Tuesday, May 20, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கபாசிச மோடிக்கு எதிராக லண்டன் எழுச்சி !

பாசிச மோடிக்கு எதிராக லண்டன் எழுச்சி !

-

ன்றைய நிலையில் நாடு எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ பாசிசத்தை மக்கள் இனங்கண்டு அங்கங்கே தன்னெழுச்சியாக எதிர்த்துப் போராடிவருகிறார்கள். இது இன்றைக்கு உலகம் முழுவதும் வீச்சாக செல்லும் பொருட்டு மோடியின் இலண்டம் பயணம் வரலாற்று இழிபுகழாக வந்து நிற்கிறது.

எழுத்தாளர்கள் கொல்லப்படுவது, மாட்டுக்கறி அரசியல், மைஅடிப்பது, வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, தலித்துகளை உயிரோடு எரிப்பது, அண்டை நாடான நேபாளத்தில் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என அத்துணை அரசபயங்கரவாதத்திற்கும் எதிராக இலண்டன் மக்களின் எழுச்சி இன்றைக்கு பாசிச மோடியை காறித்துப்பிக்கொண்டிருக்கின்றன. இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்கும் பொருட்டு சமூகத்தின் பரந்துபட்ட சனநாயக குரல்கள் எழுப்பும் எழுச்சி மிகு முழக்கங்களும் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின் குரல்களும் வாசகர்களின் பார்வைக்கு இங்கே புகைப்படங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்ற வளாகம்
பிரபலமான பிக் பென் கோபுரத்துக்கு அருகில் நாடாளுமன்ற வளாகத்தின் மீது நரேந்திர மோடியின் ‘நெகடிவ்’ பிம்பம் காட்டப்பட்டது.
தல் கால்சா
தல்-கால்சா என்ற சீக்கிய அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படம்.
10, டவுனிங் தெரு
பிரிட்டிஷ் பிரதமர் இல்லம் அமைந்துள்ள 10, டவுனிங் தெருவுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்.
Stop-Facism
“மோடியை தடுப்போம்! பாசிசத்தை தடுப்போம்” – லண்டன் பாலஸ்தீன இயக்கத்தின் ஆதரவு
Stop-Meddling-in-nepal
“நேபாளத்தில் மூக்கை நுழைப்பதை நிறுத்து, நேபாளத்தின் மீதான பொருளாதார தடையை நிறுத்து”
Nepalis-on-Modis-inhumanness
“நேபாளத்தின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்து”

Nepali-Protestors

Shame-on-modi
“பாலியல் வன்முறை, கலவர குற்றவாளி சஞ்சீவ் பலியானுக்கு மோடி அமைச்சரவையில் பதவி.”
"பா.ஜ.க-வின் இரத்தக் களறி செயல்திட்டம்"
“பாப்ரி முதல் தாத்ரி வரை – பா.ஜ.க.வின் இரத்தக் களறி செயல்திட்டம்”
குஜராத் படுகொலைகள் - 2002
“மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி மோடி – குஜராத் படுகொலைகள் – 2002”
Modi-is-Murder
“மோடி ஒரு கொலைகாரன்”
Modi-is-Butcher
“மோடி – குஜராத்தின் கொலைகாரன்”
Modi-Hilter
“சதித்திட்டம்”
Modi-Go-back
“மனித குலத்துக்கு எதிரான மோடியின் குற்றங்கள் – குஜராத் படுகொலை 2002, இந்தியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல், குரு கிரந்த் சாஹிப்ஜி இழிவுபடுத்தப்பட்டது – சீக்கியர்கள் கூட்டமைப்பு”
Mass-murdr-II
“மோடிக்கு எதிராக குஜராத்திகள், தமிழர்கள், காஷ்மீரிகள்”
Mass-Murder-Modi-not-welcome
“இனப்படுகொலையாளி மோடி, திரும்பிப் போ”
Ehsan-jafri-Not-Forgetten
“குஜராத் படுகொலைகளை மறக்கவிலை, ஈசான் ஜாஃப்ரியை மறக்கவில்லை”
Kashmir-People
“காஷ்மீரில் படுகொலைகளை நிறுத்து, மோடி திரும்பிப் போ”
India-is-Bharat-not-Hinduism
“இந்தியா இந்து நாடு அல்ல”
Hindutuva-threaten-india
“இந்துத்துவா இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல்”
Standing-against-SC-discrimination
“தலித்துகளுக்கு எதிரான கொள்கையை எதிர்த்து”
Modi-Not-Welcome
“மோடி, திரும்பிப் போ”
End-Caste-opression-End-BJP-rule
“சாதிக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம், பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவோம்”
Caste-system-is-worst-than-apartheid
“சாதி அமைப்பு நிறவெறியை விட மோசமானது, மோடி திரும்பிப் போ”

– தொகுப்பு: இளங்கோ

  1. ……. என்றாலே வள்ளல் , கொடையாளி , நல்லவர் என்று ஊடகங்கள் திரும்ப திரும்ப மூளை சலவை செய்துள்ளது போல , மோடி என்றாலே கலவரம் செய்தவர் என்று முத்திரை குத்த பார்கிறார்கள் .

