Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 577

எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு !

3

லகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.

கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.

செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.

சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.

காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.

வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
அக்டோபர் – 2015

puka6_sex_oct_15_wrapper

இதழில் இடம் பெற்றுள்ள தலைப்புகள்

காதலைத் தீர்மானிப்பது
அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

இந்தியா டுடேயின் செக்ஸ் விற்பனையும்,
தமிழ்க் கற்பின் கூச்சல்களும்!

ஜீன்ஸ் பேண்டும், பாலியல் வன்முறையும்!

பூவரசியின் கொலையும் ‘தற்கொலையும்’!

சினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி?

அஞ்சலி குப்தா: இந்தியா விமானப் படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!

பிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்!

‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்

பேருந்தில் ஒரு மிருகம்!
வேடிக்கை பார்த்த மௌனம்!!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00


_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம் – பாடல்

3

வினவு யூடியூப் வீடியோ

ருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்

(ஊருக்கு ஊரு சாராயம்…)

இட்டிலி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா
பட்ட சோறு அஞ்சு ரூவா, பருப்பு விலை நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீசு லட்ச ரூவா
நீ வாழ வெச்ச தெய்வமுண்ணு கூவலைண்ணா கொன்னுருவா

(ஊருக்கு ஊரு சாராயம்…)

படிக்க வுடாம உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின்சாப்ப கோயிலாண்ட தெறக்கிறான்
மாசம் ஒருநாள்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
இந்த நாசமத்த கடைய மட்டும் மிட்நைட்லதான் சாத்தறான்

(சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான்
ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்)

ஆட்டுக்குட்டி, பேன், மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத்தெருவா கடைய வெச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிகிச்சி
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
இடுப்பு வேட்டியையும் உருவிக்கினு போச்சிடா

(ஊருக்கு ஊரு சாராயம்..)

தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மட்டையானா கலெக்டருக்கு சபாசுபாரெல்லாம் அ.தி.மு.க குண்டாசு
இதுக்கு ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு

(ஊருக்கு ஊரு சாராயம்..)

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆள் படைக்கு சம்பளம்
போலீசு, குவாலிசு செலவு ஐட்டம் ஏராளம்
அம்மா வந்து போனா அந்தச் செலவே பயங்கரம்
சும்மா கேனத்தனமா மூடச் சொன்னா அவங்க பியூச்சரெல்லாம் என்னாகும்.

வினவு ஃபேஸ்புக் பக்க வீடியோ

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

பாடல் : மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு
வீடியோ தயாரிப்பு : வினவு

மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி

18

மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஒரு முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியில் வசித்து வரும் முகமது அக்லாக் தான் கொல்லப்பட்டவர். கடந்த 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுள்ளது. பின்னர் தடிகளாலும், கற்களாலும் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார். அவரது மகன் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தாத்ரியின் அருகாமை கிராமமான பிசாராவில் ஒரு கோயிலின் மைக்கில் அக்லாக் குடும்பம் மாட்டிறைச்சி வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

முகமது அக்லாக்
கொல்லப்பட்ட முகமது அக்லாக்

அக்லாக்கின் மகள் சஜிதாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது இந்துத்துவ கும்பல். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேரை கைது செய்தது போலீஸ். கொலையாளிகளில் சிலர் கைது செய்யப்பட்ட தகவல் பரவிய உடனே ‘மாட்டிறைச்சி உண்ட’ அக்லாக் குடும்பத்தினருக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி இந்துக்களை சாலை மறியலில் ஈடுபட வைத்திருக்கின்றனர் இந்து மதவெறியர்கள்.

போலீஸ் வந்து விசாரித்த போது அது ஈத் பெருநாளுக்காக வாங்கிய ஆட்டிறைச்சி என்று அக்லாக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்கள் நடவடிக்கையில் ‘நடுநிலையை பேண’ விரும்பிய போலீஸ் அக்லாக் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.

‘தங்கள் வீட்டில் கைப்பற்றியது மாட்டிறைச்சி இல்லை என்றால் தனது தந்தையின் உயிரை திரும்ப பெற்று தருவார்களா?’ என்று கேட்கிறார், சஜிதா.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் பசுவை வைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முன்னெடுக்கும் அரசியல் தொடர் நிகழ்வின் ஒரு பகுதி. 1996-ம் வருடம் இயற்றப்பட்டு கிடப்பில் கிடந்த மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் புத்துயிரூட்டியது மகராஷ்டிர பா.ஜ.க. அரசு. அதனை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி அரசு ஆளும் காஷ்மீரிலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டதை எதிர்த்து அந்த மாநில மக்கள் செப்டம்பர் 25-ம் தேதி பக்ரீத் தொழுகை முடிந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்லாக்கின் உறவினர்கள்
அக்லாக்கின் உறவினர்கள்

‘மாட்டிறைச்சிக்கு தானே தடை; நாம் தான் அதனை உண்பதில்லையே’ என்று இருந்து விடலாமா என்றால் அதற்கும் சோதனையை ஏற்படுத்தியது மகராஷ்டிரா அரசு. ஜைனர்களின் மதவிழா ஒன்றை காரணம் காட்டி செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை சிக்கன், மட்டனுக்கு தடை விதித்தது மகராஷ்டிர பா.ஜ.க அரசு.

உலகமே தின்னும் மாட்டிறைச்சியை கொலைக்கான தண்டனையாக வைத்திருப்பது மனுநீதியின் பிறப்பிடமான இந்தியாவில் மட்டும்தான். பல்வேறு நாடுகளில் விபத்துக்களால், போர்களால், குடும்ப வன்முறைகளால் மக்கள் இறக்கின்றனர். மதவெறியாலும் கூட இறக்கின்றனர். ஆனால் ஒரு உணவுப் பொருளால் கொல்லப்படும் இந்துமதவெறிக்கு இணை எதுவுமில்லை. இதைவிட காட்டுமிராண்டித்தனமும், அநாகரிகமும் எங்காவது உள்ளதா? இல்லை அசைவ உணவு உண்போருக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வெளிப்படையாக பலகை போடும் அசிங்கம்தான் இந்தியா அன்றி எங்கேயாவது கேள்விப்பட முடியுமா?

வேண்டாம் வம்பு என்று ஒதுங்கி செல்ல நினைத்தாலும் கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துமதவெறியால் பாதிக்கப்பட்டு வருகிறது. ‘அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை’ என்ற ‘நற்சான்றிதழுடன்’ அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது. இந்த கையறு நிலை உங்களை உறுத்தவில்லை என்றால் பார்ப்பன இந்துமதவெறியின் பலிபீடத்தில் நமது அரசியல், பண்பாட்டு உரிமைகளை நாம் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும்.

– சம்புகன்

பி.பி.சி செய்தி

நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?

1

நீதிபதிகளுக்குச் சளி பிடித்தால், பார் கவுன்சில் தும்முவது ஏன்?

மது நண்பர்கள் வாஞ்சிநாதன், திருநாவுக்கரசு, சி.எம்.ஆறுமுகம் மற்றும் 11 சக வழக்கறிஞர்களை, எந்த விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் பார் கவுன்சில் ஆப் இந்தியா தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது.

உயர்நீதிமன்ற வழக்குரைஞர் லஜபதிராய்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர் லஜபதிராய்

இவ்வாறு தற்காலிக நீக்கம் செய்வதற்கான அதிகாரத்தை வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவுகள் 35 மற்றும் 36 ஆகியவை, பார் கவுன்சிலுக்கு வழங்கவில்லை என்பதை சட்டம் குறித்த ஆரம்ப அறிவு கொண்ட எந்த ஒரு நபராலும் புரிந்து கொள்ள முடியும்.

நமது நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாகப் போராடியவர்கள். அவர்களுடன் நாம் கரம் கோர்த்து நிற்கிறோம். அவர்கள் நமது அரசமைப்பு கூறும் விழுமியங்களை வேறு யாரை விடவும் அதிகமாகப் பாதுகாத்து நின்றவர்கள். அவர்களுக்கு எதிரான பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை நெறியற்றது, சட்டவிரோதமானது.

கருத்துரிமை அழிக்கப்பட்டதென்றால், அரசமைப்புச் சட்டமே அழிக்கப்பட்டுவிட்டதாகப் பொருள் என்றார் டாக்டர் அம்பேத்கர். உயர் நீதிமன்றங்களின் மாட்சிமை தங்கிய நீதியரசர்கள் கருத்துரிமையை நசுக்கக்கூடாது. அது நீதித்துறை பாசிசம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஜெர்மனியில் அதுதான் நடந்தது. இவர்கள் அரசமைப்பு குறித்து கொண்டிருக்கும் புரிதலின்மையையே இது காட்டுகிறது.

உயர்நீதிமன்றத்தின் ஒவ்வொரு அறையிலும் காந்தியின் படம் பெருமையுடன் தொங்கவிடப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்க டர்பன் நீதிமன்றத்தின் நீதிபதி, காந்தியிடம் அவரது தலைப்பாகையை அகற்றுமாறு கூறியபோது காந்தி அகற்ற மறுத்தாரே, அது நீதிமன்றத்தில் அவர் நிகழ்த்திய கலமில்லையா?

கிறித்தவ முறைப்படி அல்லாத திருமணங்கள் செல்லத்தக்கவையல்ல என்று தென்ஆப்பிரிக்க தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தனது மனைவியுடன் காந்தி கைது ஆனாரே அது ஏன்?

ஒரு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காந்தி கைது ஆனது தவறு என்றால், அவரது படத்தை நீதிமன்ற அறைகளிலிருந்து அகற்றி விடலாமே.

trichy-lawyers-meeting-banners-16ஒரு தீர்ப்பை விமரிசிப்பது என்ன வகையில் சட்ட விரோதமானது?

மதுரா வல்லுறவு வழக்கில் மாட்சிமை தங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதும் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்படவில்லையா?

வல்லுறவு தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு பிரிவு 376A சேர்க்கப்பட்டதே அந்த விமரிசனத்தின் விளைவுதான் என்பது உண்மையில்லையா?

திரு.ஏ.கே ராமசாமிக்கும், தர்மராஜுக்கும் எதிராக எதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

பகத் சிங் செய்த தவறென்ன? தமிழகத்தின் நீதிமன்றங்களில் தாய்மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற அறைக்குள்ளே மவுனமான முறையில் கோரி நின்றது பாவச்செயலா?

நீதிமன்றத்தின் மாண்பை நாசமாக்கியவர்கள் யார்? வழக்குரைஞர்களா அல்லது சக நீதிபதியை அவரது அறைக்குள்ளே ஆபாசமாக வசை பாடிய இன்னொரு உயர்நீதிமன்ற நீதிபதியா?

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்வதையொட்டி அவருக்கு சென்னையில் நடைபெற்ற பிரிவுபசார விழாவில் அவர் கண்ணீர் விட்டு அழவில்லையா? அப்போதெல்லாம் தலைமை நீதிபதி வாய் திறக்கவில்லையே ஏன்?

வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த அவதூறுகள் அவசியமற்றவை. வெறு எந்த நிறுவனத்தைக் காட்டிலும் அரசியல் நிர்ணயச் சட்டத்தைக் காத்து நின்றவர்கள் வழக்கறிஞர்கள்தான்.

அனைத்திந்திய பார் கவுன்சில் சட்ட விரோதமான தற்காலிக நீக்கங்களில் அவசரம் அவசரமாக ஏன் ஈடுபடுகிறது?

நீதிபதிகளுக்குச் சளி பிடித்துக் கொண்டால், அனைத்திந்திய பார் கவுன்சில் எதற்காகத் தும்முகிறது?

–    மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு.லஜபதி ராய் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம்.

poster_judges_corruptionதகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

அதிகாரிகள் என்ன ஆண்டைகளா ? – வேதாரண்யம் மக்கள் போராட்டம்

1

அதிகாரிகள் என்ன ஆண்டைகளா? உழைக்கும் மக்கள் அடிமைகளா?- வேதாரண்யம் மக்கள் போராட்டம்

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்வேதாரண்யம் வட்டம் அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தல் நடைபெறும் முறைகேடுகள், அதிகாரிகள் மக்களை அடிமைகள் போல் நடத்துவது, 70 நாட்கள்தான் வேலை தர முடியும், மீதி 30 நாட்களை கக்கூசுக் கட்டினால்தான் பார்க்க முடியும் என மிரட்டுவது, நூறு நாள் வேலை அட்டையை முகத்தில் தூக்கி வீசுவது என பல்வேறு பிரச்சனைகளால் குமுறிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டுக்கட்சிகளிடம் முறையிட்டும் பயனில்லாத நிலையில் மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களிடம் முறையிட்டனர்.

தோழர்கள் பகுதி மக்களைச் சந்தித்து, “இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண போராட்டம் ஒன்றுதான் வழி” என்பதைக் கூறி பகுதி மக்களை ஓரிடத்தில் கூடச் செய்து போராட்டத்தை எப்படி நடத்துவது என்பதை விளக்கிப் பேசி மக்களைத் அணிதிரட்டினர்

இதனை அறிந்த அதிகாரிகள் கீழ்நிலை ஊழியர்கள் மூலம் மக்களை பயமுறுத்தும் வேலைகளில் ஈடுபட்டனர். தோழர்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் தொடர் பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டினர்.

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்திட்டமிட்டபடி 28-09-2010 அன்று காலை போராட்டத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது சில பேர் நூறு நாள் வேலைக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் வந்தது. உடனே போராட்டத்திற்கு வந்திருந்தவர்களும் தோழர்களும் வேலை நடைபெறும் இடத்திற்குச் சென்று வேலைக்குச் சென்றவர்களிடம் பேசி அவர்களையும் அழைத்து வந்தனர்.

நூறு நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டிக்கும் விதத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை பாடைகட்டி தூக்கிக்கொண்டு அவர்களது கிராமத்திலிருந்து அண்டர்காடு கிராமப் பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையை நோக்கிப் புறப்பட்டனர். வழி நெடுக,

“மக்கள் அதிகாரம் வாழ்க, உழைக்கும் மக்கள் ஒற்றுமை ஓங்குக”
“அதிகாரிகள் என்ன ஆண்டைகளா. உழைக்கும் மக்கள் அடிமைகளா

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்என்று விண்ணதிரும் முழக்கங்களோடு பேருந்து சாலையை வந்தடைந்து 100 நாள் வேலைத்திட்டப் பாடையை சாலையின் குறுக்கே வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மக்களோடு சாலையில் காத்திருந்த ஆதனூர் மற்றும் கோவில்தாவு பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் கலlந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து பேசுகையில், “ஆட்சியாளர்களால் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிலையில் 100 நாள் வேலைதான் மக்களுக்கு உதவியாக இருக்கிறது. அந்த வேலையும் தர முடியாதுன்னா மக்கள் என்ன செய்வார்கள். கக்கூசு கட்டுனாத்தான் 100 நாள் வேலை என்பதும், சரியான நேரத்திற்கு வரலைன்னா கார்ட மூஞ்சில தூக்கி வீசுவதும் மக்களை அடிமைகளாக அதிகாரிகள் நடத்துகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அதிகாரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்த காவல் துறையினர், “அனுமதி வாங்காமல் எப்படி சாலை மறியலில் ஈடுபடலாம்” என்று தோழர்களிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தோழர்கள், “எதுக்கு அனுமதி வாங்கணும். அனுமதி வாங்கியெல்லாம் போராட்டம் நடத்த முடியாது. வேண்டுமானால் கைது பண்ணிக்கொள்ளுங்கள்” என்று சொன்னதும் காவல் துறையினர் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

காவல்துறையினரைக் கண்டவுடன் மக்கள் ஓடிவிடுவார்கள் என நினைத்த போலீசின் எண்ணத்தில் மண் விழுந்த மாதிரி இருந்தது மக்களின் உறுதியான போராட்டம். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மக்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்கள். அதிகாரிகளால் பதில் எதுவும் சொல்ல முடியாமல் நமது தோழர்களிடம் பிரதிநிதியாய் “ஒருத்தர் பேசுங்க” என்று கெஞ்சினார்கள்

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்தோழர்களை தனியாக அழைத்துப் பேச அதிகாரிகள் முயற்சித்த போது தோழர்கள் அதற்கு இடம் கொடுக்காமல், “இது மக்கள் பிரச்சினை மக்கள் மத்தியில்தான் பேச வேண்டும்” என்றதும் வேறு வழி இல்லாமல் மக்கள் மத்தியில் பேசிய வட்டாட்சியர், “நீங்க எப்படி அனுமதி வாங்காம சாலை மறியல் செய்யலாம். இது சட்டத்தை மீறுகிற செயல்” என மக்களை பயமுறுத்தும் விதமாக பேசத் தொடங்கியதும் தோழர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக, “மக்களுக்கு 100 நாள் வேலை கொடுக்கணும். ரூபாய் 183 சம்பளம் கொடுக்கணும் எனச் சட்டம் சொல்லுது. ஆனால் நீங்க 100 நாள் வேலையும் தராம ரூபாய் 183 சம்பளமும் கொடுக்காம சட்டத்தை மீறுகிறபோது நாங்க சட்டத்தை மீறி சாலை மறியல் செஞ்சா என்ன தப்பு. சட்டத்தை மீறத்தான் செய்வோம். மக்கள் கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்லமாட்டோம். கைது செய்தாலும் தொடர்ந்து போராடுவோம்.” என்று பேசியதும் அதிகாரிகள் வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு வந்தனர்

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்பேச்சு வார்த்தையின் போது அதிகாரிகளிடம்

1. 100 நாள் வேலையை சுழற்சி அடிப்படையில் வழங்க வேண்டும்.

2. நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் ரூபாய் 183-ஐ வழங்கவேண்டும்

3. கழிப்பறை கட்டுபவர்களுக்குத்தான் 100 நாள் வேலை கட்டாதவர்களுக்கு 70 நாள் வேலை என்ற அதிகாரிகளின் மிரட்டலை விலக்கிக் கொள்ள வேண்டும்

4. அரசே இலவசமாக கழிப்பறைக் கட்டி கொடுக்க வேண்டும்

5. 100 நாள் வேலைத் திட்டத்தை பார்வையிடும் அதிகாரிகள் வேலை செய்யும் தொழிலாளர்களை இழிவாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்

6. பகுதி மக்களுக்கு குடிநீர் முறையாக விநியோகம் செய்ய வேண்டும்

என்ற கோரிக்கைகளை முன் வைத்து பேசப்பட்டது.

கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுக்க மறுத்தனர். இதை மக்கள் மத்தியில் தோழர்கள் எடுத்துக் கூறினர்.

வேதாரண்யம் மக்கள் அதிகாரம்“ஆறுமுகக்கட்டளைப் பகுதியில் டாஸ்மாக்கை அகற்றச் சொல்லி போராடினோம். அப்போது அதிகாரிகள் டாஸ்மாக்கை அகற்றுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு பிறகு அகற்றவில்லை. எனவே எங்களது அமைப்பின் சார்பாக மக்களைத் திரட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகுதான் டாஸ்மாக்கை அகற்றினர்.

எழுதிக்கொடுத்ததையே செய்யாத இவர்கள் வாய்மொழியாகச் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். அதிகாரிகள் மோசடி செய்கிறார்கள். போராட்டத்தை தொடரலாமா, வேண்டாமா” என்று கேட்டதும் மக்கள் எல்லோரும் ஒருமித்தக் குரலில் உறுதியோடு, “போராட்டத்தைத் தொடருவோம்” என்றனர்.

மக்களின் உறுதியைக் கண்ட அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாமல், “உங்கள் கோரிக்கையை ஏற்கிறோம்” என்றனர். “மக்கள் மத்தியில் இதை நீங்களே அறிவியுங்கள்” என்றதும் அதிகாரிகள் மக்களிடம் தலை குனிந்து அறிவித்தார்கள்.

“அதிகாரிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை மீண்டும் தொடருவோம்” என்பதை தோழர்கள் விளக்கியதை ஏற்றுக்கொண்ட மக்கள் தோழர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டமானது பகுதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

தகவல்

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

மூடு டாஸ்மாக்கை ! சட்டமன்றம் முற்றுகை – ஆவுடையார் கோவில் ஆர்ப்பாட்டம்

0

மூடு டாஸ்மாக்கை ! மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையால் தடுக்க முடியாது! – மக்கள் அதிகாரம்

1. சென்னை – பேரணி சட்டமன்ற முற்றுகை

29-09-2015 காலை  11 மணி பாரிமுனை பேருந்து நிலையம் அருகில்

தலைமை
தோழர்.அமிர்தா,
தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்

மக்களின் குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூட முடியாது என்று திமிர்த்தனமாக சட்டமன்றத்தில் அறிவித்துள்ள அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து

அருகதை இழந்தது அரசுக்கட்டமைப்பு !
இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம் !

டாஸ்மாக்கை “மூட முடியாதாம் !” சட்ட மன்றத்தில் நத்தம் விஸ்வநாதனின் திமிர்த்தனம் !

அரசு ஆளும் அருகதை இழந்ததற்கு இதுவே உதாரணம் !
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம் !
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம் !

என்ற முழக்கங்களை வலியுறுத்தி 29-09-2015 அன்று காலை 11 மணியளவில் பாரிமுனை பாரிமுனை பேருந்து நிலையம் அருகில் இருந்து  பேரணியாக சென்று  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

தகவல்

தோழர்.அமிர்தா
தலைமைக்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்.

2. ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்

  • குடிபோதையால் கெட்ட குடும்பம் கோடியைத் தாண்டுது! டாஸ்மாக்தான் கொள்கை என அரசு சொல்லுது!
  • கடையை மூடுனு போராடினா போலீசு உதைக்குது! கடைக்குக் கடை காவல் போட்டு கண்காணிக்குது!
  • ஊர்தாலியை அறுத்துத்தான் அரசு கஜானாவை நிரப்பணுமானு கேட்டா கள்ளச்சாராயம் பெருகிடுமே, பழகின குடிகாரனுக்கு பாதிப்பு வருமேன்னு அரசு பாசாங்கு செய்யுது!
  • பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசு செய்யுது! இதைப் பொறுப்போடு செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது!
  • இது உருப்படும் வழியா தெரியலை! வாங்க ஊரோடு சேர்ந்து போராடலாம்!

டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தமிழகத்தை அதிரச் செய்துள்ளன. மாணவர்கள், மக்கள், வழக்குரைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் என அனைதுதப் பிரிவு மக்களும் மூடு டாஸ்மாக்கை என விண்ணதிர முழங்குகின்றனர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கோவை மாணவர்கள், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுக்கடைகளை முற்றுகையிட்டும், மலக்கழிவுகளை வீசியும், மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர். இதன் விளைவாக சென்னை, கோவை, விருத்தாச்சலம், உசிலை போன்ற பகுதிகளில் உள்ள மாணவர்கள், பு.மா.இ.மு தோழர்கள், மக்கள் அதிகார அமைப்பினர் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு தம்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறும்வரை பிணையில் வருவதில்லை என்ற முடிவுசெய்து தங்கள் போராட்டத்தை சிறையிலும் தொடர்ந்தனர். விருத்தாசலத்தில் டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் C. ராஜூ டாஸ்மாக் ஊழியர்களைக் கொலை செய்ய முயன்றதாக இரண்டு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறை சென்ற மது ஒழிப்பு போராளிகளுக்கு நீதிமன்றம் தொடர்ந்து பிணை வழங்க மறுத்தது. வழக்குரைஞர்களின் சட்ட போராட்டத்தால் பிணை வழங்க முன்வந்த நீதிமன்றம் பிணையில் விட விதித்த நிபந்தனைகள் வஞ்சகமானவை. மேலப்பாளையூர் விவசாயிகள் பிணை பெறுவதற்கு ரூபாய் 10,000 டெபாசிட் கட்ட வேண்டும் என்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும், உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 10 ரூபாய்கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறது உச்சநீதிமன்றம். 20 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கிய நிறுவனம் வெறும் 200 கோடி டெபாசிட் செய்துவிட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்கு தோதுவாக தீர்ப்பளிக்கின்றது நீதிமன்றம். ஆனால், சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப்படும் முன்பாகவே அட்வான்சாக 50 ஆயிரம் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகின்றது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய போலீசாமூடு டாஸ்மாக்கைர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனை அ.தி.மு.க குண்டர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியபோது காவல் நிற்கிறார்கள்.

நம்முடைய ஆவுடையார்கோவில் பகுதியில் மூடு டாஸ்மாக்கை என்ற தலைப்பில் ஆகஸ்ட் 31, 2015 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் யார் யார் கலந்து கொள்ளச் செல்கிறார்கள் என மது ஒழிப்புப் போராட்டத்திற்கு ஆதரவாள உள்ளவர்களின் வீடுகளில் சென்று விசாரித்து உளவுத் துறையினர் பீதி ஊட்டினர். ஆனால், பெருமருதூர், கரூர், அடம்பூர் போன்ற பகுதிகளில் டாஸ்மாக் சரக்குகளை ஆவுடையார்கோவில், மீமிசல் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக சரக்குகளை வாங்கி வந்து ஆதிக்க நில பண்ணையார்கள் தங்களது ஊர்களில் தனியாக கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தட்டிக் கேட்க துப்பில்லாத போலீசும், உளவுத் துறையும் சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்களையும், ஆதரவாளர்களையும் உளவுபார்த்து மிரட்டுவதன் மூலம், தாங்கள் மக்கள் விரோதிகள் என்பதையும், கிரிமினல் குற்ற கும்பல்களுக்கு தோளோடு தோள் நிற்பவர்கள் என்பதையும் பறைசாற்றுகின்றார்கள்.

ஆவுடையார்கோவிலில் மூன்று இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில் கீழவீதியில் உள்ள கடை மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குடியிருக்கும் மக்கள் தெருவை விட்டு வெளியில் வர அஞ்சி நடுங்கி, வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை உள்ளது. இதற்கு எதிராக கீழவீதி டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி இப்பகுதி மக்கள் அதிகாரியிடன் பலமுறை மனு கொடுத்தும் அந்த மனுக்கள் கழிப்பறை காகிதமாகக் கிடக்கின்றன. ஆவுடையார்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலேயே டாஸ்மாக் கடை இருப்பதினால், மாணவர்கள் போதைக்கு அடிமை ஆவதும் – மாணவிகள் குடிமகன்களின் கேலி கிண்டலுக்கு ஆளாவதும் தினம், தினம் தொடர்கதையாகி விட்டன.

இது ஒருபுறம் இருக்க ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, மணமேல்குடி, மீமிசல் பகுதிகளுக்கு எந்த ஆற்றுப்பாசன வசதியும் கிடையாது. மழையை நம்பியே விவசாயமும், குடிநீர் ஆதாரமும் உள்ளது. ஆனால், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் புறம்போக்கு நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்து வருகின்றனர். மணல்கொள்ளையர்கள் வெள்ளாற்றில் மணலை வரைமுறையின்றி திருடுவதால் வெள்ளாறே கோரமுகத்துடன் காட்சியளிக்கிறது. இதனைத் தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து அரசின் கல்லாவை நிரப்புவதைப் பற்றி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்.

ஆவுடையார் கோவில் அருகே உள்ள பேயாடிக் கோட்டை கிராமத்தில் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடவும், மண்டகப்படி வேண்டியும் போராடினால் திருவிழாவை தடைசெய்து 144 தடை உத்தரவு போடப்படுகிறது. மக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடினால் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு சாராயம் விற்கப்படுகிறது. மக்கள் உரிமைக்காக போராடினாலோ, சமூதாய சீரழிவுக்கு எதிராக போராடினாலோ அரசு எதிராக வருகிறது. மக்கள்நல அரசு என்ற மாயையை கழற்றிவிட்டு இப்போது போராடும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளிரகள், ஜனநாயக அமைப்பினரை நேரடியாக ஒடுக்கி வருவதன் மூலம் பாசிச அரசு என்பதை அரசு அம்மணமாகவே நிரூபித்து வருகிறது.

அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள். சுதந்திரமான நீதித்துறையிடம் முறையிட்டு நியாயம் பெறலாம் என்றால் அதன் யோக்கியதை படுகேவலமாக உள்ளது. டாஸ்மாக் போராட்டத்திற்கு ஜாமீன் வழங்க மறுக்கும் நீதிமன்றம்தான் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கும், சல்மான்கானுக்கும் உடனே ஜாமீன் வழங்குகிறது. சசிபெருமாள் என்ற காந்தியவாதி சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் போராடினார். உண்ணாமலை என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து என்றுதான் சசிபெருமாளும், அந்த ஊர்மக்களும் செல்போன் டவரில் ஏறி போராடினார்கள். செல்போன் டவரில் ஏறி போராடியபோதுதான் சசிபெருமாள் உயிரிழந்தார். சசிபெருமாளை மரணத்தில் தள்ளியது உயர்நீதிமன்றமும், தமிழகஅரசும்தான் என்பதை யாரும் மறுக்கமுடியுமா?

டாஸ்மாக் சாராயத்தை ஊற்றிக் கொடுத்து மக்களை போதையில் மூழ்கடித்து விடலாம்; போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதல்களை ஏவி போராடும் மக்களை ஒடுக்கி விடலாம்; போதை, போலீசு இரண்டையும் வைத்து தமிழக மக்களை அடக்கி ஆண்டுவிட முடியும் என்ற ஆட்சியாளர்களின் எத்தனிப்புகள் தகர்ந்து வருகின்றன.

தடி அடிபட்டு முகத்தில் இரத்தம் வழிந்த நிலையலும், போலீசை எதிர்த்து நின்ற மாணவர்களையும், கீழே தள்ளி மிதிக்கப்பட்ட பின்னரும் எழுந்து நின்று போலீசுடன் மோதிய மாணவிகளையும், தமிழக மக்கள் பாராட்டுகிறார்கள். மதுப்புட்டிகளைக் காப்பாற்றுவதற்காக மாணவர்களின் மண்டையை உடைத்த போலீசின் மீதும், இந்த அரசின் மீதும் காறி உமிழ்கிறார்கள்.

தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் டாஸ்மாக்கிற்கு எதிராக பொங்கியெழுந்துள்ளார்கள். டாஸ்மாக் கடைகளை நொறுக்கியுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசிக் கொளுத்தியுள்ளார்கள். சாராயப் பெட்டிகளைத் தெருவில் வீசி எறிந்துள்ளார்கள். டாஸ்மாக் கடைகள் மீது சாணியும், மனிதமலமும் வீசியடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சாராய அதிபர்களும், ஆட்சியாளர்களும், போலீசும் இதையெல்லாம் அவமானமாகக் கருதவில்லை. சாராய வியாபாரம் அவர்களுக்கு கோடி,கோடியாகக் கொட்டுகிறது. அவர்களுக்கு எப்படியாவது சாராயாக் கொள்ளையை தொடர்ந்து நடத்த வேண்டும். அதனால் போலீசை ஏவி போராளிகளை கொலை வெறியோடு கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.

ஆவுடையார்கோவில் பகுதியில் நடக்கும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள், மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த ஆவுடையார்கோவில் பகுதி உறுப்பினர்களிடம், “நீங்கள் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். இந்த மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக இருக்க வேண்டாம்” என்ற நயமாகப் பேசியும், மீறி ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை “வீடியோ எடுத்து மேலே அனுப்புவோம்” என மிரட்டியும் வருகின்றனர். ஆனால், மக்கள் அதிகாரம் இளைஞர்கள், “சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை ஏற்றுக் கொண்டால்தான் இந்த அரசு எங்களுக்கு வேலை தரும் என்றால் அந்த மானங்கெட்ட வேலை எங்களுக்கு வேண்டாம்” என்று காறி உமிழ்ந்து சொல்லிவிட்டு சமுதாயத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை மூட மக்களை தமது பிரச்சாரத்தின் மூலம் அணிதிரட்டி வருகின்றனர்.

உளவுத்துறை கூறுவது போல் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமோ, சமூக விரோதமோ அல்ல. அது அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமை. அரசியல் அமைப்புச் சட்டம் ஷரத்து 47-ன்படியும் சாராயம் உட்பட போதை பொருட்களின் விற்பனையை தடை செய்வது மாநில அரசின் கடமை. அரசோ தடை செய்வதற்குப் பதிலாக விற்பனை செய்கிறது. போலீசு அதற்கு காவல் நிற்கிறது. கடைகளில் கண்காணிப்பு கேமரா வைத்தால்கூட மக்கள் பார்வையில் படும்படி, “இங்கு கண்காணிப்பு வீடியோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உளவுத்துறை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தை அனுமதியில்லாமல் வீடியோ எடுப்பேன் என மிரட்டுவது உட்பட அனைத்தும் சட்டவிரோதமானது.

‘டாஸ்மாக் சாராயக் கடையை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்; அண்டை மாநிலங்களில் சாராய ஆறு ஓடும்போது இங்கு மட்டும் சாராயக் கடைகளை மூடுவதால் பயனில்லை; 3500 டாஸ்மாக் பணியாளர்கள் வேலை பறிபோய் விடும்; டாஸ்மாக் சாராய வருமானத்தை நம்பியுள்ள அரசுக்கு அதன் இலவசத் திட்டங்களுக்கு என்ன செய்வது. ஆகவே, மதுவிலக்கு சாத்தியமில்லை. அதுவும் உடனடியாக மூடுவது முடியாது’ என்ற சொத்தை வாதங்களை சாராயக் கொள்ளையர்களின் எடுபிடிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கள்ளச் சாராயத்தின் மட்டுமா சாவுகள்? டாஸ்மாக் சாராயம் நல்ல சாராயமா? கள்ளச் சாராயத்தால் சில இலட்சம் பேருக்கு உடனடி சாவு! டாஸ்மாக் படிப்படியாக குடல் வெந்து, ஈரல் வீங்கி, சர்க்கரை நோய் தாக்கி படிப்படியாக கோடிக்கணக்கான மக்களின் சாவு நிச்சயம் நடக்கின்றது. கஞ்சா விற்பனையும், விபச்சாரமும் கூட ஆங்காங்கே நடக்கின்றன. இவை உலகின் பல நாடுகளில் மொத்த வருவாய் வளர்ச்சித் தொகையில் சேர்க்கப்படுகின்றன. அதே போல் இங்கேயும் கஞ்சா விற்பனையிலும், விபச்சாரத்திலும் வருவாய் வருகிறது என்பதற்காக ஏற்கச் சொல்வார்களா? நியாயவிலை உணவகங்களையும், மருந்தகங்களையும் அதிகமாக திறந்து டாஸ்மாக் ஊழியர்களை பணி அமர்த்தலாமே! சாராய விற்பனையை நம்பிதான் ஜெயலலிதா அரசு நடக்கிறது என்றால் ஜெயலலிதா அரசின் கேடுகெட்ட நிலையைத்தான் அது குறிக்கிறது.

டாஸ்மாக்கினால் குடும்பங்கள் சீரழிகின்றன, பள்ளிப் பிள்ளைகள் அனாதையாகிறார்கள். நல்ல மாணவர்கள் பலர் நாசமாகிறார்கள். ஆகவே, அரசின், போலீசின் அடக்குமுறைகளை முறியடித்து டாஸ்மாக்கை மூடுவோம்.

டாஸ்மாக்கால் நமது வாழ்க்கை பறிபோவதை அரசுக்கு மனுபோட்டோ, அரசிடம் கெஞ்சியோ, நீதிமன்றத்தில் வழக்குபோட்டோ தடுக்க முடியாது. டாஸ்மாக்கால் நமது வாழ்க்கை பறிபோவதற்கு எதிராக நாம்தான் போராட வேண்டும். நமது வயிற்றுப்பசிக்கு நமது கையில் அள்ளி சாப்பிட்டால்தான் பசி அடங்கும். நமது உரிமைக்காக நாமே அதிகாரம் செய்ய வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

டாஸ்மாக்கை மூடு!
மக்கள் அதிகாரத்தை நிறுவு!
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!

ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்

நாள் 29-09-2015 நேரம்  மாலை 04.00 மணி

தலைமை

தோழர் MSK பழனி
மக்கள் அதிகாரம்,
ஆவுடையார்கோவில்

கண்டன உரை;
திரு. ஏம்பல் டாக்டர் M.பழனிவேல்ராஜா, MBBS ஆ.கோவில்

திரு. பூ. ஞானசிவம் ஊராட்சி மன்ற தலைவர், தே.மு.தி,க, மாவட்ட பிரதிநிதி, ஆ.கோவில்.

திரு. தென்றல் M. நீலகண்டன், சமூக ஆர்வலர், ஆ.கோவில்.

திரு. K. சதிஸ்குமார், தி.மு.க. இளைஞரணி ஒன்றிய செயலாளர், ஆ.கோவில்.

திரு. உ. மாரிமுத்து, ஊர் அம்பலம், வடநகர், ஆ.கோவில்.

தோழர். P. கண்ணன், ஒன்றியச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆ.கோவில்.

திரு. P.பாலபூமி, ஒன்றியச் செயலாளர், தே.மு.தி.க. ஆ.கோவில்.

தோழர். மாரிமுத்து, மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

திரு. அருள்மேரி உலகநாதன், சமூக ஆர்வலர், ஆ.கோவில்.

வழக்குரைஞர் தோழர் G.ராமலிங்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், புதுகை,

வழக்குரைஞர் தோழர் SP. லோகநாதன் CPI, அறந்தாங்கி.

வழக்குரைஞர் தோழர் கோ.நவமணி CPM, அறந்தாங்கி.

வழக்குரைஞர் தோழர் L.அலாவுதீன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், அறந்தாங்கி.

தோழர். க. பழனி, மக்கள் அதிகாரம், ஆ.கோவில்.

திரு. ரமேஷ் MBA, DCP மக்கள் அதிகாரம், ஆ.கோவில்.

திரு. கா. சோனமுத்து சமூக ஆர்வலர், களபம்.

கவிஞர் தோழர் கவிகார்த்திக், அறந்தாங்கி.

நிறைவுரை

தோழர். காளியப்பன், மாநில தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்.

நன்றியுரை

தோழர். K. கண்ணன் BBA., மக்கள் அதிகாரம், ஆ.கோவில்.

தகவல்

மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
ஆவுடையார்கோவில் பகுதி
தொடர்புக்கு – 7502607819

பகத்சிங் பார்வை

1

பகத்சிங் பார்வை ( செப்டம்பர் 28 – பகத்சிங் பிறந்தநாள் )

ங்கிருந்தோ.. ஒரு நறுமணம்..
மல்லிகையோ?
தோன்றிய காலந்தொட்டு
தொடர்ந்து பேசியதையே பேசும்
மல்லிகையின் வாசம்
இல்லை அது!

10-bhagat-singhமுல்லையோ?…
பிடிக்குள் அகப்பட்டு
நொடிக்குள் கட்டுப்படும்
அந்தத் தன்மையும்
இல்லை இது…

முடிந்த வரை போராடி
காற்றெதிர் வாதாடி
முகம் வாடிப் போகும்
செம்பருத்தி வாசமும்
இல்லை அது..

கண்கவர் சாமந்தியோ..
கர்வமுள்ள ரோஜாவோ
மண்கவர் வேப்பம் பூவோ
மலைச்சரிவின் வேங்கையோ
கொன்றையோ
குவளையோ…
இல்லை .. இல்லை…

bhagath-singh-widgetஎந்தப் பூவிலும் அது இல்லை…
மனித உணர்ச்சியை
சக மனிதனுக்காக
மலர் விக்கும் அது
மாவீரன் பகத்சிங்கின்
புன் சிரிப்பு!

புரட்சி ஒன்றே
நோக்கமென
மலர்ச்சி கொண்ட
அவன் மனதின் பூரிப்பு!

“தற்போதைய அரசாங்கத்தின் சட்டங்கள்
எமது மக்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது,
அறநெறியின் படி எமது மக்களைக் கட்டுப்படுத்தும்
அதிகாரம் அவற்றிற்கு கிடையாது…” என
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
அறிவித்த பகத்சிங் இன்று இருந்தால்
” ஆள அருகதையற்றுப் போனது அரசு கட்டமைப்பு
மக்கள் அதிகாரத்தை கையில் எடு!”
என எழும் மக்களின்
வேட்கை பார்த்து
களத்தில் கை கோர்ப்பான்!

bhagat-singh“மக்களிடமிருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத வரையிலும்
எந்த ஒரு தனிநபருக்கோ, அரசாங்கத்துகோ அதிகாரம் செலுத்த
எந்த உரிமையும் கிடையாது. நீதியை அடிப்படையாகக்
கொண்டோ அல்லது சட்டத்தின் அடிப்படையிலோ இந்த
அரசாங்கம் நிறுவப்பட்டதாக நாங்கள் அங்கிகரிக்காததால்,
அதன் மூலம் அமைக்கப்பட்ட இந்த நீதி மன்றத்தின்
நடவடிக்கைகளிலும் நாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை…
சட்டம் ஒழுங்கு என்பது மனிதர்களுக்குத்தானே ஒழிய, சட்டம்
ஒழுங்கிற்காக மனிதர்கள் கிடையது…” என்று
வெள்ளை நீதிமன்றத்தை
வெளுத்த பகத்சிங்
இன்று இருந்தால்

கொள்ளை நீதிமன்றத்திற்கெதிராக
போராடும் வழக்குரைஞர்களின்
நீதியின் குரலை நிலைநாட்ட
லாகூர் சதி வழக்கோடு
சென்னை சதி வழக்கையும்
சேர்த்தே தோலுரிப்பார்!

bhagat-singh-in-jail“ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பின் பலனை
அனுபவிக்கும் பிரிக்க முடியாத உரிமையைப் பெற்றுள்ளான்…
இந்த அடிப்படை உரிமையை, நீதியை பறிக்கும், மறுக்கம்
அரசாங்கத்தை அழித்தொழிப்பது அம்மக்களின் உரிமை, கடமையாகும்..”
என அறுதியிட்டு கூறிய
பகத்சிங் மட்டும்
இன்று இருந்தால்,

சித்ரவதைக்குள்ளான
வாழ்க்கை நிலையிலும்
முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகப்
போராடும்
சி.ஆர்.ஜ. பம்பு தொழிலாளர்களின்
விடாப்பிடியில்
விசையாய் கலப்பான்!

bhagat-singh-sukhdev-rajguruசக்கையாய் பிழியப்பட்டு
தூக்கி எறியப்படும்
ஐ.டி. தொழிலாளி கையில்
திரும்பி அடித்து
உரிமையை நிலைநாட்டும்
தெம்பாய் பகத்சிங் இருப்பான்!

“மதுவை விலக்க முடியாது
எதிர்ப்பவர்கள்
மது குடிப்போரை திருத்துங்கள்!” என்ற
நத்தம் விசுவநாதனின்
ஆல்கஹால் அடக்குமுறையை பார்த்திருந்தால்
சத்தம் எழுப்பிய குண்டை
பகத்சிங் பாராளுமன்றத்திலா வீசியிருப்பார்?

06-speech-5-bhagat-singh“சுற்றுச்சுழலை மாற்றுவதில் நாம் பெருமளவிற்கு
துணை புரிந்துள்ளோம்! நாம் நமது காலத்தினுடைய
தேவையின் விளைவுகள்..!” என
புரட்சி நடவடிக்கைகளுக்கு
பொருள் சொன்ன பகத்சிங்,
டாஸ்மாக் கடையை
அடித்து நொறுக்கிய
ஆசாத்துகளை பார்த்திருந்தால்
கல்லாய் இறுகியிருப்பான்
அவர்கள் கைகளில்…
மக்களுக்கான பார்வைகளாய்
இளகியிருப்பான்
அவர்கள் கண்களில்!

” தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படும் உண்மையான
தொழிலாளிகளே விழித்தெழுங்கள்! அதிகாரவர்க்கத்திடம்
ஜாக்கிரதையாக இருங்கள், அது உங்களுக்கு ஒருநாளும்
உதவி செய்யாது! இந்த சுதந்தரமற்ற வறுமை நிலைக்கு
மூலகாரணமே இந்த அதிகார வர்க்கமும், முதலாளித்துவமே!
அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்…”
என்று எச்சரித்த
பகத்சிங் இன்று இருந்தால்,
தீயிலிடப்பட்ட சேச சமுத்திரமே
திரும்பவும்
சாதியமைப்பை கட்டிக்காக்கும்
அரசிடமே மனு எதற்கு?
அதிகாரத்தை கையில் எடுத்து
ஆளும் வர்க்க `மனுவை’ நொறுக்கு!
” நிலவும் சமுக அமைப்புக்கு எதிராக
புரட்சி செய்யுங்கள்”! என
விடுதலையின் திசைவழிக்கு
அமைப்பாக்குவார்!

`அனைத்து மொழிகளுக்கும்
தாய் சமஸ்கிருதம்
சமஸ்கிருத வாரம்’ என்று
அனைவரின் தலையிலும் கட்டுவதை
பார்த்தால்,
“அனைத்து சமஸ்கிருத இலக்கியங்களும்
இந்து சமுதாயத்தை புத்தாக்கம் செய்வதில்
தோல்வியடைந்து விட்டன…” என்று
பகத்சிங்
தனது பழையசெருப்பை
கழட்டியிருப்பார்!

பகத்சிங் இன்றிருந்தால்,
” எனக்கும் வாழ்வில் அனுபவிக்க ஆசை உண்டு.
ஆனால் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும்
துறந்துவிடவும் முடியும், அதுதான் உண்மையான தியாகம்!”
என்பதை
சுகதேவுடன் மட்டுமா பகிர்ந்திருப்பார்,
சுயநலச் சிறைகளில்
அடைபட தடுமாறும்
அனைவரிடம் பேசியிருப்பார்.

அக்குவேறு
ஆணிவேராய்
சமூகநிலைமைகளை
அலசிஆராய்ந்துவிட்டு
அதை மாற்றுவதற்கான
நடைமுறைகளுக்கு
சமூகம் தன்னை
கோருவதற்கு மட்டும்
` இக்கு’ வைத்து விட்டு
நகரும் மனங்களுக்கு,
“அனைத்து புரட்சிகர விசயங்கள் குறித்தும்
எவ்வித தங்கு தடையுமின்றி
வாய்நிறையவே பேசுகிறோம். ஆனால் நடை முறையில்
எடுத்த எடுப்பிலேயே அஞ்சி நடுங்கத்தொடங்கி விடுகிறோம்.
இந்தப் போக்கை விட்டொழிக்க வேண்டும்!”
என்று பகத்சிங் சொல்வது
படிக்க மட்டுமா?
பரிசீலிக்க வேண்டாமா?

சிந்திப்பது என் வேலை
செய்வது அவன் வேலை – என்று
பந்தயம் கட்டும்
அறிஞர்களைப் பார்த்தால்
பகத்சிங்
மீண்டும் சொல்லலாம்,
“புரட்சியின் பொறுப்புகளை அடுத்தவர் தோள் மீது
சுமத்துவது முற்றிலும் நேர்மையற்றது!”. என்று!

இருபத்தி நான்கே வயதில்
சிந்தனை, நடைமுறை
இரண்டுக்கும் சாட்சியாய்
வாழ்ந்து காட்டி
கம்யூனிசமே
மனிதகுல விடுதலை என
வழி காட்டி
கழுத்தை நெருக்கும்
தூக்குக் கயிறு
சமீபிக்கும் தருணத்திலும்
“எங்கள் மகத்தான இலட்சியங்களை ஒப்பிடுகையில்
நாங்கள் செய்த எந்த தியாகமும் பெரிதல்ல… புரட்சியின்
வருகைக்காக காத்திருக்கிறோம் !”
என்ற பகத்சிங்கின் பார்வை
நம்மீது விழுகிறது
என்ன செய்யப் போகிறோம்?

– துரை.சண்முகம்

( இரட்டை மேற்கோளிட்டவைகள் தோழர் பகத்சிங்கின் கருத்துக்கள் )

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?

0

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்?

  • தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம்!
  • நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம்!

என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கூட்டத்தில் தெறித்த பொறிகள்!

  • சென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து திருச்சியில் புதிய போராட்டக்குழு உதயம்!
  • 14 வழக்கறிஞர்களின் தற்காலிக நீக்கம், மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செய்யும் உத்தரவு, பல்வேறு சங்கங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து – சென்னை, மதுரை உயர்நீதிமன்றம் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் இணைந்து நாளை 28-09-2015 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு.
  • தமிழக நீதிமன்ற வளாகங்களில் துண்டறிக்கை, சுவரொட்டி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எல்லா கருத்துரிமைகளையும் பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நாளை தமிழக நீதிமன்ற வளாகங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
  • திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்தமிழக பார் கவுன்சிலின் உரிமையை மீறும் வகையில், அகில இந்திய பார் கவுன்சில் 14 வழக்குரைஞர்களை சஸ்பெண்டு செய்து, அவர்கள் மீதான விசாரணையை கர்நாடகாவில் நடத்துவதாக அறிவித்திருக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கு கண்டனம்.
  • அகில இந்திய பார் கவுன்சிலின் இந்த முடிவை தமிழக பார் கவுன்சில் வன்மையாக கண்டித்து நிராகரிக்காமல், மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்ததற்கும் கண்டனம்.
  • சென்னை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய பாதுகப்பு படை வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சிலின் துணைத்தலைவர் பிரபாகரன் அனுப்பியுள்ள புகார் மனு வழக்கறிஞர்களுக்கு இழைத்திருக்கும் துரோகம் என்றும், அவரை அந்தப் பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிவிப்பு.
  • திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்தமிழக பார் கவுன்சில் தலைவரான செல்வம் நீதிபதிகளை விமரிசித்தோ, போலீசை விமரிசித்தோ வழக்கறிஞர்கள் பேசினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று பேசியிருப்பதற்கு கண்டனம். வழக்கறிஞர்களுக்கு எதிராகச் செயல்படும் செல்வத்தை தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்.
  • நீதித்துறை ஊழல் என்பது மறுக்கமுடியாத எதார்த்தமாகிவிட்ட சூழலில், நீதிபதிகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், கண்காணிப்புக்கு உட்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என்பதால், நீதிமன்ற அறையில் மட்டுமல்ல, நீதிபதிகளுடைய அறைகளிலும், அவர்களுடைய வீட்டுக்கு வெளியிலும் கண்காணிப்பு காமெரா பொருத்தப்பட வேண்டும். உயர்நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.
  • ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் விசாரணை நடத்தப்படுவதில்லை. ஆனால் நீதிமன்ற ஊழலை அம்பலப்படுத்தியதன் காரணமாக, வேண்டுமென்றே வழக்கறிஞர்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படுவதற்கு கண்டனம்.
  • நீதித்துறை ஊழல், உயர்நீதி மன்றத்தில் தமிழ், வழக்கறிஞர்கள் மக்கள் பிரச்சினைக்காகப் போராடுதல் போன்றவற்றை கடுமையாக வெறுக்கின்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சில பார்ப்பன நீதிபதிகளும் பார்ப்பன வழக்குரைஞர்களும், பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்களுக்கு எதிராக துவேசத்தைப் பரப்புவதற்கு கண்டனம்.

“மதுரை வழக்கறிஞர்களைக் காக்க நீதித்துறை ஊழலை ஒழிக்க திருச்சியில் சபதமேற்போம்!” என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வினியோகித்த துண்டறிக்கை

  • திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்மதுரையில் பதினான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை
  • 6000 வழக்கறிஞர்கள் கொண்ட சங்கக் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவு
  • மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உரிமத்தையே ரத்து செய்வதாக மிரட்டல்
  • சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மத்திய போலீசு படையை கொண்டு வரும் திட்டம்
  • தலைமை நீதிபதி தத்து தமிழக வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுவது
  • அனைத்திந்திய பார் கவுன்சில் நேரடியாக மதுரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பது

இந்த அடக்குமுறைகளுக்கெல்லாம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

தமிழுக்காக வழக்கறிஞர்கள் போராடியதும், 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர்கள் போராடியதும்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் கூறுகிறது.

உண்மையில் 14-ம் தேதி நடந்த தமிழ் போராட்டத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அன்று அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, சஸ்பெண்டு செய்யப்பட்ட 14 பேரில் 3 பேர் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையில் இருந்தார்கள். இன்னும் 3 பேர் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சம்பவம் குறித்து போலீசு புகாரோ, வழக்கோ இல்லை.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்இருந்த போதிலும் இந்த நடவடிக்கை ஏன் என்ற கேள்விக்கு விடை, செப்டம்பர் 10-ம் தேதி மதுரையில் நடத்தப்பட்ட நீதிமன்ற ஊழல் எதிர்ப்பு பேரணிதான். சுமார் 1500 வழக்கறிஞர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்தப் பேரணி பெயர் குறிப்பிட்டு பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது. அந்த குற்றத்துக்காகத்தான் இந்த சஸ்பெண்டு நடவடிக்கை. இதனை வெளியில் சொன்னால் சந்தி சிரித்துப் போகும் என்பதனால்தான், நீதிமன்றத்துக்குள் கலகம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டை போலீசுடன் சேர்ந்து நீதித்துறை ஜோடித்துள்ளது.

நீதிபதிகளின் ஊழல் குறித்து தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தால் அதனை வாங்கிக் கிடப்பில் போட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் ஊழல் தீர்ப்புகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்கு காரணம். கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் கொள்ளையிடப் படுவதற்கு நீதிமன்றம் எப்படி உடந்தையாகவும் கூட்டாளியாகவும் இருந்திருக்கிறது என்பதை மக்களுக்குச் சொன்னோம். இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, மக்களின் சொத்துக்களும், வாழ்வாதாரமும் கொள்ளை போவது பற்றிய பிரச்சினை என்று புரிய வைத்தோம். இதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்குக் காரணம்.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்நீதிபதிகள் சொல்வது போல யாரோ பத்து இருபது வக்கீல்கள் நீதித்துறை ஊழல் பற்றிப் பேசவில்லை. தென் மாவட்டங்கள் அனைத்திலுமிருந்து திரண்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் சங்க நிர்வாகிகளும் இந்த குற்றச்சாட்டை வழி மொழிந்திருக்கிறார்கள். ஏனென்றால் இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பலர் இதுவரை சொல்லத் தயங்கிய உண்மை.

