Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 633

நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !

7

old wineழைய சரக்கு புதிய மொந்தை. இது குப்தர் காலம் தொட்டு மக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் ‘தொழில் நுட்பம்’. அதுவே மோடியின் பாஜக அரசு என்றால் மொந்தையைப் பற்றி நாற்பது விதமான பஞ்ச் டயலாக்குகளை தயார் செய்வார்கள். பிறகு அதை நால்வகை – அச்சு, காணொளி, ஒலி, வதந்தி – பிரச்சார கருவிகள் மூலம் திகட்டத் திகட்ட ஐம்புலன்களையும் ஆக்கிரமிப்பார்கள்.

எஸ்.வி.சேகரின் கடி காமடிக்கு சிரிப்பவர்கள் மோடியின் புது மொந்தை எஃபெக்ட்டுக்கு செவிசாய்க்க மாட்டார்களா என்ன?

மோடி பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றும் முதல் சுதந்திர தினம். வித்தியாசமாக என்ன செய்யலாம்? காவி கிச்சன் கேபினட் குழு யோசிக்கிறது. விளைவு “மேக் இன் இந்தியா”. “மேட் இன் இந்தியா”-வில் இங்கே தயாரிக்கப்பட்டது என்றால் மேக்கில் இங்கே தயாரிக்க வேண்டும் என்று பன்னாட்டு முதலாளிகளுக்கு கோரிக்கையாம். இதனால் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கொட்டோ கொட்டும் என்று திரைக்கதை வசனத்துடன் வெளியிட்டார்கள்.

ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆக்கிரமிப்பில் “இது இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது” என்பது மூலதனம் காட்ட வேண்டிய சட்டபூர்வமான ஒரு வெற்று சடங்கு மட்டுமே. வேலை வாய்ப்போ இல்லை அந்த நாட்டின் பொருளாதார சுயசார்போ இதில் இல்லவே இல்லை. மாறாக அந்த நாட்டின் அனைத்து வளங்களும் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனத்தால் சுருட்டி அபகரிக்கப்படுவதே இந்த மேட் இன் சவடாலின் சூட்சுமம்.

என்னடா கம்யூனிஸ்டுகளின் வழக்கமான ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என்று சிலர் சலிக்கலாம். பரவாயில்லை இன்றோ நேற்றோ நீங்கள் பயன்படுத்தியிருக்கும் நோக்கியா செல்பேசியை எடுங்கள். மேட் இன் இந்தியா வாசகத்தை பெருமையுடன் பாருங்கள். அது மங்கள்யான் பெருமையாகவே கூட இருக்கட்டும். கூடவே மேக் இன் இந்தியாவையும் நினையுங்கள். பிறகு இனி வரும் செய்தியையும் படியுங்கள்.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கவர்ச்சிகரமான பெயர்களின் ஒன்று நோக்கியா, இரண்டு ஹுண்டாய். செல்பேசி பயன்பாடு அத்தியாவசியமாக மாற்றப்பட்ட காலத்தில் நோக்கியாதான் அதன் குறியீடு.

நோக்கியா ஆலை இங்கே ஆரம்பித்த போது இந்த குறியீடு அதன் உச்சத்தை தொட்டது. “கனக்டிங் பீப்பிள்” விளம்பரங்களை பார்த்தவர்கள் அந்த கனெக்ஷன் நம்மூரிலேயே தயாரிக்கப்படுகிறதா என்று துள்ளிக் குதித்தார்கள்.

அப்பேற்பட்ட பரவசத்தை சல்லிசாக அளித்த நோக்கியா வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் செல்பேசி உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பலருக்கும் வேலை ‘வாய்ப்பளித்த’தாக போற்றப்பட்ட இந்த மேக் இன் இந்தியா, கில் இன் இந்தியாவாக மாறிப்போனது. ஏன்? அதுவும் மோடி பன்னாட்டு முதலாளிகளிடம் புதிய மொந்தை கோரிக்கை வைக்கும் நேரத்தில் பழைய சரக்கு நாறுவது ஏன்?

மேக் இன் இந்தியாவின் சூட்சுமமே இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதல்ல, இந்திய வளங்களைச் சுரண்டுவதுதான். 2006-ம் ஆண்டு துவங்கப்பட்ட நோக்கியா நிறுவனத்திற்காக மத்திய மாநில அரசுகள் அளித்த சலுகைகள் ஏராளம். மலிவு விலை நிலம், தடையில்லா மின்சாரம், பல வழிகளில் வரிச்சலுகை, இதர வசதிகள், தொழிலாளர் சட்டம் செல்லுபடியாகாத விதத்தில் ஏற்பாடுகள், குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள்…இவைதான் மக்களை ‘இணைத்த’ நோக்கியா நமக்கு வேலை வாய்ப்பளித்த லட்சணம்.

இதற்கு மேலும் பல்வேறு முறைகேடுகளோடு தொழில் செய்த நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிச் சென்றது. அதிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய குறைந்த பட்ச வருமான வரியைக் கூட கட்டவில்லை.

உள்நாட்டு தேவைக்காக உற்பத்தி என்று அனுமதி வாங்கிய நோக்கியா அதை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஏமாற்றியது. அதாவது ஏற்றுமதிக்கான வரியை செலுத்த அது தயாரில்லை. அது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவிற்கும் கட்டுப்படவில்லை.

nokia-india-microsoftஇடையில் நோக்கியா நிறுவனத்தை பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. வாங்கும் போதே வரி ஏமாற்றி வழக்கில் உள்ள சென்னை நிறுவனத்தை மட்டும் கையகப்படுத்தாமல் கவனமாக தவிர்த்து விட்டது. மாறாக, செல்பேசியை வாங்குவதாக மட்டும் சென்னை ஆலையுடன் ஒப்பந்தம் போட்டது. முறைகேடான வணிக உத்திகளில் பிரபலமான பில் கேட்ஸ்சுக்கு இதெல்லாம் ஜூஜூபி. பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கேள்வியின்றி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

தற்போது இந்த ஆலையுடன் ஒப்பந்தம் செய்த மைக்ரோசாஃப்ட் அதை ரத்து செய்துவிட்டது. பிறகு? மிச்சமிருக்கும் 800 தொழிலாளிகளுக்கும் இனி வேலையில்லை.

நோக்கியாவை பில்கேட்ஸ் வாங்குவாராம். அதில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய சென்னை ஆலையை மட்டும் வாங்காமல், உள் ஒப்பந்தம் போட்டு சரக்கை மட்டும் வாங்குவாராம். ஆனால் இருதரப்பும் நோக்கியா பேரை பயன்படுத்துமாம்.

பிறகு, நம்ம ஆலைக்கு வரி ஏய்ப்பு வழக்கில் பேரம் படியவில்லை என்று தெரிந்த பிறகு அந்த உள் ஒப்பந்தத்தை ரத்து செய்வாராம்.

கவனியுங்கள், ஒரு முதலாளிக்கு சிறு இழப்பும் ( சுரண்டுவதில் பாதிப்பு) வரக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் சட்டத்தை, தொழில் நடத்தும் அமைப்பு விதிகளை வடிவமைத்திருக்கிறார்கள்? திருடன் பிடிபடக்கூடாது, தண்டிக்கப்படக் கூடாது என்பதே சட்டங்களின் சாரம்! அதுதான் பங்குச் சந்தை, மேலாண்மை படிப்பு, ஆக்ஸ்போர்டு பல்கலை, உலக வங்கி, வளர்ச்சி, மோடி வித்தை என்று பல்வேறு வகைகளில் உலா வருகிறது.

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகமயத்தின் விளைவுகள் இதன்றி வேறென்ன? என்ரான் தொட்டு யூனியன் கார்பைடு பட்டு கோக் பெப்சியில் முழுகியது வரை எத்தனை எத்தனை எடுத்துக் காட்டுகள்?

மோடி அண்ட் கோவின் “மேக் இன் இந்தியா” பாட்டின் அறிமுக விழாவே எழவு வீடாக மாறிவிட்டது!

