Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 571

தொழிலாளரை ஒடுக்கும் ஸ்ரீராம் சிட்ஸ் – கண்டனக் கூட்டம்

0

ழைக்கும் மக்களே!

leit-windபன்னாட்டு முதலாளிகளே வியக்கும் வகையில் தங்கள் ஆலைத் தொழிலாளிகளை அடிமைகளாக, உரிமையற்றவர்களாக வைத்திருப்பதில் கும்முடிப்பூண்டி சிப்காட் முதலாளிகளுக்கென தனி இடம் உண்டு. தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கின்ற இந்த பயங்கரவாதச் செயலை ஈவு இரக்கமில்லாமல் நடைமுறைப்படுத்தி அனைத்து நிர்வாகங்களுக்கும் முன்மாதிரியாக கும்மிடிப்பூண்டி லைவிண்டு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஸ்ரீராம் சிட்ஸ் (பைனான்ஸ் கம்பனி) மற்றும் இத்தாலி முதலாளியும் கூட்டு சேர்ந்து காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை நிறுவி இந்தியாவெங்கும் பல ஆலைகளில் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 08 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே சொற்பமான ஊதிய உயர்வை வழங்கியும், ஆலை நட்டத்தில் இயங்குவதாக தொழிலாளிகளை ஏமாற்றி போனசும் இந்நாள் வரைத் தரவில்லை. மேலும் “வாடா, போடா, நாயே” எனத் தினந்தினம் தொழிலாளிகளைத், அதிகாரிகள் திட்டுவதும், மிரட்டுவதும், தங்கள் வேலைகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் ‘ஜால்ரா’ அடித்தால் தான் வேலை செய்ய முடியும் என்கிற நிலைமைக்கு தொழிலாளிகள் தள்ளப்பட்டனர். இவ்வாலையில் பெரும்பான்மையாக உள்ள வடமாநில தொழிலாளர்களினுடைய மனக் கொதிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்நிலைமையில், முதலாளியின் கொடுமையை சகித்து சகித்து தாள முடியாமல் சங்கம் அமைத்தனர். மொழியே தெரியவில்லை என்றாலும் சங்கம் தான் நம் பிரச்சனையைத் தீர்க்கும் என வடமாநிலத் தொழிலாளிகள் உள்ளிட்டு அனைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். சுரண்டி சுரண்டிக் கொழுக்கும் லைட்விண்டு முதலாளியின் கொட்டத்தை ஒடுக்க ஒரே சங்கமாய் அனைவரும் இணைந்தனர்.

சொந்தம் செய்யாததை சங்கம் செய்தது. ஆம். சங்கம் துவக்கிய பிறகு, போராட வேண்டுமென்ற உணர்வைப் பெற்றதோடு, பறிகொடுத்த மானத்தையும் கெளரவத்தையும் மீட்டுக் கொண்டனர் தொழிலாளர்கள். வாடா போடா என்று மிரட்டிய அதிகாரிகள் எல்லாம் புரட்சிகர சங்கம் இருப்பதனால் மிரட்சி அடைந்துள்ளனர். தொழிலாளர்களோ போனசும், ஊதிய உயர்வைக் கூட பொறுமையாக வாங்கிக் கொள்ளலாம், தான் தொழிலாளி வர்க்கம் என்ற தலைக்கணத்தோடு தலைநிமிர்ந்து நடப்பதையே பெருமையாகக் கருதுகின்றனர்.

லைட் விண்டு தொழிலாளிகள் சங்கமாகச் சேர்ந்ததால் பதறிப்போன, SRF-ல் எந்த பதவி உயர்வும் வரவில்லை என்று லைட் விண்டுக்கு தாவிய மனிதவ(தை)ள அதிகாரி நாகேஸ்வரராவ் அவருடைய பாணியிலேயே (காட்டிக்கொடுத்தும், இப்படிப் பல கொடுக்கல்களை) பு.ஜ.தொ.மு சங்கத்தை உடைப்பதற்கு முதலாளிகளின் கைக்கூலி சங்கமான INTUC-ஐ துவக்கி, பெரும்பான்மையைக் காட்டுவதற்கு ஆலையின் அதிகாரிகளையும் மிரட்டி சங்கத்தில் சேர்த்து, 18(1) ஒப்பந்தம் போட்டு சாதனை படைத்த பெருமை லைவிண்டு HR-ஐ யேச் சேரும். இது முழுக்க முழுக்க சட்டைவிரோதம் என்று தெரிந்திருந்தும் 18(1)-ல் அனைவரும் கையெழுத்து போட வேண்டுமென அறிவிப்பது, ஒவ்வொரு தொழிலாளியையும் தனித்தனியே அழைத்து மிரட்டுவது என அனைத்தையும் செய்து பார்த்து மூக்குடைபட்டு போனார். தனக்கு எடுபிடியான சங்கத்தை வைத்துக்கொள்ளவும், உரிமை கேட்கும் சங்கத்தை நசுக்கவும் நிர்வாகம் எவ்வளவு கீழ்தரமான வேலையையும் செய்யச் சொன்னாலும் அதைக் கூசாமல் செய்வது தான் HR வேலை என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.

பு.ஜ.தொ.மு சங்கத்தை உடைக்க INTUC சங்கத்தில் சேர்பவர்களுக்கு அதிக ஊதியம், 08 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட போனஸ், சலுகைகள் தருவதாக அறிவித்த பின்னரும், தொழிலாளிகள் உறுதியாக பு.ஜ.தொ.மு-வில் தான் இருப்போம் “உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்” என்று சவால் விட்டனர். ஆத்திரமடைந்த நிர்வாகம், 05 தொழிலாளிகள் மீது பொய்ப் புகாரின் பேரில் சஸ்பெண்டு செய்து நடவடிக்கை, 06 தொழிலாளிகளில், தமிழ்நாட்டு தொழிலாளிகளை வடமாநிலத்துக்கும், வடமாநிலத் தொழிலாளிகளை தமிழகத்தின் தென்கோடிக்கும் சட்டவிரோதமாக DEPUTATION என்கிற பெயரில் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது. இப்படிச் செய்வதால் சங்கத்தை உடைக்க முடியும் என மனப்பால் குடிக்கிறது லைவிண்டு நிர்வாகம்.

நிர்வாகத்தின் இந்த டிரான்ஸ்ஃபரை எதிர்கொண்டு, தன் குழந்தையயும் பறிகொடுத்துவிட்டு, சங்கம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உறுதியாக போராடி வருகிறார் ஒரு தொழிலாளி. ஆம்! வடமாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மணிகண்டன் என்கிற தொழிலாளியுடைய மனைவி, நம் கணவர் திரும்பி வரவே மாட்டாட்டார் என்கின்ற மன உளைச்சலிலேயே கருவில் இருக்கின்ற குழந்தையைப் பறிகொடுத்தார். இதற்கு யார் காரணம்? இது முதலாளித்துவ பயங்கரவதம் அல்லவா? உலகம் முழுவதும் கோடானுகோடி உழைக்கும் மக்களை தனது லாபவெறிக்காக கொன்று குவித்து அந்த பிணங்களின் மீது வாழ்ந்து கொண்டிருக்கின்ற முதலாளித்துவத்துக்கு இதுவே சான்று.

நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுத்து நிறுத்த வேண்டிய தொழிலாளர் துறை முதலாளியின் சட்டைப்பைக்குள் அடக்கமாகி விட்டது. உயர்நீதிமன்றத்தில் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என உத்தரவு (ரிட் எண்: WP. 15764 / 2015 ) வாங்கிய பிறகும் நீதிமன்ற உத்தரவை நிர்வாகம் மதிக்கவில்லை

நீதிமன்ற ஆணையை அமுல்படுத்த உத்திரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டால், வருவாய்க் கோட்டாட்சியரை பார்க்கச் சொல்கிறார். வருவாய்க் கோட்டாட்சியரை கேட்டால் தாசில்தாரை பார்க்கச் சொல்கிறார். தாசில்தாரோ மீண்டும் வருவாய்க் கோட்டாட்சியரை கேட்கச் சொல்கிறார். இறுதியாக வருவாய்க் கோட்டாட்சியர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடச் சொல்கிறார். நீதிமன்றத்தாலும், அரசாலும் எந்த முதலாளியையும் கேள்வி கூட கேட்க முடியாது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.

உரிமையைக் கேட்கின்ற தொழிலாளிகளுடைய வேலையைப் பறித்து, குடும்பத்தோடு நடுத்தெருவில் நிற்கவைத்து தொழிலாளர்களை பணியவைக்க உளவியல் ரீதியான தண்டனையை தொடுத்து வரும் முதலாளிகளுக்குத் தண்டனை கொடுப்பது யார்?

சங்கம் துவக்கியதற்காகவே டிரான்ஸ்ஃபர், சஸ்பெண்டு செய்து சங்க முன்னணியாளர்களை சிறைக்கு அனுப்பி பழிவாங்கும் CRP முதலாளி, சம்பளத்தை உயர்த்திக் கேட்டார்கள் என்பதற்காக கும்மிடிப்பூண்டி ஆலையை மூடிவிட்டு செங்கல்பட்டில் ஆலையை நடத்தும் ஏயான்ஸ் முதலாளி. நன்றாக உற்பத்தி நடந்த போதும், நிரந்தர தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமா? அதற்கு பதிலாக குறைந்த கூலி ஒப்பந்த தொழிலாளிகளை வைத்துக் கொள்ளலாமென்ற நோக்கத்தோடு சட்டவிரோதமாக லே-ஆஃப் விட்டு தொழிலாளிகளை வயிற்றில் அடித்துள்ளான் அப்ரஃப் முதலாளி. உரிமை கேட்டால் பொய் வழக்கு போட்டு 04 பேரை பணிநீக்கம் செய்துள்ளது கொட்டடிக் கூடாரமான டால்மியா நிர்வாகம். மேற்கண்ட கும்மிடிப்பூண்டி ஆலை முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற ஆணைகள், தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்கள் அனைத்துக்கும் தனது கழிப்பறை காகிதமாகவே பயன்படுத்தி வருகின்றனர். சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பது, தொழிலாளிகளை நாயினும் கீழாக நடத்துவது, உரிமை என்று வாயெடுத்தாலே பொய் புகார் சொல்லி நடவடிக்கை எடுப்பது என அனைத்து தாக்குதலையும் தொழிலாளிகளின் மீது ஏவி, ஏதுமற்ற அத்துக் கூலிகளாகவும் தனது அடிமைகளாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர் முதலாளிகள்.

எதை முதலாளிகள் விரும்புகிறார்களோ அதையே செய்து கொடுத்து, அவர்களின் நலனையே தனது நலனாக பாவித்து போராடுபவர்கள் மீது குண்டாந்தடியை ஏவி அடித்து நொறுக்குகிறது, அரசு. முதலாளிகள் வீசிஎறியும் எச்சில் துண்டுக்காக தொழிலாளி வர்க்கத்தையே அடகு வைக்கிறது கைக்கூலி தொழிற்சங்கங்கள். தொழிலாளி வர்க்கம் தனது வரலாற்று பாத்திரத்தை அறிந்து கொள்ளாமல் இந்த முதலாளித்துவ சகதியிலேயே கிடந்து சாக வேண்டுமென போதிக்கிறது பிழைப்புவாதச் சங்கங்கள்.

கும்மிடிப்பூண்டியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதுதான் நிலை. வேலைவாய்ப்பு வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாக நாட்டை மாற்றுவதற்காக நாடு நாடாக சுற்றி நம்மை நாசமாக்க பார்க்கிறார் மோடி. அந்நிய முதலீட்டை ‘அட்சயப் பாத்திரம்’ போலவும், அந்நிய முதலீடு குவிந்தால் இந்தியாவை வல்லரசாக்கி விடுவதாகவும் கதையளந்து கொண்டிருக்கிறது ஓட்டுப் பொறுக்கிக் கும்பல். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கொலைக்களத்தில் முதலீடு போட்டு அம்பிகா என்ற ஒரு தொழிலாளியை கொலை செய்து, பல ஆயிரம் தொழிலாளிகளை நடுவீதியில் வீசியெறிந்து கோடி கோடியாய் கொள்ளையடித்துச் சென்றது, நோக்கியா ஆலை. தொழிலாளிகள் வேலையிழந்து வாழ்க்கை இழந்து, பஞ்சப் பராரிகளாய், சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் திரிந்து கொண்டுள்ள நிலை நம் கண்முன் உதாரணமாய் இருக்கிறது. மாபெரும் தொழிற்சங்க ‘சுல்தான்’கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் நோக்கியா தொழிலாளிகளுக்கு ஆதரவாக இல்லை. நோக்கியா ஆலைத் தொழிலாளிகளை அணிதிரட்டி அவர்களுக்கு உணர்வூட்டி, ஆலை திறந்தால் இவர்களுக்குத் தான் முதலில் வேலை தரவேண்டுமென உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றுத்தந்துள்ளது பு.ஜ.தொ.மு.

மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே உழைக்கும் வர்க்கம் மரணக்குழியைக் நோக்கித் தள்ளப்படுகிறது. முதலாளிகளின் நலனை முன்னிருத்தியே தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகிறது. பெயரளவிலானச் சட்டங்கள் இருக்கும் போதே இந்த நிலைமை என்றால், முதலாளிகளின் கைக்கூலி மோடியால் முன்வைக்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிட்டால், தொழிலாளிகள் தற்போது அத்துக்கூலிக்கு விற்கும் உழைப்பை, இனிமேல் முதலாளிகளின் அடிமைகளாகவே வாழ நேரிடும்.

பு.ஜ.தொ.மு தொழிலாளர்களுக்கான உரிமையைக் கேட்டால் தீவிரவாதிகள் என முதலாளிகளினுடைய கைக்கூலிகள் பீதியூட்டுகின்றனர். ஆனால் உண்மை என்ன? பு.ஜ.தொ.மு தலைமையில் உள்ள பல ஆலைகளில் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளைத் தீர்த்து தொழிலாளர் – நிர்வாகம் பரஸ்பர உறவை மேம்படுத்தியுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை என்கிற இந்த வட்டத்துக்குள்ளேயே தன்னை குறுக்கிக் கொள்ளாமல் “ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமே எதிரியாகிவிட்ட முதலாளித்துவத்தையும், அதன் அடியாளான இந்த அரசைமைப்பையும் தூக்கியெறிந்து ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்கும் ஆற்றல் கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் பலத்தை உணரவைத்து, புரட்சிகர போராட்ட பாதையில் தொழிலாளர்களை வழிநடத்தி வருகிற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் தங்களை ஒன்று திரட்டிக்கொண்டு போராட வேண்டியது அனைத்து தொழிலாளார்களின் அவசர, அவசியக் கடமையாக உள்ளது. இந்தக் கொள்கையை நிலைநாட்டவே போராடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி நிச்சயமாய் நிலைநாட்டுவோம். இந்தக் கொள்கையை பின்பற்றுவதால் எங்களை தீவிரவாதிகள் என்று அழைப்பீர்களேயானால், நாங்கள் தீவிரவாதிகளாக இருப்பதற்கே விரும்புகிறோம்!

கும்மிடிப்பூண்டி லைட்விண்டு ஸ்ரீராம் ஆலையின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் லைட்விண்டு ஸ்ரீராம்ன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்றத் தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தலைவர் தோழர் சதீஷ் தலைமையில் நடைபெற உள்ள கண்டனக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் தோழர் நாகராஜ் கண்டன உரையாற்றுகிறார். உழைக்கும் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

லைட்விண்டு ஸ்ரீராம்ன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

leit-wind-meet-bannerமாவட்ட நிர்வாகமே!

  • சங்கம் துவங்கினால் அடக்குமுறை!
    உரிமையை கேட்டால் வேலை பறிப்பு!
  • உயர்நீதிமன்ற உத்தரவையும், மாவட்ட ஆட்சியரின்
    அறிவுரையையும் மயிரளவும் மதிக்காத
    லைட்விண்ட் (LEIT WIND) நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு!

தொழிலாளர்களே

  • முதலாளிகளின் காலை நக்கிப் பிழைக்கின்ற
    பிழைப்புவாத சங்கங்களை விரட்டியடிப்போம்!
  • புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு.வில் (NDLF)
    அணிதிரள்வோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

தேதி : 27-11-2015, மாலை : 05 மணி
இடம் : கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலை
(பாண்டியன் ஹோட்டல் அருகில்)

தகவல்

புதியஜனநாயத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
9445389536

இப்படி ஒரு மருத்துவரை சந்தித்திருக்கிறீர்களா ?

1

“எனக்கு லாபம் முக்கியம். விலையில்லா மருந்து எப்படி விற்க முடியும்?”

“என் நாடு எனக்கு கல்வியளித்தது. நான் எதைச் செய்தேனோ அதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்”

மருத்துவத் துறை தொடர்பாக சமீபத்தில் வெளியான இரு வேறு செய்திகளில் இடம் பெற்றவை இந்தக் கருத்துக்கள். இவை  இரண்டு தனிநபர்களின் கருத்துக்களாக மட்டும் இல்லை. அவர்கள் வாழும்/வாழ்ந்த முதலாளித்துவ மற்றும் சோசலிச சமூகங்களின் விழுமியங்களும் அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்னர் காலை நாளிதழை புரட்டிய அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே காப்பீடு இருந்தால் தான் மருத்துவம் பார்க்கமுடியும் என்று தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், டியூரிங் பார்மசியூடிகல்ஸ் என்ற நிறுவனம் தனது டாராபிரிம் (Daraprim) என்ற மருந்தின் விலையை 5000% (50 மடங்கு) அதிகரித்திருந்தது. ஏதோ பூஜ்யத்தை தவறுதலாக சேர்த்திருப்பார்கள் என்று நினைத்து மேலும் படித்தால் இது நாள் வரை மக்கள் 13.50 டாலருக்கு வாங்கிக்கொண்டிருந்த ஒரு மாத்திரையின் விலை 750 டாலராக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது அந்நிறுவனம். இம்மருந்தின் தயாரிப்பு செலவு 1 டாலர் எனக் குறிப்பிடுகின்றன அமெரிக்க பத்திரிகைகள்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் toxoplasmosis என்ற நோய் தொற்றிற்கும், நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக உள்ளவர்களுக்கும், குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகள்க்கு ஏற்படும் நோய்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

Martin Shkreli
டியூரிங் பார்மா முதலாளியும் 32 வயதான இளம் தொழில் முனைவோருமான மார்டின் செக்ரிலி

இந்த விலையேற்றம் குறித்து அதிருப்தி எழுந்தபோது  டியூரிங் பார்மா  முதலாளியும், 32 வயதான இளம் தொழில் முனைவருமான மார்டின் செக்ரிலி (Martin Shkreli) உதிர்த்த சந்தை பொருளாதார விழுமியங்கள் தான் முதல் வரியில் நீங்கள் படித்த, “எனக்கு லாபம் முக்கியம்” எனும் கருத்து.

5000% (50 மடங்கு) விலையேற்றம் எந்தவிதமான குற்ற உணர்ச்சியையும் முதலாளிக்கு ஏற்படுத்தவில்லை. சந்தையில் அரசு தலையிடக்கூடாது என்பதால் விலையேற்றம் செய்தவரை அமெரிக்க அரசு தண்டிக்கவுமில்லை.  இதுதான் இவர்களின் சந்தைப் பொருளாதாராத்தின் அறம். முதலாளித்துவ விழுமியங்களில் ஈரத்திற்கு கிஞ்சித்தும் இடமில்லை.

இந்தக் கொள்ளை லாபமில்லாமல் தங்களால் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய இயலாது என்று நியாயப்படுத்துகிறார் மார்டின் செக்ரிலி. உண்மைதான், மருந்து கம்பெனி முதலாளி முதல் முதலாளித்துவ  ஆய்வாளர்கள் வரை அனைவரையும் இயக்குவது சக மக்கள் மீதான நேசமல்ல. பணம், பணம் மட்டும் தான் என்பதை  வேறு வேறு வார்த்தைகளில் நமக்கு புரியவைக்கிறார் இந்த இளம் தொழில் முனைவர்.

இது ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் லாபவெறியல்ல. அமெரிக்க மருந்து நிறுவனங்களின் விலையேற்றத்தை பட்டியலிட்டுள்ளது நியூயார்ட் டைம்ஸ் பத்திரிக்கை. Rodelis Therapeutics என்ற நிறுவனம் காசநோய்க்கு பரிந்துரைக்கப்படும் Cycloserine  என்ற தனது மாத்திரையின் விலையை 500 டாலரிலிருந்து 10,800 டாலராக உயர்த்தியிருக்கிறது. இந்த விலையேற்றத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார் அதன் பொதுமேலாளர் Scott Spencer. ஆகஸ்ட் மாதத்தில் Marathon paarma நிறுவனம் தனது இதய நோய்க்கான மருந்தான Isuprel, Nitropress-ஐ முறையே 525%, 212%  உயர்த்தியிருக்கிறது. 2014-ல் Doxycycline என்ற மருந்து ஒரு பாட்டில் 20-டாலரிலிருந்து 1849 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் இன்னும் நீளுகிறது.

இச்செய்தி வெளியான சில நாட்களில் தான் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இச்செய்தியை முழுமையாக தெரிந்துகொள்ள வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

முதலாளித்துவ உலகினரால் வெறுக்கப்படும் தோழர் மாவோ, தன் நாட்டு மக்களும், அமெரிக்க எதிர்ப்பு போரில் ஈடுபட்டிருக்கும் வியட்நாம் மக்களும் மலேரியாவில் கொல்லப்படுவதை கண்டு உடனடியாக அதற்கு தீர்வு காண விழைகிறார். 1960-களில் தோழர் மாவோ வழிகாட்டுதலின்படி மலேரியா மருந்து கண்டுபிடிக்க 523 என்ற  இரகசிய பெயரில் குழு அமைக்கப்படுகிறது. அதில் ஒருவர் தான் து யோயோ (Tu Youyou). தற்போது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றிருப்பவர்.

Chairman-Mao
தோழர் மாவோ

அது கலாச்சார புரட்சி காலகட்டம். மக்கள் தான் எஜமானர்கள், மக்களுக்கு பயன்படும்  அறிவியல் ஆய்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டன.  மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அதிகார வர்க்கத்தினரும், அறிவுத்துறையினரும் கிராமப்புற பணிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். பல்கலைக் கழக வேந்தர்கள் சமையல் செய்ய நேர்ந்தது. உயர் அதிகாரிகள் கழிவறை சுத்தம் செய்ய நேர்ந்தது. மக்கள் கமிட்டிகள் மேற்கண்ட முடிவுகள் எடுக்கும் அதிகாரம் படைத்தவையாயிருந்தன. மக்கள் உண்மையில் எஜமானர்களாயிருந்தார்கள்.  மக்களை நேசித்த அறிவுத்துறையினர் மக்களிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தனர். அதிகாரம் செய்ய பிறந்ததாக கருதிக்கொண்டவர்கள் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கருதினார்கள். அத்தகையவர்களை முன்னிட்டு மேற்கத்திய நாடுகளின் மூலம் கலாச்சார புரட்சி குறித்த அவதூறுகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

இக்காலகட்டத்தில் தான் தோழர் மாவோவின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட மலேரியா மருந்து கண்டுபிடிப்பு குழுவில் சேர்க்கப்படுகிறார் து யோயோ; சீனாவில் மலேரியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஹூனான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். தன் நான்கு வயது குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு மலேரியா மருந்து கண்டுபிடிக்கும் பணியை துவக்குகிறார் து யோயோ. (சோசலிச சீனாவில் உழைக்கும் பெண்களின் குழந்தைகளை பல மாதங்கள் கூட கவனித்துக் கொள்ளக்கூடியதான சிறந்த காப்பகங்கள் செயல்பட்டு வந்தன என்பதை இதனூடாக அறிந்துகொள்ள முடிகிறது.)

tuyouyou-2
இளவயதில் து யோயோ

பல மாதங்களுக்கு பின்னர் வேலையை முடித்து திரும்பி வரும்போது குழந்தையால் இவரை அடையாளம் காண முடியவில்லை. கிராமப்புறங்களுக்கு சென்று வேலை செய்ய பணிப்பதையே  கலாச்சாரபுரட்சியின் கொடூரங்களாக கருதியவர்களிடையே  குழந்தையை பிரிந்த தூ யோயோ -வை இயக்கியது எது? அவரே கூறுகிறார்.

“எனது சொந்த வாழ்க்கையை இழக்கக்கூட தயாரக இருக்குமளவுக்கு இந்த வேலை முக்கியமானதாக இருந்தது. மலேரியாவின் இறுதி நிலையிலிருந்த பல குழந்தைகளை அங்கு கண்டேன்.  அக்குழந்தைகள் வெகு வேகமாக செத்துக் கொண்டிருந்தார்கள்.  பல குழந்தைகள் நோயால் செத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு என்று சொந்த வாழ்வு இருக்க முடியுமா” என்று கூறினார் தூ யோயோ. உழைக்கும் மக்களின் நலனே பெரியது என்ற  அன்றய சோசலிச சீனாவின் விழுமியம் இவரையும் ஆட்கொண்டிருந்தது.  அனால் அமெரிக்க சந்தை பொருளாதார அறமோ நோயாளிகளின் நடுவே நின்று  “எனக்கு லாபம் முக்கியம்” என்று முழங்குகிறது. 5000% விலையேற்றுகிறது.