நீதிபதிகளுககு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று யாராலும் மறுக்க முடியவில்லை. அதனால்தான் குற்றம் சாட்டுபவர்களை அவதூறு செய்கிறார்கள். “ஒழுங்காக சட்டம் படிக்காதவர்கள், தொழில் செய்யத் தெரியாதவர்கள், கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகள்” என்று போராடும் வழக்கறிஞர்களைப் பலவாறாகத் தூற்றுகிறார்கள்.

இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் 14 பேரில் ஒருவருக்குக் கூட இவர்கள் கூறும் குற்றச்சாட்டு எதுவும் பொருந்தாது. மாறாக அத்தகைய குற்றப் பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள்தான் போலீசுக்கும் நீதிபதிகளுக்கும் ஊழலின் தரகர்களாக இருக்கிறார்கள். மேல் மட்டத்தில் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தரகர்களாக இருக்கிறார்கள். இத்தகையவர்கள் மீதெல்லாம் தொழில் தருமத்தை மீறியதாக பார் கவுன்சில் எக்காலத்திலும் நடவடிக்கை எடுத்ததில்லை.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்பார் கவுன்சில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதும் இவர்கள் வழக்கறிஞர்களின் வாக்குகளை எப்படி வாங்கினார்கள் என்பதும் நாம் அறியாத ரகசியமல்ல. நேர்மையற்ற முறையில் பதவியைக் கைப்பற்றி, அந்தப் பதவியைத் தமது சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் பிரபாகரன், செல்வம் போன்ற நபர்கள்தான் தொழில் தருமத்தை பற்றி நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.

“நீதித்துறை ஊழலுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்பது மட்டுமல்ல, எந்த சமூக அநீதிக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் போராடக்கூடாது” என்பது இவர்கள் கருத்து. மக்கள் நலனுக்கான பொதுப்பிரச்சினை எதற்காகவும் வழக்கறிஞர்கள் போராடக் கூடாது என்று உபதேசிக்கும் இவர்கள்தான், நீதிமன்றப் புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு, சிவில் சட்ட திருத்தம், மாலிமத் கமிட்டி ரிப்போர்ட், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள். இவையனைத்தும் மக்களின் பிரச்சினைகளேயன்றி, வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினைகள் அல்ல.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்இன்று 14 வழக்கறிஞர்கள் சஸ்பெண்டு செய்யப் பட்டிருப்பதற்கு காரணமான நீதித்துறை ஊழல் பிரச்சினையும் கூட வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினை அல்ல. நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள். கொள்ளை போவதோ பொதுச்சொத்து!

வழக்கறிஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நீதித்துறையும், பார் கவுன்சிலும் எடுத்துள்ள நடவடிக்கைகள், இன்று நமது தன்மானப் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. இனிமேல் வழக்கறிஞர்கள் கையை நீட்டிப் பேசினால், குரலை உயர்த்தினால் காசு வாங்கும் முன்சீப் கூட நம்மைத் தண்டிப்பதாக மிரட்டக்கூடும். இதற்கெல்லாம் உயர்நீதிமன்றம் துணை நிற்கும். நாம் சுதந்திரமாகத் தொழில் செய்யும் உரிமையும் பறிபோகும். வழக்கறிஞர்கள் இனி அடிமைகள் என்ற நிலை உருவாகி நீதித்துறையே ஊழல் நீதிபதிகள்-புரோக்கர்கள் வசம் போகும்.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்இதைத் தடுக்க வேண்டுமானால் நேர்மையாகத் தொழில் செய்யும் வழக்கறிஞர்களாகிய நாம் களத்தில் இறங்க வேண்டும். நீதித்துறை நம்மை மிரட்டுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுடைய பயந்த நிலையைத்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

தலைமை நீதிபதி கவுல் தமிழ்நாட்டிற்கு வரும்போது, “ஆறு மாதத்தில் நீதித்துறையைச் சுத்தம் செய்வேன்” எனச் சொல்லி வந்தாராம். ஆனால், ஊழல் நீதிபதிகளின் காவலனாக அவர் களத்தில் நிற்பதோடு, ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களை மிரட்டவும் கிளம்பியுள்ளார். 5000 வழக்கறிஞர்கள் உள்ள மதுரையை மிரட்டி ஒடுக்கி விட்டால், மற்ற வழக்கறிஞர்கள் அடங்கி விடுவார்கள் என்பதுதான் கவுல் மற்றும் அவரது கூட்டாளிகளின் கருத்து.

ஒட்டு மொத்த தமிழகத்தின் போராட்டக் குரலைப் பிரதிபலிக்கும் மதுரையை நாம் இழக்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 வழக்கறிஞர்களின் பிரச்சனை ஒட்டு மொத்த தமிழக வழக்கறிஞர்களின் பிரச்சனையாகும். இதற்கு முன்பு நமது போராட்டம் சுபாஷன் ரெட்டியை விரட்டியுள்ளது. தமிழக வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்தால் தலைமை நீதிபதி கவுலின் சூழ்ச்சியையும் வெல்ல முடியும்.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை நமது ஊழல் எதிர்ப்புப் போராட்டம் ஆட்டம் காண வைத்திருக்கிறது. பல நேர்மையான நீதிபதிகள் விஷ்ணுப்பிரியாவைப் போலத் தவித்து வருகிறார்கள்.

நீதித்துறை ஊழல் குறித்த உண்மைகளை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதுதான் நீதிபதிகள் நடுங்குவதன் அடிப்படை. இந்த நடவடிக்கைகள் மூலம் நம்மை மிரட்டிப் பணிய வைத்து விட முடியும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடியாது என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்!

  • மதுரை வழக்கறிஞர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டவும் நீதித்துறை ஊழலை ஒழிக்கவும் தமிழகம் தழுவிய போராட்டக்குழு ஒன்றை உருவாக்குவோம்!
  • நீதித்துறை ஊழலுக்கு எதிராகப் போராடி வருகின்ற பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோருடன் ஒன்றிணைப்பை உருவாக்குவோம்!
  • தமிழக உயர்நீதிமன்றத்தை மத்திய போலீசிடம் ஒப்படைக்கும் சதியை முறியடிப்போம்!
  • “நீதித்துறை ஊழல் என்பது வழக்கறிஞர் பிரச்சினையல்ல, அது மக்கள் பிரச்சினை” என்ற உண்மையை கன்னியாகுமரி முதல் சென்னை வரை கொண்டு செல்வோம்!
  • ஊழல் நீதிபதிகளைத் தண்டிக்க புதிய வழிமுறை காண்போம்! “அவமதிப்பு அதிகாரம்” என்ற கொடுங்கோன்மையை அகற்றப் போராடுவோம்!
  • மதுரை வழக்கறிஞர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பார் கவுன்சில் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும் சென்னை செல்வோம்!

வழக்கறிஞர்கள்,
சென்னை உயர்நீதிமன்றம்.
தொடர்புக்கு: 98428 12062

திருச்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்1. நீதிமன்ற கட்டிடங்கள் (வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட) அரசுக்கு சொந்தமானவை. வழக்கறிஞர்களின்றி நீதிபரிபாலனம் செய்ய முடியாது, கூடாது. இரு தரப்பு வழக்கறிஞர்களே, நீதியினை, நீதிபதிகளுக்கு எடுத்தியம்புகின்றனர். அரசுக்கு சொந்தமான நீதிமன்ற கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பில், நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. வழக்கறிஞர்கள் சிலர் குற்றம் சாட்டப்படுவதால், வழக்கறிஞர்கள் சங்கமே நீதித்துறையால் வெளியேற்றப்பட்டு மூடப்படுகிறது, மிரட்டப்படுவது, வேடிக்கையானது, விந்தையானது. நீதித்துறையில் சிலர் ஊழல் புரிந்தால் நாளை அரசே, நீதிமன்றங்களை மூட உத்தரவிடலாமா?

எனவே மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் மூடப்பட்டு, வழக்கறிஞர்கள் (நூலகம்) வெளியேற்றப்பட்டது ஒரு கெட்ட முன்மாதிரியாகும். ஜனநாயக குரல்வளையை நெறிப்பதாகும். எனவே, சென்னை உயர்நீதிமன்றம் தன் உத்தரவினை திரும்பப் பெற இந்த கூட்டம் ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது. சுதந்திரமாக வழக்கறிஞர்களுக்கான சங்க இடத்தில் இயங்கிட வழக்கறிஞர்களுக்கு முழுமையான உரிமையுண்டு. உயர்நீதிமன்றம் எவ்விதத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ செய்வதை தவிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு இடமளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்2. வழக்கறிஞர்கள் தொழிலில், கிரிமினல்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டிற்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பேற்க வேண்டும். வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 24-ஐ பின்பற்றவில்லை. முன்பு கர்நாடக மாநிலத்தில் போலி சட்டக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தற்போது ஆந்திர மாநிலத்தில் போலி சட்டப் பட்டம் பெற்று வழக்கறிஞர்கள் தொழிலில் ஊடுருவியுள்ளனர். கல்லூரி சென்று பட்டம் பயிலாமல், தொலைதூரக் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர்கள் வழக்கறிஞர்களாக, தமிழ்நாடு பார் கவுன்சிலால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த போலி வக்கீல்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலின் சில உறுப்பினர்களின் நிரந்தர வாக்காளர்களாக உள்ளனர். இதனைக் குறித்து C.B.I விசாரணைக்கோரி, இந்தக் கூட்டமைப்பு ஒருமனதாக மத்திய அரசினை வேண்டுகிறது.

3. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்மொழியை அறிவிக்க, உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. 15 வழக்குரைஞர்களின் வழக்கறிஞர்கள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது அகில இந்திய பார் கவுன்சில் தனது அதிகார வரம்பினை (வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 36) மீறும் செயலாகும். அகில இந்திய பார் கவுன்சில் ஒரு மேல்முறையீட்டு அமைப்பு, தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து செயல்பட முடியவில்லையெனில், தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பாளர்களை பொறுப்பிலிருந்து நீக்கி, இடைக்கால குழுவினை நியமிக்க வேண்டும். 15 வழக்குரைஞர்களின் மீதான உத்தரவினை அகில இந்திய பார் கவுன்சில் திரும்பப் பெற வேண்டும்.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்5. உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் குழு (Collegium) மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
பலர் திறமையற்றவர்கள், ஊழல் செய்கிறார்கள்

இவைகள் உண்மையல்ல எனில், ஏன் மத்திய தேசிய நீதிபதிகள் நியமன குழு சட்டம் 2014 (The National Judicial Appointments Commission Act, 2014)–ஐ இயற்றியது.

அக்கால உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிலாகவும், கடவுளர் (Lords) ஆகவும் இருந்தனர். அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217 (1)(b)-ன் படி பாராளுமன்றம் மட்டுமே அவர்களை நீக்க முடியும். ஆனால் தற்போதைய நீதிபதிகள் இவ்வாறு கடவுளர்களாக பணியாற்றுகிறார்களா? நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதா? நிச்சயமாக இல்லை.

எனவே அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217(1)(b), Judges Protection Act 1850 & Judicial Officers Protection Act 1985 ஆகியவற்றை ரத்து செய்ய, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், வேண்டுகோள் விடுக்க வேண்டும் என இந்த தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் மாநாடு ஒருமனதாக தீர்மானிக்கிறது. வேண்டுமென்றே தவறான தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மீது இழப்பீடு கோர மேலை நாடுகள் போன்று சட்டம் இயற்றி வழிவகை செய்ய வேண்டும்.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்6. இந்திய உச்சநீதிமன்றம் 2006-ல் The Police Act 1861 ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்காக இயற்றப்பட்டதை, சுதந்திர இந்தியாவில் இன்றும் அமுலில் இருப்பதை கண்டித்து ஒவ்வொரு மாநிலமும் புதிதாக போலீஸ் சட்டம் இயற்றிட உத்திரவிட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் மாதிரி (வரைவு) சட்டத்தினையும் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு அதன்படி சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அமல்படுத்தவில்லை.

தமிழ்நாடு போலீஸ் சட்டம், வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் மோதலை முடிவுக்கு கொண்டுவர, மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (மாநகர ஆணையர்) கொண்ட குழு அமைக்க வழிவகை செய்கிறது. ஆனால் தமிழ்நாடு சட்டத்தில் மாவட்ட நீதிபதிக்கு பதிலாக மாவட்ட ஆட்சியரை சேர்ந்திருப்பது தவறானது. உரிய மாற்றம் செய்ய வேண்டும். இன்றைய வழக்கறிஞர்கள் போராட்டங்கள் பெரும்பாலானவற்றிற்கு முடிவு காண இயலும். எனவே இந்த தமிழ்நாடு போலீஸ் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு சுதந்திரமும், பொறுப்பும் (Accountability) ஏற்படுத்தும்.

திருச்சி வழக்கறிஞர்கள் கூட்டம்7. முரண்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புகள், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவம் கீழமை நீதிபதிகளுக்கு ஏற்படக்கூடாது. இந்த முரண்பட்ட தீர்ப்புகள் ஊழலுக்கு உறுதுணையாக இருக்கின்றன. எனவே வழக்கறிஞர்களுக்கு போதிக்கும் உயர்நீதிமன்றம், முரண்பட்ட தீர்ப்புகள் (Journals) வெளியாகாமல் ஒரு குழுவினை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தீர்ப்புரைகள் பதிப்பிற்கு வெளியிட வேண்டும்.

8. நீதிமன்றத்தின் மாண்பினையும், (Majesty) வழக்கறிஞர்களின் கண்ணியத்தையும் (Nobility) காப்பாற்ற தமிழ்நாடு வழக்கறிஞர்களின் சங்கமும், வழக்கறிஞர்களும் திருச்சிராப்பள்ளி மாநாட்டில் உறுதி பூணுகிறது.

9. குடும்ப உறுப்பினர்கள் சொத்து விபரங்களை வெளியிடாத நீதிபதிகள், உடனே தங்கள் குடும்ப சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்.

10. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உடனடியாக வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும். உண்மை நிலை அறிய, சக நீதிபதிகளின் ஆலோசனைகளை பெறக்கூடாது.

இத்தீர்மானங்கள் செயல்படுவதை கண்காணித்து இது சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க மாநில அளவில் கமிட்டி (குழு) அமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

மாநிலக்குழுவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகர சங்கத்தின் தலைவர் அல்லது செயலாளர் உறுப்பினர்களாக இருப்பார்கள். திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருவார் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

குடி ஆட்சி காக்கும் தடி ஆட்சி !

0

மிழக அரசின் நிறுவனங்களுள் ஒவ்வொரு ஆண்டும் அசாத்தியமான வளர்ச்சியைச் சாதித்துவரும் ஒரே நிறுவனம் டாஸ்மாக்தான். 2002-03-ம் ஆண்டுகளில் 2,828 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக்கின் வருமானம் 2014-15-ம் ஆண்டுகளில் 26,295 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு 30,000 கோடி ரூபாயை இலக்கு வைத்து டாஸ்மாக் அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர்களும் ‘உழைத்து’ வருவதாகச் செய்திகள் வருகின்றன. தமிழக மக்களில் ஆகப் பெரும்பான்மையினரைக் குடிகாரர்களாக்கி, அந்த எச்சில் காசில் வயிறு வளர்க்கிறது தமிழக அரசு.

குடித்து மட்டையான தந்தை
குடிப்பழக்கத்தின் விபரீதம் : வீட்டுற்குக் கூட்டிப் போகவேண்டிய தந்தை குடிபோதையில் மேட்டூர் பேருந்து நிலையத்திலேயே மயங்கிச் சரிந்துவிட, என்னவென்று புரியாமல் பச்சிளம் குழந்தை முழிக்க, அதனின் அக்க பயத்தில் வீறிட்டு அழும் இக்கொடுமைக்கு இந்த அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.

தமிழகத்தில் 6,835 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக 2013-இல் அறிவித்தது, டாஸ்மாக். மாவட்ட கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளைத் தவிர்த்துவிட்டு, தமிழக அரசே நேரடியாக நடத்தும் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதிதான். இது ‘குடி’ ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

மகசூல் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்டுள்ள ஒரு மாதிரி புள்ளிவிவரத்தில், “தமிழக ஆண்களில் 1 கோடியே 32 இலட்சம் பேர் குடிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுள் 53 சதவீதம் பேர் தினமும் குடிக்கிறார்கள். இப்படி தினமும் குடிப்பவர்களுள் 64 சதவீதம் பேர் தங்கள் மனைவி, குழந்தைகளை அடிக்கிறார்கள்” என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமும் குடிப்பவர்கள் மாதமொன்றுக்கு சராசரியாக 6,552 ரூபாய் குடிக்குச் செலவழிப்பதாகப் அப்புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செலவை மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க குடும்பத்தாலே தாங்க முடியாது எனும்பொழுது, தினக்கூலி குடும்பங்களின் கதி அதோகதிதான். ஒரு தினக்கூலி தொழிலாளிக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக நானூறு ரூபாய் கூலி கிடைக்கலாம். அவருக்கு மாதத்தில் இருபது நாட்கள் வேலை கிடைப்பதே அரிதுதான் என்றாலும், அதன்படி கணக்கிட்டால், அவருக்கு 8,000 ரூபாய் மாத வருமானமாகக் கிடைக்கும். இதில் முக்கால் பங்கைத் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது. இந்த மானக்கேடான கொள்ளையை நிறுத்தக் கூறினால், “இது கொள்ளை இல்லை, கொள்கை” என்று தமிழக அரசும் நீதிமன்றங்களும் எகத்தாளமாக விளக்கமளிக்கின்றன.

