Thursday, June 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 573

மூணார் தேயிலைத் தொழிலாளர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்

1

லைகள் சேகரிக்கும் மழைத்துளிகள் ஆறாய் பெருக்கெடுத்து வழிந்தோடுவதைப் பார்த்திருப்போம்; மலைகள் கண்ணீரைப் போல் வடிக்கும் நீரூற்றுகளை நீங்கள் மூணாரில் காணலாம்.

மூணார்… மேற்குத் தொடர்ச்சி மாலையில் திருப்பூர் மாநகர மாவட்டத்தின் மேற்கெல்லையில் இருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் கடல் மட்டத்திற்கு மேலே 5500 அடியில் இருக்கிறது. மறையூர் என்ற இடைநிலை கட்டம் வரை காடுகளடர்ந்திருக்கும் மலைகள், கடந்து செல்லச் செல்ல காடுகளைக் காவு வாங்கிய தேயிலைத் தோட்டங்களாகப் பரந்திருக்கிறது.

கே‌.டி‌.எச்‌.பி எனப்படும் கண்ணன் தேவன் மலைத் தோட்டங்கள் என்ற நிறுவனமும், டாடாவும், தலையார் தேயிலை நிறுவனமும் இந்தப் பரந்த தேயிலைத் தோட்டங்களின் ஏகபோக உரிமையாளர்கள். இவற்றில் கண்ணன் தேவனும், டாடாவும் பெரும்பான்மைத் தேயிலைத் தோட்டங்களைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. விளம்பரங்களைக் கவனித்திருப்பவர்களுக்கு இங்கே ஒரு கேள்வி எழக்கூடும். கண்ணன் தேவன் என்பது டாடாவின் தயாரிப்புதானே? அவ்வாறெனில் ஏன் தனித்தனி நிறுவனங்களாக இவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்? என்று.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இங்கே தொடங்குகிறது சூழ்ச்சியின் திரி. பற்ற வைத்தால் சுழலும் சங்குச் சக்கரம் எரிந்து பொசுங்கும் மலையின், தேயிலைத் தோட்டங்களின், மலைக்காடுகளின் முற்றாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை, வாழ்நிலையை நாலாத் திசைகளிலும் தீக்கங்குகளாகச் சிதறடிக்கின்றது.

கண்ணன் தேவனின் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களிலேயே அதிக சதவீதப் பங்குகளை வைத்திருப்பவர் – டாடா நிறுவனம்தான். மீதப் பங்குகள்? அவை அத்தோட்டங்களிலேயே பணிபுரியும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பிரைவேட் ஷேர்களாகப் (தனிநபர் பங்குகள்) பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளியும் 3,000 மதிப்புள்ள பங்குகளின் உரிமையாளர். ஆனால் அவர் அதை விற்று காசாக்க முடியாது. அப்படி விற்றால் அதை டாடாவிற்கே விற்க வேண்டி வரும். நடைமுறையில், ஓய்வு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களிடம் அந்நிறுவனம் அந்தப் பங்குகளை இவ்விதம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் குடியிருப்புகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தொழிலாளர்களின் அறியாமை வேறு அந்நிறுவனத்திற்கு பெரும் சாதகம். கடந்த மாதம் முழுவதும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அங்கே கூலி உயர்வு கேட்டுப் போராடிய செய்திகளை நீங்கள் கண்டிருக்கக் கூடும். தேயிலைத் தோட்டம் மட்டுமல்ல, ரப்பர் மற்றும் எஸ்டேட் தொழில்களைச் சேர்ந்த அனைத்துத் தொழிலாளர்களும் கேரளாவெங்கும் போராடினர். மலையாளிகளின் வார்த்தையில் சொன்னால் “இது தோட்டத் தொழிலாளிகளின் சமரம்”.

தொழிற்சங்கங்களுக்குப் பேர் போன கேரளாவில் இது ஒண்ணும் புதியதல்ல என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இப்போராட்டம் துவங்குவதற்கான காரணமே தொழிற்சங்கங்களின் துரோகம்தான்.

ஜனவரியிலேயே இக்கூலி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் பி‌.எல்‌.சி என்று பரவலாக அறியப்படும் தோட்டத் தொழில்களின் ஊதியக் குழுவால் தொடங்கி நடத்தப்பட்டு கூலி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். துரோகத் தொழிற்சங்கங்களில் பெரும்பான்மையற்ற சங்கங்களான ஐ‌.என்‌.டி‌.யு‌.சி, சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி ஆகியவை இப்பேச்சுவார்த்தையை தங்கள் பங்குக்குத் தள்ளிப்போட்டு ஒன்பதாவது மாதம் வரை இழுத்தடித்திருக்கின்றனர். இவர்கள்தான் இக்கூலி உயர்வை பி‌.எல்‌.சி-ல் பேசும் உரிமையையும் பிரதிநிதிகளையும் கொண்டிருப்பவர்கள்.

இதுவரை, கூலி ரூ.232 ஆக இருந்திருக்கிறது. இதிலும், ஒரு நாளைய இலக்கான 21 கிலோ தேயிலையை ஒரு தொழிலாளி பறிக்கும் போதே பெற முடியும். தொழிலாளிகளைப் பொருத்தவரை 21 கிலோ என்பது பெரிதல்ல. நூறு கிலோவைக் கூட விளைச்சல் காலத்தில் அநாயாசமாகத் தாண்டுகிறார்கள். இலக்கு தாண்டி கொண்டு வரும் ஒவ்வோரு கிலோவுக்கும் கூடுதலாக 35 கிலோ வரை ஒரு ஸ்லாப் (SLAB) பாக ஒரு விலையும் (பைசாக்களில் தான்) 49 கிலோ வரை ஒரு ஸ்லாப்பும், 69 கிலோ வரை ஒரு ஸ்லாப்பும் அதற்கு மேல் வருவது சிறப்பு ஸ்லாப்பாகவும் கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு ஸ்லாப் உயரும் போது அதற்கான கூலியும் உயர்கிறது. கடைசியான சிறப்பு ஸ்லாப்பில் எடுக்கப்படும் ஒவ்வொரு கிலோவுக்கும் 1.15 ரூ. கூடுதல் வருமானமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் நூறு கிலோவை அநாயாசமாகத் தாண்டும் தொழிலாளர்கள் நிறைய சம்பாதிக்கக் கூடுமே என நீங்கள் கணிக்கலாம். ஆனால், எடுக்கப்படும் ஒவ்வொரு கிலோவும் அரசால் கணக்கிடப்படுகிறது. இதற்கு வரியாக நிறுவனம் காசு செலுத்தியாக வேண்டும். எனவே, மூன்றாவது ஸ்லாப்பான 69 கிலோவைத் தாண்டி எந்தத் தொழிலாளியின் கணக்கிலும் காட்டப்படுவதில்லை. கணக்கில் காட்டப்படாத எந்த ஒரு கிலோவுக்கும் கூலி பெயராது. இதைக் காட்டிலும், இதைக் கணக்கில் காட்டாமலிருப்பதற்காக தொழிலாளர்களிடம் தேயிலைகள் தரமற்றவைகளாக உள்ளன என்ற காரணம் கூறப்பட்டு அநியாயமாக தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு தொழிலாளியும் இரண்டு நபராக ஒரு நாளைக்கு உழைக்க வேண்டும். அதாவது இரண்டு பணி நேர வேலையை (ஷிப்ட்) ஒரு தொழிலாளி ஒரு நாளில் செய்ய வேண்டும். காலையும் மாலையுமாக இருநூறு கிலோக்களை பறிக்கும் ஒரு தொழிலாளி இதையே சராசரியாக ஆண்டு முழுவதும் எட்டுகிறார். இதற்கென அதிகாலை ஐந்து மணிக்கு நெற்றியில் கட்டிய ஹெட் லைட்டுடன் பெண்கள் உட்பட, வேலைக்குச் செல்பவர்கள் இரவில்தான் வீடு திரும்புகிறார்கள். மீண்டும் அதிகாலையில் ஓட்டம்.

இடையில் உடல்நிலை சரியில்லாமற் போனால் அது அங்கீகரிக்கப்பட்டு வேலைக்கு வராத நாளைக்கு ரூ 72 சிறப்பூதியமாக வழங்க வேண்டும். ஆனால் உடல்நிலை எத்துணை மோசமானாலும் தொழிலாளிகள் நேரில் வந்து விடுப்புப் பெற வேண்டும். இதற்கென ஒவ்வொரு தொழிலாளர் குழுக்களுக்கும் ஒரு கங்காணி இருக்கிறார். இவர் சாட்டை வைத்திருக்கவில்லையே ஒழிய, மற்றபடி கொடூர முகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்கு நிறுவனத்தின் பரிந்துரையோடு சென்றால் அச்செலவை நிறுவனம் ஏற்க வேண்டும் என்பது அங்கே நியதி. ஆனால் மருத்துவமனையும் நிர்வாகமும் ஒருங்கே புறக்கணித்து சிறப்புக் கூலியும் இன்றி மருத்துவச் செலவும் இன்றி அல்லாடுகிறார்கள் தொழிலாளர்கள்.

சரி. கூலியாவது முறையாகக் கிடைக்கிறதா என்றால் சிறுநீர் கழிக்கச் சென்றால் ஒரு மணி நேர ஊதியம் கழிக்கப்படும். வெற்றிலை, பாக்கு, தேநீர் என எதற்கும் கங்காணிகள் அனுமதிப்பதில்லை. அதிலும், மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் படும் கொடுமைகள்… தாள முடியாதவை.

ஒரு மணி நேரத்திற்கு ரூ 22 கூலி வெட்டப்படும். இப்படிக் கழிக்கப்படும் கூலியை “ஷார்ட் பே” என்கின்றனர். ஒரு நியாயமான காரணத்துக்கு இந்த “ஷார்ட் பே”-யை பயன்படுத்திக் கொள்ளத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இடையே நிறுவனம்தான் தொழிலாளர்களை தண்டிக்கப் பயன்படுத்துகிறது.

“ஏதோ எங்க குழந்தைகளையாவது நல்லாப் படிக்க வெக்கலாம்னு பாத்தா… அதுக்கு இந்தக் கூலி போதவேயில்லை. கையில் மாசக்கடைசில 1000, 1500 ரூபாதான் நிக்கும். இதுல எதிர்பாராத செலவுகள் வேற வந்துட்டா அவ்வளவுதான்” என்கிறார் ஒரு தொழிலாளி. நெல்லை, சென்னை, திருச்சி, மதுரை என பல பகுதிகளிலிருந்து பிரித்தானிய ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட இத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இன்றும் பெரிய வேறுபாடு இல்லை.

“மருந்தடிச்சிட்டு இருப்போம். சாப்பாட்டு நேரத்துக்கு கையைக் கழுவிட்டு போயித்தான் சாப்பிடுவோம். மிச்சம் சாப்பாடு வெச்சுட்டோம்னா அடுத்த அரை மணி நேரத்துல சாப்பாடு கெட்டுறும் பாத்தியலா” என்கிறார் ஒரு தொழிலாளி. இந்த 2,4D என்ற மருந்தானது டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்று.

தேயிலைச் செடிகளினடியில் கூடு கட்டியிருக்கும் தேனீக்கள், சிலந்திகள், குடியிருக்கும் பாம்புகள் மற்றும் விச ஜந்துக்குள் இவைகளனைத்தும் முதலாளித்துவம் பறித்த தங்களது வாழ்க்கைக்குத் தொழிலாளிகளையே காவு கேட்கின்றன. குறிப்பிட்ட செடியினடியில் தேன் கூடு இருக்கிறது. இதை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டாலும் கங்காணிகளில் இருந்து, நிர்வாகத்தின் உச்சம் வரை யாரும் கண்டு கொள்வதில்லை.

இப்படியான கொடுமைகள் தாளாமல் விருப்ப ஓய்வு பெற்றுத் தொழிலாளிகள் மலை விட்டுக் கீழிறங்கியதில் 30,000 பேர் இடம் பெயர்ந்ததாக தொழிலாளர்களால் சொல்லப்படுகிறது. மூணார் என்பது இருபதுக்கும் மேலான தேயிலைத் தோட்ட எஸ்டேட்டுகளைக் கொண்டது. இவையனைத்திற்கும் மொத்தமாக 12, 500 தொழிலாளர்கள் இப்போது இருக்கிறார்கள்.

கத்தரி கொண்டே தேயிலையை பறிக்கிறார்கள் தொழிலாளர்கள். இது வெறும் கத்தரியன்று. ஒரு வளையும் இதனுடன் இணைக்கபட்டிருக்கிறது. வெட்ட வெட்ட தேயிலை இதில் சேகரமாகிறது. எடை கீழிழுக்கும் அதே நேரம் கையை நீட்டி நீட்டி வெட்ட வேண்டும். போதாததற்கு, 30 கிலோ வரை தாங்கக் கூடிய பை ஒன்றும் முதுகில்.

“ஐம்பது கிலோ எடையுடன் ஓங்க (உச்சிக்கு) ஏறுவோம்” என்கிறார் ஒரு பெண் தொழிலாளி. இது ஆண் தொழிலாளர்களுடன் பெண் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. சிறுநீர்த் தடத் தொற்று, எலும்பின் இணைப்புகள் தேய்மானம் எனப் பல்வேறு சீரழிவுக்கு உடலை ஆளாக்குகிறது.

“இங்கே 60% பெண்களுக்கு கருப்பை அகற்றப் பட்டிருப்பதற்கு இந்நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும்” என்றார் ஒரு தொழிலாளி.

கண்ணன் தேவனை பொறுத்த வரை தொழிலாளர்கள் தான் பங்குதாரர்களாயிற்றே?! பங்குகளின் ஈவுத் தொகை கிடைக்குமால்லாவா?

“வருடத்துக்கு 300 ரூவா வரும் என்ன? ஏ..இத வெச்சிட்டு என்ன செய்ய? நாங்க கேட்டமா இந்தப் பங்குகள? எங்க காஸா எங்க அனுமதி இல்லாம புடிச்சிட்டு பங்கு தந்திருக்காக. அவங்க பொருள கம்பெனியே வச்சிருக்க தந்திரம் பண்ணிட்டாங்க. நாங்க இந்தப் பங்குகள விக்க முடியாதுல? 3000 ரூபா இதுக்குனு எங்க காசப் புடிச்சுக்கிட்டாங்க,” என்றார் இன்னொரு தொழிலாளி.

தொழிலாளர்களுக்கு இத்தனை நெருக்கடி எனில் தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? கேரளாவின் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இருப்பது ஐ‌.என்‌.டி‌.யு‌.சி, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி, சி‌.ஐ‌.டி‌.யு சங்கங்களில் தான்.

மூணாரில் ஒவ்வொரு பகுதிகளிலும் (டிவிசன்ஸ்) இத்தொழிற்சங்கங்கள் ஐவர் கொண்ட கமிட்டிகளை உருவாக்கியிருக்கின்றன. இந்தப் பகுதிகளின் உப பகுதிகளிலும் ஒரு கமிட்டி உண்டு. ஒவ்வொரு பகுதியின் கீழும் இரண்டு அல்லது மூன்று எஸ்டேட்டுகள் வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்தக் கமிட்டிக்களால்தான் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். சங்கச் சந்தாவிலிருந்து மாநாடு, பொதுக் கூட்டங்களுக்கு அணிதிரட்டுவது இந்தக் கமிட்டிதான் பொறுப்பு.

தொழிலாளர்களும் தங்களது தேவைகளை, குறைகளை இக்கமிட்டியின் மூலம் மேலே கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறிருக்க இக்கமிட்டிகள் கருங்காலிகளாலேயே பெரும்பாலும் உருவாகியிருக்கிறது. இவர்களின் கவனத்துக்குத் தப்பித் தவறியும் கூட இச்செய்தி எட்டிவிடாது என்ற உத்தரவாதத்தின் பேரில் தான் தொழிலாளர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர். இருப்பினும் தொழிலாளர்கள் மனத்தினுள் சிறு சந்தேகத்துடனேயே பேசுகின்றனர். சங்கங்களின் உள்ளூர்ப் பிரதிநிதிகள் பண்ணையார்கள் போல மேலே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை மீறி ஓரணுவும் அசைவதில்லை.

தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை கட்டி 4 தலைமுறைகளான வீடுகள். பிளந்து நிற்கின்றன சுவர்கள். கழிவறைகளின் கதியும் இதுதான். இந்த வீடுகளை வெள்ளையடிக்க வருடா வருடம் 10 ரூபாய் தருகிறது நிறுவனம். இந்த ஒதுக்கபட்ட வீடுகள் தொழிலாளர்களுக்குச் சொந்தமில்லை. மேலும், ஒரே குடும்பத்தை இருவருக்கு வீடுகள் தரப்பட மாட்டாது. எனவே, நெருக்கியடித்துக் கொண்டு ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.

இவை தொழிலாளர்களின் அன்றாட பிரச்சினைகளில் ஒரு வகை மாதிரி. இவற்றை மேற்கண்ட தொழிற்சங்கங்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதே ஆண்டையின் முன் பண்ணையடிமை நிற்பது போலத்தான் செய்ய இயலும். மீறி முனகல் வெளிப்பட்டாலும் கருங்காலிகள் மூலம் தகவல் போய்விடும். பிறகு யாதொரு விசயத்துக்கும் இவர்களை அண்டவே முடியாது. எனவே, தொழிலாளர்கள் சங்கத் தலைமைகளின் மீது ஒரு அச்சத்துடனே இருக்கின்றனர்.

இதையெல்லாம் விட, தொழிற்சங்கங்கள் நடத்தும் பைனான்ஸ் தொழில்தான் கொடி கட்டிப் பறக்கிறது. சொஸைட்டிகள் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு இச்சங்கங்கள் வட்டிக்கு கடன் வழங்குகின்றன. இக்கடனை மாதாமாதம் நிறுவனமே சம்பளத்தில் பிடித்து சங்கங்களிடம் ஒப்படைக்கின்றன. இது போக எஞ்சியதைத்தான் தொழிலாளி சம்பளமாகப் பெறுகிறார். இருபது சதவீத போனசுக்கு 10 சதவீதத்தை மட்டும் தொழிலாளிகளுக்குத் தருவது. மீதியை முதலாளிகளிடம் சங்க நிர்வாகிகள் பெற்றுக் கொள்வது போக தொழிலாளர்கள் தங்கள் கைக்கு வந்த போனசில் சங்க கமிஷனை தர வேண்டும். சங்கங்கள் தரும் கடனுக்கே கூட உள்ளூர் கருங்காலிகளின் சிபாரிசு வேண்டும். அதற்கீடாக 10% சதவீத கடன் தொகை அந்தக் கருங்காலிக்கு அழ வேண்டும். இப்படியும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன என்பதை நம்மால் ஜீரணிக்கவே இயலாது.

இந்த தொழிற்சங்கங்கள் தான் கூலி உயர்வைப் பற்றி பி‌.எல்‌.சி யில் பேசும் பேசும் என ஒன்பது மாதமாகக் காத்திருந்தனர், தொழிலாளிகள். இது நடைபெறாமல் போகவே போராட்டம் என்ற நிலைக்கு வந்தனர். நிலைமை கைமீறிப் போவதையுணர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தங்கள் கையிலெடுத்துக் கொள்ள முயன்றன. அப்போது மூணாறில் பேசிய சி‌.பி‌.எம்-இன் ஏ.கே மணி, “கூலிக்கு மட்டும் உழையுங்கள்” (அதாவது, 232 ரூபாய்க்குரிய 21 கிலோவை மட்டும் பறிப்பது) என்றவர், ஓரிரு நாளில் கம்பெனியை நட்டமடைய வைக்கக் கூடாது. ஆகவே, வழக்கம் போல் பறியுங்கள், என்றார் பிறழ்நாக்குடையவராக.

அப்போது போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தொழிலாளிகள் அவரிடமிருந்து ஒலிவாங்கியைப் பறித்து அவரை அம்பலப்படுத்த, அங்கே துவங்கியது துரோகத் தொழிற்சங்கங்களை புறக்கணிக்கும் போக்கு.

இந்தப் புறக்கணிப்பில் முன்னணி வகித்தது பெண் பிள்ளை உரிமை என்ற பெயரிலான பெண்கள் அணி. கண்ணன் தேவனில் பணிபுரியும் பெண் தொழிலாளிகள் இந்தத் துரோகத் தொழிற்சங்கங்களைப் புறக்கணித்து போனசுக்கான போராட்டத்தை தனியே நடத்தி 8.33% என்றிருந்த போனசை 20% பெற்றிருக்கிறார்கள். இப்போராட்டமே 15 நாள் நடந்திருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போராட்டத்தில் பெண்களுக்கு உதவியவர்கள் இளைஞர்கள். உணவு சமைப்பதில் இருந்து தொழிலாளர்கள் ஒழுங்கில் உணவுண்டு போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பாக நடத்துவது வரை இவர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். துரோகத் தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து ஆண் தொழிலாளர்கள் விடுபட இயலவில்லை. இது மட்டுமல்ல… இம்மூன்று எதிரெதிரான தொழிற்சங்கங்களும் இப்பெண்பிள்ளை உரிமையை முறியடிக்கக் கூட்டாக இணைந்த கேலிக்கூத்தும் அரங்கேறியிருக்கிறது.

ஆயினும், பெண் பிள்ளை உரிமையின் விடாப்பிடியான போராட்டம் பெரும் கவன ஈர்ப்பை பெற்றது. இதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் ஒரு காரணம். இருப்பினும் ஊடகங்கள் அதன் டி‌.ஆர்‌.பி-யை வைத்தே இச்செய்திகளை ஒளிபரப்பின. உண்மையில் தொழிலாளர்களின் பிரச்சினை என்ன என்பது வெளிவரவே இல்லை. மாறாக, அவர்களது பிடிவாதமான போராட்டமும் அதன் வடிவங்களுமே கவனத்தை ஈர்த்திருக்கின்றன.; அவ்வாறுதான் ஊடகங்கள் அதைக் கொண்டு சேர்த்திருக்கின்றன.

சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி, ஐ‌.என்‌.டி‌.யு‌.சி ஆகியவை மதிப்பிழக்கத் தொடங்கியவுடன் பி‌.எம்‌.எஸ், எச்‌.எம்‌.எஸ், ஏ‌.ஏ‌.பி, பி‌.ஜெ‌.பி ஆகியவை ஓடோடி வந்திருக்கின்றன. வந்தவற்றை அப்படியே நிறுத்தி அம்பலப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள், தொழிலாளிகள். “ஆதரவு என வந்தால் அமர்ந்திருந்துவிட்டு செல்லுங்கள். மற்றபடி உங்கள் அடையாளங்கள் எதையும் இங்கே காட்டக் கூடாது” என அறிவித்து விட்டார்கள். கட்சிகளும் வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்திருக்கின்றன. எதிர்த் தொழிற்சங்கங்கள் பெண்கள் உரிமையின் போராட்டத்தில் கலகம் விளைவிக்க யத்தனித்த போதும் நிலைமையை காவல் துறை கட்டுக்குள் வைத்திருந்தது. இதற்கு புற நிலைமையும் ஒரு காரணம். பெண்கள் உரிமையின் போராட்டம் பரவலாகக் கேரளாவேங்கும் அறியப்பட்டிருந்தும் உள்ளாட்சித் தேர்தல்கள் நெருக்கத்தில் வந்துவிட்டமையும் இரண்டு பாரிய காரணங்கள்.

போனசுக்கான இந்தப் போராட்டம் வெற்றி என்பது கண்ணன் தேவன் நிறுவனத் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் பலனளித்தது. கூலி உயர்வுப் போராட்டமோ கேரளாவெங்கும் பரவியது.

மூணாறில் இந்தக் கூலி உயர்வுப் போராட்டமும் பெண் பிள்ளை உரிமையின் குரலாகவே பலமாக எதிரொலித்தது. போனசுக்கான போராட்டம் செப்டம்பர் மாத துவக்கத்தில் பதினைந்து நாள் நடந்தது. அதில் பல்வேறு தரப்பினர், என்‌.ஜி‌.ஓ.க்கள், கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர் என உதவிகள் குவிந்தன.

கூலி உயர்வுப் போராட்டத்தில் இவைகள் பின்வாங்கியது மட்டுமன்றி உதவ முன் வந்தவர்களையும் தடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், தொழிற்சங்கங்கள் அம்பலமாகத் தொடங்கியவுடன் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் வியாபாரிகள், வணிகர்கள் எனப் பல சங்கங்கள் பின்வாங்கின. இருப்பினும் உறுதியுடன் நின்றிருக்கிறார்கள் பெண் பிள்ளை உரிமையணி. பெண் பிள்ளை உரிமைக்குப் பகிரங்கமாக வெளியேறி வரவியலாத பிற சங்கத்தில் உள்ள தொழிலாளர்கள் கூட ஒத்துக் கொள்கின்றனர். “பெண் பிள்ளை உரிமையின் போர்க்குணமான போராட்டம்தான் தங்களுக்குக் கூலி உயர்வையே பெற்றுத் தந்தது” என இதனை வெளிப்படையாகக் கூறும் துணிவு பெற்றிருக்கவில்லை. அவ்வளவே.

செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்ற கூலி உயர்வுக்கான போராட்டம் பெரும் களேபரங்களை கேரளாவெங்கும் உருவாக்கிய பின்னர் முடிவுக்கு வந்த பொது 301 ரூபாயாகக் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் அறிவிப்பு மட்டுமே. நவம்பரில் கூடவிருக்கும் பி‌.எல்‌.சி பேச்சுவார்த்தையேலேயே அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு தருவது பற்றி முடிவெடுக்கப்படும், இறுதியாக்கபடும். அப்போது கேரள உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்திருக்கும். முடிவு எப்படியிருக்கும் என்பது எதிர்பார்க்கவியலாது. அதன்படியும், தொழிலாளர்கள் கேட்டது 500 ரூபாய். ஒத்துக்கொள்ளப்பட்டதோ 301 ரூபாய். ஒவ்வொரு தொழிலாளியின் மூலமும் ஒரு நிறுவனம் ஒரு நாளைக்கு மிகக் குறைந்த அளவு கணக்கிட்டாலும். 3000 ரூபாய் அள்ளுகிறது. ஆனால், பங்குதாரர் ஆண்டறிக்கையில் காட்டப்பட்டிருப்பதோ நட்டம். நட்டம். நட்டம். அதுவும் ஆங்கிலத்தில். தொழிலாளர்களின் அறியாமையை வெகு தந்திரமாக நிறுவனங்கள் காசாக மாற்றுகின்றன.

இதை எல்லாம் தாண்டி தொழிற்சங்கங்கள் தங்களது துரோகங்களை மறைக்கும் முகமாக, இந்த கூலி உயர்வுக்கு தாங்கள்தான் காரணம் என்று தொழிலாளர்களிடையே திணிக்கிறார்கள். பி‌.எல்‌.சி-யில் இத்துரோகிகளுக்கு மட்டுமே இடமிருக்கிறது என்பதைத் தாண்டி இவர்களால் தொழிலாளர்களுக்கு கிடைப்பது எல்லாம் துரோகமும், ஏமாற்றமும், சுரண்டலும் தான்.

துரோகத் தொழிற்சங்கங்களை முறியடிக்க பெண்கள் உரிமையில் சிலர் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிடுகிறார்கள். போராட்டம் நடைபெற்றபோது உதவியதாகக் கருத்தப்படும் காவல்துறை இப்போது இவர்களிடையே பிளவை மூடிவிட முழுவேகத்தில் சுழன்று வருகிறது. இதற்கு மத்திய உளவுத் துறை, உள்ளூர் காவல்துறை-உளவுத் துறை என ஏகமாக வல்லூறுகள் வட்டமிடுகின்றன. தேர்தல் நடைமுறைகளையே சவாலாக உருவாக்கி சுயேட்சைகளுக்கிடையே மோதலை உருவாக்கிறது காவல்துறை.

பெண்கள் உரிமையும் உம்மன் சாந்தியை நேரில் சந்தித்துப் பேசி போனஸ், கூலி உயர்வில் பெற்ற தற்காலிக வெற்றிகள் என்பனவற்றின் தொடர்ச்சியாக தேர்தலிலும் இறங்கியிருக்கிறது. ஆனால், தேர்தல், அதன் நடைமுறையில் பழம் தின்று கொட்டை போட்ட நரிகளையும் தின்று எலும்பையே செரித்த முதலைகளையும் எதிர்கொள்ளும் போது விஷச்சுழலில் சிக்கிக் கொள்வோம் என்பது அறியாதிருக்கிறார்கள். அறிவிக்கப்பட்டிருக்கும் கூலி உயர்வும் உறுதியாகாத இந்நிலையில், வாழ்நிலை படுமோசமாயிருக்கும் மூணாரில் இப்போது தேவைப்படுவதெல்லாம் சமரசத்துக்கு இடமற்ற, சரியான திசைவழியில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் புரட்சிகர தொழிற்சங்கம் ஒன்றே !!

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை.

பாசிச மோடிக்கு எதிராக லண்டன் எழுச்சி !

28

ன்றைய நிலையில் நாடு எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ பாசிசத்தை மக்கள் இனங்கண்டு அங்கங்கே தன்னெழுச்சியாக எதிர்த்துப் போராடிவருகிறார்கள். இது இன்றைக்கு உலகம் முழுவதும் வீச்சாக செல்லும் பொருட்டு மோடியின் இலண்டம் பயணம் வரலாற்று இழிபுகழாக வந்து நிற்கிறது.

எழுத்தாளர்கள் கொல்லப்படுவது, மாட்டுக்கறி அரசியல், மைஅடிப்பது, வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, தலித்துகளை உயிரோடு எரிப்பது, அண்டை நாடான நேபாளத்தில் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என அத்துணை அரசபயங்கரவாதத்திற்கும் எதிராக இலண்டன் மக்களின் எழுச்சி இன்றைக்கு பாசிச மோடியை காறித்துப்பிக்கொண்டிருக்கின்றன. இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்கும் பொருட்டு சமூகத்தின் பரந்துபட்ட சனநாயக குரல்கள் எழுப்பும் எழுச்சி மிகு முழக்கங்களும் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின் குரல்களும் வாசகர்களின் பார்வைக்கு இங்கே புகைப்படங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்ற வளாகம்
பிரபலமான பிக் பென் கோபுரத்துக்கு அருகில் நாடாளுமன்ற வளாகத்தின் மீது நரேந்திர மோடியின் ‘நெகடிவ்’ பிம்பம் காட்டப்பட்டது.
தல் கால்சா
தல்-கால்சா என்ற சீக்கிய அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படம்.
10, டவுனிங் தெரு
பிரிட்டிஷ் பிரதமர் இல்லம் அமைந்துள்ள 10, டவுனிங் தெருவுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்.
Stop-Facism
“மோடியை தடுப்போம்! பாசிசத்தை தடுப்போம்” – லண்டன் பாலஸ்தீன இயக்கத்தின் ஆதரவு
Stop-Meddling-in-nepal
“நேபாளத்தில் மூக்கை நுழைப்பதை நிறுத்து, நேபாளத்தின் மீதான பொருளாதார தடையை நிறுத்து”
Nepalis-on-Modis-inhumanness
“நேபாளத்தின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்து”

Nepali-Protestors

Shame-on-modi
“பாலியல் வன்முறை, கலவர குற்றவாளி சஞ்சீவ் பலியானுக்கு மோடி அமைச்சரவையில் பதவி.”
"பா.ஜ.க-வின் இரத்தக் களறி செயல்திட்டம்"
“பாப்ரி முதல் தாத்ரி வரை – பா.ஜ.க.வின் இரத்தக் களறி செயல்திட்டம்”
குஜராத் படுகொலைகள் - 2002
“மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி மோடி – குஜராத் படுகொலைகள் – 2002”
Modi-is-Murder
“மோடி ஒரு கொலைகாரன்”
Modi-is-Butcher
“மோடி – குஜராத்தின் கொலைகாரன்”
Modi-Hilter
“சதித்திட்டம்”
Modi-Go-back
“மனித குலத்துக்கு எதிரான மோடியின் குற்றங்கள் – குஜராத் படுகொலை 2002, இந்தியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல், குரு கிரந்த் சாஹிப்ஜி இழிவுபடுத்தப்பட்டது – சீக்கியர்கள் கூட்டமைப்பு”
Mass-murdr-II
“மோடிக்கு எதிராக குஜராத்திகள், தமிழர்கள், காஷ்மீரிகள்”
Mass-Murder-Modi-not-welcome
“இனப்படுகொலையாளி மோடி, திரும்பிப் போ”
Ehsan-jafri-Not-Forgetten
“குஜராத் படுகொலைகளை மறக்கவிலை, ஈசான் ஜாஃப்ரியை மறக்கவில்லை”
Kashmir-People
“காஷ்மீரில் படுகொலைகளை நிறுத்து, மோடி திரும்பிப் போ”
India-is-Bharat-not-Hinduism
“இந்தியா இந்து நாடு அல்ல”
Hindutuva-threaten-india
“இந்துத்துவா இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்”
Standing-against-SC-discrimination
“தலித்துகளுக்கு எதிரான கொள்கையை எதிர்த்து”
Modi-Not-Welcome
“மோடி, திரும்பிப் போ”
End-Caste-opression-End-BJP-rule
“சாதிக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம், பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவோம்”
Caste-system-is-worst-than-apartheid
“சாதி அமைப்பு நிறவெறியை விட மோசமானது, மோடி திரும்பிப் போ”

– தொகுப்பு: இளங்கோ

பீகார் தேர்தல் : கொண்டாட்டம் பாகிஸ்தானிலா இந்தியாவிலா ?