மக்களிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் பால பாடங்களில் ஒன்று. அப்படித்தான் அன்றைய தலையாய பிரச்சனையான மலேரியாவிற்கும் மக்களின் பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு கிடைக்க்குமா என்று ஆய்வு செய்யப்பட்டது. தோழர் மாவோவின் வழிகாட்டுதலின்படி சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்படத்தக்க அம்சங்களை ஆய்வு செய்தார்கள். அக்குபஞ்சர் முறையில் மலேரியாவை குணப்படுத்த இயலுமா என்று ஒரு குழு ஆய்வு செய்துகொண்டிருந்தது.  தூ யோயோ  சீனாவின் நாட்டின் பல பாகங்களுக்கு பயணம் செய்து பாரம்பரிய மருத்துவர்களை சந்தித்து மருந்து குறிப்புகளை சேகரிக்கிறார். பல முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு ஒரு மருத்துவக் குறிப்பு நம்பிக்கையளிப்பதாக தெரிகிறது.

tuyouyou_2அதை மேலும் ஆய்வுக்குட்படுத்தி செழுமைபடுத்தி வெற்றிகரமாக எலியின் மீது சோதனை செய்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு இந்த மருந்து சரி வருமா? வேறு விளைவுகளை ஏற்படுத்துமா? உறுதியாக தெரியாத சூழ்நிலையில்  து யோயோ யும் அவரது குழுவினரும் தங்கள் மீதே பரிசோதித்துக்கொள்கிறார்கள்.   இது குறித்து  அளித்திருக்கும் பேட்டியில் அவர் கூறுகிறார்

“ மருந்து ஆய்வு குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இது எனது கடமை”.

தங்கள் மீது பரிசோதனை செய்து பாதிப்பில்லை என்பதை உறுதி செய்த  பிறகு உடனடியாக மலேரியா பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் மீதும் ஆய்வு செய்கிறார்கள்.

முதலாளித்துவ விழுமியமோ மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீது  அவர்களுக்கே தெரியாமல் மருந்து பரிசோதனைகள் செய்து ஆண்டுக்கு பல ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்துவருகிறது. ஆனால் சோசலிச சீனாவில் மருத்துவ ஆய்வாளர் தன் மீதே பரிசோதனை செய்து கொள்கிறார். பாதிப்பில்லை என்று உறுதி செய்த பின்னர் மக்கள் மீது பரிசோதிக்கப்படுகிறது. சோசலிச சீனா தன் நாட்டுமக்கள் மீது ஏகாதிபத்திய நிறுவனங்கள் மருந்து பரிசோதனை செய்வதையும் தடை செய்திருந்தது.

சோசலிச செஞ்சீனம் தயாரித்த மருந்து தான்  இன்று உலகமுழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை மலேரியாவிலிருந்து மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தோழர் மாவோவின் வழிகாட்டலில் கலாச்சார புரட்சி காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பயின்ற விஞ்ஞானிகளினால்  உலகிற்கு வழங்கப்பட்ட கொடை இது.

சோசலிச விழுமியங்கள் தனி நபரை முன்னிறுத்துவதில்லை. தனி நபர்களின் பெயரில் இல்லாமல் சமூக சொத்தாகத்தான் இவர்களது கண்டுபிடிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தங்களது பெயர் வெளிவரவில்லை என்பது குறித்து இவரது குழுவில் எவருக்கும் வருத்தமில்லை.  சோசலிச சமூகம் கூட்டுத்துவத்தில் தான் நிறைவு கண்டது.

விருது பெற்றபின் து யோ யோ அளித்த பேட்டியில் கூறுகிறார்,

“நாங்கள் கூட்டுத்துவத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். எங்கள் நாட்டில் தனிநபர்களுக்கு விருதளிப்பதில்லை. அணிகளுக்கு தான் அளிப்பது வழக்கம். வெளிநாட்டினர் அப்படியல்ல. அவர்கள் தனிநபர்வாதிகள்.  அதனால் தனி ஒருவராக எனக்களித்துள்ளார்கள்.” என்று பதிலளித்துள்ளார்.

இது வெறும் அடக்கமல்ல. இரண்டு சமூகங்களின் விழுமியங்களுக்கு இடையிலான முரண்பாடு. இன்றய முதலாளித்துவ சீனாவில் மாவோவின் சீனத்தில் இருந்த சோசலிச விழுமியங்களுக்கு இடமில்லை.

அதனால் தான் இந்த கண்டுபிடிப்பு மூலம் உங்களுக்கு பொருளாதார பலன் எதுவும் கிடைக்கவில்லையே என்ற கேள்விக்கு  து யோயோ  அளித்த பதிலில் வருத்தத்தின் சாயலை கூட நம்மால் பார்க்கமுடியவில்லை. கொள்ளை லாபமில்லாமல் தங்களால் தொழில் நடத்தமுடியாது என்ற முதலாளித்துவ மருந்து நிறுவனங்கள் கூறும் வழக்கமான பிலாக்கணத்தில்  மனிதாபிமானத்தின்  சாயலை கூட பார்க்க முடியாது. இரு சித்தாந்தங்களும் விழுமியங்களும் இதில் மோதிக்கொள்கின்றன.

tuyouyou-1
து யோயோ

“அறிவை அடக்கிவைக்க முடியாது” என்கிறார்  து யோயோ . ஆனால்  காப்புரிமை இருந்தால் தான் மேலும் மேலும் ஆய்வு செய்ய முடியும் என்கிறது முதலாளித்துவம்.

மனிதர்களின் உடல்நலனுக்காக போராடுவது விஞ்ஞானிகளின் கடப்பாடு என்கிறார்  து யோயோ. கொள்ளை லாபமில்லாமல் அடுத்த மருந்து தயாரிக்க முடியாது என்கின்றன முதலாளித்துவ மருந்து நிறுவனங்கள்.

விருதுகளை விட நோயாளிகள் குணமடையும்போது அதிகம் மகிழ்கிறேன் என்கிறார்  து யோயோ. பங்குச்சந்தையில் பங்கு மதிப்பு உயர 5000% விலையேற்றத்தையும் செய்ய துணிகிறது அமெரிக்க மருந்து நிறுவனம்.

நோயாளிகள் மட்டுமல்ல விஞ்ஞானிகளும்கூட இன்று முதலாளித்துவத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள். நிறுவனம் விரும்புகிற ஆய்வுகளை செய்து கொடுக்கும் கூலியாட்களாக விஞ்ஞானிகளை மாற்றியிருக்கிறது முதலாளித்துவம். மக்கள் மத்தியில் பழக்கத்திலிருக்கும் அறிவுக்களஞ்சியங்கள் வீணடிக்கப்படுகின்றன. முதலாளித்துவ தளைகளிலிருந்து விஞ்ஞானத்தை விடுவிக்கும்போது தான் உழைக்கும் மக்களுக்கான கண்டுபிடிப்புகள் சாத்தியம்.

நமது நாட்டிலும் மக்களின் பாரம்பரிய அறிவும் வீணடிக்கப்படுகிறன. மஞ்சள் பாசுமதி போன்றவற்றிற்கு ஏகாதிபத்திய நிறுவனங்கள் காப்புரிமை பெறுகின்றன. நாட்டின் அறிவுச்சுரங்கள்கள் முதல்  கனிமச்சுரங்கங்கள் வரை ஏகாதிபத்தியங்களால் கொள்ளையிடப்படுகின்றது. இதற்காக பழங்குடிமக்கள் இந்திய அரசினால் வேட்டையாடப்படுகின்றனர்.  அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க உள்நாட்டு போரையே நடத்துகிறது அரசு.

பாரம்பரிய அறிவு ஏகாதிபத்தியங்களால் திருடப்படும் வேளையில் மத அடிப்படைவாதிகளோ மண்டை ஓட்டில் மருந்து தயாரிப்பதில் ஆரம்பித்து,  கோமியத்தில் புற்று நோய்க்கு மருந்திருக்கிறது, திருநள்ளாறில் செயற்கைகோள்கூட ஜெர்க் ஆகிறது என்பதாக மூடநம்பிக்கைகள் நிரம்பி வழிகின்றன. கிரானைட் முதலாளிகளில் ஆரம்பித்த பல வகையான நரபலி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

நிலப்பிரபுத்துவத்தைம் ஏகாதிபத்தியங்களையும் வீழ்த்தும் போது தான் சோசலிசச சீனா போன்று மக்களுக்கான அறிவியல் ஆய்வுகளை முன்னெடுக்க முடியும். கொள்ளை லாபமீட்டும் முதலாளித்துவ விழுமியங்கள் வீழ்த்தப்பட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட கூட்டுத்துவத்தில் நிறைவு காணும் சோசலிச விழுமியங்களை நிறுவுவதற்கு அரசியல் ரீதியில் வேலை செய்வதே இன்றைய தேவை.

– ரவி

மேலும் படிக்க

பெரியாரையும், பிள்ளையாரையும் இணைத்த கோவை DYFI மாநாடு

1
பெரியார், அம்பேத்கர், நேதாஜி, பாரதியார், விவேகானந்தர்
கோவை டைஃபி மாநாடு
சே குவேரா, பகத்சிங்கிற்கு இணையாக…

ந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாடு, பொதுக்கூட்டம், இலட்சிய இளைஞர் பேரணி என கோவையில் ஏகத்துக்கும் விளம்பரம் செய்திருந்தார்கள். கடந்த ஞாயிறு 22-11-2015 அன்று மாலை துடியலூருக்கு சென்றிருந்தோம். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்ற வரிகளுடன் டீ ஷர்ட்டுகளும், சிவப்பு நட்சத்திர பனியன்களுமாய் மும்முரமாய் மேடையை அமைத்துக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் பிளக்ஸ் போர்டுகளை வைத்து நிரப்பியிருந்தார்கள். அனைத்திலும் பகுதி பொறுப்பாளர்களின் புகைப்படங்களை போட்டு நிரப்பியிருந்தார்கள்.

அதிலும் ஒரு பிளக்ஸில் பகத்சிங், சேகு வேரா புகைப்படங்களுக்கு நடுவில் ஒருவரின் புகைப்படம் பளிச்சிட்டது. யார் இந்த புரட்சியாளர், உலக அளவில் இவரது படம் பிரபலமாயிருக்கும் போது நமக்கு ஏன் தெரியவில்லை என்று குற்ற உணர்வு குடைந்தெடுத்தது.

பிறகுதான் நினைவுக்கு வந்தது. விநாயகர் சதுர்த்தியின் போது வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் வைத்து செங்கொடி இயக்கத்துக்குள் ஒரு புரட்சியை புதிய திருப்பத்தை படைத்தவர்கள் இதே கோவையை சேர்ந்த டைஃபியினரே. விரைவில் தல, இளைய தளபதி படங்களுக்கும் வாழ்த்துக்களை எதிர்பார்க்கலாம். வெறும் புரட்சியோடு ஸ்பெசல் புதுமையை கலந்தவர்களாயிற்றே!

அதற்கு ஆதராமாக அங்கு இசைக்கப்பட்ட பாடல்களை குறிப்பிடலாம். ஒரு காலத்தில் ம.க.இ.க வின் பாடல்களை மொத்தமாக காப்பியடித்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது யாரோ சினிமாக் கவிஞரை பிடித்து விட்டார்கள் போலும்.

“நடுங்குனா நாயும் கூட நம்மை மிரட்டும்.
துணிந்தால் கோழி கூட கழுகை விரட்டும்.
அடங்கிப் போனா சிங்கம் கூட அடுப்பில் கொதிக்கும்
திமிறினா ஆடு கூட காட்டை ஜெயிக்கும்“

என்பன போன்ற கருத்தாழமிக்க அரசியல் பொருட்செறிவுள்ள பாடல்களை கொண்டு ஏரியாவாசிகளை மிரட்டிக் கொண்டிருந்தனர். என்ன இருந்தாலும் ” சென்னையை தாண்டுனா காட்பாடி, காட்பாடியைத் தாண்டுனா டெட்பாடி” என்று ரஜினி பன்ஞ்ச் மண்ணில் வாழ்பவர்களாயிற்றே. அடுத்து இலட்சிய இளைஞர்கள் பேரணி துவங்கவிருக்கும் வடமதுரைக்கு சென்றோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போனவுடன் சந்தேகமாகிவிட்டது. அவசரப்பட்டு வந்துட்டாமோ ஒருத்தரையும் காணோமே என்று. பிறகு சிறிது சிறிதாக ஆட்கள் சேரத் துவங்கினர். ஜமாப் மேளம் அடிக்க தாழ்த்தப்பட்ட இளைஞர் குழு ஒன்றை கூட்டி வந்திருந்தனர். பொள்ளாச்சி, ஆனைமலை, அன்னூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் முழக்கமிட்டவாறே இணைந்தனர். அவர்கள் அடிக்கத் துவங்க குத்தாட்டத்துடன் துவங்கியது ‘இலட்சிய’ இளைஞர் பேரணி. வாயில் பான்பராக்கை போட்டு குதப்பி துப்பியவாறு நடனத்தை துவக்கிய ‘தோழர்’ நேரம் செல்ல செல்ல பரவச நிலைக்கு சென்ற சாமியார் போல இஷ்டப்படி குதிக்கத் துவங்கினார். முன்னாள் மூத்தவர்கள் சிலர் வந்து பேரணியை துவக்குமாறு கூறவே, அடுத்து உடனே பெரியார், அம்பேத்கர், அப்துல் கலாம், நேதாஜி என பல பதாகைகளை எடுத்துப் பிடித்து துவக்கினர்.

இலட்சிய இளைஞர்கள் மிக மெதுவாக நடந்து ஒரு வழியாக பொதுக்கூட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வரும் முன்னரே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் லட்சியப் பயணம் என ஆர்கெஸ்ட்ரா பாணியில் ஒருவர் மேடையில் அறிவித்துக் கொண்டிருந்தார். 260 நாற்காலிகளில் எப்படி ஆயிரம் பேர் உட்கார்வது என நாம் யோசித்துக் கொண்டிருந்த போது பொதுக்கூட்டம் துவங்கியது. புதிய நிர்வாகிகளை மேடைக்கு அழைத்து அமர வைத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தலைமையுரை சிறப்புரை என அனைத்து உரைகளிலும் டைஃபி யின் சாதனைகளாக சொல்வதை இரண்டே வரிகளில் சுருக்கிக் கூறுவதனால்

“நாங்கள் மதுவுக்கெதிராக 4000 கிலோமீட்டர் நடைப்பயணம் போனோம்.”

“அதிக முறை ரத்த தானம் செய்ததற்காக கலெக்டர் கையால் பரிசு வாங்கியுள்ளோம்”

“மக்களுக்காக போராடுகிறோம்.”

வரும் பேச்சாளர்கள் அனைவரும் நடப்பு அரசியலை பேசுவது, ஜெயலலிதாவை மோடியை ஊறுகாய் போல விமர்சிப்பது பிறகு மேற்கூறிய வார்த்தைகளை கூறுவது என்றே இருந்தது. துண்டறிக்கையிலும் கூட இவற்றையே அச்சிட்டுருந்தார்கள்.

அவர்கள் தொண்டை நரம்பு புடைக்க கோஷம் எழுப்பிய “எல்லோருக்கும் வேலை வேண்டும்” “கல்வி வேண்டும்” என்பதற்காக என்ன போராட்டம் எப்படி செய்தார்கள் என்று சொல்லவில்லை. அதற்குள் வருஷமும் முடிந்து மாநாடும் நடத்தி அடுத்த ரவுண்டுக்கு ஆட்களை தயார் செய்தும் ஆயிற்று.

பெரியார்
விநாயகர் சதுர்த்திக்கும் பிளக்ஸ் வைப்பது, பெரியார் புகைப்படத்தையும் பிடித்துக் கொள்வது.

கூட்டம் துவங்கிய ஒரு மணி நேரத்துக்குள் மழை வேறு துவங்க, அனைவரும் அருகிலிருந்த பேக்கரிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். நடக்கவிருந்ததாக துண்டறிக்கையில் போட்டிருந்த கலை நிகழ்ச்சி எதுவும் இன்றி அவசர அவசரமாக முடித்து விட்டனர். இருந்த 150 பேரில் பெரும்பகுதி காலியாயிற்று. காங்கிரஸை, மோடியை விமர்சித்தவர்கள் காங்கிரசுடன் சி‌.பி‌.எம் கூட்டணி வைத்தது பற்றி அறிந்திருக்கவில்லை போலும். விநாயகர் சதுர்த்திக்கும் பிளக்ஸ் வைப்பது, பெரியார் புகைப்படத்தையும் பிடித்துக் கொள்வது, அவ்வப்போது விவேகானந்தரையும் தொட்டுக் கொள்வது. என்னதான் சார் உங்க கொள்கை என மக்கள் கேட்காத குறை. மாட்டுக்கறி பிரியாணியையும், அக்கார அடிசலையும் கலந்து கட்டி அடித்தால் வரும் குழப்பமே அங்கே தலை விரித்தாடியது.

ரூ.80,000 செலவு செய்து இந்த மாநாடு போட்டு என்ன பிரயோசனம் என்று தெரியவில்லை. பொதுக்கூட்டத்தில் நம் அருகே அமர்ந்திருந்த டைஃபியின் முன்னாள் உறுப்பினரான ஒரு பெரியவர் இளம் நிர்வாகி ஒருவரிடம் கூறிக் கொண்டிருந்தார். “நமக்கு முதலில் ஸ்தாபன பலம் வேண்டும். அப்பதான் ஏதாவது பிரச்சினைன்னா நிக்க முடியும். அடுத்து பொருளாதார பலம் வேண்டும் அது இல்லாட்டி எதுவும் முடியாது” என்று. இத்துணை வருடங்களாக இருக்கும் அந்த பெரியவருக்கு இவையிரண்டையும் தாண்டி அரசியல் பலம் தேவை என்பது தெரியவில்லை.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மூணாறு: பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம் !

0

கேரள மாநிலத்தில் மூணாறில் அமைந்துள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் அவர்களின் போனஸ் கோரிக்கையைச் சாதித்துக் கொடுத்திருப்பதோடு, அம்மாநிலத்தில் உள்ள பிற (கார்ப்பரேட்) எஸ்டேட் நிறுவனங்களும் தமது தொழிலாளர்களுக்கு 20 சதவீதத்துக்குக் குறையாமல் போனஸ் அளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. மேலும், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடுவதற்குச் சம்மதிக்காமல், கடந்த ஒன்பது மாதங்களாக அப்பிரச்சினையை இழுத்தடித்து வந்த எஸ்டேட் நிறுவனங்களை உடனடியாக கூலி உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போடும்படி அடிபணியச் செய்து விட்டது.

12-moonar-workersஇரண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டித் தந்துள்ள இப்போராட்டம் தேயிலை தோட்ட முதலாளிகளை எந்தளவிற்கு அச்சுறுத்தியதோ, அதற்குச் சற்றும் குறையாத அளவில் போலி கம்யூனிஸ்டு கட்சித் தலைமையையும், குறிப்பாக மார்க்சிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கிறது. மார்க்சிஸ்டு கட்சியின் ஆங்கில வார இதழான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி”யில் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்காக சி.ஐ.டி.யு. சமீபத்தில் நடத்திய போராட்டங்களைப் பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ள விளக்கக் கட்டுரையே, அவர்கள் மூணாறில் எந்தளவிற்குத் தனிமைப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் அசாத்தியமான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை. “20 சதவீத போனஸ், 500 ரூபாய் கூலி உயர்வு, குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படையான வசதிகள்” – இந்த மூன்றும்தான் அப்பெண் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள். இவற்றுள் முதன்மையானது போனஸ் கோரிக்கை. தொழிலாளி வர்க்கத்தின் இந்த மிகச் சாதாரணமான கோரிக்கையைக்கூட ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கங்களால் பெற்றுத் தர முடியாமல் போனதற்கு, இத்தொழிற்சங்கங்களின் சமரசம், கைக்கூலித்தனம், துரோகத்தைத் தவிர வேறு காரணங்கள் எதுவுமே கிடையாது. காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி. மட்டுமல்ல, போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவர்களும் நிர்வாகத்தின் கைக்கூலிகளாக மாறி, “சுகஜீவிகளாக” வாழ்ந்துவருவது இப்போராட்டத்தின் ஊடாக அம்பலமாகியிருக்கிறது. ஒருபுறம் தொழிற்சங்க சுல்தான்களின் இந்த துரோகமும், மறுபுறம் சகிக்க முடியாத சுரண்டலும், கொத்தடிமைத்தனமும்தான் பெண் தொழிலாளர்களைத் தமது விதியைத் தாமே நிர்ணயித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தத் தூண்டியது.

உடலை ஊனமாக்கும் உழைப்புச் சுரண்டல்

டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட், கேரளாவின் தேவிகுளம் வட்டத்திலுள்ள கண்ணன் தேவன் குன்றுப் பகுதியில் 1,36,600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 92 டிவிஷன்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்டேட்டில் வேலைபார்க்கும் 14,000 தொழிலாளர்களுள் பெரும்பகுதியினர் பெண்கள். தேயிலைக் கொழுந்துகளைப் பறிப்பதுதான் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலை. இதற்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த கூலி, படிகளையும் சேர்த்து 232 ரூபாய். படிகள் எதுவும் பெறாத நகர்ப்புறக் கூலித் தொழிலாளர்கள்கூட இதனைவிட இன்னொரு மடங்கு அதிகமாகக் கூலி பெறும் உண்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், சர்க்கரை அள்ளிப் போட்ட தேநீர்கூட இனி கசக்கவே செயும்.

இந்த 232 ரூபாய் கூலியைப் பெறுவதும்கூட சாதாரண விசயமல்ல. இதற்கு 21 கிலோ தேயிலையைக் கண்டிப்பாகப் பறிக்க வேண்டும். அதற்குக் குறைந்தால் அடிப்படை கூலியே கிடைக்காது. காலை 8 மணிக்குள் டிவிஷனுக்கு வந்துவிட வேண்டும். டிவிஷனில் வருகைப் பதிவு எடுக்கும்பொழுது ஆள் இல்லாமல் சற்று தாமதித்து வந்தால்கூட அன்று வேலையும் கிடையாது, கூலியும் கிடையாது. இவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் கிடையாது, வேலைக்கு நடுவே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் “பர்மிஷன்” கேட்கவும் முடியாது. அப்படிக் கேட்டுப் போனால், அதற்கேற்ப அடிப்படைக் கூலியில் வெட்டு விழும்.

இந்த நிபந்தனைகளைவிடக் கொடியதும், அபாயமும் நிறைந்தது தேயிலைப் பறிப்பது. தேயிலை பறிக்கச் செல்லும் முன் மேல்கட்டு எனும்படியான ஒரு உடுப்பை இடைக்கு மேலாக இறுக்கமாகக் கட்டிச் செல்ல வேண்டும். இந்த உடுப்பைக் கட்டிய பிறகு அதனை நினைத்த நேரத்துக்கு அவிழ்த்துவிட முடியாது. இந்த மேல்கட்டு உடுப்பே பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் பிரச்சினையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார், போராட்டத்தில் கலந்துகொண்ட சுந்தரவள்ளி. இந்த மாதவிடாய் பிரச்சினையால் பெண் தொழிலாளர்கள் பலருக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்ட அவலத்தையும் சுட்டிக் காட்டுகிறார், அவர். இது கண்ணுக்குத் தெரியாத முடமாகிப் போன நிலை. ஆனால், அதற்காக எந்தவொரு எஸ்டேட் நிர்வாகமும் தண்டிக்கப்பட்டதுமில்லை; கர்ப்பப்பையைப் பறிகொடுத்த பெண்களுக்கு நட்ட ஈடு அளித்ததுமில்லை.

