Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 578

லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்

4

ன்னிக்கி வெள்ளன விடிஞ்சாப்ல இந்துப் பேப்பர படிச்சப்ப எனக்கு உடம்பெல்லாம் ஒரே பரவசம்! காரணம்; நடிகை நித்யா மேனன் இயக்குநர் மணிரத்னத்தோட அடுத்த படத்திலேயும் புக்கு பண்ணியிருக்காங்களாம்!

நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் இயக்குநர் மணிரத்னத்தோட அடுத்த படத்திலேயும் புக்கு பண்ணியிருக்காங்கலாம்!

‘ஓ காதல் கண்மணி’ படம் மணிரத்னத்தோட ஒரு மைல்ஸ்டோன் சப்ஜெக்டு. இதுல நித்யா மேனன் பட்டையக் கிளப்பியிருந்தாங்க! இந்தப் படம் லிவிங் டுகெதரப் பத்தி பேசிச்சுன்னு பல பத்திரிக்கைகள் கூட அப்ப எழுதுனாக.

லிவிங் டுகெதர்ன்னா? லிவிங் டுகெதன்னா ‘மணம் தவிர் இல்லறம்’. நமக்கு தமிழ்ல சொன்னாலும் புரியாது; இங்கிலீசல சொன்னாலும் புரியாது. அதாவது கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழுவாக!

மணி ரத்னம், வழக்கமா மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணக் கதைகளைத்தானே மாறி மாறி படம் எடுப்பாரு! இதென்ன புதுசா? லிவிங் டுகெதர்ன்னு அல்ட்ரா மாடர்ன் புரச்சிப் படம் எடுத்திருக்கிறாரேன்னு எனக்கு ஒரே ஆச்சர்யம்.

ஒருவேளை லிவிங் டுகெதரும் ஐரோப்பிய மையவாத சிந்தனையா மேற்கத்திய கலாச்சாரமா இல்லாம இந்து பாரம்பரியத்தின் வேரா கீரா இருக்குமோன்னு மனுசக்குள்ள பல கேள்விகள் அரிச்சிக்கிட்டு கெடந்துச்சு!

என்னோட எல்லாக் சந்தேகங்களையும் விளக்கி லிவிங் டுகெதரோட இந்துபபாரம்பரியத்தை தீத்து வைச்சது நடிகை நித்யா மேனன் தான்!

அந்த வகையில நித்யா மேனனோட பரம ரசிகனான எனக்கு மணி ரத்னம் படத்தில் அவுக கொடுத்த உழப்பயும் தியாகத்தையும் சொல்ல ஒரு வாய்ப்பு கெடச்சுருக்கு!

பொதுவா தமிழ் இண்டஸ்ட்ரீல கதாநாயகிங்க கடுமையா உழைக்க வேண்டியிருக்கும்! அதுவும் மணி ரத்னம் படமுன்னா சொல்லவே வேண்டாம். நித்யா மேனன தெரிஞ்சிக்கணும்னா கொறஞ்சது தமிழ் சினிமாவில நாலு கதாநாயகிகளைப் பத்தியாவது சொல்லணுமுன்னு நினைக்கிறேன்.

80-களில் வெளிவந்த படங்கள்ல, பல படங்கள் ஆதிக்கசாதி பாலுறவுச் சிக்கல்களை மையப்படுத்தி இருந்துச்சு. அவள் ஒரு தொடர்கதை, அவள் அப்படித்தான், புவனா ஓர் கேள்விக்குறின்னு படம் பேர ஒரு மார்க்கமா இருந்துச்சு.

இதுல முத்தாய்ப்பா வைதேகி காத்திருந்தாள் படத்துல நடிகை ரேவதிக்கு வெள்ளைச் சேலைய கட்டிவிட்டு விதவையா கால்ல சலங்கையக் கட்டி ஆயிரங்கால் மண்டபத்துல “அழகு மலராட அபிநயங்கள் கூட”ன்னு ஆடவிட்டுருப்பாங்க!

‘குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை’ன்னு விரகதாபம் வெளிப்படுற மாறி ஆக்ரோசமா ஆடவேண்டியிருந்துச்சு.

பொம்பளய்ங்க பொறப்பே இந்த மதத்துக்குள்ள இம்புட்டுதானான்னு அசிங்கம் பொறுக்காம ரேவதியோட அப்பா கடைசிச் ஜதிய, சப்பாளங் கட்டயில அடிக்கிறப்பவே நெஞ்சுவலியில செத்துப்போவாரு!

பாவம் ரேவதி! ஆனா தாராளமயம் காரணமா சினிமா உலகம் மாறினப்ப கூட இந்து பாரம்பரியம் இன்னும் ரொம்ப கெட்டியாயிருந்துச்சு! தேவர் மகன் படம் பாத்துருப்பீகள்ள!

இதே ரேவதியோட கையப்பிடிச்சிக்கிட்டு “புன்ன வனத்திலே பேடக் குயில் கூவயில, உன்னோடய வேதனைய நானறிஞ்சேன்’ன்னு இந்த சமுதாயத்தில பொண்ணுன்னா அது அதுக்கு மட்டும்தான்னு தன்னோட தியாகத்த சுருதி குறையாம பாடிக்காட்டுனாரு சுருதிகாசனோட அப்பா கமலஹாசன்!

இதுக்கு பொறவு கமலஹாசன் கட்டுன வேசம் இதுவர எந்தக் கதாநாயகியும் செஞ்சதில்ல! கமலே அக்கிரகாரத்து மாமியா மாறி தாலிய கழட்டி பீரோவுக்குள்ள வெச்சிருக்கிற பொம்மனாட்டி மீனாவுக்கு புத்திமதிய சொல்லுவாரு!

தாலிச் சண்டையில பாரம்பரியம் தமனி தாமரங்கான்னு ஆர்.எஸ்.எஸ் காலிபசங்க புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் தெம்பா குண்டு வீசக் கத்துக்கொடுத்தது யாருன்னு நெனக்கீக? சண்முகி மாமி தான்!

அதையும் தாண்டி வந்தோம்னா, ஜெனிலியாவோட தியாகத்தை யாராலும் மறக்கவே முடியாது! ராமன் சீதைய காட்டுக்குள்ள அனுப்புனான். ஜெயம் ரவி, ஜெனிலியாவ வீட்டுக்குள்ள அனுப்புனான். அம்புட்டுதான் வித்தியாசம்! ஆறு நாள் குடும்பத்தோட தங்கியிருந்தா நீ யென் பொஞ்சாதின்னு சந்தோஷ் சுப்ரமண்யம் படத்தில புதுசா இராமாயணம் போட்டாய்ங்க!

“அது என்னவோ தெரியல! உன்ன பாத்துவுடன பிடிச்சுருக்கு”ன்னு சொன்னவுடனே ஜெனிலியா போன்ற கொமரிங்க ஒத்துக்கிட்டதால அது வீடு வரை வந்துச்சு! ஒருவேள ஜெனிலியா பொண்ணு ஒத்துக்காம இருந்திருந்தா என்ன செய்வாங்கண்ணு தெரியல!

இப்ப தெரியுதா? இந்துப் பாரம்பரியத்த காக்கணும்னா சினிமாவுல கதாநாயகி என்னமா வேலை செய்யணும்னு? இதே மணி ரத்னம் படம்னா எப்படியிருக்கும்?

அதுக்கு ஒரு விவரம் நம்மகிட்ட இருக்கு! உங்களுக்கே தெரியும் அலைபாயுதே படத்தில ஷாலினி கல்யாணம் பண்ணிகிட்டு தாலிய மறைச்சு வாழ்ற ஒரு கேரக்டர்!

பதட்டத்தை முகத்துல காமிச்சிக்கிட்டு அதே சமயம் தாலிப் பெருமை, கர்நாடக சங்கீதம் பாடுறதுன்னு (ஸ்வர்ணமால்யாவும் ஷாலினியும் மாதவன் வீட்டுக்குப் போய் அலைபாயுதே கண்ணான்னு பாந்தமா பாடுற ஒரு கீர்த்தனை ஆர்.எஸ்.எஸ் அம்பிங்க அத்தனை பேருக்கும் ரொம்பப் பிடிக்கும்!!) பாரதத்தோட இந்து பெருமைய டெக்னிக்கலாக நடிச்சுருப்பாப்பல!

இவ்வளவையும் தாண்டி லிவிங் டுகெதர்னா அதுக்கு நித்யா மேனன் எவ்வளவு உழைச்சிருக்கணும் யோசிச்சுப் பாருங்க?

நான் கூட லிவிங் டுகெதர் நகர்மயமாதல், முதலாளித்துவ வளர்ச்சியில் ஆணுக்கும் பொண்ணுக்கு வசதி வாய்ப்புகள் கிடைக்குது. அதனால இரண்டு பேரும் சுதந்திரமா கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்து துணைய தேர்ந்தெடுப்பாங்களோன்னு நினைச்சேன். ஆக சாதிக்கு இடமில்லைன்னு உறுதியா நம்புனேன்!

ஆனா பாருங்க நித்யா மேனனும் துல்கர் சல்மானும் சர்ச்சுக்குள்ள தன்னோட நண்பர்கள் கல்யாணத்தில சந்திக்கறப்ப, நித்யா மேனன் துல்கர்கிட்ட “அன்னைக்கி ஏதோ ‘ச’ன்னு ஆரம்பிக்கிற வார்த்தைய சொன்னாப்பல இருந்துச்சு”ன்னு சூப்பரா மணிரத்னத்தோட ஸ்கிரிப்பட நடிச்சு காட்டியிருப்பாங்க!

ஆதிக்க சாதிகளைப்பொறுத்தவர வளர்ற புள்ள வாயில ‘சனியன்ற’ வார்த்தை வர்றக்கூடாதுன்ற கண்டிசன் எங்க வீட்டுல கூட இருந்துச்சு!

அங்க தான் ஒரு டிவிஸ்டு வந்துச்சு! அவ்வளவு மாடர்னா இருக்க நித்யா மேனன் இந்து கலாச்சாரம்னு வர்றப்ப எவ்வளவு துல்லியமா நடிச்சு காட்டியிருங்கான்னு தோணுச்சு! அந்தப் பிரேம் புல்லா நித்யாவோட முகம்தான் எனக்கு நின்னுச்சு!

சரி ஒருவேள பொண்ணு தான் உசந்த சாதி. கதாநாயகன் பள்ளனா, பறையனா இருந்தா இது ஒரு புரட்சிப்படமா இருக்குமோன்னு எனக்கு டவுட்டு இருந்துச்சு!

ஆனா படத்துல ஆதியே எனக்குப் பூர்விகம் மாம்பலம்னு சொல்லுவான். மாம்பலமா இல்லைன்னா மும்பைல செட்டிலான கணேஷ் அங்கிள் இடம் கொடுப்பாரா?

அதையும் நித்யா மேனன்தான் உடைச்சு எறிஞ்சாங்க! அகமதாபாத் போறப்ப ஆதியும் தாராவும் ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்குவாங்க!

அப்ப ஆதி போடுற கையெழுத்த நித்யா மேனன் அழகா ஆதித்யா வரதராஜன்னு வாசிச்சு காண்பிக்கிற இடத்துல உச்சரிப்பு சூப்பரா இருந்துச்சு! நீங்க கவனிக்கணும் மணிரத்னத்தோட இந்தப்படம் எந்தவித ஒலிக்கலவையும் இல்லாம கதாநாயகர்களின் சொந்தக்குரலப் பயன்படுத்திய படம்! நித்யா மேனனோட கதாபாத்திரத்தோட கணம் அம்புட்டு வெயிட்டு!

காதலர்களுக்குள்ள சின்ன சின்ன சில்மிசம்னு வர்றப்ப டிரைனுக்குள்ள நித்யா பேசின ஒரு வசனம் மட்டுமே இந்துக் கலாச்சார அறிவ அவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டுச்சு எனக்கு!

ஆதி சொல்வான் “துகிலுறிவேன்”ன்னு அதுக்கு நித்யா சொல்வா பாருங்க “துச்சாதனன் மாதிரியா”ன்னு?

புராணத்தில் இருந்து எடுத்துக்காட்டி லிவிங் டுகெதர தாராவும் ஆதியும் எஞ்சாய் பண்றாங்கன்னா பார்ப்பனியமும் முதலாளித்துவமும் இம்புட்டு ஈயும் பீயுமா இருக்குங்குறது எனக்குத் தெரிஞ்சு யாருமே இவ்வளவு குளோஸ் அப்பில காட்டுனதில்லன்னு நெனக்கிறேன்.

இதையெல்லாம் தாண்டிதான் வீணை காயத்ரி சகோதரிகள் பாடுற ஒவ்வொரு கீர்த்தனைக்கும் நித்யாவோட பாவம், நடிப்புக்காட்சிகள் எல்லாம் டக்கரா இருந்துச்சு!

இங்க நித்யா நடிச்ச ஒரு பாடல் காட்சி இன்னுமும் என் கண்ண விட்டு அகலல. லிவிங் டு கெதரா இருந்தாலும் சரி தாலி கட்டிட்டு வீட்டுக்குள்ள வாழ்ற அலைபாயுதே படமா இருந்தாலும் சரி காதலி கண்டிப்பா ஒரு கர்நாடக சங்கீதமாவது பாடணும்ன்றது மணியோட கண்டிசன்!

காதலன் அட்டுத்தனமா பயங்கர போக்கிரியா இருந்தாலும் இந்த டெஸ்டு மட்டும் இன்னைக்கு வரைக்கும் பொண்ணுக்கு இருக்கு! அப்படித்தான் நித்யா மேனன் கணேஷ் அங்கிள் வீட்டுக்குப் போறப்ப பாடுற கர்நாடக கீர்த்தனைல கணேஷ் அங்கிள் கரைஞ்சுப் போயி லிவிங் டுகெதருக்கு ஒத்துக்குவாரு!

அந்தக் கீர்த்தனையில் “மலர்கள் கேட்டேன் மணமே தந்தனை; தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை” ன்னு வர்ற வரிகளுக்கு நித்யா புள்ள உசுரக் கொடுத்து நடிச்சுச்சு!

பல்விளக்காத ஆதி செவத்தல சாஞ்சுகிட்டே ரசிப்பான்! அதே மாதிரி அலைபாயுதே படத்துல மாதவனும்! அதே போல சாருவும் ஜடாயுவும்

இது தாண்டா லிவிங் டுகெதர்னு புரிய வைச்ச நித்யா மேனன் எவ்வளவு பெரிய மாதரசி!

இப்படித்தான் மகாபாரதத்துல பராசரன் மச்சகந்தி லிவிங் டுகெதர் கதையும் நகரும். வியாசன் அம்பாலிகையோட வேலைக்காரப் பொண்ணோட லிவிங் டுகெதரில் இருந்து விதுரன் வருவான். ஊர் பேரு தெரியாத அரக்கி- தருமன் மூலியமா கடோற்கஜன் வருவான்.

ஆனா எல்லாக் கதையிலும் மாப்பிள்ளை உசந்த சாதி! பொண்ணு கீழ் சாதியா இருந்தாலும் சங்கீத சாகித்யம் சம்பிரதாயம் அவசியம் தெரிஞ்சிருக்கணும்!

வேறு மாதிரி சொல்வதா இருந்தா 2015-ல் மணிரத்னம் சொல்ற கதையில் மனுஸ்மிருதி தான் இருக்கு! அதாவது அனுலோமம் அலவுடு! பிரதிலோமம் நாட் அலவுடு!

நித்யா மேனன் மணிரத்னத்தோட இணையப்போற அடுத்தப்படத்த ஆவலா எதிர்பார்த்துட்டு நிக்கிறேன். எப்படா வரும்னு இருக்கு!

– இளங்கோ

விவசாயிகள் தற்கொலை :மோடியின் பொய்யும் புரட்டும் !

0

ர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் தீவிரமடைந்து கொண்டிருந்த நேரத்தில்தான், மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்து வருகின்றன என்று கடந்த ஜூலையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆரவாரமாக அறிவித்துக் கொண்டிருந்தார். விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளுக்கு கடன் சுமையோ, விவசாயப் பிரச்சினைகளோ காரணமல்ல; காதல் விவகாரம், குடும்பப் பிரச்சினைகள், நோகள், ஆண்மையின்மை, போதை மருந்து, குடிப்பழக்கம், வரதட்சிணை முதலான தனிப்பட்ட விசயங்கள்தான் காரணம் என்று தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டி, வாய்க்கொழுப்பேறி இந்த அமைச்சர் வக்கிரமாகப் பேசியுள்ளார்.

விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங்.
விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை இழிவுபடுத்தி வக்கிரமாகப் பேசிய விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங்.

அமைச்சர் ஆதாரமாகக் காட்டும் தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2013-ல் நாடு தழுவிய அளவில் 11,700 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள், 2014-ம் ஆண்டில் 5,650 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் 50 சதவீத அளவுக்குக் குறைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 2013-ல் 3,146 பேராக இருந்த விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள், மோடி ஆட்சிக்கு வந்தபின் 2014-ல் 2,568 பேராகக் குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் 12 மாநிலங்களிலும் 6 யூனியன் பிரதேசங்களிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளே இல்லை என்று விவசாய அமைச்சர் கணக்கு காட்டுகிறார். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இது எப்படி சாத்தியமாயிற்று?

இது, மோடி கும்பல் கிரிமினல் முறையில் செய்துள்ள அதிநவீன மோசடி. தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் பட்டியலில், விவசாயத்தில் ஈடுபடும் விவசாயி என்று ஒரு பிரிவும், விவசாயம் சார்ந்த பிற துறைகளில் வேலை செய்பவர் என்று ஒரு பிரிவுமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் விவசாயியை “விவசாயத்தில் ஈடுபடும் விவசாயி” என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, அவர் விவசாயியே இல்லை என்றும் “பிற துறைகளில் வேலை செய்பவர்” என்றும் குறிப்பிட்டு திட்டமிட்டே இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு விவசாயிக்கு நிலம் இருந்தும் அவர் தற்கொலை செய்து கொண்டால், அதற்கு கடன் சுமையோ, விவசாயப் பிரச்சினைகளோ காரணமல்ல; குடும்பப் பிரச்சினைகள், நோய்கள், குடிப்பழக்கம், வரதட்சினை முதலானவைதான் காரணம் என்று அயோக்கியத்தனமாகப் பதிவு செய்யப்பட்டு கிரிமினல்தனமாக இந்தப் புள்ளிவிவரக் கணக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் மூலம் 12 மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நடக்கவில்லை என்று கணக்கு காட்டினாலும், அதே தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் புள்ளிவிவரப்படி விவசாயம் சார்ந்த பிற துறைகளில் தற்கொலைச் சாவுகள் அதிகரித்துள்ளன.

கிராமப்புறங்களில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்துப் பதிவு செய்வதில்லை. கிராம நிர்வாக அலுவலரது பதிவேடுகளிலிருந்துதான் அவர்கள் இத்தகைய மரணங்களைப் பற்றிக் கணக்கிடுகின்றனர். இதனால் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் பற்றிய விவரங்களும் தற்கொலைக்கான காரணங்களும் முழுமையாக வெளிவருவதில்லை. மேலும், விவசாயிகளுக்கான அரசின் நிவாரணங்களும் மானியங்களும் நிலமுள்ளவர்களுக்கு மட்டுமே என்பதாக உள்ளதால், அத்தகையோரை மட்டுமே விவசாயிகள் என்றும், மற்றவர்களை விவசாயக் கூலிகள் அல்லது பிற வேலைகளில் ஈடுபடுபவர் என்றும் வருவாய்த்துறையினர் மோசடியாகப் பதிவு செகின்றனர். இதனால்தான் மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது.

புள்ளிவிவரக் கணக்கு காட்டி விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்துவிட்டதாக மாய்மாலம் செய்தாலும், மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த ஓராண்டு காலத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் 20 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன என்று பல்வேறு விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. “பழங்குடியின விவசாயிகளை, நிலமற்றவர்கள் – கூலி வேலை செய்பவர்கள்- விவசாயிகள் அல்லாதவர்கள் என்று காட்டி இம்மோசடிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று சாடுகிறார் விதர்பா மக்கள் போராட்டக் குழு (VJAS) தலைவர் கிஷோர் திவாரி. விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் பற்றி ஆய்வு செய்துவரும் இந்திரா காந்தி வளர்ச்சி-ஆராய்ச்சிக் கழகத்தின் (IGIDR) பேராசிரியரான சிறீஜித் மிஸ்ரா, “விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைக் குறைத்துக் காட்டுவதற்காகவே திட்டமிட்டே இந்த மோசடியான புள்ளிவிவரக் கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டுகிறார்.

06-farmer-suicideதேசிய குற்றப்பதிவு ஆணையகமானது, போலீசு நிலைய குற்றப் பதிவேடுகளிலிருந்துதான் இந்த புள்ளிவிவரப் பட்டியலைத் தயாரித்துள்ளது. போலீசார் ஒரு தற்கொலைச் சாவை எப்படித் திரித்துப் புரட்டிக் குறிப்பிடுவார்கள் என்பதை யாவரும் அறிவர். மாண்டுபோன விவசாயியின் பெயரில் பெயரில் நிலம் இருந்தால்தான், ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசார் குறிப்பிடுகின்றனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் தந்தை அல்லது உறவினர் பெயரில் நிலம் இருந்தால், மாண்டு போனவரை விவசாயி என்று குறிப்பிடுவதில்லை. தற்கொலை செய்து கொண்டவர் ஒரு பெண்ணாக இருந்தால், ஒரு விவசாயியின் மனைவி என்றுதான் குறிப்பிடுகின்றனர். பெண்களின் பெயரில் நிலம் இல்லாததை வைத்து, மாண்டுபோன பெண் விவசாயிகளின் தற்கொலை சாவுகள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன.

