையை வடிவமைக்கும் விளம்பரங்கள்
  • சேரி சுற்றுலா !
  • மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

சீமானின் அவமானம் – கேலிச்சித்திரம்

36

முத்துராமலிங்க ‘தேவர்’ சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் – சீமான்

SEEMAN-cartoon-image

முத்துராமலிங்கமா… முத்துராமலிங்க ‘தேவரா’ ?
அதை சொல்லுங்கண்ணே மொதல்ல !
அப்புறம்… வாண்டையாரு, சேதுராமன், ராமதாசு, யுவராஜி, ஈஸ்வரன்..
எல்லாத்தையும் லிஸ்ட்ல சேத்துட்டீங்கன்னா..
அந்த சாதில இருக்க ‘தமிழ்’ புள்ளங்களையும் அல்லேக்காதூக்கி நம்ம டம்பளருக்குள்ள அடைச்சிபுடலாம்..

ஓவியம் : முகிலன்

இணையுங்கள்:

மாட்டுக்கறி : ஜார்க்கண்ட் முசுலீமைக் கொன்ற காவி + போலீஸ் கூட்டணி

116

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி முஸ்லீம் இளைஞர் ஒருவரை போலீசார் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இம்மாநிலத்தின்  ஜமத்தாரா மாவட்டத்தின் திக்ஹரி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை தொழில் செய்துவந்தவர் 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி. அவர் பசுக்கன்றுடன் தான் இருப்பது போன்ற போட்டோ ஒன்றை வாட்ஸ் அப் குழுமத்தில்  பதிவிட்டதாகவும் தொடர்ந்து அவரது  நண்பர் ஒருவர் மாட்டிறைச்சி படம் வெளியிட்டதாகவும் கூறி இவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் அப்பகுதி விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங்.

ansari
புகைபடத்திலிருக்கும் 22 வயதான மின்ஹாஸ் அன்சாரி

அதை தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி(03-10-2016) மின்ஹாஸ் அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் ஷாபன், பஹிம் ஆகியோரை ஏதோ பயங்கரவாதிகளைப் பிடிப்பது போல கைது செய்துள்ளது ஜார்க்கண்ட் போலீஸ். “இரவு 9 மணிவாக்கில் மினஹாஸின் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தோம். அப்போது இரண்டு பைக்குகள் மற்றும் ஒரு வண்டியில் 10 பேர் வந்து இறங்கினார்கள். அவர்கள் சீருடையில் இல்லை. எங்களை அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் ஓடினோம்.  அவர்களை ஏதோ கிரிமினல்கள் என்று தான்  முதலில் நினைத்தோம்.” என்கிறார் கொல்லப்பட்ட அன்சாரி உடன் சேர்த்து கைது செய்யப்பட்ட ஷாபன்.

காவல் நிலையத்திலும் இவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் மற்றும் ஆறு காவலர்கள் சேர்ந்து இவர்களை தாக்கியிருக்கிறார்கள். போலீசாரோடு சேர்ந்து  விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங்கும் காவல்நிலையத்தில் வைத்து இவர்களை அடித்திருக்கிறான். “ மின்ஹாஸை மட்டும் தனியாக வேறு அறைக்கு அழைத்து சென்று அடித்தார்கள். அவனது அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவனை எங்கள் அறையில் சேர்க்கும்போது அவன் காதில் இரத்தம் வழிவதை பார்த்தோம். நாங்கள் அவனுக்கு உணவு ஊட்ட முயற்சித்தோம் அது வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தது” என்கிறார் ஷாபன்.

மின்ஹாஸின் கதறல்களை போன் மூலம் அவரது குடும்பத்தினரை கேட்க வைத்து உளவியல் சித்தரவதை செய்திருக்கிறார் ஹரிஷ் பதக். “ பதக் எங்களுக்கு போன் செய்து நாங்கள் மின்ஹாஸின் கதறலை கேட்கும்படிக்கு அவனை அடித்தார். பின்னர் போனில் மின்ஹாசிடம் பேசவும் அனுமதித்தார். என் வாழ்க்கை அபாயத்தில் இருக்கிறது. அவர்கள் கேட்பது அனைத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று மின்ஹாஸ் எங்களிடம் கூறினான்” என்கிறார் மின்ஹாஸின் சகோதரி குல்ரோஷன். பின்னர் தங்கள் வீட்டிற்கு வந்த போலீசார் தங்களிடமிருந்து ரூ. 3000 பணமும், மோட்டார் சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார்கள். தற்போது மின்ஹாஸ் கொலை செய்யப்பட்ட பிறகு அவற்றை திருப்பி அளித்துள்ளார்கள்.

மறுநாள்(06-10-2016) காலை அன்சாரியின் மாமா குலாம் முஸ்தபா மற்றும் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்றிருக்கிறார்கள். முஸ்லீம்கள் மீதான  வசை சொல்லை கொண்டு இவர்களை மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்  அன்சாரியை சந்திக்க அனுமதி மறுத்துள்ளனர். தான் காவல் நிலையம் சென்ற போது அங்கு விஷ்வ இந்து பரிஷத்தின் சோனு சிங் இருந்ததாகவும் அவன் மின்ஹாஸ் அன்சாரியை தாக்கியதாகவும், கூடுதலாக அடித்து துன்புறுத்தும்படி சப்-இன்ஸ்பக்டரை கேட்டுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார் குலாம் முஸ்தபா.  ஜமத்தாரா எம்.எல்.ஏ இர்பான் அலி  தலையிட்ட பின் அன்சாரி தவிர மற்ற இருவரை விடுவித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 5-ம் தேதி அன்சாரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பதாக எம்.எல்.ஏ-விடமிருந்து தகவல் கிடைக்கவே அங்கு சென்றிருக்கிறார்கள் அன்சாரியின் பெற்றோர். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் இவர்களை அன்சாரியை பார்க்கவிடமுடியாது என்று தடுத்திருக்கிறார்.மேலும் அன்சாரியின் தாயை தள்ளிவிட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அன்சாரியின் பெற்றோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியுள்ளார் ஹரிஷ் பதக்.

ansari-wife-and-child
அன்சாரியின் மனைவியும், 8 மாத கைக்குழந்தையும்

“எங்களை இறுதியாக அனுமதித்தபோது அன்சாரி நினைவில்லாமல் கிடந்தான். அவன் அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்தாள், ஆனாலும் அவனிடமிருந்து எந்த அசைவுமில்லை” என்கிறார் அன்சாரியின் தந்தை உமர் அன்சாரி.

அன்சாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் “வயிற்று சளி முழுவதும் இரத்தத்தால் தோய்ந்திருக்கிறது. வயிறு காலியாக இருந்தது. குடலின் 3-ல் இரண்டு பகுதி இரத்தத்தால் நிறைந்திருக்கிறது. கூர்மையற்ற உறுதியான பொருட்களின் மூலம் இந்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்பட்ட இரத்தபோக்கு மற்றும் அதிர்ச்சியின் காரணமாக சாவு நேர்ந்துள்ளது”  என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் அன்சாரி தாக்கப்பட்டதற்கான நேரடியான சாட்சியங்கள் இருந்தாலும் இன்னும் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பதக் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவன் சோனு சர்மா ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கண்துடைப்பிற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

உத்திரபிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அக்லக்கை கொன்ற இந்து மத வெறியர்கள் இப்போது வாட்ஸ் அப்பில் புகைப்படம் வெளியிட்டதாக அன்சாரியை கொலை செய்திருக்கிறார்கள். அதே சமயத்தில் இறந்துபோன அக்லக்கின் கொலையாளிக்கு மூவர்ண கொடியுடன் இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

இந்துமத வெறியர்களின் கோமாதாக்களை தெருக்களில் வீசி எறிந்து குஜராத்தில் தலித் மக்ககள் நடத்தி வரும் போராட்டத்தை அடுத்து தலித்கள் மீதான் தாக்குதலுக்கு “தலை குனிகிறேன்” என்று மோடி உதிர்த்த வார்த்தைகள் நரித்தனமானது என்பதை நிரூபிக்கிறது ஜார்க்கண்ட் கொலை.

போலீசுடன் இணைந்து கொலை செய்யும் இந்து மத வெறி பாசிஸ்டுகளை போலீசை கொண்டு வீழ்த்த முடியாது என்பதையும் இப்படுகொலை நிரூபிக்கிறது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆட்டம் போட்ட ஆதிக்க சாதிவெறி ரன்வீர் சேனா, பூமிகார் சேனா கும்பல்களை நக்சல்பாரிகள் ஒடுக்கியதற்கு பிறகே தலித் மக்கள் மூச்சுவிட முடிந்தது.  அதே போன்று முசுலீம் மக்களும் மார்க்சிய லெனினிய கட்சிகளில் இணைந்து போராடுவது ஒன்றே இதற்கு தீர்வு.

போலீசுதான் பிரச்சினை, நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என்று நீங்கள் கருதினால் சமீபத்திய நீதித்துறை சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகள் உங்களுக்கானது தான்.