வெறும் 232 ரூபாயைக் கொண்டு குடும்பம் நடத்து முடியாது என்பதால், ஒவ்வொரு பெண் தொழிலாளியும் 21 கிலோவிற்கு மேலேயும் தேயிலையைப் பறிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னொருபுறமோ, கூடுதலாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் கங்காணி தொடங்கி எஸ்டேட் மேலாளர் உள்ளிட்ட அதிகார கும்பலுக்கு “இன்சென்டிவ்” வழங்கப்படுவதால், கங்காணிகள் பெண் தொழிலாளர்களைச் சிறுநீர் கழிப்பதற்குக்கூட அனுமதிப்பதில்லை; தேநீர் அருந்தும்போதுகூட இன்னொரு கை தேயிலையைப் பறித்துக் கொண்டிருக்கும்படி, அட்டைப் பூச்சிகளும் உண்ணிகளும் இரத்தத்தை உறிஞ்சும் வேளையிலும் தேயிலை பறிப்பது நின்றுவிடாதபடி அவர்கள் இயந்திரங்களைப் போல உற்பத்தி செய்து தள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சம்பளம், படி…..மோசடி

பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போனஸ் கோரிக்கையை முன்னிறுத்தி பாலத்தின் வலது புறம் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது, அதனைப் புறக்கணித்து பாலத்தின் இடதுபுறம் பெண் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

தினக்கூலி 232 ரூபாயிலிருந்து படிகளைக் கழித்துவிட்டால், ஒரு பெண் தொழிலாளியின் அடிப்படைக் கூலி 83 ரூபாய்தான். அதாவது, ஒரு கிலோ தேயிலையைப் பறிப்பதற்கு ரூ 3.95 அடிப்படைக் கூலி. ஆனால், 21 கிலோவுக்கு மேல் பறிக்கப்படும் தேயிலைக்கு இந்த அடிப்படைக்கூலி கூடத் தரப்படுவதில்லை. மாறாக, அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ 1.50 தான். அதேசமயம், 21 கிலோவிற்குக் கூடுதலாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோ தேயிலைக்கும் கங்காணிகளுக்கு 4 ரூபாய், நிர்வாக அலுவலர்களுக்கு 6 ரூபாய், மேலாளர்களுக்கு பத்து ரூபாய் இன்செண்டிவ் கிடைக்கும். இப்படி பாரபட்சமான, நியாயமற்ற முறையில் கூலி நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, இந்த அற்பக் கூலியைக்கூட அவர்கள் பெறமுடியாதபடி கங்காணிகள் செயும் தில்லுமுல்லுகளும், மோசடிகளும் தனியொரு கதை. குறிப்பாக, 21 கிலோவிற்கு மேல் பறிக்கப்படும் தேயிலையில் கணிசமாக கழித்துக்கட்டுவதன் மூலம், எங்களின் உழைப்பை எங்களின் கண்ணெதிரே கங்காணிகள் திருடி வருகிறார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், அப்பெண் தொழிலாளர்கள்.

இதற்கு அப்பால், அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அற்பக் கூலியில் பிடித்தம் என்ற பெயரில் ஒரு பகற்கொள்ளையை எஸ்டேட் நிர்வாகம் நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் வளர்க்கும் மாடுகள் எஸ்டேட் பகுதிக்குள் மேவதற்கு மாதம் நூறு ரூபாய் நிர்வாகத்திற்குக் கப்பம் கட்ட வேண்டும். எஸ்டேட் நிர்வாகங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 75 கிலோ அரிசியை ரேஷன் முறையில் தொழிலாளர்களுக்கு விநியோகித்து வருகின்றன. இதற்கு ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் மாதமொன்றுக்கு 750 ரூபாய் பிடித்தம் செய்து கொள்ளப்படுகிறது. அரிசியின் தரத்தை ஒப்பிடும்பொழுது இது அநியாயக் கொள்ளை என்கிறார்கள் தொழிலாளர்கள். மாதம் 28 நாட்கள் முதுகொடிய வேலை செய்தாலும், இந்தப் பிடித்தம், தில்லுமுல்லுகள், மோசடிகள் எல்லாம் போக மூவாயிரம் ரூபாய் முழுசாகக் கிடைத்தாலே அதிருஷ்டம்தான் என்கிறார்கள் பெண் தொழிலாளர்கள். கங்காணிகளும், நிர்வாகமும் நடத்திவரும் இந்தத் திருட்டுத்தனங்களைக்கூடத் தடுக்காமல், தொழிற்சங்கங்கள் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வருகின்றன.

நவீன கொத்தடிமைத்தனம்

லயன் வீடுகள்
பல நூறு கோடி ரூபாய்களை இலாபமாக ஈட்டும் டாடா நிறுவனம் தொழிலாளர்களுக்கு அளித்திருக்கும் குடியிருப்பு : லயன் வீடுகள் எனச் சொல்லப்படும் லாயம்.

எஸ்டேட்டுகள் அவற்றின் இயல்பிலேயே ஊர்ப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தும், போக்குவரத்து வசதியற்றும் இருப்பதால், எஸ்டேட்டுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான குடியிருப்பு, கல்வி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான வசதிகள் அனைத்தையும் நிர்வாகங்கள்தான் செய்துதர வேண்டும். ஆனால், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் தேயிலை எஸ்டேட்டுகளை உருவாக்கத் தமிழகத்திலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் கொத்தடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட, குதிரை லாயங்களைவிடக் கேவலமான “லயன்”கள்தான் இன்றும் தொழிலாளர்களின் குடியிருப்புகளாக உள்ளன. கங்காணி சூபர்வைசராக மாறியிருப்பதைப் போல, லயன்களின் மேற்கூரை தென்னங்கீற்றிலிருந்து ஆஸ்பெஸ்டாக மாறியிருப்பதுதான் நடந்துள்ள ஒரே மாற்றம். எஸ்டேட் நிர்வாகம் நடத்தும் பள்ளிகளில் நான்காம் வகுப்புக்கு மேல் இலவசக் கல்வி கிடையாது என்பதால், தொழிலாளர் குழந்தைகளின் கல்வி அதற்குப் பிறகு கேள்விக்குறியாகி விடுகிறது. தொழிலாளர்களை எந்தவிதமான நோ தாக்கினாலும், எஸ்டேட் மருத்துவமனைகளில் மூன்று நாட்களுக்கு மேல் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கிடையாது.

பெண் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் அன்றாட பாதுகாப்பு, எதிர்காலம் குறித்துதான் மிகுந்த அச்சங்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பணிச்சுமையும், வாழ்க்கைச் சூழலும் குழந்தைகளைக் கவனிக்க முடியாத நிலைக்குத் தள்ளியிருப்பது குறித்துதான் அவர்கள் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். இதனைவிட அதிகமாகக் கூலி கிடைக்கும் வேறு வேலைக்கு மாறிப் போவிடுவதை எஸ்டேட் நிர்வாகங்கள்கூடத் தடுக்க முடியாதுதான். அப்படி போனால், எஸ்டேட் நிர்வாகம் தந்துள்ள வீட்டைக் காலி செய்துவிட வேண்டும் என்பதால், ஆண்கள் வேறு வேலை தேடிப் போனாலும், பெண்கள் இதே, வேலையில் தொடர வேண்டிய அவலத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். இது அத்தாழ்த்தப்பட்ட குடும்பங்களைத் தலைமுறை தலைமுறையாக எஸ்டேட் நிர்வாகங்களின் கொத்தடிமைகளாக இருத்தி வைப்பதை உத்தரவாதப்படுத்துகிறது.

கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட் உள்ளிட்டு அனைத்து எஸ்டேட்டுகளிலும் பெண் தொழிலாளர்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மையினர். வருடமொன்றுக்கு அத்தொழிலாளர்களின் கூலியிலிருந்து 200 ரூபாய் சந்தா பிடித்துக் கொள்ளப்படுகிறது. ஆனாலும், எந்தவொரு சங்கத்திலும் பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. குறிப்பாக, “இந்த ஆண்டு பத்து சதவீதம் போனஸ்தான் தர முடியும் என நிர்வாகம் எடுத்த முடிவை நீங்கள் எப்படி ஒத்துக் கொள்ளலாம்?” எனக் கேள்வி எழுப்பிய பெண் தொழிலாளர்களுக்குப் பதில் சொல்லக்கூட தொழிற்சங்கங்கள் முன்வரவில்லை. மாறாக, தங்களின் கள்ள மௌனத்தின் மூலமும், 10 சதவீத போனஸ் அறிவிப்பை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வந்த உற்பத்திக் குறைப்பு போராட்டத்தைக் கைவிடக் கோரியதன் மூலமும், தங்களை மீறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கக்கூடாது என எச்சரித்ததன் மூலமும் குமுறிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களைத் தொழிற்சங்கங்கள் அவமானப்படுத்தின.

இந்த நிலைமைகள்தான் பெண் தொழிலாளர்களை, தொழிற்சங்கங்களையும், ஓட்டுக்கட்சிகளையும் புறக்கணித்து, “பெண்கள் ஒற்றுமை” என்ற புதிய அமைப்பின் கீழ் அணிதிரண்டு போராட்டத்தில் இறங்க வைத்தது. மூணாறு பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட மக்கள் மட்டுமின்றி, போலீசு அதிகாரிகள்கூட இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றபொழுது, தொழிலாளர்களிடமிருந்து பெறும் சந்தாவைக் கொண்டு வயிறு வளர்த்து வரும் மார்க்சிஸ்டு கட்சியின் மூணாறு பகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ராஜேந்திரன், இந்தப் போராட்டத்தைத் தமிழின தீவிரவாத அமைப்புகள் பின்னிருந்து இயக்குவதாக” வாய்க்கூசாமல் அவதூறு செய்தான். இதற்காக அவனைத் தங்களின் அருகே நெருங்கவிடாமல் துரத்தியடித்த பெண் தொழிலாளர்கள், சி.பி.எம். ராஜேந்திரன் மட்டுமின்றி, மூணாறு பகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.மணி, சுந்தரமாணிக்கம், ஏ.ஐ.டி.யு.சி.ஐச் சேர்ந்த சி.ஏ.குரியன், ஐ.என்.டி.யு.சி.ஐச் சேர்ந்த ஜி.முனியாண்டி உள்ளிட்டு கண்ணன் தேவன் எஸ்டேட் நிர்வாகத்திடமிருந்து பணப்பெட்டிகளை இலஞ்சமாகப் பெற்ற 150 தொழிற்சங்கத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு” தொழிற்சங்கங்களின் துரோகத்தைச் சந்திசிரிக்க வைத்தனர். எஸ்டேட் நிர்வாகத்தின்
அச்சுறுத்தல், தொழிற்சங்கங்களின் புறக்கணிப்பு, அவதூறு ஆகியவற்றுக்கு இடையேயும், போராட்டத்தை உறுதியோடும், பொதுமக்களின் ஆதரவோடும் நடத்தி, தங்களின் குறைந்தபட்ச கோரிக்கையைச் சாதித்திருக்கிறது, பெண்கள் ஒற்றுமை.

நெருக்கடி என்ற ஒப்பாரி

சி.பி.எம் ராஜேந்திரன்
தங்களது போராட்டத்தை இழிவுபடுத்திய சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ ராஜேந்திரனை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்களிடமிருந்து அவரை மீட்டுச் செல்லும் போலீசு.

கேரளாவின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்களது மாதாந்திரக் கூலி 500 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரி வந்தார்கள். ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 381 ரூபாதான் கூலியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கண்ணன் தேவன் எஸ்டேட் நிர்வாகமும் தனது தொழிலாளர்களுக்கு 20 சதவீதத்தையும் முழுமையான போனஸாக அளிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அந்த 20 சதவீதத்தில் 8.33 சதவீதத்தை போனசாகவும், மீதிமுள்ள 11.67 சதவீதத்தைக் கருணைத் தொகையாகவும் அளிப்பதாக உள்குத்து வேலை நடத்தியிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்களின் கோரிக்கையை முழுமையாக ஒப்புக்கொள்ள மறுத்துள்ள நிர்வாகங்கள், தேயிலை வணிகம் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் கட்டுப்படியாகாத கூலி உயர்வும், போனசும் அறிவிக்கப்பட்டிருப்பதாக பிலாக்கணம் பாடி வருகின்றன.

2013-ம் ஆண்டில் 19 கோடியாக இருந்த தனது இலாபம் 2014-ம் ஆண்டில் ஐந்து கோடியாகச் சரிந்துவிட்டதால்தான் போனஸை 10 சதவீதமாகக் குறைத்து அறிவித்திருப்பதாக விளக்கம் கொடுத்திருக்கிறது, கண்ணன் தேவன் எஸ்டேட் நிர்வாகம். இது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் மோசடி என்பதே உண்மை (பார்க்க பெட்டிச் செய்தி). இதுவொருபுறமிருக்க, தேயிலையின் விலை 12 சதவீதம் மட்டுமே வீழ்ச்சியடைந்திருக்கும் பொழுது, இலாபம் எழுபது சதவீதம் அளவிற்கு எப்படி வீழ்ச்சியடைய முடியும் என்ற கேள்விக்கும், கொழுந்து தேயிலை விலை வீழ்ச்சியடைந்த பிறகும், சந்தையில் தேயிலைத் தூளின் விலை கொஞ்சங்கூட இறங்காமல் இருப்பதன் மர்மத்திற்கும் எஸ்டேட் நிர்வாகங்கள் விடையளிக்கப் போவதில்லை.

நெருக்கடி அல்லது நட்டம் என்ற மோசடியான வாதத்தை முன்வைத்துதான் கூலியை உயர்த்தாமலும், உரிய போனஸை அளிக்காமலும் தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றி வருகிறது, முதலாளித்துவ வர்க்கம். தொழிலாளி வர்க்கத்தின் கொடுபடாத கூலிதான் போனசாக வழங்கப்படுகிறது என்ற நியாயத்தை முதலாளிகள் ஏற்றுக் கொள்வதேயில்லை. மாறாக, போனஸைத் தாங்கள் கருணையுடன் அளிக்கும் பிச்சையாகவும், அதை மனம்போன போக்கில் அறிவிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் கருதி நடந்துவருகிறது. அபரிதமான இலாபத்தை அப்படியே சுருட்டிக் கொள்ளும் முதலாளிகள், இலாபம் சற்று வீழ்ச்சியடையும்பொழுது அதன் சுமையைத் தொழிலாளிகளின் முதுகில் ஏற்றித் தப்பித்துக் கொள்கிறார்கள்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 69 ரூபாய் கூலி உயர்வு அளிக்க முன்வந்துள்ள தோட்ட நிறுவனங்களுக்கு மின்சார மானியம் வழங்கவும்; ஒரு ஹெக்டேர் பரப்புள்ள தோட்டப் பயிர்கள் மீது விதிக்கப்படும் வரியை எழுநூறிலிருந்து ஐநூறு ரூபாயாகக் குறைக்கவும்; விவசாய வருமான வரியைக் குறைக்கவும்; எஸ்டேட் நிறுவனங்கள் நடத்திவரும் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஒரு மாணவனுக்கு பத்தாயிரம் ரூபா என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கவும்; தொழிலாளர் குடியிருப்புகளை மேம்படுத்த 20 கோடி ரூபா நிதி ஒதுக்கவும் கேரள அரசு முன்வந்திருக்கிறது. இதன் மூலம் நெருக்கடியில் இருப்பதாகக் கூறும் கார்ப்பரேட் எஸ்டேட் நிறுவனங்களை மக்களின் வரிப் பணத்திலிருந்து பெயில் அவுட்” செய்திருக்கிறது, கேரள மாநில காங்கிரசு அரசு. உண்மையில் போனஸ் கிடைத்திருப்பது தோட்டத் தொழிலாளர்களுக்கா, இல்லை முதலாளிகளுக்கா?

– ரஹீம்

***

கேரளா: ‘கடவுளின் தேசமா?’ டாடாவின் தனிச்சொத்தா?

1,36,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட்டின் “உண்மையான” உரிமையாளர்கள் யார் தெரியுமா? எந்தத் தொழிலாளர்கள் 20 சதவீதம் கேட்டு ஒன்பது நாட்கள் போராடினார்களோ, எந்தத் தொழிலாளர்கள் கூலியை 500 ரூபாயாக உயர்த்தித் தருமாறு கோரி வருகிறார்களோ, அந்த 14,000 தொழிலாளர்களின் பெயரில்தான் கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட் நிறுவனத்தின் 68 சதவீதப் பங்குகள் உள்ளன.

2005-க்கு முன்பு இந்த எஸ்டேட்டின் முழு உரிமையாளராக இருந்த டாடா டீ நிறுவனம், காந்திய வழியில் திடீர் தர்மகர்த்தாவாக உருவெடுத்து, 18 சதவீதப் பங்குகளை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு, 68 சதவீதப் பங்குகளை ஒவ்வொரு தொழிலாளிக்கும் 300 பங்குகள் கிடைக்கும்படி “உயில்” எழுதி வைத்தது. தேயிலை உற்பத்தியைத் தொழிலாளர்கள் கவனித்துக் கொள்ள, தான் தேயிலைத் தூள் விற்பனையை மட்டும் கவனிக்கப் போவதாகக் கூறி, இந்தப் பங்கு மாற்றத்திற்கு ஒரு உருக்கமான” காரணத்தையும் முன்வைத்தது, டாடா குழுமம்.

13-kerala-tata-property-2டாடாவின் இந்த பரோபகாரத்தின் பின்னே மறைந்திருப்பது அப்பட்டமான வியாபார தந்திரம். தேயிலை எஸ்டேட்டையும், தேயிலைத் தூள் விற்பனையையும் ஒரே நிறுவனத்தின் கீழ் வைத்திருப்பது இலாபத்திற்குக் கேடு என்பதால்தான், இந்தப் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியது, டாடா குழுமம். இந்தப் பாகப்பிரிவினையை நடத்தும்பொழுதே, கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட்டில் உற்பத்தி செயப்படும் தேயிலைத் தூள் முழுவதையும் டாடா குழுமத்துக்குச் சொந்தமான டாடா குளோபல் பீவரெஜஸ் நிறுவனத்திடம்தான் விற்க வேண்டும் என்றும், கண்ணன் தேவன் தேயிலை பிராண்டை டாடாவைத் தவிர வேறு நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது என்றும் பட்டா எழுதி வாங்கிக் கொண்டது.

கண்ணன் தேவன் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து ஒரு கிலோ சாதா தேயிலைத் தூளை வெறும் 80-90 ரூபாய்க்குப் பெறும் டாடா குளோபல் நிறுவனம், அதனை நானூறு ரூபாய்க்கு மேல் சந்தைப்படுத்திக் கொள்ளை இலாபம் அடித்து வருகிறது. தனது இலாபம் 5 கோடி ரூபாயாகச் சரிந்து விட்டது என்று கண்ணன் தேவன் எஸ்டேட் நிறுவனம் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அதனிடமிருந்து தேயிலைத் தூளை வாங்கி விற்கும் டாடா குளோபல் நிறுவனத்தின் இலாபம் 242 கோடி ரூபாயாக இருப்பதை இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ரெஜினார்ட் அம்பலப்படுத்துகிறார். எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதற்குத்தான் இந்தப் பாகப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

டாடா குழுமம், கண்ணன் தேவன் எஸ்டேட் தொழிலாளர்களை மட்டும் ஏமாற்றவில்லை. கேரள மாநில அரசின் ஆதரவோடு, அம்மாநில மக்களையும் ஏமாற்றி வருகிறது. சமூகத் சொத்தான இந்த 1,36,000 ஏக்கர் பரப்பிற்கும் டாடா குழுமம் ஆண்டொன்று அரசுக்குச் செலுத்தும் குத்தகை பணம் வெறும் 5,000 ரூபாய்தான். இது மட்டுமின்றி, டாடா குழுமம் கேரளாவில் மட்டும் ஏறத்தாழ 10 இலட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள எஸ்டேட் நிலங்களை அடிமாட்டு குத்தகை கொடுத்து ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி

0

மழை வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு, கரம் கொடுத்த பு..தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட குழு!

டகிழக்கு பருவ மழை தமிழகத்தை புரட்டி போட்டுவிட்டது. மக்கள் வாழ்வதாரம் அனைத்தும் அழிந்து போனது. வெள்ளம் தெருக்களிலும், சாலைகளிலும் சிற்றாறுகளாக மாறி மக்களின் குடியிருப்புகள் தண்ணீரில் மிதந்தன, வீடுகள் இடிந்து விழுந்தன. விளை நிலங்களிலிருந்த பயிர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டமும், நகரமும் வெள்ளத்தில் மிதந்தது என்றால் மிகையல்ல,

காஞ்சிபுரம் வெள்ளம்குறிப்பாக காஞ்சிபுரம் நகரத்தையொட்டி, பிள்ளையார் பாளையம், ஒரிக்கை, திருக்காலி மேடு உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின. குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பகுதி மக்கள், பள்ளி – கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டனர். திருக்காலி மேடு அருந்ததியர் நகர் பகுதி மக்கள் ஆரம்ப பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பேசிய போது, முறையான உணவு தருவதில்லை, அனைவருக்கும் போர்வை தாராமல் இருந்தது, குழந்தைகளுக்கு உடைகள் இல்லாத நிலைமைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் குறைகளை போக்கும் விதமாக, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர், நகர மன்ற தலைவர், தாசில்தார் ஆகியோரை தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கை தெரிவித்து, போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு வலியுறுத்தியதின் அடிப்படையில், ஆணையர் முகாமில் தங்கியிருந்த மக்களை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். மேலும் கவுன்சிலரை வரவழைத்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வைக்கப்பட்டது. புரட்சிகர அமைப்பின் துணையோடு கவுன்சிலரை கேள்வியெழுப்பி திணரடித்தனர் மக்கள்.

காஞ்சிபுரம் வெள்ளம்நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மக்கள் பிரச்சனையில் தலையிட, உந்தி தள்ள வேண்டிய நிலை இருந்தது.

உணவு முறையாக தருவதில்லை என்பது குறித்து ஆணையரிடம் பேசியபோது “ஆயிரக்கணக்கான பேருக்கு சமைத்து தரும் உணவில் முன்னே, பின்னே இருக்கும்” என்றவரிடம்,

“உங்கள் குடும்ப விழாவிலோ ஆயிரக்கணக்கனோருக்கு சமைப்பதில் முன்னே, பின்னே இருக்கும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?” என கேள்வியெழுப்பியபோது அமைதியாகி பிரச்சனையை சரி செய்வதாக கூறினார். தினமும் மதிய உணவு மூன்று மணிக்குதான் வரும் என்று மக்கள் கூறினார்கள், நாம் தலையிட்ட அன்று மதியம் 12 மணிக்கே உணவு கொண்டு வந்து கொடுத்தனர்.

காஞ்சிபுரம் வெள்ளம்இதற்கிடையில், மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் மார்க்கெட் சாலையில், பகுதி மக்கள் குடி தண்ணீர் மற்றும் மின்சாரம் கோரியும், பகுதியில் தேக்கியுள்ள மழை நீரை வெளியேற்றக் கோரியும் நடத்திய சாலை மறியலுக்கு, நமது அமைப்பின் சார்பாக ஆதரவு அளித்ததுடன், போராட்டத்திலும் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளை நிர்பந்தித்தோம்.

திரும்பவும் மாலை 6 மணியளவில் திருக்காலி மேடு முகாமிற்கு சென்று மக்களை சந்தித்து 7 அறைகளில் தங்க வைக்கப்படிருந்த மக்களின் குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினோம். அப்போது “காலையில் நீங்கள் அதிகாரிகளிடம் பேசியதில் உணவு சுவையாகவும், குறித்த நேரத்திலும் கொடுக்கப்பட்டது” என்றனர்.

இதன் பிறகு மறுநாள் 18-11-2015 அன்று குடியிருப்புகளில் மக்கள் வீடுகளை சுத்தப்படுத்தியும், பாத்திரங்களை கழுவியும் கொண்டிருந்த மக்களை சந்தித்தபோது, “அரசாங்கம் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை” என்றும், “இதுவரையில் யாரும் எங்களை எட்டிப் பார்க்கவில்லை, நீங்கள் தான் நேற்றிலிருந்து எங்களுடன் இருந்து வருகின்றீர்கள்” என்ற பகுதி மக்களிடம்,

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“இந்த அரசமைப்பும், அதன் அங்கமான அதிகார வர்க்கமும் மக்கள் பிரச்சனையை தீர்க்காது. ஏனெனில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்ப்பட்ட ஆறு -ஏரி-வாய்க்கால்களை ஆக்கிரமித்தும், வரைமுறையில்லாமல் மணலை அள்ளி சென்று இயற்கையை சூறையாடியதின் விளைவுதான், இந்த வெள்ளச்சேதம். இந்த மழை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் இயற்கையை பேரழிவாக சித்தரிக்கின்றனர்.

பாசிச ஜெயாவே ஈழ தமிழர்களை ராஜபக்ட்சே தலைமையிலான அரசு கொன்றொழித்த போது, ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என பேசியது போல், ‘இந்த மழை வெள்ளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாது, தவிர்க்க முடியாது’ என திமிர்தனமாக பேசினார். முதலாளிகளும், அதன் அங்கமான மாஃப்பியாக்களும் இயற்கையை மட்டுமல்ல நாட்டையே சூறையாடுகின்றார்கள். இப்படிப்பட்டவர்களை பாதுகாப்பது தான் ஜெயா உள்ளிட்ட ஒட்டு பொறுக்கி கட்சிகளினுடைய வேலையாக உள்ளது.” என்று விளக்கினோம்.

