Thursday, January 22, 2026
முகப்புஉலகம்அமெரிக்காபாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0

பாரிஸ் தாக்குதல் : வளர்த்த கடா வெர்ஷன் 3.0

-

இந்தியாவின் அகர்தலா நகரின் பள்ளி மாணவர்கள், பாரிஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இந்தியாவின் அகர்தலா நகரின் பள்ளி மாணவர்கள், பாரிஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

பாரிஸ் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தாக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நேரப்படி நவம்பர் 13ம் தேதி இரவு 9:15 அளவில் (இந்திய நேரம் நவம்பர் 14 அதிகாலை 1:30) பாரிஸ் நகருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் குழு மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். சம்பவம் நடந்த சமயத்தில் அமெரிக்க ராக் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த பெடக்ளென் என்கிற நாடக அரங்கினுள் நுழைந்த பயங்கரவாதிகள், பார்வையாளர்களின் மேல் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

நவம்பர் 14 அதிகாலை 00:58 வரை பெடாக்ளென் அரங்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் பயங்கரவாதிகள். பெடாக்ளென் அரங்கம் தவிர வேறு ஆறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் மற்றும் மூன்று குண்டுவெடிப்புகளில் சுமார் 129 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது (நவம்பர் 14 பிற்பகல் நிலவரப்படி).

மேலும், நூற்றுக்கும் அதிகமானவர்கள் தாக்குதலில் கடுமையாக காயமடைந்துள்ளனர். நவம்பர் 14 அதிகாலை நிலவரப்படி பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் பெடாகலன் அரங்கின் கட்டுப்பாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளதுடன், சுமார் 8 பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளனர்.

பி.பி.சி செய்தியறிக்கை ஒன்றின்படி, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவன் “இது ஹொல்லந்தேவின் தவறு, உங்கள் அதிபரின் தவறு… அவர் சிரியாவில் தலையிட்டிருக்க கூடாது” என்று முழங்கியுள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் “அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டுள்ளனர். பாரிஸ் தாக்குதலுக்கு தமது அமைப்பு பொறுப்பேற்பதாக டாயிஷ் அமைப்பு (ஐ.எஸ்.ஐ.எஸ்) அறிவித்துள்ள நிலையில், இது பிரெஞ்சு தேசத்தின் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ளார் அதிபர் பிரான்கோயிஸ் ஹொல்லாந்தெ.

இந்த மோசமான தாக்குதல் டாயிஷ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சில உள்ளூர் ஆதரவுக் குழுக்களின் உதவியோடு நடத்தியிருக்கிறார்கள் என்று அறிவித்துள்ள ஹொல்லாந்தே, இத்தாக்குதல் தமது தேசத்தின் மீதான போர் என்று வருணித்துள்ளார். தற்போது பிரான்சில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஹாதிய காட்டுமிராண்டிகளுக்கு எதிராக கருணையற்ற எதிர் நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுக்கும் என்று அதிபர் உத்திரவாதமளித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர். பிரான்சுக்கு ஆதரவை உறுதி செய்துள்ள இங்கிலாந்து பிரதமர் கேமரூன், “உங்களது மதிப்பீடுகள் தாம் எமது மதிப்பீடுகள்; உங்களது உங்களது வலி தான் எங்களது வலியும்; இனி உங்களது சண்டை எங்களது சண்டையும் கூட” என்று அறிவித்துள்ள நிலையில் எதிர் வரும் வாரங்களில் பாரிஸ் தாக்குதலுக்கான எதிர் விளைவுகளை நாம் சிரியாவில் காணப் போவது நிச்சயமாகியுள்ளது. தற்போது பிரான்சு நாட்டு விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துவிட்டன.

சுதந்திர நாகரீகத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகள் என்று மேற்குலகம் அஞ்சும் ஐ.எஸ்.ஐ.எஸ் (டாயிஷ்) யார்? சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின் கடுமையாக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுருவி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்கள் சக்தி வாய்ந்த அமைப்பா? சுமார் ஓராண்டு காலமாக நேட்டோ தாக்குதலை எதிர்கொண்டிருக்கு நிலையில் தாம் கைப்பற்றிய நிலப்பரப்பை தமது வலுவான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு அந்த அமைப்பு வலுவானதா? இசுலாமிய ஜிஹாதிகள் ’சர்வ வல்லமை’ பொருந்திய ஏகாதிபத்திய நாடுகளை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தாக்கும் அளவுக்கு ‘எல்லாம் வல்லவர்கள்’ ஆகிவிட்டனரா?

முதலாவதாக ஆப்கானிய முஜாஹிதீன்கள், அவர்களின் அடுத்த அவதாரமான தாலிபான் மற்றும் ஒசாமா பின்லாடனின் உருவாக்கமான அல்-காய்தா போன்ற ஜிஹாதி அமைப்புகள் சுயம்புவாக தோன்றிய இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் இல்லை. இவையனைத்தும் அமெரிக்க தயாரிப்புகள். ஸ்டாலின் ஆட்சிக்காலத்திற்குப் பின் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த சோவியத் ரசியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நடந்த பனிப்போரில் மத்திய கிழக்கை கட்டுப்படுத்த இவர்களுக்குள் நடந்த நாய்ச்சண்டைகளின் பின்புலத்தில், ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்திருந்த என்பதுகளின் துவக்கத்தில் நேரடியாக ரசியாவுடன் மோதுவதை விட பதிலிப் போர் (proxy war) தான் சரியானது என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சவுதியுடன் சேர்ந்து பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகள் தான் முஜாஹிதீன்கள்.

அமெரிக்க அதிபர் நிக்சனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஹென்ரி கிசிங்கர் தனது சொந்த வார்த்தைகளிலேயே தனது சாதனைகளாக ஆப்கான் முஜாஹிதீன்களின் உருவாக்கத்தைக் பதிவு செய்துள்ளார்.

