Wednesday, June 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 570

புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்

4

அம்பேத்கார்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி. சென்னை, புதிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம்

apscடிசம்பர் 2015-ல் கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2015 (NEP)-ன் வரைவு மீது கருத்து கூறுமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1992-ல் புதிய தாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதற்கு முன்னோட்டமாக திருத்தியமைக்கப்பட்டது. அது போல, டிசம்பர் 2015-ல் நடைபெறவுள்ள WTO அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக உலக வர்த்தகக் கழகத்தின் – சேவை வர்த்தக பொது ஒப்பந்தத்தை (WTO-GATS) அமல்படுத்துவதற்கான தயாரிப்பே புதிய கல்விக் கொள்கை 2015.

WTO-GATS-ன் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நாட்டை மறுகாலனியாக்கும் அதே நேரம், இந்துத்துவ சக்திகள் அந்தக் குடையின் கீழ் சாதிய கட்டமைப்பையும், பார்ப்பனீய ஆதிக்கத்தையும் மறுஉருவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையின் வரைவுக் குழுவின் 4 உறுப்பினர்களில் கல்வித்துறையைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கோட்பாட்டுவாதியான தீனாநாத் பத்ரா! இதுவே இந்த அரசின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார் மய, தாராள மய, உலகமயம் கொள்கைகளின் விளைவாக விவசாயம் பெருமளவு அழிக்கப்பட்டது; லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஐ.டி ஊழியர்களின் வேலை பறிக்கப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கிட்டத்தட்ட இல்லாமல் அழித்தொழிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. உற்பத்தித் துறைகளான விவசாயம், தொழில் இரண்டையும் சீர்குலைத்த பிறகு, ஏகாதிபத்தியங்களின் கொடும் பார்வை சேவைத் துறையை நோக்கி திரும்பியிருக்கிறது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, தண்ணீர், நிலம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் சுற்றுச் சூழல் ஆகியவை தேசங்கடந்த தொழிற் கழகங்களின் கட்டற்ற கொள்ளைக்கு வழிவகுக்கும் வகையில் விற்பனை சரக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்திய அரசு WTO-GATS-ல் கையெழுத்திட்ட பிறகு, கொள்கைகள், சட்டங்கள், நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் கல்வித்துறை நிறுவனங்கள் அந்த ஒப்பந்தத்துக்கு உகந்த வகையில் மாற்றியமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியே புதிய கல்விக் கொள்கை 2015. தனியார் மய, தாராளமய, உலகமய பொருளாதாரக் கொள்கைகள் 1990-களில் ஆட்சியில் இருந்த காங்கிரசால் அறிமுகப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட்டன. இப்போதைய மோடி அரசு அதை மேலும் தீவிரமாக அமல்படுத்தி இந்தியாவை மறுகாலனியாக்கும் நடவடிக்கையை வேகமாக செய்து முடிக்க உறுதியாக உள்ளது. “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச அரசாட்சி” என்ற மோடியின் முழக்கம், WTO-GATS-ன் நோக்கத்தை எதிரொலிக்கிறது.

‘தற்போதைய கல்விக் கட்டமைப்பு, முதலாளித்துவ உழைப்புச் சந்தைக்கு தேவையான திறன் கொண்ட மனித வளத்தை தயாரித்து வழங்க திறனற்று, தோல்வியடைந்து விட்டது’ என்றும் ‘கட்டமைப்புரீதியான சிந்தனை குறைபாடுகள் இருப்பதாகவும்’ புதிய கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது. நாட்டின் கல்வித் துறை நிறுவனங்களை படிப்படியாக அழிப்பதற்கான முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையே புதிய கல்விக் கொள்கை. பயிற்றுவித்தல், பாடத் திட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி ஒருபடித்தாக்குவதன் மூலம் கல்வித்துறை தொடர்பாக சட்டமியற்றி நிர்வாகம் செய்யும் மாநிலங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவது; பல்கலைக் கழக சிண்டிகேட்டுகள், செனட்டுகளின் அதிகாரத்தை ரத்து செய்வது; கல்லூரிகளை பல்கலைக்கழகங்களிலிருந்து பிரித்து அவற்றை திறன் சார் சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது; நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக் கழக மானியக் குழுவை (U.G.C) கலைப்பது; திறமையானவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும், தேவைப்படுபவர்கள் எனப்படும் 1 சதவீதத்தினருக்கும் மட்டுமே கட்டணமற்ற கல்வி; வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகள் தாராளமயமாக்கப்படுதல், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இந்தியாவில் பட்டங்கள் வழங்க அவற்றுக்கு அனுமதி; தொழில்துறை மற்றும் வெளிநாட்டு கல்வித்துறை நிபுணர்களை GIAN அல்லது “இந்தியாவில் கற்பித்தல்” மூலம் இறக்குமதி செய்தல்; இணைய சேமிப்பு கிடங்குகளான MOOC [பிரம்மாண்டமான திறந்த இணையவழி பாடங்கள்] போன்றவை மூலம் பாடங்களை உருவாக்குதல்; நம் நாட்டு ஆசிரியர்களின் வேலை உரிமையை பறித்து அவர்களை “அருகிப் போன இனங்களாக” வெளியில் தள்ளுதல்; கல்வியை கணினிமயமாக்கி ‘Digital India” மூலம் கல்வி நிறுவனங்களை இணைத்தல்; இவற்றின் மூலம் மாணவர்கள் கல்வித் துறையின் பயனாளிகளாக இருப்பது மாற்றப்பட்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் பயனாளிகளாக மாற்றப்படுவது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

‘கட்டுப்பாடில்லாமல் கிடைப்பது’, ‘பொதுவில் கிடைப்பது’, ‘யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், விரும்பும் போதெல்லாம் அறிவை பெற்றுக் கொள்ளலாம்’ என்ற புரிதலின் அடிப்படையில் மாணவர்கள் MOOC-ஐ நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த கல்வித்துறை கட்டமைப்பும் ஒழித்துக் கட்டப்பட்டு Coursera போன்ற கார்ப்பரேட்டு MOOC-கள் கொள்ளை அடிப்பதற்கான “சீர்குலைக்கும் கண்டுபிடிப்பே” MOOC. புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வியை 8-ம் வகுப்பிலிருந்தே திறன் சார்ந்ததாக மாற்றி பெரும்பான்மை உழைக்கும் வர்க்கக் குழந்தைகளை முறைசாரா தொழிலாளிகளாக மாற்றுவதும் அடங்கும். “மேக் இன் இந்தியா” திட்டம் இத்தகைய முறைசாரா தொழிலாளர்கள் சுரண்டப்படுவதன் மீதுதான் கட்டப்படுமா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

இறுதியாக, கல்வியை சர்வதேச வர்த்தக விதிகளுக்கு உட்படுத்துவது, நம் நாட்டு தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் ஏற்ப கல்வியை முறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மத்திய மாநில அரசுகள் இழப்பதற்கு இட்டுச் செல்லும்.

புதிய கல்விக் கொள்கை GATS-க்கு சேவை செய்வதோடு, மாநிலங்களின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாகவும் உள்ளது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது அல்லது நீர்த்துப் போகச் செய்வதோடு, இளம் குழந்தை பருவத்திலிருந்தே கல்வியை பணி சார்ந்ததாக மாற்றுவதன் மூலம் பாரம்பரிய சாதி அடிப்படையிலான வேலை என்ற முறை கூட கொண்டு வரப்படலாம். மாணவிகளின் பாதுகாப்புக்காக CCTV கண்காணிப்பை பரிந்துரைப்பது, டி.டி.எச் மூலம் வீட்டிலேயே கல்வி அளிப்பது இவற்றின் மூலம் பெண்களை மறுபடியும் ஆணாதிக்க சமூக ஆதிக்கத்தில் தள்ளுவது; இந்தியவியல் (இண்டாலஜி) ஆய்வுகள், கலாச்சார சகிப்புத்தன்மை என்ற பெயரில் செத்துப் போன மொழிகளுக்கான துறைகளை உருவாக்குவதன் மூலம் பார்ப்பனிய கலாச்சாரத்தை வளர்ப்பது, இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை திணிப்பது போன்றவையும் புதிய கல்விக் கொள்கையின் மூலம் அமல்படுத்தப்படவுள்ளன.

GATS நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிப்பதோடு மட்டுமின்றி நீதித்துறை அதிகாரத்தை கார்ப்பரேட்டுகள் மட்டுமே வழக்குத் தொடரக் கூடிய வர்த்தக டிரிப்யூன்களிடம் மாற்றுகிறது. இந்த டிரிப்யூன்களில் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுச் சூழல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வழக்கு தொடர்வது சாத்தியமில்லை. கார்ப்பரேட்டுகளின் உரிமைகள் புனிதமாக்கப்படுகின்றன; குடிமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அடிமைமுறை மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்த வகையில், புதிய கல்விக் கொள்கை நமது நாட்டின் மீது வேயப்படும் சிலந்தி வலை.

அது GATS-ன் மொழியில் மனிதர்களை “மனித மூலதனம்” என்றும், அறிவை “அறிவு பொருளாதாரம்” என்றும் குறிப்பிடுகிறது. தேசங்கடந்த மூலதனத்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டு வழிநடத்தப்படும் உலக வர்த்தகக் கழகம், சர்வதேச சமூக-பொருளாதார-அரசியல் மற்றும் கலாச்சார கட்டமைப்புக்கான உலக அளவிலான காவலர், புரவலர் மற்றும் விதிவகுக்கும் அமைப்பாக சட்டப்படியே செயல்படும். நம் நாட்டில் ஏற்கனவே ஆட்சி புரியும் பார்ப்பனிய ஆதிக்கம் அதன் அமலாக்கத்தை மேற்பார்வை இடும்.

இது நமது நாட்டின் இறையாண்மைக்கு அடிக்கப்படும் சாவுமணி. விவசாயத்தையும், தொழில்துறையையும் நிர்மூலமாக்கி விட்டு, இப்போது கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளை WTO-GATS-க்கிணங்க மாற்றியமைப்பது மூலம் இந்திய அரசு ஒற்றைத் துருவ வல்லரசான அமெரிக்காவுக்கு சேவை செய்து இந்தியாவின் மறுகாலனியாக்கம் வேகமாக இறுகுவதை உறுதி செய்கிறது.

NET­-அல்லாத உதவித் தொகை ரத்து, நடத்தை விதிகள் தொடர்பான லிங்டோ கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துதல், வளாகத்தில் குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை, ஐ.ஐ.டி, என்.ஐ.டி கட்டண அதிகரிப்பு, ஆசிரியர் பதவிகளை UGC-FRP, DST-INSPIRE மூலம் மத்தியத்துவப்படுத்துவது, சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வுக் கழகங்களையும், ஐ.ஐ.டிகளையும் சுயநிதி அமைப்புகளாக மாற்றுவது, ஆராய்ச்சிக்கு நிதி வெட்டு, FTII, ICHR, NCERT போன்றவற்றுக்கு ஆர்.எஸ்.எஸ் கையாட்களை நியமிப்பது போன்றவை பனிப்பாறையின் விளிம்பு மட்டுமே ஆகும்.

bhagat-singhகட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில், ஏகாதிபத்தியங்களுக்கும், இந்துத்துவவாதிகளுக்கும் சேவை செய்யும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதை ரத்து செய்ய நாம் உறுதி கொள்வோம். மக்களுக்கான, நம் நாட்டுக்கு ஏற்ற, தேச பக்த கல்விக் கொள்கையை கட்டமைக்க போராடுவோம்.

WTO-GATS-ஐ துரத்தியடிப்போம்! மறுகாலனியாக்கத்தை தோற்கடிப்போம்!

மறுகாலனியாக்கம் : உலக வர்த்தகக் கழகம் – காட்ஸ் உத்தரவின் பேரிலான புதிய கல்விக் கொள்கையின் மூலம் வேகமாக இறுகும் சுருக்கு

டில்லி பல்கலைக் கழக ஓய்வு பெற்ற பேராசிரியர், அகில இந்திய கல்வி பெறும் உரிமைக்கான மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் முனைவர் அனில் சடகோபால் உரை

நாள் : 30-11-2015 @ 5:15 pm
இடம் : மத்திய பேருரை அரங்கு (CLT), சென்னை ஐ.ஐ.டி

தகவல்
அம்பேத்கார் – பெரியார் படிப்பு வட்டம்,
ஐ.ஐ.டி, சென்னை

(மழைக் கால பாதிப்புகளால் இந்தக் கட்டுரை மற்றும் அழைப்பிதழை உரிய நேரத்தில் வெளியிடவில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம். கூட்டம் குறித்த செய்தி கூடிய விரைவில் வெளியிடுகிறோம்)

New Education Policy 2015 (NEP), which will be unleashed in Dec. 2015, is being drafted by the Government of India (GoI) on which opinions have been sought. In 1986, National Policy on Education was framed and amended in the wake of implementing neo–liberal policies in 1992. Now, NEP 2015 is a move of GoI towards the implementation of WTO-GATS [World Trade Organisation – General Agreement on Trade in Services] dictates before its ministerial meeting in Dec 2015.. While recolonializing our nation by implementing the WTO-GATS dictate, under that umbrella, Hindutva forces are planning to reestablish caste system and revive the brahminic hegemony. The composition of the 4 member NEP drafting committee itself is revealing in terms of what the government’s agenda: three members are bureaucrats and only one is an academician – who is none other than RSS and hindutva ideologue Dinanath Batra!

The implementation of LPG [Liberalization, Privatization, Globalization] policy and GATT [General Agreement on Tariffs and Trade], for the last twenty five years, has had grave consequences of massive destruction of agriculture, lakhs of farmer suicides, firing of millions of workers, government employees and IT employees, almost elimination of small and medium scale industries, plundering and destruction of natural resources. After destroying productive sectors like agriculture and industry, now the imperialists’ evil eye has turned to the service sector. Essentials of human existence like food, water, land, education, health, sanitation, transportation and climate are now turned into fully tradable commodities under WTO-GATS for the unrestricted loot by MNCs and TNCs. By signing on WTO-GATS, it will be mandatory for GoI to restructure the system through legislative and judiciary measures by drafting policies and passing Bills and Acts accordingly. The New Education Policy 2015 is one measure in this game. Though, the LPG is introduced by the Congress around 90s, and had strived for it’s implementation, the Modi Govt is willing to complete the recolonization phase of INDIA as fast as possible. To the core, Modi’s “Minimum government Maximum governance” imitate the interest of WTO-GATS!

NEP themes mention that the existing educational establishment is incapable of and has failed in supplying skilled human capital to the labour market and complain about its inadequacy in systematic thinking. NEP is a move towards demolishing the academic establishment of the nation phase by phase. Phases will start with grabbing the power of the states to legislate and administer education through the unification and centralization of pedagogy and curriculum; dissolving the power of syndicates/senates and disaffiliating colleges from Universities, turning them into skill instruction based community colleges; stopping fund allocation and dissolving the UGC; free education only for 1 % for the so called meritorious and 1 % needy; liberalization and deregulation of foreign educational institutions, allowing them to grant degrees in India; importing subject experts from the industry and foreign academia through GIAN or ‘Teach in India’ for content generation for online repositories like MOOCs [Massive Open Online Courses] and trashing the job security of local teachers and gradually pushing them out as ‘an endangered species’; digitization of education and networking of institutes through ‘Digital India’, where students are no longer stake holders in education, but foreign universities, multi-national companies, corporates and private industries are (Though, students rush to MOOCs with an idea that it is ‘open’ and a public property which anyone can access ‘at anytime’, ‘from anywhere’, and ‘acquire knowledge as if they wish’ – similar to ‘water’, a decade later, the whole education establishment will be scrapped down, as MOOCs is a ‘disruptive innovation’ for the corporate like Coursera to loot); vocationalisation of school education from 8th std in the name of skill development, pushing majority of the children of toiling masses into informal labour. We need to ask the question whether ‘Make in India’ will ride on the back of exploitation of such unorganized informal labour. Finally it must be said that subjecting education to international trade rules would lead to the loss of authority of the national and the state governments to regulate education according to the nation’s needs and priorities.

Along with serving GATS, the NEP also seems to be a move towards grabbing state governments’ power; abolition or dilution of reservation; and perhaps even a reintroduction of traditional caste based occupation through vocationalisation of education from early childhood; suggesting to institutions to ensure safety of girl students through CCTV surveillance or to provide education through DTH at home, thus throwing girls back to the dark rooms of patriarchy; establishing Indology studies and departments for dead languages to promote brahmanical culture in the name of ‘cultural tolerance’ and imposing Sanskrit throughout India.

GATS removes the legislative authority of parliament and means a surrender of judicial power to trade tribunals, in which only corporations are permitted to sue. Workers, students, environmental and advocacy groups and labour unions are blocked from seeking redress in the proposed tribunals. The rights of corporations become sacrosanct. The rights of citizens are abolished. Re-establishing ‘slavery’ all over again. In this context, the New Education Policy is nothing but the spider’s web knitted over our nation as it terms human beings as ‘human capital’ and knowledge as ‘knowledge economy’ as mentioned in GATS. Perhaps WTO, controlled and directed by the trans-national capital and the Super Power – US, can legitimately be the policeman, guardian and rule maker of the international socio-economic-political and cultural system, which is locally supervised by existing brahminic hegemony.

It is the death knell for the sovereignty of our country. By demolishing agriculture, labour and services like education, health and restructuring it in accordance with WTO-GATS, does the government of India want to serve the lone super power, the US, and aid in a more rapid closing of the recolonisation circle in India? Scrapping of non-NET fellowship, implementation Lyngdoh committee recommendations and code of conduct, UGC’s circular on safety and security in campus and especially girl students, increase of fee in IITs and NITs, contractualization of teaching positions through UGC-FRP and DST-INSPIRE, self-financing of CSIR Labs and IITs, fund cut for R&D, appointment of RSS lackeys in FTII, ICHR, NCERT etc. are tip of the iceberg.

In the condition of systemic crisis, our resolve must be to trash the NEP which serves the interests of imperialists and Hindutva forces and let us strive to construct a new policy on education which is people oriented, indigenous and patriotic.

Kick out WTO-GATS! Defeat recolonization!

Recolonization of India: Circle is closing Faster through New-Education Policy dictated by WTO-GATS! – Talk by Dr. ANIL SADGOPAL
Ret Professor, Delhi university, Member of the AIFRTE Presidium

Date : 30-11-2015 @ 5:15 pm, Venue: CLT

Ambedkar-Periyar Study Circle
(An independent student body recognized by IITM)

ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?

5
aamir-indian-express-award-function
சகிப்பின்மை குறித்து ஆமீர் கான் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது நிகழ்ச்சி

கிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.

கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். இதை இசுலாமிய மதவெறியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், தூய இசுலாமிய விழுமியங்களின் படி வாழாத ஆமிர் ஒரு பெயர் தாங்கி முசுலீம் என்பது அவர்களது தீர்ப்பு.

aamir-kiran-with-kid
கிரண் ராவ் மற்றும் அமீர் கான்

இப்படியிருக்க, ஆமீர் கான் ஒன்றும் இந்து பார்ப்பனிய தேசியத்தின் மனசாட்சியை அச்சுறுத்தும் ஆளுமை அல்ல. சொல்லப் போனால் இந்து பார்ப்பனிய தேசியத்தின் பாதந்தாங்கும் கருத்துக்கள் அவரிடம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.’ரங் தே பசந்தியில்’ இருந்து ‘சத்ய மேவ ஜெயதே’ வரையிலான அவரது கடந்த கால திரைக்கதைத் தெரிவுகளில் இருந்தே இதை புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் இந்தியாவில் பிறப்பால் வாழும் பணக்கார – பாலிவுட் – தாராளவாத முஸ்லீம்கள் கூட இந்துமதவெறியின் பொதுப்புத்தி கட்டமைத்திருக்கும் வெறுப்புணர்வின் அடிப்படையில் பார்க்கப்படுகிறார்கள். இதனால் வெளியேற்றம் – அச்சம் குறித்து ஆமீர்கான் பேசியிருப்பது யதார்த்தமான உண்மை.

இந்தப் பின்னணியில் இருந்து அவர் சொன்னதாக (உண்மையில் அவர் சொல்லவில்லை ) சொல்லப்படும் இந்த வெளியேற்றக் கருத்தை முன்வைத்து நடக்கும் விவாதங்களை கவனிக்கலாம்.

முதலில், ஆமிர் கானின் ”கருத்தை” முன்வைத்து அகில இந்திய ஆங்கில ஊடங்களில் ‘விவாதங்கள்’ நடக்கின்றன; இரண்டாவதாக, பாரதிய ஜனதா ஆமிர் கானின் கருத்திற்குப் பின்னுள்ள காங்கிரஸ் சதியைக் ‘கண்டுபிடிக்கிறது’; மூன்றாவதாக, சமூக இணையதளங்களில் கூலிக்கு மாரடிக்கும் மோடி பக்தர்கள் களமிரங்கி ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லி கூவுகின்றனர்; நான்காவதாக, இந்துத்துவ கும்பலின் ‘அதிதீவிர’ பிரிவினர் ஆமிர்கானின் கொடும்பாவிகளைக் கொளுத்தி செய்தியில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். ஐந்தாவதாக திரைத்துறை மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த நக்கிப்பிழைக்கும் சில ஜந்துகள் இந்தியா போன்ற ஒரு நாடு என்பதால் தானே ஆமிர் கான் பி.கே போன்ற படத்தில் நடிக்க முடிந்தது என்று இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு சான்றளிக்கின்றனர் – இறுதியில் ஆமிர் கானின் சுய விளக்கம்!
நானும் ரவுடி தாண்டா என்கிற வடிவேலுவின் அறிய தத்துவ தோசையை அப்படியே திருப்பிப் போட்டு “நாங்களும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தாண்டா” என்பதை நிரூபிக்க இந்துத்துவ கும்பல் கையாண்ட சகிப்புத்தன்மை மிக்க கொடும்பாவி கொளுத்துதல், பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லுதல், முசுலீம் நடிகர்களை பாம்புகள் என்று இழிவு படுத்துவது இன்னபிற நடவடிக்கைகளை உலகமே எரிச்சலோடு பார்க்கிறது. அரசர் அம்மணக்கட்டையாக நிற்பதை யாராவது சொல்லித் தொலைத்திருக்கலாம்.

protest-against-aamir-khan_2
ஆமீர் கானுக்கு எதிரான் இந்து மதவெறியர்களின் போராட்டம்

மேற்படி விவாதங்களின் ஊடே, ஆமிர் கான் ஒரு முசுலீமே அல்ல, அவரது கருத்தை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சில சமூக வலைத்தள வஹாபி வெறியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடங்களுக்கெல்லாம் தவறாமல் ஆஜராகும் காக்கி டவுசர்கள் மேற்படி கருத்தையும், கருத்து தெரிவித்தவர்களையும் ஆதரிக்கின்றனர். பக்தியிலேயே ஆக கழிசடையான மோடி பக்தி எந்தளவுக்கு மூளையை மழுங்கடிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆமிர் கானை வஹாபிகள் கண்டிப்பதன் அடிப்படை என்னவென்பதைக் கூட இவர்கள் கவனிக்கவில்லை. இறுதியில் இசுலாமிய மதவெறியர்களும் இந்துமதவெறியர்களும் ஓரணியில் திரள்கின்றனர். இசுலாமிய மக்களோடு இந்த இரண்டு வெறியர்களின் அச்சுறுத்தலில் காலம் தள்ளுகிறார்கள்.

அடுத்து ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஏன் போகச் சொல்கிறார்கள்? இந்த விவாதங்களில் மட்டுமல்ல, வேறு சந்தர்பங்களிலும் பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதில் காக்கி டவுசர்கள் குறிப்பாக இருப்பதை கவனித்திருப்போம். ஏன்? பாகிஸ்தானில் கருத்து சுதந்திரத்திற்கு கடுமையான தடை இருப்பதால் அங்கே போனால் இந்தியாவின் அருமையை உணர்ந்து கொள்வார்கள் என்பது இவர்களின் தர்க்கம். அதாவது, ஒப்பிடுவதற்குக் கூட தன்னிலும் மோசமானவனைக் காட்டுவது. “அந்தக் குடிகாரப்பய டெய்லி மூணு ஃபுல்லு அடிப்பான்; நானெல்லாம் ஒன்றரை ஃபுல்லு தானாக்கும்; அதானால் நான் எப்போதும் ஸ்டெடி தான்” என்ற இந்தக் கோட்பாட்டின் காப்புரிமைக்குச் சொந்தக்காரர்கள் டாஸ்மாக் வாசலில் மலந்து கிடக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

இன்னொரு பக்கம் ஆமிர்கானை முன்வைத்து “சகிப்புத்தன்மை” குறித்து கேள்வி எழுப்புவதே இந்தியாவுக்கு எதிரானது –
பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்கிற கோணத்தில் இந்துத்துவ கும்பல் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மற்றும் மோடி அரசின் மேல் விமரிசனங்கள் வைப்பதையே இந்தியாவுக்கு எதிரானது என்கிறார்கள். இந்த தர்க்கத்தின் படி, இசுலாமியர்கள் கொல்லப்பட்டாலோ, தலித்துகள் ஒடுக்கப்பட்டாலோ, பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டாலோ, போலிச் சாமியார்கள் நீலப்படங்களில் தோன்றி அருளினாலோ, இன்னும் விலைவாசி உயர்வு, பொதுத்துறையை தாரை வார்ப்பது, லஞ்சம் ஊழல் என்று நாட்டில் காவி பயங்கரவாதிகள் பங்கேற்கும் எந்தக் காரியத்தையும் எவரும் விமரிசிக்க கூடாது – விமர்சித்தால் அது இந்தியாவுக்கு எதிரான சதியாகி விடும்.

ஆமிர் கானின் மனைவி சொல்லி அதிர்ச்சியடைந்ததாக ஆமிர் கான் தெரிவித்திருப்பது தேசதுரோகம் என்று சொல்லி அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் தேச துரோக வழக்குத் தொடர்ந்துள்ளார் ஒரு வழக்கறிஞர். அதிர்ச்சியடைந்த ஆமிர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

protest-against-aamir-khan_1
ஆமீர் கானுக்கு எதிரான் இந்து மதவெறியர்களின் போராட்டம்

ஊடகங்களை எப்படிக் கையாள்வது, கருத்துருவாக்கம் செய்வது எப்படி என்பதில் எல்லாம் தேர்ந்தவர்களான இந்துத்துவ கும்பல் அடுத்த சுற்றுக்குத் தயாராகி இருக்கும். இந்த சுற்றில் தேசபக்திக்கும் தேச துரோகத்திற்கும் ஒரு எல்லைக் கோட்டை வகுத்துள்ளதால் அடுத்த சுற்றில் தம்மை விமர்சிக்கும் ஜனநாயக குரல்களை தேசதுரோகிகள் என்கிற எல்லைக்குள் தள்ள தயாராக இருக்கிறார்கள். பாசிஸ்டுகளின் பார்வையில் கேள்வி கேட்பதே தேசதுரோகம் என்றால் – நாம் தேசத்தைக் காக்க தேசத்துரோகிகள் ஆவதைத் தவிற வேறு வழியில்லை.