“மேற்கு வங்க அரசு சிறுபான்மையினரை திருப்திபடுத்த பெரும்பான்மையினருக்கு எதிராக நடந்துகொள்கிறது. மொஹரம் என்பது முஸ்லீம்களின் முக்கியமான விழா அல்ல. மொஹரத்திற்கு நடக்கும் ஊர்வலமும் தவிர்க்க முடியாதல்ல. ஆனால் துர்க்கா பூஜை தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அரசின் திடீர் முடிவுகளுக்காக அதை மாற்ற முடியாது”

துர்கை சிலைகள்
கரைக்கப்படும் துர்கை சிலைகள்

மேற்கண்ட பேச்சு ஏதாவது ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பி.ஜே.பி தலைவர்களுடையது அல்ல. மேற்குவங்க உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. நவராத்திரி மற்றும் மொஹரம் விழாக்கள் அடுத்தடுத்து நடப்பதால்  துர்கை சிலையை கரைப்பதற்கு நேர ஒதுக்கீடு செய்திருந்தது அம்மாநில அரசு. அதை எதிர்த்து வழக்கு ஒன்றில் “சிறுபான்மையினரை திருப்திப்படுத்த” என்று நீதித்துறை ‘மாண்புகளுக்கு’ எதிராக நேரடியாகவே பூணூலை உருவி களத்தில் குதித்திருக்கிறது கொல்கத்தா உயர்நீதிமன்றம். இந்த இலட்சணத்தில் இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

அடுத்து பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றவாளிகளை விடுவித்து தீர்ப்பு வழங்கிய முன்னாள் குஜராத் உயர்நீதிமன்ற  நீதிபதி பெஹ்ரா ஜெஹன்பக்ஸ் சேத்னா என்பவர் சமீபத்தில் அம்மாநில இழிபுகழ்  டி.ஜி.பி வன்சரா தொடங்கியிருக்கும் தொண்டு நிறுவனத்தின் தொடக்க  விழாவில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

“ தீவிரவாதம் என்பது தீவிரவாதிகளால் மட்டும் தனியாக நிகழ்த்தப்படுவதல்ல. நீதித்துறையிலும் தீவிரவாதம் இருக்கிறது. பெஸ்ட் பேக்கரி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நான் விடுவித்ததோடு வழக்கு தொடர்ந்த என்.ஜி.ஓ மீது விசாரணை நடத்த உத்தவிட்டேன். ஆனால் என் தீர்பை மாற்றிய உச்சநீதிமன்றம் வழக்கை மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றியதோடு என்.ஜி.ஓ மீது விசாரிக்க உத்தரவிட்ட எனது உத்தரவையும் மாற்றியிருக்கிறது. இந்த வழக்குக்கு ஏன் அவ்வளவு முன்னுரிமை. தீவிரவாதிகளை கொன்ற பல போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாகூப் மேனன் தூக்கிலிடப்படும் முன்னர் நள்ளிரவில் அவரது கருணை மனுவை பரிசீலிக்க தேவை என்ன? “ என்று கேள்வி எழுப்பி இந்நாட்டில் நீதித்துறை தீவிரவாதம் நிகழ்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார், மேற்படி நீதிபதி. மோடி என் பிரதமரானார், ஆர்.எஸ்.எஸ் ஏன் தொடர்ந்து கலவரங்களை நடத்துகிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

– அமலன்.

செய்தி ஆதாரம்:

அறிவியல் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம் – வீடியோ

10
ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப்பேரு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது

”உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து  விடாத காவி கும்பல், தங்கள் ‘புனித அன்னையின்’ புகழைப் பரப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோமாதாவின் மூத்திரத்தையும் சாணியையும் அள்ளி வந்து ஆராய்ச்சி செய்கின்றனர். ஏன் மாட்டுமூத்திரத்தை கையில் எடுத்துள்ளார்கள்?

நடுத்தர வர்க்க அப்பாவி இந்தியர்களின் தலையில் எதையாவது கட்ட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இன்னன்ன பொருளைத் தின்றால் / பயன்படுத்தினால் – ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப் பேறு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது. குறிக்கப்பட்ட பொருள் மனித மலமாக இருந்தாலும் அள்ளி அப்பிக் கொள்வதே நமது பெருமைக்குரிய பாரம்பரியம்.

நீரிழிவு மற்றும் கான்சர் நோயைக் குணப்படுத்தும் அருமருந்து என இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனிய மூடர்களிடையே விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் மாட்டு மூத்திரத்தின் விலை 12ரூபாய.

இப்பின்னணியில் மாட்டுமூத்திரம் என்பது என்ன? ஏன் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் மாட்டுமூத்திரத்தை கையில் எடுத்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது இவ்வீடியோ! எல்லா வகை சிறுநீர்களையும் அறிவியல் மற்றும் நவீன மருத்துவம் எப்படிப் பார்க்கிறது, இந்த உண்மைகளை இந்துமதவெறியர்கள் எப்படி மறைக்கிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் விளக்குகின்றது. பாருங்கள் – பகிருங்கள்!

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

24

ப்போது என் மகளுக்கு
எட்டு வயது
அக்கம் பக்கத்தில்
தீபாவளி பரபரப்பு.

குடும்பம்
கொண்டாடவில்லை என்றாலும்
தெருவே தீபாவளியை
மகள் கண்ணில் காட்டியது.

ஏம்ப்பா….
நம்ம வீட்ல
இதெல்லாம் இல்ல – என
புதுத்துணி, பலகாரம்
பூவாணம் பார்த்து
கேட்டாள் மகள்

naraஎதுவோ..
மனிதனுக்கு ஒரு கொண்டாட்டம் !
என ஊரே திளைக்கையில்
கருத்தியல் கனத்தை
குருத்து தாங்குமோ?
அச்சத்தோடு,
”கொண்டாட்டம் கூடாதென்பதல்ல
இது அவமானம்….” என
ஆரம்பித்தேன் காரணத்தை.

”வேற இருக்கட்டும்
வெடியாவது கிடையாதா?” என
வேண்டினாள் மகள்.
முடியாத கருத்தை
முகை அவிழ்க்கும் இயல்பாய்
கதையாகத் தொடர்ந்தேன்….

நரகாசுரனை கொன்றதற்கு
தீபாவளி – என
ஊர்க்காரணம் சொன்னவுடன்,
”அப்ப அவன் கெட்டவனா?
அடுத்த கேள்வியோடு
ஆவலாய் அருகே வந்தாள்.

நடந்தது இதுதான்,
அசுரர்களின் காட்டுக்குள்
ஆரியப் பார்ப்பனர்கள்
அத்து மீறி நுழைந்தார்கள்.

சுரா எனும் சாராயத்தை
ஊர் கெடுக்க கலந்தார்கள்.

அசுரர்களின்
ஆடு, மாடுகளை
அடித்து யாகத்தில் எரித்தார்கள்
அடுத்தவன் உழைப்பில்
திருடித் தின்றார்கள்.

தேவர்களின் தீய செயலை
எதிர்த்துக் கேட்டான் நரகாசுரன்
எங்களுக்கா தொல்லை தருகிறாய் ?
என
விஷ்ணுவை விட்டு கொன்றார்கள் !
இதுதான்
கதைக்கு பின்னால் உள்ள
கள வரலாறு!

இன்னும் புரியும்படி
சொல்கிறேன்,
எங்கிருந்தோ வந்து
ஊரில் ஒரு
சாராயக்கடையை திறக்கிறான்
நான் எதிர்த்துக் கேட்டால்
நரகாசுரன்,

நம்ப ஊர் ஆத்துல ஒருவன்
மணலைத் திருடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்,

படிக்குற
உன் பள்ளிக் கூடத்தை
ஒருவன் மூடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.

எங்கிருந்தோ வந்து
நாம இருக்கும்
இடத்தை ஒருவன் பறிக்கிறான்
எதிர்த்துக்கேட்டால்
நான் நரகாசுரன்.

இதுக்காகவெல்லாம்
அப்பாவை
ஒருவன் கொலை செய்தால்
கொண்டாடுவாயா?

கேட்ட மாத்திரத்தில்
கண்களை உருட்டி
கைவிரல் ஆட்டி
”ஊம்…
தொலச்சி புடுவேன்!” – என
மகள் வெடித்த
வெடிப்பு இருக்கிறதே
அந்த வீரியத்தை
பட்டாசு எதிலும்
பார்க்க முடியாது.

குழந்தைக்கு உணர்த்துவது
சிரமம் என நினைத்திருந்தேன்
பிற்பாடுதான் புரிந்தது
பெரியவர்களுக்கு
புரிய வைப்பதுதான்
பெரும்பாடு.

இன்று
வளர்ந்துவிட்ட மகளிடம்
மீண்டும் தொடர்ந்தேன்.

”பூர்வகுடி மக்களை
இன்று
காட்டை விட்டு துரத்துவது
வேதாந்தா கம்பெனி,

பூர்வகுடி திராவிடர் வளத்தை
அன்று
ஆட்டையப் போட்டது
வேதக் கம்பெனி.

அரசாங்க மொழியில் சொன்னால்,
நரகாசுரன்
அந்தக் கால நக்சலைட்!”

மகள்
வெடித்துச் சிரித்தாள்
பூவாணம் தோற்றது
புது அர்த்தம் பொலிந்தது.

– துரை. சண்முகம்.

மதுராவில் நாத்திகக் கூட்டத்தை நிறுத்திய இந்துமத வெறியர்கள் !

37

த்திரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவுக்கு அருகில் இருக்கும் மதுரா, வட இந்திய ‘இந்துக்களுக்கு’ முக்கியமான நகரம். ஆகவே ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கும் அது கேந்திரமானது என்பதில் ஆச்சரியம் இல்லை. இப்பேற்பட்ட மதுராவில் நாத்திகவாதிகள் நடத்த இருந்த அறைக்கூட்டத்தை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துமதவெறி குண்டர்கள் காவல்துறை துணையுடன் தாக்கி நிறுத்தியுள்ளனர்.

முதலில் ஆன்மீக சாமியாராக இருந்து பின்னர் நாத்திகராக மாறியவர் சுவாமி பாலெண்டு. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுராவில்தான். ஏழைக் குழந்தைகளுக்காக அம்மாஜி என்ற ஒரு உணவகத்தையும் அங்கு நடத்தி வருகிறார்.

Atheists-meeting
ஆசிரமத்தின் முன் ரகளை செய்யும் இந்துமதவெறியர்கள் மற்றும் பெயரளவு முஸ்லீம் அமைப்பினர்.

அக்டோபர் 14-ம் நாள் நடக்கவிருந்த ஒரு நாத்திக அறைக்கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து நாத்திகர்கள், முற்போக்கு நண்பர்கள் எல்லாம் அவரது பிந்து சேவா சன்சதன் ஆசிரமத்திற்கு அழைத்திருந்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்திருந்தார்.

கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக அந்த கூட்டத்தைப்பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை, எனவே அது ஒரு கட்டுக்கதை என்று பாலெண்டு குறிப்பிட்டிருந்தார். ஆகவே இவர் மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டதாக உள்ளூர் பத்திரிகைகள் இந்துமதவெறி கும்பல்களை உசுப்பிவிட்டன.