இதை போல ஐய்யங்கார்குளம் கிராமத்தில் நாடார் தெரு மீனவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனடியாக மக்களை காப்பாற்றும் விதமாக ஊர் தலைவரை தொடர்பு கொண்டு பள்ளியில் தங்க வைக்க பகுதி தோழர்கள் உத்தரவாதப்படுத்தினார்கள். இதன் பிறகு மக்களை பள்ளிக்கு அழைத்து வந்தோம். உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடுத்து காவலான்கேட் பகுதி குடியிருப்பை வேகவதி ஆற்றுநீரால் சூழப்பட்டு இடுப்பளவுக்குமேல் தண்ணீர் இருந்த சாலையை கடந்து மக்களை சந்தித்து நிவாரண பணிகளை மேற்கொண்டோம் இப்பணியில்பெண் தோழர்களுடன் கிளை தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். தோழர் ஒருவருக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சையெடுத்துக் கொண்டுயிருந்த நிலையில் மக்களுக்கு உதவும் எண்ணத்தோடு தோழர்களுடன் இணைந்து செயல்பட்டது மக்களுக்காகத்தான் தோழர்களும் அமைப்பும் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்த பணிகளில் பு.ஜ.தொ.மு தோழர்களுடன், பு.மா.இ.மு தோழர்களும் கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்
88075 32859

இயற்கைஅன்னை மழை பொழிந்தாலும் வறட்சி மாவட்டம் என்ற தருமபுரியின் அடையாளத்தை மாற்ற முடியாத அம்மா ஆட்சி

அன்புடையீர்,

வரும் முன்னர் காவாதான்வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும்.

ஆனால் 200-க்கும் மேற்பட்டோர் செத்து மடிந்த பிறகு, “சேதம் தவிர்க்க இயலாது. முழுமையாக எரிய விட்டுவிடமாட்டோம்” என்கிறார் ஜெயலலிதா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவருக்கு இருந்த அறிவு, இன்று நுனிநாக்கில்ஆங்கிலம் பேசும் புரட்சித்தலைவி அம்மாவின் அதிகாரிகளுக்கோ, அம்மாவுக்கோ இல்லை என்பது மட்டுமல்ல; நம்மை ஆள துளியும அருகதையற்று விட்டது இந்த அரசுக்கட்டமைப்பு என்பதுதான் இந்த கனமழை, வெள்ளம் ஏற்படுத்திய துயரம் நமக்கு உணர்த்துவது.

இன்று, மனித குலமே வாழமுடியாத பகுதியாகி விட்டது தமிழகம். சமீபத்திய மழைக்கு தமிழகமே வெள்ளக்காடாக மாறிவிட்டது . திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளநீர். உயிரையிழந்து, உறவையிழந்து, உடமையிழந்து எங்கு பார்த்தாலும் மக்கள் கண்ணீர். சுற்றுப்புற சுகாதாரமே சீர்கெட்டுவிட்டது .

தமிழகத்தின் பல மாவட்டங்களின் நிலை வெள்ளக்காடாகி விட்டது என்றால் தருமபுரியின் நிலையோ வேறு. தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் கேட்டு போராடாத ஆண்டில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைக்கிறோம். வறட்சியின் மறுபெயர் தருமபுரி என்பது வரலாறாகிவிட்டது. நாம் இதை சாபக்கேடாகவே கருதுகிறோம். இது இயற்கையால் நமக்கு ஏற்பட்ட சாபக்கேடல்ல. துளியும் மக்கள் நலன் அக்கறை அற்றுப்போன ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் திட்டமிட்டே நமது நலன் புறக்கணிக்கபட்டதால் வந்த சாபக்கேடான அடையாளம். இந்த அடையாளம் மாற்ற முடியாதது அல்ல. இயற்கையை எதிர்த்து தனக்கு தகுந்தவாறு அதை மாற்றியமைத்து வந்திருக்கிறது மனித குலம்.

ஆக, நமது மாவட்டத்தின் அடையாளத்தையும் மாற்றுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. மக்கள் நலனில் அக்கறை இருந்தால் மாற்றமுடியும். இந்த மழையை அப்படியே சிந்தாமல் சிதறாமல் விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் இந்த அரசிடம் இருந்ததா என்றால் இல்லை என்பதுதான் விவசாயிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் அறிஞர்கள்அனைவரும் சொல்லும் பதில்.

இந்த மழையை சரியாக முன்கூட்டியே திட்டமிட்டு பயன்படுத்த ஏற்பாடு செய்திருந்தால் 3-4 ஆண்டுகளுக்கு தருமபுரி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கசெய்து விவசாயத்தை பாதுகாத்திருக்கலாம். தருமபுரி மக்களின் நாடோடி அவல வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட நோக்கம் இந்தஆட்சியாளர்களுக்கு துளியும் இல்லை. இதனால் தமிழகத்தில் பல மாவட்ட ஏரிகள் இந்த மழைக்கு நிரம்பினாலும் நமது மாவட்டத்தில் உள்ள 95 சதவீத ஏரிகள் நிரம்பவில்லை. 30-35 சதவீத அளவுக்குள்ளாகவே நிரம்பியுள்ளன. ஜெயாவின் சிலஅமைச்சர் பெருமக்கள் ஏரிகள் நிரம்பியதாக கூறினாலும் அந்த ஏரிகளின் உண்மையான கொள்ளளவு எவ்வளவு? தூர் வாரப்படாமல் இருந்தது மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக எவ்வளவு குறைந்த கொள்ளளவே தண்ணீர் நிரம்பியுள்ளது என்று பார்த்தால் இதுவும் பாதிபொய் என்பது தெரியவரும்.

நீர்நிலைகளை பராமரிப்பதாக அரசு பேசும் பித்தலாட்டங்களெல்லாம் ஏரிகளைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு தெரியும்.

  • நமது மாவட்டஜெர்தலாவ் ஏரியிலிருந்து புதிய கால்வாய் மூலம் பாலக்கோடு மற்றும் பென்னாகரம் பகுதியில் உள்ள 15 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஏரிகளில் பாதியளவு தண்ணீர்கூட நிரம்பவில்லை.
  • 10 ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் மாறண்டள்ளி அருகே உள்ள செங்கன் பசுவன்தலாவ் ஏரிக்கு கால்வாய் அமைக்கும் திட்டமும் ஆமைவேகத்தில் நடப்பதால் இரண்டும் கெட்டானாக விவசாயிகள் இயற்கையாக வரவேண்டிய தண்ணீரும் வராமல் தவிக்கிறார்கள். இதற்காக ஒதுக்கப்படும் நிதிகள் அமைச்சர்களும் அதிகாரிகளின் கொள்ளைக்கே போய் சேர்கிறது.
  • பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடிவரும் பென்னாகரம் கெட்டூர் ஏரிக்கு பஞ்சப்பள்ளி உபரிநீரை கொண்டுவரும் திட்டத்தை பற்றி செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது அரசு.

அரசால் வெளியிடப்படும் ஓரிரு அறிவிப்புகளும், நடைபெறும் வேலைகளின் யோக்கியதை பெரும் மோசடியாகவே உள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் சில ஏரிகள் ஒப்புக்காக தூர்வாரி அந்த மண்ணை காவாயில் கொட்டி தண்ணீர்வரும் வழி அடைக்கப்பட்டுள்ளது. ஏரியில் ஒரு இடத்தில் மண்எடுத்து ஏரிக்குள்ளேயே இன்னொரு இடத்தில் கொட்டியிருக்கிறார்கள். தேர்தலை மனதில்கொண்டே புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு இப்போது நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு பாசனவசதி செய்து தரும் விஷயத்தில் மன்னர்களுக்கு இருந்த அக்கறைகூட ஜனநாயகம் என வாய்கிழிய பேசும் இந்ந ஆட்சியாளர்களுக்கு இல்லை. தீபாவளிக்கு முன்கூட்டியே இலக்கு திட்டமிட்டு குடிகெடுக்கும் அரசிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது நம் தவறு.

இந்த கனமழைக்கு 200-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தமிழகத்தின் 15 மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. மக்கள் இறந்த பிறகும், பாதித்தபிறகும் நாடகம் போடுவதால், விளம்பரப்படுத்திக் கொள்வதால் ஒன்றும் பலனில்லை. மக்களுக்குதான் பாதிப்பு. ஏரிகளை ரியல்எஸ்டேட் மஃபியாக்கள் வளைத்துப்போட அரசு அனுமதிஅளிப்பது, அரசே விதிமுறைகளை மீறி அரசுகட்டிடங்கள் கட்டுவதுதான் இந்த வெள்ள சேதத்திற்கு, மக்களின் துயரத்திற்கு காரணம்.

கிரானைட் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல்கொள்ளைபோல் அனைத்திலும் மக்கள் நலன் புறக்கணிக்கபட்டு மஃபியாக்களின் ஆட்சியாகவே விதிமுறைகளை மீறி செயல்படுகிறது அரசு.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பதால், நீர்நிலைகள் பராமரிப்பது புறக்கணிக்கப்படுவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தண்ணிரில் தத்தளிக்கிறார்கள் மக்கள். மழைநீரை பாதுகாக்காமல், முன்கூட்டியே இதைப் பயன்படுத்தி தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாகவே ஆட்சியாளர்கள் வைத்திருப்பதால் நிரந்தரமாக நாம் கண்ணீரில் தத்தளிக்கிறோம்.

இன்று வறட்சிக்கு பேர் போன நமது மாவட்டம் நாளை இயற்கையின் சீற்றத்தால் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க எந்த உத்திரவாதமும் இல்லை. சுனாமி, தானே புயல், தற்போதைய மழைவெள்ளம் இவற்றிலிருந்து குடிகெடுக்கும் இந்த ஆட்சியாளர்கள் படிப்பினைபெற துளியும் வாய்ப்பே இல்லை. மழையாலும் வறட்சியாலும் வாழ்வாதாரத்தையும் உயிரையும் பறிகொடுத்து பாதிக்கப்படும் நாம்தான் படிப்பினைபெற வேண்டும்.

இவை உணர்த்துவது ஒன்றுதான். இந்த அரசமைப்பு நம்மை ஆளும் அருகதையை இழந்துவிட்டது. மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து இயற்கை உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரித்து நம் வாழ்வாதாரத்தை, உயிரை நாமே பாதுகாப்பதுதான் தீர்வு.

அருகதைஇழந்தது அரசுக்கட்டமைப்பு
இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்,
தருமபுரி பகுதி.
தொடர்புக்கு: 8148573417

வினவு தளத்தை பா.ஜ.க குறிவைப்பது ஏன் ?

21

slider 1பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – இறுதிப் பகுதி

கேள்வி: சோசியல் மீடியாக்களில் கருத்து சொல்லக்கூடிய ஒரு சிலர், பி.ஜே.பி. காரங்க இந்த விவாதங்களுக்கு வரக்கூடிய பலரும்,  வினவு இணையதளத்தை டார்கெட் பண்றாங்க. இந்த வழக்குல கூட முதல் குற்றவாளியா சேர்க்கப்பட்டிருக்கக் கூடியவர் காளியப்பன் என்கிற கன்னையன் ராமதாஸ் என்பவர்தான். வினவு இனையதளத்தின் ஃபவுண்டர்னு நினைக்கிறேன். இதை எப்படி பார்க்கிறீங்க?

பதில்: அதாவது, சோசியல் மீடியாவை கேடாகப் பயன்படுத்தி பிரதமர் பதவியை பிடித்தவர் மோடி. இது உலகறிந்த உண்மை. அதாவது செயற்கையாக மோடிக்கும் பி.ஜே.பி.க்கும் ஆதரவு கருத்து இருப்பதை போல ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ஏமாற்றி பிடிக்கப்பட்ட அதிகாரம் இது.  அதெல்லாம் இன்னைக்கி கரைந்து போச்சு.

இப்போ அந்த சோசியல் மீடியால இந்த மாதிரி ஒரு புரட்சிகர அரசியல் முக்கியமா இந்துமதவெறிக்கு எதிரான ஒரு அரசியல், தமிழ் ஊடகப் பரப்பில் செல்வாக்கு செலுத்துகிறது என்பது அவங்களுக்கு கவலையளிக்கும் விசயம். அதுவும் குறிப்பா, தமிழ்நாட்டுல காலூன்றுவதற்குத் தலைகீழாக நின்று கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவுக்கு அப்படிக் காலூன்ற விடாமல் தடுக்கும்  முக்கியமான ஒரு சக்தியாக வினவு இருக்கிறது. அதனால் அவங்க (வினவுக்கு) தடையைக் கோருவதில ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

இப்போ, இந்த போர்னோகிராபி சைட்ஸ் எல்லாம் தடை செய்யணும்னு வந்தது. அதுக்கு பி.ஜே.பி. காரங்க முயற்சி பண்றதாக தெரியல. அல்லது மும்பையில டான்ஸ் பாருக்கு எதிரான தடையை சுப்ரீம் கோர்ட் எதுல நீக்கியிருக்குதுன்னு சொன்னா, அது ரைட் டூ  பிரீ எக்ஸ்பிரசனுக்கு எதிரானதுன்னு சொல்லித்தான் டான்ஸ் பாருக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. போர்னோகிராபியும் ரைட் டூ பிரீ எக்ஸ்பிரசன்லதான் அனுமதிக்கப்படுது. அதையெல்லாம் பி.ஜே.பி. எதிர்த்து போராடுவதோ, தடுக்க முனைவதோ இல்லை. ஆனால், வினவை அது தடுக்க முயற்சிக்கிறது.

பி.ஜே.பி. சொல்வதில் இருந்து எது சரியானது என்பதை நீங்க புரிஞ்சிக்குங்க. இந்த டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் அல்லது அதுல ஜெயலலிதா அரசுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒரு சின்ன விசயம். இதைத்தாண்டி பரந்த முறையில் மக்களுக்கு அதிகாரம், ஜனநாயகம் என்று எல்லா தளங்களிலும் வினவு பேசுகிறது. அப்படிப்பட்ட அரசியல் பண்பாட்டு விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் வினவு தளத்திற்கு வாருங்கள். அவர்கள் தடை தடை என்று பேசப் பேச ஆதரவு அதிகரிக்கும் என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை.

கோவன் கைதுக்கு முன்னால வினவு தளத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், இப்போ கைதுக்குப் பின்னர் அதுவும் முக்கியமா வினவு தளத்துக்கு எதிராக பி.ஜே.பி. காரங்களுடைய பிரச்சாரம் தொடங்கியதற்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். அதனால தடையைக் கோரும் அவர்களுடைய பிரச்சாரம் தொடரட்டும். அது எங்களுடைய வளர்ச்சிக்கு உதவும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

நாங்க என்ன கேள்வியை எழுப்பினோமோ, அதை விட்டுட்டு மத்ததையெல்லாம் அவங்க பேசுறாங்க. டாஸ்மாக்கை மூடுவது, மணற்கொள்ளையை நிறுத்துவது, கிராணைட் கொள்ளையை நிறுத்துவது, அதற்கு மக்களுக்கு அதிகாரம் என்ற விசயத்தையெல்லாம் முன்வைத்து நாங்கள் பேசியிருக்கிறோம். ஆனால், அதற்குப் பதில் சொல்லாமல், கவுண்டமணியின் பெட்ரோமாக்ஸ் காமெடியில,  ரங்கநாதன் என்கிற பெயருக்கெல்லாம் சைக்கிள் கிடையாது என்று சொன்னா மாதிரி நக்சலைட்டுகள் சொல்கிறார்கள் என்று அதை எடுத்துகிட்டு பேசுறாங்க.

பிரச்சினையைப் பேசுங்க. எங்களை விட்ருங்க. இந்தப் பிரச்சினையில உங்களோட நிலை என்ன? அதை எப்படி சாதிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்? அப்படி சொல்லுங்க. அதைப் பேச புகுந்தால், நீங்களெல்லாம் ஒரே அணி என்பது அம்பலமாகவிடும். அதனாலதான் இப்படி முத்திரை குத்துகிறீர்கள். இந்த முத்திரை குத்தலுக்கு வாசகர்களும், மக்களும் பலியாகக்கூடாது. நாங்கள் எதை முன்வைக்கிறோம் என்பதைப் பாருங்கள். யார் சரியானவர்கள் என்பதை அதிலிருந்து முடிவு செய்யுங்கள். இதுதான் எங்களுடைய கோரிக்கை.

அருள் எழிலன் : இவ்வளவு நேரமும் நேரம் ஒதுக்கி, எங்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு நீங்க பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி.

வணக்கம்.

ராகுல் காந்தியை கொல்லுமாறு கோவன் பாடினாரா ?

4

slider 1பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – மூன்றாம் பாகம்

கேள்வி: தேர்தல் அரசியலில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் ஒருமையிலயோ, அவதூறாகவோ பேசுறாங்கன்னா அது இஸ்யூ கிடையாது. பிராப்ளம் இல்லை. ஆனா, கம்யூனிஸ்டு அமைப்பு, மக்கள் மத்தியில பிரச்சாரம் செய்யிற அமைப்புனு சொல்லக்கூடிய நீங்கள் சில வார்த்தைகளை மோசமா, பெண்ணுக்கு எதிரா,  5 தடவ சி.எம்.மா இருந்த முதல்வருக்கு எதிரா பயன்படுத்துறது மோசமான விசயம்தானே?

பதில்: என்னுடைய பதில் என்னவென்றால்,  தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது அதை எப்படி கௌரவமான வார்த்தைகளில் விவரிக்க முடியும்னு தெரியல.

அவதூறுக்கு என்ன விளக்கம்? கொடநாட்டுல ஓய்வெடுத்தார்னு எழுதுனதுக்கு பத்திரிக்கையாளர்கள் மேல அவதூறு வழக்கு போட்டுருக்காங்க. ஓய்வு என்பது அவதூறா? ஊத்திக் கொடுத்த உத்தமினு எழுதியிருக்கோம். அது அவதூறா? ஊத்திக் கொடுக்கலையா? சாம்பார் சாதம் போடுறாங்க அதை வீடியோ கிளிப்பிங் காட்டியிருக்கிறோம். சாம்பார் சாதம் போடுறது உண்மை. இட்லி கொடுக்கிறது உண்மை. மிக்சி, பேன் கொடுக்கிறது உண்மை. சாராயம் ஊத்திக் கொடுக்கிறது பொய்யா? உண்மையை அப்படி சொல்லக்கூடாதுனா எப்படி சொல்லணும்? அது அவுங்க விரும்புற படி சொல்லனுமா?

ஒருமையில பேசுறாங்க, மரியாதைக்குறைவா பேசுறாங்கன்னு சொல்றாங்க. கள்ளச்சாராயம் வித்தாங்கனு போலீசோட மதுவிலக்குப் பிரிவு அவ்வப்போது பெண்களை பிடிச்சி உள்ள வைக்கிறாங்க. அப்படி கைது செய்யும்போது, அந்தப் பெண்மணிகளை போலீஸ்காரங்க எப்படி கூப்பிடுறாங்க? மேடம் வாங்கன்னு கூப்பிடுறாங்களா? அப்படி கூப்பிடத் தேவையில்லை. அவங்கள போடி, வாடி னு கூப்பிடலாம். எப்படி வேணுமானாலும் நடத்தலாம். கண் முன்னால நாம பார்க்கிறோம்.

அப்போ பத்து ரூபா திருடினா அவனுக்கு ஒரு டிரீட்மெண்ட். பத்து கோடி திருடினா ஒரு டிரீட்மெண்ட். ஒரு லிட்டர், அஞ்சி லிட்டர், பத்து லிட்டர், ஓட்டுனா ஒரு டிரீட்மெண்ட். நல்லா லாரி கணக்குல ஓட்டினா அதுக்கு ஒரு டிரீட்மெண்ட். அந்த மரியாதையை எங்களிடம் எதிர்பார்த்து, இதுதான் கம்யூனிஸ்களுக்குரிய அணுகுமுறைன்னு சொன்னா அது கேலிக்கூத்தானது. ஏழைகளை ஒருவிதமாகவும், பணக்காரர்களை ஒருவிதமாகவும் மதிக்கனும். அதுதான் கம்யூனிஸ்டுகளுக்குரிய பண்புன்னு யாராவது சொல்வாங்களா?

இல்லை, இது அவதூறாகவே இருக்கட்டும். அவதூறு என்றால் அந்த அவதூறுக்கு உரிய செக்சனை ஏன் போடாம இருக்காங்க. தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் ஏன் பேசிட்டு இருக்கிறீங்க? போட்டிருக்கிறது ராஜதுரோக வழக்கு. ஒண்ணு அதுக்கு பேசனும். அது நிக்காதுங்கிறதாலே இதை சொல்கிறார்கள். அவதூறுன்னா அதற்குரிய செக்சனை போடுங்க. அங்க பேசுவோம்.

கேள்வி: உங்க மேல சொல்லக்கூடிய இன்னொரு குற்றச்சாட்டு ராகுல் காந்தியை கொன்னுருவேன் அப்படின்னு பாடல் பாடினதா காங்கிரசு கட்சித் தலைவர் தங்கபாலு ஒரு குற்றச்சாட்டை சொல்றாரு. இது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு உங்க மேல.

பதில்: இந்தக் குற்றச்சாட்டை தங்கபாலு சொந்தமாக கண்டுபிடித்தாரா இல்லை, மண்டபத்துல வச்சி பி.ஜே.பி எழுதிக் கொடுத்தாங்களான்னு எனக்குத் தெரியல. ராகுல்காந்தியைப் பத்தி ஒரு வரிகூட எந்தப் பாடலிலும் இல்லை. அவரை கொன்னுருவேன்னு எழுதவே இல்லை. அது வேறு விசயம். அவரைப் பத்தியே ஒரு பாட்டுக்கூட கிடையாது. இது ஒரு பச்சைப் பொய்.

இந்தப் பொய்க்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, தாத்ரியில மாட்டிறைச்சியைக் கண்டுபிடிச்சு கொலை பண்ணினாங்க இல்லையா, அதற்கு சமமான பொய். தங்கபாலுவுக்கு அவ்வளவு விவரம் இருக்கிறதா எனக்கு தெரியல. பி.ஜே.பி.காரங்கதான் சொல்லி கொடுத்திருக்கனும். இவருக்கு ஒரு வாய்ப்பு டெல்லிக்குப் போயிட்டு வர்றதுக்கு. அதற்காக இந்தப் பொய்யை ஒரு குற்றச்சாட்டா அவரு கண்டுபிடிச்சிருக்காரு. அதுக்கு மேல இதுல சரக்கு கிடையாது.

கேள்வி: ஒரு பாட்டு பாடுறீங்க,  அந்தப் பாட்டுக்காக தமிழக அரசு உங்களை கைது பன்றாங்க. அதுல போராடி நீங்க போலீசு காவலுக்கும் போகல, ஜாமீன் வாங்கி விடுதலையாகி வர்றீங்க. வந்து சிறைவாசல்ல நின்னே மழை வெள்ளத்தைப் பத்தி ஒரு பாட்டு பாடுறீங்க? இது இந்த அரசை ஆத்திரமூட்டும் வேலைதானே?

பதில்: அரசை ஆத்திரமூட்டும் வேலை என்பதை காட்டிலும், இந்த அரசு ஈடுபடும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் இருக்கே,  அதுல எங்களை விட ஜெயலலிதா மிஞ்சி இருக்கிறாங்க. மழை வெள்ளத்துல சென்னை மாநகரமே மிதக்குது. எல்லா காரு, வண்டி எல்லாம், மூழ்கிப் போயிருக்குது. இந்த அம்மா வெள்ள அபாயம் பற்றி அறிவிப்பு வந்த பிறகும்  கொடநாட்டுலதான் இருக்காங்க. அங்க இருந்து வரல.

அதுக்குப் பிறகு வர்றாங்க. அவ்வளவு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவிச்சி, ஊடகங்களும்  கண்டனம் தெரிவிச்ச பிறகு தொகுதிக்கு வர்றாங்க. அதுக்கு முன்னேற்பாடுகள் ஏகப்பட்டது. அப்பதான் தண்ணியெல்லாம் இறைச்சி வெளியேத்துறாங்க. கண்ணாடி ஏற்றிய ஏ.சி. வேனுக்குள் உட்கார்ந்துகிட்டு வாக்காளப் பெருமக்களேன்னு வர்றாங்க. அந்தக் கண்ணாடில தண்ணிபட்டால் தொடைக்கிறதுக்கு ரெண்டுபேரு தொங்கிகிட்டே போறான். இதைவிட தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கக் கூடிய, உயிரைப் பணயம் வைத்து செத்திருக்கின்ற மக்களை இழிவுப்படுத்தக்கூடிய, ஆத்திரமூட்டக்கூடிய ஒரு நடவடிக்கை வேறு ஏதாவது இருக்குதா? அல்லது நிவாரணம் என்ற பெயரில சும்மா நின்னு போஸ் கொடுக்கிறாங்களே இந்த அமைச்சர்கள் அவர்களுடைய நடவடிக்கையை விட ஆத்திரமூட்டும் நடவடிக்கை எதாவது இருக்குதா?

இதையெல்லாம் அம்பலப்படுத்தி பாடுறதுதான் எங்க வேலை. இதுக்கு ஒரு கேசு போட்டால்,  போடு. திரும்ப வந்து பாடுவோம். அதுதான் எங்க வேலை. இந்த அரசின் இப்படிப்பட்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குப் பிறகும் கூட, மக்களுக்கு ஆத்திரம் வரவில்லையே,  அவங்களுக்கு ஆத்திரம் ஊட்டுறதுக்குத்தான் பாடுறோம். சந்தேகமேயில்லை. அதுக்குத்தான் பாடுறோம்.