இதேபோல, குத்தகை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால், விவசாயிகளின் தற்கொலையாக போலீசாரால் காட்டப்படுவதில்லை. மாறாக, விவசாயக் கூலியின் மரணமாக மாற்றிப் பதிவிடப்படுகின்றன. குத்தகையானது பெரும்பாலும் வாவழியாக நம்பிக்கை யின் அடிப்படையில்தான் நடப்பதால், பத்திரங்களோ ஆவணங்களோ இல்லை என்றும், அவர் பெயரில் நிலம் இல்லை என்றும் காரணம் காட்டி இத்தகையோரின் தற்கொலைச் சாவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

மகசூல் குறைவு, கந்துவட்டிக்காரர்களின் அச்சுறுத்தல், சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை வழங்காததால் ஏற்பட்ட கடன் சுமை, வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாத நிலையில் வங்கி நிர்வாகம் நிலத்தை ஏலம் விடுவதற்கான நோட்டீசு அனுப்பியதால் மனமுடைந்துபோவது – எனப் பல்வேறு காரணங்களால் விவசாயிகளின் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தனியார்மயம் – தாராளமயம் திணிக்கப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஏறத்தாழ 3.2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனாலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைத் தேசிய முக்கியத்துவம் வாந்த பிரச்சினையாகக் கருதாமல், இன்றைய அரசியலமைப்பு முறையே இத்தகைய சாவுகளை அற்ப விவகாரமாக ஒதுக்கித் தள்ளுகிறது.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கப் போவதாகவும், விவசாயத்தில் முதலீட்டை அதிகரிக்கப் போவதாகவும் தேர்தல் அறிக்கையில் சவடால் அடித்ததோடு, விவசாய அமைச்சகத்தை, “விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்” என்று பெயர் மாற்றியுள்ளதாக ஆகஸ்டு 15 அன்று ஆரவாரமாக அறிவித்து விவசாயிகள் நல அரசாக காட்டிக் கொண்டு மோடி கும்பல் நாடகமாடுகிறது. ஆனால், தனது ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகளே நடக்கவில்லை என்று கிரிமினல்தனமாக புள்ளிவிவர மோசடி செய்வதோடு, விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் நிலம் கையகப்படுத்தல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறது. சொல்லுக்கும் செயலுக்கும் நேர்மையற்ற மோடி கும்பல், காங்கிரசை விஞ்சிய கயவாளிகளின் கூட்டம்தான் என்பதை நிரூபிக்க இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

– குமார்.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

தருமபுரி : வேலை வாய்ப்பு முகாமா ? வெறுப்பேற்றும் முகாமா?

2
Exif_JPEG_420
ஜெயா அரசு திவால்
வேலைவாய்ப்பே இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, அரசு வேலை கொடுக்க வக்கற்றதாகிவிட்டது

“100 கோடி ரூபாய் செலவில் 5000 முதலீட்டாளர்களை குவித்து மாநாடு”, “2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி வருவாய்”, “இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை” என மக்களிடையே பகட்டு பிரச்சாரத்துடன், சென்னையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டைநடத்தியது ஜெயா அரசு. இந்த நாடகத்தை முடித்த கையோடு, ஏற்கனவே திட்டமிட்ட வகையில், தருமபுரியில் வேலையில்லாதவர்களுக்கு வேலைகொடுப்பதாக ஒரு நாடகத்தையும் அண்மையில் நடத்தி முடித்தது.

வேலைவாய்ப்பே இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, அரசு வேலை கொடுக்க வக்கற்றதாகிவிட்டது என்பதை பகிரங்கமாக அறிவிப்பதுதான், தருமபுரியில் நடத்தப்பட்ட இந்த தனியார் நிறுவன ஆள் சேர்ப்பு முகாம்.

“அம்மா தொலை நோக்குப்பார்வையில் உருவான தனியார் நிறுவனங்களில் ஆள் சேர்ப்பு முகாம்” என்கிற பெயரில் “300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை”, “முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச உணவு, பேருந்து வசதி”என தருமபுரி மாவட்டம் முழுவதும் பார்க்கும் இடங்களிலெல்லாம் வானுயர தட்டிகள், கண்கவர் பேனர்கள் என விளம்பரம் தருமபுரி மக்களைத் திணறடித்தது. வேலையில்லா பட்டதாரிகளை ஈர்த்தது. 12-09-2015 அன்று காலை முகாமும் தொடங்கியது.

ஜெயா அரசு தோல்வி
“இலவசம்னுதான் போட்டுயிருந்தாங்க. ஆனா காசு வாங்கசொல்லுறாங்க”, “அதே போலத்தான் வேல கொடுக்கிறன்னு கூப்பிடுவாங்க. ஆனா வேல தரமாட்டாங்க”

காலை 7 மணி, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் முகாமில் கலந்து கொள்ளவதற்காக இளைஞர் பலர் சிறப்பு பஸ்சில் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். வழக்கம் போல, கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இதனைக் கேட்டதும், பலரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அதில் இருந்த பெண்கள், “என்னாங்க எல்லா இலவசம்னு சொன்னாங்க, எதுக்கு காசு கேட்கிறீங்க” என்று ஆவேசமாகக் கேட்டனர். அதற்கு கண்டக்டர், “இலவசம்னுதான் போட்டுயிருந்தாங்க. ஆனா காசு வாங்கச் சொல்லுறாங்க”, ”அதே போலத்தான் வேல கொடுக்கிறன்னு கூப்பிடுவாங்க. ஆனா வேல தரமாட்டாங்க” என்றார். அங்கேயேஏமாற்றம் தலை தூக்கத் தொடங்கியது. ஆனால், எப்படியாவது வேல கெடச்சா போதும் என்ற ஏக்கத்தோடு முகாமை நோக்கி பயணித்தார்கள்.

வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள், ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் என சுமார் 1,00,000 பேர் குவிந்தனர். “வேல கெடக்கிறதெல்லாம் அதிஷ்டம்தான் மச்சி எதுக்கும் அட்டன்ட் பன்னி பார்க்கலாம்” என்று பலரும் புலம்பிக்கொண்டே நுழைந்தனர். மற்றொரு புறமோ, அம்மாவின் நலத்திட்ட உதவிகளை பற்றி “நான்காண்டு ஆட்சி, நாடு போற்றும் வளர்ச்சி” என்று அ.தி.மு.க காரர்கள் பேசிக்கொண்டு இருந்ததும் காதிலே விழுந்தது.

வேலை வாய்ப்பு முகாம் மோசடி
கண் துடைப்பு முகாம் என்ற அங்கீகாரமும் இந்த முகாமிற்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், எந்த எந்த நிறுவனங்கள் வந்திருக்கின்றன என்ற

கண் துடைப்பு முகாம் என்ற அங்கீகாரமும் இந்த முகாமிற்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், எந்த எந்த நிறுவனங்கள் வந்திருக்கின்றன என்ற விவரமே இல்லை. பலரும், “எந்த கம்பெனி, கவர்மெண்டு வேலையா” என்று அருகில் உள்ளவர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான், அடுத்த அதிர்ச்சி காத்திருந்த்து. எல்லோரையும் மண் தரையில் வரிசையாக உட்காரச் சொன்னார்கள். பலரும் மரத்தடிப்பள்ளியில் உட்கார்ந்த நினைவுகளை நினைவு கூர்ந்து கொண்டனர். வரிசை நகர நகர அப்படியே நகர்ந்து உட்கார்ந்தனர். உள்ளே எந்த கம்பெனி என்ற ஆவல் இவர்களது துணியெல்லாம் மண் ஆவதைக் கூட கவனிக்க வைக்கவில்லை.

ஒருவழியாக, அலுவகத்திற்குள் சென்றனர். அங்கேதான் கடைசி அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அதிர்ச்சி வேலை தர இருப்பதாக வந்துள்ள ‘கம்பெனிக்ளைப்’ பார்த்துதான். ஆமாம், துணிக்கடை காரர்களும் (தீபா சில்க்ஸ்), மளிகைக் கடைக் காரர்களும், ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் என பெரும் படையே ஆள் எடுப்பதற்கு அமர்ந்திருந்தது. அதுமட்டுமல்ல, சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு, ஒரு வாரத்திற்குள் தகவல் வரும் என்று வேறு தெரிவித்தனர். அதை பார்த்த மற்றவர்கள், முகாமில் கலந்து கொள்ளாமலேயே ஏமாற்றத்தோடும், அதிர்ச்சியோடும், விரக்தியோடும் செய்வது அறியாமல் திகைத்து அருகிலே இருக்கும் வயல்வெளியிலும், மரத்தடி நிழலிலும் அமர்ந்திருந்தனர். சில இளைஞர்கள், உள்ளே செல்பவர்களிடம், ”டாஸ்மாக்குல சிக்கன்கபாப் விக்குறவன் எவனாவது அசிஸ்டெண்ட் வேணும்னு வந்திருக்கப் போறண்டா, உசாரா இருடா” என்று கிண்டலடித்துக் கொண்டே சென்றனர்.

இந்த நிலைமையில் ஏமாற்றமுமடைந்த பல இளைஞர்கள், பட்டதாரிப் பெண்கள் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல், மரத்தடியிலும் அருகில் உள்ள வயல்வெளியிலும் அமர்ந்திருர்ந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்தி
பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்தி

அவர்களில் ஒருவர், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்தி. அவரிடம் பேசும் போது, “நான் 6 லட்சம்ரூபாய் செலவு பண்ணிட்டு இன்ஜினியர் முடிச்சியிருக்கிறேன். ஏதோ எனக்கு ஏற்றவாறு பெரிய கம்பெனி வந்திருக்கும்னுதான் வந்தேன். இங்க வந்து பார்த்தா தான் தெரியுது எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற கடையெல்லாம் வந்திருக்குது. அத பார்த்த உடனே நான் வெக்சாயி வெளியில வந்துட்டேன். இதெல்லாம் ஏமாற்று வேலை, அவங்க கட்சிய பிரபலப்படுத்துறதுக்காக நடத்துற நாடகம். நீங்களே பாருங்க யாரோட முகத்திலையாவது சந்தோஷம் இருக்குதான்னு, எல்லாருமே சோர்ந்து போய் தான் வர்றாங்க” என்றார் குமுறலுடன்.

மற்றொரு பட்டதாரி, சரவணன், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “நான் எம்.எஸ்சி, பி.எட். முடிச்சிருக்கேன். ஏதாவது கம்பெனியில சூப்பர்வைசர் வேல கெடச்சா போயிடுலாம்னு நெனச்சிதான் வந்தேன். இங்க போகும் போது எம்.எஸ்.சி. படிச்சவங்கயெல்லாம் எதுக்கு வர்றீங்கனு கேட்குறாங்க. அதுக்கு PG-யை விட்டுங்க UG-யை எடுத்துக்கோங்க என்றேன். அதுக்கப்புறம், டாடா டோகோமா_வுல கஸ்டமர் கேர்க்கு எடுத்துக்கிட்டு அப்புறம் போன் பண்ணுவோம் என்று எந்த ரெஸ்பான்சும் கொடுக்காம வெளியில அனுப்பிட்டாங்க. அதை கேட்டவுடனே நொந்து போய்ட்டேன்” என்றவர், அங்கு கொடுத்த அடையாளச் சீட்டை எடுத்து வைத்துக் கொண்டார்.

சரவணன் எம்.எஸ்சி, பி.எட்.
சரவணன் எம்.எஸ்சி, பி.எட்.

“வீட்டில் கேட்டால் என்ன சொல்வீங்க” என்றதுக்கு, “இந்தச் சீட்டையாவது வீட்டுல காட்டுனா கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க” என்றார் வேதனையோடு. “இதுக்கு பேரு தொலைநோக்குத்திட்டம்னு தம்பட்டம் அடிச்சிக்கிறாங்க. சின்ன கடைங்களுக்கு போய் நம்மலே வேலை கேட்டா, வேல இருக்கா, இல்லையானு சொல்லப்போறாங்க. இதுக்கு ஒரு முகாமா” என்று திட்டியபடியே நடந்தார்.

மற்றொருவர், லதா கூறுகையில், “நான் 10 வது படிச்சியிருக்கேன். 2 இடத்தில வீட்டுவேலை செய்யிறேன். ஒரு வீட்டுக்கு 1000 ரூபா தர்றாங்க. எங்க வீட்டுக்காரர் கூலிக்கு ஆட்டோ ஒட்டுறாரு. சம்பாதிக்குற காசுல பாதிய குடிச்சிட்டு வந்துடுவாரு. அப்புறம் எப்படி குடும்பத்தை ஓட்டுறது. அதனால தான் இங்க வந்தேன். பக்கத்துல இருக்குற நூல் மில்லுக்குதான் கொடுத்துட்டு வந்திருக்கிறேன். பிறகு போன் பண்ணுறதா சொல்லியிருக்காங்க, கூப்பிடுறாங்களோ? இல்லையோ தெரியல?” என்றார் தாழ்ந்த குரலில்.

இப்படி முகாமில் வந்த பலரும் தங்களது ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் துன்பத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

***

வேலை வாய்ப்பு முகாம் நாடகம்
இஞ்ஜினியரிங் படித்தால் வேலை; ஐ.டி.ஐ படித்தால் வேலை, டிப்ளமோ படித்தால் வேலை, BBA, MBA என்று ரகரகமாக படித்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை யூட்டி, படிக்க வைக்கும் போதே தொடங்கிவிட்டது, நாடகம்.

ருமபுரி மாவட்டம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது வறட்சி மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என்பதுதான். இந்த மாவட்டத்தில் குறிப்பாக விவசாயம் பொய்த்து போய் அண்டைய மாநிலங்களுக்கு வேலை தேடி ஓடுவது மிக அதிகம். மேலும், ‘சுயதொழில்’ (அதாவது கோழி வியாபாரம், துணி வியாபாரம்) செய்து பிழைப்பை நடத்த வட்டிக்கு வாங்கி கந்துவட்டிக்கு பலியாகின்றனர் பலர். வியாபாரம் சரியாக இல்லாமலும் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளது. சென்ற ஒரே வாரத்தில் 3 தற்கொலைகள் நெஞ்சை உருக்கும் வகையிலான சம்பவமங்கள் நடந்து கொண்டியிருக்கின்றன. இதனை கண்டுகொள்ளாத அரசாங்கம் டாஸ்மாக்கை திறந்து வைத்து பல குடும்பங்களின் வருமானத்தை பிக்பாக்கெட் அடித்துவருகிறது. இதனால், குடும்பத்தை நடத்த முடியாமல், உள்ளூரில் கூலி வேலையும் கிடைக்காமல் குழந்தைகளை விட்டுவிட்டு பெண்களும் நகரத்தை நோக்கி வேலைக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.

மக்களை தரித்திரத்துக்கு தள்ளிவிட்டு, அதற்கு நிவாரணமும் செய்வதாக நாடகமாடுகிறது ஜெயா அரசு. மொத்தத்தில், இந்த அரசு ஆளத் தகுதியிழந்து விட்டது.

இந்த வேலை வாய்ப்பு முகாம் என்பது ஓட்டுப் பொறுக்குவதற்கான நாடகம் என்று பலர் உணர்ந்துள்ளனர். ஆனால், நாடகம் இங்கே தொடங்கவில்லை. இஞ்ஜினியரிங் படித்தால் வேலை; ஐ.டி.ஐ படித்தால் வேலை, டிப்ளமோ படித்தால் வேலை, BBA, MBA என்று ரகரகமாக படித்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை யூட்டி, படிக்க வைக்கும் போதே தொடங்கிவிட்டது. அந்த நாடகத்தின் இறுதியான இடம் தான் வேலைதேடுவது.

ஒரு இளைஞன், பெண்ணின் வாழ்க்கை நெருக்கடியின் குறைந்த பட்ச தேவைகளுக்காகத்தான் பலரும் வேலைதேடி வருகின்றனர். இவர்களின் மன வேதனையை சொல்லி மாளாது. இருந்தாலும், இந்த வேதனைக்கு இந்த முகாம், கல்லூரிகளில் நடக்கும் “காம்பஸ் இண்டர்வியூ” என்ற அளவிற்கு கண் துடைப்பாகக் கூட அமையவில்லை என்பதுதான் சிலரது வருத்தம்.

மருத்துவம், கல்வி, குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுகின்ற இளைய சமுதயாத்திற்கு முகாம் தேவைதான். அது அம்மா நடத்தும் முகாமல்ல. இந்த அரசின் அதிகாரத்தைப் பறித்து அனைவருக்கும் வேலை, இலவசக் கல்வி, இலவச மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றை உத்திரவாதம் செய்வது எப்படி என சிந்திக்கும் முகாம்தான் இன்றைய தேவை!

– பு.ஜ.செய்தியாளர்
பென்னாகரம்.

அவமதிப்பு வழக்கு : உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

6

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டம்பர் 16, 2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

  • ஆத்திரம் கொண்ட ஊழல் நீதிபதிகளின் சர்வாதிகார சதிராட்டம்
  • நீதிமன்ற வளாகம் முழுதும் போலீஸ் குவிப்பு
  • நீதிமன்ற அறைக்குள் வழக்குரைஞர்களையே அனுமதிக்காத அநீதி
  • 75 வயது முதிய வழக்கறிஞர் சங்க செயலரை ஒன்றரை மணி நேரம் நிற்க வைத்து விசாரித்த கொடுமை
  • சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டல்
  • சென்னை உயர்நீதிமன்றத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைக்க சதி

நீதிமன்ற பாசிசம்

மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வாஞ்சிநாதன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்திரா

நேர்காணல்

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !

0

“தேசத் துரோகி” என்று மோடி அரசால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரான தீஸ்தா செதல்வாட், அவரைக் கைது செய்து சிறையிடத் துடிக்கும் மோடி கும்பலின் சதிகளிலிருந்து தற்காலிமாக மீண்டுள்ளார்.

தீஸ்தா சேதல்வாத்
மோடி அரசால் ‘தேசத்துரோகி’ எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா சேதல்வாத்

தீஸ்தாவினுடைய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் ஆகிய தன்னார்வ நிறுவனங்கள் 2004-லிருந்து 2006 வரையிலான காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் போர்டு பவுண்டேசனிடமிருந்து முறைகேடாக அந்நிய நிதியைப் பெற்றுள்ளதாகவும், அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்திற்கு (FCRA) எதிராகச் செயல்பட்டதாகவும், கிரிமினல் சதிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி கடந்த ஜூலை 8 அன்று மோடி அரசின் கூண்டுக்கிளியான மையப் புலனாவுத்துறை தீஸ்தா மீது வழக்கு தொடுத்தது.

ஒப்பந்த அடிப்படையில் அயல்பணிகளுக்கான கட்டணமாகவே இந்த நன்கொடையைப் பெற்றுள்ளதாகவும், இதில் சட்டவிரோதமான எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும், இதன் கணக்கு விவரங்கள் முறைப்படி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தீஸ்தாவும் அவரது வழக்குரைஞர்களும் விளக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர். இருப்பினும், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலேயே தீஸ்தாவைக் கைது செய்து, அவரது செயல்பாட்டை முடக்கத் துடித்தது மோடி அரசால் ஏவிவிடப்பட்ட சி.பி.ஐ.

கடந்த ஜூலை 14 அன்று தீஸ்தாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, அந்நிய நன்கொடையைக் கொண்டு “ஜோதா அக்பர்’’, “பா” முதலான சினிமா பட சி-டிக்களை தீஸ்தா வாங்கியுள்ளதாகவும், முடி அலங்காரத்துக்கும், மூக்குக் கண்ணாடிக்கும் செலவிட்டுள்ளதாகவும், காது குடையும் தும்பு, நகவெட்டி, கொண்டை ஊசி வாங்கியுள்ளார் என்றெல்லாம் அற்ப விவகாரங்களை ஊதிப்பெருக்கி, ஏதோ நிதி மோசடியைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல அறிக்கை தயாரித்து அவரைக் கைது செய்ய சி.பி.ஐ. முயற்சித்தது. அது அம்பலப்பட்டுப் போனதால், தேசப் பாதுகாப்புக்கு தீஸ்தா அச்சுறுத்தலாக உள்ளார் என்றும், தீஸ்தாவின் சப்ரங் கம்யூனிகேஷன் என்ற தன்னார்வ அமைப்பானது மதவெறியைக் கிளறிவிடுவதாகவும், அந்நிய நிதியைக் கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் பொக்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய சி.பி.ஐ. துடித்தது.

இந்நிலையில் தீஸ்தா, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தார். ஜூலை 24 அன்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீஸ்தாவின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தது. அதை எதிர்த்து தீஸ்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னர், கடந்த ஆகஸ்டு 11 அன்று “தீஸ்தா இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானவர், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்” என்று வாதிட்ட சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுகளை மறுத்து மும்பை உயர் நீதிமன்றம் தீஸ்தாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சஞ்சீவ் பட்
இந்து வெறியாட்டத்துக்குத் துணையாக அரசு எந்திரத்தை ஏவிய மோடியின் உத்தரவுக்கு எதிராக நின்ற குற்றத்துக்காக, தற்போது மோடி அரசால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீசு உயரதிகாரி சஞ்சீவ் பட்.

2002-ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த பெஸ்ட் பேக்கரி இந்துவெறி கொலைவெறியாட்ட வழக்கில் முக்கிய சாட்சியான ஜாகிரா ஷேக் என்ற இளம்பெண்ணை மிரட்டி தீஸ்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்தது அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி கும்பல். அரசு அதிகார பலத்தோடு இந்துவெறி பாசிசம் கோலோச்சும் மாநிலத்தில், இதனைச் சட்ட ரீதியாக முறியடித்ததோடு, இந்துவெறி பயங்கரவாதக் குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்பையும் பெற்றுத் தந்தார் தீஸ்தா. இந்துவெறி பாசிச மோடி கும்பலுக்கு எதிராக நீதிமன்றத்தில் விடாப்பிடியான சட்டப் போராட்டத்தை நடத்துவதென்பது சாதாரண விசயமல்ல. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத வெறியாட்டத்தை நடத்திய இந்துவெறியர்கள் 117 பேர் குற்றவாளிகள் என்று நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடா பாட்டியா எனுமிடத்தில் நடந்த முஸ்லிம் படுகொலை வழக்கில் குஜராத்தின் அன்றைய மோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 26 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கும் அவரது கடும் உழைப்பும் முக்கியமானவை.