அதைத் தொடர்ந்து வெறியேறிய விஷ்வ ஹிந்து பரிஷத் , பஜ்ரங் தள் உள்ளிட்ட காவி வானரங்கள் அக்டோபர் 14 காலையில் ஆசிரமத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தி நாசம் செய்தன. இந்து மதம் என்று குறிப்பாக சொல்லாமல் “மதம்” என்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இந்துத்துவ ரௌடி கும்பலுடன் சில இசுலாமிய மத அடிப்படைவாதிகளும் சேர்ந்து கொண்டனர்.  பாலெண்டு ஒரு விளம்பரப்பிரியர் என்றும் கடவுள் நம்பிக்கையாளர்களைக் காயப்படுத்த அவருக்கு உரிமையில்லை என்றும் சாஹி ஜமா மஸ்ஜிதை சேர்ந்த இமாம் முகமது உமர் குவாத்ரி கூறினார். இந்த முசுலீம் அமைப்பு இந்துமதவெறியர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுபவர்களாகவும் இருக்கலாம். அதே நேரம் பகுத்தறிவுவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் இந்து மதவெறியர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள் தான் இசுலாமிய மதவெறியர்கள்.

தாக்குதலுக்குப் பிறகு காவல்துறை உயரதிகாரிகளை அழைத்து வந்த அந்த வானரக் கும்பல் இது வெறும் தொடக்கம் தான் பாலெண்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினால் நகரத்தில் மோசமான சம்பவங்கள் நிகழும் என்று காவல்துறையினர் முன்னிலையிலேயே மிரட்டியிருக்கின்றனர்.

“இது ஒரு தனிப்பட்ட கூட்டம் என்றாலும் காவல்துறையிடம் அனுமதி வாங்கியிருக்கிறோம். கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால் கருத்து சுதந்திரம் மற்றும் கடவுள் நம்பிக்கையின்மைக்கு எதிரான தாக்குதலாக இது இருக்கிறது” என்று சுவாமி பாலெண்டு வருத்தத்துடன் குற்றஞ்சாட்டினார்.

“அந்தச் சந்திப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் அறைக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியாது என்று காவல்துறை கூறியிருந்தது. என்னுடைய விருந்தினர்கள் சிலர் எனது ஆசிரமத்திற்கு வருவது ஏன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும்? புரியவில்லை” என்று பாலெண்டு கேட்கிறார். எனினும் விருந்தினரின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் உருவாக்க்கப்பட்டுவிட்டதால் பாலெண்டு அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.

vrindhavan-balendu
சுவாமி பாலெண்டு

கூட்டதிற்கு வருகை தந்த பலரும் தாங்கள் சமூக வலைதளங்களில் நாத்திக கருத்துக்கள் எதுவும் எழுதக்கூடாது என்று மிரட்டப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த அறைக்கூட்டம் சட்ட ஒழுங்கை எப்படி பாதிக்கும் என்று வியப்படைவதாக வந்திருந்த அனைவரும் கூறினர்.

புல்டோசரைக் கொண்டு ஆசிரமத்தின் முன்னாள் இருக்கும் சாக்கடையை திறந்து விட்டதன் மூலம் ஆசிரமத்திற்கு அத்துமீறி வருபவர்களை தடுத்திருப்பதாக காவல்துறை பொய்யான குற்றத்தை தயாரித்து கூறியது. அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு நடக்கவிருந்த அறைக்கூட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, அதற்கெதிராக வன்முறையாட்டம் ஆடிய மதவெறி கும்பலுக்கு பாதுகாப்பு கொடுத்தது.

“நகர நிர்வாகம் எங்களைத் தொல்லைப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆசிரமத்தின் உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுத்தரமானதாக இல்லை என்று போலியாகக் குற்றஞ்சாட்டி ஆசிரமத்தைப் மூட முயல்கிறது” என்று குற்றஞ்சாட்டுகிறார் பாலெண்டு .

இது போன்ற அருவருப்பான குற்றச்சாட்டுகளை நான் ஒருபோதும் கண்டதில்லை என்கிறார் அந்த நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வந்த புகைப்படப் பத்திரிக்கையாளரான சர்வேஸ். மூவர்ணக்கொடியை ஏந்தி பயமுறுத்தும் முழக்கங்களைப் போட்டு வந்த அவர்களைப் படம் பிடிக்க முயற்சிக்கையில் அந்த குண்டர்களால் தானும் தாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

எண்ணிக்கையில் சிறியதாக இருந்த அந்த குண்டர்களை காவல்துறை மிக எளிதாக கலைத்திருக்க முடியும். ஆனால் இது மோடி அரசு, பா.ஜ.க ஆட்சி, ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு என்பதற்கேற்ப போலீசு காவிக்கறையுடன் செயல்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள், நிகழ்ச்சியை இரத்து செய்து விடுங்கள் என்று தங்களிடம் காவல்துறை கூறியதாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த டெல்லிப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த அசுதோஷ் குமார் கூறுகிறார். சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் காந்தி ஆசிரமத்தை நடத்தி வந்த கிமான்சு குமார் இந்த அறைக்கூட்டதில் பங்கேற்க வந்திருந்தார்.  நாத்திகவாதிகளை கைது செய்யச் சொல்லும் பதாகைகள் மற்றும் பி.ஜே.பி விளம்பர அட்டைகளுடன் காவி குண்டர்கள் ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர், அவர்கள் கைகளில் லத்தி கம்புகள் இருந்தன என்றும் கூறுகிறார் குமார். காவல்துறை அச்சுறுத்துதலால் கடந்த பிப்ரவரி மாதத்தில் அவரது ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

சமஸ்கிருதமே உலக மொழிகளுக்கெல்லாம் தாய். விநாயகனின் உருவம்தான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு சான்று,  காந்தாரியின் கருப்பைப் பிண்டத்திலிருந்து உலகின் முதல் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மகாபாரத காலத்திலேயே உலகின் முதல் தொலைக்காட்சி…… இப்படி அண்டமே நடுநடுங்கும் வகையில் மோடி கம்பெனி ரீல் விடும் நாட்டில் அறிவியலுக்கோ, உண்மைக்கோ, இறை மறுப்புக்கோ என்ன மரியாதை இருக்கும்?

அதன் விளைவுகள் தான் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, ரோகித் வெமுலா என அடுத்தடுத்த பகுத்தறிவுவாதிகளின் படுகொலைகள். “ஏன் இந்துக்களின் புனித இடமான பிருந்தாவனில் இந்த கூட்டத்தை நடத்துகிறீர்கள்? நிஜாமுதீன் தர்காவில் இதை நடத்த உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? தைரியம் இருந்தால் மெக்கா மெதினா சென்று இதை நடத்திப் பாருங்கள்” என்று இந்துத்துவ வெறியர்கள் சமூக வலைத்தளங்களில் புத்திசாலித்தனமாக கேட்கின்றனர். ஆனால் இந்தியாவிலும், வங்கதேசத்திலும் நாத்திகம் பேசும் முற்போக்காளர்களை இருமதவெறியர்களும் கொன்றுதான் வருகின்றனர்.

சரி, இந்துக்கள் அனைவரும் ஒன்று என்பதாலேயே நம்மூர் சுடலைமாடனுக்கு படைக்கப்படும் சுருட்டு, சாராயம், கறி போன்ற பிரசாதங்களை மதுரா கிருஷ்ணன் கோவிலில் படைக்க இவர்கள் தயாரா? இந்துமுன்னணி, ஆர்.எஸ்.எஸ் ஐயர்-ஐயங்கார் குடும்பங்களில் பெண் கேட்டு மேலவளவு தலித்துக்கள் வருவதை ஏற்றுக் கொள்வார்களா?

இந்தியாவில் பார்ப்பனிய இந்துமதத்திற்கு எப்படி ஒரு மரபும், பழமையும் இருக்கிறதோ அதற்கு குறையாமல் இருக்கிறது நாத்திக மரபு. அதனால்தான் இங்கே சாருவாகர்கள்,புத்தர்,சித்தர்கள் துவங்கி பகத்சிங், பெரியார் வரை பெரும் படையே இருக்கிறது. இந்த மரபைக் கொல்வதுதான் அவர்களின் நோக்கம். இராமனையே எரிக்கும் தமிழ் மரபு இருக்கும் வரை அந்த நோக்கம் நிறைவேறாது!

– சுந்தரம்

செய்தி ஆதாரம்:
Hindutva activists attack, force cancellation of private meeting of atheists in Mathura
In Vrindavan, Communal Goons and ‘Secular’ Police Unite to Deny Atheists Space
‘Atheist’ conclave cancelled after religious leaders protest in Mathura

Diwali For whom – By Whom – Against Whom?

8

apscbhagat-singh-apscAmbedkar-Periyar Study Circle

(An independent student body recognized by IITMadras)

Diwali
For whom – By Whom – Against Whom?

Hi Friends,

The Whole country is waiting to celebrate Diwali. In India Diwali is celebrated in most of the states and it has two different stories behind it. In north India, it is being celebrated as the day in which Lord Ram returned to Ayodhya and coronated himself as king after killing Ravana. In south India, It is the day when Krishna and his wife Satyabhama killed Narakasura, A Dravidian King.

Even as this festival is being celebrated as the festival of Hindus, both the stories behind the celebration of Diwali speak about the Aryan – Dravidian war, which is the war between the races in ancient India. All the Epics, Vedas speak about the Aryan – Dravidian War and they were written by the Aryans, to bat for the Aryans. Both the stories behind the celebration of Diwali are unethical and they are one of the world’s topmost racially discriminating stories.