இறுதியாக இந்தப் பிரச்சினை “சகிப்புத் தன்மை”யின் பேரில் நடந்தாலும் உண்மையில் இந்துமதவெறியர்களே சகிப்புத் தன்மை அற்று இருப்பதால் அவர்களது கருத்துக்கள் சேம் சைடு கோலாகவே இருக்கிறது. வீட்டில் இறைச்சி வைத்திருந்ததற்காக ஒரு முசுலீம் கொல்லப்படும் நாட்டில் முசுலீம் மக்கள் அச்சத்துடன் வாழாமல் ஆனந்தமாகவா வாழ முடியும்?

ஆமீர் கானின் மனைவி கிரண் பிறப்பால் இந்துவென்றாலும் அவர்களது வாரிசுகள் முசுலீம் மத அடையாளத்துடன் பார்க்கப்படும்
என்பதாலேயே அவரது வெளியேற்றம் குறித்த அச்சம் வெளிப்படுகிறது. சிங்கள இனவெறியின் பிடியில் பீதியுற்று புலம் பெயரும் ஈழத்தமிழர்களைப் போல இந்திய முசுலீம்கள் மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடி மக்கள் அனைவரும் பார்ப்பன இந்துமதவெறியின் கொடுங்கரங்களில் இருந்து வெளியேறும் விருப்பத்தைக் கொண்டிருந்தால் அதில் என்ன தவறு?

இப்படி ஒருநாட்டின் குடிமக்கள் வெளியேறுவதோ, வெளியேறும் விருப்பத்தை கொண்டிருப்பதோ அந்த நாட்டில் வெளிறுபவர்களை வெறியோடு வதைக்கும் மதவெறியர்களின் குற்றம் மட்டுமே. அந்த வெறியர்களை வாயளவில் கூட தண்டிக்காமல் அவர்களோடு சுமூகமாக வாழும் இதர குடிமக்கள்தான் இந்த வெளியேற்றம் குறித்து வெட்கப்படவேண்டும், குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்.

மாறாக குற்றவாளிகளே நீதிபதிகளாவும், தேசபக்தர்களாகவும் உலா வந்தால் எதைக் கொண்ட அடிப்பது?

– தமிழரசன்

நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு

0

கடலூர்

டலூர் மாவட்டம் நெய்வேலி என்றாலே நினைவுக்கு வருவது மின்சாரம் தான். NLC என்று அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாகும்.. இது மினி ரத்னா என்று அழைக்கப்படுகிறது. வருடத்திற்கு 24 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்கிறது; இதன் மின்சார உற்பத்தி நிறுவு திறன் 2490 மெகா வாட். இதில் 1167 மெகா வாட் தமிழகத்திலும் எஞ்சியவை அண்டை மாநிலங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

cuddalore-flood-relief-1இந்த பிரமாண்டத்திற்கு பின் பல ஆயிரம் தொழிலாளர்கள், மக்களின் வியர்வையும், கண்ணீரும் தான் உள்ளது. உதாரணமாக நிலக்கரி வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்காக பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குறிப்பாக 1955, 1990, 2015 ஆகிய ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக கிராம மக்களை வெளியேற்றி நிலக்கரி வெட்டி எடுக்கின்றனர். அதன் அடிப்படையில் 3 வது கட்டமாக கங்கைக்கொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றி நெய்வேலி ஆர்ச.சி கேட் அருகில் மாற்று இடம் கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

cuddalore-flood-relief-5அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்பொழுது வசித்து வரும் பகுதி தான் A பிளாக் மாற்று குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் கங்கைகொண்டான், சிரக்குப்பம், வானதாயபுரம், கல்லுக்குழி, மாதவராயபுரம், அத்திப்பட்டு, அம்பேத்கர் நகர், கத்தாழை, கரிவட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஒன்பது கிராம மக்கள் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் பள்ளிக்கூடம் இல்லை, சாலை வசதிகள் கிடையாது, பல்வேறு குடிசை வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை, ஏதேனும் அவசரத்தேவை என்றால் கூட ஐந்து கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். தற்பொழுது தனித்து விடப்பட்ட தீவு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசித்து வருகின்றனர்.

cuddalore-flood-relief-2இங்கு வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமான வேலை எதுவும் இல்லை. இப்பகுதியில் சிலோன் குவாட்டர்ஸ் என்ற இடத்தில் மட்டும் ஒரு சிறிய ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. “அங்கு சென்றால் எங்களுக்கு மருத்துவம் பார்ப்பது இல்லை. உங்கள் ஊருக்கு என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்” என்கிறார்கள். இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாடி வதங்கிக் கொண்டிருந்த மக்களை கடந்த மாதம் பெய்த கனமழையால் வீடு, உடைமைகள் என அனைத்தையும் இழந்து உண்ண உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே என்.எல்.சி நீரை வெளியேற்றியதன் மூலம் அந்தத் தண்ணீர் முத்தாண்டி குப்பம் வழியாக சென்று பல கிராமங்களை அழித்து வருகின்றது.

cuddalore-flood-relief-4மாற்று குடியிருப்பில் வசிக்கும் தினக்கூலி, சுரங்க வேலை என்று செய்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தற்போது வேலைக்கு போவதற்கு கூட வழி இல்லாமல் உள்ளனர்.

இதுவரை அரசின் நிவாரணமோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவோ கூட அதிகாரிகள் செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், அரசின் அலட்சியத்தையும், NLC-யின் துரோகத்தையும் கண்டித்து “A பிளாக்” மாற்று குடியிருப்பு மக்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி சுவரொட்டி ஒட்டிய பின்னர் தான் அரசு உறுப்புகளும், என்.எல்.சி நிர்வாகமும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் கவனத்தை திரும்பியது. இவை அனைத்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பு தோழர்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பிறகு நடைபெற்றவை.

cuddalore-flood-relief-6கடந்த இரண்டு நாட்களாக NLC நிர்வாகம் உணவு வழங்கி வருகிறது. அதுவும் ஒரு வீட்டிற்கு ஒரு கப் தான். அதையே அனைவரும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு வாய்க்கால் வெட்டி விடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சில இஸ்லாமிய அமைப்புகளும் உணவு உள்ளீட்ட பொருட்களை வழங்கின.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி புதுச்சேரி சார்பாக, அரிசி, துவரம் பருப்பு, புளி, சேமியா, மிளகாய், என்ணெய் உள்ளிட்ட 12 வகையான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரசு நினைத்தால் மக்களுக்கான தேவைகள் அனைத்தையும் செய்ய முடியும். ஆனால், செய்யவில்லை. செய்யவும் மறுக்கிறது. செய்பவர்களையும் தடுத்து நிறுத்துவதோடு மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. எனவே இந்த அரசிடம் நிவாரணம் எதிர்பார்க்க முடியாது. இது செயலிழந்து விட்டது. இனி இந்த அரசு என்பது மக்களுக்கானது அல்ல. இதனை வீழ்த்தி விட்டு மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் தீர்வு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டிய தருணம் இது……

தகவல்:

வினவு செய்தியாளர்,
கடலூர் மாவட்டம்.

சென்னை PRPC

flood-relief-chennai-prpc-5சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பல மாவட்டங்களில் பெய்த  தொடர் மழையால் மக்கள் தங்கள் வீடுகளை, உடைமைகளை, உறவுகளை இழந்து தவிக்கிறார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுக, சிறுக சேமித்த குறைந்த பட்ச செல்வங்கள் உட்பட அனைத்தையும் தொலைத்துவிட்டு சொந்த ஊரிலேயே அகதிகளாக பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகம் எப்பொழுதும் போல தன் குணம் மாறாமல் அலட்சியமாக செயல்படுகிறது. மக்களின் இழப்புகளை, இறப்புகளை குறைத்து காண்பிப்பதில் தனது மொத்த கவனத்தையும் செலுத்துகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் பகுதி இளைஞர்களும், மக்களும் தான் எல்லா வகைகளிலும் உதவுகிறார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் தம்மால் இயன்றதை விடவும் அதிகம் சேகரித்து துன்பபடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தவிக்கும் மக்களுக்கு உதவ களத்தில் இறங்கியது.  கெல்லீஸ் பகுதியில் உள்ள லாக்மா நகரில் தரைத் தளத்தில் உள்ள பல வீடுகளுக்குள்ளும் இடுப்புக்கு மேலே வெள்ள நீரும் சாக்கடை நீரும் கலந்து உள்ளே புகுந்ததால், தங்கள் வீடுகளை விட்டு, அருகில் உள்ள ஒரு சர்ச்சில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை சந்தித்து பேசியதில், உணவும் நீரும் பலரும் விநியோகிக்கிறார்கள்.  போர்வை, பாய் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என நம்மிடம் தெரிவித்தார்கள்.

தருகிற போர்வை பயன்படும் வகையில் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் கோஆப் டெக்ஸ்-ல் கொள்முதல் செய்தோம்.  நிவாரண பொருட்கள் தருபவர்கள் பகுதியில் முன்னாடி இருக்கும் சில வீடுகளுக்கு கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். பலருக்கு கிடைப்பதில்லை என நம்மிடம் தெரிவித்ததின் அடிப்படையில்,  நமது அமைப்பு தோழர்கள் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை கண்டறிந்து டோக்கனை விநியோகித்தார்கள். அப்படி விநியோகிக்கும் பொழுது தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். கையில் உள்ள போர்வைகள் போதாது என்பதை உணர்ந்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சமூக அக்கறை கொண்ட நபர்கள் சிலரும் உதவ நிறைய போர்வைகள் வாங்கினோம்.

நேற்று அடாத மழையிலும் டோக்கன் தரப்பட்டவர்களுக்கும், மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கும் போர்வைகளை முறையாக விநியோகித்தோம்.

ஒரு அபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஒரு காவலாளி தனக்கும் ஒரு போர்வை வேண்டும் என கோரினார்.  ”வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கிறோம். நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள். தருகிறோம்.  நாங்கள் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள்” என்றோம். “நீங்கள் செய்வது தான் சரி! நான் கேட்டது தான் தவறு” என்றார் ஒரு தொழிலாளிக்கே உள்ள நேர்மையுடன்!

நன்கொடை தந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இன்னும் சில நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டிருக்கின்றனர். நாம் இன்னொரு பகுதிக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை
தொடர்பு கொள்ள : 9094666320

தஞ்சை நிவாரண முகாம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கடலூர், சென்னை நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

7

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களின் மழை வெள்ள நிவாரணப் பணிகளை பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இணையம் மற்றும் ஊடகங்களில் இவை குறித்த செய்திகள் ஏராளம் வந்தாலும் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணமும் ஆறுதலும் கிடைப்பது சாத்தியமல்ல. அதை அரசு நினைத்தால் மட்டுமே ஒருங்கிணைத்து முழு ஆற்றலுடன் செய்ய முடியும். ஆனால் அரசு எந்திரமோ அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதற்கே ஆள் இல்லாமல் திணறுகிறது. மக்கள் தன்னார்வத்துடன் கொண்டு வரும் பொருட்களை அ.தி.மு.க ரவுடிக் கூட்டம் பறித்துக் கொள்கிறது. மறுப்பவரை சில இடங்களில் தாக்கியும் வருகிறது.

ஜெயலலிதா அரசை நேரடியாக கண்டிக்கத் துப்பற்ற ஊடகங்களோ இதை வெறும் மனிதாபிமான நடவடிக்கையாக மட்டும் சுருக்கி பரபரப்பை தக்க வைக்க முயல்கின்றன. இறுதியில் மக்கள் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று காலம் தள்ளுகிறார்கள். வேறு சில ஓட்டுக் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெயர்பலகை அமைப்புகளோ தமது பெயர் வருவதை உறுதி செய்து கொண்டு பொருட்களை அளிக்கின்றன.

உண்மையான சேவை நோக்கத்துடன் வரும் இளைஞர்களோ அ.தி.மு.க மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்து பா.ம.க கட்சிகளின் அடாவடித்தனத்தால் வேதனையுடன் ஊர் திரும்புகின்றனர். இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நிவாரண நடவடிக்கைகளின் அவலத்தை புரிந்து கொள்ளலாம். மேலும் மக்களுக்குத் தேவை என்ன, எவற்றை அளிக்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும், சுகாதார வழிகாட்டல்கள் என்று எவையும் எங்கேயும் இல்லை.

பெருமளவு நிவாரணப் பொருட்கள் கூட முக்கிய சாலைகளின் சந்தை போல அவ்வப்போது அங்கேயே முடிந்து விடுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அளிப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காக சில அமைப்பினர், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாகவே மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் பகுதிகளில் நீரை  வெளியேற்றுவது, சுத்தம் செய்வது, வீடுகளை பழுது பார்ப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மட்டும் பொருட்கள், உணவு வகைகளை அளித்தும் வருகின்றனர். சென்னையிலும் இந்த பணிகள் பெரும் சிரமத்தில் நடந்து வருகின்றது.

நிவாரணப் பொருட்கள் அளிக்க விரும்புவோர், பணிகளில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் உதவிகளை எமது தோழர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்ய இயலும்.

கடலூர் மாவட்டத்திற்கு பொருள்கள் அளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு லாரி பார்சல் மற்றும் டிராவல்ஸ் மூலம் அளிப்பது முக்கியம். நேரடியாக வரும் பொருட்களை அ.தி.மு.க மற்றும் பா.ம.கவினர் பறிமுதல் செய்வார்கள். போலிசும் அதை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை. லாரி பார்சல் மூலம் வரும் பொருட்களை எமது தோழர்கள் குறிப்பான இடங்களுக்கு சென்று சேர்ப்பார்கள். எமது தோழர்களிடம் மேற்கண்ட கட்சியினர் வாலாட்டுவது இல்லை. சென்னைக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விட்டு வரலாம்.

கடலூர் மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் எண்:

தோழர் து. பாலு,
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம், கடலூர்,
தொலைபேசி எண்: 8110815963

தோழர் பழனிச்சாமி,
எண்: 5, காட்டாமணிக்குப்பம் வீதி,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி – 3,
தொலைபேசி 9597789801

சென்னையில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

தோழர் வெற்றில்வேல் செழியன்,
மக்கள் அதிகாரம் சென்னை வட்டார ஒருங்கிணைப்பாளர்,
தொலைபேசி எண்: 9176801656

கீழே கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.

 

 

 

ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1

10

“நன்றி தெரிவிப்பது ஒரு பிரச்சனையா” என்று கேட்டால் சில நேரங்களில் அதுவும் கூட ஒரு பிரச்சனை ஆகத்தான் செய்கிறது. டாஸ்மாக் எதிர்ப்பு பாடலுக்காக கைது செய்யப்பட்ட தோழர் கோவன் பிணையில் விடுதலையாகி வெளிவந்த பிறகு அவரும் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்களும் தங்கள் விடுதலைக்காக குரல் கொடுத்த கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்.

kovan-kalaignar-meet-1நன்றி கூறியது மட்டுமல்ல “டாஸ்மாக்கை மூடு” என்றமுழக்கத்தில் கருத்தொற்றுமை கொண்ட இந்த எல்லா கட்சித் தலைவர்களையும் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தக் கோரிக்கைக்காக ஒரு அணியில் திரளுமாறு ஒரு அறைகூவல் விடுத்தார்கள். இந்த வேண்டுகோள் ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு முன்னமே எழுத்துவடிவில் வினவு தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த நடவடிக்கை.

இருந்த போதிலும் என்ன காரணத்துக்காக சென்றார்கள் என்றெல்லாம் தெளிவுபடுத்தப்பட்டிருந்த போதிலும், அவர்கள் யாரையுமே சந்திக்காமல் தி.மு.க தலைவரை மட்டும்தான் சந்தித்தார்கள் என்பது போலவும், அல்லது தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கும் போது “வளைந்தார்”, “குனிந்தார்”, “மண்டியிட்டார்” என்றும் வக்கிரமாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தை அவதூறு செய்யும் ஒரு விதமான உள்ளக் கிளர்ச்சியோடும் சிலர் எழுதியிருக்கிறார்கள். ஒரு 90 வயதுக்கு மேற்பட்ட முதியவரிடம் பேசும் போது அவருக்கு என்ன கேட்கிறது, கேட்கவில்லை என்பதெல்லாம் கணக்கில் கொண்டுதான் பேச வேண்டும். இது சாதாரணமாக எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய விசயம். இவ்வாறு விமர்சிக்கப்பட்டிருப்பதை எல்லாம் நான் தள்ளி விடுகிறேன். அவை பதில் சொல்ல தகுதியற்றவை என்பது எனது கருத்து.

பிரச்சனை என்னவென்றால், தேர்தல் புறக்கணிப்பு அரசியலை இத்தனை காலமாக மேற்கொண்டு வருகின்ற நீங்கள், ஓட்டுக்கட்சிகள் என்று உங்களால் அழைக்கப்படும் கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதும், அவர்களை அழைப்பதும் எப்படி சரி, அது கொள்கை பிறழ்ந்த செயல் ஆகாதா என்பதுதான் இவ்வாறு விமர்சனம் வைப்பவர்களின் மையமான கேள்வி.

டாஸ்மாக் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். “மூடு டாஸ்மாக்கை” என்ற இந்த முழக்கத்துக்கு பாட்டு எழுதி கோவன் கைது செய்யப்பட்டார். மக்கள் அதிகாரம், ம.க.இ.க என்ற இந்த அமைப்புகள் இந்த கோரிக்கையை எழுப்புவதற்கு முன்பே பலரும் இந்த கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்கள். அதற்காக போராடியிருக்கிறார்கள். நடைபயணம் சென்றிருக்கிறார்கள், பிரச்சாரம் செய்திருக்கிறார்கள், மனு கொடுத்திருக்கிறார்கள். பல்வேறு வடிவங்களில் இதற்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கடைசியாக, சசிபெருமாள் இதற்காக போராடி மரணமடைந்தார் என்பது உங்களுக்கு தெரியும்.

சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள் எல்லாம் “டாஸ்மாக்கை மூட வேண்டும்” என்று உறுதி ஏற்றுக் கொண்டார்கள்; அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிரிந்தார்கள். ஓரணியில் திரள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. சசிபெருமாளின் மரணத்திற்கு பிறகு மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்தில் இந்த கோரிக்கையை ஆதரிக்கின்ற பா.ம.கவும் பங்கேற்கவில்லை, தி.மு.கவும் பங்கேற்கவில்லை. அதற்கு பல காரணங்களைச் சொன்னார்கள். சசிபெருமாளின் மரணத்திற்குப் பிறகு, இந்தக் கோரிக்கை எழுச்சி பெற்று ஒரு மக்கள் கோரிக்கையாக வந்து கொண்டிருந்த தருணத்தில், ‘ஆகஸ்ட் 15-ம் தேதி முதலமைச்சர் மூடுவதாக அறிவிப்பு செய்வார்’ என்றெல்லாம் ஊகம் வெளியிடும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், அ.தி.மு.க அரசு திட்டமிட்டே அந்தப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விவகாரத்தை கிளப்பியது.

அதன் பின்னால் டாஸ்மாக் பிரச்சனை நீர்த்து போக வைக்கப்பட்டது. அதன் பின்னர் அது ஓய்ந்து விட்டது. பிறகு இப்போது கோவன் கைது விவகாரம். கோவன் கைதை எல்லோரும் கண்டித்த போதும், அவரது விடுதலையை எல்லோரும் கோரிய போதிலும் மதுவிலக்கு கோரிக்கையில் இவர்கள் ஒன்றுபடவில்லை என்பது யதார்த்தம். கோவன் விடுதலையாகி வந்து என்ன செய்ய வேண்டும்? இன்னொரு பாட்டு எழுதி, இன்னொரு முறை பாடி, இன்னொரு முறை கைதானால், அவர்கள் இன்னொரு முறை கண்டிக்க வேண்டுமா? அல்லது இந்த பாடலுக்காக அவருக்கு விருது கொடுக்கப் போகிறார்களா? அதற்குத்தான் அவர் பாடினாரா?

கோவனும், மக்கள் அதிகாரம் தோழர்களும் விடுதலைக்கு நன்றி தெரிவிக்கப் போனார்கள் என்று பார்ப்பது தவறு. அதுவல்ல விசயம் “என்னுடைய கைதை கண்டிப்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்ட நீங்கள், உங்கள் தேர்தல் அரசியலுக்கு வெளியில் ஏன் ஓரணியில் நின்று போராடக் கூடாது. எங்களுக்கும், உங்களுக்கும் அடிப்படையில் அரசியல் கருத்து வேறுபாடு இருக்கிறது. நாங்கள் தேர்தல் அரசியலை புறக்கணிப்பவர்கள். நீங்கள் தேர்தல் அரசியலுக்கு உள்ளே இருப்பவர்கள். ஆனால், இந்த விஷயத்தில் உங்களுடைய நிலைப்பாடு நேர்மையானது எனில், அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் ஒரு அணியில் திரளக் கூடாது” என்று கேட்கத்தான் கோவனும் மக்கள் அதிகாரம் தோழர்களும் அங்கு போனார்கள்.

அவ்வாறு கோரிக்கை வைத்தது தவறா, அது அரசியல் வழியிலிருந்து தவறியதா என்பதுதான் நாம் விடை காண வேண்டிய கேள்வி.

தமிழ்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. சாதிவெறி, மதவெறி, கனிமவளக்கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலத்தடி நீர்க்கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இவையனைத்தையும் விட,தமிழ்ச் சமூகத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்கின்ற, எந்தப் பிரச்சினைக்கும் போராட இயலாத பதர்களாக தமிழ் மக்களை இளைஞர்களை மாற்றுகின்ற பிரச்சினை டாஸ்மாக் பிரச்சினை.

இயற்கை வளங்கள் கொள்ளை போவது உடனடிப் பிரச்சினையாக இருந்தாலும், மனித வளம் இவ்வாறு அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவில்லையென்றால், தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ ம.க.இ.க.வோ யாரும் எந்த அரசியலுக்காகவும் மக்களைத் திரட்ட இயலாத சூழ்நிலை ஏற்படும். ஒரு பேரழிவை நோக்கித் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி புதிதாக விளக்கத் தேவையில்லை.

வினவு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அம்மாவின் மரண தேசம் என்ற ஆவணப்படத்தில் மேலப்பாளையூர் கிராமம் பற்றி ஒரு காட்சி வருகிறது. வயல்வெளியின் நடுவுல ஒரு டாஸ்மாக் கடை. அது சுற்றியுள்ள 7,8 கிராமங்களுக்குப் பொதுவானது. அந்த டாஸ்மாக் கடையினுடைய ஒருநாள் வியாபாரம் ஒரு லட்சம் ரூபாய். இந்த ஏழெட்டு கிராமங்களிலுள்ள மளிகைக் கடையினுடைய வியாபாரத்தை கூட்டினால் அதில் கால் பங்கு கூட வராது.

ஏழெட்டு கிராமங்களின் வருவாயை இது தின்கிறது. இது அந்த குடும்பங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? அந்த கிராமப்புற பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? இதெல்லாம் மிகச்சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய விசயங்கள். அன்றாடம் நாளேட்டைத் திருப்பினால் சிறுவர்கள் குடிக்கிறார்கள்., பள்ளி மாணவிகள் திருச்செங்கோட்டில் குடிக்கிறார்கள் என்று செய்தி வராத நாளில்லை. டாஸ்மாக் தொடர்பான குற்றங்கள் குறித்து செய்தி வராத நாளில்லை. இந்த ஆய்வு தமிழ் இந்து நாளேட்டில் வந்திருக்கிறது. ஆனந்தவிகடனில் வந்திருக்கிறது. வசந்திதேவியின் ஆய்வு இருக்கிறது. ஆயிரம் ஆய்வறிக்கைகள் இருக்கின்றன.

நிதிஷ் குமார் மூடுவதாக அறிவித்திருக்கிறார். அங்கே ஆண்டு வருமானம் 4,000 கோடி என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 28,000 கோடி. இதனுடைய பரிமாணத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதை ஒழிக்கவில்லையென்றால், இந்த சமூகம் எதற்கும் பயனற்றதாக ஆகும். இதனை சீனாவில் நடந்த அபினி யுத்தத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் சீனம் இருந்த போது, அந்த காலனியாதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்திற்கே மக்கள் வரக்கூடாது என்பதற்காக, இங்கே கஞ்சாவைப் பயிரிட்டு இந்தியாவின் தொழில்தந்தை என்று அறியப்படும் டாடா குடும்பத்தின் மூலம் அதை சீனத்துக்கு ஏற்றுமதி செய்தார்கள். சீன மக்களை கஞ்சாவுக்கு அடிமையாக்கினார்கள். அந்த கஞ்சா போதையிலிருந்து சீன சமுகத்தை விடுவித்த பிறகுதான், அபினி யுத்தம் நடத்தி கஞ்சா விற்பனையை நிறுத்திய பிறகுதான் காலனியாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டுமென்ற உணர்வுக்கே சீன மக்கட் சமூகத்தை அங்கே கொண்டு வர முடிந்தது. அதற்கு பிறகுதான் சீனப்புரட்சி நடக்கிறது..

ஆகையால், டாஸ்மாக் என்பது அத்தகையதொரு பிரச்சினை. இது சுனாமியைப் போன்றதொரு பேரழிவு. வழக்கமாக சொல்வார்கள். கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நாம் தமிழ்நாட்டின் பொதுக்கோரிக்கை என்ற அடிப்படையிலே காவிரிப் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டும். முல்லைப் பெரியாறுக்காக ஒன்று திரளவேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்காக ஒன்று திரள வேண்டுமென்றெல்லாம் சொல்வார்கள். அவற்றையெல்லாம் விட மிக முக்கியமான பிரச்சினை இது. அப்படி ஒன்றுதிரள வேண்டுமென்று கோருவதற்குத்தான் போனோம். இது பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் பிரச்சினை அல்ல. “மூடு டாஸ்மாக்கை” என்பது இலக்கு வைத்து முடிக்கக்கூடிய கோரிக்கை.