கேள்வி: மழை வெள்ளம் அப்படிங்கிறது, சுனாமியோ, மழை வெள்ளமோ, ஜெயலலிதா சொல்லி வர்றதில்லை. இது இயற்கையோட சீற்றம்…

பதில்: இல்லை, சேலம் கலெக்டரு ஜெயலலிதா சொல்லித்தான் வர்றதா சொல்லியிருக்காரு.

கேள்வி: இல்ல… இயற்கையோட சீற்றத்தால ஓரளவுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்காங்க. இதுல அரசு மட்டுமே செயல்பட முடியாது அவ்ளோ பலவீனமா இருக்காங்க அப்படிங்கிறதால, வெவ்வேறு குழுக்கள் தங்களால் முடிந்த அளவு போர்வைகள் சோப்புகள் உணவுப் பொருட்கள் இதையெல்லாம் கொடுக்கிறாங்க. அத பேஸ்புக்ல, டுவிட்டர் ல எழுதிட்டு வந்திடறாங்க. நீங்க என்ன பண்றீங்க? அதை ஒரு பாடலா மாத்துறீங்க. அதை ஒரு பிரச்சார வடிவமா செய்றீங்க. இதுதான் மீண்டும் மீண்டும் சிக்கலான விசயமா இருக்கு. இப்படித்தான் அணுகணுமா?

பதில்: இதை இப்படித்தான் அணுகணும். அதாவது, வெள்ளத்தில் சிக்கி நிர்க்கதியாக இருக்கும் மக்களுக்கு அரசு உதவாத போது, நாம் போய் கை கொடுப்பது உதவுவது என்பது வேறு. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள்கூட அவ்வாறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். துணிமணிகள் எல்லாம் திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை.

ஆனால், இதை செய்ய வேண்டிய கடமைப் பொறுப்பிலிருந்து தவறியிருக்கிறது இந்த அரசு. குற்றவாளி இந்த அரசு  அப்படிங்கிறத எப்போ சொல்றது? இந்த அரசு என்ன நினைக்குதுன்னா, மக்கள் கையேந்தி நின்னா, ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுக்கலாம் ஓட்டை அறுவடை பன்னலாம் அப்படீங்கிறதுதான் இந்த அ.தி.மு.க.  அரசினுடைய திட்டம். மக்களை இவ்வளவு கேவலமாக, இழிவாக கருதுகின்ற ஒரு அரசாங்கத்துக்கு எதிராக, மக்களை கிளர்ந்தெழச் செய்வதுதான் நியாயமாக,  ஜனநாயக உணர்வு கொண்ட எல்லோருடைய பணியாகவும் இருக்க முடியும். நிவாரணம் என்பது ஒரு மனிதாபிமான நடவடிக்கை அவ்வளவுதான். அது அரசியல் நடவடிக்கை அல்ல.

கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்

0

கடலூர் வெள்ள பாதிப்பு: தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பேரழிவு!

டலூர் மாவட்டம் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு ஆகிய தாலுக்காக்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வடகிழக்கு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் அலட்சியத்தால் கடலூர் மாவட்டம் இது போன்ற இயற்கையின் சீரழிவிற்கு பலியாவது இது மூன்றாவது முறை.

cuddalore-floods-5கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் வீடுகளை இழந்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால், பல இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பலா போன்றவை அடியோடு சாய்ந்தன. மக்கள், புயலோடு புயலாக தூக்கி வீசப்பட்டு வாழ்க்கையை இழந்தனர். அதன் இழப்புகளையே ஈடுகட்ட முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் கடலூர் மாவட்ட மக்கள்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பெய்த கனமழைக்கு 160 மனித உயிர்கள், 200-க்கும் மேற்பட்ட மாடுகள், 2500-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் காவு வாங்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் விழுப்புரம், கடலூரில் 6,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. ஒன்றரை இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா சாகுபடியான நெல், வாழை, மரவள்ளி, உளுந்து போன்ற பயிர்கள் அனைத்தையும் இழந்து சொந்த மண்ணிலே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர், மக்கள்.

அதாவது மக்கள் தமது சேமிப்புகள் அனைத்தையும் இழந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் செய்து பிழைப்பதற்கும் வழி இல்லாமல் விளைநிலங்கள் முழுவதும் மணல் குவியலாக காணப்படுகிறது. “அதனை அப்புறப்படுத்தவே ஏக்கருக்கு 3 லட்சம் செலவாகும். அதற்கு நாங்கள் எங்கே போவது?” என்று குமுறுகிறார்கள் விவசாயிகள்.

கடலூர் வெள்ள பாதிப்பு
சான்றிதழ்கள்

புத்தகங்கள், சான்றிதழ்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் புத்தகங்கள் இன்றி 50,000 மாணவர்கள் தவிக்கிறார்கள். இந்த வெள்ளத்தில் குடிசை வீடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் வீடுகளை இழந்தவர்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்…

தினம், தினம் கட்சித்தலைவர்களின் வருகை ஆறுதல்கள், ஆசை வார்த்தைகள், பாய், போர்வை, அரிசி போன்ற நிவாரணங்கள் அரசின் 5,000 ரூபாய் பணம் என்பதோடு மக்களை நிவாரணம் என்னும் ஆசை வலைக்குள் சிக்க வைத்து பேரழிவின் உண்மையான காரணத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது, இந்த அரசு. இவை அனைத்தும் இழந்த நம் வாழ்க்கையை மீட்டு தருமா?

கடலூர் வெள்ள பாதிப்பு
பத்து பேர் அடித்து செல்லப்பட்ட ஒரே குடிசை- பெரியகாட்டுப்பாளையம்

இந்த வெள்ளத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான  பகுதிகள் கடலூரில் புருஷோத்தமன் நகர், பண்ருட்டி தாலுகாவில் மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, கருக்கை, விசூர், பெரியகாட்டுப்பாளையம், மேல்காட்டுப்பாளையம் உள்ளிட்டவையும், குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் ஓணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி, நெல்லைகுடி, மருவாய், குமிடிமலை, ராசாக்குப்பம், கிருஷ்ணாவரம், ஆலம்பாடி கரிமேடு உள்ளிட்ட கிராமங்கள் தான்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டிய, அமைச்சர்களும், அதிகாரிகளும் தீபாவளிக்கு டாஸ்மாக் வருமானத்தை கூட்டவும், குடிகாரர்களின் எண்ணிக்கையை பெருக்கவும் தீவிரமாய் பணிபுரிந்தனர்.

அக்டோபர் 20 முதல் துவங்கும் பருவ மழைக்கு முன்னரே வானிலை ஆய்வு மையம், மழை எச்சரிக்கை விடுத்தும் அரசு எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை; பாசிச ஜெயாவோ கொடநாட்டில் உல்லாசமாக ஓய்வு எடுத்துக்கொண்டு “இது மழைக்காலங்களில் நடக்கக் கூடிய ஒன்று தான், மூன்று மாதங்களில் பொழிய வேண்டிய மழை மூன்றே நாளில் பொழிந்தது தான் பாதிப்புக்கு காரணம்” என்று ஆணவமாக பேசுகிறார்.

cuddalore-floods-16ஜெயாவின் இந்த திமிர்த்தனமான பேச்சும், அலட்சியமும் கலெக்டர் முதல் VAO வரையிலான அதிகார வர்க்கத்தின் ஆளத்தகுதியிழந்த அரசுக்கட்டமைப்பை பிரதிபலிக்கிறது. இது தான் மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்ல காரணமாக அமைந்தது. முதலாளித்துவ ஊடகங்களோ கனமழைக்கு அணைகள் உடைந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அபாண்டமாக புளுகுகின்றன. நிவாரணப்பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன என்று பச்சையாக புளுகிக்கொண்டும், எழுதித்கொண்டும் திரிகிறார்கள்..

உண்மையில் இந்த பாதிப்புக்கான காரணங்கள் :

1) வீராணம் ஏரியை நம்பி சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய வறட்சியான காலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஒரு ஆண்டாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்காமல், சென்னையில் உள்ள மேட்டுக்குடிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக தண்ணீரை திறந்து விட மறுத்தது தமிழக அரசு. இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் நயவஞ்சகத்தையே ஜெயா அரசும் பின்பற்றுகிறது.

கடலூர் வெள்ள பாதிப்பு
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கெடிலம் ஆறு.

தற்பொழுது பெய்த கனமழையில் வீராணம் ஏரியின் கொள்ளவான 45 அடி அளவை எட்டியதால் தண்ணீரை தேக்கி வைக்க போதிய வசதி இல்லாமல் நீரை திறந்து விட்டது அரசு. தண்ணீர் வரும் பாசன வாய்க்கால்கள், கண்மாய், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாத நிலையிலும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் உள்ளதால் வெள்ளம் விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது. ஆறு, குளம், ஏரிகளை முறையாக பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீர் பாசனத்துறை ஆகிய துறைகள் அனைத்தும் இனி மக்களுக்கு பயன்படாத வேண்டாத சதைப்பிண்டமாகி விட்டன.

வீராணம் ஏரியை தூர்வார 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாம், 3 கடலூர் மாவட்ட நீர்நிலைகளை பாதுகாக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாம். இதோ அதிகாரி ஆயவு செய்தார், மந்திரி பார்வையிட்டார் என்று டிவியிலும், பத்திரிகையிலும் வரும் செய்திகளை மட்டுமே உண்மை என நம்ப வைக்கிறார்கள். பருவமழைக்கு முன்பே ஆறு, குளம், ஏரிகள் தூர்வாரப்பட்டு இருந்தால் கடலில் கலந்த தண்ணீர் பாதுகாக்கப்பட்டு இருக்கும், எனவே இதை செய்யத் தவறிய இந்த அரசு ஒரு பயங்கரவாத, கொள்ளைக்கார, கொலைகார ஆளத்தகுதியிழந்த தோற்றுப்போன அரசு கட்டமைப்பு என்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

2) தென்பெண்ணையாற்றின் முக்கிய துணையாறான கெடிலம் ஆற்றில் இதற்கு முன்  1943-ல் பெருவெள்ளம் வந்துள்ளது. அதன் பின் 1972-ல் இன்னொருமுறை வந்துள்ளது. அப்போதெல்லாம் இதைபோன்ற சேதம் இல்லை. காரணம் அன்று நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டன. ஆறுகளும் அகன்று இருந்தன. இன்றோ, ரியல் எஸ்டேட் முதலாளிகள், மணல் மாஃபியாக்கள் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஓட்டல்கள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் கட்டப்பட்டுள்ளது.

கடலூர் வெள்ள பாதிப்புஅரசே பேருந்து நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கட்டியுள்ளது. (சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, விழுப்புரம் பஸ் ஸ்டாண்டு , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், மதுரை மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டும் ஏரி தான்)…. இவ்வாறு ஆறு குறுகிப்போனதின் விளைவாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி, மேடான நிலப்பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கி ஒரு சுனாமிபோல அதிக அழுத்தத்துடனும், வேகத்துடனும் தண்ணீர் வந்ததின் விளைவுதான் இத்தனை உயிரிழப்புக்கும், பேரழிவுக்கும், பெருந்துயரத்திற்கும் காரணம்.

கடலூரில் அ.தி.மு.க.வின் நகரமன்ற துணைத்தலைவர் குமாருக்கு (முன்னாள் பரோட்டா மாஸ்டர், சேவல் குமார் என்கிற உஜாலாகுமார்) சொந்தமான கம்மியம்பேட்டை பாலம் அருகில் உள்ள ஓட்டல், பஸ் கம்பெனி இடம் ஆகியவையும், கே.வி டெக்ஸ் எதிரில் உள்ள கோகுலம் லாட்ஜும் கெடிலம் ஆற்றை வளைத்து போட்டு கட்டியது தான். கடலூர் திருவந்திபுரம் முதல் பெரும்பகுதி கெடிலம் ஆறு ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. இது ஒரு சாம்பிள் தான்.

கடலூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் சுமார் பத்தாயிரம் ஏரிகள் உட்பட ஆற்று புறம்போக்கு, வாய்க்கால் புறம்போக்கு என அனைத்து வகை புறம்போக்குகளையும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போலிசு அதிகாரிகளின் செல்வாக்குடன் சூறையாடி வருகின்றனர். கரை வேட்டி வி.ஐ.பிக்கள் இதனை கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கெடிலம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலவுடைமையாளர்கள் கரைகளை சுருக்கி அதில் சவுக்கை உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும், குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் உள்ள செங்கால் ஆணை, பரவனாறு ஆணை ஆகியவை உடைப்பு ஏற்பட்டு ஓணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி உள்ளீட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கின. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர் போகும் அளவிற்கு அணை இல்லாததும், இருக்கும் அணைகளை முறையாக பராமரித்து தூர்வாராததும் தான்.

கடலூர் வெள்ள பாதிப்புமுக்கியமாக, “NLC நிறுவனத்தில் இருந்து நீரை வெளியேற்றி அணையில் விட்டனர். அதனால் தான் அணைகள் உடைந்தது.” என்றார் ஓணாங்குப்பத்தை சார்ந்த விவசாயி ஒருவர்.

“சில சமயம் NLC நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தியதும் உண்டு. ஆனால் வாழ்வை அழித்ததும் NLC தான்” என்றார் கல்குணத்தை சார்ந்த 65 வயது முதியவர் ஒருவர்.

நீர்வழித்தடங்களை இயற்கையின் போக்கில் பராமரிப்பது தான் அறிவியல் பூர்வமாக நாம் செய்ய வேண்டிய உடனடி எதிர்கால மக்கள் பணி. இதை செய்ய தவறிய அரசுக்கட்டமைப்பு ஆளத் தகுதியிழந்து தோற்றுப்போய்விட்டது என்பது நிரூபணமாகிறது

3) தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர், பேரங்கியூர் வழியாக கடலூர் வந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த பெண்ணையாற்றின் துணை ஆறு தான் கெடிலம் ஆறு என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் வெள்ள பாதிப்பு
தடுப்பணை கட்டும் ஒப்பந்த தொழிலாளிகள்

பெண்ணையாற்றில் கடந்த ஜனவரி முதல் பிடாகம், கண்டரக்கோட்டை அருகே மணல் குவாரி அமைத்து பல்லாயிரக்கணக்கான டன் மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இந்த மணல் மாபியாக்களின் கொள்ளை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக திட்டமிட்டே நீரை கெடிலம் ஆற்றின் வழியாகவும், தென்பெண்ணையின் மற்றொரு கிளை ஆறான மலட்டாற்றில் நீரை திறந்து விட்டதும் தான் மிக முக்கியமான காரணம். கெடிலம் ஆறும், மலட்டாரும் திருவாமூர் என்ற ஊரில் இணைந்து நீர் கடலை நோக்கி பாய்கின்றன,

மேலும் இந்த மழை அறிவிக்கப்பட்ட அக்டோபர் 4-ம் தேதிக்கு பிறகு 6, 7, ஆகிய தேதிகளில் பெண்ணையாற்றின் கண்டரக்கோட்டை பாலம் அருகே ஆற்றின் குறுக்கே 3 அடி உயரம் 20 அடி அகலத்தில் சுமார் 250 மீட்டர் அளவிற்கு தண்ணீர் உள்ளே புகாத அளவிற்கு மணலால் தடுப்பு அணை கட்டியுள்ளனர்.

இந்த அணையை அமைச்சர்கள் சம்பத் மற்றும் பன்னீர்செல்வம் தலைமையிலான மணல் மாபியாக்கள், ஓட்டுக்கட்சி பொறுக்கிகள், கலெக்டர் தலைமையிலான அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் கட்டப்பட்டது. மணல்கொள்ளைக்காகவும், சுக போக வாழ்க்கைக்காகவும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்து வீடுகளற்ற அகதிகளாய் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களுடைய வாழ்க்கையும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது என்பதே நிதர்சன உண்மை….

கடலூர் மாவட்ட வெள்ள நிவாரணப்பணி தீவிரம் என முதலாளித்துவ ஆளும் வர்க்க ஊடகங்களால் முழங்கப்படும் யோக்கிதை:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மணல் மாபியாகளின் தளபதியான அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆறு பேர் அடங்கிய அமைச்சர்கள் குழு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது மத்திய அரசு ஒதுக்கிய நிதியை சுருட்டியதாக கூறப்பட்ட சூப்பர் சீனியரான ககன் தீப்சிங் பேடியை சிறப்பு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு. அதனையொட்டி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஒரு வீட்டிற்கு தலா ரூ.5,000, இலவசமாக மண்ணெண்ணெய், உணவு, ஜமுக்காளம் ஆகியவற்றை வழங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இது போக சில தொண்டு நிறுவங்களும் பிஸ்கட், போர்வை வழங்கி விட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றனர். அனைத்து ஓட்டுக்கட்சி தலைவர்களும் வந்தனர். ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் தீர்க்க வரவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் ஒட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே வந்து போனார்கள்.

கனமழையின் பாதிப்பையொட்டி தந்தி டிவியில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய அ.தி.மு.க-வின் அடிமைப்பெண்ணான சி.ஆர். சரஸ்வதி, “அம்மா அவர்கள் நியமித்த ஆய்வு குழு கடந்த பத்து நாட்களாக சிறப்பாக பணியாற்றி வருகிறது” என்றார்..

அந்த குழுவின் லட்சணம் கடந்த 17-11-2015 அன்று ஓணாங்குப்பம் பகுதிக்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடைந்த ஏரியை மட்டும் பார்த்து விட்டு பாதியிலேயே திரும்பி ஓடிவிட்டனர். மக்கள் அவர்களின் வருகையை எதிபார்த்து ஏமாற்றத்துடன் திரும்பியதோடு அவார்களின் யோக்கியதையையும் வசைபாடி காரி உமிழ்ந்தார்கள்.

19-11-2015. அன்று கல்குணம் கிராமத்திற்கு வந்த வந்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சம்பத் மக்களை சந்திக்காமல் உடைந்த ஏரியை மட்டும் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.

நிவாரணம் வழங்குவதில் முறைகேடு, பாரபட்சம், ஊழல், இலவச மண்ணெண்ணெய்க்கு காசு வாங்குகிறார்கள் என்றெல்லாம் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் எல்லா இடங்களிலும் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள், சாலை மறியல் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் மீது காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்துகிறது அம்மாவின் போலிசு படை.

மக்களை ஆளத் தகுதியற்றது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுவதோடு பாசிச ஒடுக்கு முறையை கையாள்கிறது, அரசு. மக்களுக்கு உதவாது தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பை இனிமேலும் நாம் தூக்கி சுமப்பதில் பலன் இல்லை.

இதற்கு மாற்று மக்கள் அதிகாரம் தான் என்ற அடிப்படையில் கடந்த 7 நாட்களாக மக்கள் அதிகாரம் அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிந்து தரைமட்டமான வீடுகளை பிரித்து அதில் உள்ள பொருட்களை மீட்டு கொடுப்பது, வீட்டில் உள்ள சேற்றினை அகற்றுவது, பண்ட பாத்திரங்களை கழுவுவது, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு செய்து கொடுத்தது.உடனடியாக அவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரத்தின் இந்த பணியை பார்த்த மக்கள், இந்த அரசு நமக்கு உதவப்போவது இல்லை. நாமே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் நமது பிரச்னைக்கு தீர்வு என்பதை நடைமுறையில் உணர்ந்துள்ளனர். மக்களின் எழுச்சியில் இந்த அரசும் ஓர் நாள் அடித்து செல்லப்படும். அதற்க்கான நாள் வெகு தொலைவில் இல்லை…

புதிய ஜனநாயகம் செய்தியாளர்

ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?

1

slider 1பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – இரண்டாம் பாகம்

கேள்வி: தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சார்ந்தவர்கள்தான், இந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர். கோவன் எல்லாம் அதே குரூப்பைச் சேர்ந்தவர்தான் அப்படிங்கிறதுதான், உங்கள் மீதான பிரதான குற்றச்சாட்டு. இதை நீங்க எப்படி பார்க்கறீங்க?

பதில்: இந்தப் ‘பிரதான’ குற்றச்சாட்டு எனப்படுவது தொலைக்காட்சி ஊடகங்களில் அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வினர் சொல்வது.

கேள்வி: இல்லை. பாட்டு பாடியிருக்கீங்களே… மடியாது மறையாது,,, நக்சல்பரின்னு…

பதில்: ஆமாம். பாடியிருக்கிறோம். அதை நாங்களே ஒலிப்பேழையா வெளியிட்டிருக்கிறோம். அதை மறுக்கப்போவதில்லை. ஆனால், எதற்காக கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்? மறையாது, மடியாது நக்சல்பரின்னு அவர் பாட்டு எழுதினார். அதற்காகத்தான் கைது என்று சொன்னால் அதைப் பேசுவோம்.

ஆனால் கைது எதற்காக? மூடு டாஸ்மாக்கை, என்ற பாடலுக்காக. அல்லது ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசில உல்லாசம் என்று எழுதியிருப்பதற்காகத்தான் கைது. இதற்குப் போட்டிருக்கிற செக்சன் என்ன? ராஜத்துரோகம். இந்த அரசை கவிழ்க்க, தூக்கியெறிய சதி. இரண்டு பிரிவினரிடையே மோதலை உருவாக்க முயற்சி செய்தார். மூன்றாவதாக, வன்முறையைத் தூண்டினார். இதுதான் அதில் இருக்கின்ற குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுக்கு கேள்வி கேட்டால், பதில் சொல்லலாம்.

இந்த மூன்று குற்றங்களும் வராது. என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலில் இருந்து நீதிபதி கட்ஜூ வரையில், இந்து பத்திரிக்கை வரையில் அத்தனை பேரும் எழுதிவிட்டார்கள். இப்போ ஒரு நபரைக் கைது செய்து வைத்துக் கொண்டு, அவர் மீது புதிய குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் நீங்கள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது. அப்படி குற்றம் சாட்டுங்கள். பதில் சொல்கிறோம். நக்சல்பாரி இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதே ஒரு அவதூறு.

கேள்வி: இந்தியாவில ரெட் காரிடார் அப்படின்னு சொல்லக்கூடிய, மாவோயிஸ்டு, நக்சலைட் எல்லாத்தையும் ஒண்ணாத்தானே பார்க்குது அரசு?

பதில்: தடைசெய்யப்பட்ட இயக்கம் நக்சலைட் இயக்கம் என்பதைக் குற்றமாக ஊடகங்களில் பேசுபவர்கள் ரெண்டே பேர்தான். ஒண்ணு பா.ஜ.க., இன்னொண்ணு அ.தி.மு.க. இவங்க ரெண்டு பேர மதித்து இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது.

ஆனால், இந்தப் பாடலை ஆதரிக்கின்ற லட்சக்கணக்கான கோடிக்கணக்கான இளைஞர்கள், மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடையே ஒரு அச்சத்தை உருவாக்குவதற்கு, பீதியை உருவாக்குவதற்கு திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்தப் பொய்யில் முதல் அம்சம் நக்சலைட் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது. இது கலப்படமில்லாத பொய். இதப் புரிஞ்சிக்கணும். நக்சல்பாரி இயக்க வரலாறு என்ன என்று கொஞ்சம் தெரிஞ்சிக்கணும்.

கேள்வி: இன்னிக்கு இருக்கக்கூடிய மாவோயிஸ்டுகள் தடைசெய்யப்பட்ட இயக்கமா இருக்காங்க. அவங்கதானே..! நக்சலைட், மாவோயிஸ்டு எல்லாம் ஒண்ணுதானே?

பதில்: எல்லாம் ஒண்ணுதானே, அப்படிங்கிற வாதத்துக்கு பதில் சொல்லணும்னாலே, இதன் வரலாறு பத்தி சுருக்கமா தெரிஞ்சிக்கணும். அதாவது, 67 ல நக்சல்பாரி எழுச்சி. அந்த நக்சல்பாரி எழுச்சிங்கிறது, நக்சல்பாரி என்ற மேற்கு வங்கத்துல இருக்கிற கிராமத்துல நடந்த ஒரு விவசாயிகளின் எழுச்சி. அந்த எழுச்சியைத் தொடர்ந்து, சி.பி.எம் கட்சியில ஒரு பிளவு ஏற்பட்டு, அந்தக் கட்சியில இருந்து, கம்யூனிஸ்டு இயக்கத்தில இருந்து, கணிசமானவர்கள் வெளியேறி, சி.பி.ஐ.(எம்-எல்) என்ற புதிய கட்சியை உருவாக்குகிறார்கள். அதனுடைய கேந்திரமான ஒரு விசயம் என்னவென்றால், தேர்தலில் நின்று ஓட்டு வாங்குவது, தொகுதிப் பங்கீடு, கூட்டணி வைக்கிறது, இப்படியே நாம் வீணாப்போயிட்டோம். மக்களைத் திரட்டி புரட்சி செய்வதுதான் கம்யூனிஸ்டுகளோட வேலை. அந்த வேலையைப் பார்ப்போம் என்பதுதான். இது நக்சல்பாரி எழுச்சியிலிருந்து இந்தக் கட்சியினர் எடுத்துக்கொண்ட படிப்பினை.