இரண்டாவதாக, இரண்டாயிரங்களின் முதல் பத்தாண்டுகளின் இறுதியில் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் நடந்த வண்ணப் புரட்சிகளும், அந்தப் பத்தாண்டுகளின் துவக்கத்தில் நடந்த ஈராக் மற்றும் ஆப்கானுக்குள் நிகழ்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்பும் மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை குறிவைத்தே நடந்துள்ளன. மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவதை விட அந்நாடுகளில் பதவியில் இருக்கும் – தனது பெட்ரோலியக் கொள்கைக்கு உடன்படாத – ஆட்சியாளர்களை கவிழ்க்க அமெரிக்கா பதிலிப் போர்களில் ஈடுபட்டு வருகின்றது. அதாவது, சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான உள்ளூர் கலகங்கள் திடீரென முளைப்பதும் (இருப்பதிலேயே ஆக கழிசடையான சர்வாதிகார, எதேச்சாதிகார காட்டுமிராண்டி ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் உற்ற தோழமை நாடான சவூதி தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது), அந்தக் கலகங்களை முன்னின்று நடத்தும் அமைப்புகளுக்கு மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதம் கிடைப்பதும் இரகசியமானதல்ல.

மூன்றாவதாக, சிரியாவின் அதிபர் அசாதுக்கு எதிராக உருவான டாயிஷ் அமைப்பு அமெரிக்காவின் தயாரிப்பு தான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. மத்திய கிழக்கில் அமெரிக்க எண்ணை கொள்கைக்கு முழுவதும் ஒத்து ஊதாமல் ஊசலாடிக் கொண்டிருந்த ’சர்வாதிகாரி’ அசாதுக்கு எதிராக திடீரென்று வெடித்த ‘உள்ளூர் கலகங்களை’ துவக்கம் முதலே அமெரிக்கா ஆதரித்தது. இந்த ஆதரவு வெறுமனே அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான ஆதரவு மட்டுமில்லை – அரச படைகளை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கியது. அசாதுக்கு எதிராக சண்டையிட்டு வந்த ஆயுதந்தாங்கிய குழுக்களில் பங்கேற்க சவூதி அரசு தனது சிறைகளில் இருந்த ஆயுள் மற்றும் தூக்குக் கைதிகளை விடுவித்து அனுப்பியது. மேற்குலக நாடுகளின் பேராதரவு இருந்ததன் காரணமாகத் தான் அசாதுக்கு எதிரான குழுக்கள் மிக எளிதாகவும், குறுகிய காலத்திலும் ஈராக்கின் வடமேற்குப் பகுதிகளையும், சிரியாவின் சில இடங்களையும் கைப்பற்றுவது சாத்தியமானது.

பஷார் அல் அசாதுக்கு எதிரான குழுக்கள் ஒருகட்டத்தில் டாயிஷ் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற பெயரில் ஒன்றிணைந்த சமயத்தில் அத்தீவிரவாதிகளை அமெரிக்க செனேட்டர் ஜான் மெக்கெயின் நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்களும், காயம் பட்ட டாயிஷ் போராளியோடு இசுரேல் பிரதமர் பேசும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இப்புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அவ்வமைப்புக்கு மேற்கத்திய முதலாளிய ஊடகங்களில் கொஞ்சம் ‘நல்ல’ பெயர் இருந்தது (அதாவது, தங்கள் பிடியில் சிக்கிய இந்திய செவிலியர்களின் கழுத்தை அறுக்காமல் திருப்பும் அளவுக்கு நல்லவர்களக அந்தக் காலத்தில் அவர்கள் அறியப்பட்டனர்).

நான்காவதாக, ஜிஹாதி அல்லது புனிதப் போர் என்பதற்கு வஹாபியர்கள் எழுதும் விளக்கவுரைகளில் மதப் புனிதத்திற்கு பின்னே அமெரிக்க நலன்தான் ஒளிந்துள்ளது. முஜாஹிதீன்கள், தலீபான்கள், அல்-காயிதா, போக்கோ ஹராம்(நைஜீரியா), டாயிஷ்(ஐ.எஸ்.ஐ.எஸ்), அல்-ஷபாப் (சோமாலியா), லிபிய இசுலாமிய போர்க் குழு (LIFG), மக்ரீப் நாடுகளுக்கான அல்-காயிதா, இந்தோனேஷியாவின் ஜெமா இசுலாமியா போன்ற வஹாபிய பயங்கரவாத இயக்கங்களின் பின்னணியில் அமெரிக்காவின் பிராந்திய அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான நலன்கள் உள்ளன.

ஐந்தாவதாக, அமெரிக்காவின் தயாரிப்புகளாக இவர்கள் இருந்தாலும் இவர்களுக்கு சிந்தாந்த தளத்திலும் செயல்பாட்டுத் தளத்திலுமாக சொந்த நலன்களும் உள்ளன. இவ்விருவரின் நலன்களும் ஒன்றுக்கொன்று முரண்படாத வரை மேற்குலகம் இப்பயங்கரவாத குழுக்களை ’நல்ல’ தலீபான்கள் என்றும் ’நல்ல’ அல்-காயிதா என்றும் ’நல்ல’ ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் அடைமொழியிட்டு அழைப்பார்கள். ஆப்கானில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படையினரின் ட்ரக்குகள் தொலைதூர பிரதேசங்களுக்கு பாதுகாப்பாக செல்ல நல்ல தலீபான்களுக்கு தண்டம் கட்டிய வகையில் ஏற்பட்ட செலவுகளை அமெரிக்க அரசே ஆவணப்படுத்தியுள்ளது.

எப்போது நல்லவர்கள் கெட்டவர்களாக மாறுவார்கள்? நல்லவர்களின் சித்தாந்த மற்றும் பிராந்திய நோக்கங்களை அடிப்படையாக கொண்ட அவர்களின் சொந்த நலன்கள் எப்போது அமெரிக்க நலன்களோடு முரண்பட்டுப் போகின்றதோ அப்போது நல்ல பயங்கரவாதிகள் கெட்ட பயங்கரவாதிகளாக மாறுவார்கள். சரியாகச் சொன்னால் ஒரு மிருகத்தை வளர்த்து விட்டு அது தின்னு கொழுப்பெடுத்து ஆடும் போது புதிய மிருகத்தை இறக்குவது அமெரிக்க உத்தி. அந்த வகையில் தாலிபான்கள் மற்றும் அல்கைதாவோடு இந்த புதிய ஐ.எஸ்.எஸ் மோதத் துவங்கியிருக்கிறது. மத்திய ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகள் மற்றும் மக்களை நிரந்தர போரில் வைத்திருக்க இசுலாமிய மதம் அமெரிக்காவிற்கு நன்கு பயப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் பயங்கரவாதிகள் புதிதாக விளக்கப்படுகிறார்கள். பிறகு அவர்களை கெட்டவர்கள் என்று உலக மக்களின் பொதுப்புத்தியில் நிலைநாட்டிவிட்டு போரையும் தொடுப்பார்கள்.