    மோடி மதம் பற்றி பேசுவது இல்லை வளர்ச்சி மட்டும் பற்றி பேசுகிறார்.ஆனாலும் மதம் பற்றி மக்களை பேச வைத்து பின்னர் குஜராத் கலவரம் பற்றி பேச வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் , போர்டு பவுண்டேசன் போன்ற குழுக்கள் தீவிரமாக உள்ளன.

    காலிஸ்தான் கூட்டத்திற்கு இந்தியாவில் குருதுவாராக்கள் சர்ச்கள் தாக்கபடுகிறன என்று கூறி தங்கள் இருப்பை நியாயப்படுத்த வேண்டி உள்ளது.

    நேபாளத்தில் உண்மையில் மக்கள் தர்ணா செய்வதால் இந்தியா ஆயில் அனுப்பவில்லையா அல்லது இந்தியா நேபாளத்தின் புதிய அரசியலமைப்பை ஆதரிக்கவில்லையா என்பதை பற்றி நான் இன்னும் விரிவாக படிக்கவில்லை ..

    ஜாதியை பற்றிய பதாகைகளை, ஜாதி பார்த்து வேட்பாளர் தேர்வு செய்யும் கலிஞர் ஐயாவுக்கு கூட காட்டலாம்

    அது சரி இராக் மீது குண்டு போட்ட கமரூன் அவரிடம் போய் நியாயம் கேட்கிறீர்களே ?

    • சூத்திரப் பெண்குறியில் பிறந்தான் என்ற ஒரே காரணத்திற்காக – தவம் செய்த சம்பூகனை வதம் செய்த (அ)யோக்கிய சிகாமணியின் பெயர் கொண்டவரே ..

      குஜராத் கலவரத்தை தூண்டி விட்டது மட்டுமின்றி அக்கலவரத்தை அமைதியாக வேடிக்கை பார்க்கும் படி அரசின் அத்தனை உறுப்புகளுக்கும் உத்தரவு போட்டு, எதிரான வழக்குகளில் மண்ணைப் போட்டு, 1000 கோடி செலவில் விளம்பரம் போட்டு பிரதமர் ஆகியிருக்கும் மோடி என்றொரு இழி பிறவியை எந்த இனத்தோடும் (விலங்குகள், ஊர்வன, புழு,பூச்சி) ஒப்பிட்டால் அந்த இனமே அவமானப் பட்டு கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுமோ என்ற அச்சத்தில் மிகச் சரியாக ஹிட்லரோடு ஒப்பிட்டிருக்கும் அழகை பாராட்ட உங்களுக்கு ஏன் மனமில்லை. ஹிட்லரும் மாட்டுக் கறி சாப்பிடுவதில்லை. சுத்த சைவம் தான். சாதாரண படை வீரனாக இருந்து மேலே வந்தவன் தான். நல்ல பொருத்தம் தான்.

      போர்டு பவுண்டேசன் கிடக்கிறது வெங்காயம் .. ஆர்.எஸ்.எஸ் ஃபவுண்டேசன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் இலண்டன் ஆழ் மக்களுக்கு இலவச அனுமதியோடு, மோடிக்கு ஜாக்கி தூக்க செய்த ஏற்பாட்டை விடவா பெரியது ஃபோர்டின் உள்ளடி வேலை. இப்படி ஜாக்கி வைத்து தூக்கித் தூக்கியே டெல்லி தேர்தலிலும், பீகார் தேர்தலிலும் உச்சத்திலிருந்து குப்புறத் தள்ளி விட்டீர்கள் அந்தக் கிரிமினலை. இன்னும் திருந்தவில்லை. சரி பரவாயில்லை,
      பஞ்சாபியர்கள் மட்டுமா , காஷ்மீரிகள் கூடத் தான் கேட்கிறார்கள், நீங்கள் யாரடா என் தேசியத்தை நிர்ணயிப்பதற்கு என்று ?. மானமுள்ளவர்கள். பெண்டாட்டியை சந்தேகப்பட்டு தீக்குள் இறங்கச் செய்த கிரிமினலை தெய்வமாக மதிக்கும் நாட்டில் தன்னை இணைத்துக் கொள்ள யாருக்குத் தான் மனம் ஒப்பும் ? நீங்களே சொல்லுங்கள்.