0

bihar election (1)_1தில்லி கொடுத்த அடியை விட இந்துத்துவ கும்பலுக்கு பீகார் கொடுத்த அடி அதிகம். கிட்டத்தட்ட முதுகு தோலை உரித்து அனுப்பியுள்ளனர். இது ஓட்டுக்கட்சித் தேர்தல் என்கிற பித்தலாட்ட நாடகத்தில் கிடைத்த தோல்வி தான். என்றாலும் இத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எப்படியும் வென்றே தீர வேண்டும் என்பதற்காக  பாரதிய ஜனதா காட்டிய பிரயத்தனங்களை பார்த்தால் காவிக் கும்பலின் இரத்த வெறியைப் புரிந்து கொள்ள முடியும்.

பாரதிய ஜனதா அமைத்த தேர்தல் வியூகங்களில் அதன் அல்லக்கைகளாக செயல்படும் முதலாளிய ஊடகங்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது. மாட்டுக்கறி ஆகட்டும், பாகிஸ்தானாகட்டும் – இல்லாத “தேசிய விவாதங்களை” இருப்பதைப் போலவே ஊதிப் பெருக்கிக் காட்டியதில் இவ்வூடகங்களுக்கு பெரும் பங்கு இருந்தது.

ஆரம்ப கட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது பாரதிய ஜனதா முன்னிலை பெற்றதாக குதூகலித்த முதலாளித்துவ ஊடகங்கள், பின்னர் நிதிஷ் – லாலு கூட்டணியின் வெற்றி உறுதிப்பட்ட போது தோசையை அப்படியே திருப்பிப் போட்டனர். பாரதிய ஜனதா கூட்டணி கணக்குகளை தவறாக போட்டு விட்டது என்றனர் – சிலர் வளர்ச்சிக்கும் சாதிக்கும் இடையே நடந்த சண்டையில் சாதி வென்றது என்று தீர்ப்பெழுதினர் – வேறு சில ஊடகங்களோ பாரதிய ஜனதாவின் காவி செயல்திட்டங்களை இடித்துரைப்பது போல் சுட்டிக்காட்டி விட்டு, இனிமேலாவது இந்துத்துவத்தை விடுத்து வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும் என்று செல்லமாக தட்டிக் கொடுத்தனர்… இந்த ’ஆய்வுகளின்’ தராதரம் என்ன?

bihar election (7)
பா.ஜ.க வெற்றிக்கு பிரனாய் ராயின் டிஜிட்டல் ஆருடம் – கட்டணம் எவ்வளவு?

ஐந்து கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பீகார் சட்ட மன்றத் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பிரச்சாரங்களில் வழக்கம் போல் பாரதிய ஜனதா “வளர்ச்சியைத்” தான் முன்னிறுத்தியது. என்றாலும் தேர்தல் பிரச்சாரங்கள் செல்லச் செல்ல தனது டீக்கடையில் வாயால் சுட்ட வடைக்கு வாடிக்கையாளர் ஆதரவு போதிய அளவு இல்லை என்பதை மோடி உணர்கிறார். ஏற்கனவே மோடியின் பாணியில் பீகாரின் வளர்ச்சி நாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த நிதிஷ் குமாரோடு ‘வளர்ச்சி’ விசயத்தில் தன்னால் போட்டி போட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் மோடி, ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றுகிறார்.

”ஒரு வேளை ஏதேனும் விபரீதமாக நடந்து, பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா தோற்றால்…. வெற்றியும் தோல்வியும் வேண்டுமானால் பீகாருக்குள் இருக்கும்.. ஆனால், கொண்டாட்டங்கள் பாகிஸ்தானில் நடக்கும். பாரதிய ஜனதாவின் தோல்வியை பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள்” என்றார் அமித் ஷா. பாரதிய ஜனதாவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பீகார் தேர்தலை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கும் போரைப் போல் வருணித்தனர். “இந்தியாவின் வரலாற்றிலேயே பாகிஸ்தானும் சீனாவும் கண்டு அஞ்சும் ஒரே இந்தியப் பிரதமர் மோடி தான்” என்றார் சுஷீல் மோடி.

அதாவது இந்தியனாக இருப்பதன் ஒரே அத்தாட்சி பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுப் போடுவது தான் என்பதைப் போல் பிரச்சாரங்களைக் கொண்டு சென்றனர். இதன் இன்னொரு முனையாக, இந்திய இசுலாமியர்கள் எல்லோரும் மனதால் பாகிஸ்தானியர்கள் என்றும், இவர்களே பாரதிய ஜனதா வெல்லக் கூடாது என்பவர்கள் என்றும், இசுலாமியர்கள் லாலு பிரசாத் மற்றும் நிதிஷ் கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்றும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர். வழக்கமாக இந்துத்துவ விசமப் பிரச்சாரங்கள் வெளிப்படும் சந்தர்பங்களில் எல்லாம், ‘இது உதிரி இந்து அமைப்புகளின் வேலை’ என்று சமாளிக்கும் உத்தியைப் பின்பற்றியவர்கள் இந்த முறை நேரடியாக களமிறங்கினர். இந்தப் பிரச்சாரங்களை மோடியே முன்னின்று முடுக்கி விட்டார்.

bihar election (8)
மாட்டுக்கறி துவேசம் எடுபடவில்லை? அடுத்தது என்ன?

அக்டோபர் 26-ம் தேதி பக்சார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, தலித்துகள், மகா தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டில் இருந்து ஐந்து சதவீதத்தை திருடி முசுலீம்களுக்கு வழங்க லாலுவும் நிதிஷும் சதி செய்வதாக குற்றம் சாட்டினார். இன்னொரு தேர்தல் பிரச்சாரத்தின் போது, “ஓ யதுவன்ஷிகளே.. நீங்கள் உங்கள் உழைப்பால் கொண்டு வந்த வெண்மைப் புரட்சியை (பால் உற்பத்தி) விஞ்சும் வகையிலான பிங்க் புரட்சியை (மாட்டுக்கறி உற்பத்தி) ஏற்படுத்த சதி நடக்கிறது… நீங்கள் மாட்டுக்கறி தின்பவர்கள் என்கிறார் லாலு” என்று பேசி லாலுபிரசாத் யாதவுக்குப் பின் உள்ள யாதவ சாதி வாக்குகளைக் கவர முசுலீம்களுக்கு எதிராக யாதவர்களை தூண்டி விட்டுப் பார்த்தார்.

தலைவனின் உள்ளக் குறிப்பை அறிந்த மாநில பாரதிய ஜனதா கட்சியினர் இதை அப்படியே வளர்த்தெடுத்தனர். கோமாதாவை மையமாக வைத்து தீவிரமாக போஸ்டர் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். இந்தப் போஸ்டர்கள் சமூகத்தில் ஒருவிதமான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் நிலைக்குச் சென்ற பின்னும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை; கடைசியில் லாலு நிதிஷ் கூட்டணியின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்ட பின் நடவடிக்கை எடுக்க முன்வந்த தேர்தல் கமிஷன், “இனிமேல் இரண்டு தரப்பிலும் போஸ்டர் அடிப்பதற்கு முன் தன்னிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்” என்கிற ’நடுநிலைத் தீர்ப்பு’ ஒன்றை வழங்கியது.

பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே பீகாரைச் சுற்றியுள்ள இந்தி பேசும் மாநிலங்களில் தாத்ரி சம்பவத்தை முன்வைத்து கோமாதா அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது என்பதே உண்மை. பிகார் தேர்தல் பிரச்சாரத்திற்குள் கோமாதாவை இரண்டாம் கட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் இழுத்து வந்த பின் அதற்கு பதிலளித்துப் பேசிய லாலு பிரசாத் யாதவ், ”முசுலீம்கள் மட்டுமா மாட்டுக்கறி தின்கிறார்கள்? ஏழை இந்துக்கள் கூடத் தான் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்றார். உடனே களமிறங்கிய மோடி “லாலுவின் உணவுத் தட்டில் கோமாதா கறி இருப்பதாக” யாதவர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தார்.

bihar election (6)தேர்தல் முடிவுகளுக்குப் பின் கோமாதா அரசியல் பீகாரிகளிடம் செல்ஃப் எடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று பீறாய்ந்து வரும் பாரதிய ஜனதாவின் அல்லக்கை ஊடகங்கள், இதற்கு வண்ண வண்ணமாக ஏராளமான காரணங்களைக் கற்பித்து வருகின்றனர். இந்துத்துவம் சாதியிடம் தோற்றுப் போனது என்பதில் துவங்கி, நிதிஷ் லாலு போன்ற வட்டார பெரும் புள்ளிகளுக்கு எதிராக உள்ளூர் அரசியல்வாதி எவரையும் முன்னிறுத்தாமல் மோடியை முட்டுச் சந்துக்குள் அழைத்து வந்து சாணியடி வாங்கிக் கொடுத்து விட்டார் அமித் ஷா என்பது வரை இந்த ஆய்வுக் கட்டுரைகள் வித விதமான கோணங்களை முன் வைக்கின்றன.

இவற்றில் கடுகளவு உண்மை பொதிந்திருப்பது உண்மை தானென்றாலும், அடிப்படையில் கோமாதாவை பால் கொடுக்கும் மிருகமாக யாதவர்கள் பார்த்தார்கள் என்பதைத் தாண்டி அதன் மேல் பார்ப்பனிய ”காருண்யம்” ஏதும் அவர்களுக்கு இல்லை. இதுதான் உண்மை. இசுலாமியர்கள் மட்டுமே கசாப்புத் தொழில் செய்கிறார்கள் என்பதில் உண்மை இல்லை என்பதைத் தாண்டி, வயதான கோமாதாக்களைப் பராமரித்து சோறு போடும் அளவுக்கு மற்ற இந்திய விவசாயிகளைப் போல பீகாரின் யாதவர்களுக்கும் வாய்ப்பில்லை.

தாங்கள் வளர்க்கும் மாடுகள் பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் ஏதோவொரு விலைக்கு அடிமாட்டுக்கு அனுப்பி அதில் கிடைக்கும் தொகையில் புதிய கன்றுக் குட்டிகள் வாங்குவதை யாதவர்கள் பாவமாக நினைப்பதில்லை – அது ஒரு இயல்பான பொருளாதார சுழற்சி. இதன் காரணமாகவே ”மாடுகளைக் கொல்றாங்களே” என்கிற பாரதிய ஜனதாவின் கோமாதா அரசியல் பீகாரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பீகார் மட்டுமல்ல வேறெங்குமே இந்தப் பிரச்சாரங்கள் செல்லுபடியாவதற்கான முகாந்திரங்களே இல்லை.

bihar election (5)அடுத்ததாக பாரதிய ஜனதாவின் முசுலீம்கள் – பாகிஸ்தான் நச்சுப் பிரச்சாரங்கள் நைந்து போவதற்கான எல்லா அடிப்படைகளையும் தன்னளவிலேயே கொண்டிருந்தன. சுமார் 14 சதவீத முசுலீம் மக்கள் தொகை உள்ள பீகாரில் இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்குமான முரண்பாடுகள் பெரியளவில் இருந்ததில்லை என்பதோடு இந்துத்துவ புரவலர்களான பனியா முதலாளிகளோடு போட்டி போடும் அளவுக்கு முசுலீம் வர்த்தகர்கள் பிகாரில் செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இல்லை. அப்படியே இருந்தாலும் குஜராத் போன்றதொரு கலவரத்தை ஏற்பதற்கு மக்களும் தயாராக இல்லை. எனவே முசுலீம்கள் மீதான வெறுப்புணர்வை தோற்றுவிக்க பீகாரில் மோடி செய்த பிரச்சாரங்கள் வழுக்கைத் தலையர்களிடம் சீப்பு விற்ற கதையாக முடிந்தது.

இன்னொரு பக்கம் லாலுவும் நிதிஷ் குமாரும் தமக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. இட ஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சொன்னதை தனது தேர்தல் பிரச்சார மேடைகளில் சரியாக பயன்படுத்திக் கொண்ட லாலு பிரசாத் யாதவ், அக்கூட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர் கோல்வால்கர் எழுதிய ஞான கங்கை நூலை உயர்த்திக் காண்பித்து, ”இதோ பாரதிய ஜனதாவின் பைபிள் எனது கைகளில் உள்ளது – இதில் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று எழுதியுள்ளது” என்று ஏராளமான உண்மைகளை போட்டுடைத்தார்.

இந்தப் பிரச்சாரம் நன்றாக வேலை செய்தது. உடனடியாக முட்டுக் கொடுக்க முன்வந்த பாரதிய ஜனதா, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தும் தமது கருத்தும் இவ்விசயத்தில் ஒன்றல்ல” என்று சமாளிக்கப் பார்த்தது. “அப்படியென்றால், கோல்வால்கரின் ஞான கங்கை நூலை தீயிட்டுக் கொளுத்த தயாரா?” என்று பாரதிய ஜனதாவைப் பார்த்து லாலு சவால் விட, காக்கி டவுசர் எலிகளுக்கு ஓடி ஒளிய இருந்த எல்லா வாய்ப்புகளும் அடைபட்டுப் போயின.

New Delhi:  BJP President Amit Shah with HAM(S) chief Jitan Ram Manjhi, LJP President Ramvilas Paswan and RLSP leader Upendra Kushwaha during a press conference regarding Bihar elections, in new Delhi on Monday. PTI Photo by Manvender Vashist (PTI9_14_2015_000070A)
கொண்டாட்டம் பாகிஸ்தானில் இல்லை, இந்தியாவில்!

ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதாவின் இடவொதுக்கீட்டுக்கு எதிர் அரசியலை லாலு தோண்டித் துருவிக் கொண்டிருந்த அதே சமயம், நிதிஷ் இன்னொரு முனையில் பாரதிய ஜனதாவின் குஜராத் பிரச்சார உத்தியை அதற்கு எதிராகவே பயன்படுத்திக் கொண்டிருந்தார். லாலுவின் முந்தைய ஆட்சியைக் காட்டாட்சி என்கிற மோடியின் பிரச்சாரத்திற்கு பதிலளித்த நிதிஷ் குமார் “அது பீகாரிகளுக்கு எதிரான பஹாரிகளின்(வெளியாட்களின்)” சதி என்றார். ஒட்டுமொத்த பாரதிய ஜனதா கும்பலையும் ‘பஹாரிகள்’ என்று கட்டமைப்பதில் நிதிஷ் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

இவையனைத்தையும் கடந்து விலைவாசியும், வேலையின்மையும், விவசாயத்தின் தோல்வியும் போட்டு வாட்டிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்திற்குள் வந்து மாட்டிக் கொண்ட நம்பிக்கைத் துரோகியின் நிலையில் தான் பாரதிய ஜனதா இருந்தது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியை சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்தி நாடெங்கும் பிரச்சாரம் செய்தனர் இந்துத்துவ கும்பல். இந்தப் பிரச்சாரம் பீகாரில் சிறப்பாகவே எடுபட்டிருந்தது. அப்போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் (கருப்புப் பணத்திலிருந்து தலைக்கு பத்து லட்சம் உட்பட) எதுவும் நிறைவேறாத நிலையில் மீண்டும் ஒரே ஆண்டில் மோடியை இறக்கியுள்ளனர் பாரதிய ஜனதா கட்சியினர். கிராமத்து ஆலமரத்தடியில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவன் கூட ஒரு முறை ஒரு ஊருக்கு வந்தால், அடுத்து சில பல ஆண்டுகள் அதே ஊருக்குத் தலை வைத்துப் படுக்க மாட்டான் – சில்லறை எத்தர்களே இந்த விசயத்தில் உசாராக இருக்கும் இந்தக் காலத்தில் பாரதிய ஜனதா ஆட்கள், என்ன இருந்தாலும் பிகாரிகள் முட்டாள்கள் தானே என்று சல்லிசாக எடை போட்டு விட்டார்கள்.