அப்படி முடிப்பதற்கு இப்படியொரு அணிசேர்க்கை தேவை. பாடலிலே நீங்கள் கேட்டிருக்கலாம். “கடையை மூட எதுக்கு ஓட்டு? போடு ஒரு கனமா ஒரு திண்டுக்கல் பூட்டு” என்று பாட்டு வரி வருகிறது. “என்னை முதல்வராக்கு நாங்கள் கடையை மூடுகிறோம் என்று கூறுகிறார்கள். நம் தெருவில் இருக்கிற கடையை மூடுவதற்கு யாரையும் முதல்வராக்கத் தேவையில்லை. நாம் நினைத்தால் மூடலாம். மக்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கலெக்டரோ, அதிகாரிகளோ, போலீசோ யார் ? நாம் கடை வேண்டாம் என்றால், நாம் முடிவு செய்ய வேண்டும்” என்றுதான் நாங்கள் மக்களைத் திரட்டுகிறோம். அப்படி நடத்தப்பட்ட போராட்டங்களில் 5,6 இடங்களில் கடைகள் தகர்க்கப்பட்டன. கைது செய்யப்பட்டார்கள். கடை மூடப்பட்டது. அதற்காக கொடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டது.

இது, ம.க.இ.க. மட்டுமோ, மக்கள் அதிகாரம் மட்டுமோ நடத்திய போராட்டம் அல்ல. அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில், டைஃபி., ஜனநாயக மாதர்சங்கம், எஸ்.எப்.ஐ., இன்னும் பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் கட்சி சாராத அமைப்புகள் பலர் இதற்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால், எங்களை மட்டும் தனிமைப்படுத்தி கூடுதலாகத் தாக்குதல் தொடுத்தது அரசு.

யார் இதற்காக போர்க்குணமாக, விடாப்பிடியாக போராடுவர்கள் என்று இந்த அரசு கருதுகிறதோ, யார் இந்த அரசு அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு போராட்டம் நடத்துவார்கள் என்று இந்த அரசு கருதுகிறதோ அவர்களை ஒடுக்கினால், மற்றவர்களை அச்சுறுத்தி தலையெடுக்க விடாமல் செய்துவிடலாம் என்பதற்காக விசேசமாக அடக்குமுறையைத் தொடுத்தார்கள். அதை எதிர்கொண்டோம்.

ஒருவேளை, டாஸ்மாக் எதிர்ப்புக் கோரிக்கையிலே கருத்து ஒற்றுமை கொண்ட மற்றக் கட்சிகளை அணுகாமல் நாங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை எடுத்து செய்வது என்ற நிலை எடுத்தால் என்ன நடக்கும்? 2 காரியங்கள் நடக்கும். ஒன்று இதுபோல நசுக்கப்படுவது, தனிமைப்படுத்தப் படுவது. முன்னரே கூறியதைப்போல அது எங்களுக்கு மட்டும் ஏற்படப்போகும் பாதிப்பு அல்ல. இதைப்பார்த்து நாளைக்கு இதற்கு எதிராகப் போராடக்கூடாது என்ற அச்சம் இந்த சமூகத்தில் விதைக்கப்படும். அதுதான் அந்த தனிமைப்படுத்தப் படுவதனுடைய விளைவு.

அதனால்தான் கீழிருந்து மக்களைத் திரட்டிப் போராடுகின்ற அதே நேரத்தில் இந்தக் கோரிக்கையில் கருத்தொற்றுமை கொண்ட கட்சிகள் இயக்கங்களுடனும் மேலிருந்து ஒரு அணிசேர்க்கை அமைத்து இந்த கோரிக்கைக்குப் போராட வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக் கோரிக்கையை சாத்தியமாக்க முடியும். உடனடி சாத்தியமாக்க முடியும். என்பதனால்தான் இவர்களையெல்லாம் அணுகுகிறோம்.

ஒரே ஒரு கட்சி அ.தி.மு.க. அது மட்டும்தான் மூட முடியாதென்று நிற்கிறது. யார் செத்தாலும் சரி, சசிபெருமாள் இறந்ததற்குக் கூட இந்த அரசு இரக்கமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அந்தக் குடும்பத்தினரை கைது செய்தது. இரங்கல் கூட்டம் நடத்தவிடாமல் தடுத்தது. அவ்வளவு திமிர்பிடித்து இந்த அரசு நடந்துகொள்ள முடிவதற்குக் காரணம். இதனை எதிர்ப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து கிடப்பது. உடனடிக் கோரிக்கையின் கீழ் அவர்களை ஒன்றிணைப்பது என்பதுதான் நாங்கள் எடுத்த முயற்சி.

இந்த முயற்சி தவறு என்று வைத்துக்கொள்வோம். இப்படி செய்திருக்கக் கூடாது என்றால், கடையை எப்படி மூடுவது என்று சொல்ல வேண்டும். இதைத் தவறு என்று சொல்பவர்கள், கடையை உடனே மூட வேண்டும் என்பதில், அவங்களுக்கு உடன்பாடா என்பதையும் சொல்ல வேண்டும். பிறகு கடையை மூடுவதற்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்.

நம்புகிறீர்களா? இது இந்த விமர்சனங்களுக்குள்ளே பொதிந்திருக்கிற மிக முக்கியமான ஒரு கேள்வி. தி.மு.க தொடங்கி மற்ற எல்லா கட்சிகளிலும் இந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சாராயம் சப்ளை செய்யும் நிறுவனங்கள். அல்லது கள்ளச்சாராயம் இருந்த காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மற்றும் அவர்களுடைய புரவலர்களாக எல்லாக் கட்சிகளிலும் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் மதுவிலக்கை ஆதரிப்பதாக சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள். மக்கள் நம்பி ஏமாந்தால் பரவாயில்லை, நீங்கள் கூடவா நம்புகிறீர்கள் என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த “நம்பிக்கை” என்ற விசயத்தை பொறுத்தவரைக்கும், நம்பவே முடியாத விவகாரங்கள் சில உண்டு. மதச்சார்பின்மையை அமல்படுத்தப் போவதாக பாரதிய ஜனதா கூறினால் அதை நம்புவதா? அல்லது தனியார்மயம் வேண்டாம், தப்பு என்று மன்மோகன் சிங் சொன்னால் அதை நம்ப முடியாது. அப்படி நம்ப முடியாதவை உண்டு. ஆனால், இந்தக் கோரிக்கையைப் பொருத்தவரை அப்படி அல்ல. இந்தக் கோரிக்கையின் வரம்பு குறுகியது.

நம்பிக்கை பற்றிய விஷயத்தை பற்றிப் பேசும் போது சமீபத்திய எடுத்துக்காட்டு ஒன்று சொல்ல வேண்டும். பீகார் தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், தொடர்ந்து நீடிக்க முடியாது” என்று பேசினார். இது ஒரு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.கவின் தோல்விக்கு காரணமாக அமையும் என்ற அளவுக்கு அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. மோடி இந்த ஓட்டையை மோடி அடைக்க வேண்டியதாயிற்று. அவர் அந்த இடத்தில் என்ன பேசியிருக்க வேண்டும்?

“யார் சொன்னாலும் நம்பதீர்கள், நான் சொல்கிறேன், என்னை நம்புங்கள், இட ஒதுக்கீடு நீடிக்கும்”னு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொன்னால் தன்னை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று மோடிக்கு தெரிகிறது. தான் வாக்குறுதி அளித்தாலும் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மோடி எப்படிப் பேசுகிறார்? “யார் நினைத்தாலும் இட ஒதுக்கீட்டை நீக்க முடியாது” என்கிறார். அதாவது, பெரும்பான்மை மக்களின் விருப்பம் – இந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் போக முடியாது என்ற புறவயமான யதார்த்தத்தைச் சொல்லி “என்னை நம்பவில்லை என்றாலும் இந்த புறவயமான உண்மையை நம்புங்கள்” என்பதுதான் மோடி சொன்னது.

அதை இங்கே பொருத்திப் பாருங்கள். இன்றைக்கு மதுவிலக்கு கோருகின்ற கட்சிகள் எல்லாம் முதலில் இருந்தே இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்களா? மதுவிலக்குக்காக பலபேர் போராட்டம் நடத்தி, அல்லது இந்த டாஸ்மாக்கின் சீரழிவு கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து, மக்களின் வெறுப்பும் கோபமும் அதிகரித்த பிறகுதான் மதுவிலக்கு என்பதை ஒரு கோரிக்கையாக எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். “நாங்கள் வந்தால் மூடுவோம்” என்கிறார்கள்.

“துவக்கம் முதலே மதுவிலக்கை எங்களுடைய கொள்கையாக வைத்திருந்தோம்” என்று சொல்லக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்றைக்கும் கூட்டணிக்கான நிபந்தனையாக அந்தக் கொள்கையை வைத்ததில்லை. ஏன் வைத்ததில்லை? ஏனென்றால், அதை நிபந்தனையாக வைக்கும் அளவுக்கு டாஸ்மாக்கிற்கு எதிரான பொதுக்கருத்து வலிமை பெறவில்லை. மக்கள் போராட்டம் வலிமை பெறவில்லை.

இன்றைக்கு இந்தப் பிரச்சனை எழுந்தவுடனே “நீங்கதானே கடையை திறந்து விட்டீர்கள்” என்று குற்றச்சாட்டுக்கு தி.மு.க தலைவர் பதில் சொல்கிறார். “ஆமாம், ஒரு கட்டத்தில் திறந்தோம், இப்போ அது கட்டுக்கடங்காத பேரழிவாக மாறிவிட்டது. சமூகத்துக்கே பெரிய ஆபத்தாகி விட்டது. அதனால் நாங்கள் மூடுவது என்று முடிவு பண்ணியிருக்கிறோம்.” என்கிறார். “உங்க கட்சிக்காரர்களே வைத்திருக்கிறார்கள். பினாமி பேரில் வைத்திருக்கிறார்கள்” என்று குற்றச்சாட்டு வருகிறது. தான் சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்று அவர்களையே கொண்டு வந்து சொல்ல வைக்கிறார்.

“இவர்கள் சொல்லிவிட்டால் நீங்கள் நம்பி விடுவதா?” என்று கேட்கலாம். இவர்களை இவ்வாறு சொல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியது எது? இதில் அவர்களுடைய நேர்மை உணர்ச்சி எத்தனை சதவீதம், நிர்ப்பந்தம் எத்தனை சதவீதம் என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. நமக்குத் தேவை ரிசல்ட் – பயன்.

ஏன் இப்படி ஒரு உத்தரவாதத்தை அவர்கள் தர வேண்டும்? மக்களுடைய பொதுக்கருத்து மற்றும் போராட்டத்தின் வலிமைதான் இதற்குக் காரணம். “அவருக்கு ஓட்டு போட்டு, அவர்கள் கொண்டு வருவார்கள் என்பதற்காக காத்திருக்க வேண்டாம். நாம் அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு பூட்ட வேண்டும். அதற்கு போராட வா” என்பதுதான் மக்கள் அதிகாரம் அல்லது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முழக்கம். அதில்தான் தங்கி நிற்கிறோம்.

இப்போது கட்சிகள் “ஆமாம், நாங்களும் மதுவிலக்குக் கொள்கையைத்தான் வலியுறுத்துகிறோம். இதை ஆதரிக்கிறோம்” என்று இந்தக் கட்சிகள் சொல்லும்போது, கோவன் கைதுக்கு அல்லது பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விடும்போது, “இதுதான் உங்கள் கோரிக்கை என்றால், பிரச்சாரம், கூட்டங்களில் வந்து பேச வாருங்கள். மக்களுக்கு அந்த உத்தரவாதம் கொடுங்கள். இதற்காக போராட்டம் நடத்துகிறோம், கலந்து கொள்ளுங்கள். அதில் உங்கள் அணிகளை, தொண்டர்களை ஈடுபடுத்துங்கள்.” இப்படி செய்வதன் மூலம் அவர்களை மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்களாக்குகிறோம். இப்படி செய்வதன் மூலம் இந்த கோரிக்கை நிறைவேறுவதை கீழிருந்து உத்தரவாதப்படுத்துகிறோம்.

ஒருவேளை வாக்கு தவறினால்? நீங்கள் நாங்கள் கேட்போம் என்பது மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே கேட்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் இதில் உத்தரவாதம். கட்சிக்காரர்களை விட்டு விடுவோம். இங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்கிறார்கள். அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்கிறார்கள். நம்பிக்கை என்ற கோணத்திலிருந்து இந்த பிரச்சனையை பார்ப்பவர்கள் சட்டத்தில் இருக்கிறது, நாம் கவலை இல்லாமல் இருக்கலாம்” என்று சொல்ல முடியுமா? சாத்தியமில்லை.

தீண்டாமை ஒழிப்பு சட்டம் இருக்கிறது. அது கடுமையாக்கப்பட்ட பிறகு கூட எந்த இடத்திலும் அமல்படுத்தப் படுவதில்லை. எப்போது அமல்படுத்தப்படுகிறது? கடுமையாக போராட்டங்கள் நடந்தால் மட்டும்தான் வேண்டாவெறுப்பாக குறைந்த அளவுக்கு அமல்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் போடும் உரிமை இப்படிப்பட்ட அடிப்படை சிவில் உரிமைகளுக்கு தடை விதிப்பதற்குத்தான் போலீஸ் என்ற நிறுவனமே இருக்கிறது. உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்காக என்று சொல்லப்படும் அந்த நிறுவனம் அவற்றை தடுப்பதற்கு வேலை செய்கிறது. அதற்கெதிராக போராடுவதன் மூலம் மட்டும்தான் அந்த உரிமையை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடிகிறது.

“சட்டத்தில் சொல்லியிருக்கிறதே, அதை நம்புவோம்” என்பதால் அது நடப்பதில்லை. நீதிமன்றத்தை நம்பினால் காரியம் நடக்குமா? நடக்காது என்பதற்கு சசிபெருமாள் சமீபத்திய உதாரணம். எத்தனை டாஸ்மாக் எதிர்ப்பு தீர்ப்புகள், எதுவும் அமல்படுத்தப்படவில்லை. நீதிமன்றத்தை நம்புவது எப்படி? நீதிமன்றமும் கூட மக்கள் போராட்டம் எங்கு தீவிரமாக நடக்கிறதோ, அங்கு மட்டும்தான் அவர்கள் இறங்கி வர வேண்டியிருக்கிறது. தீர்ப்பளிக்க வேண்டியிருக்கிறது. உத்திரவாதம் என்பது எங்கே மக்கள் கோரிக்கை நிறைவேறாமல் விட மாட்டார்களோ அங்கு மட்டும்தான் இருக்கிறது.

ஆற்றுமணல் போராட்டமோ, டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டமோ முடிந்தவுடன் போலீசை கொண்டு வந்து குவிக்கிறார்கள். போராட்டம் சிறிது தணிந்து விடுகிறது. அடுத்தது திரும்ப திறப்பதற்கு முயற்சி செய்கிறான். இல்ல, நாலு கடை தள்ளி புதுசா ஒரு கடை திறக்க முயற்சி பண்ணுகிறான். அதை எதிர்த்து போராடுவதற்கு எங்கே மக்கள் அணியமாக இருக்கிறார்களோ, எங்கே தயார் நிலையில் இருக்கிறார்களோ அங்கேதான் ஆற்று மணல் கொள்ளையை நிறுத்த முடியும், அங்கேதான் டாஸ்மாக் கடையை மூட முடிகிறது.

ஒருவேளை மதுவிலக்கு கொண்டு வந்தாலும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு என்ன உத்தரவாதம்? போலீஸ் இருக்கும் வரையில் கள்ளச் சாராயம் இருக்கும். கள்ளச்சாராயம் விற்காது என்பதை உத்தரவாதப்படுத்துவது யார்? மக்கள்தான் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டம் இல்லாமல் முடியாது. அது சாத்தியப்படாது.

அதனால்தான் “ மீட்பர்கள் யாரும் இல்லை” என்று சொல்கிறோம். நீங்கள் ம.க.இ.க-வின் மீதும், மக்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால், மீட்பர்களாக யாரையும் கருதிக் கொள்ளாதீர்கள். அப்படி கருதக் கூடாது. மக்கள் தங்கள் சொந்த கரங்களால் விடுதலை பெற வேண்டும், தங்கள் சொந்த கரங்களில் அதிகாரத்தை ஏந்த வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் முழக்கம்.

ஆகவே, இவர்களை எல்லாம் சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.

– தொடரும்..

சென்னை மழைக்கு எல் நினோ மட்டும்தான் காரணமா ?

3

இயற்கையின் விதிகளை புரிந்து கொள்ளுதல் அறிவியலின் சாரம். இந்த புரிதல் அதிகரிக்க அதிகரிக்க இயற்கையின் மீதான மனித சமூகத்தின் ஆளுமை அதிகரிக்கிறது. நேர்மறையில் இது இயற்கைக்கும் அதன் நீட்சியான மனித சமூகத்திற்கும் வளர்ச்சி குறித்த வழிகளை திறக்கிறது. அந்த வளர்ச்சியே இன்றைய நவீன வாழ்க்கைக்கு அச்சாரம். இன்னொருபுறம் அந்த வளர்ச்சி ஒரு சேர மனித சமூகத்திற்கும் இயற்கைக்கும் சமமாக பயன்படுவதில்லை. வர்க்கங்களாகவும், ஏழை மற்றும் ஏகாதிபத்திய நாடுகளாகவும் பிரிந்து விட்ட உலகில் இயற்கைக்கும் மனித சமூகத்திற்குமான முரண்பாடு வெறும் வளர்ச்சியையும் மட்டும் கொண்டு வருவதில்லை, அழிவையும் சேர்த்து கொண்டு வருகிறது.

சென்னை மழை வெள்ளத்திற்கு இந்தக் காரணங்கள் அனைத்தும் அடிப்படையாக இருக்கின்றன. தமிழக அரசின் அலட்சியம் தோற்றுவித்திருக்கும் பயம் மக்களிடையே இருப்பதால் கால நிலை மற்றும் மழை, வானிலை குறித்த பல்வேறு புரளிகளையும், வதந்திகளையும், அறிவியல் பூர்வமற்ற கணிப்புகளையும் நம்புகிறார்கள். வதந்திகளாகவும் பேசுகிறார்கள்.

அது குறித்து புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வானிலை குறித்து நாம் சிறிது அறிய வேண்டும். சென்னை மழைக்கு காரணமாக பேசப்படும் எல் நினோ அதில் ஒன்று.

எல் நினோ என்றால் என்ன?

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பகுதியில் வழக்கத்திற்கு மாறான கடற்பரப்பின் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் சூடேறிய நீரோட்டம் எல் நினோ (El Nino) எனப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலின் தட்பவெப்பம் வழக்கத்துக்கு மாறாக உயர்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு, கடலின் நீரோட்டம், கடற்பரப்பின் காற்றுவீச்சு இவற்றைக் உள்ளடக்கிய வாக்கர் சர்குலேஷன் (Walker circulation) எனப்படும் பிரமாண்டமான சுழல்வட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சூரிய வெப்பத்தால் நீர் சூடேறி அலைகள் மற்றும் வளிமண்டல காற்றின் காரணமாக கடலின் ஆழத்திற்கு வெப்பம் பரவாமல் ElNino-outlines
மேற்பரப்பில் மட்டும் பரவுகிறது. இதனால், ஆழ்கடல் பகுதியில் நீரின் வெப்பநிலை மேற்பரப்பிலும், ஆழத்திலும் சமமாக இருப்பதில்லை என்பதோடு கடலில் நீரோட்டங்கள் ஏற்படுகின்றன.

ஓரிடத்தில் உள்ள காற்று வெப்பத்தினால்  விரிவடைந்து எடைகுறைந்து மேலெழுகின்றது. இதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மற்றொரு இடத்திலிருந்து காற்று நகர்ந்து வருவதையே காற்று வீசுவதாக உணர்கிறோம், அறிகிறோம். பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வெப்பமண்டலங்களில் இருந்து நிலநடுக் கோட்டை நோக்கி வீசுகின்ற காற்றுக்கள் வியாபாரக் காற்றுக்கள் (Trade Winds) என்படுகின்றன.

இயல்பாக, மேற்கு வெப்பமண்டல பசிபிக் பகுதியானது அதாவது ஆஸ்திரேலியா – இந்தோனேசிய பகுதி, சூடான ஈரமானதெரு குறைந்த காற்றழுத்த அமைப்பாகும். வறண்ட குளிரான கிழக்கு வெப்பமண்டல பசிபிக் மண்டலம் அதாவது, தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் கடற்பகுதி, உயர் அழுத்தப் பகுதியாகும். இது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே ஒரு அழுத்த சரிவை (pressure gradient) ஏற்படுத்தி கடலின் மேற்பரப்பின் காற்றை கிழக்கிலிருந்து மேற்காக வீசச்செய்கிறது.

Walker_ElNinoமேற்கு வெப்பமண்டல பசிபிக் கடலின் சூடான நீரானது அதன் மீதான காற்றை சூடாக்குவதுடன் அதற்கு நீராவியின் மூலம் ஈரப்பதத்தை அளிக்கிறது. இக்காற்று மேலெழும்பி செல்லும் போது மேகமாக மாறுகிறது. இந்த மேகங்கள் மழையாகப் பொழிந்த பின் வறண்ட காற்று வளிமண்டல மேலடுக்கில் உயரழுத்தமாக மாறி கிழக்கே சென்று, பின் குளிர்ந்து மேற்கு நோக்கி பயணித்து சுழற்சி வட்டத்தை பூர்த்தி செய்கிறது. இச்சுழற்சியே வாக்கர் சர்குலேஷன் எனப்படுகிறது. இது உலகம் முழுமைக்கும் குறிப்பாக ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க நாடுகளில் மழை பொழிவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இவ்வழக்கமான நிகழ்வு தலைகீழாக மாற்றுவதே எல் நினோ – தென் திசை அலைவு (El Nino-Southern Oscillation) எனப்படுகிறது. எல் நினோவின் போது வழமைக்கு மாறாக கிழக்கு பசிபிக் வெப்பமண்டலம் சூடான அமைப்பாக மாறும். இதனால் உலகம் முழுவதும் பருவநிலையில் வழக்கத்திற்கு மாறான பெருமழை, கடும் வறட்சி போன்ற விளைவுகளை ஏற்படுகிறது. சராசரியாக இரண்டிலிருந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை எல் நினோ நிகழ்வுகள் நடந்தாலும், 1982-83-ம் ஆண்டும், 1997-98-ம் ஆண்டும் நிகழ்ந்தவையே இது வரை உட்சபட்ச எல்நினோ நிகழ்வுகளாக பதிவாகியிருந்தன.

எல் நினோவைப் போலவே இந்தியப் பெருங்கடல் வெப்பமண்டலத்தில் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு இடையில் வெப்பநிலை மாற்றமடைவது இந்தியப் பெருங்கடல் வெப்ப இருமுனை (Indian Ocean Dipole) எனப்படுகிறது.indian_ocean-dipole

எல் நினோ, இந்தியப் பெருங்கடல் வெப்ப இருநிலை, வினோதமான வானிலை, காற்று மேலடுக்கு விலக்கம் ஆகிய பல்வேறு நிகழ்வுகளின் அரிய ஒன்றினைவே கடந்த டிசம்பர் 1 மற்றும் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த அதி கனமழைக்கு காரணமென ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

நடப்பு 2015-ம் ஆண்டின் எல் நினோவால் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதி (தென் அமெரிக்காவின் மேற்கு கடல்) இதுவரை கடந்த எல் நினோக்களைக் காட்டிலும் மிக அதிக வெப்பமடைந்துள்ளது. மேலும், இவ்வாண்டு இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவது வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்ட ஆண்டாகவும் பதிவாகியுள்ளது. இந்த கடுமையான எல் நினோ நிகழ்வின் காரணமாக, இந்தியப் பெருங்கடலில் கிழக்கில் வெப்பமாகவும், மேற்கில் குளிர்ந்த நிலையும் கொண்ட நேர்மறை வெப்ப இருமுனை (Positive Dipole) உருவானதும் கூட தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வழுவான வானிலை அழுத்த அமைப்புகளை உருவாக்க காரணமாக இருந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலடுக்கில் ஈரப்பத வெளியேற்றம் மிக வலுவாக இருக்கும் நிலைக்கு மேலடுக்கு விலக்கம் (Upper Level Divergence) என்று பெயர். மிக மிக அரிய ஒன்றிணைவாக கீழடுக்கில் காற்று ஈரப்பதம் மிக அதிகமாகப் பெற்ற அதே நேரம் மேலடுக்கு விலக்கமும் நிகழ்ந்ததும், ஒரே நாளில் 490மி.மீ வரலாறு காணாத மழை பெய்ய காரணமாக இருந்ததாக புனே வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குனர் முகபாத்யாய தெரிவித்துள்ளார்.

எல் நினோ உருவாவதற்கான காரணங்களை சந்தேகத்திற்கிடமின்றி அறிவியியல் உலகம் இன்னும் கண்டறியவில்லை. இன்னும் ஆய்வு செய்கிறது. ஆயினும், எல் நினோ நிகழ்வின் கால இடைவெளி(Frequency), அதன் தாக்கம், விளைவுகளை புவி வெப்பமாதல் – பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாக நேச்சர் (Natute) இதழில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

நியூ சயிண்டிஸ்ட் (New Scientist) பத்திரிக்கையின் புள்ளி விவரங்களின் படி 1906-ம் ஆண்டிலிருந்து 2005-ம் வரையிலான காலத்தின் புவிவெப்பமடைதலுக்கு 22%-க்கும் மேல் அமெரிக்கா பங்களித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் மட்டுமே 30%-க்கும் மேற்பட்ட கரியமில வாயுவை வெளியேற்றி புவிவெப்படைதலுக்கு முக்கிய பங்காற்றுகின்றன.

புவி வெப்பமாதல், பெருங்கடல் வெப்பமாதல் பேன்றவையே இதைப் போன்ற பெருமழைக்கு எரிசக்தியாக இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் எரிக் ஹால்தஸ் (Eric Holthaus) தெரிவித்துள்ளார்.

இந்த கனமழைக்கு இத்தகைய காரணிகள் இணைந்து பங்களித்திருந்தாலும், ஏரிகளையும் அவற்றின் வடிகால்களையும் பராமரிக்காததுடன் அவற்றின் ஆக்கிரமிப்பிற்கு துணை நின்ற அரசு தான் இந்தப் பேரழிவிற்கு மிக மிக்கிய காரணம். ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்ட பிறகு, மேற்கத்திய நாடுகளின் நலனுக்கேற்ற வகையில் நமது பொருளாதாரம் சுரண்டப்படுகிறது, மாற்றப்படுகிறது. அப்படித்தால் சென்னை போன்ற ஊதிப்பெருக்கி உப்பவைக்கப்பட்ட செயற்கையான நகரங்கள் எந்த திட்டமிடலும், வசதிகளுமின்றி விரிகின்றன. சென்னை நகரம் நமது தமிழக மக்கள், தமிழக பொருளாதாரத்தின் நலனுக்காக உருவாகி வளரவில்லை என்பதே முக்கியம்.

இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திற்குமான காங்கிரீட் பாலைவனமாக சென்னை மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஓட்டுக் கட்சிகள் முதல் அதிகார வர்க்கம் வரை கழிவை வாங்கிக் கொண்டு அழிவுக்கு துணை போகின்றனர்.