கெட்டவர்களை அழிக்க பரந்தாமன் அவதரித்தே ஆக வேண்டும் என்பதால், அமெரிக்க படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, போர் விமானத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள், அடிப்படை கட்டமைப்பு நொறுக்கப்படுவது, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது, குழந்தைகளின் உடல்கள் குண்டுகளால் குதறி எறியப்படுவது போன்ற காட்சிகளுக்குப் பின் கெட்டவர்கள் அழிக்கப்பட்டு மேற்குலக விளக்கத்தின் அடிப்படையிலான ஒரு ‘ஜனநாயக’ ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ‘ஜனநாயக’ பொம்மை ஒன்று அதிபராக பதவியில் அமர்த்தப்படுவார்.

நாம் இப்போது பாரிஸ் தாக்குதலுக்குத் திரும்புவோம். இத்தாக்குதல் குறித்து இரண்டு கருத்துக்களை நாம் பரிசீலிக்க வேண்டும்.

தனது உருவாக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் கொண்டு பஷார் அல் அசாதின் ஆட்சியைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் நோக்கம். இதற்காகவே அவ்வமைப்பிற்கு ஆயுத சப்ளை மட்டுமின்றி, இராணுவ போர்தந்திர ரீதியிலான உதவிகளையும் அமெரிக்காவும் அதன் வட்டார நேச நாடுகளான இசுரேல் மற்றும் சவூதி அரசுகளைக் கொண்டு செய்து வந்தது. எனினும், நீண்ட கால நோக்கில் சிரியாவை முற்றிலுமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் விடுவது அமெரிக்காவின் நோக்கமில்லை. ஆப்கான், ஈராக் போல் ஒரு பொம்மை ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே அமெரிக்க நோக்கங்களுக்கு உகந்தது. எனவே, ஒருபக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு முன்னேறி வரும் போதே அது ஒரு காட்டுமிராண்டிக் குழு என்பதை உலகிற்கு காட்ட அதனிடம் சிக்கிய வெளிநாட்டவர்களின் கழுத்தறுப்புக் காட்சிகளை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆரம்பகால வெற்றிகளுக்குப் பின் அது ஈராக்கிலும், சிரியாவிலும் கணிசமான இடங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. நாகரீக உலகின் ஒரே தலைவன் என்கிற தனது கடமையை ஆற்ற அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நேட்டோ படைகளைக் கொண்டு துவங்கியது. இந்த தாக்குதல் ஓராண்டு காலம் நீடித்த நிலையிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பலவீனமடையவில்லை என்பதோடு அதன் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணை வயல்கள் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை – மாறாக சிரியாவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எண்ணை வயல்களோ நேட்டோவின் எதேச்சையான தவறுகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன. ஆச்சரியமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து துரப்பணம் செய்யப்படும் எண்ணை சர்வதேச எண்ணைச் சந்தைக்குள் ‘எப்படியோ’ நுழைந்ததோடு, கச்சா எண்ணையின் சர்வதேச விலையில் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தி ரசியாவின் எண்ணை வர்த்தகத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது வட்டார நண்பனை இழக்க விரும்பாத ரசியா, பஷார் அல் அசாதுக்கு ஆதரவாக களமிறங்கியது. தனது புவிசார் நோக்கங்களுக்காக பஷார் அல் அசாதின் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டுவது, ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு பிராந்தியத்திலிருந்து சர்வதேச கச்சா எண்ணைச் சந்தைக்குள் நுழையும் எண்ணையைத் தடுத்து தனது பொருளாதாரத்தைக் காத்துக் கொள்வது என்ற இரண்டு மாங்காய்களை ரசியா ஒரே கல்லில் அடிக்க நினைக்கிறது. ரசியாவின் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நிலைகள் தகர்க்கப்படுகின்றன என்கிற செய்தி ஒரு பக்கமும், நேட்டோவின் உளவுக் கருவிகளான (intelligence assets) நல்ல ஜிஹாதிகளையும் சேர்த்தே தாக்குகின்றது என்கிற குற்றச்சாட்டும் கடந்த மாதத்தில் மேற்கத்திய முதலாளிய ஊடகங்களில் வந்து கொண்டிருந்தன.

ரசியாவின் எதிர்பாராத வருகையைத் தொடர்ந்து, இதற்கு மேலும் அசாதுக்கு எதிரான பதிலிப் போரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நேட்டோவின் மயிலிறகு அடிகளும் போதுமானதல்ல என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சிரியா தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கும் ரசியாவுக்கு இடையே வியன்னாவில் நடக்கவுள்ள பேச்சு வார்த்தையில் தற்போதைய நிலவரப்படி ரசியாவின் கையே ஓங்கியுள்ளது. இப்பேச்சு வார்த்தையைப் பொறுத்த வரை, அமெரிக்காவின் நோக்கம், சிரியா மற்றும் ஈராக்கை ஒன்றாகச் சேர்த்து மூன்று கூறுகளாக பிரிப்பது மற்றும் அசாதுக்கு மாற்றாக ஒரு மேற்கத்திய கட்டுப்பாட்டின் கீழான பொம்மை தலைமை. ரசியாவின் நோக்கம் அசாதின் தலைமையிலான ஒன்றுபட்ட சிரியா.

தாழ்ந்து விட்ட தனது நிலையை மாற்ற உடனடியாக நேரடிப் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு உள்ளது. எனவே அப்படியான ஒரு போருக்கு உகந்த மனநிலையை ஏற்படுத்த பாரிஸ் தாக்குதல் போன்றவை தோற்றுவிக்கும் அனுதாபம் அமெரிக்காவுக்கு தேவை. ஆகவே பாரிஸ் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

இதற்கு மாறான ஒரு கோணத்தை பிற முதலாளிய ஊடகங்கள் முன்வைக்கின்றன. அதாவது, இசுலாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் கவனத்தை திசை திருப்பவும் தம்மால் எங்கு வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் தாக்குதல் தொடுக்க முடியும் என்பதை பறைசாற்றிக் கொள்ளவும் இந்த தாக்குதலைத் தொடுத்திருக்க வேண்டும் என்கின்றனர். சமீபத்தில் எகிப்துக்கு அருகே ரசிய விமானம் விழுந்து நொறுங்கியதைச் சுட்டிக்காட்டும் மேற்கத்திய ஊடகங்கள், அதுவும் கூட ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலே என்கின்றன.