இவ்வளவையும் கடந்து பாரதிய ஜனதா பெற்றிருக்கும் 24.8 சதவீத ஓட்டுக்கள் நமது கவனத்திற்கு உரிய ஒன்று (லாலு 18.5 சதவீதம், நிதிஷ் 16.7 சதவீதம் தான்). அதாவது நாலில் ஒரு பிகாரிகள் இந்துத்துவ பிரச்சாரங்களுக்கு செவி சாய்த்துள்ளனர். பீகாரில் லாலு-நிதீஷ் கட்சிகளை விட பா.ஜ.க, அதிக தொகுதிகளில் போட்டியிட்டபடியாலும் இந்த வாக்கு சதவீதம் கிடைத்திருக்கிறது. லாலு நிதிஷ் கூட்டணிக்கு வாக்களித்தவர்களிடம் இந்துத்துவ அரசியல் பிரச்சாரங்கள் எடுபடவில்லை என்பது உண்மை என்றாலும் இவர்கள் இந்துத்துவ அரசியலுக்கு எதிர் அரசியலை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை என்பதும் உண்மை. அதாவது பொருத்தமான கால சூழ்நிலைமைகளில் (அயோத்தி கலவரம் போன்ற) இந்துத்துவ கும்பலால் மிக எளிதாக சமூகத்தை மத அடிப்படையில் பிளப்பதற்கான சாத்தியங்கள் உயிர்ப்போடு தான் இருக்கின்றன.

bihar election (4)இந்த தோல்விகளில் இருந்து பாரதிய ஜனதா பாடம் படிக்க வேண்டும் என்று முதலாளிய ஊடகங்கள் சில எழுதுகின்றன. அதாவது இந்துத்துவ அரசியலை விடுத்து, வளர்ச்சியை முழு வீச்சில் கையிலெடுக்க வேண்டும் என்பது இவர்களின் பரிந்துரை. பாரதிய ஜனதாவைப் பொருத்த வரை வளர்ச்சி என்பதே ஒரு முகமூடி தான் என்பதைத் தாண்டி தேர்தல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பதே அவர்களைப் பொருத்த வரை சிறுபிள்ளைத்தனமானது. இந்த 24 சதவீத ஓட்டுக்களை அதிகரிக்க இந்துத்துவ அரசியலை இன்னும் தீவிரப்படுத்தும் வழிவகைகளைத் தான் இந்த நேரம் அவர்கள் தேடிக் கொண்டிப்பார்கள்.

தேர்தல் அரசியலின் வரம்புகளுக்குள் நின்று பாரதிய ஜனதவையோ, பார்ப்பனிய இந்துமதவெறி பாசிச அரசியலை வீழ்த்தி விட முடியும் என்று நம்புவதே முட்டாள்தனமானது.

மக்களை சித்தாந்த ரீதியில்  திரட்டி, அரசு, சமூக, பொருளாதார அமைப்புகளை பணியவைத்து கேள்விக்கிடமின்றி இந்துமதவெறியர் உருவாக்கும் அதிகாரத்தை சட்டபூர்வமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ இல்லை தேர்தல்கள் மூலமாகவோ அழித்து விட முடியாது. சட்டமன்றத் தேர்தல்களில் வென்று மாநிலங்களவையில் அதிக பலம் பெற்று எதிர்ப்பின்றி மறுகாலனியாக்கத் திட்டங்களை நிறைவேற்றுவதே மோடி அரசின் இலக்கு. அதற்காகவே அவர்கள் சுலபமான வழியாக இந்துமதவெறிய அரசியலை வைத்து மக்களை திரட்டி தேர்தல்களை எதிர்கொள்கின்றனர்.

ஆகவே பீகார் தேர்தல்களில் அவர்கள் தோற்றிருப்பது ஒரு தற்காலிக பின்னடைவாக்கூட மாறலாம். மோடியை முன்னிறுத்தி முதலாளிகள் நடத்தும் கொள்ளைச் சுரண்டலுக்கு ஒரு முகமூடியாகவும், மக்களை திசைதிருப்பவும்தான் இந்துமதவெறி பயன்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை விரட்ட மக்களிடம் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைகளை விளக்குவதும், அரசியல் – பொருளாதார அரங்கில் போர்க்குணமான போராட்டங்களை நடத்துவதும் ஒன்றே மோடியை விரட்டும்.

பீகார் தேர்தல் முடிவுகள் அதை உறுதி செய்கின்றன.

–    தமிழரசன்.

மேலும் படிக்க:

CONDEMN THE ARREST OF KOVAN ! NEW DELHI PROTEST !!

1

CONDEMN THE ARREST OF REVOLUTIONARY SINGER KOVAN! RELEASE HIM IMMEDIATELY!

We the undersigned organizations strongly condemn the forceful arrest of Revolutionary cultural activist Kovan
from his home in an arbitrary manner as he was part of the campaign protesting against the liquor policy of Tamil
Nadu government. We condemn the manner in which he was arrested, as it violates basic human rights, was not
given any reason for his arrest and his arrest was not even formally announced. So, it becomes „abduction‟ and not
the arrest as it denies the legal rights to the activist.

kovan-arrest-jnusu-demo-poster-1Friends, as you might know that Kovan, a revolutionary singer has been arrested for song demanding shutdown of state-run liquor shops in Tamil Nadu. People‟s Power, a mass organization in Tamil Nadu, has been conducting agitations demanding shutdown of liquor outlets run by state owned TASMAC. Inspite of sustained and widespread struggles and demand by all sections of society, the Jayalalithaa government stubbornly refuses to
change its liquor policy which has impoverished the working population in Tamil Nadu. Students and People‟s Power activists who fought against TASMAC were arrested and jailed for many weeks. As part of this campaign,
two popular video songs by People‟s Art and Literary Association (PALA) “Moodu Tasmac-i Moodu – Shutdown TASMAC…” and “oothi kodutha uthami… – the lady who served liquor makes merry in Poes garden”) were
released in Vinavu (vinavu.com) news magazine and reached lakhs of viewers. The lyrics of Moodu Tasmac Moodu make an appeal to the ruling party to close liquor shops as alcoholism has spoiled the state. There is nothing in the compositions which encourages violence, beyond calling for the closure of state-run liquor outlets as part of a campaign against government policy. The song has gone viral on social media, and many relate to its central theme. The song delineates with a great sense of irony the idea of the state selling liquor while at the same time showering the people with freebies. In a sense, it has captured the present patronage paradigm in the political economy wherein the ruling party poses as the provenance of all welfare, but keeps the people disempowered through alcohol addiction.

kovan-arrest-jnusu-demo-poster-2Comrade Kovan, the lead singer of PALA cultural troupe has been arrested by the police at around 2.30 midnight
(30-10-2015) from his house at Trichy. He is charged under section 124A (sedition), 153 (attempt to create enmity
between social groups) and 502/1 (sale any printed or engraved substance containing defamatory matter) by the
Chennai city crime branch police. A special squad of around 10 policemen swooped into his house, roughed him
up and took him into custody. In the increasingly bizarre universe called Indian democracy, demanding shutdown
of liquor shops becomes another item of the long list of “seditious” activities, like drawing a cartoon, posting in
Facebook or writing a magazine article.

This is not the first time when we have seen the state has witch-hunted cultural activists, and acted against the
freedom of expression by filing sedition charges – the cases of crackdown on Kabir Kala Manch & revolutionary
singer Jitan Marandi should also be analysed along these lines. Putting to use state mechanisms for abduction of
cultural activists and slapping cases with no evidence has become a pattern.

The revolutionary struggle against the Fascist state will not be cowed down by this oppression. The songs of PALA
and other arts will continue to reverberate. We express solidarity with the courageous demonstration and protest
by students, cultural activists and masses against the liquor policy. We demand the immediate and unconditional
release of folk singer Kovan and all the charges should be scrapped immediately.

Join JNUSU’s Protest against the State Oppression on Cultural Activists – AISA AISF BAPSA Collective DSF DSU Hundred Flowers Group JANRANG JNUSU KNS Nowruz NSUI Pa.Cha.S Sanhati SFI TNM UDSF

VENUE: TAMIL NADU BHAVAN
DATE: 13-11-2015 FRIDAY
ASSEMBLE @ GANGA DHABA @ 1.30 PM

-SCRAP SEDITION CHARGES AGAINST KOVAN
-UNCONDITIONAL RELEASE
-SHUT DOWN ALL TASMAC SHOPS

THE NEW MATERIALISTS

Shut down TASMAC in Tamil Nadu!

"மூடு டாஸ்மாக்கை"
“மூடு டாஸ்மாக்கை” பாடல்

Shut Down The TASMAC,
Shut It Down
Dont Wait In Vain For The Elections, Shut It Down Now
How Many Kids Should Perish
How Many Women Should Lose Home
How Many Elections Till / Will You Wait
Shut It Down – Now, Its Evil – You Know, Shut It Down.
Liquor To Gather Crowd
Liquor To Garner Votes
Liquor To Shout Their Slogans
Liquor To Hold Their Flags
Parties You Know, Grow In The Brew
YOU, My Love, re The Side Dish In Their Electoral Game.
You Are The Side Dish In Their Electoral Game.
Come On, You Only Need A Big Lock
Not A Vote, To Shut This Evil Down
Father A Drunkard, Together The Son, Also In The Bar.
For The Woman The Menfolk Is Useless
The Menfolk Is Useless
Life Drowning In Sea Of Debts
Honour Auctioned In Streets
You Think They Give Us Freebies?
They Squeeze Our Lives As Price
Life’s Light Is Gone, Darkness Drowns Our Homes
Curse On The Lady
Ruined Are Our Lives
Broken Are Our Homes
Fire In Our Bellies
Who Invited This Hell Here
Out The Liquor Shops, Ours Is This Village – And
Who Is The Collector To Decide?
The State Is Raged Against You – Don’t Plead
The Police May Pounce Upon You – Don’t Fear
Down The Shutters
Who Will Stop Us?
No Tasmac Here, In This Village, Anymore
Shut It Down.

(Comrade Kovan was arrested on sedition charges for singing the above song against the State Govt policy of liquor.
He is a member of Peoples Art and Literary Association and campaigning for Peoples Power!)

THE NEW MATERIALISTS

மீட்டருக்கு சூடு போட வோக்ஸ்வேகனை அணுகுங்கள் !

0

volkswagan (1)_1சூடு வைத்த மீட்டர்களை வைத்து ஆட்டோ ஓட்டுநர்களை கலாய்ப்பதில் சென்னை சபா நாடகங்களுக்கு சலிப்பதேயில்லை. என்னதான் தொழில்நுட்ப புரட்சி வந்தாலும் அதை நமது ஆட்கள் முறைகேடாக பயன்படுத்துவார்கள், இந்தியா ஒரு போதும் முன்னேறாது என்று அவர்கள் சலித்தும் கொள்வார்கள். ஆனால் இந்த உலகில் சூடு வைத்து பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்குவது யார்?

ஜெர்மனியை சேர்ந்த உலகின் மிகப் பெரியக் கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), புகையைக் கட்டுப்படுத்தும் கருவியில் ‘சூடு’ வைத்த மோசடியைக் கேள்விப்பட்ட பிறகு சூடு வைத்த  ஆட்டோ மீட்டர்களெல்லாம் ஒன்றுமே இல்லை என ஆகிவிட்டது. சில ஆண்டுகளாய் நடக்கும் இந்த தில்லுமுல்லுகள் அதிகாரபூர்வமாக செப்டம்பர் 18 அன்று அமெரிக்காவின் சுற்று சூழல் பாதுகாப்புத் துறைக்கு (Environmental Protection Agency) தெரிய வந்து பின்னரே அதன் மீது நடவடிக்கைகள் (!) எடுக்கப்பட்டன.

இப்படி மோசடியாக 11 மில்லியன் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதில் ஆடி (Audi), சியட் (Seat), ஸ்கோடா (Skoda) போன்ற பிரபலமான சொகுசு கார்களும், வோக்ஸ்வேகன் பயணிகள் வாகனங்கள் (Volks Wegan Passengers), வணிக வாகனங்கள் (Commercial Vehicles)  உள்ளிட்டவைகளும் அடங்கும்.

கடந்த ஆண்டு, தூய்மையான போக்குவரத்திற்கான சர்வதேச குழுமம் ( The International Council on Clean Transportation ), வோக்ஸ்வேகன் ஜெட்டா, வோக்ஸ்வேகன் பாசெட் மற்றும் பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 ஆகிய  3 இலகுரக கார்கள் வெளியிடும் புகையின் அளவை பரிசோதனை செய்ய மேற்கு விர்ஜினியா பல்கலைகழகத்தின் மாற்று எரிபொருள் எஞ்சின்கள் மற்றும் உமிழ்வுகள் மையத்தை (Center for Alternative Fuels Engines and Emissions at West Virginia University) சேர்ந்த அறிவியலாளர்களை அமர்த்தியது.  இந்த குழு மேற்கொண்ட ஆய்வானது,  வோல்ஸ்வேகன் நிறுவன கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 15 – 35 மடங்கு அதிகமான அளவில் புகையை கக்கியதை உறுதி செய்தது. வேறு சில குழுக்கள் நிகழ்த்திய ஆய்வுகள்  40  மடங்குக்கும் அதிகமாக புகையின் அளவு இருப்பதாக  கூறுகின்றன.

இந்த மோசடிக்கு Defeat Device என்ற கருவியை இந்நிறுவனம் பயன்படுத்தி உள்ளது. இக்கருவி, உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்பின் (Emission Control System) செயல்பாடுகளை மாற்றுவது, மட்டுப்படுத்துவது மற்றும் செயலிழக்க செய்வதன் மூலம் இயந்திரத்தின் திறனை ஊக்குவிக்கிறது.

முதலாளித்துவ நிறுவனங்கள் தமது இலாப நோக்கங்களுக்கு எப்படி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கொள்கின்றன என்பதோடு ‘ஜனநாயக’ சட்டங்களையும் விழுமியங்களையும் மலந் துடைக்கும் காகிதங்களாக கூட மதிப்பதில்லை என்பதற்கும் முத்தாய்ப்பான சான்றாக இந்த புகை மோசடியை நாம் கருதலாம்.

இதனைத் தொடர்ந்து வோல்ஸ்வேகனின் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்தது அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை. அதற்கு அசைந்து கொடுக்காத நிலையில் அதன் விற்பனையை தடை செய்ய போவதாக ‘அச்சுறுத்தி’யவுடன் அந்நிறுவனம் சற்று இறங்கி வந்து தனது மோசடியை ஒப்புக் கொண்டது. அதன் பின்னர் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் வின்டர்காம் தனது வேலையை இராஜினாமா செய்ததும், இந்த தில்லுமுல்லுவில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க போவதாக அந்நிறுவனம் கூறியதும், பாதிக்கப்பட்ட கார்களை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் மற்றும் நட்ட ஈடாக சுமார் 4.8 பில்லியன் டாலர்களை அளிப்பதாக கூறியதுமான நாடகங்கள் தொடர்ந்தன.

அந்த நாடகத்தின் இறுதி காட்சிகளாக ஒருபுறம் அமெரிக்க, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க போவதாகவும் மறுபுறம் வாடிக்கையாளர்களிடம் தனது நற்பெயரை மீட்டுருவாக்கம் செய்ய இருப்பதாவும், இனி அந்நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட போவதாகவும் செய்திகள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. இதில் சில நிறுவனங்கள் அதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு மோசமாகவில்லை என்று புள்ளி விவரங்கள் வெளியிட்டு முதலாளித்து புனித மாண்பை காக்க கங்கணம் கட்டுகின்றன.

