இமயமலையின் அடிவாரத்தில், பசுமையான பள்ளத்தாக்குகள் நிரம்பிய மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங், சிலிகுரி மாவட்டங்கள் பட்டினிச் சாவுகள் விழும் மரணப் பள்ளத்தாக்குகளாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இன்றுவரை அப்பகுதியில் செயல்பட்டு வந்த 20-க்கும் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டதால், அவற்றில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 150 பேர் பட்டினியால் மாண்டுள்ளனர். சுமார் ஒரு இலட்சம் பேர் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டதால் பட்டினிக்கும் சாவின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள்
உலகப்புகழ் பெற்ற டார்ஜிலிங் டீயை ஏற்றுமதி செய்யும் எஸ்டேட் முதலாளிகள் கோடிகளில் புரள, பழங்குடியினத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களோ நாளொன்றுக்கு வெறும் 122 ரூபாயை மட்டுமே கூலியாகப் பெற்று வறுமையில் உழல்கின்றனர். தொழிற்சாலை நிர்வாகத்தால் பல பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிக் கொடுக்கப்பட்ட சிதிலமடைந்த குடியிருப்புகளில்தான் இவர்கள் குடும்பத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இலட்சக்கணக்கான தொழிலாளர் வாழும் எஸ்டேட் பகுதிகளில் அரசு நடத்தும் ஒரு ரேஷன் கடையைக்கூட நீங்கள் கண்ணில் காண முடியாது. தான் நேரடியாக நிறைவேற்ற வேண்டிய அந்தப் பொறுப்பைக்கூட எஸ்டேட் முதலாளிகளிடம் தூக்கிக் கொடுத்து வைத்திருக்கிறது, அரசு.
இதுதான் தேயிலைத் தோட்டங்களும், தொழிற்சாலைகளும் மூடப்படுவதற்கு முன்பிருந்த நிலைமை. தற்போது தோட்டங்கள் மூடப்பட்டுவிட்டதால், சம்பளம் மட்டுமல்ல; தோட்ட முதலாளிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த ரேஷன் பொருட்கள் கிடைப்பதும் நின்றுவிட்டது. இதனால் தேயிலை மலர்களையும், காட்டுக் கிழங்குகளையும் உண்டு உயிர் வாழ வேண்டிய அவலத்தைத் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்கொண்டு நிற்கின்றன. எஸ்டேட் மோட்டார்கள் நின்றுபோனதால், மலை ஊற்றுகளில் கிடைக்கும் தண்ணீர்தான் இப்பொழுது குடிநீர். ரேஷனும், குடிநீருமே இல்லாதபொழுது மின்சாரம், மருத்துவ வசதி போன்றவற்றையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்கவே முடியாது. தொடர்பட்டினி காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் காசநோய் உள்ளிட்ட உயிரைக் குடிக்கும் நோய்களின் பிடியில் சிக்கி, சாவின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் குழந்தைகள்தான்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் குழந்தைகள்தான். தங்களது குழந்தைகள் தங்களோடு இருந்தால் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்பதால், தொழிலாளர்கள் தமது குழந்தைகளை சிக்கிம் போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு வீட்டு வேலை செய்ய அனுப்பி வைக்கின்றனர். அங்கு அக்குழந்தைகளுக்கு அரை வயிறு கஞ்சியாவது கிடைக்கும்; அங்கிருந்து அந்தப் பிஞ்சுகள் அனுப்பி வைக்கும் தொகையைக் கொண்டு தமது குடும்பமும் உயிர் பிழைத்துக் கொள்ளும் என்ற பரிதாபகரமான நிலைதான் தொழிலாளர்களின் குடும்பங்கள் அனைத்திலும் தற்பொழுது காணப்படுகிறது.
தொடர்ந்து பட்டினி கிடப்பதால் உடலின் உள் பாகங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயலிழந்து (Multiple Organ Disorder) தொழிலாளர்கள் மிகக் கொடிய முறையில் மரணமடைந்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில அரசின் தொழிலாளர்களுக்கான சட்டமன்ற நிலைக் குழு தொழிலாளர்களின் அகால மரணத்திற்குப் பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுதான் காரணம் என உறுதி செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உணவு பாதுகாப்புக்கான சிறப்பு ஆணையர் ஹர்ஷ் மந்தேர், தொழிலாளர்களின் இந்த அவல நிலையை நேரில் சென்று விசாரித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். ஆனால், இவ்வுண்மைகளை அப்படியே மூடி மறைத்துவிட்டு, பட்டினிச் சாவுகளே நடைபெறவில்லை என மேற்கு வங்க அரசு சாதிக்கிறது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 283 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 10 இலட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தேயிலைத் தோட்டத் தொழிற்சாலைகள் இதுபோல மூடப்படுவதும் மேற்கு வங்கத்திற்குப் புதிதல்ல. 2003-04 ஆண்டுகளில் 30 தோட்டங்கள் மூடப்பட்டன; 2010-11 ஆம் ஆண்டுகளில் 15 தோட்டங்கள் மூடப்பட்டன. இவ்வாறு தோட்டங்கள் மூடப்படுவதும், தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போவதும் சி.பி.எம். தலைமையில் நடந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியிலும் நடந்தது. மம்தா ஆட்சியிலும் தொடர்கிறது.
தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளுள் 12 தொழிற்சாலைகள் கௌரி பிரசாத் கோயங்காவின் டங்கன் குழுமத்திற்குச் சொந்தமானது. இந்த எஸ்டேட்டுகளைத் தவிர, அக்குழுமத்திற்கு ஆந்திர உர நிறுவனம், ரயில்வே உதிரிபாக உற்பத்தி நிறுவனம், மருந்து உற்பத்தி நிறுவனம் எனப் பல நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. இக்குழுமம் தேயிலைத் தொழிற்சாலை மூலம் கிடைத்த இலாபத்தை மற்ற தொழில்களுக்குத் திட்டமிட்டே மடைமாற்றியதன் மூலம் தேயிலைத் தொழிற்சாலைகளை நசிந்துபோகச் செய்துவிட்டு, கொழுந்து தேயிலையின் சந்தை விலை குறைந்து போனதால்தான் தங்களது நிறுவனம் நட்ட மடைந்து விட்டதாக நாடகமாடி வருகிறது.
அரசையும் தொழிலாளர்களையும் ஏமாற்றிக் கொள்ளையடித்த டங்கன் குழுமத்தின் தலைவர் ஜி.பி.கோயங்கா
இது மட்டுமின்றி, தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை அரசுக்குச் செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறது, டங்கன் குழுமம். இக்குழுமம் 2013-ஆம் ஆண்டில் மட்டும் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கி 22.5 கோடி ரூபாய். மேலும், புதிய தேயிலைச் செடிகளை நடப்போவதாக் கூறி, அரசிடமும், தேயிலை வாரியத்திடமிருந்தும் பல கோடி ரூபாய் கடன் பெற்று, அப்பணத்தையும் வேறு தொழில் களுக்கு மாற்றி அரசையும் ஏமாற்றி இருக்கிறது.
இப்படி அரசையும், தேயிலை வாரியத்தையும், தொழிலாளர்களையும் ஏமாற்றுவதும், மோசடிகளைச் செய்வதும் டங்கன் குழுமத்தில் மட்டும் நடப்பதல்ல; கிட்டத்தட்ட எல்லா தேயிலைத் தோட்டங்களிலும் இதே போன்ற திருட்டுத்தனங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த ஊழல், மோசடி, திருட்டுக் குற்றங்களுக்காகவே இத்தனியார் தொழிற்சாலைகளை அரசுடமையாக்க முடியும்.
அது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்துதான் இந்தத் தேயிலைத் தோட்டங்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான தோட்டங்களின் குத்தகைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அவை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. தேயிலைச் சட்டப்படி, தனியாரின் பிடியிலுள்ள இத்தகைய தோட்டங்களை அரசே கையகப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், மைய, மாநில அரசுகளோ இந்தத் திருட்டுக் கூட்டத்தைக் காப்பாற்றுவதையும் கைதூக்கிவிடுவதையுமே தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
பட்டினியால் சாகும் தொழிலாளர்களைக் காப்பாற்ற ஒரு ரேஷன் கடையைத் திறக்க முன்வராத அரசு, முதலாளிகளைக் காப்பாற்ற முந்திக்கொண்டு செயல்படுகிறது. தோட்ட முதலாளிகள் அழைப்பை ஏற்று கொல்கத்தாவிற்கு ஓடோடி வந்து அவர்களைச் சந்தித்த மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மோசடி பேர்வழிகளுக்கு பொதுத் துறை வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யும் தரகு வேலை பார்த்துத் திரும்பியிருக்கிறார்.
முதலாளிகளின் பைகள் நிரம்பினால், தொழிலாளர்களின் வயிறும் நிரம்பிவிடும் என்ற இந்த நயவஞ்சகக் கதையை நம்மை நம்பவும் சொல்லி, இதுதான் வளர்ச்சி என்ற திருநாமத்தையும் அதற்குச் சூட்டியிருக்கிறது, இந்தியக் ‘குடியரசு! தொழிலாளர்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற முன்வராத அரசிற்கு, அவர்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வக்கற்ற அரசிற்கு, நம்மை ஆள்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
தேர்தல் பணிகள் கண்காணிப்பு பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் புகாரின் போரில் தூத்துக்குடியில் தேர்தல் ஆணையத்தை விமர்சனத்திற்குள்ளாக்கும் விதத்தில் லித்தோ போஸ்டர் ஒட்டிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஆதரவாளர் தோழர் குமார் என்பவர் 15-04-2016 அன்று காலை 5-10 மணியளவில் கைது செய்யபட்டுள்ளார்.
நல்லவர்களை தேர்வு செய்யச் சொல்லும் தேர்தல் ஆணையமே! நல்லவர்கள் யார்? நல்ல கட்சி எது? சொல்ல முடியுமா?
வேட்பாளர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று தெரியும்; யாருக்கு தேவை விழிப்புணர்வு? தேர்தல் ஆணையத்திற்கா? மக்களுக்கா?
நேற்றுவரை இலஞ்சத்தில் ஊறித்திளைத்தவர்கள் தான் தேர்தல் அதிகாரிகள்! பறக்கும் படை! இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியுமா?
தேர்தலுக்காக கோடி கோடியாய் அமைச்சர்கள் குவித்து வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்யமுடியுமா?
இந்த வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி கார்னரில் 15-04-2016 காலை சுமார் 5.10 மணியளவில் ஒட்டிக் கொண்டிருந்த தோழர் குமாரை பறக்கும் படையைச் சேர்ந்த தாசில்தார் ராமசுப்பு குழுவினர் காவல்துறையுடன் வந்து போஸ்டர் ஒட்ட விடாமல் தடுத்துள்ளனர்.
அவர்கள் நமது தோழரிடம் “என்ன போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்” எனக் கேட்கவும் தோழர் குமார், “தேர்தல் ஆணையம் செயல்பாடு பற்றி எமது அமைப்பின் போஸ்டர்” என்று கூறியுள்ளார்.
போஸ்டரை படித்து பார்த்த பறக்கும் படையினர் “நீங்கள் ஏன் இப்படி வாசகங்கள் அடங்கிய ஒட்டுகிறீர்கள்” என்று மிரட்டி உள்ளனர்.
அதற்கு நமது தோழர், “ஆமாம், உண்மையைத்தான் நாங்கள் எழுதியுள்ளோம். எங்கள் கருத்தை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் பொய் இருந்தால் எந்த வகையில் என்று கூற முடியுமா?” எனக் கேட்கவும்,
நேற்றுவரை இலஞ்சத்தில் ஊறித்திளைத்தவர்கள் தான் தேர்தல் அதிகாரிகள்! பறக்கும் படை! இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியுமா? (கோப்புப் படம்)
பறக்கும் படையினர் “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எங்களுக்கென்று மேலதிகாரிகள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் சொற்படிதான் நடக்க வேண்டி இருக்கும், தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது இது மாதிரியான போஸ்டர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் நீங்கள் மேற்கொண்டு போஸ்டர்களை ஒட்டக் கூடாது, இங்கேயே இருங்கள். நாங்கள் மேலதிகாரியிடம் கேட்டுவிட்டு என்ன செய்யலாம் என்று சொல்கிறோம்” எனக் கூறிவிட்டு தாசில்தார் செல்போனில் சுவரொட்டியை படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.
15 நிமிடத்திற்கும் மேலாக யார் யாருக்கோ செல்போனில் பேசியுள்ளார். பின்னர் நமது தோழரிடம், “தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சென்று விசாரிக்க வேண்டும்” என்று நைச்சியமாக பேசி கூட்டிச்சென்றுள்ளனர்.
வடபாகம் காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்ற பறக்கும் படையினர் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்து என்பவரிடம் தோழரை ஒப்படைத்துள்ளனர். பின்னர் தேர்தல் அதிகாரியான தாசில்தார் ராமசுப்பு கொடுத்த எழுத்துமூல புகாரின் பேரில் தோழர் மீது குற்ற வழக்கு எண். 397/2016 பிரிவுகள், 127A (1) RP Act (Representation of people act 1951) 3 of TNPPOPD Act (Tamilnadu Prevention of Public open places disfigurement Act) மற்றும் 7(1) CLA Act (Criminal law amentment Act)-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முற்பகல் 12.10-க்கு ஆஜர்படுத்தினார்கள்.
கைது செய்யப்பட்ட தோழர் குமார் உடனே ஜாமினில் வரக்கூடாது என்பதற்காக உடனடியாக பிணையில் வர முடியாத 7(1) CLA Act வேண்டுமென்று தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தியதாக PRPC தூத்துக்குடி மாவட்டத் தலைவரும் வழக்கறிஞருமான அரிராகவனின் இருசக்கர வாகனத்தையும் இந்ந வழக்கில் சேர்த்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். தோழரை பிணையில் எடுப்பதற்கு PRPC வழக்கறிஞர்கள் ஆஜராகி பிணை மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரி தாசில்தார் ராமசுப்பு அவரது புகார் மனுவில், இந்த போஸ்டரை படிக்கும் விஷமிகள் அரசு சொத்துக்களை சேதப்படுத்தவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஏதுவாகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பொதுமக்களை தூண்டும் விதமாக வாசகங்கள் அடங்கிய போஸ்டர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்தமுறை சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஆயிரக்கணக்கான வழக்குகளையும் இந்த தேர்தலுக்காக நூற்றுகணக்கான வழக்குகளையும் தற்போது வரை பதிவு செய்துவரும் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஒருவரை கூட கைது செய்யவில்லை. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் அரசியல்வாதிகள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் எல்லாம் பிணையில் வரக்கூடிய சாதாரண வழக்குகளாகும். ஆனால் மக்கள் இயக்கங்கள் புரட்சிக்கர அமைப்பை சேர்ந்த தோழர்களின் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் உடனடியாக பிணையில் வரமுடியாத சில பிரிவுகளையும் சேர்த்தே பொய்யாக பதிவுசெய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
நமது சுவரொட்டியை காவல் துறையினரும் அரசு மற்றும் நீதித்துறை அலுவலர்களும் அவருடைய பணிக்கு அப்பாற்பட்டு ஆதரித்து தோழர் குமாரிடமும் PRPC வழக்கறிஞர்களிடமும் பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் வழமையாக கூறுவதுபோல நாங்கள் அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் அரசு உத்தரவுபடிதான் நடந்துகொள்ள முடியுமென்று கூறியுள்ளனர்.