தாலியை அறுக்கும் டாஸ்மாக்
தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, சாராய பாட்டில்களைத் தாலிக்கொடி போலத் தொங்கவிட்டு சென்னை – பட்டினப்பாக்கம் பகுதி பெண்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் குடியினால் பெரும் பொருளாதார இழப்பை மட்டும் சந்திக்கவில்லை. கணவனின் குடிப்பழக்கம் அடித்தட்டு வர்க்க குடும்பப் பெண்களின் மீது கூடுதல் உழைப்புச் சுமையை ஏற்றிவைத்திருப்பதோடு, அவர்களின் நிம்மதியையே பறித்துவிட்டிருக்கிறது. அடி, உதை, சந்தேகம் என அப்பெண்கள் சந்திக்கும் வன்முறைக்கும், அவமானத்திற்கும் நரகத்தைக்கூட ஒப்பாகச் சொல்லமுடியாது. சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்கள் இதற்கு வகைமாதிரியாக வாழ்ந்துவருவதை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் “குடி குடியைக் கெடுக்கும்” தொடரில் பதிவு செய்திருக்கிறார், பாரதி தம்பி.

அரியலூருக்கு அருகில் உள்ள சுத்தமல்லி என்ற சிறிய கிராமத்தில் மட்டும் குடிப்பழக்கத்தினால் குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 16. 450 குடும்பங்கள் உள்ள கச்சிராயநத்தம் கிராமத்தில் (கடலூர் மாவட்டம்) இந்த எண்ணிக்கை 105. கள்ளச் சாராய மரணங்களுக்குக் கணக்கு வைத்திருக்கும் அரசு, இந்த ‘நல்ல’ சாராய மரணங்களைத் திட்டமிட்டே கணக்கில் கொண்டுவராமல் புறக்கணிக்கிறது. இந்த அகால மரணங்கள் ஒருபுறமிருக்க, கணவனின் குடிப்பழக்கம் மனைவியைத் தற்கொலை செய்து கொள்ள வைத்திருக்கிறது. கணவனையே கொலை செய்யும் அளவிற்குத் தள்ளியிருக்கிறது. ஒரு சில குடும்பங்களில் கணவனின் குடிப்பழக்கம் மனைவி, குழந்தைகள் என அனைவரையும் தொற்றுவியாதி போல பற்றிக் கொண்டிருக்கிறது. இன்று தமிழகத்துப் பெண்களிடம், குறிப்பாக அடித்தட்டு வர்க்கப் பெண்களிடம் காணப்படும் மிகப் பெரும் அச்சம் என்ன தெரியுமா? “குழந்தைகளை இந்த அரசு எதிர்காலத்தில் குடிக்கு அடிமையாக்கிவிடுமோ?” என்பதுதான்.

விழாக்களின் போதும், எழவின் போதும் ஒதுக்குப்புறமாக நடந்து வந்த குடிப்பழக்கம், இன்று பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தலங்கள், நடுத்தெரு எனப் பொது இடங்களைக்கூட விட்டு வைக்கவில்லை. கூலியோடு குவார்ட்டர் பாட்டிலும் சேர்த்துக் கொடுக்கும் அளவிற்கு இச்சீரழிவு வேர்விட்டு வளர்ந்து நிற்கிறது. ஒரு சிறு குழந்தைக்கு அவனது தாய் மாமனே ஊத்திக் கொடுக்கும் அளவிற்கு மனித புத்தியைப் பேதலிக்கச் செய்துவிட்டது. பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் சீனாவை அடிமைப்படுத்த அபினியைப் பயன்படுத்தியதைப் போல, இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் தமிழக மக்களை அடிமைப்படுத்த மதுப் பழக்கம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பின்னணியிலிருந்துதான் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், முழுமையான மதுவிலக்கு கோரியும் புரட்சிகர, ஜனநாயக இயக்கங்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் போராடுவதையும்; இப்போராட்டங்களில் பெண்கள் முன்நிற்பதையும் பார்க்க வேண்டும். குணமாக்க முடியாத அளவிற்கு சீழ்பிடித்துப் போன உடல் பாகங்களை வெட்டி உயிரைக் காப்பாற்றும் மருத்துவ சிகிச்சை போல, “குடிநாடாக’’ச் சீரழிந்து நிற்கும் தமிழகத்தைக் காக்க முழுமையான மதுவிலக்கு தவிர, வேறெந்த சமரசமும் பயன்படாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

0000

மிழகத்தில் டாஸ்மாக்கை மூடக் கோரும் போராட்டங்கள் இரு வேறு தளங்களில் நடைபெற்று வருகின்றன. சசிபெருமாள் போன்ற தன்னார்வலர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்களைத் திரட்டி அரசிடம் கோரிக்கை வைக்கும் போராட்டங்களை நடத்திவரும் வேளையில், மக்கள் அதிகாரம் என்ற ஜனநாயக அமைப்பு, “ஊற்றிக் கொடுக்கும் அரசிடம் கெஞ்சிப் பலனில்லை; நாமே அதிகாரத்தைக் கையிலெடுத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்ற புதிய திசைவழியில் பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் சசிபெருமாள் மரணமும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தலைமையேற்று நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டமும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எரியும் பிரச்சினையாக்கின. அதுவரையில் இப்பிரச்சினை குறித்துப் பேசாத எதிர்க்கட்சிகளைக்கூடப் பேசும்படி செய்தன.

கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது.
“எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை தேவையில்லை” என ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், அதனை மதிக்காமல் நடத்தப்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் கலிங்கப்பட்டி கிராம மக்கள்.

இந்த இரண்டு தளங்களில் நடந்துவரும் போராட்டங்களையும் குடிகெடுக்கும் ஜெயா அரசு அடக்குமுறைகளின் மூலமே ஒடுக்கத் துணிகிறது. அதிகாரத்தை மக்கள் தமது கையில் எடுத்துக்கொள்ளக் கூறிய மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு. அமைப்புகளை மட்டுமல்ல, சட்டத்திற்குட்பட்டுப் போராடி உயிர்நீத்த சசிபெருமாளையே வன்முறையாளர் எனச் சாடினார், அம்மாவின் அடிமை நத்தம் விசுவநாதன். ‘சசிபெருமாள் காந்தியவாதியே கிடையாது’ என வன்மத்துடன் தலையங்கம் தீட்டியது, அம்மாவின் கூஜா தினமணி நாளேடு. ‘சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள யாருக்கும் அதிகாரம் கிடையாது’ எனப் பொங்கியெழுந்தார்கள், கருத்து கந்தசாமிகள்.

இந்த ஆட்சி அகிம்சை வழியிலும் சட்டப்படியும்தான் நடந்து கொள்கிறதா என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் பள்ளிக்கூடம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகாமையிலிருந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கிட்டதட்ட மூன்று வருடங்களாகப் போராடி வந்தனர். அக்கடையை அங்கிருந்து தூக்குமாறு மதுரை உயர்நீதி மன்றக் கிளை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மக்களின் நியாயமான, சட்டத்திற்குட்பட்ட போராட்டத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஜெயா அரசு அலட்சியப்படுத்தியது. “மாற்று இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்ற ஒரே பொயைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பக் கூறி, போராடிய மக்களை எள்ளி நகையாடியது.

“எங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை தேவையில்லை; அதனை அகற்றுங்கள்” என கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது. அத்தீர்மானத்தை கழிப்பறை காகிதம் போலக் கசக்கி எறிந்தது, ஜெயா அரசு. மக்களின் பெயரால் நடக்கும் ஆட்சியில் மக்கள் உரிமை ஏதும் அற்ற ஏதிலிகளாக நிறுத்தப்பட்டார்கள். மக்களை மதிக்காத இந்த அலட்சியத்தின், திமிரின் எதிர்விளைவாகத்தான் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

அதேபொழுதில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் தலைமையில் திரண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஹாரிங்டன் சாலை டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதும்; மக்கள் அதிகாரம் தலைமையில் விருத்தாசலத்திலும், அதன் அருகிலுள்ள மேலப்பாலையூர் கிராமத்திலும், கோவை சாய்பாபா காலனியிலும் டாஸ்மாக் கடைகள் தாக்கப்பட்டதும் அந்த நேரத்தில் நடந்த உணர்ச்சிவயப்பட்ட போராட்டங்கள் அல்ல. மாறாக, அதிகாரத்தை மக்கள் தமது கையிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசியல் உணர்வால் உந்தப்பட்டு நடந்த போராட்டங்கள் அவை.

சென்னையில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி நடத்திய போராட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அம்மாணவர்கள் மீது தமிழக போலீசு நடத்திய கொடூரத் தாக்குதல் ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சியை நினைவுபடுத்துகிறது. பொதுமக்கள் பார்க்கிறார்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அம்மாணவர்களை லத்தியாலும், இரும்புக் குழாயாலும் தாக்கியது, போலீசு. ஒரு இளம் பெண்ணின் மார்பின் மீது தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது, இன்னொரு போலீசு மிருகம். ஜெயா-மோடி சந்திப்பை விமர்சித்து காங்கிரசு தலைவர் இளங்கோவன் பேசியது ஆபாசமென்றால், அதிகாரத் திமிரெடுத்து ஒரு இளம் பெண்ணை மார்பில் எட்டி உதைப்பதை வன்முறையாக மட்டும் பார்க்க முடியாது.

0000

சசிபெருமாள் குடும்பம் உண்ணாவிரதம் போராட்டம்
“டாஸ்மாக் கடைகளை மூடும் முடிவை அரசு அறிவிக்காமல் சசிபெருமாள் சடலத்தை வாங்கப் போவதில்லை” என்ற அறிவித்து சசிபெருமாள் குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுக்காடு பகுதியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்.

லிங்கப்பட்டி போராட்டத்துக்குத் தலைமையேற்ற வை.கோ. உள்ளிட்டு அப்பகுதி மக்கள் மீதும் கொலைமுயற்சி, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்டு 12 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலப்பாலையூர் போராட்டத்துக்குத் தலைமையேற்றிருந்த மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, அக்கிராம மக்கள் மீதும்; விருத்தாசலம், கோவை சாய்பாபா காலனி போராட்டங்களை நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் மீதும்; சென்னை போராட்டத்தை நடத்திய பு.மா.இ.மு. தோழர்கள், கல்லூரி மாணவர்கள் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்டு 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய வன்முறை, அடக்குமுறைகளின் மூலம் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடித்தது, ஜெயா அரசு. ஆனால், அவர்களின் கனவு குளவிக் கூட்டில் கையை வைத்தவன் கதையாக முடிந்து போனது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., வி.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்களும் மக்கள் அதிகாரம் அமைப்பும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தின. அவ்வமைப்புகள் முன்வைத்த முழக்கங்களை, கோரிக்கைகளைத் தமது சொந்த கோரிக்கைகளாக எடுத்துக் கொண்ட வழக்குரைஞர்கள், பொதுமக்கள், கல்லூரி – பள்ளி மாணவர்கள் எனப் பலதரப்பட்ட பிரிவினரும் நேரடியாகப் போராட்டத்தில் இறங்கி, ஜெயா அரசையும் போலீசையும் பீதி கொள்ள வைத்தனர்.

டாஸ்மாக் கடைகளுக்கும், செல்போன் கோபுரங்களுக்கும் பந்தோபஸ்து போடும் அளவிற்கு ஜெயா அரசு நடுங்கிப் போயிருந்ததைக் கண்டு ஊரே கைகொட்டி சிரித்தது. இந்த பாசிச கோமாளித்தனத்தை நையாண்டி செய்து நூற்றுக்கணக்கான பதிவுகள் முகநூலில் வெளிவந்தன. சாதாரண சுவரொட்டி ஒட்டும் அரசியல் நடவடிக்கைகூட ஜெயா அரசிற்கு கிலியூட்டியது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கரூரைச் சேர்ந்த ஆறு பு.மா.இ.மு. தோழர்களும், சென்னையைச் சேர்ந்த இருவரும் கைது செயப்பட்டனர். கோத்தகிரியில், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

“சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் எமது கல்லூரி மாணவர்களே அல்ல” என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் போலீசின் கையாளாக மாறி பேட்டியளித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி கல்லூரி வளாகத்திற்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி போலீசின் முகத்தில் கரியைப் பூசினர். சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், சென்னையில் உள்ள கந்தசாமி கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி, புதுக் கல்லூரி, தியாகராயர் கல்லூரி; குடந்தை அரசு கல்லூரி, வேதாரண்யம் கலைக் கல்லூரி, திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி, காங்கேயம் கல்லூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், நெல்லை, கோவை, மதுரை, திருச்சி சட்டக் கல்லூரிகள் – இங்கெல்லாம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் டாஸ்மாக்கை மூடக் கோரியும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். நெல்லை இந்து கல்லூரி மாணவர்கள் போலீசின் அச்சுறுத்தலை மட்டுமல்ல, தேர்வுகளையும் புறக்கணித்துவிட்டு போராடினர்.

மூடு டாஸ்மாக்கை - திருச்சி ஆர்ப்பாட்டம்
“மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பால் ஆகஸ்ட் 31 அன்று திருச்சியில் நடத்தப்பட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

மாணவர்கள் நடத்திய இப்போராட்டங்களிலேயே சென்னை-பூவிருந்தவல்லி அண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சென்னை-மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் நடத்திய சாலை மறியல் போராட்டங்கள் முத்தாய்ப்பாக அமைந்ததோடு, ஜெயா அரசு எந்தளவிற்குத் தொடை நடுங்கிப் போயிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டின (பார்க்க பெட்டிச் செய்தி). தருமபுரியிலும் அரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு மேல் திரண்டு பேருந்து நிலைய வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை வழக்குரைஞர்கள் சங்கம் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள்ளேயே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது; மதுரை வழக்குரைஞர்கள் சாலை மறியலை நடத்தினர். கைது செய்யப்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் போலீசு நிலையத்திலும், சிறைச்சாலையிலும் காக்கிச் சட்டை கிரிமினல்களால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து புழல் சிறையின் முன்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் வழக்குரைஞர்களும், புரட்சிகர அமைப்பினரும் பங்கெடுத்துக் கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்ற வழக்கமான போராட்டங்களுக்கு அப்பால் அரசையும் போலீசையும் திகைக்கச் செய்த நூதன போராட்டங்களை உசிலம்பட்டியிலும், ஓசூரிலும், பென்னாகரத்திலும் மக்கள் அதிகாரம் நடத்தியது. அவ்வூர்களில் டாஸ்மாக் கடைகள் மீது ஏவுகணை போல சாணி வீசியெறியப்பட்டு, வியாபாரம் முடக்கப்பட்டது. குறிப்பாக, பென்னாகரத்தில் சாணி, தக்காளி, முட்டை என நடந்த தாக்குதலின் இறுதிக் கட்டமாக மலம் வீசியெறியப்பட்டது. அதனையும் பொறுத்துக்கொண்டு கடமையுணர்வோடு கடையைக் காத்தது, தமிழக போலீசு. இப்போராட்டங்களின்பொழுது உசிலம்பட்டியில் நான்கு பெண் தோழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஓசூரில் ஒரு பெண் தோழர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ஒருவரான தோழர் முருகேசன் போலீசு நிலையத்தில் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்.

கோவை ஆர்ப்பாட்டம்
கோவை சாயிபாபா காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் மீது நடத்தப்பட்ட போலீசின் தாக்குதலைக் கண்டித்து, “ஜெயா அரசை வலுப்படுத்த அனைவரும் மது குடிக்க வாருங்கள்” என்ற நையாண்டி முழக்கத்தை வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த பெண் தோழர்களால் கோவையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரம் நடத்தியபொழுது, அதனைத் தடுக்க முனைந்த போலீசின் அத்துமீறல்களைப் பொதுமக்களே துணிந்து கண்டித்தனர். உளவுப் போலீசின் அச்சுறுத்தலைக்கூடப் பொருட்படுத்தாமல், டாஸ்மாக்கால் பொதுமக்களுக்கு ஏற்படும் சங்கடங்களை எடுத்துப் பேசி, போலீசின் வாயை அடைத்தனர். இதற்கு மறுநாள் அந்தக் கடை மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களால் அடித்து நொறுக்கப்பட, அதில் முன்னணியாக நின்ற 9 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் தோழர்கள் ரகுராம், கிரிஷ், பாபு ஆகிய மூவரும் சிறையில் நிர்வாணச் சோதனையிடப்படுவதை எதிர்த்து நின்றதால், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இப்போராட்டத்தை ஆதரித்தும், போலீசின் வன்முறையைக் கண்டித்தும் கோவை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த பெண் தோழர்களால், குடிகெடுக்கும் ஜெயா அரசைப் பரிகசிக்கும் விதமாக, “மது குடிக்க வாருங்கள், அரசின் கரத்தை வலுப்படுத்துங்கள்” என்ற நையாண்டி முழக்கத்தை முன்வைத்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரம் மற்றும் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அரியலூருக்கு அருகிலுள்ள சுத்தமல்லி கிராமப் பொதுமக்கள், தாமே டாஸ்மாக் கடையை மூடக் கோரி பிரசுரங்களை அச்சடித்து, முற்றுகை போராட்டத்தை நடத்தினர். மதுரை யானைமலை ஒத்தக்கடையில் மக்கள் அதிகாரம், வழக்குரைஞர்கள் சங்கம், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நடத்திய போராட்டத்தின்பொழுது, “போலீசு கைது செய்து வழக்கு போட்டால், அவ்வழக்குகளை நாங்கள் கட்டணம் வாங்காமல் நடத்திக் கொடுப்போம். எனவே, அச்சமின்றிப் போராடுங்கள்” என வழக்குரைஞர்கள் தந்த வாக்குறுதி பொதுமக்களிடம் புதிய உற்சாகத்தை அளித்தது.