2008 – அமெரிக்க நெருக்கடியின் போது திவாலான நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரிக் கொடுத்து தூக்கிவிட்ட அமெரிக்க அரசு வோக்ஸ்வோகனை மட்டும் அழித்துவிடுமா என்ன? மேலும் ஒரு கார் நிறுவனத்தின் நற்பெயர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பின் நற்பெயரே பாதிக்கப்படும் என்பதால் அமெரிக்க அரசு மட்டுமல்ல, அனைத்து முதலாளித்துவ அரசுகளும் கூட  வோக்ஸ்வோகனை விட்டுக் கொடுக்காது.

volkswagan (2)_1வோக்ஸ்வேகன் மோசடிக்கு பயன்பட்டிருப்பது ஒரு முன்னேறிய தொழில்நுட்பம் என்பதால் இதை சாதாரண மக்கள், நாடுகள் யாரும் என்ன மோசடி என்றே கண்டுபிடிக்க முடியாது. வெவ்வேறு காலக்கட்டங்களில் இத்தொழில்நுட்பங்களை விதவிதமாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது வோல்ஸ்வேகன் போன்ற ஏகதிபத்திய நிறுவனங்களுக்கு புதிதல்ல.

197௦ களில், அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை, போர்டு, வோல்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தயாரித்த கார்களின்  சுற்றுப்புற வெப்பநிலை மாற்றிகளை (Ambient Temperature Switches) நீக்கச் சொல்லி உத்தரவிட்டது. இந்த கருவிகள் உமிழ்வு கட்டுப்பட்டு அமைப்பகத்தின் செயல்பாடுகளை மட்டுப்படுத்தி காற்றை மாசுபடுத்துவதாக அந்த துறை தெரிவித்தது. பிறகு கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அமெரிக்க சுற்றுசூழல் பாதுகாப்புத் துறைக்கும் இடையே ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக அந்நிறுவனங்கள் மீது அபராதமும், ஏற்கனவே விற்ற வாகனங்களை திரும்ப பெறத் தேவையில்லையெனவும் முடிவு செய்யப்பட்டது.

1995-ல், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மின்னணு கட்டுப்பாட்டகத்தை (Electronic Control Unit) பயன்படுத்தி காற்று – எரிபொருள் விகிதத்தில் (Air-Fuel Ratio) முறைகேடு செய்தது கண்டறியப்பட்டு  அபராதம் விதிக்கப்பட்டது.

1996-ல் ஹோண்டா நிறுவனத்திற்கு  எதிராக அபராதம் விதிக்கப்பட்டதும், 1998-ல் டிரக் தயாரிக்கும் பெரும் நிறுவனங்களான கேட்டர்பில்லர் (Caterpillar), கும்மின்ஸ் (Cummins), டெட்ராய்டு டீசல் (Detroit Deisel)  மேக் ட்ரக்ஸ் (Mac Trucks) ரெனால்ட் ட்ரக்ஸ் (Renault Trucks), வோல்வோ ட்ரக்ஸ் (Volvo Trucks)  செய்த புகை கட்டுப்பாட்டு மோசடிக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டதும் வரலாறாகும்.

இப்படி ஒவ்வொரு முறையும் முதலாளித்துவத்தின் புனித மரபு சோரம் போகும் போது முதலில் முதலாளித்துவ ஊடகங்கள் செய்வதறியாது விக்கித்து நிற்பதும் பின்னர் அந்நிறுவனத்தை அடிப்பது போல நடிப்பதும்  பின்னர் அந்நிறுவனங்கள்  புதுபுது வழிகளில் மீண்டும் மீண்டும் இது போன்ற சுரண்டல்களில் ஈடுபடுவதும் ‘அது போன வாரம்’ என்று முதலாளித்துவத்தை ஆராதிப்பவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதும் தொடர்கதையாகிவிட்டது.

இந்த வரிசையில் தற்போதைய புது வரவான வோக்ஸ்வேகனின் மோசடியால் முதலாளித்துவத்தின் புனித கற்பு பறி போய்விட்டதாக முதலாளித்துவ ஊடகங்களின் நீலிக் கண்ணீர் வடிக்கின்றன.

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரீதியில் ISO-14000 சுற்று சூழல் பாதுகாப்பிற்கான தர நிர்ணய சான்றிதழை பெற்ற முதல் நிறுவனம் வோக்ஸ்வேகனே என்பது ஒரு முரண் நகை.

1996-97-களில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்க்கான திட்டங்களை நடைமுறைபடுத்துகிறேன் பேர்வழி என்று ஆரம்பித்த இதன் தகிடுதிடங்கள் தான் முதலாளித்துவ புனித மாண்பின் மீது ஒண்ணுக்கடித்த வரலாறு தான் முதலாளித்துவத்தின் வரலாறு.

2௦14 இல் நிறுவன சராசரி எரிபொருள் சிக்கனம் (The Corporate  Average Fuel Ecnomy )  என்ற தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்றது மூலம் வரி விலக்கு மற்றும் இதர சிறப்பு சலுகைகளை பெற்றுக் கொண்டு அதன் பிறகு அந்த சட்டங்களை கடுகளவும் மதித்ததில்லை இந்நிறுவனம்.

volkswagan (2)இந்த மீப்பெரும் சுரண்டலுக்கு , முன்னால் தலைமை நிர்வாக அதிகாரி தனது பதவியை இராஜினாமா  செய்ததும், அந்நிறுவனத்தின் மீது அபராதம் விதிக்கப்பட்டதும்தான் தண்டனையாம்.  இனி இந்த மோசடிகளைக் கண்பிடிக்க முடியாத அளவுக்கு மீட்டருக்கு சூடு போடும் நுட்பத்தை கண்டுபிடிப்பார்கள்.

இத்தகைய மோசடியினால் அதிகரித்த  கரியினால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டிருப்பதையோ, அதன் விளைவாக பல உயிர்கள் பலியாகி இருப்பதையோ ஒப்புக்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை இம்முதலாளிதுவ சட்டங்களும் நான்காவது தூண்களும். ஆனால் இவர்கள்தான் ஏழைநாடுகளும் மக்களும் உலகின் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக நீலிக் கண்ணீர் விடுவார்கள். இவர்களது அடிமைகளாக இருக்கும் இந்திய கார்ப்பரேட் ஊடகங்களோ நம்மிடம் பாலிதீன் பயன்படுத்த கூடாது என்று உபதேசிப்பார்கள்.

இலாபமே குறிக்கோள் என்பதை அச்சாணியாக வைத்து செயல்படும் முதலாளித்துவ அமைப்பில் இத்தகைய மோசடிகள் இல்லாமல் போனால்தான் ஆச்சரியம். என்ரான், யூனியன் கார்பைடு, மைக்ரோ சாஃப்ட், ஃபோர்டு, கோக்கோ கோலா என்று ஏராளமான சாட்சியங்கள் இந்த உண்மையை தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.

நுகர்வுக் கலாச்சார சந்தையை அவ்வப்போது தூக்கி நிறுத்துவதற்காக இத்தகைய தர நிர்ணய ஆய்வுகள் மேம்போக்காக நடத்தப்பட்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் அதுவும் இல்லை. ஆக முதலாளித்துவம் அருளிய இவ்வாழ்க்கையில் நமது அபாயத்திற்கு அளவே இல்லை.

– கதிரவன்

உலக ரேஞ்சுக்கு லாஞ்ச் பண்ணுன அம்மா !

4

mukilan cartoon - kovan arrest (1)

mukilan cartoon - kovan arrest (5)

mukilan cartoon - kovan arrest (2)

mukilan cartoon - kovan arrest (3)

mukilan cartoon - kovan arrest (4)

படங்கள் : ஓவியர் முகிலன்

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

0

அரசியலிலிருந்து மக்களை விலக்கும் மறுகாலனியாக்கம்-அதனை அமலாக்கும் தேர்தல் ஆணையம்!

டுத்ததாக, அதிகார வர்க்கத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளின் அதிகாரிகளும், சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நேரடியாகப் பங்கேற்கும் அளவிற்கு மாற்றப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடாமல் தடுப்பதற்குத்தான் தேர்தல் ஆணையமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் கடுமையான நன்னடத்தை விதிகளும், அவற்றை அமலாக்க அது எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளும், ஓட்டுக் கட்சிகள் செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் கண்டுபிடித்து தடுத்து தேர்தலை நேர்மையாக நடத்தும் என்ற பிரமையை மக்களிடையே உருவாக்குவதற்கான ஏமாற்று வித்தைகளே!

தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடி நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களைத் தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான்! ஓட்டுப் போடுவது தவிர, அவர்களுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்! ஏனென்றால், மறுகாலனியாதிக்கச் சித்தாந்தப்படி மக்களை அரசியலிலிருந்தே விலக்கி வைக்கவேண்டும்; மார்க்சியம், காந்தியம், தேசியம் போன்ற எந்த இசங்களிலும், அறநெறிகள், சமூக மதிப்பீடுகள் எதிலும் நம்பிக்கையோ, மதிப்போ, அக்கறையோ அற்றவர்களாகவும் அவற்றைப் பிற்போக்கானதாகவும் பத்தாம்பசலித்தனமாகவும் கருதி முகம் சுளித்து ஒதுக்கித் தள்ளுபவர்களாகவும் மாற்ற வேண்டும்.

10-1மறுகாலனிய சித்தாந்தம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் அரசியல் குடிமகன் என்ற அம்சத்தையே ஒழித்துவிட்டு, குடிமக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே கருதி நடத்துகிறது. இதற்கேற்பவே அரசும் அரசியலும் மாற்றப்பட்டுள்ளது. “குடிமகனான உனது பணி ஒழுங்காக வேலைக்குப் போவது; கடுமையாக உழைத்து பணம் ஈட்டுவது; அதை வைத்துக் கொண்டு வகைவகையான நுகர்பொருட்கள், புதிதுபுதிதாக நவீனமாக வந்து கொண்டிருக்கும் செல்போன் போன்ற நுகர்பொருட்களை வாங்கி அனுபவி; விதவிதமான உணவுப் பொருட்களையும் நொறுக்குத் தீனிகளையம் வாங்கி ருசித்து இன்புறு; மலிவாகக் கிடைக்கும் டி.வி.டி.-க்களை வாங்கி வந்து கிளுகிளுப்பூட்டும் திரைப்படங்களைப் பார்; பாடல்களை ரசித்துக் கேள்; கிரிக்கெட் பார், நன்றாக தண்ணி போட்டு ஜாலியாக இரு. கும்பலாகச் சுற்றுலா சென்று அனுபவி; திருவிழா கொண்டாடு; சமூக சேவை, அரசியல் என்று போய் இவ்வளவையும் இழக்காதே; இளமையை, வாழ்க்கையை வீணடிக்காதே” என்றுதான் மறுகாலனிய சித்தாந்தம் கற்பிக்கின்றது. இத்துடன் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஒரு சாக்கடை; அந்தப் பக்கம் போகாதே என்றும் பரப்புரை செய்கிறது.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களிலிருந்து அறநெறிகளைக் கற்பிக்கும் பாடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. மாற்றாக, நடனம், யோகா, தற்காப்பு கலைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன்,” சுயமுன்னேற்றக் கண்ணோட்டத்தில் படித்து வேலைக்குப் போகவேண்டும்; நன்றாக சம்பாதிக்க வேண்டும்; அதற்கு எந்தவித முறையையும் கையாளலாம். வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்க வேண்டும்” என்ற மனோபாவத்தையும், சுயநல போட்டி மனப்பான்மையையும் உருவாக்குவதன் மூலம் மாணவப் பருவத்திலேயே வளரும் தலைமுறையினர் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் தடுக்கப்படுகிறார்கள். இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் தடை செய்யப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்களில் ஊராட்சி, நகராட்சித் தலைவர்கள், தன்னார்வ குழுக்கள், மகளிர் சுயநிதி உதவிக் குழுக்கள் ஆகியோரைப் பங்கேற்க வைப்பது; குளங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவதற்கான சுயேச்சையான அதிகாரம் கொண்ட குழுக்களில், மக்களில் சில முக்கியமானவர்களையும் மேலே சொன்னவர்களையும் பங்கேற்க வைப்பது; இதன் போக்கில் மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக, தங்கள் மூலம்தான் அரசாங்கம் நடத்தப்படுகின்றது என்ற எண்ணத்தை வேர்மட்ட அளவில் ஏற்படுத்தி, அவர்களை அரசியல் பக்கம் போகாமல் தடுக்கும் உலகவங்கியின் திட்டமும் அமல்படுத்தப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்தத் தடை; நடத்த அனுமதித்தாலும் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இரண்டு, மூன்று இடங்கள் தவிர, பிற இடங்களில் நடத்த அனுமதி மறுக்கப்படுவது; பேரணிகள் நடத்த, சுவரொட்டிகள் ஒட்டத் தடை போடப்படுகிறது. புதுப்புது அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

இவை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றுதான்; ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் அரசியலையே வெறுத்து ஒதுக்க வேண்டும்; அரசியலில் ஈடுபாடு கொள்ளக்கூடாது. அவர்களின் ஒரே அரசியல் நடவடிக்கை தேர்தல் வரும்போது ஓட்டுப் போடுவது மட்டுமே. இவ்வாறு அவர்களை அரசியலிலிருந்து விலக்கி வைப்பது, அரசியல் தீண்டாமையை அவர்கள் மீது ஏவி விடுவது என்பதுதான் மறுகாலனியாதிக்கக் காலகட்டத்தின் நடைமுறையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் தேர்தல் ஆணையம் இம்சை அரசனைப் போல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றது.

தொகுப்பாக,

இதுவரையில் நாம் விவரித்ததைத் தொகுத்து சாராம்சமாகச் சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது, சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம். மேல்நிலை வல்லரசுகளின்-ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே இந்திய அரசும் அதன் சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் மாற்றப்பட்டுள்ளன.

10-2மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளாலும் சர்வதேச நிதிமூலதனக் கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசைக் கட்டுப்படுத்துகின்றன; ஆட்டுவிக்கின்றன.

மறுகாலனியச் சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் – தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல இவற்றின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு, அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இந்தியாவில் நிலவுகின்ற அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டிக் குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக, சுயேச்சையாக தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாய உரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும், பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கியத் திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950-களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990-களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் – வருடங்களுக்குள் மீண்டும் கட்சித் தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.

10-3மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு, மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மயச் சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் என்பது ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப் பருவத்தில், அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவும் சலுகைகள் – கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது.

இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக, மேல்நிலை வல்லரசுகள்-அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச-தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாகக் கையாண்டுவரும் நிலைமையில், ஜனநாயகமும் தேர்தலும் வெட்டிச் சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில் இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.

‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள், நாடாளுமன்ற அராஜகம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள் – நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் “நீயா, நானா” விவாத மன்றங்களாக்கிவிட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர், நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும், கிரிக்கெட், திரைப்படம், செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை – இலட்சியங்களோ அற்ற, நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் புகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின் மீதே அருவருப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் – மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்துவிட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலை பேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.

நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது? என்று நொந்து கொள்வது மட்டுமல்ல; வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.