      நேபாள மக்களே காறி உமிழ்ந்த பிறகும் மறுத்துப் பேச வழியில்லை என்பதாலேயே விரிவாக படிக்க மனம் ஒப்பவில்லை போலும், பரவாயில்லை. வினவின் பழைய நண்பர் அதியமானின் சாயல் தெரிகிறது.

      ஜாதி பார்த்து அம்மா வேட்பாளர் நிறுத்துவதில்லையா ?. குறிப்பாக கலிஞர் நொய்யாவை மட்டும் குறிப்பிடுவதிலிருந்தே இந்து ராஸ்ட்ரத்தை எதிர்த்து நிற்கும் பெயரளவிலான மதச்சார்பினமையையும் குச்சி வைத்து க் கொண்டு “சூ .. சூ.. போ… ” என விரட்டும் வெங்கன வீரர் தாங்கள் என்று தெரிகிறது.

      நல்லது ..

      மோடி வாழ்க .. அவர் புகழ் வாழ்க ..

    • திருவாளர் மோடியின் மதவாத, மாட்டுக்கறி அரசியல் பீகார் தேர்தல் பிரச்சாரங்களை மறந்து விட்டு அவரை வளர்ச்சியின் நாயகனாக போலி பிம்பமாக காட்சிப்படுத்துவதில் என்ன லாபம் உங்களுக்கு திருவாளர் இராமன் ?

    • சமீபத்தில் நேபால் சென்று வந்தேன். அங்கு இந்திய அரசின் மேல் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நேபாளின் புதிய அரசியலமைப்பை இந்தியா எதிர்ப்பதற்காக வேண்டுமென்றே பெட்ரோல் மற்றும் அனைத்து பொருட்களும் இந்தியாவிலிருந்து செல்ல தடை விதித்திருப்பதாக நேபாளிகள் நம்புகின்றனர். முக்கியமாக மோடியின் மேல் கடும் கோபமாக உள்ளனர். மோடி நேபாலுக்கு முதன்முறையாக சென்றபோது அதே மக்கள் மோடியை வேண்டி வரவேற்றார்கள். ஆனால் நிலைமை இப்போது வேறு விதமாக உள்ளது. ஒட்டு மொத்த வியாபாரமும் ஸ்தம்பித்துள்ளது. ரோடுகளில் மைல் கணக்கில் பெட்ரோலுக்காக கியூவில் மக்கள் நிற்கிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் ஐந்நூறு நேபால் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சீனா நேபாலுக்கு உதவ முன்வந்தாலும், சீன வழியில் பனிபொழிவு காரணமாக சாலைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

      இப்படியே போனால் இந்தியா ஒரு நட்பு நாடை இழக்க வேண்டி வரும்.

      • நன்றி கற்றது கையளவு . நேபாள மக்கள் அவ்வாறு நினைகிறார்கள் என்பதை அறிவேன். அது எந்த அளவு உண்மை ?
        எல்லையில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் சாலை மறியல் செய்கிறார்களா ? இல்லை நேபாள அரசாங்கம் மக்கள் கோபத்தை திறப்பி விட்டு இருக்கிறதா ?
        இல்லை இந்திய அரசாங்கம் அவர்களின் புதிய அரசமைப்பை விரும்பாமல் அவ்வாறு செய்கிறதா ? அப்படி என்றால் இந்திய அரசுக்கு என்ன லாபம் ? ஏன் அவாறு செய்கிறது. அரசாள்பவர்களின் சாதி மத பற்று காரணமாக செய்கிறார்களா ? என்று பல கேள்விகள் எழுகின்றன .

        வேலை பளு காரணமாக இன்னும் படிக்கவில்லை . அழகு தமிழில் வினவுவில் ஒரு கட்டுரை எதிர்பார்கிறேன்

        நட்பு நாடு என்பதால் இலங்கை/நேபாளம் செய்யும் தவறுகளை ஏற்று கொள்ளவேண்டும் எனபது அல்ல .