100 சதவீதம் மக்கள் ஓட்டுபோட அரசு கருத்து சொல்லும்போது அதில் மக்கள் கருத்து சொல்லக்கூடாதா? மாணவர்களையும், மகளிர் சுயஉதவி குழுக்களையும் பேனர், போஸ்டர், பிட்நோட்டிஸ் என்று சகலத்தையும் கட்டாய ஓட்டு பதிவுக்கு பயன்படுத்தும்போது மக்கள் இயக்கங்கள் அதில் கருத்து சொல்ல போஸ்டர், பிட் நோட்டீஸ்களை பயன்படுத்தக் கூடாதா? அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஊழல் வாதிகள் ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலில் இவர்களின் தேர்தல் விதிக்கு விரோதமான செயல்களை கட்டுப்படுத்த நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் நடவடிக்கை எடுக்கிறது என்று படித்தவர் முதல் பாமரர் வரை நம்பவைக்கப்படுவதை நமது இந்த போஸ்டர் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி வாயிலான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சாட்சியாகும்.
தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று அரசு பொய்வழக்கு போட்டு மிரட்டுவதை போல தேர்தல் ஆணையமும் இயக்கங்கள் அமைப்புகள் மீது அரசாங்கம் போலவே கையாளுகிறது. தமிழக அரசு பாழடைந்த ஓட்டை உடைசல் பஸ்களுக்கு 1 to 1, Point to point, EEE மற்றும் Ultra Deluxe என்று பெயர் வைப்பதை போல இந்திய அரசும் லஞ்சபேர்வழிகள், ஊழல் அதிகாரிகள் போன்றோரை வைத்து தேர்தல் ஆணையம் என்று பெயர் வைத்து தேர்தல் அதிகாரிகளை நேர்மையானவர்கள் என்று நம்ப வைக்க அரும்பாடுபடுகிறது.
வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு கட்சி தலைவர்கள், இயக்கங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அலுவலர்களின் பாரபட்சமான செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். இப்படிப்பட்ட செய்திகள் நாளேடுகளில் பரவலாக காணக்கிடைக்கின்றன. தேர்தல் ஆணையத்தை இதுமாதிரி விமர்சனம், கேள்வி கேட்பவர்களை எல்லாம் சிறையில் தள்ளிவிட்டு அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாகவும் ஜனநாயகத்தை மக்கள் மதித்து அதிகமான சதவீதம் ஓட்டு பதிவு நடந்ததாக பொதுமக்களை நம்ப வைப்பதற்காக மேற்கண்ட அடக்குமுறைகளை அரசு கையாளுகிறது.
இதிலிருந்தே தெரியவில்லையா! யாருக்காக தேர்தல்? யாருக்காக தேர்தல் ஆணையம்? இந்த நடைமுறையில் எங்கே இருக்கிறது ஜனநாயகம்? எங்கே இருக்கிறது கருத்துரிமை?
தேர்தல் ஆணையத்தின் போலி ஜனநாயக வெற்று கூச்சலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தூத்துக்குடி மாவட்டக்கிளை
1. மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி : டாஸ்மாக் ஜனநாயகத்தை எதிர்க்கும் தேசத்துரோகிகள்!
2. நரகலில் நல்லரிசி தேடாதீர்!
3. போயசு தோட்டம் : ஊழலின் தலைமைச் செயலகம்! தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயா, ஊழலில் யாரும் எட்டவே முடியாத உச்சத்தைத் தொட்டு விட்டார்.
4. தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சம்பபடுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பார்ப்பனக் கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.
5. மக்கள் நலக் கூட்டணி : அம்மா, அம்மா! எங்களை ஏன் கைவிட்டீர்? மக்கள் நலக்கூட்டணி, அ.தி.மு.க.வின் பி டீம் என அழைக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை வை.கோ, போலி கம்யூனிஸ்டுகளின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.
6. நேற்று அண்ணாயிசம்! இன்று அண்ணியிசம்! எத்தனை நாற்காலிகள், எத்தனை பதவிகள், எத்தனை பணம் என்பதைத் தவிர, வேறு எந்தவிதமான கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாத பிழைப்புவாதிகளின் கூடாரம்தான் பிரேமலதா இயக்கும் விஜயகாந்தின் தே.மு.தி.க.
7. தோற்றுப்போனது அரசுக் கட்டமைவு! தேர்தல் தீர்வைத் தராது!! தேர்தலுக்குத் தேர்தல் மாறிமாறி வாக்களித்து ஆட்சிகளை மாற்றிய பிறகும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனும்பொழுது, இந்தச் செக்கு மாட்டுப் பாதையைப் பொதுமக்கள் ஏன் சுற்றிச் சுற்றி வர வேண்டும்?
8. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் படுகொலைகள் : சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா? சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ‘கீழே’ சாதி மெல்ல மெல்ல அழியத்தான் செய்கிறது. ஆனால், இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் ‘மேலிருந்து’ சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.
9. டார்ஜிலிங் டீயில் பிணவாடை! மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் டீயை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் சட்டவிரோதமான முறையில் மூடப்படுவதால், கடந்த ஓராண்டுக்குள் 150 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால், அதனால் ஏற்பட்ட கொடிய நோயால் மாண்டு போனார்கள்.
10. பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா? மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
தேசம் என்பது சாமியா, மடிசார் மாமியா?
11. அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்! மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி “அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
அம்பேத்கரின் 125 வது பிறந்த தினத்தை ஒட்டி சென்னை ஐ.ஐ.டி, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் சார்பாக ஏப்ரல் 14-ம் தேதியில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் பேராசிரியர் ராம் புனியானி, “மதவாத தேசியத்திலிருந்து அம்பேத்கரின் கொள்கைகளை விடுதலை செய்வோம்” என்ற தலைப்பில் பேசுவதாக தீர்மானிக்கப்படிருந்தது. இதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் சில நிபந்தனைகளுடன் அனுமதித்திருந்தது.
ஆனால் 14 அன்று நிகழ்ச்சி துவங்கும் முன்னர் ஏழு பாதுகாலவர்கள் கருத்தரங்கம் நடக்கும் அரங்கின் வாயிலில் நின்று கொண்டனர். நிகழ்விற்கு ஐ.ஐ.டி அடையாள அட்டை இல்லாதவர்களை அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் அம்பேத்கர் குறித்து பேராசிரியரின் உரையை கேட்க வெளியிலிருந்து வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்..
அரங்கிற்கு வெளியே ராம்புனியானி பேசுகிறார்.
இந்த அடக்குமுறை குறித்து அ.பெ.வா.வ மாணவர்கள், ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் எதிர்ப்பு தெரிவித்தனர். “ஐ.ஐ.டி வளாக கருத்தரங்குகளுக்கு வெளியார்களை அனுமதிப்பதில்லை, இது ஏற்கனவே உள்ள விதி முறை” என்று இது வரை பின்றப்பற்றப்படாத ஒரு விதியை நிர்வாகம் முன்வைத்தது. ஐ.ஐ.டி வாளகத்தில் பல்வேறு மாணவர்கள் குழுக்கள் நடத்தும் எந்த ஒரு நிகழ்விற்கும் இது போன்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டதே இல்லை.
“நான்காவது தொழிற்புரட்சியை வழிநடத்தும் புதிய சிந்தனைகள்” என்ற தலைப்பில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இங்கெல்லாம் அடையாள அட்டையை கேட்டு யாரும் திருப்பி அனுப்பப்படவில்லை. அதே போல இந்துத்துவ ஆதரவு குழுக்கள் நடத்திய கூட்டங்களுக்கும் இந்த தடை இல்லை. “வந்தே மாதரம்” எனும் குழுவினர் கடந்த ஜனவரியில் நடத்திய கூட்டத்தில் பல்வேறு வெளிநபர்கள் கலந்து கொண்டாலும் ஒருவர் கூட வெளியாள் என்று வெளியேற்றப்படவில்லை.
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கும் மட்டும் இந்த பாகுபாடு ஏவப்படுகிறது. இதன் மூலம் ஐ.ஐ.டி நிர்வாகம் தன்னை கார்ப்பரேட்டுகளுக்கும், இந்துத்துவாக்களுக்கும் மட்டும் செயல்படுகின்ற நிறுவனமாக நிரூபித்திருக்கிறது. ஆரம்பத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் கூட்டத்திற்கு பெயரளவு அனுமதி அளித்த நிர்வாகம், அதில் நிபந்தனைகளாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்ககூடாது, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என்று மறைமுக தடையை ஏவியிருந்தது. இந்துத்துவ மாணவர்களோ அ.பெ.வா.வட்டம் தொடர்ந்து செயல்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பகிரங்கமாக மிரட்டலே விடுகின்றனர்.
எனினும் இவர்களது அடக்குமுறைகளை மீறி அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ஏராளமான ஐ.ஐ.டி மாணவர்கள் கலந்து கொண்டனர். வெளியிலிருந்து வந்த நண்பர்கள் பாதுகாவலர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இறுதியில் கூட்டம் அரங்கிலிருந்து வெளியே நகர்ந்தது. சாலையில் மாணவர்களும், வெளி நண்பர்களும் அமர்ந்திருக்க பேராசிரியர் ராம் புனியானி ஒரு மணிநேரத்திற்கும் மேலாக உரையாற்றினார்.
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் கூட ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் அவரைப் பேசுவதற்கு தடை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது இப்போது மட்டுமல்ல. அ.பெ.வா.வட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படித்தான் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.
இத்தகைய அராஜகமான நடவடிக்கையை ஏவிவரும் ஐ.ஐ.டி நிர்வாகத்தை அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் கண்டிக்கிறது. எதிர்காலத்திலாவது நிறுவனத்தின் நற்பெயரைக் காப்பாற்றும் வண்ணம் இத்தகைய நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்காது என்று நம்புகிறது.
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், ஐ.ஐ.டி, சென்னை.
DISCRIMINATION BY ADMINISTRATION AGAINST AMBEDKAR PERIYAR STUDY CIRCLE CONTINUES AT IIT MADRAS
To Commemorate the 125th Birth Anniversary of Dr.B.R.Ambedkar, APSC had organized a seminar on 14th of April, in which Prof. Ram Punyani was scheduled to deliver a speech on “Liberating Ambedkar’s ideology from Religious Nationalism” at the IC & SR auditorium inside IIT Madras.
We had got the required approval from the IIT management for this event, which was granted with some conditions like not to issue flyers since it is “a menace to habitat”, attached.
On 14th, shortly before the seminar was to begin, as per order of Dean of student, around 7 security personnel stood at the entrance of the auditorium and refused entry to people who didn’t have an IIT identity card. Due to this many admirers of Dr. Ambedkar who came to hear Prof. Ram Punyani’s speech were not able to attend the meeting and were sent back to their great disappointment.
We talked to the Dean of Students and Director; they replied “This is an old rule under which outsiders are not allowed for Institute lectures in IITM. This is due to environmental reasons.”
But, nobody knew such rule existed, sofar. This rule was not invoked for any of similar meetings or seminars held inside the campus by any other student group.
A recent seminar on “Innovations driving the fourth industrial revolution” by CEO of Switzerland based Robotic company, conducted inside the campus, had members from various corporate houses joining in and none of them were denied entry (there was no identity card verification).
Similarly, for seminars organized by pro-hindutva study circles, the management is not imposing any such restrictions. Recently in January this year, members of “Vande Matram” group organized a lecture on “Critiquing Contemporary Indology Studies” by Rajiv Malhotra which also took place with many outsiders attending. Not a single “operating procedure” was applied to them.
Only for APSC, management is showing this blatant discrimination. The management has once again proved that the Institute is not operating for the cause of common people but for corporates and Hindutva forces.
Right from the day we decided to have a seminar on Ambedkar’s birth day, the management started creating hurdles and we crossed them one after another. From compelling us not to conduct any cultural programmes to restraining us from issuing pamphlets regarding the event the administration did everything in its capacity to hinder us. Our study circle members were even threatened by a mob of more than 30 pro-hindutva students who warned of severe consequences if we continue to spread the thoughts of Ambedkar.
Not allowing outsiders for the talk was their last weapon. But a large number of IIT students participated and supported us. People from outside continued to argue with the security guards and with our faculty in charge to allow them inside the hall, with no avail. Finally, we decided to continue the talk outside of IC&SR auditorium. The speech continued there for more than an hour. IIT students and outside members welcomed our move of conducting the speech outside the auditorium.
It is very hard to digest that even during the 125th anniversary of Dr. Ambedkar, such discrimination continues and occupies the minds of the highly educated people of an institution like IITM. This is not an isolated incident; we have been struggling to conduct any such events from the date of formation of APSC; the restrictions increased even further after the re recognition of APSC.
APSC condemns the prejudiced, discriminatory and anarchic move of IITM administration towards curbing the activity of our study circle. We hope that similar actions of IITM admin will not take place in future atleast for the sake of the institute’s reputation!!
கன்னியாகுமாரி மாவட்டம், நுள்ளிவிளை-பேயன்குழி சந்திப்பு பகுதியில் அருகருகே செயல்பட்டு வரும் இரு டாஸ்மாக் சாராயக் கடைகளை உடனடியாக மூடுமாறு மக்கள் அதிகாரம் அமைப்பும், டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி அமைப்பும் 12.04.2016-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பேயன்குழி சந்திப்பு டாஸ்மாக் கடைகளினால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இக்கிராமங்களைச் சேந்த மக்கள் அனைவரும் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அத்தியாவசிய தேவை அனைத்திற்கும் டாஸ்மாக் கடைகள் அமைந்திருக்கும் இந்த சந்திப்பிற்குத்தான் வரவேண்டும். இக்கடைகள் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிற்குள்தான் தேவாலயமும் கோவிலும் நான்கு பள்ளிகளும் உள்ளன.
எந்நேரமும் குடிகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே காணப்படுகிறது இந்த பகுதி. பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவிகள் மற்றும் பெண்கள் எந்நேரமும் அச்சத்துடனேயெ கடந்து செல்லவேண்டிய நிலை. சாலை ஓரங்கள் மற்றும் அருகிலுள்ள கடைகளில் வைத்து குடிப்பதும், குடித்துவிட்டு ஆடையின்றி சாலையோரத்திலேயே அலங்கோலமாக கிடப்பதும், மாணவிகள்-பெண்களிடம் அநாகரிகமாக நடப்பதும், எப்போதும் கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டிருப்பதுமாக மொத்தத்தில் இது ஒரு அருவெறுப்பான பகுதியாக மாறிவிட்டது.