எனவே, மக்கள் தங்களது அடிமனதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள், மக்களது துயரத்தைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். இதை நிறைவேற்றப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் மக்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

முற்றும்

முந்தைய பகுதிகள்

_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! பகுதி – 3

0

“வியாபம் ஊழல் தொடர்பாக 140 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செயப்பட்டிருக்கின்றன; 3,800 பேர் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது; இவர்களுள் 2,000 பேர் கைது செயப்பட்டுள்ளனர்; 800 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்; இந்த ஊழலின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 1,087 மாணவர்களின் சேர்க்கை ரத்து செயப்பட்டிருக்கிறது; இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் சராசரியாக தலைக்கு 25 இலட்ச ரூபாய் இலஞ்சம் பெறப்பட்டிருக்கிறது; வியாபம் நடத்திய 68 போட்டித் தேர்வுகளின் மூலம் 1,40,000 பேர் முறைகேடான வழியில் அரசுப் பணிகளில் சேர்ந்திருப்பதாகக் கண்டறிப்பட்டிருக்கிறது; இந்த ஊழலால் 76.76 இலட்சம் விண்ணப்பதாரர்கள் (மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு வேலையிலும் சேருவதற்கு விண்ணப்பித்தவர்கள்) பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” என்றொரு புள்ளிவிவரத்தை இந்து நாளிதழ் (ஜூலை 10, பக்.13) வெளியிட்டிருக்கிறது. இப்புள்ளிவிவரங்கள் வியாபம் ஊழலின் ஆழத்தையும் அகலத்தையும் எடுத்துக்காட்டினாலும், இவை மட்டுமே வியாபம் ஊழலின் முழுமையான சித்திரத்தைத் தந்துவிடவில்லை. அந்த ஊழலின் இன்னொருபுறம் விசாரணை நாடகங்கள், சாட்சியங்களைப் படுகொலை செய்வது, அச்சுறுத்துவது, ஆதாரங்களை அழிப்பது என அச்சமூட்டக்கூடியதாக விரிவடைகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.) இணையான வியாபத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் மலிந்து கிடப்பதை 2007-ம் ஆண்டிலேயே மத்தியப் பிரதேச உள்ளாட்சி தணிக்கை அமைப்பு கண்டுபிடித்துக் கூறியது. இதனைத் தொடர்ந்து, வியாபம் நடத்திய மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் ஆள்மாறாட்டங்களும் நடந்திருப்பதை 2008, 2009-ம் ஆண்டுகளிலேயே ம.பி. மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களான பிரதாப் கிரேவாலும் பரஸ் சக்லேகாவும் சட்டமன்றத்திலேயே அம்பலப்படுத்தினர். அதே ஆண்டில் இந்தூரைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த் ராய் வியாபத்தில் நடந்துவரும் முறைகேடுகள் குறித்து விசாரிக்குமாறு கோரி ம.பி.மாநில உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

வியாபம் ஊழல்இதற்குப் பிறகு அம்மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக, இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு மருத்துவக் கல்வி துணை இயக்குநர் தலைமையில் கமிட்டியொன்றை அமைத்தார். சோளக்காட்டு பொம்மைக்கு இணையான இக்கமிட்டி இம்முறைகேடுகளை இரண்டு ஆண்டுகளாக விசாரணை செய்ததாக ஒரு நாடகத்தை நடத்தி, மோசடியான அறிக்கையொன்றை 2011-ம் ஆண்டில் அரசிடம் அளித்தது.

டாக்டர் ஆனந்த் ராய் 2013-ம் ஆண்டில் வியாபம் முறைகேடுகள் குறித்து ம.பி. மாநில உயர்நீதி மன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். இவ்வழக்கைத் தொடர்ந்து இம்முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு சிறப்புப் படையொன்றை (Special Task Force) அமைத்தது, அம்மாநில பா.ஜ.க. அரசு. இந்தப் படையின் விசாரணையும் உப்புக்குச் சப்பாணியாக நடப்பது அம்பலமாக, அந்தப் படையின் விசாரணையை மேற்பார்வையிடுவதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை (Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டது, ம.பி. உயர்நீதி மன்றம். இதற்குப் பிறகும் குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் உள்நோக்கத்தோடு விசாரணை நடத்தப்பட்டதால், இம்முறைகேடுகள் குறித்த விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கக் கோரி டாக்டர் ஆனந்த் ராய், ஆஷிஷ் சதுர்வேதி, பிரசாந்த் பாண்டே, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங் உள்ளிட்டோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து வியாபம் ஊழல் வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதிலும்கூட, வியாபத்தில் நடந்துள்ள ஊழல்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதே தவிர, வியாபம் ஊழலின் இன்னொரு அங்கமான, தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் தனியாகவும், வியாபத்தோடு கூட்டுச் சேர்ந்தும் நடத்தியிருக்கும் 10,000 கோடி ரூபாய் பெறுமான டி.எம்.ஏ.டி. ஊழல் (டிமாட் ஊழல்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

***

விசாரணை கமிசன், அதன் பிறகு சிறப்புப் படை, அதனைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, அதனைத் தொடர்ந்து இப்பொழுது சி.பி.ஐ., என அனுமார் வால் போல விசாரணை நீண்டுகொண்டே போனாலும், எந்தவொரு விசாரணை அமைப்பும் வியாபம் ஊழலின் உயிர்நாடி மீது கைவைக்கவே மறுக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக 2,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் பெரும்பாலோருக்குப் பிணை வழங்கப்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இந்த இரண்டாயிரம் பேரில் ம.பி. மாநில முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமான சுதிர் சர்மா, வியாபமில் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்த பங்கஜ் திரிவேதி, இடைத்தரகர்கள் வலைப்பின்னலை இயக்கி வந்த இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் ஜகதீஷ் சாகர் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர, ஆகப் பெரும்பாலோர் இலஞ்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளாக வேலை பார்த்து வந்த புரோக்கர்கள் உள்ளிட்ட பலியாடுகள்தான்.

ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான்தான் 2008 முதல் 2012 வரையில் மருத்துவக் கல்வித் துறையின் தலைவராகவும் இருந்தார். அந்தக் கட்டத்தில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தை எட்டியது. வியாபமில் கணினிப் பொறியாளராக வேலை பார்த்து தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நிதின் மொஹிந்திரா இரகசியமாக வைத்திருந்த கணினிப் பதிவுகளை ஆராய்வதற்காக சிறப்புப் படையால் நியமிக்கப்பட்ட பிரசாந்த் பாண்டே, அப்பதிவுகளில் 64 பேருக்கு சிவராஜ் சௌஹான் பரிந்துரை செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். இது தொடர்பான கணினிப் பதிவுகளும் ம.பி. உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செயப்பட்டுள்ளன.

சிவராஜ் சௌஹானின் மனைவி சாதனா சிங் போக்குவரத்து காவலர் தேர்வில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த 19 பேரைத் தேர்ச்சி பெற செய்யக் கூறி, சுதிர் சர்மாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதற்கான ஆதாரங்கள் அம்பலமாகியிருக்கின்றன. ஆனால், இவர்கள் இருவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல, பெயரளவுக்குக்கூட இவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

சௌஹானின் நெருங்கிய உறவினரும் ம.பி. மாநில பிற்பட்டோர் கமிசன் தலைவருமான குலாப் சிங் கிராரின் மகன் 2011-ம் ஆண்டு நடந்த முதுகலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஊழலை விசாரித்து வந்த சிறப்புப் படை கிராரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க, அவரோ அரசு விழாக்களில் சௌஹானின் அருகே அமர்ந்துகொண்டு அதிரடிப் படைக்கு பெப்பே காட்டிவந்தார். இந்த ஊழல் வழக்கு சி.பி.ஐ. வசம் வந்த பிறகும் அவர் கைது செயப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் மிஹிர் குமார் என்ற தனது எடுபிடிக்கு அரசு வேலை வாங்கித் தர சிபாரிசு செய்ததற்கான ஆதாரங்கள் பத்திரிகைகளில் அம்பலமான பிறகும் கே.எஸ். சுதர்சனிடம் விசாரணைகூட நடத்தப்படவில்லை.

சிறப்புப் படையால் விசாரிக்கப்பட்ட சௌஹானின் தனி உதவியாளர் பிரேம் பிரசாத் யாதவிற்கு எவ்விதத் தயக்கமும் இன்றி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது. வியாபம் ஊழல் தொடர்பாக கைது செயப்பட்ட சௌஹானின் குடும்ப மருத்துவர் அஜய் மேத்தா மூன்றே மாதத்தில் பிணையில் வந்துவிட்டார். இவர்கள் இருவரின் பிணை மனுக்கள் மீதான விசாரணையில், அதனை எதிர்க்க வேண்டிய சிறப்புப் படையோ குற்றவாளிகளின் கூட்டுக் களவாணியாகச் செயல்பட்டிருக்கிறது.

“நிதின் மொஹிந்திரா இரகசியமாக வைத்திருந்த கணினிப் பதிவுகளில்தான் சிவராஜ் சௌஹான் தொடங்கி கே.எஸ். சுதர்சன் வரையிலும் யார், யாருக்கு சிபாரிசு செய்தார்கள், அதற்கு எவ்வளவு பணம் கைமாறியது என்ற விவரங்களெல்லாம் இருந்தன. இந்தப் பதிவுகள் சிறப்பு அதிரடிப் படைக்குக் கிடைத்த பிறகு, அப்படை அப்பதிவுகளில் காணப்பட்ட அரசியல் செல்வாக்குமிக்க முக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் விசாரணையைத் திசை திருப்பியதாக” டாக்டர் ஆனந்த் ராய் உள்ளிட்டவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

மாநில போலீசு மட்டுமல்ல, சி.பி.ஐ. விசாரணையும் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செல்வதை யோகேஷ் உப்ரித்துக்கு வழங்கப்பட்டுள்ள பிணை எடுத்துக் காட்டுகிறது. யோகேஷ் உப்ரித் அரசு நிறுவனமான வியாபத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். அதிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திவரும் டிமாட் தேர்வுகளின் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றினார். வியாபம் மற்றும் டிமாட் ஊழல்கள் இரண்டிலும் முக்கியப் புள்ளியாக இயங்கியவர் உப்ரித். கடந்த மே மாதம் கைது செயப்பட்ட உப்ரித் செப்டம்பர் 4 அன்று பிணையில் வந்துவிட்டார். இவர் மீது உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருந்ததன் மூலம் இவருக்குப் பிணை கிடைப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, சி.பி.ஐ. குற்றத்தின் தன்மை கருதி இவருக்குப் பிணை வழங்க உயர்நீதி மன்றம் மறுத்திருக்க முடியும். ஆனால், நீதிமன்றமோ சி.பி.ஐ. மீது பழிபோட்டுவிட்டுத் தமது தார்மீக பொறுப்பை, கடமையைத் தட்டிக் கழித்துவிட்டது.

***

ரசியல் செல்வாக்குமிக்க உப்ரித் போன்ற சுறாமீன்களுக்குப் பிணை கிடைத்திருப்பதும், 2,000 குட்டி மீன்களுக்குப் பிணை மறுக்கப்படுவதும், முக்கிய சாட்சியங்கள் மர்மமான முறையில் இறந்து போவதும், இந்த ஊழலை அம்பலத்துக்குக் கொண்டுவந்த டாக்டர் ஆனந்த் ராயும் ஆஷிஷ் சதுர்வேதியும் தினந்தோறும் மிரட்டப்படுவதுமாக இந்த விசாரணை நாடகத்தில் காட்சிகள் நகர்ந்து செல்கின்றன.

இந்த ஊழல் அம்பலத்திற்கு வந்த 2009-ம் ஆண்டு தொடங்கி இன்று வரையில், இந்த ஊழலோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய 48 பேர் இயற்கைக்கு மாறாக, அகால மரணமடைந்துள்ளனர். இந்த ஊழலை விசாரித்து வந்த சிறப்புப் படை இவர்களுள் 23 பேர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதாக ம.பி. உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறது. இறந்து போனவர்களுள் கணிசமானோர் மருத்துவ மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள். இந்த மர்ம மரணங்களுக்கு சாலை விபத்துகள் முக்கிய காரணியாக இருக்கிறது.

இந்த அகால மரணங்களுள் மருத்துவ மாணவி நம்ரதா தமோர், ஆஜ் தக் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர் அக்ஷய் சிங், ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.கே.சகால்லே, அதே மருத்துவக் கல்லூரியில் சகால்லேவுக்கு அடுத்து முதல்வராகப் பதவியேற்ற அருண் ஷர்மா, ம.பி. மாநில கவர்னரின் மகன் ஷைலேஷ் யாதவ், வியாபம் ஊழலை அம்பலப்படுத்தி வந்த மருந்தாளுநர் விஜய் சிங் படேல், கால்நடை மருத்துவக் கல்வி மாணவர் அமித் சாகர் உள்ளிட்ட 10 மரணங்கள் மிகவும் சந்தேகத்திற்குரியவை என்கிறார், டாக்டர் ஆனந்த் ராய்.

வியாபம் ஊழல் மூலம் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர்கள் தந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் விடுப்பில் சென்ற அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சகால்லே, தனது உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரியும் நிலையில் தெருவில் ஓடிவந்து மரணமடைந்தார். இவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு மூடப்பட்டது.

இவரையடுத்து ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் அருண் ஷர்மா, பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே டெல்லியிலுள்ள விடுதி அறையொன்றில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே சில மாத்திரைகளும் விஸ்கி பாட்டிலும் கண்டெடுக்கப்பட்டன.

மர்மமான முறையில் இறந்து போன மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தமோரின் பெற்றோர்களிடம் அவரது மரணம் குறித்து பேட்டி எடுக்கச் சென்ற ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபர் அக்ஷ சிங், அப்பேட்டியை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் வாயில் நுரை தள்ளி இறந்து போனார்.

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இறந்து கிடந்த விஜய் சிங் படேலின் உடலில் விஷம் இருந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடைத்தரகர் நரேந்திர சிங் தமோர் மாரடைப்பால் இறந்து போனதாகக் கூறப்பட்டாலும், அவரது சாவு குறித்துப் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

டாக்டர் ஆனந்த் ராய், ஆஷிஷ் சதுர்வேதி, பிரசாந்த் பாண்டே, பரஸ் சக்லேகா
பா.ஜ.க அரசு மூடிமறைக்க முயன்ற வியாபம் ஊழலை அம்பலப்படுத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் (கடிகாரச் சுற்றுப்படி) டாக்டர் ஆனந்த் ராய், ஆஷிஷ் சதுர்வேதி, பிரசாந்த் பாண்டே, பரஸ் சக்லேகா

இத்தகைய மர்ம மரணங்களைத் தற்கொலையென்றோ அல்லது விபத்து என்றோ குறிப்பிட்டு வழக்கை முடித்து விடுவதில் ம.பி.மாநில பா.ஜ.க. அரசு கீழ்த்தரமாகவும், கிரிமினல் முறையிலும் முயன்றுள்ளதற்கு மருத்துவ மாணவி நர்மதா தமோரின் கொலையை உதாரணமாகக் கொள்ள முடியும். இந்தூரைச் சேர்ந்த நர்மதா தமோரின் உயிரற்ற உடல் ஜனவரி 2012-ல் உஜ்ஜையினிக்கு அருகே, ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் மிகவும் கொடூரமான மூச்சுத் திணறலால் இறந்து போனதாக அவரது சடலத்தைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழு குறிப்பிடுகிறது. இந்த மருத்துவ மொழியின் பொருள் அவர் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதுதான்.

முதலில் இதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்த ம.பி. போலீசு, இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டு வழக்கை மூடியது. இதற்கு ஆதாரமாக நர்மதாவின் மரணம் குறித்து ம.பி. அரசின் மருத்துவ சட்டத் துறையின் தலைவர் பத்குர் அளித்த அறிக்கையை போலீசார் காட்டியுள்ளனர். பத்குர் அறிக்கை அளித்த விதமே அலாதியானது மட்டுமல்ல, சதித்தனமானதும்கூட. அவர் நர்மதாவின் உடலைப் பரிசோதனை செய்யாமல், அவரது சடலத்தின் புகைப்படங்களைக் கொண்டு நர்மதா தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை அளித்திருக்கிறார். ம.பி. போலீசார் இந்த மோசடித்தனமான அறிக்கையை ஆதாரமாகக் காட்டியிருப்பதோடு, நர்மதா காதல் தோல்வியின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை கட்டியுள்ளனர். குற்றவாளிகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள சாட்சியங்களைக் கொலை செய்து, ஆதாரங்களை அழித்துள்ளனர் என்பதைத் தாண்டி இந்த மர்ம மரணங்களுக்கு வேறு விளக்கம் அளிக்க முடியாது.

2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்ட பொழுது, தி.மு.க. தலைமையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய ஊடகங்கள், வியாபம் ஊழலில் நடந்துள்ள மர்ம மரணங்களுக்கு பா.ஜ.க. தலைமையை, ம.பி. முதல்வர் சௌஹானை எவ்விதத்திலும் பொறுப்பாக்கவில்லை. பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்ற மனுதர்மத்தின்படிதான் வியாபம் ஊழலையும் 2ஜி ஊழலையும் ‘தேசிய’ ஊடகங்கள் அணுகி வருவதை இந்த பாரபட்சம் புட்டு வைக்கிறது.