2002 குஜராத் படுகொலைகளின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் காங்கிரசு எம்.பி. இஷான் ஜாப்ரியோடு பலரையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்தியவர்தான் தீஸ்தா செதல்வாட். அதனாலேயே குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் தீஸ்தாவும் அவரது கணவர் ஜாவீத் ஆனந்தும் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க நன்கொடை வசூலித்து கையாடல் செய்ததாகப் பொவழக்கு போட்டு அச்சுறுத்தியது மோடி கும்பல். கடந்த ஜூலை 27 அன்று இஷான் ஜாப்ரியின் துணைவியாரான ஜாகியா ஜாப்ரியின் மேல் முறையீடு வழக்கு விசாரணைக்கு வருவதால், அதில் சாட்சியங்களை முன்வைத்து தீஸ்தா வாதிட முடியாதபடி முடக்கவும், அச்சுறுத்திப் பணிய வைக்கவும் இப்போது புதியதொரு பொவழக்கைச் சோடித்து அவரைத் ‘தேசத்துரோகி’யாகச் சித்தரித்து கைது செய்து சிறையிட மோடி அரசு கீழ்த்தரமாக முயற்சித்தது.

குஜராத்தின் சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோட்சனா யாக்னிக்
இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குச் சட்டப்படி தண்டனை அளித்த குற்றத்துக்காக, மோடி ஆட்சியில் கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ள குஜராத்தின் சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோட்சனா யாக்னிக்.

தீஸ்தா மட்டுமல்ல, இந்துவெறி பாசிச மோடி கும்பலுக்கு எதிராக நிற்கும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருகின்றனர். குஜராத்தில் நடந்த சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் அன்றைய மோடியின் குஜராத் அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியதில், உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்ற நண்பராகவும் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞராகச் செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தின் பங்கு முக்கியமானது. அவ்வழக்கில் குஜராத் அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. இதனாலேயே பிரதமராகியுள்ள மோடியின் அரசு கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு வன்மத்துடன் எதிர்ப்பு தெரிவித்தது.

குஜராத்தில் 2002-ல் கோத்ரா ரயில் தீ விபத்துக்குப் பிறகு நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளின் போது மாநில முதல்வராக இருந்த மோடி, “இந்துக்களின் கோபம் அடங்கும்வரை கண்டுகொள்ள வேண்டாம்” என்று உயர் போலீசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாவுக் குழுவிடம் அம்மாநில போலீசு உயரதிகாரியாகப் பணியாற்றிய சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார். ஆனால், அச்சிறப்புப் புலனாவுக் குழுவோ மோடிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால், தனது சாட்சியத்தை அவர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகத் தாக்கல் செய்தார். அதனாலேயே 2011-ல் குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி அரசினால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பிரதமராகியுள்ள மோடியின் அரசால் இப்போது அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு பழிவாங்கப்பட்டுளார்.

இதுமட்டுமல்ல, 2002-ல் குஜராத்தின் நரோடா பாட்டியாவில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பாபு பஜ்ராங்கி உள்ளிட்ட 32 பேருக்குத் தண்டனை அளித்த குஜராத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோட்சனா யாக்னிக் -க்கு மோடி ஆட்சியில் 22 முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. அகமதாபாத் நகர கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹிமான்ஷு திரிவேதி, மோடியின் இந்துத்துவத் திட்டங்களுக்கு உடன்பட மறுத்து 2003-ல் பதவி விலகினார். தற்போது நியூஜிலாந்தில் வசிக்கும் அவர், 2002 குஜராத் இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பின்னர் குஜராத்தின் அன்றைய மோடி அரசு எங்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிற்க வேண்டுமென பலவழிகளிலும் அச்சுறுத்தியதாலேயே நான் பதவி விலகினேன் என்கிறார்.

தனது இந்துத்துவ – மறுகாலனியாதிக்கத் திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை ஒடுக்குவதற்காக கீழ்த்தரமாக ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் மோடி கும்பல், அதை வைத்து பொய்வழக்கு சோடித்து அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இப்படித்தான் அணுஉலைத் திட்ட எதிர்ப்பாளரும் சமூக அரசியல் விமர்சகருமான காலஞ்சென்ற பிரபுல் பித்வா, நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கர் முதலானோரும் ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான அந்நிய சதிகாரர்’களாக மோடி அரசால் குற்றம் சாட்டப்பட்டனர். இன்டால்கோ மற்றும் எஸ்ஸார் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ம.பி.யில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து வெளியேற்றுவதை அம்பலப்படுத்தி, இங்கிலாந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்ற இலண்டனுக்குப் புறப்பட்ட கிரின்பீஸ் எனும் சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனத்தின் பிரச்சாரகரான பிரியா பிள்ளையை, இதனாலேயே தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவர் மீது பொய்வழக்கு போட்டு அவரை வெளிநாடுகளுக்குச் செல்லத் தடைவிதித்து முடக்கியது மோடி கும்பல்.

சி.பி.ஐ அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டம்.
தீஸ்தா மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதைக் கண்டித்து மும்பையிலுள்ள சி.பி.ஐ அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டம்.

இந்துத்துவ – மறுகாலனியாதிக்கத் திட்டத்திற்கு எதிராக நிற்பவர்கள், மோடியின் சதிகளுக்கு உடன்படாத பதவியிலுள்ள அதிகாரிகள், நீதிபதிகள்; குஜராத் இந்துவெறி படுகொலைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தும் மனித உரிமை அமைப்புகள்; சுரங்கங்கள், அணைக்கட்டுகள், அணு மின் திட்டங்கள், மரபணு மாற்றப் பயிர்கள் முதலான ‘வளர்ச்சி’த் திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வக் குழுவினர் முதலானோர் மோடியின் பார்வையில் தேசவிராத சக்திகளாவர்.

மறுபுறம், மோடி – அமித்ஷா குற்றக்கும்பல் ஆட்சிக்கு வந்ததும் இந்துவெறி பயங்கரவாதக் குற்றவாளிகள் எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஒவ்வொருவராக விடுதலையாவதும், சலுகைகளோடு அதிகாரத்தில் அமர்த்தப்படுவதும் வேகமாக அரங்கேறி வருகிறது. முன்னாள் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான இஷான் ஜாப்ரி இந்துவெறியர்களால் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரைம் பிரான்ச் கமிஷனரான ஏ.கே. சர்மா இன்று சி.பி.ஐ.யில் முக்கிய பொறுப்பில் மோடி அரசால் அமர்த்தப்பட்டுள்ளார். குஜராத் போலி மோதல் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத போலீசு அதிகாரியான டி.ஜி. வன்சாராவும், நரோடா பாட்டியா வழக்கில் 26 ஆண்டுகால ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோத்னானியும் இப்போது நீதித்துறையால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மோடி ஆட்சியில் இந்துவெறி பாசிசம் புதிய பாய்ச்சலுடன் முன்னேறித் தாக்கி வருகிறது. மோடி கும்பலை அம்பலப்படுத்தி முடக்குவதற்கான வாய்ப்பாக இந்த விவகாரங்கள் உள்ள போதிலும், எதிர்க்கட்சிகள் போராடுவதில்லை. மதச் சார்பின்மை பேசும் கட்சிகள் இதற்கு எதிராக வாய் திறப்பதுமில்லை. பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடும் தீஸ்தா போன்றோர் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சட்டரீதியான போராட்டங்களுக்கான வாய்ப்புகள் மோடியின் ஆட்சியில் அருகிவிட்ட நிலையில், புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலைமையில் அமைப்பு ரீதியிலான மக்கள்திரள் இயக்கங்களும் போராட்டங்களும் மட்டுமே இந்துவெறி பாசிச பயங்கரத்தை வீழ்த்துவதற்கான ஒரேவழியாக நம்முன்னே காத்திருக்கிறது.

– பாலன்.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

தூணிலும் துரும்பிலும் இருப்பவன் சேரியில் இருக்க மாட்டானா ?

4

பெரியார் பிறந்தநாள் சுடர்கள்!

1-ஊர்

பெரியார் சுடர்
புடுங்கித்தின்னும் கோயில் மாட்டுக்கு தொட்டுக் கும்பிடு!

பொழுதுக்கும்
உழைக்கிற மாட்டுக்கு
சூடு.
புடுங்கித்தின்னும்
கோயில் மாட்டுக்கு
தொட்டுக் கும்பிடு!

2-அபிஷேகம்

தாளிக்க
எண்ணெய் இல்லை
சாமிக்கு
ஆயில் மசாஜ்!

3-காவல்

தோப்புக்கரணம் போட்டு
காப்பாற்ற வேண்டிக்கொண்டு
திரும்பிப்பார்த்தால்
பிள்ளையாரைக் காப்பாற்ற
இரண்டு போலீசு!

4-சாமி குத்தம்

பெரியார் சுடர்
பைரவருக்கு படுகோபம்

பைரவருக்கு
படுகோபம்,
“இந்து மதத்தெய்வம்
நான் இருக்கையில்
எச்சு ராஜா
எப்படி குலைக்கலாம்
என் மதிப்பை!”

5-தீர்த்த – யாத்திரை

நரேந்தர தபோல்கர்
கோவிந்த் பன்சாரே
கல்பர்கி..
அடுத்தடுத்து இவர்களை
தீர்த்துக்கட்டினாலும்
கட்டாயம் நீங்கள் நம்பலாம்
இந்து மதம்
சகிப்புத்தன்மை மிக்கது
அடுத்த கொலை வரைக்கும்!

6-மாயை

பாலை
சந்தியில் கொட்டினால்
பரிகாசம்,
நந்தியில் கொட்டினால்
பிரதோசம்!

பெரியார் சுடர்
பாலை நந்தியில் கொட்டினால் பிரதோசம்!

7-தொழில் பக்தி

ஆட்டோகாரர்
மீட்டருக்கு மேலே கேட்டால்
அநியாயம்…
அய்யர்
தட்டுக்கு மேல கேட்டால்
ஆன்மீகம்!

8-தீர்ப்பு

உழவாரப்பணி செய்த
அப்பரை
ஊருக்கு ஊர்
அலையவிட்ட ஈசன்

கொலைகார அமித்ஷாவுக்கு
தில்லையிலே திருக்காட்சி,
இப்பிறவி நீங்கி வர
தீக்குளியல் போடச்சொல்லி
நந்தனுக்கு வந்த அசரீரி
இப்போது காணோம்.

ஊழல் பணத்தில்
ஊருக்கு ஊர் அபிசேகம்
ஒவ்வாமை வரவில்லை
எந்த சாமிக்கும்

அம்மா விடுதலைக்கு
அளவில்லா அர்ச்சனைகள்..
எரிச்சலாகி எந்த சாமியிடமிருந்தும்
கோபம் வந்து சாபம் இல்லை..
குமாரசாமிக்கோ கொண்டாட்டம்

புரிகிறது!
கடவுள் இல்லை
`கன்பார்ம்’!

9-ஆமாஞ்சாமி

சொந்த சாதிக்கு
கட்டுப்பட்டால்
சாமிக்கு
சூடம் எரிகிறது

தாழ்த்தப்பட்டவர்க்கு
ஒத்துப்போனால்
சாமியோட
தேர் எரிகிறது!

தூணிலும் இருப்பான்..
துரும்பிலும் இருப்பான்..
சேரியில் மட்டும்
இருக்கமாட்டானா?

10-நஞ்சு

ராஜநாகம்
தலைதெறிக்க
தப்பித்து ஓட்டம்,
அருகில்
ஆர்.எஸ்.எஸ். தலைமையில்
கூட்டம்!

– துரை.சண்முகம்

பெரியார் என்று சொல்லடா ! பார்ப்பன பயங்கரவாதம் வெல்லடா !

18

அடடா என்ன ஒரு ஆளுமை பெரியார்!

periyar-remembered-thiruvallur-bannerவமானங்களோடு வாழ மக்களை அனுமதிக்காதவர் பெரியார், அவர்களே அதை விரும்பினாலும் கூட!

“நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீதான் முட்டாள்” என்று தன் மேல் கோபப்பட்டவர்களை தயங்காமல் அனுமதித்தவர் பெரியார். “இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.

“நான் சொன்னாலும் கூட பகுத்தறியாமல் ஏற்காதே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்” என சொந்த முட்டாள்தனங்களின் மீது சுரணை எழுப்பியவர் பெரியார்.

“என்ன தெரியும் உனக்கு வாயை மூடு, சொல்றதை மட்டும் கேள்!” என்று ஈன்ற தந்தையே ஈட்டியாய் பாய்கையில், “என்னையும் விடாதே! ஏன் என்று கேள்!” என்று பகுத்தறிவு பாய்ச்சினாரே அதனால்தான் அவர் தந்தை பெரியார்.

யாருக்கு வரும் அந்த அறிவுத்துணிச்சல், “கடவுள் இல்லை இல்லை என்கிறாயே வந்தால் என்ன செய்வாய்?” என்று கடவுளின் காப்பாளர்கள் சீறிய போது, சிறிதும் `வெறி’ இன்றி “வந்தா ஏத்துக்கப் போறேன்!” என்றாரே என்ன ஒரு சிந்தனை அழகு!

பெரியார் வாயெடுத்த போதெலாம் வாயடைத்து போனது அறிவீனம். “கடவுள் நம்பிக்கைகாக ஒருவன் பார்ப்பானுக்கு அடிமையாக, கீழ் சாதியாக இருக்க வேண்டுமா?” என்று பெரியார் எதார்த்த சமூக நிலைமைகளிலிருந்து கேட்ட கேள்விக்கு இன்று வரை பார்ப்பனியம் யோக்கியமாக பதில் சொன்னதில்லை.

அந்தக் கடவுளே ஆனாலும் பெரியார் பார்ப்பன பிறவி ஒடுக்குமுறையை எதிர்த்தார் என்பதை பக்குவமாக மறைத்துவிட்டு, பெரியார் கடவுளை எதிர்ப்பவர் என்று மட்டும் மக்களிடம் பிரச்சாரம் செய்து உண்மையை மறைக்கிறார்கள் இன்றளவும்.

பெரியார்
“இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது.”

ஒவ்வொரு மதமும் தன்னை வந்து சேர்ந்தவர்களை கோட்பாட்டளவில் இஸ்லாமியராக, கிருத்தவராக வரித்துக்கொண்டது. பார்ப்பன இந்துமதமோ சித்தாந்த அடிப்படையிலேயே சொந்த மதத்துகாரனையே நீ சூத்திரன் தள்ளிநில்லு, பள்ளன் , பறையன், தீண்டப்படாதவன் என்று சாதியாக விலக்கி வைக்கிறது. இந்த அயோக்கியத்தனம் ஒரு மதமா என பெரியார் கேட்டது சரிதானே!

அதுமட்டுமல்ல, ” உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” என்றார். இதிலென்ன தப்பு.

“இந்து மதத்தை விட்டு நீங்காமல் இழிவு நீங்காது” என்றார்! சொந்த விருப்பு வெறுப்பிலிருந்தல்ல சமூக எதார்த்தத்திலிருந்து சரியாகவே சுட்டிக்காட்டினார் இப்படி. “இந்தப் பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!” என்று இந்துமதத்தை தோலுரிக்கையில் எந்த மத்ததையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.

கருத்து உபதேசியாக காலம் தள்ளவில்லை பெரியார். கலகக்காரகவும் களம் கண்டவர் பெரியார். அனைத்து சாதியினருக்கும் ஆலய நுழைவு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என்ற போராட்டங்களின் ஊடாக சாதியம்தான் இந்துமதம் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை பக்தர்களுக்கும் புரியவைத்தார்.

“ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால், அந்த ஆண்டவனை பிறவி அடிப்படையில் பார்ப்பனனைத் தவிர பிறிதொருவர் தெட்டு பூசை செய்தால் சாமி தீட்டாகிவிடும்” என்பது பார்ப்பன சதியா? பகவான் சதியா? என்று சுயமரியாதையை தூண்டினார்.

“உன்னை பிறப்பிலேயே இழிவுபடுத்தும் இந்து மதம் ஒரு மதமா கொடுமையா?” என்ற பெரியாரின் கேள்விகள் பக்தனாய் இருப்பதற்காக சுயமரியாதையை இழக்கவேண்டியதில்லை என்று இன்றும் பின்தொடர்கின்றன. பதில் சொல்ல நியாயமற்ற பார்ப்பன இந்து மதம் இன்றும் கோயில் கருவறையிலேயே “கடவுளை பரப்பியவன் அயோக்கியன்” என்ற பெரியாரின் கருத்துக்கு சாட்சியாய் நிற்கிறது.

பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்று பார்ப்பனர்கள் வகுத்துவிட்ட எந்த கட்டுக்கதைகளையும் விட்டுவைக்கவில்லை பெரியார்.

எல்லோரும் முருகன் வள்ளி தெய்வானை என்று கன்னத்தில் போட்டு கும்பிட்ட நேரத்தில் பெரியார், “நடுவில் முருகன் இரண்டுபக்கமும் வள்ளி தெய்வானை என்று கும்பிடுகிறாயே, இதே போல நடுவில் வள்ளி இரண்டு பக்கம் ஆண் என்று இருந்தால் கும்பிடுவாயா? கோபப்படுவாயா?” என்று புத்திக்கு உரைக்கும்படி கேட்டார். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை என்பதற்காக புராண ஆபாசங்களையும் மக்களை முட்டாளாக்கும் மடமைகளையும் விட்டுவைக்காமல் பெரியார் விளாசித்தள்ளியதால்தான் ஆரியபார்ப்பன கொடும்கோன்மைக்கு எதிரான அரசியல் அடித்தளம் இன்னும் இங்கே பட்டுவிடாமல் இருக்கிறது.

“பெண் பிள்ளைகளை சில்லுகோடு விளையாடவிடாது சிலம்பம் கற்றுக்கொடு” என்றார். “பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம்” என்றார்.

ஜகத்குரு கைம்பெண்களை விதவை எனவும் தரிசுநிலம் எனவும் அவமதித்து ஒதுக்கிவைக்க உபதேசிக்கிறபோது, பார்ப்பன எதிர்ப்பாளர் பெரியாரோ பார்ப்பன பெண்கள் உள்பட யாராயிருந்தாலும் மறுமணத்தை ஆதரித்தும், அவர்கள் மீதான மத பிற்போக்கு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

பெண்களுக்கு கல்வி முக்கியம் என்று வலியுறுத்தியதோடு அது பகுத்தறிவாக விளங்கவேண்டும் எனவும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஊக்கப்படுத்தினார். பெண்களே ஒரு மாநாட்டில் அவரது பணிகளை சிறப்பித்து வழங்கிய பட்டம்தான் பெரியார் என்பது. பெண்கள் இப்படி மதிப்பளிக்கும் அளவுக்கு யோக்கியதை எந்த சாமியாருக்காவது சங்கராச்சாரிக்காவது உண்டா? அதனால்தான் அவர் சமூகத்திற்கே பெரியார் ஆனார்!

சொல்லும் கருத்துக்களை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது, தனக்கென சுயநலமாக ஆதாயம் பார்க்கமல் சமுகமாற்றத்திற்காக வாழ்நாட்களை அர்ப்பணிப்பது, மக்கள்மீது நம்பிக்கை வைத்து வேலை செய்வது என்ற விடாப்பிடியான போராட்டங்களில் இளமை துடிப்புதான் பெரியார். பல்வேறு சமூகபரிமாணங்களோடு நாத்திகத்தையும் பார்ப்பன எதிர்ப்பையும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக கட்டியெழுப்பிய சிந்தனை உறுதிதான் பெரியார். சூழ்ந்திருக்கும் பார்ப்பன பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க நம் ஒவ்வொருவருக்கும் அந்த உறுதி இப்போது தேவைப்படுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் சொன்னார், “இந்த வேலைகளை செய்வதற்கு யாரும் முன்வராததால் இவைகளை தோள்மேல் சுமந்துகொண்டு நான் செய்தேன் என்பதைத்தவிர இதற்கான தகுதியும் யோக்கியதையும் எனக்கு இருக்கிறது என்பதால் அல்ல”, எனும் பொருள் படும்படி பேசியிருப்பார்.

எந்த வகையிலும் சமூகமாற்றத்திற்கான வேலைகளை தட்டிக்கழிக்காமல் பெறுப்பேற்றுக்கொள்ள ஏன் நமக்கு இப்படி தோன்றுவதில்லை! பதிலுக்கு பெரியார் காத்திருக்கிறார் போராட்ட களங்கள் எங்கும்!

– துரை.சண்முகம்

பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

4

சென்னை சேத்துப்பட்டு

செப்டம்பர் -17 தந்தை பெரியார் பிறந்த நாளில் இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்க உறுதியேற்போம்!

தந்தை பெரியார் பிறந்தநாள்ந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாளையொட்டி சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காலை 8:00 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் பகுதி தோழர்கள் மாலை அணிவித்தனர்.

இன்றைய சூழலில் அதிகாரத்தில் அமர்ந்துள்ள பார்ப்பன பாசிஸ்டுகள் ஜனநாயகவாதிகளையும், பகுத்தறிவுவாதிகளையும் அட்டவணையிட்டு படுகொலை செய்யும் அளவுக்கு ஜனநாயக எதிர்ப்பும் பாசிசமும் கோலோச்சுகிறது.