Ravanan
ராவணன்

In Ramayana, the Aryan king Ram with his wife Sita and his brother Lakshman, were staying in the forest. Soorpanaka, the sister of Dravidian king Ravana came to the forest and fell in love with Lakshman and she had proposed to him. But the racist Lakshman rejects her proposal as she belongs to Asura race (Sudra). As an expression of his racial hatred, he cut her nose and one breast for proposing him, her love. Her brother Ravana came to fight for this, and took Sita to his place. This is a Tit for Tat action, where the first move is made by Lakshman. We don’t want to go more in depth considering the size of the pamphlet. After winning the war, Rama went to Ayothya and coronated himself as king. Ravana’s action of abducting Sita must be seen as an answer to the mutilating of the beautiful body of Soorpanaka, his own sister, by Lakshman at the instance of Rama himself. To be noted down is, Ravana did not physically assault Sita at all. Then why demonise Ravana alone? If you demonise Ravana for abducting Sita, then why not demonise Rama and Lakshman for their criminal actiions against Sampooka and Soorpanaka? How can we celebrate such a male chauvinist Rama’s coronation festival?

diwali-varahamIn the story of Narakasura, the complete story itself is unbelievable and against science. The story starts with the demon Iranyaksha (Asura King), who folded the earth like a ‘mat’!, ‘ran into the ocean’! and hid himself there. So Devas went to Mahavishnu and complained about Iranyaksha. Mahavishnu took the incarnation as boar and went to rescue the earth from Iranyaksha. Then he killed him and took the earth from him. While taking her back, he had an intercourse with Bumadevi (Earth). Then as usual he says bye and go about his main business. In that way a child was born to Bumadevi called Narakasura. He grew up and gave a lot of trouble to Devas. Again the Devas went to Lord Mahavishnu to protect them and to kill Narakasura. So he came in the incarnation of Krishna and killed Narakasura. Here the complete story seems to be very funny like a modern day Harry potter story series, full of magic and against science. We all know that earth cannot be rolled like a “mat” and cannot be taken into the ocean which is part of the earth. And if we start explaining every funny part of this story, then we need to write a separate book.

We are not here to debate who is good or who is bad, which we can have in a separate session. But the thing to be learnt from these stories is the Aryan – Dravidian War which was moulded in to this kind of stories to promote Aryan supremacy theory.

Mahish-bannerTill date, Mahisasur, an Asura is owned and venerated by Santhals (the tribal community in central India). A sect of Tribals from Jarkhand celebrate Ravana as their Lord. If questioning the moral behind celebration of Diwali, hurts the sentiments of Hindus, then why not will it hurt the Hindu (constitution defines Tribals also as Hindus) sentiment if effigy of Ravana and Mahisasura are burnt in Durga puja ? If you celebrate Durga puja, it will hurt the santhals. If you celebrate Diwali, it will hurt Jarkhand tribals. Will it not ?

The Aryans – who came from central Asia, entered the land area which is now called as India through Kybar, Bolan passes and occupied the land. They defeated the sons of the soil, the Dravidians and Tribal communities through conspiracies and became rulers. They have depicted Dravidians and Tribals as the worst and most uncivilized creatures, as demons and as monkeys in their epics and Vedas. These Epics and Vedas are now made sacred and they were said to be the common heritage for the so called ‘Hindus’ who include both Aryans and Dravidians. Only through these Epics and Vedas, they make Varnasrama sacred, which we call it as the Brahmanism.

APSC appeals you to ignore the Diwali festival, which is celebrated to show Aryan victory over the sons of soil. As a son of the soil, it is our duty to resist Aryan invasion into our cultural life, celebration of victory of Aryans over the sons of soil, imposition of Sanskrit over all Indian languages. Let us unite together and fight Brahmanism in every format which poisons the humanity through religious sentiments, culture, language and education.

Jai Sampooka, Jai Soorpanaka, Jai Ravana!
Jai Mahisasura, Jai Narakasura, Jai Mahabali!

Unite and Fight against the Brahmanism!
We are the sons of soil!
Get rid of the central Asian Aryan culture!

_____________

apsc.iitm@gmail.com
apsc@smail.iitm.ac.in

மல்கான்கிரி : மாவோயிஸ்டுகள் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம் !

10
நக்சலைட்டுகள்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை-20.
தொடர்புக்கு – சே.வாஞ்சி நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மதுரை – 9865348163

27.10.2016

பத்திரிகை செய்தி

மல்கான்கிரி போலி என்கவுண்டரில் 28 மாவோயிஸ்ட் போராளிகள் படுகொலை!
சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!

டந்த 24-10-2016 அன்று ஆந்திரா-ஒரிசா எல்லைப் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 28 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கிறார் ஆந்திர மாநில டி.ஜி.பி. சம்பாசிவராவ். ஒடிசா முதல்வர் காவல்துறைக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

நக்சலைட்டுகள்
நக்சலைட்டுகள் (கோப்புப் படம்)

மாவோயிஸ்டுகள் மீது சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களும் திருப்பிச் சுட்டதாகவும் சொல்கிறது காவல்துறை. மாவோயிஸ்டுகளை முன்பே பிடித்துவைத்து நிராயுதபாணிகளான அவர்களை போலி மோதலில் போலீசு சுட்டுக் கொன்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார் எழுத்தாளர் வரவரராவ். மாவோயிஸ்டுகளுக்கு உணவு கொண்டு செல்பவர் மூலம் உணவில் நஞ்சு கலந்து அவர்களை வீழ்த்திவிட்டு, அதன்பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக மாவோயிஸ்டு அமைப்பினைச் சார்ந்த ஷ்யாம் அளித்துள்ள பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

துப்பாக்கிச் சண்டை எதுவும் நடக்கவில்லை, தூங்கிக் கொண்டிருந்த நிலையிலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நிலையிலோதான் இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம். தனது உயிருக்கு ஆபத்து வரும்போதுதான், எவர் ஒருவரையும் சுட்டுக் கொல்லும் உரிமையை போலீசாருக்கு சட்டம் வழங்குகிறது. கைது செய்து வழக்கு நடத்தினால், தாங்கள் விரும்புகின்ற வகையில் அவர்களுக்கு எதிரான மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது என்ற காரணத்தினால்தான், தண்டனையை தாங்களே நிறைவேற்றுவதற்கு இத்தகைய படுகொலைகளை போலீசார் நடத்துகின்றனர்.

maoist-muist
மாவோயிஸ்டுகளும், எம்.ஓ.யு-யிஸ்டுகளும்

கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் மீது வழக்கு இருந்தது, அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்ற கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல், மாவோயிஸ்டு என்றாலே சுட்டுக் கொன்றுவிடலாம் என்பது எழுதப்படாத சட்டமாகி வருகிறது. மாவோயிஸ்ட் அமைப்பில் இருப்பதாலே ஒருவரைக் கைது செய்ய முடியாது, அவ்வாறு கைது செய்ததற்கு அரசு இழப்பீடு தரவேண்டும் என சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியுள்ளது. இருந்தபோதிலும், இத்தகைய தீர்ப்புகள் விதிவிலக்குகள். மாஜிஸ்டிரேட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு எல்லா கைதிகளையும் ரிமாண்டுக்கு அனுப்புவது போல, மாவோயிஸ்டு என்றால் சுட்டு விடலாம் என்பதுதான் நீதித்துறையின் அணுகுமுறையாகவும் மாறி வருகிறது. ”போலீசு என்கவுண்டர்களுக்கு கொலை வழக்கு பதிய வேண்டும்” என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவெல்லாம் குப்பைக் கூடையில்தான் எறியப்படுகிறது.

ஆயுதங்கள் வைத்திருந்தார்கள், தாக்க முயன்றார்கள் என்று சொல்லி தனது குற்றத்தை போலீசு நியாயப்படுத்துகிறது. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப்பயிற்சிகளே அளிக்கிறார்கள்; சக இந்திய குடிமக்களைக் கலவரம் செய்து கொல்வதற்கும் பெண்களை வல்லுறவு செய்வதற்கும்தான் ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள். போலீசுத்துறை அவர்கள் மீது எங்கேயும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

மாறாக, மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்படக் காரணம், மத்திய இந்தியாவின் வனப்பகுதியிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றி விட்டு அவற்றை ஆக்கிரமித்து பல லட்சம் கோடி மதிப்புள்ள தாதுப்பொருட்களை இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு உதவுவதுதான்.இந்திய அரசும், மாநில அரசுகளும், ஒப்பந்தங்கள் மூலம் அவற்றை ஏற்கனவே தாரைவார்த்து விட்ட போதிலும், அந்த ஒப்பந்தகளை நிறைவேற்ற மாவோயிஸ்டுகள் தடையாக இருப்பதுதான் அரசும் போலீசும் அவர்கள் மீது இத்தகைய படுகொலைகளை நடத்துவதற்குக் காரணம்.

கொல்லப்பட்டவர்கள் யாரும் அந்நிய நாட்டு பயங்கரவாதிகள் அல்ல. மாறாக, ஆந்திர மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை எதிர்த்து நிற்கும் பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள்தான். ஆனால், இத்தகைய அநீதியை கட்சிகளும் ஊடகங்களும் கண்டிக்க முன்வராதது இந்தியாவில் ஜனநாயகத்திற்கான வெளி மென்மேலும் சுருங்கி வருவதைக் காட்டுகிறது.

தாங்கள் சட்டத்தின் ஆட்சி நடத்தி வருவதாகவும், மாவோயிஸ்டு அமைப்பினர் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதுதான், அவர்கள் மீது அரசு கூறும் குற்றச்சாட்டு. ஆனால், போலி மோதல் கொலை சம்பவங்களில் மட்டுமின்றி, தனது எல்லா நடவடிக்கைகளிலும் அரசும், போலீசும், நீதித்துறையும், கட்சிகளும்தான் சட்டத்தை மீறி வருகின்றன. ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று யார் கூச்சல் போடுகிறார்களோ அவர்கள்தான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் கொலையாளிகளாக இருக்கின்றனர். சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான இந்தப் படுகொலையை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கொல்லப்பட்ட போராளிகளில், மாவோயிஸ்டு அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் ராமகிருஷ்ணாவின் மகனும் ஒருவர். தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் ராமகிருஷ்ணாவின் மனைவி பத்மா, மக்களுக்காகப் போராடி மடிந்த தனது மகனை எண்ணிப் பெருமை கொள்வதாகப் பேட்டியளித்திருக்கிறார். ஆனால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசியல் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சரோ, அக்லக் என்ற இசுலாமிய முதியவரைக் கொலை செய்த கிரிமினலின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி மரியாதை செய்து கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் எளிய மக்களுடைய வாழ்வுரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை பத்மாவைப் போன்ற தாய்மார்களிடமிருந்துதான் நாம் பெறவேண்டியிருக்கிறது.