        • நேபாளின் புதிய அரசியலமைப்பின் மூலம் இந்தியர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்று இந்திய அரசு கருதுவதால் இந்த எல்லையோர தடை மூலம் நேபாள அரசின் கையை முறுக்கி அவர்களை வழிக்கு கொண்டு வந்து விட முடியும் என்று இவ்வாறு இந்தியா (மோடி) செய்வதாக நேபாள மக்கள் கருதுகின்றனர். அன்றாட வாழ்க்கை, வணிகம் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தை இந்தியா ஒரு பெரியண்ணன், சின்னதம்பி என்ற ரீதியில் நடத்துவதால் அம்மக்கள் சில வருடங்களாகவே இந்தியா மேல் சற்று கடுப்பாகவே இருந்துள்ளனர். சமீபத்திய தடையின் மூலம் அது இந்திய அரசின் மேல் கோபமாக வெட்டவெளிச்சமாக தெரிகிறது. நேபாள நாடு இந்திய பொருட்களை 9௦ சதவீதம் எதிர்பார்த்திருப்பது இந்த பிரச்சினையின் தீவிரத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. டெமரேஜ் கட்டணங்கள் எல்லாம் பல இலட்சங்களை தாண்டி வணிகம் அனைத்தும் முற்றிலும் நொறுங்கி உள்ளது. ஏற்கனவே அங்கு இந்திய ஊடகங்கள் செய்த கூத்தினை கண்டு அவர்கள் வெறுப்பினால் இருந்தனர். இப்போது இன்னும் மோசம்.

          இந்த பிரச்சினை ஒரு குறிப்பிட்ட சாதியினரலால் உருவானதாக எனக்கு தெரியவில்லை. இரு அரசுகளின் பிடிவாதமே இதற்கு காரணம்.

          வீம்புக்கு இரு அரசுகளும் முஷ்டியை மடக்கியதால் அப்பாவி மக்கள் தான் மிகவும் தொல்லைக்கு உண்டாகிறார்கள். நேபாள அரசு இந்தியாவுடன் பேசுவதற்கு அதன் ஈகோ தடுக்கிறது. இந்தியாவும் இந்த பிரச்சினையை பெருந்தன்மையோடு அணுகாமல் பெரியண்ணன் ரீதியில் நேபாள அரசே தானாக தனது காலில் விழும் என்று காத்திருக்கிறது.இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதோ கிடைத்தது வாய்ப்பென்று சீனாவும் சந்தடி சாக்கில் தனது எல்லைகளை திறந்து எரிபொருட்களையும் மற்ற பொருட்களையும் நேபாளுக்குள் இறக்குகிறது. அது இந்தியாவுக்கு நல்லதல்ல.

          இலங்கை விடயம் வேறு விதமானது. அங்கு இந்திய அரசு ஆக்கபூர்வமாக இருதரப்பினருக்கும் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக இலங்கை அரசுடன் கைகோர்த்து இராணுவ உதவி செய்து அங்கிருக்கும் தமிழர்களுக்கு பேராபத்தை விளைவித்தது. இலங்கை செய்யும் தவறினை இந்தியா சரியாக எதிர்கொள்ளவில்லை என்பது என் கருத்து.

    • \\மோடி மதம் பற்றி பேசுவது இல்லை//

      ஏன் பேசவில்லை.மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மோதவிடும் சங் பரிவாரின் அயோக்கியத்தனத்தை தொடர்ந்து அவர் செய்து வருகிறார்.இப்போது கூட பீகார் தேர்தல் பரப்புரையின்போது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலிருந்து ஐந்து விழுக்காட்டை திருடி முசுலீம்களுக்கு வழங்க லாலு நிதீசு சதி செய்வதாக எந்த ஆதாரமும் இன்றி பொய் பேசினார்.இது இரண்டு சமூக பிரிவுகளுக்கிடையே பகை வளர்க்கும் கயமை இல்லையா.நியாயமாக பார்த்தால் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.இது மதவாதம் இல்லையா.இப்படி பொய்யும் புரட்டும் பேசுகிற மோடியை வளர்ச்சியின் நாயகன் என பம்மாத்து காட்ட வேண்டாம்.இது 2014 இல்லை.2015.”ரீல்”அறுந்து ஓராண்டுக்கு மேல ஆவுது.இன்னும் ராமன்கள் அதை ஓட்டுவது கண்றாவி.

      \\காலிஸ்தான் கூட்டத்திற்கு இந்தியாவில் குருதுவாராக்கள் சர்ச்கள் தாக்கபடுகிறன என்று கூறி தங்கள் இருப்பை நியாயப்படுத்த வேண்டி உள்ளது.//

      பிற மத வழிபாட்டு இடங்களை இந்து மத வெறியர்கள் தாக்குகிறார்களா இல்லையா.அதற்கு நேர்மையாக பதில் சொல்லுங்கய்யா.அப்புறம் காலிசுதானுக்கு போவலாம்.

      \\நேபாளத்தில் உண்மையில் மக்கள் தர்ணா செய்வதால் இந்தியா ஆயில் அனுப்பவில்லையா அல்லது இந்தியா நேபாளத்தின் புதிய அரசியலமைப்பை ஆதரிக்கவில்லையா என்பதை பற்றி நான் இன்னும் விரிவாக படிக்கவில்லை ..//

      அதானே, பூனை கண்ணை மூடினால்தானே உலகம் இருளும். நண்பர் கற்றது கையளவு இந்த பூனைக்கு தக்க சூடு போட்டிருக்கிறார்.அவருக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்.