இது குறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிச்சயமாக இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்கப்படுத்துவோம். இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும். நாங்கள் இதன் மீது கவனம் செலுத்தி வருகிறோம்” என்று உறுதியளித்தார்.– (தி இந்து செய்தி)

இது போன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் – பொருள் என்ன? வரி ஏய்ப்பு எனும் ஒரு சிக்கலில் பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்காத வண்ணம் சட்ட திருத்தம், நீதிமன்ற நடைமுறைகளை மாற்றுவோம் என்பதன்றி வேறென்ன?

இல்லை இது வினவின் அபாண்டமான வியாக்கியானம் என்பார்களா? எனில் நிர்மலா சீதாராமன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இங்கே தொழில் நடத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சட்டங்களை மதித்து முறையாக வரி செலுத்த வேண்டும் என்றுதானே? ஏன் சொல்லவில்லை?

இது குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்த விவகாரமாகும் என்று நிர்மலா கூறியிருப்பதிலேயே பொருள் தெளிவாக இருக்கிறது. இவர்களால் ஒரு நிறுவனத்தின் விவகாரத்தில் அதாவது மைக்ரோசாஃப்ட் மற்றும் நோக்கியாவின் திருட்டுக் கூட்டணி முறைகேடுகள் குறித்து ஒன்றும் கேட்ட முடியாது. கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் வீரமாக சித்தரிப்பதில் பாஜக பாசிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள்.

ராமனின் கௌரவத்திற்காக சீதை தீக்குளித்தாள். அமைச்சர் சீதாராமனோ முழு இந்தியாவையும் தீக்குளிக்க சொல்கிறார்.

ஆம். மேக் இன் இந்தியாவின் பொருள் கில்லிங் இந்தியாதான். முன்னதை ஏற்பவர்கள் ‘பாரத் மாதாகி ஜெய்’ சொல்வார்கள். பின்னதை உணர்பவர்கள் இந்திய மக்களை காப்பாற்ற போருக்கு தயாராவார்கள்.

நீங்கள் எந்த அணி?

தினமலரில் பாசிச ஜெயாவை பிய்த்து உதறும் வாசகர்கள் !

10

ஜெயாவின் முதல் ஆட்சியில் துவங்கி இன்று வரை போயஸ் தோட்டத்தின் கோயாபல்ஸ்சாக ‘தொண்டு’ செய்து வருகிறது தினமலர். தற்போது மோடிக்கும் அதை அளித்து வருகிறது. மக்களின் நாடித்துடிப்பிற்கு எதிராக பொய்யுரைக்கும் தினமலரின் கைங்கைரியத்தில் அதன் வாசகர்கள் பலர் ராமசுப்பையர் உருவாக்க நினைத்த ராமராஜ்ஜியத்திற்கு எதிரான அறிவையும், உத்வேகத்தையும் பெற்றுவிட்டனர். தினமலரின் எதிர்மறை எழுத்து வாசகர்களிடம் நேர்மறை விளைவைத்தான் தோற்றுவித்திருக்கிறது. அந்த விதத்தில் தினமலர் தோற்று விட்டது.

இங்கே ஜெயா கைது குறித்து தினமலர் இணைய தளத்தின் செய்திகளில் மறுமொழியிட்ட வாசகர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம். பாசிச ஜெயாவிற்கு எதிராக தமிழ் மக்கள் புத்தாக்கத்துடன் பேசும் இந்த கருத்துக்கள் ஒரு விதத்தில் கவிதையாகவும் இருக்கின்றன.

–    வினவு

________________

Tamilan – Chennai, இந்தியா

தமிழக மக்களின் போராட்டத்தைப் பார்த்து கர்நாடக நீதிமன்றம் மிரண்டுபோய் தீர்ப்பு வழங்கியதாக குண்டு கல்யாணம் பெரிய சவுண்ட் விட்டார்…பெண்கள் குத்தாட்டம் போட்டனர்… கடேசியில் எல்லாம் புஸ்ஸாகி விட்டது… அதிக ஆட்டம் அந்த ஆண்டவனுக்கே தாங்கமுடியலை.. அதான் ஜாமீன் கிடைக்கவில்லை…

__________________

S.KUMAR – chennai, இந்தியா

மகிழ்ச்சிக்கு எவ்வளவு ரேட் ? சோகத்துக்கு எவ்வளவு ரேட் ?

___________________

SENTHIL KUMAR – MADURAI, இந்தியா

இப்புடி அழுவுராகலே இவுகல்லாம் ஆருன்னு கேட்டோம். விசாரிச்சதுல தெரிஞ்ச்சு செத்தவீட்ல கூலிக்கு அழுவுரவகலாம்.

Debate 1____________________

Tiruvannamalai KULASEKARAN – AUSTRALIA

சுதர்சன ஓமம் நடத்தி்யதன் பலன் சூப்பர்

_____________________

selvarasu – k.kurichi

தி்ன்ன லட்டு எல்லாம் கக்கியாச்சா ?…..குத்தாட்டம் போட்டவளுங்க கொழுப்பு அடங்கிச்சா ?……அடங்காத அனகொண்டாவாச்சே !ஆடி அடங்கறது கொஞ்சம் சிரமம்தான் …….அட முட்டாள் அடிமைப்பட்டாளங்களா, போய் நாண்டுகிட்டு சாகவேண்டியதுதானே!

__________________

T.R.Radhakrishnan – Nagpur, இந்தியா

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்,,,,நாங்க சிரித்துக் கொண்டே அழுகிறோம், அழுது கொண்டே சிரிக்கிறோம்……கொடுத்த காசுக்கு மேலே நவ ரசமும் காட்டுவோம்ல…..நாங்க வருங்கால கட்சி நிர்வாகிகள், மந்திரிகள்…..

____________________

Venkatesan Kuppusamy – Chennai,இந்தியா

சூட்டிங்கா… நான்கூட ஸ்டில்லோன்னு நினச்சேன்… சொல்லவே இல்லை……

_____________________

SURESH SUBBU – Delhi, இந்தியா

அஞ்சே நிமிஷத்துல ….. என் தாயெனும் கோவில காக்க மறந்துட்ட பாவியடி கிளியே ன்னு ஒப்பாரி வக்கிர அளவுக்கு கொண்டு வந்துட்டீங்களே….

____________________

Panchu Mani – chennai, இந்தியா

இவ்ளோ லட்ச கணக்கிலே பெண்கள் சாபம் கொடுக்கிறாங்களே. அம்மாவை உள்ள வச்சவங்க சந்ததிங்க எல்லாம் இந்த சாபத்திலேந்து பிழைக்கும் ன்னு நினைக்கறீங்க.

____________________

SURESH SUBBU – Delhi, இந்தியா

சாபம் குடுக்குறதுக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டாங்களே… அடிச்சாம் பாருயா அப்பாயின்மென்ட் ஆடர….. சூப்பர் டர்னிங் பாய்ன்ட்…. இதுக்கு தான் ஓவரா ஆட்டம் போட கூடாதுன்னு சொல்றது பஞ்சு மணி……. கூன்பாண்டிகள் இனி என்ன என்ன கூத்தெல்லாம் செய்யப்போரனுகளோ காமெடி ட்ரெக்லையே போனா பரவாயில்ல இனி சுப்ரீம் கோர்ட்டுல அப்பீல் பண்ணி விசாரணை வரைக்கும் செம ஜோக்க இருக்கும்

___________________

மதுரை விருமாண்டி – சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

உங்கம்மா சாராயத்தை ஊத்தி கெடுத்த கோடிக்கணக்கான குடும்பங்களில் உள்ள பெண்களின் கண்ணீர் தான்.. உப்பும் தான்.. இது டிரெய்லர் தாண்டி.. மெயின் பிக்சர் இன்னும் இருக்கு…..மலையளவு உப்புத் தின்னா, கடலளவு தண்ணி குடிக்கணும்…..