சே.வாஞ்சி நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர்

உங்கள் ஜனநாயகவாதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் !

2
india-pakistan-solidarity

ங்களது தாராளவாதிகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானம் அடையலாம்.

பாகிஸ்தானிய கலைஞர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார் சல்மான் கான். கலை என்பது பயங்கரவாதமில்லை என்றும், பயங்கரவாதமும் கலையும் மாறுபட்டது என்றும் இவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சல்மானின் கூற்று சிவ சேனையைக் கொதிப்படைய வைத்துள்ளது. ஆனால், சிவசேனை கொதிப்படையாத ஒரு விசயம் என்று ஏதாவது உள்ளதா என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாடினால் அவர்களுக்கு  ஆத்திரம் வரும். தூதரக அதிகாரிகளின் மேல் ஆத்திரம் வரும். புத்தகங்களின் மேல் ஆத்திரம் வரும். ஈத் பண்டிகையின் மேல் ஆத்திரம் வரும். வெள்ளிக்கிழமைகள் ஏன் சனிக்கிழமைகளாகவோ ஞாயிற்றுக் கிழமைகளாகவோ இல்லை என்று ஆத்திரப்படுவார்கள்.

சிவசேனையின் உறுப்பினர்கள் பலருக்கு உயர் இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்க வேண்டும். சல்மான்கானுக்கு பாகிஸ்தான் பிடித்திருந்தால் அவர் அங்கேயே போய் விடலாமே என அவர்கள் தெரிவித்துள்ளனர். சொல்லப் போனால், ‘பஞ்ரங்கி பாய்ஜான்’ படத்தில் அதைத் தான் செய்தார். ஆனால், உயர்ந்த லட்சியங்களைத் தேடிக் கிளம்பும் நம்மில் பலருக்கும் நடப்பதைப் போல் மல்யுத்த வீரரின் மகளுடைய காதல் அவரைத் திரும்ப அழைத்து விட்டது.

ஒருவேளை சல்மான் கான் பாகிஸ்தானுக்கே வந்து விட்டால் என்ன ஆகும்? எங்கள் நாட்டின் நாடகத்தனமான சீரியலில் சல்மான் கானை கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. மூன்று பிள்ளைகளின் தகப்பன் ஒருவன் தனது மனைவியிடம் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போதே சட்டையைக் கிழித்து மழித்த மார்பைக் காட்டினால் கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருக்கும்.

சில நாட்களுக்கு முன் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவதைப் பற்றி பேசிய ஆமீர்கான் குறித்தும் இதே போன்ற கருத்தை சிவசேனை வெளியிட்டது. அவரைக் கன்னத்தில் அறைகிறவருக்கு பரிசுத் தொகை கூட அறிவிக்கப்பட்டிருந்தது. பி.கே (Pk) திரைப்படத்திற்கான எதிர்வினையாக அது இருக்குமோ என்று கூட நான் ஆச்சரியப்பட்டேன். சிவப்புத் தொப்பியும் நீல மேலங்கியும் போட்டுக் கொண்டு ஆடிப் பாடிய படியே ஆமீரும் சல்மானும் ஒரே பேருந்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுவதை நினைத்தாலே சிறப்பாக இருக்கிறது.

ஊரி தாக்குதலால் இந்தியா கடுமையாக வேதனை அடைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதன் காரணமாக எழும் ஆவேசங்கள் தவறான திசையில் இருக்கின்றன. உங்களது தீவிரவாத இயக்கங்களில் ஒன்று நவாஸ் செரீபின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இங்குள்ள வெகுமதி வேட்டையர்கள் பலருக்கு அது நாவில் எச்சிலூற வைத்திருக்கும். ஆனால், எப்போதும் லண்டனில் அடைந்து கிடக்கும் நவாசை நெருங்குவது அத்தனை சுலபமில்லை.

arnab go sami
அர்னாப் கோஸ்வாமி

அர்னாப் கோஸ்வாமியை விட வேறு யாரும் கடுமையான வேதனை அடைந்திருக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. சென்ற வாரம் பாகிஸ்தானின் பெயரை அவர் கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் காணொளித் துண்டு ஒன்றைக் கண்டேன். அந்தக் காணொளியின் பிற்பகுதியில் ஹபீஸ் சயீதின் பெயரைச் சொல்லும் போது அவரது இரத்த நாளங்கள் தெறித்தே விட்டன. அனேகமாக அதற்கடுத்து அவர் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சியை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தான் நடத்தியிருக்க வேண்டும். அவர் தூக்கத்தில் கூட கூச்சலிடுவாரோ என்று சில நேரம் நான் வியந்திருக்கிறேன்.

அவரும் பலரை பாகிஸ்தானுக்கு ஓடுமாறு சொல்லியிருக்கிறார்; அதில் சிலர் ஏற்கனவே இங்கே தான் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் அரசு அமைந்த பிறகு இது பிரபலமான கூற்றாகி விட்டது. மாட்டுக்கறி தின்பவர்கள், பாகிஸ்தானுக்குப் போகலாம். காங்கிரசுக்கு ஓட்டுப் போகிறவர்கள், பாகிஸ்தானுக்குப் போகலாம். இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவதாக கருதுகிறவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம்.

இந்தியா தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஏனென்றால், அடுத்தவர்கள் அங்கே வாழ்வதா இல்லை வெளியேறுவதா என்பதைக் கூட மக்கள் தான் ஓட்டுப் போட்டுத் தெரிவு செய்கிறார்கள்.

ஆம் இந்தியாவே, எமது கலைஞர்களை வெளியேற்றி விடுங்கள். ஃப்வாத் கான் சென்றதிலிருந்து எங்களது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஹுமாயுன் சயீதிடம் மாட்டித் தவிக்கிறோம் நாங்கள். ஹுமாயுனைக் காணும் எங்கள் குழந்தைகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். தயவு செய்து எங்கள் நடிகர்களை திரும்ப அனுப்பி விடுங்கள்.

நீங்கள் திலீப் குமாரைத் திருப்பி அனுப்புவதில் இருந்து துவங்கலாம். அம்ரீஷ் பூரியின் சாம்பலையும், தேவ் ஆனந்தின் தலைக்கேசத்தின் வினோத வடிவம் கொண்ட அவரது தொப்பியையும் அனுப்பலாம். அதற்குப் பின் அலி ஜாபர், மஹிரா கான் மற்றும் பிறரையும் கூட அனுப்பி விடுங்கள்.

அட்னான் சாமியை வைத்துக் கொள்ளுங்கள். இந்தியா அவரைக் கருணையோடு நடத்துகிறது. தற்போது அவர் ட்விட்டரில் தெரிவிக்கும் கருத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது. உங்கள் நாட்டில் குடியேற்ற நடைமுறைகளில் கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையும் அங்கமா என்ன?

எப்படிப் பார்த்தாலும் ராஹட் ஃபதே அலிகானின் திறமையை நீங்கள் வீணடித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஹூமா குரேஷி அவருக்கு வாயசைப்பதைப் பார்த்தால் நம்பவே இயலவில்லை. ஹூமாவும் இங்கே தான் வந்தாக வேண்டும் என்று நினைக்கிறேன் – ஏனெனில் அவரும் முசுலீம் தானே. அருந்ததி ராயையும் அனுப்பி வையுங்கள் – உங்களை விட எங்களுக்கே அவரை மிகவும் பிடித்துள்ளது. நீங்கள் அவரை மதிப்பதில்லை. ஒரு பெண் எழுதுவதா? இதை விட சந்தேகத்திற்குரியது ஒரு வாசிக்கும் ஆணாகத்தான் இருக்க முடியும்.

அப்புறம் பாருங்கள், நாங்களும் நீங்கள் செய்வதையே இங்கே செய்து விடுகிறோம். பாகிஸ்தானைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லாதவர்கள், ஏன் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது? எங்கள் இராணுவத்தை ஆதரிக்காதவர்கள் ஏன் இந்தியாவுக்குப் போய் விட வேண்டியது தானே? நிறைய பாகிஸ்தானிய தாராளவாதிகளை இந்தியாவுக்குச் செல்லுமாறு சொல்கிறார்கள்.

சொல்லப் போனால், மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான அஸ்மா ஜஹாங்கீருக்கு இந்திய இராணுவ பட்ஜெட்டில் தனி ஒதுக்கீடு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறைந்தது 20 சதவீதமாம். அதே போல் இராணுவ விசாரணை மன்றங்களை எதிர்ப்பவர்கள் ரா ஏஜெண்டுகளாம். பாகிஸ்தானின் தாராளவாதிகளை இந்தியா ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். அதே போல், இந்திய தாராளவாதிகளை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளலாம்.

இதை ஒரு அரசியல் பரிமாற்ற நிகழ்வாக ஏற்பாடு செய்து விடலாம். எங்களது தாராளவாதிகள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்; சுடப்பட்டுள்ளனர்;  மிரட்டப்பட்டுள்ளனர்; கிசுகிசுப் பிரச்சாரங்களின் மூலம் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இங்கிருப்பதை விட சிவசேனையிடம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

உங்களது தாராளவாதிகளும் பாகிஸ்தானை பாதுகாப்பான இடமாக உணர்வார்கள். எல்லையைக் கடந்ததுமே அவர்களுக்கு மாட்டுக்கறி உணவோடு நல்ல வரவேற்பு கிடைக்கும். தெரியுமா, நாங்கள் லாகூரில் எந்நேரமும் மாட்டுக்கறி தான் தின்கிறோம் – அட, தேனீருக்கு நொறுக்குத் தீனியாகக் கூட மாட்டுக்கறி தான். பாகிஸ்தானியர்கள் இரத்தத்தில் யூரிக் ஆசிடின் அளவே மாட்டுக்கறியால் அதிகரித்து இங்கே எல்லோரும் மூட்டு வலியால் அவதிப்படுகிறோம். பலருக்கு கீழ்வாத நோயும் கூட உண்டு. ஆனாலும் எங்களால் மாடு தின்னும் வெறியை அடக்கவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

bilawal-bhutto
பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ

ராகுல் காந்தி கூட பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து உதவாக்கரை ஆவது எப்படி என்பதைப் பற்றி பிலாவல் பூட்டோவுக்குப் பாடமெடுக்கலாம். இந்த துணைக்கண்டத்தின் இரண்டு மூத்த கட்சிகளை ஒழித்துக் கட்டும் முயற்சியில் உள்ள அரண்மனை வாரிசுகள் என்ற முறையில் அவர்களுக்குள் பேசிக் கொள்ள நிறைய விசயங்கள் இருக்கும்.