தொடர்ந்து பலஆண்டுகள் மனுக்கொடுத்தும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்தும் எவ்வித பலனும் கிடைக்காததால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என உணர்ந்த சுற்றுவட்டார கிராம பெண்கள் போராட்டத்திற்கு அணிதிரண்டனர். அதன்படி சென்ற வருடம் 15.10.2015-ம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 30 நாட்களுக்குள் கடையை மூடிவிடுவோம் என்று தாசில்தார் அன்றைய தினமே வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் 5 மாதங்கள் கடந்தும் எந்த பலனும் இல்லை. எனவே அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகினார் பெண்கள்.
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:
நுள்ளிவிளை காரங்காடு டாஸ்மாக்கினால் பாதிப்படையும் நுள்ளிவிளை, காரங்காடு, மூலச்சன்விளை, கட்டிமாங்கோடு, செருப்பங்கோடு, குசவன்குழி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்பெண்கள் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி என்னும் இயக்கத்தை உருவாக்கி அமைப்பாகத் திரண்டனர். தற்போது டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியும், மக்கள் அதிகாரமும் சுமார் ஒருமாத காலம் சுற்றுவட்டார கிராமங்களில் பிரச்சாரம் செய்தன. இப்பிராச்சாரத்தில் பெண்கள் பெருமளவு கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக 12.04.2016-ம் தேதி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அனுமதி வாங்கி போராட்டம் நடத்தி டாஸ்மாக்கை மூடமுடியாது, ஓட்டுப் போட்டு டாஸ்மாக்கை மூட முடியாது, டாஸ்மாக்கை மட்டுமல்ல எந்தவொரு பிரச்சனையையும் ஓட்டு போட்டு தீர்க்க முடியாது, போராட்டம் ஒன்றே தீர்வு என்று பிரச்சாரம் தீவிரமாக நடந்தது. போராட்டத்திற்கு முதல் நாளே கிராமம் கிராமமாக சென்று அச்சமூட்டியது போலீசு.
போராட்டத் தினத்தன்று காலையிலே திட்டமிட்டபடி பெண்கள் அணி அணியாக வர ஆரம்பித்தனார். வரும் வழியிலேயே பெண்களை தடுப்பதற்கு திட்டமிட்டு தோற்றுப்போனது போலீசு. போலீசின் தடைகளை மீறி திட்டமிட்டபடி கடையினை முற்றுகையிட்டனர் பெண்களும் மக்கள் அதிகார தோழர்களும்.
சிறிது நேரத்தில் கலைந்து சென்று விடுவார்கள் என்று நினைத்த போலீசுக்கு கடைகளை மூடும் வரை செல்லமாட்டோம் என்று மக்கள் உறுதியாக இருந்தது கலக்கத்தை ஏற்படுத்தியது. தற்காலிக பந்தலும் மக்களால் போடப்பட்டது.
சிறிது நேரத்தில் டாஸ்மாக் அதிகாரி வந்து பேசினார். கடையை மூன்று நாட்கள் தற்காலிகமாக மூடுகின்றொம் என்றார் அந்த அதிகாரி. மூன்று நாட்கள் மூடவா நாங்கள் போராடுகிறோம் என்று எதிர்கேள்வி எழுப்பியதை எதிர்கொள்ள முடியாமல் அமைதியாக சென்று விட்டார் அவர்.
நேரம் கடக்க கடக்க மக்கள் போராட்டம் வீரம் செறிந்ததாக மாறிக்கொண்டிருந்தது. ஒதுங்கியிருந்த பெண்கள், ஆண்கள் பலரும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மறுபுறம் அரசு நிர்வாகமும் போலீசின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அடுத்து வந்த ஆர்.டி.ஓ-விடம் , எங்கள் கோரிக்கை இரண்டு கடைகளை உடனே மூடவேண்டும் என்பது தான் என்று மக்கள் கூற நான் மேலதிகாரிக்கு எழுதுகிறேன் என்றார் ஆர்.டி.ஓ. நாங்கள் இப்படி பலமுறை ஏமாந்து விட்டோம் இனியும் ஏமாற மாட்டோம், கடையை மூட உத்தரவிடுங்கள், இல்லையென்றால் சென்று விடுங்கள், அதிகாரம் யாருக்கு உண்டோ அவர்களை வரச்சொல்லுங்கள் என்று பணிய மறுத்தனார் பெண்கள்.
இந்த ஆர்.டி.ஓ. தன்னை அலுவலகத்திற்கு காண வருபவர்களை எளிதில் சந்திக்காமல் திமிருடன் நடந்து கொள்வாராம். ஆர்.டி.ஓ., எஸ்.பி, ஏ.எஸ்.பி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் தெருவுக்கு இழுத்து வெயிலில் நிற்க வைத்து விட்டது இந்த உறுதிமிக்க போராட்டம். 100-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் , சுழல் விளக்கு பொருத்திய அதிகாரிகளின் வாகனங்கள் என்று அந்த பகுதியை போர்ககளம் போல மாற்றியது போலீசும் அரசும்.
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:
தேர்தல் நேரம் போராட அனுமதியில்லை கடையை மூட எங்களுக்கு அதிகாரமில்லை என்று ஏதோதோ பேசிப் பார்த்தனார் அதிகாரிகள். டாஸ்மாக்கை மூட தேர்தல் தடுக்கிறதென்றால் அந்த தேர்தலே எங்களுக்கு தேவையில்லையென மக்கள் இயல்பாக கூறியது தேர்தல் மயக்கத்திலிருந்த அதிகாரிகளை விழி பிதுங்க வைத்தது.
நேரம் செல்லச் செல்ல மக்கள் கலைய மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட போலீசு அவர்களை எளிதில் கைது செய்ய முடியாது என்பதையும் புரிந்து கொண்டது. உளவுத் துறை கைகாட்டியவர்களை குறிவைத்து அடித்து உதைத்து இழுத்து சென்று வண்டியில் ஏற்றினாலும் பெண்களை அவர்கள் நினைத்த மாதிரி கைது செய்ய இயலவில்லை. போராட்டத் தலைமை மற்றும் மக்கள் அதிகார தோழர்களையும் போலிசிடமிருந்து தங்களால் முடிந்தவரை காப்பாற்ற போராடினர் பெண்கள்.
பெண்கள் பலரையும் அடித்தும் இழுத்தும் கொண்டு செல்ல முயன்றார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மக்களை கைது செய்த போலீசுக்கு பெண்களை ஆண் போலிசு தொடக்கூடாதென்றோ, பணியில் இருக்கும் போது தனது பெயரை சட்டையில் தெரியும்படி வைக்க வேண்டுமென்றோ தெரியவில்லை.
கைது செய்து மண்டபத்தில் வைத்து மிரட்டி அனுப்பினால் அமைதியாக சென்று விடுவார்கள் என்று நினைத்து மனப்பால் குடித்த போலிசுக்கு அதிர்ச்சியூட்டியது மக்களின் முழக்கம்.
மண்டபத்தில் நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம், எங்கள் அங்க அடையாளங்கள், முகவரகளைத் தரமாட்டோம் என முடிவு செய்து அறிவித்தனர் மக்கள். உண்ணாவிரதம் அறிவித்ததும் கைதிகளின் உரிமையை நிலைநாட்டுவதற்காக போலிசு சரியான நேரத்திற்கு உணவு ஏற்பாடு செய்து மக்கள் முன் வைத்தது. அதை திரும்பிக் கூட பார்க்காத மக்கள் போலிசை எள்ளி நகையாடி நிலை குலைய வைத்தனர்.
பெண்கள்தானே, வீட்டில் ஆயிரம் வேலைகள் இருக்கும், நேரம் செல்லச் செல்ல கலைந்து சென்று விடுவார்கள் என்று மனப்பால் குடித்த போலிசுக்கும் நிர்வாகத்திற்கும் பீதியை ஏற்படுத்தியது மக்களின் உறுதி.
அதனால் மக்களை கலைய வைக்க தனது கைக்கூலிகளை துணைக்கு இழுத்தனர். பிறகு போராடுபவர்களின் உறவினர்கள், சில பாதிரியார்கள் என பலரையும் அழைத்து வந்தனர். ஆனால் அத்தனை பேரையும் திருப்பி அனுப்பினர் மக்கள்.
படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:
மதுவுக்கு எதிராக போராடும் எங்களோடு நிற்காமல் போலிசுக்கு துணையாக வேலை பார்க்கும் நீங்களெல்லாம் மக்கள் விரோதிகள் என்று பாதிரியார்களை அம்பலப்படுத்தி திருப்பி அனுப்பினர் மக்கள். அது மட்டுமல்ல இந்து, கிறிஸ்தவ பேதமில்லாமல் சாதி பாகுபாடு இல்லாமல் வேற்றுமைகளை கடந்து உழைக்கும் மக்களாக இணைந்து நடக்கும் போராட்டமாக இது பரிணமித்தது. வந்த பாதிரியார்களிடம் “இங்கு எல்லாம மத மக்களும் இருக்கிறோம், திரும்பிச் சென்று விடுங்கள்”என்று எச்சரிக்கவும் மக்கள் தயங்கவில்லை.
போராட்டத்திற்கு முந்தைய நாள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் தங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஊர்களில் செய்ததை இங்கு பாதிரியார்களும் செய்தனர். ஆனால் உழைக்கும் மக்கள் தங்களுக்கே உரிய முறையில் இரு இடங்களிலும் அவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தினர். நேரம் செல்லச் செல்ல மண்டபத்தினுள் மின்விசிறி விளக்குகளை அணைத்தது போலிசு. கழிவறைகளையும் அடைத்தது. ஆனால் மக்கள் எதற்கும் கலங்கவில்லை.
மாலை ஆறுமணிக்கு மேல் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் அமர சட்டம் அனுமதிக்காது என்று போராடியவர்களை பிடிக்க முயன்ற போலிசை “நாங்கள் போராளிகள், கட்டுப்பாடானவர்கள்” என்று போராட்ட தலைமை மற்றும் ஆண்களை தனியாக பிடிக்க நினைத்த போலிசின் சதியை புரிந்து கொண்டு மக்கள் கூறியதும் போலிசு வேறு வழியின்றி அமைதியானது. மண்டப நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பொறுக்கிகள் சிலரையும் மண்டபத்தில் அனுப்பியது போலிசு. அச்சுறுத்த முயன்ற அவர்களையும் மிரட்டி அனுப்பினர் மக்கள்.
மண்டபத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கா பெண்களும் ஆண்களும் அணிதிரண்டு டாஸ்மாக் கடைகளை மூடு என்று முழக்கமிட்டனர். அவர்களையும் அச்சறுத்த முயன்றனர். மண்டபத்திலிருந்து வெளியேறிய பொறுக்கிகள், கைக்கூலி பாதிரியார்கள் இங்கும் மக்களை மிரட்டினர். ஆனால் மக்களோ இங்கும் கரிபூசினர். கைது செய்கிறோம் என்று மக்களை கடுமையாகத் தாக்கிய போலிசை படம் பிடித்த பத்திரிகையாளரின் மொபைலை பிடுங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தது போலிசு. இதைக் கண்டித்து அன்று மாலை தக்கலையில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தேர்தல் நேரம் எங்களால் முடிவெடுக்க முடியாது என்று அடம்பிடித்த போலிசும் நிர்வாகமும் வேறு வழியின்றி தேர்தல் முடிந்த ஒரு மாத காலத்திற்குள் (ஜூன் 20-ம் தேதிக்குள்) இருகடைகளையும் மூடிவிட்டு இடம் மாற்றுவதாக எழுதிக் கொடுத்ததை ஏற்றுக் கொண்டு இரவு 9.45 மணியளவில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டனர் மக்கள்.
விடுதலை செய்யப்பட்ட மக்களிடம், அதிகாரிகளின் முன்னிலையிலேயே “அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை நாம் நம்புகின்றோமா”என்று கேட்ட போது இல்லை, அரசு சொன்னபடி நடக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்று ஒரே குரலில் மக்கள் உரக்க அறிவித்தனர். இது அதிகாரிகளை கலக்கமடையச் செய்தது. கைது செய்யப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு சென்று விடுகிறோம் என்று போலிசு கூறிய போது நீ சமூக விரோதி உன்னுடைய தயவில் நாங்கள் செல்ல தயாரில்லை என்று நடந்தே தங்களுடைய பகுதிகளுக்கு மக்கள் சென்றனர்.
மறுநாள் (13.04.2016) காலை அரைமணிநேரம் மட்டுமே கடையை திறந்து வைத்துவிட்டு நாள் முழுவதும் கடையை அடைத்தது மாவட்ட நிர்வாகம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
தேர்தல் அக்கப்போர் செய்திகளுக்கு மத்தியில் நம்பிக்கையூட்டும் போராட்டம் குமரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது ஓட்டுக் கட்சிகளின் கருணையினால் அல்ல, மக்கள் போராட்டத்தினால் மட்டுமே என்பதை இப்போராட்டம் நிரூபித்திருக்கிறது.
தகவல்: டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி, மக்கள் அதிகாரம்,
குமரி மாவட்டம்.
ஜே.என்.யு விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அம்பலப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு உடனடியாக கைகொடுத்தது சியாச்சின் பனிமலை. உலகின் மிக உயரமான போர் முனை என்று அறியப்படும் சியாச்சின் பனிச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 21,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி அங்கே பாதுகாவலில் ஈடுபட்டிருந்த பத்து வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
உடனடியாக அந்தப் பிணங்களை வைத்து சமூக வலைத்தள மோடி பக்த ஜனசபா, தேசபக்தி பஜனையைத் துவங்கியது. “சியாச்சின் மலையினிலே… எங்கள் வீரர்கள் தேசம் காக்கப் போராடும் வேளையிலே… கண்ணையா குமார் என்ன சொன்னார் தெரியுமா….” என்று தொடை தட்டிக் கிளம்பிய தேசபக்த குஞ்சுகள் பனாமா ஆவணக் கசிவுகளில் இந்திய இராணுவத்தின் பெயர் அடிபடத் துவங்கிய பின் போன இடமும் தெரியவில்லை தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்துக் கொண்ட தடமும் தெரியவில்லை.
உப்புமா கம்பெனிகளுக்கென்றே நேர்ந்து விடப்பட்ட ஒரு நாடு பனாமா . கருப்புப் பண முதலைகள், ஹவாலா கேடிகள் மற்றும் வரி ஏய்ப்புகளுக்கான உப்புமா கம்பெனிகள் பனாமாவைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது. அமெரிக்காவில் வரி ஏய்ப்பு செய்ய பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களின் மூலம் எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டு பிள்ளையார் சுழி போட்டது ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம். இது உலக அறிவுஜீவிகளின் புரவலரான ராக்பெல்லருக்குச் சொந்தமானது என்பது ஒரு உப தகவல். பின்னர் 1920-களில் பனாமாவின் நிதிச் சட்டங்களை அமெரிக்க வால் வீதியின் உயர்மட்ட சூதாடிகளே வகுத்துக் கொடுத்துள்ளனர்.