இச்சூழலில், ‘தமிழகத்திற்கு, ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பார்பனிய எதிர்ப்பிற்கும் முன்னோடியாக திகழ்ந்த தந்தை பெரியார் பிறந்த தமிழகத்தில் எப்படியும் கால் ஊன்றிவிட வேண்டும். இதற்கு மக்களின் மத உணர்வுகளை மதவெறியாக மாற்றும் நோக்குடன் உழைக்கும் மக்கள் வாழும் பகுதியில் பிள்ளையார் சிலை அமைப்பது, பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது அதன் மூலம் கலவரங்களைத்தூண்டி விடுவது என செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, இந்துத்துவ கும்பல்களை நாம் நமது பகுதிகளில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இவர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் விரோதமானவர்கள் என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது வரை இல்லாமல் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஜெகன்நாதபுரம், பள்ளிச் சாலையில் அமைந்துள்ள துளுக்கானத்தம்மன் கோவிலில் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியால் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. காவல் துறை சென்ற ஆண்டு பிள்ளையார் சிலைகள் வைத்த இடங்களைத் தவிர்த்து புதிய இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது எனக் கூறியுள்ள போதிலும் இம்முறை புதிதாக அந்த பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்து மதவெறிக் கும்பலால் வைக்கப்பட்ட சிலையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்து முன்னணி கும்பல்களை ஊருக்குள் விட்டால் காலம் காலமாக சகோதரர்களாக பழகிவந்த இசுலாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே பிளவு ஏற்படுத்துவார்கள் இதற்கு தமிழகத்தில் நடந்த மண்டைகாடு கலவரமே சாட்சி.

சமீபத்தில் கூட சென்ற பிள்ளையார் ஊர்வலத்தின் போது சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது கல்லெறிந்துள்ளனர். சென்ற ஆண்டு புதுப்பேட்டை பகுதியில் கொலை வரை சென்றுள்ளனர் இந்த இந்து மதவெறிக் கும்பல்.

ஆகவே உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் இக்கும்பலை அனுமதிப்பது நம் வீட்டை நாமே கொளுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும் என அந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பகுதியில் உள்ள ஜனநாயக சக்திகள் மற்றும் கட்சி பேதம் இல்லாமல் அனைத்து கட்சியினரையும் சந்தித்து விளக்கியுள்ளோம். அவர்களும் நமது கருத்துக்களை ஏற்றுக் கொண்டதுடன் அச்சிலையை உடனடியாக அகற்ற ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

பெரியார் பிறந்தநாள்
பெரியாரின் வாரிசுகளான களத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள்

ஆனால், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், எங்கள் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்” என்று போராடிய பச்சையப்பன் மாணவர்களையும், மாணவிகளையும் வெறி கொண்டு தாக்கிய சேத்துபட்டு போலீசார் மக்களிடம் துவேசத்தை பரப்பும் இச்சிலையை அகற்றுவதில் அவ்வளவு வேகம் காட்டவில்லை.

எனவே நேரில் காவல் நிலையம் சென்று மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் இந்து முன்னணியினரால் வைக்கப்பட்டுள்ள சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளரிடம் சொல்லப்பட்டுள்ளது. காவல் துறை அச்சிலையை அகற்றாத பட்சத்தில் சேத்துப்பட்டு பகுதி வாழ் உழைக்கும் மக்கள் அதை நிறைவேற்றுவார்கள்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

திருவள்ளூர் கிழக்கு

பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கு கல்லறை கட்ட தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்போம்! என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பொன்னேரியில் பறை ஓசையுடன், விண்ணதிரும் முழக்கங்களுடன் மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பெரியார் பிறந்தநாள்மாவட்ட துணைத் தலைவர் தோழர் நாகராஜ் அவர்கள், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சி அமைந்த பிறகு பற்றி படரும் இந்துமதவெறி பாசிசத்தையும், அதற்கு ஊது குழலாக இருக்கின்ற பாசிச ஜெயாவையும் அம்பலப்படுத்தி, இதனை முறியடிக்க பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிக்க வேண்டும் என உரை நிகழ்த்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கூடி  பிரசுரம், இனிப்பு கொடுத்து விழாவினை சிறப்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிள்ளையாரை வைத்து அரசியல் செய்யும் பார்ப்பன-பாசிச கும்பலை விரட்டியடிக்க மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

திருவள்ளூர் மேற்கு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கு கல்லறை கட்ட தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதியேற்போம்! என்ற தலைப்பில் பட்டாபிராம் மற்றும் இந்துக் கல்லூரி அருகில் உள்ள அண்ணாநகர் சேக்காடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைகளின் அருகில் பெரியார் படம் வைத்து பூமாலை அணிவித்தும், ஆவடி பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் பூமாலை அணிவித்து மூன்று இடங்களில் தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரியார் பிறந்தநாள்செப்டம்பர் 17, காலை 8 மணிக்கு பட்டாபிராம், CTH சாலையில் உள்ள (கிரேஸ் மருத்துவமனை) அம்பேத்கர் சிலை அருகில் தந்தை பெரியாரின் படம் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. இக்கூட்டத்திற்கு தோழர் முகிலன் தலைமை தாங்கினார். இன்றைய சூழலில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை நடத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தந்தை பெரியாருக்கு ஜெய தென்னரசு பூமாலை அணிவித்தும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு தோழர் விஜயகுமார் பூமாலை அணிவித்தனர். அப்பகுதி மக்களுக்கு இனிப்பும், பிரசுரமும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிய பு.ஜ.தொ.மு செயற்குழு உறுப்பினர் தோழர் எழில்மாறன் தான் படிக்கும் காலத்தில் பாட புத்தகத்தில் எவ்வாறு பார்ப்பன புரட்டுகள் இருந்தது என்பதை நினைவு கூர்ந்ததுடன், மனுதர்மத்தை அம்பலப்படுத்தியும், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் இந்துமதவெறி பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்களை பற்றியும் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

பகுத்தறிவு கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்நெறி பு.ஜ.தொ.மு நடத்தும் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் இது போன்ற கூட்டங்களை அதிக அளவில் நடத்த வேண்டும் எனவும் கூறினார்.

அம்பேத்கர் அமைப்பை சேர்ந்த நீலக்கொடி ஜெயராமன் கள்ளுண்ணாமைக்காக தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார் பெரியார். ஆனால் இன்று பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் (அ.தி.மு.க) பெரியாரின் கொள்கைக்கு மாறாக டாஸ்மாக்கை திறந்து கொள்ளையடித்து வருகிறது என்று கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சார்லஸ் பேசும் போது அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் இது போன்ற கூட்டங்களை பு.ஜ.தொ.மு நடத்துவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பழங்குடியினர் நலமுன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கிய ஜெய தென்னரசு தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பல போராட்டங்களை எளிய மொழியில் நினைவு கூர்ந்து தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சார்ந்த தயாளன் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கடைசியாக பேசிய பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் பா. விஜயகுமார்  நாட்டை கவ்வியுள்ள காவி பயங்கரவாதம் தற்போது பாசிசமாக உருவெடுத்து வரும் அபாயத்தை அம்பலப்படுத்தியும், இத்தருணத்தில் தந்தை பெரியாரின் பிறந்த தமிழக மண்ணில் பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தின் கல்லறையாக்க அணிதிரள வேண்டிய அவசியத்தையும் விளக்கி உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கூட்டத்தில் புஜதொமு-வின் கிளை மற்றும் இணைப்பு சங்கத்தை சார்ந்த தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.

அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !

1

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்து போதிக்கப்பட்டிருக்கிறது. “கடவுள் துகளையே” கண்டுபிடிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்து வகுப்பா? என இதைப் படிக்கும் வாசகர்களுக்குத் தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றலாம். ஆனால், இந்த விசயம் இப்படி சலித்துக்கொண்டு ஒதுக்கிவிடக்கூடிய அளவிற்கு சாதாரணமானது அல்ல. ஏனெனில், “அது பயிற்சி வகுப்பு என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஷாகா” என்பதையும், “பள்ளிக்கல்வித் துறையே உத்தரவு போட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களை அனுப்பி வைத்திருப்பதையும்” அவ்வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் நக்கீரன் இதழ் (ஆக.08-11, பக்.10) வழியாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

சென்னையிலுள்ள பார்ப்பன சேரியான மயிலாப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அறம் மற்றும் பண்பாட்டு முனைவு மையம் என்ற அமைப்புதான் இப்பயிற்சி வகுப்பை ஒழுங்குசெய்து நடத்தியிருக்கிறது. இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் விஷக் கொடுக்குகளுள் ஒன்று. தயானந்த சரசுவதி, ஆடிட்டர் குருமூர்த்தி, பத்மா சுப்பிரமணியன், திருமதி ஒ.ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான தமிழகத்துப் பார்ப்பன கும்பல்தான் அவ்வமைப்பிற்குத் தலைமையேற்றுள்ளது. இந்த விவரங்களெல்லாம் பார்ப்பன ஜெயா அரசுக்கும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தெரியாத விடயமல்ல. ஆசிரியர் பயிற்சி வகுப்பு என்ற பெயரில் அங்கு பார்ப்பன மூடக் கருத்துகளும், ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியலும்தான் ஆசிரியர்களின் மூளையில் திணிக்கப்படும் எனத் தெரிந்தேதான், பள்ளிக்கல்வித் துறை ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தலா ஒரு ஆசிரியரை அப்பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. எனில், ஜெயா அரசு-ஆர்.எஸ்.எஸ்-க்கு இடையே உள்ள இந்தக் கூட்டின் உள்நோக்கமென்ன என்ற கேள்வி முக்கியமானது.

இன்று இரண்டு அபாயங்கள் தமிழக பள்ளிக் கல்வியைக் கவ்வக் காத்திருக்கின்றன. ஒன்று, மொழிப் பாடத்திட்டத்தில் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு கமுக்கமாக நடைபெற்றுவரும் முயற்சிகள்; மற்றொன்று, அரசுப் பள்ளிகளில் பார்ப்பனப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சி. இந்த வகுப்பு அந்த முயற்சிகளின் முன்னறிவிப்பு.

05-rss-imposing-on-education

இப்பயிற்சியின் தொடக்கமே ஆர்.எஸ்.எஸ்.இன் ‘தேசிய’த் திட்டமான கோமாதாவைக் காப்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. அதனை நேரடியாகச் சொல்லாமல், “சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும், வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்; யானை, பாம்பு, மாடு ஆகிய விலங்குகளைக் கொல்லக்கூடாது” என ஜீவகாருண்யவாதிகள் போல பேசத் தொடங்கி, “இதையெல்லாம் புனிதமா மதிக்கணும்” என முடித்துத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுள்ளனர்.

இதனையடுத்து, “துவ்ருக்ஷா வந்தனம், துளசி வந்தனம், பூமி வந்தனம், பித்ரு வந்தனம், சுவாசினி வந்தனம், பாரத் மாதா/பரம்வீர் வந்தனம் என்ற ஆறுவிதமான சமஸ்காரங்களைப் பண்ண வேண்டும்” எனப் பார்ப்பன சடங்குகளைப் பற்றியும், பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்தும் பிரசங்கம் நடந்திருக்கிறது. “இந்தியாவோட ஒற்றுமை நமக்கு முக்கியம். அதற்கு இந்து மத கலாச்சராம்தான் சரியாக இருக்கும்” என உபதேசம் செய்திருக்கிறார், சனாதன தீவிரவாதி ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி.

பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்களுள் ஒருசாரர் இந்தப் பார்ப்பன கதாகலாட்சேபத்திற்கு அங்கேயே எதிர்ப்பு தெரிவித்ததோடு, “பசு புனிதமென்றால், ஆடு, கோழி எல்லாம் புனிதமில்லையா?” என்று திருப்பி அடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மூக்கை உடைத்துள்ளனர். மேலும், “இது என்ன ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியா, நீங்க என்ன ஆர்.எஸ்.எஸ்.யூனிட்டா?” எனக் கேட்டு அக்கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளனர். இந்த அயோக்கியத்தனம் பத்திரிகைகளின் வாயிலாக அம்பலப்பட்ட பிறகு, “இது பற்றி விசாரணை நடத்தப்படும்” என சால்ஜாப்புகள் நிறைந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது, பள்ளிக்கல்வித் துறை.

தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. இதற்காக ஆர்.எஸ்.எஸ்.-ன் குட்டிகளுள் ஒன்றான பாரதிய சிக்ஷா மண்டல் புதிய கல்வித் திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கியிருப்பதாகவும், அவ்வமைப்பின் தலைமையில் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மீண்டும் மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவருவது இப்புதிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சமாக உள்ளது. இப்புதிய கல்விக் கொள்கையையும், பாடத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையோடு, சமஸ்கிருதத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்ப்பது தொடர்பாகவும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் இக்கருத்தரங்களை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் கருத்தரங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இக்கருத்தரங்குகளில் 13 தலைப்புகளின் கீழ் கருத்துக் கேட்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதில் 11-வது தலைப்பின் கீழ் மும்மொழிக் கொள்கை மற்றும் சமஸ்கிருதத்தை வளர்ப்பது தொடர்பாக 9 வகையான கேள்விகள் இடம்பெற்றிருப்பதாகக் கல்வியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் மொழிப் பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என 2006-ல் சட்டம் கொண்டு வரப்பட்டு, அச்சட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் கட்டாயமாகிறது. இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் நிலுவையில் உள்ளன. இச்சட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடையேதும் விதிக்கவில்லை என்றபோதும், தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் – மெட்ரிக் மற்றும் நடுவண் வாரியப் பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.) இச்சட்டத்தை ஒருபொருட்டாக மதிப்பதேயில்லை. அப்பள்ளிகளில் தமிழ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. குறிப்பாக, நடுவண் வாரியப் பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு 20 முதல் 40 நிமிடம் மட்டுமே கற்பிக்கப்படும் அளவிற்கு தமிழ் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் தமிழைத் தீண்டத்தகாத மொழியாகப் புறக்கணித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் முதன்மைப் பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருந்துவருகிறது. அதற்கும் வேட்டு வைக்கும் வகையில் ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தீவிரமாகத் திணித்துவருகிறது, பார்ப்பன ஜெயா அரசு. இன்னொருபுறம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் அரசுப் பள்ளிகளிலும் திணிப்பதற்கான ஏற்பாடுகளில் மோடி அரசோடு கைகோர்த்துச் செயல்படத் துணிந்திருக்கிறது. இவற்றுக்கு அப்பால் அரசுப் பள்ளிகளில் பார்ப்பன பண்பாட்டைத் திணிப்பதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்துவருகிறது, ஜெயா கும்பல்.

கல்லூரிகளில் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில்கூட மாணவர்கள் சாதிரீதியாகப் பிரிந்து மோதிக்கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் வேளையில்; கல்லூரி மாணவர்களிடேயே போராட்டக் குணம் மழுங்கடிக்கப்பட்டு, சுயநலமும், பிழைப்புவாதமும், சீரழிவும் அதிகரித்துள்ள நிலையில், கல்வித் திட்டத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பையும், பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, பார்ப்பனக் கும்பல். 1965-களில் நடந்த மாணவர் போராட்டத்தைப் போன்றதொரு வலிமையான போராட்டத்தை இப்பார்ப்பன சதிக்கு எதிராகத் தமிழக மாணவ சமுதாயம் நடத்தத் துணியாவிட்டால், சுயமரியாதை மரபு கொண்ட தமிழகம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் அடிமையாக மாற்றப்படுவதைத் தடுத்துவிட முடியாது.

– குப்பன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

மீனவர் பார்த்திபன் கொலை – தொழிலாளரைக் கொல்லும் தூத்துக்குடி முதலாளிகள்

2

தூத்துக்குடியில் மீனவர் சங்கத் தலைவர் தலைவர் பார்த்திபனை விசைப்படகு முதலாளிகளின் கைக்கூலிகள் குத்திக்கொன்று விட்டனர்.

மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப்படகுகளும் அதில் உழைக்கும் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் நீரின்மேல் நிலையின்றி ஆடும் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கு என்ன காரணம்?

தோழர் பார்த்திபன்
குத்தி படுகொலை செய்யப்பட்ட தோழர் பார்த்திபன்

முதலாளிகளின் சுரண்டலை கொள்ளையை தட்டிக்கேட்டதுதான் காரணம். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலை நம்பி தொழில்செய்பவர்களான பரதவர்களில் முதலாளிகள் மட்டும் செழிப்பாக இருக்க, கடுமையாக உழைக்கும் தொழிலாளிகள் மட்டும் ஏன் முன்னேற முடியவில்லை என்று சிந்தித்து போராட்டத்தை வழிநடத்தியதால்தான்.

மீன்பிடிதொழிலாளர்களின் உழைப்பால் விசைப்படகு முதலாளிகள் எப்படி கொழுக்கிறர்கள்?

பிடித்துவரும் மீனை விற்று வரும் பணத்தில் அனைத்து செலவையும் கழித்துவிட்டு எஞ்சியதை முதலாளிக்கு 65%, தொழிலாளர்களுக்கு 35% என்று பிரித்துக்கொண்டுதான் கொழுத்தனர். இதை எதிர்த்து 61%-39% என்று பிரித்துக்கொள்ள நிர்பந்தித்து போராடி வென்றது தொழிற்சங்கம். இதற்கு முக்கிய பங்காற்றியவர் தோழர் பார்த்திபன்தான். அப்படி இருந்தும் மீன்பிடி தொழிலால் கோடிகளில் புரள்கிறார்கள் முதலாளிகள்.

தொழிலாளர்களுக்கு ஏன் முன்னேற்றம் வரவில்லை?

அவர்களின் உழைப்பை நயவஞ்சகமாக முதலாளிகள் திருடிக்கொள்வதால்தான். 10 தொழிலாளிகள் அதிகாலை 4.00 மணிக்கு படகில் ஏறி நள்ளிரவு 11.00 மணிக்கு திரும்பி மீன்களை விற்று முடிக்க நள்ளிரவு 1.00 கூட ஆகும். படகு கரைக்கு வரும் முன்னரே அடுத்த நாள் போகவேண்டிய 10 பேர் இரவு 9.00 மணிக்கே வந்து காத்திருப்பர். இரவு 1.00 மணிக்கு மேல் இரண்டு மணிநேரம் தூங்கி அடுத்தநாள் 4.00 மணிக்கு தொழிலுக்கு செல்வர்.

இவர்கள் ஒரு நாளுக்கு பேட்டாவாக ரூ 700 வீதம் 20 தொழிலாளிக்கு ரூ 14,000 செலவாக காட்டினால், முதலாளி கரையில் நின்று மேற்பார்வை மட்டும் பார்த்துவிட்டு தனக்கும் 20 பேரின் பேட்டாவான அதே 14,000-ஐ எடுத்துக் கொள்கிறார். இதுபோக டீசலுக்கு, ஐஸ்க்கு, உணவு செலவுக்கு என்று பிடித்துக்கொள்வார்கள். 1 லட்சத்துக்கு அதிகமாக ஏலம் போனால்தான் அடக்கச் செலவை ஈடுசெய்ய முடியும். அப்படி இல்லாமல் ஒருநாள் மீன்பாடு குறைந்து செலவை ஈடுகட்டாத போது அடுத்தநாள் மீன்பாடிலிருந்து வரும் தொகையில் பழைய நிலுவை பேட்டாவை பிடித்துக் கொள்கிறார்கள்.

படகை சொந்தமாக வைத்திருப்பதால்தான் முதலாளிக்கு நிகர வரவில் 61% ஒதுக்கப்படுகிறது. ஆனால் செலவுக் கணக்கில் எவ்வளவுக்கு மீன் ஏலம்போனதோ அதில் 6% வட்டக்காரர்களுக்கு என்று எடுத்துக்கொள்கிறான் முதலாளி. அதாவது ரூ 1 லட்சத்துக்கு மீன் விற்றிருந்தால் 6,000  ரூபாயை வட்டக்காரனுக்கு என்று எடுத்துக்கொள்கிறார்கள்.

யார் இந்த வட்டக்காரர்கள்?

சுமார் ரூ 85 லட்சம் வரை செலவிட்டு நவீன இரும்பு விசைப்படகை கடலில் இறக்கும் முதலாளிக்கு ரூ 40 லட்சம் வரை வட்டிக்கு – தினசரி விற்பனையில் 6% வசூலித்துக்கொள்ள – பணம் தருபவர்கள்தான் இந்த வட்டக்காரர்கள். உண்மையில் சுமார் 270 விசைப்படகுகளில் 200-ல் முதலாளியே வட்டக்காரனாகவும் – ஓனர் வட்டமாக – இருக்கிறார். ஒருவரே 6 விசைப்படகுகளை வைத்துள்ள நிலையிலும் அதில் பிடிக்கும் மீன்களை விற்றதிலும் 6% வட்டம் பிடிக்கப்படுகிறது. இதை கண்டித்தது தொழிற்சங்கம். மீன் ஏலத்தையே இந்த வட்டக்காரர்கள் – ஓனர் வட்டங்கள் – கட்டுப்படுத்தி அதிலும் காசு பார்க்கின்றனர்.

ஏலத்தில் என்ன பிரச்சினை?

சென்னையிலும், நாகையிலும், ராமேஸ்வரத்திலும், கொச்சியிலும் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கும் மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் ஏஜெண்டுகள் தூத்துக்குடியில் மட்டும் விலையை குறைத்தே எடுக்கிறார்கள். இங்கு ஏலம் எடுக்க ஏஜெண்டுகள் வட்டக்காரர்களிடம் சீட்டு – அட்டை – வாங்க வேண்டும். ஒரு படகுக்கு 3 அட்டை என்ற கணக்கில் வட்டக்காரர்கள் வியாபாரிக்கு தருகிறார்கள். வட்டக்காரர்களோ என்ன மதிப்புக்கு ஏலம்போனதே அதில் 2% கமிசனாக வசூலித்துக் கொள்கிறார்கள். எனவே அதற்கேற்ப ஏலத்தொகையை இங்கு மட்டும் குறைத்துக் கொள்கின்றன கம்பெனிகள். ஏலம் குறைவாக போனால் அது தொழிலாளர்களை பாதிக்கிறது. இந்த 2% வசூலை ரத்துசெய்யக்கோரி, அட்டை முறையை, வட்டக்காரர்களை – முதலாளிகளை எதிர்த்தன தொழிற்சங்கங்கள். பேச்சுவார்த்தை பல சுற்று நடந்தது.

பேச்சுவார்த்தையில் என்ன முடிவானது?

விசைப்படகு உரிமையாளர்கள், வட்டக்காரர்கள் மற்றும் தொழிற்சங்கம் கூடி பேச்சுவார்த்தை நடத்தி சில முடிவுகளுக்கு வந்தனர்.