ஒருவழியாக எங்களது (பாகிஸ்தானிய) தாராளவாதிகள் முக்காடின்றி உங்கள் ஊரில் சீமைச் சரக்கு வாங்க முடியும். என்ன, சமூக உறவுகளை பராமரிக்க சைவர்களாக இருந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தங்களது புகுந்த நாட்டைப் பற்றி புத்தகம் எழுதலாம், யோகா வகுப்புகளுக்கு யோகா உடை (இறுக்கமாக பிடிக்கும் கால் சட்டை) போட்டுக் கொண்டு போகலாம்.

நமது தாராளவாதிகளை இடம் மாற்றிக் கொண்ட பின் இந்த பிராந்தியத்தில் கொதித்துக் கொண்டிருப்பவர்களிடையே அமைதி திரும்பும் என்று நினைக்கிறேன். அதன் பின் இறுதியில், பொருளற்ற போராட்டங்களில் இருந்து நமது கவனத்தை கும்பல் கொலைகள், பிரிவினை இயக்கங்கள், அணுகுண்டுகள் போன்ற பயனுள்ள அஹிம்சையான விசயங்களை நோக்கித் திருப்பி விடலாம்.

நன்றி: Haseeb Asif , Writer, journalist
மூலக் கட்டுரை – By Exchanging Their Liberals, India And Pakistan Can Make Peace
தமிழாக்கம் : இனியன்

குறிப்பு :

1) கட்டுரையாளர் ஹசீப் அஸீஃப் லாகூரைச் சேர்ந்தவர்.

2) இந்தி திரைப்படங்களில் பணிபுரியும் பாகிஸ்தானிய கலைஞர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சிவசேனா, அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டவர்கள் நடத்திய வெறிப் பிரச்சாரத்திற்கு பதிலாக இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார் ஹசீப் அஸீஃப்

3) ஹூமாயுன் சயீத் பாகிஸ்தானின், சாம் ஆண்டர்சன் அல்லது பவர்ஸ்டார்!

4) திலீப் குமார், அம்ரிஷ் பூரி பாகிஸ்தானைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.

5) அட்னன் சாமி : பாகிஸ்தானைப் பூர்வீகமாக கொண்டவர். பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இந்தியா வந்த பின் மிதமிஞ்சிய உடற்பருமனைக் குறைக்க கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சையை எடுத்துக் கொண்டவர். ஊரி தாக்குதலை அடுத்து தனது பிழைப்பைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுக்கு ஆதரவான நிலையெடுத்து பேசி வருகிறார்.

6) இந்தியாவுடன் அமைதியான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என பாகிஸ்தானிய தாராளவாதிகள் கோருகின்றனர். இவர்களை அரசியல் ரீதியில் எதிர் கொள்ள முடியாத பாகிஸ்தானிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மற்றும் போர் வெறியர்கள், இவர்களது மேற்கத்தியபாணியிலான தாராளவாத வாழ்க்கை முறை குறித்து பாகிஸ்தானிய பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

7) பாகிஸ்தானில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் அதற்காக அணியும் பயிற்சி உடைகள் கேலிக்குரியதாக அங்குள்ள கடுங்கோட்பாட்டுவாதிகளால் சித்தரிக்கப்படுகின்றது.

ஊழல் பெருச்சாளிகளால் மலரும் பா.ஜ.க தாமரை – கேலிச்சித்திரம்

0

சுரங்க முறைகேடு ஊழலில் பா.ஜ.க தலைவர் எடியூரப்பாவும், அவரது மகன்களும், மருமகனும் விடுதலை!

cartoon-bjp-karnataka

ஓவியம் : முகிலன்

இணையுங்கள்:

டொனால்ட் டிரம்ப் : என்ன மாதிரியான டிசைன் இது ?

6
டொனால்ட் டிரம்ப்

சுமார் 3,500 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த வழக்குகளில் சரிபாதி அவர் பிறர் மேல் தொடுத்த வழக்குகள் – மறுபாதி பிறர் அவர் மேல் தொடுத்த வழக்குகள். அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட வருமான வரி தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பது ஒருவரின் தனிப்பட்ட திறமை என்று பொது மேடையிலேயே அறிவித்துள்ளார். அவர் மேல் சுமார் 14 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். தனது சொந்த மகளையே பாலியல் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருக்கிறார்.

அவருக்கு சுமார் 500 தொழில் நிறுவனங்களில் முதலீடு உள்ளது. ரியல் எஸ்டேட், சூதாட்ட விடுதிகள், மதுபானங்கள், அழகுப்போட்டிகள் நடத்துவது போன்ற ’தொழில்களே’ அவரது பிரதானமான வருவாய் மூலங்கள். இவை தவிர நீங்கள் கேள்வியேபட்டிராத பல்வேறு உப்புமா தொழில்களும் அவருக்கு உண்டு – அவையெதுவும் சொல்லிக் கொள்ளும்படி யோக்கியமானவை அல்ல என்பதால் தவிர்க்கிறோம். திடீரென ஒரு புதிய நிறுவனத்தைத் துவங்கி, அந்நிறுவனத்தின் மேல் அதிகப்படியான விளம்பர வெளிச்சம் பாய்ச்சி, முதலீடுகளை ஈர்த்து, இறுதியில் மஞ்சள் நோட்டீஸ் (ஓட்டாண்டியாக அறிவிப்பது) அளித்து முதலீட்டாளர்களை மொட்டையடிப்பதில் அவர் வல்லவர். 1991, 1992, 2004 மற்றும் 2009 என மொத்தம் நான்கு முறை தனது நிறுவனங்கள் கடனில் முழுகி விட்டதாக (Corporate Bankruptcy) அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

ஆட்டோ சங்கர், விஜய் மல்லையா, ஈமு கோழி அதிபர், மகா பெரியவா ஜெயேந்திர சரஸ்வதி போன்ற ‘ஆளுமைகள்’ அனைவரையும் சேர்த்து செய்த கலவையான “அவர்” – டொனால்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போதைய சூழலில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனே வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கின்றன; எனினும், இன்ஷா அல்லாஹ், ஒருவேளை அவர் வெல்லும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார்.

ட்ரம்பின் வாய் ஒரு விசேடமான உறுப்பு. பொதுவாக மூளையில் உற்பத்தியாகும் சிந்தனைகளை வெளியிடும் உறுப்பாக அறியப்படும் வாய், டிரம்பிடம் வேறு வகையில் செயல்படுகின்றது. அவரது வாய் நாறத்தனத்தின் ஆழ அகலம் என்னவென்பதையும், மூளையின் தொடர்பின்றி அதற்கென்றே தனியாக கருத்துக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளதா எனவும் நாசா விஞ்ஞானிகளாலேயே கண்டிபிடிப்பது சிரமம். நாற்பதாண்டு கால தொழில் நடவடிக்கைகள் அனைத்தையும் தனது வாயாலேயே அளந்துள்ளார் திருவாளர் டிரம்ப்.

வாயில் வடை சுடுவதில் விற்பன்னர் என மனிதகுலம் அறிந்த திருவாளர் மோடியே பொறாமைப் படும் வகையில் டிரம்பின் வாய் செயல்படுவதாக அதிசயிக்கின்றது பத்திரிகை உலகம். கடந்த நான்கு பத்தாண்டுகளாக அமெரிக்க பத்திரிகைகளின் கிசுகிசு பகுதிக்கு (Page 3) விசயாதாரங்களை வழங்கும் மூலமாக டிரம்பின் வாய் செயல்பட்டு வந்துள்ளது. அநேக சந்தர்ப்பங்களில் டிரம்பின் வாய் அவரது கட்டுப்பாடின்றி உளறிக் கொட்டியவைகள் அனைத்தையும் தற்போது தோண்டியெடுத்து அவருக்கெதிரான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றது ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சி.

எண்ணற்ற சந்தர்ப்பங்களில் பெண்களைக் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட மைனர் வாழ்க்கையிலிருந்து வருகின்றன. அமெரிக்க விஜய் மல்லையாவான டொனால்ட் டிரம்ப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும், அவருக்கு மனநிறைவை அளித்த தொழில்களாக சூதாட்ட விடுதிகளையும், அழகுப் போட்டிகளையுமே குறிப்பிடுகிறார். டிரம்பின் பழைய பேட்டி ஒன்றில், தனது கண்களுக்கு அழகு மட்டுமே திருத்தமாக தெரியும் எனவும், பெண்களின் மார்பகங்கள் தனக்கு எண்ணற்ற கற்பனைகளை தோற்றுவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

”முத்தமிடுவதில் துவங்குவேன்.. வெறும் முத்தம் தான். அதற்கு மேல் காந்தம் போல் ஈர்த்து விடும். நான் காத்திருக்கவே மாட்டேன். நீங்கள் ஒரு நட்சத்திரமாக இருந்தால் அவர்கள் உங்களை எதற்கும் அனுமதிப்பார்கள். நீங்கள் எதையும் செய்யலாம். அவர்களது பெண்குறியைப் பிடித்திழுக்கலாம்… என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” – இது டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் உள்ள வைர வரிகள். இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ஆகச் சிறந்த பின்நவீனத்துவவாதிகள் கூட இவ்வளவு பெரிய’கலத்தை’ செய்ய மாட்டார்கள்.

donald-trump1டிரம்பின் எதிர்முகாம் இந்த பேட்டியைத் தோண்டியெடுத்து வெளியிட்ட பின், “அட, அதெல்லாம் உடைமாற்றும் அறையின் உளறல்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார் டிரம்ப். பெண்களைக் குறித்து டிரம்ப் வெளியிட்ட கருத்துக்களிலேயே இது தான் ஓரளவுக்கு நாகரீகமானது என்றால், மற்ற உரையாடல்களின் தரம் என்னவாக இருக்கும் என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.