நேட்டோ படைகள் தங்களை சிரியாவில் தாக்கினால், தம்மால் நேட்டோ நாடுகளுக்குள்ளேயே தாக்குதல் தொடுக்க முடியும் என்பதை உணர்த்தவே பாரிஸில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்கின்றன மேற்குலக முதலாளிய ஊடகங்கள். பாரிஸ் தாக்குதலுக்குப் பின் நேட்டோ படைகளும் ரசிய படைகளும் தனித்தனியே ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பை எதிர்கொள்வதை விட, இவர்கள் இருவரும் இணைந்தே அவ்வமைப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், சிரியாவின் எதிர்காலம் குறித்து இணைந்தே ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய முதலாளிய ஊடகங்களின் ஏகாதிபத்திய சாய்விலிருந்தும் ஏகாதிபத்திய கொள்கைகளின் பாதந்தாங்கிகளாக அவர்கள் இருப்பதும் அவர்களின் ஆய்வுக் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை நாம் தனியே விளக்கத் தேவையில்லை. இந்தக் காரணிகளால் தான் சிரியாவின் இன்றைய சீரழிவுகளுக்குப் பின் மேற்கத்திய நாடுகள் உள்ளன எனபதையும், பாரிஸ் தாக்குதல் மேற்கத்திய நாடுகளின் சிரியா கொள்கைகளின் தொடர் விளைவுதான் என்பதையும் இவை அங்கீகரிக்க மறுக்கின்றன. இன்னொரு பக்கம் பாரிஸ் தாக்குதலே அமெரிக்கா நடத்திய சதி என்று சதிக் கோட்பாட்டாளர்கள் முன்வைப்பதில் ஒரு பாதி ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளும் மறுபாதி அனுமானங்களாகவும் உள்ளன. உண்மைகளையும் அனுமானங்களையும் கலந்து கட்டி அவர்கள் வந்து சேரும் முடிவுகளும் விபரீத கற்பனைகளாக இருப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.

தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் தமது குறுகிய கால நலனுக்காக செய்த வல்லரசு அரசியல், இராணுவ மற்றும் உளவுச் சதிவேலைகளின் எதிர் விளைவுகள் என்பதே தர்க்க ரீதியில் வந்தடையக் கூடிய முடிவாக இருக்கிறது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தமது குறுகிய கால நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முன்னெடுத்த சதி நடவடிக்கைகளின் விளைவை மொத்த உலகமும் சந்திக்கிறது – இந்த மொத்த உலகத்திற்குள் ஏகாதிபத்தியங்களும் வருவதால் தவிர்க்கவியலாத படிக்கு அந்த நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்களும் அந்த எதிர் விளைவுகளின் பாதிப்புகளை அனுபவிக்கிறார்கள்.

பாரிஸ் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பியர்களை உளவியல் ரீதியில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்புப் போருக்குத் தயார் செய்யும் வேலையை ஏகாதிபத்தியங்கள் தமது ஊதுகுழல்களான முதலாளிய ஊடகங்களைக் கொண்டு துவங்கி விட்டன. இரட்டை கோபுரத் தகர்ப்பிற்கு பழிவாங்க ஆப்கானுக்குள் நுழைந்து மீள முடியாத புதைகுழிக்குள் சிக்கிக் கொண்டதைப் போல் சிரியாவிற்குள் நுழைவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. சவப்பெட்டிகளின் வரலாறு மீண்டும் திரும்புகின்றது – ஆனால், ஆப்கானை விட ரசியாவின் இராணுவ ஆதரவைக் கொண்டுள்ள சிரியா பலமானதொரு சவாலை வழங்கலாம், அது சர்வதேச எண்ணைச் சந்தையில் தாக்கத்தையும் அதன் தொடர்ச்சியாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமாக மக்களின் மேல் சுமையாக விழுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.

பிரெஞ்சு மக்களும் ஐரோப்பிய உழைக்கும் மக்களும் உலகெங்கும் உள்ள ஜனநாயக சக்திகளும் இந்த நேரத்தில் தமது அரசுகளின் ஆக்கிரமிப்பு வெறியை சொந்த மண்ணில் எதிர்த்து நிற்க வேண்டும். அதுவே ஆக்கிரமிப்பு தேசங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளின் கடமையும் கூட.

மற்றொரு புறம் இசுலாமிய மதவதம் என்பது அமெரிக்க நலனுக்காக மட்டுமே தோன்றி வளர்ந்தது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் தொடர்பில்லை என்று பல்வேறு இசுலாமிய அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இசுலாமிய சர்வதேசம், மதப்புனிதம் இன்ன பிற கோட்டுபாடுகள் அனைத்தும் அல்லா அருளிய அருட்கொடைகள் என்று மதவாதிகள் நம்புகிறார்கள். உண்மையில் இவற்றை அல்லா அருளவில்லை, அமெரிக்காதான் வழங்கியது என்பதை இவர்கள் ஏற்பதில்லை. மாறாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கமே இசுரேலின் சதி என்று ஒளிந்து கொள்கிறார்கள்.

அல்கைதா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்றவை தோற்றத்தில் அமெரிக்காவைக் காரணமாகக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் தமது மதப் புனிதம் மற்றும் அந்த புனிதத்தை காக்க வந்த வீரர்களாகவே இசுலாமிய மக்களிடம் காட்டிக் கொண்டு அறுவடை செய்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு இசுலாமிய நாடுகளில் மதவாதிகளால் அணிதிரட்டப்பட்ட மக்கள் குறிப்பிட்ட காலம் வரை இவ்வியக்கங்களை புனிதப் போர் இயக்கங்களாவே அங்கீகரித்திருக்கின்றனர்.