  1. 2% கமிசன் எடுக்க தடை.
  2. 1 வட்டக்காரர் 1 படகுக்கு 1 அட்டை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இதை வட்டக்காரர்கள் எதிர்த்தனர். உரிமையாளர்களை தம் தரப்புக்கு மாற்றினர். ஒப்பந்தத்தை மீறி 1% கமிசன் எடுப்பதாக தட்டி வைத்தனர்.

தொழிற்சங்கங்கள் என்ன முடிவெடுத்தது?

சிறிய படகு தொழிலாளர் சங்கமும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கமும், முத்து நகர் விசைப்படகு தொழிலாளர் சங்கமும் 01-09-2015 அன்று இரவில் கூட்டுக்கூட்டம் போட்டனர். நாளை விசைப்படகை எடுத்துக்கொண்டு தொழிலுக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்தனர். நுழைவாயிலில் கயிற்றை கட்டி தடுப்பை ஏற்படுத்தினர்.

முதலாளிகள் என்ன செய்தனர்?

மறுபுறம் முத்துநகர் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் கடலுக்கு செல்ல ஐஸ்களை படகில் ஏற்றினர். முடிவைமீறி சென்ற விசைப்படகை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தடுத்து, முதலில் வந்த சிட்டுக்குருவி படகை தாக்கி மீண்டும் திரும்ப வைத்தனர்.

இதை அவமானமாக எடுத்துக்கொண்டு பழிதீர்த்து விட்டனர் முதலாளிகள். சங்கத்திலிருந்து மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்த தலைவர் பார்த்திபனை குத்திக்கொன்று விட்டனர். இன்று பார்த்திபனின் மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும் நிர்கதியாக நிற்கின்றனர்.

இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகளுக்கு எதிராக மீனவர்கள் ஒன்று திரண்டனரா?

இல்லை. நாட்டுப்படகு வழக்கம்போல் தொழிலுக்கு சென்றது. தருவைக்குளம் மீனவர்களும் நாடார் – பரதவர் என்று பிளவுபடுத்தப்பட்டு விலகியே நின்றனர். கடலை நம்பி வாழும் பைபர் படகு மீனவர்களோ விசைப்படகை தமது போட்டியாளராக – எதிரியாக பார்ப்பதால் அதில் எழும் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. ஆற்றுக் கழிமுகங்களை, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் கரையோரங்களை விசமாக்கும் நச்சு ரசாயன ஆலைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவதில்லை. வேம்பாரும், வைப்பாரும், புன்னக்காயலும், பெரியதாழையும், தூத்துக்குடியும் ஒன்றுபட்டு போராடியதில்லை. கடலைக் காக்க, இயற்கையைக் காக்க, கனிமச்செல்வங்களை காக்க நடக்கும் போராட்டங்களில் குறிப்பாக ஒரே மதமாக இருந்தும், வழிநடத்துவதற்கு ஊருக்கு ஊர் பாதிரிமார்கள் இருந்தும் ஒன்றுபடவேயில்லை.

அரசு என்ன செய்தது?

ஆழ்கடலை அன்னிய மீன்பிடிக்கப்பல்களுக்கு தாரை வார்த்துவிட்டு இங்குள்ள படகுகளுக்கு இவ்வளவு தொலைவுதான் செல்ல வேண்டும், இவ்வளவுக்குதான் மீன் பிடிக்க வேண்டும், படகின் நீளம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், இத்தனை நாள் தடைக்காலம் என்றெல்லாம் ஆயிரம் கட்டுப்பாடுகளை போடுகிறது அரசு.

மீன்பிடி துறைமுகத்தில் வட்டக்காரர்களின் அடாவடி வசூலை தடுக்காமல் மீன்வளத்துறை இயக்குனர் வேடிக்கை பார்த்திருந்துள்ளார். காவல்துறையோ இவ்வளவு பதட்டமாக துறைமுகம் இருந்தும், முதலாளிகள் பேச்சுவார்த்தையை அப்பட்டமாக மீறிய நிலையிலும், தொழிலாளர்கள் கொந்தளித்து கல்லெறிந்த பின்னரும், எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் முதலாளிகளின் திட்டம் நிறைவேற மறைமுகமாக துணைபோயுள்ளனர். வட்டமும், அட்டையும், கமிசனும் என்னவாகப் போகிறது?

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
ஆலைச்சாவுகளைப் பொறுத்த வரையில் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சார்பாக RDO, இன்ஸ்பெக்டர் போன்றோரும், பாதிக்கப்பட்ட தொழிலாளி சார்பாக சங்கங்களும் அமைப்புகளும் சில ஆயிரம் அல்லது லட்சம் வாங்கித்தருகிறோம் என்று கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து விடுகின்றனர்

பொதுவாக தூத்துக்குடி என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முத்துக்குளிப்பும், வ.உ.சி. ஓட்டிய சுதேசிக் கப்பலும்தான். இன்று நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக தூத்துக்குடி வளர்ந்துள்ளதாக பெருமிதப்படுவோரும் உண்டு. இந்த வளர்ச்சி யாருக்கானது?

இன்று தூத்துக்குடியில் என்ன நடக்கிறது?

பாதுகாப்பின்றி வேலைவாங்கப்படுவதால் அனுதினமும் நடக்கும் விபத்துகளும், உயிரிழப்புகளும்தான் அன்றாட நிகழ்வுகளாகிறது. இந்நகரம் வட இந்தியத் தொழிலாளர்கள் உட்பட நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் இடமாக மாறிவிட்டிருப்பது மட்டுமல்ல; பலநேரங்களில் இவ்விபத்துகளும் படுகொலைகளும் சக தொழிலாளர்களால் சாதாரணமானதாக பார்க்கப்படுவதும், மரத்துப் போனவர்களாக மாற்றப்படுவதும் தொடர்கிறது.

தூத்துக்குடி முக்கிய தொழில் நகரமா?

ஆம். இங்கு பெயர்பெற்றிருப்பது ஸ்பிக், ஸ்டெர்லைட், VV மினரெல்ஸ் போன்ற உர, தாமிர, கனிம ஆலைகள் மட்டுமல்ல; KSPS, சகாயமாதா சால்ட் போன்ற உப்பளங்களைக் கொண்ட உப்பு நிறுவனங்களும்; DSF, நிலா சீ ஃபுட்ஸ் போன்ற மீன் ஏற்றுமதி நிறுவனங்களும், ரமேஷ் பிளவர்ஸ் போன்ற மலர் ஏற்றுமதி நிறுவனங்களும்; செயிண்ட் ஜான், ஹரி & கோ போன்ற ஷிப்பிங் கம்பெனிகளும்தான். இதையெலாம் விட முக்கியமானது தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள TTPS, IBPL, கோஸ்டல் எனர்ஜியான் போன்ற இயங்கும் பவர்பிளாண்டுகளும், புதிதாக கட்டி இயக்கப்பட்டு வரும் NTPL அனல்மின் நிலையமும்தான். மேலும் முத்துக்குளி இல்லாவிட்டாலும் சங்குகுளியும், மீன்பிடிப்பும் பெரும் அளவு நடக்கிறது.

பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது என்றகிறார்களே அது உண்மையா?

இல்லை. உண்மையில் அனைவரும் காண்ட்ராக்ட் முறையில் நவீனமாக ஒட்ட சுரண்டப்படுகிறார்கள். சிலர் உயிரையும் பறிகொடுக்கிறார்கள். கட்டுமானத்திலிருந்து உற்பத்திவரை அனைத்திலும் காண்ட்ராக்டுக்கு உள்காண்ட்ராக்ட் என்று பல்வேறு படிநிலைகளில் பிரிக்கப்படுகிறார்கள் தொழிலாளர்கள்.

IBR வெல்டரான சசி “எங்க IBBL கம்பெனியில நாங்க OEG காண்ட்ராக்ட்ல பல வருசமா வேலை செஞ்சோம். இப்ப பழைய ஆட்கள் யாரும் இல்லை. கம்பெனி மேனஜரே நல்ல ஆப்பர்சூனிட்டி வரும்போது கம்பெனிய மாத்தினாத்தான் நீங்க முன்னேற முடியும்னு பகிரங்கமா சொல்றான்” என்று பணி நிரந்திரக் கனவை விட்டுவிடும்படி நிர்ப்பந்திப்பதை தோலுரித்தார்.

தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் ஒரே வேலையில் ஈடுபட்டிருந்தாலும் தாம் யாருக்காக – யாரிடம் வேலைசெய்கிறோம் என்று புரியாமலேதான் ரூ 200-க்கும் குறைவான தினக் கூலிக்கு கடுமையாக உழைக்கிறார்கள். ஒரே வேலைக்கு ஒவ்வொரு காண்ட்ராக்டிலும் ஒவ்வொரு விதமான சம்பளம் தரப்படுகிறது. பல கோடிகளைப் போட்டு பிரம்மாண்ட எந்திரங்களைக் கொண்டு மின்நிலையத்தை அமைக்கும் நிறுவனம் ஏன் நேரடியாக உற்பத்தியில் இறங்குவதில்லை. அதிகார வர்க்கத்திற்கு தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு எடுத்து மின்னுற்பத்தி செய்யவைப்பது முடியாத ஒன்றா என்ன?

ஏன் ஆப்பரேசன் & மெயிண்டனென்ஸ் (O&M) என்ற முறை புகுத்தப்படுள்ளது?

ஆலைக்கும் தொழிலாளர்களுக்கும், அதாவது உண்மையான முதலாளிக்கும் தொழிலாளிக்குமான உறவை மூடிமறைத்து ஏமாற்றும் தந்திரமாகத்தான் O&M கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது துல்லியமாக திட்டமிட்ட உற்பத்தியை நடத்தி கிடைக்கும் உத்தரவாதமான லாபம் மட்டும் முதலாளிக்கு; இழப்புகளுக்கு பொறுப்பேற்காமல் இந்த லாபத்திற்கு அடிப்படையான உழைப்பு சக்தியை செலவிட்ட, உடல் உறுப்புகளை அல்லது உயிரையே இழக்கும் தொழிலாளிக்கோ பட்டை நாமம் போடுவது என்பதை செய்யவே O&M.

இன்று புதிதாக கட்டி இயங்கத் தொடங்கியுள்ள NTPL-ல் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 500 பேர். ஆனால் இவர்களை வேலைக்கு நியமித்துள்ள கண்ட்ராக்ட்காரர்களோ (L&T, ABB உள்ளிட்டு) 50 பேர். இந்த பிளாண்ட்டை இரவு பகலாக கடும் உழைப்பை செலுத்திக் கட்டிய ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்தம் முடிந்ததும் விரட்டப்பட்டு விட்டனர்.

1979-ல் உற்பத்தியை தொடங்கிய TTPS தொடர்ந்து 7 ஆண்டுகளாக உற்பத்தி இலக்கை சரியாக எட்டியதற்கான மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது. ஒரு யூனிட் கரண்ட்டை ரூ 2.50-க்கு தந்து லாபத்தில் இயங்கிவரும் இப்பிளாண்ட்டிலும் காண்ட்ராக்ட் முறை திணிக்கப்பட்டுள்ளது. இங்கு 2,000 பேர் நிரந்தரத் தொழிலாளிகள் இருக்க ஒப்பந்தத் தொழிலாளிகளின் எண்ணிக்கையோ அதையும் தாண்டுகிறது. அதாவது படிப்படியாக தனியார்மயம் மூக்கை நுழைக்கின்றது.

இதற்கு பதில் பாதுகாப்பாக உற்பத்தியை செய்யலாமே?

செய்யலாம்தான். ஆனால் அதற்கான கருவிகளுக்கும், கடைபிடிப்பதற்க்கும் பணம் செலவாகுமே! பாதுகாப்பை முன்வைத்தால் உற்பத்தி அளவும் – அதாவது லாபமும் குறையுமே! அதைவிட மலிவான உத்திதான் O&M மூலம் உள்..உள் காண்ட்ராக்ட்டுகளை புகுத்தியிருப்பது. இம்முறையில் யாராவது அடிபட்டாலோ உயிரை விட்டாலே காண்ட்ராக்ட் காரர்களே கட்டப்பஞ்சாயத்து பேசி பிரச்சினையை அதிக செலவின்றி முடித்துவிடும்போது எந்த முதலாளி பாதுகாப்பான உற்பத்தி முறையை விரும்புவான்? நம் உடல் உறுப்புகளும், உயிரும் எவ்வளவு மதிப்பற்றதாக கீழானதாக மாற்றப்பட்டுள்ளது!

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
கடந்த ஆகஸ்ட் 2015ல் படுகொலையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி.

அரசு – பொதுத்துறை நிறுவனங்களாவது பாதுகாப்பு விதிகளை மதிக்கிறதா?

ஆம். அதாவது எந்திரங்களை எப்படி சேதமாக்காமல் இயக்குவது என்று அதிஉயர் பாதுகாப்பை நடைமுறைப் படுத்துகிறார்கள். அதனால்தான் கொதிகலன்கள் வெடிப்பதில்லை. எந்திரங்கள் உடைபடுவதில்லை. ஒவ்வொரு நிறுவனத்திலும் முறையாக வார, மாத, காலாண்டு பராமரிப்புகளை சரியாக செய்கிறார்கள்தான்.

பவர்பிளாண்ட்டை – எந்திரங்களை பராமரிக்க என்றே அதிகாரிகளின் பெரும் பட்டாளத்தை நியமிக்கிறது அரசு. உதாரணத்திற்கு 1010 MW திறனுள்ள தூத்துக்குடி தெர்மல் பவர் ஸ்டேசனில் (TTPS) ல் மட்டும் 1 தலைமைப்பொறியாளர் (சம்பளம் – ரூ 2 லட்சம்), 7 மேற்பார்வை பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 1 3/4 லட்சம்), 25 செயற்பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 1 1/2 லட்சம்), 50 உதவி செயற்பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 80,000.00 – 1 லட்சம்), 130 உதவிப் பொறியாளர்கள் (சம்பளம் – தலா ரூ 25,000.00 – 60,000.00) என்று பெரும் கூட்டம் இயங்குகிறது.

இந்த அதிகாரிகள் மனித உயிர்களை மதிக்கிறார்களா?

எங்கே மதிக்கிறது? இனி யாருக்கும் நிரந்திர வேலை தரத்தேவையில்லை என்று உற்பத்தியில் ஒப்பந்த, உள் ஒப்பந்த முறையை புகுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் முன்னோடிகளாக இருப்பவர்கள்தானே இந்த அதிகார வர்க்கத்தினர்! இவர்களா பாதுகாப்பு விதிகளை மதிப்பார்கள்? ரோட்டில் வண்டியில் அடிபட்ட நாயை அணுகுவதற்க்கும் ஆலையில் விபத்தில் சிக்கிய தொழிலாளியை அணுகுவதற்க்கும் இந்த அதிகார வர்க்கத்தினரிடம் பெரிய வேறுபாடு கிடையாது. இதனால் எல்லாம் உற்பத்திக்கு எந்த பாதிப்பும் கிடையாதே!

பாதுகாப்பு விதிமீறல்களால் யாருக்கு – என்ன பாதிப்பு?

ஸ்டெர்லைட்டிலும், IBPL, கோஸ்டல் எனர்ஜியான், டாக்கில் மட்டுமல்ல TTPS, NTPL ஆகிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலேயே படுகொலைகள் தொடர் நிகழ்வுகளாகி உள்ளன.

TTPS-ல் கார்த்திக் என்ற இளம் தொழிலாளியை, “மேலே ஏறி வெல்டிங் செய்” என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் மின்னிணைப்பை தந்து அதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகொலையானார். தவறான மின் சுற்று வந்தால் தானாகவே இணைப்பை துண்டிக்கும் கருவியை (டிரிப் ஸ்விட்ச்சை) பொருத்தாமல் தமிழ்நாடு மின்சார வாரியமே விதியை மீறியதன் விளைவே இப்படுகொலை.

ntpl
என்.டி.பி.எல்

NTPL-ல் சிம்னியில் தொங்கியபடி பெயிண்ட் அடிக்கவைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மேலிருந்து விழுந்து உடல் சிதறியுள்ளனர். இக்கொடுமைக்கு பயந்து குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக வேலையை விட்டு சென்றும் உள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் ஆகஸ்ட்டில் 100 அடி உயரத்துக்கு மேல் கோல் பங்க்கர் பைப்லைனில் வேலை செய்ய அதிகாரிகள் இளம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை ஏவியுள்ளனர். அதில் மூன்று பேர் நெருப்பால் தாக்கப்பட்டு தோல் கருகிய நிலையில் மயங்கி கீழே விழும்போது கீழுள்ள பைப்களில் மோதி ஆனந்த்தும் முத்துக்குமாரும் உயிரை விட மரிய எக்ஸிலின் ஜெகன் தீவிரசிகிச்சையில் சேர்க்கப்பட்டார். 25 வயதேயான முத்துக்குமாரின் மனைவியோ வயிற்றில் கருவை சுமந்தபடி தன் வாழ்வே பறிபோனதாக கதறுகிறார்.

பொதுத்துறை கட்டுமானத்தின் போது இறந்தும் கூட இதற்க்கு பொறுப்பேற்கவோ இழப்பீடு தரவோ அரசு தயாரில்லை. இரங்கல் தெரிவிக்கவோ, குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக்கூட அதிகாரிகள் வருவதில்லை. காண்ட்ராக்ட் முதலாளிகளின் ஏஜெண்ட்டுகள்தான் RDO, இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் பேரம் பேசி முடிக்கின்றனர். இப்படுகொலைக்கு இதுவரை எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.

தூத்துக்குடி தொழிலாளர் படுகொலைகள்
தொழிலாளர்களின்உடலை வாங்க மறுத்து போரடும் மக்கள்.

வேலைக்கு செல்பவர்களுக்கு மட்டும்தான் ஆபத்தா?

இல்லை. தூத்துக்குடியில் இருக்கும் அனைவருக்குமே ஆபத்துதான். மணலிலிருந்து எவ்வளவு தாதுவை வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ள VV டைட்டானியமும் (கில்பெர்ன் கெமிக்கல்ஸ்), இறக்குமதியாகும் தாமிரத்தாதுவிலிருந்த எவ்வளவு தாதுவை வேண்டுமானாலும் பிரித்துக்கொள்ள ஸ்டெர்லைட்டும், நிலக்கரியை வ.உ.சி. துறைமுகம் வழியாக கொண்டுவந்து எரித்து எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் மின்சாரத்தை விற்க பவர்பிளாண்ட்களும் தாராள அனுமதியை பெற்றுள்ளன. இதுதான் தாராளமயம்.

நள்ளிரவில் வெளியேற்றும் வாயுக்களால் புறவழிச்சாலையில் வாகனத்தில்கூட செல்லமுடியவில்லை. “மூச்சு முட்டுகிறது; நெஞ்சு அடைக்கிறது” என்று லாரி ஓட்டுனர்கள் எச்சரிக்கை மணி அடித்தார்கள். இன்றோ மதுரை மீனாட்சி மிசனில் புற்றுநோய்க்கு சிகிச்சைபெறுபவர்களை “ என்ன, தூத்துக்குடியா?” என்று இயல்பாக கேட்கும் அளவு நிலைமை மோசமாகி விட்டுள்ளது. சென்னையில் அப்பல்லோவில் சிகிச்சை தரும் சிறந்த தோல் சிகிச்சை நிபுணர் தன்னிடம் தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த ஒருவரிடம் “நீங்க அலர்ஜின்னு இனி எந்த டிரீட்மென்ட் எடுத்தும் பலனில்ல. தூத்துக்குடி வேண்டாம். பேசாம ஊர மாத்திடுங்க. தமிழ்நாட்டுல கும்மிடிப்பூண்டிக்கு அடுத்தபடியா தூத்துக்குடிதான் வாழத்தகுதியில்லாத ஊர்” என்று அக்கறையுடன் சொல்லியுள்ளார். உப்பளங்களில் குவிக்கும் உப்பின்மீது சாம்பல் படிந்து கருப்பாகி விடுவதாகவும் இனி மேலும் புதிதாக அனல்மின் நிலையங்களை கட்டக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளும் இப்படி எதிர்த்துள்ளனர்.

காற்று மட்டும்தான் கெட்டுப்போனதா?

இல்லை! நீரும்தான் மாசுபட்டுப்போனது. “10 அடியில் நல்ல தண்ணீர் இருந்தது. தெருவே அதைத்தான் குடிச்சுது. இப்ப 40 அடியில் எண்ணை கலந்தாப்பலதா தண்ணீ கிடைக்கிது. அதை கக்கூஸ்க்கு மட்டும்தான் ஊத்தறோம்” என்றார் காமராஜ் நகரிலுள்ள ராமர். ஸ்டெர்லைட்டுக்கு கிழக்கு பகுதியில் நிலத்தடி நீர் பயனடுத்த தகுதியற்றதாகி விட்டது.

கம்பெனிகள் பெருகிவிட்ட 10 ஆண்டுகளில் அதே வேகத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாக புலம்புகின்றனர் பொதுமக்கள். “நான் வெவரம் தெரிஞ்சதுலிருந்து எப்பவும் கடலில் குளிப்பேன். ஆனா இப்ப மீன் பிடிக்கறப்ப, படகை ஹார்பர்ல வச்சு வேலை செய்யறப்ப தண்ணில எறங்கறோம். அப்ப ஒடம்பெல்லாம் அரிக்குது. எங்க பசங்க கடல்ல வெளயாடறதேயில்லை. கொஞ்ச நேரம் உள்ள நிக்கற நமக்கே ஒத்துக்கல்லியே, அப்ப கடல்லயே கெடக்கற மீன் மட்டும் இங்க இருக்குமா?” என்றார் 50 வயதை நெருங்கும் மீனவர்.

ஆறுமுகனேரி, சாகுபுரத்தில் உள்ள தாரங்தாரா கெமிக்கல் ஒர்க்க்ஸ் (DCW) வெளியேற்றும் அமிலக்கழிவுகள் நேரடியாக கடலில் பாய்ச்சப்படுகிறது. இதனால் புன்னக்காயல் வட்டார கடலோரங்களில் கடல்வாழ் உயிரினச் சமநிலை கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. இதை எதிர்க்கும் மீனவர்களை ஒடுக்க ஆய்தம் தாங்கிய குண்டர் படையின் ரோந்துகள் இங்கே சகஜமான ஒன்று.