    • உழைத்து வாழும் டீக்கடைக்கடை தொழிலாளார்களை கார்ப்பரேட் நாயகன் மோடியுடன் ஓப்பிடவேண்டாமே.

  2. இந்திய ஊடகங்களில் 2002 ஆண்டு படுகொலை பற்றிய கேள்விகளை கண்டு விலகி ஓடிய திருவாளர் மோடி அவர்கள் பிரிட்டன் ஊடகங்களிடம் பசப்பல் வார்த்தைகளில் பதில் அளித்து உள்ளார்.

    திருவாளர் நரேந்திர மோடியின் மீதான பிரிட்டன் ஊடகங்களின் நேற்றைய விமர்சனங்கள் :

    டெய்லி டெலிகிராப் பத்திரிகை:

    “Pomp and ceremony for an ex-pariah”
    ‘அனைத்தும் மன்னிக்கப்பட்டது, மிஸ்டர் மோடி’

    தி டைம்ஸ் பத்திரிகை:

    நரேந்திர மோடியின் கடந்த கால மனித உரிமை மீறல்களையும் கடந்து பிரிட்டன் இந்தியாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது என்று டேவிட் கேமரூன் வலியுறுத்தினார்

    தி கார்டியன்:

    பலத்த பாதுகாப்பு மற்றும் வரவேற்கத் தகாத நபருக்கு கேமரூனின் புகழுரை”

    நன்றி : தமிழ் இந்து நாளிதழ்

  3. @இனியன்,அனானியன்

    மோடி கலவரத்தி முன்னின்று நடத்தினார் என்று கூறுபவர்களுக்கு , அரசாள அணைத்து விதமான மக்களும் வருவார்கள். அரசியலமைப்பு எனபது அது போன்ற நபர்கள் தன்னிச்சையாக அதிகாரம் செலுத்துவதை தடுக்கவே ஏற்படுத்தப்பட்டது .

    இந்திய ஜனநாயக அமைப்பையே குறை சொல்லுகின்றீர் என்றால் , ராணுவத்தையே நேரடியாக ஆள்பவர் கையில் வைத்திருக்கும் கம்யூனிச அமைப்பில் அப்படி ஒருவர் வந்தால் என்ன ஆகும் ? அந்த அமைப்பு அணைத்து மக்களை எப்படி காக்கும்? அவர்கள் வைத்து தான் சட்டம் எதிர்த்து பேச முடியாது . போராட்டம் பண்ணவும் முடியாது .
    _____________
    இப்போழ்து குஜராத் கலவர கையாளுமைக்கு வருவோம் .
    BJP குஜராத் கலவரம் , ING சீக்கிய கலவரம் , DMK கோவை கலவரம் , UP முப்ப்சன்கர் கலவரம் என்று நான்கு சம்பவங்களை எடுத்து ஒரு ஒப்பீடு தயாரியுங்கள் .

    கலவரம் எத்துனை மணிக்கு ஆரம்பித்தது ?
    எத்துனை மணியில் கலவரம் கை மீறி போனதை அரசாங்கம் உணர்ந்தது ?
    எத்துனை மணியில் கண்டதும் சுட உத்தரவு தந்தது?
    எத்துனை பேர் கண்டதும் சுடும் உத்தரவால் சுடபட்டார்கள் ?
    எபொழுது அருகாமை மாநிலங்களின் உதவி கோரப்பட்டது ? கிடைத்த உதவி என்ன ?
    ராணுவ உதவி கோரபட்ட்து எப்போது ?
    எவ்வளவு விரைவில் ராணுவம் களத்தை அடைந்தது ? தாமதமாக சென்றதா ? ஏன் தாமதம் ?
    கலவரம் செய்தவர்கள் எத்துனை பேர் கைது செஇயபட்டர்கல் ?
    எத்துனை பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது ? தண்டனையில் இருந்து தப்பும்படி ஏப் ஐ யார் போடப்பட்டதா ?
    இது போன்ற ஒவ்வொரு ஆளுமையிலும் முதல்வரின் பங்கு எவ்வளவு , அதிகாரிகள் பங்கு எவ்வளவு?

    ஒரு ஒப்பீட்டு எக்சல் சீட்டை தாய்ரியுங்கள். மீண்டும் அது போன்ற ஒரு தீய சக்திகள் கலவரம் செய்தால் , என்னென்ன மாற்றம் செய்தால் அமைப்பு வலு பெரும் என்று கூறுங்கள்.

    அதை விடுத்தது, மோடி மோசம் என்று கல் எரிந்து கொண்டு இருந்தால் பயன் யாதும் இல்லை.