மறுபுறம் இந்த இயக்கங்களின் பயங்கரவாதங்களுக்கு குறைவில்லாத செயல்களை நடத்திவரும் சவுதி அரசை இவர்கள் கண்டிப்பதில்லை. கூடவே சவுதியின் நல்லெண்ண தூதர்களாகவும் பேசுகிறார்கள்.

ஆகவே இந்த வரலாற்றிலிருந்து பெறும் படிப்பினை என்ன? இசுலாம் ஒரு மதம் மட்டுமே. அதாவது ஒரு தனிநபரின் ஆன்மீக நம்பிக்கைக்காக சில கோட்பாடுகளைக் கூறும் சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் வைத்திருக்கும் ஒரு வழிபாட்டு முறை. இந்த அளவைத் தாண்டி இசுலாம்தான் இந்த உலகின் சர்வரோக நிவாரணி. பங்குச் சந்தை, பெட்ரோல் விலைஉயர்வு, பாலியல் பிரச்சினைகள், கல்வி, வரலாறு, அறிவியல் அனைத்தையும் குர்ஆனிலும், நபிகளின் வரலாற்றில் இருந்து மட்டும்தான் தேடுவோம் என்று சொல்வது தவறு.

இல்லை இது சரிதான் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்க தொடர்ந்து தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். நாடுகள், மக்களது சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளில் மதத்தை அடிப்படையாக வைத்துப் பார்ப்பது என்பதை உண்மையில் அல்லாவோ இல்லை நபிகளோ செய்யவில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியங்களும், அவர்களின் காலை நக்கி வாழும் சவுதி வகாபியசமும்தான் இந்த விபரீதப் பார்வையை இசுலாமிய மக்களிடம் கொண்டு சேர்த்தன.

ஆக பாரிஸ் தாக்குதலில் நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிப்பது போல இசுலாமிய மதவெறியர்களையும் கண்டிக்க வேண்டும். இருவரும் அவர்களது நலனுக்காக தோன்றி இணைந்து வேலை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால்தான் உலக மக்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்டுவதில் நாம் வெற்றிபெற முடியும்.

– தமிழரசன்

  1. I condemn the attack against France people. In the meantime a question arising in my mind when 120+ people died in France all the medias are crying why they are not giving same level of news when Syria peoples impacted by the other countries bombing? Don’t you think the count is more than 120+. Did anyway France humans and Syria humans are different. Attack against any humans in this world for any reason should be stopped. Looks like we are slave in the hand of Western countries. They are one who decides which is right and wrong. And people living in their countries are superior and those living in other countries are inferior. Ideally Superior people should try to bring up inferior not by killing and targeting their country wealth. What they currently doing is high level robbery and murderer. Instead of using their brain for their self gain if they use it for peaceful and equality in this planet, this earth would be a heaven.

  2. //அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிப்பது போல இசுலாமிய மதவெறியர்களையும் கண்டிக்க வேண்டும்//யாரு கண்டிக்கனும் அப்ப நீங்க கண்டிக்க மாட்டீகளா எப்ப தீவிரவாத கொலை நடந்தாலும் ஏகாதிபத்தியம் அமேரிக்க ரத்த வெறி அப்பிடினு எழுதி இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள் எல்லாம் அமெரிக்க அடிமைகள் என்றெல்லாம் எழுதினால் முடிந்து விட்டது ,கொன்றவர்களும் செதவர்க்ளும் ஒன்றாகி விடுவார்கள் ,என்னமோபா நடத்துங்க அல்லாகு அப்பர்….

    • It clearly shows still some peoples are thinking in the line drawn by western countries. What about your call on Subash chandra bose formation of Indian Army , is that for peaceful march?. If he formed that in this era, it will be called in the same name “Thiviravathigal”. Earlier due to some humanity remains they used to call revolution and war. Now a days if a group of people/sufferers trying to fight against the people who devastated/massacre their cities/families are termed as “Thiviravathigal”. Some folks are supporting them again in religion line especially christians and Hindus. We need humanity approach. We no need to blame each other.But don’t look at in biased mindset.

      Human are human. Religion,caste,race,color will comes next. If there is any humanity issue in other country and its functioning in any manner impacting the human across the countries, then it can be handled via global body. UN cannot be that global body in current structure. They need to abolish security councils, etc. Every country should have equal rights. Just because of some countries economy is strong and having weapons of mass destruction should not be treated superior in that global body.In the global body if any inhumane activities or not inline with global principles are identified, it needs to be isolated from all the other countries.At any point any countries should have rights to go for a war against one another.

      Globalisation favor to superior countries and to the businessmen needs to be stopped. It is the root cause for all the current happenings. Fair pricing across the continents needs to be discussed. Rising one currency over another needs to be stopped. Don’t think as Utopian world. Our Planet can be turned into like this if every countries having leaders with humane approach. Please bring heaven here don’t make this as hell and look for heaven in somewhere after your death.

        • Hi Mr.HisFeet,

          During second world war do you think no civilans are killed when Bose Army fought against british in Burma?? And have you ever heard about 80,000 forced indian army members died in british side. Do you think they joined to fought for british? Forcing the civilian peoples to take part in war is equivalent to killing the civilians. Religion is not the reason in today struggle. The main reason is threat to the western policies and their economy makes them to project a section of people in the name of religion and projecting them as “thiviravathigal” before others. I am not supporting their actions in the mean time not to support western side story as well.

  3. இப்பிடி ஒரு கட்டுரையை நேற்றே எதிர் பார்த்தேன் தோழர் கோவனின் விடுதலைக்காக வெயிட் பன்னிருக்கிங்க போல இருக்குது இல்லனா எவன் செத்தாலும் கொன்னவனுக்கு ஆதரவா சுடச்சுட செய்தி வ்ருமே இன்னிக்கு கொஞ்சம் லேட்டு போங்க,__________ இதுக்கு கூட உங்கள கோவிச்சிக்க போறாஙக…

