Thursday, June 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 572

மழைவெள்ளம் – நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம்

0

சென்னை : வெள்ளச் சேதம் – தோல்வியுற்று, வக்கற்றுப் போன அரசுக் கட்டமைப்பு

டந்த ஒரு வாரமாக சென்னை மாநகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தினால் கடும் சீரழிவைச் சந்தித்துள்ளன. சென்னை வேளச்சேரி, வில்லிவாக்கம், அம்பத்தூர், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட மக்களை வெள்ளம் காவுகொண்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி பள்ளிக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஏரிகள் உடைப்பெடுத்து, சாக்கடை, கழிவுகள் எல்லாம் மழைநீரோடு கலந்து குடியிருப்புகளை மூழ்கடித்து ஒருவாரகாலமாக மக்களின் அன்றாட வாழ்க்கையை, சொல்லொணாத் துயருக்குள் ஆழ்த்தியுள்ளது.

மணலி பகுதியில் வெள்ள பாதிப்பு


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வெள்ள நீரை வடியச் செய்ய அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனம், மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராடியுள்ளனர். மக்களின் இந்த கோபமெல்லாம் ஆளும் கட்சியினரையும் அவர்களின் அடிமைகளையும் ஒன்றும் செய்துவிடவில்லை. “இயற்கை சீற்றங்களுக்கு அரசை குறை கூறக் கூடாது” என்று இரண்டு சீட்டுகளுக்காக அ.தி.மு.க.வை நம்பியுள்ள ஜவாஹிருல்லா கூறியுள்ளார். அ.தி.மு.க.வின் கொத்தடிமை சி ஆர் சரஸ்வதி “இவ்வளவு மழை பெய்யும்ன்னு வருண பகவான் போனா செய்தார்?” எனத் திமிரோடு கேட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின், விஜய்காந்த் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்து சில உதவிகளைச் செய்த பின்னர்தான், போயஸ்கார்டனை விட்டு வெளியே வந்தார், ஜெயலலிதா. தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு விஜயம் செய்த அவர், வெள்ள நிவாரணத்தைக் கூட ஓட்டுப் பொறுக்கும் காரியத்துக்குத்தான் செய்கிறார் என்பதை, ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசியதில் இருந்தே தெரிந்துகொண்டார்கள் மக்கள்.

மூன்றுநாட்கள் மட்டுமே பெய்த கனமழை, அடித்தட்டு மக்கள் முதல் அப்பார்ட்மெண்ட்வாசிகள் வரை, நரகவேதனைக்குள் தள்ளியுள்ளதற்கு, இயற்கைதான் காரணமா? “முப்பது நாட்கள் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்ததுதான் இவ்வளவு பேரழிவிற்கும் காரணம்” என தமிழக அரசு சொல்கிறது. ஊடகங்களும் இவ்வாறுதான் மக்களை நம்பச் சொல்கின்றன.

நிவாரணம் வழங்குவதில் அரசு காட்டும் மெத்தனத்தை மட்டுமே குறையாகக் கூறிக்கொண்டு தங்கள் பங்குக்கு உணவுப்பொட்டலங்கள், போர்வைகளை வழங்கியதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டுள்ளன, எதிர்க்கட்சிகள்.

அரசும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், இயற்கையின் சீற்றம் மட்டுமே வெள்ளச் சேதத்தை உருவாக்கியதென்றும், அதற்கு உடனடியாக நிவாரணம் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இவைகளே தீர்வு என்றும் கருத்துப் பிரச்சாரம் செய்துவருகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அனைத்தும் மூன்று நாள் மழையிலேயே இவ்வாறு சின்னாபின்னமானதற்கு இயற்கை காரணம் என்பது முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைப்பதாகும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் இம்மாவட்டங்களில் ஏரிகளையும், குளங்களையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், பல அடுக்கு மாடி குடியிருப்புகளும், ஐ.டி. நிறுவனங்களும்தான் இன்று பல்லாயிரக் கணக்கான மக்களை நரகவேதனைக்குள் தள்ளியுள்ளன. இயற்கை தரும் கொடையான மழை நீரைத் தேக்கி வைக்க பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் உருவாக்கிவைத்துப் பாதுகாத்து வந்த நூற்றுக்கணக்கான ஏரிகளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள் சி எம் டி ஏ, அரசுத் துறை அதிகாரிகளின் துணையோடு அழித்துக் குடியிருப்புகளை உருவாக்கியதன் விளைவைத்தான் மக்கள் இன்று சந்திக்கின்றனர்.

ஜேப்பியார் முதல் ஏ சி சண்முகம் வரை கல்விக் கொள்ளையர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டிய கல்லூரிகளும், குளோபல் டிரஸ்ட் மருத்துவமனை போன்ற மருத்துவத் துறை மாபியாக்களும் அரசுத்துறையும் சேர்த்துதான் இந்த அழிவை உருவாக்கியுள்ளனர்.

வேளச்சேரியை ஒட்டியுள்ள சதுப்புநிலங்களைக் கூட விட்டுவைக்காமல் இயற்கை வடிகால்களை கடந்த பதினைந்து ஆண்டுகளில் சூறையாடியுள்ளனர். பல ஏரிகளை தூர்த்தும், வடிகால்களை தூர்வாராமலேயே பல கோடிகளை சுருட்டியுள்ளனர்.

இவை ஏதோ பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டல்ல. இந்த நிலக்கொள்ளையர்களுக்குள் நடந்த உள்குத்துக்கள் கூலிப்படைகள் மூலம் தீர்க்கப்பட்டன. ஊரப்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் சண்டைகளே காரணமாய் இருந்தன என ஊடகங்களே எழுதியிருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித்துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையம், ஆகியவற்றின் அதிகாரிகள் துணையோடு இயற்கையை சூறையாடிய கல்விக்கொள்ளையர்களும், ரியல் எஸ்டேட் மாபியாக்களும்தான் சேர்ந்துதான் மக்களின் வாழ்வைச் சூறையாடி அவர்களுக்கு வெள்ளச் சேதத்தை உருவாக்கினார்கள்.

இந்தக் கிரிமினல்களை நோக்கி சுட்டுவிரலை நீட்டாமல் மக்களுக்கு ரொட்டிப்பொட்டலங்களை வீசி விளம்பரம் செய்கின்றது, புதிய தலைமுறை தொலைக்காட்சி. இதன் உரிமையாளர் பச்சமுத்துவோ, ஏரிகளைக் கொள்ளையிட்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கல்வி ‘வள்ளல்’. இவரின் விளம்பரங்களை போட்டு கல்லாக் கட்டும் ஊடகங்கள் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப்படுத்தப் போவதில்லை.

ஓட்டுக்கட்சிகளில் அ.தி.மு.க, தி.மு.க தொடங்கி வி.சி.க வரை ரியல் எஸ்டேட் கிரிமினல்களின் ஆசி பெறாத கட்சிகளே இல்லை எனும்போது, இவர்கள் எந்த அதிகாரிகளைக் கூண்டில் ஏற்றுவார்கள்?

நிவாரணப் பணிகளைச் செய்யாத அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராடுவதும், அப்போராட்டங்களை தடியடியால் மட்டுமே அரசு சந்திப்பதும், மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத, கையாகாலாத அரசாக அது மாறிப்போய்விட்டது என்பதை நிரூபிக்கின்றது. இயற்கைப் பேரிடரை கையாளக் கூட அரசு எந்திரத்துக்கு வக்கில்லை என்பதும் அதன் உறுப்புகள் அனைத்தும் இற்றுப்போய்விட்டன என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

இயற்கை அழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், இயற்கை வளத்தை சூறையாடும் கிரிமினல் கும்பலையும் துணைபோகும் அதிகாரிகளையும் தண்டிக்கவும் இந்தக் கட்டமைப்பு உதவாது. இவற்றை மக்களே, அதிகாரத்தைக் கையில் எடுத்துத்தான் சாதிக்க முடியும் என்பதுதான் இன்றுள்ள ஒரே சாத்தியமான வழியாகும். மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு மக்கள் அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எழும்பூரில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்

கடலூர் – பருவமழையால் இழப்பு,தோல்வியடைந்த அரசு கட்டமைப்பு.

ழக்கமாக இந்த ஆண்டு அக்டோபர் 20 முதல் பெய்ய வேண்டிய வட கிழக்கு பருவ மழை கடந்த 9, 10 ஆகிய தேதியில் கால தாமதமாக துவங்கியது. இந்த மழை பற்றி வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தும் கோடநாட்டில் ஓய்வு எடுத்த அம்மாவின் அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு மனித உயிர்கள் குடிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் மக்கள் வாழ தகுதியற்றதாய் மாறி இருக்கின்றன. இந்தக் கட்டுரை எழுதும் 18-ம் தேதி வரை 180 பேர் செத்து மடிந்துள்ளனர். இந்த மனித படுகொலைக்கு, தான் ஏற்றுக்கொண்ட வேலையை செய்ய தவறிய தோற்றுபோன இந்த அரசு கட்டமைப்பு தான் முக்கிய காரணம். ஆனால், இந்த துயரங்களுக்கு 3 மாதம் பெய்ய வேண்டிய மழை 3 நாளில் பெய்ததுதான் என்று ஆளும் ஜெயா தனது அறிவியல் ஆய்வை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பருவ மழை தமிழக மக்களை சொந்த மண்ணில் அகதிகளாய் மாற்றியுள்ளது, உண்மையில் மக்கள் தனது வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விவசாய நிலங்களை இழந்து நிற்கின்றனர். இருந்த துண்டு துக்காணி நிலத்தையும், தண்ணீர் விழுங்கி மணலை இழுத்து விட்டதால் ஒரு ஏக்கருக்கு ரூ 3 லட்சம் செலவு செய்தால்தான் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும் என கவலையுடன் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்கள், தட்டு முட்டு சாமான்கள், மாடுகள், ஆடுகள், இன்னும் பிறவற்றையும் சேர்த்தே தின்று தீர்த்துவிட்டது மழைவெள்ளம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தத் துயரங்களை தீர்க்க மக்கள் அதிகாரம் அமைப்புடன் புதிய ஜனநாயகம் பத்திரிகை குழுவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவி செய்யச் சென்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து அதிகம் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் தனது பணியை தொடங்கி தொடர்ந்து செய்து வருகின்றது. இதில் கடலூர் மாவட்டம் விசூர் மற்றும் பெரிய காட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

அந்த ஊருக்கு அருகில் மேலிருப்பு கிராமத்தில் உள்ள கால்வாய், ஏரி வாய்க்கால் மூலமே வெள்ளம் புகுந்து வீடுகளை நாசமாக்கியுள்ளது. எனவே இந்த வாய்க்காலில் குறுக்கே 360 அடி நீளத்திற்கு அணைகட்ட வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டோம். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை பார்த்து பேசிவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என்று சந்தித்து பேசியதில் மக்கள் அதிகாரம் என்றவுடன் உசாரானார். “வேண்டாம் சார் இதை நாங்களே ஏற்பாடு செய்து சரிசெய்துக்கொள்கிறோம் நீங்க உதவி செய்யறதா இருந்தா பக்கத்து ஊருக்கு போங்க” என்று நம்மை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். அரை மணி நேரத்தில் 6 ஜெ.சி.பி வரவைத்து வேலை ஆரம்பமானது, தோழர்களுக்கு ஒரு டாட்டா ஏஸ் வண்டி ஏற்பாடு செய்தார் அதற்கு பின்புதான் தெரிந்தது.நமது வேலை தொடங்குவதற்கு முன்பே அதிகாரவர்க்கம் விழித்து கொண்டது என்று.

கடலூர் வெள்ளச் சேதம்பிறகு அதிக பாதிப்பு ஏற்ப்பட்ட வீசூரில் சிதைந்த வீடுகள், வீட்டுக்குள் குவிந்த மண் குவியல்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டோம். அதன் படி நாமே வேலையை திட்டமிட்டபடி செய்யலாம் என முடிவு செய்து கொண்டனர். அங்குள்ள நிறையக் குடும்பங்கள் ஊரிலிருந்து அருகில் உள்ள காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒருசில குடும்பத்தினர் மட்டும் வீடு வாசலை சுத்தம் செய்ய வந்திருந்தனர் அவர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள் உங்களுக்கு உதவிசெய்ய வந்துள்ளோம் என்று அவர்களுடன் நிவாரண பணியில் இறங்கினர் மக்களுக்கு மிகவும் ஆச்சரியமும் ஒரு புதிய நம்பிக்கையும் தெம்பும் வந்ததுபோல் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த உதவிகளை பார்த்த ஒருவர் ”தம்பிகளா நீங்க யார் பெத்த புள்ளையோ தெரியல எங்களுக்கா இவ்வளவு சிரமப்படுரீங்களே நீங்க நல்லா இருக்கணும் தெய்வம்மாதிரி வந்துகிறிங்க உங்க அமைப்பு வளரணும். ஊரு நல்லா இருக்கும், நாங்களும் இந்த அமைப்பில் சேர்ந்துகிறோம்பா” என்றும் கிராமத்திற்கே உரிய எதார்த்த வார்த்தையில் உணர்வுபூர்வமாக மக்கள் அதிகாரம் அமைப்பை வாழ்த்தி வேலையில் ஈடுபட்டார்.

அடுத்து பெரியகாட்டுப்பாளையம் என்ற ஊருக்கு தனது பணியை தொடங்க விசூரிலிருந்து அந்த ஊர் இளைஞர் ஒருவர் டிராக்டரில் ஏற்றி வந்து பெரியக்காட்டுபாளையத்தில் விட்டுச்சென்றார் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஓட்டு கட்சிக்காரர்கள் படைப்படையாய் சென்று அரிசி, துணி, பணம் என முடிந்த பொருளை கொடுத்து விட்டு சென்றிருந்தனர்,

மக்கள் அதிகாரம் அமைப்பு ஓட்டுக்கட்சிகள் கொடுத்த எதையும் தரவில்லை மக்கள் வாழ்வதற்கு அடிப்படையான வீட்டை சுத்தம் செய்துகொடுத்தனர். ஒரு வீட்டின் பீரோ ஆற்றில் கிடந்தது. வீட்டக்காரர்கள் என்ன செய்வது எப்படி எடுப்பது என கலங்கி நின்ற நேரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆற்றில் இறங்கி அந்த பீரோவை கழுவி தூக்கி வந்து கொடுத்தனர். இன்னொரு வீடு மண்ணோடு மண்ணாக அழுத்திக்கொண்டது. அந்த அழுந்திய வீட்டை மக்கள் அதிகாரம் தோழர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர். அதே போல ஒரு டிராக்டர் சேற்றில் பள்ளத்தில் சிக்கி கொண்டது இதை எடுக்க முடியாமல் தவித்தனர். இதையும் மக்கள் அதிகாரம் அமைப்பினரே மீட்டனர். இப்படி முடியாமல் வேறு வழி தெரியாமல் தயங்கி இருந்த மக்களுக்கு முடியும் என்று வேலை செய்து காட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் மத்தியில் பாராட்டும் இப்படிப்பட்ட அமைப்பும் இருக்கா என ஆச்சரியமும் இருந்தது.

ஒரு பெண்மணியிடம் “உங்களுக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டது” என்றதும்,

“என் உயிரும் இந்த தண்ணியோடு போயிருந்தா பரவாயில்ல என தோணுதுங்க” என்றார்.

“ஏன் இப்படி சொல்றீங்க”

“வீடும் இல்ல, புள்ளீங்க படிக்க புத்தகமும் இல்ல, இனி என்னாங்க செய்யிறது. அதிகாரிங்கள கேட்டா அங்கேயே போங்க. பிறகு ஏற்பாடு செய்கிறோம் என்கின்றனர். வரவங்க எல்லாம் அரிசி துணி கொடுத்துட்டு போராங்க இதை எல்லாம் வாங்கி எங்க வக்கிறது, எங்களுக்கு இது எதுவும் வேண்டாங்க என் புள்ள படிக்க புத்தக்மும் வீடும் ஏற்பாடு செய்தால் போதும்” என்று ஆத்த முடியாத துயரத்தை கொட்டிதீர்த்தார்.

பெரிய காட்டுப்பளையத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே வேறு எங்கெல்லாம் பாதிப்பு இருக்கு என ஊரை தேடி சென்ற போது குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ஓணாங்குப்பம் என்ற ஊரில் மிகப்பெரிய பாதிப்பு என போகும் வழியில் விசாரிக்கும் போது ஒருவர் சொன்னார். உடனே ஓணாங்குப்பத்திற்க்கு சென்றோம். ஓணாங்குப்பத்திற்கும் குறிஞ்சிப்பாடிக்கும் ஐந்து கிலோ மீட்டர், அங்கு போகும் வழி நெடுக்கிலும் ரோடு உடைந்து போகமுடியாத அளவிற்கு சிதைந்திருந்தது,

ஓணாங்குப்பம் 600 பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் இங்கு கூரை, கல் வீடு என 143 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் 540 ஏக்கர் உள்ளன. விவசாய நிலங்களுக்கு பாய்ச்சலாக ஊரின் அருகில் தட்சணா ஏரி ஓடுகிறது.

ஓணாங்குப்பம் கிராமமே வெள்ளம் சூழ்ந்து கொண்டு தனி தீவு போல் காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பரவனாறு அணை உடைந்தது தான். ஆற்றின் கரையோரம் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு உள்ளதாலும், கூடுதலாக என்.எல்.சி-ல் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றியதும் தான்.

இதனால் அதிக பாதிப்புக்குள்ளாகியது ஒனாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி ஆகிய கிராமங்கள்… இதன் காரணமாக கடந்த எட்டு நாட்களாக ஓணான்குப்பம் கிராமத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்களும் கிராமத்திலேயே முடங்கி கிடந்தனர். பக்கத்து ஊருக்கு கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

ஓணாங்குப்பம் ஊரில் உள்ளே நுழைந்ததும் கடலில் மூழ்கிய தீவு போல் காட்சியளித்தது, மக்கள் முகம் முழுவதும் வாடி இருந்தது.

மக்களை சந்திக்கும் முன் எதிரே 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவனைப் பார்த்தோம். அவன் குரல் “எங்கள் ஊருக்கு உயிர் கொடுங்கள்” என்று ஏங்குவதாய் இருந்தது. அந்த மாணவன் ஊரின் பாதிப்பையும் மக்களின் துயரத்தையும் கூறினான்.

“சார் உயிர் சேதம் இல்லை ஆனால் அதற்கு சமமான மெல்ல மெல்ல சாவுற மாதிரி வீடு இழந்து ராத்திரியில் பணியில் குளிரில் பாம்பு பூச்சி இத்தனைக்கும் பயந்து தூக்கமே வராது. இந்த ஐந்து நாளா, கஷ்டபடுரோம்” என்றார்.

“அரசியல் கட்சிக்காரங்க யாரும் வரவில்லையா”

“வராஙக மூணு வேள சோறு தராங்க. ஆனா இன்னிக்கு மதியம் 2:30 வரைக்கும் சாப்பாடு வரல. 2.30 மணி ஆகுது சார்”.

இது போன்று அதிகமாக மழை பெய்யும் போதெல்லாம் இந்த வட்டாரமே பாதிக்கும். இதைப் பற்றி யாரும் கவலைபடுவதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை என ஊர் மக்கள் அரசின் மீது கோபமாக இருக்கிறார்கள். பிறகு மற்ற ஊரின் பாதிப்புகளை தேடி வரும் போது குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள கன்னிதமிழ்நாடு முதல் பாலூர் வரை வாழை பயிர்கள் அனைத்தும் காற்றடித்தும் மழை வெள்ளத்திலும் பாழாய்போய் விவசாயிகளின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வெள்ளத்தால் சுமார் 400 ஏக்கர் சம்பா சாகுபடியான நெற்பயிர் முற்றிலும் நீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டது. அந்த நீரை அப்புறபடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமை தான் நீடிக்கிறது..

மக்கள் அதிகாரத்தை பார்த்து பாதியில் ஓடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்…..

போக்குவரத்து சாலை வெள்ளத்தில் அறுத்துக் கொண்டு சென்றதால் அதிகாரிகளோ, அமைச்சர்களோ 17-ம் தேதி வரை பார்வையிடவோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியவோ முன்வரவில்லை.. ஆனால், 18-11-2015 அன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதனால் அவசரம் அவசரமாக சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சரியாக மாலை 5 மணியளவில் ஒனாங்குப்பம் ஊருக்கு பார்வையிட வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையிலான குழு , மக்கள் அதிகாரம் அமைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததை உளவுப்பிரிவு போலீசார் தகவல் கொடுத்ததால் அவசரம் அவசரமாக பாதியிலேயே திரும்பி சென்று விட்டனர்….