________________

நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா

மூக்கறுத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமா வந்த மாதிரி ஆயிப்போச்சி அடிமைகள் நிலைமை .அடிமைப் பட்டாளத்தில் மூளை உள்ளவன் எவனும் இல்லை. மூளையோடு யோசிச்சு எவனாவது ஏதாவது சொன்னாத் தான் மம்மிக்கு பிடிக்காதே….

______________________

Reality – Sohar, ஓமன்

ஜாமீன் கொடுக்காதது எவ்வளவு நல்லது உள்ளே இருப்பவர்களுக்கு ? வெளிய வந்து எப்படி இன்னும் சொத்து சேர்க்கலாம்னு யோசிக்க டைம் கிடைச்சிருக்கு. இப்பவே வந்தாங்கன்னா அதுக்கு டைம் இருக்காதே..

____________________

Tiruvannamalai KULASEKARAN – AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )

அட குருமட்டை குண்டாந்தடியன்களா……. நடப்பது அதி்முக ஆட்சிதான் என்பதை மறந்துட்டீங்களா? மூடர்கூடமே, தன்வீட்டுக்கு எவனாவது கொள்ளி வைப்பானா ……..அடடடா இந்த மர மண்டைங்களுக்கும் குத்தாட்டம் போடற ……பு ……..பு ……புண்ணாக்குகளுக்கும் புரியவே மாட்டேங்குதே…….. ?……..தூத்தேறி!

________________________

அ தி மு க வழக்குறைஞர்கள், இப்படி அறை வேக்காடு போல் பேசுவது சமூகத்திற்கு கேடு. நீதிபதியின் தீர்ப்பு ஆதார பூர்வமாக வெளியிடப்படாமல் எப்படி ஜாமீன் கிடைத்துவிடும் என்று கூறமுடியும். வழக்குறைஞர்கள் 16 வருடங்களில் 160 வாய்தாக்களுக்கு பிறகு செய்த வாதங்களாகிய, பினாமி பெயரில் லாபம் சேர்க்கவில்லை, நகையை உருக்கி நகை செய்தார் என்பதெல்லாம் நகைச்சுவையாகவே உள்ளது. இதை விட பெரிய நகைச்சுவை அரசு வழக்குறைஞரின் பிற்பகுதி “ஆட்சேபனையின்மை ஒப்புதல்”. எத்தனை கோடி பேரம் பேசப்பட்டதோ “அம்மா” வுக்குத்தான் வெளிச்சம். தொண்டர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்து கெட்ட விஷயங்களை மட்டும் அனுபவிப்பவர்கள். அ தி மு க முக்கிய புள்ளிகள் போராட்டத்திற்காக பணம் செலவு செய்தாகிவிட்டது அதை எப்படி வசூல் செய்வது என்ற கவலையில் அழுது கொண்டிருக்கின்றார்கள். சிலர் வீட்டில் உள்ள தங்கத்தை “வைத்து” விளையாடிவிட்டனர். “அம்மா” நாளை வந்தவுடன் சரி செய்து விடுவார் என்று ஊமை கண்ட கனவாகிவிட்டது. மாரடித்து அழுதால் ரூ2000/- + சேலை, ஜெயா டி வி க்காக கூட்டத்தில் அழுது பேசினால் ரூ1000/- என்று பலான செய்திகள் கதில் விழுகின்றன. டாஸ் மாக் மற்றும் பிரியானி கடைகள் விற்பனையை ஆய்வு செய்தால் நிலவரம் விளங்கும்.

______________________

Debate 2M Narasimman Munusamy – Coimbatore,இந்தியா

2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் திரு எ ராஜா அடைக்கப்பட்ட போது செல்வி ஜெயலலிதா அவர்கள் சொன்னது என்னவென்றால் ராஜாவை விடக்கூடாது என்றார். அதே ஊழல் வழக்கில் சிக்கி உள்ள செல்வி ஜெயலலிதாவிற்கு மட்டும் ஏன் இந்த அவசரம். சட்டம் தனது கடமையை செய்யும். சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம்.

____________________

Tamizhmagan – Singapore, சிங்கப்பூர்

மற்ற குற்றவாளிகள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. சசிகலா மம்மிஜியின் உடன்பிறவா சகோதரி.. சுதாகரன் மம்மிஜியின் வயிற்றில் பிறக்காத ‘ரத்து’ ( மொதல்ல தத்து அப்பால ரத்து ) பிள்ளை.. இளவரசி மம்மிஜியின் உறன்பிறவா ஆசை அண்ணி.. மொத்தத்துல இவர்கள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. மம்மிஜியின் தலைமையிலான ‘மன்னார்குடி மாபியாவின் தன்னிகரில்லா தளபதிகள்.

____________________

வயதில் மூத்தவர் ஜாமீனில் வெளியே வந்தால்.. வயது குறைந்து இளமை பூத்து குலுங்குமா…இல்லை நோய்கள் தான் காணாமல் போய்விடுமா…வெளிய வந்தாலும் குற்றவாளி கைதி… உள்ள இருந்தாலும் குற்றவாளி கைதி… எருமை போடுகிற சாணியில் முன்னால வந்த சாணி என்ன பின்னால வந்த சாணி என்ன…. எல்லாமே ஒன்னு தான்னு ஜாமீன் குடுக்காம இருந்து இருக்கலாம்… ஆனால் ஜாமீன் கேக்குறதுக்கு வக்கீல் லாலு வீட்டு மாட்டு கொட்டகை வரை போய் இருக்கவேண்டாம்……

______________________

டேய் அப்ரசன்டேடிவ்களா.. …இது தீபாவளி நேரம்…. கைதிக்கு இது தலை தீபாவளி… மாமியார் ஊட்டுக்கு சசி கூட போய் இருக்காங்க….பரப்பன அக்ரஹாரத்து வாசல்ல பட்டரைய போட்டு முறுக்கு அதிரசம் எல்லாம் சுட்டு கொண்டு போய் குடுங்க…. சசிக்கு பல்வலி இருக்குறதுனால குலாப் ஜாமுன், ரசகுல்லா மாதிரி உறிஞ்சு சாப்பிடுர அயிட்டம் செஞ்சு குடுங்க… என்ன புரிஞ்சுதா…

_____________________

ரெண்டு பேரு வாதத்தை மட்டுமே கேட்டு, யாரு சிறப்பா வாதாடுறாங்களோ அவங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்றதுக்கு இது என்ன சாலமன் பாப்பைய்யா தலைமையில் நடக்குற பட்டிமன்றமாய்யா? நீதிபதிக்குன்னு எந்த சொந்த கருத்தோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீக கடமையோ இல்லையா? அரசு வக்கீல் ஆட்சேபிக்கலைன்னா, நீதிபதிகள் ஏன் எதுக்குன்னு யோசிக்க கூடாதா? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா? நீதிபதிகள் என்ன மம்மிஜி கட்சிகாரனுங்க மாதிரி கூமுட்டைகளா? வக்கீல்ன்ற பேருல ஒரு பொறம்போக்கு சொல்லுது ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தலைன்னு’ அப்ப என்ன ..றதுக்கு 35 வயசான ஒரு ‘பச்சை குழந்தையை’ மம்மிஜி தத்தெடுத்தாங்களாம்? இன்னொருத்தன் ‘அந்த திருமணத்திற்கு பல கோடி செலவழிக்க பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு’ வாதாடுறான். அவனை எதால அடிக்கிறது? ஒட்டுமொத்த நாடே பாத்து வாய் பொளந்து நின்னுச்சே.. எவன் அப்பன் வீட்டு காசுல இந்த ஆர்ப்பாட்டம் பண்றானுங்கன்னு கேட்டுச்சே.. கோடிக்கணக்கான பேரு இங்க பிச்சை எடுத்து இருக்குரானுங்க, அவனுங்க வயித்துல அடிச்சு ஆடம்பரம் பண்றீங்கலேடான்னு நாடே காரித்துப்புச்சே.. அது இந்த பொ.போ. வக்கீலுக்கு தெரியாதா? இதையெல்லாம் கேட்டுகிட்டு குற்றவாளிகள் நாலு பேரும் ‘உத்தம புத்திரர்கள்.. பத்தரை மாற்று தங்கங்கள்னு.. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்னு’ கூவறதுக்கு நீதிபதிகள் என்ன இவனுங்க கட்சிகாரனுங்களை மாதிரி மூளை மழுங்கடிக்க பட்ட ஆயுட்கால அடிமைகளா?