சென்னை மியாட் மருத்துவமனையில் நோயாளிகளின் படுகொலைக்கு அடையாற்றை மறித்துக் கட்டிடம் கட்டிய நிர்வாகமும், அதற்கு அனுமதியளித்த அரசுமே காரணமே அன்றி எல் நினோ அல்ல. இதே போல், பெரும்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ள குளோபல் மருத்துவமனை, ஏரிகளை ஆக்கிரமித்துள்ள சத்தியபாமா, எஸ்.ஆர்.எம் கல்லூரிகள், கூவம் நதியை மறித்துக் கட்டப்படுள்ள ஷாப்பர்ஸ் ஸ்டாப் வணிக வளாகம்… என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

ஆகவே வானிலை பற்றிய அறிவு மட்டுமே மழை வெள்ள அழிவை தடுத்து விடாது. அரசியல் குறித்த அறிவும் தேவை.

– மார்ட்டின்

மேலும் படிக்க:

 

மணல் கொள்ளையர் உருவாக்கிய கடலூர் வெள்ளம்

2

டலூர் மாவட்டத்தில் கடந்த 2015 நவம்பர் 9,10 ம் தேதி அன்று மிக அதிகமாக பெய்த கனமழையையொட்டி கடலூர் முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது. இதற்கு மூன்று முக்கிய காரணங்களை ஏற்கனவே 24.112015 அன்று வெளிவந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

அதில் முக்கிய காரணம் பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதற்க்காகவே பெண்ணை ஆற்றின் போக்கையே திசை திருப்பி நீரை கெடிலம் ஆற்றுக்கு திருப்பி விட்டது ஒரு முக்கியமான காரணம். பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது என்று ஏற்கனவே அந்த கட்டுரையில் எழுதியுள்ளோம். விழுப்புரத்துக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் இடையே ஆற்றில் மணல் குவாரி அமைத்து கொள்ளை அடித்து கொண்டு இருந்தனர் மணல் கொள்ளையர்கள்.

அங்கு செயல்பட்ட அரசு மணல் குவாரி இடம் பெயர்ந்து கோலியனூருக்கும் பண்ருட்டிக்கும் இடையில் கண்டரக்கோட்டை என்ற இடத்தில் மணல் குவாரி அமைத்துள்ளனர். அடுத்த குவாரி மேல்குமாரமங்கலத்தில் அமைத்து கொண்டு இருக்கின்றனர்.

அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளுக்கு புறம்பாக சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான டன் மணல் கொள்ளையடிக்கப்படுகின்றன என்ற உண்மை ஒருபுறமிருக்க மணல் கொள்ளைக்கு சாதகமாக பெண்ணையாற்றில் தண்ணீர் வர விடாமல் தடுத்து நிறுத்தும் குற்றத்தையும் செய்துள்ளார்கள்.

தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலம் நந்தி துர்கா என்ற இடத்தில் தொடங்கி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் வழியாக விழுப்புரம் வந்து கடலூர் சென்று கடலில் கலக்கிறது. இதன் நீளம் 391 கிலோ மீட்டர் தூரம். இந்த பெண்ணையாறு தான் ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ளது. கிருஷ்ணகிரியில் 38,000 ஏக்கர், தர்மபுரியில் 6250 ஏக்கர், திருவண்ணாமலையில் 17,980 ஏக்கர், விழுப்புரத்தில் 25,000 ஏக்கரும் கடலூரிலும் கணிசமான அளவில் பாசனத்திற்கான பெண்ணையாற்று நீர் பயன்படுகிறது. எனவே தான் இந்த ஐந்து மாவட்டங்களும் ஆற்று பாசன பகுதி என்று அழைக்கப்படுகின்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையில் தான் இந்த ஆற்றில் தண்ணீர் வருகிறது.. அதற்கு காரணம் சாத்தனூர் ஆணை நிரம்பினால் தான் பெண்ணையாற்றில் தண்ணீர் வரும்.இந்த தென்பெண்ணையாறு சாத்தனூர் அணைக்கு மேலேயே அதாவது கிருஷ்ணகிரியிலேயே வடபெண்ணையாறு, தென்பெண்ணையாறு என்று இரண்டாக பிரிந்து விடுகிறது. எனவே சாத்தனூர் ஆணை நிரம்பினால் தான் பெண்ணையாற்றில் தண்ணீர் வரும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் இவையெல்லாம் பெண்ணையாறு நீரை தான் ஆதாரமாக கொண்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்துக்கு தேவையான நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் பெண்ணையாறுதான். இந்த தென்பெண்ணையாற்றின் மூலம் ஐந்து மாவட்ட மக்கள் பயன்பெறுகிறார்கள். இதில் வரைமுறை இல்லாமல் மணல் அள்ளுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றின் போக்கையே திசை திருப்பி மணல் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

cuddalore-floods-1இதே நந்தி மலையில் இருந்து உருவாகக்கூடிய பாலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் தண்ணீர் போகிறது என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஏன் இந்த பத்தாண்டுகளில் பாலாற்றில் தண்ணீர் போகவில்லை என்றால், கர்நாடகாவில் இருந்து போகக்கூடிய ஆறுகளில் தண்ணீர் போகவில்லை என்பது ஒருபுறமிருக்க , குறிப்பாக பாலாற்றில் இருக்க கூடிய மணலை, மணல் கொள்ளையர்கள் ஏறக்குறைய சுத்தமாக கொள்ளையடித்து விட்டார்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கம் போன்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்பொழுது பாலாற்றில் மணலே இல்லை. இதே போன்ற நிலையை தான் பெண்ணையாற்றிலும் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விழுப்புரம், கடலூரில் இருக்க கூடிய ஆற்று பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஏற்கனவே கூறியது போல ஆயிரக்கணக்கான டன் மணல் கொள்ளையடிக்க பட்டிருக்கிறது.இந்த மணல் கொள்ளைக்கு அக்கம் பக்கமாக சில தவறுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஆலைகள், கர்நாடகாவில் உள்ள ஆலைகள், இந்த ஆலைகளின் கழிவுகள் எல்லாம் இந்த பெண்ணையாற்றில் தான் விடப்படுகிறது. இந்த ஆலைக்கழிவுகள் நீரோடு கலந்து வரும் பொழுது இந்த ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்கள், அதில் பயிரிடக்கூடிய நெற்பயிர்கள், காய்கறிகள், பல விதமான விவசாய பொருட்கள் என்று அந்த பொருட்களில் எல்லாம் ஆலைககழிவுகளின் தாக்கம் உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்பொழுது கண்டரக்கோட்டை ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ளும்பொழுது பின்பற்ற வேண்டிய பல்வேறு சட்டப்பிரிவுகள் உள்ளது. அந்த சட்டங்களில் உள்ள எந்த பிரிவையும் இந்த மணல் கொள்ளையர்கள் கடைபிடிக்கவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

1. முதல் விதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இந்த விதிமுறையை யாரும் பின்பற்றவில்லை என்பது அவ்வழியாக போகும் பயணிகள், கிராம மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். 24 மணி நேரமும் தீவிரமாக மணல் அள்ளிக்கொண்டு இருக்கின்றார்கள். எவ்வளவு மணல் தான் ஒரு நாளைக்கு அள்ள வேண்டும் என்று அரசு துறையில் உள்ளவர்களிடம் கேட்டால் RTI யில் போட்டு கேளுங்கள் அல்லது வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்று சொல்வது போல் கூறுகின்றனர். நேரடியாக கொள்ளை நடப்பது கண்முன் தெரிகிறது. ஆனால் இப்படி ஒரு பதிலை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுவே ஒரு சட்டவிரோத செயல்.

2. ஆற்றில் மணல் அள்ளும் பொழுது இரண்டு இயந்திரம் தான் பயன்படுத்த வேண்டும், மனித உழைப்பை பயன்படுத்தி தான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஒரு குவாரியில் பதினோரு அதிநவீன JCB இயந்திரங்கள் , அதுவும் cuddalore-floods-25acre-sand-quarry, மற்றொரு குவாரியில் ஆறு இயந்திரங்கள் உள்ளது. இது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது. பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள யார்டில் இந்த எந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது மழை பெய்து சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதால் மணல் அள்ள முடியவில்லை. அதனால் தான் JCB இயந்திரங்கள் அனைத்தும் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்றன. கண் முன்னாடி இவ்வளவு சாட்சியங்கள் உள்ளது. கிட்டத்தட்ட 20 JCB இயந்திரங்கள் உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை கேட்டால் எதுவும் தெரியாதது போல் நாடகமாடுகிறார்கள். இந்த மணல் கொள்ளை திட்டமிட்டு பகிரங்கமாக நடத்தப்படுகிறது. இந்த அரசு அதிகாரிகளும் அரசின் அனைத்து உறுப்புகளும் பொதுப்பணித்துறை , நீர்பாசனத்துறை, கனிமவளத்துறை , கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி கலக்டர் வரை அனைவரும் இதற்கு துணையாக இருக்கின்றனர் என்பதை தான் நிருபிக்கிறது.

3. மணல் அள்ளினால் நிலத்தடி நீர் பாதிக்கபடுமா? அனுமதிக்கலாம? வேண்டாமா? என்று சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த விதியே கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு அரசாங்கம் அதன் இன்னொரு உறுப்பிடம் அனுமதி வாங்குவது என்பது பித்தலாட்டம். இது மக்களை ஏமாற்றுவதற்க்கான கண்துடைப்பு நடவடிக்கை. அதாவது அரசாங்கம் எதையும் முறையாக தான் செய்யும் என்று வெள்ளைக்காரன் சொல்வது போல் “ ஒரு நாயை சுடுவதாக இருந்தால் கூட விசாரணை நடத்தி தான் சுடுவோம் என்பது போல் உள்ளது.

4. சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விட்டால் கூட மூன்று அடி உயரம், மூன்று அடி அகலம் தான் அள்ள வேண்டும் என்று விதியில் உள்ளது. மூன்று அடி ஏன் சொல்கிறார்கள் என்றால், அள்ளப்படுள்ள மணல்கள் மழைக்காலத்தில் திரும்ப வந்து சேர்ந்து விடும். எப்போதுமே ஆற்றில் மணல் இருக்கும் என்பதற்காக தான். அந்த மணல் தான் நீரை பஞ்சு போல் தேக்கி வைக்கும் வறட்சியான காலங்களில் பயன்படும் என்பதால் தான் மூன்று அடி அதுவும் கையால் தான் அள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் வாரியத்திடம் அனுமதி வாங்கி வந்துவிட்டு விதிகளை மீறி மணல் உள்ளவரை வெறியோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளிவிடுகிறார்கள்.

உதாரணமாக விழுப்புரம் பக்கத்தில் நடந்த மணல் கொள்ளையின் பொழுது மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் சென்று ஆய்வு செய்தனர். அதனை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு அந்த மணல் கொள்ளையர்கள் வீடு கட்டி தருவது, கோவில் கட்டி தருவது, வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பது, தீபாவளி, பொங்கல் போன்ற காலங்களில் பணம் அதிகமாக கொடுப்பது, போன்ற செயல்களால் மக்களையே ஊழல் படுத்தி வைத்துள்ளார்கள் என்று தெரிய வந்தது. இன்று மக்களிடம் பணம் இல்லாததால் மணல் கொள்ளையர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள். நாளை எதிர்காலம் என்ன, நிலத்தடி நீர் இருக்குமா? என்பது பற்றி மக்கள் யோசிப்பது இல்லை. ஆனால் வெள்ளாற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டம் பற்றி பெண்ணையாற்றில் விளக்கி கூறும் பொழுது , ஆற்றை சுற்றியுள்ள 25 கிராம மக்களிடம் எதிர்ப்பு எதுவுமில்லை. இது போல் மக்கள் மவுனமாக இருப்பது, புரிந்து கொள்ளாமல் இருப்பதை பயன்படுத்தி கொண்டு மூன்று அடிக்கு மூன்று அடி மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அதனை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வெறி கொண்ட அளவிற்கு அள்ளுகிறார்கள்.

இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்று சொன்னால் பெண்ணையாற்றில் 200 அடி மணல் உள்ளது என்று “ஜியாலஜிக்கள் சர்வே” கூறுகின்றது. அதன் படி தற்பொழுது நூறு அடி மணல் அள்ளியிருப்பார்கள். இதனை அனுமதி வாங்கிக்கொண்டு செய்கிறார்கள் என்பது கேலிக்கூத்து. அனுமதி வாங்கினாலும் வாங்கவில்லை என்றாலும் இந்த கொள்ளை நடக்கும். காரணம், ஒரு மீட்டர் அள்ளினால் குவாரி வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது ஆற்றோர கிராம மக்கள் பயன்பாட்டுக்கு தான் பொருந்தும். எனவே தான் வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றனர். ஆக மொத்தம் சட்டத்தை மீறினால் தான் மணல் கொள்ளை நடத்த முடியும். மணலை வியாபாரம் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.

5. ஆற்றின் இரு கரையோரம் தான் மணல் அல்ல வேண்டும். நடுவில் அல்ல கூடாது என்று விதி உள்ளது. ஆனால் ஆற்றின் கரையோரம் தான் சாலை அமைத்து உள்ளார்கள். cuddalore-floods-roadin-riverஆற்றின் அருகே கும்பகோணம் – சென்னை மெயின் ரோடு உள்ளது. அது மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் ஆற்றினுள் ஆயிரக்கணக்கான லாரி செல்வதற்கு சாலை தரமாக உள்ளது. ஆற்றினுள் சாலை போட வேண்டிய அவசியம் என்ன? காரணம், நடுவில் மணல் அள்ளுவதனால் தான் கரையோரம் சாலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மணல் அள்ளுவதற்க்கான சட்டங்கள் எல்லாம் அரசு சரியாக இருக்கிறது என்று மக்களை ஏமாற்றுவதற்கு தான் பேப்பரில் இருக்கிறதேயொழிய நடைமுறையில் அந்த விதிகள் அனைத்தும் மீறப்படுகிறது.

6. உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு, நிலத்தடி நீர், சாலை போன்றவைகள் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கண்டரக்கோட்டையில் மணல் குவாரி அமைப்பதற்கு முன்னரே அதன் பாதிப்புகளை விளக்கி வி.வி.மு, பு.மா.இ.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதனை பார்த்த சில சாதிய அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் தற்பொழுது நீர் பற்றாக்குறை வந்துள்ளது. 250 அடி ஆழத்திற்கு கீழே நீர் சென்றுள்ளது என்று அப்பகுதி மக்களே கூறுகின்றனர். . குறிப்பாக புதிதாக பைப் போட்டு அதன் ஆழத்தை அதிகபடுத்தினால் தான் தண்ணீர் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.ஆக நிலத்தடி நீர் என்பது மணல் அள்ளப்பட்ட இந்த பதினோரு மாதத்தில் கீழே சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சாலை வசதி என்று கூறுகிறார்கள், கண்டரக்கோட்டையில் ஆரம்பித்து சின்னக்கல்லிப்பட்டு வரை கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக நெடுஞ்சாலை நாசமாக உள்ளது என்பது அதிகாரிகளுக்கும் தெரியும். இந்த கட்டுரையை படிப்பவர்கள் சென்று பாருங்கள், மனிதர்கள் செல்வதற்கு லாயக்கற்றதாக உள்ளது. இது ஒரு கிராமத்திற்கு செல்லும் சாலை அல்ல. ஆயிரக்கணக்கான லாரிகள்,ஆயிரக்கணக்கான பேருந்துகள் , இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை. சாலைகள் பாதிப்படையக்கூடாது என்ற விதியை இந்த மணல் கொள்ளையர்கள் துளியளவும் மதிக்கவில்லை.

இந்த அளவிற்கு சட்டங்களை தனக்கு சாதகமாக்கி, அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு, மழைக்காலத்தில் மணலை கொள்ளையடிப்பதற்கென்றே திட்டமிட்டே ஆற்றின் நீர் போக்கை திசை திருப்பி விட்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக மழை பெய்து முடிந்த 18 ம் தேதி வரை இந்த பெண்ணையாற்றில் தண்ணியே போகவில்லை. அன்று மாலை தான் ஆற்றில் தண்ணீர் வந்தது. மழை ஆரம்பிப்பதற்கு முன்பு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினார்கள், சித்தலிங்க மடத்தில் இருந்து கெடிலம் ஆற்றுக்கு நீர் போகும் படி மலட்டாற்றில் தண்ணீரை திறந்து விட்டார்கள். அது நிரம்பியதும் பம்பையாற்றின் வழியாக நீரை திறந்து விட்டார்கள். கடைசியாக சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 117 அடியை எட்டியதும் அதனை தேக்குவதற்கு வேறு வழி இல்லாமல் தான் பெண்ணையாற்றில் திறந்து விட்டிருக்கிறார்கள். அந்த தண்ணீர் தான் தற்பொழுது ஓடக்கூடிய நீர்.

ஆக கடலூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு முழுக்காரணமும் பெண்ணையாற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. குறிப்பாக இந்த குவாரிகள் அனைத்தும் அரசு நடத்துவதாக சொல்கிறார்கள். இல்லை. அமைச்சர் M.C.சம்பத் தான் நடத்துகிறார் என்று அப்பகுதி கிராம மக்கள், வியாபாரிகள் கூறுகின்றனர். அதிமுக, திமுக என்று அனைத்து கட்சிகளும் கொள்ளையடிக்கின்றனர். திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை எதிர்த்த சம்பந்தம் என்பவர் தான் தற்பொழுது குவாரிக்கு பொறுப்பாக இருக்கிறார் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர் முதல் கலெக்டர் வரை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதோடு இந்த அரசுக்கட்டமைப்பு முற்றிலும் தோற்றுப்போய் விட்டது என்பது தான் நிரூபணமாகிறது.

-புதிய ஜனநாயகம், செய்தியாளர்.

லைட்விண்டு ஸ்ரீராம் நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் எச்சரிக்கை !

0

தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் லைட்விண்டு ஸ்ரீராம்ன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 27-11-2015 மாலை 5 மணிக்குக் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட துணைத்தலைவர் தோழர் நாகராஜன் கண்டன உரையாற்றினார். லைட்விண்டு ஸ்ரீராம் கிளையின் தலைவர் தோழர் மோகன்பாபு, கிளையின் உறுப்பினர் தோழர் முனுசாமி இருவரும் கண்டன உரையாற்றினர்.

ndlf-tvlr-meeting-1தோழர் சதீஷ் தனது தலைமையுரையில், “சாராயம் விற்கக்கூடாது என்றால் தேசத்துரோக வழக்கு போடுகின்றனர். சாராயத்தால் உழைக்கும் மக்களுக்கு ஏதேனும் நன்மை உள்ளதா? அரசே சாராயம் விற்பது சரியா? உரிமைக்காக போராடினால் அரசு எப்படி ஒடுக்குகிறதோ அதுபோன்றே போராடும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிறார்கள். லைட்விண்டு முதலாளிக்கு எதிராக நாம் கண்டனக் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இதே நாளில் தான் மாருதி சுசுகி தொழிலாளர்களும் உரிமைப்பறிப்புக்கு எதிராகப் இந்தியா முழுவதும் தொழிலாளர்களை அணிதிரட்டி மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆலையில் உரிமைக்காக சங்கம் துவக்கியதற்காக 147 தொழிலாளிகள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிலாளர்கள் உரிமை என்று பேசினால் கூட அது முதலாளிகளுக்கு எதிரானது என்பது தான் நமது நாட்டில் எழுதப்படாத விதியாக உள்ளது.

ndlf-tvlr-meeting-2அதே போல இங்கும் லைட்விண்டு ஸ்ரீராம் ஆலையில், முதலாளியைக் காட்டிலும் அவர்களின் எடுபிடிகள் தான் தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதில், புரட்சிகர சங்கத்தை ஒழித்துக்கட்டுவதில் தீவிரமாக செயல்படுகின்றனர். குறிப்பாக, அனைத்து திட்டங்களையும் போட்டுக் கொடுத்து தொழிலாளர்களுக்கு விரோதமாய் நடந்து கொள்வதில் மூளையாகச் செயல்படும் HR அதிகாரி நாகேஸ்வரன் மற்றும் கார்ப்பரேட் HR ரமேஷ், 5 தொழிலாளிகளை சஸ்பெண்டு செய்யச் சொல்லி நிர்வாகத்தை தூண்டிய கலையரசன், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து, தற்போது தொழிலாளிகளுக்கு எதிராக பொய்ச் சாட்சி சொல்லிக்கொண்டிருக்கும் செக்யூரிட்டி ஆபிசர் ஆறுமுகம், வடமாநில தொழிலாளிகளை மிரட்டி பணியவைக்க துடிக்கும் அனந்தராமகிருஷ்னன் ஆகியோர். லைட்விண்டில் பணிபுரியும் போது ஆட்களை வேலையில் அமர்த்துவதற்கு புரோக்கர் கமிஷன் வாங்கியதால் துரத்தப்பட்ட புரோக்கர் கோபாலகிருஷ்ணனும் HR நாகேஸ்வரனுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தொழிலாளர் மத்தியில் குழப்பத்தை உருவாக்கும் வேலையை விளைவித்து வருகிறார்.

ndlf-tvlr-meeting-3இந்த அடியாள் படையும், இவர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ள INTUC சங்கமும் தான் நமது சங்கத்துக்கு எதிரான வேலையைச் செய்து வருகின்றனர். இந்த துரோகிகளை ஒழித்துகட்டி தொழிலாளர்களின் உரிமையைப் பெற வேண்டுமெனில் தொழிலாளி வர்க்கமாக நாம் அனைவரும் ஒன்று சேர்வது தான் தீர்வு” என்ற தொழிலாளிகளை அறைகூவி அழைத்து தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

கண்டன முழக்கத்துக்கு பின் புரட்சிகரப் பாடல் பாடப்பட்டது.

தொடர்ந்து கண்டன உரையாற்றிய லைட்விண்டு ஸ்ரீராம் கிளை உறுப்பினர் தோழர் முனுசாமி, “நிர்வாகத்தின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமல் தொழிலாளிகள் உறுதியோடு தொடர்ந்து போராட வேண்டும் தொழிலாளர்கள் உறுதியோடு நின்று ஜெயித்த போராட்டங்கள் பல உள்ளன. நமது உரிமையைப் பறிக்கும் நமது நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி நாமும் வெல்ல வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

ndlf-tvlr-meeting-4லைட்விண்டு கிளைத்தலைவர் தோழர் மோகன்பாபு, தாங்கள் பணியில் சேர்ந்தது முதல் சங்கம் துவக்கும் வரை சந்தித்த அடக்குமுறைகளையும், சங்கம் துவக்கிய பின் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், அதைச் சங்கமாக நாம் எதிர்கொண்டு வருவதையும் எடுத்துரைத்தார். அடிபட்டுக் கிடக்கும் தொழிலாளியைக் கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியம் காட்டிய நிர்வாகத்தை சாடினார். இறுதியாக, போராடிப் பெற்ற உரிமைகளை இழக்காமல் இருக்கவும், பாதுகாத்துக்கொள்ளவும் தொழிலாளிகள் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என உரையை முடிவு செய்தார்.

ndlf-tvlr-meeting-5கண்டன உரையாற்றிய மாவட்டத் துணைத் தலைவர் தோழர் நாகராஜன், “இன்று அரசு யாரெல்லாம் மக்களின் உரிமைக்காக போராடுகிறார்களோ அவர்களை பயங்கரவாதிகள் தேசதுரோகிகள் என்று முத்திரைக் குத்தி அடக்குமுறையை ஏவுகிறது. ஆனால் உண்மையிலேயே அன்றாடம் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி, வாழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்துக்கு பாதுகாப்புக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. முதலாளிகளின் இந்த பயங்கரவாதச் செயல்களை நாம் தட்டிக்கேட்கக் கூட உரிமை மறுக்கப்படுகிறது.

ndlf-tvlr-meeting-6இந்த சட்டவிரோத நடவடிக்கையின் தொடர்ச்சியைத் தான் கும்மிடிப்பூண்டி லைட்விண்டு ஸ்ரீராம் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது ஏவிக் கொண்டிருக்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளும் தொழிலாளர் விரோதப் போக்கும் இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் நடக்கிறது. இது குறித்து ஓட்டுக்கட்சிகள் சம்பிரதாய நடவடிக்கைகளை மேற்கொண்டு முடங்கிக் கொள்கிறார்கள். இந்த கட்டமைப்புக்குள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும் எனத் தொழிலாளர் வர்க்கத்தை நம்ப வைத்து துரோகம் இழைக்கிறார்கள். இந்த அரசமைப்புக்குள் நமது பிரச்சனையைத் தீர்க்க முடியாது. ஏனெனில் இது ஆளும் தகுதியை இழந்து விட்ட தோற்றுப்போன அரசமைப்பு. இந்த அரசமைப்பின் தோல்வி அதன் நடவடிக்கையில் தினந்தோறும் வெளிப்படுகிறது.

ndlf-tvlr-meeting-7டாஸ்மாக் பிரச்சனையாகட்டும், மழை வெள்ளத்தால் மக்கள் சாவதாகட்டும், ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிராணைட் கொள்ளையாகட்டும், சிவகங்கைச் சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாகட்டும், ஊழல் நீதிபதிகளுக்கெதிரான போராட்டமாகட்டும், இவையனைத்தும் சொல்லும் செய்தி ஒன்றுதான். அது என்னவென்றால், இந்த அரசமைப்பு எந்தப் பிரச்சனையையும் தீர்க்க வக்கற்றதாகவும், ஆளும் தகுதியை இழந்து விட்டது என்பதுமாகும். உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த தகுதியிழந்துவிட்ட அரசைத் தூக்கியெறிந்து, மக்களுக்கு அதிகாரம் உள்ள அரசமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தான் நமது பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இதற்கு புரட்சி ஒன்றுதான் தீர்வு” என கண்டன உரையாற்றினார்.

கூட்டம் துவங்கும் முன்னரே, ஏதோ சினிமா ஒளிப்பதிவு செய்வதைப் போலவே “ஸ்டார்ட் கேமரா ஆக்சன்” சகிதமாக, கேமராக்களை தயார் செய்து கொண்டும், ஒத்திகை பார்த்துக் கொண்டும் நின்றிருந்தனர், உளவுப் பிரிவினர். நாம் கண்டனக் கூட்டம் திட்டமிட்ட தேதியிலேயே அன்புமணி ராமதாஸும் மக்களுக்கு “மாற்றத்தையும், முன்னேற்றத்தையும்” எப்படித் தர போகிறார் என விளக்க பொதுக்கூட்டம் நடத்தியதால் கியூ பிரிவு போலிசுக்கு கடும் கிராக்கி. அதனால் நாம் நடத்திய கண்டனக் கூட்டத்துக்கு இரண்டு புதிய போலிசு இரண்டு கேமராக்களில் பதிவு செய்தனர். ஒன்று உளவுத் துறைக்கும் மற்றொன்று நிர்வாகத்துக்கும் பதிவு செய்யப்பட்டதா? அல்லது புதிதாக பதிவு செய்வதால் தவறு நேர்ந்துவிடும். அதனால் இரண்டு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. எப்படியோ ஏதோவொன்றை பார்த்தாவது, தாங்கள் மக்களுக்கெதிராக செயல்படுகிறோம் என போலிசு உணர்ந்தால் சரி..!