இதுகுறித்து அந்த கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவரை கேட்டதற்கு, “கடந்த 9-ம் தேதியில் இருந்து எங்க ஊருக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எந்த அதிகாரியும் வரவில்லை. VAO மட்டும் தான் வந்து பார்த்துள்ளார். மற்றபடி அரசுக்கு எங்கள் பிரச்சனைகளை தெரியபடுத்த வில்லை.. இன்று ஆளுங்கட்சியில் இருந்து அமைச்சர் வருகிறார் என்ற சொன்னதால் அதிகாரிகளை எதிபார்த்து நாங்கள் அரை மணி நேரமாக காத்து கிடந்தோம்.. ஆனால் ஊருக்குள் வராமல் பாதியிலேயே திரும்பி போய்விட்டனர். யார் வந்தாலும் அப்படி தான் செய்கிறார்கள்…

தற்போது மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு தான் எங்கள் ஊருக்கு வந்து கூட பிறந்த தம்பி போல ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றுசென்று , வீட்டை சுத்தம் செய்வது, பொருட்களை வெளியில் கொண்டு வருவது என்று எல்லா வேலையும் நண்பனை போல செய்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதே வேளையில் “ ரிலையன்ஸ் அறக்கட்டளை தமிழ்நாடு மருத்துவ கழகமும் இணைந்து நிவாரண பொருட்களை வழங்க வந்திருந்தனர். மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்துவிட்டு குளிர்பானம் மற்றும் பிஸ்கட் கொடுத்தனர்.. அதை வாங்க மறுத்த தொண்டர்கள் “நாங்கள் பன்னாட்டு குளிர்பானம் குடிப்பதும் இல்லை, தொண்டு நிறுவனத்தை ஏற்றுக்கொள்வதும் இல்லை” என்று முகத்தில் அறைந்தார்போல் கூறியதால் அமைதியாக சென்று விட்டனர்.

தொடர்ந்து மக்கள் அதிகாரத்தின் தொண்டர்கள் அப்பகுதி இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்…

மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்

மூடு டாஸ்மாக்கை ! – கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல் !

3

தோழர் கோவனின் கைதுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் எழுந்த எதிர்ப்பைக் கண்டு ஆத்திரம் அடைந்தவர்கள் அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல; அவர்களைக் காட்டிலும் பார்ப்பன பாரதிய ஜனதா கும்பலும், அவர்களுடைய ஊடகத்துறை கைக்கூலிகளும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும்தான் ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். கருத்துரிமையை ஆதரிக்கிறோம், அதே நேரத்தில் வன்முறையைப் பரப்புவதை ஏற்கவியலாது; ரசனைக்குறைவான வரிகளை ஏற்கவியலாது என்று விதவிதமாக இவர்கள் மழுப்புகிறார்கள். ஜனநாயகவாதிகளைப் போல நடிக்கிறார்கள்.

04-police-serviceதொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஒரு முன்னாள் போலீசு அதிகாரி, “நம்ம ஊரில் டாஸ்மாக்கு கிடையாது, அடிச்சு தூக்குன்னு எழுதியிருப்பதால் இது தேசத்துரோக குற்றம்தான்” என்று பேசினார். சாராயக்கடையும் தேசமும் ஒன்றே என்பது அவரது விளக்கம். கடைகளைத் தூக்குவதற்கு இவர்கள் கூறும் வழி என்ன? கடைகளை அகற்றுவதற்காக ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. எண்ணற்ற தீர்ப்புகள் வந்துள்ளன.

நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை வைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெடுஞ்சாலை பக்கமாக இருக்கிற கதவை மூடிவிட்டு பின்புறமாக விற்கிறார்கள். டாஸ்மாக் விவகாரத்தில் மட்டுமல்ல, மொத்தத்தில் 21,000 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்படாமல் கிடக்கின்றன. எனவேதான், கோர்ட்டை நம்பிப் பயனில்லை என்று செல்போன் கோபுரத்தில் ஏறினார் சசி பெருமாள்.

சாராயக்கடையாக இருக்கட்டும். ஆற்றுமணல் கொள்ளையாக இருக்கட்டும், எல்லாவற்றிலுமே மக்கள் நலத்தைப் பாதுகாப்பதாக உத்திரவாதம் கொடுத்திருக்கிற அரசுதான் கொள்ளையை முன்னின்று நடத்துகிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒரு ஆக்கிரமிப்புப் படையிடம் சிக்கிய நிலையில் இருக்கிறார்கள். மக்கள் யாரும் புது கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் ஆற்றை விட்டு விடுங்கள், சாராயக்கடையை மட்டும் எடுத்துவிடுங்கள், நாங்கள் பிழைத்துக் கொள்கிறோம் என்று கெஞ்சுகிறார்கள். ரவுடியிடம் கிரிமினல்களிடம் கெஞ்சுவதைப் போல மக்கள் அரசிடம் கெஞ்சுகிறார்கள். கெஞ்சிப்பயனில்லை என்பதால்தான், குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே என்று சொல்கிறோம்.

டாஸ்மாக் கலாச்சாரம்
டாஸ்மாக் கலாச்சாரம் : ஜெயாவிற்கும் அவரது அரசுக்கும் வருமானம், தமிழகத்திற்குப் பெரும் கேடு!

கலிங்கப்பட்டியில் கடையை அடித்து மூடினார்கள். ஊராட்சி மன்றமே வேண்டாம் என்று தீர்மானம் போட்டிருக்கிறது. ஆனால், அதை மீறி கலெக்டர் கடையைத் திறக்கிறார். கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவர், கடைக்கு இடைக்காலத் தடை கேட்டு உயர்நீதி மன்றத்துக்கு ஓடுகிறார். உங்கள் ஊரில் கடை வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் எதற்காக கோர்ட்டுக்குப் போக வேண்டும்? இதற்குக்கூட மக்களுக்கு அதிகாரம் இல்லையா? மக்கள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் ஒழிய, ஒரு சாராயக் கடையைக் கூட மூட முடியாது என்கிறோம்.

இது மக்கள் அதிகாரத்தின் கொள்கை பிரகடனம் மட்டுமல்ல, போலீசு சொல்வது போல தீவிரவாத அரசியலும் அல்ல. மனுப் போட்டு எத்தனை இடங்களில் ஆற்று மணல் கொள்ளையை நிறுத்தியிருக்கிறீர்கள் என்று மக்களிடமே கேட்டுப் பாருங்கள். எந்த இடத்திலும் மனுப்போட்டு மன்றாடி எதுவும் நடக்கவில்லை. மக்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வது ஒன்றுதான் வழி என்று சொல்லுகிறோம். இது எங்களுடைய விருப்பம் அல்ல, சாத்தியமான வழி இது மட்டும்தான் என்று சொல்கிறோம்.

பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள், இந்த அம்மாவைக் கடுமையாகத் தாக்கி பாட்டு எழுதி விட்டார்கள். அதனால்தான் கோபப்பட்டு 124-ஏ போட்டுவிட்டார்கள் என்று. அது உண்மை இல்லை. இந்த அம்மாவை தரக்குறைவாக, சாக்கடை போன்று பேசிய நாஞ்சில் சம்பத் முதல் வளர்மதி வரை பலருக்கும் பதவி கொடுத்து அமர வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், அம்மாவுக்கும் அவர்களுக்கும் கொள்கை ஒற்றுமை இருக்கிறது. டாஸ்மாக்கை அரசு நடத்தினாலும், சரக்கு மிடாஸ் உள்ளிட்ட சாராயக் கம்பெனிகளிடமிருந்து வருகிறது. பார்களில் நடக்கும் கள்ளச்சாராய விற்பனையில் அ.தி.மு.க. ஆட்கள் காசு பார்க்கிறார்கள். போலீசு நிலையம் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் வரை இந்த அரசு அமைப்பின் மீது டாஸ்மாக் பணமழை பெகிறது. எனவே, டாஸ்மாக்கை தூக்குவது அரசையே தூக்குவதுதானே என்று எண்ணித்தான் 124-ஏ போட்டிருக்கிறார்கள்.

மக்கள் அதிகாரம் பற்றி நாம் கூறும்போது, நேர்மையான அதிகாரிகளே இல்லையா, அவர்கள் மூலமாக சட்டப்பூர்வமான முறையிலே சாதிக்க முடியாதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

நேர்மையான அதிகாரி சகாயம் சுடுகாட்டில் படுக்க வேண்டிய நிலைமை. அடுத்து டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா, அவருடைய தோழி டி.எஸ்.பி மகேசுவரி, அப்புறம் முத்துக்குமாரசாமி. இன்னும் மர்மமான முறையில் கொல்லப்பட்ட எண்ணற்ற அதிகாரிகள். நேர்மையாளர்களுக்கு நேரும் கதி இதுதான்!

திருப்பூர் கல்பனா
2006-ல் திருமணமாகி, 2014-ல் தனது கணவன் ஆறுமுகத்தை குடிக்கும், அதனால் ஏற்பட்ட கடனுக்கும், அவமானத்திற்கும் பறிகொடுத்துவிட்டு, மூன்று சின்னஞ்சிறு பெண் குழந்தைகளோடு வாழ்க்கை போராட்டம் நடத்திவரும் திருப்பூரைச் சேர்ந்த கல்பனா

இது மக்கள் விரோத அரசு மட்டுமல்ல, தோற்றுப்போன அரசு. டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும், ரவுடியிசம் பெருகும். போலீசால் தடுக்க முடியாது என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் நத்தம் விசுவநாதன். அதனால்தான் சொல்கிறோம். சாராயத்துக்கு கூறப்படும் நீதியைத் திருட்டுக்கும் பொருத்தலாமே! பிக்பாக்கெட், சங்கிலிப்பறிப்பு, பீரோ புல்லிங்கை தடுக்க முடியவில்லை. எனவே, இவற்றை அரசாங்கமே முறையாகச் செய்கிறோம் என்பார்களா? இதற்குப் பெயர் அரசாங்கமா? இது ஆள அருகதையற்ற அரசு.

எனவேதான் நீ ஒதுங்கு, மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்கிறோம். மேலப்பாளையூரிலோ, அல்லது மற்ற இடங்களிலோ எங்கே மக்கள் அணிதிரண்டு நிற்கிறார்களோ, அங்க நல்ல சாராயமும் விக்க முடியாது. கள்ள சாராயமும் விக்க முடியாது.

பாடலின் சொற்குற்றம் பற்றி ஆராச்சி செய்பவர்கள் பாடலின் பொருள் பற்றி என்ன சொல்லுகிறார்கள்? மிகப்பெரிய சீரழிவுக்கு, தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறை தள்ளப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி இந்த அரசாங்கம் என்ன சொல்கிறது? டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது டாஸ்மாக்கையெல்லாம் மூட முடியாது என்று அறிவித்தார் அமைச்சர். அந்த அமைச்சருக்கு பெயர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர். அரசாங்கத்தின் கொள்கை மதுவிலக்குதானாம், கடையின் பெயர்ப்பலகையில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று எழுதிப் போட்டிருப்பதால் அதுதான் அவர்கள் கொள்கையாம். சொல்கிறார்கள்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ம.க வழக்கறிஞர் பாலு, கடைகளின் விற்பனை நேரத்தையாவது குறைப்பதற்கு உத்தரவிடுங்கள் என்று ஒரு மனுதாக்கல் செய்தபோது, சாராயம் விற்பது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. அதில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றது உயர் நீதிமன்றம்.

ஜெயா-சசி கும்பல்
ஜெயா-சசி கும்பலின் ‘தவ வாழ்க்கை’

இப்படி மோசடிப் பேச்சு பேசுகின்ற, தமிழ்ச்சமூகத்தையே நாசமாக்கிய குற்றவாளிகள், பாடலை, பாடலை எழுதியவர்களை, வெளியிட்டவர்களைக் கூண்டிலேற்றி, இந்த வார்த்தை சரியில்லை, அந்த வார்த்தை சரியில்லை என்று பிரித்து ஆராய்கிறார்கள்.

ம.க.இ.க.வின் பாடல் ஒலிப்பேழைகள் 12 வந்திருக்கின்றன. தென்மாவட்டங்களில் கடுமையான சாதிவெறி கலவரங்கள் நடைபெற்ற போது, அவற்றுக்கெதிராக மேடையில் நின்று முழங்கியிருக்கிறார்கள் இதே கலைக்குழுவினர். மதவெறிக்கு எதிராக நேருக்கு நேர் நின்று கோவையில், ராமேசுவரத்தில் கலைநிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள்.

எது மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விசயமோ அதைச் சொல்லுகிறோம். என்ன மொழியில், உணர்ச்சியில் அதனைச் சொல்வது என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? டாஸ்மாக் எதிர்ப்புப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்கள். குடிசைப் பகுதிகளில் பெண்கள் வெளிப்படுத்தும் கோபத்தை உள்வாங்கிக் கொண்டு மக்கள் மொழியில் எழுதுகிறோம். தவறு என்றால் மக்களே நிராகரித்துவிடுவார்கள்.

உங்க அம்மாவை இழிவுபடுத்தி பேசினா சும்மா விடுவீங்களா?ன்னு தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு அ.தி.மு.க. மகளிர் அணித் தலைவி கேட்டார். எங்கம்மா இப்படி சாராயம் வித்தால் வீட்டை விட்டு துரத்தி விடுவோம் என்பதுதான் இதற்குப் பதில். அடுப்பு வைத்து காச்சினால்தான் சாராயமா? மிடாஸ் ஆலையில் பாலர் வைத்து காச்சினால் அது சாராயம் இல்லையா? திட்டம் போட்டு விற்பனையை அதிகரிக்கும் ஜெயாவை ஊற்றிக் கொடுத்ததாகச் சொல்வதில் என்ன தவறு?

அம்மா உப்பு என்கிறீர்களே, அம்மா டாஸ்மாக்குனு சொல்ல வேண்டியதுதானே என்று விஜயகாந்த் மனைவி கேட்கவில்லையா? நான் உத்தரவிட்டுள்ளேன், என்னுடைய அரசு என்றுதான் எப்போதும் பேசுகிறார் ஜெயலலிதா. சாராயம் விற்கும் அரசு யாருடையது? அது மட்டும் நத்தம் விசுவநாதனுடைய அரசா?

ஜெயா-சசி கும்பல் கொள்ளை
1991-96 ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி அடித்த கொள்ளைக்கு அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இந்த தங்க-வைர நகைகள் சான்று என்றால், தற்பொழுது ஊத்திக் கொடுப்பதன் மூலம் அடிக்கும் கொள்ளைக்குச் சான்று சென்னை வேளச்சேரியில் அக்கும்பல் கைப்பற்றியிருக்கு்ம 11 சொகுசு திரையரங்குகள்.

இந்தப் பாடல் எழுப்புகின்ற மையக் கருத்தைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விட்டு, ஒருமையில் பேசியிருக்கிறீர்கள், உத்தமி, உல்லாசம்னு சொல்லியிருக்கீங்க என்கிறார்கள்.

வளர்ப்பு மகன் திருமணத்தை நாடே காறி உமிழ்ந்ததே, அது உல்லாசம் இல்லையா? 2000 செருப்பு, 3000 புடவை உல்லாசமில்லையா? தங்க நகையும் ஒட்டியாணமும் பூட்டிக்கொண்டு நிற்கிறார்களே, அது உல்லாசமில்லையா? வேறு என்ன வார்த்தைகளால் இதை சொல்வது? நீ வாழவச்ச தெய்வமுனு கூவலைன்னா கொன்னுருவான்னு எழுதியிருப்பதில், ர் விகுதி இல்லாததுதான் பிரச்சினையா? அதில் சொல்லியிருக்கும் கருத்து உண்மையா இல்லையா? அமைச்சர்களைக் கேட்டுப்பாருங்கள்.

பெண் என்பதால் என்னை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று பேசுவதும், அதை முன்னிறுத்துவதும் ஜெயா நடத்தும் அரசியலில் ஒரு உத்தி. ஒரு பெண்ணென்றும் பாராமல் என் முடியை பிடித்து இழுத்துவிட்டார்கள் என்று ஒரு நாடகத்தை தி.மு.க. ஆட்சியின் போது அரங்கேற்றினார்கள்.

அந்த நாடகத்தில் ஒரு கதாபாத்திரமாக இருந்த திருநாவுக்கரசர் அதை அம்பலமாக்கியிருக்கிறார். அப்புறம் சென்னா ரெட்டியைப் பற்றி இதே போல குற்றம் சாட்டி அறிக்கை விட்டார் ஜெ.

அதே நேரத்தில் ராஜீவ் காந்திக்கு சோனியா விசுவாசமா இல்லை, எம்.ஜி.ஆரை அவங்க மனைவி ஜானகி விஷம் வச்சு கொன்னாங்க, போலீசால் பாலியல் வன்முறைக்கு ஆளான அந்தியூர் விஜயா காசுக்காக பொய் சொல்பவர் என்று நாக்கில் நரம்பில்லாமல் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடிய நபர்தான் ஜெ.

சிவகங்கையில நடந்தது என்ன? அந்த சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு காரணமான குற்றவாளிகளில் முதன்மையானவர்கள் போலீசு அதிகாரிகள். ஒருவர்கூட இதுவரை கைது செயப்படவில்லை. அந்தச் சிறுமிக்கு இந்த பெண் முதல்வர் வழங்கியிருக்கும் நீதி என்ன?

குடிகாரப் புருசன் உயிரோட இருந்தால் மனைவியின் நடத்தையை அன்றாடம் சந்தேகித்து நீ என்ன உத்தமியா என்று கேட்கிறான். செத்து விட்டால் இளம் கைம்பெண்களின் நடத்தையை சமூகம் ஆராச்சி செய்கிறது. இப்படி இலட்சக்கணக்கான பெண்களுடைய சுயமரியாதையை இழிவுபடுத்தியிருப்பது ஜெயாவின் ஆட்சி. அதனைக் கேள்விக்குள்ளாக்கினால், பெண் முதல்வரை இழிவுபடுத்தி விட்டதாகத் திசை திருப்புகிறார்கள்.

இது ஒரு தந்திரம். பா.ஜ.க. கையாளுகிற தந்திரம். குஜராத்தில் முசுலீம்களை ஏன் வேட்டையாடினீர்கள் என்று கேட்டால், நீ அல்உம்மாவை ஆதரிக்கிறியா? எங்க ஆளை அந்த ஊர்ல கொன்னாங்களே, அதை ஆதரிக்கிறியான்னு கேட்பார்கள். இல்லை. நாங்க அல் உம்மாவை ஆதரிக்கவில்லை. பின்லேடனை ஆதரிக்கவில்லை. தாவூத் இப்ராஹிம்மை ஆதரிக்கவில்லை என்று நீங்கள் தன்னிலை விளக்கம் தருவீர்கள். உங்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, தன்னிலை விளக்கம் கொடுக்கிற நிலைக்கு ஆளாக்குவது என்பது ஒரு பாசிஸ்டு விவாத உத்தி. அதே உத்தியைத்தான் இவர்கள் கையாளுகிறார்கள். அதற்கு நாம் பலியாக வேண்டுமா என்பதுதான் நமது கேள்வி.

பாடலை வரிவரியாகப் பிரித்து ஆராய்ந்தும், அதிலிருந்துதேசவிரோத குற்றத்துக்கு எந்த ஆதாரத்தையும் அவர்களால் காட்ட முடியவில்லை. கடைசியாக விசயத்துக்கு வந்துவிட்டனர். வினவு இணைய தளமும், அது சார்ந்திருக்கும் ம.க.இ.க. உள்ளிட்ட அமைப்புகளும் இந்த அரசமைப்புக்கு எதிரானவை என்றும், அவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசும், பாரதிய ஜனதாவும் ஒரே குரலில் ஊடகங்களில் பேசுகின்றனர்.

ஐயா ஆளும் வர்க்க கனவான்களே, நாங்கள் இந்த அரசமைப்புக்கு எதிரானவர்கள்தான். அதை நீங்கள் என்ன சொல்வது, நாங்களே சொல்கிறோம். இந்த அரசமைப்பின் தோல்வியை நீங்களே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அதிகாரத்தை மக்கள் தம் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகையதொரு ஜனநாயக பூர்வமான அரசமைப்பை புதிதாக உருவாக்க வேண்டும் என்கிறோம்.