__________________________

Reality – Sohar,ஓமன்

எல்லா பயப்புள்ளைகளுக்கும் ஒரே நினைப்பு…எல்ல நீதிபதிகளும் நம்ம பல கட்சி மன்னன் உதவாக்கரை செம்பு நாட்டாமை சரத் குமாரு மாதிரி தீர்ப்பு வருமுனு……

__________________

SURESH SUBBU – Delhi,இந்தியா

அக்காவும் தங்கையும் பெங்களூரு சிறையில் …. காலில் விழுந்து கிடந்த அடிமைகூட்டம் புன்னகையுடன் சிம்மாசனத்தில் …. வக்கீல் வண்டுமுருகன் களோ ஜாமீனை லாலுவின் மாட்டு தொழுவத்தில் சென்று வாங்கும் அளவுக்கு மிக பெரிய சாணி உருண்டைகள்….. இதற்கு இவர்களுக்கு ஒருநாளைக்கு 25 லட்சம் தண்டம் வேறு அழ வேண்டும்…இனி இந்த வண்டுமுருகன்கள் டெல்லிக்கு ஓட வேண்டுமா… தீபாவளிக்கு உள்ளேவா வெளியேவா…ஆனால் அதற்குள் ….. பலகாரம் சுட்டு குடுக்க தொண்டர்கள் என்ற காட்டுமிராண்டிகள் சிறை வாசலில் கடை விரிப்பார்களே என் கண்ணாளா….. எண்ணெய் தேய்த்து விட சசி அருகே இருக்கையில் எண்ணெய் செக்கை பரப்பன அக்ரஹாரத்தில் போட்டு எண்ணெய் எடுப்பார்களே என் பிராண நாதா … தீபாவளி குளியலுக்கு மகாமக குளம் இல்லை … ஆனால் சசியுடன் ஜலக்கிரீடை உண்டு…..ஐயஹோ என்ன செய்வேன்… தாயே இது என்ன சோதனை…..

________________

vasan pon – Chennai, இந்தியா

மிக சிறிய ஒரு வெள்ளைக்காரனின் படை எப்படி மிகப்பெரும் இந்திய மக்களை ஆட்சி செய்தது என்ற கேள்விக்கு பதில் இப்பொழுது ஜெயலலிதாவின் கைது மூலம் கிடைத்துள்ளது. அன்று வெள்ளை காரன் நம்மளை ஆட்சி செய்கிறான் என்ற உண்மையே நம் முன்னோர்களுக்கு தெரியாமல் இருந்தது. அதை அவர்களுக்கு விளக்கி புரியவைக்கவே பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இருந்தும் ஒரு சிலரே புரிந்து கொண்டு வெள்ளையனை எதிர்த்தார்கள். அவர்கள் போதிய ஆதரவின்றி வெள்ளை காரனால் கொல்லப்பட்டார்கள். இதே போல் தான் இன்றைய நெலைமை உள்ளது. இன்று நம்மை ஆட்சி செய்பவர்கள் பெரும் கொள்ளையர்கள் என்ற எண்ணமே நம் மக்களிடம் இல்லை. இவர்களால் தான் இந்திய மக்கள் ஊரு விட்டு ஊரு ஓடி பிழைப்பு நடத்துகிறார்கள், இவர்களால் தான் சாலைகள் சரி இல்லை , இவர்களால் தான் பல்கலை கழகங்கள் தரமிழந்து உள்ளன, இவர்களால் தான் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக உள்ளனர், இவர்களால் தான் நாம் இன்னும் அயல் நாட்டினை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறோம், இவர்களால் தான் ஈழத்தில் நம் சகோதரர்கள் கொல்லப்பட்டார்கள் , இவர்களால் தான் பத்திரிகைகள் பொய் பேசுகின்றன, இவர்களால் தான் ஒழுக்கம் கெட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கிற உண்மையே நம் மக்களுக்கு புரியவில்லை. நாட்டின் முன்னேற்றம் முக்கியம் என்ற எண்ணம் இல்லாமல் தமக்கு கிடைத்த (தம் பணத்தில் ) இலவசங்களை பெருமையாக சொல்லி கேவலமான அரசியல் வாதிகள் கைது செய்யப்படுவது எதிர்ப்பது நம் மக்களின் அறியாமையை காட்டுகிறது. கருணாநிதியின் சாதனை தான் ஜெயா. அவர் செய்த ஊழலின் காரணமாக ஆட்சியில் அமர்ந்தவர் தான் ஜெயா. ஜெயா வின் ஊழல் அட்டூழியம் அராஜகம் இவற்றின் காரணமாக வாய்ப்பு பெற்றவர் தான் கருணாநிதி. இவர்கள் இருவருமே தமிழர்களுக்கு தீங்கிளைதவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்காக பரிதாப படுவது வெட்கப்பட வேண்டிய செயல்.

_____________________

debate 3நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா

இந்த ஜாமீன் வழக்கு ஒரு பதினெட்டு வருஷம் இழுக்கடிக்கப்பட்டா நல்லா இருக்கும். செரீனா கைது, சசிகலா கணவர் நடராசன் கைது, சுதாகரன் கைது, பாஸ்கரன் கைது, காடுவெட்டி குரு கைது, வீரபாண்டி ஆறுமுகம் கைது, ஆடிட்டர் கைது, வக்கீல் கைதுன்னு குண்டர் சட்டம் ன்னு சட்டத்தை கேவலமாக பயன்படுத்தியதுக்கு இப்போ அனுவவிக்குறார் 7402

___________________

ஊருல ஒரு நல்ல நீதிபதி இருந்தா உங்களுக்கெல்லாம் புடிக்காதே? எல்லோரும் நம்ம ரகுபதி மாதிரி கால்ல விழுந்து கும்பிட்டுட்டு தீர்ப்பு குடுத்தா, நீதி வென்றது, தர்மம் வென்றதுன்னு கூதாடுவிங்க….கர்மம்டா…..

___________________

diravida – chennai,இந்தியா

”சுதாகரன் பெரிய தொழில் அதிபர்.” – இதை கேட்டு ஜெயா கூட அவ்வளவு சோகத்திலேயும் வாய் விட்டு சிரித்து இருப்பார்.

________________

tamilselvan – london, யுனைடெட் கிங்டம்

ஒரு டிராபிக் போலீஸ் ஒருவனை சாலையில் சோதனை செய்கிறார் ….லைசென்ஸ் வைச்சி இருக்கியா ? வீட்டில் இருக்கு சார் …..இன்சுரன்ஸ் எடுத்து இருக்கியா….6 மாசம் முன்னாடியே எடுத்துட்டேன் சார் ….ஊது பாப்போம்…குடிச்சி இருக்கியான்னு தெரியனும்…குடிக்குற பழக்கமே இல்லே சார்…ஆனா ஊத மாட்டேன் சார் ………….இது தான் ஜெயலலிதா கேஸ் ….நிரபராதி என்றால்…எதுக்கு பேசிட்டு….டாகுமென்ட்ஸ் கொடுத்து….ஊதி காமிச்சிட்டு போக வேண்டியது தானே…..சொன்னதையே 18 வருஷமா சொல்லி கிட்டு….சின்ன புள்ள தனமா இல்லே…