மாவட்ட இணைச் செயலாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரைக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 944 538 9536

மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!

1

ட மேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி மூழ்கியது. இக்காட்டாறு புதுக்கோட்டை ஓடையில் பாய்ந்து கோரம்பள்ளம் கண்மாயில் கலந்து உப்பாற்று ஓடை வழியாக வங்கக் கடலுக்கு செல்லும். ஆனால் இந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதால் உடைப்பெடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூழ்கடித்தபடி, தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையை துண்டித்துக்கொண்டு குடியிருப்பு பகுதிகளை கபளீகரம் செய்தது.

கோரம் பள்ளம் கண்மாயின் கரைகளை பலப்படுத்த தவறியதால் அதில் உடைப்பு ஏற்பட்டது. அதேபோல் உப்பாற்று ஓடையும் ஆக்கிரமிக்கப் பட்டதால் அதிலும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையை துண்டித்துக்கொண்டு முத்தையாபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை கபளீகரம் செய்தது.

ஆங்கிலேயரான பக்கிள் துரையால் 100 அடி அகலத்தில் உருவாக்கப் பட்டிருந்த பக்கிள் ஓடை வெறும் 20 அடி அகலம் கொண்ட கால்வாயாக மாற்றும் பணி கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு அ.திமு.க. ஆட்சியில் முழுமையாக முடிக்கப்பட்டது. குறுகிய இக்கால்வாயில் காட்டாற்று வெள்ளம் செல்ல முடியாமல் சுற்றிலும் பாய்ந்தது. மற்றொரு பகுதியான சிப்காட் வளாகத்தின் வழியாகவும் வெள்ள நீர் ஊருக்குள் பாய்ந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அக்கரைக்கண்மாய் இருந்த இடம்தான் இன்று முத்தம்மாள் காலனி மற்றும் மச்சாது நகராக உள்ளது. தி.மு.க. வின் ரியல் எஸ்டேட் மாபியாக்களால் வளைக்கப்பட்டு பிளாட் போட்டு விற்கப்பட்ட இக்குளம்தான் இன்று தன்னை வெளிக்காட்டி உள்ளது. இங்குள்ள மக்கள் கழுத்தளவு வந்த வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்க்கு டெம்போ, மிதவைப்படகு, பைபர் படகு, டிராக்டர் என்று தனி நபர்கள், கட்சியினர், நிறுவனங்களின் உதவி கிடைத்தது. நம் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் வாகனத்தை ஓட்டியும், உடனிருந்து வழிகாட்டியும் மீட்பு வேலையில் பங்கெடுத்தனர். அரசு நிர்வாகமோ செயலற்று ஸ்தம்பித்துக் கிடந்தது.

இந்கிருந்து வெள்ளத்தை வடிக்க இருந்த வடிகால்கள் தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் சிறுபாலங்களாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்காலுக்கான அறிகுறியே இல்லாமல் காம்ப்ளக்ஸ்களாக நிற்கிறது. இத்தகைய தூர்ந்து போன வடிகாலுக்கான ஆதாரங்களை தூத்துக்குடியின் உட்புற சாலைகளிலும் பார்க்க முடிகிறது. இந்த வடிகால்களை மீட்டெடுக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதற்கு பதில் சாலைகளை வெட்டி குழாய் அமைத்தும், மோட்டார்களை வைத்து பம்ப் செய்தும், அடுத்தடுத்துள்ள தெருக்களை வரிசையாக மூழ்கடித்து வருகிறது. இதனால் கீழ்ப்புறமுள்ள மக்கள் எதிர்த்து போராட, மாநராட்சியோ ஒருதெருவுக்கும் மற்றொரு தெருவுக்கும் மோதலை ஏற்படுத்தும் விதமாக ஜே.சி.பி.-ஐ மக்களிடம் தந்துவிட்டு ஒதுங்கி நிற்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தன்னெழுச்சியாக நகரின் பல பகுதிகளிலும் சாலை மறியல்கள் தொடர்ந்து நடக்கிறது. உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர் அந்தோனி கிரேஸ், மாவட்ட ஆட்சியாளர் ரவிக்குமார், அமைச்சர் சண்முகநாதன் உள்ளிட்டவர்கள் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புறநகரான முத்தையாபுரம் பகுதியில் வீடுகள் கடும் சேதமடைந்தது. குறிப்பாக கக்கன் நகரில் மட்டும் 47 வீடுகள் முழுமையாக இடிந்தது. வீடுகளை இழந்தவர்களும், வெள்ளம் வடியாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறியவர்களும் அருகிலுள்ள சர்ச், பள்ளி, திருமண மண்டபங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

tuticorin-flood-13பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு, போராட்டத்தில் உள்ள மக்களுக்கு துணையாக நின்று, மீட்பு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர். போராட்டத்தை எந்த திசையில் நடத்தவேண்டும் என்று குறிப்பாக வெள்ளம் நின்று பலநாள் கடந்தும் வெள்ளக்காடான நகரை மீட்காமல் தோற்றுவிட்ட அரசுக்கு எதிராக அணிதிரட்டி வருகின்றனர்.

தகவல்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி

தோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !

3

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் விடுதலையானதையொட்டி, அவர் விடுதலைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடிய மக்களுக்கும், கட்சிகள், ஊடகத்தார்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக 23-11-2015 அன்று மாலை திருச்சியில் அரங்குக் கூட்டம் நடைபெற்றது.

அன்று காலையிலேயே தனக்கு ஆதரவாக கருப்புக் கொடி ஏந்தி போரட்டம் நடத்திய தில்லைநகர் காந்திபுரம் பகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். மக்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

[படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு மாலை 6 மணிக்கு திருச்சி புத்தூர் சண்முகா திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்பைச் சார்ந்த தோழர்களும் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு ( ML) மக்கள் விடுதலை அமைப்பு, SDPI கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், ஆதித் தமிழர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி என அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தோழர் தமிழாதன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் தமிழாதன்

இக்கூட்டத்தினை ம.க.இ.க.வின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமையேற்றி துவக்கி வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தமிழாதன் பேசுகையில்:

“ம.க.இ.க தோழர்களை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும் அவர்களுடன் நான் குடும்ப உறுப்பினர் போல பழகியுள்ளேன். தோழர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை நேரில் பார்த்துள்ளேன். அவர்களது அமைப்பின் போராட்டங்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன்” என தோழர் கோவனுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

வாழையூர் குணா
புதிய தமிழகம் வாழையூர் குணா

புதிய தமிழகம் வாழையூர் குணா பேசும் போது:

“தோழர் கோவன் சமூக சீரழிவை எப்போதும் கோபத்தோடு பார்ப்பவர், பாடுபவர். இவரை தேசதுரோக வழக்கில் நள்ளிரவில் திருடனை கைது செய்வதை போல நடத்து கொண்டது பாசிச ஜெயா அரசு. 2 இலட்சத்திற்கும் மேல் பெண்களின் தாலி அறுப்பு, 3 கிலோ மீட்டருக்கு ஒரு டாஸ்மாக் கடை இதை பார்த்தால் கோவனுக்கு மட்டுமா கோபம் வரும், உலக மக்கள் அனைவரும் கோபம் வந்தது. மூடு டாஸ்மாக்கை மூடு இந்தப் பாடலில் என்ன தவறு உள்ளது. தீபாவளிக்கு 372 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று கட்டளை. 472 கொள்ளை அடித்து விட்டார். மது விலக்கிற்காக யார் வேண்டுமானாலும் போராடி இருக்கலாம். ஆனால் உண்மையாக போராடியது மக்கள் அதிகாரம் அமைப்பு தான். 30 ஆண்டுகளாக பாடிக் கொண்டிருப்பவரை எந்த வழக்கினாலும் வாயை மூடிவிட முடியாது” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:

“கோவன் பாடியதில் என்ன தவறு. காந்தி, பெரியார், கள்ளுண்ணாமை எழுதிய திருவள்ளுவர் இவர்களும் தேச துரோகிகள் தான். காலை 7 மணிக்கெல்லாம் டாஸ்மாக் கடையை அரசு திறந்துவிடுகிறது. 2000-ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா இந்திரா காந்தியை ‘பதிபக்தி இல்லாதவள்’ என்று பேசினார். இது தரக்குறைவு இல்லையா? கோவன் பாடியதில் எந்த தரக்குறைவும் இல்லை. மக்கள் அதிகாரம் போராட்டம் அனைத்திலும் உடன் இருப்பேன் முழுமையாக போராடுவேன்” என்றார்.

புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்
புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்

புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்:

“இன்று 6863 கடைகள் உள்ளன, 2004-ல் 4,800 கோடி வருவாய், 2016-ல் 24,760 கோடி வருவாய். இனி சமூகச் சீரழிவு அதிகமாகும். இது அரசின் கொள்கை என்கிறது நீதிமன்றம். கொள்கை என்றால் என்ன என்பதற்கு பதில் இல்லை. தமிழ் இனத்தையே அழிப்பதுதான் அரசின் கொள்கை. இனி தமிழன் அழிக்கப்படுவான், தமிழினத்தின் அடையாளத்தை இனி நாம் தேட வேண்டும். அ.தி.மு.கவை தேர்தலில் மாற்று அமைப்புகள் புரட்டி போட்டு மாற்றி அமைக்க வேண்டும்” என்றார்.

தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:
தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:

தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:

” இப்பொழுதும் எங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது. கொடைக்கானலில் பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக பாட்டு பாடியதற்கு எங்கள் நால்வர் மீது இந்திய தேசத்திற்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்கு. மேலும் புதிய தலைமுறை விவாதத்தில் அ.தி.மு.க சி.ஆர்.சரஸ்வதியிடம் விவாதம் செய்ததற்கு பெண் போலீசு ஒருவர் தோழர் ஓவியாவிடம் உங்களை நேரில் வந்து பார்த்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இன்னும் பல வழக்குகள் நம் மீது விழும். இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கோவன் மட்டும் அமைப்பு கிடையாது. அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்த ம.க.இ.க வின் அரசியல் தான் காரணம். நாம் அனைவரும் இணைந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ” என்றார்.

தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்
தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்

தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்:

“கோவனை கைது செய்யவில்லை என்றால் தமிழ்நாடு அளவில் தான் தெரியும். ஆனால் இன்று உலக அளவில் ஹிட் ஆகி விட்டது. இந்தப் பாடல் 1 லட்சம் பேரின் ரிங்டோனாக உள்ளது. கோவன் மீது ஜெயாவிற்கு கோபம். ஜெயாவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால், எல்லாக் கட்சிகளையும் இன்று ஒன்று சேர்ந்து போராட தூண்டி உள்ளது. சசிகலா உள்ளே போனால் 16 சாராய ஆலையும் உள்ளே போகும். எனவே மூடாது அரசு. இனி நாம் அனைவமும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்றார்.

கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி
கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி

கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி:

“நாம் கோவன் கைதை பற்றி விவரமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அரசே இதை செய்து விட்டது. இந்த அரசிற்கு எதிராக நாம் மாவோ வழியில் நின்று போராட வேண்டும். மக்கள் அதிகாரத்துடன் எல்லா போராட்டங்களிலும் நான் கலந்து கொள்வேன்.”

கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை (CPML):

கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை
கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை

“ம.க.இ.க வை சேர்ந்த தோழர்கள் மீது ஏற்கனவே NSA போட்டு இருக்கிறார்கள். பார்ப்பன பனியா கும்பலின் ஆளாக தான் ஜெ. அரசு செயல்படுகிறது. அனைத்தும் தனியார்மயம். 1996 BHEL வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு கோவன் வெளியில் வந்தார். நாம் நீதிமன்றத்தை நம்புகிறோம் என்றால் நமக்கு நாமே தூக்கு கயிறு மாட்டிக்கொள்வது போல்தான். ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையாகவும் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவது BJP அரசு தான். இப்பொழுது நாம் ஐக்கிய முன்னணி ஆக வேண்டும். நாம் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேச பக்தனாக உருவெடுத்த ம.க.இ.க, மக்கள் அதிகாரம் போலவே நாம் அனைவரும் போராட வேண்டும். ”

சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்
சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்

சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்:

“மது விலக்கிற்கு கோவன் அவர்கள் பாடல் பாடி கைது ஆனதற்கு முதல் கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட கட்சிதான். எல்லாரும் போராடினார்கள். மக்கள் அதிகாரம் தீவிரமாக போராடியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எல்லா வகையிலும் போராடினோம். ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் தான் டாஸ்மாக்கை நடத்துகிறது. எனவே மதுவை ஒழிக்க மக்களுடன் நாமும் இணைந்து போராட வேண்டும்” என்றார்.

இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்:

இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்
இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்

“சிறைக்கு வாய் இருந்தால் அது கம்யூனிஸ்டுகளின் கதை தான் சொல்லும். நாம் சிறைக்கு செல்லலாம். கோவன் செல்லலாம். ஆனால் இனி நம் போராட்டத்தின் மூலம் ஜெயா சென்றால் இனி வெளியே வரவே முடியாது. தேசத் துரோகிகள் ஆட்சி என்றால் தேசப் பற்றாளர்கள் அனைவருமே தேசத் துரோகிகள் தான். இந்தப் பாடலுக்கு மட்டும் சிறை அல்ல. எதை பாடினாலும் சிறை தான். எழுத்தாளர்களுக்கு சிறை. பா.ஜ.க-வில் உள்ளவரே கவிஞர்களுக்கு ஆதரவாக பேசினால் அடி தான்.

மதுவிலக்கு துறை விஸ்வநாதன், “மதுவை பற்றி அம்மாவுக்கு தெரியாததா உங்களுக்கு தெரியும்” என்று கூறி உள்ளார். இதை விடவா ஆதாரம் வேண்டும்.

200 வருடங்களுக்கு பிறகு அ.தி.மு.க அமைச்சர்களின் முதுகெலும்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் மனித இனம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியே அடைய வில்லை என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அமைச்சர்கள் அடிமையாக உள்ளனர்.

கோவன் பாடினால் புரட்சியாளனாக தெரிகிறது. அநீதியை கண்டு வெகுண்டு எழுந்தால் நீயும் தோழனே என்றார் சேகுவேரா. அந்த அடிப்படையில் நாம் போராடுவோம்.

கோவன் இனி தனி நபர் கிடையாது. மேலும் இவர் தமிழ்நாட்டின் கத்தார்” என்றார்.

தோழர் சத்யா, ம.க.இ.க
தோழர் சத்யா, ம.க.இ.க

தோழர் சத்யா, ம.க.இ.க:

“கைது செய்யப்பட்ட விதத்தை பார்த்தால் மிகவும் கொடுமை. மாஃபியா கும்பல் கூட இப்படி கைது செய்யப்படவில்லை. அவனுக்கு பாதுகாப்பு. ஆனால் தோழர் கோவனை நள்ளிரவில் 10 பேர் கொண்டு தகவல் ஏதும் கொடுக்காமல் கைது செய்தது ஜெயாவின் பாசிசத்தை வெளிப்படுத்துகிறது.

அழிவிடைதாங்கியில் பு.மா.இ.மு டாஸ்மாக் உடைப்பு தான் முதல் போராட்டம். இனியும் போராட்டம் தொடரும். இனி அனைவரும் சேர்ந்து மக்களை திரட்டி மக்கள் அதிகாரத்தின் தலைமையில் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்துவோம்” என்றார்.

தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:
தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:

தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:

“நான் சிறையிலிருந்த போது எனக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடிய மக்களுக்கும், மாற்று கட்சி நண்பர்கள் ஊடகத்தார்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயாவின் பாசிசஅடக்குமுறையை கண்டு எங்கள் அமைப்பு அஞ்சாது. மதுக் கடைகளை மூடும் வரை எங்களின் போராட்டம் ஓயாது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார்.

பிறகு, “மூடு டாஸ்மாக்கை மூடு“, “ஊருக் கூரு சாராயம்“, “பாடு அஞ்சாதே பாடு” ஆகிய பாடல்களை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன்
ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன்

இறுதியாக ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்களுக்கும், பகுதி மக்களுக்கும், மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.

 

 

 

இக்கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !

0

ன்பார்ந்த பொதுமக்களே!

மணல்கொள்ளை லாரிகளால் குண்டும் குழியுமாக சேதமடைந்த சாலையை சீரமைக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறோம், எந்த பயனுமில்லை.

பவழங்குடி-தேவங்குடி ரோடை போடு
நாய் போகாத ரோட்டில் நாம் போக வேண்டுமா? என ஆர்ப்பாட்டம் நடத்தினோம்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு எதிரானவர்களாக மாறியுள்ளார்கள் என்பதற்கு வெள்ளப் பேரழிவும், வழங்கப்படும் நிவாரணமும் சாட்சி.

நிவாரணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே நீர்நிலைகளை தூர்வாராமல், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடலூர் மாவட்டத்தை மரணக் காடாக மாற்றுகின்றனர்.

கார்மாங்குடி மணல் குவாரி மூடும் போராட்டத்தின் போதே, விருத்தாசலம் ஆர்.டி.ஓ இரண்டு மாதத்தில் ரோடு போட்டுத் தரப்படும் என வாக்குறுதி கொடுத்தார், நடக்கவில்லை.

அதன் பிறகு நாம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். நாய் போகாத ரோட்டில் நாம் போக வேண்டுமா? என ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த தீர்வும் இல்லை. தேவங்குடி பவழங்குடி ரோட்டில் பயணிப்பதால் வாகனம் பழுதடைவது மட்டும் இல்லை. பயணம் செய்பவர்களுக்கும் உடல்ரீதியாக, மனரீதியாக தினம் தோறும் பெருத்த சேதம் ஏற்படுகிறது.

இனியும் பொறுக்க முடியாது. நம்மை ஆளத் தகுதியற்றவர்களாக மாறிவிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து பயனில்லை. குடும்பத்தோடு குடியேறுவோம் வாரீர்.

பவழங்குடி, கீரமங்கலம், காவனூர், கொடுமனூர், மருங்கூர், வல்லியம், சக்கரமங்கலம், மேலப்பாலையூர், கீரனூர், கார்மாங்குடி, தொழூர்-கீழப்பாலையூர்-தேவங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, நேரம் கிராம பொதுமக்கள்.

virudhai-pp-notice

நாய் போகாத ரோட்டில் நாம் போக முடியுமா?

பாழாய் போன பல்லாங்குழியான எங்கள் ஊர் சாலையை போடு

பாழடைந்த பயணிக்கத் தகுதியற்ற கருவேப்பிலங்குறிச்சி to தேவங்குடி-பவழங்குடி சாலையை சீரமைக்கக் கோரி

விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில்
குடியேறும் போராட்டம்

30-11-2015 திங்கள், காலை 11 மணி

கருவேப்பிலங்குறிச்சி to தேவங்குடி, மேலப்பாலையூர் to தே.பவழங்குடி கிராம பொதுமக்கள்
94863 07045, 87606 70553, 99762 20591

மக்கள் அதிகாரம் –
விருத்தாசலம் 97912 86994

கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?

5

ருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.

முகமது அக்லக்
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்

ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.

அக்லக் படுகொலை: திடீரென நடந்த விபத்தா?

ராமர் கோவில், பொது சிவில் சட்டம், 370-வது சட்டப்பிரிவை நீக்குவது, இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி முசுலீம் எதிர்ப்பு கலவரங்களையும் படுகொலைகளையும் நடத்திவந்த ஆர்.எஸ்.எஸ். இப்பொழுது லவ் ஜிகாத், பசுவதைத் தடை – எனத் தனது தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டிருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிடுவதற்கு “லவ் ஜிகாத்” என்ற சதித்தனமான பிரச்சாரத்தை நடத்திய ஆர்.எஸ்.எஸ். கும்பல், 2014 நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது காங்கிரசை ‘இந்துக்களின்’ எதிரியாகக் காட்டுவதற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு பசுக்கள் கொல்லப்படுவதாக ஒரு அழுகுணி பிரச்சாரத்தை நடத்தியது.

நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் குந்தியவுடனேயே பசுவதை தடைச் சட்டத்தை நாடெங்கும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தையும், தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வட மாநிலங்களில் பரவலாக கட்டவிழ்த்துவிட்டன. குறிப்பாக, பசுவைக் கொன்றதாகப் பழி சுமத்தப்பட்ட ஒருவரை பஜ்ரங் தள் குண்டர்கள் கொடூரமாகத் தாக்கும் காட்சியும், அக்கும்பல் விடுத்த எச்சரிக்கையும் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பரப்பப்பட்டு, உ.பி.யின் முசாஃபர் நகர், ஷாம்லி பகுதிகளில் மீண்டும் கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவிலும், அக்கட்சி தனித்து ஆளும் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பசுவதை தடைச் சட்டம் ஐந்து முதல் பத்தாண்டு வரை தண்டிக்கக்கூடியதாகக் கடுமையாக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் யாரோ ஒரு இந்து மதவெறியன் போட்ட வழக்கினைச் சாதகமாக்கிக் கொண்டு, பசுவதைத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு, அம்மாநில போலீசுக்கு அம்மாநில உயர்நீதி மன்றத்தின் ஜம்மு கிளை உத்தரவிட்டது.

முகம்மது அக்லக்கின் இரண்டாவது மகன் தானிஷ்
உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகம்மது அக்லக்கின் இரண்டாவது மகன் தானிஷ்

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வினரின் புரவலர்களான ஜைன மதத்தினர் கடைபிடிக்கும் பர்யுஷன் சடங்கின்போது, இரண்டு நாட்கள் இறைச்சிக் கடைகளை அடைப்பது மகாராஷ்டிராவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை நான்கு நாட்களாக நீட்டித்தும் அந்நாட்களில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விற்பதையும் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியின் கீழுள்ள மும்பய் மாநகராட்சி. அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாநகராட்சி இதனை எட்டு நாட்களுக்கு நீட்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்து மதவெறிக் கும்பல் ஆளும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாபிலும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த உத்தரவு விநாயகர் சதுர்த்தியின்பொழுதும் நடைமுறையில் இருக்கும் என இன்னொரு அடி தாண்டியது. பா.ஜ.க. மும்பய் மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை மும்ப உயர்நீதி மன்றமும், அதன் பின் உச்சநீதி மன்றமும் ரத்து செய்துவிட்டபோதும், இந்து மதவெறிக் கும்பலுக்குத் தலைக்கேறிய பசு போதை இறங்கவேயில்லை என்பதை இதன் பின் நடந்த முகம்மதுஅக்லக் கொலையும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த நோமன் அக்தர், ஜாஹித் அகமது பட் ஆகியோரின் கொலைகளும் எடுத்துக் காட்டிவிட்டன.

ஆர்.எஸ்.எஸ்.தான் அடிக்கொள்ளி

அக்லக் கொல்லப்பட்ட நாளன்று, பசு மாட்டுக் கறியின் எச்சங்கள் வீதியில் கிடப்பதைப் போன்ற ஒரு காட்சி சமூக வலைத்தளங்கள் வழியாக அக்கிராமத்தினரின் கைபேசிகளுக்குத் திடீரென அனுப்பப்பட்டிருக்கிறது. அன்றிரவு பத்து மணி போல், அக்கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் தூங்கப் போய்விட்ட நேரத்தில், அக்கிராம கோவிலின் ஒலிபெருக்கியில் அக்கோவில் பூசாரி, அக்லக் பசு மாட்டைக் கொன்று, அதன் மாமிசத்தைச் சாப்பிட்டு விட்டு மிச்சத்தை வீட்டில் வைத்திருப்பதாகவும், அதன் எச்சங்களை வீட்டிற்கு எதிரே எரிந்திருப்பதாகவும் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பைக் கேட்டவுடனேயே 1,000-க்கும் மேற்பட்டோர் கோவில் வாசலில் கூடுகிறார்கள். அவர்களுள் ஒரு கும்பல் அக்லக்கின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது இளைய மகனை மயங்கிவிழும் வரை அடித்துவிட்டு, அக்லக்கை வீதிக்கு இழுத்து வந்து செங்கல் கற்களால் அடித்துக் கொல்கிறது.

ஏறத்தாழ 15,000 பேர் வசிக்கும் பிஸாரா கிராமத்தில் முசுலீம்களின் மொத்த எண்ணிக்கையே வெறும் 300 தான். அக்லக் குடும்பமோ தாகூர் சாதியினர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயேதான் வசித்து வந்தது. இப்படிபட்ட நிலையில் பசு மாட்டைக் கொன்று, அதன் கறியைச் சாப்பிட்டுவிட்டு, அதன் எச்சங்களைத் தெருவில் வீசியெறிய அக்லக் உள்ளிட்டு அக்கிராமத்தைச் சேர்ந்த எந்தவொரு முசுலீமும் துணிந்திருக்க முடியாது. எனவே, பசுவைக் கொன்றதாக, அதன் மாமிசத்தைச் சாப்பிட்டதாக வதந்தியைப் பரப்பி, பின்னர் மேல்சாதியினர் மத்தியில் வாழும் அக்லக்கை இலக்காக நிர்ணயித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சினியர் ரஷீத் மீது தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாட்டுக் கறி விருந்து நடத்திய சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் ரஷீத்தின் முகத்தில் மையையும், ஆயிலையும் வீசித் தாக்கியது இந்து மதவெறிக் கும்பல்.

இரண்டாவதாக, அக்கோவில் பூசாரி பிஸாராவைச் சேர்ந்தவரல்ல. மூன்று மாதங்களுக்கு முன்பு கோவில் பூசாரி வேலையை ஏற்றுக் கொண்ட அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், அவரை அழைத்துவந்து, நியமித்தது யார் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது. மேலும், அந்த பூசாரி தனது வாக்குமூலத்தில் தன்னை மிரட்டி, அக்லக் வீட்டில் பசு மாமிசம் இருப்பதாக அறிவிக்கச் செய்ததாகக் கூறியிருக்கிறார்.