மக்கள் எங்களை ஏற்பதற்குக் காரணம் எங்கள் செயல்பாடு மட்டும் அல்ல. அந்தப் பெருமையெல்லாம் உங்களையே சேரும். டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய மாவட்ட ஆட்சியர்கள் மக்களுடைய குரலுக்கு செவிசாய்த்திருந்தால், ஒருவேளை இந்த அரசாங்கம் கடைகளை மூடி பெண்களின் கண்ணீரைத் துடைக்க முன்வந்திருந்தால், இந்தப் பாட்டு உங்களை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா?

இவர்கள் ஒரு சிறு குழு என்று சொல்கிறீர்கள். ஆனால், இந்த சிறு குழுவைப் பார்த்து அஞ்சுகிறீர்கள். ஏனென்றால், பாடல் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மக்கள் மத்தியில் பரவுகிறது.

இதை எல்லாக் கட்சியினரும் ஆதரித்துப் பேசுகிறார்கள். கட்சி அரசியலே தெரியாத மக்களும் பெண்களும் பேசுகிறார்கள். ஏன்? தாங்கள் சொல்ல நினைத்ததை இந்தப் பாடல் சொல்கிறது என்று எங்களில் அவர்களை அடையாளம் காணுகிறார்கள். அது உங்களை அச்சுறுத்துகிறது. இன்று டாஸ்மாக் பாடலில், நாளை இன்னொன்றில், இன்னொன்றில் என்று இது தொடர்ந்து விடுமோ என்ற அச்சம் உங்களைப் பிடித்தாட்டுகிறது.

ஒருவேளை உங்களது அதிகார பலத்தைக் கொண்டு எங்களைத் தடை செய்வதில் நீங்கள் தற்காலிகமாக வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், மக்களுக்கு எதிராக நடந்துகொள்வதிலிருந்து உங்களை நீங்களே ஒரு போதும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. டாஸ்மாக் பார்களில் அ.தி.மு.க. வினரின் கொள்ளையை, மிடாசு சாராயக் கம்பெனியை, பி.ஆர்.பி. நடத்தும் கிரானைட் கொள்ளையை, வைகுந்தராஜனின் தாதுமணல் கொள்ளளையை. எதை உங்களால் நிறுத்த முடியும்? ஊழல், அதிகார முறைகேடுகளிலிருந்து உங்களைப் பிரிக்க முடியாது. பீனிக்ஸ் மாலிலிருந்து சசிகலாவை பிரிக்க முடியாது.

அது முடியாதவரை எங்களை ஒரு போதும் உங்களால் தடுக்க முடியாது.

_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?

4

சிவகங்கை சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை: சமூகம் மற்றும் அரசு உறுப்புகளின் அருவருக்கத்தக்க வீழ்ச்சி!

மிழகத்தின் தென்பகுதியிலுள்ள சிறு நகரமான சிவகங்கையைச் சேர்ந்த சுகந்தி, திவ்யா என்றெல்லாம் ஊடகங்களால் அழைக்கப்படும் சிறுமி மீது நடத்தப்பட்டுள்ள தொடர் பாலியல் வன்கொடுமை நமது ஈரக்குலையை நடுங்க வைப்பதாக உள்ளது. இந்தச் சம்பவம் மிகக் கொடூரமான கிரிமினல் குற்றம் என்பதையும் தாண்டி, குடும்பம், சட்டபூர்வ அதிகார அமைப்புகள், அறம் ஆகியவற்றின் அதலபாதாள வீழ்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

அந்தச் சிறுமி அவளின் எட்டு வயதிலிருந்தே கட்டாய பாலியல் வல்லுறவில் சிக்கவைக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டிருக்கிறாள். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து அநாதரவாக நின்ற அச்சிறுமியைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட தாத்தா, அப்பா, அண்ணன், மாமா ஆகியோர், அதற்கு மாறாக அவளைச் சிறுமி என்றும்கூடப் பாராமல் திரும்பத்திரும்ப பாலியல் பலாத்காரப்படுத்தியதாக அச்சிறுமியே வாக்குமூலம் அளித்திருக்கிறார். இவர்களோடு, அவளின் நெருங்கிய உறவினர்களான சுரேஷ்குமார், செந்தில்குமார், அண்ணனின் நண்பன் அரவிந்த், பக்கத்து வீட்டில் வசித்துவந்த நடத்துநர் நமச்சிவாயம் எனப் பல மிருகங்கள் அச்சிறுமியின் அநாதரவான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு சின்னாபின்னபடுத்தியிருக்கிறார்கள்.

பாலியல் குற்றவாளிகள்
சிவகங்கை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் (கடிகாரச் சுற்றுப்படி) சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி, சகோதரன் கார்த்திக் மற்றும் அரவிந்த், முத்துராக்கு, சுரேஷ், நமச்சிவாயம், செந்தில், போலீசு துணை ஆய்வாளர் சங்கர்.

தனக்கு நேர்ந்த இந்த சகிக்கமுடியாத கொடுமையைத் தனது அத்தை செல்வியிடம் சொன்னதையடுத்து, அவர் தன்னை சிவகங்கை போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசு உதவி ஆய்வாளர் சங்கரிடம் புகார் கொடுக்க வைத்ததாகவும், அவரோ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகத் தன்னை மிரட்டியே பலமுறை பாலியல் பலாத்காரப்படுத்தியதாகவும் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார், அச்சிறுமி. போலீசு உதவி ஆய்வாளர் சங்கர் அந்த சிறுமியைப் பலமுறை மதுரைக்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக சாராயத்தைக் குடிக்க வைத்து பாலியல் பலாத்காரப்படுத்தியிருப்பதோடு, தனக்கு நெருக்கமான நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் சிவக்குமார், கான்ஸ்டபிள் ராஜாராம் ஆகியோருக்கும் அச்சிறுமியைப் பலியாக்கியிருக்கிறான். இந்த மிருகங்கள் அச்சிறுமியைக் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளன. சிவக்குமார், தான் மட்டுமின்றி, அச்சமயத்தில் தென் மாவட்ட ஐ.ஜி. யாக இருந்த அதிகாரி உள்ளிட்ட மூன்று உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அச்சிறுமியைக் கூட்டிக் கொடுத்து சீரழித்திருக்கிறான். இந்த உண்மைகளை அச்சிறுமி வாக்குமூலமாக அளித்திருக்கிறார் என்பது ஒருபுறமிருக்க, விசாரணையின் ஆரம்ப நிலையிலேயே போலீசின் குற்றங்கள் அனைத்தும் அம்பலத்திற்கு வந்துவிட்டன.

அச்சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், தன்னைச் சீரழித்த குற்றவாளிகளையும் கடந்த ஜூன் மாதமே காரைக்குடி நகர மாஜிஸ்டிரேட்டிடம் வாக்குமூலமாக அளித்துவிட்டார். தன்னைப் பாலியல் பலாத்காரப்படுத்திய சிவக்குமாரை அடையாளம் காட்டியிருப்பதோடு, மற்ற போலீசு அதிகாரிகளின் அடையாளங்களையும் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ஆனாலும், கடந்த செப்டம்பர் வரையிலும் அச்சிறுமியின் தந்தை முத்துபாண்டி, அண்ணன் கார்த்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த வழக்கு ஒரு அடிகூட நகரவில்லை. சென்னையில் ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ள போலீசு அதிகாரி, மற்றும் உதவி ஆணையர், ஐ.ஜி. பதவிகளில் உள்ள இரு போலீசு அதிகாரிகளின் பெயர்கள் குற்றவாளிகளின் பட்டியலில் இருப்பதனாலேயே, விசாரணை திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டது. சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்ற நீதிமன்றமும் போலீசின் கூட்டுக் களவாணியாகச் செயல்படுகிறது.

இந்த நிலையில்தான் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் வின்சென்ட் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட எட்டு பேர் அடுத்தடுத்து கைது செயப்பட்டாலும், நுண்ணறிவு ஆய்வாளர் சிவக்குமாரும், அவனோடு கூட்டுச் சேர்ந்து அச்சிறுமியைச் சீரழித்த உயர் போலீசு அதிகாரிகளும் கைது செயப்படவில்லை. இக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயரைக்கூட வெளியிடாமல் அவர்களைக் கம்பி எண்ணுவதிலிருந்து காப்பாற்றத் துடிக்கிறது, தமிழக போலீசு. இவ்வழக்கு விசாரணை ஏதோ உண்மையாகவும் வேகமாகவும் நடைபெறுவது போலக் காட்டுவதற்காகவே சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

09-sivagangai-girl-2தமிழக போலீசு காமுகர்களின் கூடாரம் என்பதை சிவகாசி ஜெயலட்சுமி விவகாரம் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின் போக்கில் அதனை உறுதிப்படுத்தும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நுண்ணறிவு ஆய்வாளர் சிவக்குமார் தனக்கு ஒதுக்கப்பட்ட “டியூட்டியை”ப் பார்ப்பதைவிட, அப்பாவி பெண்களை வேட்டையாடும் காமுகனாவும், தன்னால் வேட்டையாடப்பட்ட பெண்களைத் தனது மேலதிகாரிகளுக்குக் கூட்டிக் கொடுக்கும் புரோக்கராகவும் செயல்பட்டு வந்திருக்கிறான். குறிப்பாக, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு போலீசு உயர் அதிகாரி தூத்துக்குடி பகுதியில் எஸ்.பி. ஆக இருந்த காலத்திலிருந்தே, இந்த சிவக்குமார்தான் அவருக்கு “வெத்தலைப் பெட்டியாக” இருந்து வந்திருக்கிறான். அந்த அதிகாரிக்கு மதுவும் மாதுவும் சப்ளை செய்வதன் மூலமே தன் மீது எடுக்கப்பட்ட துறை விசாரணைகள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறான். அந்த அதிகாரி மதுரையில் ஐ.ஜி.யாக பதவியேற்றுக் கொண்டவுடன், சிவக்குமாரை மதுரைக்கு இடமாற்றம் செய்திருக்கிறார். சிவக்குமார் தன் பங்குக்கு இந்தச் சிறுமி உள்ளிட்டுப் பல பெண்களை அந்த அதிகாரியின் இச்சைக்குப் பலி கொடுத்திருக்கிறான். (தினகரன், 9.10.
2015, பக்.11)

“இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இது முதல் சம்பவம் இல்லை. அவர்கள் எஸ்.பி.யாகப் பணியாற்றிய காலத்தில் இருந்தே பெண்கள் விசயத்தில் படுமோசமாக இருந்துள்ளனர். இப்போது, ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி. என முக்கியப் பொறுப்புகளுக்கு வந்த பிறகும் பெண்கள் விசயத்தில் மோசமாக இருக்கின்றனர். அவர்கள் மீது பல செக்ஸ் குற்றச்சாட்டுகள் வந்தபோதெல்லாம் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வைத்து மூடிமறைத்துவிட்டனர்” எனக் குறிப்பிடுகிறது, ஜூ.வி. இதழ். (25.10.15, பக்.03)

இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடந்த சூரியநெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை முப்பதுக்கும் மேற்பட்டோர் நாற்பது நாட்களாகத் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிச் சீரழித்தனர். ஒருவிதத்தில் அதனைவிடக் கொடூரமானது சிவகங்கை சிறுமியின் கதை. இவள் நான்கு ஆண்டுகளாக 26 பேரால் மாறிமாறி பாலியல் வன்முறைக்கும், கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கும் ஆளாகி, சித்திரவதையை அனுபவித்து, தற்கொலைக்கு முயன்று தப்பித்து, நடைப்பிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறாள். ஆனாலும், நமது நீதியரசர்கள் அவள் அனுபவித்த சித்திரவதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், மற்றொரு சாதாரண குற்ற வழக்காகவே இதனையும் கருதி விசாரணையை மெத்தனமாக நடத்தி வருகிறார்கள். போராடும் வழக்குரைஞர்களை கிரிமினல்கள் என சாடி, அவர்களின் தொழில் உரிமத்தைப் பறிக்கத் துணிந்த நீதியரசர்களுக்கு, போலீசு அதிகாரிகள் அச்சிறுமிக்கு இழைத்துள்ள குற்றங்கள் பெரிதாகப்படவில்லை. குற்றமிழைத்த போலீசு அதிகாரிகளின் பதவியைப் பறிக்காமலேயே விசாரணை நடைபெறுவதை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அச்சிறுமியின் தந்தை, அண்ணன் உள்ளிட்ட சாதாரண நபர்கள், அவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டவுடனேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். ஆனால், அதே குற்றத்தைச் செய்த போலீசு அதிகாரிகளின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன; அவர்கள் பணியிடை நீக்கம் செயப்படவில்லை; அவர்கள் கைது செய்யப்படுவதற்கு மாறாக, அவர்களைத் தப்பவைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவமெல்லாம் போலீசுக்காரன்கள் முன் செல்லாக்காசாக நிற்கிறது. சாதாரண நபர்களுக்குக் கிடைக்காத இந்தப் பாதுகாப்புதான், நாலாவிதமான கிரிமினல் குற்றங்களைச் செயும் துணிச்சலையும் திமிரையும் போலீசுக்காரன்களுக்கு அளிக்கிறது.

“பாரதிய குடும்பங்கள்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மிகச் சிறந்த அமைப்பு முறை” என ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வக்காலத்து வாங்கி வரும்வேளையில்தான், தான் பாதுகாக்க வேண்டிய ஒரு சிறுமியை குடும்பமே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வக்கிரம் வெளிவந்திருக்கிறது. இந்தச் சம்பவம் விதிவிலக்கானது என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்களில் அப்பா, அண்ணன், மாமா உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களும், அக்கம் பக்கத்தில் வசிக்கும் “அங்கிள்களும்” கணிசமாக இருப்பதைப் பல புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. ஒருபுறம் ஆணாதிக்க கருத்துக்களும், இன்னொருபுறம் நுகர்வு வெறிப் பண்பாடு பரப்பும் வக்கிரங்களும் இணைந்து பெண்களுக்குத் தெரு மட்டுமல்ல, வீடும்கூட பாதுகாப்பற்றது என்ற சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளன. கட்டுப்பாடற்ற குடிப்பழக்கம் இந்தச் சூழ்நிலையை மென்மேலும் மோசமாக்கி, குடும்பத்தைப் பெண்களுக்கு அச்சமூட்டக்கூடிய இடமாக மாற்றியிருக்கிறது.

டெல்லியில் நிர்பயா எனப்பட்ட மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை ஊடகங்கள் மிகப் பெரிய அளவிற்கு விவாதத்திற்கு உள்ளாக்கின. அக்குற்றத்தைச் செய்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்கக் கோரி பெருந்திரளான மக்கள் பங்கேற்ற போராட்டங்கள் டெல்லியில் நடந்தன. ஆனால், தமிழகத்தில்? போலீசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே இந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழ் ஊடகங்கள் ஒதுக்கி வைத்துவிட்டன. ஓரிரு பத்திரிகைகளில் வழியாக இந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளியே தெரிந்த பிறகும் அதைக் கண்டித்து எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, கண்டனங்களோ ஓட்டுக்கட்சிகளிடமிருந்தும் வரவில்லை. தமிழக மக்களும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் கண்டுகொள்ளவில்லை.

கோவையில் ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரப்படுத்திய குற்றவாளிகளுள் ஒருவனைத் தமிழக போலீசு ‘போலி’ மோதலில் சுட்டுக் கொன்ற சமயத்தில், அதனை வெடிவெடித்துக் கொண்டாடியது தமிழகம். இந்தச் சம்பவத்திலும் ஒரு சிறுமி திரும்ப திரும்ப பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். ‘சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்புமிக்க’ போலீசு அதிகாரிகளுள் சிலர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். கோவை சம்பவத்திற்கு அளிக்கப்பட்ட ‘நீதி’யின்படி பார்த்தால், அந்த காக்கிச்சட்டை குற்றவாளிகளை நடுத்தெருவில் தூக்கில் போட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளிகளோ இன்னும் அதிகாரமிக்க பதவிகளில் இருந்து வருகிறார்கள். அந்த போலீசு அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்கு என்ற குறைந்தபட்ச நியாயத்தைக் கேட்கக்கூடத் திராணியற்று, மௌனம் காக்கிறது, தமிழகம். அந்தளவிற்கு அதிகாரத்தைக் கண்டு பயப்படும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, தமிழகம்.

சூரியநெல்லி வழக்கில் ஒரு அரைகுறையான தீர்ப்பைப் பெறுவதற்குப் பாதிக்கப்பட்ட சிறுமியும், பல்வேறு மகளிர் அமைப்புகளும் ஏறத்தாழ 18 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. சிவகங்கை சிறுமி வழக்கிலோ ஆரம்பகட்ட விசாரணையே செல்வாக்கு படைத்த குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ள வழக்குரைஞர் வின்சென்ட் மீது குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. குற்றமிழைத்த போலீசு அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்க முன்வராத ஜெயா அரசு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்து வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயலுகிறது. இந்த நிலையில் தமிழக மக்கள் தொடர்ச்சியான, துணிச்சலான போராட்டத்தை நடத்தாமல், பாதிக்கப்பட்ட சிவகங்கை சிறுமிக்கு முழுமையான நீதி கிடைக்காது என்பது உறுதி. ஆனால், தமிழகமோ அமைதி காக்கிறது. இந்த அமைதிதான் அந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைவிட அச்சுறுத்துவதாக உள்ளது.

– குப்பன்
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

பா.ஜ.க பாசிஸ்டுகளின் ஜனநாயக் காதல் !

0

தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மையும்.

அருண் ஜெட்லி
நிதியமைச்சர் அருண் ஜெட்லி

“தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை!” – மோடி அரசின் “தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தை” ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் விமரிசனம் இது. நீதிபதிகளின் அதிகார வரம்பை மட்டுமின்றி, அருகதையையும் கேள்விக்குள்ளாக்கி அருண் ஜெட்லி விமரிசித்துள்ள போதிலும் உச்ச நீதிமன்றம் அடி வாங்காதது போல நடித்து நிலைமையைச் சமாளித்துக் கொண்டது. ஆனால், நவம்பர் 5-ம் தேதியன்று நீதித்துறையை அழிக்க முயற்சி நடப்பதாக மேற்கூறிய தீர்ப்பை வழங்கிய அமர்வின் மூத்த நீதிபதி கேஹர் குற்றம் சாட்ட, உடனே ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் (பா.ஜ.க.வினர்) நீதிபதிகளை எதிர்த்து அங்கேயே கூச்சலிட்டதாகத் தொலைக்காட்சி செய்திகள் கூறின.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கெனவே நிலவி வரும் முறைகேடுகள் தோற்றுவித்துள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு, மொத்த நீதித்துறையையும் விழுங்கும் நோக்கத்துடன் பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்ட, தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC), நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்து அளித்த தீர்ப்பினால், ஆர்.எஸ்.எஸ். கும்பல் சகிக்கவொண்ணாத ஆத்திரம் கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளே மேற்கண்ட சம்பவங்கள்.

மூத்த நீதிபதி ஜே.எஸ்.கேஹர்.
தேசிய நீதித்துறை நியமன ஆணையச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அமர்வின் மூத்த நீதிபதி ஜே.எஸ்.கேஹர்.

நீதிபதி பதவிகளை ஆக்கிரமித்து, நீதிமன்ற வளாகங்களையே ஷாகாக்களாக மாற்றுவதற்கு சங்க பரிவாரம் தீட்டியிருந்த சதித்திட்டத்திற்கு இது ஒரு தற்காலிகப் பின்னடைவு. அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தனது நோக்கத்துக்கேற்ப ஆடவைக்க மோடி அரசால் முடியவில்லை என்றும் இதற்கு நாம் பொருள் கொண்டுவிடக்கூடாது.

அரசின் கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் முதல் அதிகார வர்க்கம் வரையில் எல்லா நாற்காலிகளையும் பார்ப்பன பாசிஸ்டுகள் ஆக்கிரமித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அமித் ஷா, வன்சாரா போன்ற கொலைகாரர்கள் விடுதலை, குஜராத் படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்த வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி, மாயா கோத்னானிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி ஜியோத்ஸ்னா யாக்னிக் ஆகியோருக்குக் கொலை மிரட்டல், தீஸ்தா சேதல்வாத் மீதான பொய்வழக்கு போன்ற பல சான்றுகள், மோடி அரசின் தாளத்திற்கு நீதிமன்றங்கள் ஆடத்தொடங்கி விட்டதைக் காட்டுகின்றன.