_____________________

tamilselvan – london,யுனைடெட் கிங்டம்

பொய் வழக்கு என்றால்…அதை எதிர்க்கும் வல்லமை உங்கள் அம்மாவுக்கு இல்லையா ? 18 வருடங்கள் பொய் வழக்கை பார்த்தா 160 வாய்தா வாங்கினார் ? பொய் வழக்கை சந்திக்கும் திராணி இல்லையா ? ஒரு முதல்வரால் ஒரு பொய் வழக்கை எதிர்க்க முடியவில்லை என்றால்….ஒரு சராசரி குடிமகன் நிலை ? 18 வருடம் இழுத்தடித்து விட்டு இப்போது வயது ஆகிவிட்டது ஜாமீன் வேண்டும் என்று மனு……ஆக இறுதி வரை பொய் வழக்கு என்று சொல்லி கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் …

____________________

லாலு அவர்கள் ..ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு பற்றி கிண்டலாக வட நாட்டு செய்தி சானலுக்கு அளித்த பேட்டியில்….ஜெயலலிதா வைத்துள்ள ரூபாய் 42 லட்சம் மதிப்புள்ள 750 ஜோடி செருப்பின் மதிப்பு தான் என் சொத்தின் மதிப்பு என்று கூறினார்…அப்போது கடுங்கோபம் கொண்ட ஜெயலலிதா….. இன்று அதே லாலு வழக்கை மேற்கோள் காட்டி ஜாமீனுக்கு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையில்….

_____________________

Kasimani Baskaran – Singapore,சிங்கப்பூர்

வாழும் மனித தெய்வத்துக்கு இழைக்க பட்ட அநீதி காரணமாக நாளை திருப்பதி முதற்கொண்டு எல்லா தெய்வங்களின் கோவில்கள் கதவடைப்பு .. கிரணத்துக்கு மூடுவதற்க்கு இப்படி ஒரு காரணம் சொல்லி கூட பாமர மக்களை ஏமாத்துவாஙக…

___________________

Nava Mayam – New Delhi,இந்தியா

இவுங்க வழக்கையும் காப்பாத்திக்க தெரியலை , அப்பன் சுப்பனுக்கெல்லாம் கிடைக்கிற ஜாமீனும் வாங்க தெரியலை ….இவுங்கதான் காவிரிக்காகவும் , முல்லை பெரியாருக்கும் வாதிட்டு காவிரியையும் , முல்லை பெரியாரையும் மீட்டு தந்தாங்களாம் , இதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு…இந்த கேசை எப்படி அன்பழகன் திறம்பட நடத்தினாரோ அதேபோல தான் காவேரியிலும் , முல்லை பெரியாரிலும் நீதி மன்றங்களில் திமுக ஒரு அஸ்திவாரத்தை உருவாக்கி வைத்தது… காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாயுடுச்சி..

__________________

tamilan – Chennai,யூ.எஸ்.ஏ

பெங்களூருல பல்பு வாங்கினது பத்தாதா… டில்லிக்கு வேற போய் வாங்கனுமா … எதுக்கு இந்த அவசரம்… அங்கயும் வாங்குனா… அப்புறம் 4 வருஷம் கண்டிப்பா கம்பி எண்ணனும்… பதறுன காரியம் செதரிரும்… சொன்னா கேளுங்க…. நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு முறுக்கிக்கிட்டு நின்னீங்கன்னா…மொத்தமா நக்கிட்டு போயிரும்… இல்லை அங்கபோயும் பல்பு வாங்குவேன் என்ன பந்தயம் ன்னு கேட்டீங்கன்னா…. ஒன்னும் பண்ண முடியாது…best of luck……

____________________

பாதாளம் வரைக்கும் பாயும்ன்னு அசால்ட்டா இருந்துட்டோமேப்பா… பயபுள்ளைக பெஙகளுரு கோர்ட்டுகளை யெல்லாம் அதுக்கு கீழே கட்டி வச்சிருப்பானுக போலயிருக்கே…

_____________________

திருச்சி அதிமுக காலிகளை எதிர்த்து ம.க.இ.க சமர் !

6

David-Vs-Goliathசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்தவுடன் அ.தி.மு.க காலிகள் ஆங்காங்கே கலவரங்களில் ஈடுபட்டது நாம் அறிந்த ஒன்று. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமது அடிமைத்தனத்தை வெளிக்கொணரும் வகையில் பேருந்து எரிப்பு, மிரட்டி கடையடைப்பு, உண்ணாவிரதம், பால்குடம் எடுப்பது, என்று பல்வேறு அடாவடிகளை செய்து வந்தனர். அப்படி செய்வதை ‘வரலாற்றில்’ பதிவு செய்தால்தான் நாளை ‘அம்மா’வின் கடைக்கண் அருள் கிடைக்கும் என்பதால் சுவரொட்டிகளை ஒட்டியும், பிளக்சை கட்டியும் மக்களை சித்திரவதை செய்து வந்தனர்.

இடையில் சிறையிலிருக்கும் அம்மா தொடர்ந்து தொலைக்காட்சி சானல்களை பார்த்து வருவதால் அடிமைகள் மற்றும் ரவுடிகளின் குத்தாட்டம் தாங்கவொண்ணாத வகையில் பெருகி வந்தது. இந்த லீலைகளில் தங்களது அம்மா (ஜெயா) மீதான பாசத்தையும், கருணாநிதி மீதான வெறுப்பையும் உமிழ்ந்தார்கள். கூடவே தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா அவர்களையும் நாலாந்தர கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்தார்கள்.

இத்தருணத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக ஜெயா தண்டனையை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, எதிர்கட்சிகள் முதல் ஜெயாவை 24மணி நேரமும் எதிர்க்க விரும்பும் தி.மு.க வரை எவரும் வாய் திறக்காத அந்த தருணத்தில் ம.க.இ.க சுவரொட்டிகள் மக்களை சிந்திக்கவும் தண்டனை சரி என்ற பார்வையையும் உண்டாக்கியது.

திருச்சியில் புரட்சிகர அமைப்புகளும்,சட்டக்கல்லூரி மாணவர்களும் ஒட்டிய சுவரொட்டிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. நிறைய பேர் வாழ்த்தியுள்ளனர். நீங்கள் மட்டும்தான் துணிச்சலுடன் எதிர்க்கிறீர்கள் என உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் மறுநாள் இரவு அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையினரும், அ.தி.மு.க ரவுடிகளும் கிழித்தெரிந்தனர். சுவரொட்டியிலுள்ள தொடர்பு எண்ணுக்கு போன் செய்த காவல்துறை, யார் போஸ்டர் ஒட்டியது? யாரை கேட்டு ஒட்டினீர்கள்? என்று அதிகாரத்துடன் கேட்டது. பதில் அளித்த தோழர் நிதானமாக ”நாங்கள்தான் ஒட்டினோம் போஸ்டர் ஒட்ட யாரைக் கேட்க வேண்டும்? என திருப்பி கேள்வி கேட்டார். உடனே திருச்சி போலீசு ”இல்ல சார், இந்த நேரத்தில இது ஏன் சார்! அ.தி.மு.க காரங்க உங்க மேல நடவடிக்கை எடுக்க சொல்றாங்க அதான்…. என்று கூறியது.

”மக்கள் மத்தியில் கலவரங்களை ஏற்படுத்தியும், நீதிபதியின் தீர்பை எதிர்த்து நீதிபதியையே கேவலமாக விமர்சிக்கும் அ.தி.மு.கவினரை முதலில் கைது செய்யுங்கள்” என தோழர் கூறவே ”சார் இப்ப அவங்க நடவடிக்கை எடுக்க சொல்றாங்க” என மீண்டும் காவல்துறை அதிகாரி தயங்க, ”நீங்க என்ன செய்யனுமோ செய்யுங்க, நாங்க என்ன செய்யறோம்னு பாருங்க” என தோழர் கூறியதும் ”சரிங்க சார்” என கூறி அழைப்பை துண்டித்தனர்.