ஜாட் சாதியைச் சேர்ந்த பெண்ணை முசுலீம் இளைஞன் பின்தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வதந்தி பரப்பபட்டும், பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் முசுலீம்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை இந்தியாவில் நடந்ததைப் போல சமூக வலைத்தளங்களில் மோசடியாகப் பதிவேற்றம் செய்தும்தான் முசாஃபர் நகர் கலவரம் தூண்டிவிடப்பட்டது. டெல்லியிலுள்ள நஜாப்கர் பகுதியில் நடந்த கலவரமும் கோவிலில் பூசாரி செய்த அறிவிப்பிற்குப் பிறகுதான் தொடங்கியது. உ.பி.யிலுள்ள அஸம்கர் பகுதியிலுள்ள ஒரு கோவிலின் அருகே மாட்டுக் கறியை வீசியெறிந்துவிட்டுத் தப்பிச்செல்ல முயன்ற பர்தா அணிந்திருந்த நபரைப் பிடித்து விசாரித்தபொழுது, அவன் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்தவன் என்பது அம்பலமானது. இத்தகைய வஞ்சகமான ஆர்.எஸ்.எஸ். பாணியில்தான் அக்லக் படுகொலையும் நடந்திருக்கிறது.

மேலும், இப்படுகொலை தொடர்பாகக் கைது செயப்பட்டுள்ள 11 பேரில் 8 பேர் பிஸாரா கிராம பஞ்சாயத்துத் தலைவர் சஞ்ஜய் ரானாவின் உறவினர்கள்; குறிப்பாக, முதல் குற்றவாளியான விஷால் சஞ்சய் ரானாவின் மகன். சஞ்சய் ரானா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.வில் இருந்து வருவதோடு, இப்படுகொலையைக் கொச்சைத்தனமாகப் பூசிமெழுகிவரும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மாவின் அல்லக்கை.

இதுவொருபுறமிருக்க, பிஸாரா கிராமத்தில் ராஷ்டிரவாதி பிரதாப் சேனா, சமாதான் சேனா, ராம் சேனா என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல் தாகூர் சாதியினரை அணிதிரட்டி வைத்திருக்கிறது. குறிப்பாக, சமாதான் சேனாவை நடத்திவரும் கோவிந்த் சௌத்ரி ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகன் என்பதோடு, கடந்த ஆகஸ்டில் கிம்ராலா கிராமத்தைச் சேர்ந்த மூன்று முசுலீம் இளைஞர்கள் படுகொலை செயப்பட்ட சம்பவத்தில் சமாதான் சேனாவிற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த சந்தர்ப்ப சாட்சியங்கள் அக்லக் படுகொலையின் அடிக்கொள்ளியாக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் இருப்பதை நிறுவுகின்றன.

பெரு நகரங்களில் ரவுடிகளையும், மாஃபியா கும்பலையும் தூண்டிவிட்டு சுபாரி கொலைகள் நடத்தப்படுவதைப் போல, ஆர்.எஸ்.எஸ். நேரடியாகத் தலையிடாமல், புதுப்புது இந்துத்துவா அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் தனது திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை அக்லக் படுகொலையில் மட்டுமின்றி, மலேகான் குண்டுவெடிப்பு தொடங்கி தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி படுகொலைகள் வரையிலும் காண முடியும். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் பா.ஜ.க.விற்கு சப்ளை செயப்படுவது போல, இப்புதிய இந்துத்துவா அமைப்புகளிலும் முன்னாள்/இந்நாள் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் வேலை செகிறார்கள். முசுலீம் தீவிரவாத அமைப்பான அல்காய்தாவின் “ஸ்லீப்பர் செல்களை”ப் போல இந்த அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்.-ன் மறைமுக ஆதரவோடு திடீர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

நோமன் அக்தர், ஜாஹித் அகமது பட்
இறைச்சிக்காகப் பசுவைக் கடத்துவதாகப் பழிபோடப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட நோமன் அக்தர் (இடது) மற்றும் எரித்துக் கொல்லப்பட்ட ஜாஹித் அகமது பட்.

“பசுவைக் கொல்லுபவர்களைக் கொன்று போடுவோம்” என அறிவித்து, இமாச்சலப் பிரதேசத்தில் நோமன் அக்தரைப் படுகொலை செய்தது; காஷ்மீர்-உதம்பூரில் ஜாஹித்அகமதுவை எரித்துக் கொன்றது; ஜம்மு-காஷ்மீர் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான இன்ஜினீயர் ரஷீதின் முகத்தில் மையையும், ஆயிலையும் பூசியது; மாட்டுக் கறி விருந்தில் கலந்துகொண்ட கன்னட எழுத்தாளரும் நடிகையுமான சேத்னா தீர்த்தஹள்ளியைப் பாலியல் பலாத்காரம் செய்து, முகத்தில் ஆசிட் வீசப் போவதாக மிரட்டியது; கர்நாடகாவில் ஆஸ்திரேலிய நாட்டுச் சுற்றுப்பயணியான மாத்யூ கார்டன், எல்லம்மா என்ற பெண் தெவத்தின் உருவத்தைத் தனது காலில் பச்சைக் குத்தியதற்காக மிரட்டப்பட்டது என நீண்டுகொண்டே போகும் இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் சம்மந்தமில்லை என ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் சூடத்தைக் கொளுத்தி சத்தியம் செதபோதும், அதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.

தலை சும்மா இருக்க, வால் மட்டும் ஆடுகிறதா?

“இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த அமைப்புகள் அவருக்கு முட்டுக்கட்டைப் போடுவதாக” மோடியின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் சப்பையான, மோசடியான வாதங்களை நயன்தாரா சேகல் உள்ளிட்ட பிரபலமான எழுத்தாளர்கள் எள்ளிநகையாடி அம்பலப்படுத்தியதோடு, தமக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அளித்ததன் மூலம் மோடியின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டனர். “இந்தியாவை இந்து மத ஏகாதிபத்திய நாடாக மாற்ற பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு முயல்வதைக் கண்டித்து” தமக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷண் விருதைத் திருப்பி அளிக்கப் போவதாக அறிவியலாளர்கள் புஷ்ப மித்ர பார்கவா, அசோக் சென், பி.பல்ராம் ஆகியோர் அறிவித்திருக்கின்றனர். “மதரீதியாக பிளவுபட்ட சமூகம் என்பது அணுகுண்டைவிடவும் நமது நாட்டுக்கு ஆபத்தானது. மாட்டிறைச்சி உண்பவர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் அரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். பிரதமர் மோடியின் கள்ளமௌனத்தைக் கண்டித்து ரொமிலா தாப்பர், இர்பான் ஹபிப் உள்ளிட்ட 53 வரலாற்று அறிஞர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இவை அனைத்தும் மோடியின் அரசு வர்க்க வேறுபாடுகளையும் கடந்து பெருவாரியான மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, அவர்களின் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

சேத்னா தீர்த்தனஹள்ளி, மாத்யூ கார்டன்
கர்நாடகாவில் எழுத்தாளர்கள் நடத்திய மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொண்டதற்காக இந்து மதவெறிக் கும்பலால் அச்சுறுத்தும் வகையில் மிரட்டப்பட்ட கன்னட எழுத்தாளரும் நடிகையுமான சேத்னா தீர்த்தஹள்ளி (இடது). எல்லம்மா என்ற பெண் தெய்வத்தைத் தனது காலில் பச்சை குத்திக் கொண்டதற்காக இந்து மதவெறிக் கும்பலால் நடுத்தெருவில் அச்சுறுத்தப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலா பயணி மாத்யூ கார்டன்

இந்த எதிர்வினைகளுக்கு நியாயமான பதிலை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மோடி அரசு, தன்னைக் குற்றஞ்சாட்டுபவர்களை காங்கிரசுகாரர்களாகச் சித்தரித்துத் தன்னை விடுவித்துக் கொள்ளும் கீழ்த்தரமான தந்திரத்தில் இறங்கியிருக்கிறது. நாட்டில் மத சகிப்புத்தன்மை நிலவ வேண்டும் எனக் கோரியிருக்கும் இந்த அறிவுத்துறையினரை, “சகிப்புத்தன்மையற்றவர்கள்” எனச் சாடியிருக்கும் அருண் ஜெட்லி, “இதனால் மோடி வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்ற நகைக்கத்தக்கவிதமாக வாதாடி வருகிறார்.

தினமணி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலால் வளர்ச்சியின் நாயகனாக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடியின் உண்மை சொரூபத்தை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது. குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக மிகப்பெரும் படுகொலையை நடத்திவிட்டு, “காரில் செல்லும்போது ஒரு நாய்க்குட்டி குறுக்கே வந்து அடிபட்டால் எந்தளவிற்கு வருத்தப்படுவேனோ அதற்கு மேல் இதில் வருத்தப்பட எதுவுமில்லை” என அலட்சியமாகப் பதில் அளித்த இரக்கமற்ற கொடியவன்தான் மோடி. அப்படுகொலைக்குப் பிறகு நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலின்பொழுது முசுலீம்கள் ஐந்து பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு, இருபத்தைந்து பிள்ளைகளைப் பெற்றுப் போடுவதாகப் பிரச்சாரம் செய்த கீழ்த்தரமான பேர்வழிதான் மோடி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ‘இந்துக்களின்’ ஓட்டுக்களைப் பொறுக்குவதற்கு, ஏற்றுமதிக்காகப் பசுக்களைக் கொல்லும் இளஞ்சிவப்பு புரட்சியை காங்கிரசு அரசு நடத்தி வருவதாகக் குறிப்பிட்டு, தன்னைப் பசுவின் பாதுகாவலனாக முன்னிறுத்திக் கொண்ட தந்திரக்காரன்தான் மோடி. இப்பொழுது பீகார் தேர்தல் பிரச்சாரத்திலும் மோடி-அமித் ஷா கூட்டணி மாட்டிறைச்சி, பாக். எதிர்ப்பு என்ற இந்து மதவெறி அரசியலை முன்னிறுத்திதான் லல்லு-நிதிஷ்குமார் கூட்டணியை ‘இந்துக்களிடமிருந்து’ தனிமைப்படுத்திவிட முயன்று வருகிறது.

முசுலீம்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வரும் சங்கீத் சோம், மகேஷ் ஷர்மா, சாக்ஷி மகாராஜ், பலியான் ஆகியோரை அழைத்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கண்டித்திருப்பதாகக் கூறப்படுவதெல்லாம் வடிகட்டிய மோசடி மற்றும் பொய். இந்தக் கும்பலின் கட்சிப் பதவிகூட பறிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, “அக்லக்கைக் கொலை செய்தவர்கள் அவரது மகளின் மேல் கைவைக்கவில்லை” என கீழ்த்தரமாகப் பேசிய கலாச்சாரத் துறை இணை அமைச்சருக்கு மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களா, இப்பொழுது மகேஷ் ஷர்மாவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கேபினட் தகுதியுள்ள அமைச்சருக்குக்கூட, அவ்வளவு வசதிமிக்க பங்களா ஒதுக்கப்படவில்லை எனக் குறிப்பிடுகிறது, இந்து நாளிதழ்.

சிறீநகர் போராட்டம்
ஜம்மு-காஷ்மீரில் மாட்டுக் கறிக்குத் தடை விதிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்த அம்மாநில உயர்நீதி மன்ற ஜம்முக் கிளையின் உத்தரவைக் கண்டித்து சிறீநகரில் நடந்த போராட்டம்

முந்தைய காங்கிரசு ஆட்சியைவிட, மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி இன்னும் அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சியில் பசு மாட்டிறைச்சிதான் ஏற்றுமதி செயப்படுவதாகக் கூசாமல் குற்றஞ்சுமத்திய மோடி, தனது ஆட்சியில் எருமை மாட்டிறைச்சி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறி, தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதுவொருபுறமிருக்க, பசுவின் பாதுகாவலனாகத் தன்னை முன்னிறுத்தி வரும் உ.பி. சட்டமன்ற உறுப்பினரான சங்கீத் சோம், அல் துவா என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளிகளுள் ஒருவன் என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. மோடியும், அவரது கும்பலும் எத்தகைய மோசடிப் பேர்வழிகள் என்பதை இவை எடுத்துக் காட்டுகின்றன.

இவற்றுக்கு அப்பால், மைய அரசின் கல்வி, கலாச்சார, அறிவியல், வரலாற்று ஆராய்ச்சி மையங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்களை, அவ்வமைப்புகளின் தலைவர்களாக, இயக்குநர்களாக நியமிப்பதோடு, அந்த அமைப்புகளையே இந்துத்துவா கருத்தியல் தளங்களாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, மோடி அரசு. லலித் கலா அகாடெமி, ரிக் வேதம் முதல் ரோபா வரை என்ற கண்காட்சியை சமீபத்தில் நடத்தியிருப்பதையும், மைய அறிவியல் மற்றும் தொழில் ஆராச்சி கவுன்சில் நடத்திய இயக்குநர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் கலந்து கொண்டிருப்பதையும் அரசு காவிமயமாக்கப்படுவதன் உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

06-beef-policingஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அமைப்பிற்குள் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவினர் இருப்பது போன்ற கட்டுக்கதையைப் பார்ப்பன ஏடுகள் வெகுகாலமாகவே திட்டமிட்டே பரப்பி வருகின்றன. வாஜ்பாயி மிதவாதியாகவும், அத்வானி தீவிரவாதியாகவும்; அதன் பின்னர் அத்வானி மிதவாதியாகவும், மோடி தீவிரவாதியாகவும்; இப்பொழுது மோடி வளர்ச்சி நாயகனாகவும், சங்கீத் சோம், சாக்ஷி மகாராஜ் உள்ளிட்டோர் தீவிரவாதிகளாகவும் இந்த ஏடுகளால் திட்டமிட்டே சித்தரிக்கப்படுகின்றனர். கழுதை விட்டையில் முன்விட்டை என்ன, பின்விட்டை என்ன? பசுவதை எதிர்ப்பை முன்வைத்து முசுலீம்களும் தாழ்த்தப்பட்டோரும் தாக்கப்படுவதை சங்கீத் சோமும், சாக்ஷி மகாராஜும் கவனித்துக் கொள்கிறார்கள் என்றால், அரசு கட்டமைவை காவிமயமாக்குவதை மோடி கவனித்துக் கொள்கிறார். இதுதான் அவர்களுக்கு இடையே இப்பொழுதுள்ள வேலைப் பிரிவினை!

06-courts-for-beefவளர்ச்சியைச் சாதிப்பேன், ஊழலை ஒழிப்பேன் எனத் தம்பட்டம் அடித்து ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல், தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சிறு துளியைக்கூட நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்து, ஒண்ணரை ஆண்டுகளுக்குள்ளாகவே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இன்னொருபுறத்தில் முந்தைய காங்கிரசு அரசைவிட வேகமாகவும் விசுவாசமாகவும் நாட்டின் அனைத்துத் துறைகளையும் முற்றிலுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின், உள்நாட்டு தரகு முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிட முயன்று வருகிறது. மேலும், அரசு கட்டமைவை வேகவேகமாக காவிமயமாக்கி வருகிறது. இவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரிடமிருந்து எழும் எதிர்ப்பைத் திசை திருப்ப ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் இந்து மதவெறி உணர்வையும் மோதல்களையும் திட்டமிட்டே தூண்டிவருகிறது. இதன் மூலம் தனது ஆட்சியை மக்களின் எதிர்ப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வதோடு, சமூகத்தின் மீது இந்து மதவெறி அமைப்புகளின் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மேலாண்மையை, கண்காணிப்பை நிறுவிக் கொள்ளவும் முயலுகிறது. சுருக்கமாகச் சொன்னால், மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப ஒரு இந்து ராஷ்டிரத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது, மோடி அரசு.

எனவே, மோடி தலைமையில் உள்ள மைய அரசு இந்து மதவெறி தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திவிடும்; நாட்டின் சகிப்புத்தன்மையைக் காப்பாற்றும் என நம்பிக் கொண்டிருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. மாறாக, மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் மோடி ஆட்சியை மக்கள் அதிகாரத்தின் மூலம் அகற்றுவதும்; ஆக்டோபஸ் போல பல கொடுங்கரங்களைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலை நேருக்கு நேர் நின்று மோதி வீழ்த்துவதன் மூலம் மட்டுமே நாட்டைக் கவ்வியிருக்கும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

– செல்வம்
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே

0

ந்திய  தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), கரக்பூரில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஆனந்த் தெல்தும்டே குறித்து பு.ஜ. வாசகர்களுக்குப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. எழுத்தாளர், குடியுரிமை செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர் – எனப் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் அவர், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார்.  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியும் வருகிறார்.

பசுவதை தடைச் சட்டத்தை நாடெங்கும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, இந்து மதவெறி அமைப்புகள் நாடெங்கும் பரவலாக முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர் மீதும்; அறிவுத்துறையினர் மீதும் தாக்குதல் நடத்திவரும் சூழலில், சென்னை ஐ.ஐ.டி.-யில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம், “மாட்டுக் கறி உண்பது மற்றும் இந்து எதிர்ப்பு மனோநிலை” (Beef Eating and Anti Hindu Psyche)  எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை 30-10-2015 அன்று நடத்தியது.  புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் “உணவு மற்றும் சமூக-பொருளாதார நிலை, சகிப்புத்தன்மை இன்மை” (Food and Socio Economic, Intolerance) எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை 31-10-2015 அன்று நடத்தினர்.

இவ்விரு கருத்தரங்குகளிலும் சிறப்புரையாற்ற வந்திருந்த பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டேயிடம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. பிரிவு சார்பாக, இன்று நாட்டில் நிலவும் அசாதாரணமான பாசிச சூழல் குறித்து ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது.  அந்நேர்காணல் பு.ஜ. வாசகர்களுக்கு சுருக்கித் தரப்படுகிறது.

***

மோடியின் ஆட்சித்திறன் (Governance)  பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அது முந்தைய ஆட்சியைவிட எப்படி வேறுபட்டிருக்கிறது ?

அவரது ஆட்சித்திறன் பரிதாபகரமானதாக இருக்கிறது. இவர் அனைத்துத் தளங்களிலும் தடுமாறுகிறார்; அடுத்தடுத்து எவ்வளவு கீழே இறங்க முடியும் என்பதையே நிரூபிக்கிறார்; பல பொய்களையும் சொல்கிறார். அரசியல் வெற்றிடத்தின் பலனைப் பெற்றிருக்கிறார். குறைந்தபட்சம் நடுத்தரவர்க்கத்தையாவது கவர்வார் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அவர் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இன்றைய சூழலில் அவர்களது நடவடிக்கைகள் அவர்களையே பூமராங் போல் திரும்பத் தாக்குகின்றன. அவர்களது செயல்கள் மூலம் அவர்கள் அவர்களையே தோற்கடித்துக் கொள்வார்கள். 14 மாதங்களுக்கு முன்பு இருந்தது போன்ற ஆதரவு அவர்களுக்கு தற்போது இல்லை.

இந்துக்களை ஒருங்கிணைப்பது தங்களது நோக்கம் என்று அவர்கள் கூறினாலும், பல்வேறு சாதிக் கட்சிகளை அங்கீகரிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். அது குறித்து …

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே

அகண்ட பாரதம் என்ற பொய்யைப் பரப்பி இந்துக்களை சனாதன தர்மத்தின் கீழ் ஒருங்கிணைத்து ஆட்சி செய்யவேண்டும் என்பது தான் அவர்களது இலக்கு. குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மேலே ஆட்சி செய்யத் தகுதியானவர்கள். அவர்கள் மட்டுமே ஆள வேண்டும், மற்றவர்கள் அவர்களின் கீழ் பணிபுரிய வேண்டும் என்பதுதான் அவர்களது தத்துவம். ஆனால், அவர்களால் இதனை நேரடியாகப் பேச முடியாது. இது குறித்துப் பகிரங்கமாக எழுதியுள்ள கோல்வார்கரின் புத்தகங்களை, அவர்கள் விற்பனையில் இருந்து விலக்கிவிட்டார்கள். அப்புத்தகங்களின் பிரதியை நான்தான் இணையத்தில் வெளியிட்டேன். அவர்களின் நிலை இதுதான். இந்த நிலையை இவர்கள் பகிரங்கமாக வெளியே சொல்ல முடியாது. ஆகவே, அவர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களிடம் தாழ்த்தப்பட்டோர் வந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அப்படி வருபவர்கள் அனைவரும் ஆதிக்க படிநிலையை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். இதுதான் அவர்களது உச்சகட்ட நிகழ்ச்சிநிரல்.

முற்போக்கு அறிவுஜீவிகளைக் கொலை செய்வது, அவதூறு செய்வது என உதிரி அமைப்புகள் செயல்படுகின்றனவே, அவை தானாகச் செயல்படுபவையா அல்லது வேறு ஏதேனும் முக்கிய அமைப்புகள் இதன் பின்னணியில் செயல்படுகின்றனவா?

முதலில் அவர்களை உதிரி அமைப்புகள் என்று ஊடகங்கள்தான் பரப்புரை செய்கின்றன.  அவர்கள் அனைவரும் சங்கப் பரிவாரத்தின் ஒரு பிரிவே. சிலர் அத்தகைய அடையாளத்துடன் இருப்பார்கள், சிலர் அத்தகைய அடையாளம் இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸுடன் உள்ள தொடர்பை மறுப்பார்கள். விஷ்வ ஹிந்து பரிஷத்கூட முதலில் ஆர்.எஸ்.எஸ். உடனான தொடர்பை மறுத்தது; பின்னாளில் அவர்களும் சங்கப் பரிவாரத்தின் ஒரு பிரிவினர் என்பது பகிரங்கமாக வெளித் தெரிந்தது. ஆர்.எஸ்.எஸ்-இன் மொழியைப் பேசுகின்ற அனைத்து அமைப்புகளுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ சங்கப் பரிவாரத்துடன் தொடர்புடையவர்களே.

அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கக் கோருவது, ராமர் கோவில் போன்ற பிரச்சினைகளைத் தள்ளி வைத்துவிட்டு, இப்போது இவர்கள் மாட்டுக் கறி பிரச்சினையை மட்டும் எடுத்திருப்பது குறித்து…

இப்பிரச்சினை நடுவில் வந்திருக்கிறது. ராமர் கோவில் பிரச்சினையை அவர்கள் கைவிடவில்லை. ஆள் பலம் சேர்த்த பிறகு ராமர் கோவில் பிரச்சினையைக் கையில் எடுப்பார்கள். ராமர் கோவில் கட்டுவதுகூட அவர்களது நோக்கம் அல்ல. இன்னும் சொல்லப் போனால், விசயங்கள் அவர்களுக்குச் சாதகமான முறையில் சென்று கொண்டிருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக ராமர் கோவிலைக் கட்டமாட்டார்கள். இவை அனைத்தும் அவர்களது இந்து ராஜ்ஜிய இலக்கை அடைய, மக்களை முனைப்படுத்தும் ஒரு வேலையே.

1990-களில் ராமர் கோவில் பிரச்சினையை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ். கும்பல் வளர்ச்சியடைந்தது. அப்போது இங்கிருந்த சமூக நீதிக் கட்சிகள் மண்டல், கமண்டலத்தை எதிர்க்கும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். அதாவது மண்டல் கமிசனின் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கை, சாதிய பிரச்சினையைத் தீர்க்கும் என்று கூறினர். அது குறித்து உங்கள் கருத்து என்ன?.

மாட்டிறைச்சி தடை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இறைச்சிக்காக பசு மற்றும் காளை மாடுகள் வெட்டப்படுவதைத் தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மும்பய் நகரிலுள்ள ஆஸாத் மைதானத்தில் இறைச்சி வியாபாரிகள் – தொழிலாளர்கள், மாட்டுத் தரகர்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

அனைத்து மண்டல்களும் கமண்டலத்துக்குள் அடங்கி விடும். அந்தக் காலகட்டத்தில் நான் சென்னையில் இருந்தபோது இங்குள்ள இடதுசாரி அமைப்புகளுடன் இது குறித்து விவாதித்துள்ளேன். இட ஒதுக்கீடு கண்டிப்பாக சாதிப் பிரச்சினையைத் தீர்க்காது. மண்டல் கமிசன் இந்துத்துவத்தின் அடிப்படையாக இருந்தது. மண்டல் கமிசனுக்கும் இந்துத்துவத்துக்கும் நேரடியான தொடர்பு இல்லையென்றாலும்கூட, அப்படி எண்ணுவதற்கான அடிப்படை இருந்தது.

மாடு வெட்டுவது தடை செயப்பட்டிருப்பது அதனை நம்பியுள்ள குரேஷி மற்றும் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்களில் எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?

தடை இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் விளைவுகள் உடனடியாக வெளித்தெரியவில்லை. அதேசமயம், மாடு வெட்டும் தொட்டிகளில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டோர் மட்டுமல்ல; பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலரும் வேலை செய்கின்றனர். மராட்டியத்தில் எருமைகள் வெட்டுவது இன்னமும் தடை செயப்படவில்லை என்பதால், மாடு வெட்டும் தொட்டிகளை முற்றிலுமாக மூடிவிட மாட்டார்கள். இதனால் சில தொட்டிகள் பிழைத்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள். கடந்த ஆண்டு 34 மில்லியன் டன் இறைச்சி உற்பத்தி செயப்பட்டுள்ளது. இதில் 20 மில்லியன் டன் மாடுகளிலிருந்தும், 14 மில்லியன் டன் எருமைகளிலிருந்தும் பெறப்பட்டவை. இப்போது மாடு வெட்டுவது தடை செயப்பட்டுள்ளதால், 20 மில்லியன் டன் அளவிற்கான உற்பத்தி தடைபடும். இதன் காரணமாகப் பலர் வேலையிழப்பர்.

அமித்ஷா தேவேந்திரர் மாநாட்டில்
தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையும் சுதேசி விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து கடந்த ஆகஸ்டு மாதம் மதுரையில் நடத்திய பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர் அமித் ஷா.

அருண் ஜெட்லி குற்றம்சாட்டுவது போல சாகித்ய அகாடமி விருதுகளைத் திரும்பத் தருவது திட்டமிட்டு நடப்பதாகக் கருதுகிறீர்களா?

அது அருண்ஜெட்லியின் கருத்துதானே ஒழிய, அதில் உண்மையில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் எழுத்தாளர்கள் தங்களது எதிர்ப்பினைக் காட்டியுள்ளனர். இதற்கு யாராவது ஒருவர் முன்முயற்சியுடன் வந்து தொடங்கி வைக்க வேண்டியிருந்தது. நான் எழுதியுள்ளது போல நேற்றுவரை முதுகெலும்பில்லாமல் கிடந்தவர்கள் இன்றைக்குத்  தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்கின்றனர். இது நல்ல விசயம் தான். இது எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இருந்தாலும், எதிர்ப்பை வேறு எப்படிக் காட்டுவது? ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு வேறு மொழி புரியாது. அவர்களுக்கு புரியும் ஒரே மொழி துப்பாக்கியின் மொழிதான். காங்கிரஸ் காலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நீடிக்கிறது.

