Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 583

தேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா ?

0

ரசியல் சாசனம் தொடங்கி நீதிமன்றங்கள் ஈறாக முதலாளித்துவ அறிவுஜீவிகளால் புனிதமானதாக விதந்தோதப்படுகின்ற நிறுவனங்களின் டவுசரைக் கழட்டுவதில் புர்ரட்ச்சித்தலைவிக்கு ஈடு இணையாக வேறொருவரைக் குறிப்பிடவே முடியாது.

ஜெயா, தனது முதல் ஆட்சிக் காலத்தில், சட்டமன்ற நாற்காலிகளிலேயே பெரும் புனிதமாகக் கூறப்படும் சபாநாயகர் இருக்கையில் தான் அமர்ந்தும், சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத தனது தோழி சசிகலாவைத் துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தும், பீற்றிக் கொள்ளப்பட்ட சட்டமன்றத்தின் மாண்பு, நெறிகளை உடைத்துப் போட்டார்.

2001-இல் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதியைக்கூட இழந்து நின்ற அவர், அத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அப்பொழுது ஆளுநராக இருந்த உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பாத்திமாபிவியைச் சரிக்கட்டி, ஊழல் கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்டி, இந்திய அரசியல் சாசனத்தையே ஆட்டங்கான வைத்தார்.

EC_1
அ.தி.மு.க. தலைமையால் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்ட கரூர்-அன்புநாதன் குடோன்

பிறகு, இவ்விசயத்தில் உச்சநீதி மன்றம் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் மானத்தைக் காப்பாற்ற நேர்ந்தது. அதே உச்சநீதி மன்றம் டான்சி வழக்கின் தீர்ப்பை எழுதும் போது, அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஜெயாவிடம் டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுத்துப் பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு, அவரது மனச்சான்றுக்கு வேண்டுகோள்வைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கிலோ, தண்டிக்கப்பட்ட அவருக்குச் சட்டத்தை மீறி பிணை வழங்கியது மட்டுமின்றி, அவருக்குச் சாதகமாக அந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாகவும் செயல்பட்டது.

இந்த வரிசையில், அரசியல் சாசனத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்ட, சுதந்திரமான நிறுவனமாகக் கூறப்படும் தேர்தல் ஆணையம் கடந்த ஐந்தாண்டுகளாக அம்மா ஆணையமாகச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். டி.என்.சேஷன் தேர்தல் ஆணையத்தைக் கறாரான, கடமை தவறாத, நடுநிலையான அமைப்பாக மாற்றிவிட்டதாக நடத்தப்படும் “டெரரான” பிரச்சாரமெல்லாம் வெறும் காமெடி என்று தமிழகத் தேர்தல் ஆணையர்களாக இருந்த பிரவீண் குமாரும், சந்தீப் சக்சேனாவும், தற்போதயை ஆணையர் ராஜேஷ் லக்கானியும் தமது அ.தி.மு.க. சார்பு நடவடிக்கைகள் மூலம் காட்டி விட்டார்கள்.

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் சட்டமன் றத் தேர்தல்களில் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாய் அளவிற்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்கிறார், ரிசர்வ் வங்கி யின் கவர்னர் ரகுராம் ராஜன். சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள மாநிலங்களிலேயே, தமிழகத்தில்தான் பணப் பட்டுவாடா அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதைத் தேர்தல் ஆணையமும் ஒத்துக்கொண்டு, அறிக்கை அளித்திருக்கிறது. இதன்பொருள் இந்த 60,000 கோடி ரூபாயில் பெரும்பகுதி தமிழகத்தில் புழங்க விருக்துக்றது என்பதுதான்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி ரூபாய் வீதம் 2,340 கோடி ரூபாயை அ.தி.மு.க. வாரியிறைக்க உள்ளதாகத் தமிழகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. மேலும், பணப்பட்டுவாடாவில் அ.தி.மு.க.வோடு, தி.மு.க. உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் போட்டிபோட முடியாது என்பதும் நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. ஜெயா-சசி கும்பலின் கையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் மட்டுமின்றி, அதிகாரமும் இருப்பது பணப்பட்டுவாடாவை எளிதாக்கிவிட்டது.

EC_2
சென்னை எழும்பூர் பகுதியிலுள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலர் விஜயகுமாரின் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு.

108 ஆம்புலன்ஸ் வேன்கள், ஆம்புலன்ஸ் பைக்குகள், பால் வண்டிகள், தண்ணீர் லாரிகள், போலிக அதிகாரிகளின் சைரன் வைத்த வாகனங்கள், பிண ஊர்திகள் எனப் பல்வேறு வழிகளில் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அ.தி.மு.க.வால் பணம் எடுத்துச் செல்லப்படுவது அம்பலமான பிறகும், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படை அதில் ஒரு நயாபைசாவைக்கூடச் சோதனையிட்டுப் பிடிக்கவில்லை. மாறாக, சிறு வியாபாரிகள் கையில் எடுத்துச் செல்லும் பணம் தான் பெருமளவில் சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படுகிறது.

ஜெயா-சசி கும்பலுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களா அ.தி.மு.க. வின் பணப் பதுக்கல் மற்றும் பட்டுவாடாவின் மையமாக இருந்து வருவது சில நாட்களுக்கு முன்பு புகைப்பட ஆதாரங்களோடு அம்பலமானது. ஆனால், சிறுதாவூரில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துவிட்டதாகக் கூறி. ஜெயா-சசி கும்பலைத் தப்பவைத்தது தேர்தல் ஆணையம்.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே கல்குறிச்சியில் இரண்டு மூட்டைகள் நிறைய பணம் கைப்பற்றப்பட்ட விசயத்திலோ, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை; எல்லாமே வதந்தி என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணா மூர்த்தி அறிக்கை அளித்திருப்பதாகக் கூறித் தேர்தல் ஆணையம் அதனை அமுக்கிவிட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா மீண்டும் முதல்வர் ஆவதற்காக கொல்ல்லிமலை பையில்நாடு தன்னிமாத்தியில் உள்ள ரதி-மன்மதன் கோயிலில் நடத்தப்பட்ட யாகத்தில் அமைச்சர் தங்கமணியோடு கலந்து கொண்டவர்தான் இந்த தட்சிணாமூர்த்தி.

கரூரில் அன்புநாதன் வீட்டிலும், குடோனிலும் சோதனைகள் நடந்துகொண்டிருந்தபோதே, அங்கு பத்து இலட்சரூபாய் கைப்பற்றப்பட்டதாக அறிக்கைவிட்டார், ராஜேஷ் லக்கானி. இந்த தம்மாத்துண்டு ரூபாயைப் பிடிப்பதற்காகவா இரண்டு நாட்கள் சோதனை நடந்தது, அன்புநாதனின் வீட்டில் 12 பணம் எண்ணும் இயந்திரங்கள் இருந்தன என எதிர்க்கட்சிகள் போட்டு வாங்கிய பிறகு, அன்புநாதனிடமிருந்து நாலு கோடியே சொச்சமும் சில ரப்பர் பேண்டுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கணக்குக் காட்டியது, தேர்தல் ஆணையம். இது நீதிபதி குமாரசாமியின் கணக்கைவிட மோசடியானது என்பது ஊருக்கே தெரியும். அன்புநாதனின் நண்பர் மணிமாறனின் வீடு, தோட்டம், குடோனிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் 100 கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கூறப்பட்டாலும், அது குறித்து வாயைத் திறக்க மறுக்கிறது, தேர்தல் ஆணையம்.

EC_5a
தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி

அன்புநாதன் அ.தி.மு.க.வன் ஐவரணியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்பதும், சென்னை எழும்பூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் 4 கோடியே 93 இலட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதில் தொடர்புடைய விஜயகுமார் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைச் செயலர் என்பதும் தமிழகமே அறிந்த உண்மை. இந்த சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு இந்தப் பணம் பதுக்கல், கடத்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. தலைமையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையமோ மத்திய அரசின் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்தியதாக உப்புக்குச் சப்பாணி வழக்கை அன்புநாதன்மீதுபோட்டு விட்டு, மெளனமாகிவிட்டது.

பணப்பட்டுவாடாவைத் தடுக்க 10 தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட வருமான வரித்துறையின் படை, பறக்கும் படைகளைக் கண்கா ணிக்க மாவட்டத்துக்கு 2 அல்லது 3 எஸ்.பி.க்கள் அடங்கிய குழு,  மொத்தமாக 118 பயிற்சி எஸ்.பி.க் கள் மாவட்டங்களைத் தங்களுக் குள் பிரித்துக் கொண்டு பறக்கும் படையைக் கண்காணிக்க ஏற்பாடு. இந்த அதிகார வர்க்க கூட்டத்துக்கு அப்பால், கட்சி சாராத இளைஞர் களைக் கொண்ட 21,300 குழுக்கள் என அடுக்கிக் கொண்டே போகிறது தேர்தல் ஆணையம். ஆனால், இவை எல்லாம் அ.தி.மு.க.வின் கூலிப்படையாக, அக்கட்சியின் பணக் கடத்தலைப் பாதுகாக்கும் ஐந்தாம் படையாகத்தான் செயல்படும். அவ்வாறுதான் செயல்பட முடியும்.

சில மாவட்ட ஆட்சியர்களையும், போலிக அதிகாரிகளையும் இடமாறுதல் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது வெல்லாம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை என்பது தமிழகத்திற்கே தெரியும். அதேசமயம், டி.ஜி.பி. அசோக் குமார், உளவுத்துறைத் தலைவர் சத்தியமூர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி. தாமரைக்கண்ணன், நாமக்கல் ஆட்சியர் தட்சிணாமூர்த்தி, திருப்பூர் ஆட்சியர் ஜெயந்தி, திருச்சி ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி, தூத்துக்குடி ஆட்சியர் ரவிக்குமார், திருச்சி போலீசு கமிசனர் சஞ்சய் மாத்துார், மதுரை கமிசனர் சைலேஷ் யாதவ், மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திராபிடாரி உள்ளிட்ட ஒரு பெரும் ஜெயாவின் விசுவாசக் கூட்டமே இன்னமும் தேர்தலை நடத்தும் பொறுப்புகளில், பணக்கடத்தலைத்தடுக்கும் பொறுப்புகளில் தேர்தல் ஆணை யத்தின் ஆசியோடு அமர்ந்திருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையமே போயசு தோட்டத்தின் செல்லப் பிராணி தானே! கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடாவிற்குச் சாதகமாக 144 தடையுத்தரவை அமல்படுத்தியது; சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா வைச் சட்டமன்ற உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்குவதை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர் தலில் வேட்புமனுத்தாக்கல் செய்யவந்த ஜெயாவிற்காக, அந்த அலுவலகத்தையே பச்சை பெயிண்ட் அடித்து மாற்றியமைத்தது; அந்த இடைத்தேர்தலின் பொழுது ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஒரு வாக்கு அதிகமாகப் பதிவான கள்ள ஒட்டு கூத்தைக் கண்டு கொள்ளாமல் நழுவிக் கொண்டது.  அன்புநாதனைக் கைது செய்யாமல் வேண்டுமென்றே தப்பிக்க வைத்தது எனத் தேர்தல் ஆணையத்தின் ஜெயா விசுவாசத்திற்கான ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

EC_5c
பிரவீண் குமார்

ஜெயாவின் பொதுக்கூட்டங்கள் ஒவ்வொன்றும் சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறித்தான் நடத்தப்ப டுகின்றன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நோட்டீசு கொடுத்த தேர்தல் ஆணையம், ஜெயாவின் பொதுக் கூட்டத்தில் ஐந்து பிணங்கள் விழுந்த பிறகும் அவருக்கு எதிராகச் சுண்டுவிரலைக் கூட அசைக்க மறுக்கிறது.

போலி வாக்காளர்கள், ஒட்டுக்குப் பணம், அதிகாரவர்க்க கூலிப்படை என்ற மூன்றையும் பயன்படுத்தி, இத்தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடித்துவிடும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறது, ஜெயா-சசி கும்பல். இதற்கு ஒத்துழைத்து வருகிறது தேர்தல் ஆணையம்.

ஜனநாயகப்பூர்வமான தேர்தலை நடத்தும் பொருட்டு, அரசமைப்பு சட்டத்தின்படி சுயேச்சையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அமைப்பான தேர்தல் ஆணையம், அந்த நோக்கத்துக்கு எதிராக ஜனநாயகத் தேர்தல் என்பதையே குழிதோண்டிப் புதைக்கின்ற கோடரிக்காம்பாகச் செயல்படுகிறது என்று எல்லா எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றனர், ஆதாரங்களை அடுக்குகின்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் தேர்தல் ஆணையமோ, ஆணையர் லக்கானியோ இது பற்றிக் கடுகளவும் கவலைப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தவுமில்லை.

ஒரு மரத்தடிப் பஞ்சாயத்தில் கூட நாட்டாமையைப் பார்த்து உன் மீது நம்பிக்கை இல்லை என்று வழக்காடி சொல்லிவிட்டால், அந்த நாட்டாமை ரோசப்பட்டு விலகிக் கொள்ளக்கூடும். சட்டம், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதது மட்டு மல்ல, மான, ரோசம் அனைத்தையும் உதிர்த்து விட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம். ஆணையம் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று கெஞ்சு வதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். அன்புநாதன் விவகாரத்தின் மர்மங்களை வெளிக்கொண்டு வர வேண்டுமானால், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார் கருணாநிதி.

நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நினைவுபடுத்துகின்றன. குமாரசாமியின் வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்புக்குப் பின்னர், அந்தத் தீர்ப்புக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத தரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியைப் பெறவேண்டும் என்ற முடிவுடன் ஆர்.கே.நகரில் களம் இறங்கினார் ஜெயலலிதா. அன்று தேர்தல் ஆணையராக இருந்த சந்தீப் சக்சேனாவிடமோ, தேர்தல் ஆணையத்திடமோ புகார் கொடுத்துப் பயனில்லை என்று தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்தப் புறக்கணிப்பு தேர்தல் ஆணையத்தை மட்டுமின்றி, ஜெயலலிதாவையும் அசிங்கப்படுத்தி விடும் என்ற காரணத்தினால், அ.தி. மு.க.வின் ஐந்தாம்படையான வலது கம்யூனிஸ்டு கட்சி அம்மாவின் ஆசியுடன், அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டு, அம்மாவின் மானத்தைக் காப்பாற்றியது. அம்மாவோ நூறு விழுக்காட்டுக்கு மேல் வாக்குப்பதிவு செய்து ஜனநாயகத்தின் மானத்தை வாங்கினார்.

EC_4
ஜெயாவின் திருச்சி பொதுக்கூட்டத்தில் நடந்த பணப் பட்டுவாடா.

இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் செய்யும் தில்லுமுல்லுகளை தமிழகம் முழுவதும் செய்ய இயலாது என்று அன்றைக்கு இடைத் தேர்தலைப் புறக்கணித்த கட்சிகளும், அறிஞர் பெருமக்களும் கருதினர். தமிழகம் முழுவதையும் ஆர்.கே. நகராக மாற்ற இயலாது என்று நம்பினர். அந்த நம்பிக்கை பொய்த்து விட்டதை இன்று எதிர்க்கட்சிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.

பண விநியோகத்தைத் தடுத்து நியாயமான தேர்தல் நடத்த இராணுவத்தை வரவழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக காஷ்மீரில் போராடிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இராணுவத்தை, அ.தி.மு.க.விடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் பொருட்டு தமிழகத்துக்கு வரவழைக்க வேண்டுமென்றால், அ.தி.மு.க.வைப் பயங்கரவாதக் கும்பல் என்றல்லவோ கருத வேண்டியிருக்கும்?