இதே போல் பொன்மலை இரயில்வே பணிமனை டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் சேக் மகமூத் என்பவர் ஜெயலலிதாவிற்க்கு வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்றும் தீர்ப்பை வழங்கிய நீதிபதி குன்ஹா அவர்களை பாராட்டியும் சைக்கிள் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்னொருபுறம் இத்தீர்ப்பை கண்டு மக்கள் கொதித்து போய் உள்ளனர் என்றும் எந்த பண்டிகையையும் கொண்டாடாமல் துக்கத்தில் உள்ளனர் என்றும் ஜெயா குழும செய்தி ஊடகங்கள் வாந்தி எடுத்து வரும் நிலையில் மக்கள் வழக்கம் போல இயல்பாக தங்களது வேலைகளை பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, பக்ரீத் என தொடர்ந்து அவரவர் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டுதான் உள்ளனர்.

வரப்போகின்ற தீபாவளி பண்டிகைக்கு துணிவாங்க திருச்சி மெயின்காட் கேட், தெப்பக்குளம் பகுதிகளில் மக்கள் அலை வழக்கத்தைவிட அதிகமாகத்தான் தென்பட்டது. இவர்கள் ஜெயா டிவி மூலம் கூறும் கட்டுக் கதைகள் மக்களிடமே நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் ஜெயாவை பகைத்துக் கொள்ள ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும், கார்ப்பரேட் தமிழ் ஊடகங்களும், தயாரில்லாத போது புரட்சிகர அமைப்புகள் துணிச்சலாக களத்தில் இறங்கியிருப்பது அவர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் வண்ணமாக அமைந்ததுள்ளது.

பின் குறிப்பு:

ஊழலை எதிர்ப்பதற்காகவென்றே ஒரு கட்சியை உருவாக்கிய அரவிந்த் கேஜ்ரிவாலையும் அவரது ஆம் ஆத்மி கட்சியையும் எங்கு தேடியும் காணவில்லை என்பது ஜெயா கைது எனும் காப்பியத்தின் காமடி டிராக். சட்டப்படி குறைந்தபட்ச தண்டனை பெற்றதற்கே சாமியாடும் ஊழல் ராணியின் கலவரத்தில் காணாமல் போன அவர்களை கண்டுபிடித்து உதவுமாறு தமிழக மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சியை அசிங்கப்படுத்திய அதிமுக அம்மா ரவுடிகளின் சுவரொட்டிகள்
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

அதிமுக ரவுடிகளை எதிர்த்து சுவரொட்டி இயக்கம்:
படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்…

மக்கள் பண்டிகைகளை கொண்டாடாமல் சோகமாக உள்ளதாக உளறும் ஜெயா டிவியின் பொய்களை திரைகிழிக்கும் படங்கள், மக்கள் கூட்டம் அலை மோதும் திருச்சி கடை வீதிகள்….படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்..

____________________________
செய்தி: ம.க.இ.க., திருச்சி கிளை
____________________________

தீவிரவாதம் குறித்து கவலைப்படும் காவி பயங்கரவாதிகள்

0

 

தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கவலைப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் சுயரூபம் எது?

rss- cartoon

கேலிச் சித்திரம்: ஓவியர் முகிலன்

ஜெயாவுக்கு பிணை மறுப்பு : ஊடக, அதிமுக அடிமைகள் அதிர்ச்சி

7

jaya-sasi-6“தெய்வத்திற்கு மனிதன் தண்டனையா” எனும் தமிழ் சினிமா முதலாளிகள் வெளியிட்ட சுவரொட்டிதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் மிகவும் பிரபலம். இதை தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்படியோ ரூம் போட்டு டிஸ்கஷன் செய்து வெளியிட்டிருந்தாலும் அது சொல்ல வரும் பொருள் வெறும் ‘கற்பனை’ அல்ல.

ஆம். ஜெயலலிதா எனும் ‘அம்மாவின்’ நடவடிக்கைகளை இந்த நாட்டின் சட்டம், நீதிமன்றம், அரசு எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு அம்மாதான் இவற்றை ஏதோ பார்த்து கட்டுப்படுத்துவார் அல்லது கருணை காட்டுவார். இது அதிமுக அடிமைகளின் மனநிலை மட்டுமல்ல அந்த ரவுடிக் கூட்டம் போடும் ஆணையும் ஆகும்.

இப்படித்தான் முழு தமிழகத்திலும் போலீசு ஆதரவுடன் இவர்கள் வன்முறையை செய்து வருகிறார்கள். இந்த கிரிமினல் கூட்டத்திற்க்கு தம்பிராஸ் – பிராமணர் சங்கம் துவங்கி, கல்வி-பேருந்துக் கொள்ளையர்கள் வரை பல்வேறு பங்காளிகள் ஆதரவு ஷோக்களையும் நடத்தி வருகின்றனர்.

இதற்கு மேல் நீதிபதி குன்ஹாவையும், கர்நாடக அரசையும், ஏன் கன்னட மக்களையும் வைது, திட்டி, மிரட்டி சுவரொட்டிகளையெல்லாம் வெளியிட்டு வருகிறார்கள். அனைத்திலும் ஊடும் இழை ஒன்றுதான். அம்மாவை பிணையில் வெளியிடாவிட்டால் நடப்பதே வேறு!

இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை ஜெயாவின் ஆதரவு அலையாக சித்தரித்து தமிழ் ஊடக முதலாளிகள் கவனமாக செய்திகளை தயாரித்து, வார்த்தைகளை தேடிப் போட்டு கருத்துக் கச்சேரிகளை செய்து வருகின்றனர். இவையெல்லாம் சேர்ந்து இன்றைய பிணை வழக்கின் எதிர்பார்ப்பை எகிற வைத்தன என்பதை விட எரிய வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

ஜெயாவுக்கு எல்லா வசதிகளையும் சிறையில் செய்து கொடுப்பதால் அதிமுக மற்றும் காங்கிரசு கட்சிகளிடையே நல்லுறவு மலருவதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டது. இது ஏதோ அரசியல் ஆய்வு என்று நினைத்தால் நீங்கள் ஏமாளி. எப்படியாவது அம்மாவுக்கு பெயில் கிடைத்தால்தான் மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணுவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும் என்பதால் எழுதப்பட்ட சாணக்கிய வார்த்தைகள்.

மஹாவிஷ்ணுவே இப்படி என்றால் தந்தி, தலைமுறை போன்ற லோக்கல் சாமிகளின் அடிமைத்தனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இன்றைக்கு மதியம் அனைத்து தமிழ் ஊடக இணைய தளங்களிலும் ஜெயலலிதாவுக்கு நிபந்தனையின் பேரில் பிணை வழங்கப்பட்டது, அதிமுகவினர் கொண்டாட்டம் என்ற செய்தி முதலில் வெளியிடப்பட்டது. இதை உண்மை என நம்பி இலண்டன் வாழ் தமிழ் பிபிசி இணைய தளம் கூட அப்படியே காப்பி எடுத்து வெளியிட்டது.

பிறகு மக்கள் அந்த செய்திகளின் இணைப்பில் அமுக்கி பார்த்தால் பக்கங்களை காணவில்லை என்று பார்த்து குழம்பி போனார்கள். ஏன்? உண்மையில் ஜெயலலிதாவுக்கு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் தெளிவாக கூறிய போதும் இந்த நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட ஊடக முதலாளிகள் மாற்றி பேசியது ஏன்?

எப்படியும் அம்மாவுக்கு பிணை கிடைக்கும், கிடைக்க வேண்டும், கிடைத்தே ஆகும் என்பதே இவர்களின் முடிவு. ஆகவே நீதிமன்றத்தில் ஏதோ சிறு அறிகுறி தெரிந்ததை வைத்தே பிணை என்று கொளுத்திப் போட்டு விட்டார்கள். இவர்கள் கி போர்டில் கொளுத்திய போது அதிமுக ரவுடிகள் பரப்பன அக்ஹரகார வளாகத்தில் சிவகாசி வெடிகளை போட்டு கொண்டாடினார்கள்.