படங்கள் நன்றி: THE IRISH TIMES
வரி ஏய்ப்பு மட்டுமின்றி பெரியளவிலான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான லாபி வேலைகள் மற்றும் கமிஷன்கள் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட இரகசிய நிறுவனங்களின் வழியே நடந்துள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளின் அரசுத் துறைகள் அறிவிக்கும் டெண்டர்களை வெல்வதற்கு பனாமாவில் பதிவு செய்துள்ள உப்புமா கம்பெனிகளின் வழியே தான் பன்னாட்டு நிறுவனங்கள் லஞ்சப் பணத்தைப் கைமாற்றுகின்றன.
மிகக் குறிப்பாக பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களைக் குறுக்கு வழியில் பெறுவதற்கான கையூட்டுக்கள் இந்த வழியிலேயே பாய்ந்துள்ளன.
1996-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த எலக்ட்ரானிக்கா எஸ்.பி.ஏ என்கிற நிறுவனம் மின்னணு உளவுக் கருவிகள் பராமரிப்பு ஒப்பந்தம் ஒன்றை இந்திய இராணுவத்திற்காக மேற்கொள்கிறது. இந்நிறுவனம், இந்திய இராணுவத்திற்கு ராடார் எச்சரிக்கைக் கருவி, லேசர் கதிர்களைக் முன்னறிவிக்கும் கருவி மற்றும் ஏவுகணை எச்சரிக்கைக் கருவி போன்றவைகளை விற்றுள்ளது. இந்திய இராணுவத்துடன் ஒப்பந்தங்களை வெல்வதற்காக எலக்ட்ரானிக்கா நிறுவனம் பனாமாவில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களான இண்டர்டிரேட் எண்டர்பிரைசஸ் (IEL) மற்றும் இண்டர்டிரேட் ப்ராஜக்ட் கன்சல்டண்ட் லிமிடெட் (IPCL) ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 17 சதவீதம் வரை கமிஷன் வழங்கியுள்ளது.
2000, 2003 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை IPCL நிறுவனம் எலக்ட்ரானிக்கா நிறுனத்திடமிருந்து கமிஷன் பெற்றுள்ளது. ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலம் தொடங்கி பின்னர் வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலம் வரை நடைபெற்றுள்ள இந்த பணப்பரிமாற்றங்களின் மதிப்பு சுமார் ஒரு கோடியே முப்பது லட்சங்கள் ஆகும். எனினும், தனது வருடாந்திர வரவு செலவு அறிக்கையில் தமது கம்பெனியின் வருமானமாக சராசரியாக இரண்டாயிரம் பவுண்டுகளையே கணக்கில் காட்டியுள்ளது. ஆவணப் பூர்வமாக பெற்ற தொகையையே குறைத்துக் கணக்கில் காட்டியுள்ளது இந்த உப்புமா கம்பெனி. எனில், கணக்கில் வராமல் கைமாற்றி விட்ட தொகையின் அளவு என்னவாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தில்லி வட்டாரங்களில் செயல்படும் அயல்நாட்டு ஆயுத கம்பெனிகளில் எலக்ட்ரானிக்கா ஒரு சிறிய கம்பெனி. புதுதில்லியின் மத்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் தேசிய பாதுகாப்புக் கல்விப் பேராசிரியர் பரத் கர்நாடின் கருத்துப்படி, நமது தலைநகரில் மட்டும் சுமார் 300 அயல்நாட்டு ஆயுத கம்பெனிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் நேரடியாகவும் IPCL போன்ற இடைத்தரகு நிறுவனங்களின் மூலமும் லாபியிங் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களைப் பேசி முடிக்கவும், அதற்குத் தேவையான கையூட்டுக்களை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கள்ளத்தனமாக கொடுப்பதுமே இவர்களின் பிரதான செயல்பாடுகள். ஆயுத பேரத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் முறையாக இந்திய அரசிடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிறது அரசின் விதிமுறைகள். எனினும், இது தொடர்பான விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுவதும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்வதுமே எதார்த்த நடைமுறையாக உள்ளது. அதிகாரிகளுக்குப் பாயும் லஞ்சத் தொகை பனாமா போன்ற வரியேய்ப்பு சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட நிழல் நிறுவனங்களாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
வரியேய்ப்பு சொர்க்கங்கள் என்று அழைக்கப்படும் நாடுகள் தங்களது வரி விதிப்புக் கொள்கைகளை தாராளமானதாகவும், நிதி விவகாரங்களை இரகசியமானதாகவும் பராமரிக்கின்றன. உலகின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நிதி மூலதனம் பறந்து செல்வதற்கு இந்த வரியேய்ப்பு சொர்க்கபுரிகளில் பதிவு செய்யப்பட்ட நிழல் நிறுவனங்களையே பயன்படுத்திக் கொள்கின்றன. இந்நிறுவனங்களின் வழியே பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளுக்குள் நுழைந்து வெளியேறும் மூலதனத்தின் அளவையே வளர்ச்சிக்கான அடையாளமாக முதலாளிய அறிஞர்கள் விதந்தோதுகின்றனர்.
2015-ம் ஆண்டுக் கணக்கின் படி உலக பணக்காரர்களின் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு வரியேய்ப்பு சொர்க்கங்களில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பதுக்கப்பட்டுள்ளது (சுமார் 32 ட்ரில்லியன் டாலர் – Financial Secrecy Index). சில ஆயிரத்திலிருந்து சில லட்சங்களுக்குள் மக்கள் தொகை கொண்ட தீவு நாடுகளான இவ்வரியேய்ப்புத் திரைமறைவு சொர்க்கங்களோடு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்நாடுகளில் வைத்து ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கும் அவற்றின் இடைத்தரகு நிறுவனங்களுக்கும் இடையே சட்டப்பூர்வமான முறைகளில் கைமாற்றிக் கொள்ளப்படும் கமிஷன் தொகை சட்டப்பூர்வமான வழிகளில் அவற்றின் இந்திய கிளைகளுக்கு மாற்றப்பட்டு பின் இராணுவ அதிகாரிகளுக்கு ‘சட்டவிரோதமான’ முறைகளில் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது.
தற்போது பனாமா ஆவணக் கசிவைத் தொடர்ந்து பதினைந்து நாட்களுக்குள் விசாரணை அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யுமாறு மாண்புமிகு பிரதமர் திரு. ஐம்பத்தாறு இன்ச் அவர்கள் நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என்கின்றன செய்திகள். லஞ்சத்தின் ஊற்று மூலத்தையே சட்டப்பூர்வமாக்கி விட்ட பின், அது பெருக்கெடுத்துப் பாயும் வழிகளில் தடுப்பணைகள் கட்ட முடியும் என்று நம்பச் சொல்கிறது பாரதிய ஜனதா அரசு.
இராணுவ நடைமுறைகள் மட்டுமின்றி, அதன் நிதிப் பரிவர்த்தனைகளும் நிதிக் கையாள்கையும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடமையில் இருந்து ’சட்டப்பூர்வமான’ வழிகளிலும், இராணுவத்தைச் சுற்றிப் பூசப்பட்டுள்ள தேசபக்த சாயங்களினாலும் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவம் என்கிற அமைப்பே மக்களுக்கு மேலாகவும் மக்களிடமிருந்து விலகி நிற்கும் ஒரு அமைப்பாக கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனுள்ளே லஞ்ச ஊழலுக்கான சகல வசதி வாய்ப்புகளும் ‘சட்டப்பூர்வமாகவே’ நிலைநாட்டப்பட்டுள்ளன. மொத்தமும் இருளாக இருக்கும் அவ்வமைப்பின் உள்ளே கைமாறிய லஞ்சத்தின் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சிக் கண்டுபிடிக்கவுள்ளதாக சொல்வதே கேலிக்கூத்து.
இராணுவத்தை வைத்து தேசபக்தி கூச்சல்கள் அதிகம் எழுப்புவதே அதன் சர்வ வியாபகமான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். இறுதியில் இராணுவம் மக்களை ஆயுதத்தால் மட்டும் ஒடுக்கவில்லை, அந்த ஆயுதத்தை வாங்கும் முகாந்திரத்தில் மக்கள் பணத்தையும் கொள்ளையடிக்கின்றன.
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை!
படம் பிரசுரம்: கார்டியன் நாளிதழ்: மூலம்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
கார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் ‘புகழ்’ பெற்ற கார் உற்பத்தியின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன. குட்டி நாடு ஜப்பான் ‘தொழில் வளர்ச்சியில் என்னமா அடிச்சு போறான் பாத்தியா?’ என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் வியப்பது உடன் நினைவுக்கு வருகிறதா?
இன்றைய நிலையில் ஜப்பானில் கார் உற்பத்தி எவ்விதம் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப்பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன படம் பிரசுரம்: கார்டியன் நாளிதழ்: மூலம்: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியின் பெயரில் போற்றப்படும் ஜப்பானின் மறுபக்கம் என்ன?
இந்து ஆங்கில நாளேட்டில் 03-04-2016 அன்று மறுபிரசுரமான ராய்ட்டர்ஸின் கட்டுரை ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
ஜப்பானில் கடந்த வருடத்தில் (மார்ச் 2015 வரை) மட்டும் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்தன் மூலம் கரோஷி காப்பீடுக்கு (Karoshi-பணிச்சுமையால் மரணமடைந்தவர்களுக்கான காப்பீடு) விண்ணப்பித்தவர்கள் 1,456 பேர் என்கிறது அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம். ஆனால் அரசின் புள்ளிவிவரத்தை விட பத்து மடங்கு தொழிலாளிகள் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்திருப்பதாகச் சொல்கிறார் பணிச்சுமையால் மரணடமடைந்தவர்களுக்கான தேசிய பாதுகாப்பு பேரவையின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஹிரோஷி கவகைட்டோ.
ஜப்பானில் தொழிலாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்ற குறைந்தபட்ச அடிப்படை உரிமை கூட கிடையாது என்கிறார் ஹிரோஷி. இது தொழிலாளிகள் வகைதொகையின்றி சுரண்டப்படுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது. இலாப வெறியால் கசக்கிப் பிழியப்படுகிற தொழிலாளி ஒருவேளை பணிச்சுமையால் இறந்துபோனால் இரண்டுவிதமான காப்பீடுகள் ஜப்பானில் இருக்கின்றனவாம்.
முதல் வகையில் பணிச்சுமையின் காரணமாக மாரடைப்பு போன்ற இதய நோய்களால் ஒரு தொழிலாளி இறந்துபோனால் காப்பீடு பெறுவதற்கு இறப்பதற்கு முன் கடைசிமாதத்தில் 100 மணிநேரம் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது இறப்பதற்கு முன் ஆறுமாதங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் தொடர்ச்சியாக 80 மணிநேர ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். வேறு விதமாக சொல்வதென்றால் ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 100மணி நேரம் ஓவர் டைம் பார்த்தால் அவர் மாரடைப்பால் செத்துப்போவது உறுதி என்பதை ஜப்பானிய தொழிலாளர் அமைச்சகம் ஒரு விதியாகவே அறிவிக்கிறது.
இரண்டாவது வகையில் பணிச்சுமையின் காரணமாக ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டால் காப்பீடு பெறுவதற்கு தற்கொலைக்கு முந்தைய மாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது கடைசி ஆறுமாதத்தில் மூன்றுமாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக 100 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அதாவது ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்தால் அவர் தற்கொலை செய்யப்படுகிறார் என்றாகிறது!
ஜப்பான் தொழிலாளர் அமைச்சக தகவலின் படி, கடந்த நான்கு வருடங்களில் வேலை தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் 49% பேர். இதில் 39% பேர் பெண்களாவர்! தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லப்படுகிற ஜப்பான்தான் உலகிலேயே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் நாடு!
முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி எட்டுமணி நேரம் செய்கிற வேலையை இயந்திரங்கள் நான்குமணி நேரத்தில் செய்கிற பொழுது தொழிலாளி ஒன்று வேலையிழப்பார் அல்லது அவரது வேலை நேரம் இன்னும் கூடுதலாகி பன்னிரெண்டு, பதினான்கு மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கும். இதனால் சுரண்டலின் கொடுமை கூடுமே தவிர குறையாது.
எடுத்துக்காட்டாக ஜப்பானில் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளிகள், ஒப்பந்த தொழிலாளிகள் என இரும் பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். வரையறுக்கப்படாத ஒப்பந்த வேலைகளில் பெரும்பாலும் இளைஞர்களும் பெண்களும் பணியர்மத்தப்படுகின்றனர். ஜப்பானில் 1990-ல் 20% ஆக இருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2015-ல் 38% ஆக அதிகரித்திருக்கிறது. இதில் 68% பெண்கள் ஆவர். ஜப்பான் வழக்கறிஞர்கள் மற்றும் போராளிகளின் கருத்துப்படி பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடைவேளையும் ஓவர் டைம் பார்ப்பதற்கான ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்கின்றனர். இளைஞர்கள் வேறுவேலையில் சேர்வதற்கான அனுபவமின்மை காரணமாகவும் பிரசவ கால விடுப்பு எடுக்கும் பெண்கள் மீண்டும் பணியில் வேறு எங்குமே சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையிலும் இவர்கள் இடைவேளை குறித்தோ ஓவர்டைம் ஊதியம் குறித்தோ வாய்திறப்பதில்லை என்கின்றனர்.
எமிக்கோ தரோநிஷி
திருமதி. எமிக்கோ தரோநிஷி பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்ட தன் கணவரின் நினைவாக பணிச்சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் பிற தொழிலாளிகளுக்கு காப்பீடு பெற்றுத் தருவதில் இறங்கியிருக்கிறார். இவர் கம்பெனிகளின் மூர்க்கத்தனமான சுரண்டல் எத்தகையது என்பதை அம்பலப்படுத்துகின்றார். இவரது கருத்தின்படி சில கம்பெனிகள் சம்பளத்தோடு 80 மணி நேர ஓவர்டைம் பார்ப்பதையும் கட்டாயமாக்குகின்றனவாம். 80 மணி நேர டார்கெட்டை நிறைவு செய்யவில்லையென்றால் கூலியை திருப்பித்தர வேண்டுமென கம்பெனிகள் நிர்ப்பந்திப்பதை எடுத்துக்காட்டுகிறார். இத்தகைய முறையால் தொழிலாளிகள் பலரால் குறைந்த பட்ச கூலியைக் கூட பெறமுடிவதில்லை என்கிறார்.