இப்பகுதிகள் தவிர, புதுச்சேரியில், விழுப்புரம் சாலமேடு பகுதியில், சென்னை கே.கே. நகரில், நாகர்கோவிலில் – எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளும் மக்கள் அதிகாரமும் இணைந்தும் தனியாகவும் ஆர்ப்பாட்டங்களையும் முற்றுகைப் போராட்டங்களையும் நடத்தின. இப்போராட்டங்களின் முத்தாப்பாக, ஆகஸ்டு 31 அன்று சிறீபெரும்புதூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, தருமபுரி ஆகிய ஐந்து மையங்களில், “மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!!” என்ற முழக்கத்தை முன்வைத்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் திராவிடர் கழகம், தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அனைத்து அருந்ததியர் சங்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், திருச்சி காந்தி மார்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு, பென்னாகரம் வழக்குரைஞர் சங்கம், உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

இன்னொருபுறத்தில் சசிபெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும் சசிபெருமாள் குடும்பத்தினரும் அவரது ஆதரவாளர்களும் சசிபெருமாள் சடலத்தை வாங்க மறுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்ற வகையில் போராட்டங்களை நடத்தினர். சசிபெருமாள் உடலை அரசே அடக்கம் செய்துவிடும் என மிரட்டியது மட்டுமின்றி, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, சசிபெருமாளின் 11 வயது மகள் கவியரசி உள்ளிட்ட 28 பேரைக் கைது செய்து உள்ளே தள்ளியது ஜெயா அரசு.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி இணைந்து 04-08-2015 அன்று முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின. இப்போராட்டத்திற்கு தே.மு.தி.க., காங்கிரசு, இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தி.மு.க ஆகஸ்ட் 10 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பும், மகளிர் அமைப்பும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

மூடு டாஸ்மாக்கை - மதுரை ஆர்ப்பாட்டம்
“மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!!” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பால் ஆகஸ்ட் 31 அன்று மதுரையில் நடத்தப்பட்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வை.கோ., புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரசின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களைச் சந்தித்துத் தமது ஆதரவைத் தெரிவித்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கைகளும் வெளியிட்டனர். அ.தி.மு.க.வுடன் கள்ளக்கூட்டு வைத்துள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும் புழல் சிறைக்கு வந்து ஆஜர் போட்டுவிட்டுப் போனார். தி.மு.க. நடத்திய மதுவுக்கு எதிரான மகளிர் அணி கருத்தரங்கில் மாணவர்களை விடுதலை செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டுக்கட்சிகளின் இந்த ஆதரவும் போராட்டங்களும் டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் கோபம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதன் விளைவாக ஏற்பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறாக, கடந்த ஆகஸ்டு மாதம் நெடுகிலும் குடிகெடுக்கும் ஜெயா அரசிற்கு எதிரான போர்க்களமாக தமிழகம் சிவந்து நின்றது. மக்கள் அதிகாரமும் இன்ன பிறரும் நடத்திய போராட்டங்கள் ஜெயா அரசின் பாசிச திமிரை மட்டுமல்ல, நீதிமன்றங்களின் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திவிட்டன. அரசின் அடக்குமுறைகள், உறுதியான போராட்டங்களை உடைக்க முடியாமல் தோற்றுப் போனதை எடுத்துக் காட்டின.

எனினும், இந்தப் போராட்டச் சூழல் மக்கள் முன் வைக்கும் கேள்வி, டாஸ்மாக்கை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கு எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது – ஓட்டுக்கட்சிகளை நம்புவதா, அரசிடம் மனு கொடுத்துக் காத்திருப்பதா, அல்லது இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மக்கள் அதிகாரம் முன்வைக்கும் அதிகாரத்தைக் கையில் எடுத்து டாஸ்மாக்கை மூடச் சொல்லும் புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா – என்பதுதான்.

இந்திய அரசியல் சட்டத்தின் 47-வது “பிரிவு மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. ஆனால், தமிழக அரசோ சரக்கு விற்பதை அரசின் கொள்கை என்கிறது. எந்தச் சட்டத்தை அரசு பின்பற்ற வேண்டுமோ, அதற்கு எதிராக அரசே திரும்பிவிட்ட சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு நிற்கிறோம். டாஸ்மாக் விவகாரத்தில் மட்டுமின்றி, ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை ஆகியவற்றிலும் மக்கள் நலன், சமூக நலனுக்கு எதிராக அரசு மாறிவிட்டதைத்தான் காண்கிறோம்.

எங்கள் ஆற்று மணலை அள்ளாதே, எனது தெருவில் டாஸ்மாக் கடையை அமைக்காதே எனக் கூறுவதற்கான உரிமை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள இச்சூழலில், அவ்வுரிமையை மீட்டெடுப்பதன் மூலம்தான் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி கொள்ள முடியும். மக்கள் அதிகாரம் இந்தக் கடமையைத்தான் தமிழக மக்கள் முன்வைக்கிறது. இந்தக் கடமைக்குக் குறைவாக ஓட்டுக்கட்சிகளாலும் மற்ற பிற சமூக அமைப்புகளாலும் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகளாலும் முன்வைக்கப்படும் தீர்வுகள் – நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்ற வாக்குறுதிகள்; நீதிமன்றங்களின் மூலம் தீர்வு காண முயலுவது போன்றவை – இவற்றைத் தீர்மானிக்கும் உரிமையை மீண்டும் அரசிடமும் அதிகார வர்க்கத்திடமும் ஒப்படைக்கின்றன. இத்தகைய தீர்வுகள் புண்ணுக்குப் புனுகு தடவும் நிவாரணம் போன்றவை என்பது மட்டுமல்ல, அவை நம்பகத்தன்மை அற்றவையும் ஆகும்.

– திப்பு

துணைவேந்தரின் அடாவடி!

பேராசிரியர் இராமு மணிவண்ணன்
பேராசிரியர் இராமு மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி நடத்திய போராட்டத்தை ஆதரித்து, அவர்களைக் காட்டிக் கொடுக்க மறுத்த காரணத்திற்காக, அத்துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் இராமு மணிவண்ணன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்பதவி நீக்கத்தை நியாயப்படுத்துவதற்கு அவர் மீது பொயான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது, சென்னைப் பல்கலைக்கழகம். அவரை மீண்டும் அப்பதவியில் அமர்த்தக் கோரி போராடிய மாணவர்களுள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அத்துறையின் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சர்வதேச பொது நிர்வாகம் தொடர்பான வகுப்புகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடை நடுங்கிப் போன அரசு!

சென்னை அருகேயுள்ள பூவிருந்தவல்லியில் அமைந்துள்ள அண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த 7.8.2015 அன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தைத் துணிந்து நடத்தினர். பள்ளிச் சிறுவர்கள் என்றுகூடப் பாராமல் அம்மாணவர்களை அடித்துத் துரத்திய போலீசு, எட்டு மாணவர்களைச் சிறை பிடித்துச் சென்றது.

மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகாஷ்.
சாலை மறியல் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தி, பலவந்தமாக அவர்களைக் கைது செய்தபோதிலும் ஆவேசமாக முழக்கமிடும் மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆகாஷ்.

போராட்டம் நடந்த அன்று மாலை 3.30 மணிக்கே பள்ளியை முடிக்குமாறு உத்தரவிட்ட போலீசு, வெளியே வந்த மாணவர்கள் அனைவரையும் வீடியோ பதிவு செய்து பயமுறுத்தியது. மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வருகைப் பதிவேடுகளைப் பிடுங்கிக்கொண்டு சென்று, எந்தெந்த மாணவனெல்லாம் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் கலந்துகொண்டான் எனத் துருவித்துருவி ஆராய்ந்தது.

இதற்கு அப்பால், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை மிரட்டுவதற்காகவே மீட்டிங் நடத்தவும் போலீசே ஏற்பாடு செய்தது. அந்த மீட்டிங்கில் போலீசு உதவி ஆணையர், பகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், மாவட்டக் கல்வி அதிகாரிகள் – என ஒரு பெரும் பட்டாளமே கலந்து கொண்டு, “நான்கு மாணவர்களுக்கு டி.சி. கொடுக்கப் போகிறோம். இனிமே போராடினா எல்லோருக்குமே டி.சி.தான்” எனத் தொடை தட்டினர்.

பூவிருந்தவல்லியைத் தொடர்ந்து சென்னை – மதுரவாயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திலும் தடியடி நடத்திய போலீசு, போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர்களை போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று மிரட்டியது. அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ஆகாஷ் என்ற மாணவன்தான் இப்போராட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டியதை அறிந்துகொண்ட பள்ளி தலைமையாசிரியர், ஆகாஷ் தவிர மற்ற மாணவர்களின் பெற்றோர்களை போலீசு நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களிடம் ஆகாஷை அடையாளங்காட்டி, “உங்க பையன அவனோடு சேர விடக் கூடாது” என மிரட்டியுள்ளார். போலீசின் எடுபிடிகளாகிப் போன அப்பள்ளி ஆசிரியர்கள், “போராட்டம் நடத்தின அத்தனை பேருக்கு டி.சி. கொடுத்துவிடுவோம்” என்றும் உதார் காட்டினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி, மதுரவாயல் எனப் பற்றத் தொடங்கிய பள்ளி மாணவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை செயலர் கண்ணப்பன், “பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதைத் தடுக்கும் பொறுப்பைத் தலைமையாசிரியர்களும், வகுப்பாசிரியர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என எச்சரித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். தலைமையாசிரியர்களின் மீட்டிங், மாணவர்களையும் பெற்றோர்களையும் மிரட்டுவது என்ற இந்த சூரத்தனங்கள் எல்லாம் வெளிப்பார்வைக்கு “டெரர்” ஆகத் தோன்றினாலும், உண்மையில் மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு ஜெயா அரசு தொடைநடுங்கி நிற்பதைத்தான் காட்டுகின்றன.

தமிழக போலீசின் வக்கிரம்!

து விலக்கை அமல்படுத்தவும், சசிபெருமாள் மரணத்திற்கு நீதி விசாரணை கோரியும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான “டிசம்பர் 3 இயக்கம்” கடந்த 04-08-2015 அன்று சென்னை கடற்கரையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். மறுநிமிடமே அவர்களைக் கைது செய்த போலீசு, ராயப்பேட்டையில் அடிப்படை வசதிகளே இல்லாத சத்துணவு கூடத்தில் அடைத்தது. அங்கு கழிப்பிட வசதி, குடிநீர் கேட்டு அவர்கள் போராடவே, இதைவிட வேறு நல்ல இடத்தில் தங்க வைப்பதாகக் கூறி அவர்களை வேனில் ஏற்றிய போலீசார், கொட்டும் மழையில் சேப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழே வாகனத்தை நிறுத்தி, “கிளம்பி போறதா இருந்தா போங்கடா.. இல்லாட்டி இங்கேயே கிடந்து சாவுங்கடா..” என்றுத் திமிராகவும் கேவலமாகவும் திட்டி வக்கிரமான முறையில் அவர்களை நடுத்தெருவில் இறக்கிவிட்டு விட்டு ஓடிவிட்டனர்.

தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழே உண்ணாவிரதமிருந்த டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்து, அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின்

இறக்கிவிடப்பட்ட இடத்திலேயே, கொட்டும் மழையையும் பாராது தமது உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய அவர்கள் அப்போராட்டத்தை 7-ம் தேதிவரையில் நடத்தினர். அதன்பிறகு, ஆக-15 அன்று அரசிடமிருந்து ‘நல்ல செய்தி’ வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்புப் போராட்டமாக தொடர்ந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகவே, மீண்டும் உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கி, அதனை ஆகஸ்ட் 20-ம் தேதிவரை தொடர்ந்தனர்.

அவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தியதோடு, “மத்தவனாலேயே புடுங்க முடியல, நொண்டிப்பய நீ என்னத்த புடுங்கப் போற” என அவர்களின் ஊனத்தைக் குத்திக்காட்டும் வகையில் வக்கிரமாகப் பேசிஇழிவுபடுத்தியது ஜெயா போலீசு.

வென்றது மக்கள் அதிகாரம்!

க்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த ஜூலை மாதம் தொடங்கியே விருத்தாசலம் பகுதியிலுள்ள பவழங்குடி, மருங்கூர், கீரமங்களம், காவனூர், கீரனூர், மேலப்பாலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் “டாஸ்மாக்கை மூடு! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31!!” என்ற பிரச்சார இயக்கத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் விருத்தாசலம் சந்தைக்கடை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அப்பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவந்த பிரச்சார இயக்கத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. குறிப்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டிருந்த மேலப்பாலையூர் பொதுமக்கள், தமது ஊரிலுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடும் போராட்டத்தில் இறங்கத் தயாரானதோடு, அப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் உதவியையும் நாடினர்.

மேலப்பாலையூர்
மேலப்பாலையூரில்

ஆகஸ்டு 4 அன்று காலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு தலைமையில் 100 பெண்கள் உள்ளிட்டு 250 பேர் திரண்டு டாஸ்மாக் கடையை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். கடையின் பாதுகாப்புக்கு இரண்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தபோதும், கடை ஊழியர்கள் பொதுமக்கள் திரண்டு வருவதைப் பார்த்த மாத்திரத்திலேயே கடையைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டனர். கடை பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் டாஸ்மாக் போர்டை அடித்து நொறுக்கி, கடையின் கதவையும் உடைத்தனர். அதன் பின்னர் டி.எஸ்.பி. தலைமையில் வந்த போலீசு படை, ராஜு, ஓய்வுபெற்ற ஆசிரியர் சிறுதொண்ட நாயனார், வெள்ளாறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சமூர்த்தி, கீரனூர் ராஜ வன்னியர், பவழங்குடி தெவக்கண்ணு, மேலப்பாலையூர் நந்தகுமார் மற்றும் 9 பெண்கள் உள்ளிட்டு 23 பேரைக் கைது செய்தது. போலீசு நிலையத்திலும் போராட்டம் தொடரவே, அன்று மாலையே கைது செய்யப்பட்ட பெண்கள் விடுதலை செய்யப்பட்டு, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போராட்டத்தின் முன்னணியாளர்களைச் சிறைச்சாலையில் அடைத்துவிட்ட இறுமாப்பில் மேலப்பாலையூர் டாஸ்மாக் கடையை மறுநாளே திறப்பதற்குத் தந்திரமாக முயன்றது, அதிகார வர்க்கம். பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவே அச்சிறு கிராமத்தில் பெரும் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டது. ஆனாலும், அவ்வூர் மக்கள் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சசிக்குமார் தலைமையில் திரண்டு அதிகார வர்க்கத்தின் முயற்சியை முறியடித்தனர்.

“எங்கள் ஊருக்குக் குடிநீர் வேண்டும், எங்கள் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர் வேண்டும், எங்களுக்கு சுகாதார நிலையம் வேண்டும், குடிகெடுக்கும் டாஸ்மாக் வேண்டாம்” என வட்டாட்சியர் முன்னிலையில் முழக்கமிட்டு, கடையைத் திறக்க மீண்டும் முயற்சித்தால், எங்கள் போராட்டமும் தொடரும் என எச்சரிக்கை செய்தனர். மக்களின் போராட்டத்தால் அன்று மூடப்பட்ட மேலப்பாலையூர் டாஸ்மாக் கடை இன்று வரை திறக்கப்படவில்லை. எத்தகைய அதிகாரம் கொண்ட அரசாக இருந்தாலும், மக்களின் வலிமை, ஒற்றுமை முன் தூசுதான் என்பதை இந்தப் போராட்டம் நிரூபித்திருக்கிறது.

டாஸ்மாக் ஊழியர்களே, உங்களைக் கொல்வது மதுவா, மக்கள் போராட்டமா?

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்திருந்த சூழலில், ஆகஸ்டு 5-ம் தேதியன்று இரவு, சேலம்-வாழப்பாடி அருகே மூடியிருந்த டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, செல்வம் என்ற ஊழியர் இறந்துபோனார். ஆகஸ்டு 12-ம் தேதியன்று சென்னை தியாகராய நகரில் மாலை நேரத்திலேயே சிலர் வீசிய பெட்ரோல் குண்டின் விளைவாக கடை தீப்பற்றி, அதில் இருந்த ஊழியர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்காகப் போராடுகின்ற யாரும் இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

ஊழியரின் மரணத்தால் கோபம் கொண்ட ஊழியர் சங்கத்தினர் வட மாவட்டங்களில் வேலை நிறுத்தம் அறிவித்தார்கள். “இரவு நேரத்தில் கடைக்குள் ஊழியர்கள் படுக்க வேண்டும்” என்று நிர்வாகம் கட்டாயப்படுத்துவதை அவர்கள் எதிர்த்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால், “அமைதி வழியில் போராடவேண்டும்” என்று ஊழியர் சங்கங்கள் போராடும் மக்களுக்கு அறிவுரை கூறினார்கள். அப்புறம் கடை வாசலில் கண்காணிப்பு காமெரா வைக்கவேண்டும், போலீசு பாதுகாப்பு போடவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

சாராய பாட்டில்களைப் பாதுகாக்கும் பொருட்டு எதையெல்லாம் செய்ய அரசு திட்டமிட்டிருந்ததோ அதையே தங்களுடைய உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு நிறைவேற்றித் தருமாறு கோரியிருக்கிறார்கள் ஊழியர்கள். அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் மக்களுக்கு எதிராக அரசுடன் கைகோர்த்து நின்றன.

குடிப்பழக்கத்தினால் மக்கள் சீரழிவது மட்டுமின்றி, தங்கள் ஊழியர்களே சில ஆயிரம் பேர் இறந்திருப்பதால், “டாஸ்மாக்கை மூடு, வேறு வேலைவாப்பு கொடு!” என்று சில மாதங்களுக்கு முன்னர் ஊழியர் சங்கத்தினர் சிலர் கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கை உண்மையாயிருப்பின், இன்று “டாஸ்மாக்கை மூடு!” என்று தமிழகமே குரல் கொடுத்து வரும் சூழலில், மக்களுடன் இணைந்து கொண்டு ஊழியர்களும் போராட்டம் அறிவித்திருக்க வேண்டும்.