இனி “தலித் விடுதலை” என்பது அடையாள அரசியல் முலம்தான் சாத்தியம் எனப் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தலித் எழுத்தாளர்களும், செயல்பாட்டாளர்களும் இணைந்து வெளியிட்ட போபால் அறிக்கை தற்போதைய சூழலுக்குப் பொருந்துகிறதா?

போபால் அறிக்கை வெளியிடப்பட்ட அன்றும் சரி, இன்றும் சரி அது முற்றிலும் தொடர்பற்ற ஒரு முட்டாள்தனமான அறிக்கை. உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டங்களில் அதன் மூலம் பயனடைந்த தலித் எழுத்தாளர்களில் சிலர் அதனை ஆதரித்து வந்தனர். அது என்னவென்றே தெரியாத காரணத்தால், மற்றவர்கள் மவுனம் சாதித்தனர். ஆனால், உலகமயம் என்றால் தனியார்மயம்தான் எனத் தெரிய ஆரம்பித்தபோது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கத் தொடங்கிய பிறகு, இடஒதுக்கீடு பறிபோகிறது என்ற அடிப்படையில் தலித் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. அந்த அதிருப்தியை மடைமாற்றி விடுவதற்காக ஆளும் வர்க்கத்தால் கொண்டுவரப்பட்டதுதான் போபால் அறிக்கை. காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங்தான் இந்த போபால் மாநாட்டிற்கு ஏற்பாடு செதவர். போபால் அறிக்கை, அடையாள அரசியல் பற்றி மட்டும் பேசவில்லை, தலித் விடுதலைக்கு நிலப் பகிர்வில் சில மாற்றங்கள், தலித் மூலதனம், தலித் முதலாளிகள், தனியார் துறையில் இடஒதுக்கீடு என உலகமயமாக்கலின் சந்தைப் பொருளாதாரத்தில் தலித்துகள் போட்டியிடுவதற்கு இவையெல்லாம் தேவை எனப் பல விசயங்களைப் பட்டியலிடுகிறது. இதன் மூலம் உலகமயமாக்கல் தலித்துகளுக்கு நல்லது செயும் என்பதை நிரூபிக்க முயன்றனர். “டிக்கி” (தலித் இந்தியா சேம்பர் ஆஃப் காமர்ஸ்) போன்ற நிறுவனங்கள் அப்போது தொடங்கப்பட்டவைதான். ஆனால், முன்னே கூறியது போல, அது அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி பொருந்தாத முட்டாள்தனமான அறிக்கைதான். ஒரு தலித் தொழிலாளியை ஆதிக்கசாதி முதலாளி சுரண்டுவதைவிட, இன்னும் ஒருமடங்கு அதிகமாகச் சுரண்டும் தலித் முதலாளிகளை உருவாக்குவதைத்தான் அவர்கள் தலித் விடுதலை என்று கூறுகிறார்கள்.

இட ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய வேண்டுமா?

இன்று இட ஒதுக்கீடு அதற்கான அவசியத்தை இழந்துவிட்டது. ஆனால், இதனை வெளிப்படையாகப் பேச முடியாது. ஏனெனில், இது ஒரு பெரிய மனத்தாங்கலான விசயமாகிவிட்டது. இப்போது ஐ.ஐ.டி. யில் அனைத்து சீட்டுகளும் நிரப்பப்பட்டுவிட்டன. ஆனால், தலித்துகளுக்கு உரிய இட ஒதுக்கீடு முழுமையாக அவர்களுக்குப் போ சேரவில்லை. ஏனெனில், இட ஒதுக்கீடு என்பது இங்கே பலனடைந்தவர்களுக்கு மீண்டும் பலனடையச் செயக்கூடியதாக இருக்கிறது.

சாதியை ஒழித்துக்கட்டுவதில் அம்பேத்கர் முன்வைத்த கருத்துகளின் தற்கால பொருத்தப்பாடு பற்றிய உங்கள் கருத்து…

சாதியை ஒழிப்பதற்காக அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகளை நான் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும், அதைச் சீர்திருத்த முடியாது என்பதும் சரியானதே. அம்பேத்கர் இந்து மதத்தை முற்றாகப் புறக்கணிக்கவில்லை. இந்து மதத்தை இரண்டாகப் பார்க்கிறார்; ஒன்று, விதிகளை உள்ளடக்கிய மதம்; மற்றது, கொள்கைகளை உள்ளடக்கிய மதம். பெரும்பான்மை மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தாத உபநிடதங்கள் அடங்கிய, கொள்கைகளை உள்ளடக்கிய மதத்தை அவர்  எதிர்க்கவில்லை; ஆனால், ஸ்மிருதிகள், புராணங்கள் மற்றும் பார்ப்பனியம் உள்ளிட்ட சாதிய அமைப்பை நடைமுறைப்படுத்தும் வேர்களான, விதிகளை அடிப்படையாகக் கொண்ட மதத்தை எதிர்த்தார். அதனால்தான் தர்ம சாஸ்திரங்களை வெடிவைத்துத் தகர்க்க வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால், எக்காலத்திலும் ஒரு இந்து தன்னுடைய தர்ம சாத்திரங்களை எரிக்கவோ வீழ்த்தவோ தயாராக இருக்க மாட்டான், அதனால் இந்து மதத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். சாதி என்பது மதத்துடன் மட்டும் கட்டுண்டு கிடப்பதில்லை. மாறாக, அது மக்களின் வாழ்க்கை முறையில் பின்னிப் பிணைந்துள்ளது, அதனால் மதத்திலிருந்து வெளியேறுவது போன்ற அவர் முன்வைத்த கருத்துகள் ஒரு தீர்வைத் தராது!
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

கல்லூரி மாணவர் இயக்கங்களை ஒழிக்க மோடி அரசு சதி !

0
lyngdoh  committee (6)
லிங்க்தோ கமிட்டி பரிந்துரைகளை எதிர்க்கும் ஜே.என்.யூ மாணவர்கள்

க்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் அரசிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பது இன்றைக்கு துலக்கமான உண்மையாக வந்து நிற்கிறது. கனிமவளக் கொள்ளையாக இருந்தாலும் சரி கார்ப்பரேட் பகற் கொள்ளையாக இருந்தாலும் சரி அரசு நிர்வாக உறுப்புகள் மக்களின் எதிர்நிலை சக்திகளாக தன்னை அறிவித்துக் கொண்டு நிற்கின்றன.

ஆளும் வர்க்கத்தின் கடைநிலை ஊழியரான தலையாரி கூட, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கட்டளையை நிறைவேற்ற முடியாதென இந்த அரசமைப்பின் முற்றிய இறுதி நிலையை எடுத்துக்காட்டிவிட்டார்.

நியாயம் வழங்க வேண்டிய நீதிமன்றங்களோ ஊழல் புழுக்களால் புழுத்து நெளிகின்றன. இந்தியா முழுமையும் நீதிபதிகள் விலைபோனவர்களாக இருக்கின்றனர். நாட்டின் காவல் துறை இந்த ஆளும் வர்க்கத்தின் ஏவல் விலங்காக தன்னை அறிவித்துக்கொண்டு ஊழிக்கூத்து புரிகின்றன.

மத்தியில் ஆளும் மோடியின் பாசிசக் கும்பல் ஏகாதிபத்தியத்திற்கும் மறுகாலனியத்திற்கும் நாட்டை அடகு வைப்பது என்ற நிலையிலிருந்து நேரடியாக விற்றுத்தீர்க்கும் விபச்சாரக்கும்பலாக நிற்பதுமட்டுமல்ல தனக்கே உரித்தான இந்துத்துவ பார்ப்பனியத்தின் கோரப்பற்களால் மனிதக் கறியைச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் நாட்டின் சனநாயக சக்திகள், உழைக்கும் மக்களோடு சேர்ந்து நிற்கிற வரலாற்றுக் கடமை எதைவிடவும் முதன்மையாக இருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் நம் நாட்டின் மாணவ சமுதாயம், தம்மை மக்கள் போராட்டங்களோடு இணைத்துக்கொண்டு சமரசமற்ற போராட்டங்களை நாடெங்கிலும் தொடுத்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மக்கள் போராட்டங்களில் மாணவர்களின் பங்கு நேரிடையானதாகவும் அரசை அம்பலப்படுத்துவதிலும் முன்னணியில் வந்து நிற்கிறது.

இது எதைவிடவும் ஆபத்து என்பதை ஏகாதிபத்திய-மோடி பாசிசக் கும்பல் நன்கு உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் இயக்கம், சக்தியாக மாறுவதைத் தடுப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் இதுவரை இல்லாத ஒடுக்குமுறைகளை ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ (giude lines) என்பதன் பெயரில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் அமல்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதன் ஒரு தொடர்ச்சியாக மிகச் சமீபத்தில் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி), “உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் உள்ளேயும் வெளியேயும் மாணவர்களின் பாதுகாப்பு” எனும் தலைப்பில் சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

lyngdoh  committee (1)இச்சுற்றறிக்கையின் பல்வேறு அம்சங்களான “கல்வி நிறுவனங்களின் சுற்றுச் சுவர்களுக்கு முள்வேலி கம்பியிடுவது, மூலை முடுக்கெங்கும் கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவுவது, பயோமெட்ரிக் வருகைப்பதிவு, காவல் சாவடிகளை வளாகங்களுக்குள் அமைப்பது, தொடர்ச்சியான பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு” என மாணவச்சமூகம் இதுவரை பெற்றுவந்த உரிமைகளையும் உயர்கல்வி நிறுவனங்களில் சனநாயகத்தையும் சகோதரத்துவத்தையும் தட்டிப்பறிப்பதாக அமைந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக யு.ஜி.சி, சென்ற மாதம் அனுப்பிய மற்றொரு சுற்றறிக்கை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் லிங்தோ கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு உத்தரவிட்டிருக்கிறது.

லிங்தோ கமிட்டியின் பரிந்துரைகள் எப்படி இந்திய கல்வித்துறையை ஏகாதிபத்திய கண்பார்வையின் கீழ் கொண்டுவருகிறது என்பதையும் எப்படி மாணவர்கள் அரசியலற்ற தக்கைகளாக மாற்றப்படுகின்றனர் என்பதையும் சென்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம்.

இது ஒருபுறமிருக்க, யு.ஜி.சியின் இந்த இரு சுற்றறிக்கைகளுக்கு முன்னும் பின்னும் சரி, கடந்த மேமாதம் முதல் தற்பொழுது வரை நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இன்றைய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கொந்தளிப்பான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்போராட்டங்களுக்குப் பிற்பாடு பல்வேறு பல்கலைக்கழகங்கள், குறிப்பாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை மற்றும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி நிறுவனங்கள் அடுக்கடுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுவருகின்றன.

ஏற்கனவே இந்நாட்டின் பொதுப்புத்தியில் மாணவர்களின் நிலைப்பாடு, ஊடகங்களால் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தின் ஒருபகுதி இன்றைக்கும் முனைப்பாக நடந்துவந்தாலும் கூட தன் கையை மீறிப் போய்க்கொண்டிருக்கும் மாணவ இயக்கங்களின் போராட்டக்குணத்தை ஒடுக்க வேண்டிய மரணபீதியில் இருக்கிறது ஆளும் வர்க்கம். இதன் பின்னணியில் மாணவர் போராட்டங்களை நசுக்கும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் வழிகாட்டு நெறிமுறைகள் எப்படி ஒன்றை ஒன்று தொடர்புபடுத்தி நிற்கின்றன? அரசியல், பொருளாதார அரங்கில் இது முன்வைக்கும் அபாயம் என்ன? என்பது குறித்து அறிய வேண்டியது அவசியமாகும்.

**********************

27-06-2015 முதல் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் தங்களை ஓர் இயக்கமாக திரட்டிக்கொண்டு (PUSM) துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் ஊழல் மற்றும் அராஜகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தனர். பல்கலைக்கழக வளாகங்களில் மனித உரிமை அத்துமீறல், அதிகார துஷ்பிரோயோகம், போலி பயோ-டேட்டா, பிற ஆய்வுத்தரவுகளை காப்பியடித்தல் என்று சந்திரா கிருஷ்ணமூர்த்தியின் ஊழல்கள் விவரிக்க இயலாதவை. குறிப்பாக, பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்தியிருக்கும் துணைவேந்தருக்கான தகுதியே (பத்து ஆண்டுகள் பேராசிரியராக இருத்தல் அவசியம்) சந்திரா கிருஷ்ணா மூர்த்திக்கு கிடையாது. விதிகளை புறக்கணிக்கும் அளவிற்கு பல்கலைக்கழகத்திலும் இன்றுவரை பார்ப்பனியமே கோலோச்சி வருகிறது. இதற்கெதிராக ஒன்று திரண்ட மாணவர்களுடன் பாண்டிச்சேரி பல்கலைக் கழக ஆசிரியர் கூட்டமைப்பும் (PUTA) சேர்ந்து கொண்டது.

puduvai-beef-protest-standoff-4
புதுவை பல்கலையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்

மாணவர்கள், தாங்கள் வாங்கப்போகும் பட்டம் அதற்குத் துளியும் தகுதியே இல்லாத மோசடியாளரின் கையொப்பத்துடன் வருவதை ஏற்க இயலாது என்பதில் உறுதியுடன் நின்று போராடினர். இந்நிலையில் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பொருட்டு மாணவர்கள் போராடுவது பல்கலைக்கழக ஒழுங்கு நெறிகளுக்கு எதிரானது என்றும் அப்படிப்போராடுகிற மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என 24-07-2015 அன்று சுற்றறிக்கை வெளியிட்டது பல்கலைகழக நிர்வாகம்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் “துணைவேந்தரின் போலி பயோடேட்டாவோ அல்லது அவர் ஆய்வுத்தரவுகளைக் காப்பிடியடித்தார் என்பதோ மாணவர்களின் பட்டங்களையோ படிப்பையோ பாதிக்காது” என திமிராக அறிவித்து உலக அரங்கில் பார்ப்பனியத்தை நிலைநாட்டி இந்தியக் கல்வித்துறையை அசிங்கப்படுத்தியது. அதாவது, இது மேல்மட்டத்தில் நடக்கும் விவகாரம் இதில் மாணவர்கள் தலையிட வேண்டியதில்லை. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல் தொனியே ஸ்மிரிதி ராணியிடம் இருந்து வெளிப்பட்டது..

********************

ftii-protest-2
புனே திரைப்படக் கல்லூரி மாணவர் போராட்டம்

செக்ஸ் நடிகரும் ஆர்.எஸ்.எஸ் வெறியருமான கஜேந்திர சவுகானை புனே திரைப்படக் கல்லூரியின் இயக்குநராக மோடி கும்பல் நியமித்திற்கு எதிரான அக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் நூறு நாட்களையும் தாண்டிவிட்டது. இம்மாணவர்களுக்கு ஆதரவாக கலைத்துறையினரும் இதர மாணவர் அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் போராடிவருகின்றனர். ஆனால் பெருந்திரளான  இப் போராட்டங்களைக் கண்டுகொள்ளாத மோடி அரசு போராடிய மாணவர்களை மூர்க்கமாக ஒடுக்கியது. சங்கப்பரிவாரங்களால் மாணவர்கள் நேரிடையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர். கல்லூரி நிர்வாகம் போராடிய மாணவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் விடுதி வளாகத்திலேயே நடுநிசியில் முன்னணியாளர்களைக் கைது செய்தும் மூன்று மாணவிகள் உட்பட முப்பது மாணவர்களுக்கு பிடிவாரண்டு கொடுத்தும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. மோடி கும்பலின்  நிகழ்ச்சி நிரல் புனே திரைப்படக்கல்லூரியை காவிமயமாக்குவது மட்டும் நின்றுவிடவில்லை. ஏகாதிபத்திய அடியொற்றி கீதா-கிருஷ்ணன் கமிட்டி அறிக்கையின் படி இக்கல்லூரியை தனியார்மயமாக்கும் பாலிவுட் வணிகமயமாக்கும் திட்டத்தையும் முன்னெடுக்கிறது.

********************

pachayappa protest 1
“மூடு டாஸ்மாக்கை” – பச்சையப்பா கல்லூரி மாணவர் போராட்டம்

மூன்றாவதாக ஊத்திக் கொடுக்கும் அம்மாடாஸ்மாக்கிற்கு எதிராக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தமிழ்நாடெங்கிலும் அடுக்கடுக்கான போராட்டங்களைத் தோற்றுவித்தது. மக்கள்திரள் முன் அரசை முழுவதும் அம்மணமாக்கினர் மாணவர்கள். இப்போராட்டங்களின் தொடர்ச்சியின் ஒருபகுதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது மேலாண்மைத் துறை மாணவர்கள் தமிழ்நாட்டில் மதுஒழிப்பைக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். இப்போராட்டத்திற்கு அம்மாணவர்களின் துறைத்தலைவர் பேராசிரியர் மணிவண்ணனும் ஆதரவு தெரிவித்திருந்தார் மேலும் பல்கலைகழகத்தில் நடைபெறுகிற ஊழல்களுக்கெதிராக மாணவர்கள் போராடியிருந்தனர். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற 90 ஆசிரியர்கள் நியமனத்தில் ஒரு ஆசிரியருக்கு 20 லட்சம் வீதம் பணம் வாங்கிகொண்டு பணிநியமனம் நியமனம் செய்யப்பட்டதாக போராசிரியர் மணிவண்ணன் அம்பலப்படுத்தியிருந்தார். இவற்றின் விளைவாக  பல்கலைக்கழக நிர்வாகக்குழு, பேராசிரியர் மணிவண்ணனை துறைத்தலைவர் பதியிலிருந்து நீக்கியதோடு அல்லாமல் போராடிய மாணவர்களை இடைநீக்கவும் செய்தது. இதற்குப் பிற்பாடு, மேற்கொண்டு மாணவர்கள் போராடாமல் இருக்கவும் அரசியல் போர்க்குணத்தைக் காயடிக்கும் விதத்திலும் 10-08-2015 அன்று புதியவழிகாட்டு நெறிமுறைகள் என்பதன் பெயரில் பல்கலைக்கழக வளாகத்தில் எல்லாவிதமான அரசியல் செயற்பாடுகளும் தண்டனைக்குரியது என்றும் மாணவர்கள் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொள்ளக்கூடாது என்றும் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

**************************

பார்ப்பனியத்தின் கோட்டையான சென்னை ஐஐடியில், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் (அ.பெ.ப.வ) தடைசெய்தததிற்க்கு எதிராக நாடெங்கிலும் நடைபெற்ற போராட்டங்கள் பெரும் கிளர்ச்சியாக மாறி ஆளும் வர்க்கத்தைக் கிலிபிடிக்க வைத்தது. மக்கள் திரளின் பருண்மையான போராட்டத்தின் காரணமாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான  தடையை நீக்கம் செய்த ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம், தற்பொழுது அடுக்கடுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்பதன் பெயரில் மாணவர்களின் போராட்டக் குரல்வளையை நெரித்துக்கொண்டு நிற்கிறது.

அ.பெ.ப.வ தடைநீக்கம் செய்யப்பட்ட பிற்பாடான காலத்தில் தன்னிச்சையான மாணவர் குழுக்கள் உருவாவதற்கும் இயங்குவதற்கும் சாத்தியமேயில்லாத ஒழுங்குமுறைவிதிகளை விதித்திருக்கிறது அவாள் நிர்வாகம். குறிப்பாக, முக்கியமான விதிகளுள் ஒன்று “புதிய மாணவர் கூட்டமைப்பு இயங்குவதை ஐ.ஐ.டி டீன் எதிர்த்தால், டீனின் முடிவை மாணவர் விவகாரக்குழுவில் (SAC) 75% ஓட்டுக்களைப் பெற்றிருப்பதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.” என்கிறது.  ஆனால் நடைமுறை யதார்த்தத்தில் எந்த ஒரு தன்னிச்சையான மாணவர் குழுவும் 75% ஓட்டுக்களைப் பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. அதே சமயம் இந்துத்துவ நடவடிக்கைகள் மட்டும் தன்னிச்சையான மாணவர் குழுக்களின் தேவையே இல்லாமல் அவாள் நிர்வாகத்தின் துணையுடன் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.

சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மற்றொரு ஒழுங்குவிதி, மாணவர் குழு நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் டீன் அலுவலகத்திற்கு குறைந்தது பதினான்கு நாட்களுக்கு முன்னமே அக்குழுவிற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல் ஆசிரியர் மூலமாக தெரியப்படுத்தவேண்டும் என்பதோடு எந்தவொரு நிகழ்வும் விதிகள் மற்றும் அரசியல் சாசனத்தை மீறக்கூடாது என்று சொல்கிறது. இந்த விதி அப்பட்டமாக மாணவர்களின் கருத்துரிமையை நசுக்கும் பாசிசமாகும். சான்றாக மாட்டுக்கறி புரளிக்காக இந்துத்துவக் காலிகள் இந்நாட்டின் சாமானியனைக் கொன்றதை எதிர்க்க வேண்டுமென்றால் ஒன்று அவர் படுகொலை செய்யப்படுவது தீர்க்கதரிசனமாக 14 நாட்களுக்கு முன்னமே நமக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லது இந்நாட்டின் பார்ப்பனியம் விதித்திருக்கும் பதினாறாம் காரியநாளில் கருத்து தெரிவிக்கலாம். இச்சமூகத்தைப் பீடித்திருக்கும் பாசிச நெருக்கடி இதைவிட வேறு என்னவாக இருக்கமுடியும்?

Periyar T1 700இதில் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது மேற்கண்ட நான்கு துலக்கமான எடுத்துக்காட்டுகளிலும் மாணவர்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள மட்டும் போராடவில்லை. மாறாக, இந்நாடு எதிர்கொள்ளும் அரசபயங்கரவாதத்திற்கும் ஏகாதியபத்தியத்திற்கும் எதிராக மக்கள் சார்பாக தங்கள் குரலை உரத்து பதிவு செய்கின்றனர். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் காவிமயமாக்கல் மற்றும் தனியார்மயத்திற்கு எதிராகவும், அ.பெ.ப.வ மாணவர்கள் பார்ப்பனியம் மற்றும் மறுகாலனியக் கொடுமைகளை எதிர்த்தும் சென்னை பச்சையப்பா மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அம்மா டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் துணைவேந்தரின் அராஜகத்திற்கு எதிராகவும் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் கொண்டுவரப்படும் ஒழுங்குமுறை விதிகளின் அடுத்தகட்ட விளைவுகள் என்னவாக இருக்கும்? இந்த இடத்தில் சமூகத்தின் பொதுப்புத்தியில் இருத்தப்படும் சில நச்சு வாதங்களைக் கவனிப்போம்.

காலேஜ்க்கு ஸ்டூடண்ட் எதுக்குப் போறான்? படிக்கத்தானே போறான்? அங்கே அரசியலுக்கு இடமுண்டா? என்று கேட்பவர்கள் இருவகையினர். முதல்வகையில் வருபவர்கள் இந்துத்துவக் காலிகள். லிங்தோ கமிட்டியின் பரிந்துரைகளைக் காட்டியே கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்களின் போராட்டம் கூடாது என்று சொல்பவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக அரசியல் செய்து இந்துத்துவத்தை பல்கலைக் கழகங்களில் திணிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான்.

சான்றாக அ.பெ.ப.வ தடைசெய்யப்பட்ட பொழுது ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரி பாசிஸ்டுகள் லிங்தோ கமிட்டி பரிந்துரைகளை முன்வைத்தே மாணவர்கள் அரசியல்மயமாக்கப்படக்கூடாது என்று கொக்கரித்தனர் (எ.கா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஆதித்யா ரெட்டி, ஆர்கனைசரில் அம்பா சரண் வைசிஷ்த் போன்ற கைக்கூலிகள்). இந்தவகையில் ஏகாதிபத்திய விசுவாசியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏகாதிபத்தியத்தோடு ஈயும் பீயுமாக இருந்து தன் வாலை ஆட்டுவதோடு நில்லாமல் தனக்கான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலில் வாய்நீரை ஒழுகவிட்டு நிற்கின்றன.

iit-bans-apsc-cartoonஇரண்டாவது வகையில் வருபவர்கள் மாணவர் போராட்டங்களை கொச்சைப்படுத்துகிற மேட்டிமைவாத நடுத்தரவர்க்கம். இவர்கள் தான் டிசிபிளின் இஸ் மஸ்ட், தி சோ கால்டு ஸ்டூடன்ஸ் பூயுச்சர் வில் பி ஸ்பாயில்டு என்கிறார்கள். ஆனால் யதார்தத்தில் இன்றைக்கு பல்கலைக்கழகங்கள் கொண்டுவந்திருக்கிற வழிகாட்டுநெறிமுறைகள் மற்றொரு சங்கதியையும் நமக்கு புட்டு வைத்துவிடுகின்றன.

இன்றைய நிலையில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் கல்வியே கேள்விக்குள்ளாகும் வகையில் வகைதொகையின்றி கல்வி நிறுவனங்களின் அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டுவருகின்றன. சென்னை ஐ.ஐ.டி உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடோட்கர் கமிட்டியின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு கல்விக்கட்டணம் பெற்றோர்களின் சக்தி மீறி போய்விட்டது. என்.ஐ.டி யில் பி.டெக் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் 2.15 லட்சம் ரூபாயாக மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. ஐ.ஐ.டி யிலும் இதே தொகையை அமல்படுத்த பேச்சுவத்தைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் சமஸ்கிருதம், பசு புனிதம், என மதவாத அரசியல் செய்கிற ஆர்.எஸ்.எஸ் கும்பலோ, பெரும்பான்மையான “இந்துகளை” பாதிக்கின்ற கல்விகட்டண உயர்வை குறித்து வாய்திறப்பதில்லை. அதற்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.

சேவைத்துறைகளில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்க வகை செய்யும் WTO-GATS ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட உள்ளது. அதில் கல்வித்துறையும் அடக்கம். இனிமேல் காசு உள்ளவன் மட்டுமே படிக்க முடியும். அதே நேரத்தில் கல்வியை ‘இந்தியமயமாக்குதல்’ என்ற பெயரில் பார்பனியமயமாக்குவதை RSS ன் வழிகாட்டுதலின் படி தீவிரமாக செய்துவருகிறது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். அதாவது பார்பனீயமும் மறுகாலனியாக்கமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே செயல்படுகிறது. அந்தளவிற்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-பார்ப்பன கும்பலும் ஏகாதிபத்திய முகமைகளும் கூட்டுக்களவாணிகளாக, துரோகிகளாக நிற்கின்றனர்.