    • யார் இந்த இராமர் ?

      சீதையை தீக்குளிக்க சொன்ன நல்லவரா?

      அல்லது

      அகலிகையை உயிர்பித்த கெட்டவரா?

      கூனியின் முதுகில் பந்து எரிந்த நல்லவரா?

      அல்லது

      பரதனை அரசாள அனுமதித்த கெட்டவரா?

      நல்லதும் கேட்டதும் கலந்த கலவை தானே இந்த மானுட ராமனும் அந்த அவதார ராமனும்.

    • ரெம்ப தம் கட்ட வேண்டாம்.பா.ச.க.வின் யோக்கியதை அம்பலப்பட்டு வருகிறது.காங்கிரசுக்கோ தி.மு.க.வுக்கோ கலவரம் நடத்தி சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை கொல்வது கொள்கையோ செயல்திட்டமோ இல்லை.பா.ச.க.உள்ளிட்ட சங் கும்பலின் முழுநேர வேலைத்திட்டமே முசுலிம்,கிருத்துவர்,தலித் களுக்கு எதிராக கலவரம் நடத்துவதும்,கலவரம் இல்லாத காலங்களில் அதற்கான தயாரிப்புகளை பொய்கள்.கட்டுக்கதைகள் மூலம் செய்வதுதான்.

      மற்ற கட்சிகளும் பா,ச,க,போலத்தான் என காட்ட பெரிசா நீட்டி முழக்கி பயனில்லை.

      • வாய் வார்த்தையில் சர்டிபிகேட் கொடுக்காமல் , எக்சல் சீட் தயாரித்து காங்கிரஸ் கலவரத்தில் இருந்து மக்களை காப்பாற்றியது என்று காண்பியுங்களேன் ?

        அதே போல காங்கிரஸ் எப்படி சிறப்பாக பணியாற்றியது , பீ ஜே பீ எங்கே கோட்டை விட்டது என்பதையும் அது எல்லோருக்கும் எடுத்து காட்டும் அல்லவா

        • காங்கிரசே ஒரு பார்ப்பனிய இந்துத்துவ இந்து மதவெறி கட்சிதான்.1949-ல் பாபர் மசூதியில் கள்ளத்தனமாக இந்து தெய்வ சிலைகளை வைத்தது முதல் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அன்றைய உ,பி.முதல்வர் பந்த் மீது நடவடிக்கை எடுக்காமல் துணை போன நேரு,1986-ல் அந்த சிலைகளை வழிபட பூட்டிக்கிடந்த மசூதியை திறந்து விட்டது ,1989 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை அயோத்தியிலிருந்து துவக்கிய ராஜீவ் என காங்கிரசின் இந்துத்துவ சார்பு நாடறிந்தது.மண்டல் ஆணைய அறிக்கையை அமுல்படுத்தாமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக குப்பைக்கூடையில் போட்டு வைத்திருந்த அதன் பார்ப்பனிய சார்பையும் நாங்கள் அறிவோம்.இடையில் தேசிய முன்னணி.ஐக்கிய முன்னணி ஆட்சிகள் ஒரு சில ஆண்டுகள் வராமல் போயிருந்தால் மண்டல் அறிக்கை இன்று வரை அந்த கூடையிலேயே கிடந்திருக்கும்.

          அதனால் காங்கிரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நான் முட்டாளாக இருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம்.அதே சமயம் பா,ச,க மாதிரி கலவரம் நடத்தி காங்கிரசு செல்வாக்கு வளர்ப்பதில்லை.ஏனெனில் மத,சமூக நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பாலான மக்களின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரசு இந்துத்துவத்தை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக அமுல்படுத்துகிறது.அதாவது பா.ச.க.வின் பார்ப்பனியத்தை எதிர்க்கும் இடத்திலும் காங்கிரசின் வடிவில் பார்ப்பனியமே உட்கார்ந்திருக்கிறது.

          • I would rather see the facts arranged in excel sheet than argue here and there. Event order will reveal the fact which govt tried to protect the citizen and which one intentionally not.

            • இதுதான் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது.திருவாளர் ராமன் நீட்டி முழக்கி என்ன சொல்ல வருகிறார் என்றால் மோடி அரசு கலவரத்தை கட்டுப்படுத்த முனைந்து பாடுபட்டது என்கிறார்..அவரது கூற்றுப்படியே பார்த்தாலும் அப்படி முனைந்து காப்பாற்றியதில் மூவாயிரம் முசுலிம்கள் கொல்லப்பட்டார்கள்.அதாவது operation success.patient dead.