முதலாளித்துவ சமூகத்தில் இராக்கெட் விட்டாலும் சரி ரோபோ வேலை செய்தாலும் சரி இலாபத்தை நிர்ணயிப்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியல்ல. பாட்டாளிகளின் கூலியுழைப்புதான் இலாபத்தை நிர்ணயிக்கிறது. ஆகையால் தான் ரோபோக்கள் கார் உற்பத்தி செய்வது தொழில்நுட்பத்தின் உச்சம் என்று வியக்கிற நாட்டில் தொழிலாளிகள் ஓவர்டைம் பார்ப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்! மாரடைப்பால் சாகிறார்கள். இந்தவகையில் ஜப்பானை மனிதர்களைக் கொல்லும் ரோபோக்களின் நாடு என்று சொல்லலாம். ரோபோக்கள் வளர்ச்சி பெற்று செயற்கை அறிவைக் கண்டடைந்து மனித குலத்தை கட்டுப்படுத்துவதாகவும், அதை சில சூப்பர் ஹீரோக்கள் தடுத்து நிறுத்துவதாகவும் நிறைய ஹாலிவுட் படங்களை வெளிவந்திருக்கின்றன. உண்மையில் அந்த ரோபோக்கள் முதலாளித்துவ வர்க்கமாகவும், தடுத்து நிறுத்தி இந்த உலகைக் காப்பாற்றப் போவது தொழிலாளி வர்க்கம் மட்டுமே.
கேள்வியும் தொடர்ச்சியும்: தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளிக்கு எதிரானதா? இல்லை. சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையில் தொழிலாளிகள் என்ன பாத்திரம் வகிக்கிறார்கள் என்பது தான் தொழிலாளிகளின் வாழ்நிலையை நிர்ணயிக்கிறது. இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இப்பொழுது வாசகர்கள் விவாதிப்பதற்கு ஒரு செய்தி: முதல் தொழிற்புரட்சியில் நீராவி இயந்திரம் மற்றும் மின்சாரம், இரண்டாவது தொழிற்புரட்சியில் கன்வேயர் பெல்ட் மூன்றாவது தொழிற்புரட்சியில் கணிணிமயமாக்கம் நான்காவது தொழிற்புரட்சியில் தானியங்குதல் (Automation-ரோபோக்கள் மயமாவது) என்று தொழில்நுட்ப சகாப்தத்தை வரையறுக்கிறார்கள். ஆனால் தற்பொழுது உலகில் வெறும் 62 பேரிடம் இருக்கும் சொத்து, உலகில் 360 கோடி பேர் வைத்திருக்கும் சொத்திற்கு சமம் என்கிறது ஆக்ஸ்பம் வெளியிட்ட அறிக்கை. முதலாளித்துவம் கார், செல்போன் வீடியோகேம் வழங்கியது என்று வாதிட்டவர்கள் 66க்குள் இருக்கிறார்களா? 400 கோடிக்குள் இருக்கிறார்களா?
ஏழு ஆண்டுகளாக “உரிமை கோரப்படாத” தொழிலாளர் வைப்பு நிதி (PF), பொது வைப்பு நிதி (PPF), அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்பு மற்றும் நிலுவையில் உள்ள கணக்குகளில் உள்ள நிதி ஆகியவற்றை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றிவிடுவதாக ஒரு அறிவிப்பினை மத்திய நிதித்துறை அமைச்சகம் மார்ச் 12-ம் தேதி அன்று வெளியிட்டது. மேலும் ஒரு தொழிலாளி பணியிலிருந்து விலகினால் அவருடைய பி.எஃப் கணக்கில் உள்ள தொகையை 58 வயது நிறைவடைந்த பிறகுதான் பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தொழிலாளர்களுக்கும் சேமிப்பு வைத்துள்ளவர்களுக்கும் இ-மெயில் மூலமாக 60 நாட்களுக்குள் அறிவித்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூத்த குடிமக்கள் நல நிதிக்கு திருப்பப்படும் தொழிலாளர்களின் நிதியின் மொத்தத் தொகை 27,000 கோடி ரூபாய்!
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாத்ரேயா தொழிலாளர் அனைவரும் அரசின் பிரதிநிதிகள் என்றும் தொழிலாளர் வைப்பு நிதியை வேறுபயன்பாட்டிற்கு பயன்படுத்த அரசுக்கு உரிமையுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைப் பார்க்கும் சாதாரண குடிமக்கள் அனைவரும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூத்த குடிமக்கள் மீதான நல்லெண்ணெத்திலிருந்து மேற்கொள்ளும் சரியான நடவடிக்கை போல தோன்றும். இது உண்மையா?
பக்காத் திருடர்கள் மோடி-தாத்ரேயா கும்பல்!
மோடி – தாத்ரேயா
சாதாரண நடைமுறையில் இருந்து ஒரு கேள்வி எழுப்பினாலே, இந்த மோசடியைப் புரிந்து கொள்ள முடியும். இரு சக்கர வண்டி வாங்கிவிட்டு தவணைத் தொகை கட்டத் தவறியவர்களையும் கடன் கட்டாமல் இருக்கும் விவசாயிகளையும் எந்த வங்கியும் நிறுவனமும் ‘ஆள் ஊரில் இல்லை’ என்ற காரணத்திற்காக விட்டு விடுவதில்லை. அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்துவதுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவது, அடியாட்களைக் கொண்டு கட்டச் சொல்லி மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. அந்த வகையில், தொகையை பெற்றுக் கொள்ளாத தொழிலாளர்களை தொடர்பு கொண்டு அத்தொகையை ஒப்படைப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல.
உரிமை கோரபட்டாத தொகையிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,650 கோடி ரூபாயும் 2014-15 ஆண்டில் மட்டும் 6,400 கோடி ரூபாயும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க மிச்சமிருக்கும் தொகையை அந்தத் தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியாமல் போய்விட்டதற்கான காரணங்கள் என்ன, அந்தத் தொழிலாளர்களைக் கண்டடைந்து ஒப்படைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன என்ற எந்த நடைமுறை பிரச்சனையையும் மத்திய அரசு முன்வைத்து தனது முடிவிற்கு நியாயம் கற்பிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தொழிலாளர்களால் கோரப்படாத நிதி என்ற ஒரு பெயர் வைத்திருப்பதே அயோக்கியத்தனமானது. ஏனென்றால், ஒரு தொழிலாளி கட்டும் பி.எஃப். தொகை என்பது அவருக்கு உரிய முறையில் எந்த நிறுவனமும் தொடக்கத்தில் அறிவித்து விடுவதில்லை. பலருக்கும் இந்தத் தொகை பற்றி தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தாலும் அத்தொகையை கோரி பெறுவதற்கான வழிவகைகளும் தெரியாத தொழிலாளர்கள் தான் நமது நாட்டின் பெரும்பான்மையினர். மொத்தத்தில் அப்பாவி தொழிலாளர்கள் தங்களது இரத்தத்தை சிந்தி சேர்த்தத் தொகையை, அவர்களால் கோரப்படாத நிதி என்று சொல்வதன் நோக்கமே, அத்தொகையை திருடுவதற்கான அடித்தளமாக இருப்பதை உணரமுடியும்.
முக்கியமாக, 1995-ல் கொண்டு வரப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திலோ, தொழிலாளர் வைப்பு நிதியிலோ அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஆகையால், 7 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத தொழிலாளர் நிதியை எடுப்பதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
இது மட்டுமல்லாமல், கடந்த 2011-ம் ஆண்டில் இதுபோன்று தொழிலாளர் வைப்பு நிதி கணக்கீடுகளின் மீதான வட்டி வரவை வேறு வகையான பயன்பாட்டிற்கு திருப்ப மத்திய அரசு முயற்சித்த போது தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் தடுத்து நிறுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை செல்லாக்காசாக்கும் மோடி கும்பல்!
தொழிலாளர் வைப்பு நிதி என்பது தொழிலாளர்கள் தங்களது சம்பளத்திலிருந்து மாதாமாதம் செலுத்தும் ஒரு தொகையும் அவருக்கு வேலையளிப்பவர் செலுத்தும் ஒருதொகையும் சேர்ந்ததாகும். இது தொழிலாளர்களின் வாழ்நாள் முழுவதற்குமான சமூக பாதுகாப்புக்கானதாகும். இதில் கை வைக்க அரசுக்கு உரிமையில்லை.
தொழிலாளர் அனுமதியில்லாமல் வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. உரிமைக் கோரப்படாத நிதியை எடுப்பது என்பது வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திற்கே எதிரானது. தொழிலாளர் வைப்ப் நிதியை திருடும் மத்திய அரசின் முடிவிற்கு தொழிலாளர் நலத்துறை, வருங்கால வைப்பு நிதித்துறை அதிகாரிகளே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இத்தனையையும் மீறித்தான் இந்த திருட்டு வேலையை நடத்தி வருகிறது, மோடி-தாத்ரேயா கும்பல். குறிப்பாக, இந்த விசயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த தொழிலாளர் வைப்பு நிதிக்கான அறங்காவலர் வாரியத்தில் கூட இது குறித்து விவாதிக்கவில்லை.
தற்போது வைப்பு நிதி விவகாரத்தில், தொழிலாளர்களை அரசின் பிரிதிநிதிகள் என்றும் கூறும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தாத்ரேயாவோ, தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளர் சட்டங்களைத் திருத்திய போது, தொழிலாளர்களின் கருத்தைக் கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று நாடுதழுவிய அளவில் நடத்தப்பட்ட மாபெரும் வேலைநிறுத்தத்தையும் பொருட்படுத்தவில்லை.
மல்லையா – பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.9000 கோடி கடனை திருப்பி செலுத்தாதவர்
கார்ப்பரேட் முதலாளியான மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய தொகையில் ரூ.9000 கோடி திருப்பிக் கட்டாமல் வெளிநாடுகளில் உல்லாசமாக சுற்றுவதும், இவனுக்கு விசா கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததும், இவனிடம் நீதித்துறை கெஞ்சிக் கொண்டிருப்பதும் உலகம் நாறிக்கொண்டிருக்கும் விசயங்கள். திருபாய் அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பத்ம விருதுகள் கொடுத்து பட்டவர்த்தனமாக தான் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிதான் என்று காட்டிக்கொள்கிறது மோடி அரசு. இந்தப் பின்னணியில், தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை சேர்த்துப் பார்க்க வேண்டும்.
வைப்பு நிதித் திட்டத்தில் உறுப்ப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் 7,43,000. மொத்த உறுப்பினர்கள் 8,87,62,000. மொத்த முதலீட்டுத் தொகை 6 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய். ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 44 இலட்சம் பேர். இவர்களது ஒட்டுமொத்த வாழ்வையும் சூறையாடி ஒட்டுமொத்த வருங்கால வைப்பு நிதியையும் கொள்ளையடிக்க கார்ப்பரேட் கும்பல் படுவேகமாக செயல்பட்டுக் கொண்டுருக்கிறது. இதற்கு மோடி அரசு பக்கபலமாக செயல்பட்டு வருவதையே இந்த நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.
பார்ப்பனமயமாக்க-மறுகாலனியாக்க நடவடிக்கைகளை முறியடிப்போம்!
வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பார்ப்பன பயங்கரவாத பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல், கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்கு இந்தியத் தொழிலாளர்களை பலியிடும் வேலைகளை வேகமாக செய்து வருகிறது. இந்தியாவில் மூலதனமிட ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகளைக் கூவி கூவி அழைக்கும் மோடி, இளம் இந்தியா என்ற பெயரில் மலிவான கூலி பெறும் தொழிலாளர்களை உருவாக்குகிறது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மாணவர்களை 8ம் வகுப்பு முதல் கட்டாய உற்பத்தியில் ஈடுபடுத்த இருக்கிறது. இதற்காக குழந்தைத் தொழிலாளர் சட்டத்தையும் திருத்தியுள்ளது. கடந்த 80 ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளான 8 மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கு பணி நேரத்தில் வழங்கவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், சங்கம் வைக்கும் உரிமை, நிரந்தர வேலை போன்ற அனைத்து உரிமைகளையும் பறித்து வருகிறது. இதற்காக சட்டத் திருத்தங்கள் செய்து வருகிறது. தொழிலாளர்களின் பி.எப். நிதி கொள்ளையடிக்கும் தற்போதைய மாற்றங்கள் இதன் ஒருபகுதிதான்.
தொழிலாளர்களின் போராட்டம்
தனது மறுகாலனியாக்க, தொழிலாளர் விரோதப் போக்குகளை திணிக்க,மோடி தலைமையிலான அரசும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலும் நாட்டில் தொடர்ந்து மதவெறி கிளப்பி வருகிறது. மதக்கலவரங்கள், சாதிக்கலவரங்களைத் தூண்டிவிட்டு தொழிலாளர் வர்க்கத்தை பிளவுப்படுத்தும் வேலையில் வேகமாக இறங்கியுள்ளது. பழைய சட்டங்கள் அனைத்தையும் திருத்தி நாட்டை பார்ப்பனமயமாக்கும் வேலையை செய்து வருகிறது.
மோடி அரசின் இந்த நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை. நமது உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடே மறுகாலனியாக்கத்தில் தள்ளப்படுவதற்கு எதிராகவும் மீண்டும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காட்டுமிராண்டி நிலைக்கு மனித சமூகமே தள்ளப்படுவதற்கு எதிராகவும் போராடுவது நமது வரலாற்றுக் கடமை.
மே நாளில் மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர்கள் இவ்வாறுதான் தங்கள் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராடி உரிமைகளை நிலை நாட்டினர். அந்தத் தியாகத்தின் பரம்பரை என்ற வர்க்க உணர்வுடன் ஒன்றிணைவோம்! போராடுவோம்!
“உரிமைக் கோரப்படாத நிதி” என்ற பெயரில் தொழிலாளர்களின் பி.எப். நிதியைத் திருடும் மோடி அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவோம்!
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுத் தோழர்கள் பாடிய பாடல்!
பாருங்கள் – பகிருங்கள்!
————————————————–
JNU பெயரைத் தெரியுமா ? தோழர் கோவன் பாடல் !
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுத் தோழர்கள் பாடிய “ஜே.என்.யூ பெயரைத் தெரியுமா? அங்கு மாணவர் போராட்டம் தெரியுமா?” பாடல்!
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சென்னை தியாகராயக் கல்லூரி மாணவர் அரவிந்தன் ஆற்றிய உரை!
சென்னை சட்டக் கல்லூரி மாணவி கனிமொழி ஆற்றிய உரை!
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாச வல்லவன் ஆற்றிய உரை!
பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரை!
கொலைகார ராம்கியை இழுத்து மூடு, அதிகார வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்த மக்கள் போராட்டம்
கொலைகார ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடு என அ.முக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அனைத்து கிராம மக்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தால் ஆட்டம் கண்ட அதிகார வர்க்கம் மக்களை திருச்சுழியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதே போல 18-11-2015 அன்று நடந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் மக்களின் கேள்விகளுக்கும், தோழர் வாஞ்சிநாதனின் சட்டரீதியான கேள்விகளுக்கும் பதிலளிக்க இயலாமல் அம்பலப்பட்ட அதிகாரிகள் ராம்கி நிறுவனத்தை மூடுவதாக வாய்மொழி உத்தரவாதம் கொடுத்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என்பதால் இதற்கு தீர்வு காணும் விதமாக மக்கள் அனைவரும் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை நோக்கி அணிதிரண்டனர்.