இருப்பினும் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் சுமார் 384 நீதிபதி பதவிகளை விழுங்குவதற்கு மோடி அரசு போட்டிருந்த திட்டத்துக்கு இந்த தீர்ப்பு ஒரு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

நாடாளுமன்றம்-சட்டமன்றங்கள், நிர்வாக எந்திரம், நீதித்துறை ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களுக்கிடையில் தத்தம் அதிகார எல்லை குறித்து அவ்வப்போது மோதல் வெடிப்பதும் பின்னர் அவை தமக்குள் சமரசமாகிக் கொள்வதும் நாம் இதுவரை காணாத நிகழ்வுகள் அல்ல. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் யாருடையது என்பதுதான் இந்தப் பிரச்சினையின் மையம் என்ற போதிலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் பெரும்பான்மை மக்களின் விருப்புக்கும் இடையிலான மோதலாக இது சித்தரிக்கப்படுகிறது.

***

01-banner1993-க்கு முன்பு வரையில் நீதிபதிகளை நியமிக்கும் முதன்மை அதிகாரம் அரசிடம்தான் இருந்தது. “உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு முன்னர், தலைமை நீதிபதியை அரசு கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்” என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதன் பொருள் ‘ஒப்புதல் பெறவேண்டும்’ என்பதுதான் – என்று இதற்கு 1993-ல் விளக்கமளித்தது உச்ச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம், நீதிபதிகளைத் தெரிவு செய்தது. பின்னர் 1998-ல் அளிக்கப்பட்ட இன்னொரு தீர்ப்பின்படி இது ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியமாக மாற்றப்பட்டது. “நமக்கு நாமே திட்டம்” என்று கிண்டலாக அழைக்கப்படுகின்ற, நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்து கொள்ளும் இந்த முறை நீதித்துறை ஊழலின் அடிக்கொள்ளியாக இருந்து வருகிறது.

இதனை ரத்து செய்து நீதிபதிகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய ஆணைய மசோதாவை ஐ.மு.கூ. அரசு, 2013-ல் கொண்டு வந்தது. எனினும், அது நிறைவேறுவதற்கு முன்னரே மக்களவை கலைக்கப்பட்டுவிட்டது. 2014 மே மாதத்தில் பதவியேற்ற மோடி அரசு, ஆகஸ்டு மாதத்திலேயே நீதித்துறை நியமன ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. சர்வகட்சி ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

“உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் இரு மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு பிரபல நபர்கள் – என 6 பேர் கொண்ட குழு நீதிபதிகளைத் தெரிவு செய்யும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகிய மூவரும் சேர்ந்து இரண்டு பிரபல நபர்களை முடிவு செய்வர். 6 பேர் கொண்ட இந்தக் குழுவில் எந்த இரண்டு பேர் ஆட்சேபம் தெரிவித்தாலும், குறிப்பிட்ட நபர் நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுத்து நிறுத்தலாம்” என்று கூறியது இச்சட்டம்.

இந்தச் சட்டத்தின் விளைவாக நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் பெற்றிருந்த மேலாண்மை மிக்க அதிகாரம் ரத்து செயப்படும். அது மட்டுமின்றி, மற்றெல்லா நிறுவனங்களையும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மோடி அரசு, நீதித்துறை நியமனங்களையும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்பையும் இச்சட்டம் அளிக்கிறது. உளவுத்துறை மூலம் வதந்திகளைப் பரப்பி, கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதைச் சதித்தனமான முறையில் தடுத்த மோடி அரசுக்கு, தனக்கு ஒவ்வாத யாரையும் நீதிபதியாக நியமிக்க முடியாமல் தடுப்பதற்கான அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.

கீழிருந்து மேல் வரை நீதித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதும், நீதிபதிகள் நியமனத்தில் நிலவும் அப்பட்டமான முறைகேடுகளும், இரகசியத்தன்மையும், மக்களுக்கு எந்த விதத்திலும் பதிலளிக்கத் தேவையில்லாத வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பும், ஊழல் முதல் பாலியல் குற்றங்கள் வரையிலான எதற்கும் நீதிபதிகளைத் தண்டிக்கவியலாத நிலை நிலவுவதும், நீதித்துறைக்கு எதிராக உருவாக்கியிருக்கும் பொதுக்கருத்தின் துணை கொண்டுதான் இந்த சட்டத்தை மோடி அரசு நியாயப்படுத்திக் கொள்கிறது. ஆனால், ஊழல் நீதிபதிகளைத் தண்டிப்பதற்கான வழிமுறை உள்ளிட்ட எதையும் இந்த சட்டம் முன்வைக்கவில்லை. ஏனென்றால், நீதித்துறையைச் சீரணிப்பதுதான் மோடி அரசின் நோக்கமேயன்றி, அதனைச் சீரமைப்பது அல்ல. அவ்வாறு சீரமைப்பதும் இயலாது.

நீதித்துறையின் சீர்குலைவு என்பது இந்த மொத்த அரசமைப்பின் தோல்வியுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டது. கட்சிகள், அதிகார வர்க்கம் உள்ளிட்ட மற்றெல்லா நிறுவனங்களும் தோற்று அம்பலப்பட்டு நிற்கும் நிலையில், இந்த அரசமைப்பின் நம்பிக்கை நட்சத்திரமாக நீதித்துறை ஆளும் வர்க்கத்தால் சித்தரிக்கப்பட்டது. நீதித்துறையைக் கைப்பற்றுவது என்ற தங்களது உடனடி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டு விட்டதனால், ஆத்திரம் கொண்டு தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மை என்று நீதிபதிகளைப் பழிக்கிறார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலர்களான பார்ப்பன பாசிஸ்டுகள். அவமதிக்கட்டும். அவமதிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானே உண்டு.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை

10

நேற்று 17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் குழுமியிருந்தனர்.

தோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.

பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.

சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !

kovan's release (4)

– செய்தி, புகைப்படங்கள், வீடியோ: வினவு செய்தியாளர்கள்

சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து

7

டந்த செப்டம்பர் மாதத்தில்டெல்லியிலுள்ள சவூதி அரேபிய தூதரக முதன்மைச் செயலாளரான மஜீத் ஹசன் அசூர், நேபாள நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களைப் பாலியல் அடிமையாக வைத்து சித்திரவதை செய்த விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கும்பல் பாலியல் வன்முறை, இயற்கைக்கு மாறான உடலுறவு, ஆபாச வசவுகளுடன் அடித்துத் துன்புறுத்தல், பட்டினி போட்டு சித்திரவதை – என அப்பெண்கள் நாயைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு கொடூரமாக வதைக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த 30 மற்றும் 50 வயதாகும் இவ்விரு பெண்களும் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளராக வேலை வாங்கித் தருவதாகக் கூறிய டெல்லியைச் சேர்ந்த பெண் கடத்தல் பேர்வழியிடம் ஏமாந்து, தரகர்கள் மூலம் குர்கான் நகரின் மேட்டுக்குடி பங்களா பகுதியில் குடியிருக்கும் சவூதி அரேபிய தூதரக அதிகாரியிடம் கடந்த ஜூலையில் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். அன்றிலிருந்து தூதரக அதிகாரியும் அவனது 10-க்கும் மேற்பட்ட கூட்டாளிகளும் அன்றாடம் அப்பெண்கள் மீது கும்பல் பாலியல் வன்முறையை ஏவி கொடூரமாக வதைத்துள்ளனர். இக்கொடுமையை அப்பெண்கள் எதிர்த்தபோது கத்தியால் குத்தப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தூதரக அதிகாரி பங்களாவுக்குக் கொண்டுவரப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த வேறொரு பாலியல் அடிமைப் பெண் எப்படியோ தப்பித்து, நேபாளத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழுவினரிடம் இது பற்றி தெரிவித்தார். அக்குழுவினர் டெல்லியிலுள்ள நேபாள தூதரகத்தில் முறையிட்டு, இந்திய வெளியுறவுத் தூதரகத்தின் உதவியுடன் குர்கான் போலீசார் மூலம் அப்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அப்பெண்களின் வாக்குமூலத்தோடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குர்கான் போலீசாரால் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளபோதிலும், முதன்மைக் குற்றவாளியான தூதரக அதிகாரியைக் காணவில்லை என்றும் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறுகிறது போலீசு.

இக்குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லை என்று மறுத்துள்ள சவூதி அரேபிய தூதரகமோ, டெல்லி போலீசார் வியன்னா தீர்மான விதிகளை மீறித் தூதரக அதிகாரி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துவிட்டதாகவும், அத்தூதரக அதிகாரியைப் பாலியல் குற்றவாளியாக இழிவுபடுத்திவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சவூதி அரேபிய அரசும் அத்தூதரக அதிகாரியும் ஒத்துழைத்தால்தான் விசாரணையைக்கூட நடத்த முடியும். அக்காமவெறி தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக இந்திய அரசு அறிவிக்கலாமே தவிர, அதற்கு மேல் ஒன்றும் செயவும் முடியாது.

இந்த கொடுஞ்செயல் நாட்டு மக்களின் நினைவுகளிலிருந்து மறைவதற்குள்ளாகவே, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 56 வயதான ஏழைப் பெண்ணாகிய கஸ்தூரி முனிரத்னம், வீட்டுப்பணியாளராக சவூதிஅரேபியாவின் ரியாத் நகரில் வேலை செய்துவந்த போது, அவரது எஜமானி அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி, அவரது வலது கையை வெட்டியெறிந்துள்ள கொடுஞ்செயல் நடந்துள்ளது.

மாதம் ஏறத்தாழ ரூ. 10,000 சம்பளம் தருவதாகக் கூறி அதைக் கொடுக்காததோடு, பல நாட்களாகப் பட்டினி போடப்பட்டு கஸ்தூரி சித்திரவதை செயப்பட்டுள்ளார். இதை அவர் உள்ளூர் அதிகாரிகளிடம் புகாராகத் தெரிவித்ததால், வீட்டின் எஜமானி ஆத்திரமடைந்து கொலைவெறியுடன் அவரை அடித்து உதைத்து கையை வெட்டியுள்ளார். கை வெட்டப்பட்டு துடிதுடித்து கீழே விழுந்த அவருக்கு முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கஸ்தூரியை சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் மூலமாகத்தான் இக்கொடுஞ்செயல், கடந்த அக்டோபர் 9-ம் தேதியன்று கஸ்தூரியின் குடும்பத்தாருக்கும் பின்னர் உலகுக்கும் தெரிய வந்துள்ளது.

தன் உடலில் ஏற்பட்டள்ள கொடுங்காயங்கள் அனைத்தும் தான் பணியாற்றிய வீட்டின் எஜமானியால் ஏற்படுத்தப்பட்டது என்று கஸ்தூரி தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், கஸ்தூரிக்கு மனநிலை சரியில்லை என்றும், அந்த வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயற்சித்தபோது கீழே விழுந்து அவருக்குக் கை எலும்பு முறிந்ததாகவும், அவரது கை செயலிழந்து போனதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரது கை துண்டிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் பற்றி கஸ்தூரியின் எஜமானியை விசாரித்து வருவதாகவும் ஒரு கட்டுக்கதையை சவூதி போலீசார் கூறுகின்றனர்.

இத்தனைக்கும் பிறகும், இந்திய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இக்கொடுஞ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சவூதி அரேபியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித உரிமைகளைத் துச்சமாக மதிக்கும் மன்னராட்சிமுறையைக் கொண்டுள்ள சவூதி அரேபியா, கடந்த செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமைகளைத் தர மதிப்பீடு செய்வதற்கான உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் குழுவின் தலைமைப் பொறுப்பில் அமெரிக்காவின் ஆசியோடு நியமிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை அழைக்க சவூதி அரேபியாவுக்குச் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், பாலியல் அடிமைகளாக வதைக்கப்பட்ட இரு நேபாளப் பெண்களுக்கும், வீட்டுப் பணியாளர் கஸ்தூரிக்கும் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இஸ்லாத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளதாகக் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இக்கொடுஞ்செயல்களுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களுக்கும் புரவலனாக சவூதி அரேபியா உள்ளபோதிலும், இதற்கெதிராக இந்துவெறியர்கள் வாய் திறப்பதுமில்லை. அமெரிக்காவின் கூட்டாளியாகவும் பணக்கார முஸ்லிம் நாடாகவும் இருப்பதாலும், இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளதாலும் அந்நாட்டுடன் இந்திய அரசு இணக்கமாகவே நடந்து கொள்கிறது. நேபாளப் பெண்கள் மற்றும் கஸ்தூரி விவகாரங்களில் குற்றவாளிகளைத் தண்டிக்கவோ சவூதி அரேபியாவுடனான தூதரக உறவுகளைத் துண்டிக்கவோ முன்வராமல் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதாலேயே இந்த விவகாரம் நீர்த்துப் போகச் செயப்படுகிறது. அதேசமயம், மேட்டுக்குடி இந்தியர்கள் என்றால், இந்திய அரசின் அணுகுமுறை வேறாக இருக்கிறது.

நியூயார்க்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி கோப்ரகடே, கடந்த டிசம்பர் 2013-ல் மோசடி ஆவணங்களைக் கொடுத்து சங்கீதா என்ற வீட்டுப் பணியாளருக்கு “விசா” பெற்று அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, உரிய சம்பளம்கூட கொடுக்காமல் கொத்தடிமையாக நடத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் அம்பலமாகி அமெரிக்க போலீசாரால் கைது செயப்பட்டார். மேட்டுக்குடி அதிகாரியான அவர் கைது செயப்பட்டதை இந்திய நாட்டையே அவமதிக்கும் செயல் என்று கூச்சல் போட்ட இந்திய அரசு, தூதரக அதிகாரிகள் பற்றிய வியன்னா மாநாட்டு விதிகளைக் காட்டித்தான் இந்த வழக்குகளைக் கைவிடச் செய்து, தேவயானியை மீட்டு வந்தது. இதேவழியில், இவ்வாண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி ரவி தாப்பரும் அவரது மனைவியும் வீட்டுப் பணியாளரைச் சித்திரவதை செய்த வழக்கை கைவிடச் செய்தது.

தேவயானி போன்ற மேட்டுக்குடியினர் குற்றமிழைத்தாலும் இந்திய அரசால் தப்புவிக்கப்படுகின்றனர். ஆனால் கஸ்தூரி போன்ற ஏழைகள் கொத்தடிமைகளாக உழன்றாலும், எஜமானர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டாலும் அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க இந்திய அரசு முன்வருவதில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்களுக்கான அரசு, அனைவருக்குமான அரசு என்றெல்லாம் வாய்கிழியப் பேசினாலும், இந்தியஅரசு எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

– தனபால்
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!

2

ந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு கடந்த செப். 20-ம் தேதி முதலாக நடைமுறைக்கு வந்துள்ளது. 2006-ம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிரான நேபாள மக்களின் பேரெழுச்சிக்குப் பின்னர், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, மன்னராட்சி முறை 2008-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், தற்போது அரசியல் நிர்ணய சபையில் அறுதிப் பெரும்பான்மையுடன் இறுதியாக்கப்பட்டுள்ளது. நேபாள ஐக்கிய மா-லெ கட்சியின் தலைவரான பிரசாத் சர்மா ஒளி, நேபாளத்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

10-nepalவிகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் அரசியல் கட்சிகள் போட்டியிடும் தேர்தல் முறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள், குடிமக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுதல், மைய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி – என மூன்று மட்டங்களில் அரசாங்கம் இயங்குதல் முதலான அம்சங்களைக் கொண்டுள்ள இப்புதிய அரசியல் சட்டம், நேபாளத்தை மதச்சார்பற்றக் குடியரசாக அறிவித்துள்ளது.

இதுநாள்வரை, உலகின் ஒரே இந்து நாடு என்று நேபாளத்தைப் பெருமையுடன் குறிப்பிட்டு வந்த இந்துத்துவ சக்திகள், இப்போது அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நேபாளத்தை மதச்சார்பற்ற குடியரசாகப் பிரகடனம் செய்துள்ளதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளன. கேவலம், பசுபதிநாதர் கோயில் பூசாரியை மாற்றியதற்கே நேபாளத்தில் தலையிட்ட இந்தியா, இப்போது தன்னை மதச்சார்பற்ற நாடாக நேபாளம் அறிவித்துள்ள நிலையில் சும்மா இருக்குமா?

இச்சட்டம் இறுதியாக்கப்பட்ட பிறகு, மோடி அரசு தனது வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை நேபாளத்துக்கு அனுப்பி அரசியலமைப்புச் சட்டம் பிரகடனம் செய்யப்படுவதை நிறுத்தி வைக்க நிர்ப்பந்தித்தது. அது பலனளிக்காமல் போனதால், இந்திய எல்லையை ஒட்டிய நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் மாதேசியினரைக் கொண்டு கலகத்திலும் சீர்குலைவு நடவடிக்கைகளிலும் இந்திய அரசு இறங்கியது.

மாதேசிகள் எனப்படுவோர் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் நேபாளத்தின் தென்பகுதி எல்லையில் குடியேறிய இந்திய வம்சாவளியினர். இவர்களில் பெரும்பான்மையோர் நிலப்பிரபுத்துவ ஆதிக்க சாதியினராவர். இன்றும் கூட உ.பி., பீகார் பகுதிகளில் இரத்தவழி உறவுகளையும் வர்த்தக உறவுகளையும் கொண்டுள்ளவர்கள். ஏற்கெனவே மாதேசிகளைக் கொண்டு நேபாள அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல வழிகளிலும் சீர்குலைத்து வந்த இந்திய அரசு, இப்போது அவர்களைக் கொண்டு நேபாள அரசியல் சட்டத்துக்கு எதிரான கலவரங்களைத் தூண்டிவிட்டு வருகிறது. மாதேசிகள் நடத்திவரும் கலவரங்களினால் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் மாண்டு போயுள்ளனர்.

மாதேசிகள் அடர்த்தியாக வாழ்ந்துவரும் பகுதிகள், நேபாளத்தின் புதிய மாகாணங்கள் பலவற்றிலும் பிரிக்கப்பட்டு, அவர்கள் நாடாளுமன்றத்திலும் அரசு அதிகாரத்திலும் முக்கிய பங்கு வகிக்க முடியாதவாறும், நேபாளிகளே அதிக அளவு பிரதிநிதித்துவம் பெறும் வகையிலும் புதிய அரசியல் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதேசி மக்களைக் கொண்டு நேபாள அரசியலில் தலையிட்டுத் தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இந்தியாவின் நோக்கமாக உள்ளது. இதன்படியே, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லை அகற்ற வேண்டுமெனவும், மாதேசிகளுக்கென தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டுமெனவும் கருப்புக் கொடியேற்றி அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எரித்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் கலவரங்களை நடத்திய மாதேசிகள், இந்திய எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலைகளை மறித்து சரக்குப் போக்குவரத்தை முற்றாக முடக்கி வைத்துள்ளனர்.

நேபாள இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
“நேபாளத்தில் தலையிடாதே! பொருளாதாரத் தடை விதித்து அச்சுறுத்தாதே!” என்ற முழக்கத்துடன் இந்திய அரசுக்கு எதிராக நேபாள மாணவர்கள் – இளைஞர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.

தமது நாட்டுக்குள் நுழையும் அனைத்து அந்நிய வாகனங்களுக்கும் முழுப் பாதுகாப்பு அளிப்பதாக நேபாள அரசு உறுதியளித்துள்ள போதிலும், மாதேசிகள் நடத்தும் போராட்டம் காரணமாக இந்தியாவிலிருந்து சரக்கு வாகனங்களை அனுப்ப முடியவில்லை என்று நியாயவாதம் பேசிக்கொண்டு சரக்கு போக்குவரத்தை இந்திய அரசு வேண்டுமென்றே முடக்கி வைத்துள்ளது. இதனால் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதலானவை கிடைக்காமல் நேபாள மக்கள் தத்தளிக்கின்றனர். அமெரிக்க மேலாதிக்க வல்லரசு கூட ஒரு நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை, தனது சூப்பர்-301 சட்டத்தைக் காட்டியோ அல்லது ஐ.நா. மன்றத்தின் மூலமோ அறிவித்து விட்டுத்தான் செகிறது. ஆனால், நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தை வரவேற்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் அந்நாட்டின் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை விதித்து இந்தியா அச்சுறுத்தி வருகிறது.

இப்பொருளாதாரத் தடையை நீக்கக் கோரி நேபாள துணைப் பிரதமர் கமல் தாபா, டெல்லிக்கு வந்து 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும், நேபாளத்தின் மீதான இந்தியாவின் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை இன்னமும் நீக்கப்படவில்லை.