பிறகு மழை பெய்யாமலே வெடிகளும் வார்த்தைகளும் நமத்துப் போய்விட்டன. அதன் பிறகு ஊடக இணைய தளங்களில் ஒன்றுமே நடக்காதது போல, முதலில் பிணை என்று செய்திகள் வந்தன, பிறகுதான் நீதிபதியின் உத்திரவு கிடைத்தது என்று நாங்களெல்லாம் யோக்கியனாக்கும் என்று மேக்கப் போடாமலேயே வேடத்தை மாற்றினார்கள். இந்தக் கூத்துக்கள் காட்டுவது என்ன?

முதலில் சொன்னது போல இந்த சட்டம், நீதி அனைத்தும் அம்மாவுக்கு பொருந்தாது. கல்விக் கொள்ளையர்களும், ஆம்னி பேருந்துக் கொள்ளையர்களும், ஊடகக் கொள்ளையர்களும் ஏக மனதாகவே அம்மாவை ஆதரித்து பேசுகிறார்கள், வேலை நிறுத்தம் செய்கிறார்கள், உண்ணாவிரதம் நடத்துகிறார்கள் என்றால் அம்மாவின் ஆட்சி யாருக்கானது?

ஏழைகளுக்கு – அதுவும் எல்லா ஏழைகளுக்கும் அல்ல – ஒரு ரூபாய் இட்டலியை கொடுத்து விட்டு சுயநிதிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் தமிழகத்தை கொள்ளையடிக்கலாம் என்றால் அவர்கள் ஏன் அம்மாவிற்கு போராட மாட்டார்கள்?

எங்கே பிராமணன் என்று சோ எழுதிய தொடரை வைத்து இலட்சியவாத பார்ப்பனர்களை அடிப்படையே இல்லாமல் பேசி அழகு பார்த்த பிராமண சங்கம் இன்று பச்சையாக பாசிச ஜெயாவின் கொள்ளையை ஆதரிக்கிறது என்றால் அதுதானே இலக்கண சுத்தமான பார்ப்பனியம்!

இன்று பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் வரிசைப்படி 72வது எண்ணில் இருந்த ஜெயாவின் பிணை கோரும் வழக்கை முதலிலேயே விசாரிக்க வேண்டும் என்று ஜெயா தரப்பு கோரியது. காரணம் தெய்வத்தின் வழக்கை காத்திருந்து விசாரிக்க கூடாதாம். இது மிகவும் அவசரமான வழக்கு என்றெல்லாம் அவர்கள் முழங்கினார்கள். மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஒரு தலைவியின் பிணை கோரும் வழக்கு மிகவும் அவசரம் வாய்ந்தது என்றால் இதில் எதய்யா அவசரம்? ஊழல் நடவடிக்கைகளை ஒழிப்பதில் அவரசம் காட்டினால் அதை ஏற்கலாம். மாறாக அதை ஆதரிப்பதே அரசியல் அவசரம் என்றால் அந்த அரசியலின் யோக்கியதைதான் என்ன?

எனினும் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயா தரப்பு கோரிய விஐபி அவசர முக்கியத்துவத்தை நிராகரித்து விட்டது. வரிசைப்படி வாருங்கள் என்று நெற்றியடியாக சொல்லியதுமே ராம் ஜேத்மாலினியின் மனதுக்குள் குருவி சொல்லியிருக்க வேண்டும் – ஏதோ தப்பு நடக்கப் போகிறதே என்று.

வரிசைப்படிதான் அம்மா வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் ஏன் அவர்கள் வரிசையை மீற முயன்றார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை. கியூ வரிசை எல்லாம் மக்களுக்குத்தான் என்பதால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை.

jayaposterராம் ஜேத்மாலினி இந்த வயதிலும் பல்வேறு வழக்குகளின் சான்றுகளை எடுத்துக் கூறி அம்மாவை பிணையில் வெளியிட வலியுறுத்தினார். லாலு மீதான கால்நடை தீவன வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கினாலும் உச்சநீதிமன்றம் பிணையில் வெளியட்டதையெல்லாம் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த வழக்கின் பல்வேறு விவரங்களை எல்லாம் நீதிபதி குன்ஹா ஆழமாக பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிடவும் செய்தார்.

ஜெயா சட்டத்தை மதித்து நடப்பவர், பிணையில் வந்தால் எங்கேயும் தப்பி ஓட மாட்டார், இந்த வழக்கு நடைபெற்ற 18 ஆண்டுகளில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று அம்மாவின் நன்னடத்தைக்கு பட்டியல் போட்டார். ஆனால் வழக்கு ஏன் 18 ஆண்டுகள் நடைபெற்றது என்ற கேள்வியைக் கேட்டால் இதற்கு நேரெதிராகத்தான் பதில் சொல்ல முடியும். வழக்கறிஞரை மாற்றுவது, நீதிபதியை மாற்றுவது, தொட்டதுக்கெல்லாம் உச்சநீதிமன்றம் சென்று தடை பெறுவது என்று சட்டம் ஒரு இருட்டறை மட்டுமல்ல, அம்மாவின் விளையாட்டறையும் கூட என்று நீருபித்தவர் ஜெயா. இவர் சட்டத்தை மதித்து நடப்பவர் என்றால் அந்த சட்டமே விழுந்து விழுந்து சிரிக்கும்.

ஆரம்பத்தில் ராம் ஜேத்மாலினியின் வாதங்களை வேறு வழியின்றி எதிர்த்துப் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், மதிய உணவுக்கு பிறகான அமர்வில் நிபந்தனையின் பேரில் பிணை வழங்கினால் ஆட்சேபமில்லை என்று ஆசை காட்டினார். இந்த ஆசைதான் பேராசையாக வெளியே வதந்தியாக மாறி, மஹாவிஷ்ணு, பிபிசி வரை அம்மாவுக்கு விடுதலை என்று அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.

காலையில் பேசும் போது ஜெயா வெளியே வந்தால் சாட்சிகளை கலைப்பார், தப்புவார் என்றெல்லாம் பேசிய பவானி சிங் மாலையில் மாற்றிப் பேசியது ஒன்றும் அதிசயமல்ல. ஏற்கனவே இவர் போங்காட்டம் ஆடும் போது நீதிமன்றம் அபராதம் விதித்து சந்தி சிரிக்க வைத்ததால் பவானி ரொம்ப மலிவாக நடக்க முடியவில்லை. கொஞ்சம் யோக்கியனாகவும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருந்தது. குற்றவாளி ஜெயாவுக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுவதற்கு முன்னரே பவானி சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது முக்கியம்.

இறுதியில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயாவை விடுதலை செய்வதற்கான முகாந்திரங்கள் எதுவும் இல்லை, ஊழல் என்பது அடிப்படை மனித உரிமைகளை மறுப்பது என்றெல்லாம் விளக்கி பிணையை மறுத்திருக்கிறது. மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை தடை செய்யக் கோரிய மனுக்களையும் ரத்து செய்திருக்கிறது.

இனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என ஜெயா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு கூறியிருக்கிறது. ஊடகங்களில் இந்த பிணை மறுப்பு அநீதி என நாளையே சிறப்பு கட்டுரைகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

சென்னையில் உள்ள கன்னட மக்களை சிறை பிடிப்போம் என சுவரொட்டி போட்ட அதிமுக ரவுடிகள் இனி அடுத்த கட்டமாக என்ன ரவுடித்தனங்களை செய்யலாம் என்று ஆலோசிப்பார்கள். காவிரிப் பிரச்சினையின் போது கன்னட வெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் செய்தது போல இப்போதும் நடந்தால் அம்மாவின் ஊழல் வழக்கை இரு தேசிய இன மக்களின் மோதலாக மடைமாற்றி ஆதாயம் அடையலாம் எனும் அவர்களின் திட்டம் ஃசெல்ப் எடுக்கவில்லை.