  4. //முதலாவதாக ஆப்கானிய முஜாஹிதீன்கள், அவர்களின் அடுத்த அவதாரமான தாலிபான் மற்றும் ஒசாமா பின்லாடனின் உருவாக்கமான அல்-காய்தா போன்ற ஜிஹாதி அமைப்புகள் சுயம்புவாக தோன்றிய இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் இல்லை. இவையனைத்தும் அமெரிக்க தயாரிப்புகள். ஸ்டாலின் ஆட்சிக்காலத்திற்குப் பின் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த சோவியத் ரசியாவுக்கும் அமெரிக்காவும் இடையே நடந்த பனிப்போரில் மத்திய கிழக்கை கட்டுப்படுத்த இவர்களுக்குள் நடந்த நாய்ச்சண்டைகளின் பின்புலத்தில், ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்திருந்த என்பதுகளின் துவக்கத்தில் நேரடியாக ரசியாவுடன் மோதுவதை விட பதிலிப் போர் (proxy war) தான் சரியானது என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சவுதியுடன் சேர்ந்து பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகள் தான் முஜாஹிதீன்கள்.//

    இந்த முறை கட்டுரையில் முஜாஹிதீன் உருவாக்கத்தில் ரஷ்யாவின் பங்கை அரசால் புரசலாக வாவது கூறியதற்கு நன்றி

    சோவியத் ரஷ்யா ஆப்கனுக்கு போகவில்லை என்றால் , அமெரிக்க எதற்காக அங்கே போக வேண்டி இருந்து இருக்கும் ?

    தாய் நாடு என்னும் அளவில் போரிட , ஆப்கன் மக்கள் முன் வரவில்லை . ஆனால் மதத்திற்காக உயிர் கொடுக்க மக்கள் தயாராக இருந்தார்கள் . அந்த இயல்பு வர மதம் காரணமா அமெரிக்காவா ?
    தாய் நாடு சுதந்திரம் என்பதை விட மத எழுச்சி முக்கியமாக பட்டது அந்த மக்களுக்கு .

    ரஷ்யாவிற்கு எதிரான போர் என்பதே அமெரிக்காவின் குறிக்கோள் . அதற்கு ஆப்கனுக்கு சுதந்திரம் , ரஷ்யாவின் தோல்வி என்னும் வின் வின் ச்ற்றெடஜி போட்டது அமேரிக்கா!

    கட்டுரைக்கு மீண்டும் வந்தால் , அழுகி போன ரஷ்யாதான் காரணம் என்றாகிறது

  5. இந்த கட்டுரையை படிக்கலாமா ,வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் ,வினவை கடந்த ஆறு ஆண்டுளாக வாசித்த வந்த அனுபவத்தில் இந்த கட்டுரையின் உள்ளடக்கம் என்ன இருக்கும் என்பதை உகிக்க முடிகிறது .அயர்ச்சியாக இருக்கிறது ,தீவிர இடதுசாரி ,இடதுசாரி,நடுநிலையாளர்கள் ஏன் வலதுசாரிகள் கூட அனைவரும் இயங்கும் ஒரு தளமாக இருந்த வினவு , தன்னையும் அதன் வாசகர்களை அடுத்த தளத்துக்கு தானும் கொண்டு செல்லாமல் தேங்கி விட்டதோ என்ற எண்ணம் சமிப காலமாக தோன்றுவதை தடுக்கமுடியவில்லை

    • கட்டுரையின் பொருளில் என்ன குற்றம் என்று விவாதிப்பது அடுத்த தளத்திற்கு “சென்று விட்ட வாசகர்களுக்கு” அழகு. அதை விடுத்து ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதை வலிந்து சொல்வது வலதுசாரிகள் மட்டுமே பேசும் உத்தி. நீங்கள் வலது சாரி இல்லை என்று நினைக்கிறோம். கட்டுரையை பொறுமையாக படியுங்கள்!

      • அய்யா தோழரே, எனது கருத்தயே சுந்தர் பதிந்துள்ளார் உங்கள் கட்டுரையின் பொருளே இசுலாமிய மதத்தில் தீவிரவாதம் இல்லை அது சாதாரண வழி பாட்டு மதம்தான், அமெரிக்க ஆதிக்க வெறிதான் இதுக்கு எல்லாம் காரணம் என்று சொல்லுகிறீர்கள் இதுதான் கட்டுரையின் குறைபாடு அப்ப இசுலாமிய மத புத்தகமான தெருக்குரானையும் அதில் சொல்லப்பட்ட வசனங்களையும் குப்பையில் தூக்கி எரிந்து எரிக்க தயாராக இருக்கிறீர்களா ஏன்டா செய்ய மாட்டுறீக ஆங்க் பைபிளில குறை இருக்கு கீதையில் குறை இருக்கு என்ற இசுலாமிய_________________ கடந்து செல்ல வேண்டாம்

        • சோ அவர்களது துக்ளக் பத்திரிகையில் திமுகவையும் அதிமுகவையும் விமர்சிப்பதால் அவர் நடுநிலையானவர் என்று எனது சில நண்பர்கள் கூறுவார்கள். ஆனால் சற்று கூர்ந்து ஆராய்ந்தால் திமுகவை விமர்சிக்கும்போது அதில் கொந்தளித்து பீறிடும் கோபம் தெரியும், ஆனால் அதிமுகவை விமர்சிக்கும்போது பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் விமர்சிப்பார்கள். சில சமயம் அதிமுக தவறு செய்யும்போது, இந்த திராவிட கட்சிகளே இப்படித்தான் என்று பொத்தாம்பொதுவாக விமர்சிப்பார்.

          அதே போல வினவு இந்து, இசுலாம் ஆகிய இரு மதங்களை விமர்சிக்கும்போது பெயருக்கு நடுநிலை என்று கூறிக்கொண்டாலும் மேற்கூறிய “சோ வின் நடுநிலையை” தான் நான் பார்க்கிறேன்.

          எல்லா மதங்களிலும் குறைகள் உள்ளன. இதை நடுநிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள்.
          இந்து மதத்தில் – சாதி பிரிவினை, தீண்டாமை கொடுமை, பார்ப்பனர்களின் ஆதிக்கம்.
          இசுலாம் மதத்தில் – பெண் அடிமைத்தனம்,சகிப்புத்தன்மையின்மை, மற்ற மதத்தினரின் மேல் உள்ள துவேஷம்.
          கிருத்துவ மதத்தில் – தூண்டில் போட்டு மதமாற்றம் முயற்சிகள்,மற்ற மத கடவுள்களை சாத்தான் என்றும், மற்ற மத கடவுள் பிரசாதங்களை சாத்தானுக்கு படையலிட்ட உணவு அதை தொடவே கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வளர்ப்பது.