தெற்காசிய மேலாதிக்க வல்லரசாக உள்ள இந்தியா, நேபாள விவகாரத்திலும், இலங்கை, மாலத்தீவுகள், பூடான் முதலான அண்டை நாடுகளின் உறவிலும் பெரிய அண்ணன் அணுகுமுறையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. அது இப்போது உச்சத்துக்குச் சென்றுள்ளது. தங்கள் நாட்டுக்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ள நேபாளத்துக்கு உள்ள சுயாதிபத்திய உரிமையை அலட்சியப்படுத்தி, தனது இந்துத்துவ மற்றும் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப நேபாளம் இருக்க வேண்டுமென நிர்பந்திக்கும் வகையில்தான் மோடி அரசின் அணுகுமுறை உள்ளது.

மாதேசி விவகாரத்தை வைத்து மோடி அரசு மூக்கை நுழைப்பதை, இந்தியா தேவையில்லாமல் தலையிடுவதாகவும், வரம்பு மீறுவதாகவும் நேபாள ஊடகங்கள் கடுமையாக எதிர்த்துச் சாடி வருகின்றன. நேபாளத்தில் ஒளிபரப்பாகும் இந்தியத் தொலைக்காட்சிகளை அந்நாட்டு ஆபரேட்டர்கள் நிறுத்தியுள்ளனர். இந்தியாவின் இப்பொருளாதார முற்றுகையானது, நேபாள சாமானிய மக்களிடம் ஆத்திரத்தைக் கிளறிவிட்டு, இந்தியாவின் தேசியக் கொடியும் மோடியின் உருவப் பொம்மைகளும் தீயிடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. “சார்க்” நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியான வாகனப் போக்குவரத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக இந்தியாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்று சாடுகிறார், வங்கதேச வர்த்தகத்துறை அமைச்சர். நேபாளத்தில் தலையீடு செயாதே என்று இந்தியாவின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பிரபல கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவுத்துறையினரும் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டு இந்திய அரசின் இம்மேலாதிக்க நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர்.

ஆனாலும், நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருள் போக்குவரத்தை அண்டை நாடுகள் தடை செயக் கூடாது என்ற அனைத்து நாட்டு பொதுவிதிகளுக்கு எதிராகவே இந்தியா நடந்து கொள்கிறது. ஏற்கெனவே பின்தங்கிய நிலையிலுள்ள நேபாளத்தில் கடந்த ஏப்ரலில் நிலநடுக்கப் பேரழிவு ஏற்பட்டு அந்நாட்டின் மக்கள் இன்னமும் மறுவாழ்வின்றி தத்தளிக்கின்றனர். குளிர்காலம் நெருங்கும் சூழலில் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை விதித்து, நேபாளத்தை இந்து நாடாக்கு, இல்லையேல் பட்டினியிலும் குளிரிலும் செத்துத் தொலை என்று எச்சரிக்கிறது இந்திய மேலாதிக்க அரசு. அநீதியான, மனிதநேயமற்ற இப்பொருளாதாரத் தடையையும் நேபாளத்தின் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தையும் எதிர்த்து இந்திய குடிமக்கள் அம்பலப்படுத்திப் போராடுவதுதான், இந்தியாவின் பொருளாதார முற்றுகையால் பரிதவிக்கும் நேபாள மக்களுக்கு உதவும் உண்மையான நிவாரணப் பணியாக இருக்க முடியும்.

– குமார்.

_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

அச்சம் ஏன் ? வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா ?

0

“நீதிபதிகள் (உள்ளூர் போலீசை வைத்துக் கொண்டு) தங்களுக்கு முழுக்க முழுக்க பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார்கள். அதனால், உள்ளூர் போலீசுக்குப் பதிலாக மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படையை உள்ளே அழைத்தார்கள். அதுவும் பலனின்றிப் போனால், எல்லைப் பாதுகாப்புப் படை, இராணுவம் உட்பட வேறு படைகள் அழைக்கப்படுவார்கள்.”- இப்படி தமிழக அரசை எச்சரித்தது அல்லது மிரட்டியது இந்திய உச்ச நீதிமன்றம்.

வழக்குரைஞர்கள் ஊர்வலம்
நீதித்துறையில் தாண்டவமாடும் இலஞ்சத்தை ஒழிக்கக் கோரியும், இலஞ்சப் பணத்தில் ஊறித் திளைக்கும் நீதிபதிகளின் பெயர்களை அம்பலப்படுத்தியும் தென்மாவட்ட வழக்குரைஞர்கள் கடந்த செப்டம்பரில் மதுரையில் நடத்திய ஊர்வலம்

பிற எல்லாத் துறைகள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்ட எளிய மக்களுக்கும் கடைசிப் புகலிடம் நீதிமன்றங்கள்தாம் என்பதைச் சொல்லியே இந்திய அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை வைக்கும்படியான மாயையைத் தக்கவைக்க முயலுகிறார்கள். ஆனால், அந்த நீதிமன்றமோ, அதுவும் அதன் உச்ச நீதிமன்றமோ தனது கடைசிப் புகலிடமாக இராணுவத்தைத்தான் நம்புகிறது. அப்படி இருக்கும்போது இந்திய எளிய மக்கள் தமது கடைசிப் புகலிடமாக உச்ச நீதிமன்றமேயானலும் அதை இனியும் நம்பலாமா!

அப்படி என்ன நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுப்போனது? பொதுமக்களாலா, தீவிரவாதிகளாலா? அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போலீசால்தான் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது, வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தாக்கப்பட்டார்கள்; அதற்கு யாரும் தண்டிக்கப்படவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் என்றால் கருப்புப் பூனைப் படையை போட்டுக்கொள்வார்கள்.

“நீதிமன்றங்களில், குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைதியான, கண்ணியமான சூழலில், வழமையான முறையில் வழக்குகளை நடத்தமுடியவில்லை; வழக்கறிஞர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள்; கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள்; மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்; அளவுக்கு மீறிப் பணம் பறிக்கிறார்கள்; இரவில் அறைகளில் தங்கி குடிக்கிறார்கள்” என்று பலவாறான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் தனிநபர் ஒழுங்கீனங்கள் என்று எடுத்துக்கொண்டால், வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதிபதிகளும் அவற்றில் ஈடுபடுகிறார்கள். ஒழுங்கீனங்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தனிநபர்வாரியாக சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.

ஆனால், அவ்வாறு செய்யாமல், போலீசு அதிகாரியின் அறிக்கையைக் காப்பியடித்து, வழக்கறிஞர்கள் அனைவரின் பொதுப்போக்குகளாகச் சித்தரித்து, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை வெளியேற்றிவிட்டு, நீதித்துறையையும் சட்டத்துறையையும் முழுமையாகக் கைப்பற்றி ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் சதிகார நோக்கில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் செயல்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக குற்றப் பின்னணியுள்ள வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை; சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு; பார் கவுன்சிலைச் சீரமைப்பது, வழக்கறிஞர்களுக்கான கல்விச் சீரமைப்பு, அங்கீகாரத்துக்கான தேர்வுமுறையைப் புகுத்துவது; நீதித்துறைக்கு எதிரான ஒழுங்கீனம், கண்ணியக்குறைவு, அவமதிப்பு முதலானவற்றைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தச் சதியில் பார்ப்பன நீதிபதிகளோடு சமூகச் சொரணையற்று, பிழைப்புவாதிகளாகச் சீரழிந்துபோன பிற பிரிவு நீதிபதிகளும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியொரு மேல்சாதி, மேட்டுக்குடி அதிகாரச் சாதியாகப் பரிணமித்துள்ளார்கள்.

நீதிமன்றத்தில் போலீஸ் தாக்குதல்
சென்னை உயர்நீதிமன்றத்தில் புகுந்து தமிழக போலீசு நடத்திய தாக்குதலில் மண்டை உடைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்யம் (இடது) மற்றும் வழக்குரைஞர்கள் (கோப்புப் படம்).

இந்த மக்கள் விரோத அதிகாரச் சாதி இப்போது ஒரு பொதுக்கருத்தைப் பரப்புகிறது: நீதிமன்ற வளாகத்தில் தனிநபர் ஒழுங்கீனங்களில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து குற்றப் பின்னணியுள்ள வழக்கறிஞர்கள் என்று அனைவரையும் முத்திரை குத்துகிறார்கள். இது, பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவதூறு செய்து அரசியல் எதிர்த் தரப்பை ஒடுக்குவதுபோன்ற சூழ்ச்சி. அதன் தொடச்சியாக, வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிக்கிறார்கள்; நீதிமன்ற வளாகத்தில் கோஷங்கள் போடுகிறார்கள், பிரச்சாரங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள் என்றும், இவை ஏதோ கிரிமினல் குற்றங்களைப் போலவும் இவற்றால் நீதிமன்ற மாண்பு, புனிதம், கண்ணியம் குறைந்து போவதாகவும், நீதிபதிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவதாகவும், அதனாலேயே இத்தனை கெடுபிடிகள் என்றும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

2009-ம் ஆண்டு பிப்ரவரியில்சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குப் பெரும் படையாகத் திரண்டு வந்த போலீசு, அங்கிருந்த வாகனங்களை உடைத்துநொறுக்கி, வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் ஓடஓட விரட்டி மண்டையை உடைத்து வெறியாட்டம் போட்டது. அந்தக் குற்றத்துக்காக யாரையும் தண்டிப்பதற்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எதற்கும் இதுவரை துப்பில்லை. வாயிலே கருப்புத் துணி கட்டிக்கொண்டு குழந்தை குட்டிகளோடு போய் நீதிபதியை மறித்து முழக்கம் போடுவதும்; அநீதியான தீர்ப்பை மீறி அமைதியாகப் போராடுவதும், அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு அடாவடியாக நடத்துவதைக் அங்கேயே ஊர்வலம் போய் கண்டிப்பதும் நீதிபதிகளுக்கு எப்படி ஆபத்தாகும்?

நீதிபதிகளையும் போலீசாரையும் அவர்களது அதிகார முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் நாளும் நெருக்கமாக இருந்து அவதானித்து வருவதால் அவர்களது வரம்புகளையும் வழக்கறிஞர்கள் அறிந்துள்ளார்கள். இவர்களில் சமூக, அரசியல் உணர்வுபெற்ற வழக்கறிஞர்கள் இயல்பிலேயே போராட்டக்காரர்களாக இருக்கிறார்கள். நீதிபதிகளும் போலீசாரும் மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகார முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் காத்து நிற்கும் அரண்களான நீதிமன்றங்கள் அல்லாது வேறெங்கு போய் போராடுவார்கள்! நீதிபதிகளின் ஊழல்கள் உட்பட போராட்டக்காரர்கள் எழுப்பும் பிரச்சினைகள் மீது பதில் சொல்வதற்குப் பதிலாக நீதிபதிகளிடம் இல்லாத மாண்பு, கண்ணியம் பற்றிப் பேசி நடவடிக்கை எடுக்கிறார்கள்!

– மாணிக்கவாசகம்
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

கடலூர் நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம் – செய்தி, படங்கள்

3

cuddalore peoples power day 1 (5)டந்த (2015, நவம்பர்) 09, 10 ஆகிய தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையினால் கடலூர் மாவட்டமே நீரில் மூழ்கியுள்ளது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய தாலுகாக்களை சார்ந்த குமராட்சி முதல் ஆலப்பாக்கம் வரையிலான 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் வீடுகள், குடிக்க தண்ணீர், உண்ண உணவு இன்றி தவித்து வருகின்றனர்.

இரண்டு லட்சம் எக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, மரவள்ளி, உளுந்து, மணிலா போன்ற பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 5000 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆடுகள், கோழிகள், மாடுகள் என ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் கிராமங்களுக்கு செல்லும் 30-க்கும் மேற்பட்ட தமிழக நெடுஞ்சாலைகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்போது ஒரளவு சரி செய்யப்பட்டு வருகிறது.

கெடிலம் ஆற்றில் வெள்ளம்
கெடிலம் ஆற்றில் வெள்ளம்

இந்த வரலாறு காணாத வெள்ளத்திற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

1) சென்னைக்கு குடிநீர் வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வீராணம் ஏரியில் அதன் கொள்ளளவான 45 அடியை எட்டும் வரை விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடாத ஆட்சியாளர்களின் நயவஞ்சகம்

2) கெடிலம் ஆற்றின் அகலத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும், கரையோரத்தில் உள்ள கிராம நிலவுடமையாளர்களின் ஆக்கிரமிப்புக்காகவும் சுருக்கியது.

3)ஜனவரி முதல் பெண்ணையாற்றில் பிடாகம், கண்டரகோட்டை அருகே மணல் குவாரி அமைத்து ஆயிரக்கணக்கான டன் மணலை கொள்ளையடித்தது போன்றவைகளே.

இவற்றை ஆதாரபூர்வமாக விரைவில் எழுதுவோம்.

வெள்ளம் வந்து மூன்று நாட்கள் ஆன பிறகு அதிகார வர்க்கத்தின் ஆறு குறுநில மன்னர்கள் தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அம்மாவின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் காரணங்களுக்காக பித்தலாட்டமான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். இதன் இலட்சணம் ஊடகங்களிலேயே சந்தி சிரிக்கின்றது.

மேலும் மாவட்டத்தில் உள்ள நகர பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கூரை வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. மேலும் பாடபுத்தகங்கள், வீட்டுபத்திரம், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நகர பகுதிகளில் உள்ள சுமார் 4,000 பேர்கள் வெளி முகாம்களில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் சேறும் சகதியுமாக உள்ளதால் யாரும் செல்ல முடியாத அவலநிலை இன்னமும் நீடிக்கின்றது. அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பார்வையிட்டு சென்றாலும் யாரும் குடியிருப்பு பகுதிக்கு வருவதில்லை என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் மக்கள் அதிகாரத்தின் தொண்டர்கள் கடந்த 14.11.2015 சனிக்கிழமை அன்று வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று வீடு மற்றும் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக கடலூர் புருஷோத்தமன் நகரில் தண்ணீர் புகுந்துள்ள வீடுகளை சுத்தம் செய்வது, சேறு படிந்துள்ள பாத்திரங்களை சுத்தம் செய்வது, கழிவுகளை அகற்றும் பணிகளை செய்வது, கால்வாய்களை சுத்தம் செய்வது, முட்புதற்களை அகற்றுவது போன்ற சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

வெள்ளத்தால் முகாம்களில் துவண்டு போயிருந்த மக்கள்,  மக்கள் அதிகாரம் அமைப்பினரின் இந்த பணிகளால் நம்பிக்கை பெற்று மீண்டும் தங்களின் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மக்கள் வெள்ளத்தில் பாதிப்பு அடைந்து தவித்துக் கொண்டிருந்த போது  எட்டிப்பாக்காத போலிஸ், மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்து உடனே அங்கு வந்து உயர் அதிகாரிகளுக்கு உளவு செய்தி அனுப்புகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரத்தின் மீட்பு பணிகள் தொடரும்…

periyakatttupalaiyam8

எங்களோடு இணைந்து வெள்ள நிவாரண மீட்பு பணியாற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மக்கள் அதிகாரம்,
கடலூர்: 81108 15963 – 97864 87355
___________________________________

விசூர், பெரிய காட்டுப்பள்ளத்தில்
மக்கள் அதிகாரத்தின் மீட்புப் பணி………

டந்த 9,10-ம் தேதி அன்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கின. அவற்றில் அதிக அளவு பாதிப்புக்குள்ளகியது கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கவை சார்ந்த  விசூர் மற்றும் பெரிய காட்டுப்பளையம் என்ற இரண்டு கிராமங்கள். அதற்கு காரணம் இந்த இரு கிராமங்களும் வெல்லவேறு ஆற்றின் அருகில் இருப்பதனால் ஆற்றின் கரைகள் உடைந்து வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்தது.

இந்த வெள்ளத்தில் விசூரில் இரண்டு பேரும்,  பெரிய காட்டுப்பாளையத்தில் பத்து பேர் என பனிரெண்டு பேர் மாண்டு போயுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான விலை நிலங்கள், பயிர்கள் நாசமாகியுள்ளன. நிலத்தின் மீது 2 மீட்டர் அளவிற்கு சகதி – மணல் படிந்துள்ளது. தற்போது வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் அப்பகுதி மக்கள், கடந்த எட்டு நாட்களாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்…

அவர்களின் துயரம் துடைக்கும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அவர்களோடு நின்று கடந்த மூன்று நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள், உடைமைகளை சுத்தம் செய்து கொடுத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து நம்பிக்கையூட்டி வருகிறது மக்கள் அதிகாரம்……

பெரியகாட்டுபாளையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்:

விசூரில் மக்கள் அதிகாரம் தோழர்களின் நிவாரணப் பணிகள்:

____________

நான்காவது நாளாக மேல்காட்டுப்பாளையத்தில் தொடரும்

மக்கள் அதிகாரத்தின் மீட்பு பணி.

___________________________________

மக்கள் அதிகாரம்,
கடலூர்: 81108 15963 – 97864 87355
____________________________

திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !

26
ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்
ஹைதர் அலியை சந்திக்கும் பிரெஞ்சு தளபதி ஸஃப்ரன்

காலனியாதிக்க எதிர்ப்பு மாவீரன் திப்பு சுல்தானின்  பிறந்த நாள் விழாவை கர்நாடக அரசு  கொண்டாட முடிவு செய்ததை ஓட்டி இந்துமத வெறியர்கள் கர்நாடகாவில் கலவரம் செய்து வருகின்றனர்.

அரசிற்கு ஆதரவாக திப்பு பிறந்தநாள் விழாவை கொண்டாட ஊர்வலமாக சென்றவர்கள் மீது சங்க பரிவார ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் சாகுல் ஹமீது என்ற இளைஞர்  உயிரிழ்ந்துள்ளார். இதற்கு முன்னர் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் குட்டப்பா முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக இந்துமதவெறி இயக்கங்கள் விசமப்பிரச்சாரம் செய்துவந்தது பொய் என்று அம்பலமாகியுள்ளது. இது குறித்து விசாரித்த காவல் துறையினர் அவர் 20 அடி சுவரிலிருந்து விழுந்து விபத்தில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளையொட்டி இந்திய வரலாற்றில் திப்பு சுல்தானின் பங்கை அழிப்பதற்கும், தமது முசுலீம் எதிர்ப்பு அகண்ட பாரத கருத்தியலை பரப்பவும், மறுகாலனியாக்க சுரண்டல்களை மறைக்கவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கூட்டம் முயல்கிறது. ஆங்கிலேய காலனியாதிக்கத்தை  தீரத்தோடு எதிர்த்த திப்புவை இஸ்லாமிய மதவெறியனாக காட்டுவதே அவர்களின் நோக்கம். மேலும் இதை அவர்கள் முதல்முறையாக செய்யவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவதூறு செய்தும், நேரடியாக  கலவரம் செய்தும் வருகின்றனர்.

திப்பு மதவாதியா? காலனியாதிக்க எதிர்ப்பாளரா? என்ற கேள்விக்கு வரலாற்று சான்றுகளுடன் விடைகூறுகிறது இக்கட்டுரை.

பிரெஞ்சு புரட்சியுடன் திப்பு கொண்டிருந்த உறவு, அமெரிக்க விடுதலை போராட்டத்திற்கும் திப்பு செய்த உதவி, இராணுவ ரீதியாக மட்டுமின்றி பொருளாதார துறையிலும் காலனியாத்திக்கவாதிகளுடன் போட்டியிட்ட திப்புவின் தீரம், பார்பனியத்திற்கு எதிரான திப்புவின் சீர்திருத்தங்கள் முதலியவற்றை படம் பிடித்து காட்டுகிறது இக்கட்டுரை.

ஆங்கிலேய அதிகாரிகளிடம் கெஞ்சி கூத்தாடி இனி அவர்களுக்கு எதிராக போராட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்த ‘வீர’சாவர்க்கர்கள், வாஜ்பாயேயிகள் நிறைந்த இந்தியாவில், போர்களத்தில் குண்டடிப்பட்டு சாகும் தருவாயிலும் சரணடைய மறுத்த திப்புவின் வீரத்தை மதவெறியாக காட்ட நினைக்கும் அயோக்கியத்தனத்தை ஒழிப்பதற்கு இக்கட்டுரை பயன்படும் என்பதால் மீள்பிரசுரம் செய்கிறோம். காலனியாதிக்க காலத்தில் எட்டப்பன்களும், சரபோஜிக்களும், ஆற்காடு நவாப்புகளும் ஆங்கிலேயனின் காலை நக்கி பிழைத்துக் கொண்டிருந்த காலத்தில் திப்பு எப்படி ஒரு உண்மையான வீரனாக போரிட்டு மாண்டார், நாட்டை திறத்துடன் ஆண்டார் என்பதை இக்கட்டுரை தரவுகளுடன் நிறுவுகிறது.