தத்துவஞானி இளையதளபதி விஜய் கில்லி திரைக்காவியத்தில் முன்வைத்த “வாழ்க்கை ஒரு வட்டம்” என்கிற தத்துவம் அமெரிக்காவுக்குப் பொருத்தமாகியிருக்கிறது. ஜனநாயகத்தின் மாண்பு, உயரிய மனித பண்புகள், முன்னேறிய நாகரீகம் உள்ளிட்ட கந்தாயங்களின் ஒட்டுமொத்த விற்பனையாளராக தன்னைத் தானே நியமித்துக் கொண்டு உலகிற்கு பாடம் எடுப்பதே அமெரிக்காவின் முழுநேரத் தொழில். தானே பெற்றுப் போட்ட குறைப்பிரசவக் குழந்தைகளான தாலிபான், அல்குவைதா, ஐ.எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் மட்டுமின்றி வட கொரிய அதிபர், ஈரான் தலைவர்கள் போன்றோரையும் காண்டுமிராண்டிகளாகச் சித்தரிப்பதன் மூலமே தனது சொந்த நாட்டு மக்களிடம் போருக்கான நியாயத்தை நிலைநாட்டியது அமெரிக்கா. டிரம்ப் இவர்கள் அனைவரையும் விஞ்சிய காட்டுமிராண்டியாக அம்பலப்பட்டு நிற்கிறார்.

உலக வரலாறு, நாடுகள் பற்றிய விவரங்கள், புவியியல் அறிவு, பொது அறிவு, பொருளாதார அறிவு உள்ளிட்ட அத்தியாவசிய அறிவுத்திறன் ஏதுமற்ற கோமாளிகளே அமெரிக்க ஜனாதிபதிகளாக போட்டியிட்டு வெல்வது வழக்கம். கார்ப்பரேட் சேவையாற்றும் முதலாளித்துவ அடியாளாக இருப்பது ஒன்றே அடிப்படை தகுதி என்ற வகையில் தான் ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் கூட அமெரிக்க அதிபர்களாக தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதியானவர் என்றாலும், அவரது பிற கல்யாண குணங்களைக் கண்டு சொந்தக் கட்சியினரே முகம் சுளிக்கின்றனர்.

தங்கள் நாட்டின் அதிபர் பதவிக்கு பொருத்தமானவராக அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற கழிசடையையே உற்பத்தி செய்ய முடியும் என்றால் உலக முதலாளித்துவத்தின் கோபுர கலசமாக அமெரிக்கா இருப்பது நியாயம்தானே?

(அமெரிக்க WWE சண்டையில் டொனால்ட் டிரம்பின் சண்டை)

– முகில்

பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் !

0

ன்டியாஸ்பென்ட் பத்திரிக்கை ஆய்வின்படி உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் இராஜஸ்தான் ஆகிய ‘பாரத தேச’த்தின் பார்ப்பனிய மாநிலங்கள் பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 மற்றும் தேசியக் குற்றப்பதிவு மையத்தின் மாதிரிப்பதிவு மதிப்பாய்வு – 2014 லுள்ள எட்டு குறியீட்டு எண்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வறிக்கையை அப்பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகிறது
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகிறது

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகின்றது. அதுவே மேற்குவங்கத்தில் 13 இலட்சமாகவும் பீகாரில் 12.5 இலட்சமாகவும் இருக்கிறது. நான்கில் ஒரு இராஜஸ்தான் பெண்ணிற்கு 18 வயது முடியும் முன்னரே திருமணம் நடக்கிறது.

மேற்குவங்கத்தில் பெண்களின் சராசரித் திருமண வயது 19.3 ஆக இருக்கிறது. உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் சராசரி திருமண வயது 19.4 ஆக இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில் பிரசவிக்கும் ஒவ்வொரு இலட்சம் பெண்களில் 29 பெண்கள் உயிரிழக்கிறார்கள். அடுத்தநிலையில் இராஜஸ்தானில் 23.9 பெண்களும், பீகார் மற்றும் ஜார்கண்டில் 21.4 பெண்களும் பலியாகின்றனர்.

ஜூன் – 2016 -ல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஒருத்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தனியார் மருத்துவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி ஏழை இந்தியப்பெண்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கவேண்டும் என்பதுதான் அது. அதாவது வருடம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடித்து விட்டு மாதம் ஒரு நாள் இலவச உபாசம் இருந்து ஏழைகளுக்கு அருள்பாலிக்க வேண்டுமாம்.

அரசு மருத்துவமனைககளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளைப் மேம்படுத்துதல் போன்ற இன்றியமையாத செயல்திட்டங்கள் மூலமே ஏழைகளைப் பாதுகாக்கமுடியும். இதை மறுத்து விட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சுரண்டலை மறைப்பதற்கு இப்படி ஒரு நாடகம்!

இராஜஸ்தானில் ஐந்தாவது வகுப்பு செல்லும் முன்னரே 40 விழுக்காட்டு பெண் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான இந்திய மக்கள் கருதுவதை விட அதிகமாக பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பெண் குழந்தைகளை சுமையாக கருதுவதால் பதின்மபருவத்தை எட்டும் முன்னரே திருமணம் செய்கின்றனர். இந்தியாவில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்களுக்கு 18  வயதிற்கு முன்னரே திருமணம் செய்யப்படுகின்றது.

பதினைந்து வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும் இந்தியப்பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் அதிகமாகும் (2014-ம் ஆண்டின் படி). இது 2001 ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 1.7 இலட்சத்தை விட 88 விழுக்காடுகள் அதிகமாகும். இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.  எந்த மதமாக இருந்தாலும் பிற்போக்காக இருப்பதில் பெரிய வேறுபாடு இல்லை. இதில் கூடுதலாக முசுலீம்கள் பிற்போக்கான நடவடிக்கைகளை பின்பற்றுவதாக உதார் விடும் இந்துமதவெறியர்களே இந்தயாவின் பெண்ணடிமைத்தனத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர்.

இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.
இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.

இந்தியாவில் ஆண்-பெண் பாலின விகித வேறுபாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரியானாவில் குழந்தை பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 834 பெண்களாகவும், அதுவே பஞ்சாப்பில் 846 ஆகவும் இருக்கிறது. புள்ளிவிவரங்களில் சிற்சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்தியா முழுதும் இதே அவலநிலைதான். குறிப்பாக பார்ப்பனிய இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் வட இந்திய (இந்து பேசும்) மாநிலங்களே பெண்களை ஒடுக்கி ஆளும் காட்டுமிராண்டித்தனத்தில் முன்னணியில் இருக்கின்றன. பெண்ணை தாயாக போற்றும் இந்துத்துவ மரபின் உண்மை முகம் இதுவே.

இந்தியப் பெண்களில் 1.9 கோடி பேர்கள் ஏழு குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே 10 ஆண்டுகளை உத்திரப்பிரதேசப் பெண்கள் செலவிடுகின்றனர். உத்திரபிரதேச மக்களின் சராசரி ஆயுட்காலமான 60 ஆண்டுகளில் ஆறில் ஒரு பங்கு இப்படியாக வீணாகிறது.

பெண்களுக்கு கிடைக்கும் உயர் கல்வியறிவு குழந்தைப்பிறப்பு விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தாக்கத்தைச் செலுத்துகிறது. பட்டதாரியாக உள்ள பெண்களின் குழந்தைப் பிறப்பின் விகிதம் 1.9 ஆக இருக்கும் அதேநேரத்தில் கல்வியறிவு மறுக்கப்பட்ட பெண்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் 3.8 ஆக இருக்கிறது.

பெரும்பாலான இந்தியப்பெண்கள் பள்ளிப்படிப்பை முடித்து பட்டதாரியாவதற்கும் பணிக்குச் செல்வதற்கும் இந்தியச்சமூகத்தில் நிலவும் சாதி,மத மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் தடையாய் இருக்கின்றன. இந்தியாவின் நகரங்களில் நூற்றில் 14 பெண்களும் கிராமபுறங்களில் நூற்றில் ஒருப்பெண் மட்டுமே 12 ம் வகுப்பை முடிக்கிறார்கள் என்று தனியார்த் தொண்டுநிறுவனத்தின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

பீகார், இராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள், பெண்களின் கல்வியறிவில் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. 2010-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி இந்தியப்பெண்களின் சராசரி பள்ளிவாழ்க்கை 4.1 ஆண்டுகளாகவும் ஆண்களின் சராசரி பள்ளிவாழ்க்கை 6.1 ஆண்டுகளாகவும் ஆகவும் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் மேட்டுக்குடி கல்விக்காக இந்திய அரசு செலவழிக்கும் பணத்தை ஒப்பிட்டு பாருங்கள்!

ஐக்கியநாடுகளுக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்(UNESCO) தகவலின்படி பெண்குழந்தைகளின் வருகைப்பதிவு தொடக்கப்பள்ளியில் 81 விழுக்காடாக இருக்கிறது. அதுவே இரண்டாம் நிலைப்பள்ளிகளில் 49 விழுக்காடுகளாக தேய்ந்துவிடுகிறது. சமூகப்பொருளாதர ஏற்றத்தாழ்வு சீரழிவில் சிக்கித்திணறும் இந்தியச்சமூகத்தில் பாலின வேறுபாடு சிறுவர்களின் கல்வியையும் விட்டுவைப்பதில்லை. பெண்கள் வேலைக்கு போகக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவரும், சங்கரசாச்சாரிகளும், வகாபிய மதவெறியர்களும் பத்வாக்களை விதிப்பதின் சமூக அவலமே மேற்கண்ட நிலை.