நிலத்தில் என்ன நடக்கிறது?

மகாராஷ்டிர மக்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஜெயலலிதாவால் 1994-ல் நம் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டது. 428 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்து அடிக்கல் நாட்டியவரும் அம்மாதான்.

லண்டன் வாழ் இந்திய மார்வாடி அனில் சந்தீப் அகர்வாலுக்கு நம்மீது என்ன அக்கரை? நமக்கு வேலை தரவா இக்கம்பெனியை தொடங்கினான்? கொள்ளை லாபத்துக்காக தாமிரம், கந்தக அமிலத்தை போன்றவற்றை உற்பத்திசெய்துவிட்டு பல லட்சம் கிலோ ஆர்சனிக்கழிவுகளையும், கதிர்வீச்சுத்தன்மையுடைய பாஸ்போ ஜிப்சத்தையும் நிலத்தில் கொட்டுகிறான்.

கந்தக டை ஆக்சைடு வாயுக்கசிவால் பசுமைத் தீர்ப்பாயத்தால் தடைசெய்யப்பட்ட ஸ்டெர்லைட்டின் பெயர்தான் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உட்பட நகரெங்கும் பிரம்மாண்டமாக உள்ளது.

தாமிர உருக்காலையின் கழிவுகள் ரயில்வே பிளாட்பாரத்தில் (மேலூர்) ட்ராக்கின் அருகில் கொட்டப்பட்டு சமன்செய்யப்பட்டுள்ளது. இது பயணிகளின் காலையும் பதம்பார்த்துள்ளது. தாமிரக் கழிவுகள் ஊரைச்சுற்றிலும் கொட்டப்படுவது மட்டுமல்ல, கம்பெனிக்குள்ளும் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டின் திரவுக்கழிவுகளை கடலில் விட மீனவர்கள் எதிர்த்ததால் அவை பூமிக்குள் செலுத்தப்படுகின்றன. ஐ.நா.வால் பாதுகாக்க வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தின் அருகில் இயங்கும் ஆலையின் இக்கழிவுகள் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

ஆலையில் நடக்கும் விபத்துகளில் நம்மை கொல்வது மட்டுமில்லாமல் நம் குடும்பத்தையும் நோயாளியாக்கிவிட்டு சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் ஏற்பாடும் செய்கிறது ஸ்டெர்லைட். கணவனை காண்ட்ராக்ட்டில் அற்பக் கூலிக்கு பிழியும் இதே கம்பெனிதான் ஆயிரக்கணக்கில் பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அவர்களையும் கடன் வலையில் வீழ்த்துகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பருவ மழையை விரட்டி விவசாயத்தை அழித்துவரும் அதே வேளையில் விவசாயக்கூலிகளின் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் தந்து கிராமப்புறங்களில் தமது கார்ப்பரேட் பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறது.

தமது கம்பெனியில் கசிந்த வாயுவால் அனைத்து மரங்களும் இலைகளை உதிர்த்து மொட்டையாக நின்ற கொடூரத்தை லயன்ஸ் டவுன் மீனவ பெண்கள் விவரிக்க, ஸ்டெர்லைட்டோ நகரைச்சுற்றிலும் பூங்காக்களின் பராமரிப்பை செய்ய அனுமதிக்கிறார் மாநகராட்சி ஆணையாளர். அவ்வளவு ஏன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தையே ஸ்டெர்லைட்தான் பராமரிக்கிறது.

நாம் எதை முக்கியமாக பார்க்க வேண்டும்?

தோழர் பார்த்திபனைக் கொன்ற கொலைகாரர்களை சிறையில் சென்று பார்த்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் விசைப்படகு உரிமையாளர்கள். அதாவது தொழிலாளிகளுக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள். அதாவது தமது சொந்த பரதவ குல மக்களுக்கு எதிராகவே முதலாளிகள் என்று வர்க்கமாக ஒன்றிணைகிறார்கள்.

பவர் பிளாண்ட் தொடங்கி நடத்திவரும் IBPL ரெட்டி, கோஸ்டல் எனெர்ஜியானின் முஸ்லீம் முதலாளி, VV மினரல்ஸ் நாடார் வைகுண்டராஜன், நிலா சீ புட்ஸின் கிறிஸ்தவ முதலாளி, அரசு பவர்பிளாண்ட்களை இயக்கும் தலைமைப்பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் நமக்கு எதிராக – தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஒரே அணிவரிசையில் நிற்கிறார்கள். இவர்கள் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து நம்மைச் சுரண்டவே ஒன்றிணைகிறார்கள்.

பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட்டின் உற்பத்தியை தடை செய்தால் உச்சநீதிமன்றமோ ஆசீர்வதித்து ஆலையை திறக்க அனுமதிக்கிறது. தாதுமணல் கொள்ளையனான வைகுண்டராஜனுக்கு மத்திய அரசால் சிறந்த ஏற்றுமதியாளர் விருது தரப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா இரண்டில் எது ஆண்டாலும் நம்மை ஒடுக்கும் சட்டங்களை மட்டும் தவறாமல் போட்டுவருகிறது. மாநிலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என யார் ஆட்சி நடந்தாலும் நம்மீதான அடக்குமுறை மட்டும் குறைவதே இல்லை. இவர்களுடன் கூட்டணி சேரும் ஓட்டுப்பொறுக்கி கட்சியினர் நாம் தொடர்ந்து கொல்லப்படும்போது திரும்பியே பார்ப்பதில்லை. ஏனெனில் இக்கட்சியினரும், இவர்களின் தொழிற்சங்கத் தலைமையும் முதலளிகளின் பணப்பெட்டிக்குமுன் மகுடிக்கு ஆடும் பாம்பாகி விட்டவர்கள்தான். நம் நாடு மறுகாலனியாகி வருவதை மறைத்து நாடகமாடவே தேர்தல்களும் நடத்தப்படுகிறது.

உழைக்கும் மக்கள் எதை செய்யவேண்டும்?

தூத்துக்குடி பகுதி ஆலைச்சாவுகளைப் பொறுத்த வரையில் காண்ட்ராக்ட் முதலாளிகளின் சார்பாக RDO, இன்ஸ்பெக்டர் போன்றோரும், பாதிக்கப்பட்ட தொழிலாளி சார்பாக சங்கங்களும் அமைப்புகளும் சில ஆயிரம் அல்லது லட்சம் வாங்கித்தருகிறோம் என்று கட்டப்பஞ்சாயத்து பேசி மொத்தத்தையும் முடித்து விடுகின்றனர். உயிர்போகக் காரணமான ஆலையின் அதிகாரிகளையும், பாதுகாக்கத்தவறிய அரசின் தொழிலாளர் ஆய்வாளரையும், தொடர்ந்து படுகொலை நடந்தாலும் திரும்பியே பார்க்காத மாவட்ட ஆட்சியரையும் குற்றத்துக்கு பொறுப்பாக்காத இந்த சமரசம் எப்படி படுகொலைகளை (விபத்துகளை) தடுக்கும்? மொத்தத்தில் இந்த கட்டமைப்பு நம்மை காக்க வக்கற்றது என்பதைத்தான் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளது.

நம்மை ஒடுகிவரும், சுரண்டி வரும் முதலாளிகளுக்கு எதிராக, இந்த சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக, நம்மை ஆளத்தகுதி இழந்துவிட்டுள்ள இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கமாக அணி திரள வேண்டும். ஒடுக்கப்படும் அனைத்து பிரிவினருடனும் சாதி, மத, மொழி, இன வேறுபடுகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும். தொழில் ரீதியாக உள்ள பல்வேறு வேற்றுமைகளை புறந்தள்ளி அமைப்பாக வேண்டும். நாட்டையே சீரழிக்கும் முதலாளிகளிடம் இனியும் கெஞ்சிக்கொண்டிரமல் நம் வியர்வையால் வளர்த்த ஆலையின்மீதான நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். நாமே ஆலையின் உரிமையை கைப்பற்றுவோம்.

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

என்.எல்.சி தொழிலாளர் போராட்டம்: பின்னடைவு உணர்த்தும் உண்மைகள் !

3

ரசுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தக் கோரி 39 நாட்களாக நடைபெற்று வந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டு பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஊதிய உயர்வுக் கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 27 இரவு முதலாகத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

என்.எல்.சி.யில் 12 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 10 ஆயிரம் ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். 2011 டிசம்பர் 31-ம் தேதியுடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 43 மாதங்களாக புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து நிர்வாகம் அடாவடி செய்து வந்தது. ஆண்டுக்கு ரூ 1500 கோடி இலாபமீட்டியுள்ள போதிலும்,தொழிலாளர்கள் கோரும் 24 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுக்கும் நிர்வாகம், 10 சதவீத அளவுக்கே தரமுடியும் என்று பிடிவாதமாக நின்றது. ஊதிய உயர்வுக்காக 30 முறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள போதிலும், நிர்வாகம் சற்றும் இறங்கிவராத நிலையில்தான் புதிய ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர்கள் பெற்றுவந்த அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

இவ்வேலை நிறுத்தத்துக்குத் தடை விதிக்கக் கோரி என்.எல்.சி.யின் மண்டலத் தலைமை மேலாளர்  தாக்கல் செய்த மனுவை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதித்தது. இத்தடையை  மீறித்தான் கடந்த ஜூலை 20-ம் தேதி முதலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, வேலை நிறுத்தத் தடையுத்தரவை மீறியதாகத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளதுடன், அத்தலைவர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக் கூடாது என்று காரண அறிக்கையும் கொடுத்து அச்சுறுத்தியது. தொ.மு.ச. தொழிற்சங்கத் தலைவர் திருமாவளவனைப் பணி நீக்கம் செய்திருப்பதோடு, மற்ற தொழிற்சங்க நிர்வாகிகளை , “ஏன் உங்களை வேலை நீக்கம் செய்யக் கூடாது” என்று விளக்க நோட்டீசு கொடுத்து அச்சுறுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

நல்ல இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தபோதிலும், ஊதிய உயர்வைக் கொடுக்க மறுத்து என்.எல்.சி. நிர்வாகம் திமிர்த்தனமாக நடந்து கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் காரணமென்ன? ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், நிர்வாக அலுவலக முற்றுகை, ரயில் மறியல், உண்ணாவிரதம் – எனப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்திய போதிலும் இப்போராட்டம் தோல்வியடையக் காரணம்தான் என்ன?

நிர்வாகத்தின் திமிர்த்தனத்தையும், வேலைநிறுத்தத்துக்குத் தடைவிதித்த நீதித்துறையின் சர்வாதிகாரத்தையும் கண்டு தொழிலாளி வர்க்கம் அச்சப்படவோ, போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளதைக் கண்டு அவநம்பிக்கை கொள்ளவோ கூடாது. இது தோல்விதான் எனினும், போராட்டத்தில் தோல்வி ஏற்படுவது தவறல்ல. ஆனால், ஏன் தோல்வி ஏற்பட்டது என்று பரிசீலிக்காமல் இருப்பதுதான் தவறு.

இதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து அற்பக் கூலிக்கு உழைத்துவரும் என்.எல்.சி.ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2008-லும், அதன் பின்னர் 2014-லும் போராடிய போதிலும் நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை. மைய அரசோ, உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துகிறது. என்.எல்.சி.யில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குனர்கள் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க நீதித்துறை மறுக்கிறது. அதேசமயம், தற்போது நிரந்தரத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உடனே தடைவிதிக்கிறது.

என்.எல்.சி தொழிலாளர்கள்
அனல் மின் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் செல்லும் என்.எல்.சி தொழிலாளர்கள்.

நீதித்துறையானது தொழிலாளர்களின் உரிமைகளையும்  மக்களின் உரிமைகளையும் பறிக்கும்  ஒடுக்குமுறை நிறுவனமாகவே மாறி நிற்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு வேலை நிறுத்தத்தைத் தடைசெய்வதை சட்டப்படி தவறு என்று கூறுகிறார். ஆனாலும், தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் நீதித்துறையின் சர்வாதிகாரத்துக்கு எதிராக என்.எல்.சி. தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராடவில்லை. தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்து சட்டபூர்வ வழியில் போராடினாலும், நீதித்துறையும் அரசும் நிர்வாகமும் அதனைக் கடுகளவும் மதிப்பதில்லை. அரசும் நிர்வாகமும் நீதித்துறையும் தாங்கள் போட்ட சட்டத்தை தாங்களே மதிக்காத நிலையில், என்.எல்.சி. தொழிலாளர்கள் சட்டவரம்புகளை மீறிப் போராடவும்  முன்வரவில்லை.

நெய்வேலியில் ஊதிய உயர்வு கோரி நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும்,பெருமளவு பாதிப்போ தடையோ இல்லாமல் மின் உற்பத்தி வழக்கம் போலவே தொடர்ந்து கொண்டிருந்தது. ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு மின் உற்பத்தி தடைபடாமல் அனல் மின்நிலையத்தை நிர்வாகம் இயக்கியது. நிரந்தரத் தொழிலாளர்கள் போராடினாலும், ஒப்பந்த – தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தியைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை நிர்வாகத்துக்கு இருக்கிறது. அதனால்தான் நிரந்தரத் தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு போராடிய போதிலும், கடுகளவும் அசைந்துகொடுக்க மறுத்ததோடு, தொழிற்சங்க முன்னணியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

போராடிய நிரந்தரத் தொழிலாளர்கள், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து கூட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்து போராடியிருந்தால், நெய்வேலியில் மின் உற்பத்தியை முற்றாக முடக்கி, நிர்வாகத்தை நிலைகுலைய வைத்து பணிய வைத்திருக்க முடியும் . ஆனால், இதற்கு நிரந்தரத் தொழிலாளர்களும் அவர்களது தொழிற்சங்கங்களும் தயாராக இல்லை. இதனால்தான் என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கண்டு நிர்வாகம் அஞ்சவில்லை. நிரந்தரத் தொழிலாளியை வேலைநீக்கம் செய்து  வீட்டுக்கு அனுப்பினால்கூட நிர்வாகத்தை ஒன்றும் செய்ய முடியாத அவமானகரமான நிலைமைதான் உள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவதற்கும், அதிகாரிகள் ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு சம்பளத்துடன் கொழுப்பதற்கும், என்.எல்.சி. யின் லாபம் பெருகியதற்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் முக்கிய காரணமாக உள்ளனர். ஆனால், ஒப்பந்தத் தொழிலாளர் போராடினால் நிரந்தரத் தொழிலாளர்கள் ஆதரவாக நிற்பதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமும், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமுமாக தொழிற்சங்கத் துரோகிகள் தொழிலாளர்களைப் பிரித்து வைத்துதான் இயக்குகின்றனர். நெய்வேலி மட்டுமல்ல; இதர அரசுத்துறை, தனியார் துறைகளிலும் இப்படித்தான் நடக்கிறது.

இதனால் நிரந்தரத் தொழிலாளர்கள் போராடினால், தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியைத் தொடர்வதும், போராடும் நிரந்தரத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதும் தொடர்கிறது. நிரந்தரத் தொழிலாளியும் தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளியும் ஐக்கியப்பட்டு போராடாவிடில் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்துக்கே அழிவுதான். இதனைப்  படிப்பினையாகக் கொண்டு நிரந்தரத் தொழிலாளர்களும் தற்காலிக – ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடினால்தான் உற்பத்தியை முடக்கி நிர்வாகத்தை பணிய வைக்க முடியும். தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டிவளர்த்து போராடுவதற்கான பாதை விரிந்து கிடக்கிறது. பயணத்தைத்தான் தொழிலாளி வர்க்கம் தொடங்க வேண்டியிருக்கிறது.

– மனோகரன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

காட்டுவேட்டை காசுவேட்டையானது !

0

மேஷ் பிரசாத், ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள குண்ட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான பழங்குடியின இளைஞர். அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலுள்ள கீழ்சந்தை போலீசு நிலையத்தில், “தனக்கு மத்திய ரிசர்வ் போலீசு படையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தினேஷ் பிரஜாபதி, ரவி போத்ரா ஆகிய இருவரும் தன்னிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக’’க் குற்றஞ்சுமத்தி புகார் ஒன்றை அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் தினேஷ் பிரஜாபதியும் ரவி போத்ராவும் கைது செய்யப்பட்டாலும், பமேஷ் பிரசாத்துக்கு வேலையும் கிடைக்கவில்லை, அவர் கையூட்டாக அளித்த பணமும் கிடைக்கவில்லை, அவர் அளித்த புகாரின் மீது மேற்கொண்டு விசாரணையும் நடக்கவில்லை.

பமேஷ் பிரசாத் ஏமாற்றப்பட்டிருப்பது, நாள்தோறும் நாடெங்கும் நடந்துவரும் சாதாரண “சீட்டிங்” விவகாரம் போன்றதல்ல. இந்தப் புகாரை முறையாக விசாரணை செய்தால், குற்றவாளிக் கூண்டில் தினேஷ் பிரஜாபதியும், ரவி போத்ராவும் மட்டும் நிற்கமாட்டார்கள். ஜார்கண்ட் மாநில போலீசும், அம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக இறங்கியிருக்கும் மைய ரிசர்வ் போலீசு படையும் (சி.ஆர்.பி.எஃப்.) கூண்டில் ஏற வேண்டியிருக்கும். ஏனெனில், பமேஷ் பிரசாத் அளித்துள்ள புகார் மைய ரிசர்வ் போலீசு படையும் ஜார்கண்ட் மாநில போலீசும் தேசப் பாதுகாப்பு, மாவோயிச தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தியிருக்கும் மிகப்பெரும் கிரிமினல் மோசடித்தனத்தை, ஊழலை அம்பலப்படுத்தும் துருப்புச் சீட்டாக உள்ளது.

போலி மாவோயிஸ்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, சரணடையச் செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்கள்.
சி.ஆர்.பி.எஃப் படை அதிகாரிகளால் போலி மாவோயிஸ்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, சரணடையச் செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்கள்.

பமேஷ் பிரசாத்திடமிருந்து இரண்டு இலட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்ட தினேஷ் பிரஜாபதி, ரவி போத்ராவை பமேஷ் பிரசாத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ரவி போத்ரா பமேஷ் பிரசாத்திடம், “போலீசிடம் சரணடையும் மாவோயிச தீவிரவாதிகளை மைய ரிசர்வ் போலீசு படையில் சேர்த்துக் கொள்ளும் திட்டமொன்று உள்ளது. நீ செய்யவேண்டியதெல்லாம், நானொரு நக்சலைட்டு எனக் கூறி ஆயுதத்தோடு போலீசிடம் சரணடைந்து, சில மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும். அதன் பிறகு திருந்திய தீவிரவாதி என்ற அடிப்படையில் மைய ரிசர்வ் போலீசு படையில் உனக்கு வேலை கிடைக்கும்” எனக் கூறியதற்கு ஏற்ப, ஆயுதத்தோடு சரணடைந்த பமேஷ் பிரசாத், ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள மைய ரிசர்வ் போலீசின் சிறப்பு அதிரடிப் படை (கோப்ரா படை) முகாமில் அடைக்கப்பட்டார்.

அந்த முகாமில் பமேஷ் பிரசாத் போலவே, பல நூறு பழங்குடியின இளைஞர்கள் – ஏறத்தாழ 514 பேர் – மாவோயிச தீவிரவாதி எனக் கூறி சரணடைந்து, மைய ரிசர்வ் போலீசு படையில் சேரும் கனவோடு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பழங்குடியின இளைஞர்கள். பத்தாவதோ, +2-வோ, ஐ.டி.ஐ படிப்போ முடித்துவிட்டு வேலைதேடி அலைந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரவி போத்ராவையும், தினேஷ் பிரஜாபதியையும் தெரிந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பழங்குடியின மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் எதிர்பார்ப்பு ஒன்றாகவே இருந்தது. அரசுப் படையில் சேர்ந்துவிட்டால் தமது குடும்பத்தைப் பிடித்தாட்டும் வறுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற ஆசையில், தமக்குச் சொந்தமான வயல்வெளிகளை விற்றுவிட்டோ, கடன் வாங்கியோ ஒரு இலட்ச ரூபாய் முதல் இரண்டரை இலட்ச ரூபாய் வரை இலஞ்சமாகக் கொடுத்துவிட்டு, அவர்கள் அம்முகாமை வந்தடைந்தனர். வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆறு மாதம், ஒரு வருடம் என அந்த முகாமில் அடைபட்டு, வேலைக்கான உத்தரவு இன்றோ அல்லது நாளையோ வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கிடந்து வந்தனர்.

07-sundara-kujurஆனால், பமேஷ் பிரசாத் உள்ளிட்டு, அவர்களுள் ஒருவருக்குக்கூட அரசுப் படையில் வேலை கிடைக்கவில்லை. மாறாக, சரணடைந்த தீவிரவாதி என்ற முத்திரையோடு அவர்கள் ராஞ்சி முகாமிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இன்று அந்த முத்திரையே வேறு வேலை தேடுவதற்கு பெருந்தடையாக மாறிவிட்டது. கொடுத்த பணத்தை மீட்க அதிகார வர்க்கத்தோடு பமேஷ் பிரசாத் போராடிக் கொண்டிருக்கிறார் என்றால், சுந்தர குஜுர் 400 மைல்களுக்கு அப்பால் உ.பி.யிலுள்ள ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமையைப் போல வேலை பார்த்துவருகிறார். “இந்த விசயத்தில் ஒருபோதும் நீதி கிடைக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால், அடகு வைக்கப்பட்ட குடும்ப நிலத்தை மீட்க 40,000 ரூபாய் நான் சம்பாதிக்க வேண்டும் ” என்கிறார், அவர்.