              அந்த excel sheet ஐ இவரு தயார் பண்ணி பா.ச.க.கலவரத்தை எப்படி கட்டுப்படுத்தியது என காண்பிக்க வேண்டியதுதானே.தனது வாதங்களை வலுப்படுத்த தேவையானவற்றை தாமேதான் செய்ய வேண்டும்.எதிராளி தயார் பண்ணி வாழைப்பழத்தை உரித்து வந்து ஊட்டணுமாமா இவருக்கு.

              • It is all about attitude. Whether you want to see the information and make a judgement or just go with the crowd.

                //இதுதான் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது//
                Is this what you call about bringing the information on par for comparison ?

                I am not here to certify BJP. I wanted to see how the govt machinery works during tough time and which govt used the machine effectively to protect the citizen.

                You can keep on blaming individuals for mismanagement or fix the system to keep individuals in check.

  4. இராமன் , நீங்கள் எழுப்பிய விவாதத்தை முதலில் இருந்து இறுதி வரையில் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். அப்போது உங்கள் சிந்தனை தடுமாற்றங்கள் புலப்படும். மோடியின் மீது கலவரம் செய்தவர் என்ற முத்திரையை குத்த பார்கின்றார்கள் என்று புலம்பலுடன் தொடங்கிய உங்கள் விவாதம் இறுதியில் பிஜேபிக்கு நீங்கள் சான்றிதழ் அளிக்கவில்லை என்று தப்பும் மனப்பான்மையுடன் தானே முடிகின்றது. மோடியின் வானரபடைகள் மத சிறுபான்மை மக்களை குஜராத்தில் கொன்று குவித்த படுகொலை நிகழ்விற்கு பதில் கேட்டால் ஜனநாயக, கம்யுனிசம் என்று பிதற்ருகின்றிர்கள். பிரசனை அதுவல்ல.. அரசியல் அமைப்பு எதுவாயினும் அதில் சிறுபான்மையினர் பாதுகாகப்ப்டவேண்டும் என்ற உண்மை உங்கள் பேரறிவுக்கு புலப்படாத மர்மம் என்னவோ? திப்பு பற்றிய கட்டுரையில் வாஞ்சிநாதன் பற்றிய விவாதத்தில் இருந்து நீங்கள் பதில் இன்றி விலகியதால் நான் இங்கு வந்து பேசவேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகியது.

    மோடி தன் அமைச்சர்களை அனுப்பி குஜராத் படுகொலையை நிகழ்த்தியவர் என்ற செயலின் மூலம் அவர் ராஜா நெறிகளை சிறிதும் மதிக்க வில்லை என்பது உண்மை என்றாகின்றது.

    • //மோடி தன் அமைச்சர்களை அனுப்பி குஜராத் படுகொலையை நிகழ்த்தியவர் என்ற செயலின் மூலம் அவர் ராஜா நெறிகளை சிறிதும் மதிக்க வில்லை என்பது உண்மை என்றாகின்றது.//

      உங்க மனசுக்கு தோணியதை எல்லாம் எழுதி, இப்படிதான் இருக்கும் என்று தீர்ப்பு எழுதி மகிழ்வதற்காக இருந்தால், நீங்கள் பாலபிசேகம் செய்யும் தொண்டன் போன்ற மன நிலை கொண்டவர். ஊருல எல்லோரும் பண்றாங்க நாமளும் பண்றோம் என்னும் எளிய மனிதர்.

      முழு தகவலும் வைத்து ஒப்பீட்டு ரிப்போர்டை தயார் செய்யுங்கள் என்கிறேன் .ஒரு முதலமைச்சர் , தன இஷ்டப்படி அமைச்சர்களை அனுப்பி படுகொலை செய்தார் என்றால் நம் அரசியல் அமைப்பு முற்றிலும் வீணானது.

      பல கலவரங்கள் நடந்து 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் . இதில் குஜராத் கலவரம் எப்படி தனித்துவம் பெறுகிறது . ஏன் கலவரங்கள் நடக்கும் போது அரசு இயந்திரம் முடியவில்லை போன்றவை அலசப்பட வேண்டும் .

      அவர் பாட்டிக்கு நூறு ரூபாய் கொடுத்தார் அதனால் கொடையாளி என்னும் அளவில் சிந்திப்பவர்களுக்கு புரியாது.

      வாஞ்சிநாதன் பற்றி என்ன விவாதம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர் ? ஒரு நிகழ்ச்சிக்கு பல அர்த்தங்களை கற்பிதம் செய்து கொண்டு அதற்கு மற்றவர்கள பதில் கூறி தெளிய வைக்க வேண்டும் என்று எதிர்பார்கிரீரா ?