          அந்தந்த மதத்து காரர்கள் மற்ற மதத்தில் உள்ள குறைகளை கூறும் முன்னர் அவரவர் மதத்தில் உள்ள குறைகளை சரிசெய்யும் முயற்சியை செய்தால் நலம்.

          என்ன தான் நன்னெறிகளை பரப்பினாலும் எல்லா மதநூல்களும் பல பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களால் எழுதப்பட்டதால் அவற்றில் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையில் உள்ள குறைகள் அந்த புத்தகங்களிலும் உள்ளன. அவற்றை அப்படியே பின்பற்றுவதை விட, அந்த புத்தகங்களை தற்காலிக வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றங்களை செய்து அதில் உள்ள நன்னெறி, அறம் சார்ந்த கருத்துக்களுக்கு முன்னுரிமை அளித்து அனைவரையும் அரவணைத்து வாழப்பழகினால் இவ்வுலகத்தில் பிரச்சினைகளே இருக்காது.

          எந்த மதம் என்றாலும், மத நூல் என்றாலும் அது மனிதனால் எழுதப்பட்டதே என்பது எனது கருத்து. அந்த மதநூல்களில் உள்ள நன்னெறி கருத்துக்களை மட்டும் நாம் உள்வாங்கி, தேவை இல்லாத கருத்துக்களை, மற்ற மதக்கடவுள்கள் மேல், மற்ற மதத்தை வழிபடுபவர்கள் மேல் உள்ள எதிர்மறையான கருத்துக்களை ஒதுக்கி விட வேண்டும்.

  6. சவுதி அரேபியாவில் நடப்பது அப்பட்டமான சர்வாதிகார ஆட்சி. வஹாபியம் சார்ந்த மதவாத ஆட்சி. ஷியாக்களைக் கொன்று குவிக்கவே இராக்குக்கு எதிரான நடவடிக்கையில் சவுதி ஈடுபட்டது. குவெய்த்தை முன் நிறுத்தி, இராக்கின் சத்தாம் ஹுசேனைக் குறிவைத்து சவுதி அரச குடும்பம் நடத்திய சதிக்கு அமெரிக்கா கைக் கூலியாகச் செயல்பட்டு, இராக்கில் இல்லாத ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டி சதாமைத் தூக்கிலிட்டது வரலாறு.

    மத அடிப்படைவாத சவுதி அரசுதான் தற்போது ஏமனில் பதிலிப் போரில் ஈடுபடுகிறது என்பதும் உண்மை. ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு உலகெங்கும் இருக்கும் சுன்னி இஸ்லாமிய அரசுகளும், பெருந்தனக் காரர்களும் நிதி, ஆயுத மற்றும் பல்வேறு உதவிகள் அளித்துவருவது கண்கூடு.

    அல் கொயிதா, லஷ்கர் இ தொய்பா, ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு இத்தகைய உதவிகள் செய்பவர்கள் அனைவரும் இஸ்லாமிய அதிலும் குறிப்பாக சுன்னி சாதியினர் என்பது உண்மை என்றாலும் கட்டுரையாளர் கண்ணிலும் கருத்திலும் இது உரைக்கவில்லை. சுன்னியிசம் என்பது உயர்நிலை, அது குறித்து எழுதினால் சாமி குத்தம் ஆகி பட்வாவுக்கு ஆளாக வேண்டும்.

    காஃபிர், ஜிஹாத் ஆகியவை குறித்துக் குரான் கூறுவது பற்றிக் கண்டுகொள்ளக் கூடாது என்பது வாழ்நாள் விரதமாகவே சிலருக்கு இருக்கிறது என்பதால்தான், இன்னமும் காஃபிர்களுக்கு எதிரான ஜிஹாத் நடக்கிறது.

    இந்தியாவில் இருக்கும் காஃபிர்கள் அனைவரும் அழியும் வரை ஜிஹாத் தொடரும், அப்போதும் கூட வினவு காஃபிர், ஜிஹாத் ஆகியவை குறித்து எழுதாது, ஆனால் அதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எப்படிக் குறை கூறலாம் என்று ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதும்.

    பாரிசில் அல்லாஹூ அக்பர் என்று கூவிக் கூவிக் கொலை செய்தாலும், அதற்கும் அமெய்ர்க்காதான் காரணம் என்று கூவும் போக்கைப் பாசிசம் என்றுதான் வரையறுக்க வேண்டும்.

    • Not sure why you still thinking in religion line and deviating the others.
      Lets go by your take on Saudi is the preparator and USA is their executor in the middle east issues. Any preparator will do something for gain. If you say the gain for them is eradicating another sect of peoples in their own religion and that is the main root cause for all these issues, then you are not still matured. The World is going in different direction and you are still thinking in 15th century lines. May i know why Saudi & other oil exporting countries till now not able to trade using their own currency and need to hang on with US dollar?. Not to say its universal currency for trading. Then you are not much into economics. If any oil rich country start to trade in their own currency the so called universal currently will lose its value in the market. It will result in other local currencies elevate and become more buying power than USA. It will result in more super powers in middle east than in western world.Iraqi president tried to introduce this in middle east as well as his policies are against western manipulations.Do you think your so called preparators for these issues will go low with the executors? Try to think rationally way and come to the forum. The religion is one of the reason taken by western countries to divert their actions. They also mention North korea as one of the evil nation. Do you think NK is again stick to your religion religion. Whoever against their goal are termed as evil nations.

  7. It happened in france, so peoples and medias decided as hot topics blaming each others mainly ( religion/country policy et all) , if it is happen in yemen/afgan/myanmar/pakistan/nepal/india and other african countries….its a became daily news. no western media/Human rights bothered, as usual we always like it.

  8. பல புரட்சிக் கட்டுரைகளை நெருப்பு தெறிக்க எழுதும் வினவு என் பின்னூட்டத்திற்கு எதற்காக இத்தனை பதட்டம் அடைகிறது என்று தெரியவில்லை. வாழ்க உங்கள் சகோதரத்துவ சித்தாந்தம். வாழ்க உங்கள் காம்யூநிஸ்ட் கொள்கை.