கூட்டம் ஆரம்பம் ஆவதற்கு முன்னரே டி.எஸ்.பி மக்கள் மிரட்டும் தொனியில் பேசினார். இந்த அதிகார வர்க்கம் மக்களுக்கானது அல்ல, காவல் துறை ஏவல்துறையே என்பதை நடைமுறையில் கற்றுக் கொண்ட மக்கள் டி.எஸ்.பி-யை அடிக்காத குறையாக அறைக்குள் ஓடச் செய்தனர்.
தோழர் வாஞ்சிநாதன் மக்களை கட்டுப்பாடாக இருக்கச் செய்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மக்களிடம் அறிவித்து மக்களின் முடிவே எடுக்கப்படும். அதுவரையில் அமைதி காக்க கூறி பேச்சுவார்த்தைக்கு ஊருக்கு 5 பேர் வீதம் சென்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தோழர் வாஞ்சிநாதன், “இந்த நிறுவனம் எந்த விதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றவில்லை. நாட்டிற்கே அடிப்படையாக விளங்கும் விவசாயம் அழிக்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள் என்ற காரணத்தால்தான் 04-07-2013 அன்று மாவட்ட ஆட்சியர் மூடி சீல் வைத்திருக்கிறார். எனவே, இந்த நிறுவனத்தால் என்ன பாதிப்பு என்பதை மக்களாகிய நாங்கள் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. இனி இந்த நிறுவனத்தை எப்படி மூடுவது என்பது பற்றிதான் அரசு முடிவு செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் எப்போது முறையிட்டாலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு ராம்கி நிறுவனம் கோர்ட் மூலம் தடையாணை பெற்று விட்டது. வழக்கு கோர்ட்டில் இருக்கிறது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று காரணத்தைக் கூறி இழுத்தடித்து வருகின்றனர். முறையாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற காரணத்தைக் கூறித்தான் அவர்கள் தடையாணை பெற்றுள்ளனர். அரசு நினைத்தால் தடை ஆணையை ரத்து செய்ய வைக்க முடியும் அல்லது வழக்கை திரும்பப் பெற்று ராம்கி நிறுவனத்துக்கு முறையான நோட்டீஸ் கொடுத்து அந்த நிறுவனத்தை மூடி சீல் வைக்க முடியும். இவை எல்லாம் கோர்ட்டில் ஒரு அரைமணி நேர வேலை.
ஆனால், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் ராம்கி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு மக்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. மக்கள் இப்போது மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு 133-ஆம் விதியைப் பயன்படுத்தி உடனடியாக ராம்கி நிறுவனத்தை மூட முடியும். அதற்கான சட்ட ஆணையை நாங்களே தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறோம். இப்போது அதிகாரிகள் உங்கள் முடிவை கூறுங்கள்” என்று தன் வாதத்தை எடுத்துரைத்தார்.
அதிகாரிகள் கலந்தாலோசித்து விட்டு வருகிறோம் என்று கூறி சென்றவர்கள் சிங்கப்பூரில் உள்ள ராம்கி நிறுவன முதலாளியுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்து விட்டு வந்தனர்.
மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள், “நாங்கள் புதியவர்கள், இதில் அனுபவம் இல்லை, நடவடிக்கை எடுக்கின்றோம், கால அவகாசம் வேண்டும். 133 சட்டத்தை பயன்படுத்தினால் அவர்கள் தடை ஆணை பெற்று விடுவார்கள்’ என்று ஏதேதோ மழுப்பினார். எப்படியாவது மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதைத் தவிர அவர்களிடம் வேறு நோக்கம் இல்லை. கெஞ்சுவது, மிரட்டுவது என்றே நேரம் கடந்தது.
தாசில்தார் சின்னதுரை, தொகுதி தேர்தல் அதிகாரி தியாகராஜன் ராம்கி நிறுவனத்திடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. அதிலும் தியாகராஜனுக்கு ராம்கி முதலாளி அதிகமான எலும்புத் துண்டை போட்டுவிட்டார் போலும், மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டார்.
பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு இல்லை அதிகாரிகள் ராம்கியின் கைக்கூலிகள் என்பதை அறிந்த மக்கள் கொந்தளிப்பிற்கு உள்ளானார்கள். புரட்சியின் ஆணிவேரான பெண்கள் தாசில்தார் அலுவலகத்துக்கு நுழைய முயற்சித்தனர். தடுக்க முயன்ற காவல்துறை உயர் அதிகாரிகளை இளைஞர்கள், பெண்கள் “போய்யா” எனக் கீழே தள்ளிவிட்டு “என்ன கைது செய்யப் போகிறாரா? தூக்கில் போடப் போகிறாயா? முடிந்தால் செய்” என்று கூறிவிட்டு அதிரடியாக நுழைந்தனர். இதனால் போலீசுக்கும், மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த இயலாமல் ஆட்டம் கண்டது அதிகார வர்க்கம்.
“ஒரு எளவு விழுந்து 13 நாள் காரியம் முடிவதற்குள் அந்த வீட்டில் இன்னொரு எழவு விழுந்துருது. ஒரு வீட்டுல ஒரே நாளில் அப்பாவும் மகனும் கிட்னி பெயிலியரல் செத்தா பொம்பள நாங்க புள்ள குட்டிய வச்சுகிட்டு என்னையா பண்றது, நாங்க எப்புடி வாழ்றது” என்று கோபத்தோடும் கண்ணீரோடும் கத்தியதோடு “வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு? ஊருக்குள் யார் வந்தாலும் விரட்டியடிப்போம்” என்ற ஆவேசமாகக் கூறி வாக்காளர் அட்டையை அதிகாரிகள் மீதும் அவர்களின் மேசை மீதும் வீசி எறிந்து தங்களது கோபக் கனலை வெளிப்படுத்தினர். இதற்கு இடையே ஆர்.டி.ஓ “தயவுசெய்து மக்களை கலைந்து போகச் சொல்லுங்கள்” என்று தன் அறைக்குள் சென்று விட்டார்.
“வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு?”
மக்களின் கொந்தளிப்பைப் பார்த்து கலக்கமடைந்த அதிகாரிகள் வேலையை விரைவுபடுத்துவது போல காட்டிக் கொண்டு நேரத்தைக் கடத்தி அந்த இடைவெளியில் மேலும் நிறைய காவலர்களை வரவழைத்தனர். எதற்கும் அசைந்து கொடுக்காத மக்கள் நீ எவ்வளவு போலீஸ் படையும் இறக்கு, சந்திக்கத் தயார் எனக் கூறி அருகிலேயே பாத்திரங்கள் வாடகைக்கு வாங்கி தாலுகா அலுவலகத்திலேயே சமைக்கத் தொடங்கியதைக் கண்டு மேலும் நடுக்கம் கொண்டது அதிகார வர்க்கம்.
பிறகு ஏ.டி.எஸ்.பி பேச்சு வார்த்தைக்கு வந்தார். “நீங்கள் சனிக்கிழமை வாருங்கள் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மூட நடவடிக்கை எடுக்கிறோம் எங்களை நம்புங்கள்” என்று கூறினார். “சரி இன்று நடந்த பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது, எங்கள் கோரிக்கை என்ன என்பதைக் குறிப்பிட்டு எழுதி ஆவணமாக அனைத்து அதிகாரிகளும் கையெழுத்து போட்டு தாருங்கள், நாங்கள் சனிக்கிழமை வருகிறோம்” என்றோம். முதலில் தயங்கியவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர்.
குறிப்பாக, “133 விதியை பயன்படுத்தி நிறுவனத்தை மூட முயற்சிக்கிறோம் என்பதை அதில் குறிப்பிட வேண்டும்” என்று தோழர் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார். சரி என்று ஒப்புக் கொண்டனர். அதை டைப் செய்து கொண்டு வந்து கொடுத்தனர். அதை வாசியுங்கள் என்று கூறியபோது, அதில் 133 விதியை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்னும் வாக்கியமே இடம் பெறவில்லை. என்ன இது என்று கேட்டதற்கு சமாளித்தனர்.
பிறகு ஏ.டி.எஸ்.பி.யே தோழர் வாஞ்சிநாதன் கூறிய விதிகளை தன் கைப்பட எழுதினார். அதை ஆர்.டி.ஓ சரிபார்த்து டைப் செய்து வாருங்கள் என்று தன் உதவியாளரிடன் கொடுத்தார். டைப் செய்த உதவியாளர் வாசிக்க ஆரம்பித்தார். வழக்கம் போலவே ‘கைய புடிச்சி இழுத்தியா’ கதையாக 133 விதியை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்னும் வாக்கியம் இல்லை. இப்போது அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி. என்ன இது ஏ.டி.எஸ்.பி எழுதி ஆர்.டி.ஓ சரிபார்த்தை யார் மாற்றுகிறார்கள். மாற்றுவது யாரும் இல்லை ராம்கியின் எலும்பு துண்டுக்கு வேலை செய்யும் தேர்தல் அதிகாரிதான். “கடைசி வரையில் 133 விதியை சேர்க்காமல் கலைய மாட்டோம். இந்த வாக்கியத்தை சேர்ப்பதில் என்ன சிக்கல் எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்ற போகிறீர்கள் என்று கூறியபிறகும் அதை எழுத்து பூர்வமாக கொடுப்பதில் என்ன சிக்கல்” என்று வலுயுறுத்திய பிறகு எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தனர்.
இதனிடையே ஏ.டி.எஸ்.பி “இவ்வளவு மரணம், இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறீர்களே, இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்” என்று மக்களைப் பார்த்து கேட்டார்.
“இவ்வளவு காலமும் இந்த அரசையும், சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பினோம். ஒவ்வொரு குறைதீர்க்கும் நாளிலும் நாங்கள் அத்தனை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். அத்தனை மனுவையும் அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு இப்போது நாங்கள் உங்கள் சட்டத்தை காலில் போட்டு மிதித்த பிறகுதான் எங்கள் கோரிக்கையை கேட்கவே ஆரம்பித்து இருக்கிறீர்கள்” என்றனர், மக்கள்.
இறுதியாக, “இனி நாங்கள் உங்களை தேடி வர மாட்டோம் நீங்கள் எங்களை தேடி வரும்படிதான் எங்கள் போராட்டம் அமையும்” என்று எச்சரித்தனர் மக்கள்.
அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் மக்களுக்கு உதவாது. அரசு எந்திரம் மக்களை ஒடுக்கும் கருவியை என்பதை இப்பகுதி மக்கள் நடைமுறையில் உணர்ந்து அதை முறியடிக்க போராட்டமே தீர்வு என்பதை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டனர்.
மக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்திகள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகின்றது.
இறுதியாக, தோழர் வாஞ்சிநாதன் “அதிகாரிகள் இன்னும் 1 வாரத்திற்குள் ராம்கி நிறுவனத்தை மூடி சீல் வைக்காவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும்” என்றும், “15-ம் தேதி ஜெயலலிதா வரும் போது கருப்புக்கொடி காட்டும் போராட்டம் செய்யப்படும்” என்றும் அறிவித்த போது மக்கள் “அதோடு தீக்குளிப்பு போராட்டம் கூடச் செய்வோம் எதற்கும் தயார்” என்றனர் ஆவேசத்துடன்.
இறுதியாக, தோழர் வாஞ்சிநாதன் அனைத்து கிராம மக்களையும் கலைந்து செல்லலாம் என்று அறிவித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.
“நைட்டு படுக்கும் போது கால்ல ஐஞ்சி வெரலும் இருந்துச்சி, காலையில எழுந்துப் பார்த்த புண்ணா இருந்த நடுவிரல, காணோம், சொல்லாமக் கொள்ளாம என் விரலை ஆட்டையப் போட்டுடுச்சே எலி, எத்தன நாய்க்கும், பூனைக்கும் சோறு போடுறேன், பசினு சொல்லியிருந்தா எலிக்கும் சோறுப் போட்டுறுப்பேனே” என வேதனையை மறக்க வேடிக்கையாகப் பேசுகிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் தொழுநோயாளிகள்.
மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு முன்பு வாரத்தில் ஒருநாள் கறிச்சோறு உண்டு. ஆனால், சாப்பிடும்போது, கறியா தன் விரலா என்று தெரியாமல் தொழுநோயாளிகள் உணர்ச்சியற்ற விரலையே தின்றக் கொடுமையெல்லாம் இங்கு சாதாரணம்.
நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்க வடிவமாக தோன்றும்
தொழுநோய் மருத்துவமனையின் அருகாமைப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் நோயாளிகள் தப்பிக்க வழியுண்டு. வேற்று மாநிலம், வெளி ஊர்களிலிருந்து வந்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியது. சுற்றத்தினர் துரத்தியவுடன் நோயின் கவனிப்பின்றி காது, மூக்கு, பிறப்புறுப்பில் ஏராளமாக புழு வைத்து…….. சீழ் வடிந்து எங்கு செல்வது என்று தெரியாமல்,ரோட்டில் மாண்டவர்கள் ஏராளம். தொழுநோயாளிகள் என்ற புறக்கணிக்கப்பட்ட உலகத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறோம்.
சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் செங்கற்பட்டு நகரத்தை ஒட்டி இயற்கைச்சூழலில் 550 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ளது திருமணி மத்திய தொழுநோய் போதனா மற்றும் ஆராய்ச்சி மையம் (Central Leprosy Teaching and Research Institute). 1924ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிருத்துவ தேவாலாயத்தின் பங்களிப்புடன் துவக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தொழுநோயாளிக்களுக்கா ன 124 படுக்கை வசதிகளுடன் மற்றும் வெளிநோயாளிகளுக்கான மருத்துவ பிரிவு,ஆய்வக பிரிவு, அறுவைச்சிகிச்சை பிரிவு, தொற்றுநோய், புள்ளியல் பிரிவு என்று இவற்றின் கீ்ழ் 32 துணைப் பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில் தோழுநோயாளிகளுக்கான காலணிகள்,உடைகள்,உணவு தயாரிக்கும் பிரிவுகள் மற்றும் உயர் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆய்வ பிரிவு,நூலக பிரிவு, என்று பரந்து விரிந்துள்ளது இம்மருத்தவமனை. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட துறைசார் அதிகாரிகள் கீழ் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பிரிவு என்று 300 க்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகின்றனர்.