அதற்குப் பின்னர் பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உருண்டோடிய இந்த காலத்தில நக்சல்பாரி இயக்கம் என்பது பல பத்து குழுக்களாக இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. அனைத்தும் நக்சல்பாரி குழுக்கள் என்றே அறியப்படுகிறது. இதில் தேர்தலில் நிற்பவர்கள் இருக்கிறாங்க. உதாரணமா, இப்போ பீகார் தேர்தல் நடந்தது. அதுல சி.பி.ஐ.எம்.எல். லிபரேசன் மூன்று தொகுதியில ஜெயிச்சிருக்காங்க. அவங்க நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறவங்க. ஆந்திராவில சி.பி.ஐ.எம்.எல். நியூ டெமாக்ரசினு இருக்கிறாங்க. அவங்களுக்கு எம்.எல்.ஏ. எல்லாம் இருக்கிறாங்க. தொழிற்சங்கம் இருக்கு. விவசாய சங்கம் இருக்கு. அவங்க நக்சல்பாரி மூவ்மென்ட்னு சொல்லிக்கிறாங்க. கேரளாவில ரெட்ஃபிளாக்னு ஒரு குழு இருக்கு., அவங்க சொல்லிக்கிறாங்க. தமிழ்நாட்டுல சி.பி.ஐ.எம்.எல். எஸ்.ஓ.சி.னு இருக்குது. அவங்க தேர்தலில் நிற்பதில்லை. நாங்க நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறாங்க. நீங்க சொன்ன மாவோயிஸ்டு அமைப்பு இருக்குது. அவங்களும் நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறாங்க. அவங்க ஆயுதப்போராட்டம் மட்டும்தான் நமது பாதை. கொரில்லாக் குழுக்களைக் கட்ட வேண்டும் என்கிறார்கள். இப்படி பல ஸ்டிரீம், பல நீரோடைகள் இதுல இருக்குது. இதை எல்லாம் பொதுவாக்கி நக்சல்பாரி அமைப்பு தடை செய்யப்பட்டது. என்று சொல்வது உண்மைக்கு மாறானது.

கேள்வி: நீங்க தேர்தல் பாதை திருடர்பாதை அப்படின்னு சொல்றீங்க… அப்படி சொல்லும்போது, தேர்தல் பாதை இல்லைன்னா உங்க பாதை எது?

பதில்: தேர்தல் பாதை இல்லைன்னா எது உங்க பாதை. அந்தப் பாதையை எப்படி செய்யப்போறீங்க? என்பது தனி ஒரு விவாதம். ஆனா, நீங்கள் தடை செய்யப்பட்ட இயக்கம் அப்படின்னு சொன்னால், அதற்கு பதில் சொல்லனும்.

இப்போ நீங்கள் கேட்ட மாவோயிஸ்டு இயக்கமே, என்றென்றைக்கும் தடை செய்யப்பட்ட இயக்கமா இருந்ததில்லை. 1990 இல் ஆந்திராவில சென்னாரெட்டி (காங்கிரசு) ஏற்கெனவே தெலுங்குதேசக் கட்சி அரசால் விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுகிறார். ஆனால் ஆயுதப்போராட்டம்தான் தங்களது கொள்கை என்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. அன்று மாவோயிஸ்டுகளுக்கு சி.பி.ஐ.எம்.எல். பீப்பிள்ஸ் வார் என்று பெயர். அதற்குப் பிறகு மறுபடியும் சந்திரபாபு நாயுடு ஆட்சி. மீண்டும் தடை விதிக்கப்படுகிறது. அப்பறும் ஒய்.எஸ்.ஆர், அதாவது காங்கிரசு கட்சியின் ராஜசேகர ரெட்டி, தடையை அகற்றுகிறார். இதுக்கு முன்னால என்.டி.ராமாராவ் தடையை அகற்றியிருக்கிறார்.

எதற்காக இவர்களெல்லாம் தடையை அகற்றியிருக்கிறார்கள்? ஏனென்றால், மாவோயிஸ்டுகள் அல்லது முன்னாள் மக்கள் யுத்தக்குழுவினர் மீது விதிக்கப்பட்ட தடையை, தொடுக்கப்படுகிற தாக்குதலை மக்கள் விரும்பவில்லை. இந்தத்தடையை நீக்கினால்தான் நமக்கு ஓட்டு கிடைக்கும் என்ற ஒரு காரணத்துக்காகத்தான் அவர்கள் தடையை நீக்குகிறார்கள்.

எதற்காகத் தடையை நீக்கினார்கள், எதற்காக தடையை கொண்டு வருகிறார்கள்? இவர்கள் தடை விதிக்கிறார்கள், நீக்குகிறார்கள் என்பதிலிருந்து ஒரு இயக்கத்தினுடைய கொள்கையை சரி அல்லது தவறு என்று முடிவு செய்ய முடியாது. புலிகள் இயக்கமே இல்லை. ஆனால் புலிகள் இயக்கத்துக்கு இன்னும் தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கோமாளித்தனம் இல்லையா? இந்தத் தடைக்கெல்லாம் பயந்து பதில் சொல்ல முடியாது. இந்தத் தடை என்பது, பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் உருவாக்குகின்ற ஒரு பூச்சாண்டி. அதற்கு மேல இதில் விசயமில்லை.

இந்த தடையைப் பற்றி பேசும்போது நாம் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தடையை பற்றி பேசுகிறவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பி.ஜே.பி. பேசுகிறது. ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட அமைப்பு – காந்தி கொலையின் போது, பாபர் மசூதி இடிப்பின் போது! பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து விசுவ இந்து பரிஷத் தடை செய்யப்பட்டது. பஜ்ரங்தள் தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் ஆதரித்து இவர்கள் குரல் கொடுத்தார்களா இல்லையா? இவர்களெல்லாம் பயங்கரவாத அமைப்பா இல்லையா? அவர்கள் பயங்கரவாத குற்றங்கள் செய்கிறார்களா இல்லையா? இவர்களுக்கு தடையைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகை இருக்கிறது? இதை யோசிக்க வேண்டும். தடை தடை என்ற பூச்சாண்டியைக் கண்டு பயந்து விடக்கூடாது.

கேள்வி: அப்போ நீங்க மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீங்களா?

பதில்: மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீங்கள, இல்லையா என்ற கேள்வியே இந்த வழக்கிற்கு சற்றும் தொடர்பற்ற கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கி, விலகியதாக கருதக்கூடாது, என்பதனால் இதற்குப் பதில் சொல்றேன்.

மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டப் பாதையை முன்னிறுத்தி, காடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். அப்படி புரட்சி செய்து விட முடியும்னு அவங்க நினைக்கிறாங்க. நாங்கள் அதை நிராகரிக்கிறோம். நாட்டில் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாணவர்களும் ஏராளமான உழைக்கும் மக்களும் அன்றாடம் எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். மோடியினுடைய நிலப்பறிச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடக்குது. தொழிலாளர்கள் பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராகப போராடுகிறார்கள். பழங்குடியின மக்கள், காடுகளிலிருந்து வெளியேற்றப் படுவதெற்கெதிராகப் போராடுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களின் ஊடாக, ஒரு புரட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பது எங்களுடைய பாதை. இது ஒரு எளிய விளக்கம்.

மற்றபடி, நக்சல்பாரி இயக்கத்துக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று அவர்கள் கேட்பது ஒரு கோமாளித்தனமானக் கேள்வி. நக்சல்பாரி இயக்கத்தின் முப்பதாவது ஆண்டுவிழாவை மக்கள் கலை இலக்கியக் கழகமும் எங்களது தோழமை அமைப்புகளும் மேடைபோட்டு ஊர் ஊராக நடத்தியிருக்கிறோம். இதே சென்னை மாநகரத்தில், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் போராட்டம் வெற்றிபெற்றபோது, அதற்கு ஆதரவா பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறோம். சென்ற யு.பி.ஏ. கவர்மென்ட் ஆட்சியின்போது, ஆபரேசன் கிரீன்ஹண்ட் என்று மாவோயிஸ்டுகளுக்கு எதிராக வன்முறைக் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அதற்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறோம். ஆகையினால், நாங்கள் நக்சல்பாரி இயக்கத்தை ஆதரிக்கிறோமா என்பதை கோவனை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. இதோ இப்ப நான் சொல்கிறேனே. அதுபற்றிய நிலை உலகறிந்தது. அது எங்கள் பாடல்களிலும் இருக்கிறது.

கோவன் மீண்டும் கைது செய்யப்படுவாரா ?

0

slider 1பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – முதல் பாகம்

அருள் எழிலன் :  வணக்கம்.  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார் ஆனால் தமிழக அரசு அவரது வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. கோவன் விவகாரம் தொடர்பாக இணையதளங்களில், பொதுவெளியில், அரசியல் தளத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் என கருத்துப் பரிமாற்றம் செய்வோர் அனைவருமே பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக நாமும் கேட்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன.

கோவன் கைது தொடர்பாக நிலவும் குழப்பங்கள்,  கேட்க விரும்பும் கேள்விகள்,  எனப் பல்வேறு கேள்விகளை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் முன்வைத்தோம்.

கேள்வி: வணக்கம். தோழர் கோவன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. தோழர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கனும் அப்படின்னு போயிருக்கா? அல்லது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜாமீனையே ரத்து செய்யனும் அப்படின்னு போயிருக்காங்களா? என்ன காரணத்திற்காக உச்சநீதிமன்றத்தைத் தமிழக அரசை நாடியுள்ளது?

பதில்:  கோவனை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றுதான் அவர்களது மனு முதன்மையாகக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த வழக்கில் என்ன நடந்தது,  என்ன கேட்டிருக்கிறார்கள் என்பது பற்றி, ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் ஒரு தெளிவின்மை இருக்கிறது. அதனால் அதனை நான் தெளிவு படுத்துகிறேன்.

கோவன் கைது செய்யப்படுகிறார். சிறைவைக்கப்பட்ட பிறகு, அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசு கேட்கிறது. அதை நம் வழக்கறிஞர்கள் ஆட்சேபிக்கிறார்கள். இங்கே குற்றம் என்று அவர்கள் சொல்கிற அந்தப் பாடலை எழுதியது நான்தான், பாடியது நான்தான் என்று ஒப்புக்கொள்கிறார் கோவன். அது பிரசுரிக்கப்பட்டது வினவு இணையதளத்தில். அந்த வினவு இனையதளத்தின் பொறுப்பாளர் தோழர் காளியப்பன்,  குற்றஞ்சாட்டப்பட்ட முதன்மை குற்றவாளி. இதற்குமேல் இந்த வழக்கில் விசாரிக்க ஏதுமில்லை. யாரும்  மறுக்கவில்லை.  இதற்குமேல் விசாரிக்க எதுவுமில்லாத போது, இதில் போலீஸ் காவல் எதற்கு என்பதுதான் நம்முடைய வாதம். ஆனால், இந்த வாதத்தை மீறி எழும்பூர் நீதிமன்றம் 5 நாள் போலீசு காவலுக்குப் பதிலாக 2 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்கிறது. இந்த 2 நாள் போலீஸ் காவலே தவறு, சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்கிறோம்.

அந்த மனு சென்ற 14–ஆம் தேதி சனிக்கிழமையன்று விசாரிக்கப்பட்டது. அப்போ, உயர்நீதிமன்ற நீதிபதி அரசு தலைமை வழக்கறிஞரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். முதல் கேள்வி, எதுக்காக உங்களுக்கு போலீஸ் காவல் தொடரணும்னு கேட்கிறார்.  நக்சலைட் இயக்கங்களோடு கோவனுக்கு தொடர்பு இருக்கிறது என்று சந்தேகிக்கிறோம்… அதை விசாரிக்கிறதுக்கு இன்னொருநாள் காவல் வேணும்னு அவர் சொல்றாரு. இந்த ஒருநாள் விசாரிச்சீங்களே, அப்படி ஏதாவது தகவல் கிடைச்சிருக்கான்னு கேட்கிறார் நீதிபதி. இல்லை என்கிறார் அரசு வழக்குரைஞர். அப்புறம் எதுக்கு மேற்கொண்டு கேட்கிறீங்க என்று நீதிபதி கேட்கிறார். இல்லையில்லை நாளைக்கு சொல்லலாமில்லையே என்கிறார் வழக்கறிஞர்.

இரண்டாவது கேள்வி – மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பா என்று கேட்கிறார். இல்லை தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்று தலைமை வழக்கறிஞர் பதில் சொல்கிறார். அப்போ அது தடை செய்யப்பட்ட அமைப்பும் அல்ல,  அவருக்கு இந்த மாதிரி தீவிரவாத இயக்கங்களோட தொடர்பு இருக்கிறது என்பதற்கு எந்த சான்றுகளும் முதல்நாள் விசாரணையில் உங்களுக்கு கிடைக்கல. அப்போ இந்த வழக்குக்குத் தொடர்பே இல்லாமல், அவரை மேலும் நாலு நாளைக்கு வைத்து விசாரிச்சா வரவழைப்போம்னு சொல்வதே சட்டவிரோதமானது. எனவே, இந்த போலீஸ் கஸ்டடியை நான் ரத்து செய்றேன் என்று சொல்லி அதற்குத் தடை விதிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி. இது சனிக்கிழமை 14-ஆம் தேதி நடக்கிறது.

அடுத்து திங்கட்கிழமை. திங்கட்கிழமையன்றைக்கு செசன்ஸ் நீதிமன்றத்தில் (அமர்வு நீதிமன்றம்). ஏற்கெனவே இந்த பெயில் விசாரணை முடிந்து அன்றைக்கு தீர்ப்பு சொல்கிறது. இந்த பெயில் கொடுக்கக்கூடாது என்பதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த ஆட்சேபம் என்ன?  பெயில் கொடுத்தால் கோவன் தலைமறைவு ஆகிவிடுவார் –  விசாரணைக்கு வரமாட்டார் – தீவிரவாத இயக்கம் – இப்படி எதுவும் அவரால் ஆட்சேபமாக சொல்லப்படவில்லை. மாறாக, தலைமை வழக்கறிஞர் என்ன சொல்கிறார் என்றால், முதல்வரை பற்றி ரொம்ப தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்திருக்கிறார்கள். அதனால் பெயில் கொடுக்கக்கூடாது என்கிறார்.

இந்தக் காரணத்தை செசன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த காரணம், கோவனை,  நீதிமன்ற காவலில் அதாவது சிறையில் வைப்பதற்கு பொருத்தமானது அல்ல. அவர் விசாரணைக்குக் கூப்பிட்டால் வரப்போகிறார். அதனால் அவரை ஜாமினில் விடுவிக்கிறோம் என்று வேறு எந்த நிபந்தனையுமில்லாமல் ஜாமினில் விடுதலை செய்கிறது.  போலீஸ் காவலும் தேவையில்லை. நீதிமன்றக் காவலும் தேவையில்லை என்று நீதிமன்றங்கள் சொல்லிவிட்டன.

மக்கள் மன்றத்தில் என்ன நிலை?  பாரதிய ஜனதா, அண்ணா.தி.மு.கவைத்  தவிர இவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு ஒரு ஆள்கூட கிடையாது. தமிழகம் மட்டுமில்லை இந்திய அளவிலும் சரி., சர்வதேச அளவிலும் சரி., பன்னாட்டு பத்திரிக்கைகளும் சரி., எல்லாரும் காறி உமிழ்ந்திருக்கிறார்கள். கண்டித்திருக்கிறார்கள். இப்படி தனிமைப்பட்டு இருக்கிற இந்த அரசு. எப்படியாவது தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த நடவடிக்கையில ஈடுபட்டிருக்கிறது.

இதுமட்டும் அல்ல,  இனி யாராவது இந்த அரசை விமர்சித்தோ, டாஸ்மாக்கை விமர்சித்தோ, பாட்டு எழுதினால், சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன். சும்மா விடமாட்டேன். என்று மிரட்டுவது இவர்களுடைய நோக்கம். எல்லோராலும் சுப்ரீம் கோர்ட் வரை போகமுடியாதல்லவா? அப்படி எங்களை மிரட்டலாம்னு பார்க்கிறாங்க. அது நடக்காது. ஆனால், மக்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருக்கு 3 இலட்சம், 5 இலட்சம் பீஸ் கொடுப்பார்கள். அது உங்களுடைய வரிப்பணம். உங்களுடைய வரிப்பணத்தில்தான் இந்த அயோக்கியத்தனம் நடத்தப்படுகிறது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

கேள்வி: இதுல தமிழக அரசுக்கு சில சந்தேகங்கள் இருக்கு. இது தொடர்பா சில உண்மைகள் அவங்க தெரிஞ்சிக்கிடனும்னு அவங்க ஆசைப்படலாம். விரும்பலாம். அதுக்காக உச்சநீதிமன்றத்தை நாடுவதை நீங்க எப்படி தப்புன்னு சொல்லுவீங்க?

பதில்: தாராளமாக  நாடலாம். அதில் ரெண்டு விசயங்கள் நான் சொல்ல வேண்டும். முதல் விசயம்., இந்த வழக்கு பாட்டுக்காக போடப்பட்ட வழக்கு. இளவரசன் கொலையில் கோவனுக்கு தொடர்பு இருக்கான்னு விசாரிக்கனும், கோகுல்ராஜ் கொலையில தொடர்பு இருக்கான்னு விசாரிக்கனும், அதற்காக போலீஸ் காவல் வேணும்னு சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா? போட்ட கேசு என்ன? போட்ட கேசுக்காகத்தான் விசாரிக்க முடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டம்னு ஒன்று இருக்கிறது. அந்த சட்டத்தையே தமிழக அரசு நிராகரிக்கிறது. இது முதல் விசயம்.

அப்பீல் போனா என்ன தப்பு என்று ஊடகங்களில் அ.தி.மு.க. காரங்க கேட்கிறாங்க. கைது  செய்ததே தப்பு. இது தப்புக்கு மேல தப்பு. இந்த பிரச்சினையில, ஏற்கெனவே தமிழக அளவில்,  இந்திய அளவில், உலக அளவில், ஒரு  ரவுண்டு இந்த அரசு அம்பலமாகியிருக்கு. ரெண்டாவது ரவுண்டு வரணும்றது இந்த அரசினுடைய விருப்பம். அதை வரவேற்கிறோம்.

கேள்வி: கோவனுடைய ஜாமீன் ஒரு வேளை ரத்தானால் அல்லது அந்த வழக்கு தொடர்பாக பாதகமான சூழல் வந்தால் அதை எப்படி எதிர் கொள்வீர்கள்?

பதில்: பாதகமான சூழல், சட்டப்படி தீர்ப்பு சொன்னால் வராது. வரமுடியாது என்பது எங்களது கருத்து. அதுக்குமேல் பாதகமான சூழல் என்று சொன்னால், என்ன பாதகம் வரப்போகிறது? போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பார்கள். விசாரிக்கட்டும். அதை எதிர்கொள்வோம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.

–          தொடரும்

அம்மா காரு கூட நனையவில்லை – ம.க.இ.க பாடல் டீசர்

2
கெடிலம் ஆற்றில் வெள்ளம்

புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.

ஊரெங்கும் மழைவெள்ளம் தத்தளிக்கிறது தமிழகம்
இது யாரோட குத்தம்னு கேட்காத சிறைவாசம்!

சாக்கடை ஊட்டுக்குள்ளே போக்கிடம் ஏதுமில்லே…
பாக்க வந்த அம்மாவோட காரு கூட நனையவில்லை..
பொங்கித் தின்ன வழியில்லை பொட்டலம்தான் கதியில்லை
போயஸ் ராணி ஆட்சியில போட்டோவுக்கு குறைச்சல் இல்ல…

தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி
தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி
தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி
தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே – தடியடி

திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !

0

டாஸ்மாக்கிற்கெதிராக இரு பாடல்களை இயற்றிப் பாடியதற்காக ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் பாடகர் தோழர் கோவன் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமின்றி, இந்தப் பாடலை வெளியிட்ட வினவு தளத்தின் பொறுப்பாளரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலருமான தோழர் காளியப்பன் மீதும் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

மார்க்கண்டேய கட்ஜூமுன்னாள் உ ச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, ஏற்கெனவே தனது முகநூலில் கோவன் கைதைக் கண்டித்திருக்கிறார். தற்பொழுது, இது தொடர்பாக தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில், “வழக்கை ரத்து செய்து, கோவனை விடுவிக்க வேண்டும்; நடந்த தவறுக்காக ஜெயலலிதா கோவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.” என கூறியிருக்கிறார்.

இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பரவலாக கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, தி.மு.க.வின் பொருளாளர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி, ம.தி.மு.க.வின் பொதுச்செயலர் வை.கோ., தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த், வி.சி.கட்சியின் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சி.பி.ஐ., சி.பி.எம்., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டுப் பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஓட்டுக் கட்சிகள் மட்டுமின்றி, அறிவுத்துறையினரும் ஊடகங்களும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் இந்தக் கைதைக் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

“காலனியத்தன்மை கொண்ட இச்சட்டம் முற்றுமுழுதாக வெட்டியெறியப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டு, கோவன் கைதை கண்டித்து தலையங்கம் எழுதியிருக்கிறது தி இந்து நாளிதழ். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட்; பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் உள்ளிட்டு அயல்நாடுகளின் ஊடகங்களும், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைக் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கோவன் கைதைக் கண்டித்திருக்கின்றன. கோவனை விடுதலை செய்யக் கோரி இலண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நவம்பர் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது, “பறை – விடுதலைக்கான குரல்” அமைப்பு.

இவைதவிர, கார்டூனிஸ்ட் பாலா, மும்பை கார்டூனிஸ்ட் அசிம் திரிவேதி, ஆர்.பிரசாத் உள்ளிட்ட அரசியல் கேலிச்சித்திர ஓவியர்கள் தங்களது ஓவியங்களால் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

00-seditionistsஇவற்றுக்கப்பால், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணையதள செயற்பாட்டாளர்கள் பலரும் அழுத்தமான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றனர். ஜெயா கும்பலின் ஆணவத்தையும், பாசிசத் திமிரையும் எள்ளி நகையாடியிருக்கின்றனர். அவர்களின் மொழியிலே சொல்வதென்றால், ஜெ. கும்பலைக் கழுவி கழுவி ஊற்றி விட்டனர். பேஸ்புக்கில் பலரது முகப்பு பக்கங்களில் தோழர் கோவனின் புகைப்படம்தான் இடம்பெற்றிருக்கிறது. “கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!” என்று நேரிடையாகவே சவால்விட்டுப் பதிவிட்டுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்.

Gopalan TN: ஒரு தலைமுறையினைச் சீரழித்துக்கொண்டிருக்கும் இவ்வரசை சாடக்கூட ஜனநாயகத்தில் நமக்கு உரிமை இல்லையா என்ன?

00-mathimaranவே.மதிமாறன் :
அ.தி.மு.க. மேடைகளில் ரெக்காட் டான்ஸ் என்ற பெயரிலும் வசனம் என்ற பெயரிலும்… நின்னு பாக்கவும் முடியாது கேட்கவும் முடியாது அவ்வளவு ஆபாசமாகக் கீழ்தரமாகத் தமிழகம் முழுக்க எல்லா மேடைகளிலும் முழங்கிகிட்டே இருக்கிறார்கள் அ.தி. மு.க. காரர்கள். இது காவல்துறையின் பாதுகாப்போடு நடக்கிறது.கோவன் பயன்படுத்திய ஊத்திக் கொடுத்த வார்த்தைக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால்.. அதிமுக மேடையில் பெண்களை இவ்வளவு வக்கிரமா, கேவலமா பேசுகிற அவர்களுக்குத் தூக்கு தண்டனையே கொடுக்கனும்.

Raja Sivakkumar from Chennai : வெளிய வந்த பிறகும் பாடுங்க தோழரே, நாங்க சப்போர்ட் பண்றோம், வாட்ஸ்அப், நெட்ல எதில வேணாலும் போடுங்க… மூடாமல் ஓவதில்லை…

Bala G: சாராய அதிபர்களுக்காகவும் பெப்ஸி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்காகவும் ஆட்சி நடத்துகிற ஜெயாவின் போலீஸ் டாஸ்மாக்கை மூடு பாடலுக்காக புரட்சிகர பாடகர் தோழர் கோவனை கைது செய்திருக்கிறது..

நா.முத்துக்குமார் தமிழன்: கொடநாட்டு கோமாளவள்ளியின் கொழுப்பெடுத்த பாசிசம். பாடலை பாடியதற்காக தேசத்துரோக வழக்கில் கைதா? இதுதான் பாசிசம்.