      //அரசியல் அமைப்பு எதுவாயினும் அதில் சிறுபான்மையினர் பாதுகாகப்ப்டவேண்டும் என்ற உண்மை உங்கள் பேரறிவுக்கு புலப்படாத மர்மம் என்னவோ?//

      படிக்கும் போது கருத்தின் சாராம்சம் என்ன என்பதை புரிந்து கொள்ள மயற்சி செய்யுங்கள். நுனிப்புல் மேய்ந்து வசை பாடாதீர்கள

      • தம்பி இராமரு , என்னாத்த பதில் எழுதி கடுதாசி போட்டு இருக்கிங்க.? சுத்த மோசம். வெவரமும் இல்ல …, விசயமும் இல்லை. சரி அந்த 2002 குஜராத் முஸ்லிம் படுகொலை கொலை கேசுல கொலைகார மந்திரி பேரு Maya_Kodnani என்பதாவது தம்பிக்கு அம்பிக்கு இராமருக்கு ஞாபகம் இருக்கா இல்லைலையா? 28 வருடம் மோடியின் மந்திரி படுகொலை கேசுல உள்ளாற போறாரு தம்பி. அதுவும் அந்த கொலைகார அக்கா, மோடியோட தங்கச்சி Maya_Kodnani. இந்த அளவுக்கு நான் புள்ள ஆழமா மேஞ்சா போதுமா இல்ல இன்னும் ஆழமா மேயனுமா தம்பி அம்பி இராமரு ?
        //முழு தகவலும் வைத்து ஒப்பீட்டு ரிப்போர்டை தயார் செய்யுங்கள் என்கிறேன் .ஒரு முதலமைச்சர் , தன இஷ்டப்படி அமைச்சர்களை அனுப்பி படுகொலை செய்தார் என்றால் நம் அரசியல் அமைப்பு முற்றிலும் வீணானது//

      • நல்லா கேள்வி கேட்கின்றிர்கள் அம்பி ராமரு.! எவ்வளவோ மத கலவரங்கள் இந்தியாவிலேயே நடந்து இருக்கு. அதுல ,அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய மதகலவரம் குஜராத் படுகொலை. அதுதாங்க மோடியோட சிறப்பு. போலி என்கொவுண்டர் அய்யாசாமி அமிர்தசா, மத கொலையாளி மந்திரி Maya_Kodnani அவங்களுக்கு எல்லாம் தலிவரு மோடி அண்ணாச்சி அவங்களுக்கு எல்லாம் ஜாலரா அடிக்க ராமரு அம்பி. மணிய நன்னா அட்டுங்க சாமி!

        //பல கலவரங்கள் நடந்து 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் . இதில் குஜராத் கலவரம் எப்படி தனித்துவம் பெறுகிறது . ஏன் கலவரங்கள் நடக்கும் போது அரசு இயந்திரம் முடியவில்லை போன்றவை அலசப்பட வேண்டும் .//

      • எதுக்கு அவரு ….. என்று எழுதிரிங்க ரமரு ? அம்புட்டு பயமா ராமர் அன்னாச்சிக்கி ? எம் ஜீ யார் , விஜயகாந்த் என்று எழுதகூட பயம் இருக்கும் ராமரு என்னத்துக்கு விவாதிக்க வ்ரனுங்க்கறேன்

        //அவர் பாட்டிக்கு நூறு ரூபாய் கொடுத்தார் அதனால் கொடையாளி என்னும் அளவில் சிந்திப்பவர்களுக்கு புரியாது.//

  5. ஒருவேளை வெளிநாட்டில் வேலை விடயமாக வாழும் “உங்களை போன்ற ஒரு ஹிந்து” அங்கு உள்ள மத பெரும்பனமை மக்களால் தாக்கபடுவார்கள் என்றால் அதற்கும் MS-Excel sheet ல் அந்த நாட்டின் எந்த பிரதமர் கலவங்க்களை அடக்க சிறந்தவர் என்ற புள்ளிவிவரங்களை அனுமானிக்கும் புள்ளி ராஜாவாக மாறமாட்டிர்கள் தானே?

  6. வாஞ்சிநாதன் பற்றி பேச தாங்களுக்கு தடையாக இருக்கும் பொருள் குறுக்கு கயிறு தானே அண்ணாச்சி ?
    //வாஞ்சிநாதன் பற்றி என்ன விவாதம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறீர் ? ஒரு நிகழ்ச்சிக்கு பல அர்த்தங்களை கற்பிதம் செய்து கொண்டு அதற்கு மற்றவர்கள பதில் கூறி தெளிய வைக்க வேண்டும் என்று எதிர்பார்கிரீரா ?//

    • தப்பி ஓடும் முயற்சியில் விவாதத்தில் கொஞ்சம் பதிலும் சொல்ல முயலாமே ராமரே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க