எதிர்க்கட்சிகளின் கருத்துப்படி இன்று ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே ஆர்.கே.நகர் ஆக்கிவிட்டது. அவர்களது அளவுகோல்களின்படி இந்தப் பொதுத் தேர்தலையும் அவர்கள் புறக்கணித்திருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு ஒரு முடிவை எடுத்தால், ஜெயலலிதா அரசு என்றழைக்கப்படும் கிரிமினல் கும்பலையும், அதன் கூட்டாளியான தேர்தல் ஆணையத்தையும் ஒரளவேனும் அம்பலப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அத்தகைய போராட்ட முறைகளெல்லாம் ஒட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை வரம்பு மீறிய நடவடிக்கைகள்.

தேர்தல்களை நியாயமாக நடத்துகிறோம் என்ற நாடகத்தைக்கூட நடத்த முடியாத தற்போதைய இழிந்த நிலை என்பது இந்த அரசுக்கட்டமைவின் தோல்விக்குத் துலக்கமானதொரு சான்று. இந்தக் கட் டமைப்புக்கு உள்ளேதான் தீர்வைத் தேட வேண்டும் என்பது அரசியல் பிழைப்புவாதிகளுக்கான வரம்பு. ஆனால், மக்கள் அந்த வரம்புக்குள் நிற்கவேண்டிய அவசியமில்லை. அவ்வாறு நிற்பது அறிவுக்குகந்ததுமில்லை. மக்கள் அதிகாரத்தை உத்திரவாதப்படுத்துகின்ற புதியதொரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிப்பது தான் மாற்றம் வேண்டும் என்று விரும்புவோர்
செய்ய வேண்டிய பணி.

– ரஹீம்

ஜெயாவின் பிரியாணி ஜனநாயகம்

3
Dharmapuri: AIADMK Supporters at an election campaign meeting of Tamil Nadu Chief Minister and AIADMK Supremo J Jayalalithaa ahead of Tamil Nadu legislative assembly elections 2016, in Dharmapuri on Wednesday. PTI Photo (PTI4_13_2016_000349B)

ன்னுடைய ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைத் தந்திருக்கிறது” என்று மனித உணர்ச்சியின் சாயலே இல்லாத தனது ரோபோ குரலை உயர்த்தி ஜெயலலிதா உரையாற்றிக் கொண்டிருந்த போது, கீழே அமர்ந்திருந்த மக்கள் “108 டிகிரி பாரன்ஹீட் வசந்தத்திலிருந்து” தப்பி ஓடிக் கொண்டிருந்தார்கள். அம்மா பேசும்போது வெளியேறி சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் அவர்கள் மீது தடியடி நடத்த முடியாமல், கைகள் கட்டப்பட்டிருந்த காரணத்தால், அவர்களை வெளியேற விடாமல் தடுத்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர் போலீசார். 200 ரூபாய் காசுக்குத் தமது உயிரையே விலையாகத் தரவேண்டியிருக்கும் என்று பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

jaya meeting_2
சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பலியான சேலம்-ஆத்தூர் அருகிலுள்ள இராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி

ஏப்ரல் 11 ஆம் தேதி விருத்தாசலத்தில் இரண்டு பேரும், பின்னர் 15 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் ஒருவரும், சேலத்தில் இரண்டு பேரும் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தது குறித்த விவரங்கள் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டன. பல்வேறு மாவட்டங்களிலுருந்தும் கேரளத்திலிருந்தும் கூட மக்கள் லாரியில் அடைத்துக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஒதுங்க நிழல் இல்லாத பொட்டல் வெளியில், கொடும் வெயிலில், குடிநீர் அருந்தவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அசைய முடியாமல் பட்டியில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அத்தகையதொரு வெயிலில் ஆறு மணி நேரத்துக்கு மேல் நிற்பதென்பது ஆடு மாடுகளுக்குக் கூட சாத்தியமற்ற காரியம்.

நாடெங்கும் வெயிலின் கொடுமைக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அனல் காற்று வீசுவதால் பகல் நேரத்தில் வெளியில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறு அரசே மக்களுக்கு அறிவுறுத்தி வரும் இந்தக் கோடையில், 200 ரூபாய் காசுக்காகவும் ஒரு பிரியாணிப் பொட்டலத்துக்காகவும் வண்டியில் ஏறத்துணிந்த மக்களை அவ்வாறு தூண்டியது எது? அதனை ஏழ்மை என்பதா பிழைப்புவாதம் என்பதா?

ஐந்து பேர் இறந்தார்கள் என்பது அரசுக் கணக்கு. ஒரு பெண் போலீசு அதிகாரி உள்ளிட்ட பல பத்து பேர் மயக்கமடைந்தும், மிதிபட்டும், எலும்பு முறிந்தும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன நேர்ந்தது என்பதை நாம் அறியோம். இறந்தவர்கள் உடல்நலக் குறைவினால் இறந்து விட்டதாகவும், தற்போது தேர்தல் காலமென்பதால் தேர்தல் முடிந்த பின்னர் நிவாரணம் அளிப்பதாகவும் அறிவித்து விட்டார் ஜெயலலிதா. கூட்டத்துக்கு வருவதற்கு 200 ரூபாயும் பிரியாணிப் பொட்டலமும் என்பதைப் போல, கூட்டத்தில் மிதி பட்டு செத்தால் இவ்வளவு, எலும்பு முறிந்தால் இவ்வளவு என்று கருணைத்தொகையையும் இனி அம்மா நிர்ணயிக்கக் கூடும்.

இந்த 5 மரணங்களும் கொலைகள்தான் என்பதில் யாருக்கும் ஐயம் தேவையில்லை. இரவு நேரத்தில் எலிகாப்டர் பயணம் பாதுகாப்பானதல்ல என்ற காரணத்துக்காக, அதாவது தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்துக்காக பல்லாயிரக்கணக்கான மக்களைப் பிடித்துக் கொண்டு வந்து கொடும் வெயிலில் நிறுத்தி மரணத்துக்குத் தள்ளியிருக்கிறார் ஜெயலலிதா. அடுத்தடுத்த மரணங்களும் கண்டனங்களும் கூட அவரது இந்த வக்கிர மனோபாவத்தை ஒரு அங்குலம் கூட அசைக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை, அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்களின் ஒலிபெருக்கி சத்தம் தங்கள் தூக்கத்தைக் கலைப்பதாக மேட்டுக்குடி வர்க்க கனவான்கள் நீண்டகாலமாக சொல்லி வந்த புகாரை மனதிற்கொண்டு, இரவு பத்து மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூடப் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறது. 108 டிகிரி வெயிலில் ஆறு மணி நேரம் மக்களை அடைத்து வைப்பது அவர்களை மரணத்துக்கே தள்ளும் என்பது தேர்தல் ஆணையத்துக்குப் புரியாத உண்மையாக இருக்க முடியாது. செத்தவர்கள் ஏழைகள், சாகடித்தவர் ஜெயலலிதா என்ற காரணத்தினால்தான் அடுத்தடுத்து 3 ஊர்களில் மரணம் நிகழ்ந்தும் கூட ஆணையம் பெயருக்கு ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.

ஜெயலலிதா மட்டுமல்ல, பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கிய ஆணையம், மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளிகள். கொடும் வெயிலில் நீரும் நிழலும் இன்றி மணிக்கணக்கில் மக்களை அடைத்து வைப்பது அவர்களை மரணத்துக்குத் தள்ளும் என்று தெரிந்தேதான் அவர்கள் இதனைச் செய்கிறார்கள். இது வெறும் அலட்சியமும் அல்ல; இவர்கள் அனைவரும் அதிமுக அடிமைகளைப் போல ஜெ வின் பொதுக்கூட்டத்துக்கு வேலை செய்திருப்பதை ஊடகங்கள் ஆதாரபூர்வமாக வெளியிட்டிருக்கின்றன.

தன்னுடைய லாப வெறிக்காக குடந்தையில் பள்ளிக் குழந்தைகளை நெருப்புக்குப் பலியிட்ட தாளாளரைப் போன்ற குற்றவாளிகள் இவர்கள். சட்டப்படி ‘கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம்’ (இ.த.ச 304) என்ற குற்றப்பிரிவின் கீழ், தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஜெயலலிதாவின் ஆணவத்துக்கும் அலட்சியத்துக்கும் ஊழலுக்கும் மக்கள் பலியாவது புதிதல்ல. மகாமக சாவு தொடங்கி முகலிவாக்கம் கட்டிடச் சாவு, செம்பரம்பாக்கம் வெள்ளச்சாவு வரையிலான கொலைக்குற்றங்கள் தனியே பட்டியலிடப்பட வேண்டியவை. ஆனால் ஜெ வுக்கு எதிராக அத்தகைய குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையமோ நீதிமன்றமோ ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

மக்கள் மன்றத்திலேயே கூட இந்த ஐந்து மரணங்களும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? இந்தச் சாவுகள் ஆத்திரத்தையோ கொந்தளிப்பையோ ஏற்படுத்தாத அளவுக்கு தமிழ்ச் சமூகத்தின் தன்மான உணர்ச்சி மரத்து விட்டது. ஒரே ஒரு நபருக்கு 8 ஏசிகள், 20 ஏர் கூலர்கள் என்ற திமிர்த்தனமும், ஒரு நபரின் வசதிக்காக 50,000 மக்கள் வெயிலில் வதங்குவதும் சகித்துக் கொள்ளப்படுகிறது. ஏ.சி குளிரில் அமர்ந்து கொண்டு வெயிலில் வாடும் மக்களைப் பார்த்து, “அம்மா இட்டிலி, அம்மா தண்ணீர் ஆகியவையெல்லாம் நான் சொல்லாமலேயே செய்தவை. இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?” என்று கேட்கும் ஜெ வின் திமிர்த்தனம் அங்கீகரிக்கப்படுகிறது.

jaya meeting_1
தமிழக மக்களுக்காக முற்றும் துறந்து தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் “வசந்தசேனை” ஜெயலலிதா

‘எம்ஜியாரின் உடன்கட்டை’ என்ற முறையில் தமிழகமே தனக்குப் பாத்தியதையுள்ள சொத்து என்றும், தமிழக மக்கள் தனது அடிமைகள் என்றும் ஜெயலலிதா கருதுகின்றார். குளுகுளு ஏ.சி யில் அமர்ந்தபடி, வெயிலில் வாடும் மக்களிடம் “தான் தவ வாழ்வு வாழ்வதாக” ஜெயலலிதாவால் கூச்சமே இல்லாமல் பேச முடிவதற்குக் காரணம் இதுதான். ஜெயலலிதாவின் அடிமைகளான அதிமுகவினர், தமக்கு வாய்த்திருக்கும் வாழ்வு என்பது “அம்மா போட்ட பிச்சை” என்று எண்ணுவதைப் போலவே, தாங்கள் போடும் பிச்சையில்தான் தமிழ் மக்கள் வாழ்வதாகக் கருதுகின்றனர். எனவேதான் ‘உரிமை’ என்று குரல் எழுப்புகின்றவர்கள் ஊனமுற்றவர்களே ஆனாலும், அவர்கள் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறர்கள்.

மக்களுடைய தயவை அவர்கள் நாடவேண்டியிருக்கும் ‘வாக்குரிமை’ என்ற ஏற்பாடு, தலித் மக்களுக்கு கோயில் திருவிழாக்களில் வழங்கப்பட்டிருக்கும் ‘காப்புக்கட்டும் உரிமை’யைப் போன்றதொரு உரிமை. தேர்தலும் ஒரு திருவிழாதான் என்பதையும், தங்களுடைய ‘உரிமை’யின் வரம்பையும் மக்கள் புரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

“வேலையில்லாமல் சோற்றுக்கில்லாமல் கிராமத்தில் கிடந்தவர்களுக்கு பிரியாணி போட்டு தலைக்கு 200 ரூபாய் கொடுத்திருக்கிறோம். தேர்தல் முடிந்த பின்னர் செத்தவர்களுக்கு நிவாரணம் தருவோம். 200 ரூபாய்க்கு தங்களை விற்றுக் கொண்ட கூட்டத்துக்கு வேறு என்ன மனக்குறை இருக்க முடியும்?” என்பதே அதிமுக வினரின் இயல்பான பார்வை. அவர்கள் மட்டுமல்ல, காசுக்கு ஆள் பிடித்து கூட்டம் சேர்க்கும் ஓட்டுக் கட்சியினர் அனைவரின் கருத்தும் இப்படித்தான் இருக்க முடியும்.

jaya meeting_3
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் வெளியேற முயன்ற மக்களை போலீசார் தடுக்க முனைந்த பொழுது ஏற்பட்ட வாக்குவாதம்

ஜனநாயகம் பெரிதும் முற்றி, நிர்வாண நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சாலைகளில் கட்சிக் கொடி கட்டும் காண்டிராக்டர்கள், கம்பத்தை நட்டுவிட்டு, கொடியை மட்டும் தேவைக்கேற்ப மாற்றுவதைப் போன்ற நிலை கூட்டங்களுக்கும் வந்து கொண்டிருக்கிறது. 1000 மாணவர்கள், 2000 இளைஞர்கள், 4000 பெண்கள், 2000 விவசாயிகள் என்று பார்வையாளர்களை சப்ளை செய்யும் ஈவென்ட் மானேஜ்மென்ட் நிறுவனங்கள் இனி கூட்டங்களை சப்ளை செய்யக்கூடும். செலவைக் குறைக்கும் பொருட்டு ஒரே கும்பல் வெவ்வேறு கட்சிகளின் தொண்டர்களாக வேடமும் அணியக்கூடும்.

தன் எதிரில் அமர்ந்திருப்பது விலைக்கு வாங்கப்பட்ட கூட்டம் என்பது மற்றெல்லோரைக் காட்டிலும் ஜெயலலிதாவுக்குத்தான் நிச்சயமாகத் தெரியும். ஜெயலலிதாவின் பேச்சுக்கு கூட்டம் எப்படி கைதட்டியது என்பதை ஊடகங்கள் விளக்கியிருந்தன. பேச்சுக்கு இடையில் “இந்த இடத்தில் கை தட்டு” என்று உத்தரவிடுவதைப் போல ஜெயலலிதா ஒரு இடைவெளி விடுகிறார். உடனே மேடையிலேயே நின்று கொண்டிருக்கும் ஒரு நபர் தலைக்கு மேலே கையை உயர்த்தி கை தட்டிக் காண்பிக்கிறார். அதனைத் தொடர்ந்து கூட்டம் கைதட்டுகிறது.

வருங்காலத்தில், கோடம்பாக்கம் ஏஜென்டுகள் மூலம் சினிமா துணை நடிகர்கள் சில நூறு பேரை முன் வரிசையில் அமரவைத்து அவர்கள் சிரிப்பதையும் அழுவதையும் கைதட்டுவதையும் படம்பிடித்து தொலைக்காட்சிகளில் காட்டக்கூடும். துணை நடிகர்களை டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து, மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முடியும்போது இது எம்மாத்திரம்?

தங்களது டாக் ஷோக்களுக்கு பார்வையாளர்களை வாடகைக்கு எடுக்கும் தொலைக்காட்சிகளுக்கு, இந்தக் கூட்டம் போலி, கைதட்டல் போலி என்று தெரியும். இருப்பினும் நேரலை ஒளிபரப்பு, உணர்ச்சிகரமான தொகுப்புரைகள், விவாதங்கள் போன்றவை மூலம் பொய்மையை அவர்கள் உண்மையாக்குகிறார்கள். போலிகளின் இந்த அணிவகுப்பில், போலி வாக்காளர்களையும் சேர்ப்பது எந்த விதத்தில் குற்றமாகும் என்பதுதான் ஜெயலலிதா கேட்க விரும்பும் கேள்வி.

“பணம் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது முறைகேடில்லையா?” என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டதற்கு, “அது வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்” என்று பதிலளித்திருக்கிறது ஆணையம். அதாவது குவார்ட்டர்- சிக்கன் பிரியாணி- பணம் கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக முறையாக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டது. இருந்த போதிலும் இந்த ‘பிரியாணி ஜனநாயகத்தில்’, பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை மட்டும் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. விசித்திரம்தான்!

விலை பேசப்படும் வாக்குகளுக்கும் விலையில்லா திட்டங்களுக்கும் இடையில், இருபது டன் ஏ.சிக்கும் 108 டிகிரி வெயிலுக்கும் இடையில், “உனக்கு என்ன வேண்டுமென்று எனக்குத் தெரியும்” என்று கூறும் அம்மாவுக்கும், ‘தமக்கு என்ன வேண்டும்’ என்று தெரியாத மக்களுக்கும் இடையில் நசுங்கிக் கொண்டிருக்கிறது இந்த ‘ஜனநாயகம்’. நசுங்கிச் செத்து விட்டார்கள் பொதுமக்களில் 5 பேர்.

– புதிய ஜனநாயகம் – மே 2016 இதழ் தலையங்கம்

மோடியின் படிப்பு – என்ன ஒரு நடிப்பு !

3

displayimage-(1)

ம்பலப்பட்டார் மோடி”என்று சொல்வதே தேய்வழக்காகி விட்டது. இந்தச் சுற்றில் மோடியின் போலி கல்விச் சான்றிதழ் ஊடகங்களில் படபடத்துக் கொண்டிருக்கிறது. மோடியின் கல்வித் தகுதியை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கிளறி விட்டவர் கேஜ்ரிவால். பிரதமர் அலுவலகமும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களும் மௌனம் சாதித்து வந்த நிலையில் மத்திய தகவல் ஆணையத்திற்கு கேஜ்ரிவால் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதன்பின் விவகாரம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளானது.

சொல்லிக் கொள்வதற்கு சாதனைகள் ஏதுமின்றி சொத்தையான பில்டப்புகளின் மூலமே வாழ்ந்து வரும் மோடிக்கு உடனடியாக சரிந்து போன பிம்பத்தை தூக்கி நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் எழுகிறது. அவர் படித்து பட்டம் பெற்றதாகச் சொல்லப்பட்ட தில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களும் விளக்கங்கள் தரமுடியாமல் மோடிக்குப் பக்கத்திலேயே ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டன. இந்நிலையில் மோடியின் கல்விச்சான்றிதழ் என்பதாக போர்ஜரி செய்யப்பட்ட ஆவணத்தின் நகல் ஒன்று ஊடகங்களுக்கு ‘கசிய’ விடப்படுகின்றது. மேற்படி ஆவணம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டதல்ல என்பதை போட்டோஷாப் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் கண்டறிந்து அம்பலப்படுத்தினர்.

இதையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்திக்கும் அருண் ஜேட்லியும் அமித்ஷாவும் ஆளுக்கொரு கல்விச் சான்றிதழ் நகல்களை உயர்த்திக் காட்டி மோடியின் கல்வித் தகுதியை  ’நிரூபிக்க’ முயன்றனர். உலகிலேயே ஒரு பிரதமரின் கல்வித் தகுதியை நிரூபிக்க ஆளும்கட்சித் தலைவரும், நிதி அமைச்சரும் களத்தில் இறங்கி கம்பு சுற்றிய கேலிக்கூத்து கடந்த பத்தாம் தேதி அரங்கேறியது.

BA-degreeஅமித்ஷாவும் அருண்ஜேட்லியும் போராடிப் பிடித்த பிள்ளையாரும் குரங்கு தான் என்கின்றனர் சமூக வலைத்தள விமரிசகர்கள். சான்றிதழ் வழங்கப்பட்ட காலத்தில் புழக்கத்தில் இல்லாத எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருப்பது, நான்கு சான்றிதழ்களில் மோடியின் பெயர் நான்கு வெவ்வேறு விதங்களில் எழுதப்பட்டிருப்பது, மோடியின் தந்தை பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது, மோடியின் பெயரே தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது, மோடி படித்ததாக சொல்லப்படும் பாடங்களே குறிப்பிட்ட அந்தக் காலத்தில் இல்லாமல் இருந்தது, வருடங்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது என்று அடுக்கடுக்காக போர்ஜரி முன் வைக்கப்படுகின்றது.

மோடி படித்தவரா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, அவர் படித்ததாக பொய்  சொல்லியிருக்கிறார் என்றும் பிரதமரே இப்படி ஒரு பொய்யராக இருப்பது சரியா என்றும் அதிர்ச்சி தெரிவிக்கிறார் கேஜ்ரிவால். தனது பிம்பம் சரிந்ததற்கு மோடி கவலைப்படும் அளவுக்கு மோடியின் எஜமானர்களான முதலாளிகளும் குருமார்களான காக்கி டவுசர்களும் கலைப்படுவார்களா என்பது சந்தேகம் தான்.

ஏனெனில், பிரதமர் உள்ளிட்ட ஆளும்வர்க்க கைக்கூலிகளுக்கு கல்வித் தகுதியை விட புரோக்கர் தகுதியே பிரதானமானது என்பதே இன்றைய தேர்தல் அரசியலின் விதி.

புரோக்கர் தகுதியைப் பொறுத்தவரை சமகாலத்தில் மோடியை விஞ்சியவர் எவருமிலர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. குஜராத்தில் முதல்வராக இருந்த போது ஒரு ரூபாய் விலையில் ஒரு சதுர அடி நிலத்தை அதானி குழுமத்திற்கு அள்ளிக் கொடுத்ததாகட்டும், இல்லாத பெட்ரோலை துரப்பணம் செய்யும் உரிமத்தை குஜராத் மாநில பெட்ரோலிய துறையிடம் இருந்து தனக்கு படியளக்கும் முதலாளிகளுக்கு மாற்றி அதற்கு 20000 கோடி அளவுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து கொள்ளையடிக்க வகை செய்ததாகட்டும், பிரதமர் ஆன பின்பும் அதானி குழுமத்திற்கு சுரங்க உரிமை கோரி ஆஸ்திரேலியாவுக்கு காவடி தூக்கியதாகட்டும், மோடியின் ஒவ்வொரு செயல்பாடும் அவரது தகுதியை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

பொதுச் சொத்தை தனியார் ஏகபோக முதலாளிகள் சூறையாடத் திறந்து விடும் தகுதியும் அந்தக் கொள்ளையை வளர்ச்சி என்று நம்ப வைக்கும் திறமையும் தான் பிரதமருக்கு அவசியம் என்று முதலாளிய அறிஞர்கள் தீர்ப்பளித்தபின் மோடி பத்தாம் வகுப்பில் ‘கோட்’அடித்தவராய் இருந்தால் என்ன டாக்டர் பட்டம் பெற ‘பிட்’அடித்தவராய் இருந்தால் தான் என்ன?

 

————————————————————————————-

டபுள் ஸ்ரீ ரவிசங்கர் – டபுள் நோபல் ரவிசங்கர்

o-SRI-SRI-RAVI-SHANKAR-facebook-(1)

டபுள் ஸ்ரீ ரவிசங்கர் நோபல் பரிசை மறுத்துள்ளார். முன்பொரு முறை தனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நோபல் கமிட்டி முன்வந்ததாகவும், அரசியல் ரீதியில் வழங்கப்படுகின்றது என்பதாலேயே தான் அப்பரிசை மறுத்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு பரிசுகளின் மேல் நாட்டமில்லை என்றும், சேவை புரிவதையே முக்கியமானதாக கருதுவதாகவும் தெரிவித்த டபுள் ஸ்ரீ, பாகிஸ்தனைச் சேர்ந்த யுசூப் மலாலா நோபல் பரிசுக்குத் தகுதியானவர் அல்லவென்றும், அவர் குறிப்பிடத் தக்க சேவை ஏதும் ஆற்றவில்லை என்றும் பொங்கியிருக்கிறார்.

பரிசுகளைக் கண்டு மயங்காமல் மீமாம்ஸம் போதிக்கும் கர்ம யோக பாதையில் செயல்களின் பலன்களை ஈச்வரார்ப்பணம் செய்து நிஷ்காம்ய கர்மியாக வாழும் டபுள் ஸ்ரீயை ஒரு முறையாவது பாராட்டி விடலாம் என்று பார்த்தால் அவர் வகை தொகையின்றி வாங்கிக் குவித்துள்ள விருதுகளும், பரிசுகளும் குறுக்கே நிற்கின்றன. பத்மவிபூஷனில் இருந்து ஏதோவொரு உப்புமா கம்பெனி வழங்கிய பாரத் சிரோமணி விருதைக் கூட வாங்கி அடுக்கியிருக்கும் ரவிசங்கர்
பற்றின்மை குறித்து பீற்றிக் கொள்வதைப் பார்த்து அ.தி.மு.கவினரே கொதிக்கிறார்கள்.

அம்மாவின் தவவாழ்வு சாதாரணமானதா என்ன? பதினாறு ஏசி மிஷின்களும் பிரச்சார மேடைக்கு மேல் கட்டிய உப்பரிகையுமாக தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்ந்து வருகிறார் அம்மா. நியாயமாகப் பார்த்தால் ஐந்தாண்டுகளாக தமிழ் ஊடகங்களில் அமைதியை நிலைநாட்டிய அம்மாவுக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும். பெருந்தன்மையோடு பாரத் ரத்னா போதும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஆயிரம் கோடிக்கு பீனிக்ஸ் மால் திரையரங்கை பட்டா போட்ட அம்மாவின் தவவாழ்வின் முன் 900 கோடி யோகா கம்பெனிக்கு சொந்தக்காரரான டபுள் ஸ்ரீயின் தவவாழ்வு கொஞ்சம் அற்பமானது தான்.  என்றாலும் இந்தச் சின்னஞ்சிறிய தவவாழ்வை வைத்துக் கொண்டு உலக அமைதிக்காகவும் இந்திய அமைதிக்காகவும் அவர் ஆற்றி வரும் சேவைகள் அளப்பரியவை.

srisri-malala1992ல் சிறைக்கைதிகளை சீர்திருத்தும் வித்தியாசமான யோக அணுகுமுறையின் மூலம் ஊடக வெளிச்சத்தில் அடிபடத் துவங்கிய டபுள் ஸ்ரீ, அரசியல் ரீதியில் அமைதியின்மை தலையெடுக்கும் போதெல்லாம் அவதாரமெடுத்து அமைதியை நிலைநாட்ட சேவையாற்றியுள்ளார். ஜன் லோக்பால் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிரான வீக் எண்ட் போராட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற தருணாங்களில் எப்போதெல்லாம் அரசியல் நிகழ்வுகள் பாரதிய ஜனதா எதிர்பார்த்த திசையில் நகரவில்லையோ அப்போதெல்லாம் அங்கே எழுந்தருளி ’அமைதியை’ நிலைநாட்டியிருக்கிறார்.

உச்சகட்டமாக, சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு தான் பேச்சுவார்த்தை நடத்த முனைந்ததாகவும், பதிலுக்கு தலையில்லாத முண்டத்தின் புகைப்படத்தை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ரசியாவும் தலையால் தண்ணீர் குடித்து வரும் விவகாரத்தில் டபுள் ஸ்ரீயை ’அமைதி’புரோக்கர் பணிக்கு அமர்த்தியவர்கள் யார், அவரால் எப்படி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு பேச்சு நடத்த முடிந்தது, அவ்வமைப்பிலிருந்து யாரெல்லாம் யார் மூலமாகவெல்லாம் டபுள் ஸ்ரீயைத் தொடர்பு கொண்டனர், புரோக்கர் வேலைக்கு கமிசன் எவ்வளவு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு பேச அதிகாரம் வழங்கியது யார், என்னவிதமான
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன – என்பன போன்ற கேள்விகளுக்கு என்றென்றைக்கும் பதில் வரப்போவதில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ் கும்பலிடம் அமைதி யாவாரம் போணியாகவில்லை என்றாலும் கூட அவர்
இரட்டை நோபல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர் தான். கம்யூனிசத்திற்கு எதிரான இலக்கிய கூலிப்படை அடியாட்களுக்கும், அமெரிக்க ஐந்தாம்படைகளுக்கும் வழங்கப்பட்ட வரலாறு நோபலுக்கு உண்டு. அந்த வகையில் யமுனை நதியை உலக கலாச்சார நிகழ்ச்சி நடத்தி சீரழித்த பின் பசுமைத் தீர்ப்பாயம் விதித்த நட்ட ஈட்டுக்கும், சம்மன்களுக்கும் அசராமல் அமைதியாக
இருப்பதற்கு ஒன்றும் இன்ன பிற புரோக்கர் வேலைகளுக்கு மற்றொன்றுமாக இரண்டு நோபல் பரிசுகளுக்கு டபுள் ஸ்ரீ தகுதியுடைவராகிறார்.

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்

இணையுங்கள்:

தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG

3

the-mummy-returns editழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போது அம்மா ஹெலிகாப்டரில் அருளினார்! டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” தோழர்களும், மக்களும் போராடி அடிபடும் போது அம்மாவின் அடிமைக் கூட்டம் ஆடிப்பாடிக் கூத்தடிக்கின்றது! போலீசோ கண் மண் தெரியாமல் அடித்து நொறுக்குகின்றது!

தமிழக மக்களின் வாழ்வை திமிருடன் அலைக்கழிக்கும் அம்மாவின் ஆட்சியை அம்பலப்படுத்துகிறது இந்த Cocktail பாட்டு! கேளுங்கள், பாருங்கள், பரப்புங்கள்!

VINAVU Presents

AMMA BAR SONG

COCKTAIL – NOT REMIX

ஓட்டுப் போடாதீர் மக்கள் அதிகாரமே மாற்று !

4
தாதுமணல் கொள்ளையால் சீரழிக்கப்பட்ட பெரியதாழை கடற்கரை

அன்பார்ந்த பெரியோர்களே ! தாய்மார்களே ! இளைஞர்களே ! வணக்கம்.

ஒட்டுப்போடும் முன் சற்றுச் சிந்தியுங்கள். ஒட்டுப்போடுவதன் மூலம் அரசாங்கத்தை ஆளும் கட்சியை மாற்றலாம். ஆட்சியாளர்களை மாற்றலாம். வேற என்ன மாற்றங்களைச் செய்து விட முடியும்? தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை, பேரழிவுகளை திரும்பிப் பாருங்கள்.

sankar
உடுமலை சங்கர் – கவுசல்யா

காஞ்சி சங்கரராமன் பட்டப்பகலில் கோவில் வாசலிலேயே கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் விடுதலை ஆனார்கள். உரிய நீதி ஏன் கிடைக்கவில்லை?

சாதி மாறி காதலித்ததால் தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என நாளும் தொடரும் ஆணவப் படுகொலைகள். தடுக்க முடியவில்லை.

எந்தவித அங்கீகாரமும், அனுமதியுமின்றி செயல்பட்ட கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் துன்புறுத்தலால் தினந்தோறும் நடக்கும் மாணவர் தற்கொலைகள். தீர்வு காண முடியவில்லை.

இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளுக்கு அடிபணியாததால் நிகழும் விஷ்ணுபிரியா, முத்துகுமாரசாமி போன்ற உயர் அதிகாரிகள் முதல் ரேஷன் கடை ஊழியர் வரை பலரின் தற்கொலைகள். மர்ம மரணங்கள் நேர்மைக்கு கிடைத்த தண்டனையா?

இவை போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அனைத்துத் துறைகளிலும் தினந்தோறும் நாடு முழுவதும் நடக்கிறது. இவற்றை எதையாவது ஒட்டுப் போடுவதால் நிறுத்திவிட முடியுமா?

இவற்றுக்கு நீதி கிடைத்ததா? தீர்வு காணப்பட்டதா? சொல்லுங்கள்.

ஏரி, குளம், கண்மாய், புறம்போக்கு நிலங்களையும் காடுகளையும் மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளையும் எனத்தெரிந்தே தனியாரும், அரசுமே ஆக்கிரமிக்கிறார்கள்.

தாதுமணல் கொள்ளையால் சீரழிக்கப்பட்ட பெரியதாழை கடற்கரை
தாதுமணல் கொள்ளையால் சீரழிக்கப்பட்ட பெரியதாழை கடற்கரை

கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை எனக் காடுகளையும், மலைகளையும் கடற்கரை களையும் அழித்து இயற்கை வளங்களை சூறையாடி பேரழிவுகளையிம் பெரும் நாசங்களையும் விளைவிக்கிறார்கள். இதன் குற்றவாளிகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள்தான். குற்றவாளிகளிடமே மனு கொடுத்து தண்டிப்பது எப்படி?

மக்களுக்கும், நாட்டுக்கும் பேரழிவு ஏற்படுத்தி பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக விவசாய நிலங்களில் எரிவாயு எடுத்து, எரிவாயுக்குழாய்கள் பதித்து, பாசன மற்றும் குடிநீர் நீர்நிலைகளை அந்நியருக்கு விற்று, மீனவர் மீன்பிடி உரிமையை மறுத்து நமது வாழ்வாதாரங்களைப் பறித்து, நம்மை வெறும் கையேந்திகளாக மாற்றியவர்கள் தற்போதைய அதிகாரிகளும்  ஆட்சியாளர்களும்தான்.

அரசின் அடி முதல் நுனி வரை அனைத்தும் இலஞ்சம், ஊழல் முறைகேடுகள் அத்துமீறல்களால் நிரம்பி வழிகின்றது. இவற்றை ஒட்டுப்போட்டு ஒழிக்க முடியாது.

குடிநீர் முதல் கழிப்பறை- சாக்கடை வசதி, கல்வி-மருத்துவ வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை வழங்க வக்கற்ற அரசாங்கம் அதற்காக போராடும் மக்கள் மீது போலிசை வைத்து ஒடுக்குகிறது.

சாராயம் வேண்டாம், டாஸ்மாக்கை மூடு எனக் கேட்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, மந்திரிகளோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை. போலீசு வந்து தாக்குகிறது. நீதியை, சட்டத்தைக் காக்க வேண்டிய நீதிமன்றங்களோ அதைக் கண்டிக்கவில்லை.

நீதிபதிகள் அனைத்து ஊழல்களையும் விசாரிக்கிறார்கள். அனைத்து கொள்ளை களையும் விசாரிக்கிறார்கள். அனைத்து சாதி வெறிபடுகொலைகளை விசாரிக்கிறார்கள். ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? சிந்தியுங்கள்.

விவசாயிகளின் விளைபொருளான நெல், கரும்புக்கு கட்டுபடியானவிலை கொடுக்காமலும், வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை இழுத்தடிப்பதாலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதை தடுப்பதற்கு காரணமான அதிகாரிகளை தண்டிப்பதற்கு என்ன வழியிருக்கிறது? கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். போராடி பெற்ற எண்ணற்ற உரிமைகள் பறிபோகிறது. ஒட்டுப் போடுவதால் தீர்க்கப்படுமா? சொல்லுங்கள்.

நீர் ஆதாரங்களை தூர் வாரி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பல்வேறு துறை அதிகாரிகள் அதை செய்யாமல் ஆண்டுதோறும் நிகழும் வெள்ளப் பேரழிவில் ஏற்படும் சாவு மற்றும் இழப்பை வைத்து வெள்ள நிவாரணத்தை கொள்ளை அடிக்கிறார்களே. இதற்கு ஏன் தீர்வு காண முடியவில்லை? அமுல்படுத்தும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும் என சொல்கிறோம்.

அரசாங்கம் எதுவானாலும் மக்களுக்கு எதிரான அதன் எல்லாத் திட்டங்களையும் சட்டங்களையும் வகுத்துக்கொடுத்து, அமலாக்கும் இடத்தில், பொறுப்பில் இருப்பது நீதிபதிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் தாம். அவர்களின் அரசுக் கட்டமைப்பும்தான். மக்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் முதன்மைக் காரணமாக உள்ளனர். அரசு அதிகார வர்க்கம் முழுவதும் கிரிமினல் மயமாக மாறி மக்கள் விரோதமாகிவிட்டது.

ஒட்டுப் போடுவதனால் இந்த அரசுக் கட்டமைப்பில் எந்த மாற்றமும் வந்துவிடாது. தேர்தலில் வாக்களித்தால் எதற்காவது தீர்வு காண முடியுமா என எந்த அரசியல்வாதிகளும் அறிவாளிகளும் பேசுவதில்லை. தொலைக்காட்சியும் விவாதிப்பதில்லை. மீண்டும் மீண்டும் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என மக்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

இவ்வாறு சொல்பவர்கள் அரசு அதிகாரவர்க்கம் முழுவதும் கிரிமினல் மயமாக மாறி மக்கள் விரோதமாகிவிட்டது. இந்த நிலையை மாற்றி அதை மீண்டும் தூய்மைபடுத்தி நேர்மையாக மாற்ற முடியும் என்பதை அதற்கான வழிமுறைகளுடன் சொல்ல முடியுமா?

தேர்தலில் வாக்களிப்பதால் மக்களின் எந்த பிரச்சினையும் தீராது. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அரசு கட்டமைப்புதான். மேலும் அது மீள முடியாத நெருக்கடியில் சிக்கி ஒன்றுக்கொன்று முரண்பட்டு மக்களுக்கு எதிராக மாறிவிட்டது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றலை இழந்துவிட்டது. மொத்தத்தில் மக்களை ஆளும் அருகதை இழந்துவிட்டது.

எனவே தான் சொல்கிறோம் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மாற்று அல்ல. மாற்று என்பது மக்கள் அதிகாரம்தான். அரசு நிர்வாகத்தை தாங்களே ஆள்வதும், நேரடியாக கண்காணித்து தவறு செய்பவர்களை மக்களே விசாரித்து தண்டிக்கும் முறை வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். சாத்தியமா என தயங்க வேண்டாம்.

வெற்றியடைந்த விடுதலை போராட்டங்கள், மக்கள் புரட்சிகள் அனைத்தும் வரலாற்றின் தேவையிலிருந்தும் தியாகத்திலிருந்தும்தான் உருவாகியது.சாத்தியபாட்டிலிருந்து உருவாவதில்லை.

ஒட்டுப்போடாதீர்!

மாற்று மக்கள் அதிகாரமே..    

– மக்கள் அதிகாரம்.
விருத்தாச்சலம், 97912 86994.

பல்லிளிக்கும் இந்தியத் தரகு முதலாளிகளின் “சாமர்த்தியம்”

4

ந்திய முதலாளிகள் இரண்டு பத்தாண்டுகளாக ஆட்டையைப் போட்ட பொதுச்சொத்துக்களை எல்லாம் விற்று காசாக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார்கள், இப்போது. “பொதுத்துறையில் நிர்வாகம் சரியில்லை, நஷ்டம் அதிகம், தனியார் துறையில்தான் திறமை” என்று உதார் விட்டு பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச்சொத்துக்களையும், இயற்கை வளங்களையும் கைப்பற்றிய இந்தத் தரகர்களில் பலர் இன்று மஞ்சள் கடிதாசி கொடுக்கும்
நிலையில் இருக்கிறார்கள்.

மல்லையா, சுப்ரதா ராய்
லண்டனுக்கு ஓடிப் போன விஜய் மல்லையாவும், திஹார் சிறையில் வசிக்கும் சஹாரா சுப்ரதா ராயும் இந்த மோசடி பேர்வழிகளில் சிக்கிக் கொண்ட இரண்டு பேர் மட்டுமே.

“ஓ, விஜய் மல்லையாதானே” என்று நினைக்காதீர்கள்? லண்டனுக்கு ஓடிப் போன விஜய் மல்லையாவும், திஹார் சிறையில் வசிக்கும் சஹாரா சுப்ரதா ராயும் இந்த மோசடி பேர்வழிகளில் சிக்கிக் கொண்ட இரண்டு பேர் மட்டுமே. 5 லட்சம் கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தில் மஞ்சள் குளித்து இன்று வரை சட்டத்துக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கும் முதலாளிகளின் பட்டியலில் சின்ன அம்பானி அனில் முதல் நேர்மை திலகம் டாடா வரை உண்டு.

20 ஆண்டுகளாக நமது பணத்தை வைத்து இவர்கள் சூதாடினார்கள். “சாலைபோடுகிறோம், துறைமுகம் கட்டுகிறோம், வெளிநாட்டில் சுரங்கம் வாங்குகிறோம்,வெளிநாட்டு கம்பெனியை வாங்கி கொடி நாட்டுகிறோம்” என்று மினுக்கித் திரிந்தார்கள். லட்சக்கணக்கான விவசாயிகளின் உயிரை பலிவாங்கும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கை இவர்களது இலாப வெறிக்கு, வறட்டு கவுரவத்துக்கு இரை போட்டுக் கொண்டிருந்தது. நம் விவசாயிகளுக்கு மறுக்கப்பட்ட பாசன வசதிகளுக்கான தொகையும், விளைபொருட்களுக்கான நியாயமான விலையும் இந்த முதலாளிகளின் உலகமய கனவுகளுக்கு எரிபொருளாக பயன்பட்டன.

ஆனால், சூதாடிகளின் கணக்கு தீர்க்கப்பட வேண்டிய கட்டம் வந்திருக்கிறது. இதற்கு மேலும் வெட்டுவதற்கு ஏதுமில்லை, இதற்கு மேலும் கொள்ளை அடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர் இந்தத் தரகர்கள். மேலும் மேலும் வெறியோடு “தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்து”, “நிலக் கைப்பற்றல் சட்டத்தை மாற்று”, “மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்க ஜி.எஸ்.டி-யை கொண்டு வா” என்று மோடி அரசுக்கு இந்த தரகர்கள் உத்தரவு
போட்டாலும், மோடி அவற்றை சிரமேற்கொண்டு நிறைவேற்ற முயற்சி செய்து வந்தாலும், பலவற்றை அவசர அவசரமாக நிறைவேற்றி விட்டாலும் முதலாளிகளின் மலச்சிக்கல் தீர்ந்த பாடில்லை.

குறிப்பாக, முதலாளிகளின் பேராசைக்கும் சூதாட்டத்துக்கும் இரையாக இயற்கை வளங்களை பறி கொடுப்பதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், தொழிலாளர் சேமிப்பை கைப்பற்றும் முயற்சிக்கு தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எதிர்ப்பு என கொள்ளைக்கு எதிரான போராட்டங்களும் அதிகரிக்கின்றன.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜனை பொறுத்தவரை இந்தியப் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு ஏற்ப செயல்படும் வகையில் பராமரிக்க வேண்டும்

இந்தச் சூழ்நிலையில் சூதாடிகளின் சட்டையைப் பிடித்து பணத்தை வசூலிக்கா விட்டால் உள்ள முதலுக்கே மோசம் என்று உணர்ந்த ரிசர்வ் வங்கி கவர்னர ரகுராம் ராஜன் “5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை தீர்க்கும் வழியை பாருங்கள்” என்று பொதுத்துறை வங்கிகள் மீது சவுக்கைச் சுழற்ற இந்த சூதாடிகளின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறியுள்ளன. ரகுராம் ராஜனை
பொறுத்தவரை இந்தியப் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு ஏற்ப செயல்படும் வகையில் பராமரிக்க வேண்டும். இப்போது இந்திய தரகு முதலாளிகள் மீதான இந்த நடவடிக்கைகள் மூலம் பெரும் அளவில் அவர்கள் வசம் இருக்கும் நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களால் கைப்பற்றப்படுவது நடக்கப் போகிறது. அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டு சொத்துக்களை வாங்குவதற்கு அனுமதிக்கும் திருத்தங்களை மோடி அரசு ஏற்கனவே செய்து முடித்திருக்கிறது.

மேலும், கடன்காரர்களாக, பொதுச்சொத்துக்களை பொறுப்பாக நிர்வகிக்க முடியாதவர்களாக, நஷ்டத்தில் மூழ்கி கோவணத்தோடு நிற்கும் இந்த ஊதாரிகளின் நிலைமை இப்படி இருக்கையில்தான் மோடி அரசு, “இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது” என்று மோசடி செய்து கொண்டிருக்கிறது.

அப்படி என்ன நெருக்கடி? 09-05-2016 திங்கள் கிழமை தி ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில தகவல்களை பார்க்கலாம்.

அனில் அம்பானி
மோசடிகளின் திலகம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மொபைல் சேவை நிறுவம் RCOM திவால் நிலையில்

1.    அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 1.21 லட்சம் கோடி. ஆண்டு தோறும் கட்ட வேண்டிய வட்டி ரூ 8,299 கோடி. (கணக்கு போட்டு பாருங்கள். அனில் அம்பானி கட்டும் வட்டி வீதம் சுமார் 6.85%தான், உங்கள் வீட்டுக் கடனுக்கு வட்டி வீதம் என்ன?)

i.  கடனை கட்ட அம்பானி விற்கவிருக்கும் சொத்துக்கள் – (Rcom) ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் தகவல் தொடர்பு கோபுரங்கள் (ரூ 22,000 கோடி மதிப்பு), ஆப்டிக் இழை கட்டுமானங்கள் (ரூ 8,000 கோடி மதிப்பு).

மேலே சொன்ன மதிப்பீடுகள் எல்லாம் வெறும் பேப்பரில் இருப்பவையே. இந்தச் சொத்துக்களை இந்த விலைக்கு வாங்குவதற்கு ஆள் கிடைத்தால்தான் கம்பெனி உயிர் பிழைக்கும்.

இந்த நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ 40,000 கோடி, ஆனால் அதன் சந்தை மதிப்பீடு வெறும் ரூ 13,440 கோடி. அதாவது கம்பெனியையே விற்றாலும் கடனை அடைக்க முடியாது.

ii.    ரிலையன்ஸ் இன்ஃப்ரா (R-Infra)-ன் மொத்தக் கடன் ரூ 25,000 கோடி.

மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தன் கைவசம் வைத்திருக்கும் மின்சார உற்பத்தி, வினியோக தொழிலில் 49 சதவீதத்தை கனடா நிறுவனத்துக்கு விற்றிருகிறார் சின்ன அம்பானி. “நான் திறமையாக மின்சாரம் உற்பத்தி செய்வேன்” என்று நமது பணத்தை நமது வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி, சொத்துக்களை கைப்பற்றி விட்டு இப்போது அதை வெளிநாட்டு கம்பெனியிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்.

இது போலவே, இந்நிறுவனத்தின் வசம் இருக்கும் சாலைகளையும் சுமார் ரூ 9,000 கோடிக்கு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்கத் தயாராகி வருகிறார் சின்ன அம்பானி.

இந்த நிறுவனம் ஆண்டு தோறும் கட்ட வேண்டிய வட்டித் தொகை ரூ 1,974 கோடி, ஆனால் விற்பனையில் மொத்த லாபம் ரூ 1,686 கோடி மட்டுமே. அதன் சந்தை மதிப்பான ரூ 14,476 கோடி அதன் மொத்தக் கடன்களை விட ரூ 10,000 கோடி குறைவு. அதாவது, கம்பெனியையே மொத்தமாக விற்றாலும் கடனை அடைக்க முடியாத நிலைமை.

iii.   ரிலையன்ஸ் கேபிடல் தனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை
ஜப்பானிய நிறுவனத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக விற்று இப்போது நிப்பன் லைஃப்
இன்சூரன்சின் கையிருப்பு 49% ஆக உயர்ந்திருக்கிறது.