தமிழச்சி (பிரான்ஸ்) : தமிழ்நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, “கலை என்றால் சினிமாவில் ஆடும் டூயட்டாக இருந்தால் மட்டும் போதும்” என்று நினைக்கிறார். அவருடைய வயிற்றுப்பிழப்புக்கு வேண்டுமானால் “டூயட்” ஆட்டங்கள் கலையாக இருக்கலாம். ஆனால் அது மக்களுக்குச் சோறு போடாது. மக்களுக்காக பேசப்படும் கலைகளும் இலக்கியங்களும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் புரட்சிப் பாடகரான தோழர் கோவன் செய்திருக்கிறார். எனவே, “ஜெயலலிதாவே டாஸ்மார்க்கை மூடு. தோழர் கோவனை வெளியே விடு.”

00-thyaguதோழர் தியாகு:
‘உல்லாசம்’ என்று பாடியதாக கோவன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். Pleasant stay என்பது தங்கும் விடுதியின் பெயர்! Pleasant என்றால் உல்லாசம் என்றும் பொருள் படும்! “இங்கே வாருங்கள் உல்லாசம் அனுபவிக்கலாம்” என்று அர்த்தம் செய்து கொள்ள முடியுமா ?

ஸ்டாலின் பெலிக்ஸ்: “மூடு டாஸ்மாக்கை மூடு” போன்ற சமூக பிழையான பாடல்களை பாடாமல்… “டாடி மம்மி வீட்டில் இல்லை..”, “நேத்துராத்திரி எம்ம்மா…”, “கட்டி புடி கட்டி புடி டா… ” போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை பொதுமக்கள் பாடும்படி சமூகம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Feroz Babu: எவண்டி உன்ன பெத்தான், அவன் கைல கிடச்சா செத்தான்; வை திஸ் கொலவெறி என பெண்களை இழிவு படுத்தி பாடி னால் மரியாதை. ஓபன் த டாஸ்மாக் எனும் பாடலுடன் வரும் படத்துக்கு வரி விலக்கு (இத்தனைக்கும் அதுல சின்னதா குடி குடியை கெடுக்கும் எனும் வாசகத்துடன்). ஆனால் மூடு டாஸ்மாக்கை என பாடினால் சட்ட விரோத கைது. என்னாங்கடா உங்க ஜனநாயகம் டே!

Vijii Ambedkar : முதுகு வளைந்தவனெல்லாம் மந்திரினு வெள்ளையும் சொல்லையுமா சுத்தும்போது, நிமிர்ந்து நிக்கிற மண்ணின் மைந்தன் சிறைக்கு தான் போகனும்…

Sundararajan Lawyer Sundar: மதுபானம் ஆட்சிக்கும் , அதிகாரத்துக்கும் நல்லது. மதுவிலக்கு கோரிக்கை ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும் எதிரானது. ஆட்சியும், அதிகாரமும்தான் தேசம் என்பதால் மதுவிலக்கு கோரிக்கை தேசத்திற்கு எதிரானது.

00-manushyaputranமனுஷ்யபுத்திரன்:
இன்று கோவனுக்கு நேர்ந்தது தமிழக அரசை எதிர்க்கும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனநாய உரிமைகளைப் பாதுகாக்க கோவனின் பக்கம் நிற்போம். மாற்று கருத்துக்களின் குரல்வளையை நெரிக்கும் கரங்களுக்கு எதிராக நம் கரங்களை உயர்த்துவோம். டாஸ்மாக்கை எதிர்ப்பது தேச துரோகம் என்றால் நாம் தேச துரோகிகளாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை.

Balan Guru: “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை சில ஆயிரம் மக்களுக்கு மட்டும் சென்றடைந்த பாடலை லட்சக்கணக்காகன மக்களுக்குக் கொண்டு சென்ற அம்மா ஆட்சியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

Sumi B: பேச்சுரிமை எழுத்துரிமை இருக்கிற ஜனநாயக நாட்டில் ‘பாட்டுரிமை’ இல்லையா…..!!! ‘அரெஸ்ட்’ உரிமைக்கும், கொடநாடு ‘ரெஸ்ட்’ உரிமைக்கும் முடிவு கட்ட ‘பாடு அஞ்சாதே பாடு’…!!!! தமிழ்நாடு இல்லடா, டாஸ்மாக் நாடுடா……. இங்க குடி இருக்கறவன் எலலாம் ‘குடிமகன்’ இல்லடா…… குடிக்கறவன் தாண்டா தேசதுரோகம் செயாத உண்மையான ‘குடிமகன்’.

ஆளூர் ஷானவாஸ்: கோவனை சிறை வைக்கிறீர்கள். கோவனின் புரட்சிப் பாடல்களை என்ன செவீர்கள்? அது என்னையும் கடந்து, என் நான்கு வயது மகன் வரை ஊடுருவிச் செல்கிறதே! அதை எப்படித் தடுப்பீர்கள்?

***

தொகுப்பு – இளங்கதிர்.

relase-kovan
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்

1

பாகலூர் பேரிகை சாலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்போம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்! என்ற முழக்கத்தினை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக… பல ஆண்டுகளாக குண்டுங்குழியுமாக, சேரும் சகதியுமாக கிடக்கும் தார்சாலைகளை செப்பனிட்டுத் தராத இந்த அரசமைப்பை அம்பலப்படுத்தி நாமே தார்சாலைகளை அமைத்து அதனைப் பராமரிக்க இந்த சாலைகளைப் பயன்படுத்தும் கனரக வாகனத்தாரிடம் வரி வசூல் செய்து நிர்வகிப்போம் என்ற பிரதான முழக்கத்தை மக்கள்முன் வைத்து பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மக்களை அழைத்ததும் மக்கள் மத்தியில் இம்முழக்கம் அவர்களது சொந்த முழக்கமாக ஓங்கி ஒலித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

hosur-rain-affected-demo-5இதனைக் கண்ட அதிகாரவர்க்கம் போலீசை அணுகி ஆர்ப்பாட்ட அனுமதியை ரத்து செய்தது. ஆர்ப்பாட்ட தேதிக்கு முன்னதாகவே, ஓடோடிவந்து அவசர அவசரமாக ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு மண் அடித்து சாலையை போட்டுவிட்டதாக கணக்குக் காட்டிவிட்டுச் சென்றது. மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசு, “இப்பகுதியில் தார்சாலை அமைக்க 420 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. என்றும் விரைவில் போடப்படும். ஆதலால் ஆர்ப்பாட்டம் நடத்தத் தேவையில்லை” எனக்கூறி அனுமதி தர மறுத்தது. எனினும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாங்கள் மக்களுக்கு அறிவித்தப்படியே அனுமதி மறுப்பைப் பொறுட்படுத்தாமல் தடையை மீறி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த பாகலூர் சூடாபுரம் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ச. மங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன், ஒத்தரப்பள்ளி விவசாய சங்கத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி, சூடாபுரம் கேபிள் ஆப்ரேட்டர் திரு. முருகேசன், பாகலூர் சர்க்கில் ஜவுளிக்கடை உரிமையாளர் திரு. வெங்கடசாமி, சாப்கான் பெட்ரோல் பங்க் பஷீர், திரு. ராமசாமி, ஆயில்கடை, பேரிகை சாலை, பாகலூர்,  சூடாபுரம் மஞ்சு மற்றும் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் சந்தோஷ், தோழர் திம்மராயப்பா, தோழர் சுரேஷ், தோழர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன குரலெழுப்பினர். இது இப்பகுதிவாழ் மக்களுக்கு புது நம்பிக்கையை விதைத்துள்ளது. தமிழிலும், தெலுங்கிலும் ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

துண்டறிக்கை சொல்லும் செய்தி:

அன்புடையீர், வணக்கம்!

பாகலூர் முதல் பேரிகை வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ள அவலநிலை பல ஆண்டுகளாக உள்ளது. தினந்தோறும் ஐநூறுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்தப் பாதையில் செல்கின்றன. பல நூறு பேருந்துகள் செல்கின்றன. போலீசு ஸ்டேசன், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் மருத்துவமனை, வழிபாட்டு நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்காண மக்கள் சென்றுவருகின்றனர்.

மழைக் காலங்களில்.. சேரும் சகதியுமாக குட்டைகள் போல காட்சியளிக்கும் இந்த சாலை மற்ற காலங்களில் தூசி பறக்கும் சாலையாக உள்ளது. அரிசி முதல் அனைத்து பொருட்களும் தூசி படிந்த பொருட்களாக மாறியுள்ளது. குடிக்கும் தண்ணீர் முதல் பள்ளி மாணவர்களின் உணவு வரை தூசி கலந்தவற்றைதான் உண்கின்றனர். இந்த அபாயமான நிலைமைகள் காரணமாக மூச்சுத் திணறல், ஆஸ்துமா, காலரா, டெங்கு, மலேரியா, சேற்றுப்புண் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பிறப்பிடமாக உள்ளது. மனித உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய குளியல், மூலிகை குளியல் நல்லது என்று டி.வி விளம்பரங்கள் காட்டுகின்றன. ஆனால் , பாகலூர் சர்க்கிலில் மண் தூசி குளியலைத்தான் மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

பாகலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25 கி.மி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசு போட்ட தார்சாலைகள் மண்சாலைகளாக மாறியுள்ளன. இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயம் அழிந்து பெங்களுருக்கும் ஒசூருக்கும் செல்ல வேண்டிய அவலநிலைமை உருவாகியுள்ளது.

இவ்வழியிலிருந்து கர்நாடகாவிற்கு பல கோடி மதிப்புள்ள ஜல்லி, மணல், பூ, பழம், காய்கறிகள் நாள்தோறும் கொண்டுச்செல்லப்படுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒசூருக்கும் பெங்களூருக்கும் கூலி வேலைக்கு சென்றுவருகின்றனர். இதன்மூலம் அங்கே சாப்பிங்மால்கள், ஹைட்டெக் சிட்டி, உல்லாச விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், நமது வாழ்க்கை மிக மோசமாக வாழ்வதற்கே தகுதியற்றதாக போய்கொண்டிருக்கிறது. இதன் ஒரு வெளிப்படையான ஒரு உதாரணம்தான் இந்த பாகலூர் பேரிகை சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுடைய சாலைகளின் அவலநிலை.

இந்த சாலைகள் குண்டுங்குழியுமாக இருப்பதற்கு காரணங்கள் என்ன?

முக்கியமாக அரசு அமைக்கும் சாலைகள் பேப்பர் சாலைகளாக உள்ளன. மற்றொருபுறம், பல டன் எடையுள்ள மணல், ஜல்லி ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் சாலைகளை நாசம் செய்கின்றன. இதனால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. குறிப்பாக, இந்த சாலைகள் நீரோட்டங்கள் நிறைந்த சாலைகளாக உள்ளன. இப்பகுதியில் இளகிய மண் கொண்டதாக உள்ளது. இதற்கேற்ப நீரோட்ட ஏற்பாடுகள் கான்கிரீட் சாலைகள் ஆங்காங்கே அமைத்தால்தான் சாலை தரமானதாக இருக்கும். இதனைக் கணக்கில் கொள்ளாமல் அரசு அமைக்கும் சாலை என்பது இரண்டே நாளிலேயே பெயர்ந்து வந்து, மண்சாலையாக மட்டும் இல்லாமல், விபத்துக்களை அதிகப்படுத்தும் மோசமான ஜல்லிக் கொட்டிய சாலையாக மாறிவிடுகிறது.

இவ்வாறு திட்டங்களை வகுப்பதிலும் அமுல்படுத்துவதிலும் மக்கள் நலன்களைப் பற்றி சிறிதும் அரசு சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை. அதிகார வர்க்கத்திடம் நிலவும் ஊழலும், மக்கள் நலனில் காட்டும் அலட்சியமும், அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதும்தான் இதற்கு அடிப்படை காரணங்கள். தரமான சாலை அமைக்க அரசிடம் கோரியும் அரசு தரமான சாலையை அமைத்துத் தருவதில்லை. இந்த அவலநிலைமையும் மாறிவிடுவதில்லை. ஆகையால், ஒரேயொரு தீர்வுதான் நம்முன்னே உள்ளது. பாகலூர் பகுதி மக்களாகிய நாம் ஒன்றிணைந்து நமக்கான சாலை அமைப்போம். இந்த சாலையைப் பயன்படுத்தும் லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களிடம் வரி வசூலிப்போம். சாலைகளை நாமே பராமரிப்போம் என்கின்ற வகையில் படிப்படியாக மக்கள் அதிகாரத்தை நாமே நிறுவுவோம்.

இந்த ஒரு பிரச்சனைக்கு மட்டுமல்ல.. பால் கொள்முதல், குடிநீர், சுகாதாரம், கல்வி, விளை பொருட்களின் விலையைத் தீர்மானித்தல், கொள்முதல் செய்தல் என எல்லா பிரச்சனைகளுக்கும் மக்கள் தங்களது அதிகாரத்தைக் கையிலெடுத்து செயல்படுத்துவது ஒன்றே தீர்வு. ஆளத் தகுதியிழந்த இந்த அரசு மக்களுக்கு சேவை செய்ய இலாயக்கற்று போய்விட்டது என்பது மட்டுமல்ல, இது மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக எதிரியாக மாறிவிட்டது. டாஸ்மாக், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, பாலியல் வன்முறை என பல பிரச்சனைகளின் ஊற்று மூலமாக உள்ளது. நாட்டையும் மக்களையும் சீரழிக்கிறது. இதனால், இதன் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இவற்றை நாமே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக மக்கள் அதிகாரத்தை நிறுவ ஒன்றிணைவோம்.

  • குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்!
  • குண்டும் குழியுமான மண் சாலையை சீரமைப்போம்!
  • மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
  • ஆளத் தகுதி இழந்துவிட்டது அரசு கட்டமைப்பு!
  • இதோ, ஆள வருகிறது மக்கள் அதிகாரம்.!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவண்

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு(-ஓசூர் பகுதி)
தொடர்புக்கு; 8015269381

சி.பி.எம் பிழைப்பு வாதம் இந்துமதவெறியரை எதிர்க்குமா ?

3

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான கல்புர்கி மற்றும் பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோவிந்த் பன்சாரே ஆகியோர் படுகொலை செயப்பட்டுள்ள கொடூரம், உ.பி. மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாகக் குற்றம் சாட்டி இந்துவெறியர்களால் ஒரு முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட அட்டூழியம், முன்னாள் பாக்.வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மக்முத் கசூரியின் நூலை வெளியிட ஏற்பாடு செய்த ‘குற்றத்துக்காக’, அத்வானியின் விசுவாசியான சுதீந்திர குல்கர்னியின் முகத்தில் சிவசேனா குண்டர்கள் கருப்பு மை ஊற்றி அவமானப்படுத்தி நடத்திய தாக்குதல், மோடியின் அமைச்சர்கள் வாய்க்கொழுப்பேறி இந்துத்துவ நஞ்சைக் கக்கிவருவது, எழுத்தாளர்கள் கொல்லப்படும் நிலையில் சாகித்ய அகாடமி மவுனம் சாதித்து வருவது – முதலானவை மோடி அரசின் மீது கடும் அதிருப்தியை அறிவுத்துறையினரிடம் தோற்றுவித்துள்ளது.

திரைப்படத் துறையினர்
விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் திரைப்படத் துறையினர்

நாட்டில் நிலவும் இத்தகைய சூழலுக்கு எதிராக பிரதமர் வாய் திறக்காததோடு, எந்த நடவடிக்கையும் எடுக்காததையும் கண்டிக்கும் வகையில் 88 வயதான பெண் எழுத்தாளரான நயன்தாரா சேகல், தனக்கு 1986-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப ஒப்படைத்துள்ளார். இந்த அறச்சீற்றத்துக்கு கல்புர்கி கொலையும், தாத்ரி விவகாரம் மட்டும் காரணமல்ல; “இன்று நாடெங்கும் தீவிரமாகிவரும் சகிப்புத் தன்மையற்ற இந்துத்துவ சக்திகளின் தாக்குதல் சூழல் காரணமாகவே நான் எனது விருதினைத் திருப்பிக் கொடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டு, புகழ் பெற்ற இந்தி கவிஞர், அசோக் வாஜ்பாய் தனது விருதினைத் திரும்பக் கொடுத்துள்ளார். “கௌதம புத்தரும் குருநானக்கும் பிறந்து வாழ்ந்த புண்ணிய பூமியில், மதரீதியான தாக்குதல்கள் நடப்பது நமது மண்ணுக்கும் சமுதாயத்துக்கும் பெருத்த அவமானம். இவற்றை இந்த அரசால் தடுக்க முடியாத நிலையில் இந்த விருதைத் திருப்பி அளிக்கிறேன்” என்று மோடி அரசுக்குக் கடிதம் எழுதி, பஞ்சாபின் எழுத்தாளரான தலீப் கவுர் தீவானா, தனக்கு 2004-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட பத்மசிறீ விருதைத் திரும்ப அளித்துள்ளார்.

தாத்ரி சம்பவமும், மும்பையில் பாக். கஜல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செயப்பட்டிருப்பதும் துரதிருஷ்டவசமானது என்று கூறிய மோடியின் பூசி மெழுகும் வார்த்தைகளை அம்பலப்படுத்தி, ஷஷி தேஷ்பாண்டே என்ற பிரபல பெண் எழுத்தாளர் சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதோடு, தனக்கு அளிக்கப்பட்ட விருதையும் திருப்பிக் கொடுத்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி, உதய் பிரகாஷ், கே.வீரபத்திரப்பா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி அளித்துள்ளனர். ஐந்து எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி பதவிகளைத் துறந்துள்ளனர். சினிமா தயாரிப்பாளர்கள் – இயக்குனர்கள் பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், தலிப் கௌர் திவானா.
விருதுகளைத் திருப்பிக் கொடுத்து மோடி முகத்தில் காரி உமிழ்ந்த எழுத்தாளர்கள் : நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், தலிப் கௌர் திவானா.

“இந்து ராஷ்டிர நாடாக இந்தியாவை மாற்றும் திசையில் இந்த அரசு செல்கிறது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக் கழக (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர்கள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெளிப்படையாகப் பங்கேற்கின்றனர். அரசின் பல்வேறு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் திட்டமிட்டே திணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதை திருப்பித் தருவதைத் தவிர விஞ்ஞானியான எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று உருக்கமாக கடிதம் எழுதி, பத்ம பூஷண் விருது பெற்ற 87 வயதான விஞ்ஞானி பி.எம். பார்கவா தனது விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார். விஞ்ஞானிகள் அசோக் சென், பி.பல்ராம் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்ம பூஷண் விருதைத் திருப்பி அளித்துள்ளனர். ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், கே.என். பணிக்கர், மிருதுளா முகர்ஜி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வரலாற்றாசிரியர்கள், மோடி அரசுக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பிரபல வரலாற்றாசிரியர் சேகர் பதக், தனக்கு அளிக்கப்பட்ட பத்மசிறீ விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார். எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்றாசிரியர்களின் போராட்டத்தை ஆதரித்து 107 மூத்த விஞ்ஞானிகள் ஆன்லைனில் அறிக்கை வெளியிட்டுள்ளதோடு, நாட்டில் நிலவும் மோசமான சூழலுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர்.

பி.எம்.பார்கவா, அசோக் சென், பி.பல்ராம்
அரசின் விருதுகளைத் திருப்பிக் கொடுத்துள்ள பிரபல விஞ்ஞானிகள் : பி.எம்.பார்கவா, அசோக் சென், பி.பல்ராம்

ஊடகங்களாலும் இந்துத்துவப் பரிவாரங்களாலும் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி அலை, இப்போது புஸ்வாணமாகி நாடு முழுவதும் கடும் அதிருப்தியையே எதிர்கொண்டிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது என்ற மோடி அரசின் நடவடிக்கைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” என்ற சரக்கும் விலை போகவில்லை. ஊழலற்ற ஆட்சி என்ற அண்டப்புளுகை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, ம.பி.முதல்வர் சௌகான் ஆகியோர் சிக்கியுள்ள ஊழல் விவகாரங்கள் சந்தி சிரிக்க வைத்துவிட்டன. சினிமா-தொலைக்காட்சி, கல்வி-கலாச்சாரம், அறிவியல், வரலாற்று ஆவு அமைப்புகள் முதல் உச்ச நீதிமன்றம் வரை அனைத்து நிறுவனங்கள் மட்டுமின்றி, சி.பி.ஐ, பிரதமர் அலுவலகம் போன்ற உயர் அதிகார அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகளை நியமித்து வருவதும், தீவிரமாகிவரும் இந்துவெறித் தாக்குதல்களும் அறிவுத்துறையினரிடமும் விஞ்ஞானிகளிடமும் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளன. மீள முடியாத அரசியல் பொருளாதார நெருக்கடியிலும், தப்பிக்க முடியாத லஞ்ச ஊழலிலும் சிக்கிக் கொண்டு அனைத்தும் தழுவிய தோல்வியிலும் மாட்டிக்
கொண்டுள்ள மோடி கும்பல், நாட்டின் அறிவுத்துறையினரிடமும் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போயுள்ளது.

07-awards-returnedஇருப்பினும், ஆட்சியதிகார பலத்தையும், அமைப்புரீதியில் திரட்டப்பட்டுள்ள இந்துவெறி பாசிச குண்டர் படையையும், கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதரவையும் கொண்டுள்ள துணிச்சலில் பா.ஜ.க. அமைச்சர்களும் தலைவர்களும் இந்துத்துவப் பரிவாரங்களும் அறிவுத்துறையினரின் நியாயமான இந்த அறப்போராட்டங்களை எள்ளி நகையாடி பாசிசத் திமிருடன் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

“இது வெறும் காகிதப் புரட்சி. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் எழுதுவதை நிறுத்திவிட்டுப்போகட்டும். நாங்கள் சாகித்ய அகாடமியை மூடிவிட்டு அதனைத் தூய்மை இந்தியா (ஸ்வாச் பாரத்) திட்ட அலுவலகமாக மாற்றிவிடுகிறோம்” என்று எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியமைக்கக் கிளம்புகிறார், மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான மகேஷ் சர்மா.

எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் படுகொலை செய்யப்படும் நாட்டில், அரசின் விருதுகள் ஓரு அவமானச் சின்னம் என ஒரு எழுத்தாளன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? எழுத்தாளர்களின் மீதான வன்முறையைக் கண்டிக்காத சாகித்ய அகாடமிக்கு தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில்தான் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக் கொடுக்கிறார்கள். இதுவும்கூட தவறு என்று சாடுகின்றனர், பா.ஜ.க. அமைச்சர்கள்.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “இவர்களது டிவிட்டர்களைப் பார்த்தாலே இவர்கள் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் என்று புரியும். இவர்கள் எதிர்க்கட்சிகளால் செயற்கையாக வலிந்து உருவாக்கப்படும் இத்தகைய போராட்டத்தின் மூலம் பிரபலமடையப் பார்க்கிறார்கள்” என்று சாடுகிறார். டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடம் உரையாற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், “இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கும், தொழில் வளர்ச்சிக்கும் நல்லதல்ல” என்று பா.ஜ.க. அரசின் போக்கு குறித்து விமர்சனமாகக் குறிப்பிட்டார். உடனே, “ரிசர்வ் வங்கி வேலையை மட்டும் ரகுராம் ராஜன் பார்க்கட்டும். ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று அவர் அறிவுரை சொல்லத் தேவையில்லை. அவரை மோடி அரசு உடனே நீக்க வேண்டும்” என்று சீறுகிறார், சுப்பிரமணிய சாமி.

“விருதுகளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் நாட்டின் பெருமையை சீர்குலைக்கிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய எதிர்ப்புகளால் பிரதமர் மோடியையோ, பா.ஜ.க.வையோ ஒன்றும் செய்துவிட முடியாது” என்று எகிறுகிறார் மைய அமைச்சர் உமா பாரதி.

முன்னாள் ராணுவத் தளபதியும் இந்நாள் பா.ஜ.க. அமைச்சருமான வி.கே.சிங், அரியானாவின் ஃபரிதாபாத்தில் ராஜபுத்திர சாதிவெறியர்களால் தீயிடப்பட்ட குடிசையில் இரு தாழ்த்தப்பட்ட குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டதைப் பற்றி நாய்களுடன் ஒப்பிட்டு அப்பட்டமான பார்ப்பன வெறியை பாசிசத் திமிருடன் கக்கியுள்ளார்.