கல்விக்கட்டணம் மட்டுமின்றி மாணவர்கள் பயன்படுத்துகிற விடுதிகளிலிருந்து(2020 க்குள் ஐ.ஐ.டி சென்னை உள்ள மாணவர் விடுதிகளை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஐ.ஐ.டி நிவாகம் முடிவுசெய்துள்ளது) கழிவறை (சென்னை ஐ.ஐ.டியில் துப்புரவுப் பணிக்கு வழங்கப்பட்ட தனியார் ஒப்பந்தம் ஸ்மிருதி இராணியின் உறவினர் வகையிறா) வரை தனியார்மயத்தின் கோரமுகத்தை மாணவர்கள் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் போராட முனைகிற மாணவர்களை எதிர்கொள்ள இன்றைக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு, மூலைமுடுக்கெங்கும் கேமிரா கண்காணிப்பு கல்லூரிக்குள் போலீஸ் ஸ்டேசன் என்று போராடுகிற மாணவர்களை சட்டபடி ஒடுக்கவும், மாணவர்களின் சமூக அரசியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவர்களை அரசியலறிவற்ற தக்கைமனிதர்களாக ஆக்குவதற்கும், முதலாளித்துவ இயந்திரத்தின் நட், போல்ட் ஆக, guide lineச், lyndoh recommendation ஆகியவற்றை நடமுறைப்படுத்துகிறது ஆளும் வர்க்கம். இதன் பின்புலத்திலிருந்தே மேற்சொன்ன மாணவர்களின் போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இதற்கு மேலும் ஸ்டூடன்ஸ் ப்யூச்சர் வில் பி ஸ்பாயில்டு என்று பேசிக்கொண்டிருப்பவர்களின் முகாந்திரம் கைக்கூலித்தனமின்றி வேறு என்னவாக இருக்க முடியும்? நிதர்சனத்தில் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த நினைக்கிற இத்தகைய கூட்டத்திற்கு இருக்கிற பணபலம், புதுவசதிகள் கல்வி எனும் உரிமை தனியார்மயக்கொள்ளையால் பறிபோகிறதே என பார்க்கமாட்டார்கள். ஆனால் இத்தகையவர்களைக் கொண்டுதான் இன்றைக்கு டிவி விவாதங்கள், பத்திரிக்கை செய்திகள் என்று போய்க்கொண்டிருக்கின்றன.

மறுபுறத்திலோ மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு எதிர்கொள்ளும் நிச்சயமின்மை என்பது அவ்வளவு நிச்சயமான ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு பல்கலைக்கழக உறுப்புகளும் மாணவர்களும் இணக்கம் காணமுடியாதவர்களாக இருக்கின்றனர். மாணவர்களின் சொந்த அனுபவங்களும் படிப்பினைகளும் ஆளும் வர்க்க கட்டமைப்பு நெருக்கடியை தெளிவாக எடுத்துக்காட்டிவிட்டன. இதன் தொடர்ச்சியாகவே, மாணவர்களால் உழைக்கும் மக்களின் போராட்டங்களோடு தங்களை எளிதில் இணைத்துக்கொள்ளவும் முடிகிறது.

இதற்கு எதிரான ஆளும் வர்க்க மரணபீதியே வழிகாட்டுநெறிமுறைகள். இந்தவகையில் மாணவச் சமுதாயம் ஆள அருகதையற்ற அரசுகட்டமைப்பு நெருக்கடியை முச்சந்திக்கு கொண்டு வந்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?

– இளங்கோ

அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள் ! – சிறு வெளியீடு

2

அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்! – சிறு வெளியீடு

adv_stuggle_book”நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!”
-புதிய ஜனநாயகம் அக்டோபர் இதழில் தோழர் மருதையன் எழுதிய கட்டுரை

  • “ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை, போராட்டம் தேவையா?”
  • ”எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்கு தானே சொன்னார்? தீர்ப்பின் நோக்கத்தை பார்க்கவேண்டாமா?”
  • ”நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா?”

– இப்படி கேள்விகளை முன்வைப்பவர்களுக்கும், வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்கும் பதில்கள்!

பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு…. பிரசுரம்!

”மதுரை வழக்கறிஞர்களைக் காப்போம்!
நீதித்துறை ஊழலை ஒழிப்போம்!” – கட்டுரை!

”வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன?” – தேதி வாரியாக நடைபெற்ற நிகழ்வுகள்!

படியுங்கள்! மக்கள் மத்தியிலும், சக வழக்கறிஞர்கள் மத்தியிலும் பரப்புங்கள்!
நீதித்துறை ஊழலை ஒழிப்போம்!

விலை : ரூ 20
பக்கங்கள் : 40

வெளியீடு :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு
98428 12062

*****

வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்!

கேள்வி : ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை,போராட்டம் தேவையா?

adv_struggle1தீர்ப்புதான் பிரச்சினையே ஒழிய வழக்கறிஞர்களின் போராட்டம் அல்ல. கட்டாய ஹெல்மெட் தீர்ப்பு என்பது மக்களுக்குப் பெரும் தொந்தரவு தருவதாக இருந்த போதிலும், நீதிபதி மக்கள் நலனில் அக்கறையுடனும் கண்டிப்புடனும் நடந்து கொண்டிருப்பதாகப் பாராட்டப்படுகிறார். அதே நேரத்தில் இதனை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர்களும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாகத்தான் போராடினார்கள். அவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்தப் போராட்டத்தினால் அவர்களுக்குத் தனிப்பட்ட ஆதாயமும் இல்லை. பிரச்சினையை உருவாக்கியது தீர்ப்பு – அதன் எதிர்வினைதான் போராட்டம்.

தலைக்கவசம் அணியத் தவறினால் முதல் முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 300 ரூபாயும், அபராதம் என்று கூறுகிறது தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம். சிக்னலை மதிக்காமல் வண்டி ஓட்டுவது போன்ற விபத்தை தோற்றுவிக்கும் தவறுகளுக்குக் கூட இதே அளவு அபராதம் அந்த சட்டத்தில் இடமில்லை. நீதிமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை.

ஒப்பீட்டளவில் பார்த்தால் சிக்னலை மீறுவதும், கைபேசியில் பேசியபடி வண்டி ஓட்டுவதும் மற்றவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றங்கள். தலைக்கவசம் அணியாமலிருப்பதோ சம்மந்தப்பட்ட நபரை மட்டுமே பாதிக்கின்ற தவறு. இதைப் புரிந்து கொண்டால், இந்த தீர்ப்பு எவ்வளவு அபத்தமானது என்று தெரியும்.

தண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளிகள் சொத்துகளைக் கூடப் பறிமுதல் செய்ய துப்பில்லாத நீதிமன்றம், தலைக்கவசம் வாங்காதவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடுவது சாதாரண தவறல்ல. இது மக்களைக் கிள்ளுக்கீரையாக கருதும் ஆணவமாகும்.

ஒரு வாகனத்தில் செல்லும் கணவன், மadv_struggle2னைவி, பிள்ளை எல்லோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது நீதிபதி கிருபாகரன் அளித்துள்ள தீர்ப்பு. ஜூலை 1 அன்று போதிய தலைக்கவசங்கள் சந்தையில் இல்லை. இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரெங்கும் போலிசு கல்லா கட்டுவதையும் மக்கள் தவிப்பதையும் பார்த்துக் கொதித்துப் போய்தான் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இன்றுவரை, தமிழ்நாட்டில் எங்கேயாவது தீர்ப்பில் கூறியிருப்பது போல, மனைவி குழந்தைகளுடன் எல்லோரும் தலைக்கவசம் அணிந்து செல்வதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இந்த நிமிடம் வரை சிறுவர்களுக்கான ஹெல்மெட்டே சந்தையில் இல்லாத போது, தீர்ப்பை மறுபரிசீலனை செய்திருந்தால் போராட்டமே தேவைப்பட்டிருக்காது. தவறு நீதிமன்றத்துடையதுதானே தவிர வழக்கறிஞர்களுடையது அல்ல.

****

எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார்? தீர்ப்பின்(கட்டாய ஹெல்மட்) நோக்கத்தைப் பார்க்க வேண்டாமா? தீர்வு சரியானதுதானா, நடைமுறை சாத்தியமானதா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா?

“யானை வாங்க காசிருக்கு அங்குசம் வாங்க காசில்லையா” என்று கிண்டலாகக் கேட்கிறார் நீதிபதி. இந்தியாவிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தொழிலாளிகள், சிறு வியாபாரிகளுக்கு ஒரு டி.வி.எஸ் எக்செல் என்பது பிழைப்புக்கான ஆதாரம். நகர்ப்புறத்தில் ஒரு வண்டியில் கணவன் மனைவியுடன் இரண்டு பிள்ளைகள் போகும் காட்சி சகஜமானது. இவர்கள் எல்லோரும் தலைக்கவசம் அணிவது சாத்தியமா?

“விபத்துகளில் தலையில் அடிப்பட்டு மரணம் ஏற்படுவது அதிகமாக இருப்பதால் தலைக்கவசம் அணிய வேண்டும்” என்கிறார் நீதிபதி. “விபத்தில் கை-கால் முறிவதால் அதற்கு கைக்கவசம், கால் கவசம், வாகனப் புகையால் நுரையீரல் நோய் வருவதால் மூக்குக் கவசம்” என்று அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்தால், நீதிபதிகளின் நல்ல நோக்கத்தை யாராவது பாராட்டுவார்களா?

விபத்துகளால் ஏற்படும் மரணம் குறித்து அக்கறைப்படும் நீதிபதி, விபத்துக்கான அடிப்படைக் காரணம் எது என்றல்லவா ஆராய வேண்டும்?

  • சாலைகள் பராமரிப்பே இல்லை. 45% கமிசன் கேட்கும் அதிகாரிகள் படத்தை போட்டு காண்டிராக்டர்கள் தலைமைச் செயலகத்தின் வாசலிலேயே டிஜிட்டல் பானadv_struggle3ர் வைக்கிறார்கள். இது நீதிபதியின் கண்ணுக்குத் தெரியவில்லை.
  • நம் நாட்டு சாலைகளின் தரத்துக்குப் பொருத்தமற்ற, அதிவேக கார்களையும், ரேஸ் பைக்குகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வெறியூட்டுகின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். இது அவருக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை.
  • சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பது டாஸ்மாக் தான் என்பதும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மட் அணியாமலிருப்பது மட்டுமே சாவுக்கு காரணம் என்று கருதுகிறார் நீதிபதி.

இதை அப்படியே சாராய சாவுகளுக்குப் பொருத்திப் பாருங்கள். டாஸ்மாக் கடை அப்படியே இருக்க, சாராயச் சாவை தடுக்கும் பொருட்டு, குடிகாரர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை கல்லீரலை ஸ்கேன் செய்து போலீசிடம் ரசீதைக் காட்ட வேண்டும் என்று கூட நீதியரசர்கள் தீர்ப்பளிப்பார்கள்.

ஹெல்மட் விசயத்தில் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான வன்முறை விசயத்திலும் நீதிபதி கிருபாகரனின் கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. 2013-ல் பெண்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்து உரையாற்றிய இவர், டெல்லி நிர்பயா வல்லுறவு கொலை பற்றி கருத்து கூறியிருக்கிறார். “வல்லுறவுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பிரச்சனை வரும் என் தெரிந்தும் ஏன் அந்தப் பெண் இரவு நேரத்தில் வெளியே போகிறாள்” என்று கேட்டிருக்கிறார். டெல்லி குற்றவாளியின் வழக்கறிஞர், இதே கண்ணோட்டத்தில்தான் பி.பி.சி ஆவணப்படத்தில் கருத்து கூறியிருந்தார்.

29-08-2013 இந்து நாளேட்டில் நீதிபதி கிருபாகரனின் உரையைப் படித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், அவருடைய ஆணாதிக்க மனோபவத்தையும், அரசியல் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கும் சம உரிமையையே அங்கீகரிக்காத அவரது கண்ணோட்டத்தையும் கண்டித்து அவர் மீது உரிய நடவடிக்க எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். “இத்தகைய ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் நீதிபதிகளாக இருந்தால், அவர்களது கருத்துகள் தனிப்பட்ட கருத்துகளாக மட்டும் இருக்காது. அவை அவர்களது தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது” என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

1972-ல் மதுரா என்ற பெண் போலீசு நிலையத்தில் வைத்து வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அந்த பெண் உடலுறவுக்குப் பழகியவள் என்பதால், அது வல்லுறவாக இருக்க முடியாது எந்று தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கண்டனம்தான் வல்லுறவுக் குற்றம் தொடர்பான சட்டத் திருத்துக்கே வழி வகுத்தது.

“சாலையும் டாஸ்மாக்கும் அப்படியே தான் இருக்கும், நீதான் பாதுகப்பாக ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்” என்று கூறும் நீதிபதியின் கண்னோட்டத்துக்கும், ‘ஆண்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், பொம்பிளைதான் பாதுகாப்பாக பர்தா அணிந்து செல்ல வேண்டும்’ என்று கூறும் இசுலாமிய மதவாதிகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? நீதிபதி நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று இதை விட்டுவிடவா முடியும்.

****

நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா?

நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதே தவறான கருத்து. இப்படி ஒரு கருத்தை ஊடகங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் மக்களிடம் பரப்பி விட்டனர். ஊழல் குற்றச்சாட்டு பற்றி கேள்வி கேட்டால், “பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் நான் கருத்து சொல்லக்கூடாது” என்று சமாளிப்பார்கள். தண்டனை விதித்து தீர்ப்பு வந்துவிட்டால் “தீர்ப்பை பற்றி விமர்சிக்க கூடாது. நான் மேல்முறையீடு செய்யப்போகிறேன்” என்பார்கள்.

ஹெல்மெட் பிரச்சினையை விவாதிக்கும் ஊடக அறிவுக்கொழுந்துகளோ, “அதெப்படி வக்கீலாக இருந்துகொண்டு நீங்கள் தீர்ப்பை விமர்சிக்கலாம்” என்று சொல்லி கேட்கிறார்கள். “நாலும் மூணும் எட்டு” என்று குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கும், “பத்து சதவீதம் ஊழல் செய்யலாம்” என்று அவரது தீர்ப்பு வழங்கிய அனுமதியும் விமர்சனத்துக்கு உள்ளாகவில்லையா?

தீர்ப்பை எல்லோரும் விமர்சிக்கலாம். சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள்தான் தீர்ப்பைக் கூர்மையாக விமர்சிக்க முடியும். எனவே அவர்கள்தான் முதலில் விமர்சிக்க வேண்டும்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின் அதன் அமலாக்கத்துக்கு நிர்வாக எந்திரம்தான் பொறுப்பு. ஒவ்வொரு தீர்ப்பும் அமலாகிறதா என்று நீதிமன்றம் கண்காணிப்பதில்லை. ஆனால் ஹெல்மெட் தீர்ப்பின் அமலாக்கத்தை நீதிபதி கண்காணிக்கிறார். எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரம் கொடுக்கிறது போலீசு. ஹெல்மெட் தீர்ப்பைக் கண்காணிக்கும் நீதிமன்றம், சட்ட விரோத டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தான் அளித்த தீர்ப்புகள் அமலாகியிருக்கிறதா என்பதைக் கண்காணித்து அகற்றியிருந்தால், சசிபெருமாள் இறந்திருக்க தேவையில்லையே! இது விமர்சனத்துக்குரியது இல்லையா?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அருந்ததி ராய்க்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்த போது, “இந்த அரசமைப்பில் எஞ்சியிருக்கும் கடைசிப் புனிதப் பசுவான நீதித்துறையின் அச்சுறுத்தலை எதிர்த்து நாம் அனைவரும் பேச வேண்டும். நீதிமன்றத்தை இழிவுபடுத்திய குற்றத்துக்காக எல்லோரையும் சிறைக்கு அனுப்பட்டும்” என்று நீதிமன்றத்தை சாடினார் மறைந்த அவுட்லுக் பத்திரிக்கை ஆசிரியர் வினோத் மேத்தா.

அதெல்லாம் இருக்கட்டும். இலக்கியமோ, திரைப்படங்களோ விமரிசனத்தை எதிர்கொண்டுதானே வளர்கின்றன். மக்கள் நம்பிக் கொண்டிருந்த சாதி ஆதிக்கம் முதல் புராணக் கதைகள் வரையிலான அனைத்தையும் அம்பேதக்ரும், பெரியாரும் விமரிசனத்துக்கு உள்ளாக்கவில்லையா? அவர்களைத் தாக்கினார்கள். எங்கள் மத உணர்வு புண்படுகிறது என்று வழக்கு தொடுத்தார்கள். இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் அவர்கள் விமரிசித்த காரணத்தினால்தான், அடிமைத்தனத்துக்கு எதிரான விழிப்புணர்வு வந்தது.

adv_struggle5ஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பதன் பொருள் நீதிபதிகளின் கருத்தை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பதாகும். அத்தகைய கண்காணிப்பும் கடுமையான விமரினமும் இல்லாத காரணத்தினால்தான், கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை துணிச்சலாக நீதிபதிகள் வழங்க முடிந்திருக்கிறது. விமர்சனத்தின் மூலம் நீதிபதிகளின் இந்தத் ”துணிச்சலை” நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

****

ஒரு தீர்ப்பு சட்டப்படி தவறு என்றால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதுதானே முறை? தீர்ப்பை மீறி தலைக்கவசம் போடாமல் ஊர்வலம் போவதெல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகாதா?

வழக்கறிஞர்களில் சிலரே கூட இப்படித்தான் கருதுகிறார்கள். இந்த பிரச்சனையை வேறு விதமாக அணுகிப் பார்ப்போம். ஒரு வேளை கட்டாய ஹெல்மெட் என்பதை தமிழக சட்டமன்றம் ஒரு சட்டமாக கொண்டு வந்திருந்தால், அந்த சட்டத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் மக்களும் போராட்டம் நடத்தியிருப்பார்களா இல்லையா? மோடி அரசு கொண்டு வந்த நிலப்பறி(அவசரச்) சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடவில்லையா?

“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள் அதை எதிர்த்து போராடுவது, ஜனநாயகத்தையே அவமதிப்பாகும்” என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது மட்டும் எப்படி அவமதிப்பாக முடியும்?

மகாராட்டிர அரசு, ஜைன பண்டிகை ஒன்றுக்காக நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் எல்லா விதமான அசைவ உணவுக்கும் தடை விதித்தது. கறிக்கடை உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர். தடையை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. ஒருவேளை தடை சரிதான் என்று நீதிமன்றம் சொல்லி இருந்தால்? விரதம் இருக்க வேண்டியது தானா?

சமீபத்தில் நெய்வேலி தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தங்களுடைய வேலைநிறுத்த உரிமையில் அத்துமீறித் தலையிடும் நீதிமன்றத் தீர்ப்பை தொழிற்சங்கங்கள் மதிக்கவில்லை . வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பு என்று நிர்வாகம் கூச்சலிட்டது. தொழிலாளர்கள் அதனைப் பொருட்படுத்தவே இல்லை. மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பது அரசாங்கமாக இருந்தால் என்ன நீதிமன்றமாக இருந்தால் என்ன? இதில் முன் விட்டைக்கும் பின் விட்டைக்கும் என்ன வேறுபாடு?

***

போராட்டம் நடத்தினாலும் அது நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா? வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு நீதிமன்ற அறையில் அமர்வதும் தாழ்வாரத்தில் முழக்கம் போடுவது சரியா?

ஒரு பிரச்சனையின் தீவிரம் என்ன என்பதும், அதற்காகப் போராடுபவர்கள் அதில் கொண்டுள்ள ஈடுபாடும், போராட்டம் நடக்கும் சூழ்நிலையும்தான் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கின்றன.

போலிசை எப்படியாவது தடியடி நடத்த வைக்க வேண்டும் என்றோ துப்பாக்கி சூடு நடத்தி யாரையாவது சாகக்கொடுக்க வேண்டும் என்றோ எண்ணி யாரும் போராடுவதில்லை. தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வழியில் முயற்சிக்கிறார்கள்.

  • பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கி, தடியடிபட்டு சிறை சென்றார்கள். சசிபெருமாள் அமைதி வழியில் தன்னை அழித்துக்கொண்டார்,
  • சமீபத்தில், போலி கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எத்தனை முறை போராடியும் செவி சாய்க்கவே மறுக்கும் விழுப்புரம் கலெக்டரின் அலுவலக வாயிலில் அமர்ந்து எலி மருந்து குடித்தார்கள் மாணவர்கள்.
  • விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு விவாசாயியை பிணம் போல் அலங்கரித்து உட்காரவைத்து கலெக்டருக்குத் தங்கள் நிலையை உணர்த்தினார்கள். விவசாயிகள் தற்கொலை பற்றிக் கவலைப்படாத அரசு அதிகாரிகளுக்கு இந்த அவமதிப்பை பொறுக்க முடியவில்லையாம்.

“கோரிக்கை நியாயம்தான், ஆனால் போராட்ட முறை தவறு” என்று அறிவுரை சொல்பவர்கள், கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய மாற்றுப் போராட்ட முறை என்ன என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். மனநிலை பிறழ்ந்தவர்கள், நோக்கமே இல்லாமல் கரெண்டு கம்பத்தை சுற்றுவது போல, மக்கள் முடிவே இல்லாமல், கலெக்டர் ஆபீசையோ, நீதிமன்றத்தையோ சுற்றிக் கொண்டிருக்க முடியுமா?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடந்து வருகிறது. “இந்தி பேசும் மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கும் போது தமிழ்நாட்டில் தமிழும், கேரளத்தில் மலையாளமும் இன்ன பிற மாநிலங்களில் அவர்களது மொழியும் வழக்காடு மொழியாக ஏன் அங்கீகரிக்கப்படவில்லை” என்ற கேள்விக்கு இதுவரை அரசோ நீதிமன்றமோ யோக்கியமாக எந்தப் பதிலும் கூறவில்லை.

தாய் மொழியில் வழக்காடும் உரிமையை மறுப்பது என்பது மக்களின் வழக்காடும் உரிமையை மறுப்பதாகும். தமிழில் விசாரணை நடக்குமானால், தனது வழக்கில் என்ன நடக்கிறது என்பதைக் தெரிந்து கொள்ள இயலாமல் மக்கள் வாயைப் பிளந்து கொண்டு நிற்கவேண்டிய தேவை இல்லை. கோயிலில் சமஸ்கிருத மந்திரம் போல, கோர்டில் ஆங்கிலம்! இது வக்கீல் தொழிலை உயர்சாதி மேட்டுக்குடி மட்டும் கைப்பற்றி வைத்துக் கொள்வதற்கான தந்திரம்.

உயர்நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தவரை நியமிக்கிறார்கள். பிறகு அவருக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். டீக்கடை வேலைக்கு வரும் பீகார் தொழிலாளி தமிழ் கற்றுக் கொள்ளும்போது நீதிபதி கற்றுக்கொள்ள முடியாதா? நீதிபதிக்காக மக்களா, மக்களுக்கா நீதிபதியா?

ஒரே ஒரு நாள் பத்து பேர் வாயைத் திறக்காமல் நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருந்தால் நீதிமன்றத்தின் மாண்பு போய் விட்டதாக கூறுகிறார்களே, தன்னுடைய வழக்கில் என்ன விவாதிக்கப்படுகிறது என்றே புரியாத நிலையிலும், இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களே மக்கள், அவர்களுக்கு மட்டும் மாண்பு கிடையாதா?

என்ன பொல்லாத மாண்பு? சட்ட மன்றம் நாடாளுமன்றத்துக்கு மாண்பு கிடையாதா? அங்கே தினமும் கூச்சல் போடுகிறார்கள், ஏன் என்று கேட்டால் எங்களை பேச அனுமதிக்கவில்லை, அதனால்தான் முழக்கம் போடுகிறோம் என்று விளக்கம் சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் நடந்ததும் அதுதானே!

நீதிமன்றத்துக்குள் தமிழை விடவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். 16-ம் தேதியன்று அவமதிப்பு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை. வழக்கறிஞர்கள் எதிர்த்து முழக்கம் போட்டார்கள்.

adv_struggle4தமிழையும் வழக்கறிஞர்களையும் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எஃப்-ஐ கொண்டு வருகிறேன் என்கிறார் தலைமை நீதிபதி.

தலைமை நீதிபதியின் அறைக்குள்ளேயே நுழைந்து சத்தம் போட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. சேம்பரில் மது அருந்தும் நீதிபதிகள், ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்யும் நீதிபதிகள், சாதி உணர்வுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், காசு வராத வழக்குகளில் வாய்தா போடும் நீதிபதிகள்-இவர்களையெல்லாம் தடுத்தாட்கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை இவர்களுக்கு உணர்த்தப் போவது யார்?

பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவனிடம் அளந்த கதையாக, நீதிமன்றத்தின் மாண்பைப் பற்றி வழக்கறிஞர்களிடம் கதையளப்பதா?

****

அப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா? ‘ஒன்வேயில் போகலாம். ‘நோ பார்க்கிங்கில் நிறுத்தலாம். ஹெல்மெட் போடாமல் போகலாம். அவுங்க மேல நடவடிக்கை எடுக்க கூடாது அப்படித்தானே?

இது வழக்கறிஞர்களைப் பற்றி ஊடங்களில் வேண்டுமென்றே செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம். மதுரை வக்கீல்கள் தலைக்கவசம் போடாமல் சென்றதை ஒரு போராட்டமாகத்தான செய்தார்கள். ”வக்கீல்கள் ஹெல்மெட் போட வேண்டியதில்லை. நாங்கள் கேட்க மாட்டோம். போராட்டத்தை கைவிடுங்கள்” என்று மதுரை காவல்துறை அதிகாரிகள் கூறினர். “ இது மக்கள் பிரச்சினை என்ற அடிப்படையில்தான் போராடுகிறோமேயன்றி எங்களுக்கு சிறப்பு சலுகை கோருவதற்காக அல்ல” என்று கூறி மதுரை வழக்கறிஞர்கள் இதனை நிராகரித்து விட்டனர். இது நடந்த உண்மை.

“அட்வகேட்” என்று வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அடாவடித்தனம் செய்பவர்களே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறார்கள். அத்தகையோர் எல்லா பிரிவினர் மத்தியிலும்தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்.

adv_struggleஆனால் போராட்டம் வேறு, அதிகார துஷ்பிரயோகம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக்கும் விசமத்தனமான பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்கின்றன. “காவல் துறை, தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, இந்தியன் ஆர்மி” என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு அதிகார வர்க்கத்தினர் அடாவடி செய்வதும், அரசு வாகனங்களை தம் குடும்ப வாகனமாகப் பயன்படுத்துவதும் அன்றாடம் நடக்கும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள்.

உரிமைகளுக்குப் போராடும் வழக்கறிஞர்கள் ஒரு போதும் இத்தகைய முறைகேடுகளிலோ, காலித்தனங்களிலோ ஈடுபடுவதில்லை. உண்மையில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் போலீசுடன் அங்காளி பங்காளியாக இருக்கும் வழக்கறிஞர்கள்தான். அத்தகையவர்களைப் பற்றி போலீசு ஒருபோதும் புகார் சொல்வதில்லை.

அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்!” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து….