மொட்டையம்மாள்:
இவர், திருவண்ணாமலையின் வேளாந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கவுண்டமூட்டின் அதிஷ்டலட்சுமியாகப் பிறந்தவர். மொட்டையம்மாளின் குடும்பப் பொறுப்பும், சுறுசுறுப்பும், வாய் கணக்கும் குடும்பத்தினரை வியக்கவைத்தது. அப்பா, தன் 4 ஆண் பிள்ளைகளைக் காட்டிலும், மொட்டையம்மாள் மீது உயிரையே வைத்திருந்தார். அதிஷ்டமானவள் என்பதால், வீட்டின் விசேஷங்களிலும், விவசாய வேலைகளிலும் மொட்டையம்மாளைத்தான் முதல் ஆளாக நிற்க வைத்து அழகுப் பார்த்தார்கள். 16 வயதில் உறவுக்காரப் பையனுக்கு, சீர் செனத்தியுடன் மணம் முடித்தார்கள். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம். முதலில் அம்மையோ, அலர்ஜியோ என்று கவனித்தது குடும்பம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளி – நீண்டநாட்கள் மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, உப்பு(பிபி), கண்பார்வை இழப்பு, கிட்னி பெயிலியர் போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
பிறகு, இது தொழுநோயின் ஒரு வகை என உறுதியானது. அதன் பிறகு, அவரது வாழ்க்கையே பட்டுப்போனது. தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு செங்கல்பட்டு திருமணி ஆஸ்பத்திரியே கதியானது. குடும்பத்தினர் நோயைப் பற்றி வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என ஊராரிடம் மறைந்தனர். கணவனோ, சீர் செனத்தியெல்லாம் திருப்பி அனுப்பிவிட்டு, தான் கட்டிய தாலிக் கொடுத்துவிடும்படியும், தனக்கும், அவளுக்கும் ஒன்றுமில்லை என்று ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டி, அடுத்து, தன் மறுமணத்தை உடனே முடித்துக் கொண்டார்.
இன்றும் சிகிச்சையில் இருக்கும், மொட்டையம்மாள் மனமுடைந்துச் சொல்வது “நோயின் கொடூரமும், வலியும்கூட எனக்கு நோகல… என் குடும்பம் என்னை ஒதுக்கியதுதான் என்னால தாங்க முடியாத நோய்” என்பார். “நீ இருந்தா உன் தம்பிகளுக்கு பொண்ணு கிடைக்காது” ன்னு அம்மா சொன்னாங்க. இப்ப அதே வார்த்தையை தம்பிகள், தன் பிள்ளைகளின் கல்யாணத்துக்கும் சொல்றாங்க. ஆனா கூடவே, “நீ சம்பாதிக்கறதுல அத்தை முறைக்கு செய்ய வேண்டிய சீரை செஞ்சிடுன்னுறாங்கமா” , “எனக்கு தோல் மட்டும்தான் மறத்துப் போச்சி, மனசு மறத்துப்போகலையேம்மா” னு அழுவார்.
இப்போது இவர் வெளிநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டே,திருவாண்ணாமலையில் கலா கார்மெண்ட்ஸ்சில் உதவியாளராகச் சேர்ந்து, தையல்காரராக உயர்ந்து தைரியத்துடன் வாழ்ந்து வருகிறார். வாங்கும் சம்பளத்தில், சிறு பகுதியை அங்கிருக்கும் அனாதை இல்லத்துக்கு உதவுகிறார்.
விஜயா:
கும்பகோணம் வலங்கைமானைச் சேர்ந்தவர். பள்ளியில் நீளம் தாண்டும் போட்டி வீராங்கனை. காதல் திருமணம். திடீரென இவரது உடல் முழுவதும் கொப்பளம் வெடித்து தொழு நோய் என்று தெரிந்தது. குஷ்ட நோயாளியின் கணவர் என்ற கேலிப்பேச்சால் தூக்கில் தொங்கினார் அவரது கணவர். உடல் முழுவதும் கொப்பளம் வெடித்த வலியைத் தாங்குவதா, காதல் கணவன் இறந்த துக்கத்தை தாங்குவதா? பிறந்த குழந்தையை காப்பதா? என்று திக்குத் தெரியாமல் கலங்கியது வாழ்க்கை.
அவரது இயல்பே துடுக்குத்தனம் என்பதால், மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரியிலும் நடத்தையில் பழி சுமத்துகின்றனர். இவ்வளவு வேதனையியிலும், தன்னைப்போல நோயுற்ற முதியவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை மனமுவந்துச் செய்கிறார். இரண்டு கால்களும், கைவிரல்களும் இல்லாத சக நோயாளி அரியை திருமணம் செய்துக் கொள்கிறார். தாம்பரம் மெப்ஸ்இல் கிடைத்த வேலையை செய்துக் கொண்டு மகளையும் கொண்ட கணவரையும் காப்பாற்றுகிறார்.
முத்துசா:
‘பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் முத்துசா என்றால் பாம்பே நடுங்கும். பல வகையான கொடிய பாம்புகளுடன் விளையாடிவர் முத்துசா.
தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதற்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.
இவர் ஒரு தொழு நோயாளி. செங்கல்பட்டில் யார் வீட்டில் பாம்பு புகுந்தாலும் அவர்கள் அலறும் அலறல் முத்துசா என்றே இருக்கும். பாம்பு கடிக்கான பச்சிலை வைத்தியமும் தெரிந்தவர். பலமுறை பாம்பு கடித்தும் தன் வைத்தியத்தால் பிழைத்தவர். தன் ஊர் பிள்ளைகளுக்கும் பாம்பின் மீதிருந்த பயத்தை போக்கி, அவர்களுக்கும் பாம்பு பிடிக்கும் வித்தையைக் கற்றுத் தந்தவர். கடைசியில், செங்கல்பட்டு அரசு அதிகாரி வீட்டில் புகுந்த நல்ல பாம்பை பிடிக்கும் போது கடித்துவிட்டது. உடன் இருந்தவர் பாம்பை அடிக்க முற்பட, முத்துசா விடவில்லை. “வேணாம் வாயில்லாத ஜீவன்” என்று தடுத்துவிட்டார். உடனே கையை கயிற்றினால் கட்டிவிட்டு பச்சிலையை மருந்தைச் சாப்பிட்டார். தனக்கு விஷம் இறங்காததை தெரிந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொன்னார்.
மருத்தவமனை ஊழியர்களுக்கோ, கையில் கட்டியிறுந்த கயிறை கழற்றினார்கள் ஆனால் முத்துசா கயிற்றை கழற்றவேண்டாம். பாம்பு கடித்த இடத்தை கிழித்து இரத்தம் வடிய செய்யுங்கள் என்றார். ஆனால் அதை காதில் வாங்காத பயிற்சி மருத்துவர்கள் கயிற்றை அவிழ்த்ததும் சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. மக்கள் அனைவருமே கண்ணீர் வடித்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டிக்கு, கஸ்தூரி:
சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார் ஒரு தொழு நோயாளி. இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.
மூன்று வயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்பட்டார் கஸ்தூரி. செங்கல்பட்டு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையுடன் வளர்ந்தவர். அவர் வயசுக்கு வந்ததும் மருத்துவமனையில்தான். உடனிருந்த நோயாளிகளே தன் பெண் மாதிரி சடங்கெல்லாம் மகிழ்ச்சியாக செய்தனர். இதைப் போலவே, சிறு வயதிலேயே நோயால் பாதிக்கப்பட்ட டிக்கு என்ற ஒரிசா முஸ்லீம் சிறுவனும் மருத்துவமனையிலே வளர்ந்தவன். இருவரும் விரும்பினர். இவர்கள் திருமணத்தையும் உடனிருந்த நோயாளிகளே முன்னிருந்து நடத்தினர். ஆனால் இவர்கள் குழந்தை பெற்று கொள்ளக் கூடாது. எனென்றால், கஸ்தூரியும் டிக்குவும் சாப்பிட்ட மாத்திரைகளின் பக்கவிளைவுகள் அப்படி. பிறக்கும் குழந்தை கை,கால் இல்லாமல் இறக்கை விரிந்த மாதிரி இருக்கும். தலையே இல்லாமல் கூட பிறக்கும் என்றனர் மருத்துவர்கள்.
அதனாலென்ன…. இருவரும் தன் சகநோயாளியின் பெண் குழந்தையை தத்தெடுத்தனர். இப்போது டிக்கு மீன் வியாபாரி. கஸ்தூரி ஒயர் கூடை பின்னுபவர். தன் மகள் சந்தியாவுக்கு பொறுப்பான தாய் தந்தையாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
முஸ்லீம் கணவனின் ரம்ஜானையும், தனது இந்துபண்டிகையும், சேர்த்து தற்போது மாறியிருக்கும் கிறித்துவ பண்டிகையையும் கொண்டாடும்
இவர்களின் வாழ்க்கையில் மதபேதம் இல்லை.
செல்லம்மா வயது 72:
நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பிவிடுகிறார்கள்.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். கணவர் நகை ஆச்சாரி. இவருக்கு ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகள். செல்லாம்மாவின் 60வயது வரை இந்நோய் இருப்பது அவருக்கு தெரியவில்லை. தனக்கு ஏற்படும் சாதாரணக் காயங்கள்கூட ஆறாமல் இருப்பதைக் கண்டு வருத்தமடைந்தார். பிறகு ஆய்வில் தொழுநோயின் பாதிப்பு தெரியவந்தது. தன் அம்மா தங்களை வளர்த்து ஆளாக்கியதை நினைத்து கடைசிவரை கவனிப்புடன் பாரத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர் அவரது பிள்ளைகள். ஆனால், குடியிருக்கும் வீட்டிலோ, தங்கள் குடும்பத்துக்கும் அந்நோய் தொற்றிவிடும் உடனே வீட்டை காலி செய்ய வேண்டும் கூறிவிடுகின்றனர். இப்படி இரண்டு வீடுகள் மாறிய குடும்பத்துக்கு மறுபடியும் வீடுமாறுவதில் சிக்கல் . கடைசியில் அம்மாவை திருமணி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
மற்ற நோயாளிகளின் அவல நிலையைப் பார்த்ததும் தனக்கும் தொழு நோய் என்பதை ஏற்க செல்லம்மாவின் மனம் மறுக்கிறது. பேரன் பேத்தி என்ற வாழ்ந்த செல்லம்மா தான் புறக்கணிக்கப்பட்டு கடைசிவரை மருத்துவமனையிலே இருந்துவிடவேண்டியதை நினைத்து, சாப்பிட மறுக்கிறார். சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுக்கிறார். காயங்கள் பெரிதாகி விரல்களை இழக்கும் நிலைக்குச் சென்றதும், மனநோயாளியானார். இப்போது, மனநோய்க்கும் மருந்து எடுப்பதில்லை. வாரம் ஒரு முறை பாசத்துடன் வரும் தன் பிள்ளையையும் எதிரியைப் போல் பார்க்கிறார். இப்படி மருத்துவமனையின் உள்நோயாளியாக வருடக்கணக்கில் சிகிச்சைப் பெற்றாலும், சுற்றியிருப்பவர்கள் நடத்தும் விதத்தில் மனநோய்க்கு ஆளானவர்கள் ஏராளம்.
மனநோய்க்கு மட்டுமல்ல, சமூக புறக்கணிப்பால், இரயில் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொணடவர்கள் ஏராளம்.
தொழுநோயால் பெண்கள் பாதிக்கப்பட்டால், கணவன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், பெண்களோ கணவனுக்கு தொழுநோய் என்றால், இறக்கும்வரை உடனிருந்து கவனிப்பார்கள்.
இப்படி பல முகங்கள், பல கதைகள்.
இந்த நோய் ஒழுக்கக் கேட்டாலோ, பாவம் செய்வதாலோ வருவது இல்லை. ஊட்டச்சத்து குறைப்பாட்டாலும், நோய் எதிர்ப்பு குறைவதாலும் தோன்றி வீரியமடைகிறது. அதைப்போல், இது பார்த்தவுடன் தொற்றுவதோ, பழகியதும் தொற்றுவதோ கிடையாது. இதனை ஏர் பார்ன் டிசீஸ் [Air Born Disease] என்று வகைப் படுத்துவார்கள். நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம். தொற்றியதும் உடனேயும் வெளிப்பாடாது. வருட கணக்கில் கழித்துத்தான் தெரிய வரும். முக்கியமாக, தொழுநோயின் பாதிப்பு இரண்டு வகைகளில் வெளிப்படும். பொதுவில் தொழுநோய் எளிதில் பரவும் ஒரு நோய் இல்லை எனலாம்.
முதல் வகையில், இஎன்எல் ரீயக் ஷன்(ENL Reaction) இதற்கான மருந்து, ப்ரட்னி சோலான் [Prednisolone] எனும் சிறாய்ட் மாத்திரைகள் மற்றும் ஊசி, டிஎல்டி எனப்படும் [Thalidomide], மற்றும் தடுப்பு மருந்தான எம்பி-எம்டிடி[MB -MDT] அட்டை மாத்திரை. இது 12 மாதத்திற்கானது.
இதை நோயாளிகள் “வாத்தியார் மாத்திரை” என்றே அழைப்பர். ஆனால் தொழுநோய் மட்டுமே உள்ள நோயாளிகளை பலவித புதிய நோய்களுக்கு ஆளாக்குவதும் இந்த வாத்தியார் மாத்திரைதான். நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
நீண்டநாட்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண்பார்வை இழப்பு, சிறு நீரக பாதிப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு ஆட்படுகின்றனர்
டிஎல்டி மாத்திரையை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக நோயாளிகள் மருத்துவமனையில்தான் இருக்கவேண்டும். இதன் பக்கவிளைவுகள் கொடூரமானது. இது தொழுநோயைக் கட்டுப்படுத்தும் ஆனால், பல்வேறு பல நோய்களைக் கொண்டு வரும். நரம்புகள் இழுத்து சுருங்குவதால் முகம் உருமாறி சிங்கம், குரங்கு எலிப் போன்ற மிருகங்களின் தோற்றத்தை பெறுவார்கள். மூக்கு முழுவதுமாக அழுந்தும். மூச்சு விடுவதற்கும் சிரமம். அதில், முழு நேரமும் தூக்கம். உடல் ஊதிப்போதல் இருக்கும். முக்கியமாக, பெண்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது. மீறிப் பிறந்தால், இறக்கைப்போன்ற கைகள், தலையில்லாத முண்டம் போன்று பல்வேறு குறைபாடுகளோடும், சேதங்களோடும் குழந்தை பிறக்கும். இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நல்ல ஓய்வு, சத்தான சாப்பாடு என்ற நல்ல கவனிப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த வாய்ப்பு இவர்களுக்கு இல்லை. இது பக்க விளைவுகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.
மறுபுறம், இந்திய அரசோ தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டுகிறது. இது அப்பட்டமானப் பொய் என்பதற்கு தற்போது சிகிச்சையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த நெஸ்லா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்ராவும், பீகாரைச் சேர்ந்த பூஜா மீனாக்குமாரி என்று தினமும் புதிய நோயாளிகளே வரும் குழந்தைகளே சாட்சி.