“நான் மாட்டுக்கறி சாப்பிடுவது எனது தனிப்பட்ட விருப்பம்; அதை யாரும் தடுக்க முடியாது” என்று பேசிய கர்நாடக முதல்வரின் தலையை வெட்டுவேன் என பா.ஜ.க. தலைவர் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். இந்துவெறி சிறீராம் சேனா அமைப்பினர் கர்நாடக முதல்வருக்குப் பன்றிக் கறி அனுப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்துத்துவ தாக்குதல் தீவிரமாகிவரும் இத்தகைய சூழலில், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை திருப்பிக் கொடுத்து அரசின் முகத்தில் காறி உமிழாத குறையாக தங்களது எதிர்ப்புகளை பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் விஞ்ஞானிகளும் பதிவு செய்கின்றனர். ஆனால், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர்களின் நெஞ்சில் இவையனைத்தும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்களை அவர்கள் கேலியும் கிண்டலும் செய்து கொச்சைப்படுத்துகிறார்கள். அமிதாவ் கோஷ் போன்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுக்காத போதிலும், போராடும் எழுத்தாளர்களை ஆதரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் பிழைப்புவாத எழுத்தாளர்களோ, திருப்பிக் கொடுப்பவர்களை ஆதரிக்கக் கூட முன்வராமல் வழக்கமான தமது அடிமைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர்கள் தமக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது பிரச்சினைக்குத் தீர்வல்ல, இந்தப் போராட்டமுறையும் சரியல்ல; வேறு தளத்தில் போராட வேண்டும் என்று இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக ஏதோ பெரிய போராட்டம் நடத்தப் போவதைப் போல தமிழக சி.பி.எம். கட்சி காட்டிக் கொள்கிறது. ஆனால் என்ன போராட்டம் என்பதைப் பற்றி அது வாய் திறக்க மறுக்கிறது. சி.பி.எம். கட்சியின் அகில இந்தியத் தலைமையானது, விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்கள் – கலைஞர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால் தமிழகத்தின் சி.பி.எம். கட்சியும் அதன் தலைமையிலான த.மு.எ.க.ச.வும், விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது தீர்வல்ல என்று தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருக்கிறது. இந்துத்துவ தாக்குதல் தீவிரமாகிவரும் சூழ்நிலையில், நீங்கள் எந்தப் பக்கம் என்பதுதான் மையமான கேள்வி.

தமிழகத்தின் எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசின் விருதுகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தமது பிழைப்புவாதத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சி.பி.எம்.கட்சியோ, தனது கோழைத்தனத்தை மறைத்து வெற்று சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது.

– மனோகரன்.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

மழைவெள்ளம் – நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம்

0

சென்னை : வெள்ளச் சேதம் – தோல்வியுற்று, வக்கற்றுப் போன அரசுக் கட்டமைப்பு

டந்த ஒரு வாரமாக சென்னை மாநகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தினால் கடும் சீரழிவைச் சந்தித்துள்ளன. சென்னை வேளச்சேரி, வில்லிவாக்கம், அம்பத்தூர், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட மக்களை வெள்ளம் காவுகொண்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி பள்ளிக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். ஏரிகள் உடைப்பெடுத்து, சாக்கடை, கழிவுகள் எல்லாம் மழைநீரோடு கலந்து குடியிருப்புகளை மூழ்கடித்து ஒருவாரகாலமாக மக்களின் அன்றாட வாழ்க்கையை, சொல்லொணாத் துயருக்குள் ஆழ்த்தியுள்ளது.

மணலி பகுதியில் வெள்ள பாதிப்பு


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வெள்ள நீரை வடியச் செய்ய அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனம், மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராடியுள்ளனர். மக்களின் இந்த கோபமெல்லாம் ஆளும் கட்சியினரையும் அவர்களின் அடிமைகளையும் ஒன்றும் செய்துவிடவில்லை. “இயற்கை சீற்றங்களுக்கு அரசை குறை கூறக் கூடாது” என்று இரண்டு சீட்டுகளுக்காக அ.தி.மு.க.வை நம்பியுள்ள ஜவாஹிருல்லா கூறியுள்ளார். அ.தி.மு.க.வின் கொத்தடிமை சி ஆர் சரஸ்வதி “இவ்வளவு மழை பெய்யும்ன்னு வருண பகவான் போனா செய்தார்?” எனத் திமிரோடு கேட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின், விஜய்காந்த் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்து சில உதவிகளைச் செய்த பின்னர்தான், போயஸ்கார்டனை விட்டு வெளியே வந்தார், ஜெயலலிதா. தனது தொகுதியான ஆர்.கே.நகருக்கு விஜயம் செய்த அவர், வெள்ள நிவாரணத்தைக் கூட ஓட்டுப் பொறுக்கும் காரியத்துக்குத்தான் செய்கிறார் என்பதை, ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசியதில் இருந்தே தெரிந்துகொண்டார்கள் மக்கள்.

மூன்றுநாட்கள் மட்டுமே பெய்த கனமழை, அடித்தட்டு மக்கள் முதல் அப்பார்ட்மெண்ட்வாசிகள் வரை, நரகவேதனைக்குள் தள்ளியுள்ளதற்கு, இயற்கைதான் காரணமா? “முப்பது நாட்கள் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்ததுதான் இவ்வளவு பேரழிவிற்கும் காரணம்” என தமிழக அரசு சொல்கிறது. ஊடகங்களும் இவ்வாறுதான் மக்களை நம்பச் சொல்கின்றன.

நிவாரணம் வழங்குவதில் அரசு காட்டும் மெத்தனத்தை மட்டுமே குறையாகக் கூறிக்கொண்டு தங்கள் பங்குக்கு உணவுப்பொட்டலங்கள், போர்வைகளை வழங்கியதுடன் தங்கள் கடமையை முடித்துக் கொண்டுள்ளன, எதிர்க்கட்சிகள்.

அரசும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், இயற்கையின் சீற்றம் மட்டுமே வெள்ளச் சேதத்தை உருவாக்கியதென்றும், அதற்கு உடனடியாக நிவாரணம் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இவைகளே தீர்வு என்றும் கருத்துப் பிரச்சாரம் செய்துவருகின்றன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அனைத்தும் மூன்று நாள் மழையிலேயே இவ்வாறு சின்னாபின்னமானதற்கு இயற்கை காரணம் என்பது முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைப்பதாகும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் இம்மாவட்டங்களில் ஏரிகளையும், குளங்களையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், பல அடுக்கு மாடி குடியிருப்புகளும், ஐ.டி. நிறுவனங்களும்தான் இன்று பல்லாயிரக் கணக்கான மக்களை நரகவேதனைக்குள் தள்ளியுள்ளன. இயற்கை தரும் கொடையான மழை நீரைத் தேக்கி வைக்க பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் உருவாக்கிவைத்துப் பாதுகாத்து வந்த நூற்றுக்கணக்கான ஏரிகளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள் சி எம் டி ஏ, அரசுத் துறை அதிகாரிகளின் துணையோடு அழித்துக் குடியிருப்புகளை உருவாக்கியதன் விளைவைத்தான் மக்கள் இன்று சந்திக்கின்றனர்.

ஜேப்பியார் முதல் ஏ சி சண்முகம் வரை கல்விக் கொள்ளையர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டிய கல்லூரிகளும், குளோபல் டிரஸ்ட் மருத்துவமனை போன்ற மருத்துவத் துறை மாபியாக்களும் அரசுத்துறையும் சேர்த்துதான் இந்த அழிவை உருவாக்கியுள்ளனர்.

வேளச்சேரியை ஒட்டியுள்ள சதுப்புநிலங்களைக் கூட விட்டுவைக்காமல் இயற்கை வடிகால்களை கடந்த பதினைந்து ஆண்டுகளில் சூறையாடியுள்ளனர். பல ஏரிகளை தூர்த்தும், வடிகால்களை தூர்வாராமலேயே பல கோடிகளை சுருட்டியுள்ளனர்.

இவை ஏதோ பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டல்ல. இந்த நிலக்கொள்ளையர்களுக்குள் நடந்த உள்குத்துக்கள் கூலிப்படைகள் மூலம் தீர்க்கப்பட்டன. ஊரப்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர்கள் அடுத்தடுத்துப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ரியல் எஸ்டேட் சண்டைகளே காரணமாய் இருந்தன என ஊடகங்களே எழுதியிருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நீர்ப்பாசனத் துறை, பொதுப்பணித்துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையம், ஆகியவற்றின் அதிகாரிகள் துணையோடு இயற்கையை சூறையாடிய கல்விக்கொள்ளையர்களும், ரியல் எஸ்டேட் மாபியாக்களும்தான் சேர்ந்துதான் மக்களின் வாழ்வைச் சூறையாடி அவர்களுக்கு வெள்ளச் சேதத்தை உருவாக்கினார்கள்.

இந்தக் கிரிமினல்களை நோக்கி சுட்டுவிரலை நீட்டாமல் மக்களுக்கு ரொட்டிப்பொட்டலங்களை வீசி விளம்பரம் செய்கின்றது, புதிய தலைமுறை தொலைக்காட்சி. இதன் உரிமையாளர் பச்சமுத்துவோ, ஏரிகளைக் கொள்ளையிட்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கல்வி ‘வள்ளல்’. இவரின் விளம்பரங்களை போட்டு கல்லாக் கட்டும் ஊடகங்கள் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப்படுத்தப் போவதில்லை.

ஓட்டுக்கட்சிகளில் அ.தி.மு.க, தி.மு.க தொடங்கி வி.சி.க வரை ரியல் எஸ்டேட் கிரிமினல்களின் ஆசி பெறாத கட்சிகளே இல்லை எனும்போது, இவர்கள் எந்த அதிகாரிகளைக் கூண்டில் ஏற்றுவார்கள்?

நிவாரணப் பணிகளைச் செய்யாத அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராடுவதும், அப்போராட்டங்களை தடியடியால் மட்டுமே அரசு சந்திப்பதும், மக்களைக் காப்பாற்றத் துப்பில்லாத, கையாகாலாத அரசாக அது மாறிப்போய்விட்டது என்பதை நிரூபிக்கின்றது. இயற்கைப் பேரிடரை கையாளக் கூட அரசு எந்திரத்துக்கு வக்கில்லை என்பதும் அதன் உறுப்புகள் அனைத்தும் இற்றுப்போய்விட்டன என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

இயற்கை அழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், இயற்கை வளத்தை சூறையாடும் கிரிமினல் கும்பலையும் துணைபோகும் அதிகாரிகளையும் தண்டிக்கவும் இந்தக் கட்டமைப்பு உதவாது. இவற்றை மக்களே, அதிகாரத்தைக் கையில் எடுத்துத்தான் சாதிக்க முடியும் என்பதுதான் இன்றுள்ள ஒரே சாத்தியமான வழியாகும். மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்து மக்களைக் காப்பாற்றுவதற்கு மக்கள் அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எழும்பூரில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்

கடலூர் – பருவமழையால் இழப்பு,தோல்வியடைந்த அரசு கட்டமைப்பு.

ழக்கமாக இந்த ஆண்டு அக்டோபர் 20 முதல் பெய்ய வேண்டிய வட கிழக்கு பருவ மழை கடந்த 9, 10 ஆகிய தேதியில் கால தாமதமாக துவங்கியது. இந்த மழை பற்றி வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தும் கோடநாட்டில் ஓய்வு எடுத்த அம்மாவின் அலட்சியத்தால் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு மனித உயிர்கள் குடிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் மக்கள் வாழ தகுதியற்றதாய் மாறி இருக்கின்றன. இந்தக் கட்டுரை எழுதும் 18-ம் தேதி வரை 180 பேர் செத்து மடிந்துள்ளனர். இந்த மனித படுகொலைக்கு, தான் ஏற்றுக்கொண்ட வேலையை செய்ய தவறிய தோற்றுபோன இந்த அரசு கட்டமைப்பு தான் முக்கிய காரணம். ஆனால், இந்த துயரங்களுக்கு 3 மாதம் பெய்ய வேண்டிய மழை 3 நாளில் பெய்ததுதான் என்று ஆளும் ஜெயா தனது அறிவியல் ஆய்வை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பருவ மழை தமிழக மக்களை சொந்த மண்ணில் அகதிகளாய் மாற்றியுள்ளது, உண்மையில் மக்கள் தனது வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விவசாய நிலங்களை இழந்து நிற்கின்றனர். இருந்த துண்டு துக்காணி நிலத்தையும், தண்ணீர் விழுங்கி மணலை இழுத்து விட்டதால் ஒரு ஏக்கருக்கு ரூ 3 லட்சம் செலவு செய்தால்தான் மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும் என கவலையுடன் தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்களின் பாடபுத்தகங்கள், தட்டு முட்டு சாமான்கள், மாடுகள், ஆடுகள், இன்னும் பிறவற்றையும் சேர்த்தே தின்று தீர்த்துவிட்டது மழைவெள்ளம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தத் துயரங்களை தீர்க்க மக்கள் அதிகாரம் அமைப்புடன் புதிய ஜனநாயகம் பத்திரிகை குழுவும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவி செய்யச் சென்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து அதிகம் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் தனது பணியை தொடங்கி தொடர்ந்து செய்து வருகின்றது. இதில் கடலூர் மாவட்டம் விசூர் மற்றும் பெரிய காட்டுப்பாளையம் ஆகிய ஊர்களில் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

அந்த ஊருக்கு அருகில் மேலிருப்பு கிராமத்தில் உள்ள கால்வாய், ஏரி வாய்க்கால் மூலமே வெள்ளம் புகுந்து வீடுகளை நாசமாக்கியுள்ளது. எனவே இந்த வாய்க்காலில் குறுக்கே 360 அடி நீளத்திற்கு அணைகட்ட வேண்டும் என திட்டம் போட்டுக் கொண்டோம். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரை பார்த்து பேசிவிட்டு வேலையை ஆரம்பிக்கலாம் என்று சந்தித்து பேசியதில் மக்கள் அதிகாரம் என்றவுடன் உசாரானார். “வேண்டாம் சார் இதை நாங்களே ஏற்பாடு செய்து சரிசெய்துக்கொள்கிறோம் நீங்க உதவி செய்யறதா இருந்தா பக்கத்து ஊருக்கு போங்க” என்று நம்மை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். அரை மணி நேரத்தில் 6 ஜெ.சி.பி வரவைத்து வேலை ஆரம்பமானது, தோழர்களுக்கு ஒரு டாட்டா ஏஸ் வண்டி ஏற்பாடு செய்தார் அதற்கு பின்புதான் தெரிந்தது.நமது வேலை தொடங்குவதற்கு முன்பே அதிகாரவர்க்கம் விழித்து கொண்டது என்று.

கடலூர் வெள்ளச் சேதம்பிறகு அதிக பாதிப்பு ஏற்ப்பட்ட வீசூரில் சிதைந்த வீடுகள், வீட்டுக்குள் குவிந்த மண் குவியல்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டோம். அதன் படி நாமே வேலையை திட்டமிட்டபடி செய்யலாம் என முடிவு செய்து கொண்டனர். அங்குள்ள நிறையக் குடும்பங்கள் ஊரிலிருந்து அருகில் உள்ள காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒருசில குடும்பத்தினர் மட்டும் வீடு வாசலை சுத்தம் செய்ய வந்திருந்தனர் அவர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள் உங்களுக்கு உதவிசெய்ய வந்துள்ளோம் என்று அவர்களுடன் நிவாரண பணியில் இறங்கினர் மக்களுக்கு மிகவும் ஆச்சரியமும் ஒரு புதிய நம்பிக்கையும் தெம்பும் வந்ததுபோல் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த உதவிகளை பார்த்த ஒருவர் ”தம்பிகளா நீங்க யார் பெத்த புள்ளையோ தெரியல எங்களுக்கா இவ்வளவு சிரமப்படுரீங்களே நீங்க நல்லா இருக்கணும் தெய்வம்மாதிரி வந்துகிறிங்க உங்க அமைப்பு வளரணும். ஊரு நல்லா இருக்கும், நாங்களும் இந்த அமைப்பில் சேர்ந்துகிறோம்பா” என்றும் கிராமத்திற்கே உரிய எதார்த்த வார்த்தையில் உணர்வுபூர்வமாக மக்கள் அதிகாரம் அமைப்பை வாழ்த்தி வேலையில் ஈடுபட்டார்.

அடுத்து பெரியகாட்டுப்பாளையம் என்ற ஊருக்கு தனது பணியை தொடங்க விசூரிலிருந்து அந்த ஊர் இளைஞர் ஒருவர் டிராக்டரில் ஏற்றி வந்து பெரியக்காட்டுபாளையத்தில் விட்டுச்சென்றார் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஓட்டு கட்சிக்காரர்கள் படைப்படையாய் சென்று அரிசி, துணி, பணம் என முடிந்த பொருளை கொடுத்து விட்டு சென்றிருந்தனர்,

மக்கள் அதிகாரம் அமைப்பு ஓட்டுக்கட்சிகள் கொடுத்த எதையும் தரவில்லை மக்கள் வாழ்வதற்கு அடிப்படையான வீட்டை சுத்தம் செய்துகொடுத்தனர். ஒரு வீட்டின் பீரோ ஆற்றில் கிடந்தது. வீட்டக்காரர்கள் என்ன செய்வது எப்படி எடுப்பது என கலங்கி நின்ற நேரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆற்றில் இறங்கி அந்த பீரோவை கழுவி தூக்கி வந்து கொடுத்தனர். இன்னொரு வீடு மண்ணோடு மண்ணாக அழுத்திக்கொண்டது. அந்த அழுந்திய வீட்டை மக்கள் அதிகாரம் தோழர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர். அதே போல ஒரு டிராக்டர் சேற்றில் பள்ளத்தில் சிக்கி கொண்டது இதை எடுக்க முடியாமல் தவித்தனர். இதையும் மக்கள் அதிகாரம் அமைப்பினரே மீட்டனர். இப்படி முடியாமல் வேறு வழி தெரியாமல் தயங்கி இருந்த மக்களுக்கு முடியும் என்று வேலை செய்து காட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் மத்தியில் பாராட்டும் இப்படிப்பட்ட அமைப்பும் இருக்கா என ஆச்சரியமும் இருந்தது.

ஒரு பெண்மணியிடம் “உங்களுக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டது” என்றதும்,

“என் உயிரும் இந்த தண்ணியோடு போயிருந்தா பரவாயில்ல என தோணுதுங்க” என்றார்.

“ஏன் இப்படி சொல்றீங்க”

“வீடும் இல்ல, புள்ளீங்க படிக்க புத்தகமும் இல்ல, இனி என்னாங்க செய்யிறது. அதிகாரிங்கள கேட்டா அங்கேயே போங்க. பிறகு ஏற்பாடு செய்கிறோம் என்கின்றனர். வரவங்க எல்லாம் அரிசி துணி கொடுத்துட்டு போராங்க இதை எல்லாம் வாங்கி எங்க வக்கிறது, எங்களுக்கு இது எதுவும் வேண்டாங்க என் புள்ள படிக்க புத்தக்மும் வீடும் ஏற்பாடு செய்தால் போதும்” என்று ஆத்த முடியாத துயரத்தை கொட்டிதீர்த்தார்.

பெரிய காட்டுப்பளையத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே வேறு எங்கெல்லாம் பாதிப்பு இருக்கு என ஊரை தேடி சென்ற போது குறிஞ்சிப்பாடி வட்டத்தில் ஓணாங்குப்பம் என்ற ஊரில் மிகப்பெரிய பாதிப்பு என போகும் வழியில் விசாரிக்கும் போது ஒருவர் சொன்னார். உடனே ஓணாங்குப்பத்திற்க்கு சென்றோம். ஓணாங்குப்பத்திற்கும் குறிஞ்சிப்பாடிக்கும் ஐந்து கிலோ மீட்டர், அங்கு போகும் வழி நெடுக்கிலும் ரோடு உடைந்து போகமுடியாத அளவிற்கு சிதைந்திருந்தது,

ஓணாங்குப்பம் 600 பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமம் இங்கு கூரை, கல் வீடு என 143 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் 540 ஏக்கர் உள்ளன. விவசாய நிலங்களுக்கு பாய்ச்சலாக ஊரின் அருகில் தட்சணா ஏரி ஓடுகிறது.

ஓணாங்குப்பம் கிராமமே வெள்ளம் சூழ்ந்து கொண்டு தனி தீவு போல் காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பரவனாறு அணை உடைந்தது தான். ஆற்றின் கரையோரம் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பு உள்ளதாலும், கூடுதலாக என்.எல்.சி-ல் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றியதும் தான்.

இதனால் அதிக பாதிப்புக்குள்ளாகியது ஒனாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி ஆகிய கிராமங்கள்… இதன் காரணமாக கடந்த எட்டு நாட்களாக ஓணான்குப்பம் கிராமத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்களும் கிராமத்திலேயே முடங்கி கிடந்தனர். பக்கத்து ஊருக்கு கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.

ஓணாங்குப்பம் ஊரில் உள்ளே நுழைந்ததும் கடலில் மூழ்கிய தீவு போல் காட்சியளித்தது, மக்கள் முகம் முழுவதும் வாடி இருந்தது.

மக்களை சந்திக்கும் முன் எதிரே 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவனைப் பார்த்தோம். அவன் குரல் “எங்கள் ஊருக்கு உயிர் கொடுங்கள்” என்று ஏங்குவதாய் இருந்தது. அந்த மாணவன் ஊரின் பாதிப்பையும் மக்களின் துயரத்தையும் கூறினான்.

“சார் உயிர் சேதம் இல்லை ஆனால் அதற்கு சமமான மெல்ல மெல்ல சாவுற மாதிரி வீடு இழந்து ராத்திரியில் பணியில் குளிரில் பாம்பு பூச்சி இத்தனைக்கும் பயந்து தூக்கமே வராது. இந்த ஐந்து நாளா, கஷ்டபடுரோம்” என்றார்.

“அரசியல் கட்சிக்காரங்க யாரும் வரவில்லையா”

“வராஙக மூணு வேள சோறு தராங்க. ஆனா இன்னிக்கு மதியம் 2:30 வரைக்கும் சாப்பாடு வரல. 2.30 மணி ஆகுது சார்”.

இது போன்று அதிகமாக மழை பெய்யும் போதெல்லாம் இந்த வட்டாரமே பாதிக்கும். இதைப் பற்றி யாரும் கவலைபடுவதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை என ஊர் மக்கள் அரசின் மீது கோபமாக இருக்கிறார்கள். பிறகு மற்ற ஊரின் பாதிப்புகளை தேடி வரும் போது குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள கன்னிதமிழ்நாடு முதல் பாலூர் வரை வாழை பயிர்கள் அனைத்தும் காற்றடித்தும் மழை வெள்ளத்திலும் பாழாய்போய் விவசாயிகளின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வெள்ளத்தால் சுமார் 400 ஏக்கர் சம்பா சாகுபடியான நெற்பயிர் முற்றிலும் நீரில் மூழ்கியதால் பயிர்கள் அனைத்தும் அழுகிவிட்டது. அந்த நீரை அப்புறபடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமை தான் நீடிக்கிறது..

மக்கள் அதிகாரத்தை பார்த்து பாதியில் ஓடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்…..

போக்குவரத்து சாலை வெள்ளத்தில் அறுத்துக் கொண்டு சென்றதால் அதிகாரிகளோ, அமைச்சர்களோ 17-ம் தேதி வரை பார்வையிடவோ, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறியவோ முன்வரவில்லை.. ஆனால், 18-11-2015 அன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதனால் அவசரம் அவசரமாக சாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சரியாக மாலை 5 மணியளவில் ஒனாங்குப்பம் ஊருக்கு பார்வையிட வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையிலான குழு , மக்கள் அதிகாரம் அமைப்பு மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததை உளவுப்பிரிவு போலீசார் தகவல் கொடுத்ததால் அவசரம் அவசரமாக பாதியிலேயே திரும்பி சென்று விட்டனர்….

இதுகுறித்து அந்த கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவரை கேட்டதற்கு, “கடந்த 9-ம் தேதியில் இருந்து எங்க ஊருக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. எந்த அதிகாரியும் வரவில்லை. VAO மட்டும் தான் வந்து பார்த்துள்ளார். மற்றபடி அரசுக்கு எங்கள் பிரச்சனைகளை தெரியபடுத்த வில்லை.. இன்று ஆளுங்கட்சியில் இருந்து அமைச்சர் வருகிறார் என்ற சொன்னதால் அதிகாரிகளை எதிபார்த்து நாங்கள் அரை மணி நேரமாக காத்து கிடந்தோம்.. ஆனால் ஊருக்குள் வராமல் பாதியிலேயே திரும்பி போய்விட்டனர். யார் வந்தாலும் அப்படி தான் செய்கிறார்கள்…

தற்போது மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு தான் எங்கள் ஊருக்கு வந்து கூட பிறந்த தம்பி போல ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றுசென்று , வீட்டை சுத்தம் செய்வது, பொருட்களை வெளியில் கொண்டு வருவது என்று எல்லா வேலையும் நண்பனை போல செய்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதே வேளையில் “ ரிலையன்ஸ் அறக்கட்டளை தமிழ்நாடு மருத்துவ கழகமும் இணைந்து நிவாரண பொருட்களை வழங்க வந்திருந்தனர். மக்கள் அதிகாரம் தொண்டர்களின் பணிகளை பார்த்துவிட்டு குளிர்பானம் மற்றும் பிஸ்கட் கொடுத்தனர்.. அதை வாங்க மறுத்த தொண்டர்கள் “நாங்கள் பன்னாட்டு குளிர்பானம் குடிப்பதும் இல்லை, தொண்டு நிறுவனத்தை ஏற்றுக்கொள்வதும் இல்லை” என்று முகத்தில் அறைந்தார்போல் கூறியதால் அமைதியாக சென்று விட்டனர்.

தொடர்ந்து மக்கள் அதிகாரத்தின் தொண்டர்கள் அப்பகுதி இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்…

மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்