இந்த மர்ம மரணங்கள் ஒருபுறமிருக்க, இந்த ஊழலை அம்பலப்படுத்துவதில் முன்னணியில் நிற்கும் ஆஷிஷ் சதுர்வேதியின் மீது 14 முறை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்திருக்கிறார். இந்த ஊழலில் ம.பி. முதல்வர் சிவராஜ் சௌஹானுக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்திய பிரசாந்த் பாண்டேவுக்கு கொடுக்கப்பட்ட போலீசு பாதுகாப்பு திட்டமிட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களான ஆனந்த் ராயும் அவரது மனைவியும் பாதுகாப்பற்ற இடங்களுக்கு பணி மாறுதல் செயப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இயங்கி வந்த ஆனந்த் ராய் இந்த ஊழலைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால், அவர் அமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். “குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்கை ஆதரித்து வரும் ஆர்.எஸ்.எஸ்., ஊழலுக்கு எதிராகப் போராடும் தன்னைக் கைவிட்டுவிட்டதாக”க் கூறுகிறார், ஆனந்த் ராய். அவரின் இந்த அனுபவம் இந்து மதவெறிக் கும்பலின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

***

நம்ரதா தமோர், அக்ஷய் சிங், டாக்டர் டி.கே.சகால்லே, டாக்டர் அருண் ஷர்மா, விஜய் சிங் படேல் மற்றும் அமித் சாகர்
வியாபம் ஊழல் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்தபொழுதே மர்மமான முறையில் மரணமடைந்த (கடிகாரச் சுற்றுப்படி) நம்ரதா தமோர், அக்ஷய் சிங், டாக்டர் டி.கே.சகால்லே, டாக்டர் அருண் ஷர்மா, விஜய் சிங் படேல் மற்றும் அமித் சாகர்

குதியும் திறமையும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத்தான் போட்டித் தேர்வுகளும் நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுவதாக நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு ரத்து செயப்பட்டபொழுது, பார்ப்பன ஊடகங்களும், நடுத்தர வர்க்க மேதைகளும் அந்நடவடிக்கையை தகுதி, திறமை மீது விழுந்த இடியாகச் சித்தரித்தார்கள். ஆனால், மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள வியாபம் ஊழல் நுழைவுத் தேர்வு என்பது ஊழலின் ஊற்று என்பதையும்; பணத்திற்கு முன் தகுதி, திறமையெல்லாம் மயிருக்குச் சமமாகும் என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

அரசு நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கொள்கையால் சீரழிந்து போவிட்டதாகவும், அதற்கு மாற்று தகுதி, திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கும் தனியார்மயம்தான் எனப் பார்ப்பன-ஆதிக்க சாதி கும்பல் வாதாடி வருவதெல்லாம் மிகப் பெரும் மோசடி என்பதையும் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள டிமாட் ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் கள்ள வியாபாரிகளைவிடக் கேடுகெட்ட கிரிமினல்கள் என்பதை டிமாட் ஊழல் எடுத்துக் காட்டியிருக்கிறது.

நடுத்தர வர்க்கம் அரசு நிறுவனமான வியாபத்தில் நடந்துள்ள ஊழலைப் பயன்படுத்திக் கொண்டு, மருத்துவ சீட்டுகளையும், அரசுப் பதவிகளையும் அடைந்தது. நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகார வர்க்கம், அமைச்சர்கள், ஓட்டுக்கட்சி தலைவர்கள் ஆகியோர் அடங்கிய சமூகத்தின் மேல்தட்டு வர்க்கம் தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து டிமாட் ஊழல் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்.

10,000 கோடி ரூபாய் பெறுமான டிமாட் ஊழலை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து விடக்கூடாது என்ற திட்டத்தோடு காய்கள் நகர்த்தப்படுகின்றன. “இந்த ஊழலை விசாரிக்கும் அளவிற்குத் தன்னிடம் ஆள்பலம் இல்லை” எனக் கூறி, விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வருகிறது, சி.பி.ஐ. “தனியார் துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலை, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” எனக் கேவலமான முறையில் உச்சநீதி மன்றத்தில் வாதிட்டு, இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களைக் காப்பாற்ற முயலுகிறது, மோடி அரசு. “எங்களிடம் பணம் இருக்கிறது, அவர்களிடம் மருத்துவ சீட் இருக்கிறது. பண்ட பரிமாற்றம் போல இதுவும் ஒரு பொருளாதார நடவடிக்கைதானே தவிர, ஊழல் அல்ல” என நாக்கைச் சுழற்றி இந்த மோசடியை நியாயப்படுத்தி வருகிறது, மேல்தட்டு வர்க்கம். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அன்னா ஹசாரேயை முன்னிறுத்தி வடஇந்திய நகரங்களில் ஊழலுக்கு எதிராக ஒப்பாரி வைத்த ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் மற்றும் அக்கும்பலின் சமூக அடித்தளமான ஆதிக்க சாதி, மேல்தட்டு வர்க்கத்தின் யோக்கியதை இதுதான்.

வியாபம் என்ற அரசு நிறுவனமே ஊழலில் ஈடுபட்டிருப்பது, அந்த ஊழல் அம்பலமானவுடன் அரசின் மற்ற உறுப்புகள் அதனை மூடிமறைக்க உதவியிருப்பது, விசாரணை நாடகம், மிரட்டல்கள், கொலைகள் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளின் மூலம் ஆடுகளைப் பலியிட்டு ஓநாய்களைத் தப்பவைப்பது எனச் செல்லும் வியாபம் ஊழலும், டிமாட் ஊழலும் அரசு நிறுவனங்கள் சீழ் பிடித்துப் போயிருப்பதை மட்டும் காட்டவில்லை. எந்தவிதத்திலும் சீரமைக்க முடியாதபடி, சாதாரண மக்களுக்கு எதிரானதாக, தாமே சொல்லிக் கொள்ளும் கடமைகளுக்கு எதிராக அந்நிறுவனங்கள் மாறிப் போவிட்டதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

முற்றும்.

– செல்வம்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

அந்த சிறுவன்தான் வினவு – அவனைத் தடுக்க முடியாது !

8

தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையனின் நேர்காணல் நிறைவு பாகம்.

இந்த காணொளியில்

“உல்லாசம் என்று கூறுவது தவறானதா?

பாடல் வரிகள் பெண்ணை(ஜெயலலிதாவை) இழிவுபடுத்துகிறதா?

கோவன் கைதுக்கு டாஸ்மாக் பாடல் மட்டும்தான் காரணமா?

வினவைத் தடை செய்ய முடியுமா?

மக்கள் போராட்டங்களை தூண்டிவிடுவது யார்?”

– போன்ற கேள்விகளை அலசுகிறார்

தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.

 

SUPPORT US

பா.ஜ.க எமனின் வாகனம் எது ? கேலிச்சித்திரம்

0

bjp_threaten_behead_karnataka_cm_cartoon

                                        படம் : ஓவியர் முகிலன்

கோவன் பாடலை பாட அனுமதியில்லை – தொடரும் போராட்டங்கள்

1

1. மதுரை

(குறிப்பு : 04-11-2015 அன்று வெளியான படங்கள் தொடர்பான விரிவான செய்தி)

மக்கள் அதிகாரம் – ஆர்ப்பாட்டம் – தென் மாவட்டங்கள்

மூடு டாஸ்மாக்கை” என்று பாடிய புரட்சிப்பாடகர் தோழன் கோவன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள்,  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரை மாநகரில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்02-11-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடந்துவதற்கு 31-10.-2015 அன்றே காவல்துறை வசம் அனுமதிக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. அனுமதியை எழுத்துபூர்வமாக கொடுக்காமல் இழுத்தடித்து 01-11-2015 அன்று இரவு, “ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆகையால் அதை ஏற்றுக் கொண்டால் அனுமதி தருகிறோம். உடனே வந்து கையெழுத்துப் போட்டுச் செல்லுங்கள்” என வலியுறுத்தினார்கள் காவல் துறையினர்.

விதிமுறைகள் என்ன என்று பார்த்தால், ‘கோவன் பாடிய பாடலை பாடக்கூடாது. அவர் பாடியிருந்த பாடலை விநியோகம் செய்யக் கூடாது. பிரசுரம் விநியோகம் கூடாது. மைக் அனுமதி கிடையாது’ என ஏகப்பட்ட கிடையாது என்பதுடன் அனுமதி அளித்தார்கள்.

மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் காவல் துறை உயர் அதிகாரிகளிடம், “மைக் வைத்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என வாதாடிய போது “என்னால் ஒன்றும் செய்யமுடியாது. இது மேலிடத்து உத்தரவு, மைக் கட்டாயம் அனுமதி தர முடியாது” என்று சொன்னார்கள் அதிகாரிகள்.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்நாம் அழைத்திருந்த சர்வ கட்சியை சேர்ந்த பிரமுகர்களும், ஆர்ப்பாட்டத்திற்கு வந்துவிட்டபடியால் அவர்களுடைய கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்ய வேண்டிய நிலையில் ஆர்ப்பாட்டம் மைக் இல்லாமல் துவங்கியது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் “ஆர்ப்பாட்டத்திற்கு மைக் வைக்கக் கூடாது என்று காவல் துறையினர் கூறியிருப்பது சட்டவிரோத நடவடிக்கையின் துவக்கம். மக்கள் டாஸ்மாக்கினால் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படி மக்களை பாதிக்கின்ற விசயங்களை விமர்சிப்பது சட்டத்தினால் வழங்கப்பட்ட உரிமை. மக்களிடம் சென்று கேட்டுப்பார்த்தால் தெரியும் டாஸ்மாக் பாதி்ப்பை மக்கள் சொல்வார்கள்.

கோகுல்ராஜை கொலை செய்த யுவராஜ் உடனே கைது செய்யப்படவில்லை. சிவகங்கை சிறுமியை வல்லுறவு செய்த போலீசு கைது செய்யப்படவில்லை. ஆனால் டாஸ்மாக்கை மூடு என்று பாடிய கோவன் கைது செய்யப்படுகிறார்.

கோவன் கைதினைத் தொடர்ந்து இன்று ஆர்ப்பாட்டத்திற்கு மைக் செட்டிற்கு மறுப்பு. அடுத்தடுத்து அரசியல் சட்ட விரோத செயல் அரங்கேற்றப்படுகிறது. பாசிசம் நெருங்கி விட்டது. அதனை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டியதிருக்கிறது” என இன்றைய அரசியல் சூழலை எடுத்துக்காட்டி பாசிச அபாய எச்சரிக்கை விடுத்தும் தலைமையுறையை நிறைவு செய்தார்.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்பின்னர் தி.மு.க. வின் தீர்மானக் குழுத் தலைவரும், உயர்செயல்திட்டக்குழு உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் திரு பொன். முத்துராமலிங்கம் அவர்களின் கண்டன உரையில்…

”கோவன் அடவாடித்தனமான சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. கண்டிக்கத்தக்கது.

“அரசியல் சட்டத்தின்படியான ஆட்சி நடைபெறுகிறது. அரசியல் சட்டத்தின் 19 யு பிரிவு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ள “பிரிடம் ஆஃப் ஸ்பீச் அண்ட் எக்ஸ்பிரஸன்” என்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கபட்டுள்ள திருத்த முடியாத உரிமை.

அந்த உரிமைப்படி கோவன் பாடியிருக்கிறார். அது தவறு என்று கருதினால், அவதூறு என்று கருதினால் வேறு சட்டப்பிரிவில் வழக்கு தொடரலாம். “செடிஷன்” – கூட்டுச்சதி என்று வழக்குதொடர்ந்து அவரை முடக்க அரசு திட்டமிடுகிறது. இது ஜனநாயக விரோத நடவடிக்கை.

டாஸ்மாக்கினால் குடும்பங்கள் அழிந்து வரும் சூழ்நிலை தமிழ்நாடு முழுக்க இருக்கிறது. இதை ஒரு பாடகர் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

மேலும் மாநில அரசுகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் “ஸ்டேட் பாலிசி” வழிகாட்டும் நெறி 47 வது பிரிவு குடிப்பதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடமைகளை விதித்துள்ளது. இக்கடமையை கோவன் செய்தால் தவறா?

செடிஷன் என்பது வெள்ளைக்கார கூட்டம் கொண்டுவந்த இந்த சட்டம் சட்ட புத்தகத்தில் இருக்கக் கூடாது.

சட்டத்தின் ஆட்சியை எல்லோரும் ஏற்கிறார்கள் ஆக அதனை பாதுகாக்க அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும்” என சிறப்பான உரையை பதிவு செய்தார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தோழர் விஜயராஜன் ஆற்றிய உரையில்

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்“டாஸ்மாக்கினால் பல குடும்பங்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள். இந்த அவலத்தை மனதில் தைக்கும் விதமாக பாடியதால் தான் கோவன் இரவோடு இரவாக கைது செய்யப்படுகிறார்.

ஜெயா சினிமாவில் ஆடாத ஆட்டமா? பாடாத பாட்டா? எம்.ஜி.ஆர். உடன் சேர்ந்து எத்தனை படத்தில் பாடியிருக்கிறீர்கள், ஆடியிருக்கிறீர்கள்? இதிலில்லாத அசிங்கமா?

காவல்துறை ஆளுகின்ற அரசின் ஏவல்துறை தான். இராமநாதபுரம் துப்பாக்கிச்சூடு 12 பேர் மரணம், வச்சாத்தி வீரப்பன் தேடுதல் வேட்டையில் மலை வாழ் பெண்கள் கற்பழிப்பு, சிவகங்கை சிறுமி கற்பழிப்பு இப்படி உள்ளது காவல்துறை.

பரப்பன அக்ரஹரத்தில் 21 நாட்கள் சிறையில் இருந்தும் ஜெயாவிற்கு திமிர் அடங்கவில்லை. அந்தத் திமிரில் தான் கோவனை கைது செய்கிறார். வரலாற்றில் எத்தனை சர்வதிகாரிகள் அடக்கி ஆண்டார்கள், ஹிட்லர் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டார். ஜெயாவும் அப்படி வீசப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ரேசன் கடையில் பருப்பு கிடைப்பதில்லை, ரேசன் கடையை மூடிட்டு போயிடுறான். டாஸ்மாக் கடை 10 மணி வரை திறந்து வைக்கிறான். மண்ணெண்ணெய் பேரல் பேரலா வெளியே விக்கிறான். மக்களுக்கு கிடைப்பதில்லை. டாஸ்மார்க் சாராயம் பேரல் பேரலா விக்கிறான்.

டாஸ்மாக்கினால் தேனியில் 2 குழந்தைகளோடு தற்கொலை. இந்த அவலத்தை பாடிய தோழர் கோவனை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டச் செயலர் தோழர் காளிதாஸ் உரையில்….

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்
தோழர் வாஞ்சிநாதன்

“வ.உ.சி.யை கைது செய்த போது கலெக்டருக்கு ஒரு பக்கம் சிரைத்து விட்டு இன்னொரு பக்கம் சிரைக்க மாட்டேனுட்டான். அந்த மாதிரி இப்போது நாம் போராட வேண்டும்.

காவல் துறையும் இதை புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு மூணு கலர் வேட்டி கட்டியது போல போலீசு செயல்படக் கூடாது.

மைக் வைக்கக் கூடாது, ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்றால் காசு இருக்கிறவன் கோர்ட்டுக்கு போவான் இல்லாதவன் எங்கே போவான்.

குடி குடியை கெடுக்கும் என எல்லா இடத்திலையும் விளம்பரம் எதுக்கு புடுங்குறதுக்கா?

அரசாங்கம் ஒன்று செய்யலாம் அதிகமாக குடிக்கிறவனுக்கு வேணா பதக்கம் கொடு.  ஜெயா 21 நாள் ஜெயில் இருந்தார். இப்ப மீண்டும் அதே போல ஆட்டம் போடாதீர்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

“தொழிலாளர்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த மாட்டேன்” சொன்ன பாலைப் போல நீங்களும் சொல்லுங்க அப்போ தான் உங்களுக்கு மரியாதை” என காவல்துறைக்கு வேண்டுகோள் விட்டார். “அப்படி இல்லை என்றால் உங்களை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்” என்று எச்சரி்க்கை விடுத்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் தனது உரையில்…

“வட இந்தியாவில் மதவெறி, தமிழகம் சாதி வெறி மற்றும் சாராயத்தில் நாசமாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மக்களை காப்பாற்ற மனித நேயத்தோடு கோவன் பாடல் பாடுகிறார். அவரை சிறை வைப்பது நமது உரிமைகளை இழந்து வருகிறோம் என்ற அச்சம் ஏற்படுகிறது” என உரை நிகழ்த்தினார்.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்பேரறிவாளன் – தமிழ்புலிகள் அபை்பின் இணைச் செயலர்…..” ஜெயா யாரைப் பார்த்து பயப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கின்ற கோவனை பார்த்து நடுக்கம், பயம் வந்திருக்கிறது. அதனால் தான் அவரை கைது செய்கிறார்.