ஒரு டாஸ்மாக் ஊழியரது உயிர் பெட்ரோல் குண்டினால் பறிக்கப்பட்டது வருந்தத்தக்கதுதான். ஆனால், ஆண்டுதோறும் ஓராயிரம் ஊழியர்களும், பல்லாயிரம் மக்களும் மதுவினால் மடிகின்றார்களே, அது குறித்த அக்கறை ஊழியர் சங்கங்களுக்கு இருந்தால், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தில் அவர்கள் மக்களுடன் அல்லவா இணைந்து கொள்ள வேண்டும்? நாட்டு நலனுக்கு உட்பட்டதுதானே ஊழியர் நலன்?
_________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
_________________________________

பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு

6

பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு

ரு அசாதாரணமான சூழல் தமிழக நீதித்துறையில் நிலவுகிறது. இதை பேசிச் சரி செய்யும் பொறுப்பில் உள்ள பார் கவுன்சில், அவ்வாறு செய்யாமல் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவது போல வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை என்று நீதிபதிகளின் ஆணையை அமல்படுத்தும் ஊழியர் போல நடந்து கொள்வது சரியா?

மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான ஒரு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பயங்கரவாதக் குற்றம் இழைத்த குற்றவாளியாக இருந்தாலும் சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியே அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் மேற்கூறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் அனைத்து நீதிபதிகளின் கூட்டம் (Full Court Meeting) நடத்தப்பட்டிருக்கிறது. அங்கே இந்த வழக்கு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? இதை விடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பு வேறு உள்ளதா? இந்த முறைகேட்டை பார் கவுன்சில் ஆதரிக்கிறதா?

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதி வழங்கிக் கொண்டிருப்பதாக தத்து, டெல்லியிலிருந்து திடீரென்று அறிவிக்கிறாரே, இப்படி ஒரு சூழல் இருப்பதாக தலைமை நீதிபதி கவுல், இதுநாள்வரை பார் கவுன்சிலுக்கு ஏன் புகார் அனுப்பவில்லை?

உயர் நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் காவல்துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக வழங்கப்பட்டவை. அவற்றை விசாரிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கோ உயர்நீதிமன்றம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. போலீசும் அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதையும், அதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதையும் மிகவும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் நீதியரசர்கள், தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவுடனே அவ்வாறு கூறியவர்களை தண்டிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கை உடனே எடுத்து விசாரிக்கிறார்கள். இது அப்பட்டமான முறைகேடு இல்லையா?

மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரையிலிருந்து வேண்டுமென்றே சென்னைக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு முதல்நாள் அது திரைமறைவு விசாரணை என்று திடீரென்று அறிவிக்கப்பட்டது. பிறகு திடீரென்று அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 16-ம் தேதியன்று சீருடை அணிந்த மற்றும் அணியாத போலீசார் நீதிமன்றத் தாழ்வாரத்தை மறித்துக் கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவருடைய வழக்குரைஞரான திரு.என்.ஜி.ஆர் பிரசாத் உள்ளிட்டோர் இதனைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். வழக்குரைஞரே அனுமதிக்கப்படாமல், குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடத்தப்பட்ட அந்த விசாரணை முறையான விசாரணைதான் என்று பார் கவுன்சில் கருதுகிறதா?

தலைக்கவசத் தீர்ப்பு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக அழைத்து, குற்றம் சாட்டப்பட்ட ஏ.கே.ராமசாமியிடம், 10-ம் தேதியன்று மதுரையில் நடந்த ஊழல் எதிர்ப்பு பேரணி பற்றி நீதிபதிகள் விசாரித்திருக்கிறார்கள். மற்றெல்லா வழக்குரைஞர்களும் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில வழக்குரைஞர்கள் மட்டும் நீதிபதிகளால் உள்ளே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த அவமதிப்பு வழக்கில் இம்பிளீட் செய்யவும், திரு.ஏ.கே.ராமசாமியை விசாரணை செய்யவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். 75 வயது முதியவரான திரு.ராமசாமியை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நிற்க வைத்தே விசாரித்திருக்கிறார்கள். வழக்குரைஞர்களை கிரிமினல்களை விடவும் கீழாக நடத்துகின்ற நீதிபதிகளின் இந்த நடவடிக்கைகள் குறித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன்?

நீதியரசர் கர்ணன், தலைமை நீதிபதிக்கு எதிராக தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையில் அதற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாமல் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தூற்றப்பட்டது ஏன்? உண்மையில் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்க வேண்டியது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தைதான். இது குறித்து பார் கவுன்சில் அக்கறை கொள்ளாதது ஏன்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதி வழங்கிக் கொண்டிருப்பதாக தத்து, டெல்லியிலிருந்து திடீரென்று அறிவிக்கிறாரே, இப்படி ஒரு சூழல் இருப்பதாக தலைமை நீதிபதி கவுல், இதுநாள்வரை பார் கவுன்சிலுக்கு ஏன் புகார் அனுப்பவில்லை? இந்த அபாண்டமான குற்றச்சாட்டு பற்றி பார் கவுன்சிலின் நிலை என்ன?

செப்டம்பர் 14-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தானே முன்வந்து எடுத்துக்கொண்ட ரிட் மனுவில், ஒரு காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ள சில கருத்துகளையே, வழக்குரைஞர்கள் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகச் சித்தரித்துள்ளது. அம்பேத்கர் சிலையின் கீழ் அமர்ந்து அசைவ உணவு சாப்பிடுவது கூட வழக்குரைஞர்களின் குற்றமாக அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு எதிரான சாதிய காழ்ப்புணர்ச்சியும், தீண்டாமை வெறியும் கொண்ட இக்கருத்தைக் கண்டித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மவுனம் காப்பது ஏன்?

தற்போது தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்காக தலைமை நீதிபதியின் அறைக்குள் போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதைப் போல, உதவி ஆணையர் பட்டியலிட்டுள்ள 14 குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குரைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்திருக்கலாமே! அவ்வாறின்றி, ஒரு காவல்துறை உதவி ஆணையரின் கருத்துகளை அவருடைய கீழ்நிலைக் காவலர் வழி மொழிவது போல, உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு வழிமொழிவதும், இதே கண்ணோட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் சென்னை வழக்குரைஞர்களுக்கு எதிராக கருத்துரைக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக பார் கவுன்சிலுக்குத் தெரியவில்லையா?

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சாதி ரீதியாகச் செயல்படுவதாகவும், வளாகத்துக்குள் சாதி ஊர்வலம் போவதாகவும் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய் என்பது பார் கவுன்சிலுக்கு தெரியாதா? உண்மையில் நீதிமன்ற வளாகத்துக்குள் சாதி, மத சார்புகளைக் கொண்டு வருபவர்கள் நீதிபதிகள்தான். கடந்த 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் தூண்டுதலின் பேரில்தான் சில வழக்குரைஞர்கள் சாதி ரீதியாக வந்து கலகம் செய்து மோதலை உருவாக்க முயன்றனர். அவர்களில் சிலர் கத்தியும் வைத்திருந்தனர். சென்னை, மதுரை வழக்குரைஞர்கள் இந்த ஆத்திரமூட்டலுக்கு பலியாகாமல் அமைதி காத்தனர் என்பதே உண்மை.

நீதிபதிகளின் ஊழலை எதிர்த்துப் பேரணி நடத்தியதன் காரணமாக, மதுரை வழக்குரைஞர் சங்கத்தை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப் பட்டிருக்கிறது. தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்துவதுதான் இதற்கு காரணம் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதை எந்தவொரு வழக்குரைஞரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பார் கவுன்சில் இதனை ஏற்றுக் கொள்கிறதா?

நீதித்துறை ஊழல் என்ற பிரச்சினை பார் கவுன்சிலின் அக்கறைக்கு உரியது இல்லையா? கிரானைட், தாதுமணல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், எந்த நீதிபதி வழங்கிய எந்தத் தீர்ப்பு முறைகேடானது என்று வழக்குரைஞர்கள் குறிப்பாக குற்றம் சாட்டி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட முன்னாள் நீதியரசர் சந்துரு, ஒரு நாளேட்டில் கட்டுரையே எழுதியிருக்கிறார். இருந்தும் இது குறித்து ஒரு உள்ளக விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிடவில்லை. இவை குறித்த பார் கவுன்சிலின் கருத்து என்ன?

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு அவர்கள், தற்போதைய தலைமை நீதிபதி தத்துவுக்கு எதிராக ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நேர்மையோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாத அவர், தமிழக வழக்குரைஞர்களின் மாண்பு குறித்து பழித்துப் பேசுவதை பார் கவுன்சில் ஏற்றுக் கொள்கிறதா?

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும் அ.தி.மு.க வழக்குரைஞர்களும் நடத்திய அவமதிப்புகள் எழுதி மாளாதவை. இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமரிசிப்பவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதையும், தலைவர் பதவியைத் தனது தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதையும் கவுன்சில் ஆதரிக்கிறதா?

வழக்குரைஞர்களின் வாக்குகளைப் பெற்று பார் கவுன்சில் பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள். இதன் காரணமாக வழக்குரைஞர்களின் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறும் விசயங்களை அதிகபட்சம் போனால் தவறுகள் என்று மட்டுமே வரையறுக்க முடியும். ஆனால் நீதிபதிகள் செய்து கொண்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம். இன்று வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நீங்கள் கூடியிருக்கிறீர்கள். வழக்குரைஞர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க எப்போதாவது நீங்கள் வழக்குரைஞர்களைக் கூட்டியதுண்டா? பார் கவுன்சில் என்பது வழக்குரைஞர்களின் பிரதிநிதியா, நீதிபதிகளின் டவாலியா? சிந்திப்பீர்.

வழக்குரைஞர்கள்,
சென்னை உயர்நீதிமன்றம்.
கைபேசி எண் – 98428 12062

சென்னை,
காலை 9 மணி, 24-09-2015

நீதிபதிகளின் ஊழல்களும் நீதிமன்ற அவமதிப்பும் – தோழர் வாஞ்சிநாதன் நேர்காணல்

0

நீதிபதிகளின் ஊழலை நிரூபிக்கும் கிரானைட், தாதுமணல் தீர்ப்புகள்

நீதிபதிகளின் ஊழலை எதிர்ப்பது நீதிமன்ற அவமதிப்பா?

  • நீதிபதிகளின் ஊழலை எதிர்க்கும் வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்துகிறார்கள் நீதிபதிகள்.
  • நீதிமன்ற அவமதிப்பு அதிகாரம் என்பது ஊழல் நீதிபதிகளை காப்பாற்றும் கவசம்
  • நீதிபதிகளை மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம், அவர்களுடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்ய போராடுவோம்.

தகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)

0

எம்.பி.பி.எஸ். மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்.டி., எம்.எஸ்.) நுழைவுத் தேர்வுகளில் மோசடிகள் செய்து, இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்த மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளை ஒதுக்கிக் கொடுப்பது வியாபம் ஊழலில் கேந்திரமான புள்ளியாக இருந்திருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மோசடிகள், முன்னாபாய் ஸ்டைல், ஆள்மாறாட்டம், ரயில் இன்ஜின்-பெட்டி முறை, விடைத்தாள்களைத் திருத்துவது – என நான்கு வழிகளில் நடைபெற்றிருப்பதைக் கடந்த இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம்.

யோகேஷ் உப்ரித்
தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் நடத்திய ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, சௌஹான் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்து கோடி ரூபாய் லஞ்சமாக அளிக்கப்பட்டதை வாக்குமூலமாக அளித்திருக்கும் யோகேஷ் உப்ரித்

மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாட்கள் இடைத்தரகர்களுக்குக் கசியவிடப்படும். அவர்கள் அதனைப் “புதிர்களை விடுவிப்பவர்களிடம்” எடுத்துச் செல்வார்கள். நுழைவுத் தேர்வு வினாக்களுக்கு அவர்கள் கூறும் பதில்கள் “வாஸ் ரெக்கார்டரில்” பதிவு செயப்பட்டு, அவை இலஞ்சம் கொடுத்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் – இதுதான் முன்னாபாய் ஸ்டைல். இதைப் படிக்கும் வாசகர்களுக்கு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” திரைப்படத்தில் கதா நாயகன் கமல்ஹாசன் தேர்வு எழுதும் காட்சி நினைவுக்கு வந்தால், உங்கள் நினைவுத்திறன் அபாரம்தான். அத்திரைப்படத்தின் மூலமான இந்தி திரைப்படம் முன்னாபாய் எம்.பி.பி.எஸையொற்றி தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, ஆள்மாறாட்டம். இலஞ்சம் கொடுத்த மாணவனுக்குப் பதிலாக வேறு ஒருவரை நுழைவு தேர்வு எழுத வைத்து, அதன் மூலம் இலஞ்சம் கொடுத்த மாணவனை வெற்றி பெறச் செய்து மருத்துவக் கல்லூரியில் நுழைத்துவிடுவதுதான் ஆள்மாறாட்ட முறை. இதற்கு ஏற்ப நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டில் மோசடிகள் செயப்பட்டிருக்கும்; தேர்வுக் கண்காணிப்பாளர்களும் கவனிக்கப்பட்டிருப்பார்கள். இளம் மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இந்த ஆள்மாறாட்ட மோசடியில் தேர்வு எழுத பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ள சிறப்பு அதிரடிப் படை, ஏறத்தாழ 300 பேர் இந்த மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது.

வியாபம் ஊழலில் மிகப்பெரும் மோசடித்தனமானது ரயில் இன்ஜின்-பெட்டி முறை. இதன்படி, நுழைவுத் தேர்வு நடைபெறும்பொழுது இலஞ்சம் கொடுத்த இரண்டு மாணவர்களுக்கு நடுவில் திறமைமிக்க “புதிர் விடுவிப்பவர்” மூன்றாவது மாணவராக அமர வைக்கப்படுவார். இதற்கு ஏற்ப அம்மூவருக்கும் தேர்வு எண்ணும், தேர்வு மையமும், தேர்வு அறையும் ஒதுக்கப்படும். தனது அருகில் அமர்ந்துள்ள மற்ற இருவருக்கும் விடைகளைச் சொல்லிக் கொடுத்து, அவர்களை எழுத வைப்பதுதான் இந்த மூன்றாவது நபரின் வேலை. நுழைவுத் தேர்வில் இந்த மூன்று பேரும் தேர்ச்சி பெறுவார்கள். இலஞ்சம் கொடுத்த இரு மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும். அந்த ‘மூன்றாவது மாணவனுக்கு’த் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும். அந்த மாணவன் தனியார் கல்லூரியில் சேராமல் ஒதுக்கப்பட்ட இடத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவான். பிறகு அந்த இடம் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் கொழுத்த பணத்திற்கு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் விற்கப்படும்.

வியாபம் ஊழலை இயக்கியவர்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கும் பணத்தை வாரிக் கொடுக்கும் காமதேனுவாக இந்த ரயில் இன்ஜின்-பெட்டி மோசடி இருந்து வந்திருக்கிறது. ஏறத்தாழ 1,200 மாணவர்கள் இந்த மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது, சிறப்பு அதிரடிப் படை.

விடைத்தாளைத் திருத்துவது நான்காவது வழி. இதன்படி, இலஞ்சம் கொடுத்த மாணவர்களிடம் விடைத்தாளில் 10 சதவீதக் கேள்விகளுக்கு மட்டும் விடைகளைக் குறிக்குமாறு சொல்லப்படும். மீதமுள்ள வினாக்களுக்கான விடைகளைத் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாளில் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை இடைத்தரகர்கள் செய்து வைத்திருப்பார்கள். இந்த மோசடியின் மூலம் ஏறத்தாழ 50 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது, சிறப்பு அதிரடிப் படை.

ம.பி. மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்
வியாபம் ஊழலில் தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்த போதும், ஆளுநர் என்ற அரசியல் சாசன தகுதியைப் பயன்படுத்திக் கொண்டு வழக்கு விசாரணையிலிருந்து தப்பித்துக் கொண்ட ம.பி. மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்

மத்தியப் பிரதேசத்தில் தற்பொழுது ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளும் 16 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், 43 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கும், 42 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்குமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வை வியாபமும், வெளிநாட்டு வாழ் இந்தியர் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான நுழைவுத் தேர்வை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சங்கமும் நடத்தி வருகின்றன. ஆனால், இந்த இரண்டு நுழைவுத் தேர்வுகளும் பெயருக்குத்தான் நடைபெறுகின்றன என்பதும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் ஒவ்வொர் ஆண்டும் பல நூறு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருவதும் ஊரறிந்த இரகசியம். ம.பி. போலீசாரால் சமீபத்தில் கைது செயப்பட்டுள்ள யோகேஷ் உப்ரித் என்ற கிழட்டு நரி அளித்துள்ள வாக்குமூலம் இந்த இரகசியத்தைப் போட்டு உடைத்திருக்கிறது.

75 வயதான உப்ரித் சாதாரண நபரல்ல. ம.பி. அரசு நிறுவனமான வியாபத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்த அவர், தான் ஓய்வுபெற்ற பிறகு தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திவரும் பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சேர்க்கை தேர்வின் (Dental and Medical Admission Test) கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பதவியேற்றுக் கொண்டார். தனியார் மருத்துவக் கல்லூரி சங்கமே உப்ரித்தை வேண்டி வரவழைத்து இந்தப் பதவியில் அமர வைத்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உப்ரித்தும் தனது நன்றியைக் காட்டும் விதமாக, வியாபத்தில் நடந்துவந்த மோசடிகள் அனைத்தையும் இறக்குமதி செய்து, தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்களின் கஜானாவை கரன்சி நோட்டுக்களால் நிரம்ப வைத்தார். உப்ரித்தின் கைது, அரசு நிறுவனமான வியாபத்திற்கும், தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்களுக்கும் இடையே நிலவிவரும் நெருக்கமான கிரிமினல் உறவை அம்பலத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.

“தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்தும் நுழைவுத் தேர்வு அதன் தொடக்கம் தொட்டே மோசடியானது என்பதையும் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் விற்பனை செயப்படுவதையும்” வாக்குமூலமாக அளித்துள்ள உப்ரித், “இலஞ்சம் கொடுத்து நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்கள் விடைத்தாளை முழுமையாகப் பூர்த்தி செயமாட்டார்கள். தேர்வு முடிந்த பிறகு அவர்களது விடைத்தாட்களில் சரியான விடைகள் பூர்த்தி செயப்பட்டு, அவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என நடந்த மோசடிகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதோடு, “இம்மோசடிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக 2006-க்குப் பிறகு ம.பி. அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஒவ்வொருவருக்கும் 10 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என்ற உண்மையையும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார், உப்ரித்.

உப்ரித்தின் வாக்குமூலத்தின்படி 58 சதவீத நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் இலஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செயப்பட்டுள்ளதென்றால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் இந்த விற்பனை மூலம் சட்டவிரோதமாக அடித்திருக்கும் கொள்ளை ஏறத்தாழ 10,000 கோடி ரூபாயைத் தாண்டக்கூடும் எனக் குறிப்பிடுகிறார், வியாபம் ஊழலை அம்பலப்படுத்திய மருத்துவர் ஆனந்த் ராய்.

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு ஒதுக்கப்பட்ட 58 சதவீத இடங்கள் ஏல முறையில் விற்பனை செயப்பட்டுள்ளன என்றால், 42 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்கு வியாபம் அமைப்பே தரகனாக வேலை பார்த்து வந்திருக்கிறது. குறிப்பாக, வியாபம் நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் நடந்துள்ள மோசடிகளுள் ஒன்றான ரயில் இன்ஜின்-பெட்டி முறை, அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் கைப்பற்றிக் கொண்டு விற்பனை செய்வதற்கு ஏற்றவாறே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ம.பி. ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகள் ஷைலேஷ் யாதவ்.
வியாபம் ஊழலில் தொடர்பு இருப்பது அம்பலமான பிறகு மர்மமான முறையில் இறந்துபோன ம.பி. ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகள் ஷைலேஷ் யாதவ்.

“கடந்த 2010-11 -ம் ஆண்டு தொடங்கி 2012-13 -ம் ஆண்டு முடியவுள்ள மூன்றாண்டுகளில் மட்டும் அரசு ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட 721 மாணவர்கள் கடைசி நாள்வரை கல்லூரியில் சேராமல், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள செப்.30 அன்று தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். இப்படித் திரும்ப ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு இடமும் ஒரு கோடி ரூபாய்க்கு நிர்வாகத்தால் விற்கப்பட்டுள்ளதாகக் கொண்டால், அந்த மூன்றாண்டுகளில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்குக் கிடைத்த வருமானம் 721 கோடி ரூபாயாக இருக்கும்” என ம.பி.அரசின் சேர்க்கை மற்றும் கல்லூரிக் கட்டண ஒழுங்குமுறை கமிட்டி இம்முறைகேடு பற்றி அறிக்கை அளித்திருக்கிறது.

உப்ரித் கைது செயப்பட்டிருந்தாலும், வியாபத்தோடு சேர்ந்தும் தனியாகவும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் நடத்தியிருக்கும் மோசடிகளும் கிரிமினல்தனங்களும் தனியொரு வழக்காக விசாரிக்கப்படவில்லை. வியாபம் நடத்திய தேர்வுகளில் நடந்துள்ள மோசடிகள் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திய “டிமாட்” தேர்வுகளில் (Dental and Medical Admission Test – DMAT) நடந்துள்ள மோசடிகளையும் உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென கோரப்பட்ட மனு மீதான விசாரணையின்பொழுது, “டிமாட் தேர்வைத் தனியார் கல்லூரி அதிபர்கள்தான் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் பொதுஊழியர்கள் கிடையாது. எனவே, இந்த வழக்கை இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கவே முடியாது” என வாதிட்டுள்ளார், மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி.

0000

சாதனா சிங்
ம.பி முதலமைச்சர் சிவராஜ் சௌஹானின் மனைவி என்பதாலேயே, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படாமல் தப்பவைக்கப்பட்டுள்ள சாதனா சிங்

வியாபத்தில் நடந்துள்ள ஊழலும் மோசடிகளும், டிமாட் தேர்வுகளில் நடந்துள்ள ஊழலும் மோசடிகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். வியாபம் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளுக்கு அப்பால், ஆசிரியர், போக்குவரத்து ஊழியர், உணவுப் பொருள் தரக் கட்டுப்பாட்டாளர், போலீசு துணை ஆவாளர், வனப் பாதுகாவலர் – எனப் பல்வேறு நிலை அரசுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கடந்த ஆறாண்டுகளில் 81 போட்டித் தேர்வுகளை நடத்தியிருக்கிறது. ஆசிரியர் வேலைக்கு மூன்று முதல் ஏழு இலட்ச ரூபாய் வரையிலும்; போக்குவரத்துத் துறையில் சேர்வதற்கு எட்டு முதல் 10 இலட்ச ரூபாய் வரையிலும்; போலீசு துணை ஆவாளர் பதவிக்கு பதினைந்து இலட்ச ரூபாய் வரையிலும் என, பதவிகளின் “வெயிட்’’டுக்குத் தக்கவாறு இத்தேர்வுகளில் இலஞ்சம் விளையாடியிருப்பதும்; அம்மாநில கவர்னர் ராம்நரேஷ் யாதவ்; அம்மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான்; ஆர்.எஸ்.எஸ்.-ன் முன்னாள் தலைவர் (சார்சங்க்சாலக்) கே.எஸ்.சுதர்சன்; ஆர்.எஸ்.எஸ்.-ன் கூடுதல் பொதுச் செயலர் சுரேஷ் சோனி; பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அக்கட்சியின் ‘தேசிய’த் தலைவர்கள் மற்றும் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் – என அதிகாரத்திலுள்ள ஒரு பெரும் பட்டாளமே இந்த இரண்டு ஊழல்களிலும் (வியாபம் மற்றும் டிமாட்) கை நனைத்திருப்பதும், மருத்துவ சீட்டுகளையும், அரசுப் பதவிகளையும் பெற்று நேரடியாகப் பலன் அடைந்திருப்பதும் தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது.

  • ம.பி. முதலமைச்சர் சௌஹான் மனைவியின் தங்கை மகள் ரேகா சிங் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரின் வாரிசுகள் தனியார் மருத்துவக் கல்லூரி சங்கம் நடத்திய நுழைவுத் தேர்வுகளில் ‘வெற்றி’ பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதை காங்கிரசு கட்சியின் ம.பி. மாநிலத் தலைவர் அருண் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பகிரங்கமாக அம்பலப்படுத்தியிருக்கிறார். சௌஹானின் நெருங்கிய உறவினரும் ம.பி.மாநில பிற்பட்டோர் கமிசன் தலைவருமான குலாப் சிங் கிராரின் மகன் 2011-ம் ஆண்டு நடந்த முதுகலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்த கிரார் இப்பொழுது வியாபம் ஊழல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ.ஆல் அறிவிக்கப்பட்டுள்ளார். ம.பி. மாநில போலீசு டி.ஐ.ஜி. ஆர்.கே.ஷிவ்ஹரே, வியாபம் ஊழல் வழக்கில் தான் கைது செயப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தனது மகனுக்கும் மருமகளுக்கும் கிடைத்த மருத்துவக் கல்லூரி இடங்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்.
  • மத்தியப் பிரதேச அரசின் எடை மற்றும் அளவீட்டுத் துறையில் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிஹிர் குமார் சௌத்ரி, ஆர்.எஸ்.எஸ். இன் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சனின் எடுபிடியாக இருந்தவர். வியாபம் ஊழல் தொடர்பாக ம.பி. போலீசால் மிஹிர் குமார் சௌத்ரி கைது செயப்பட்டதையடுத்து, “விடைத்தாளில் எந்த பதிலையும் குறிக்காமல் கொடுத்துவிடு; உனக்கு வேலை கிடைத்துவிடும்” என சுதர்சன் தன்னிடம் கூறியதாக வாக்குமூலம் அளித்தார். வியாபம் அமைப்பில் தேர்வுக் கண்காணிப்பாளராக இருந்து கைது செயப்பட்டுள்ள பங்கஜ் திரிவேதியும், உயர்கல்வித் துறை அமைச்சர் லட்சுமிகாந்த் ஷர்மாவின் தனி அதிகாரியாக இருந்து கைது செயப்பட்டுள்ள ஓ.பி.ஷுக்லாவும், மிஹிர் குமார் சௌத்ரிக்கு கே.எஸ். சுதர்சன் சிபாரிசு செய்ததை உறுதி செய்து சிறப்பு அதிரடிப் படையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
  • 2012-ம் ஆண்டில் நடத்தப்பட்ட வனக் காவலர் தேர்வில் கலந்துகொண்ட குறிப்பிட்ட ஐந்து விண்ணப்பதாரர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதற்காக ம.பி. ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், அந்த ஐந்து பேரிடமிருந்து தலா மூன்று இலட்ச ரூபாய் பெற்றதாக சிறப்பு அதிரடிப் படை குற்றஞ்சுமத்தி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. எனினும், ஆளுநராக இருப்பவரை விசாரணை செயும் அதிகாரம் சிறப்பு அதிரடிப் படைக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டு, ஆளுநர் ராம்நரேஷ் யாதவ் விசாரிக்கப்படுவதற்குத் தடை விதித்தது, ம.பி. உயர்நீதி மன்றம்.
  • ஒப்பந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்பட்ட தேர்வில் குறிப்பிட்ட பத்து விண்ணப்பதாரர்களைத் தேர்ச்சி பெறச் செய்வதற்காக அவர்களிடமிருந்து 30 இலட்ச ரூபாய் இலஞ்சம் பெற்றதாக ஆளுநரின் மகன் ஷைலேஷ் யாதவ் மீது சிறப்பு அதிரடிப் படை குற்றஞ்சுமத்தியிருந்தது. இது தொடர்பாக ஷைலேஷ் யாதவ் விசாரிக்கப்படுவதற்கு முன்பாகவே, அவர் மர்மமான முறையில் லக்னோவில் உள்ள அரசு பங்களாவில் இறந்து போனார். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் வெடித்து ஷைலேஷ் யாதவ் இறந்து போனதாகக் கூறப்பட்டு, அவரது மரணம் இயற்கையான மரணமாகச் சித்தரிக்கப்பட்டது.
  • ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன்
    வியாபம் நிறுவனத்தில் நடந்த ஊழல்-மோசடிகளைப் பயன்படுத்திக் கொண்டு, தனது எடுபிடியாக இருந்து வந்த மிஹிர் குமார் சௌத்ரிக்கு அரசு வேலை வாங்கித் தந்த ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன்

    ம.பி. முதலமைச்சரான சிவராஜ் சிங் சௌஹான்தான் 2008 முதல் 2012 வரையில் மருத்துவக் கல்வித் துறையின் தலைவராகவும் இருந்தார். அந்தக் கட்டத்தில்தான் வியாபம் ஊழல் அதன் உச்சத்தைத் தொட்டது. சௌஹான் மருத்துவக் கல்வி தலைவராக இருந்த சமயத்தில்தான் அவரது மனைவியின் தங்கை மகள் ரேகா சிங்கிற்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது.

சௌஹானின் மனைவி சாதனா சிங் போக்குவரத்து போலீசு தேர்வில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த 19 பேரைத் தேர்ச்சி பெறச் செயக் கூறி, வியாபம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதற்கான கைபேசி உரையாடல் ஆதாரங்கள் இருப்பதை காங்கிரசு கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. வியாபம் அலுவலகத்தில் இருந்த கணினிப் பதிவுகளை ஆராந்து உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப் படையால் நியமிக்கப்பட்ட பிரசாந்த் பாண்டே, முதலமைச்சர் சௌஹான் 64 பேருக்கு சிபாரிசு செய்திருப்பதற்கான ஆதாரங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த சிபாரிசு தொடர்பான விவரங்களும் ஆதாரங்களும் காங்கிரசு தலைவர் திக்விஜய் சிங் மூலம் ம.பி. மாநில உயர்நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் சௌஹானின் தனி உதவியாளராக இருந்த பிரேம் பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப மருத்துவர் அஜய் மேத்தா இருவருக்கும் வியாபம் ஊழலில் பங்கிருப்பது ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது. பிரேம் பிரசாத் யாதவ் முதலமைச்சர் அலுவலக தனி அதிகாரி என்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு மருத்துவக் கல்லூரி இடத்தை வாங்கியிருப்பதோடு, இலஞ்சம் வாங்கிக்கொண்டு பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுத்திருக்கிறார் எனக் குற்றம்சாட்டியிருக்கிறது, சிறப்பு அதிரடிப் படை.

இவர்கள் தவிர, ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் தனி உதவியாளராக இருந்த தன்ராஜ் யாதவ்; மத்திய அமைச்சர்கள் உமா பாரதி, தர்மேந்திர பிரதான்; பா.ஜ.க.வின் தேசியத் துணைத் தலைவர் பிரபாத் ஜா; அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, அக்கட்சியின் எம்.பி. அனில் தவே, அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் விக்ரம் வர்மா மற்றும் அவரது மனைவியும் ம.பி.மாநில சட்டமன்ற உறுப்பினருமான நீனா வர்மா; ஆர்.எஸ்.எஸ். கூடுதல் பொதுச் செயலர் சுரேஷ் சோனி; ஆர்.எஸ்.எஸ்.-க்கு மிகவும் நெருக்கமான எல்.என். மருத்துவக் கல்லூரி இயக்குநர் அனுபம் சௌக்ஸி, அரபிந்தோ மருத்துவக் கல்லூரி அதிபர் வினோத் பண்டாரி, சாகர் கல்விக் குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் அகர்வால், துருபா கல்விக் குழுமத்தின் அதிபர் சுனில் தாதிர் உள்ளிட்ட பலருக்கும் இந்த ஊழல்களில் நெருங்கிய தொடர்பு இருப்பது ஒவ்வொரு நாளும் அம்பலமாகிவருகிறது.

(தொடரும்)
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

நீதித்துறை ஊழலுக்கெதிரான வழக்குரைஞர் போராட்டம் – வீடியோக்கள்

0

ழல் நீதிபதிகளுக்கெதிராக வழக்குரைஞர்களின் பேரணி
இது ஊழல் நீதிபதிகளுக்கெதிரான தமிழக வழக்குரைஞர்களின் போராட்டம்.
செப்டம்பர் 10-ம் தேதி தமிழக வழக்குரைஞர்கள் மதுரையில் நடத்தியிருக்கும் இந்தப் போராட்டம் இந்தியாவில் வேறு எங்கும் நடந்திராத போராட்டம்.
நீதிபதிகளின் ஊழலை வீதியில் நிறுத்தி விளக்கம் கேட்கும் போராட்டம்

உங்களுக்கு பி.ஆர்.பழனிச்சாமியை தெரிந்திருக்கும்; தாது மணல் வைகுண்டராசனை தெரிந்திருக்கும்; ஆற்று மணல் கொள்ளையர்களை, கல்விக் கொள்ளையர்களை தெரிந்திருக்கும். இவர்களிடமெல்லாம் காசு வாங்கிய கட்சிக்காரர்களை, அதிகாரிகளை, போலீசை தெரிந்திருக்கும்; ஆனால் இந்தக் கொள்ளைகளை எல்லாம் சட்டபூர்வமாகவே அனுமதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் பெயர் தெரியுமா உங்களுக்கு?

இதோ வழக்குரைஞர்கள் அவர்களை அடையாளம் காட்டுகிறார்கள்.

நீதிபதிகளின் குற்றங்கள் தெரிந்தவர்கள் கூட அவர்களின் பெயர்களை உச்சரிக்க மாட்டார்கள்.
நீதிபதிகளின் ஊழலை கேள்வி கேட்டால் அவர்களை அவமதித்ததாகக் கூறி சிறையில் தள்ளுவார்கள் என்று நடுங்குகிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதியோ என்ன குற்றம் செய்து பிடிபட்டாலும், அவர்கள் மீது வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. அவர்களை பதவியிலிருந்து இறக்குவதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

இதனால்தான் தட்டிக் கேட்பாரின்றி தறிகெட்டு ஆடுகிறது, நீதித்துறை. இந்த ஆட்டத்துக்கு முடிவு கட்டும் போராட்டத்தின் துவக்கம்தான் இந்தப் பேரணி. எந்த நீதிபதி எந்த வழக்கில் எத்தகைய முறைகேடான தவறான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று குறிப்பாக சுட்டிக் காட்டுகிறார்கள் வழக்குரைஞர்கள்.

அதனை வெளியிடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன ஊடகங்கள். நீதிபதிகளோ ஹெல்மெட் தீர்பபை விமர்சித்ததாக வழக்கு போட்டு விட்டு ஊழல் எதிர்ப்பு பேரணி பற்றி விசாரணை நடத்துகிறார்கள். 75 வயது முதியவரான வழக்குரைஞர் சங்கச் செயலர் ஏ.கே ராமசாமியை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்தே விசாரித்து தங்களது வக்கிர புத்தியைக் காட்டுகிறார்கள்.

இந்த முறைகேடுகள் அனைத்தையும் விரைவிலேயே முடிவுக்குக் கொண்டு வருவோம்.

நீதிபதிகள் லார்டுகளும் அல்ல வழக்குரைஞர்கள் அடிமைகளும் அல்ல. மக்களுக்கு எதிரான தீர்ப்புகள் அனைத்தையும் இனி விசாரணைக்கு உட்படுத்துவோம். மக்களின் விமர்சனத்துக்கும் கண்காணிப்புக்கும் நீதிபதிகளை உட்படுத்துவோம்.

நீதித்துறை ஊழலுக்கு எதிரான வழக்குரைஞர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டம்பர் 16, 2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? நேர்காணல் வீடியோ ஹைலைட்கள்… (வாட்ஸ்-அப்-ல் பரவலாக பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்)

முழு வீடியோவை பார்க்க https://www.vinavu.com/2015/09/19/contempt-case-incidents-in-chennai-high-court/

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு