Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 632

தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் !

2

கிரானைட், தாதுமணல் வரிசையில் சேருகிறது செம்மண் !
தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள்!

சோழ மண்டலத்தில் (தஞ்சை) வளர்ந்து வரும் “குட்டி வைகுண்டராஜன்” சிங்.துரை பற்றி சமீபத்தில் தி இந்து தமிழ் (அக் 6) நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. செம்மண் கொள்ளை பற்றிய செய்தி என்பதால் நேரில் சென்று பார்வையிட முடிவு செய்து கிளம்பினோம்.

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் பேருந்து நிலையத்திற்கும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கும் இடையே நேர் பின்புறம் சுமார் 20 கி.மீ சுற்றளவில் எங்கு பார்த்தாலும் செம்மண் பிரதேசமாக காட்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தையும் உள்ளடக்கியுள்ள பல்வேறு கிராமங்கள் கடந்த 10 ஆண்டுகளாக செம்மண் கடத்தல் மாஃபியாக்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. வல்லம், திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், மஞ்சப்பேட்டை, ஆனைநகர், சென்னம்பட்டி , நாட்டாணி, வல்லம் புதூர், தச்சன்குறிச்சி , கல்லுப்பட்டி , முன்னையம் பட்டி , குருவாடிப்பட்டி , செல்லப்பன்பேட்டை , செங்கிப்பட்டி , ஆச்சம்பேட்டை, மலையப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அவற்றில் சில. மழையற்று வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் நிலத்தடி நீரைக் கொண்டு அற்புதமாக புன்செய் பயிர்களை விளைவிக்கும் பாரம்பரிய விவசாய அனுபவத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டை செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருபுறமும் நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ள பசுமையான காட்சிகள் ரியல் எஸ்டேட் பிளாட் – கொடிக்கம்பங்களால் ஆங்காங்கே சிறை வைக்கப்பட்டிருந்தன.

ரியல் எஸ்டேட் சிறை

அரைமணி நேர பயணத்தில் அற்புதாபுரம் வந்தவுடன் வலதுபுறமாக “ராயல் குவாரி” என்ற பெயர் பலகை மேரி அன்னை படத்துடன் எங்களை வரவேற்றதால் உள்ளே நுழைந்தோம்.

ராயல் குவாரிக்கு செல்லும் வழி

சுமார் 500 மீட்டர் சென்றவுடன் இடது புறமாக மிகப் பெரிய செம்மண்குவாரி ஒன்று தென்பட்டது. சுமார் 30 அடி ஆழத்துக்கு மேல் ஒட்ட சுரண்டப்பட்ட அந்த செம்மண் குவாரியை பார்த்ததும் பகீர் என்றிருந்தது. மேலிருந்து கீழ் , கீழிருந்து மேல் என குவாரியின் உள்ளே இறங்கி பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரித்த போது, இது “செல்வம் குவாரி” என்றனர். “அடுத்தடுத்து போய் பாருங்க இதைவிட பெரிசெல்லாம் இருக்கு” என்றதால் ஆர்வமிகுதியால் அங்கிருந்து வேகமாக கிளம்பினோம். அங்கே சென்ற போது இருபுறமும் ஏக்கர்கணக்கில் பரந்து விரிந்து கிடந்த குவாரிகள் ஆளரவமற்று எங்களை அச்சுறுத்தின. இதற்கு முன் நாங்கள் பார்த்த “செல்வம் குவாரி” தான் இருப்பதிலேயே மிகவும் சிறியது என்பது அதற்கு உறைத்தது. அங்கிருந்து கிளம்பி சற்று தூரம் சென்றபோது “சிங் குவாரி செல்லும் வழி” என்ற பெயர் பலகை எங்களுக்கு வழிகாட்டியது.

வல்லத்தை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் சிங்.துரை 1980-களின் இறுதியில் ஒரே ஒரு ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் மண் வெட்டத் துவங்கி இன்று “சோழமண்டலத்தின் குட்டி வைகுண்டராஜன்” எனுமளவுக்கு ‘உழைப்பால் உயர்ந்தது’ எப்படி சாத்தியமானது என்பதை அங்கிருந்த குவாரிகள் குறிப்பால் உணர்த்தின. தினசரி இரவு பகலாக வெட்டி எடுக்கப்படும் செம்மண், டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் கிராமப்புற சாலைகள் மூச்சுத்திணறி, நொறுங்கி சிதறிக் கிடந்தன. 1.27 ஹெக்டேர் (சுமார் 3.5 ஏக்கர் மட்டும் ) நிலத்தில் ( 2013 -15 வரை ) வெறும் 3 மீட்டர் ஆழம் வரை மட்டுமே அனுமதியளிக்கப் பட்டிருக்கும் நிலையில் பல பத்து ஏக்கரில் சுண்ணாம்பு பாறை வரைக்கும் சுரண்டிக் கொண்டிருந்தன சிங் துரைக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரங்கள்.

சிங் குவாரி

இவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகாலமாக இந்த தொழிலில் தனி காட்டு தர்பாரை நடத்தி வருகிறார் சிங்.துரை. வெட்டி எடுக்கப்பட்டதையும், வெட்டிக் கொண்டிருந்ததையும் புகைப்படம் எடுத்த போது அதன் முழு பரிமாணத்தையும் புகைப்படத்தில் அல்ல, வீடியோவில் தான் காட்ட முடியும் என்பதை உணர்ந்தோம். 360o சுற்றளவுக்கும் சுரண்டப்படுவதை படம் பிடிக்க முடியாமல் எங்களோடு சேர்ந்து கேமராவும் திணறியது.

நாங்கள் புகைப்படம் எடுப்பதை கவனித்த சில ஜே.சி.பி.ஆபரேட்டர்கள் உடனே செல்போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு யாருக்கோ தகவல் சொல்ல ஆரம்பித்தனர். நிலைமையைப் புரிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களுடன் அவசரம் அவசரமாக புறப்பட்ட ¾ மணி நேர பயணத்தில் குவாரிகளை விட்டு வெளியே வந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். இவ்வளவு நாட்களாக இப்படியொரு பகற்கொள்ளை இங்கே நடப்பது குறித்து தெரியாமல் இருந்திருப்பதை நினைத்த போது வெட்கமாகத் தான் இருந்தது .

நாளிதழ்களில் செய்தி வந்ததை அடுத்து 7 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு – கலெக்டர் உத்தரவு என்று செய்தி வந்திருந்தாலும் ஒரு கண்துடைப்பிற்காகக் கூட அவர்கள் செம்மண் கொள்ளையை நிறுத்தி வைக்க தயாராக இல்லை என்பது புரிந்தது. தினசரி சுமார் 200 டிப்பர் லாரிகளில் செம்மண் கொண்டு செல்லப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

ரெய்டுக்குப் போன அதிகாரிகளில் குறிப்பாக கோட்டாட்சியர் எஸ் தேவதாஸ் போஸ் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சம்பத் ஆகியோர் சிங் துரைக்கு மிகவும் விசுவாசமானவர்களாம். சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து எந்தவொரு கோப்பு நகர்ந்தாலும் சிங் துரைக்கு தகவல் பறக்குமாம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த மாவட்ட ஆட்சியரும் இந்த சட்டவிரோத செம்மண் மாஃபியாக்களின் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அதிகார வர்க்க குற்றவாளிகளின் துணையும் ஆசியும் இத்தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளது என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும். செம்மண் கடத்தல் பற்றி நாளிதழ்களில் சந்தி சிரித்த பிறகு 3 லாரிகள் பிடிபட்டு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்துள்ளனர் அரசு அதிகாரிகள். தினசரி 200 லாரிகள் செம்மண் அள்ளிச் செல்லும் போது 3 லாரிகளை மட்டுமே பிடிக்க முடிந்திருக்கிறது என்றால் அதிகாரிகள் வீசிய வலையில் எவ்வளவு பெரிய ஓட்டை இருந்துள்ளது என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

சுமார் 30 க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருவதால் ஆங்காங்கே இருந்த கிராமப்புற விவசாயிகளிடம் அது குறித்து கேட்டபோது, “எங்கள் வயலுக்கு அருகிலேயே 100 அடி, 200 அடி ஆழம் வெட்டி விடுவதால் நிலத்தடி நீர் வறண்டு விடுகிறது. வயலுக்கு பாய்ச்சும் நீரும் வற்றிப்போய் விவசாயமே செய்ய முடியாமல் ஆகிவிட்டது. நிலத்தை உழும் போது எந்த நேரமும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் சிலர் தாங்களாகவே நிலத்தை விற்று விடுகின்றனர், விற்காதவர்களிடம் குவாரிகாரர்களே மிரட்டி வாங்கிய சம்பவங்களும்” உண்டு என்றனர் திருக்கானூர்பட்டிகாரர்கள். இந்த தொழில் லாபகரமாக இருப்பதால் சிங் குவாரிக்கு போட்டியாக பலரும் இதில் புதிதாக இறங்கியுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“இங்கிருந்து 10 கி.மீ சென்றால் நல்லா உயரமான மேட்டுப்பகுதிகள் உள்ளன. ஆளரவம் இல்லாத அங்கெல்லாம் ரியல் எஸ்டேட் பிளாட் போட்டிருக்காங்க. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அங்கே பிளாட் வாங்க யாரும் வரமாட்டங்கனு அவங்களுக்கு தெரியும். புதுசா தோண்டப் போகிற குவாரிகளுக்கு விற்றால் நல்ல விலை போகும் என்பதால் மலபார் சிட்டி, மங்களம் போன்ற ரியல் எஸ்டேட் காரங்க நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதாகக் கூறினார்” கல்லுப்பட்டி விவசாயி ஒருவர்.

தஞ்சையைப் பொறுத்தவரை PWD காண்டிராக்ட், நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் , கோயில் – குளம் தூர் வாருதல் என சிங் துரையின் சாம்ராஜ்யம் தான் கொடிகட்டிப் பறக்கிறது. ஆம் உண்மையிலேயே சிங் துரை கும்பல் “எர்த் மூவர்ஸ்” (பூமியை புரட்டுபவர்கள்) என்பது புரிந்தது. இந்த செம்மண் கடத்தல் மாஃபியாக்களுக்கு எதிராக தஞ்சை – புதுகை தழுவிய அளவில் சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பு இயக்கம் நடத்தி வருகின்றனர் மக்கள் கலை இலக்கியக் கழகம் – விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள்.

சுவரொட்டி பிரச்சாரம்

செம்மண் கொள்ளை குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் சதிஷ்குமாரிடம் கேட்டபோது “கடந்த 10 ஆண்டுகளில் கடத்தப்பட்ட செம்மண்ணின் அளவுக்கு முறையாக பர்மிட் போட்டிருந்தால் அரசுக்கு ரூ 1500 கோடி வருமானம் வந்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க முறைகேடாக வெட்டப்பட்ட மண்ணின் மொத்த மதிப்புடன் உண்மையாக கணக்கிட்டால் இதில் மிகப்பெரிய அளவில் கனிமவளச் சூறையாடல் நடந்திருக்கிறது. இச்சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உள்ளுர் அரசு அதிகாரிகள் துவங்கி மாவட்ட நிர்வாகம் வரை ஒத்துழைத்துள்ளதால் தான் கடத்தல் தொழில் தங்குதடையின்றி நடக்கிறது. தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களே ஆய்வு செய்வது என்பது வேடிக்கையாக உள்ளது. இது குறித்து விரைவில் நாங்கள் உண்மை கண்டறியும் குழு அமைக்கவுள்ளோம். தவறிழைத்தவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணை பொதுச் செயலர் தோழர் காளியப்பன் இது குறித்து பேசுகையில், ”மீத்தேன் திட்டம் , ONGC குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கெதிராக விவசாயிகள் போராடி வரும் சூழலில் இந்த செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், நிலத்தைடி நீரை இல்லாமல் செய்வதும் பேரழிவை ஏற்படுத்தும். சாலை கட்டுமானப் பணிகளுக்காக செம்மண் – கிராவல் தேவை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முதலாளிகள் கனிமவளங்களை சூறையாடிச் செல்வதை வேடிக்கை பார்க்க முடியாது. அரசு விசாரணைக்கமிட்டி போடுவது எல்லாம் கண்துடைப்பு என்பது வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை விவகாரத்திலேயே அம்பலப்பட்டு நிற்கிறது. எனவே, சிங் துரை கும்பல் மட்டுமில்லாமல் பிற செம்மண் கடத்தல் மாஃபியா கும்பல்களின் சொத்துக்களையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்ய வேண்டும். கனிம வளக் கொள்ளையர்களை விரட்டியடிக்க கிராமந்தோறும் போராட்டக் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று கோரி நாங்கள் போராடி வருகிறோம். இந்த எதிர்ப்பியக்கத்தை விரிந்த அளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்’’ என்றார்.

தனியார்மய – தாராளமயக் கொள்கைளால் புதுப்பணக்கார கும்பல்களும், அரசு அதிகாரிகளும் ஒருபுறம் கொழுத்துக் கொண்டிருக்க விவசாயிகளும் உழைப்பாளி மக்களும் இவ்வாறு தான் ஓட்டாண்டியாகி அத்துக் கூலிகளாக்கப்படுகின்றனர்.

மேற்கில் சூரியன் அஸ்தமிக்க முயன்று கொண்டிருந்த போது செம்மண் குவாரிகளை ஒட்டியுள்ள குப்பை மேடுகளில் மயில்கள் குப்பைகளை கிளறிக்கொண்டு இருந்தன. பாவம் மயில்களைக் கூட மறுகாலனியாக்கம் விட்டுவைக்கவில்லை.

தகவல்
பு.ஜ செய்தியாளர்
திருச்சி.

கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

8

சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு” என்ற தலைப்பில் சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பாக திருச்சி ரோசன் மஹாலில் கடந்த 5.10.2014 அன்று மாநாடு நடைபெற்றது. 68 இயக்கங்கள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொள்ள கூட்டம் நடைபெற்றது.

வன்னிய சாதி வெறியை மூலதனமாக வைத்து பாமக ராமதாசு பல்வேறு ஆதிக்க சாதி அமைப்புகளுடன் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதை தமிழகம் பார்த்துள்ளது. இதற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கண்ட தலைப்பில் மாநாடு நடத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கதக்கது. இந்த ஆர்வத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக சென்றோம். பெண்கள் விடுதலைக்கும், சாதி மறுப்பு விசயத்திலும் புதிய அனுபவங்கள், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்றோம். தோழர்களை வரவேற்று நமது அமைப்பு புத்தக ஸ்டால் போட அனுமதியும், இடமும் ஒதுக்கி தந்தனர்.

conference-notice

கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள், சாதிக் கொடுமை பற்றியும், அது இந்த சமூகத்தில் பரவியுள்ள நோய் எனவும் இதனை ஒழிக்க வேண்டும் என்றும் இதனைத் தாங்கி பிடிக்கும் இந்துமதம் உள்ளிட்ட பிற மதங்கள் அனைத்துமே பெண் உரிமைக்கு எதிரானது என்றும் எடுத்துரைத்தனர்.

சாதி மறுப்பு திருமணத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். பெரியார், அம்பேத்கர் உழைப்பு, தியாகம், அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் நினைவு கூர்ந்தனர். காதல் திருமணத்தை ஊக்கப்படுத்த வேண்டும், திவ்யா- இளவரசன் காதலை உயர்த்திப் பிடிக்க வேண்டும், பெற்றோர்கள் காதலை அங்கீகரிக்க வேண்டும் எனவும் தமது உரையில் வேண்டுகோள் விடுத்தனர்.

மாநாடு முழுக்க ஆசையும், விருப்பமும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. சாதி மறுப்பு திருமணத்தை மையமாக பேச வேண்டுமெனில் இந்த காலம் எப்படிப்பட்டது, இதற்கு தடையாக இருப்பது யார்? அதை வீழ்த்துவது எப்படி இவை பற்றி தெளிவு ஏற்படுத்தப்படவில்லை!

பாமக ராமதாசு பகிரங்கமாக ஆதிக்க சாதியினருடன் இணைந்து சாதிவெறியை மூட்டிவருகிறார். காதல் திருமணம் செய்வது தவறு என்றும், தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட்போட்டுச் சென்று பெண்களை வசப்படுத்துகின்றனர் என இழிவுபடுத்தியும் பகிரங்கமாக பேசுகிறார்.. இதற்கு ஆதரவாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வருகிறார்..

ஆனால் சாதி மறுப்பை ஆதரித்து நடந்த இந்த கூட்டத்தில் ராமதாசு போன்றவர்களை அம்பலப்படுத்தியோ, அவரின் கூட்டணியை கலைப்பது பற்றியோ , அவர் கேள்விக்கு பதில் அளிக்கவோ, அவரை முறியடிக்க வேண்டிய தேவை பற்றியோ பேசப்படவில்லை. ஆதிக்க சாதி வெறியை தமிழகத்தில் பரப்பிவிடும் குறிப்பான கட்சிகளை, தலைவர்களை அம்பலப்படுத்தாமல் பொதுவில் பேசுவதால் என்ன பலன்?

திவ்யா, இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக 2 ஊர்களையே கொளுத்தும் இந்த காட்டுமிராண்டி கும்பலை எதிர்கொள்ளாமல் சாதிமறுப்பு காதல் திருமணம் சாத்தியமா? என்பதை பற்றியெல்லாம் மாநாட்டில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாநாட்டின் நோக்கத்தை உணர்ந்து கொண்டு தலைவர்கள், தொண்டர்கள் செயல்பட்டதாகவும் தெரியவில்லை.

“பெண் உரிமை பற்றி பேசும் மாநாட்டில் விரல்விட்டு எண்ணும் அளவில் பெண்கள் இருக்க என்ன காரணம். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் நாம் அனைவரும் ஏன் நமது வீட்டுப் பெண்களை அழைத்து வரவில்லை. ஏன் என்றால் ஆணாதிக்க சிந்தனையோடு தான் நாம் இருக்கிறோம்” என ஆதங்கப்பட்டார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.

“மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அமைப்பினரும் 10 நபர்களை அழைத்து வந்திருந்தால் இம்மாநாட்டு அரங்கம் நிறைந்திருக்கும். நாம் ஏன் இதனை செய்யவில்லை” என வினா எழுப்பினார் தமிழ் தேச நடுவம் ஒருங்கிணைப்பாளர் பொழிலன்.

“தோழர் என்ற சொல்லை மறந்து விடுகிறோம். தோழமை என்பதே செத்துவிட்டது” என்றார் ரத்தினம்.

பேச்சாளர்களின் இந்த குமுறலுக்கு என்ன பதில், எப்படி சரிசெய்வது என விடை இல்லை.

அவரவர் தமது ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்லும் களமாகவே மாநாடு அமைந்தது. இதில் பார்வையாளர்கள் எதை எடுத்துக் கொள்வது, எப்படி சாதி மறுப்பு என்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை எப்படி தீர்ப்பது? என்பதெற்கெல்லாம் விடை இல்லை.

ஒவ்வொரு பேச்சாளரும் தமது உரை முடிந்ததும் தமது அணிகளுடன் மாநாட்டை விட்டு வெளியேறுவது என்பது நீடித்த வண்ணமாகவே இருந்தது. தமது கருத்தை மற்ற தலைவர்கள் ஏற்கிறார்களா? மறுக்கிறார்களா? அல்லது மற்ற தலைவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை கவனிக்கக் கூட மனமில்லாமல் மண்டபத்தை விட்டு வெளியேறும் இந்த தன்மை எப்படி மாநாட்டை சிறப்பிக்க வைக்கும். இந்த அணுகுமுறை அணிகளை எப்படி வளர்க்க உதவும். ஒவ்வொருவரும் மற்றவருடன் ஒட்டுவதில்லை. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்பது இல்லை. சாதி மறுப்பு என்ற ஒற்றை மேற்கோளை ஏற்றுக் கொண்டால் போதுமா? அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமா? வழியில் உள்ள ஆயிரம் தடைக்கற்களை தகர்க்க வேண்டாமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கவில்லை.

இந்த சமூக அமைப்புக்குள்ளேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்த கூட்டமைப்பினரின் விருப்பமாக உள்ளது. சட்டம் கடுமையாக்க பட வேண்டும், புதிய சட்டங்கள் தேவை, என்ற வகையில் தான் மாநாட்டின் பேச்சும், தீர்மானமும் அமைந்துள்ளது.

சாதிக் கட்சிகளை வளர்ப்பதும், ஊக்குவிப்பதும் இந்த ஓட்டுக்கட்சி அரசியல்தான். இவர்கள் சாதியை எப்படி ஒழிப்பார்கள். தேர்தலின் போது சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்துவது சாதி சங்கங்களுடன் கூட்டணி சேர்வது என்பது வழக்கமானவை ஆகும். இந்த ஆளும்வர்க்க கட்சிகளை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி முறியடிக்காமல் இவர்களுடன் இணைந்தே எப்படி சாதியை ஒழிக்க முடியும்?

சாதி ஒழிப்பில் உண்மையில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் நமது நண்பர்கள் யார்? எதிரி யார்? என்பதை சரியாக மதிப்பிடுவதும் அவசியமானதாகும். நண்பர்கள் என ஏற்றுக் கொண்டோரின் கரத்தை இறுக பற்றுவதும் எதிரி என அடையாளம் கண்டு கொண்டவர்களை இறுதிவரை எதிர்த்து உறுதியாக போராடுவதும் தேவையான ஒன்றாகும்.

தோழமை அமைப்பினரின் தவறு, குறைபாடுகளை துணிந்து எடுத்துரைப்பதும், அனுபவங்கள், படிப்பினைகளை தொகுப்பதும் நோக்கத்தை நிறைவேற்ற பயன்படும். உண்மையான, முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும் போதுதான் சாதியை அழிக்க முடியும்.

எங்களது பெண்கள் விடுதலை முன்னணியில் உள்ள பலரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு பிறகும் மக்கள் மத்தியில் சாதி மறுப்பாளர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

எங்களது பிள்ளைகளை சாதி மறுப்பாளர்கள் என்பதே பள்ளியில் பதிவு செய்து சேர்த்து வருகிறோம்.

சாதி வெறியர்களின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.

தர்மபுரியில் திவ்யா-இளவரசன் காதல் திருமணத்திற்கு எதிராக பா.ம.க ராமதாசு, காடுவெட்டி குரு உள்ளிட்ட சாதிவெறியர்களுக்கு எதிராக எங்களது தோழமை அமைப்பினரான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியோருடன் இணைந்து போராடியுள்ளோம். இந்த அனுபவத்தில் இருந்தும் எதிரிகளை வீழ்த்தி, சாதி வெறியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையினாலேதான் நாங்கள் மாநாட்டை பற்றிய எமது கருத்தை தெரிவித்துள்ளோம்.

மொத்தத்தில் 68 அமைப்புகள் 66 பேச்சாளர்கள் இணைந்து நடத்திய இந்த மாநாடு

கூடி பொழியும் மேகங்களின் கூட்டமாக இருக்கும் என எதிர்பார்த்தோர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கூடிக்கரையும் காகங்களின் கூட்டமாகவே இம்மாநாட்டை பார்க்க முடிந்தது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

தோழமையுடன்.,
பெண்கள் விடுதலை முன்னணி.,
திருச்சி.

பாஜக ஆசியுடன் இந்தியனைக் கொல்ல வரும் பில்கேட்ஸ் !

3

கேட்ஸ் பவுண்டேசன்: மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!

ணினி உலகின் முடிசூடா மன்னர், உலகின் மிகப் பெரும் பணக்காரர் என அறியப்பட்ட பில்கேட்ஸ்தான் இன்று உலகின் மிகப் பெரிய தர்மகர்த்தா. அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அவர் நடத்திவரும் அறக்கட்டளை நிறுவனமான “பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை” அளவிலும் செயல்பாட்டிலும் தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு இணையானது. இந்திய அரசின் போலியோ ஒழிப்புத் திட்டம் உள்பட பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் மூளையாக இருப்பது கேட்ஸ் அறக்கட்டளைதான். கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்த அவர், மைய அரசுடன் இணைந்து பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்கான திட்டத்தைத் தனது அறக்கட்டளையின் சார்பாகத் தொடங்கி வைத்தார்.

பில் கேட்ஸ், மெலிந்தா கேட்ஸ், ஹர்ஷவர்தன்
பச்சிளங்குழந்தைகளின் உடல்நலக் கவனிப்பு தொடர்பான திட்டம் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளை மைய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் (நடுவில்) இணைந்து வெளியிடும் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் பில் கேட்ஸ் (வலது) மற்றும் அவரது மனைவி மெலிந்தா கேட்ஸ்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு பற்றிக் கதைக்கப்படும் இத்தருணத்தில் பில்கேட்ஸின் வருகையை இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளிகளும் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி ஏற்பாடு செய்திருந்ததொரு கூட்டத்திற்கு பில் கேட்ஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இக்கூட்டத்தில் டாடா குழுமத்தின் சைரஸ் மிஸ்திரி, ஜி.எம்.ஆர் அதிபர் ஜி.எம்.ராவ், இன்போசிஸ் நந்தன் நீலகேனி மற்றும் கோபாலகிருஷ்ணன், ஜிண்டால் குழுமத்தின் நவீன் ஜிண்டால், ஏர்டெல்லின் சுனில் மிட்டல், பயோகான் கிரண் மஜூம்தார் ஷா உள்ளிட்ட இந்தியாவின் தரகு முதலாளிகள் கலந்துகொண்டு, அறக்கட்டளைகளை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பில் கேட்ஸுடன் விவாதித்தனர்.

கணினித் துறையில் ஏகபோக முதலாளியான பில் கேட்ஸ், தனது தாயார் சாகும் தருவாயில், “யாருக்கு மிக அதிகமாகக் கொடுக்கப்பட்டதோ அவர்களிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியதால், எஞ்சியுள்ள தனது வாழ்க்கை முழுவதிலும், தனது அறிவையும், திறமையையும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் நோக்கில்தான் அறக்கட்டளைகளைத் தொடங்கி நடத்துவதாகக் கூறியிருக்கிறார்.

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதையே நீக்க வேண்டும் என வாதாடி வரும் இந்தக் கனவான்கள் அனைவரும் சமூக பொறுப்பு பற்றி பேசுவதும் அதற்காக தமது இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதல்ல. இரண்டிலுமே அவர்களின் நலன் ஒளிந்திருப்பது மட்டுமல்ல, அறக்கட்டளைகள், குறிப்பாக பில் கேட்ஸின் அறக்கட்டளை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல, போட்ட முதலுக்கு ஏற்ற பலன் இருக்க வேண்டும் என்றவாறு இலாப நோக்குடன் இயங்கி வருகிறது என்பதே உண்மை.

டேவிட் ராக்ஃபெல்லர்
அமெரிக்க நவீன அறக்கட்டளை முதலாளி டேவிட் ராக்ஃபெல்லர்

இதற்கு உதராணமாக 2008-ல் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி நிலையைக் குறிப்பிடலாம். அந்நெருக்கடியால் ஏற்பட்ட சமூகக் கொந்தளிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் சமாளிப்பது எப்படி என விவாதிக்க பில் கேட்ஸ், வாரன் பஃபெட், டேவிட் ராக்பெல்லர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரும் ஏகபோக முதலாளிகள் நியூயார்க் நகரில் ஒன்று கூடினர். தம்மை “நல்லவர்களின் சங்கம்” என்று அழைத்துக் கொண்ட இம்முதலாளிகள், ஏழை நாடுகளின் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்திக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை களைவதற்கான திட்டங்கள் பற்றி விவாதித்து, அந்நாடுகளில் காணப்படும் “மக்கள் தொகை பெருக்கம்”, “தொற்று நோய்கள்” போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை முதலில் தீர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த நாட்டு அரசுகள் முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்/பிரச்சினைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தமக்கு விருப்பமான அல்லது தாம் முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களில் மட்டுமே அறக்கட்டளைகள் செயல்படுவது என்றும், இதற்கேற்ப ஏழை நாட்டு அரசுகளின் கொள்கை மற்றும் சமூகங்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்தனர்.

வாரன் பஃபெட்
அமெரிக்க நவீன அறக்கட்டளை முதலாளி வாரன் பஃபெட்

ஏகபோக நிறுவனங்கள் அறக்கட்டளைகளை உருவாக்குவதும், அவை ஏழை நாடுகளில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகத் தளங்களில் செயல்படுவதும் புதிய விசயமல்ல. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏகாதிபத்தியங்கள் தங்களது காலனிகளில் உள்ள தொழிலாளர்களின் உழைப்புத் திறனை அதிகரிக்கவும், வெள்ளை மேற்பார்வையாளர்கள், இராணுவச் சிப்பாகளை நோய் தொற்றிலிருந்து காக்கவும் அறக்கட்டளைகளைத் தொடங்கிவிட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் கம்யூனிச அலையை வீழ்த்தும் நோக்கத்தோடு அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்தன. ஏகாதிபத்திய அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தமது மேலாதிக்கத்தை ஏழை நாடுகளில் நிறுவிக்கொள்வதற்குப் பயன்படுத்திய பல உத்திகளில் ஒன்றாக பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், மனிதவள மேம்பாடு ஆகிய தளங்களில் அறக்கட்டளைகளைச் செயல்பட வைத்தன. வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தால் அணுக முடியாத பகுதிகளில் கூட மலேரியா ஒழிப்பு என்ற பெயரில் அறக்கட்டளைகளால் நெருங்க முடிந்தது. பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த “ஹக் போராளிகளை” ஒடுக்க அறக்கட்டளைகள் பெரிதும் உதவின.

தற்பொழுது, அதாவது உலகமய காலக் கட்டத்தில் இந்த அறக்கட்டளைகள், தொழிற்துறைகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களைப் போன்ற அமைப்பு வடிவத்துடனும், இலாப நோக்கத்துடனும் இயங்குவது மட்டுமின்றி, உலகில் நிலவும் பிரச்சனைகளைத் தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் அரசுகளாலோ, அல்லது மக்கள் நலனை முன்னிறுத்திப் போராடும் வேறு பிற அமைப்புகளாலோ இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் வாதிடுவதோடு, அதனைக் கொள்கை பிரகடனம் போன்று அறிவித்துள்ளன. மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்த அறக்கட்டளைகள் வந்தமர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் ஏழை நாடுகளின் அரசுகளை ஏகாதிபத்திய நிறுவனங்களின் விருப்பத்தை, நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொடுக்கும் கருவியாக மாற்றியமைக்கின்றன. இதற்கு ஐ.நா., உலகவங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் ஏழை நாடுகளின் அரசாங்கங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஆகிய அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றன.

பில் கேட்ஸ், அசீம் பிரேம்ஜி
உலகமய காலக் கட்டத்தில் அறக்கட்டளைகளை இலாபம் தரும் கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்துவது எப்படி என்பதை பில் கேட்ஸிடம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் இந்தியத் தரகு முதலாளியும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை தலைவருமான அசிம் பிரேம்ஜி (வலது).

கேட்ஸ் அறக்கட்டளையால் திட்டமிடப்பட்டு, இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போலியோ ஒழிப்புத் திட்டம் இதற்கொரு நல்ல உதாரணமாகும். தனது பிற சுகாதாரத் திட்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கேட்ஸ் அறக்கட்டளையின் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய அரசு, தனது மொத்த அரசு இயந்திரத்தையும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வருகிறது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகான உலகமய காலக்கட்டத்தில், ஏழை நாடுகளில் செயல்படுத்தப்படும் பொது சுகாதாரத் திட்டங்களை சர்வதேச நிறுவனங்களின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் நோக்கமாகும். பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் இன்று உலகெங்கும் பரவிவரும் நிலையில், அதனைக் காட்டித் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த உலகமயமான நோய்களைக் காட்டியோ அல்லது ஆந்த்ராக்ஸ் பீதி போன்றவற்றை கிளப்பிவிட்டோ ஏழை நாடுகளின் மருத்துவ ஆராய்ச்சி, பொது சுகாதாரத் திட்டங்களில் தலையீடு செய்வதற்கான முகாந்திரத்தை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிக் கொள்வதோடு, இப்படி தலையீடு செய்வது தங்களது உரிமை என்றும் வாதிடுகின்றன. “ஜனநாயகம்”, “மனித உரிமை” என்ற போர்வையில் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் லிபியா, சிரியா போன்ற நாடுகளில் தலையிட்டு அவற்றை ஆக்கிரமிப்பது போல, அறக்கட்டளைகள் சுகாதாரம், மக்கள் நலன் என்ற பெயரில் ஏழை நாடுகளுக்குள் ஊடுருவி அவற்றைத் தங்களது பிடிக்குள் கொண்டுவருகின்றன. ஏழை நாடுகளின் ஆளுங்கும்பல் தமது வர்க்க நலனை முன்னிறுத்தி ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போர்களை ஆதரித்து நிற்பது போலவே, அறக்கட்டளைகளின் தலையீடுகளுக்கும் ஆதரவு அளிக்கின்றன.

***

பில் கேட்ஸ் நைஜீரியாவில்
நைஜீரியாவில் கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பாக, போலியோ ஒழிப்புத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதை அறிவிக்கும் பதாகையுடன் பில் கேட்ஸ் (கோப்புப் படம்)

ழை நாடுகளின் பொது சுகாதாரத் திட்டங்களில் தலையீடு செய்து, அவற்றை ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஏகபோக மருந்து நிறுவனங்களின் நலனுக்கு ஏற்ப மாற்றியமைப்பதில் இன்று பில்கேட்ஸின் “பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை”தான், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு, ராக்பெல்லர் உள்ளிட்ட மற்ற அறக்கட்டளைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஏகபோகமாக வளர்ந்து நிற்கிறது. 3600 கோடி அமெரிக்க டாலர் மூலதனத்தைக் கொண்டுள்ள கேட்ஸ் அறக்கட்டளைதான் இன்றைக்கு உலக அளவில் இயங்கிவரும் முதலாளித்துவ அறக்கட்டளைகளிலேயே மிகவும் பெரியது; ஐ.நா.வின் உலக சுகாதார மையத்தின் நன்கொடையாளர்களில் மூன்றாவது மிகப்பெரிய கொடையாளராக கேட்ஸ் அறக்கட்டளை உள்ளது. இதன் மூலம் உலக சுகாதார கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 2009-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் பல்வேறு சுகாதார திட்டங்களுக்கு கேட்ஸ் அறக்கட்டளை ஒதுக்கிய நிதி 180 கோடி அமெரிக்க டாலர் என்பதிலிருந்து, அதன் வீச்சு மற்றும் செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம்.

அமெரிக்காவில் பொதுப்பள்ளிகளைத் தனியார்மயமாக்குவதையும் ஆசிரியர் சங்கங்களின் முதுகெலும்பை உடைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாடுகளில் “தொற்றுநோய்கள்”, “விவசாயக் கொள்கை”, “மக்கள்தொகைக் கட்டுப்பாடு” ஆகிய தளங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பில்கேட்ஸ் அறக்கட்டளையின் செல்வாக்கிற்கு அதன் கையில் இருக்கும் மூலதனமும், நிதி ஒதுக்கீடும் மட்டும் காரணமில்லை. அதுவொரு ஆக்டோபஸ் போல, ஐ.நா., உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், ஏழை நாடுகளின் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் என விரிந்த வலைப்பின்னலை அமைத்துக் கொண்டு வேலை செய்து வருவதன் மூலம், அது தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் ஏழை நாடுகள் அனைத்திலும் நிறுவிக் கொண்டுள்ளது. குறிப்பாக, பில் கேட்ஸ் அறக்கட்டளை 2012-ம் ஆண்டு அறிவித்த புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான திட்டம், யு.எஸ்.எய்டு, உலக வங்கி ஆகியவற்றுடன் பிரேசில், வங்காளதேசம், ஐக்கிய அரேபிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்களையும், மெர்க், கிளாக்சோ ஸ்மித் கிளைன், ஃபைசர் உள்ளிட்ட 13 பன்னாட்டு மருந்து நிறுவனங்களையும் கூட்டாளிகளாகக் கொண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

கேட்ஸ் அறக்கட்டளைதரம் குறைந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை மலிவான விளம்பர உத்திகளின் மூலம் கணினித் துறையில் ஏகபோகமாக மாற்றிவிட்டதைப் போல, தனது அறக்கட்டளையையும் வளர்த்து வருகிறார், பில்கேட்ஸ். “நாங்கள் ஐ.நா.-விற்கு மாற்று அல்ல. ஆனால், சிலர் எங்களை அதற்கு நிகரான நிறுவனமாக பார்க்கின்றனர்” என பில் கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் ரேக்ஸ் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் அளவிற்கு அதனின் செல்வாக்கும் ஆதிக்கமும் சர்வதேச அளவில் பரந்து விரிந்ததாக உள்ளது. இதனால் இந்த அறக்கட்டளை எவ்வாறு செயல்படுகிறது, யாருடைய நலனை, எப்படி பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள அதன் உலகளாவிய தடுப்பூசித் திட்டங்களைக் கூர்ந்து நோக்குவது அவசியமாகிறது.

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் மட்டுமல்ல; “பிக் பார்மா” என்றழைக்கப்படும் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களான மெர்க், ஃபைசர், கிளாக்சோ ஸ்மித் கிளைன் ஆகியவற்றில் பில் கேட்ஸ் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்.

மேற்கத்திய ஏகபோக மருந்து நிறுவனங்களின் இலாப சதவீதம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அது குறித்து ஆய்வு செய்த மெக்கன்சி நிறுவனம், “மேற்கத்திய நாடுகளில் அமலில் உள்ள தரக் கட்டுப்பாடு சட்டங்கள் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதனைச் சந்தைப்படுத்துவதற்குமான செலவுகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக”க் கூறி, “இந்தச் செலவைக் குறைப்பதற்கு வேறு புதுமையான வழிகளை மருந்து கம்பெனிகள் கண்டுபிடிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கியது.

இதனடிப்படையில் புதிய மருந்துகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்க குடிமகன்களுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பார்ப்பதைவிட, ஏழை நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் உடம்பில் செலுத்திப் பரிசோதித்துப் பார்ப்பதை இலாபகரமானதாகவும், மேற்கத்திய தரக் கட்டுப்பாட்டு சட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாகவும் ஏகபோக மருந்து கம்பெனிகள் கண்டு கொண்டன.

இதற்கு அப்பால், “நம்மை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மக்களைச் சாந்தப்படுத்துவதற்கு ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது” என்பதை அமெரிக்க ஏகபோக முதலாளியான ராக்பெல்லர் பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமது சோந்த அனுபவத்தில் கண்டுணர்ந்து, அதனை தனது அறக்கட்டளையின் செயல்திட்டமாக நடைமுறைப்படுத்தியும் வந்திருந்தார்.

gates-foundation-2கேட்ஸ் அறக்கட்டளை பொது சுகாதார தளத்தில் இயங்குவதைத் தனது முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் தனது அறக்கட்டளையின் மூலமாக சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டும் கேட்ஸ் ஒதுங்கிக் கொள்ளவில்லை. ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. (Product Development Projects)) என்ற பெயரில் மருந்துப் பொருள் அபிவிருத்திக்கான திட்டங்களையும், (இந்தத் திட்டம் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாகச் செயல்படுத்தப்படும் பி.பி.பி. திட்டம் போன்றது) ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தி மருந்துகளைப் பரிசோதனை செய்யும் அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறது. மேலும், ஏழை நாடுகளின் அரசுகளின் சுகாதார கொள்கைகளைத் தமக்குச் சாதகமாக உருவாக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு ஏற்ப, அதிகார வரக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அளவிற்குப் பலமிக்க அரசுசாரா நிறுவனங்களையும் களத்தில் இறக்கியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு படையெடுப்புக்கு நிகரானது எனச் சொல்லத் தேவையில்லை.

2000-ம் ஆண்டுகளின் மத்தியில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் புதிய மருந்துகளுக்கான சோதனைகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்த ஆரம்பித்தது. 2010-ம் ஆண்டு கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசியை 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் மீது சோதித்தது. இந்தச் சோதனையின் விளைவாக 151 குழந்தைகள் இறந்ததுடன், 1,048 குழந்தைகள் முடக்குவாதம், வலிப்பு நோய் போன்ற கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டன. எனினும், இவ்வுண்மைகளை மறைத்து மருந்துப் பரிசோதனை பெரும் வெற்றி பெற்றதாகப் பிரச்சாரம் செய்து, உலகம் முழுவதும் அம்மருந்தை விநியோகம் செய்யும் உரிமத்தை கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்திற்கு வாங்கித்தந்தது.

அதே போன்று ஆப்பிரிக்க நாடான சாட்-இல், குழந்தைகளின் மூளையையும் தண்டுவடத்தையும் பாதிக்கும் “மெனின்ஜெட்டிஸ்” (Meningitis) என்ற நோய்க்கு எதிரான தடுப்பூசியை அறிமுகம் செய்து, அதனைச் சந்தைப்படுத்துவதற்காக ‘மென் ஆஃப்ரி வாக்’ (MenAfriVac) என்ற இயக்கத்தையும் எடுத்தது, கேட்ஸ் அறக்கட்டளை. இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்ட 500 குழந்தைகளில் 50 குழந்தைகள் முடக்குவாதத்தில் வீழ்ந்தனர்.

gates-foundation-immunizationகேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாட்டு மக்களைப் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக மட்டும் பயன்படுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளில் கடும் பக்கவிளைவுகளின் காரணமாக போணியாகாமல் தேங்கிக் கிடக்கும் மருந்துகளைக் கொண்டுவந்து கொட்டும் சந்தையாவும் ஏழை நாடுகளைப் பயன்படுத்தி வருகிறது. கடும் பக்கவிளைவுகளின் காரணமாக நார்பிளாண்ட் என்ற கருத்தடை சாதனத்திற்கு (contraceptive) எதிராக அமெரிக்காவில் 36,000 வழக்குகள் தொடரப்பட்டதையடுத்து, நார்பிளாண்ட் அமெரிக்கச் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இக்கருத்தடை சாதனத்தின் பெயரை ஜேடல் என மாற்றி, ஆப்பிரிக்காவில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் உதவியுடன் கேட்ஸ் அறக்கட்டளை சந்தைப்படுத்தி வருகிறது. “ஆப்பிரிக்க ஆண்கள் கருத்தடை சாதனங்கள் குறித்து அக்கறைப்படாததால், ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் தங்களுக்கு இந்த மருந்து நிச்சயம் தேவை என விரும்பிக்கேட்பதாக”க் கூறி பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ் இந்த விற்பனையை நியாயப்படுத்தியிருக்கிறார். நார்பிளாண்டைப் போன்றே கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஃபைசர் நிறுவனத்தின் டிப்போ புரோவேரா மருந்தையும், மெர்க் நிறுவனத்தின் இம்ப்ளானோன் மருந்தையும் கேட்ஸ் அறக்கட்டளை தெற்காசிய, ஆப்பிரிக்க பெண்களிடையே விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

gates-foundation-3கருப்பை புற்றுநோயிலிருந்து பெண்களைக் காக்கக்கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம், கர்டாஸில் எனப் பெயரிடப்பட்ட அம்மருந்தை 2006-ல் அமெரிக்காவில் விற்பனைக் கொண்டு வந்தது. இம்மருந்தின் பக்கவிளைவுகள் அடுத்த மூன்றே ஆண்டுகளில் தெரியவந்த பிறகு, வருடத்திற்கு 150 கோடி அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த அம்மருந்தின் விற்பனை தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த மருந்தை யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான சர்வதேச கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.

முதலாளித்துவ விமர்சகர்கள்கூட பில் கேட்ஸ் உள்ளிட்டு ஏகபோக முதலாளிகள் நடத்தும் அறக்கட்டளைகளை, அவற்றின் இலாபவெறி மற்றும் வர்க்கச் சார்பு ஆகியவற்றின் காரணமாக “அறக்கட்டளை முதலாளித்துவம்” (Philanthro Capitalism) என அழைக்கிறார்கள். ஆனால், மோடி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அபாயகரமான மருந்துகளை இந்திய உள்ளிட்ட ஏழை நாடுகளில் விற்பனை செய்யும் ஏஜெண்டாகச் செயல்பட்டுவரும் கேட்ஸ் அறக்கட்டளையை, “நோய்களுக்கும், மரணத்திற்கும் எதிரான போராட்டத்தில் அரசிற்குக் கிடைத்த மிக முக்கியமான கூட்டாளியாக”க் குறிப்பிட்டுப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இத்தகைய புகழ்ச்சிக்குப் பின்னே கர்டாஸில் மருந்தின் பக்கவிளைவுகளால் ஆந்திராவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழு சிறுமிகள் இறந்துபோனார்கள் என்ற உண்மை திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இந்தச் சாவுகள் கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய படுகொலைகள். இது போன்று, மருத்துவ உதவி என்ற போர்வையில் இந்திய மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்திவரும் கேட்ஸ் அறக்கட்டளையின் சட்டவிரோத, சமூக விரோத, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை வருமிதழில் காண்போம்.

(தொடரும்)
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________

உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !

14

உசிலை வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அறிக்கை

சாதிவெறியில் தர்மபுரி வன்னியர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை உசிலம்பட்டி கள்ளர் சாதிக்காரர்கள் என நிரூபித்துள்ளது விமலாதேவி கொலை. தர்மபுரி திவ்யாவை விட 100 மடங்கு தன் காதலுக்காக போராடியதால்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் விமலாதேவி.

விமலாதேவி
கொலை செய்யப்பட்ட விமலாதேவி (படம் : நன்றி தினகரன்)

விபரத்தை நேரில் விசாரிப்பதற்காக விமலாதேவியின் காதலன் திலீப்குமாரின் ஊரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள போலிபட்டி என்ற கிராமத்திற்கு சென்றோம். முற்றிலும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் வாழும் கிராமம். ஆரம்பத்தில் பேசத் தயங்கினார்கள். நாம் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் நம்மால் அவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதையும் உணர்ந்த பின்தான் மனம் விட்டுப் பேசினார்கள்.

இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள சுமார் 100 கிராமங்களிலும் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதால் தர்மபுரி போன்று ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்பதுதான் அவர்களின் தயக்கத்துக்கான காரணம் என்று உணர முடிந்தது.

கொலை செய்யப்பட்ட விமலாதேவியின் பெற்றோர் சின்னச்சாமி என்ற வீரணன் – தேனம்மாள். சின்னச்சாமி என்ற வீரணன் பூதிப்புரத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய செங்கல் சூளையில் லாரி டிரைவராகவும், மற்றும் தன் சொந்த வேலைகளை செய்வதற்கும் திலீப்குமாரை பணிக்கு அமர்த்தியுள்ளார். அதனால் சின்னச்சாமியின் வீட்டிற்கு திலீப்குமார் அடிக்கடி வந்து போக வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சின்னச்சாமியின் மகள் விமலாதேவிக்கும் திலீப்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டு சேர்ந்து வாழ முடிவு செய்து இருவரும் கடந்த ஜூலை 20-ம் தேதியன்று ரகசியமாக கேரளாவுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி திலீப்குமார் என் மகளை கடத்தி சென்று விட்டார் என்று போலீசில் புகார் செய்திருக்கிறார். உடனே 25-ம் தேதி போலீஸ் திலீப்குமாரின் இருப்பிடத்தை அறிந்து அவர்கள் இருவரையும் உசிலை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார்கள். உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் ஆதரவோடு விமலாதேவியின் கழுத்தில் உள்ள தாலியைக் கழற்ற பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜீ முயற்சி செய்துள்ளார். அதற்கு விமலாதேவி, “உன் மகள் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாளே, முதலில் அவள் தாலியை கழற்றி விட்டு வா, அப்புறம் நான் தாலியை கழற்றுகிறேன்” என்று முகத்தில் காரி உமிழாத குறையாகப் பேசி அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் தலைவருமான கதிரவினிடம் வைத்து பேசி தாலியைக் கழற்ற முயற்சி செய்தபோது விமலாதேவி சட்டமன்ற உறுப்பினர் கதிரவனைப் பார்த்து, “உன்னுடைய எம்.எல்.ஏ வேலை இது இல்லை. என் விசயத்தில் தலையிட வேண்டாம், உன் வேலையை பார்த்து விட்டுப் போ” என்று விரட்டியுள்ளார்.

அடுத்து 20-க்கும் மேற்பட்ட கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் படை சென்று விமலாதேவியிடம், “உன் காதலன் திலீப்குமாரே நீ வேண்டாம், உன்னை மறந்து விடுகிறேன் என்று சொல்கிறான். நீ மட்டும் ஏன் தாலியை கழற்ற மறுக்கிறாய்” என்று கேட்டதற்கு அந்த வழக்கறிஞர் படையிடம், “நீங்க 500 பேர் சேர்ந்து போய் ஒருத்தரை மிரட்டினால் மறுத்துதான் பேசுவார், அவர் மறுத்தார் என்பதற்காக நான் மறுக்க முடியாது” என்று விமலா கூறியதால் பருப்பு வேகாமல் திரும்பி விட்டனர் வழக்கறிஞர்கள்.

இப்படி மிரட்டல் தந்திரம் பலிக்காமல் போனதால், சம்பவத்திற்கு மூன்று நாளுக்கு முன் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி விசம் குடித்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அந்த நிலையில் தந்தையின் முகத்தை பார்த்தாவது மனசு மாறும் என்று நினைத்து விமலாதேவியை அழைத்துச் செல்ல காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனுமதித்துள்ளார். தந்தையின் பரிதாப நிலையைப் பார்த்து விமலாதேவி அழுது கவலைப்பட்டுள்ளார்.

அன்று இரவு விமலாதேவியை நீதிபதியிடம் கூட்டிச் செல்ல விடாமல் அந்தப் பகுதி சாதிக் கட்சித் தலைவர்கள் உள்பட, சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர்கள் என்று 500-க்கும் மேற்பட்டவர்கள் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.

நீதிபதியும் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினால் போதும் என்று கூறியதால் மறுநாள் காலையில்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி கேள்விக்கு, “என்னை யாரும் கடத்தவில்லை, நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்.” என்று கூறியிருக்கிறார் விமலாதேவி. இப்போது யாருடன் செல்ல விருப்பம் என்று கேட்ட போது திலீப்குமாருடன் செல்வதற்கு சூழ்நிலை இல்லாமல் இருந்ததாலும், நிலைமை கருதியும் என் பாட்டியுடன் செல்ல விருப்பம் என்று விமலாதேவி கூறியதால் அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்பு செப்டம்பர் மாதம் விமலாதேவியை வருசநாட்டைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கு அக்டோபர் 30-ம் தேதி திருமணம் செய்துவைக்க பேசி நிச்சயம் செய்கிறார்கள். இதற்கிடையில் விமலாதேவியின் மனதை மாற்றுவதற்காக இவர்களின் உறவினர் வீட்டுக்கு நிச்சயம் செய்யப்பட்ட சதீஸ்குமாருடன் அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்.

போகும் வழியில் விமலாதேவி நண்பருக்குப் பேசுவது போல் சதீஸ்குமாரிடம் செல்போனை வாங்கி வத்தலக்குண்டு பஸ் நிலையம் வரும்படி திலீப்குமாரிடம் பேசியுள்ளார். திலீப்குமாரும் வத்தலக் குண்டு பஸ் நிலையம் வந்து விட்டார். உடனே திலீப்குமாரை சதீஸ்குமார் அடித்துள்ளார். அதற்கு பதிலாக விமலாதேவியும் திலீப்குமாரும் சேர்ந்து சதீஸ்குமாரை அடித்து கலகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அருகில் இருந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி இவர்களை கைது செய்து விமலாதேவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களோடு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விமலாதேவி நான் திலீப்குமாருடன்தான் செல்வேன் எனறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் விமலாதேவி அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கிக் கொண்டு ஒரு விடுதலைப் பத்திரமும் எழுதி வாங்கிய பின் அனுப்பியுள்ளனர்.

விமலாதேவி தான் அணிந்திருந்த மூக்குத்தியைக் கூட கழற்றிக் கொடுத்து விட்டு உங்க சொத்து எதுவும் எனக்கு வேண்டாம், ஆள விட்டால் போதும் என்று கூறிவிட்டு திலீப்குமாருடன் பேருந்து நிலையம் வந்தபோது மறுபடியும் விமலா தேவியின் பெற்றோர் திலீப்குமாருடன் தகராறு செய்துள்ளனர். மீண்டும், அவர்களை கைது செய்த சார்பு ஆய்வாளர் ஆனந்தி விமலாதேவியை தனியார் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு திலீப்குமாரை விரட்டி விடுகிறார். மறுநாள் மீண்டு திலீப்குமார் சார்பு ஆய்வாளர் ஆனந்தியிடம் சென்று விமலாதேவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அனுப்ப மறுத்த உதவி ஆய்வாளர் விமலாதேவியை சின்னச்சாமியிடம் ஒப்படைத்துள்ளார்.

26.09.2014-ல் விமலாதேவி வீட்டுக்கு வந்ததிலிருந்து திலீப்குமாருடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று தொடர்ந்து உறுதியாக நின்று போராடியதால் 1.10.2014-ம் தேதி இரவு சுமார் 9 மணிக்கு கொலை செய்திருக்க வேண்டும் என்ற தகவல் கூறுகிறார்கள். இரவோடு இரவாக எரித்து விட்டு தூக்கு போட்டு இறந்து விட்டதாக காலையில் உறவினர்களுக்கு தகவல் தருகிறார்கள் பெற்றோர். சின்னச்சாமியின் வீடு பூதிப்புரம் ஊருக்குள் இல்லாமல் தனியாக தோட்டத்து வீடாக இருந்ததால் நடந்த சம்பவம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

விபரம் அறிந்த திலீப்குமார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தருகிறார். விமலாதேவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சமூக நெருக்கடிக்குப் பின் தற்கொலைக்கு தூண்டுதல் என்று பெற்றோரையும் உறவினரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

விமலாதேவியை கொலை செய்து சிறு எலும்பு மிஞ்சாமல் எரித்து சாம்பலாக்கிய சுடுகாடு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு சாதி கலவரத்திற்கும் ஆதிக்கசாதி தலைவர்களும் காவல்துறையும் எப்படி உதவியாக இருக்கிறார்களோ, அதேபோல் இந்த கொலைக்கும் உடந்தையாக இருந்துள்ளார்கள். இதுபோன்ற சாதிவெறி கொலைகள் நடப்பதை தடுக்க உண்மையில் நாம் செய்ய வேண்டியது, கொலைக்கு நேரடியாக உடந்தையாக இருந்த உறவினர்களை மட்டுமல்லாமல் துணைநின்றவர்கள் மீதும் வழக்கு பதிய வேண்டும்.

அதன்படி ஆரம்பத்திலிருந்து இவர்களை பிரிப்பதற்கு உடந்தையாக இருந்த உசிலம்பட்டி துணை கண்காணிப்பாளர், வத்தலக்குண்டு உதவி ஆய்வாளர், உசிலைபகுதி கள்ளர் சாதி தலைவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் ஆகியோரின் மீதும் கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

ஆதிக்கசாதி வெறியை குழிதோண்டி புதைத்தால்தான் அந்த புதை மேட்டிலிருந்து சாதிமறுப்பு திருமணம் அதிகரித்து ஆரோக்கியமான புதிய சமூகத் துளிர்விடும்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலை வட்டம்.

மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையம் அனுப்பிய அறிக்கை

உசிலம்பட்டி அருகே பெண் கவுரவக்கொலை ! மூடி மறைக்க ஆதிக்க சாதியினர் – போலீசு – அரசு அதிகாரிகள் கூட்டு சதி !

மனித உரிமை பாதுகாப்புமையம் உசிலை உட்கிளையைச் சேர்ந்த தோழர்கள் இது தொடர்பாக அந்த ஊருக்கு உண்மையறிந்து வரச் சென்றனர். விமலாதேவி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டில் இல்லை. ஊர்மக்களிடம் இதுபற்றி விசாரித்த போது ஒருவரும் முறையாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணும் பையனும் செய்தது தவறு என்று சொல்லியிருக்கின்றனர். மேலும் விசாரித்த போது கடந்த 2 ஆண்டுகளாக விமலாதேவியும், திலீப்குமாரும் நெருங்கிப் பழகிவந்தது அவருடைய குடும்பத்தாருக்குத் தெரிந்தே உள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிது படுத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஊர்க்காரர்கள் இழித்துப் பழித்துப் பேசியதைத் தாங்காமல் தான் வீரணன் விசம் குடித்துள்ளார். அதன் பிறகுதான் இது வெளியே தெரிந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொறுப்பில் உள்ள செல்லக்கண்ணு மற்றும் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஆகியோர் வீரணனுக்கு உறவினர்கள். இவர்கள் இந்தப் பிரச்னையில் வீரணனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். பி.வி.கதிரவன் ஆதிக்க சாதி அடிப்படையில் ஓட்டு வாங்கி ‘அம்மா’வின் ஆசியில் எம்.எல்.ஏ. ஆனவர். சி.பி.எம். செல்லக்கண்ணு இது போன்ற பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து காவல்துறைக்குத் தரகுவேலை செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளவர் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆக இந்தக் கவுரவக் கொலை தருமபுரிமாவட்டம் நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் பிரச்னையில் வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் எப்படி திவ்யாவின் தந்தை நாகராஜின் சாவுக்கும், இளவரசனின் சாவுக்கும், மூன்று கிராமங்களின் பலகோடி சொத்துக்கள் கொள்ளைக்கும் அழிவுக்கும் காரணமாக இருந்தார்களோ அதுபோலவே இதுவும் நடந்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் இது ஒரு மோசமான தொடக்கமாக உணரப்படுகிறது. இது எபோலா போல பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்தக் கொலையை வெளியே தெரியவிடாமல் அமுக்கிவிடுவதற்கு மாவட்ட காவல் துறை கடும் முயற்சி எடுத்து வருகிறது. கொலையைத் தற்கொலையாக மாற்றிவிடத் துடிக்கிறது. அதற்கு ஆதிக்க சாதியினரின் ஆதரவையும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது மிரட்டலையும் கடைப்பிடித்து வருகிறது.

விமலாதேவி கொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்கள்:

  • தற்கொலை என்றால் ஏன் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை?
  • சுடுகாட்டில் மயான சீட்டு இல்லாமல் பிணம் வெட்டியானால் எப்படி எரிக்கட்டது?
  • 8 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விமலாதேவியின் அப்பா, சித்தப்பா, அம்மா, சித்தி இரண்டாம் திருமணத்திற்கு தயாராக இருந்த சதீஷ்குமார் அவரது அப்பா குருசாமி வெட்டியான் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் எல்லோரும் (வெட்டியான் தவிர) வீட்டில் இருக்கும் போது விமலாதேவி எப்படி தற்கொலை (தூக்கு) செய்துகெள்வார்? அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.

ஆனால் செல்லக்கண்ணு, பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ., ஆதிக்க சாதி கனவான்கள் மற்றும் காவல்துறையின் ஆசியோடு இது மறைக்கப்பட்டுள்ளது. பூதிப்புரத்தில் உள்ள சாதிக்காரர்கள் செத்த பெண்மீது பழி போடுகின்றனர். கொலையை நியாயப்படுத்துகின்றனர். சாதிமாறி காதலிப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுகின்றனர்.

கொல்லப்பட்ட விமலாதேவியின் கணவர் திலீப்குமார் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகத்தில் சி.பி.எம். கட்சியினரின் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி (சாதி ஒழிப்பு அல்ல) மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஜனநாயக மாதர் சங்கத்தில் உசிலை வட்டப் பொறுப்பில் இருப்பவர் செல்லக்கண்ணுவின் மனைவி முத்துராணி.

“வறட்டு கவுரவத்துக்காக ஒரு கொலை நடந்துள்ளது. தப்பவிடதே. தமிழக அரசே! நடவடிக்கை எடு.” என்று கோரி வி.சி.கட்சியினர் சுவரொட்டி இயக்கம் நடத்தியுள்ளனர். திருமாவளவன் படத்தைப்போட்டு விசிகட்சியினர் ஒட்டிய அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையும், பார்வர்டுபிளாக் கட்சியைச் சேர்ந்த சில வக்கீல்களும் தேடித் தேடிச் சென்று ஒன்றுவிடாமல் கிழித்துவிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் தலித்துகளை கெட்ட வார்த்தைகளால் நடுரோட்டில் அர்ச்சித்தனர். மேலும் உசிலை நகரில் உள்ள மாட்டிறைச்சிக் கடையில் போய் முன்னாள் ஊராட்சித் தலைவர் தகராறு செய்துள்ளார். விசி கட்சியைச் சேர்ந்த தென்னரசு என்பவரைத் தொலைபேசியில் அழைத்து மிகக் கேவலமாகத் திட்டி கொலை மிரட்டல் விட்டுள்ளனர்.

ஆனால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒட்டிய சுவரொட்டிகள் ஒன்று கூட கிழிக்கப்படவில்லை. சாதிக்கு சாதி சகித்துப் போய்க்கொள்ளும் நடைமுறை உள்ளதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இது என்ன உள்குத்தோ தெரியவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி கும்பல் தமிழக அரசியலில் காய் நகர்த்துகிறது. சமூக நீதி, இட ஒதுக்கீடு, பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் கட்சிகள் தான் இந்த மதவெறியர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.

எமது தோழர்கள் விசாரித்ததில் தெரிந்த ஒரு விவரம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது. விமலா தேவியின் அப்பா வீரணன் காவல்துறை விசாரணையின் போது “என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.” என்று சொன்னாராம்.

விமலாதேவியும் – திலீப்குமாரும் கேரளாவில் பதிவுத்திருமணம் செய்து கொண்டதற்கான அத்தாட்சி இருக்கிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப் படவுமில்லை. ஆனால் இதைத் தெரிந்தே வேறு ஒருவன் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறான் என்றால் சாதி வெறிபிடித்த இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. இதை வீழ்த்த நாம் போராடவேண்டாமா?

தகவல்
மனித உரிமை பாதுகாப்புமையம்
உசிலம்பட்டி உட்கிளை மதுரை மாவட்டம்.

news1

பத்திரிகை செய்திகள்

ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு சாவு
ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு சாவு : பெற்றோர் உட்பட 8 பேர் கைது

மேக் இன் இந்தியா – கேலிச்சித்திரம்

0

மேக் இன் இந்தியாபடம் : ஓவியர் முகிலன்

பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !

8

பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள்!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2009–ல்தான் இந்து அறநிலையத்துறை சிதம்பரம் நடராசர் கோவிலில் முதன் முதலாக ஒன்பது உண்டியல்களை வைத்தது. அதற்கு முன்பு வரை தீட்சிதர்கள் உண்டியல் வைக்கவில்லை. தற்போது 2014–ல் உச்சநீதிமன்ற தீர்ப்பு தீட்சிதர்களுக்கு சாதகமாக வந்து விட்டது என இந்து அறநிலையத்துறை உண்டியலை அகற்றி உள்ளது. மேலும் இது வரை உண்டியல் மூலம் வசூலான தொகை ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் தீட்சிதர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டு தீட்சிதர்களின் கொள்ளையை சட்டபூர்வமாக்கியிருக்கிறது அம்மா அரசு..

hundialதமிழ்பாடும் உரிமை போராட்டத்தை தொடர்ந்து தீட்சிதர்களின் தனிச் சொத்தாக இருந்த சிதம்பரம் நடராசர் கோவிலை 2009–ல் இந்து அறநிலையத்துறை ஏற்க வைத்தோம். இதற்காக பல ஆண்டுகள் இடைவிடாமல் நாம் நடத்திய மக்கள் போராட்டம், நீதிமன்ற போராட்டம் எண்ணிலடங்கா.

‘சிதம்பரம் நடராசர் கோவிலின் ஆண்டு வருமானம் ரூ 30,000 அதில் செலவு போக கையிறுப்பு 199 ரூபாய் மட்டுமே’ என பொய்க் கணக்கு காட்டி விட்டு கோவிலில் வருமானம் முழுவதையும் தீட்சிதர்களே தங்களுக்குள் ஏலம் விட்டு பங்கு பிரித்து கொண்டனர். கோவிலை பராமரிக்கவோ, பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கவோ இல்லை. அறநிலையத்துறை ஏற்ற பிறகுதான் ஆணையரின் பொது நிதியில் இருந்து ரூ 25 லட்சத்திற்கு ஹைமாஸ் லைட் போட்டார்கள். அது வரை சிதம்பரம் கோவில் இருட்டில்தான் இருந்தது. இந்த சூழலில் 5 ஆண்டுகளாக தில்லை நடராசனுக்காக பக்தர்கள் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் காணிக்கையை தீட்சிதர்களின் சொத்தாக இன்று தாரை வார்த்திருக்கிறது அறநிலையத்துறை.

தீட்சிதர்கள் கோவில் வருமானத்தை வைத்து மது, மாமிசம், மங்கை என உல்லாச பேர்வழிகளாக இருந்தனர். அதற்கு கோவிலை பயன்படுத்தி வந்தனர் என்பதை நேரடியாக மக்கள் மத்தியில் பேசினோம். கோவில் சொத்தை விற்றதற்கு தீட்சிதர்கள் மீது கிரிமினல் வழக்கு, கோவிலில் நடந்த கொலைக்கு கிரிமினல் வழக்கு என நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உத்திரவு பெற்றோம். காவல்துறை மூலம் தீட்சிதர்கள் அதை முடக்கி விட்டனர்.

தில்லை கோயிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசு உத்தரவு

[அரசு ஆணையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

“2009 –ல் சிதம்பரம் நடராசர் கோவிலை அறநிலையத்துறை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என நீதியரசர் பானுமதி தீர்ப்பளித்தார். 2014 ஜனவரி மாதம் தற்போதைய தீர்ப்பு வரும் வரை தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக, தீட்சிதர்கள் வட இந்தியாவிலிருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்  தலைவர் அசோக் சிங்காலை காவிக் கொடியுடன் சிதம்பரம் கோவிலுக்குள் அழைத்து வந்து கூட்டம் போட்டார்கள். சுப்பிரமணிசாமியை அழைத்து வந்து சிறப்பு பூசை நடத்தினார்கள். அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அம்மாவிடம் சென்று முறையிட்டார்கள். இந்து ஆலயபாது காப்பு குழு என உருவாக்கி பிராமண சங்கத் தலைவர்களை அழைத்து பொதுக் கூட்டம் நடத்தினார்கள்.

சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் வழக்கை தனது சொந்த வழக்காக கருதி வாதாடினார். ஜெயாவின் தமிழக அரசோ தீட்சிதர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அரசுத் தரப்பை வாதாடாமல் இருந்தார். அதன் விளைவாக, இன்று கொத்துச் சாவியை மீண்டும் கொள்ளையர்கள் கையில் கொடுத்த நிலைதான். சட்டம், நீதிமன்றம், அறநிலையத்துறை, அரசு, அரசியல்வாதிகள் ஏன் தில்லை நடராசன் என அனைத்தும் அவாளாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும்.

இனி உண்டியல் இல்லை, அர்ச்சனை சீட்டு இல்லை, பக்தர்கள் சிற்றம்பலம் ஏறி நடராசனை தரிசிக்க, ஆம்னி பஸ், தனியார் பள்ளிகள் போல் கட்டணக் கொள்ளையை தீட்சிதர்கள் ஏற்றிக் கொண்டே வருவார்கள். சுருட்டு சாமியார், பீர்சாமியார், சவுக்கு சாமியார், தீவட்டி சாமியார் என பக்தர்களை ஆயிரங்களில் ஏமாற்றும் கிரிமினல்கள் போல் பலவித பரிகார யாகங்களை நடத்த பல லட்சங்களை வசூலிக்கும் நிறுவனமாக தில்லை நடராசனை, பாரம்பரியமிக்க கோவிலை தீட்சிதர்கள் பயன்படுத்தப் போகிறார்கள்.

கனிமவளம், ஆற்று மணல் போல சிதம்பரம் நடராசர் கோவிலும் ஒரு பொதுச் சொத்து.  இயற்கை வள கொள்ளைக்கு எதிராக போராடுவதுபோல் சிதம்பரம் கோவில் சொத்தின் கொள்ளைக்கு எதிராகவும் போராட வேண்டும்.

பக்தர்களே நீங்கள் இறைவனின் பக்தர்களா? தீட்சிதனின் அடிமைகளா? கோவில் ஆகம விதி வெங்காயம் என்பதெல்லாம் பொய், உண்டியல் பணம் மட்டும் உண்மை என்று பச்சையாக தெரியவில்லையா?

தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி கோவிலை எடுத்துக் கொள்ள முடியும். கோவில் சொத்தை, சாமி நகையை கொள்ளையடித்த தீட்சிதர்கள் மீதான வழக்கை விசாரிக்க முடியும். ஆனால் அரசு செய்யமறுக்கிறது.

நாம் விடக்கூடாது ஏனென்றால் சிதம்பரம் நடராசர் கோவில் மக்கள் சொத்து, நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடவேண்டும்.

பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள்!

எடுத்த உண்டியல் தானாக வரும்!.

CDM-Hundial-poster

மனித உரிமை பாது காப்பு மையம்-கடலூர் மாவட்டம்

அடக்குமுறைக்கு அஞ்சாது புஜதொமு – திருப்பெரும்புதூர் கூட்டம்

1

ன்பார்ந்த தொழிலாளர்களே!

லாக்- அப் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கட்டை பஞ்சாயத்துகள், பொய்வழக்கு குறித்த நீதிமன்ற கண்டனங்கள் என்றெல்லாம் போலீசின் யோக்கியதை தினந்தோறும் நாறிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சமுதாயமும்  வெறுத்து ஒதுக்குகின்ற போலீசு கும்பலை ஆளும் வர்க்கம் தான் மெச்சிக் கொள்கிறது. ஏனென்றால், போலீசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடியாள் படை!

உழைக்கும் மக்களது போராட்டங்களை ஒடுக்குவது துவங்கி பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைப்பது வரையிலும் போலீசு செய்து வருகின்ற அட்டூழியங்கள் ஏராளம்… ஏராளம், தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கின்ற இந்தத் தருணத்தில் முதலாளிகளைப் பாதுகாத்தும், தொழிலாளர்களை அடக்கியும் தன்னுடைய ராஜவிசுவாசத்தைக் காட்டி வருகிறது, போலீசு!

வேலை நேரத்தை அதிகரிப்பது, வேலை நிரந்தரத்தை மறுப்பது, உழைப்புக்கேற்ற கூலியை தராமல் அற்ப சம்பளம் கொடுத்து ஒட்ட ஒட்ட சுரண்டுவது, பாதுகாப்பற்ற இயந்திரங்களில் வேலை செய்ய வைத்து தொழிலாளர்களை சாகடிப்பது, சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால் வேலையை விட்டே துரத்துவது என்றெல்லாம் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தத்தை குடித்து வருகின்றனர், முதலாளிகள். வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்கள் பட்டினியால் அல்லல்படுகின்றனர், சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக தொழிலாளர்கள் எப்போது போராடினாலும் அரசு போலீசை வைத்து அடக்குகிறது.

பத்தாண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்ட நோக்கியா கம்பெனி, திடீரென பல்லாயிரம் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து விட்டு ஓடிப்போனது. நோக்கியாவுக்கு உதிரிப்பாகங்களை சப்ளை செய்த பி.ஒய்.டி கம்பெனி இரவோடு இரவாக 700 பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

நிசான் கம்பெனியோ புரபேசன் முடிகின்ற தருவாயில் மாதத்துக்கு 50 பேரின் வேலையைப் பறிக்கிறது. பல வருட உழைப்பு திருடப்பட்டு, ரோட்டுக்கு துரத்தப்படும் போது, “டேக்-இட் ஈசி” என்று கும்மாளம் போட முடியுமா? இதென்ன அநியாயம் என்று கேட்டால் வேலைக்கும், உயிருக்கும் உத்திரவாதமில்லை. ரவுடிகளை வைத்தும் தொழிலாளர்களை மிரட்டுகிறான், முதலாளி. ஒரு பக்கம் போலீசு; மற்றொரு பக்கம் ரவுடி! எத்தனை நாட்களுக்கு அடிவாங்கிக் கொண்டே இருப்பது.

முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கு தொழிற்சங்கம் கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படித்தான் திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிலாளர்கள் தொழிற்சங்க இயக்கங்களை நாடிச் சென்று ஐக்கியப்பட்டார்கள். இவர்களுக்கு உணர்வூட்டி, அமைப்பாக்க முயன்றது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. சட்டங்களை மதிக்காத முதலாளிகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியது, முதலாளிகள் மீது பாய வேண்டிய அரசு எந்திரம், எமது சங்கத்தின் முன்னணியாளர்கள் மீது பாய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொழிலாளர் துறை உதவி ஆணையர் என்கிற பெயரில் முதலாளிகளுக்கு புரோக்கராக செயல்படுகின்ற தர்மசீலன் என்பவரது பொய்ப்புகாரை அடிப்படையாக வைத்து, தோழர் சிவா கைது செய்யப்பட்டார்.

தர்மசீலன் கொடுத்த பொய்ப்புகாரில் கைது செய்யப்பட்ட தோழர் சிவா மீது காஞ்சிபுரம் மாவட்ட போலீசு குண்டர் சட்டத்தை ஏவிவிட்டுள்ளது. தொழிலாளர்களை அச்சுறுத்திய முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களைத் திரட்டி போராடியதுதான் தோழர் சிவா செய்த குற்றச் செயல். ஜி.எஸ்.எச் என்கிற தென்கொரிய நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்த காஞ்சிபுரம் கலெக்டருக்கு எதிராக போராட்டத்துக்கு தலைமை தாங்கியது மற்றொரு குற்றம் என்கிறது போலீசு. தோழர் சிவா தன்னந்தனி ஆள் அல்ல. ஆயிரமாயிரம் தொழிலாளர்களை அணிதிரட்டியுள்ள ஒரு புரட்சிகர சங்கத்தின் பிரதிநிதி.

முதலாளிகளுக்கு எதிராகப் போராடினால் சட்டவிரோதம் என்கிறது,  போலீசு. சட்டத்தை மதிக்கின்ற போலீசின் லட்சணத்தை தெரிந்து கொள்ளுங்கள். 21.9.2014 ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு தோழர் சிவாவை கைது செய்த போலீசு, மதியம் வரை கோர்ட்டில் ஒப்படைக்காமல் சட்டவிரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடக் கூடாது என்று 25.9.2014 அன்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனை மதிக்காமல் 26.9.2014 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தினை ஏவிவிட்டது, போலீசு. உயர்நீதிமன்ற தடை இருந்த போதிலும், அதனை மதிக்காத யோக்கிய சிகாமணிகள் தான் சட்டத்தின் ஆட்சியைப் பற்றி போதிக்கின்றனர்.

திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலமானது முதலாளிகளின் சொர்க்கபுரியாகி விட்டது. தொழிலாளர்களை எவ்வளவு அடித்தாலும், வேலை பயத்தின் காரணமாக தாங்கிக் கொள்ளுகின்றனர். முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, தொழிலாளர்களை அணிதிரட்டும் எந்த நடவடிக்கையையும் முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தொழிலாளி வர்க்கத்தின் மீது தங்கு தடையற்ற அடக்குமுறையையும், சுரண்டலையும் முதலாளிகள் நடத்துவதற்கு பு.ஜ.தொ.மு தடையாக நிற்கிறது.

ndlf-meeting

பு.ஜ.தொ.மு தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை லட்சியமாகக் கொண்டுள்ள புரட்சிகர சங்கமாகும். முதலாளித்துவத்தின் ஜென்ம எதிரியான கம்யூனிசத்தை நெஞ்சிலும், செயலிலும் சுமந்து கொண்டிருக்கின்ற ஆயிரமாயிரம் செஞ்சட்டை வீரர்களை தளபதிகளாகக் கொண்டிருக்கின்ற சங்கமாகும். அதனால் தான் எமது சங்கத்தை ஒடுக்கிட முதலாளிகள் வெறி கொண்டு அலைகின்றனர். அவர்களது அடியாள் படையான போலீசும் வெறிகொண்டு பாய்கிறது. எம்மீதான அடக்கு முறையானது, தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறையாகும். முதலாளிகள் போலீசை நம்பிக் கொண்டிக்கின்றனர், எமது இயக்கமோ தீரமிக்க தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் சார்ந்திருக்கிறது. முதலாளிகள் வைத்திருப்பது, கூலிப்படை. எமது படை மக்கள் படை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!

  • தொழிலாளியின் ரத்தம் குடிக்கும் முதலாளிகள்!
  • அடியாள் வேலை செய்யும் போலீசு!
  • நாசகாரக் கூட்டணியை முறியடிப்போம்!

[துண்டறிக்கையை பெரிதாகப் படிக்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • தொழிலாளி வர்க்கமாக ஒன்றிணைவோம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

பொதுக் கூட்டம்

நாள் : 17.10.2014
நேரம் : மாலை 5 மணி

இடம் : திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில்

தலைமை
தோழர் சி. வெற்றிவேல் செழியன்
மாநில அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை
தோழர் ராஜூ, வழக்குரைஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

தோழர் ம.சி.சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு

ம.க.இ.க மைய கலைக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் –திருவள்ளுர் மாவட்டம்

தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

110\63,மாநகராட்சி வணிக வளாகம், 2-ஆம் தளம்.
என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை-24
தொ.பே.-9444834519, 8807532859, 9444213318

அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்! – புமாஇமு அழைப்பு

0

உயர்நீதி மன்றத்தால் மாநகராட்சிப் பள்ளிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவை சந்திப்போம்! அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்!

“மாநகராட்சிப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடு !” என்ற இயக்கத்தை இவ்வாண்டு தொடக்கம் முதல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் வீச்சாக கொண்டு சென்றோம் என்பது அனைவரும் அறிந்ததே.

மணலி அருகே உள்ள சடையான் குப்பம் என்ற ஊரில் உள்ள மாநகராட்சிப்பள்ளி ஒன்றின் கான்கிரீட் தளம் பெயர்ந்து விழுந்ததும் அதன் காரணமாக இரு மாணவர்கள் படுகாயமுற்றதையும் கண்டித்து மாநகராட்சிப்பள்ளிகளின் அவலநிலையை அம்பலப்படுத்தும் விதமாக ரிப்பன் கட்டிடத்தை முற்றுகையிட்டோம்.

முதல்வன் படபாணியில் மேயர் சைதை துரைசாமி “மாநகராட்சிப் பள்ளிகளில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. இருப்பதாக நீங்கள் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார். சவாலை ஏற்றுக்கொண்டோம். கல்வி தனியார்மயத்தில் அரசுப்பள்ளிகளுக்கு இடம் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம் தான் என்றாலும் அந்த ரகசியத்தை அனைவரின் முகத்துக்கு நேராக கொண்டு வர வேண்டியவேலை எங்களின் கைகளில் வந்தது.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் புமாஇமுவினரும் மாநகராட்சி கல்வி அதிகாரிகளும் இணைந்த ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. குழு என்று அமைத்துவிட்டால் மட்டும் போதுமா? வேலைகள் எல்லாம் தானாக நிறைவேற இது மக்கள் நல அரசா என்ன? எருமை மாட்டுத்தோலை போர்த்திக்கொண்டு இருக்கும் இந்த அதிகார வர்க்கம் மக்களுக்காக வேலை செய்து விடுமா என்ன?

காலை 10 மணிக்கு ஒன்றிரண்டு பள்ளிகளுக்கு செல்வது, கோப்புகளில் கையெழுத்து இடுவது, மாதம் மும்மாரி மழை பொழிந்ததா என்று அமைச்சரிடம் மன்னன் கேட்பது போல “எப்படிம்மா இருக்கு ஸ்கூல்?” என்று கேட்டுவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் மாநகராட்சிக்கு திரும்புவது என இப்படி ஒரு வேலைப்பாணியை கொண்டுள்ளவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஆய்வு நடத்துவது? வேறு வழியே இல்லை. கிடைத்துள்ள சிறு வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தீர வேண்டும் . அதிகாரிகள் இழுத்தடித்தார்கள், வரமுடியாது என்றார்கள், லீவ் என்றார்கள். ஏதாவது சாக்கு சொல்லி வர மறுத்தவர்களை இழுத்துக்கொண்டும் சில இடங்களில் தவிர்த்துக்கொண்டும் ஓடினோம். 3 நாட்களில் 67 பள்ளிகளுக்குச் சென்றோம்.

தனியார்மயத்தில் அரசுப்பள்ளிகள் எவ்வாறு பலியிடப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்பதை நேரடியாகக் கண்டோம். மழை பெய்தால் கணுக்கால் வரை நீர் தேங்கும் ஒரு பள்ளி, தினமும் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கும் பள்ளிகள், கழிவறையே இல்லாத பள்ளிகள், குடிக்க தண்ணீர் இல்லாத பள்ளிகள், சாக்கடை ஓடும் பள்ளிகள், வாத்தியார் இல்லாத பள்ளிகள்,விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள், கொடுங்கையூரில் குப்பையால் புகையால் செத்துக்கொண்டு இருக்கும் பள்ளி என உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்க இருக்கும் பள்ளிகள் தனியார்மய புதைகிணற்றில் திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டோம். அரசு ஊழியர்களிடம் “செஸ்” வரியென்று பிடித்தம் செய்யப்பட்ட 175 கோடி ரூபாயை செலவு செய்ய மறுத்து தனியார்பள்ளிகளை கொழுக்க வைப்பதை நேரடியாக உணர்ந்தோம். தானாகவே அரசுப்பள்ளிகள் அழியவேண்டும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட வேண்டும் என்கிறது, வாங்குகின்ற ஒவ்வொரு பொருளிலும் கல்விக்கான நிதியை பெறும் அரசு.

ஆய்வறிக்கையை தயாரித்துக்கொடுத்தோம் மேயரிடம். அவரோ உடனே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆரம்பப்பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்க தீர்மானம் கொண்டு வந்தார் மாநகராட்சியில். மக்கள் மன்றத்தில் ஆர்ப்பாட்டங்களாக, போராட்டங்களாக இந்த அரசு நமக்கானதல்ல என்பதை காட்டினோம். வீதியில் இறங்காமல் பள்ளிகளைக் காக்க முடியாது என்பதை வலியுறுத்தினோம்.

நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையின் படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். வழக்கு வந்த போதெல்லாம் அரசு வழக்குரைஞர் எழுந்து முதலில் சொல்லும் வார்த்தை “ 4 வாரம் டைம் கொடுங்கள் ” என்பதுதான். எதற்கு நான்கு வாரம், இருக்கிற பணத்தை கொடுக்க எத்தனை நான்கு வாரங்களைக் கேட்பாய் என்று எந்த நீதிபதியும் கேட்கவில்லை. இழுத்துக்கொண்டு வந்தோம் வழக்கை. முதலை வாயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றியது போல இந்த கேடுகெட்ட அரசின் வாயில் இருந்து தீர்ப்பைப் பெற்றோம்.

இரு தரப்பினரும் இணைந்து மாநகராட்சிப்பள்ளிகளினை ஆய்வு மேற்கொள்வது என்றும் அக்குழுவில் பச்சையப்பன் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா ஜெயச்சந்திரனும், டான் பாஸ்கோவின் முன்னாள் தலைமை ஆசிரியரும், கல்வி அதிகாரிகளும் இருப்பார்கள் என்ற தீர்ப்பு கிடைதது. போர்க்கால அடிப்படையில் 4 கோடி ரூபாயை மாநகராட்சிப்பள்ளிகளுக்கு ஒதுக்கவும் உத்தரவு கிடைத்தது. எமது அமைப்பின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த உத்தரவையும் கூட உடனே நடைமுறைப்படுத்தவில்லை. பலமுறை புகார் அளித்தும் போராடிய பிறகே கடந்த சில நாட்களாக அக்குழுவை ஆய்வு மேற்கொள்ளச் செய்துள்ளோம். அக்குழுவும் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றது.

அன்பார்ந்த மாணவர்களே! பெற்றோர்களே! ஆசிரியர்களே!

அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது நமது உரிமை. அதைப்பெற அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது நமது கடமை! போராடிப்பெற்ற ஆய்வுக்குழு உங்கள் பள்ளிக்கும் வருகின்றது. ஆய்வுக்குழுவை சந்தியுங்கள் ! அரசுப்பள்ளிகளை காக்கும் போராட்டத்தில் இணையுங்கள்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை
9445112675

சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !

9

க்கிரகாரத்து மாமாப்பயல், அண்டப் புளுகன், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரன் – என்றெல்லாம் இழிவாகச் சித்தரிக்கப்படும் சுப்பிரமணிய சாமி, “எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களது படகுகளைச் சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை அரசுக்கு நான்தான் ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் இப்போது இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது” என்று தனது தமிழர்விரோத திமிர்த்தனத்தை இப்போது மீண்டும் கக்கியிருக்கிறார்.

சு.சாமி - ராஜபக்சே
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி பாசிச ராஜபக்சேவுடன் உறவாடும் தமிழ் விரோத – தமிழர் விரோத பார்ப்பன அரசியல் அதிகாரத் தரகன் சு.சாமி.

மைய அரசுக்குத் தெரிந்துதான் இலங்கைக்குச் சென்றேன்; தமிழக முதலாளிகளின் படகுகளைப் பிடித்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளான மீனவர்களை விடுவிக்குமாறு நான்தான் ராஜபக்சேவிடம் சொன்னேன் என்று அயலுறவு அமைச்சரைப் போலப் பேசுகிறார் சு.சாமி. தமிழர்களை ரவுடிகள் என்று சாடும் சு.சாமி, ராஜபக்சேவுக்கு ஆதரவாக இனப் படுகொலையை ஆதரித்து திமிராகப் பேட்டியளிக்கிறார். இருப்பினும், தமிழகத்தைத் தவிர வேறு எந்த பா.ஜ.க. தலைவர்களும் இவருக்கு எதிராகக் கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை. இவர் பா.ஜ.க.வின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் என்று கூறப்பட்டாலும், பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சு.சாமியின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவிக் கொள்கிறார் மத்திய அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன். அதேசமயம், சு.சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

யார் இந்த சு.சாமி? ஒரு அரசியல்வாதிக்குரிய சமூக ஆதரவோ, மக்களிடம் மதிப்போ இல்லாத ஒரு நபரால் இது எப்படி சாத்தியமாகிறது? அடிக்கடி விமானத்தில் பறக்கும் சு.சாமிக்கு எப்படி இவ்வளவு சொத்துக்களும் வருமானமும் கிடைத்தது?அவரது தொழில்தான் என்ன?

சில பத்திரிகையாளர்கள் தேர்தல் கூட்டணியை உருவாக்க ஒரு ஏற்பாட்டைச் செய்து, அதைத் தமது ஏடுகளில் முதன்மைச் செய்தியாக்கி எப்படி மாமா வேலை செய்கிறார்களோ, அதேபோல அரசியலில் இத்தகைய வேலையைச் செய்பவர்தான் சு.சாமி. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் வைத்தி என்ற கதாபாத்திரத்தின் மறு அவதாரம்தான் சு.சாமி. இத்தகைய நிழல் மனிதர்கள்தான் “சோர்ஸ்” என்ற பெயரில் அங்கேயும் இங்கேயும் தகவல்களைப் பரிமாறும் நபர்களாக இருக்கின்றனர். இத்தகைய அரசியல் – அதிகாரத் தரகர்களைப் பிடித்து தேர்தல் கூட்டணிக்கு நோட்டம் பார்ப்பதென்பது ஓட்டுக்கட்சிகளின் உத்தியாக உள்ளது. அந்தத் தரப்பின் கோரிக்கை என்ன, எதிர்பார்ப்பு என்ன, பலவீனம் என்ன என்பதையும், அதற்கு இந்தத் தரப்பின் கருத்து என்ன என்பதையும் பரிமாற்றம் செய்யும் இரகசிய இணைப்புச் சங்கிலியாக இவர்கள் இருக்கின்றனர்.

சு.சாமி - ஜெயேந்திரன்
பார்ப்பன பாசிஸ்டுகளின் கூட்டணி : கொலைகார பார்ப்பன சங்கராச்சாரி, இந்துவெறி அசோக் சிங்காலுடன் கூடிக் குலாவும் சு.சாமி.

விபச்சார வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நடிகை புவனேஸ்வரி, சாதிக் கட்சியான மருத்துவர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியில் சேர்ந்து மாநில மகளிர் அணிச் செயலாளராகியுள்ளார். அவரை விபச்சாரி என்பதா, அல்லது அரசியல் பிரமுகர் என்பதா? இப்படித்தான் சு.சாமி போன்ற பேர்வழிகளும் உள்ளனர். சினிமா மற்றும் வீட்டுமனைத் தொழிலில் இவர்கள் மீடியேட்டர்கள் என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றனர். அரசியல், சினிமா, வீட்டுமனைத் தொழில், பெருந்தொழில் நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பண்பாட்டு அமைப்புகள் – என அனைத்திலும் இத்தகைய நபர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். சசிகலா நடராசன் எத்தகைய அரசியல் தரகர் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், தமிழினப் பிழைப்புவாதிகள் அவரைப் பயன்படுத்திக் கொள்வதை ஒரு உத்தியாகக் கொண்டுள்ளனர். அதேபோலத்தான் பல வண்ணப் பிழைப்புவாதிகளும் சு.சாமியைப் பயன்படுத்திக் கொள்வதும், மறுபுறம் இதைக் கொண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சு.சாமி ஆட்டம் போடுவதும் நடக்கிறது.

தமிழகத்தின் சோழவந்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பார்ப்பன குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சு.சாமி, பொருளாதாரப் பட்டம் பெற்று முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்து கம்யூனிசத்தை வெறியோடு எதிர்த்தார். அதனாலேயே அன்று சோவியத் ஆதரவு இந்திரா காந்தியின் ஆட்சியை எதிர்த்து இந்துத்துவ ஜனசங்கத்தை ஆதரித்தார். இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் தலைமறைவாகி அமெரிக்கா, பிரிட்டன் முதலான நாடுகளுக்குச் சென்று அங்குள்ள அதிகாரத் தரகர்கள் மூலம் இந்திரா காந்தியின் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொசாத் கும்பலுடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகி, அதன் தலைவராகவும் செயல்பட்டார்.

சு.சாமி - சந்திராசாமி
இரகசிய உலக பேர்வழியும் போலி சாமியாருமான சந்திராசாமியின் (இடது) தொழில் கூட்டாளியான சு.சாமி, “நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது தவிர, இரகசிய உலகப் பேர்வழிகளான போலிச் சாமியார் சந்திராசாமி, ஆயுதபேரத் தரகன் ஆதனன் கஷோகி முதலானோரின் நெருங்கிய கூட்டாளியான சு.சாமி, ராஜீவின் போபர்ஸ் பீரங்கிக் கொள்ளையை மூடிமறைக்க இரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்ததோடு, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கின் மகனுக்கு செயிண்ட் கிட்டீஸ் தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கு உள்ளதாக போர்ஜரி செய்தார். சகுனித்தனங்கள், தரகு வேலைகள் மூலம் பிரபலமாகி அப்போதைய சந்திரசேகர் ஆட்சியில் நீதி மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசுக்கு வெளியே இருந்து கொண்டு நம்பகமான தரகனாக இயங்கிய சு.சாமி, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் டங்கல் (காட்) ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் கையெழுத்திட்டதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு அடகு வைக்கும் தலைமைத் தளபதியாகச் செயல்பட்டார்.

1992-ம் ஆண்டிலேயே ஜெயா ஆட்சிக்கு எதிராக மூன்றாவது அணியைக் கட்டிவருவதாகக் கூறிக் கொண்ட சு.சாமி, அதற்காக ஜெயாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் கணவரும் அதிகாரத் தரகனுமாகிய நடராசனுடன் கைகோர்த்தார். ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்துவிட்டு, ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்புக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் வழக்கைத் தொடுத்தார். அதன் பிறகு சு.சாமியும் ஜெயலலிதாவும் சமரசமாகி, அ.தி.மு.க. ஆதரவோடு இரண்டாவது முறையாக வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சு.சாமியை நிதியமைச்சராக்க வேண்டுமென்றும், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் வாஜ்பாய் அரசுக்கு ஜெயலலிதா நிர்ப்பந்தங்கள் கொடுத்து வந்தார். பின்னர் எதிர்த்தரப்பின் பிழைப்புவாதத் தலைவர்களை ஒருங்கிணைத்து டீ பார்ட்டி வைத்து வாஜ்பாய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்று அவரது ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததில் முக்கிய தரகனாகச் செயல்பட்டவர்தான் சு.சாமி.

தமிழக மற்றும் வட இந்தியப் பார்ப்பனக் கும்பலால் தூக்கி நிறுத்தப்படும் அரசியலதிகாரத் தரகன் என்பதால், நீதிபதிகள்கூடப் பதவி உயர்வுக்காக சு.சாமியிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் வக்கீலாக இல்லாத சு.சாமி நீதிமன்றத்தில் சர்வசாதாரணமாகப் புழங்க முடிகிறது. அதிகாரத் தாழ்வாரங்களில் உள்ள இரகசியங்களைத் தெரிந்து கொண்டு பிளாக்மெயில் செய்வதும், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் உள்ள பார்ப்பன அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளை வைத்து காரியம் சாதிப்பதென்பதும் சு.சாமியின் தொழிலாக உள்ளது. இதனால்தான் தில்லைக் கோயிலைக் கைப்பற்ற தீட்சிதர்கள் தொடுத்த வழக்கு உள்ளிட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கை ஒரு குறிப்பிட்ட நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும், குறிப்பிட்ட நீதிபதிகள் குழுதான் விசாரிக்க வேண்டும் என்று சு.சாமியால் செல்வாக்கு செலுத்த முடிகிறது.

அதிகாரத் தரகன் சு.சாமி1995-ம் ஆண்டில் ஹவாலா தொடர்பான ஒரு வழக்கை மையப் புலனாய்வுத்துறை விசாரித்து வந்த நிலையில், அதிகாரத் தரகனும் ஹவாலா தொழில் செய்துவந்தவருமான சுரேந்திர ஜெயின் என்ற ஹவாலா பெருச்சாளியும் சிக்கினார். அவரது டைரியில் காங்கிரசு – பா.ஜ.க. அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டு அப்போது மையப் புலனாய்வுத் துறையின் இயக்குனராக இருந்த விஜய் கரணும் இலஞ்சம் வாங்கியவர் பட்டியலில் இருந்தார். கூடவே சு.சாமியின் பெயரும் அதிலே இருந்தது. இலஞ்ச ஊழலை எதிர்க்கும் தூய்மையான அரசியல்-பொருளாதார மேதையாகச் சித்தரிக்கப்படும் சு.சாமியின் யோக்கியதைக்கு இந்தச் சான்று ஒன்றே போதுமானது.

பார்ப்பானும் ஆதிக்க சாதியினரும் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டால் தவறல்ல; ஆனால், சூத்திரனும் தாழ்த்தப்பட்டனும் ஈடுபட்டால் அது மிகப் பெரிய குற்றம் என்பதுதான் சு.சாமியின் நியாயவாதம். “2ஜி ஊழல் விவகாரத்தில் எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் எத்தகைய வழிமுறைகளைக் கடைபிடித்தார்களோ அதையேதான் நானும் பின்பற்றினேன்; நான் குற்றமற்றவன் என்று ஆ.ராசா திரும்பத் திரும்பக் கூறுகிறாரே?” என்ற கேள்விக்கு, “ராசாவுக்கு முன்பிருந்த பா.ஜ.க. அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை” என்றார் சு.சாமி. (குமுதம் ரிப்போர்ட்டர், 5.12.2010) ஏன் தேவையில்லை என்று அவர் விளக்கவில்லை. 2ஜி ஊழல் விவகாரத்தில் மன்மோகன், சிதம்பரம் ஆகியோர் கூட அவருக்கு முக்கியமில்லையாம்; ராசாதான் அவருக்குக் குறியாம். அது ஏன்?

தனியார்மயம் – தாராளமயம் என்பதே ஊழலுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கானதாகவும் உள்ள நிலையில், அதில் 2ஜி விவகாரத்தில் நடந்த ஊழல் மோசடியை மட்டும் பூதாகரமானதாக்கி, தி.மு.க.வை அரசியல் அரங்கிலிருந்தே ஒழிக்க சு.சாமி மூலமாக பார்ப்பன கும்பல் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியதையே சு.சாமி அளித்துள்ள பேட்டி நிரூபித்துக் காட்டுகிறது. இதற்கு முன்னர், தி.மு.க.வுக்கு எதிரான ஆயுதமாக ராமன் பாலம் விவகாரத்தை வைத்து ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளில் இறங்கினார் சு.சாமி. 2007-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு எதிராக சு.சாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, சு.சாமியின் வாதத்தை அங்கீகரித்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார், தலைமை நீதிபதி ஷா. உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவை எதிர்த்து, இது இந்து நம்பிக்கைக்கு எதிரானது என்று அத்வானியும் இந்துத்துவ பரிவாரங்களும் அலறினர். இதனாலேயே பார்ப்பன எதிர்ப்பு மரபை தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டி, எப்படியாவது பார்ப்பன பாசிசத்தை நிலைநாட்டும் தங்களது பொது நோக்கத்துக்காக சங்கராச்சாரி கைதையொட்டி ஏற்பட்ட பகையை மறந்து துக்ளக் “சோ’’வும், சு.சாமியும், அத்வானியும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்தனர்.

சு.சாமி - டீ பார்ட்டி
வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதாவின் முக்கிய தரகனாகச் செயல்பட்ட சு.சாமி, காங்கிரசின் சோனியா உள்ளிட்டு எதிர்த்தரப்பு பிழைப்புவாதத் தலைவர்களை ஒருங்கிணைத்து நடத்திய டீ பார்ட்டி.

ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் திமிராகப் பேசிவந்த சு.சாமி, உயர்நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை வழக்குரைஞர்கள் நடத்திவந்த நிலையில், அதைக் கேலி செய்யும் வகையில் தில்லை தீட்சிதர்களுக்காக வாதாட வந்தார். போராடும் வழக்குரைஞர்களைத் தீவிரவாதிகள், ரவுடிகள் என்றெல்லாம் கேவலமாகப் பேசிவந்த சு.சாமி மீது வழக்குரைஞர்கள் அழுகிய முட்டையை வீசி உரிய முறையில் மரியாதை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை போலீசு கட்டவிழ்த்துவிட்டதைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். சு.சாமியோ வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, வழக்குரைஞர்களைப் பொறுக்கிகள், காலிகள் என்றெல்லாம் வசைபாடினார்.

அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதை கிறித்துவ சதி என்றும், கொலைகார சங்கராச்சாரியின் கைதுக்கு சோனியாவின் சதிதான் காரணம் என்றும் சு.சாமி அரிய கண்டுபிடிப்புகளை அவிழ்த்துவிட்டார். முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் முஸ்லிம்களே இந்த நாட்டில் பெரும்பான்மையாகி விடுவார்கள்; இது பேரபாயம் என்று சாமியாடினார். அவரது உளறல்களும் நடவடிக்கைகளும் எப்படியிருப்பினும், பார்ப்பன பாசிச சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அதிகாரத் தரகர்தான் சு.சாமி. அன்று உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து ஆட்சியைப் பிடித்ததும், அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று அலறிய சு.சாமி, பிராமண சுயாபிமான் அந்தோலன் சமிதி என்ற அமைப்பை உருவாக்கி, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளில் ஈடுபட்டார். இன்று பா.ஜ.க.வில் சங்கமித்து சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண்டும் என்று பார்ப்பன வெறியைக் கக்குகிறார்.

தனிநபர், கட்சியின் பலவீனத்தையும் உள்விவகாரங்களையும் தெரிந்துகொண்டு பிளாக்மெயில் செய்வதென்பது சு.சாமியின் தொழில். அது தெரிந்திருந்தும் தமது அரசியல் ஆதாயத்துக்காக பலதரப்பட்ட பிழைப்புவாதிகளும் இந்த அரசியல் விபச்சாரியிடம் உறவு வைத்துக் கொள்கிறார்கள். சு.சாமிக்குத் தகவல்களையும் ஆதாரங்களையும் கொடுத்து காரியம் சாதிக்கப் பார்க்கிறார்கள்.

“தனியொரு மனிதனாக நின்று, உலகம் சுற்றிவந்து இப்படி அரசியல் பண்ணுகிறீர்களே, உங்களுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது?” என்று சு.சாமியிடம் கேட்டபோது, “நான் பிராமணன்; ஒரு பிராமணன் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கையேந்தி யாசகம் பெறலாம்; தவறில்லை” என்று தனது விபச்சாரத்தனத்தைப் பச்சையாகவே கூறினார் சு.சாமி. இருப்பினும், சு.சாமியின் அரசியலதிகாரத் தரகு வேலைகளைக் காட்டி பார்ப்பன சமூகம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. அன்று சு.சாமியைக் கைது செய்ய ஜெயலலிதா முயற்சித்த வேளையில், அவர் மாறுவேடம் பூண்டு கண்ணாமூச்சி விளையாடிபோது, இந்தத் துணிச்சல் யாருக்கு வரும் என்று பார்ப்பன பத்திரிகைகள் வெகுவாக சிலாகித்து எழுதின.

சு.சாமி - ராஜீவ் காந்தி
போபர்ஸ் பீரங்கிக் கொள்ளையை மூடிமறைக்க இரகசிய உலகப் பேர்வழிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்து போர்ஜரி வேலைகளில் ஈடுபட்ட சு.சாமியுடன் பீரங்கித் திருடன் ராஜீவ்.

சு.சாமியின் கொட்டங்களுக்கு அவர் பார்ப்பனராக இருப்பதும், சட்டம், நீதி, போலீசு, இராணுவம், அதிகாரிகள், ஊடகங்கள் – என அனைத்திலும் பார்ப்பன கும்பல் ஆதிக்கத்தில் இருப்பதும் முக்கிய காரணமாகும். தத்தமது தேவைக்கேற்ப இவரைப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயமடைவதால், பார்ப்பன கும்பல் இவரை தூக்கிப் பிடிக்கிறது. அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இவருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து, இவரைப் பற்றிய செய்திகளை முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் போடுகின்றன. ஒருபுறம் கோமாளி என்றும், ஆதாரமில்லாமல் புளுகுவதாகவும் அவரைக் கிண்டல் செய்தாலும், மறுபுறம் அவரது நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவரிடம் கருத்துக் கேட்புகளை நடத்துகின்றன.

இன்றைய அரசியல் கட்டமைப்பில் சு.சாமி போன்ற கழிசடைப் பேர்வழிகள் கொட்டமடிக்க முடிகிறதென்றால், அது இந்த கட்டமைப்பின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. மேலும், பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் – என அனைத்து அரங்குகளிலும் தொடர்புகளை வைத்துள்ள சு.சாமிக்கு தனது பார்ப்பன பாசிச நோக்கங்களுக்கு ஏற்ப அரசியல் தரகுவேலை செய்வதும், காரியம் சாதிப்பதும் சுலபமாக உள்ளது.

அரசியலும் சமூகமும் சீரழிந்து கிடப்பதால் இத்தகைய அதிகாரத் தரகர்கள் இன்னமும் ஆட்டம் போடுகின்றனர். இதனால்தான் அழுகிய முட்டையை முகத்தில் அடித்தாலும், அம்மண ஆட்டம் நடத்தி ஜெயா கும்பலால் இழிவுபடுத்தப்பட்டாலும் கூச்சநாச்சமின்றி சு.சாமி போன்ற பேர்வழிகள் இன்னமும் கொட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தமிழர்களுக்கு எதிராகப் பேசும் சு.சாமியைத் தமிழகத்தில் நுழைய விடாமல் துரத்தியடிப்பதும், அதனைப் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செய்ல்வதும்தான் இன்றைய அவசியமாக உள்ளது.

– மனோகரன்
___________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
___________________________________

அதிமுக-வை தடை செய் – சென்னையில் பகிரங்க பிரச்சாரம் !

15
  • கொள்ளைக்காரி ஜெயாவை பிணையில் விடாதே!
  • கொள்ளைக்கூட்டக் கிரிமினல் கட்சியான அதிமுகவை தடைசெய்!
  • ஜெ-சசி ஆகிய கிரிமினல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

இப்படி எல்லாம் பொது இடத்தில் பேசினால் என்ன ஆகும்? சிவகங்கை காளையார் கோயிலையே எரிச்சவங்க, எத வேணுமினாலும் செய்வாங்க, மக்கள் பயப்படுவார்கள் என்று பலர் நினைக்கலாம். நாங்கள் கூட சுவரொட்டிகளை ஒட்டும் போதும் பிரச்சாரத்துக்கு செல்லும் போது ஏதாவது பிரச்சினை வரலாம் என்று தான் நினைத்தோம். ஆனால் நிலைமையோ வேறொன்றாக இருக்கிறது.

திருச்சி போஸ்டர்
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் சார்பில் திருச்சியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

அதிமுகவில் இலக்கிய அணி என்று ஒன்றுஇருக்கும், அவர்களிடம் இலக்கியம் என்றால் என்ன ? என்று கேட்டால் அதில் ‘இல’ இருக்குல்ல என்பார்கள். அந்த அளவுக்கு

ஞானம் படைத்தக் கட்சி அதிமுக. ஆனால் ஜெயாவை கைது செய்த பின்னர் பாருங்கள் எதுகை மோனை இல்லாத போஸ்டர் எது? இலக்கியம் இல்லாத போஸ்டர் எது? என்ற அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் கரு நாகம் செய்த சதி, கரு நாடகத்தில் அரங்கேற்றம் எனத்தொடங்கி அம்மாவை விடு காவிரியை வைச்சுக்கோ என்பது போன்ற வாசகங்களைப் பார்க்கும் போது அழுவதா?சிரிப்பதா?இல்லை செருப்பை கழட்டி அடிப்பதா?என்று ஒரு கணம் புரியாமல் எவரும் நிற்க வேண்டும்.

கடந்த 27-ம் தேதியன்று தமிழ்நாடே அம்மாவுக்கு ஆதரவாக பற்றி எரிந்ததாக ஊடகங்கள் சித்தரித்தன. உண்மையில் நடந்தது என்ன? மக்கள் யாரும் ஜெயாவுக்கு ஆதரவாகப் பொங்கவில்லை, மாறாக ஓ.ப முதல் அனைத்து அல்லக்கைகளும் கண்ணீர் விட்டன.

ஒரு போராட்டத்திற்கு அனுமதி என்று கேட்டால் காக்கை கூட வராத இடத்தினை ஒதுக்கும் போலீசு அதிமுகவினர் நினைத்த இடத்தில் எல்லாம் போராட்டம் செய்யத் தடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் 5 பேர்களுக்கு மேல் சென்றால் கைது செய்யமுடியும் என நீதிவிளக்குப் பிடிக்கும் போலீசு, அதிமுகவினர் தாங்கள் விருப்பப்பட்ட இடத்தில் எல்லாம் பேரணி, ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல வணிகர்களை மிரட்டி கடையை அடைத்தும் பேருந்துகளை உடைத்தும் தீவைத்து எரித்த போது கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்த்தது. ஒரு கொள்ளைக்காரிக்கு ஆதரவாக அரசின் துணையுடன் ஒரு கிரிமினல் கும்பல் தமிழத்தையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருக்கின்றது.

விருத்தாச்சலம் சுவரொட்டி
போலீசை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் விருத்தாச்சலத்தில் ஒட்டிய சுவரொட்டி

மாபெரும் எதிர்க்கட்சி என்று பீற்றிக்கொள்ளும் எந்தக் கட்சிக்காரனும் ஜெயாவை அதிமுகவை எதிர்கொள்ளத் துப்பில்லை. பத்து நாட்கள் கழித்து ராமதாசும், விசயகாந்தும், கருணாநிதியும் பாதுகாப்பான அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தார்கள்.

ஓட்டுப் பொறுக்கிகள் அப்படித்தான் இருப்பார்கள். மக்கள் எப்படித்தான் இருக்கிறார்கள்? ஜெவின் அயோக்கியத்தனத்தை சகித்துக்கொண்டார்களா?இல்லை ஊடகங்கள் கூறுவது போல மக்களும் ஜெயாவுக்கு மாரடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா? அவர்களை சந்திக்கப் புறப்பட்டோம்.

ஜெயாவின் பேய் பீதியை ஆங்காங்கு கிளப்பிக்கொண்டு இருந்த வேளையில், மூன்று நாட்கள் சுவரொட்டிகளை ஒட்டினோம், மாநகரம் முழுக்க. கூடவே அம்மாவின் தொண்டர்கள் யாராவது பிரச்சினை செய்தால் பூசை செய்வதற்கு தயாராகவே. அம்மாவுக்காக தனது எல்லா வாய்களிலும் அழுகின்ற ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் வந்து கேள்வி கேட்கவில்லை. அம்மாவின் மீது மக்கள் பாசம் கொண்டு போராடுவதாக பொம்மை முதல்வர் கூறினாரே, அப்படி எந்த மக்களும் அம்மாவை எதிர்த்து ஏன் போஸ்டர் ஒட்டுற என்று கேள்வி கேட்கவில்லை. அவர்கள் கேட்ட முதல் கேள்வி, “ஏப்பா ரெண்டு நாள் கழிச்சு ஒட்டுறீங்க அன்னைக்கே ஒட்டியிருக்கலாம் இல்ல” என்று தான்.

ஆவடியில் அம்மாவுக்காக தொடர்ந்து அம்மாவின்முரட்டு பக்தர்கள் போராடி வருவதாக செய்திகள் கூறின. ஆனால் அங்கு சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்த நமது தோழர்களிடம் ஒரு பெண் கூறினார், “தினமும் வந்து கடையை மூடச்சொல்றாங்க்கப்பா, திருட்டுப்பசங்க, வியாபாரமே இல்லை.”

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் என்று ஒட்டப்பட்டு இருந்த ஜெயாவின் சுவரொட்டிக்கு அருகில் நமது சுவரொட்டிகளை ஒட்டினோம். கோயம்பேட்டில் பேருந்துகளில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு இருந்த போது ஒரு பூ விற்கும் அம்மா சொன்னார் “நல்லா ஒட்டுப்பா, எவளோ கொள்ளையடிக்குறா, அது சரின்னு போராட்டம் பண்ணுறாங்க”.

கொள்ளைக்காரி ஜெயா
எவளோ கொள்ளையடிக்குறா, அது சரின்னு போராட்டம் பண்ணுறாங்க

ஆஜானுபாகுவான இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதையே அருகில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்தனர். சரி பிரச்சினை என்று வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று தோழர்களும் இருக்க, “என் பஸ்ஸூல போஸ்டர் ஒட்டாதே”, என்று கத்திக்கொண்டு வந்தார் ஒரு ஜெ ஆதரவு நடத்துனர்.

தோழர்களின் அருகில் இருந்த அவர்களோ “யோவ் போய்யா, போய் வண்டியை எடு, வண்டி டிராபிக் ஆகப் போகுது, இங்க வந்து என்ன பேசுற” என்று அவருக்கு பதில் கொடுத்துவிட்டு “நீங்க ஒட்டுங்கப்பா” என்றனர்.

இன்னொரு உழைக்கின்ற தாயோ நம்மிடம் “தம்பி எவன் எவனோ பொறுக்கிப்பசங்க எல்லாம் போஸ்டர் ஒட்டுறானுங்க, நீ போய் அதே பஸ்ஸில ஒட்டு” என்றார்.

இப்படி நாங்கள் கவனித்தது சிலர்தான். சரியான விசயத்துக்காக தோழர்கள் நிற்கிறார்கள், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நாம் உதவ வேண்டும் என்று பல உழைக்கும் மக்கள் இருந்தார்கள்.

எத்தனையோ பேர் சுவரொட்டிகளைப் படித்துவிட்டு வாழ்த்தியும் கைகொடுத்துவிட்டும் சென்றார்கள். இன்னும் சிலரோ “நீங்கள் இன்னும் போஸ்டர் போடலையேன்னு பார்த்தேன், நீங்க பயப்பட மாட்டீங்க இல்ல” என்றார்கள்.

என்.எஸ்.கே நகரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை கும்பல் கும்பலாக மக்கள் படித்து விட்டும் “நீங்களும் பயந்துடுவீங்கன்னு நினைச்சேன்” என்று கூறினார்கள்.

3பல்லாவரத்தில் அம்பேத்கர் சிலைக்கு அருகில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் உண்ணாவிரதம் என்ற பெயரில் இருந்தனர். அதற்கு அருகிலேயே தோழர்கள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். உண்ணாவிரதத்திற்கு பிரேக் விட்டுவிட்டு ஜெயா படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்திருந்த அதிமுகவினர் ஜூஸ் குடித்தபடியே சுவரொட்டிகளை வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தனர். நமது தோழர்கள் சென்றபின்னர் போலீசு புடை சூழ சுவரொட்டிகளைக் கிழித்து தங்க்கள் வீரத்தை மெய்ப்பித்துக்கொண்டனர்.

மொத்தமாக சென்ற இடமெல்லாம் அம்மாவுக்கு ஆதரவாக எந்த சூடு சொரணையுள்ளவர்களும் வரவில்லை. தமிழகத்தில் எப்படி மோடிக்கு அலை என்பது இல்லையோ அதுபோல லேடிக்கும் அலையும் இல்லை; ஒரு வெங்காயமும்இல்லை.

இப்படி மக்கள் கொள்ளைக்காரி ஜெவுக்கு ஆதரவாக இல்லை. ஓடி ஒளிய வேண்டிய அதிமுக கொள்ளைக்கும்பல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு திரிகின்றது, அம்மாவை விடு என்கிறது, தினமும் சாலை மறியல், பேருந்துகளை உடைக்கின்றது. இந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராக மக்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அவர்களிடமே சென்று அந்த அதிமுக அயோக்கியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் அதற்காக போராட வாருங்கள் என்றும் அழைக்க இன்று காலை ரயிலில் செல்லக்கூடிய மக்களை சந்தித்தோம் பிரச்சாரத்தின் வாயிலாக…

வழக்கம் போல அதிகாலை நேரம், சிலர் தூங்க முயன்று கொண்டிருக்க, சிலர் பேசவும் பேச முயன்று கொண்டிருக்க , வழக்கம் போல மாணவர்கள் பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறார்கள் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கவனிக்க சிலர் இருக்க நாம் வழக்கம் போல் அமைப்பை அறிமுகப்படுத்தினோம். இது வழக்கம் தானே, என்று வழக்கம் போல தலையைக் குனிந்து கொள்ள சிலர் முயன்ற போது, வழக்கத்திற்கு மாறான ஒன்றை- அவர்கள் இது வரை கேட்டிராத ஒன்றை, இருந்தாலும் அவர்கள் மனதில் இருந்த ஒன்றை – பேசினோம்.

  • கொள்ளைக்காரி ஜெயாவுக்கு பிணை வழங்கக்கூடாது
  • பயங்கரவாத அதிமுக கும்பலை தடை செய்ய வேண்டும்
  • ஜெ-சசி கிரிமினல்கும்பல்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்!

என்று பேச ஆரம்பித்தவுடன் பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். காவிரியை வச்சுக்கோ அம்மாவை விடு, தர்மத்தாயை விடுதலை செய் ஆகிய சுலோகங்களையே கேட்டுப் சலித்துப்போனமக்கள் இதோ இந்த புதிய முழக்கத்தைக் கேட்டவுடன் நாளிதழ்களையும் புத்தகங்களையும் மூடிவைத்தார்கள். கல்லூரி பள்ளி மாணவர்களோ பேசிக்கொண்டு இருந்த தங்களது நண்பர்களை அமைதியாக இருக்கச்சொன்னார்கள்.

“ஊரை அடிச்சு உலையில போட்டா பெயில் கிடைக்குமா ஜெயில் கிடைக்குமா, உங்க மனசில ஜெயலலிதா ஒரு கொள்ளைக்காரி, அவருக்கு பெயில் கிடைக்கக்கூடாதுன்னுதானே இருக்கு அதைத்தானே நாங்க சொல்லுறோம்.” என்ற போது மக்களிடம் ஒரு மலர்ச்சி முகத்தில் ஏற்பட்டது. “ரயிலில் வெள்ளரிக்காய் விற்கிற ஒரு அக்கா மேல கேஸ் போடுறான் போலீசு, சமோசா விக்குற அண்ணன் மேல பொய் கேஸ் போடுறான் போலீசு, பணம் கட்டலைன்னா ஜெயிலுன்னு சொல்லுறான், அப்படீன்னா ஜெயாவுக்கு ஒரு சட்டம், இந்த அண்ணனுக்கு ஒரு சட்டமா” என்றோம்.

சமோசா விற்கின்ற ஒருவர் “தோழரே, அந்த நோட்டீசு ஒண்ணு கொடுங்க” படிக்க ஆரம்பித்தார்.

“நல்லா யோசிச்சுப்பாருங்க, ஜெயில் – லலிதா சொல்றாங்க, எனக்கு 66 வயசாயிடுச்சுன்னு, அதிமுக கட்சிக்காரன் சொல்லுறான் , அம்மாவை – தாயை விடுதலை செய்ன்னு, ஜெயலலிதா தாயா இல்லை, தாய் என்கிய பெயருக்கே அவமானம், ஆம் கோயம்பேட்டில் 70 வயசில கிழிஞ்சு போன புடவையைக் கட்டிக்கிட்டு, செருப்பில்லாமல் வேகாத வெயிலில் குப்பையில் விழுகின்ற காயை எடுத்துக்கிட்டு போய்வித்து மானத்தோடு வாழறாங்களே அவங்களும் கோடிகோடியாய் சொத்து சேர்த்து, ஆயிரக்கணக்கான தங்கப்புடவை, தங்க நகைகள், தங்கத்துல செருப்பு, ஒட்டியாணம்னு எடுத்தா அதுல பல வகைன்னு நம்ம வரிப்பணத்தை சுரண்டி எடுத்த ஜெயா தாயா இல்லைங்க, பேய்…………….”

கவனித்துக்கொண்டு இருந்த ஒரு வயதான உழைக்கின்ற தாயின் முகத்தின் உதட்டில் புன்னகை அரும்பியது.

ரயிலில் பிரச்சாரம்
ரயிலில் பிரச்சாரம்

“எங்க அம்மா மாட்டிக்கிட்டாளே, நான் எப்படி மக்கள் முகத்திலே முழிப்பேன்னு தலையை குனிஞ்சுகிட்டு போக வேண்டியவனுங்க, கடையை மூடச்சொல்லுறானுங்க, மிரட்டுறானுங்க, பேருந்துகளை உடைக்குறாங்க, பயணிகளை அடிச்சு துரத்திவிட்டு, பேருந்துகளுக்கு தீவைக்குறானுங்க, வேடிக்கை பாக்குது போலீசு, நாம பயந்து சாகணுமா? இதென்ன அநியாயமா இருக்கு? மொள்ளமாறிப்பசங்க எல்லாம் திமிரா திரிவானுங்க, உழைக்கின்றமக்கள் நாம் ஏன் ஓடி ஒளிய வேண்டும்………..?”

“தம்பி, எனக்கு நோட்டீஸ் கொடுப்பா!” என்று மக்கள் பிரசுரங்களை வாங்கினார்கள்.

“வீட்டுக்குள்ள கொள்ளைக்காரன் பூந்துட்டா என்ன செய்யுறோம்? கட்டிவச்சு உதைக்குறோமில்லையா, அது மாதிரி எவனாவது அம்மாவுக்கு பெயில் கிடைக்கல, கடையை மூடு, சாலை மறியல்ன்னு வந்தா செருப்பிலேயே அடிக்கணும், சாணியை கரைச்சு மூஞ்சியிலே ஊத்தணும் ”

“தம்பி நான் இறங்க வேண்டிய ஸ்டேசன் வந்துடுச்சு” என்று ஒருவர் நிதியளித்து விட்டுப்போனார்.

“நாம் எதுக்கு பயப்படணும்? தினமும் உழைத்து வாழ்க்கையை போராட்டமாக நடத்தும் நாம் ஏன் பயப்படணும்? பயப்படக் கூடாது. நாங்க தொடர்ச்சியா இந்த முழக்கங்களை முன்வச்சு போராடிட்டு வருகிறோம். ஜெயாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யணும்னு போராடிய எங்க தோழர்களை சிவகங்கையிலும் கோவையிலும் கைது செய்திருக்காங்க, எங்க இருக்கு ஜனநாயகம்? அம்மாவுக்கு அழு இல்லை அழவைப்பேன்னு மிரட்டுறானே, பார்ப்பானுக்கு ஒரு நீதி உழைக்குற மக்களுக்கு ஒரு நீதியா………………….?”

அதற்குள் ஒரு வழக்கறிஞர் ” பொது இடத்துல டிஸ்டர்ப் பண்ணுறே, இது அரசியல் மேடை இல்லை, உன் இஷ்டத்துக்கு பேசாதே” என்று இழுக்க, ரயில்வேயில் குப்பை அள்ளும் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருவர் “தோழரே பிரசுரம் கொடுங்க” என்று அந்த வக்கீலை முறைக்க, தலையை கீழே குனிந்த வழக்கறிஞர் அவர் மனதில் இருக்கும் அம்மா பாசத்தை பேசமுடியாத ஒரு நிலையை நினைத்து வேதனை அடைந்து கொண்டு இருந்தார்.

“இந்த அயோக்கியத்தனத்துக்கு முடிவுகட்ட எந்த ஓட்டுக்கட்சிக் காரனுங்களும் வர மாட்டாங்க, புழுத்து நாறிப் போய் கிடக்கும் இந்த அரசு அமைப்பை நொறுக்க வேணும்னா, உழைக்கின்ற மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்கணும். ஆயிரக்கணக்கான மக்கள் வீதியிலே இறங்கி அதிமுக ரவுடிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும், ஜெ, சசியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேணும், எங்களோடு இணைந்து போராட முன்வர வேண்டும். இதோ இந்த பிரசுரத்தை லட்சக்கணக்கில் போட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், அப்போதுதான் அப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டுவர முடியும். அதுக்காக உங்களால முடிஞ்ச நிதியை கொடுங்க உங்க தன்மான உணர்வில் இருந்து…………. ”

உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்த அந்த வழக்கறிஞர் புகார் கொடுத்து இருப்பார் போல, ஒரு காவலர் “பொது இடத்தில் அரசியல் பேசாதீர்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார், அதிமுகவினர் பேருந்துகளை உடைத்துக் கொண்டு இருந்த போது என்ன செய்தீர்கள் என்று நாம் கேள்வி கேட்பதற்குள்.

எத்தனையோ பேர் விரும்பி வந்து பிரசுரத்தை வாங்குவதும் தங்களுக்குள் விவாதிப்பதுமாக இருந்தனர். பிரச்சாரத்தை கேட்ட ஒருவர் “உங்க அமைப்பிலே இணைய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும்” என்றார். பலர் கை கொடுப்பதும் வாழ்த்துவதுமாக இருந்தனர். பெட்டியைவிட்டு இறங்கும் போது ஒருவர் “தலைவா, சூப்பர் தலைவா” என்றார்.

உழைக்கின்ற மக்கள்யாரும் கொள்ளைக்காரி ஜெயாவுக்கு ஆதரவாகப் பேசக் கூட இல்லை. ஜெயா ஒரு கொள்ளைக்காரிதான்; கொள்ளைக்கூடாரமான அதிமுகவை தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் துளி கூட மாற்றுக்கருத்துஇல்லை. ஆனால் வெளிப்படையாக பேசுவதற்கும் நடைமுறைக்கு வருவதற்கும் அச்சம் மட்டும்தான் தடையாக இருக்கிறது.

ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது? என்பதுதான் முன்னே உள்ள பிரச்சினை. நாம் முன்னே சென்று நடைமுறைக்கான நம்பிக்கையை விதைக்கும் போது மாற்று அதிகாரத்திற்கான கருத்துக்களை மக்கள் நடைமுறைப்படுத்துவார்கள். அப்போது அதிமுக ரவுடிகள்மட்டுமல்ல, ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரும் ஓலமிட்டுக்கொண்டு ஓடுவார்கள்.

ரயில் பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை

வீரபத்ர சுவாமி கோவில் நிலம் காக்க விவிமு போராட்டம் !

1

வட்டாட்சியர் அலுவலகமா? புரோக்கர்களின் தலைமையகமா?

ருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகம் நிலத்திருட்டு கும்பலின் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.இதை அம்பலப்படுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10.10.2014 வெள்ளிக் கிழமையன்று போலீஸ் தடையை மீறி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பென்னாகரம் வட்டத்தில் இருக்கின்ற ஒகேனக்கல் பிரபலமான சுற்றுலா தலம். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லில் இருக்கின்ற பாரத சாரணியர் முகாம் அருகில், வீரபத்திர சுவாமி கோயில் என்ற சிறு தெய்வ வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18-க்கு ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் திரண்டு வழிபட்டு விழாவாக  கொண்டாடுவது வழக்கம். இந்த கோயில் மற்றும் இடத்தை பழங்குடி இன குருமன்ஸ் மக்கள் பராமரித்தும், கந்தாய ரசீது செலுத்தியும் வருகின்றனர். இதற்கான அடங்கலும் அரசுப் பதிவேட்டில் 1987-ல் இருந்து வருகிறது.

தற்போது ஒகேனக்கல் பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதாலும், ரியல் எஸ்டேட் சூதாட்டம் மூலம் நிலத்தின் விலை உயர்ந்து உள்ளதாலும் இந்த வீரபத்திர சுவாமி நிலத்தை (30 சென்ட்) எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று நிலத்திருட்டு கும்பல் முயற்சித்து வருகிறது. இந்த கும்பலின் தலைவன் மாரிமுத்து. இவன் ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவன். இவனது கூட்டாளிகள் மணி, ஜெயபால், காளியப்பன், சக்திவேல் ஆகியவர்கள் நிலத்தை அபகரிக்க கோயிலைச் சுற்றி இருந்த சுற்றுச் சுவரை இடித்து பெயர்ப்பலகையை உடைத்து எறிந்து அடையாளம் தெரியாதவாறு சமப்பபடுத்தி உள்ளனர்.

வீரபத்திர சுவாமி கோயிலை ஒட்டியிருந்த மகாதேவ சுவாமிகள் லிங்காயித்து மடம். இந்த மடத்தில் இருந்த சிவலிங்கத்தை தூக்கி ஆற்றில் வீசிவிட்டு, சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம்  என்று பொய்யுரைத்து அபகரிக்க முயற்சி செய்கின்றனர். மேலும் விடுதிகள் கட்டவும், இடத்தை வாடகைக்கு விட்டு காசு பார்க்கவும் திட்டமிட்டு வருகின்றனர். மேற்கண்ட நிலத்தினை கைப்பற்றி எப்படியாவது போலி பட்டா பெறுவது என்று பென்னாகர வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள புரோக்கர்கள் மூலம் முயன்று வருகின்றனர்.

வட்டாட்சியர் கனகராஜ் இந்த நிலத்திருட்டு கும்பலிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுவது வெளிவந்து ஊரே நாறிக் கொண்டிருக்கிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் சக அதிகாரிகளே முகம் சுழித்துக் கொண்டாலும், கனகராஜ் இந்த திருட்டுக் கும்பலுடன் இணைந்து செயல்படுவதை இதுவரை நிறுத்திக் கொள்ளவில்லை. இது போதாது என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை தினத்தன்று புரோக்கர்கள்தான் பூஜை செய்துள்ளனர். அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு புரோக்கர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி போலிப்பட்டா பெறுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. சஞ்சீவன் என்ற ஒரு புரோக்கர் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலத்தை அபகரித்து உள்ளான்.

மேற்கண்டவாறு வீரபத்திரசுவாமி கோயில் நிலத்தை அபகரிக்கவும், இந்த கூட்டுக்கும்பல் முயல்கிறது. வீரபத்திர சுவாமி கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் கொடுத்தால், வட்டாட்சியர் சொன்னால்தான் வழக்கு பதிவு செய்வேன் என்று நடவடிக்கை எடுக்க மறுக்கிறது, காவல்துறை. இதற்குப் பிறகு உயர்நீதி மன்றத்தில் கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மோசடித்தனத்திற்கு எதிராகவும், நில அபகரிப்பு கும்பலுக்கு எதிராகவும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணம் காட்டி காவல்துறை இரண்டு முறை அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. மறுபக்கத்தில் அதிமுக ரவுடிகள் கடையடைப்பு, பேருந்து எரிப்பு போன்ற சட்டவிரோத பயங்கரவாத வேலைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற சட்டவிரோத வேலைகளை காவல்துறை செய்து வந்தது.

பொறுத்துப் பார்த்த மக்கள் வி.வி.மு தலைமையில் தடையை மீறி திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்த கட்டமாக காவல்துறை பொய்வழக்கு போட முயற்சித்து வருகிறது. மக்களோ நிலத்திருடர்களிடமிருந்து நிலத்தை மீட்டெடுக்க வி.வி.மு தலைமையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

துண்டறிக்கை

ஒகேனக்கல்லில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான வீரபத்திரசாமி கோயில் மற்றும் நிலத்தை மீட்டுக்கொடு!

ஆர்ப்பாட்டம்.

இடம் : பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில்
நாள் : 10.10.2014, வெள்ளிக் கிழமை காலை 11 மணி அளவில்
தலைமை : தோழர் சரவணன், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்

முன்னிலை : கோயில் நிர்வாகிகள்

  • திரு நடராஜ், கே. அக்ரகாரம்
  • திரு. எல் மாதையன், ஜங்கமையனூர்
  • திரு. கிருஷ்ணன், பூதிப்பட்டி
  • திரு சின்னசாமி, மல்லாபுரம்
  • திரு சிக்கமல்லன், நாட்ராபாளையம்
  • திரு. முனியப்பன், பருவதனஅள்ளி

உரையாற்றுவோர்

  • திரு. ராசு, பழங்குடி குருமன்ஸ் சங்க மாவட்டை தலைவர்
  • திரு ரவி, இளம் வழக்கறிஞர் சமூக நீதி மையம், உயர்நீதிமன்றம், சென்னை
  • திரு இலட்சுமணன், ஒன்றிய செயலாளர், பழங்குடி குருமன்ஸ் சங்கம், பென்னாகரம்
  • தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், தருமபுரி மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
  • தோழர் ராஜ, தருமபுரி மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
  • தோழர் அருண், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
  • தோழர் கோபிநாத், வட்டார செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்

நன்றியுரை
திரு. முனிராஜ், கூத்தம்பாடி

notice-1

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. சுற்றுலா மையத்திற்கு முன்பு இருந்தே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வட்டாரத்தில் இருக்கும் மக்கள் தங்களது சிறு தெய்வங்களை எடுத்துச் சென்று, காவேரி நீரில் குளிப்பாட்டி, ஓரிரு நாட்கள் தங்கி பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட குருமன்ஸ் சமூக பழங்குடி மக்கள் தங்களின் வீரபத்திர சாமிக்கு கோயில் ஏற்படுத்தி, அதைச் சுற்றி கருங்கல் கட்டிடம் கட்டி காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயில் ஒகேனக்கல் பாரத சாரணியர் பயிற்சி முகாம் அருகில் உள்ளது. இதன் நிலம் 30 சென்ட் ஆகும். இந்த நிலத்திற்கும், கோயிலுக்கும் சட்டபூர்வமான முறையில் உரிய ஆதாரங்களும் உள்ளன.

வழக்கம் போல இந்த ஆண்டு ஆடிமாதம் பழங்குடி மக்கள் தங்கள் தெய்வத்தை வழிபட சென்று பார்க்கும் போது அம்மக்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் இந்தக் கோயிலைச் சுற்றி இருந்த கருங்கல் கட்டிடம், பெயர்ப்பலகை மற்றும் கோயிலின் பிற பகுதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தது. வீரபத்திர சாமி கோயிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஏனெனில், அதிக விலை போகும் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கொள்ளலாம் என்ற கனவுகளுடன் களமிறங்கி அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இம்மகளின் நிலத்தை கைப்பற்றுவதற்கென்றே இதனை ஒட்டி இருக்கின்ற சித்தலிங்கேஸ்ரவர் என்ற சிவன் கோயிலை முதலில் கைப்பற்றி, இந்த கோயிலில் இருந்த லிங்கத்தை ஆற்றில் வீசிவிட்டு, சென்னகேசவ பொருள் கோயில் என்று உருவாக்கி இதற்கு ஒரு பூசாரியை நியமித்து, இதன்மூலம் இதனை ஒட்டி இருக்கிற வீரபத்திர சாமி கோயில் நிலத்தை அபகரிப்பது என்ற திட்டத்தில் இக்கும்பல் செயல்பட்டு வருகிறது.

ஒகேனக்கல் சுற்றுலா மையம் ஆனபிறகு இதனைச் சுற்றியுள்ள நிலம், தங்கும் விடுதிகள் மற்றும் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனை சாதகமாக்கி எப்படியேனும் பெரும் பணத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று குறுக்கு வழியில் பொதுச் சொத்தை அபகரிக்க திட்டம் போட்ட மாரிமுத்து என்பவர் தன்னுடன் மணி, ஜெயபால், காளியப்பன் ஆகியோரை சேர்த்துக் கொண்டு பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்க தீவிரமாக ஈடுபடுகின்றார். உண்மையில் இந்த நிலம் பழங்குடி குருமன்ஸ் சமூக மக்களுக்கே சொந்தமானது. இதற்காக கந்தாய ரசீதும், அடங்களும் அரசு பதிவேட்டிலும் உள்ளன.

மேலும், மேற்கண்ட நான்குபேரில் காளியப்பன் என்பவர் தள்ளுவண்டி வைத்து பிழைப்பு நடத்தி கொள்கிறேன் என்று அம்மக்களின் தலைவரிடன் சென்று விட்டு அனுமதி பெற்றுக் கொண்டவர். தற்போது மாரிமுத்துவுடன் இணைந்து நிலத்தை அபகரிக்கவும், ஆக்கிரமிக்கவும் முயற்சித்து வருகிறார். இவர்கள் இதற்கான போலி பட்டா பெறுவதற்காக அதிகாரிகளை வளைத்து போடும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற “தொழில்” மூலம் வட்டாட்சியர் சம்பளத்திற்கு அதிகமாக வருவாய் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிலத்தை அபகரிப்பதற்காக பல மட்டங்களில் லஞ்ச பணம் கைமாறி இருப்பது கூறப்படுகிறது. தற்போது, நிலத்தைக் கைப்பற்றி வாகன நிறுத்துமிடமாக மாற்றி காசு பார்க்க ஆரம்பித்துள்ளது இந்த கும்பல். இது தொடர்பாக குருமன்ஸ் சமூக மக்கள் அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடம் உரிய முறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நில அபகரிப்பு சட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்கள் என்பதாலே அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கிறது அரசு.

இதுநாள் வரை நிலத்தை அபகரித்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? கண்துடைப்பு பேச்சுவார்த்தை நடத்தி அம்மக்கள் மிரட்டப்படுவது ஏன்? நிலத்தை அபகரிப்பதுடன் சிறு தெய்வங்களை அழித்து பார்ப்பன கடவுளை ஏற்படுத்தி பின்னர் வழிபாட்டு உரிமைகளை பறித்து நிரந்தரமாக துரத்தியடிக்கவே சதி செய்கின்றனர். ஏனெனில், சாமியை யார் வேண்டும் என்றாலும் வணங்கி விட்டு போகட்டும், பூஜைகள் செய்யட்டும் ஆனால் கோயில் இடம் எங்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மாரிமுத்து கூறுவதிலிருந்து நிலத்தை அபகரிக்கும் இவர்களது நோக்கம் தெரியவருகிறது.

சுற்றுலா மையத்தில் விடுதி கட்டியும், வாகன நிறுத்துமிடமாக்கியும் பணம் சம்பாதிக்கும் வேலையை செய்திட பல விடுதி உரிமையாளர்கள் இவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். எனவே, இந்த மோசடி கும்பலை தனிமைப்படுத்தி பொதுச்சொத்தை மீட்க ஒன்று திரள்வதும், இந்த கூட்டுக் கும்பல் சதியை முறியடிப்பதும் நமது கடமையாகும்.

கட்டிடத்தை இடித்தும் பெயர் பலகையை உடைத்தும் ஆக்கிரமிக்க முயற்சிக்கும் நபர்கள் மாரிமுத்து, மணி, ஜெயபால், காளியப்பன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை ஒன்றிணைந்து போராடுவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியில் அணிதிரள்வோம்!

notice-2

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம்.

தொடர்பு கொள்ள
தோழர் கோபிநாத்,
வட்டார செயலாளர்
9943312467

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

2

puthiya-jananayagam-october-2014

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. இதுதாண்டா அம்மா போலீசு!
போலீசு கொட்டடியில் சந்திரா என்ற ஏழைத்தாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான எதிரி போலீசுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

2. பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்

3. சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம்!
என்னதான் இருந்தாலும் சு.சாமி பார்ப்பனன் என்பதாலேயே, அவரது விபச்சாரத்தனங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு, அவர் அறிவார்ந்த அரசியல்வாதி போல பார்ப்பன ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்.

4. இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
இடைத்தேர்தல் தோல்வி காரணமாக சங்கப் பரிவாரம் மதவெறியைக் கைவிட்டு விடுமா? அல்லது முதலாளித்துவ ஊடங்கள் சிபாரிசு செய்வதைப் போல வளர்ச்சியைச் சாதிக்கும் பொருட்டு மோடி அவர்களைத் தற்காலிகமாவேனும் “ஸ்விட்ச் ஆஃப்” செய்து வைப்பாரா? இரண்டும் நடக்கப் போவதில்லை.

5. மோடியின் நூறு நாள் ஆட்சி : சவடால்களே சாதனையாக….!
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.

6. பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல் : பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
சமஸ்கிருதம்தான் தேசிய உணர்வின் அடிப்படை என்று கூறும் தருண் விஜய் என்ற பா.ஜ.க எம்.பி இன்னொருபுறம் தமிழ் ஆர்வலர் போலத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இதன் நோக்கமென்ன?

7. விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.

8. வறுமை… பட்டினி…. காசநோய் : இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!

9. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு நீதிமன்றத்தின் நல்லாசி!
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.

10. ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.

11. கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.

12. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

81

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 2

சட்டம் உருவாக்கிய இந்து மதம்

1955 -56-ல் இந்துக்களுக்கான உரிமையியல் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும் ஒரு மதம் என்ற முறையில் இந்து மதம் வரையறுக்கப்படாமலேயே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால் இந்துக்களுக்கான சட்டம் தயார் நிலையில் இருந்தது. ஆனால் “யார் இந்து?” என்ற பிரச்சினை தீர்க்கப்படாமலேயே நீடித்தது.

இந்தக் கோமாளித்தனமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரு குயுக்தியான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது.

“யார் இந்து?”

  • யாருக்கெல்லாம் இந்துச் ‘சட்டத் தொகுப்பு’ பொருந்துமோ அவர்களெல்லாம் இந்துக்கள் .
  • யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்?
    யாருக்கெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தாதோ, அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் .
  • யாருக்குப் பொருந்தாது ?
    முசுலீம்கள் , யூதர்கள், பார்சிகள், கிறித்தவர்களுக்குப் பொருந்தாது.
  • ஆகையினால் இவர்களைத் தவிர அனைவரும் சட்டப்படி இந்துக்களே ”.

இந்துச் சட்டத் தொகுப்பு (1955-56) மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே , “இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் ஆகியோர் மதத்தால் இந்துக்களே. அந்த இந்து பெற்றோருக்குப் பிறந்தவர்கள் பிறப்பால் இந்துக்களே. முசுலீம், கிறித்தவ, யூத, பார்சி மதங்களைச் சாராத மற்றவர்கள் அனைவரும் கூட இந்துக்களே. இவர்கள் அனைவருக்கும் இந்துச் சட்டத் தொகுப்பு பொருந்தும்” என்றது உச்சநீதி மன்றம்.

பல்வேறு வழக்குகளில் முரண்பட்ட பல காரணங்களுக்காக “நாங்கள் இந்து இல்லை” என்று வாதாடியவர்களை மறுத்து அவர்கள் நெற்றியில் இந்துப்பட்டம் கட்டித் திருப்பியனுப்பியது உச்சநீதி மன்றம்.

“இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டு அதை நடைமுறையில் கடைப்பிடித்து, தான் ஒரு இந்து என்று அறிவித்துக் கொள்பவன் இந்துதான். அதே நேரத்தில் ஒருவன் நாத்திகனாகி விடுவதாலோ, இந்து மதக் கோட்பாடுகளைக் கைவிடுவதாலோ, மேலை நாகரீகத்தைப் பின்பற்றுவதாலோ, மாட்டுக்கறி தின்பதாலோ அவன் இந்து இல்லை என்று கூறிவிட முடியாது”, 1963-ல் அளித்த ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

இந்துச் சட்டத் தொகுப்பிற்கு ஆதாரமாக விளங்கும் தரும சாத்திரங்கள் எதுவும் பிற மதத்தினர் இந்துவாக மதம் மாறுவதை அனுமதிக்கவில்லை. அவை வருணப் பிறப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. பிற மதத்தினரை இந்துவாக மதம் மாற்ற தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றை ஆர்யசமாஜம் அறிமுகம் செய்தது. எனினும் இது தரும சாத்திரங்களால் அங்கீகரிக்கப் பட்டது அல்ல.