பல கட்சியினரும் காவல்துறையை மட்டும் கண்டிக்கிறார்கள், ஜெயாவுக்கு தொடர்பு இல்லாதது போல.. காவல்துறையை கைவசம் வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க முயலுகிறார் ஜெயா.. புரட்சி வெடிக்க காவல்துறை, இராணுவம் தான் காரணம். டாஸ்மாக் தடுக்கச் சொன்னால் வழக்கு போடுவது சரியல்ல.. போலீசு எதிரி இராணுவத்தை போல செயல்படுகிறது. இதற்கு எதிராக தமிழக மக்கள் பாடம் புகட்டுவோம்.. விஸ்வரூபம் எடுப்போம்” என்றார்.

பால்ராஜ் – அரசியல் நண்பர்கள் வட்டம், ராஜபாளையம் தனது உரையில்

“பச்சை மரத்தை தீ எரிக்காது. ஆனால் காட்டுத் தீ காட்டில் எவ்வளவு பச்சை மரத்தையும் எரிக்கும். கோவன் மீது போடப்பட்டுள்ள வெள்ளையர்களுககு எதிராக போராடியவர்கள் மீது பிரிட்டீஷ் அரசு போட்ட வழக்கு.. டாஸ்மாக்குக்கு எதிராக போராடுவது ஜெயாவுக்கு துரோகம் என்றால் அதை முதலில் செய்வோம்.. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிப்பது போன்று நடவடிக்கை தான் கோவன் கைது.

அந்த உரிமைகளை அம்பேத்கர் தான் உருவாக்கித் தந்தார். கோவன் பாட்டில் ஆபாசமாக உள்ளதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டத்தில் செக்ஸ் டான்ஸ் ஆடித்தானே கூட்டம் சேர்க்கிறார்கள். உங்களுக்கு இளைஞர்களைப்பற்றி கவலை இல்லை…கோவன் போன்றவர்களுக்கு கவலை இருக்கிறது” என்றார்.

kovan-arrest-madurai-demo-06கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்திராவிடர் கழகம் தலைமைக் கழக பேச்சாளர் வேங்கை மாறன் தனது உரையில்..

“அமெரிக்காவில் மக்கள் ஒழுக்கங் கெட்டவனா இருப்பான். ஆள்பவன் ஒழுக்கமா இருக்கணும்னு நினைப்பான், ஆனால் தமிழ் நாட்டில் மக்கள் ஒழுக்கமா இருப்பான், ஆள்பவர்கள் ஒழுக்கங் கெட்டவர்களா இருக்கிறார்கள்.

கோவன் கைதின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரத்தை தேடித் தந்துள்ளார்கள். 30 ஆண்டுகள் முழங்கிய குரலை 90 நாட்கள் முடக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பி உரையாற்றினார்.

கனகவேல் – சமநீதி வழக்கறிஞர் சங்கம்- மதுரை

“கோவன் பாடல் முதல்வரை கேவல்படுத்துகிறது என்கிறார்கள். எல்லா இலவசப் பொருட்களிலும் உன் போட்டாவை போட்டு கொடுக்கிற. ஊத்தி கொடுக்கிறதுக்கு நீதான பொறுப்பு..

இலக்கு வைத்து டாஸ்மாக் விற்பனை நடக்கிறது. ஜெயா தமிழ் சமூகத்தை சீரழித்தவர்” ஜெயாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர். செல்வம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் சந்திர போசு கோவன் கைதானத்திற்கு காரணமான அதே பாடலை பாடினார். பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஜெயாவின் அரசை அம்பலப்படுத்தியும், பாடலின் நோக்கத்தையும் விளக்கி எழுச்சி உரை ஆற்றினார்.

மக்கள் அதிகாரம் தோழர் குருசாமி நன்றியுரை தெரிவுத்தவுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தோழர். கோவன் கைது – கண்டன சுவரொட்டி மீது வழக்கு

தோழர் கோவன் கைதை ஒட்டி 02-11-2015 அன்று மதுரையில் காவல் துறை அனுமதியுடன் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் சுவரொட்டி தென் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. தேனி மாவட்டம் கூடலூரிலும் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த அன்று மாலை இந்த சுவரொட்டி ஒட்டியதற்காக வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல் துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடலூர் மாமி போலீஸ் தனது விசுவாசத்தை இதன் மூலம் காட்டியுள்ளது.
கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம் - போஸ்டர்

2. கடலூர்

க்கள் பாடகரும் ம.க.இ.க மையக் கலைக்குழுவின் தோழர் கோவனை கைது செய்த ஜெயாவின் அடியாள் படையான தமிழக போலீசைக் கண்டித்தும், கோவனை விடுதலை செய்யக் கோரியும், கடலூர் உழவர் சந்தை அருகில் 02-11-2015 அன்று காலை 10.30 மணி அளவில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவன் கைது - கடலூர் ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்த காவல்துறை, 01-11-2015 அன்று இரவு 9 மணிக்கு மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் பாலுவை அழைத்து, 10.00 முதல் 11.00 மணி வரை மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், முழக்கம் போடக் கூடாது, பாட்டு போடக் கூடாது, மோளம், அடிக்கக் கூடாது, ஒலிபெருக்கிக் கூடாது என்ற பல கூடாதுகளை கட்டுப்பாடாக போட்டன். மீறினால் கைது செய்யப்படும் என்று மிரட்டினார்கள்.

சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வின் மாநில அணி அமைப்பாளர் புகழேந்தி, வி.சி.க மாவட்டச் செயலாளர் தாமரைச் செல்வன், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் கடல் திபன், சி.பி.ஐ மாவட்ட இணைச் செயலாளர் குலேப், சி.பி.எம் தோழர் அமர்நாத், வெண்புறா பொதுநல இயக்கம் குமார், சாயப்பட்டறை போராட்ட குழ பூங்குன்றன், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டம் பகல் 1.30 மணி வரை நடைபெற்றது.

மக்கள் பாடகர் கோவன் கைது என்பது சாதாரண நிகழ்வல்ல, கல்புர்கி கொலை, அரியானாவின் தலித் குழந்தைகள் படுகொலை, மாட்டுக் கறி விவகாரம் என இந்திய அளவிலும், தமிழக அளவிலும் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சி நடைபெறுகிறது. இனி சாதாரண போராட்டங்களால் தீர்வு இல்லை. நமது உரிமையை காத்துக் கொள்வதுதான் ஒரே வழி.

கோவன் கைது - கடலூர் ஆர்ப்பாட்டம்கருத்துரிமை, பேச்சுரிமை இவற்றை நசுக்கும் போது அவை நிச்சயம் வேறு ஒன்றாக மாறும். அது மக்கள் அதிகாரமாகவும் இருக்கும். நாங்கள் தேர்தல் அரசியலில் இருந்தாலும் மக்கள் அதிகாரம் அமைப்புடம் கைகோர்ப்போம் என்றும் கோவன் விடுதலை ஆக வேண்டும், டாஸ்மாக் மூடப்பட வேண்டும், அதற்கான மக்கள் அதிகாரத்தின் போராட்டத்தில் இணைவோம் என்றும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட்சியினர் உரையாற்றினார்கள்.

விடுதலை செய்! விடுதலை செய்!

மக்கள் பாடகர் கோவனை
விடுதலை செய்! விடுதலை செய்!

பறிக்காதே! பறிக்காதே!
கருத்துரிமையை பறிக்காதே
பேச்சுரிமையை பறிக்காதே!
எழுத்துரிமையை பறிக்காதே!

கோவன் கைது - கடலூர் ஆர்ப்பாட்டம்ஊருக்கூரு சாராயம்
தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு
போயசிலே உல்லாசம்
தட்டிக் கேட்டால் சிறைவாசமா?

சாராயக் கடையை மூடச் சொன்னால்
தேசத் துரோக சிறைவாசமா?
அல்லிராணி ஆட்சியிலே
அய்யோ! அய்யோ! கொடுமையடா?

படிக்கப் போகுற வயசுல
குடிக்கச் சொல்லி ஊத்துறாங்க
படிக்கணுமா? குடிக்கணுமா?
கேள்வி கேட்டால் தேசத் துரோகமா?

அப்பா குடிக்க வேணாம்னு
புள்ள சொல்லி கேட்டிருப்ப
அம்மா குடிக்க சொல்லுறத
கேட்டியா? கேட்டியா?

தகவல்

மக்கள் அதிகாரம்,
கடலூர்

3. விழுப்புரம்

  • ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை! ஊழலும் சர்வாதிகாரமுமே அதன் சட்டம்!
  • என்ன செய்ய போகிறோம்?
  • தோழர் கோவனை விடுதலை செய்:
  • பொதுக்கூட்டத்திற்கு தடை! தடையை மீறி ஆர்ப்பாட்டம்
  • அதிர்ந்தது விழுப்புரம் ரயில்நிலையம்! பணிந்தது போலிசு!

கோவன் கைது - விழுப்புரம் ஆர்ப்பாட்டம்மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதினான்கு பேரின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர்களை இழிவு படுத்தும் நோக்கத்துடன் நேரடி விசாரணையின் ஒளிபரப்பை கண்டித்தும், மதுரை மாவட்ட வழக்கறிஞர்களைசங்க கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் 04-11-2015 அன்று பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு காவல்துறையிடம் 23-10-2015 அன்று அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அன்று முதல் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த காவல்துறை 04-11-2015 அன்று “உங்கள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை” என்றனர். காரணம் கேட்டதற்கு, “தமிழ்நாடு காவல் சட்டம் 30(2) அமுலில் உள்ளதாலும், நீங்கள் அனுமதி கேட்டுள்ள இடம் மக்கள் அதிகம் கூடுவார்கள், மேலும் நீதி மன்ற தீர்ப்பை திரும்ப பெற கோரி பேச உள்ளீர்கள் எனவே உங்களுக்கு அனுமதி மறுக்கிறோம் மேலும் நீதித்துறையும் நாங்களும் (போலிசும்) வேறு வேறல்ல” என்றனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் பாடும் உரிமை கூட மறுக்கப்பட்டு வரும் சூழலில் இந்தத் தடை என்பது நாம் எதிபார்த்த ஒன்று தான். இருப்பினும் நெருங்கி வரும் பேரபாயமான நீதிமன்றத்தின் பார்ப்பன பாசிச சூழலை முறியடிக்கவும், ம.க.இ.க வின் மையக்கலைகுழு பாடகர் தோழர் கோவனை விடுதலை செய்யக்கோரியும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்தோம்.. இதனைத் தெரிந்து கொண்ட காவல் துறை சரியாக 4.00 மணிக்கு ரயில் நிலைய வாயிலில் போலிசு படையை குவித்து வைத்திருந்தது.

ரயில் நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக நின்றிருந்த பொதுமக்களிடம், “இங்கே ஏன் நிற்கிறீர்கள்.. இங்கு ஒரு மிகப் பெரிய கைது சம்பவம் நடக்கப் போகிறது உடனே கலைந்து செல்லுங்கள்” என பீதியூட்டி மிரட்டியது போலிசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ரயில் நிலைய வாயிலை ஒட்டி விழுப்புரம் புதுச்சேரி பிரதான சாலையில் சரியாக 5.1௦ மணிக்கு விசில் சத்தம் வந்தவுடன், முழக்கமிட்டவாறு வந்த தோழர்களை சற்றும் எதிர்பாராத போலிசு ஓடோடி வந்து தோழர்களின் கையில் இருந்த முழக்கத்தையும், பேனரையும் கொடியையும் பிடுங்கி நம்மை அப்புறபடுத்த முயற்சித்தது. அதே நேரத்தில் இன்னொரு திசையிலிருந்து முழக்கமிட்டவாறே வந்த தோழர்களை பார்த்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்த போலிசு, தோழர்களின் சாலை மறியலை உடனடியாக தடுக்க முடியவில்லை. விழுப்புரம்-புதுச்சேரி பிரதான சாலையில் மறியல் தொடங்கியதும் போக்குவரத்து இருபுறமும் ஸ்தம்பித்தது.

கோவன் கைது - விழுப்புரம் ஆர்ப்பாட்டம்ஒரு கட்டத்திற்குமேல் சுதாரித்த போலிசு தோழர்களிடம் இறங்கிவந்து பேசிக்கொண்டே, தள்ளுமுள்ளுவையும் தொடங்கியது. போக்குவரத்து நெருக்கடி அதிகரித்ததும் போலிசு முற்றிலும் இறங்கி வந்து, “நீங்கள் உள்பக்கம் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொள்ளுங்கள்” என்று அனுமதி கொடுத்தது. அதற்குள் மக்கள் சுற்றிலும் திரண்டு நிற்க ஆரம்பித்தனர். மைக் செட் இல்லாமலேயே தோழர்களின் முழக்கம் சுற்று வட்டாரப் பகுதியையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

அனைத்து பத்திரிகை தொலைகாட்சிகளும் நம் மறியலை, அதன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தை செய்தியாக சேகரித்தனர். மக்கள் அதிகாரம் திருவெண்ணெய் நல்லூர் வட்டார ஒருங்கிணைப்பாளர், தோழர்.ஏழுமலை பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கையில் “நீதித்துறையின் ஊழலை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டிருந்தோம். காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. மேலும் டாஸ்மாக்கினால் லட்சக்கணக்கான மக்கள் வக்கற்றவர்களாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் கடந்த நான்கு மாதமாக மக்கள் அதிகாரம் சார்பில் டாஸ்மாக்கை மூடக்கோரி பிரச்சாரம் செய்து வருகிறோம்.

கோவன் கைது - விழுப்புரம் ஆர்ப்பாட்டம்இந்த நிலையிலே ஜெயாவின் இழிவான ஆட்சியையும், டாஸ்மாக்கை மூடக்கோரியும் ம.க.இ.க வின் மையக்கலை குழு பாடகர் தோழர் கோவன் பாடல் மூலம் மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்தார். அவரை அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் பாடினார் என கைது செய்து புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.. டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி டாஸ்மாக்கை மூடு வரை மக்கள் அதிகாரம் போராடும்” என்றார்.

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் கடலூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு பேசுகையில், “பெரும்பான்மை மக்களின் குடியை கெடுக்கும் பாசிச ஜெயா அரசு வெறிபிடித்த போலிசை ஏவிவிட்டு டாஸ்மாக்கை மூடக்கோரி பாடல் மூலம் பிரச்சாரம் செய்த தோழர் கோவனை கைது செய்துள்ளது. உடனடியாக அவரை விடுதலை செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கட்சியினரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.. நூற்றுக்கணக்கான மக்கள் ஆங்காங்கே நின்று ஆர்ப்பாட்டத்தை ஆர்வமாக கவனித்தனர்.

இவண்

மக்கள் அதிகாரம்,
விழுப்புரம். தொடர்புக்கு; 99441 17320

4. தருமபுரி

மூடு டாஸ்மாக்கை என்பது தேசத் துரோகமா? ம.க.இ.க புரட்சிகர பாடகர் தோழர் கோவனை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய் என்ற முழக்கத்துடம் பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் மக்கள் அதிகாரம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம்,
தருமபுரி

ஓபன் த டாஸ்மாக் பாடினால் வரிவிலக்கு X மூடு டாஸ்மாக் பாடினால் சிறை

0

kovan-arrest-prpc-chennai-cartoon

kovan-arrest-people-power-virudai-notice-2“மூடு டாஸ்மாக்கை மூடு” “ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்” என்று பாடிய ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் மீது தேச துரோக வழக்கு – சிறை!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடுவது தேச துரோகம் என்றால் இந்த தேசத் துரோகச் செயலைச் செய்ய அனைவரும் தயாராவோம்! வீதிகள் தோறும் உரக்கப் பாடுவோம்! டாஸ்மாக்கை மூடும் வரை பரப்புவோம்!

மக்கள் அதிகாரம் பொருளாளர் தோழர் காளியப்பனை துரத்துகிறது தனிப்படை!

போராடும் மக்களின் மண்டையை உடைக்கிறது பாசிச ஜெயா அரசு!
அஞ்ச மாட்டோம்! டாஸ்மாக்கை மூடும் வரை ஓயமாட்டோம்!

மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
விருத்தாசலம் – 97912 86994

யார் குற்றவாளி ? அவதூறுகளுக்குப் பதிலளிக்கிறார் தோழர் மருதையன்

7

தமிழகத்தில் மாஃபியா ஆட்சி பாகம் -2

தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.

 

 

SUPPORT US