இந்திய கார்ப்பரேட்டுகளின் கடன்சுமை
இந்திய கார்ப்பரேட்டுகளின் கடன்சுமையும் விற்பனை செய்யவிருக்கும் சொத்துக்களின் மதிப்பும் (படம் நன்றி thehindu.com)

iv.   இந்தியாவில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியார் மயமாக்குவதில்
தனது கையை நனைக்கலாம் என்று நாக்கைச் சப்பிக் கொண்டு அனில் அம்பானி
ஆரம்பித்த நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ 6,800 கோடி, அதன் சந்தை மதிப்போ
வெறும் ரூ 4,895 கோடி. இதன் வருமானமும் வட்டி கட்டுவதற்கு போதாத நிலையில்
உள்ளது.

2.   எஸ்ஸார் குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 1.01 லட்சம் கோடி

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் 50% பங்குகளை ரூ 25,000 கோடிக்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கின்றனர் முதலாளிகள் சசி ரூயாவும், ரவி ரூயாவும். இன்னொரு சுத்திகரிப்பு ஆலையின் 49% பங்குகளை ரூ 25,000 கோடிக்கு வாங்கவும் ஆள் தேவை. தனது துறைமுக தொழிலையும் விற்க தயாராகியிருக்கின்றனர் இந்த சகோதரர்கள்.

3.    மோடியின் புரவலர் கவுதம் அதானியின் மொத்தக் கடன் ரூ 96,031 கோடி

தான் கைப்பற்றி வைத்திருக்கும் நிலக்கரி சுரங்கங்கள், துறைமுகம், ரயில் பாதை ஆகியவற்றை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார் அதானி. சென்ற ஆண்டு இந்திய முதலாளிகளுக்கு கொடுத்த கடனை எல்லாம் திருப்பி வாங்கி விடுவது என்று முடிவு செய்த ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அதானிக்குக் கொடுத்த $250 கோடி (சுமார் ரூ 17,000 கோடி) கடனை ரத்து செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு மோடியுடன் போய் அந்த நாட்டில் சுரங்கத்தை வாங்குவதற்கு இந்திய ஸ்டேட் வங்கியிடம் $100 கோடி கடன் பெறும் ஒப்பந்தத்திலும் அங்கேயே கையெழுத்திட்டார் அதானி. இப்போது அதற்கான கடன் கொடுப்பத்தற்கு ஸ்டேட் வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் பின் வாங்கி விட்டன. அதானிக்கு உதவுவதற்கு மோடி வேறு மோசடிகளில்தான் இறங்கியாக வேண்டும்.

4.  ஜெய்பீ குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 75,000 கோடி

தன் வசமிருந்த முக்கியமான சிமென்ட் ஆலையை ரூ 15,900 கோடிக்கு விற்றிருக்கிறார் அதன் முதலாளி மனோஜ் கவுர். கைவசம் இருக்கும் இன்னொரு சிறிய சிமென்ட் ஆலை, 3 அனல் மின்நிலையங்கள், 1 நீர்மின் நிலையம், யமுனா அதிவிரைவு சாலை, மற்றும் கைப்பற்றி வைத்திருக்கும் பல்வேறு நிலங்களை நல்ல விலைக்கு விற்க தயாராக இருக்கிறார். ஆனால், வாங்குவதற்குத்தான் ஆளில்லை.

சென்ற ஆண்டு கடன் தவணை கட்டத் தவறியிருக்கிறது இந்த நிறுவனம்.

5.    ஜி.எம்.ஆர் குழுமம்

இரண்டு ஆண்டுகளில் ரூ 11,000 கோடி மதிப்பிலான சாலைகள், மின் நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்களை விற்றிருக்கிறது. அதற்குப் பிறகும் அதன் கடன் ரூ 47,738 கோடியாக உள்ளது. இது போக கைப்பற்றி வைத்திருக்கும் நிலங்களையும், விமான நிலைய பிரிவின் பங்குகளையும் விற்க திட்டமிட்டிருக்கிறது.

6.    லான்கோ குழுமம்

சென்ற ஆண்டு உடுப்பி ஆலையை ரூ 6,300 கோடிக்கு விற்றிருக்கிறது. அதன் பிறகும் கடன் 6 சதவீதம் அதிகமாகி ரூ 47,102 கோடியை தொட்டிருக்கிறது. மின்துறை சொத்துக்களையும், 2011-ல் ஆஸ்திரேலியாவில் $75 கோடி கொடுத்து வாங்கிய நிலக்கரி சுரங்கத்தில் மூன்றில் ஒரு பங்குகளையும் விற்க முயற்சித்து வருகிறது.

7.   வீடியோகான் குழுமம்

மொசாம்பிக்கில் வாங்கிப் போட்ட எரிவாயு வயல்களை ரூ 15,000 கோடிக்கு விற்ற பிறகும் கடன் தொடர்ந்து அதிகரித்து ரூ 45,405 கோடியை தொட்டிருக்கிறது. தான் பிடித்து வைத்திருந்த அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல்லுக்கு ரூ 4,600 கோடிக்கு விற்றிருக்கிறார் முதலாளி வேணுகோபால் தூத். நிறுவனத்தின் கடனில் சுமார் ரூ 21,000 கோடி பிரேசில், இந்தோனேசியா, மற்றும் உலகின் பிற பகுதிகளில் எண்ணெய் எரிவாயு கண்டுபிடிப்பதற்கான பணிகளில் முதலீடு
செய்யப்பட்டது.

மோடி
ஏகாதிபத்தியங்களின் கையில் மெழுகு பொம்மைகளாக இந்திய பிரதமர்கள் (மோடி)

8.   ஜி.வி.கே குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 34,000 கோடி. அதன் விமான நிலைய கிளை நிறுவனத்தை விற்க முயற்சித்து வருகிறது. பெங்களூரு விமான நிலையத்தில் அதன் 33 சதவீதம் பங்கை Fairfax India Holdings Corp என்ற கனடாவின் நிதி முதலீட்டு நிறுவனத்துக்கு ரூ 2,149 கோடிக்கு
விற்றிருக்கிறது.

அன்னிய நிறுவனங்களை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மோடி திறந்து விட்ட கதவின் வழியாக “கைப்புள்ள” இந்திய முதலாளிகளின் சொத்துக்களை மலிவு
விலையில் வாங்கி போடுகின்றன உலக நிதி மூலதன நிறுவனங்கள்.

ஆஸ்திரேலியாவில் அதன் ரயில் மற்றும் துறைமுக நிறுவனத்திலும் பங்குகளை விற்க முயற்சித்து வருகிறது.

டாடா கோரஸ்
நமது பணத்தில் இங்கிலாந்தில் திறமை காட்டி இப்போது தோற்றுத் திரும்பியிருக்கும் டாடா

9.  டாடா ஸ்டீல்

மொத்தக் கடன் $1007 கோடி (சுமார் ரூ 65,000 கோடி). கடன்களை சமாளிக்க இங்கிலாந்தில் வாங்கிய கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை விற்க முயற்சித்து வருகிறது.

தனது தனியார் திறமையைக் காட்ட இங்கிலாந்து போன டாடா, “இங்கிலாந்து அரசு மானியம் கொடுக்கவில்லை”, “தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கிறது”, “சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு செலவிட வேண்டியிருக்கிறது”, “அதனால் நஷ்டம் ஏற்பட்டு விட்டது” என்றெல்லாம் பிலாக்கணம் பாடுகிறது. இங்கிலாந்தில் நிறுவனத்தை விற்றாலும்,  மக்கள்
வரிப்பணத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு, தொழிலாளர்களுக்கு குறைந்து கொண்டே
போகும் ஊதியம், சுற்றுச் சூழல் பற்றி கவலைப்படாத ஊழல் நிர்வாகம் என்று அதற்கு சாதகமான இந்தியாவில் அதன் கொள்ளை தொடரும்.

10. ஜிண்டால் ஸ்டீல் & பவர் நிறுவனத்தின் கடன் தொகை ரூ 46,000 கோடி.

11. டி.எல்.எஃப் – சுமார் 2 கோடி சதுர அடி அலுவலக தளத்தை சொந்தமாக வைத்துள்ள தனது நிறுவனத்தில் 40% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்க முயற்சித்து வருகிறது.

 முகேஷ் அம்பானி
பொதுப்பணத்தை கடனாக எடுத்துதான் அம்பானி தனியார் “திறமை” காட்காட்டி வரும் பெரு முதலை முகேஷ் அம்பானி

இவை போக சஹாரா குழுமத்தின் 86 ரியல் எஸ்டேட் திட்டங்கள், ஃபார்மூலா ஒன் பந்தய அணியில் 42% பங்குகள், 4 விமானங்கள், மும்பை சஹாரா ஹோட்டல், லண்டன் க்ரோஸ்வேனர் ஹவுஸ், நியூயார்க் பிளாசா ஹோட்டல், நியூயார்க் தி டிரீம் ஹோட்டல் ஆகியவை சந்தைக்கு வாங்குவோர் தேடி வந்திருக்கின்றன.

விஜய் மல்லையாவின் அனைத்து சொத்துக்களும் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், அவர் விட்டுச் சென்ற அழுக்கு உள்ளாடைகள் வரை விற்றாலும் வங்கிகளால் தாம் கொடுத்த கடனை வசூலிக்க முடியாது என்பதுதான் நமது பரிதாப நிலைமை.

முதலீட்டு ஆலோசகர் எஸ்.பி துல்சியான் இந்தக் கடன்களையும் சொத்துக்களையும்
உடலின் அழுகிப் போன உறுப்புகள்” என்கிறார். அதாவது, வங்கிக் கடனை வாங்கி, பொதுச்சொத்துக்களை கைப்பற்றி பொறுப்பில்லாமல் நாசமாக்கி விட்ட இந்த பொறுப்பற்ற, உதவாக்கரை, ஊதாரி தரகு முதலாளிகள் கிடைத்த விலைக்கு பண மூட்டையோடு வரும் யாருக்கும் விற்கத் தயாராகி உள்ளனர். அதற்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் கொள்கைகளை மாற்றி, சட்டங்களை திருத்தி வைத்திருக்கின்றன முந்தைய மன்மோகன் அரசும், இப்போதைய மோடி அரசும்.

இந்த யுத்த பூமியில் சொத்துக்களை வாங்கி போடும் முதலாளிகளும் இருக்கின்றனர். குமார மங்கலம் பிர்லாவின் யூனிடெக் – ஜெய்பீ குழுமத்தின் சிமென்ட் ஆலையை ரூ 15,900 கோடிக்கும், ரூ 4,800 கோடிக்கு அனில் அம்பானியின் சிமென்ட் ஆலையையும் வாங்கியிருக்கிறது. ஏர்டெல் வீடியோகான் வசம் இருந்த அலைக்கற்றையை வாங்கி போட்டிருக்கிறது.

இந்தக் கடன்கார முதலைகளில் பெரிய முதலை பெரிய அம்பானி முகேஷ். அவரது ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்தக் கடன் ரூ 1.87 லட்சம் கோடி. இதில் ரூ 1.5  லட்சம் கோடி ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசி சேவையை ஆரம்பிப்பதற்கான கடன். இப்படி பொதுப்பணத்தை கடனாக எடுத்துதான் அம்பானி தனியார் “திறமை” காட்டி வருகிறார்.

இவ்வாறாக, ஏகாதிபத்திய நிதிச் சூதாட்டத்தில் தவிர்க்க இயலாமல் வெடிக்கும் நெருக்கடிகள் உழைக்கும் மக்கள் மீது சுமைகளை ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் பல முதலாளிகளை திவாலாக்கி, ஒரு சில முதலாளிகளிடம் சொத்துக்களை குவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிக் கடன்களையும், அரசு எந்திரத்தையும் “கையாள்வதில்” தொடர்ந்து “திறமை”யாக செயல்படும் முதலாளிகள் ஏகபோக ஆதிக்கத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் நிதிச் சூதாடிகளின் களமாக, மக்களின் உழைப்பை வீணடிக்கும் ஊதாரியாக, அனைவருக்கும் வேலை, கல்வி, மருத்துவம், சுகாதாராத்தை உத்தரவாதம் செய்ய முடியாத கையாலாகாத ஒன்றாக திவாலாகி, நெருக்கடியில் சிக்கி நிற்கிறது முதலாளித்துவம். தாம் உருவாக்கிய இந்தநெருக்கடியை தீர்த்துக் கொள்வதற்கு உழைக்கும் மக்கள் மீது மேலும் மேலும் சுமையை ஏற்ற முயற்சித்து வருகின்றனர் முதலாளிகள்.

இதை எதிர்த்து விடாப்பிடியாக போராடுவதும், 1% ஆளும் வர்க்கத்துக்கு மட்டும் சேவை செய்யும் 99% மக்களை கொடூரமாக சுரண்டும் இந்த சமூக அமைப்பையே தூக்கி எறிந்து மக்களுக்கு சேவை செய்யும் சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான பணியில் ஈடுபடுவதும்தான் தொழிலாளி வர்க்கத்தின், படித்தவர்களின் இப்போதைய கடமை.

– அப்துல்

செய்திக்கான சுட்டி

அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு மக்கள் அதிகாரம்தான் !

3

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ன்புடையீர், வணக்கம்!

மதுவிலக்கை அமல்படுத்தவே முடியாது என சாராய மந்திரி நத்தம் விசுவநாதன் கொக்கரித்தார். சசிபெருமாள் மரணத்தைக் கொச்சைப்படுத்தியது, ஜெயா அரசு. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அடித்து நொறுக்கியது. கோவனை, தேசத்துரோக வழக்கில் கைது செய்தது. மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, போராடியவர்களுக்கு பிணை வழங்காமல் ஒரு மாதம் சிறை.

kovan-arrest-people-power-virudai-notice-2
கோப்புப்படம்

தமிழகத்தில் குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்தாலும், எத்தனை தாய்மார்கள் தாலி அறுத்து விதவைகளானாலும், மூட முடியாது என சாராய ஆலை முதலாளிகளின் லாபத்திற்காக டாஸ்மாக் விற்பனையை இலக்கு வைத்து நடத்தினார், ஜெயா.

எல்லாம் அம்மாமயம் என அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் அதிகாரிகளும் தனது காலடியில் என்ற திமிரோடு, கொள்ளையடித்த பணத்தை வாரியிறைத்து எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற இறுமாப்போடு இருந்த ஜெயலலிதா, இன்று தேர்தல் பிரச்சாரத்தில், படிப்படியாக டாஸ்மாக்கை மூடுகிறேன் என மக்களிடம் கூழைக்கும்பிடு போட்டுச் சொல்கிறாரே, இலவசத் திட்டங்களை அள்ளி வீசுகிறாரே, ஜெயலலிதாவைப் பணியவைத்தது எது?

டாஸ்மாக்கை முற்றுகையிட்டு, போலீசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு கைது, சிறை, ரத்தம் சிந்தியது, லாக் அப் சித்திரவதை, உயிர்பலி என அர்ப்பணிப்போடு நடந்த மக்கள் போராட்டம்தான் ஜெயலலிதாவைப் பணிய வைத்தது. அனைத்துக் கட்சிகளையும் மதுவிலக்கு பற்றி உறுதியாகப் பேச வைத்தது. மக்கள் நிர்ப்பந்தித்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு டாஸ்மாக் போராட்டம் ஒரு நிரூபணம்.

டாஸ்மாக்கைப் போலவே மக்களை பாதிக்கும் எண்ணற்ற பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன.

சிந்தித்துப் பாருங்கள்! பெண்கள் மீதான தொடரும் பாலியல் வன்முறைகள், அதிகரிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், தொடரும் கனிமவளக் கொள்ளைகள், கோவில் வாசலில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் வழக்கில் எதிரிக்குத் தண்டனை இல்லை, சாதி மாறிக் காதலித்ததால் இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என்று தொடரும் ஆணவப் படுகொலைகள், ஊழலுக்கு அடிபணிய மறுத்து நேர்மையாகப் பணிபுரிந்து முத்துக்குமாரசாமி, டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவின் மரணம், இவை எதையும் நீதிமன்றத்தால், அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கொல்லப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள்
கொல்லப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் (கோப்புப்படம்)

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்கள் படுகொலைக்குக் காரணமானவர்கள், அனுமதி வழங்கிய துணைவேந்தர், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், இவர்களை எப்படித் தண்டிப்பது? கல்லூரி மீது போடப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம், சுயநிதி கல்லூரிகளின் துன்புறுத்தலால் தொடர்கிறது மாணவர்களின் தற்கொலை.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டம், விவசாயிகளின் நிலங்களைப் பறித்து எரிவாயு குழாய் பதிக்கும் பனானட்டு கம்பெனி, கெயில் நிறுவனம், விவசாய நிலங்களை நாசமாக்கும் ஷேல் கேஸ் திட்டம் இவற்றுக்குத் எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது.

ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் ஆகிய கனிமவளக் கொள்ளைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் போடப்பட்டன. ஆனால், கொள்ளைகள் தடுக்கப்படவும் இல்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை. கிரானைட் கொள்ளை தொடர்பாக விசாரித்த சகாயம் குழு அறிக்கை, தாதுமணல் கொள்ளை தொடர்பாக விசாரித்த ககன்தீப்சிங் பேடி அறிக்கை மீது அரசும் நீதிமன்றமும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

ஆற்றுமணல் கொள்ளையர்க்கு எதிரான போராட்டம்
ஆற்றுமணல் கொள்ளையர்க்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)

பெப்சி, கோக் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆறுகள், ஏரிகள் தாரைவார்க்கப்பட்டு, குடிநீர் பாட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆடு மாடுகளைப் போல் தண்ணீருக்கு அலைகிறார்கள். ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலை ஆதாரங்களை தூர்வாரி பராமரித்து பாதுகாக்காமல் சாக்கடைக் கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளும் கலக்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் ஆக்கிரமிப்பால் வெள்ளப் பேரழிவு ஏற்படுகிறது. தீர்வு என்ன?

ஆற்று மணல் கொள்ளைக்கு பொதுப்பணித்துறை மட்டுமல்ல, உடந்தையான மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் ஈடுபடுகின்றனர். தடுக்கும் நேர்மையான தாசில்தாரோ, காவல் துறையினரோ, கொலை செய்யப்படுகின்றனர். யாரிடம் மனு கொடுத்து யாரை தண்டிப்பது? அரசும் அதிகார வர்க்கமும் கிரிமினல்மயமாக மாறி மக்கள் விரோதமாகி விட்டது.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி குறைப்பு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பணிப்பாதுகாப்பு என எதையும் அரசால் உத்தரவாதம் செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை பாதுகாக்கப் போராடும் மக்களை அடக்கி ஒடுக்கும் இந்த அரசு உறுப்புகள் அனைத்தும் மக்கள் விரோதமாக மாறி விட்டன.

அரசுக் கட்டமைப்பு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது. மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வளிக்கும் ஆற்றலை இழந்து விட்டது. மொத்தத்தில் இந்த அரசு நம்மை ஆளும் அருகதை இழந்து விட்டது. சட்டத்தின் ஆட்சி, மக்கள் நல அரசு என்பதை அவர்களே பின்பற்ற முடியாமல் கழிப்பறை காகிதமாக மாற்றிய பிறகு மக்கள் எதற்கு அதன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்?

மக்களின் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தனித்தனி போராட்டங்கள் சாத்தியம் இல்லாதது மட்டுமல்ல தீர்வும் அளிக்காது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியில் நின்று போராட வேண்டும். இரத்தம் சிந்தாமல், சிறை செல்லாமல், உயிர்த் தியாகம் இல்லாமல் எந்தப் போராட்ட வெற்றியும் சாத்தியம் இல்லை.

தேர்தலில் வெற்றி பெறும் கட்சி மாற்று அல்ல. மக்கள் அதிகாரம்தான் மாற்று. அரசு நிர்வாகத்தை தாங்களே ஆள்வதும், நேரடியாகக் கண்காணித்து, தவறு செய்பவர்களை மக்களை விசாரித்துத் தண்டிக்கும் முறை வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

மனிதகுலம் கடந்து வந்த வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள், சாத்தியமா என அவநம்பிக்கை அடையவோ, அச்சப்படவோ அவசியமில்லை.

அனைத்து மக்களுக்குமான மாற்றை அனைவரும் சேர்ந்து அமைப்போம்.

வாருங்கள்….

மக்கள் அதிகாரத்தில் இணையுங்கள்!

மக்கள் அதிகாரம்,
சென்னை, 9176801656

தே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !

0

தே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை

போர்க்களத்தில்………பாகம் 5

 

மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் போலிசு ஏவிய அடக்குமுறை குறித்த நேர்காணல் வீடியோக்களின் கடைசி பாகத்தில் செல்வி, வெண்ணிலா இருவரும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள்.

சென்ற வீடியோவில் பேசிய கீதாவைப் போல வெண்ணிலாவின் இரு மகன்கள் மற்றும் கணவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மகன் ஆகாஷ் மயக்கமடைய அவனைக் காப்பாற்றச் சென்ற வெண்ணிலாவும் அடிபடுகிறார். கணவர் தெய்வீகனுக்கு போலீஸ் பூட்ஸ் உதையால் உதடு கிழிந்து விட்டது. போலீசின் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுகூறும் வெண்ணிலா, எதற்கெடுத்தாலும் பாலியல் வசவுகளை வாந்தி எடுக்கும் போலீசை அம்பலப்படுத்துகிறார்.

போராட்டக் களத்தில் செல்வியை பிடித்து தள்ளி, தலை முடியைக் கொத்தாக பிடித்து அடித்து துவைக்கிறார்கள் போலீசார். இதில் இருபாலினத்தவரும் உண்டு. பொதுவில் பெண் போலீஸ் அதிகரிப்பதால் போலீசின் காட்டுமிராண்டித்தனம் குறைந்து விடுவதில்லை. இங்கு ஆண் போலீசோடு போட்டி போட்டுக் கொண்டு பெண் போலீசார் அடிக்கின்றனர். காவல் துறை ஆளும் வர்க்கத்தின் ஒரு அமைப்பு எனும் போது அரசின் அடியாள் எனும் போது இங்கே பாலினமோ இல்லை ஒடுக்கப்பட்ட சமூகம் எனும் பிரிவுகளோ எடுபடுவதில்லை.

மதுரவாயல் பகுதியில் டாஸ்மாக் கடைகளின் பாதிப்பை விளக்கும் செல்வி இறுதியில் விழுப்புரம் பகுதியில் ஒரு சிறுமியின் அனுபவத்தை கூறுகிறார். நெஞ்சை அடைக்கும் அந்த அனுபவத்தை பார்க்கும் போது டாஸ்மாக் கடைகளை மூடும் வரை அயராது போராடுவோம் என்கிறார் அவர். ஆம். இந்தப் போராட்டத்தின் பின்னே பல ஆயிரம் மக்களின் மரணம், விபத்து, வதை, தற்கொலை எனும் பெரும் காவியத் துயரம் இருக்கிறது.

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

பாலஸ்தீனப் பிணங்களை தின்னும் இசுரேல் !

0

நாம் எப்பொழுதுமே இசுரேலிடம் பாலஸ்தீனிய அரசியல் கைதிகளை  விடுதலைச் செய்யச் சொல்லி போராடி வந்தோம். தற்போது இறந்த உடல்களைக் கொடுக்குமாறு எங்களைப் போராட செய்வது என்பதைக் கற்பனைச் செய்து கூட பார்க்க முடியாது என்று கூறுகிறார் ஹசன் மனஸ்ராவின் தந்தையான காலத் மன்ஸ்ரா. ஹசன் மன்ஸ்ராவின் உடல் கடந்த அக்டோபரில் இருந்து இசுரேலின் பிணவறையில் தான் உள்ளது.

இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.

அகமது இன்னமும் இசுரேலிய சிறைக் கம்பிகளின் பின் தான் இருக்கிறான்.
அகமது இன்னமும் இசுரேலிய சிறைக் கம்பிகளின் பின் தான் இருக்கிறான்.

15 வயது ஹசன் மன்ஸ்ராவும் அவனது உறவுக்காரப் பையனான அகமது மன்ஸ்ராவும் சேர்ந்து இசுரேலியச் சிறுவர்களை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுப் பின் இசுரேலிய போலீசால் ஹசன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான். அகமது இன்னமும் இசுரேலிய சிறைக் கம்பிகளின் பின் தான் இருக்கிறான்.

தனது மகனைப் படுகொலை செய்த இசுரேலியப் போலிசுக்கு எதிரான எந்த விசாரணையையும் விட காலத் மன்ஸ்ராவிற்கு அவரது மகனின் இறந்த உடல் தான் தேவைப்படுகிறது. அவனது இறுதிச் சடங்கிற்கான மரியாதையாவது அமைதியான முறையில் எந்த தடங்களும் இல்லாமல் நடத்த வேண்டுமே என்பது தான் அவரது கவலை. ஒருவேளை இசுரேலிய நீதிமன்றத்திற்கு நீதியைப் பற்றிய பிரஞ்ஞை இருந்தால் தனது மகனின் இறந்த உடலைத் மீட்டுத் தர உத்தரவு இட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

கடந்த மாதத்தில் இசுரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதான்யஹு தகுந்த தகவல் வரும் வரை உடல்களை ஒப்படைக்க வேண்டாம் என்று இரக்கமின்றி கூறிவிட்டார். இசுரேலிய நீதிமன்றம் பஸ்கா விடுமுறை முடியும் வரை தீர்ப்பை ஒத்தி வைத்து நாடகமாடுகிறது.

கடந்த அக்டோபர் முதல் இது வரை கிட்டத்தட்ட 209 பாலஸ்தீனியர்களை இசுரேலிய போலிசு சுட்டுக் கொன்று உள்ளது. 29 இசுரேலியர்களைப் பாலஸ்தீனியர்கள் கொன்றுள்ளதாக இசுரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. இசுரேலியர்களை தாக்குவதன் எதிர்வினை போல இதை அவர்கள் இட்டுக் கட்டினாலும்  புள்ளி விவரங்களின் இடைவெளி அந்த போலியானக் குற்றசாட்டுகளை புறம் தள்ளகிறது.

பாலஸ்தீனம் என்னவோ இசுரேலிய மக்களை கொல்வதாகவும் பதிலுக்கு இசுரேல்  திருப்பித் தாக்குகிறது என்று நடுநிலைமை வேடம் போடும் கபடதாரிகளுக்கு பதிலாக புள்ளி விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

133 இஸ்ரேல் குழந்தைகள் பாலஸ்தீனர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 2,089 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலியர்களால்கொல்லப்பட்டுள்ளனர்.
133 இஸ்ரேல் குழந்தைகள் பாலஸ்தீனர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 2,089 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் படுகொலைகளாகட்டும், அரசியல் கைதுகளாகட்டும், பிணவறையில் அடைபட்டுக் கிடக்கும் உடல்களாகட்டும், ஐக்கிய நாடுகளின் சபையின் கண்டனங்ககளாகட்டும் இசுரேல் எண்ணிறந்த வகையில் பாலஸ்தீனத்தால் எட்ட இயலாத உயரத்தில் இருக்கிறது.

சமீப காலங்களில் கிட்டத்தட்ட 268  பாலஸ்தீனியப் போராளிகளது உடல்களை எண்களின் கல்லறை(Cemetery of Number) என்ற பெயரில் புதைத்து உள்ளது இசுரேல்.  புதைக்கப்பட்ட உடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இறந்த உடலைத திருப்பிக் கொடுத்து இறுதிச் சடங்கை செய்ய விடாமல் தடுப்பது இரண்டாவது முறை படுகொலை செய்ததற்கு ஒப்பாகும் என்று “இறந்த உடல்களை மீட்பதற்கான பாலஸ்தீனிய தேசியப் பிரச்சார குழு” வின் ஒருங்கினைப்பாளரான சல்வா ஹம்மது கூறுகிறார்.

தாம் மிகவும் நேசித்த உறவுகளுக்கு கடைசி முறையாக பிரியா விடைக் கொடுக்க விரும்பும் அவர்களின் மன உளைச்சலின் அளவை யாரும் மிகைப் படுத்த முடியாது. இறந்த உடல்களை ஒப்படைக்காமல் இருப்பது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

இசுரேல் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பிறகு தான் அதன் தீவிரம் காட்டுத்தனமாக அதிகரித்து. மத்திய கிழக்கில் தமது மேலாண்மையை நிலை நிறுத்தும் நோக்கில் பாலஸ்தீனத்தை துண்டாடியது. ஒருபுறம் பலஸ்தீனம்-இசுரேலின் ஒற்றுமைக்கு பாடுபடுவதாக கூறிக் கொண்டு மறுபுறம் இசுரேலுக்கு பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்து வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

“நான் இன்னும் அவனுக்கு கடைசி முத்தம் தரக் காத்திருக்கிறேன். எந்த அளவிற்கு அவனை நாங்கள் இழந்து தவிக்கிறோம் என்று கூறவும், அரவணைப்புக் கொடுக்கவும் காத்திருக்கிறோம்” என்று கதறுகிறார் அப்துல் மாலிக் அபு காரௌபின் தாயார் ஹனான் அபு காரௌப்.சென்ற அக்டோபரில் இசுரேலின் பாதுகாப்புத் துறை பாலஸ்தீன போராளிகளின் வீடுகளை தாக்கி அழிப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்காக தனது ஒப்புதலை அளித்து உள்ளது.  சில பத்தாண்டுகள் முன்பு தொடங்கி 2004-ல் காலாவதியாகி போன இந்த  அரசியல் நடவடிக்கையினை மீண்டும் இது தொடர்வதாக உள்ளது.

குபிர் ஆகப் (Kufr Aqab) பகுதியை சேர்ந்த அப்துல் மாலிக் பிளம்பராக வேலை பார்த்து பின்னர் சட்டம் படிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக்  கொண்டு இருந்தவரை இசுரேலிய இராணுவ வீரரை சுட்டதாக பொய் புகாரின் பெயரில் கொல்லப்பட்டுள்ளார். தந்தையும் வக்கீலுமான முஹம்மது ஆல்யன், “இசுரேலிய நீதித்துறையை நம்பி நாங்கள் இந்த மனுவை அளிக்கவில்லை மாறாக உலக அளவில் கவனத்தை ஈர்க்கவே நாங்கள் இதை செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

முஹம்மது ஆல்யன்
முஹம்மது ஆல்யன்

ஆல்யனுடைய மகனான பஹா கடந்த அக்டோபர் 13-ம் தேதி அன்று இசுரேலிய போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியான ஜாபல் முகாபர் என்ற இடத்தில ஒரு பேருந்தில் அவர் தாக்குதல் நடத்தியதான குற்றசாட்டின் பேரில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அதற்க்கான எந்த சான்றும் இசுரேலிய போலீஸ் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரைகலை(Graphics)  வடிவமைப்பாளராகவும் உள்ளூரில் ஒரு சாரணர் இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்த பஹா ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீன மக்களை ஒன்று திரட்டியும், அவர்களது கலாச்சார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தியும் பாலஸ்தீன அடையாளத்தை மீட்டுருவாக்கவும் தொடர்ந்துப் போராடி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இசுரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் அவரது வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். இது அவரது செயல்பாட்டை முடக்கும் நோக்கிலான ஒரு முயற்சியாக இருந்த போதிலும் அது அவரது செயற்பாட்டை முற்றாக முடக்காததால் இறுதியில் அவரை படுகொலை செய்தும் உள்ளனர். அவரது உடல் இன்னும்  இசுரேலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

ஆல்யன் அவரது மகனின் இறுதி சடங்கை செய்வதற்கு மிகுந்த ஆர்வமாக இருந்த போதிலும் அதற்கு இசுரேல் விதிக்கும் கட்டுப்பாடுகளை கிஞ்சித்தும் ஏற்கவில்லை. இறுதி சடங்கில் சிலர் மட்டுமே கலந்து கொள்ள விதிக்கப்பட்ட கட்டுபாட்டை நிராகரித்த அவர்  தனது மகனின் இறுதிச் சடங்கை பட்டப் பகலில் நடத்த போவது மட்டுமல்லாமல் அவரது மகனின் உடலில் பிரேத பரிசோதனை நடத்த போவதாகவும் கூறியுள்ளார்.

ஒருபுறம் இசுரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் படுகொலைகள் மறுபுறம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் நிலைமைகளை முற்றாக நிராகரிக்கும் பாலஸ்தீன அதிகாரிகள் என்று பாலஸ்தீன மக்களின் நிலையை நினைத்து மிகுந்த கவலைபடுகிறார் ஆல்யன்.

இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீன மக்களுக்காக இறந்தவர்களின் உடல்கள் இசுரேலின் பிணவறையில் ஆக்கிரமிக்கப்பட்டு கிடப்பது அந்த குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சினையல்ல என்று கூறும் அவர் தமது இந்த  போராட்டத்தில்  உறுதிபாடு உடையவர்களாய் இருக்க அனைத்து தரப்பு பாலஸ்தீன மக்களின் ஆதரவைக் கோருகிறார்.

மேலும் படிக்க:

விழுப்புரம் கியூ பிரிவு போலீசின் என்கவுண்டர் மிரட்டல்

0
போராடுபவர்களை படம் பிடிக்கும் காட்சி

2015 ஜூன் மாதம் முதல் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராடி வருகின்றனர். விழுப்புரத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சில முறை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல தலைப்புகளில் காவல்துறையுடன் விவாதங்கள் பல நிகழ்த்தியுள்ளனர். காவல்துறையில் பணிபுரிபவர்கள் பலர் அரசாங்க அடிமைகளாக செயல்பட்டலும் சிலராவது மதுவிலக்கு போராட்டத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

vpm-pp-struggle-police-ways-1இதில் விழுப்புரம் கியூ பிரிவு காவலர்களான தங்கதுரையும், சுந்தர்நாத்தும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்டவிரோத, ஜனநாயக விரோத தன்மையுடன் வெளிப்படுகின்றன. எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரை  மாவோயிஸ்டுகள், பயங்கரவாதிகள் என்று அவதூறு செய்வது, அதிகபட்சமாக என்கவுண்டரில் போட்டுவிடுவோம் என்று பயமுறுத்துவது என சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களின் பொய், அவதூறுகளுக்கு அஞ்சாமல் உங்களைப் பற்றி உயரதிகாரிகளிடம் புகார் செய்வோம் என்று தோழர்கள் கூறினால், “காவல்துறையில் நாங்கள் வைத்தது தான் சட்டம். எங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. யாரை வேண்டுமானாலும் நாங்கள் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்வோம்” என்று அதிகாரத் திமிரில் மிரட்டுகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

எந்த சட்டத்திற்கும் நாங்கள் கட்டுப்படாதவர்கள் என்று இவர்கள் சொல்வது உண்மையா? எது சட்டபூர்வம் என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

குறிப்பாக, புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி அமைப்பின் தோழர்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று, தோழர்கள் குறித்து அவதூறு செய்வது. மேலும், ‘அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இந்த அமைப்புகளில் சேரக்கூடாது. அப்படி சேர்ந்தால் உங்களை ஏதேனும் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம். அதன் பிறகு உங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது’ என்றும் மிரட்டி வருகிறார்கள்.

மேலும், அமைப்பு தோழர்களின் புகைப்படங்களை அவர்களின் பெற்றோரிடமே காண்பித்து தெரியாதவர்களை போல் கேட்பது. இவர்கள் தீவிரவாத அமைப்பில் உள்ளார்கள் என்று பெற்றோர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவர்களின் வரம்பு மீறல் அதிகபட்ச எல்லையை தொட்டுள்ளது. 10-05-2016 செவ்வாய் இரவு 9.00 மணி அளவில் V.மருதூர், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் எங்கள் அமைப்பின் ஆதரவாளர் சதிஷ்குமாரின் மனைவி பிரேமாவிடம் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தியுள்ளனர். மாலை 6.00 மணிக்கு மேல் பெண்களை விசாரிக்க பெண் காவலர்கள் வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை துச்சமென மதித்து “யூனிபார்ம்” இல்லாமல் சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளார்கள்.

தோழர் பிரேமா 05-05-2016 அன்று அயினம்பாளையத்தில் நடந்த “மூடு டாஸ்மாக்கை” போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் அவரிடம் “ பணம் வாங்கி கொண்டு தானே நீ டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டாய்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று கேட்டு மிரட்டியுள்ளார்கள். மதுவிலக்கு போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளனர். வீட்டில் கணவர் இல்லை என்று சொல்லியும் உங்களிடம் “தனியாக அரைமணி நேரம் பேச வேண்டும்” என்று கட்டாயப்படுத்தியுள்ளார். தோழர் பிரேமா செய்வதறியாது திகைக்கவே இவர்கள் அவரை மிரட்டியுள்ளனர். வீட்டின் அருகருகே இருந்த மக்கள் ஒன்று கூடவே “போலீசு பொறுக்கிகள்” இருவரும் ஓடிவிட்டனர்.

இப்படியாக, தொடர்ந்து தங்கதுரையும், சுந்தர் நாத்தும் சட்டவிரோதமாக நடந்து கொள்கிறார்கள். எனவே, இவர்கள் மீது விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்து, தக்க நடவடிக்கை வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

Get 100% Ready to Boycott

1

[To view the notice in larger size, click on the images]

Hello Friends,

It’s election time again. As IT professionals, we need answers to some important questions  :

boycott-election-ndlf-it-poster-41. A year back, TCS laid off 25,000 of its senior employees. It was followed by secret and illegal layoffs by several IT/ITES companies including Syntel, Vestas etc. Will voting in the election stop future layoffs? Will it guarantee job security for us? Can any of the political parties promise this to us?

2. Like Freedom of speech and expression, freedom of association is also a fundamental right guaranteed by Part III of our constitution. This right was won by the Indian working class  during British colonial rule. Are we in a position to exercise this right now? Can the election commission, which campaigns for 100% voting, ensure us 100% right to form Unions?  Even in US, employees of large corporates like IBM, Verizon have their own trade unions. But, in our country, IT Employees are denied the right to form unions. Is it democracy?

3. Remember the horrors of Chennai floods? Illegal encroachment of lakes, ponds and river beds by corporates and real estate mafia was the sole cause of that devastation. The encroachments were made with the connivance of politicians, government officials and the judiciary.

The government led by Jayalalithaa let out a huge amount of flood water, several times the carrying capacity of Adyar river, from Chembarambakkam lake in a single day. The state administration abjectly failed to provide rescue and relief to the affected people. Six months have passed, but encroachments of water bodies such as MIOT hospital, are not removed.

boycott-election-ndlf-it-poster-1Is the Govt really capable of saving us from a natural disaster? Is our vote capable of changing this situation?

4. Vaikuntharajan, the chieftain of the mineral sand mafia operating from Tuticorin district, has plundered mineral sand worth several lakh crores of rupees over the past 20 years. However, the courts have dismissed all the cases filed against him and have helpded him continue the plunder. Likewise P.R. Palanichami looted granite stones from Madurai district laying waste many hillocks, ponds and farm lands in villages. Mr.Sagayam an upright IAS officer was appointed by the high court to probe this scam. During his investigations, Sagayam slept in a grave-yard to prevent the police from destroying crucial evidence related to the case. After considerable effort, he submitted a lengthy report to the High Court.

But, a magistrate discharged P.R.P from several cases and went to the extent of ordering to initiate criminal proceedings against the district collector and the public prosecutor who dared to implicate P.R.P in criminal cases. Now P.R.Palanisamy is roaming free while Mr.Sagayam’s investigation report is gathering dust in the High Court. Almost all the political parties are in the payroll of P.R.P, Vaikuntharajan and the like. Are we going to vote for these parties who are agents to the plunderers of our country?

boycott-election-ndlf-it-poster-25. In the disproportionate assets case, Jayalalithaa was convicted by the special court after a prolonged legal battle. But, Justice Kumarasamy of the Karnataka High Court cooked up the case to set Jayalalithaa and her corrupt associates free. Justice Dattu of the Supreme court ensured their bail. Likewise, Vijay Mallya who swindled thousands of crores of rupees from public sector banks was helped by the politicians and bureaucrats to flee the country. In many such cases the judiciary is hand in gloves with the executive. Will voting in the elections help to punish these criminals and the judges who protect these criminals?

6. Election commission campaigns for ensuring 100% Voting.

Will 100% voting ensure 100% corruption free State? Can election commission guarantee this?
Will 100% voting ensure 100% job security for us? Can election commission guarantee this too?

Election commission boasts of conducting fair elections. But it lets corrupt politicians roam freely but curtails the rights of law abiding citizens. Election commission is an unelected body displaying dictatorial traits in the name of ensuring democracy to people.

7. Election Commission advises us to vote for honest candidates. Do you know any honest candidate contesting the elections? Will they be able to change anything in this system?
This system has lost even the semblance of democracy and is filled with criminals, crooks and rowdies. Whom should we elect?

boycott-election-ndlf-it-poster-38. These parties vying with each other to come to power, are they democratic? Most of the major parties are run like family run businesses
A.I.A.D.M.K – Jayalalithaa, Sasikala – Mannargudi mafia
D.M.K – Karunanidhi, Stalin, Kanimozhi, Maran family
D.M.D.K – Vijayakanth, Premalatha, Sutheesh family
P.M.K – Ramadoss, Anbumani, Sowmya family
How can they provide democratic governance to people?

9. A crore of money is a great deal of money for any average voter. But every major candidate spends several crores of rupees for the election. They treat this as an investment to be looted back during the next five years of power.
All parties are filled with corrupt business men, real estate mafia and rowdies. You only have to choose one from among the devils. You only queue up to grant licence to your looter. Election commission says that voting is our democratic duty. Are we going to choose?

10. People say that, if we don’t vote someone else will cast our vote. Should we jump to death for that ‘reason’?
What is the alternative, you may ask! We can build an alternative! Let’s discuss.

Please call 90031 98576
NDLF I.T. Employees Wing

யூரின் போற எடத்துல எட்டி எட்டி உதைக்கிறான் !

2

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை
போர்க்களத்தில்………பாகம் 4

சட்டக் கல்லூரி மாணவியான கனிமொழி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக நடந்த பச்சையப்பன் கல்லூரி டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போலீசின் தாக்குதலுக்கு ஆளானதோடு ஒரு மாதத்திற்கும் மேலாக சிறை சென்றவர். இந்த மே 5 போராட்டத்திலும் கலந்து கொண்டு கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

கீதா மூன்று குழந்தைகளுக்கு தாய். பகுதியில் டாஸ்மாக் கடையால் பல்வேறு குடும்பங்களில் நடக்கும் துன்பங்களை அறிந்தவர். அதைப் பற்றி பேசும் போது கோபமடைகிறார். அவரது கணவர், மூன்று குழந்தைகள் என முழுக்குடும்பமுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போலிசால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதுகாப்பாக வாழ்வதற்கு விதவிதமான ஆயுள் காப்பீடுகள் துவங்கி வீட்டிற்கான பாதுகாப்பு கருவிகள் உட்பட ஏகப்பட்ட முன்னெச்செரிக்கையுடன் வாழ்வோருக்கு ஒரு குடும்பமே இப்படி ஒரு மக்கள் கோரிக்கைக்கு பணயம் வைத்திருப்பது அசட்டுத்தனமாக தோன்றலாம்.

உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை போராட்டமும், இழப்பும், போர்க்குணமும் அவர்களோடு ஒட்டிப் பிறந்தவை. பிறர் நலத்திற்காக இப்படி முன் வந்து அவர்கள் போராடுவதால்தான் இந்த உலகில் மனித குலம் சேர்ந்து வாழ்வதற்கான பல்வேறு சாதகமான நிலைகள் உருவாகியிருக்கின்றன.

ஒரு இளம் பெண் என்ற முறையில் இப்படி தொடர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டு அடி வாங்குவதும், சிறை செல்வதும் பயமாக இல்லையா, எதிர்கால வாழ்க்கை குறித்து அச்சமில்லையா என்று கேட்ட போது கனிமொழி அழுத்தமாக பயமில்லை என்றார். போராட்டக் களத்தில் அவரை நான்கு போலிசார் ஆளுக்கொரு கை, கால்களை தூக்கிச் செல்வதும் தர தரவென இழுத்துச் செல்வதுமான காட்சிகளைப் பார்க்கும் எவரும் அதிர்ச்சியடைவர்.

அழகு நிலையங்களிலும், அன்பான கணவருக்கான கனவுகளிலும் நாட்களை கடத்தும் வயதில் அடுத்த போராட்டம் என்ன என்று இவரைப் போன்ற பல இளம்பெண்கள் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆணாதிக்கத்தை எதிர்த்து கருத்திலும், கவிதையிலும், கட்டுரையிலும் வாழ்வதைக் காட்டிலும் இத்தகைய போராட்டக் களத்தில் வாழ்வது கடினமானது.

மக்கள் அதிகாரத்தின் போர்க்குணமிக்க போராட்டங்களில் இத்தகைய இளைஞர்கள் அதிகம் ஈடுபவடுவதால் போலிசார் பல திட்டங்களையும், பயிற்சிகளையும் தயார் செய்து அமல்படுத்துகின்றனர். உடலை பிடிப்பதிலும், இழுப்பதிலும் கடுமையான வலியோடு உட்காயத்தை ஏற்படுத்துவது, ஆடைகளைக் கிழித்து மான உணர்ச்சியை கிளப்பி பணிய வைப்பது, பெண்களாக இருந்தால் அவர்களது அங்கங்களை பிடித்து அதிர்ச்சி ஏற்படுத்தி முடக்க நினைப்பது, தகாத வார்த்தைகளோடு திரும்பத் திரும்பத் திட்டுவது என்று ஒரு வேட்டை நாய் போல பயிற்சி பெற்று கடிக்கின்றனர்.

ஆனால் மணிப்பூரில் இந்திய இராணுவத்தின் பாலியல் அடக்குமுறையை எதிர்த்து “இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம், அடிபணியமாட்டோம் என்று கூறுகிறார்.

“மூடு டாஸ்மாக்” போராட்ட இயக்கம் கட்சிகள், சமூகம் எனும் அரசியல் களத்தில் மட்டுமல்ல பண்பாட்டு ரீதியான பல்வேறு களங்களுக்கும் புதிய விசயங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

“இது மக்கள் அதிகாரம், நீங்க எப்ப வந்து சேரப்போறீங்க” என்று கேட்கிறார் கனிமொழி. அந்த அழைப்பை யாரும் மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

-நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

ஒரு அரசு பள்ளி மாணவரின் போராட்டம் – வீடியோ

1

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை
போர்க்களத்தில்………பாகம் 3shutdown-tasmac-maduravoyal-poster-1

துரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக போராடும் அவர் ஏற்கனவே பச்சையப்பா மாணவர்களின் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் சிறை சென்றவர். பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைத்து மதுக்கடைகளை மூடுவதற்கு போராடுகிறார். மே 5 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் இவரும் காவல் துறையால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார்.

இன்றும் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. இந்த நேர்காணல் எடுக்கப்பட்ட அடுத்த நாள் இரவில் அவர் மீண்டும் போலிசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். குற்றம் என்ன? மே 5 போராட்டத்தில் போலிஸ் நடத்திய அடக்குமுறையை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதுதான் அந்த குற்றம்.

தனது பள்ளி மாணவர்கள் பலரை அரசு குடிகாரர்களாகவும் பொறுக்கிகளாகவும் மாற்றியிருக்கும் கொடுமையினை விவரிக்கிறார் மாரிமுத்து. வாரம் இருமுறை குடிப்பது, பிறகு குடிக்காமல் இருக்க முடிவதில்லை எனும் நிலையினை மாணவர்களும் அடைகிறார்கள். காசுக்கு வழிப்பறி செய்வது, மாணவர்களிடம் தட்டிப் பறிப்பது எல்லாம் நடக்கிறது. இந்நிலையினை மாற்றி பல மாணவர்களை புடம் போட்டிருக்கிறது பு.மா.இ.மு.

அப்படித்தான் மே 5 போராட்டத்தில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னரும் பல போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் இவர்கள். போராட்டக் களத்தில் போலிசின் கொடூரத்தை விவரிக்கும் மாரிமுத்து அதனால் மாணவர்கள் பயப்படாமல் போலீசின் அடக்குமுறையை அங்கேயே தட்டிக் கேட்டதை பெருமையுடன் விவரிக்கிறார்.

வீடியோவின் இறுதிப் பகுதியில் தனது நண்பனுக்கு ஏற்பட்ட சோகத்தை விவரிக்கிறார். குடியால் அந்த நண்பனது தந்தை இறந்ததை கண் கலங்க கூறும் மாரிமுத்து, இத்தகைய சோகங்களை நிறுத்தும் பொருட்டே தன்னைப் போன்ற மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்.

இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்த போராட்டத்திற்காக அவர் இரண்டாம் முறையாக சிறை சென்றிருக்கிறார்.

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

மூடு டாஸ்மாக்கை – தொடரும் மக்கள் போராட்டம்

0

ஓட்டுப்பொறுக்க அரசியல் ரவுடிகள் ! பொறுக்கி தின்ன அதிகாரிகள்!!

shutdown-tasmac-vpm-black-flag-protest-8விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த 2-ம் தேதி முதல் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5-ம் தேதி டாஸ்மாக் கடை எதிரே அமர்ந்து முழக்கமிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள், கிராம மக்கள் அனைவரையும் கடுமையாக தாக்கியது காவல்துறை.

தொடர்ந்து 6-ம் தேதி கடை எதிரே அமர்ந்து போராட்டம் நடத்திய கிராம மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்றது காவல்துறை. விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் இருதயமேரி, “கடையை எங்களால் மூட முடியாது. அதற்கான அதிகாரம் எனக்கு இல்லை. எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள் கலெக்டரிடம் பேசி முடிவெடுக்கிறோம்” என்று கூறியதால், கோபமடைந்த கிராம மக்கள் “கடையை இன்றே மூடுவது என்றால் மூடுங்கள் இல்லையேல் எங்கள் போராட்டம் தொடரும்” என்று அறிவித்து விட்டு வந்தனர்.

நேற்று இரவு 7 மணி முதல் கிராமத்தில் உள்ள அனைவரின் வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றி விட்டனர். “எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடும் வரை கொடியை அகற்ற போவதில்லை” என அறிவித்து விட்டனர். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானதால் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர் அதிகாரிகள்.

shutdown-tasmac-vpm-black-flag-protest-5குறிப்பாக அ.தி.மு.க.-ன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் சிந்தாமணி சேவல் வேலு இன்று கிராமத்திற்குள் ஓட்டு கேட்க வருவதால் அ.தி.மு.க.-ன் அல்லக்கைகளும், அதிகாரிகள் ஆர்.ஐ மற்றும் வி.ஏ.ஓ-க்கள் அன்பழகன், உதயகுமார், பால்ராஜ் ஆகிய மூன்று பேரும் கிராம மக்களிடம் கொடியை எடுக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜை போனில் தொடர்பு கொண்டு “வீடுகளில் கட்டியுள்ள கருப்புக் கொடியை எடுக்க சொல்லுமாறு” கேட்டுள்ளனர். “மக்கள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராடி வருகிறார்கள். இது மக்கள் முடிவு” என்று கூறியுள்ளார்.

கிராம மக்களும் கொடியை எடுக்க முடியாது என்று கூறியதும், அதிகாரிகளும், அம்மாவின் அல்லக்கைகளும் வீடு வீடாக சென்று கொடியை பிடுங்கி எறிந்தனர்.

DCCver0077

கிராமத்தின் 3-வது தெருவிற்குள் நுழைந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதும், “யாரைக் கேட்டு கொடியை நட்டீர்கள்” என்று பாய்ந்தார்கள் அ.தி.மு.க.-ன் அல்லக்கைகள். அதற்கு மக்கள், “நீங்களும் தான் கொடி கட்டியுள்ளீர்கள். அதை யாரைக் கேட்டு நட்டீர்கள்” என்று கேட்டதும் அமைதியாகி விட்டனர்.

அதிகாரியோ, “இது தேர்தல் நேரம். இது போல் எதுவும் செய்யாதீர்கள். நாங்கள் டாஸ்மாக் கடையை எடுப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்கிறோம், தயவு செய்து கொடியை கழற்றி விடுங்கள்” என்று நைச்சியமாக கூறினார்.

shutdown-tasmac-vpm-black-flag-protest-6கொதிப்படைந்த மக்கள் “நாங்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும் போது நீங்கள் வரவில்லை, கடையை மூட சொல்லி நாங்கள் போராடும் போது வரவில்லை, இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் வருகிறீர்கள், உங்களால் முடிந்தால் கடையை மூடி விட்டு ஊருக்குள் வாங்க” என்று மக்கள் அதிகாரிகள் முகத்தில் காரி உமிழவே வெட்கமின்றி ஓடிவிட்டனர்.

ஓட்டுக்கேட்டு வந்த தொகுதி வேட்பாளரோ, கிராம மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால், வந்த சீக்கிரம் தெரியாமல் திரும்பிவிட்டார்.

இந்த அரசையோ, ஓட்டுக்கட்சிகளையோ நம்புவதனால் டாஸ்மாக் கடைகளை மூட முடியாது. மக்கள் அதிகாரம் தான் கடைகளை மூடும் என்பதில் உறுதியாக நின்று போராடி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்

may5-shutdown-tasmac-madurai-prpc-poster

shutdown-tasmac-may5-pp-poster

 

போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ

3

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை போர்க்களத்தில்………பாகம் 1

க்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், மதுரவாயல் பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர் கணேசன், பு.மா.இமு-வை சார்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு மூவரும் தமது அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

tasmac-struggle-vetrivel-chezhiyan-attacked-3போலிஸ் சித்திரவதை எப்படி இருக்கும் என்பது தோழர்களுக்கு புதிதல்ல. ஆனால் நேரடியாக எதிர்கொள்ளும் வரை கொட்டடி வதை என்பது பொதுவான போலிஸ் பற்றிய ஒரு கருத்து மட்டுமே. அதே நேரம் மற்றவர் போல தோழர்கள் அந்த கொடூரத்தை முதல் முறையாக எதிர் கொண்டாலும் முன்னர் கண்ட கோட்பாட்டுத் தெளிவினால் தைரியமாக எதிர் கொள்கிறார்கள். முக்கியமாக அதை அரசியல் உறுதியுடனும், மக்கள் சார்பிலும் சந்திக்கிறார்கள். வேட்டை நாயாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் போலிசுக்கு இந்த வேறுபாடு பொதுவில் புரியாது.

சாதா கிரிமினலோ, ஸ்பெஷல் கிரிமினலோ அனைவரும் போலிஸின் முதல் அடியிலேயே சரணடைந்து விடுவார்கள். இருப்பினும் கிடைக்க இருக்கும் அடி குறையாது என்றாலும் அதன் கடுமை மற்றும் வீரியம் கூடிக் கொண்டே போகாது. பொது மக்களாக இருந்தால் இந்த சித்ரவதை முதலில் கடுமையான அதிர்ச்சியாகவும் பின்னர் பயமாகவும் கோபமாகவும் இறுதியில் விரக்தியாகவும் மாறும். இது ஏன், எப்படி என்று பார்க்க முடியாத படி அந்த அதிர்ச்சி இருக்குமென்பதால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியனாக அவர்கள் சரிந்து போகிறார்கள்.

தோழர்களும் மக்கள் போன்றே இதை துவக்கத்தில் எதிர் கொள்கிறார்கள். பிறகே அது ஒரு அரசியல் உறுதி, தெளிவுடன் வலியையும், அதிர்ச்சியையும் கடந்து போக வைக்கிறது. என்ன இருந்தாலும் அந்த வலி அவருக்குத்தான் என்று கண்ணீர் விடுகிறார், தோழர் வெற்றிவேல் செழியனின் தங்கை. அவரது பெற்றோருக்கு 12 வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளை என்று கூறுபவர் தொலைபேசியில் அம்மா அடைந்த அதிர்ச்சியை வருத்தத்துடன் விவரிக்கிறார். பள்ளி மாணவியான அவரது மகளோ குடும்ப உறவினராக பார்க்கும் போது இது வலித்தாலும், மக்கள் தரப்பில் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்கிறார். செழியனின் தங்கையோ நாங்கள் செய்ய முடியாததை அவர் செய்திருக்கிறார், அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு முடிந்த அளவில் உதவுவோம், இந்த அடியால் துளியளவு சமூக மாற்றம் வந்தால் கூட அது வெற்றிதான் என்று கண்ணீரைக் கடந்து பேசுகிறார்.

தன்னுடைய துணைவியார் நேரில் வந்து பார்த்து விட்டு  பக்கத்து அறையில் அழுததாகவும் பிறகு சமாதானப்படுத்தியதாகவும் புன்னகையுடன் கூறுகிறார் வெற்றிவேல் செழியன். தங்கை அழும் போது அண்ணன் சிரித்துக் கொண்டே அதை பேசுவது என்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை. இந்த அடிதடி அவரை இம்மியளவு கூட மாற்றிவிடவில்லை – அதாவது சோர்வு என்ற கோணத்தில்.

சாராய ஜேப்பியார் கல்லூரியில் ஒரு தொழிலாளியாக ஆரம்பித்து பின்னர் தொழிற்சங்க தலைவராக உயர்ந்து தற்போது “மக்கள் அதிகாரம் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளராக” பணியாற்றும் வரை அவரது வாழ்க்கை நிறைய திருப்பங்களையும், சாகசங்களையும் கொண்டிருக்கிறது. வேலை போனதும் தான் முழுநேர ஊழியராக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் பணியாற்றதையும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது பொருளாதாரத்தை சக தொழிலாளிகளே பராமரிக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவிக்கிறார் அவர். இந்த சமூக உறவின் பலம்தான் அவரை போலிசின் சித்திரவதையை பதறாமல் எதிர்கொள்வதற்கு உதவியிருக்கும்.

மதுரவாயல் போலிசால் தான் அடிபடுவதை விட தோழர் வெற்றிவேல் செழியன் மீது விழுந்த அடிகள் தன்னை நிலைகுலைய வைத்ததாகவும் அதனால் தான் மயக்கத்துடன் வாந்தி எடுத்தாகவும் கூறுகிறார் தோழர் கணேசன். இவர் பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவில் செயல்படுகிறார்.

மதுரவாயிலில் ஒரு குடிசை வீட்டில் தனது மனைவி, மகன்களுடன் அப்பளம் தயாரிக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தும் கணேசனை இன்றும் அவருக்கு அப்பள ஆர்டர் கொடுக்கும் சிறு வியாபாரிகள் “நீதான் அடிக்கடி போராட்டம் சிறையின்னு போற, உன் குடும்பத்தையும் ஏன் அழைச்சுட்டு போற?” என்று கேட்கிறார்கள்.

“காக்க காக்க” சூர்யா போல தன்னைக் கருதிக் கொண்டு அடித்த மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரையின் வெற்று உதாரை கேலி செய்கிறார் கணேசன். அதே நேரம் முடிந்தால் எங்களை அடித்துக் கொன்றாலும் இந்த போராட்டத்தை விடமாட்டோம் என்று சவாலும் விட்டிருக்கிறார். இதனால் அவருக்கு கூடுதலாக அடிகள் கிடைத்திருக்கும் என்றாலும் இனி போலிஸ் எனும் கிரிமினல் கும்பலைக் கண்டு அவரோ அவரது பகுதி தோழர்களோ பயப்படப்போவதில்லை. ஆம். போலிஸ் தோற்றுவிக்கும் பயம் என்பது உடல் வலியில் அல்ல, உள்ளத்தின் அதிர்ச்சியில்தான்.

எவ்வளவு அடிபட்டாலும் வெற்றிவேல் செழியன் இரும்பு போல நிற்கிறார் என்று கணேசன் தெரிவிக்கிறார். செழியனோ பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசுவின் உறுதியைப் பார்த்து கற்றுக் கொண்டேன் என்று பணிவாகவும் பெருமையாகவும் தெரிவிக்கிறார். அவர்களது உடைகளை கழட்டுமாறு போலிஸ் உத்தரவிடுகிறது, தோழர்கள் மறுக்கிறார்கள். பின்னர் பலவந்தப் படுத்தியும் அதை செய்ய முடியவில்லை. ஒருவரை கழட்டியதும், கழட்டிய அடுத்தவர் உடையை மீண்டும் போடுகிறார். இப்படி போகிறது அந்த போராட்டம். இந்த ஆட்டத்தை திறம்பட நடத்தியதற்காக வாசுவைப் பாராட்டுகிறார் செழியன்.

ஆமாம், இத்தகைய உறுதியையும், போர்க்குணத்தையும், முக்கியமாக தங்களை மக்களின் அங்கமாக கருதிக் கொள்ளும் பணிவான மனிதர்களை நீங்கள் எந்தக் கட்சியில் சந்திக்க முடியும்?

இந்த வீடியோ வேலைகளின் போது ஒரு தோழர் கேட்டார். “இந்த சித்திரவதையின் கதையை நாம் காண்பித்தால் மக்களோ புதிய தோழர்களோ பயந்து போய்விடமாட்டார்களா, இனி நமது போராட்டங்களில் பங்கேற்க தயங்கமாட்டார்களா?”.

பொதுவில் இந்த கேள்வி சரியானது போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இனி போலிஸ் எனும் கிரிமினல் கும்பலின் அடிகளையும், வதைகளையும் கடந்து வருவது பெரிய சோதனை அல்ல என்ற தைரியத்தையும் அளப்பறிய நம்பிக்கையையும், தோழர்களது நேர்காணல் அளிக்கும் என்று நம்புகிறோம்.

வெற்றிவேல் செழியனது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையில் எலும்புகள் முறிக்கப்பட்டிருக்கின்றன. அவர் இயல்பாக நடமாட, எப்படியும் மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் அவரோ “மக்கள் அதிகாரம்” சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கே அடுத்த நாளிலேயே சென்று விட்டார். தோழர்கள் அவரை தூக்கிச் சென்றிருந்தாலும், போராடும் ஒரு மனிதனை ஒரு சித்திரவதை முடக்கிவிட முடியுமா என்ன?

மாணவர் வாசுவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நேர்காணல் இடைவெளியில் சாப்பிடும் போது தட்டுக்கள் குறைவு என்பதால் எங்களுக்கு முழுத்தட்டு அளித்துவிட்டு அவர் ஒரே தட்டில் மற்றொரு தோழரோடு மதிய உணவை பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார். இவரையெல்லாம் மதுரவாயில் காவல் நிலைய காக்கி கும்பல்கள் “பூச்சாண்டி” பயம் காட்டி முடக்க முடியுமா என்ன?

விசாரணை படம் பார்த்தவர்கள் பொதுவில் போலிசைப் பார்த்து பயந்தார்கள். தோழர்களின் கதையைப் பார்த்தவர்களுக்கு அந்த பயம் ஏற்படாது மட்டுமல்ல, வாழ்வில் நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்து போராடுபவர்களின் மகிழ்ச்சியையும் அது அறிமுகப்படுத்தக் கூடும்.

inner_design450x150