ஜேசுதாஸ் தீர்ப்பு!

ஜேசுதாஸ்
‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?

1975 -ல் கேரள உயர்நீதி மன்றம் இப்பிரச்சினையில் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது;

“இந்துக்கள் அல்லாதார் உள்ளே வரக்கூடாது” என்ற அறிவிப்புப் பலகையைப் பல கோயில்களில் வாசகர்கள் கண்டிருக்கக் கூடும். இவ்விதியின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலில் வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. ஜேசுதாஸ் இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார். பிறப்பால் கத்தோலிக்க கிறித்தவரான அவர் “நான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன்” என்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

“தான் இந்து மதத்தைப் பின்பற்றுபவன் என்று ஒருவர் அறிவிக்கும் பட்சத்தில், தீய உள்நோக்கங்கள் ஏதுமின்றி நல்ல எண்ணத்துடன் அவ்வறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர் இறைவன் குறித்த இந்துக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டவராகிறார். எனவே இந்துவாக மதம் மாறிவிட்டார் என்று பொருள்.”

கேரள உயர்நீதி மன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு மேல் பார்வைக்கு ‘அதி புரட்சிகரமானதாக’ த் தென்பட்டாலும், இந்துமத விரிவாக்கத்திற்குத் துணை செய்யும் சிக்கலில்லாத எளியதொரு சம்பிரதாயத்தை இது வகுத்துத் தந்துள்ளது என்பதே உண்மை.

‘தாய் மதத்திற்கு’ த் திரும்பிய ஜேசுதாஸிற்கு இந்துச் சட்டத் தொகுப்பு என்ன வருணத் தகுதியை வழங்கும்?

“கிறித்தவத்திலிருந்து இந்துமதத்திற்கு மீண்டும் மாறி வந்தவுடன், மறைந்திருந்த அவர்களது உண்மையான சாதி மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்” என்கிறது உச்சநீதி மன்றம். அவ்வாறு இந்துவாக மதம் மாறியவருடைய மூதாதையரின் சாதியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அவர்கள் இந்துச் சட்டத்தின் முன் சூத்திரர்களாகக் கருதப்படுவார்கள்.

இந்துச் சட்டத்தின் முரண்பாடுகள்

வலையை அகல விரித்து அகப்பட்டவர்களையெல்லாம் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் இழுத்துப் போடும் அரசியல் நோக்கத்திற்காக இந்துச் சட்டத் தொகுப்பில் பல சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக,

  • தந்தை வழி வாரிசுரிமை மற்றும் கூட்டுக் குடும்பம் என்ற கோட்பாட்டையே இந்து சட்டம் பின்பற்றுகிறது. எனினும் கேரளத்தில் சில சமூகத்தினர் மத்தியில் நிலவும் ‘மருமக்கள் தாயம்’ மற்றும் ‘ அரிய சந்தானம்’ எனும் தாய்வழிக் குடும்ப முறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல, இந்துச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட மண உறவுகளில் (அதாவது சிறிய தந்தையின் மகனை அல்லது மகளை மணம் செய்யக்கூடாது என்பன போன்றவை) பழங்குடியினர் மற்றும் சில சமூகத்தினர் திருமணம் செய்வது நீண்டகால மரபாக இருப்பதால் அதுவும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • கோவா மாநில இந்துக்களில் சில பிரிவினரிடையே நிலவும் இருதார மணமும் சட்டத்தால அங்கீகரிக்கட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் அவர்களுக்குச செல்லாது.
  • அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
  • கேரளத்து மாப்ளா முசுலீம்களும், சித்தூர் மாவட்ட கிறித்தவர்களில் சிலரும் (வன்னியர்கள்) வாரிசுரிமை குறித்த பிரச்சினையில் மட்டும் அவர்களது மரபுப்படி இன்றும் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ்தான் வருகின்றனர்.

தனது பண்பாட்டுக்கு எள்ளளவும் தொடர்பற்ற குலமரபுகளையும், பண்பாடுகளையும் இந்துச் சட்டத் தொகுப்பிற்குள் பார்ப்பனியம் ஏன் அனுமதித்தது என்ற கேள்வி இங்கே எழலாம். மரபுகள் மற்றும் பண்பாடுகள் விசயத்தில் பார்ப்பனியம் தனக்குள்ளேயே வட்டார ரீதியாகப் பிளவுபட்டிருந்தது . மேலும், பார்ப்பனியப் பண்பாட்டின் எல்லைக்கு வெளியே இருந்த பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் உட்குழுப் பண்பாட்டில் ‘வரம்பு’ மீறி தலையிடுவதன் மூலம் ‘இந்து ஒற்றுமை’ என்ற தனது அரசியல் நோக்கத்திற்குக் கேடு விளைவித்துக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.

ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் நிலவிவந்த ஜனநாயக பூர்வமான மரபுகளின் மீது, தான் கொண்டுள்ள வெறுப்பையும் அது மறைத்துக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக மக்கள் மத்தியில் நிலவி வந்த (இன்னமும் நிலவி வரும் ) சிக்கலில்லாத எளிய ‘மணவிலக்கு’ முறையை ஒழுக்கக் கேட்டின் அடிப்படையாகப் பார்ப்பனியம் கருதியது. மணவிலக்கிற்கு நீதிமனறங்களின் தயவை நாடி அலையவைப்பதன் மூலம் அவர்கள் மீது ‘நல்லொழுக்கத்தை ‘த் திணித்து விடலாம் என்றும் கருதியது. இந்த வகையில் தலையிட்டு அவர்களை இந்து மயமாக்க முயன்றது.

எனினும், மரபு என்ற விசயத்தில் தனது தலைமையை நேருக்கு நேர் எதிர்க்கின்ற எதையும் அனுமதிக்க பார்ப்பனியம் தயாராக இல்லை.

சுயமரியாதைத் திருமணம் இந்து மரபா?

உச்சிக்குடுமி மன்றம்
ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை.

தி.மு.க ஆட்சியில் 1969 -ல் சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு அந்த மண முறையின் கீழ் செய்யப்படும் திருமணம் பதிவு செய்யப்படாவிட்டாலும் செல்லும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. (சுயமரியாதைச் திருமணமும் இந்துச் சட்டத் தொகுப்பின் கீழ்தான் வருகிறது) ஆனால் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் இத்திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது.

1954-ல் இது தொடர்பான வழக்கு முதன் முதலாக நீதிமன்றத்தின் முன் வந்தது. “பார்ப்பனியச் சடங்குகளை மறுக்கும் இந்த மணமுறை 1925 முதலே கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இதையும் ஒரு மரபாக அங்கீகரிக்க வேண்டும்” என சுயமரியாதை இயக்கத்தினர் வாதாடியிருக்கின்றனர். “இந்த மணமுறை 25 ஆண்டுகளாகத்தான் பழக்கத்திலிருக்கிறது ; எனவே இந்தப் பழக்கத்தை ஒரு மரபு என்று அங்கீகரிக்க முடியாது” என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

1966-ல் இதே விசயத்திற்காக இன்னொரு வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றது. “நவீன காலத்தில் ஆளாளுக்கு ஒரு சட்டத்தையோ மரபையோ உருவாக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றம்தான் அதைச் செய்ய முடியும்” என்று தீர்ப்புளித்தது.

ஜேசுதாஸின் மதமாற்றத்திற்கு ஒரு புதிய ‘சம்பிரதாயத்தை’ (மரபை) உருவாக்கிய நீதிமன்றம் அதே உரிமையை மக்களுக்கு மறுத்தபோது அதற்காகச் சிறிதும் வெட்கப்படவில்லை. ஏனென்றால் அது இந்துச் சட்டத்தொகுப்பின் உணரச்சியின்படி நடந்து கொண்டது.

தரும சாத்திரங்களுக்கு விளக்கவுரை தரும் பார்ப்பனப் பண்டிதராக அமர்த்தப்பட்ட நீதிமன்றம், தனக்களிக்கப்பட்டுள்ள கடமையின் புனிதத்தையும் , அரசியல் நோக்கத்தையும் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தது எனபதை அதன் எண்ணிறந்த தீர்ப்புகள் பிரதிபலிக்கின்றன.

இந்துச் சட்டத் தொகுப்பின் ஜனநாயகத் தன்மை குறித்த மாயை கலைய வேண்டுமானால் அதன் உண்மை நிலை குறித்த சில விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

‘பெண்ணுக்குத் தாய்வீடு நிரந்தரமல்ல’ என்ற கோட்பாட்டினடிப்படையில் பாரம்பரியச் சொத்தில் பெண்ணின் உரிமையை இந்து வாரிசுரிமைச் சட்டம் மறுக்கிறது. இந்த விசயத்தில் இசுலாமியச் சட்டம் கொஞ்சம் முற்போக்கானதென சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பெண்ணின் சொத்துரிமையைப் பறித்ததன் மூலம் இந்து நிலப்பிரபுக்கள் மற்றும் தரகு முதலாளிகளின் சொத்து பிளவுபடாமல் தடுக்கப்பட்டது. மேலும் இந்த பிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.

முதல் மனைவி இருக்கும் போதே ஒரு கணவன் இரண்டாம் தாரமாக ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு, இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் செல்லும்போது பெண்ணுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இருப்பதில்லை. மணப்பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மணமகன் வேள்வித் தீயைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்கும் ”சப்தபதி’ என்ற குறிப்பிட்ட சடங்கு நடைபெறவில்லை என்று ஒரு கணவன் நிரூபித்துவிட்டால், மற்றெல்லாச் சடங்களும் நடந்திருந்தாலும் அத்திருமணம் செல்லத்தக்கதல்ல என்று ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அம்மியோ, அருந்ததியோ, புரோகிதனோ, தரகனோ, முப்பத்து முக்கோடி தேவர்களோ வந்து சாட்சி கூறியும் பயனில்லை. தலாக் என்று மூன்று முறை சொல்லி மணவிலக்குச் செய்யப்படும் இசுலாமியப் பெண்களுக்காக் கண்ணீர் சிந்தும் பார்ப்பன மதவெறியர்கள் இது பற்றி வாய் திறப்பதில்லை.

‘சப்தபதி நிரூபிக்கப்பட வேண்டியதில்லை’ என சமீபத்தில் தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறிருந்தாலும், சாத்திர சம்பிரதாயங்களின் சந்துகளில் புகுந்து பெண்ணுக்கு அநீதி இழைக்க வழி சொல்லிக் கொடுத்த பார்ப்பனப் பண்டிதர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடி விட்டார்கள்.

குடும்பத்தை நிர்க்கதியாகத் தவிக்கவிட்டு ஓடுபவன், அதே குற்றத்தை துறவறம் என்ற பெயரில் செய்தால் அதை அவனது மத உரிமையாக இந்துச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதனடிப்படையில் மணவிலக்கும் வழங்குகிறது.

1929-ல் பிரிட்டீஷாரால் கொண்டுவரப்பட்ட குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், குறைந்தபட்ச திருமண வயதாக பெண்களுக்கு -15, ஆண்களுக்கு- 18 என்ற நிர்ணயித்தது. 1978-ல் மீண்டும் ஒரு திருத்தத்தின் மூலம் இது பெண்களுக்கு -18, ஆண்களுக்கு -21 என்று உயர்த்தப்பட்டது.

இந்து கூட்டுக் குடும்பம்
தந்தை வபிளவுபடாத இந்து, கூட்டுக் குடும்பச் சொத்திற்கு பிற மதத்தினருக்கு இல்லாத விசேட வரிச் சலுகைகளும் தரப்பட்டுள்ளன.

எனினும் இந்தச் சட்டத்தை மீறி பத்து வயதுச் சிறுவனுக்கும் 5 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டு விட்டாலும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு மூன்று மாத தண்டனையோ 1000 ரூபாய் அபராதமோதான் விதிக்க முடியுமே தவிர, “அத்திருமணம் செல்லாது” என எந்த நீதிமன்றமும் அறிவிக்க முடியாது. மதச் சம்பிரதாயங்களால் உறுதி செய்யப்பட்ட ஒரு திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது என்பதே இந்த அணுகு முறைக்கான அடிப்படை.

இந்துத் திருமணச் சட்டத்தில் மொத்தம் 8 வகைத் திருமணங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. அவற்றின் பிரம்ம வகைப்பட்ட திருமணங்கள் மூன்று உயர் வர்ணத்தாருக்கும், அசுர வகைப்பட்ட திருமணங்கள் ‘சூத்திரர்’ க்கும் மனு நீதியால் அனுமதிக்கப் பட்டிருந்தன. பிரம்ம வகைப்பட்ட திருமணங்களை சூத்திரரும் நடத்தலாம் என்ற திருத்தம் பிரிட்டிஷ் ஆட்சியில்தான் அனுமதிக்கப்பட்டது.

பெண்ணுக்கும் அவள் வீட்டாருக்கும் பொருள் தந்து (பரிசம் ) பெண்ணை மண முடிப்பது அசுரத் திருமணம் என்றும், பெண்ணுடன் பொன்னையும் பொருளையும் மணமகனுக்குத் தானமாகக் கொடுப்பது (கன்னிகாதானம் ) பிரம்ம வகைப்பட்ட திருமணம் என்றும் மனுநீதி கூறுகிறது. இவை வெறுமனே பழைய ஏட்டுச் சுவடிகளில் இல்லை; இன்றும் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையாக உள்ளன. வரதட்சிணையை பார்ப்பன சாத்திரம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது; சட்டமோ அதைத் தடுப்பதாக முணுமுணுக்கிறது.

ஆகம விதிகளால் ஆளப்படும் கோயில்களில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை இந்துச் சட்டத்தின் ஒரு அடிப்படையாக விளங்கும் மரபு என்பதனால் நியாயப்படுத்தப்படுகிறது; அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமையால் இதுவே பார்ப்பனர்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படுகிறது

காப்பாளராக இருக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்குதல், மண உறவிற்கு வெளியே பிறந்த குழந்தைகளின் உரிமைகள், சாதி மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றில் இந்துச் சட்டத் தொகுப்பு பெரிதும் அநியாயமாக நடந்து கொள்கிறது என முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரே குற்றம் சாட்டுகின்றனர்.

பெண்ணினத்திற்கு எதிராகக் கடவுளும் ஆணும் இணைந்து அமைத்த கூட்டணியில் மதவேறுபாடே கிடையாது. இந்து, கிறித்தவ, இசுவாமிய, யூத, பார்சி மதச் சட்டங்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவைதான். ஆனால் இவற்றில் இந்து மதம் மட்டும் தான் சாதி ஆதிக்கத்தையும் சேர்த்துக் தனது சட்டத்தால் புனிதப்படுத்துகிறது.

இந்துச் சட்டத்தைச் சீர்திருத்தியது பார்ப்பனச் சனாதனிகளா?

இந்துச் சட்டத்தின் பிற்போக்குத் தனங்கள் பல சீர்திருத்தப் பட்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் அச்சீர்திருத்தங்கள் பார்ப்பனச் சனாதனிகளால் மனமுவந்து முன்மொழியப்பட்டவை அல்ல. வைப்பாட்டி வைத்துக் கொள்ளும் சட்டபூர்வ உரிமையைக் கூட 1955 வரை அவர்கள் தானாக முன்வந்து கைவிடத் தயாராக இல்லை.

இந்துச் சட்டத் தொகுப்பிற்காக தரும சாத்திரங்களின் ‘ காலத்துக் கொவ்வாத’ பகுதிகள் சிலவற்றில் மாற்றங்கள் முன்மொழியப் பட்டபோது, அதை எதிர்த்து பார்ப்பன சநாதனி ஒருவர் அங்கே எழுப்பிய ஆட்சேபமே இதற்குச் சான்று;

“தாங்கள் விரும்புவதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளட்டும். நாங்கள் நீதிமன்றங்களைத் தவிர்க்கவே முயல்வோம். ‘இந்துச் சட்ட மசோதா ‘ என்று அழைக்கிறார்களே அதைப் பொருத்தவரை நாங்கள் கூறுவதெல்லாம் இதுதான்; எதை வேண்டுமானாலும் சட்டமாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து அதை ‘இந்துச் சட்டம்’ என்று மட்டும் அழைக்காதீர்கள் ஏனென்றால் அது இந்துச் சட்டமே அல்ல.”

அப்படியானால் சநாதனிகளின் விருப்பத்துக்கு எதிராகத்தான் இந்துச் சட்டத் தொகுப்பு உருவாக்கப்பட்டதா? இது சீர்திருத்தவாதிகளுக்குத் கிடைத்த வெற்றியா? என்ற கேள்விகள் எழலாம். உண்மையில் இது சீர்திருத்தவாதிகளின் வெற்றியுமல்ல, பார்ப்பனியத்தின் தோல்வியுமல்ல.

ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் விருப்பமே ஆளும் வர்க்கத்தின் பொது விருப்பமாக ஆகி விடுவதில்லை. பார்ப்பன வருண தருமத்தை அப்படியே திணிக்க விரும்பிய குருட்டுச் சநாதனிகளின் விருப்பம், ஆளும் வர்க்கங்களின் அன்றைய நோக்கம், நலன் மற்றும் தேவைக்கு உகந்ததாக இல்லை.

“இந்து மதத்தைப் புத்துருவாக்கம் செய்வது -இந்தியாவை ஒன்றுபடுத்துவது” என்ற தமது ஒருங்கிணைந்த லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்படி விருப்பத்தை ஆளும் வர்க்கங்கள் ‘ தியாகம் ‘செய்தன. அவ்வளவே.

சனாதனிகளின் தியாகம்!

இந்த ‘தியாகத்தை’ த் தான் தனது தீர்ப்பில் பாராட்டுகிறார் நீதிபதி குல்தீப் சிங். யாருடைய மன உணர்விலிருந்து இந்தப் பாராட்டுரையை நீதிபதி வழங்கியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் அந்தத் ‘தியாகங்களில்’ சிலவற்றை வாசகர்கள் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

தீண்டாமைக்குத் தடை, தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு, குழந்தைத் திருமணத் தடை, வரதட்சணைத் தடை, பலதாரமணத் தடை போன்ற இந்து மதக் கோட்காடுகளுக்கு எதிரான சட்டங்களை- தங்கள் மதவுணர்வுகளைப் பொருட்படுத்தாமல்- அனுமதித்தமைக்காகப் பார்ப்பன உயர்சாதி இந்துக்களுக்கு நன்றி கூறுகிறார் நீதிபதி.

ஆனால் உயர்சாதியினரும் ஆணாதிக்கவாதிகளும் ஜனநாயக உணர்வின்பாற்பட்டு இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டனரென்று நீதிபதி குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காகத்தான் இந்தத் தியாகம் செய்யப்பட்டது என்ற உண்மையை நீதிபதி தெளிவாகவே கூறி இருக்கிறார்.

“அரசு, இந்திய ஆட்சிப்பரப்பு எங்கணும் ஒரு சீரான உரிமையியல் தொகுப்புச் சட்டம் குடிமக்களுக்கு உறுதியாகக் கிடைக்குமாறு பெருமுயற்சி செய்தல் வேண்டும்” – என்று கூறுகிறது இந்திய அரசியல் சட்டத்தின் 44- வது பிரிவு. (வழிகாட்டும் கோட்பாடு).

“விவகாரத்து மற்றும் ஜீவனாம்சம் பற்றிய பிரச்சினைகளில் எல்லா சமூகத்தினரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதுதான் இந்த அரசியல் சட்டப் பிரிவின் நோக்கம்” என்று உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் பல இந்தச் சட்டப்பிரிவுக்கு விளக்கமளித்துள்ளன.

விவகாரத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சீரான விவாகரத்துச் சட்டத்தை ஒப்புக் கொள்ளாதவன் பிரிவினைவாதியா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாக இருக்கிறதே என வாசகர்கள் நினைக்கலாம் .

இந்த முடிச்சை அவிழ்க்கும்போது தான் பாரதீய ஐனதாவின் ‘ஒரே நாடு, ஒரே மக்கள் , ஒரே சட்டம் ‘ என்ற முழக்கத்தின் முடிச்சும் அவிழும்.

(தொடரும் …)

முதல் பாகம்  – இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1