0000

தேசப் பாதுகாப்பு, தேச ஒருமைப்பாடு, தீவிரவாத ஒழிப்பு என்ற பெயர்களில் இராணுவமும், போலீசும் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொட்டடிச் சித்திரவதைகளை நாடெங்கும் நடத்தி வருகின்றன. அப்பாவிகளைக்கூட மாவோயிச தீவிரவாதிகளாக, முசுலீம் தீவிரவாதிகளாக, அல்லது அவர்களது ஆதரவாளர்களாகப் பொய்க் குற்றஞ்சுமத்தி சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றன. அத்தகைய குற்றங்களின் இன்னொரு பக்கம்தான் இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழல். அவை மனித உரிமை மீறல் குற்றங்கள் என்றால், இந்த ஊழல் கடுந்தண்டனைக்குரிய சதி, மோசடி, அதிகார முறைகேடுகள் நிறைந்த கொடுங்குற்றம்.

மத்தியில் காங்கிரசு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபொழுது, இடதுசாரி தீவிரவாத அமைப்புகளிலிருந்து விலகி போலீசிடம் சரணடைபவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதியைக் கூட்டித் தரப் போகும் திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில்தான் ஜார்கண்டில் இந்த போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழலும் தீவிரமாக நடந்தது. இந்த ஊழலின் வெளிப்புற முகமாக அம்பலமாகியிருக்கும் ரவி போத்ரா, சில்லறைத்தனமான போர்ஜரி வேலைகளைச் செய்யும் சாதாரண கிரிமினல் பேர்வழி அல்ல. போலீசாலும், இராணுவத்தாலும் தயார்படுத்தப்பட்டவன். நாகலாந்து மாநில போலீசில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவன், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பணிநீக்கம் செயப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நான்கே நாட்களில் பிணையில் வெளியே வந்தான். அதன் பிறகு, மணிப்பூர், அசாம் மாநிலங்களில் இராணுவத்திற்கு ஆள்காட்டியாக வேலை செய்திருக்கிறான்.

07-kuldeep-bharaஇந்த அனுபவம், தொடர்புகளோடு ஜார்கண்டிற்கு வந்து சேர்ந்த அவன், தன்னை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியாகப் பழங்குடியின இளைஞர்களிடம் காட்டிக் கொண்டான். அவனின் இந்த “பில்ட்-அப்”பிற்கு அனைத்துமாக இருந்தது, சி.ஆர்.பி.எஃப். படை. அவன் ஊரைச் சுற்றி வருவதற்கு சி.ஆர்.பி.எஃப்.க்குச் சொந்தமான ஜீப்பும் அவனுக்கு சி.ஆர்.பி.எஃப். சிப்பாகளின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவனது மோசடி வேடத்திற்கு ஒரு நம்பகத்தன்மை உருவாக்கப்பட்டது.

இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஜார்கண்டு மாநில போலீசு டி.ஜி.பி. ஜி.எஸ்.ராத் முன்னிலையிலும் நடந்தது. சரணடைந்த இளைஞர்களுள் ஒருவர்கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த வழக்கும் புனையப்படவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் மத்திய ரிசர்வ் படையின் முகாமில் அடைக்கப்பட்டு, அம்முகாமும் மத்திய ரிசர்வ் போலீசு படையாலேயே பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்குத் தேவையான உணவு ராஞ்சியிலுள்ள மத்திய சிறைச்சாலையிலிருந்து போலீசு அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.

முகாமில் இருந்த இளைஞர்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் போலீசுக்குரிய உடற்பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் நகரத்திற்குள் சென்றுவரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் சொந்த கிராமத்திற்கு ரிசர்வ் போலீசு படையின் வாகனங்களில் சென்று திரும்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த கிராமத்துப் பழங்குடியின இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்த மோசடி வலைக்குள் விழுந்துள்ளனர். இந்த 514 பேரிடமும் தலைக்கு ஒன்று முதல் இரண்டரை இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் பெறப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, தீவிரவாதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு அரசு கொடுத்த நிதியையும் போலீசும் மத்திய ரிசர்வ் போலீசு படையும் பங்கு வைத்து சுருட்டிக் கொண்டுவிட்டன.

07-karam-dayal-tikkaஇந்த 514 பேரும் கையில் நவீன ஆயுதங்களுடன் ஜார்கண்ட் மாநில போலீசிடம் சரணடைந்துள்ளனர். இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழலே மத்திய ரிசர்வ் போலீசு படையும் ஜார்கண்ட் மாநில போலீசும் நடத்திய சதி என்பதால், அந்தப் படைகளின் அதிகாரிகளைத் தவிர, வேறு வழியில் இந்த நவீன ஆயுதங்கள் சரணடைந்த பழங்குடியின இளைஞர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது. இத்துணை பெரும் தொகையிலான, பல்வேறுவிதமான ஆயுதங்களை போலீசு அதிகாரிகள் சப்ளை செய்திருக்கிறார்கள் என்பது, எவ்விதக் கணக்கிலும் வராத, சட்டவிரோதமான, கள்ளத்தனமான ஆயுதக் கிடங்குகளை போலீசும் துணை இராணுவமும் நடத்திவருவதை அம்பலப்படுத்துகிறது.

2012-ம் ஆண்டின் இறுதியில் மத்திய ரிசர்வ் போலீசு படையில் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட எம்.வி.ராவ், ராஞ்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் குறித்துப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, இது குறித்து விசாரிக்குமாறு ஜார்கண்ட் மாநில போலீசுக்குக் கடிதம் எழுதினார். இதன் பிறகு, முகாமில் இருந்த இளைஞர்களைச் சொந்த ஊருக்குத் துரத்தியடித்ததுதான் நடந்ததேயொழிய, விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பமேஷ் பிரசாத் மார்ச் 2014-ல் போலீசில் புகார் கொடுத்த பிறகு ரவி போத்ராவும் தினேஷ் பிரஜாபதியும் கைது செயப்பட்டு, இந்தப் புகார் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப் போவதாக சவுண்டு விடப்பட்டதைத் தாண்டி எதுவும் நடைபெறவில்லை.

07-vijay-kobe“போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள்தான் தன்னை இயக்கியதாக” ரவி போத்ரா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும்கூட எந்தவொரு அதிகாரியும், போலீசுக்காரனும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. மூத்த வழக்குரைஞரான ராஜீவ் குமார், “இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கோரி ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகாரை முறையாக விசாரிக்கத் தொடங்கினால் பல உயர் போலீசு அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல; சரணடைந்த இடதுசாரி தீவிரவாதிகள் மறுவாழ்வுத் திட்டம் என்பதே துணை இராணுவப் படைகளும், போலீசும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடாக இருந்துவருவதும் அம்பலமாகிவிடும் என்பதால்தான் இந்த ஊழல் புகாரை ஊறுகாய் பானைக்குள் போட்டு வைத்திருக்கிறது, அரசு.

07-krishna-oranபமேஷ் பிரசாத், சுந்தர குஜுர், குல்தீப் பாரா, தேவ்தத் கோபே, சுக்தேவ் முண்டா, ரோஷன் குடியா, கரம் தயாள் டிக்கா, ரோஷன் திர்கே, அம்ரித் பிரகாஷ் திர்கே, விஜ கோபே – என இந்த மோசடியில் சிக்கவைக்கப்பட்ட ஒவ்வொருவரின் எதிர்காலமும் இன்று இருண்டு போவிட்டது. அவர்கள் அனைவரும் இன்று அரசிடம் வேலை கேட்கவில்லை. தங்களை ஏமாற்றி பறிக்கப்பட்ட பணத்தைக் கேட்கவில்லை. மாறாக, தங்கள் பகுதி போலீசு நிலையத்திலிருந்து, “நாங்கள் மாவோயிச தீவிரவாதி இல்லை” என்ற நன்னடத்தைச் சான்றிதழை வழங்குமாறுதான் கோருகிறார்கள். இந்த 514 பேரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை ஒத்துக்கொண்டுள்ள அரசாங்கமோ, இந்த மோசடி குறித்து விசாரணையும் நடத்தவில்லை. அவர்கள் கோருகிற நன்னடத்தைச் சான்றிதழையும் வழங்க மறுக்கிறது.

எப்பேர்பட்ட பொறுப்பற்ற, இரக்கமற்ற, மோசடியான அரசு அமைப்பின் கீழ் வாழுமாறு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருப்பதை வாசகர்கள் நிச்சயம் உணர முடியும். ஆனால், நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதனை மட்டுமல்ல. மாவோயிச தீவிரவாதம்தான் மிகப் பெரும் உள்நாட்டு அபாயம் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது என்றும் முத்திரை குத்தி, அதனை ஒழிப்பதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வெளிப்படையாக மட்டுமின்றி, நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் இரகசியமாகவும் செலவழிக்கப்படுகிறது. அரசுப் படைகள் மாவோயிச தீவிரவாதத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதாகவும், அதனால் அப்போரில் நடைபெறும் அத்துமீறல்களைப் பெரிதுபடுத்தக் கூடாதென்றும் கூறி, அரசுப் படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது.

ஆனால், ஜார்கண்டில் நடந்துள்ள இந்த ஊழல் “மாவோயிச தீவிரவாதத்தை ஒழிப்பது” என்ற கடமையை நிறைவேற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் துணை இராணுவப் படையும், போலீசும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் போலியான மாவோயிஸ்டுகளை உருவாக்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது. அரசுப் படைகள் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைக்கு எதிராகச் செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது. கேள்விக்கிடமற்ற புனிதக் கடமைகளாகக் கூறப்படும் தேசப் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்றவற்றைக்கூட அதிகார வர்க்கம் தனது சொந்த ஆதாய நோக்கிலிருந்து மட்டுமே அணுகியிருப்பதை, அதற்கு அப்பால் அக்‘கடமைகளின்’பால் அவர்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையை நிறைவேற்றும் தகுதியும் நம்பகத்தன்மையும் இல்லாத, கொள்ளைக்கூட்டமாக அரசுப் படைகள் சீரழிந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது.

வேலியே பயிரை மேய்வதா என்பன போன்ற அறத்திற்கெல்லாம் இப்பொழுது அதிகாரக் கட்டமைப்பில் இடமில்ல. மாறாக, பயிரை மேய்வதே வேலியின் கடமை என்பதாக அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளும், இந்த அதிகார கட்டமைப்பும் மாறிவிட்டதைதான் இத்தகைய ஊழல்களும், அதிகார முறைகேடுகளும், மனித உரிமை மீறல்களும் எடுத்துக்காட்டுகின்றன.

– செல்வம்

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

மூடு டாஸ்மாக்கை ! சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை

0

கஸ்டு 3 சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தை ஒட்டி கைது செய்யப்பட்ட மாணவர்கள் 38 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.தோழர்கள் சாரதி, ஆசாத், மாரிமுத்து, செல்வக்குமார், நினைவேந்தன், திருமலை, தினேஷ் ஆகியோர் புழல் சிறையில் இருந்து முழக்கமிட்டபடியே வெளியே வந்தனர். அதே போல பெண்கள் சிறையிலிருந்து தோழர்கள் நிவேதிதா, வாணிஸ்ரீ, ரூபாவதி, ஜான்சி ஆகியோரும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியோடு வெளியே வந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சிறை வாயிலில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் அணிதிரண்டு வரவேற்றனர். விடுதலை செய்யப்பட்ட தோழர்களை கடுமையாக அடித்தும், உளவியல் சித்திரவதை செய்தும் போலீசு துன்புறுத்தினாலும் அவர்களின் மன உறுதியை குலைக்க முடியவில்லை. இவர்களை விடுவிக்க கூடாது என்று போலீசு மட்டுமல்ல, நீதிமன்றமும் எத்தனை எத்தனை இடையூறு செய்தாலும் தோழர்கள் உறுதி குலையாமல் அதை எதிர் கொண்டார்கள். வழக்கு போராட்டத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மேற்கொண்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதே போன்று கடலூர் சிறையிலிருந்து மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மற்றும்  தோழர்கள், கோவை சிறையிலிருந்தும் ஐந்து தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்டு பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டு சிறை வாசம் தொடர்ந்தாலும் தோழர்கள் உறுதியாக அதை எதிர் கொண்டு போராடினார்கள். அனைவரையும் பெருந்திரளான மக்கள், தோழர்கள் கூடி நின்று வரவேற்றனர்.

tasmac-protest-com-raju-released-14டாஸ்மாக்கை மூடும் வரை போராட்டம் ஓயாது என்று மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறைக்கு வெளியே அறிவித்தார். அதையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் புழல் சிறை முகப்பில் அறிவித்தனர்.

ஏதோ சிறையில் அடைத்து பிணை மறுத்தால் போராட்டம் முடங்கிவிடும் என்று அரசு நினைப்பது நடக்காது.

 

 

 

 

தகவல்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாசலம்

ஊழல் நீதிபதிகளை எதிர்த்தால மத்திய போலிசு படை !

7

அன்பார்ந்த வழக்கறிஞர்களே,பொதுமக்களே!

நேற்று (15.09.2015) சென்னை உயர்நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், சிவஞானம் அமர்வு,  தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி சில வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து, உயர்நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. நீதிமன்றத்தின் மாண்பைப் பாதுகாப்பது என்ற பெயரில் வழக்குரைஞர் சமூகத்தையே குற்றவாளிகளாகச் சித்தரித்திருக்கிறது.

madras-high-courtவழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு (1) மதுபாட்டிலோடு வருகிறார்கள் (2) பெண் போலீசை கிண்டல் செய்கிறார்கள் (3) கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் (4) கட்சிக்காரர்கள் பெரும் தொகை கொடுக்காவிட்டால்,பொய்ப் புகார் கொடுக்கிறார்கள் (5) தவறே செய்யாத போலீசு மீது குற்றம் சுமத்துகிறார்கள் (6) நீதிமன்றங்களில் ஊர்வலம், போராட்டம் நடத்துகிறார்கள் (7) யோகா வகுப்பு நடத்த விடாமல் தடுக்கிறார்கள் (8) மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் – என்று போலீசார் எழுதிக் கொடுத்த குற்றப்பத்திரிகையை வாசித்து, விசாரணை நடத்தும் முன்னரே தண்டனையையும் அறிவித்து விட்டார்கள். இனிசென்னை, மதுரை உயர்நீதிமன்ற வளாகங்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமாம். நீதித்துறையின் இறையாண்மையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தையும் பிடுங்கி மத்திய அரசிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார்கள் மாண்புமிகு நீதிபதிகள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும் வழக்காடவும் வழக்குரைஞர்களாகிய நாம் தயார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்லவும் தயார். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி நீதியரசர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதே நாம் முன்வைக்கும் கேள்வி. சென்னை, மதுரை வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைக் காட்டிலும் கடுமையான எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உயர்நீதி மன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது இருக்கின்றன.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் (1) சேம்பரில் மது அருந்துகிறார்கள் (2) நீதிமன்ற பெண் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள் (3) கிரானைட், தாதுமணல்,கார்ப்பரேட் வழக்குகளில் ஊழல் செய்து பல நூறு கோடி சம்பாதிக்கிறார்கள் (4) காசு வராத வழக்குகளில் தொடர்ந்து வாய்தா போடுகிறார்கள் (5) பெண் நீதிபதிகளை டான்ஸ் ஆடச் சொல்கிறார்கள் (6) கீழமை நீதிமன்ற நீதிபதிகளை மீன் குழம்பு வைத்து வரச் சொல்கிறார்கள் (7) சாதிவெறியோடு செயல்படுகிறார்கள் (8) நீதிமன்ற டெபாசிட் பணத்தை கையாடல் செய்கிறார்கள் (9) அரசு-போலீசுக்கு ஆதரவாக முறைகேடாகத் தீர்ப்புச் சொல்கிறார்கள் (10) நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் ஊழல் செய்கிறார்கள் என ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு நீதிபதிகள் தயாரா? நீதிமன்ற அவமதிப்பு என்ற கவசத்தைப் பயன்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை அழிப்பவர்கள் நீதிபதிகள்தான் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?

ட்டாய ஹெல்மெட் என்ற உத்தரவும், அணியாதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, மக்கள் நலனுக்கு எதிரானது என்பது மதுரை வழக்குரைஞர் சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடைய கருத்து. எனவேதான், மதுரை வழக்குரைஞர்களாகிய நாங்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்தோம். விமரிசித்தோம். இது ஒரு கருத்துரிமை. கருத்தை வெளிப்படுத்தும் குடிமக்களின் உரிமையைப் பறிக்கின்ற அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. நாங்கள் பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்றால் ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களையும், இந்த தீர்ப்புக்கு எதிராக அன்றாடம் பேசி வரும் லட்சக்கணக்கான மக்களையும் உயர்நீதிமன்றம் தண்டிக்கட்டும்.

எங்களுக்கு எதிராக 16-09-2015 அன்று நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணை குறித்து நீதிபதிகள் சி.டி.செல்வம், தமிழ்வாணன் அமர்வு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, மற்ற வழக்கறிஞர்கள் உள்ளே வரக்கூடாதாம்; இன்– கேமரா விசாரணையாம்; வீடியோ பதிவாம்; சீருடை அணிந்த-அணியாத போலீசு பாதுகாப்பாம்! நூற்றுக்கணக்கான கொலைகளை அரங்கேற்றிய சாதி, மதவெறி கிரிமினல்களின் வழக்குகள் கூட திறந்த நீதிமன்றத்தில் நடத்தப்படுகின்றன.  வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட நடந்திராத வகையில் வழக்குரைஞர்களை பயங்கரவாதிகளைப் போல சித்தரிக்கிறது இந்த உத்தரவு.

நீதிமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் உயர்நீதிமன்ற வளாகத்தை மத்திய போலீஸ் படையிடம் ஒப்படைப்பது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன் காமெரா விசாரணை – என்பன போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். உண்மை அதுவல்ல.

இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 10-ம் தேதியன்று தென்மாவட்ட வழக்கறிஞர்கள் சுமார் 1500 பேர் மதுரையில் கூடி நீதித்துறை ஊழலுக்கெதிராகப் பேரணி நடத்தினோம். ஊழல் நீதிபதிகள் பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட்டோம்.  நீதித்துறை ஊழலைப் பற்றி பகவதி முதல் கட்ஜு வரை பல உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பேசியிருக்கிறார்கள். வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊழலை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு ஆண்டுக்கணக்கில் தூங்குகிறது. பல அரசியல் வாதிகளும் ஊடகங்களும் இதனைக் கூறியிருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாத நீதிபதிகள், 1500 வழக்குரைஞர்கள் வீதிக்கு வந்து குறிப்பான நீதிபதிகள் மீது குறிப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியவுடனே கொந்தளிக்கிறார்கள். தங்களுடைய உண்மை முகம் மக்கள் மத்தியில் அம்பலமாவதை அவர்களால் சகிக்க முடியவில்லை.

ழக்குரைஞர்கள் பொதுப்பிரச்சினைக்காகப் போராடுவது இது முதல் முறையல்ல.

காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், உரிமையியல்-குற்றவியல் சட்டத்திருத்தங்கள், மூவர் தூக்கு என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்குரைஞர்கள் போராடியிருக்கின்றனர். நீதிபதி சுபாஷண் ரெட்டியின் பாசிசக் கட்டளைகளை எதிர்த்துப் போராடி முறியடித்திருக்கிறோம். இவற்றையெல்லாம் பொறுக்க முடியாமல்தான் பிப்ரவரி 19-ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் போலீசு படை புகுந்து தாக்குதல் நடத்தியது. நீதிபதிகள், பெண் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் என்று பலரை போலீசார் தாக்கியதற்கும், வாகனங்களை நொறுக்கியதற்கும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும் அந்த வழக்குகள் தூங்குகின்றன.

இப்போது நீதிமன்ற வளாகத்தையே போலீசு முகாமாக மாற்றுவதென்று முடிவு செய்து விட்டார்கள் நீதியரசர்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நகைப்புக்குரியவை. ‘’வழக்குரைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், கார்களை நிறுத்துகிறார்கள்’’ என்று உப்பு சப்பில்லாத குற்றச்சாட்டுகளை தலைமை நீதிபதி அடுக்குகிறார். மாட்டுக்கறியும் அசைவமும் சாப்பிடுபவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். யோகா என்ற பெயரில் உயர் நீதிமன்றத்துக்குள் இந்துத்துவ பிரச்சாரம் செய்வதை எதிர்ப்பவர்களும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் தடுத்து, நீதித்துறையின் மாண்பைக் காப்பாற்ற வேண்டுமானால், மத்திய போலீசு படையிடம் உயர் நீதிமன்ற வளாகத்தை ஒப்படைக்க வேண்டுமாம் !

“ஊழல் நீதிபதிகளிடமிருந்து நீதியின் மாண்பைக் காப்பாற்றுவோம்” என்று குரல் எழுப்பினால், அப்படிக் குரல் எழுப்பும் “வழக்குரைஞர்களை மட்டுமல்ல, நீதிமன்ற வளாகத்தையே போலீசிடம் ஒப்படைப்போம்” என்கிறார்கள் நீதியரசர்கள். இதைவிடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பை யாரேனும் இழைக்க முடியுமா?

ழக்கறிஞர்கள் குற்றமே இழைக்காதவர்கள் என்று நாம் ஒரு போதும் சொல்லவில்லை. குற்றமிழைப்பவர்கள் யாராயிருந்தாலும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால் கடந்த 67 ஆண்டுகளில் எந்த உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஊழல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டதில்லை.  இவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால், வெளிப்படையாக துணிச்சலாக ஊழல் குற்றம் முதல் பாலியல் குற்றம் வரை அனைத்தையும் செய்கிறார்கள். தட்டிக் கேட்டால், குற்றமிழைக்கும் நீதிபதிகளே, நீதிமன்ற அவமதிப்பு என்று நம்மை மிரட்டுகிறார்கள்.

நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பாதுகாப்பு அகற்றப்படாத வரை நீதித்துறை ஊழலை ஒழிக்கவே முடியாது. அரசியல்வாதிகள் சொத்துக் கணக்கை காட்டவேண்டும் என்று ஒப்புக்காவது ஒரு சட்டமிருக்கிறது. ’’நீதிபதிகளோ சொத்துக்கணக்கு காட்ட மாட்டோம். ஏனென்றால் நாங்கள் நீதிபதிகள்’’ என்று கூச்சமே இல்லாமல் அறிவிக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் உயர் நீதிமன்றத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள் நீதியரசர்கள்.

“முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பை மத்தியப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கேட்டால் அது கேரள அரசின் உரிமை என்று கூறும் நீதிமன்றம், தமிழகத்தின் உயர் நீதிமன்றத்தை மத்தியப் படையிடம் ஒப்படைக்கக் கோருகிறது. தமிழே தெரியாத தலைமை நீதிபதிகள், தமிழே தெரியாத போலீசு படைகளின் கட்டுப்பாட்டில் தமிழகத்தின் உயர் நீதிமன்றம்! நெய்வேலியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஒரு அப்பாவித் தொழிலாளியைச் சுட்டுக் கொன்று விட்டு, அதனை எதிர்த்த பிற தொழிலாளர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காட்சியைத் தமிழகமே கண்டது. உயர் நீதிமன்றத்திலும் நாளை இது நடக்கும். “நீதிபதிகளின் ஊழலை எதிர்த்தால் என்கவுன்டர்” என்பதுதான் தற்போது பிறப்பிக்கப் பட்டிருக்கும் உத்தரவுக்குப் பொருள்.

இந்த சர்வாதிகாரத்துக்கு பணிய மாட்டோம் என்பதைத் தமிழகத்தின் வழக்குரைஞர்கள்  நிரூபித்துக் காட்டுவோம்!

நீதித்துறை ஊழலுக்கு முடிவு கட்டுவோம்.

000

ஊழல் நீதிபதிகளை எதிர்க்கும்
வழக்குரைஞர் சமூகத்தை மிரட்டுவதற்கு
வருகிறது மத்திய போலிசு படை !

நீதிமன்றங்கள் இனி போலீசு நிலையங்கள் !

ஜனநாயகத்தை
குழி தோண்டிப் புதைக்கும்
நீதிமன்றப் பாசிசம்!

ஆர்ப்பாட்டம்

நாள்:16.09.2015 புதன்
இடம்:ஆவின் முன்பு,
உயர்நீதிமன்றம்,சென்னை.

அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள்தமிழ்நாடு

ஊழல் நீதிபதிகள் மீதான புகார்களைத் தெரிவிக்க
மதுரை வழக்கறிஞர் சங்கம்
தொலைபேசி   எண்
: 0452- 2537120

சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு

2

barathmata sunniபுண்ணிய பாரத தேசத்தின் புதல்வர்களாம் ஹிந்துக்கள் முக்தியடைந்து வைகுந்தமோ கைலாயமோ செல்வதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் இடையறாத சிந்தித்து வருபவர் மானனீய ஸ்ரீ வீரத்துறவி இராம கோபாலன்ஜி அவர்கள். அம்பாளுக்கு உகந்த ஹிந்துக்களின் புனித தினமாம் வெள்ளிக்கிழமை (11/09/2015) அன்று இன்னொரு (குட்டி) தேசபக்தர் திருவாளர் ரஜினி காந்துக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மானனீய வீரத்துறவிஜி.

”பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவர் திப்பு சுல்தானின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கவுள்ளதாகவும், அதில் நடிக்க ரஜினி காந்திடம் பேச்சு நடத்தப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. திப்பு சுல்தான் தமிழர்களைக் கொன்றவன்; அதனால் அவனது வாழ்க்கை வரலாற்றில் தமிழரை மதிக்கும் ரஜினி நடிக்கக் கூடாது” என்று மானனீய ஸ்ரீ வீரத்துறவி ராம கோபாலன் அறிவுறுத்தியுள்ளார். இதை பரம்பூஜனிய மோடிஜியின் பெயரில் ஆணையாக ஸ்ரீமான் ரஜினி சார்வாள் புரிந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.

மேலும் அன்னாரது அறிக்கையில், ”கொங்கு பகுதியான பொள்ளாச்சியில் வசித்து வந்த அமரர் எம்.ஜி.ஆரின் தமிழ் மூதாதையர்கள் கேரளாவுக்கு இடம் பெயரக் காரணமே திப்பு சுல்தானின் படையெடுப்பும், அவன் தமிழர்களைப் படுகொலை செய்ததும் தான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “திப்பு சுல்தான் ஒரு ஹிந்து மத விரோதி. அவனது வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் படத்தைத் திரையிட விடமாட்டோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. புரட்சித் தலைவரின் மூதாதையர்களை கொன்றவன் என்பதால் புரட்சித் தலைவியும், ரத்தத்தின் ரத்தங்களும் பொங்கி இந்த தர்ம யுத்தத்திற்கு ஆதரவு அளித்தாக வேண்டும். கூடவே தேச நலன் கருதி உருவாக இருக்கும் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு இந்த அறப்போர் ஒரு ஓப்பனிங்காக இருக்கும் என்பது நிச்சயம்.

மானனீய ஸ்ரீ வீரத்துறவியார் அவர்கள் ஹிந்துக்களின் நலன் குறித்து பேச ஆரம்பித்தாலே வயிற்றுப் போக்கு வந்த ஆசன வாய் போல் நில்லாது கொட்டும் என்பது ஈரேழு லோகமும் அண்ட சராசரங்களும் அறிந்த உண்மை. அப்படியிருக்க, விதேசி சித்தாந்தத்தை இறக்குமதி செய்து பேசும் இடதுசாரிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட பத்திரிகை உலகம் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் அறிக்கையை கத்தரித்திருக்கவே வாய்ப்புள்ளது.

இது ஒரு பக்கமிருக்க, நீங்களே யோசித்துப் பாருங்கள். கொடுங்கோல முஸல்மான் திப்பு சுல்தானின் கொடுமைகள் அதிகரித்த காரணத்தால் பச்சைத் தமிழ்க் கொங்குவேளாள கவுண்டர்களான எம்ஜியாரின் முன்னோர்கள் பாலக்காட்டுக்கு இடம்பெயர்ந்ததோடு மதமாற்றத்தைத் தவிர்க்க மலையாள நாயர்களாக ஜாதியே மாறியுள்ளனர்.

சாட்சாத் அந்த மதுரை மீனாக்‌ஷியின் திருவுளத்தால் திப்புவின் கொடுங்கோன்மை ஒரு கட்டுக்குள் இருந்திருக்கிறது; ஒருவேளை அடங்காதிருந்து கவுண்டரிலிருந்து நாயராக ஜாதி மாறாமல் ஒரேயடியாக எல்லோரும் அய்யராகவும் அய்யங்காராகவும் மாறியிருந்தால் வருண தருமத்தின் நிலை என்னவாகியிருக்கும்? எல்லோரும் ஆன்மீகப் பணியில் ஆழ்ந்திருக்க, ஷத்ரிய, வைஸ்ய மற்றும் ஷூத்ர தர்மங்கள் என்னவாகியிருக்கும்? தோளும் உடலும் காலுமின்றி – அதாவது முண்டம் இல்லாமல் – தலை மட்டுமே கொண்ட ஸமூகம் நிலைகுலைந்திருக்குமே?

மீனாக்‌ஷி காப்பாற்றினாள்.. போகட்டும்.

மானனிய ராமகோபாலன்ஜி பெரியவாள் கூறியிருப்பதில் ஒரு உண்மையை பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று கொங்கு மண்டலத்தில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு பெண்களை மயக்கும் ஈனச்சாதி ஆண்களை எதிர்த்து தளபதி யுவராஜின் தலைமையில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு மகாபாரத யுத்தமே நடத்தி வருகிறார்கள். பிறகு கொங்கு வேளாள சிங்கங்களுக்கு போதிய பெண்கள் கிடைக்காததால், மலையாள தேச நாயர் பெண்களை மணம் செய்து வருகின்றனர். இந்த படிக்கு பார்த்தாலும் புரட்சித் தலைவரின் முன்னோர்கள் நாயராக அவதாரமெடுத்தது பொருந்தி வருகிறது.

சதா சர்வகாலமும் ஹிந்துக்களின் நலன் குறித்தே சிந்திக்கும் மானனீய ஸ்ரீ வீரத்துறவியாரின் மூளைச் சுரப்பை நாங்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், சுருக்கப்படாத அன்னாரின் அறிக்கையின் பிற பகுதிகள் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருவது ஹிந்து பூமியில் பிறந்தவர்கள் என்ற முறையில் எமது கடமை; அதை அவ்வண்ணமே கீழேயுள்ள வியாஸத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளோம்.

ஓம்

வீர ஷிவாஜியின் அவதார பூமியில் பிறந்த ரஜினிகாந்த் வெள்ளைக்காரனோடு சண்டை போட்ட தீவிரவாத முஸல்மான் திப்பு சுல்தானின் வேடத்தில் நடிக்க பேச்சு நடக்கிறதாம். இந்த நாட்டில் ஹிந்துக்களின் நிலை மிகவும் தாழ்ந்து போய் விட்டது. அப்படித்தான் மன்னர்கள் வேடத்தில் நடிக்க வேண்டுமென்றால் ஆழ்வார்களும், நாயன்மார்களும், சாதுக்களும் நடமாடிய தமிழகத்தில் ஹிந்து மன்னர்களுக்கா பஞ்சம்?

பாண்டிய மன்னர்கள் இருந்தார்கள், சோழ மன்னர்கள் இருந்தார்கள்.. இன்னும் வேளிர்குல குறுநில மன்னர்கள் ஏராளம் ஏராளம்… இன்னும் மைசூர் மாநிலத்திலே மைசூர் மகாராஜா வம்சத்தினர் இன்னும் கொலுவீற்றிருக்கிறார்கள். ஆந்திர தேசத்தில் கிருஷ்ண தேவராயர் எனும் மாபெரும் ஹிந்து சக்கரவர்த்தி இருந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஹிந்துக்கள்; ஹிந்து ஸநாதன தருமத்தைப் போஷித்தவர்கள். பாண்டியனாகவும் சோழனாகவும் ராயராகவும் நடிக்க வேண்டியது தானே? நான் திருவாளர் ரஜினிகாந்த்தை கண்டிப்பதாக நினைக்க கூடாது. பரம பூஜனிய ஸ்ரீமான் மோடிஜியை தன்னுடைய சொந்த வீட்டில் தரிசிக்கும் பாக்யதை பெற்ற இரண்டாவது தேசபக்தர் ரஜினி என்பதை நாங்கள் அறிவோம். போயஸ் தோட்டத்தில் இருக்கும் முதல் தேசபக்தர் புரட்சித் தலைவி அம்மாஜி என்பதையும் இவ்வியாஸத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

என்றாலும், பாண்டிய ஹிந்துத் தமிழ் மன்னர்களும் சோழ நாட்டு ஹிந்துத் தமிழ் மன்னர்களும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டு மக்களைக் கொன்றவர்கள் தானே என்று ஆசிய சீனாவிடம் காசு வாங்கும் இடதுசாரி தீவிரவாதிகள் கேட்பார்களோ என்று ரஜினிகாந்த் பயந்திருக்க வேண்டும். அவர்கள் அப்படிக் கேட்டால் தான் என்ன? வன்னியத் தமிழர்களும் கொங்கு வெள்ளாளத் தமிழர்களும் தலித் தமிழர்களைக் கொன்ற போது ”அண்ணன் தம்பிகளுக்குள்ளே இதெல்லாம் சகஜமப்பா” என்று தமிழ் ஹிந்து உணர்வாளர்கள் காவி தருமத்தை விளக்கிய திறமை ஹிந்து தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் இல்லாமலா போய் விட்டது? நமது குட்டி உணர்வாளர்கள் பதினாறடி பாய்ந்தால் தாயான நாம் முப்பத்திரண்டடி பாய மாட்டோமா என்ன?

சரி, அப்படித்தான் புராண காவியங்களில் நடிக்க ரஜினிக்கு ஆசையென்றால் ஹிந்து ஸநாதன தருமத்தின் பெரும் சாதனைகளாம் காமசூத்ரா காவியத்தையும், கஜூராஹோ ஓவியங்களையும் பற்றிய விழிப்புணர்வை பரத வர்ஷத்து மக்களிடையே ஏற்படுத்த அல்லும் பகலும் அயராமல் கலைச்சேவை செய்து வரும் புன்யஸ்த்ரீ சன்னி லியோனுக்கு ஜோடியாக நடித்திருக்க வேண்டும். அட, வயதாகி விட்டது என்று ஸ்ரீமான் ரஜினிகாந்த் யோசிப்பதாக இருந்தால், குறைந்த பட்சம் அதே கலைச்சேவையை ரிஷிகளும் முனிகளும் உலாவிய கடவுளின் சொந்த தேசத்தில் (கேரளா) செய்த ஸ்ரீமதி ஷகீலாவுக்காவது ஜோடி போட்டிருக்க வேண்டும்.

ஏன் ரஜினிகாந்த் இப்படி ஆக்கப்பூர்வமான வழிவகைகளில் யோசிக்க மறுக்கிறார்? அக்மார்க் ஐயங்காரை மணந்திருக்கும் சூப்பர் ஸ்டார் அவர்கள் மனது வைத்தால் தெற்கிலாவது ஹிந்து தர்மத்தின் கீர்த்தியை பரப்பலாமே? ஏற்கனவே மும்பையில் மூன்று கான்கள் உட்கார்ந்து கொண்டு பாரத தேசமெங்கும் இளைஞர்களை கவர்ந்திருக்கிறார்கள். பகவான் மோடியை அவர்கள் கண்டு சேவித்தாலும், விழுந்து நமஸ்கரித்தாலும் அடிப்படையில் அவர்கள் அனைவரும் முசல்மான் ஜாதி அல்லவா? தமிழகத்தில் குஷ்புவை இப்போது ஒரு ஆளாக்கி ஐ.எஸ்.ஐ சதி செய்வது நம்மவாளுக்கு தெரியுமா என்ன?

ஏனென்றால் இதற்கெல்லாம் காரணம் நமது மூளைகளில் படிந்திருக்கும் ஐரோப்பிய மையவாத சிந்தனைகளும், அந்த சிந்தனைகளுக்கு அடிப்படையான சீனா மற்றும் பாகிஸ்தானின் சதியும் தான். இன்றைக்கு ஹிந்துக்களுக்கும் அவர்களது ஸநாதன தருமத்திற்கும் எந்தப் பாதுகாப்புமின்றிப் போய் விட்டது.

யோசித்துப் பாருங்கள், அக்காராடிசிலும், புளியோதரையும் ஆண்ட ஹிந்து தமிழ் பூமியை இன்று திண்டுக்கல் தலப்பாகட்டியும், ராவுத்தர் பிரியாணியும் ஆக்கிரமித்துள்ளன. தயிர் சாதம் சதிராடிய ஹிந்து தமிழ் பூமியில் ஞாயிற்றுக் கிழமையானால் தெருவுக்குத் தெரு ஆடும், மாடும், கோழியும் தோலுரிந்து தொங்குகின்றன. இதற்குப் பின்னே உள்ள பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ சதியை பாரதத் தாயின் தமிழ் வடிவமான புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சீக்கிரம் முறியடிப்பார் என்று எனது நண்பர் சோ ராமசாமி சமீபத்தில் என்னிடம் சொன்னார்.

சாப்பாடில் மட்டுமா? உடுக்கும் உடையைக் கூட ஐரோப்பிய மையவாத சிந்தனை விட்டு வைக்கவில்லை. நாகா சாமியார்களைப் போல் காற்றோட்டமாக திரியும் ஹிந்து ஞான மரபு இன்றைக்கு சீரழிந்து கெவின் க்ளெய்ர் ஜட்டியோடு அலைகிறார்கள் இளைஞர்கள். நடிகர்கள் கூட நமது ஹிந்து பாரம்பரிய உடையாம் கோவணத்தை மறந்து லீவைஸ் ஜீன்ஸ் போட்டு ஆடுகிறார்கள். என்ன அக்கிரமம்? பெண்களைப் பாருங்கள், மொகலாய முஸல்மான்கள் அறிமுகம் செய்த சல்வார் கமீசும் சுடிதாரும் அணிந்து வளைய வருகிறார்கள். கிறித்தவர்கள் கண்டுபிடித்த ஜட்டியும், பிராவும், லங்கோட்டை கொன்று போட்டது குறித்து மானமுள்ள ஹிந்து சகோதரன் என்றைக்காவது யோசித்திருப்பானா?

இப்படி நமது ஸநாதன தருமம் தறிகெட்டுக் கிடக்கும் நிலையை மாற்றத் தான் ஹிந்து முன்னணி வாதாடியும் போராடியும் வருகிறது. மிலேச்சர்களின் அநாச்சாரம் இன்றைக்கு எல்லை மீறிப் போனதன் விளைவு தான் ஒரு கன்னட தயாரிப்பாளர் ரஜினியிடம் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க பேச்சு நடத்துவதாக வெளியாகியுள்ள செய்தி.

அப்படி அவர் படமெடுக்க வேண்டுமென்றால், திப்புவை விட மைசூர் உடையாரின் வரலாற்றைத் தான் எடுக்க வேண்டும். பாகிஸ்தானைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாதியான திப்பு சுல்தானைப் போலன்றி மைசூர் மன்னர் உடையார் பரம்பரை என்பது எட்டப்பன் தொண்டைமான் சக்கரவர்த்திகளின் முன்னோடி அல்லவா?

திப்பு சுல்தான் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடியவர் என்று சில வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கலாம். இந்த விசயத்தை மேன்மை பொருந்திய மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனிக்க வேண்டும். உடனடியாக பழைய பதிப்பு வரலாற்று நூல்களை திரும்ப பெற்று புதிய பதிப்பை அச்சிட ஆவண செய்ய வேண்டும். இன்னும் மத்திய ஸர்க்காரால் திருத்தப்படாத பழைய வரலாற்றை ஹிந்துக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? அது இரண்டு மிலேச்சர்களுக்குள் நடந்த சண்டை. திப்பு ஒரு முஸல்மான் – அப்படி என்றால் அவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மாட்டார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடாதவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்? கொழுக்கட்டையை விழுங்காதவர் எப்படி ஹிந்து ஞான தருமத்தை பின்பற்ற முடியும்?

meghna - vinavu cartoonதேசபக்தியைப் புரிந்து கொள்ள முதலில் நமது தேசபக்தர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். வீர சாவர்கர், பரமபூஜனிய ஹெட்கேவார், வாஜ்பாய் போன்றவர்களின் வரலாற்றை ஹிந்துக்கள் படிக்க வேண்டும். வெள்ளைக்காரனோடு சண்டை என்று வந்தால் இவர்கள் குபீரென்று அவன் காலில் விழுந்தவர்கள் ஆயிற்றே என்று தீயவர்களான கம்யூனிஸ்டுகள் தூற்றலாம். ஆனால், அதில் இருக்கும் ராஜதந்திரத்தை இவர்களின் ஐரோப்பிய மையவாத மூளை பார்ப்பதில்லை. அப்படிக் காலில் விழுந்து என்ன செய்தார்கள்? ஹிந்து ஸநாதன தர்மத்திற்கு தொண்டாற்றினார்கள். அது தான் ஒரு தேசபக்தனுக்கு அழகு.

அதனால் தான் சொல்கிறோம், விடுதலைக்காக போராடியதாக சொல்லப்படும் (மீண்டும் ஸ்மிருதி இராணி அவர்கள் கவனத்திற்கு) திப்புவை விட, வெள்ளைக்காரன் காலில் விழுந்தாவது ஆட்சியில் அமர்ந்து ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம், முக்கால பூஜை நடத்தவும், புரோஹிதர்களை போஷித்தும் கோயில் திருவிழாக்களில் நாட்டியமாடிய தேவதாசிகளை பராமரித்தும் சிறப்பாக செயல்பட்ட உடையார், குவாலியர் மன்னர் பரம்பரை, திருமலை நாயக்கர், எட்டப்பர், தொண்டைமான், தஞ்சை சரபோஜி போன்றோரின் செயல்பாடுகளே மிகச் சிறந்த தேசபக்திக்கு அடையாளம். இன்றும் மானனீய இல.கணேசன்ஜியிடம் கேட்டால் தஞ்சையில் எப்படி மாமன்னர் சரபோஜி குடும்பம் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளை கவனிக்கிறது என்பதை வில்லுப்பாட்டாகவே பாடுவார்.திருவாளர் ரஜினிகாந்த் இதையெல்லாம் சிறப்பாக சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டும்.

திருமதி லதா ரஜினிகாந்த் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. பாரத தேசத்திற்கு இழுக்கு வரும்போது ஒரு ஐயங்கார் ஆத்து மாமி இன்னேநரம் மடிசாரை கட்டிண்டு பொங்கி வெடித்திருக்க வேண்டாமோ? என்ன இருந்தாலும் ரஜினி சார்வாள் நம்மவதான். இல்லையென்றால் ஹரிஜன்களைப் பற்றி படமெடுத்த ரஞ்சித் என்ற இயக்குநரை பிடித்துப் போட்டு மயிலை கபாலிஸ்வரர் பெயரில் ஒரு படமெடுக்க வைக்க முடியுமா?

என்னமோ அவருக்கு கொஞ்சம் பணப் பிரச்சினை. புத்திரிகள் பொம்மைப் படமெடுத்து கடனாக்கிவிட்டார்கள். இதை நம்ம அதானியிடமோ அம்பானியடமோ எடுத்துச் சொன்னால் ஸிம்பிளா தீர்த்து விடலாமே? எதற்கு இந்த கேடுகெட்ட முஸல்மான் திப்புவாக நடித்து பிச்சையெடுக்க வேண்டும்?

அவருக்கு தற்போது கொஞ்சம் கிரகம் சரியில்லை. எல்லாம் ஷேமமாகிவிடும்.

பாரத் மாதாகி ஜெய்!
வந்தே மாதரம்!

ஹிந்து என்று சொல்லு! தலை நிமிர்ந்து சொல்லு!

ஓம் காளி ஜெய் காளி!

இவண் – இராம கோபாலன்
ஹிந்து முன்னணி, தமிழ்நாடு
_________________________________________

–    தமிழரசன்