–    வினவு

திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால், அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.

1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.

எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அது வரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசிப் போரில்’ பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவின் புலி
திப்புவின் புலி – ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல; தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, அவர்கள் கண்டதில்லை.

ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.

பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில்தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்றபின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, ‘குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.

ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், ‘பென்சன் ராஜாக்கள்’ என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கணணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

திப்பு சுல்தான் கேலிச்சித்திரம்
ஆங்கிலேயர் படை திப்புவிடம் தோற்றதை நையாண்டி செய்து லண்டனில் வெளியான கேலிச்சித்திரம்

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், அரசுக்கான வருவாயை விவசாயம்தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும்முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்’‘ என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர்.சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

திப்புவின் புலிக்கொடி
திப்புவின் புலிக்கொடி

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

திப்பு சுல்தான்
போர் வீரர்களின் பிணக்குவியல்களுக்கு மத்தியில் திப்பு

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

“இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

– இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

“மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

– புதிய கலாச்சாரம் – நவம்பர், 2006

மேலும் படிக்க:

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

0

puthiya-jananayagam-november-2015
புதிய ஜனநாயகம் நவம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள்!

2. தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கொடுங்கோன்மையும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கொடுங்கோன்மையும்.

3. அச்சமூட்டுவது எது? வழக்குரைஞர்களின் போராட்டமா, நீதிபதிகளின் சர்வாதிகாரமா?
நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்குப் பதில் அளிக்க முடியாத நீதிபதிகள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கதையளக்கிறார்கள்

4. தோழர் கோவன் கைது: பறிக்கப்படுவது கருத்துரிமை மட்டுமல்ல, வாழ்வுரிமையும்தான்!

5. மூடு டாஸ்மாக்கை!” கோமளவல்லியை அச்சுறுத்தும் கலகக்குரல்!
அ.தி.மு.க. பா.ஜ.க. கும்பலின் அவதூறுகளுக்குப் பதில் அளித்து தோழர் மருதையன் வினவு தளத்தில் அளித்துள்ள விளக்கத்தின் சுருக்கம்.

6. கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி

7. விருதுகளைத் திருப்பி அளிப்பதோடு நின்றுவிடாதீர்கள்!
விருதுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகளின் எதிர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதன் மூலம் தன்னைக் கேவலமான முறையில் நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு.

8. “பூமராங் ஆனது இராம்பாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

9. சிவகங்கை சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை: சமூகம் மற்றும் அரசு உறுப்புகளின் அருவருக்கத்தக்க வீழ்ச்சி!
தந்தை, அண்ணன், போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் வழக்கு மெத்தனமாக நடத்தப்படுகிறது.

10. பொருளாதார முற்றுகையில் நேபாளம்: இந்தியாவின் திரைமறைவு போர்!
நேபாள விவகாரத்தில் பெரிய அண்ணன் அணுகுமுறையத்தான் தொடர்ந்து இந்தியா பின்பற்றி வருகிறது.

11. ஏழைகள் என்றால் இத்துணை இளப்பமா?

12. மூணாறு: கொத்தடிமைத்தனத்துக்கு எதிராக பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம்!

13. கேரளா: ‘கடவுளின் தேசமா?’ டாடாவின் தனிச்சொத்தா?

புதிய ஜனநாயகம் நவம்பர் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

பாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0

25
இந்தியாவின் அகர்தலா நகரின் பள்ளி மாணவர்கள், பாரிஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்தியாவின் அகர்தலா நகரின் பள்ளி மாணவர்கள், பாரிஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்தியாவின் அகர்தலா நகரின் பள்ளி மாணவர்கள், பாரிஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

பாரிஸ் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நேரப்படி நவம்பர் 13ம் தேதி இரவு 9:15 அளவில் (இந்திய நேரம் நவம்பர் 14 அதிகாலை 1:30) பாரிஸ் நகருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் குழு மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். சம்பவம் நடந்த சமயத்தில் அமெரிக்க ராக் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பெடக்ளென் என்கிற நாடக அரங்கினுள் நுழைந்த பயங்கரவாதிகள், பார்வையாளர்களின் மேல் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

நவம்பர் 14 அதிகாலை 00:58 வரை பெடாக்ளென் அரங்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் பயங்கரவாதிகள். பெடாக்ளென் அரங்கம் தவிர வேறு ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் மற்றும் மூன்று குண்டுவெடிப்புகளில் சுமார் 129 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது (நவம்பர் 14 பிற்பகல் நிலவரப்படி).

மேலும், நூற்றுக்கும் அதிகமானவர்கள் தாக்குதலில் கடுமையாக காயமடைந்துள்ளனர். நவம்பர் 14 அதிகாலை நிலவரப்படி பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் பெடாகலன் அரங்கின் கட்டுப்பாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளதுடன், சுமார் 8 பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளனர்.

பி.பி.சி செய்தியறிக்கை ஒன்றின்படி, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவன் “இது ஹொல்லந்தேவின் தவறு, உங்கள் அதிபரின் தவறு… அவர் சிரியாவில் தலையிட்டிருக்க கூடாது” என்று முழங்கியுள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் “அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டுள்ளனர். பாரிஸ் தாக்குதலுக்கு தமது அமைப்பு பொறுப்பேற்பதாக டாயிஷ் அமைப்பு (ஐ.எஸ்.ஐ.எஸ்) அறிவித்துள்ள நிலையில், இது பிரெஞ்சு தேசத்தின் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ளார் அதிபர் பிரான்கோயிஸ் ஹொல்லாந்தெ.

இந்த மோசமான தாக்குதல் டாயிஷ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சில உள்ளூர் ஆதரவுக் குழுக்களின் உதவியோடு நடத்தியிருக்கிறார்கள் என்று அறிவித்துள்ள ஹொல்லாந்தே, இத்தாக்குதல் தமது தேசத்தின் மீதான போர் என்று வருணித்துள்ளார். தற்போது பிரான்சில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஹாதிய காட்டுமிராண்டிகளுக்கு எதிராக கருணையற்ற எதிர் நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுக்கும் என்று அதிபர் உத்திரவாதமளித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர். பிரான்சுக்கு ஆதரவை உறுதி செய்துள்ள இங்கிலாந்து பிரதமர் கேமரூன், “உங்களது மதிப்பீடுகள் தாம் எமது மதிப்பீடுகள்; உங்களது உங்களது வலி தான் எங்களது வலியும்; இனி உங்களது சண்டை எங்களது சண்டையும் கூட” என்று அறிவித்துள்ள நிலையில் எதிர் வரும் வாரங்களில் பாரிஸ் தாக்குதலுக்கான எதிர் விளைவுகளை நாம் சிரியாவில் காணப் போவது நிச்சயமாகியுள்ளது. தற்போது பிரான்சு நாட்டு விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துவிட்டன.

சுதந்திர நாகரீகத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகள் என்று மேற்குலகம் அஞ்சும் ஐ.எஸ்.ஐ.எஸ் (டாயிஷ்) யார்? சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின் கடுமையாக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுருவி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் சக்தி வாய்ந்த அமைப்பா? சுமார் ஓராண்டு காலமாக நேட்டோ தாக்குதலை எதிர்கொண்டிருக்கு நிலையில் தாம் கைப்பற்றிய நிலப்பரப்பை தமது வலுவான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு அந்த அமைப்பு வலுவானதா? இசுலாமிய ஜிஹாதிகள் ’சர்வ வல்லமை’ பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தாக்கும் அளவுக்கு ‘எல்லாம் வல்லவர்கள்’ ஆகிவிட்டனரா?

முதலாவதாக ஆப்கானிய முஜாஹிதீன்கள், அவர்களின் அடுத்த அவதாரமான தாலிபான் மற்றும் ஒசாமா பின்லாடனின் உருவாக்கமான அல்-காய்தா போன்ற ஜிஹாதி அமைப்புகள் சுயம்புவாக தோன்றிய இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் இல்லை. இவையனைத்தும் அமெரிக்க தயாரிப்புகள். ஸ்டாலின் ஆட்சிக்காலத்திற்குப் பின் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த சோவியத் ரசியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நடந்த பனிப்போரில் மத்திய கிழக்கை கட்டுப்படுத்த இவர்களுக்குள் நடந்த நாய்ச்சண்டைகளின் பின்புலத்தில், ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்திருந்த என்பதுகளின் துவக்கத்தில் நேரடியாக ரசியாவுடன் மோதுவதை விட பதிலிப் போர் (proxy war) தான் சரியானது என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சவுதியுடன் சேர்ந்து பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகள் தான் முஜாஹிதீன்கள்.

அமெரிக்க அதிபர் நிக்சனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஹென்ரி கிசிங்கர் தனது சொந்த வார்த்தைகளிலேயே தனது சாதனைகளாக ஆப்கான் முஜாஹிதீன்களின் உருவாக்கத்தைக் பதிவு செய்துள்ளார்.

இரண்டாவதாக, இரண்டாயிரங்களின் முதல் பத்தாண்டுகளின் இறுதியில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் நடந்த வண்ணப் புரட்சிகளும், அந்தப் பத்தாண்டுகளின் துவக்கத்தில் நடந்த ஈராக் மற்றும் ஆப்கானுக்குள் நிகழ்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்பும் மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை குறிவைத்தே நடந்துள்ளன. மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவதை விட அந்நாடுகளில் பதவியில் இருக்கும் – தனது பெட்ரோலியக் கொள்கைக்கு உடன்படாத – ஆட்சியாளர்களை கவிழ்க்க அமெரிக்கா பதிலிப் போர்களில் ஈடுபட்டு வருகின்றது. அதாவது, சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான உள்ளூர் கலகங்கள் திடீரென முளைப்பதும் (இருப்பதிலேயே ஆக கழிசடையான சர்வாதிகார, எதேச்சாதிகார காட்டுமிராண்டி ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் உற்ற தோழமை நாடான சவூதி தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது), அந்தக் கலகங்களை முன்னின்று நடத்தும் அமைப்புகளுக்கு மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதம் கிடைப்பதும் இரகசியமானதல்ல.

மூன்றாவதாக, சிரியாவின் அதிபர் அசாதுக்கு எதிராக உருவான டாயிஷ் அமைப்பு அமெரிக்காவின் தயாரிப்பு தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. மத்திய கிழக்கில் அமெரிக்க எண்ணை கொள்கைக்கு முழுவதும் ஒத்து ஊதாமல் ஊசலாடிக் கொண்டிருந்த ’சர்வாதிகாரி’ அசாதுக்கு எதிராக திடீரென்று வெடித்த ‘உள்ளூர் கலகங்களை’ துவக்கம் முதலே அமெரிக்கா ஆதரித்தது. இந்த ஆதரவு வெறுமனே அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான ஆதரவு மட்டுமில்லை – அரச படைகளை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கியது. அசாதுக்கு எதிராக சண்டையிட்டு வந்த ஆயுதந்தாங்கிய குழுக்களில் பங்கேற்க சவூதி அரசு தனது சிறைகளில் இருந்த ஆயுள் மற்றும் தூக்குக் கைதிகளை விடுவித்து அனுப்பியது. மேற்குலக நாடுகளின் பேராதரவு இருந்ததன் காரணமாகத் தான் அசாதுக்கு எதிரான குழுக்கள் மிக எளிதாகவும், குறுகிய காலத்திலும் ஈராக்கின் வடமேற்குப் பகுதிகளையும், சிரியாவின் சில இடங்களையும் கைப்பற்றுவது சாத்தியமானது.

பஷார் அல் அசாதுக்கு எதிரான குழுக்கள் ஒருகட்டத்தில் டாயிஷ் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற பெயரில் ஒன்றிணைந்த சமயத்தில் அத்தீவிரவாதிகளை அமெரிக்க செனேட்டர் ஜான் மெக்கெயின் நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்களும், காயம் பட்ட டாயிஷ் போராளியோடு இசுரேல் பிரதமர் பேசும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இப்புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அவ்வமைப்புக்கு மேற்கத்திய முதலாளிய ஊடகங்களில் கொஞ்சம் ‘நல்ல’ பெயர் இருந்தது (அதாவது, தங்கள் பிடியில் சிக்கிய இந்திய செவிலியர்களின் கழுத்தை அறுக்காமல் திருப்பும் அளவுக்கு நல்லவர்களக அந்தக் காலத்தில் அவர்கள் அறியப்பட்டனர்).

நான்காவதாக, ஜிஹாதி அல்லது புனிதப் போர் என்பதற்கு வஹாபியர்கள் எழுதும் விளக்கவுரைகளில் மதப் புனிதத்திற்கு பின்னே அமெரிக்க நலன்தான் ஒளிந்துள்ளது. முஜாஹிதீன்கள், தலீபான்கள், அல்-காயிதா, போக்கோ ஹராம்(நைஜீரியா), டாயிஷ்(ஐ.எஸ்.ஐ.எஸ்), அல்-ஷபாப் (சோமாலியா), லிபிய இசுலாமிய போர்க் குழு (LIFG), மக்ரீப் நாடுகளுக்கான அல்-காயிதா, இந்தோனேஷியாவின் ஜெமா இசுலாமியா போன்ற வஹாபிய பயங்கரவாத இயக்கங்களின் பின்னணியில் அமெரிக்காவின் பிராந்திய அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான நலன்கள் உள்ளன.

ஐந்தாவதாக, அமெரிக்காவின் தயாரிப்புகளாக இவர்கள் இருந்தாலும் இவர்களுக்கு சிந்தாந்த தளத்திலும் செயல்பாட்டுத் தளத்திலுமாக சொந்த நலன்களும் உள்ளன. இவ்விருவரின் நலன்களும் ஒன்றுக்கொன்று முரண்படாத வரை மேற்குலகம் இப்பயங்கரவாத குழுக்களை ’நல்ல’ தலீபான்கள் என்றும் ’நல்ல’ அல்-காயிதா என்றும் ’நல்ல’ ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் அடைமொழியிட்டு அழைப்பார்கள். ஆப்கானில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படையினரின் ட்ரக்குகள் தொலைதூர பிரதேசங்களுக்கு பாதுகாப்பாக செல்ல நல்ல தலீபான்களுக்கு தண்டம் கட்டிய வகையில் ஏற்பட்ட செலவுகளை அமெரிக்க அரசே ஆவணப்படுத்தியுள்ளது.

எப்போது நல்லவர்கள் கெட்டவர்களாக மாறுவார்கள்? நல்லவர்களின் சித்தாந்த மற்றும் பிராந்திய நோக்கங்களை அடிப்படையாக கொண்ட அவர்களின் சொந்த நலன்கள் எப்போது அமெரிக்க நலன்களோடு முரண்பட்டுப் போகின்றதோ அப்போது நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகளாக மாறுவார்கள். சரியாகச் சொன்னால் ஒரு மிருகத்தை வளர்த்து விட்டு அது தின்னு கொழுப்பெடுத்து ஆடும் போது புதிய மிருகத்தை இறக்குவது அமெரிக்க உத்தி. அந்த வகையில் தாலிபான்கள் மற்றும் அல்கைதாவோடு இந்த புதிய ஐ.எஸ்.எஸ் மோதத் துவங்கியிருக்கிறது. மத்திய ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகள் மற்றும் மக்களை நிரந்தர போரில் வைத்திருக்க இசுலாமிய மதம் அமெரிக்காவிற்கு நன்கு பயப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் பயங்கரவாதிகள் புதிதாக விளக்கப்படுகிறார்கள். பிறகு அவர்களை கெட்டவர்கள் என்று உலக மக்களின் பொதுப்புத்தியில் நிலைநாட்டிவிட்டு போரையும் தொடுப்பார்கள்.

கெட்டவர்களை அழிக்க பரந்தாமன் அவதரித்தே ஆக வேண்டும் என்பதால், அமெரிக்க படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, போர் விமானத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள், அடிப்படை கட்டமைப்பு நொறுக்கப்படுவது, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது, குழந்தைகளின் உடல்கள் குண்டுகளால் குதறி எறியப்படுவது போன்ற காட்சிகளுக்குப் பின் கெட்டவர்கள் அழிக்கப்பட்டு மேற்குலக விளக்கத்தின் அடிப்படையிலான ஒரு ‘ஜனநாயக’ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ‘ஜனநாயக’ பொம்மை ஒன்று அதிபராக பதவியில் அமர்த்தப்படுவார்.

நாம் இப்போது பாரிஸ் தாக்குதலுக்குத் திரும்புவோம். இத்தாக்குதல் குறித்து இரண்டு கருத்துக்களை நாம் பரிசீலிக்க வேண்டும்.

தனது உருவாக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் கொண்டு பஷார் அல் அசாதின் ஆட்சியைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் நோக்கம். இதற்காகவே அவ்வமைப்பிற்கு ஆயுத சப்ளை மட்டுமின்றி, இராணுவ போர்தந்திர ரீதியிலான உதவிகளையும் அமெரிக்காவும் அதன் வட்டார நேச நாடுகளான இசுரேல் மற்றும் சவூதி அரசுகளைக் கொண்டு செய்து வந்தது. எனினும், நீண்ட கால நோக்கில் சிரியாவை முற்றிலுமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் விடுவது அமெரிக்காவின் நோக்கமில்லை. ஆப்கான், ஈராக் போல் ஒரு பொம்மை ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே அமெரிக்க நோக்கங்களுக்கு உகந்தது. எனவே, ஒருபக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முன்னேறி வரும் போதே அது ஒரு காட்டுமிராண்டிக் குழு என்பதை உலகிற்கு காட்ட அதனிடம் சிக்கிய வெளிநாட்டவர்களின் கழுத்தறுப்புக் காட்சிகளை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆரம்பகால வெற்றிகளுக்குப் பின் அது ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான இடங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. நாகரீக உலகின் ஒரே தலைவன் என்கிற தனது கடமையை ஆற்ற அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நேட்டோ படைகளைக் கொண்டு துவங்கியது. இந்த தாக்குதல் ஓராண்டு காலம் நீடித்த நிலையிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பலவீனமடையவில்லை என்பதோடு அதன் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணை வயல்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை – மாறாக சிரியாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எண்ணை வயல்களோ நேட்டோவின் எதேச்சையான தவறுகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன. ஆச்சரியமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து துரப்பணம் செய்யப்படும் எண்ணை சர்வதேச எண்ணைச் சந்தைக்குள் ‘எப்படியோ’ நுழைந்ததோடு, கச்சா எண்ணையின் சர்வதேச விலையில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தி ரசியாவின் எண்ணை வர்த்தகத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது வட்டார நண்பனை இழக்க விரும்பாத ரசியா, பஷார் அல் அசாதுக்கு ஆதரவாக களமிறங்கியது. தனது புவிசார் நோக்கங்களுக்காக பஷார் அல் அசாதின் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டுவது, ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு பிராந்தியத்திலிருந்து சர்வதேச கச்சா எண்ணைச் சந்தைக்குள் நுழையும் எண்ணையைத் தடுத்து தனது பொருளாதாரத்தைக் காத்துக் கொள்வது என்ற இரண்டு மாங்காய்களை ரசியா ஒரே கல்லில் அடிக்க நினைக்கிறது. ரசியாவின் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிலைகள் தகர்க்கப்படுகின்றன என்கிற செய்தி ஒரு பக்கமும், நேட்டோவின் உளவுக் கருவிகளான (intelligence assets) நல்ல ஜிஹாதிகளையும் சேர்த்தே தாக்குகின்றது என்கிற குற்றச்சாட்டும் கடந்த மாதத்தில் மேற்கத்திய முதலாளிய ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன.

ரசியாவின் எதிர்பாராத வருகையைத் தொடர்ந்து, இதற்கு மேலும் அசாதுக்கு எதிரான பதிலிப் போரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நேட்டோவின் மயிலிறகு அடிகளும் போதுமானதல்ல என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சிரியா தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கும் ரசியாவுக்கு இடையே வியன்னாவில் நடக்கவுள்ள பேச்சு வார்த்தையில் தற்போதைய நிலவரப்படி ரசியாவின் கையே ஓங்கியுள்ளது. இப்பேச்சு வார்த்தையைப் பொறுத்த வரை, அமெரிக்காவின் நோக்கம், சிரியா மற்றும் ஈராக்கை ஒன்றாகச் சேர்த்து மூன்று கூறுகளாக பிரிப்பது மற்றும் அசாதுக்கு மாற்றாக ஒரு மேற்கத்திய கட்டுப்பாட்டின் கீழான பொம்மை தலைமை. ரசியாவின் நோக்கம் அசாதின் தலைமையிலான ஒன்றுபட்ட சிரியா.

தாழ்ந்து விட்ட தனது நிலையை மாற்ற உடனடியாக நேரடிப் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு உள்ளது. எனவே அப்படியான ஒரு போருக்கு உகந்த மனநிலையை ஏற்படுத்த பாரிஸ் தாக்குதல் போன்றவை தோற்றுவிக்கும் அனுதாபம் அமெரிக்காவுக்கு தேவை. ஆகவே பாரிஸ் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

இதற்கு மாறான ஒரு கோணத்தை பிற முதலாளிய ஊடகங்கள் முன்வைக்கின்றன. அதாவது, இசுலாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும் தம்மால் எங்கு வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் தாக்குதல் தொடுக்க முடியும் என்பதை பறைசாற்றிக் கொள்ளவும் இந்த தாக்குதலைத் தொடுத்திருக்க வேண்டும் என்கின்றனர். சமீபத்தில் எகிப்துக்கு அருகே ரசிய விமானம் விழுந்து நொறுங்கியதைச் சுட்டிக்காட்டும் மேற்கத்திய ஊடகங்கள், அதுவும் கூட ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலே என்கின்றன.

நேட்டோ படைகள் தங்களை சிரியாவில் தாக்கினால், தம்மால் நேட்டோ நாடுகளுக்குள்ளேயே தாக்குதல் தொடுக்க முடியும் என்பதை உணர்த்தவே பாரிஸில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்கின்றன மேற்குலக முதலாளிய ஊடகங்கள். பாரிஸ் தாக்குதலுக்குப் பின் நேட்டோ படைகளும் ரசிய படைகளும் தனித்தனியே ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பை எதிர்கொள்வதை விட, இவர்கள் இருவரும் இணைந்தே அவ்வமைப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், சிரியாவின் எதிர்காலம் குறித்து இணைந்தே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய முதலாளிய ஊடகங்களின் ஏகாதிபத்திய சாய்விலிருந்தும் ஏகாதிபத்திய கொள்கைகளின் பாதந்தாங்கிகளாக அவர்கள் இருப்பதும் அவர்களின் ஆய்வுக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை நாம் தனியே விளக்கத் தேவையில்லை. இந்தக் காரணிகளால் தான் சிரியாவின் இன்றைய சீரழிவுகளுக்குப் பின் மேற்கத்திய நாடுகள் உள்ளன எனபதையும், பாரிஸ் தாக்குதல் மேற்கத்திய நாடுகளின் சிரியா கொள்கைகளின் தொடர் விளைவுதான் என்பதையும் இவை அங்கீகரிக்க மறுக்கின்றன. இன்னொரு பக்கம் பாரிஸ் தாக்குதலே அமெரிக்கா நடத்திய சதி என்று சதிக் கோட்பாட்டாளர்கள் முன்வைப்பதில் ஒரு பாதி ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளும் மறுபாதி அனுமானங்களாகவும் உள்ளன. உண்மைகளையும் அனுமானங்களையும் கலந்து கட்டி அவர்கள் வந்து சேரும் முடிவுகளும் விபரீத கற்பனைகளாக இருப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.

தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் தமது குறுகிய கால நலனுக்காக செய்த வல்லரசு அரசியல், இராணுவ மற்றும் உளவுச் சதிவேலைகளின் எதிர் விளைவுகள் என்பதே தர்க்க ரீதியில் வந்தடையக் கூடிய முடிவாக இருக்கிறது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தமது குறுகிய கால நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முன்னெடுத்த சதி நடவடிக்கைகளின் விளைவை மொத்த உலகமும் சந்திக்கிறது – இந்த மொத்த உலகத்திற்குள் ஏகாதிபத்தியங்களும் வருவதால் தவிர்க்கவியலாத படிக்கு அந்த நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்களும் அந்த எதிர் விளைவுகளின் பாதிப்புகளை அனுபவிக்கிறார்கள்.

பாரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பியர்களை உளவியல் ரீதியில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்புப் போருக்குத் தயார் செய்யும் வேலையை ஏகாதிபத்தியங்கள் தமது ஊதுகுழல்களான முதலாளிய ஊடகங்களைக் கொண்டு துவங்கி விட்டன. இரட்டை கோபுரத் தகர்ப்பிற்கு பழிவாங்க ஆப்கானுக்குள் நுழைந்து மீள முடியாத புதைகுழிக்குள் சிக்கிக் கொண்டதைப் போல் சிரியாவிற்குள் நுழைவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சவப்பெட்டிகளின் வரலாறு மீண்டும் திரும்புகின்றது – ஆனால், ஆப்கானை விட ரசியாவின் இராணுவ ஆதரவைக் கொண்டுள்ள சிரியா பலமானதொரு சவாலை வழங்கலாம், அது சர்வதேச எண்ணைச் சந்தையில் தாக்கத்தையும் அதன் தொடர்ச்சியாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமாக மக்களின் மேல் சுமையாக விழுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.

பிரெஞ்சு மக்களும் ஐரோப்பிய உழைக்கும் மக்களும் உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளும் இந்த நேரத்தில் தமது அரசுகளின் ஆக்கிரமிப்பு வெறியை சொந்த மண்ணில் எதிர்த்து நிற்க வேண்டும். அதுவே ஆக்கிரமிப்பு தேசங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளின் கடமையும் கூட.

மற்றொரு புறம் இசுலாமிய மதவதம் என்பது அமெரிக்க நலனுக்காக மட்டுமே தோன்றி வளர்ந்தது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் தொடர்பில்லை என்று பல்வேறு இசுலாமிய அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இசுலாமிய சர்வதேசம், மதப்புனிதம் இன்ன பிற கோட்டுபாடுகள் அனைத்தும் அல்லா அருளிய அருட்கொடைகள் என்று மதவாதிகள் நம்புகிறார்கள். உண்மையில் இவற்றை அல்லா அருளவில்லை, அமெரிக்காதான் வழங்கியது என்பதை இவர்கள் ஏற்பதில்லை. மாறாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கமே இசுரேலின் சதி என்று ஒளிந்து கொள்கிறார்கள்.

அல்கைதா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவை தோற்றத்தில் அமெரிக்காவைக் காரணமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தமது மதப் புனிதம் மற்றும் அந்த புனிதத்தை காக்க வந்த வீரர்களாகவே இசுலாமிய மக்களிடம் காட்டிக் கொண்டு அறுவடை செய்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு இசுலாமிய நாடுகளில் மதவாதிகளால் அணிதிரட்டப்பட்ட மக்கள் குறிப்பிட்ட காலம் வரை இவ்வியக்கங்களை புனிதப் போர் இயக்கங்களாவே அங்கீகரித்திருக்கின்றனர்.

மறுபுறம் இந்த இயக்கங்களின் பயங்கரவாதங்களுக்கு குறைவில்லாத செயல்களை நடத்திவரும் சவுதி அரசை இவர்கள் கண்டிப்பதில்லை. கூடவே சவுதியின் நல்லெண்ண தூதர்களாகவும் பேசுகிறார்கள்.

ஆகவே இந்த வரலாற்றிலிருந்து பெறும் படிப்பினை என்ன? இசுலாம் ஒரு மதம் மட்டுமே. அதாவது ஒரு தனிநபரின் ஆன்மீக நம்பிக்கைக்காக சில கோட்பாடுகளைக் கூறும் சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் வைத்திருக்கும் ஒரு வழிபாட்டு முறை. இந்த அளவைத் தாண்டி இசுலாம்தான் இந்த உலகின் சர்வரோக நிவாரணி. பங்குச் சந்தை, பெட்ரோல் விலைஉயர்வு, பாலியல் பிரச்சினைகள், கல்வி, வரலாறு, அறிவியல் அனைத்தையும் குர்ஆனிலும், நபிகளின் வரலாற்றில் இருந்து மட்டும்தான் தேடுவோம் என்று சொல்வது தவறு.

இல்லை இது சரிதான் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்க தொடர்ந்து தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். நாடுகள், மக்களது சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளில் மதத்தை அடிப்படையாக வைத்துப் பார்ப்பது என்பதை உண்மையில் அல்லாவோ இல்லை நபிகளோ செய்யவில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியங்களும், அவர்களின் காலை நக்கி வாழும் சவுதி வகாபியசமும்தான் இந்த விபரீதப் பார்வையை இசுலாமிய மக்களிடம் கொண்டு சேர்த்தன.

ஆக பாரிஸ் தாக்குதலில் நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிப்பது போல இசுலாமிய மதவெறியர்களையும் கண்டிக்க வேண்டும். இருவரும் அவர்களது நலனுக்காக தோன்றி இணைந்து வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால்தான் உலக மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்டுவதில் நாம் வெற்றிபெற முடியும்.

– தமிழரசன்

டாஸ்மாக் விற்பனை இலக்கு ! மழையில் மக்களை பாதுகாக்க வக்கில்லை !

0

cuddalore 3மழை வெள்ளத்திலிருந்து தமிழகத்தில் 60 பேர் பலி! வீடு, துணி-மணிகள், ஆடு-மாடுகளை இழந்து பரிதவிக்கும் மக்கள் மீது தடியடி!

  • ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு, குடி கெடுக்கும் டாஸ்மாக்கின் தீபாவளி விற்பனையை ரூ.401 கோடிக்கு உயர்த்தியது ஜெயா அரசு!
  • இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வக்கற்று, ஆளத் தகுதியிழந்து நிற்கிறது அரசு கட்டமைப்பு! நிவாரணம் கோரும் மக்களை அடித்து நசுக்குகிறது!
  • புனர்வாழ்வு, மராமத்துப் பணிகளையும் மக்கள் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் செய்து முடிப்போம்!

cuddalore-flood-relief-ppஅன்புடையீர்!

தமிழகத்தில் பெய்த கனமழையால் எல்லா மாவட்டங்களும் பெரும் வெள்ளப் பெருக்கில் தத்தளிக்கின்றன. குறிப்பாக, கடலூர், சென்னை, திருவள்ளூர், தருமபுரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே 60-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலி வாங்கியுள்ளன. மேலும், பலர் காணவில்லை என்ற துயரம் நீடிக்கிறது. 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமடைந்துள்ளன. முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்டு இலட்சக்கணக்கானோருக்கு உணவு, மருத்துவம், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் சொல்லொண்ணா துயரத்தில் வாடி வருகின்றனர்.
எங்கும் வெள்ளம் வடிந்தபாடில்லை. சாலைகள் உடைந்து ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கால்நடைகள் உணவு இன்றி இறக்கும் அபாய நிலைமையில் உள்ளன.

சுமார் 1.62 லட்சம் ஏக்கரில் விளைந்த பயிர்கள் கடலூர் மாவட்டத்தில் மட்டும் அழிந்துள்ளது. இதேபோல பிற மாவட்டங்களில் விளைந்த நெற்பயிர்கள் அழிந்துள்ளன. வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற பல பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால், விவசாயிகள் நடைபிணமாக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதிப்பினால் துண்டிக்கப்பட்ட பல கிராமங்களில் மின்சாரமும் இல்லாமல் இருண்ட மயான பூமிகள் போல் காட்சியளிக்கின்றன. பல கிராமங்களில் தொற்று நோய் பரவிவருகிறது.
வெள்ளத்தால் பாதித்த எந்த மக்களுக்கும் உடனடியாக நிவாரணங்கள்சென்று சேரவில்லை. நான்கு நாட்களாக உணவு இன்றி தவிக்கும் மக்கள், அதிகாரிகள் வந்து பார்க்காததால் வெகுண்டெழுந்த மக்கள்  சாலை மறியலில் இறங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. அம்மக்களை, போலீசைக் கொண்டு தடியடி நடத்தி விரட்டி வருகிறது ஜெயா அரசு. பெண்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என பார்க்காமல் மிருகத்தனமாக தாக்கி வருகிறது.

ஏற்கனவே தானே புயல் தாக்கிய இந்த மாவட்டத்தில், அதன் சுவடுகள் மறைவதற்கு முன்பாக மீண்டும் வந்த, இந்த கனமழை மேலும் மக்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், நிவாரணம் வழங்குவதாக கூறி நாடகமாடி வருகிறது ஜெயா அரசு. போர்க்கால அடிப்படையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. போதுமான மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை.

அதேசமயம், கொடநாட்டில் உல்லாசமாக ஓய்வெடுக்கும் ஒய்யார இராணி ஜெயாவோ, அடுத்து யார் மீது வழக்கு தொடுக்கலாம் என சிந்தித்து செயல்படுகிறார். பிணத்திலும் பிரபலம் தேடும் வக்கிரம் பிடித்தவராக உள்ளார். கண் துடைப்புக்கு மேற்கொள்ளும் சில அற்ப விசயங்களையும் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறார். சொத்து குவிப்பது எப்படி, அதிகாரிகளை இடமாற்றம் செய்து அடுத்தத் தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என சதித்தனமாக சிந்தித்து செயல்பட்டு வருகிறார்.

மக்களின் குடி கெடுக்கும் டாஸ்மாக்கின் தீபாவளி விற்பனையை உயர்த்த ஒரு மாதம் முன்னதாகவே திட்டமிட்டு ரூ.401 கோடியை கொள்ளையடித்துள்ளது ஜெயா அரசு. ஆனால், இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனாலேயே தமிழகத்தில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரையில் உள்ள ஏரி உடைந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. கடலூர் மாவட்டமே பிணக்காடாக நீர் வடிவதற்கே வாய்ப்பின்றி உள்ளது.

தனியார்மயம் தாராளமயம் என்ற நாசகர கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், அரசு மக்களின் நலவாழ்வை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிட்டது. காசு இருப்பவன் மட்டுமே வாழ வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. அடிப்படை மராமத்துப் பணிகள் உள்ளிட்ட எல்லா மக்கள் சேவைகளையும் நிறுத்திக் கொண்டுவிட்டது. அன்னிய செலவாணி என்ற பணக்கார நாடுகளின் பிச்சைக்காசுக்காக எல்லா துறைகளையும் சேவைத்துறைகளாக்கி மக்களை சுரண்டுகிறது.
இந்த வகையில் மக்களை ஆளத் தகுதியிழந்து விட்டது. அதே வேளையில் பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதன் மூலம் மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகவும் இந்த அரசு மாறிவிட்டது. குறைந்த பட்ச நிவாரணம், மராமத்துப் பணிகளைக் கூட இனி இந்த அரசிடம் கேட்டுப் பெற முடியாது என்பது இந்த கனமழையும் மக்கள் மீதான தடியடிகளும் நமக்கு உணர்த்துகின்றன.

cuddalore-flood-relief-pp-posterஅடிமையாக மட்டுமே வாழத்தக்கவர்கள் மக்கள் என்று இந்த அரசும் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கங்களும் கொக்கரிக்கின்றன. மற்றொருபுறம், இந்த மழை வெள்ளத்திற்கு பின்னால், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற கனம வளக்கொள்ளைகளும் சுற்றுச்சூழல் சீரழிப்புகளும் உள்ளன. இவற்றையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது.

ஆகையால், இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்கவும் அடிப்படை மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், புனர்வாழ்வு அளிக்கவும் ஒரே தீர்வுதான் உள்ளது. மக்களே இவற்றை நிர்வகிக்கும் வகையிலான கமிட்டிகளை அமைத்து, மக்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கி, நாமே நாட்டையும் வீட்டையும் நிர்வகிப்பதுதான். அந்த திசையில் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மக்கள் அதிகாரம்
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகள்
தொடர்புக்கு: 81485 73417 – 80152 69381

பென்னாகரத்தில் பேருந்து பிரச்சாரம்

மழை வெள்ளத்திற்கு தமிழகத்தில் 60 பேர் பலி! வீடு, துணி-மணிகள், ஆடு, மாடுகளை இழந்து பரிதவிக்கும் மக்கள் மீது தடியடி!

floods-govt-apathy-pennagaram-propaganda-1என்ற தலைப்பில் 13-11-2015 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை பத்திரிகை செய்தியை காண்பித்து பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளிலும், மக்கள் கூடியிருக்கும் இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

“கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையில்லாமலும் தவிக்கின்றனர். அங்கு முன்கூட்டியே எந்த மராமத்து பணிகளையும் செய்யவில்லை. கடலூரில் போராடிய பொதுமக்களை டி.எஸ்.பி சுந்தரவடிவேல் தலைமையிலான போலீஸ் கண்மூடித்தனமாக அடித்து மண்டையை பிளக்கிறது.

டாஸ்மாக் விற்பனைக்கு முன்கூட்டியே திட்டம் போட்டு இலாபம் ஈட்டும் இந்த அரசு குளம், ஏரிகளை தூர்வாரிவிட்டதாகக் கூறி 600 கோடி செலவு செய்ததாக சட்டமன்றத்திலேயே கூறியது எப்பேர்ப்பட்ட பொய்.

டாஸ்மாக்கை மூடு என்று பாடல் பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் கோவனை தேசத் துரோக வழக்கில் கைது செய்துள்ளது. இனியும் இந்த அரசை நம்பி பலனில்லை. ஆகவே, ஆளும் அருகதை இழந்த இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கி எறிய மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து போராட வேண்டும்” என்று கூறி தோழர்கள் பிரசுரம் கொடுத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் ]

நவம்பர் புரட்சி தினத்தில் கோவனைப் பேசாதே !

0

நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள் – 2

1. திருச்சி

வம்பர்-7 ரஷ்ய புரட்சிநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகள் சார்பாக கடந்த 01-11-2015
அன்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சிறுவர்கள், சிறுமிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. பகுதியிலுள்ள மக்கள் தோழர்களுடன் ஒன்றாக கூடி புரட்சிகர பண்பாட்டு விழாவை கொண்டாடும் வகையில் கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம், நீர் நிரப்புதல் என நடத்தப்பட்டன. அனைவரும் கூட்டுத்துவமாகவும்,
ஒற்றுமையாகவும், தன்னம்பிக்கை, திறமையும், ஆற்றலை உயர்த்தும் வகையில் போட்டிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். ஓவிய போட்டிக்கு டாஸ்மாக் பாதிப்புகள் பற்றி தலைப்பு வைத்ததில் ஆர்வமுடன் சில மாணவர்கள் படம் வரைந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நவம்பர் 7 அன்று காலை 11 மணியளவில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்று நிகழ்ச்சிக்கு போலீசு மைக்செட் வைக்க அனுமதி தரவில்லை. தோழர் கோவன் கைது பற்றி பேசக்கூடாது என அடக்குமுறை செலுத்தும் வகையில் போலீசு நடந்து கொண்டது. அதையும் மீறி மெகா போன் வைத்து மக்களிடம் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பறை இசையுடன் துவங்கிய நிகழ்ச்சி முதலில் தோழர்கள் எழுப்பிய முழக்கத்துடன் நவம்பர் புரட்சி நாளை வரவேற்று, மோடி, ஜெயா கும்பலின் பாசிச ஆட்சியை அம்பலப்படுத்தியது.

தலைமை உரை ஆற்றிய ம.க.இ.க உறுப்பினர் தோழர் சரவணன் “பிற்போக்கு பண்டிகைகளை மக்கள் ஆர்வமாக கொண்டாடி வருகின்றனர் என பத்திரிகையில் எழுதுகின்றனர். ஆனால் தீபாவளி பண்டிகை பற்றி வாட்ஸ் ஆப்பில் ஒருவர், ‘கிருஷ்ணன் நரகாசுரனை அழிக்காமல் மன்னித்து
விட்டிருந்தால் கடனை உருவாக்கும் இந்த தீபாவளி பண்டிகை வராது. நாம் கஷ்டப்பட் வேண்டியதில்லை’ என கூறியிருந்தார். இன்றைய சமூக பொருளாதார அமைப்பில் மக்கள் தீபாவளி பண்டிகையில் பாதிக்கப்படுவதும், நிம்மதியாக ஒரு பண்டிகை கூட கொண்டாட முடியவில்லை. நவம்பர் புரட்சி தான் அனைத்து பாட்டாளி வர்க்க மக்களுக்கும் விடிவை தந்தது. செத்து போனா தான் சொர்க்கம் என்று இப்ப உள்ள ஆன்மீகவாதிகள் கூறுகின்றார்கள். இவ்வுலகத்தில் கஷ்டப்படுவாய் என்பதை அடியோடு மாற்றி மண் உலகில் ஒரு சொர்க்கத்தை அனைத்து பாட்டாளி மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கொண்ட சோசலிச சமுதாயத்தை படைத்தது ரஷ்யா.