  9. ஏம்பா அஞ்சன் குமார் !!! இந்த கட்டுரையிலேயே சவூதி வகாபிசம் குறித்தும், இஸ்லாமிய மத வெறி குறித்தும், இந்த மதவெறி வளர்வதற்கு இஸ்லாமை கண்மூடித்தனமக பின்பற்றுவதும்தான் காரணம். இந்த மதவெறியை மேற்குலகம் தனக்கு பயன்படுத்தி கொள்கின்றது என்பதை தெளிவாக சொல்லி இருந்தாலும், இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஜல்லி அடிப்பது ஏனே

    • ஆதவன்,

      அஞ்சன் குமார் போன்ற ஞானிகள் வினவு கட்டுரையின் தலைப்பை மட்டுமே படிப்பாங்க. உடனே ஞான ஒளி கிற்று அவர்களின் ஆன்மாவில் சுரக்கும். ஆன்மாவின் கட்டளைக்கு இணங்க விரல்கள் துறுதுறுக்கும்.தட்ட தொடங்கும்.. தமிழ் தட்டச்சு பலகை திரு திருன்னு முழிக்கும், திணறும். அப்புறம் என்ன இனைய தள இணைப்புகள் தடுமாற தடுமாற அடிச்சி தள்ளவேண்டியது தானே மீதியெல்லாம்.

  10. மதங்களை உருவாக்கியது கடவுள் அல்ல மனிதர்களே.
    மதநூல்களை எழுதியதும் கடவுள் அல்ல மனிதர்களே.

    அடுத்த மதத்துக்காரனை கொலை செய்ய சொல்வது கடவுள் அல்ல, கடவுள் பெயரை உபயோகிக்கும் மனிதர்களே.

    சிவன், ராமன், முகம்மது நபி, புத்தன், இயேசு, அனைவரும் மனிதர்களே. அவர்கள் கடவுளும் அல்ல கடவுளின் தூதர்களும் அல்ல.

    நம் இதிகாச கதைகள் அனைத்தும் அப்போது நடந்த சில சிறு சிறு நிகழ்வுகளுக்கு கடவுள் சாயம் பூசி இறை இதிகாசங்களாக சித்தரிக்கபடுகின்றன.

  11. Vinavu,

    Please clarify… Your writers are good in reading right? Koran (translation without explanation by Mullahs) is not that big book to read. Please read its various Tamil or English translations.

    You will find that the book is full of violence, threats with hell, promises of heaven with virgins, subjugation of women, unscientific claims etc.

    This will hold true for most other religious scriptures. But the people who take those scriptures are already a tiny minority within their religions. But in case of Islam, a vast majority still blindly believes Koran.

    The problem with Muslims is, they believe that Koran is unchanged word of God and can’t be reinterpreted in accordance with today’s world. They are brainwashed to believe that every word is true and only by keeping it literally one can go to heaven.

  12. இந்த கட்டுரையை கொஞ்சம் படித்து பாருங்கள் தோழர்களே. அடிபட்டவன் வழியில் துடித்து கொண்டு இருக்க. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இறந்தவர்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல். இந்த முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு அதரவாக அவர்கள் செயலை நியபடுதுகிறர்கள். ஏன் இந்த மனம் கெட்ட பொழப்பு இந்த வினவுக்கு. எப்படி அவர்களுக்கு வலிக்காமல் இந்த கட்டுரை எழுதி இருக்கிறார்கள் பாருங்கள். பாரிஸில் கொள்ளப்பட்ட மக்களுக்கு காரணம் இந்த அமெரிக்காவம். இவர்கள் நடுநிலையை பாருங்கள் என்னை மெஇசிலிர்க்க வைக்கிறது. கல்புர்கி என்ற இந்துமத விரோதி ஒரு தேச துரோகி கொல்லப்பட்டதும். பெருன்பான்மை இந்துக்களை தீவிரவாதி என்று சொன்ன இந்த வினவு. 130 பேரை காவுகொண்ட முஸ்லிம் தீவிரவாதிகளை பொரலிகல் என்கிறது. உன் நடுநிலையை கொஞ்சம் மனசாட்சியோடு ஆராய்ந்து பார். இந்து மதம் இல்லை என்றால் வினவு என்ற இந்த தளம் இருந்து இருக்காது. இந்நேரம் பயங்கர வாதிகள் உங்களை பொசுக்கி இருப்பார்கள். ஏன் என்றால் இஸ்லாம் நேர் எதிரி இந்த கம்யூனிஸ்ட்கள்.

    • ////மறுபுறம் இந்த இயக்கங்களின் பயங்கரவாதங்களுக்கு குறைவில்லாத செயல்களை நடத்திவரும் சவுதி அரசை இவர்கள் கண்டிப்பதில்லை. கூடவே சவுதியின் நல்லெண்ண தூதர்களாகவும் பேசுகிறார்கள்////

      ///இல்லை இது சரிதான் என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை அமெரிக்க தொடர்ந்து தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். நாடுகள், மக்களது சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளில் மதத்தை அடிப்படையாக வைத்துப் பார்ப்பது என்பதை உண்மையில் அல்லாவோ இல்லை நபிகளோ செய்யவில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஏகாதிபத்தியங்களும், அவர்களின் காலை நக்கி வாழும் சவுதி வகாபியசமும்தான் இந்த விபரீதப் பார்வையை இசுலாமிய மக்களிடம் கொண்டு சேர்த்தன////

      எங்கே முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு ????

      • இவர்களுக்கு எல்லாம் விளக்க வேண்டிய தேவையே இல்லை நண்பரே ! இவர்களில் சிலருக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் திவிரவாதத்தை அரபு தேசங்களில் ஊக்குவிக்கின்றது என்றால் ஒவ்வாமையாக இருக்கும். மற்றும் சிலருக்கு இஸ்லாமிய திவிரவாதிகளுடன் சேர்த்து அனைத்து இஸ்லாமிய மக்களையும் வினவு கட்டுரை வாரினால் தான் திருப்தியாக இருக்கும். IS திவிரவாதிகளின் பின்னணியில் இஸ்ரேலும் ,CIA வும் இருப்பது உண்மையென்றாலும் இந்த கட்டுரையை விமர்சிக்கும் இவர்களுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. எல்லா மதங்களும் பிற்போக்கு தனத்துடன் இருந்தாலும் இஸ்லாமிய மக்களை மட்டும் திவிரவாதிகளாக காட்டுவதில் மட்டுமே இவர்கள் இன்பம் காணுகின்றார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க