இரண்டாவது வகை, அல்சர் ஊண்ட்(Ulcer wound). இதில் கை, கால்களில் உணர்ச்சியற்ற தன்மை அதிகமாக இருக்கும். இதனால், கை, கால்களில் புண்கள் உண்டாகும். எலும்புகள் சக்தியை இழந்து மணல் போல சிதறும், வலி தெரியாததால், விரல்கள் மடங்கி புண்களில் புழு வைக்கும். அடுத்தவர் அதன் நாற்றத்தை தாங்காமல் துரத்தும் வரை,அவர்களுக்கு புண்ணின் தீவிரம் தெரிவதில்லை. இந்த புண்களுக்குப் பிரதான மருந்து யூசால் (EUSOL-Edinburgh University Solution of lime)என்று சொல்லக்கூடிய பிளிச்சிங் தண்ணீர். இந்த வகை நோயாளிகள் சோறு இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் தினமும் கட்டு- டிரஸிங்- இல்லாமல் இருக்க முடியாது. பிற நோய்களில், புண்களின் கட்டைப் பிரிக்கும்போது புண்ணிலிருந்து சீழ் , இரத்தம் வரும். ஆனால் இக்கட்டைப் பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள். ஆனால், கட்டு கட்டுபவர்கள் மிரண்டால் தொழுநோய் புண் தீராது. இல்லை என்றால் புழுக்களே விரல்களை அரித்து தின்றுவிடும்.
புழுவுடன் வரும் நோயாளிகளை கட்டுகட்டுபவர்கள் விளையாட்டாக, “என்னா உன் புள்ளக்குட்டியோட வந்து சேர்ந்துட்டியா?” என்பார்கள். “கிண்டல் பண்ணாதம்மா, தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல்-னு பண்டிகை நாளா வந்திடுச்சி பிசினசுக்குத் {பிச்சை} தொடர்ந்துப் போயிட்டேன், அதான் கவனிக்கமுடியல புழு வெச்சிடுச்சி” என்று சிரிப்பார்கள். தொழுநோயாளிகளை சுத்தமான சூழ்நிலையில் வைத்து அவர்களை ஆரோக்கிய மனிதர்களாக்குவதில் முக்கியமானவர்கள் துப்புரவுத்தொழிலாளர்கள். மற்றவர்கள் பார்ப்பதர்க்கே மிரளும் புழுக்கள் கொட்டும் அழுகிய தசை,ரத்தம்,சீழ் இவற்றோடு அவர்களது மலத்தையும் வாருகிறார்கள் இந்த தொழிலாளிகள்.
நோயாளிகள் விடும் மூச்சுக்காற்றில் கிருமிகள் வெளிப்படும். அருகில் இருப்பவர் நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் தொற்ற வாய்ப்பில்லை. இரண்டும் குறைந்தால் வாய்ப்புக்கள் அதிகம்.
அடுத்து,கட்டுக்கட்டுபவர்களை தொழுநோயாளிகள் தன் வினையை தீர்க்கவந்த தெய்வமாகவே பார்ப்பார்கள். “எங்கள சுத்தியிருக்கறவங்க, சொந்தகாரங்களே எங்களை தொட பயப்படுறாங்க, ஆனா, யார் பெத்த பிள்ளைகளோ எங்க பாவத்தை இப்படி சுத்தப்படுத்தறீங்க” னு உணர்ச்சி வசப்பட்டு …அழுவார்கள். “கை, கால்களில் எந்த வெரல் அழுகியிருக்கோ பார்த்து எடுங்க”, என்றும் கெஞ்சுவார்கள். கட்டுகட்டும் முறைகள் பல உண்டு, ஆனாலும் இவர்கள் கொலுசுக்கட்டு கட்டுமா என்று விரும்பி கேட்பார்கள். புண்ணிருக்கும் விரல்களுக்கு மட்டும் கட்டக்கூடாது, கெண்டைக்காலையும் சேர்த்து கட்டு கட்டவேண்டும் அதுதான் கொலுசு.
அதைக் கட்டி முடிக்கும்போது முடிச்சிப்போடாதே சுருக்குப்போடு என்று கூறுவார்கள். எனென்றால், மறுநாள் கட்டை தானே பிரித்து தயராக இருக்கவேண்டும் அல்லவா? புண்ணைச் சுத்தம் செய்யும்போதும் நாத்தம் அதிகமானால், அவர்களே கூசிப் போவார்கள், “உப்பு வைச்சிக் கட்டுமா நாத்தம் தாங்கமுடியல” என்பார்கள். உப்பு என்பது மெக்னிசியம் சல்பேட். புண்ணில் மேல் இருக்கும் அழுகிய தசையை எடுக்கும். அடுத்து அவர்கள் “புண்ணு ஆறி மூட மாட்டேன்னுது, மேலே வளருது, நீலக் கல்லு தேய்ச்சிக் கட்டுமா” என்பார்கள், நீலக்கல்லு என்பது காப்பர் சல்பேட். “எனக்கு சிவப்பு மருந்து சேராது, யூசால் மட்டுமே வெச்சி கட்டுமா”, சிகப்பு மருந்து என்பது ப்பிடாடின் – இப்படியாக தன் புண்ணுக்கு என்ன, என்ன சிகிச்சை என்பதும் அவர்களுக்குத் அத்துப்படி. இவர்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம். இவர்களின் பிள்ளைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். நோயாளிகளின் பிள்ளைகள் என்று சொல்லவே முடியாது.
இதை, மருத்துவமனை மருத்துவர்களே, புதிதாக மருத்துவம் பயிலும் மாணவர்களிடம், “கேஸ் ஷீட் பார்க்கறதைவிட நோயாளிகள் சொல்றதைக் கேளுங்க சரியாக இருக்கும்” என்பார்கள்.
இக்கட்டைப்பிரிக்கும்போது நூற்றுக்கணக்கில் சின்னதும் பெரியதுமாகக் புழுக்கள் கொட்டும். இதை முதலில் பார்க்கும் பயிற்சி மருத்துவர்களும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்கள்.
தனக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவமனை ஊழியர்களை உறவுமுறையில்தான் அழைப்பார்கள். மருத்துவர்களை அப்பா என்றும், செவிலியர்களை அம்மா என்றும் கட்டு கட்டுபவர்கள், துப்புரவு பணியாளர்களையும் அக்கா, அண்ணா என்றும் அன்போடு அழைப்பார்கள்.
கைகள், கால்கள் விரல்களின்றி மொட்டையாக இருந்தாலும், ஒயர்கூடைப் போடுவது, ஓவியம் வரைவது, கவிதை எழுவது, நாடகம் போடுவது என பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பார்கள்.
நோய்க்கு வைத்தியம் பார்த்துக் கொண்டே வயதானவர்கள் பிசினசுக்கு ( பிச்சைக்கு) கிளம்பி விடுகிறார்கள்.சிலர் சக நோயாளிகளுக்கு இட்லி, சுண்டல், டீ விற்று காலம் தள்ளுகிறார்கள். இப்பவும் டீ 5 ரூபாதான். கோபால் அண்ணன் டீக்கு துப்புரவு பணியாளர்களும், கட்டுகட்டுபவர்களும் வாடிக்கையாளர்கள்.
போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தோமோ குஷ்டத்துல கஷ்டப்படுறோமோ? என்று கூறும் இவர்களை சுற்றி இருப்பவர்கள் புறக்கணித்தாலும், வாழ்க்கையில் விரக்தி அடைவது இல்லை. கை, கால் விரல்கள் இல்லாமல் போனாலும், மடங்கிப்போனாலும், தன் வேலைகளை தானே செய்துக் கொள்கிறார்கள். எடுத்த பிச்சையையும், சக நோயாளிகளுடன் பங்கீட்டு சாப்பிடுவார்கள். முன்பெல்லாம், புறக்கணிக்கப்பட்ட பெண் நோயாளிகள் பாலியல் தொழிலில் தங்களை காத்து கொண்டனர். ஒரு சிலர் போதைப் பொருட்களை விற்பதற்கும், ரவுடியின் கையாட்களாகவும் இவர்களை பயன்படுத்துகின்றனர். சாராயம் காய்ச்சி விற்றவர்களும் உண்டு. இவர்களிடமும் போலீசு மாமூலுக்கு மிரட்டும். இப்படி வாழ்க்கை முடித்து இறப்பவர்களை அடக்கம் செய்ய இவர்களுக்குள் தனி குழு உண்டு.
மலர், செங்கமலம், ராஜி, தன்னை சுற்றியிருக்கும் நாய், பூனை மற்றும் குரங்குகளுக்கு இவர்கள் வைக்கும் பெயர்கள். தங்களை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்பதை விலங்குகள் மீது இவர்கள் பாசம் வைத்திருப்பதை பார்த்தாலே தெரியும். ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சைப்பெறும்போது கையில் இருப்பதை திண்ணக் கொடுத்து எதாவது ஒரு விலங்கை நண்பனாக்கிக் கொள்வார்கள்.
NGO க்கள் தன் வெளிநாட்டு வருமானங்களை கூட்டுவதற்கு இவர்களை போட்டோ எடுத்து புராஜக்ட் செய்துவது தனிக் கதை. மறுபுறம், தொழுநோயாளிகளை இந்து, முஸ்லீம் மதத்தினர் அதிகம் வெறுத்து ஒதுக்குவதால், ஆதரவு காட்டுவதாக அவர்களை கிறித்துவ மதத்தினர் சுற்றி வருவதுண்டு. பழம், பிஸ்கட் என்று தீனிகளை வைத்தே நோயாளிகளை பிடிப்பதுண்டு. அவர்களுடன் ஒன்றியிருப்பதுப் போல் போட்டோ எடுத்து அவற்றை டாலராக மாற்றுக்கிறார்கள். வட்டியில் வயிறு பெருக்கும் மார்வாடிகள், தங்களின் பாவங்களை கழுவ தொழுநோயாளிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். வருடத்திற்கு இரு முறை வண்டியில், ஒருவேளை உணவு, பழையதுணிகள் போர்வைகள் கொடுத்து புண்ணியம் தேடுகிறார்கள். இவர்களில் எவர் ஒருவரும் இவர்களின் நிரந்தர ஆரோக்கியம் பற்றி சிந்திப்பதில்லை.
ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை.
படிக்காதவர்கள், விவரம் தெரியாத குடும்பத்தினர் மட்டுமல்ல, பார்த்தவுடன், பழகியவுடன் தொற்றிக்கொள்ளும் நோய் அல்ல என்று தெரிந்தும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இவர்களை நடத்தும் அவலம் சொல்லி மாளாது. நோயாளியை பார்த்து,”அட்டென்டர் இல்லாம பார்க்கமுடியாது”. “எட்டவே உட்காரு”. “உங்களுக்குனு இருக்கற ஆஸ்பத்திரியிலேயே போய் கட்டுபோட்டுக்கோ” என்று விரட்டுவிடுவார்கள்.
எதுக்கு வந்திருக்கிற? என்றுகூட கேட்காமல், அவர்களின் நோய்க்கும் சம்மந்தமில்லாத மாத்திரைகளை தலையில் கட்டி துரத்துவார்கள்.
அவர்களுக்கென்று இருப்பதாக சொல்லும் தொழுநோயின் ஆராய்ச்சி மருத்துவமனையின் நிலையோ அதைவிட அவலம். 700 ஏக்கர் நிலப்பரப்புடன் உள்ள பெரும் இயற்கை சூழல். சம்பளம் உட்பட அதன் மாத செலவு கோடிக்கணக்கில். மாதம் இலட்சத்திற்கும்மேல் சம்பளம் வாங்கும் மருத்துவர்கள். குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகள், கணினி மயமாக்கப்பட்ட விவரங்கள், காம்பவுண்டுக்குள்ளும் வெளியேயும் சுற்றி வர ஏராளமான வாகனங்கள், மினுக்கும் கட்டிடங்கள், என்று எங்கும் நோங்கினும் கண்ணுக்கு இனிமை. ஆனால், அதற்கு ஆதாரமான தொழுநோயாளிகளின் நிலையோ தீராதக் கொடுமை. 50-60 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளை தவிர புதியதாக எதுவுமே நோயாளிகளுக்கு இல்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் சுவர்களுக்கு பெயிண்டு அடிப்பது, தரைகளுக்கு டைல்ஸ்போடுவது பூச்செடிகளை பராமரிப்பதை தவிர வேறோன்றும் நடப்பது இல்லை. தொழுநோயாளிகளின் சாதாரண சளிக்கும், வெளியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலமே நீடிக்கிறது.
பைபிள் காலத்தில் தொழுநோயாளிகளை ஊரை விட்டே விரட்டி தனி கொட்டடியில் வைத்திருந்த காலம் உண்டு. அவர்கள் மீது ஏசு நாதர் இரக்கம் காண்பித்த கதைகளையும் கேட்டிருப்போம். அன்றிலிருந்து கிட்டத்தட்ட 20 நூறாண்டுகள் கழிந்து விட்டன. எனினும் இந்தியாவில் தொழு நோயாளிகளின் சமூக நிலை பெரிதாக மாறிவிடவில்லை. குடும்பம், சுற்றம் துரத்துகிறது. ஏழ்மை காரணமாக ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டிய நோய் இறுதியில் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது. குடும்ப ஆதரவும் இல்லாமல், வேறு தொழிலும் செய்ய முடியாமலும் அவர்கள் பிச்சை எடுத்தே வாழ நேர்கிறது. சிலர் தமது நோயின் தீவிரத்தை தணித்துக் கொண்டு சாதாரண வேலைகளை செய்து வந்தாலும் தனது நோயை மறைக்க பெரும்பாடுபடவேண்டியிருக்கிறது. பெண்கள் என்றால் இந்த சமூக அவலம் இன்னும் சோகத்தை கூட்டி சுமக்க வைக்கிறது.
இந்த மக்களுக்கு வேலை செய்யும் மக்களின் அர்ப்பணிப்பு ஒன்றுதான் நோயாளிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை. ஒரு சிலர் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்கும் அழைத்துப் போவதுண்டு. கட்டுப் போடுபவர்கள் சிலருக்கும் இந்த நோய் தாக்குவதுண்டு. குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் இவர்கள் இல்லை என்றால் தொழுநோயாளிகளுக்கு மனித குலத்தில் பிறந்ததனால் எந்த பயனும் இருக்காது.
ஏதோ அரசு நிறுவனம் ஒன்று இருப்பதால் இந்த மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச சிகிச்சையாவது இருக்கிறது. சுகாதாரத் துறையில் தனியார் மயம் பூர்த்தியானால் இம்மக்கள் அனைவரும் வலிந்து இறப்பதைத் தாண்டி வேறு வாழ்க்கையை நினைக்கவே முடியாது. செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் இம்மருத்துவமனையை ஒரு முறை நேரில் சென்று பாருங்கள். தொழுநோயின் நாற்றம் இச்சமூக அமைப்பின் நாற்றத்தை புரிய வைக்கும்.