15 வயது முதல் 25 வயது வரையிலான இந்தியப்பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் படிப்பறிவு மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்ற ஒரு பொது இலக்கை அடைவதில் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் கூறுகிறது.

மோடியின் ஆட்சி ஆடி கார் கிடைக்குமிடமாக இந்தியாவை மாற்றியிருக்கிறதே அன்றி பெண்கள் முன்னேறும் நாடாக மாற்றவில்லை! மூச்சுக்கு மூச்சு பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண்களுக்கு கழிப்பறைகள் என்று உச்சாடனம் செய்யும் ஆளும் வர்க்கம் நம் நாட்டின் சரிபாதி மக்களான பெண்களை எவ்வளவு கொடிய நரகத்தில் தள்ளியிருக்கின்றன என்பதற்கு இவ்விவரங்களே சான்று!

இந்துமதவெறியர்களின் இருப்பு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை பெண்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் ஒழிப்பு போரில் பெண்கள் படையாக கிளம்பி வரவேண்டும்!

– சுந்தரம்

செய்தி ஆதாரம்:
Uttar Pradesh, Bihar, Rajasthan: Worst States For Women, J&K Catching Up
Centre launches scheme for pregnant women 13 days after PM Modi moots idea at rally
16,000 ‘illegal’ hysterectomies done in Bihar for insurance benefit30% women married under age 18
19 Million Women In India Have 7+ Child Births
84% Of 12 Million Married Children Under 10 Are Hindus
Uttar Pradesh, Bihar, Rajasthan: Worst States for Women, J&K Catching Up

காவிரியை அழிக்கும் காவி மேலாண்மை வாரியம்

0

று என்பது
பயன்பாடு மட்டுமா?
பண்பாடும் கூட.

Cauveryஆறு காய்ந்தால்
ஊர் காயும்
உறவு காயும்,
ஒவ்வொரு செடி, கொடி
பேர் காயும்,
தாவரம் அண்டிய
பல்லுயிர் மாயும்.

மரமென ஒன்றிருந்தால்
வந்து
பறவைகள் கூடும்,
நிழலிடை அறிமுகத்தால்
மனித உறவுகள் நீளும்.

மரங்களின் வேர்வந்து
நதியும் பொசியும்
நதியின் தோள்வந்து
மரம் நிழல் கசியும்
இயற்கையின்
இயங்கியல் உறவில்
பல மனங்கள்
இணையும்!

cauvery-delta-sliderஆறு அற்றுப்போனால்
மரங்கள் பட்டுப்போகும்
மரம் பட்டுப்போனால்
மழைஅற்றுப்போகும்
மழைஅற்றுப்போனால்
ஊர் நிலையற்றுப்போகும்
ஊர் நிலையற்றுப்போனால்
உறவுகள் கிளை அற்றுப்போகும்.

மண்ணுள் விரவி
கடல்நீர் உவர்ப்பை
தன்னுள் தகர்த்து
விளைநிலம் பெருக்கி
விழையும் தாய், தந்தை
தமக்கை, மாமன்,
பெயரன், பெயர்த்தி
உறவுகள் செழிக்க
காவிரி வேண்டும்!

ஆடிப்பெருக்கில்
கலந்த மஞ்சளை
தேடித்தழுவி
செவுள்களில்
திருப்பித்தரும்
சிறுமீன்கூட்டம்
ஈரம் தேடித்தேடி
கருமணல் துளைத்து
துடித்துச் சாவது
ஊர்மரணத்தின்
ஆழ் குறியீடு!

cauvery-parchedகாவிரி இழந்தோம்
கலை இழந்தோம்….
தண்ணீரைத் தவிர
மற்ற எல்லாம் வருகிறது
காவிரியில்

தண்ணீர் வரும் போது
வருகிறது கழிவு
தண்ணீர் வராதபோது
சு. சாமி, ஆர்.எஸ்.எஸ்.
சமஸ்…

பழங்குடித்திராவிடர்
பராமரித்த அணைகளை
‘அம்பை விட்டு உடை’ – என்று
இந்திரனிடம் வேண்டிய
ஆரிய ரிக் வேத ஓதல்கள்
மாறிய பொருளில்
ரீ ரிக்கார்டிங் ஆகின்றன
இப்போது –
‘அணையை அடை’!

Subramanian-Swamy_1
கடல்நீரை குடிநீராக்கு – என்பது சு. சாமியின் திமிர்வாதம்

உரிமையைக் கேட்டால்
போய்
கடல்நீரை குடிநீராக்கு – என்பது
சு. சாமியின் திமிர்வாதம்,
கேட்பதற்கே
தமிழினத்திற்கு தகுதியில்லை – என்பது
சமஸ் திமிரின் பிடிவாதம்.

அனல் வாதம், புனல் வாத்ததால்
அன்று சமணர்கள் கொலை
ஆர். எஸ். எஸ். பரிவாரத்தால்
இன்று காவிரிக்கொலை!

காவிரி மேலாண்மை வாரியத்தை
மட்டுமல்ல
காவிரியையே அழிக்கும்
காவி மேலாண்மை வாரியம்.

நீரிழிவுதுடைக்க
பேரழிவு தடுக்க,
தடம் அழிக்க வரும் பகையை
குறிவைத்து
கரை உடைக்கும் காவிரி
நம்மிடம் பொங்கட்டும்!

– துரை. சண்முகம்

Indian Constitution and Secularism

0

apsc

Ambedkar-Periyar Study Circle
(An independent student body recognized by IITMadras)

Indian Constitution and Secularism

 

 

Every now and then we can hear the cry for “Uniform Civil Code” being raised by the Hindutva leaders. More recently they have re-initiated their propaganda about the need for uniform civil code. The hindutva forces give uniform civil code an importance equal to what they give for the Ayodhya issue, as they believe that it would take them to their goal of Hindu Rashtra. By targeting the polygamy and triple talaq practices of the Muslim men, they are trying to portray the Hindu personal law as more progressive.

civil-code-1
பொது சிவில் சட்டம் குறித்த புதிய கலாச்சாரம் வெளியீட்டு நூலின் அட்டைப் படம்

“If India is a true secular state then why not bring a civil code that is common for all Indians” is the question put forth by the allies of Hindutva, and this is the question that their opponents always wish to skip from answering. Hence the Hindutva forces conclude that, this is pseudo-secularism and in fact this argument makes most of the ‘Hindus’ to think so. For this purpose they put forth a fraudulent description for secularism as “To treat all religions equally”. But the true meaning of secularism is “To forbid any religion from controlling the government, its administration and the civil society”.

The question here is whether the Indian constitution and the judiciary is truly secular? The answer for this question would eventually be ‘No’, if we take a look at the recent supreme court verdicts on most of the sensitive issues that took national attention. It has been proved in many occasions that the Articles 25 and 26 of the constitution that speaks about the Freedom of Religion, Religious Belief and Religious Institutions can be interpreted and used in favor of implementing “Sanatana Dharma” over the demands for social justice.

Ayodhya case is an apt case which shows, how these Articles in the Indian Constitution can be effectively used in favor of Hindutva Propaganda. Not only the 2010 Allahabad HC verdict that fixed the exact birth place of Ram at the disputed Ayodhya site, but also the previous verdicts in the same case by the lower courts were based on these Articles. The 1949 verdict that allowed entry to perform daily worship for the Idols that were placed inside the Mosque by the Hindu Nationalists, restrained Muslims from entering, based on the above secular Articles from the Indian Constitution. In 1992, when the Babri Masjid was demolished the Hindutva groups had in fact got permission for assembling near the disputed site on the pretext of performing bhajans. Permission for the so called bhajan on December 6 was in fact given by the supreme court, and this too was based on the Articles in Indian Constitution.

common-civil-code-2Same is the case with Afzal Guru, as stated in the Supreme Court judgment, he was awarded capital punishment to satisfy the collective conscience of the society, though there was no direct evidence amounting to criminal conspiracy and all evidences against him were circumstantial. And the collective conscience of the society that was mentioned in the Supreme Court verdict is in fact the Hindu conscience that was crafted by the Hindutva propaganda and the Afzal Guru was hanged to satisfy this Hindu conscience.

Last year, a request by a bunch of Non-Brahmin, archaka students from Tamilnadu, to be appointed as temple priests was turned down by Supreme Court. The verdict in fact said Non-Brahmins can also be temple priests, but only if it is not against the Agamas. While media reports proclaimed that the supreme court has ordered in favor of the students, nobody bothered to point out that if such an appointment is made, then it can be easily proved that it is against Agamas and the appointment can be cancelled by vested Brahminical interests.

The Ram Sethu project was stalled with the court accepting Puranas as evidence against the scientific reasoning and the then DMK government of Tamilnadu faced the ire of Supreme Court for being rational. Same happened with the Chidambaram temple case where Article 26 was used to handover the temple and its properties to the corrupt Dikshitars who were actually looting this public property.

uniform-civil-code-2Though the preamble to the Constitution of India states that it is secular, there is no clear definition for religion and secularism in the Indian Constitution and the Supreme Court’s definition for religion or religious beliefs in its judgments is a polar opposite to the true meaning of Secularism.

We can cite many such cases, of different backgrounds, verdicts from different courts, but all the verdicts have one thing in common, the psychology that binds these verdicts comes from the Upper Caste Hindu Mentality. The Indian Constitution, the Indian Criminal Law and the Indian Penal Code all exists but in papers. It is the Hindu conscience that rules the heart of the Indian judiciary.

Indian constitution and secularism

Indian Constitution and Secularism
Talk By Justice D. Hari Paranthaman

Justice D Hari Paranthaman is a retired judge of the Madras High Court. After graduating from the Madras Law College, as a lawyer he became very active in fighting cases in support of workers and also took part in many democratic struggles against the corruption within the judicial system and against casteism and communalism. During his tenure as High Court judges from 2009 to 2016, he gave many judgements establishing social justice and protecting the rights of oppressed people including women, dalits, loan-burdened students from poor families and low-level workers.

Venue : HSB 356
Time : 26th Oct, 5:15 pm

apsc.iitm@gmail.com
apsc@smail.iitm.ac.in