சோசலிசமும், கம்யூனிசமும் தான் தீர்வு, மக்கள் சோசலிச உணர்வை அறிந்து கொள்ளும் போது, தெரிந்து கொள்ளும் போது சோசலிசத்தை படைப்பார்கள்” என பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்து பேசிய ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்ஜீவா “இந்த அரசு கட்டமைப்பு தகுதியிழந்து அழுகி நாறிவிட்டது. இதைத் தூக்கியெறிய வேண்டும். ஒரு மனிதன் மலக்கூடையை சுமந்து சென்றால் அதில் வரும் நாற்றம் தான் அரசின் யோக்கியதை. தேவையில்லாத அரசை தூக்கி எறிய வேண்டும். மக்களின் பஞ்சம், பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஒழித்த நவம்பர் புரட்சியை நம் நாட்டிலும் நடத்த வேண்டும், அப்போது தான் மக்களுக்கு விடிவு கிடைக்கும்.” என்று பேசினார்.

அடுத்து கொடியேற்றி விட்டு சிறப்புரை பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ் அவர்கள் “நவம்பர் புரட்சி நாளுக்கு கொடியேற்று விழாவுக்கு கூட ஒலிபெருக்கி வைத்து கொள்ள அனுமதிக்கவில்லை. அனுமதி வழங்க போலீசிடம் சென்ற போது, ‘கோவனை பற்றி பேசக்கூடாது, பேசினால் வழக்கு போடுவோம்’ என்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் டாஸ்மாக்கை எதிர்த்து பாட்டு பாட உரிமை இல்லை. தேசத் துரோக வழக்கு போடுவதும், கோவனை பார்க்க விடாமால் அடக்குமுறை செலுத்துகின்றனர். கோவனை பற்றி பேசினால் வழக்கு என்றால் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பேசினார், அவர் மீது வழக்கு போடு. லண்டனில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தமிழக அரசை கண்டித்து இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று
பேசினார்கள், அவர்கள் மீது வழக்கு போடு,அவர்கள் மீது வழக்கு போடு, பல கட்சிகள் கோவனை பற்றி பேசுகின்றனர். அவர்கள் மீது வழக்கு போடு.

இந்தியாவில் மோடி, RSS கும்பல் நேரடியாக எழுத்தாளர்களை சுட்டுக் கொல்வது, சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது என இந்து மதவெறி காலிகள் தனிமனித உரிமைகளை பறித்து நீ என்ன சாப்பிடுவது, எங்கு உட்காருவது, எங்கு நிக்கனும், எழுத தடை, பேச தடை, பாடத் தடை என ஹிட்லரை போல பாசிச அடக்கு முறையை ஏவி விடுகின்றனர்.

இந்த அடக்கு முறை அஞ்ச மாட்டோம். பேனா, துரிகை போன்றவை ஆயுதமாக்குவோம். களத்தில் இந்த அரசின் பாசிசத்தையும், RSS, BJP காலித்தனத்தையும் ஓட ஓட விரட்டியடித்து முறியடித்து சோசலிச சமுதயத்தை உருவாக்குவோம். நவம்பர் புரட்சி நாளில் அதற்கு உறுதியேற்போம்.” என மக்களை அறைகூவி அழைத்தார்.

பிறகு தோழர்கள் , பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை பு.ஜ.தொ.மு சங்க நிர்வாகிகள் தோழர்.சுந்தர்ராஜ், முத்துகருப்பன் ஆகியோர் கொடுத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக பெ.வி.மு தலைவர் தோழர் நிர்மலா அனைவருக்கும் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

2. திருச்சி பு.ஜ.தொ.மு

திருச்சி குட்செட் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் (இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.) சார்பில் நவம்பர் 7 ரசியப் புரட்சி 92 வது ஆண்டு தினம் 07-11-2015 அன்று கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை குட்செட் சுமைப்பணித் தொழிலாளர் முன்னணி தலைவர் முத்துக்கருப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் சிறப்புத் தலைவர் ஞா.ராஜா அவர்கள் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவினையொட்டி சிறப்பிக்கும் வகையில் வெடி வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் கோபி அவர்கள் மற்றும் குட்செட் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்க தலைவர் குத்புதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரிநாடன் சிறைப்புரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

3. திருவள்ளூர் (மேற்கு)

புரட்சி – புதிய ஜனநாயகம் – கம்யூனிசம் 98 – வது ரஷ்யப் புரட்சி தின விழா

திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட அமைப்பு சார்பில் 98-வது ரஷ்யப் புரட்சி தின விழா பட்டாபிராம் பகுதியில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி விளையாட்டு போட்டிகள் 01-11-2015 அன்று நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், மற்றும் பெண்களுக்கான மியூசிக்கல் சேர், ஓட்டப்பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி, குண்டு எறிதல் போன்றவை நடத்தப்பட்டன. ஆண்களுக்கு வாலிபால் மற்றும் கயிறு இழுத்தல் போட்டி
நடத்தப்பட்டது. போட்டிகளில் மொத்தம் 80 பேர் வரை கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், பகுதியை சேர்ந்த நண்பர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொண்டனர்.

நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற ரஷ்யப் புரட்சி தின விழா கூட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குடும்பத்துடன் 200 பேர் கலந்து கொண்டனர். கூட்டம் மாலை 5.30 மணியளவில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன்துவங்கி இரவு 8.30 மணியளவில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன்முடிவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நவம்பர் 07 – 98-வது ரஷ்யப் புரட்சி தின விழா கூட்டத்தினைதிருவள்ளூர் (மேற்கு) மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமைதாங்கி நடத்தினார். ரஷ்யப் புரட்சி தின விழாவை ஒரு குடும்ப விழாவாக நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் இன்றைய அரசியல் சூழலில் இந்து மதவெறி பாசிச சக்திகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களுடைய பண்பாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்திலும் தனது மதவெறி பாசிசத்தை கட்டவிழ்த்து வருகிறது. இதனை
உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கிய பகுத்தறிவு கழகத்தின் தலைவர் தோழர் தமிழ்நெறி, “நமது நாட்டில் மோடியின் ஆட்சியில் முற்போக்காளர்களும், மூடநம்பிக்கைக்கு எதிரான எழுத்தாளர்களும் படுகொலை செய்யபடுகின்றனர். மாட்டிறைச்சிக்கு
எதிரான மதவெறி அரசியல் RSS-ஆல் திட்டமிட்டு இந்து மதவெறியர்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மனுதர்மத்தில் உள்ள ரிக் வேதம் புராணங்களை படித்துகாட்டி மாட்டிறைச்சியை உட்கொள்ளும் பண்பாடே ஆரிய பார்ப்பனர்களது பண்பாடு தான்” என்பதை தோலுரித்து காட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பட்டாபிராம் பகுதி கவுன்சிலர் சார்லஸ் பேசும் போது, குழந்தைகளை நமது அரசியலுக்கு ஏற்றவாறு வளர்த்துள்ளதை பாராட்டியும், போராட்ட தலைமையின் வாரிசுகளாக உள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினார். இன்றைய மதவாத அரசியலை வீழ்த்த குழந்தைகளை இது போன்ற அரசியலை சொல்லி வளர்ப்பது தான் சரியானது என உணர்வதாக கூறினார்.

பழங்குடியினர் மக்கள் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் ஜெயதென்னரசு இலக்கிய நடையிலும், எளிய தமிழிலும் அரங்கில் இருந்த அனைவரின் மனதை கவரும் வகையில் பேசினார். “இதுவரையில் பல்வேறு கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும், பொதுகூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசியிருந்தாலும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சி எனக்கு
இதுவரை கலந்து கொண்ட கூட்டங்களில் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் நவம்பர் விழா கூட்டத்தில் நான் எனது குடும்பத்துடன் கலந்து கொள்வேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். இன்றைய மதவெறி பாசிசத்தை வீழ்த்த பெண்கள் அதிக அளவில் களம் இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும். குழந்தைகளின் அரசியல் உணர்வை பாராட்டுகிறேன். நமது அமைப்பின் அரசியல் பாதை தான் சரியானது இதன் மூலம் தான் இந்து மதவெறி பாசிசத்தை வீழ்த்த முடியும்” என உறுதியாக கூறி தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்புரையாற்றிய திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் சோவியத் ரஷ்யாவின் சாதனைகளை, நம்நாட்டு மக்களின் அவல வாழ்க்கையோடு ஒப்பிட்டு விளக்கினார். “பாசிசமயமாகி வரும் காவி பயங்கரவாதத்தையும், மறுகாலனியாக்க நடவடிக்கைகளையும் இன்றைய அரசியல் பாதையில் (தேர்தல் பாதை) நின்று தீர்க்க முடியாது. பாசி சத்தை முறியடிக்கும் வல்லமை கம்யூனிசத்தை தவிர மாற்று ஒன்றில்லை.தற்போது தேவை அதிகாரத்தை மக்கள் கையிலெடுப்பதும், புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுப்பதும் தான் ஒரே தீர்வு” என்பதை விளக்கி பேசினார்.

இறுதியாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்கள்அனைவருக்கும், திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேட போட்டிமற்றும் ஓவியம் வரைதல் ஆகியவற்றில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் கோப்பை மற்றும் சாண்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியிலும், விழாவிலும் கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த ஆரவாரத்துடன், உற்சாகத்துடனும் கோப்பை மற்றும் சான்றிதழை பெற்று சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தோழர் லெட்சுமணன் கூட்ட ஏற்பாடுகளுக்கு உதவி புரிந்த கிளை சங்க முன்னணியாளர்களுக்கும், விளையாட்டு குழு தோழர்களுக்கும் நன்றி தெரிவித்த்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருமையான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்

4. சென்னை பெ.வி.மு, ம.க.இ.க

98-வது நவம்பர் புரட்சி நாள் விழாவினை “பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தை முறியடிப்போம் ! பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்தி பிடிப்போம்!” என்ற முழக்கத்தை
முன்வைத்து நவம்பர் புரட்சி விழா சென்னையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. விழாவில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கு ம.க.இ.க. தோழர் சோமு தலைமை தாங்கி நடத்தினார். ரஷ்யாவில் நடந்த புரட்சியை போல இந்தியாவிலும் ஒரு புரட்சியை நடத்த வேண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

nov7-pevimu-04பின் பெ.வி.முவின் குரோம்பேட்டை கிளை செயலாளர் தோழர் மீனா வாழ்த்துரையும், நிகழ்ச்சிகளை ம.க.இ.க. தோழர் அஸ்ரத்
தொகுத்தும் வழக்கினார்கள். இளம் தோழரின் உற்சாகமான பறை முழக்கத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி.

பகத்சிங், வேலுநாச்சியார், ஜான்சி ராணி, அஸ்ரத் மஹல், கல்புர்கி என நடித்த இளந்தோழர்கள், அவர்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடிய தோழர் கோவனை கைது செய்தது போல என்னையும் கைது செய்யுங்கள் என்று துணிவோடு இளந்தோழர் மேடையில் ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடி தொடங்கியதும் அவருடன் எங்களையும் கைது செய்யுங்கள் என்று சொல்வது போல் மேடையில் 5 இளந்தோழர்கள் ஏறி கோரஸ் பாட, கைதட்டலில் அரங்கமே அதிரத் தொடங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் காட்சியாக வைத்தது அனைவரையும் கவர்ந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“மாட்டுகறி’ என்ற தலைப்பில் பெ.வி.மு.வின் தோழர்கள் கவி மற்றும் வடிவு, கவிதை வாசித்தார்கள். “பசு பசு என்று கூவிகிறார்களே என் எருமை மாட்டை பற்றி ஒன்றும் சொல்வதில்லை – ஓ…. எருமை கருப்பாக இருப்பதாலா?” என்றும், “மாட்டுகறி சாப்பிட கூடாது என்று கூவும் இவர்கள் நடுவீட்டில் மாட்டை கட்டி வைத்து சாணி, மூத்திரம் அள்ளுவதற்கு தயாரா?” என்ற கேள்விகளையும் அவர்களின் முகத்தில் அறைவதுபோல் கேட்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பெ.வி.மு. தோழர்கள் “செவ்வணக்கம் செவ்வணக்கம்’, “புரட்சி புரட்சி எனும் சொல்’ என்ற புரட்சிகர பாடல்களை பாடியது அரங்கத்தில் சிறப்பாக பாராட்டப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு ‘மாற்றம்’ என்ற நா டகம் பெ.வி.மு தோழர்களால் நடத்தப்பட்டது. இப்போது உள்ள கல்வி சூழலை விரும்பாத சிறுவர்கள் காணும் கனவு பள்ளி போன்று நமக்கும் நிஜத்தில் கிடைக்காதா என்ற ஏக்கம் நிறைவேற, நாம் எல்லோரும் சேர்ந்து போராடினால் மாற்றம் நிச்சயம் உருவாகும் என்று உணர்த்தும் விதமாக அமைந்தது.

ம.க.இ.க.வின் சென்னை கலைக்குழு சார்பில் தீபாவளி என்ற நாடகமும் / புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. நரகாசூரனின் மரணத்தை தீபாவளியாக கொண்டாடப்படுவதை உழைக்கும் மக்களுடைய தீராதவலி என்று உணர வைத்தது நாடகம். மேலும் பாடல்கள் மூலம் எல்லாருக்கும் உணர்வூட்ட முடியும் என்ற வகையில் அமைந்தது கலைநிகழ்ச்சி.

பெ.வி.மு தோழர் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பகுதிகளில் ஓட்டப் பந்தயம், எலுமிச்சை ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தினர். அதில் பகுதி குழந்தைகளும் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் விழா அரங்கில் பரிசுகள் வழங்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கும், ஓவியம் வரைந்து அரங்கில் காட்சியாக வைத்தவர்கள், கவிதை வாசித்தவர்களுக்கு என்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை தோழர் சுப.தங்கராசு, பு.ஜ.தொ.மு, தோழர் ராஜூ, மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் சோமு, ம.க.இ.க., தோழர் அஜிதா, ம.க.இ.க, தோழர் செல்வம்,
ம.க.இ.க, தோழர் ராமன், ம.உ.பா.மை, தோழர் லூர்தின் ம.உ.பா.மை
ஆகியோர் வழங்கி சிறப்பித்தார்கள்.

nov7-pevimu-24சிறப்புரையில் பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்
ராஜூ
, இப்போது உள்ள அரசியல் சூழல் பார்ப்பன பாசிச ஜெயா அரசு எப்படி அடக்குமுறையினை கையாள்கிறது, அதற்கு உதாரணமாக டாஸ்மாக் எதிர்த்துபாடிய தோழர் கோவன் கைது நடவடிக்கை என்பதை விளக்கமாக எடுத்து கூறினார்.

பெ.வி.மு. தோழர் சத்யா நன்றியுரை வழங்கினார்.

பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் விழா சிறப்பாக முடிந்தது.

நவம்பர் 7 விழாவின் சிறப்புகளையும் கடமைகளையும் நெஞ்சில் ஏந்தி தோழர்கள் உற்சாகமாக கலைந்தனர்.

விழா முடிவில் மாட்டுகறி விருந்து அளிக்கப்பட்டது.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை

5. காஞ்சிபுரம்

பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தை முறியடிப்போம்!

பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் காஞ்சிபுரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் கொண்டாட்டப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்

6. உடுமலைப்பேட்டை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் நவம்பர் 7 அன்று உடுமலைப்பேட்டையில் ரசியப் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறி விருந்து
வழங்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
உடுமலைப்பேட்டை

ஊடகங்களை நம்பலாமா ? புதிய கலாச்சாரம் – நவம்பர் 2015 வெளியீடு !

0

puka nov 15 wrapper

ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனின் விருப்பம் என்ன? மற்றவர் பார்க்கத் தவறும் தருணங்களை காமராவில் பதிவு செய்ய வேண்டும், உலகப் புகழ் பெற வேண்டும்.

ஏகாதிபத்தியத்தின் தயவில் பஞ்சத்தாலும், இனக்குழுச் சண்டைகளாலும் உருக்குலைந்து கொண்டிருக்கும் கண்டம் ஆப்பிரிக்கா. கனிம வளம், விலங்கு வளம் மட்டுமல்ல, துயரத்தின் உச்சியில் சிதறும் மக்களும் அங்கே ஏராளம். அவ்வகையில் உலக மீடியாவின் கருணைப் பக்கங்களுக்கு இன்று வரை அமுத சுரபியாக பங்களிப்பது ஆப்பிரிக்க காட்சிகள்தான்.

தென்னாப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட கெவின் கார்ட்டரும் அத்தகைய காட்சிகளை தேடி சூடானுக்கு 1993-ம் ஆண்டில் செல்கிறார். பட்டினியால் உறைந்து போன அந்த மண்ணில் உலகப் புகழ் பெறப்போகும் காட்சிகளுக்கா பஞ்சம்?

கிராமம் ஒன்றில் எலும்பும் தோலுமாக இருக்கும் சிறுமி ஒருத்தி தவழ்ந்து போகிறாள். அவள் எப்போது சாவாள் என ஒரு கழுகு காத்திருக்கிறது. இடையூறு ஏதுமின்றி கழுகும் சிறுமியும் கேமராவின் சட்டகத்தினுள் வரும் வரை அவர் காத்திருந்து புகைப்படம் எடுக்கிறார். நியூயார் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகும் அந்தப் படம் 1994-ம் ஆண்டு புலிட்சர் பரிசைப் பெறுகிறது.

பிறகு படத்தில் இருக்கும் அந்தச் சிறுமி என்ன ஆனாள் என்று பலரும் கேட்கிறார்கள். படம் எடுத்த உடன் திரும்பிய கார்ட்டருக்கு இது குறித்து தெரியாது. உயிர் போகும் நிலையில் அந்தச் சிறுமியைக் காப்பாற்றாமல், புகைப்படம் மட்டும் எடுத்ததைப் பலரும் விமரிசிக்கிறார்கள். இந்தக் கேள்வி எழுப்பிய மன உளைச்சலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

சாவதற்கு முன்பு எழுதிய கடிதத்தின் முதல் வரி I am Really, Really Sorry.

கெவின் கார்ட்டருக்கு கொஞ்சம் மனசாட்சி இருந்தது. தற்கொலைக்கு முன்பு அவர் கொண்டிருந்த அறம்தான் இன்றைய செய்தியாளர்களின் விருப்பம். இதைக் கற்றுக் கொடுத்த ஊடக நிறுவனங்கள்தான் இன்றைய செய்திகளை உருவாக்குகின்றன, கட்டுப்படுத்துகின்றன, வெளியிடுகின்றன.

ஆனால் இன்று அப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டால் தற்கொலை செய்வதற்கு கெவின் கார்ட்டர்கள் இல்லை. கார்ப்பரேட் ஊடக உலகின் ஆட்சியில் பரபரப்பான செய்திகளைக் கொறித்து விட்டு பட்டினி பஞ்சங்களை பார்ப்பதற்கு கூட மக்கள் தயாராக இல்லை.

உங்களை சிந்தையில் படியும் செய்திகளின் கதை இதுதான்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

 

 

இதழில் இடம்பெற்றுள்ள தலைப்புகள்:

  • பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம்
  • பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள்…!
  • பெரிய கோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூட நம்பிக்கை!
  • வாவ்! பாரதத்தாய் ஜஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!
  • விகடன் – மதன் லடாய்: அம்பிகளின் அடிமைப் போர்!
  • மாலையில் மெழுகுவர்த்தி, ராத்திரி குவார்ட்டர்,
    காலையில் THE TIMES OF INDIA
  • தினமணிதான் இந்துமுன்னணி!
    வைத்தி மாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்!
  • குமுதம்: ரிப்போர்ட்டரா, புரோக்கரா?
  • 24 X 7 களின் உண்மை முகம்!
  • காவி மோடியின் பாணியில் கார்ப்பரேட் மீடியா…!
  • அர்னாப் கோஸ்வாமி, பர்கா தத் கோபமெல்லாம் உண்மையல்ல!
  • ஜெயா நிரபராதி: ஊடகங்கள் எழுதிய விநோதத் தீர்ப்பு!
  • நேபாளம்: எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________