தமிழகத்தில் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்து இனி பாக்கி ஒன்றுமில்லை என்று வந்தாலும் புதிய வன்முறை வெறியாட்டங்களை அம்மா ரவுடிக் கூட்டம் அரங்கேற்றம் செய்யும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதாய் சீன் போடும் காவல்துறை இந்த வன்முறையை வேடிக்கை பார்த்து விட்டு எதிர்ப்போரை மட்டும் கைது செய்து உள்ளே தள்ளும். அதிமுக ரவுடித்தனத்தை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்கே மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பாசிச ஜெயா அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தாலும் அவரது பாசிச கும்பலின் ஆட்சி இங்கே சுதந்திரமாக நடமாடுகிறது. இதை சிறை பிடிக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.

நியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?

104

new york times buildingசெவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய செயற்கை கோள் மங்கள்யான் குறித்து நினைவிருக்கலாம். இல்லை நினைவில் இருந்தே ஆக வேண்டும் என இந்திய ஊடகங்கள், இந்துமதவெறியர்கள் இதை மாபெரும் தேசிய சாதனையாக கருத்துப் பரப்பலில் திணித்திருந்தார்கள்.

மங்கள்யான் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது. அந்த சித்திரத்தில் எலைட் ஸ்பேஸ் கிளப் (பணக்கார நாடுகளுக்கான விண்வெளி கழகம்) என்ற பெயரிட்ட அறையில் இரண்டு நவநாகரீக வெள்ளையின கனவான்கள் செய்தித்தாள் படிக்கிறார்கள். அந்த நாளிதழில் செவ்வாய்க்கு அனுப்பும் இந்திய திட்டம் எனும் தலைப்புச் செய்தி இருக்கிறது. அறையின் வெளியே ஒரு இந்திய விவசாயி மாட்டை கையில் பிடித்தபடி கதவை தட்டுகிறார். இதுதான் கேலிச்சித்திரம் கூறும் பொருள்.

செப்டம்பர் 28-ம் தேதி இதழில் இது வெளியானது. சிங்கப்பூரை சேர்ந்த ஹெங் கிம் சாங் என்ற ஓவியர் வரைந்த இந்த கேலிச்சித்திரத்திற்கு இனிமேல் விண்வெளி பயணங்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்ல ஏழை நாடுகளுக்கும் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டுவதாகவே நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. உண்மையும் அதுதான். அதாவது கொஞ்சமாவது  கார்ட்டூன்களை ரசிக்கும் அறிவு இருக்கும் எவரும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

ny-times-cartoonஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாக்கப்பட்ட பல அம்பிகளுக்கு இந்த பொருள் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட பழைய பணக்காரர்கள் முன்னால் ஒரு புதுப் பணக்காரனுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அல்லது தனது நாட்டில் உள்ள ஏழைகள் மீதான வன்மம் இரண்டும் சேர்ந்து இந்த கேலிச்சித்திரத்தை எதிர்க்க வைத்திருக்கிறது.

அதை சாமர்த்தியமாக கேலிச்சித்திரத்தில் நிறவெறி இருப்பதாகவும், அதன் மூலம் நாடுகளுக்கிடையில் பிளவு ஏற்படுத்த முயல்வதாகவும் கூறி இந்திய அம்பிகள் மற்றும் அம்பிகளாக மாறும் பயணத்தில் உள்ள தம்பிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பத்திரிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு நிலைச்செய்தியின் மறுமொழிகளுக்கான இடத்தில் கூட்டமாக படையெடுத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். அதிலும் மலையாள மொழியில் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன.

ஆக அம்பிகளாகும் இலட்சியப் பயணத்தில் மலையாள ஃபாரின் சேட்டன்கள் முன்னணி வகிக்கின்றனர். தமிழோடு நெருக்கமான பிணைப்பில் உள்ள மலையாளம், சம்ஸ்கிருதமயமாகி தனித்துவத்தை இழந்தது போல மலையாள தேசமும், இந்துத்துவம் முன்வைக்கும் போலி தேசியப் பெருமிதத்தின் பரவசத்தில் உண்மைகளை பார்க்க மறுக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்
ஆண்ட்ரூ ரோசன்தால் – நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்

எது எப்படியோ அம்பிகளின் படையெடுப்பிற்கு பின்னர் நியூயார்க் பத்திரிகையின் தலையங்கப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசன்தால் தனது முகநூல் பக்கத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பல வாசகர்களிடமிருந்து கண்டனங்கள் வரவே இந்த மன்னிப்பை கேட்பதவாகவும், ஓவியர் ஹெங் சர்வதேச விவகாரங்களை, வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வரைவதில் வல்லவர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இருப்பினும் அம்பிகளுக்கு இது புரியாது என்பதால் அவர் தெரிவு செய்த ஓவியத்தால் புண்பட்ட வாசகர்களிடம் பத்திரிகை மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி ஓவியம் இந்தியா, அதன் மக்கள், அரசு ஆகியவற்றை தவறாக சித்தரிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அதாவது ஓவியம் தவறாக யாரையும் புண்படுத்தவில்லை என்றாலும் புண்படுத்தியதாக உணரும் முட்டாள்களிடம் மன்னிப்பு கேட்பதால் இந்த மன்னிப்பு உண்மையில் மன்னிப்பு அல்ல எனவும் கூறலாம்.

கேலிச்சித்திரத்தில் வட இந்திய விவசாயி போல உடையணிந்து தலைப்பாகை அணிந்திருக்கிறார் அந்த விவசாயி. சமீபத்திய இந்திய வளர்ச்சி பற்றி அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை என்று ட்விட்டரில் சிலர் கூறியிருக்கின்றனர். அதுவும் மோடி அமெரிக்காவில் இருக்கையில் இந்தப் படம் வெளியானது அவமானம் என்கிறார்கள் சிலர். இந்தியாவில் ஒரு விவசாயி இப்படித்தான் இருப்பார், இதுவே இந்தியாவின் தேசிய அடையாளம் என்பதையே இந்த அம்பிகள் ஏற்கவில்லை. ஏற்காததோடு அந்த உண்மையை அருவெறுப்பாகவும், இழிவாகவும் வன்மத்துடனும் பார்க்கிறார்கள்.

இந்தியா கிராமப்புறங்கள் நிறைந்த நாடு, விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு என்று ஒன்றாம் வகுப்பு முதல், முனைவர் ஆய்வு வரை உருப்போட்ட ஜென்மங்களுக்கு அதை ஒரு ஓவியத்தில் இந்தியாவின் வகை மாதிரியாக பார்க்கும் போது கோபம் வந்தால் என்ன பொருள்? இந்திய விவசாயிகளை இவர்கள் எவ்வளவு இழிவாகவும், மட்டமாகவும் பார்க்கிறார்கள் என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை காந்தி படத்தை போடுவதாக இருந்தால் கூட கோட்டு சூட்டு போட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று இவர்கள் கேட்டாலும் கேட்க கூடும்.

காந்திய பக்தர்களே அப்படித்தான் கோட்டு சூட்டு போட்டு கல்யாணம் செய்யும் போது கோட்டு சூட்டு ஊரில் பிழைக்க போன அம்பிகள் வேட்டி, சட்டை, தலைப்பாகையை மட்டமாக பார்க்கத்தான் செய்வார்கள். இதில் சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்த நீதிபதியை விட மறுத்த மேட்டுக்குடி வன்மமும் பொருத்தமாக இணைந்திருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஹெங் கிம் சாங்
சிங்கப்பூரைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஹெங் கிம் சாங்

இந்தியா என்றால் அங்கே இருக்கும் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் போன்றோர்தான் உண்மையான பிரதிநிதிகள் என்பதை மறுத்து ஷாப்பிங் மால்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நவநாகரீக உடைகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் இதர ஆடம்பரங்களத்தான் இவர்கள் ரோல் மாடல் காட்சிகளாக பார்க்கிறார்கள்.

மெரினா கடற்கரைக்கு காலை நடை வரும் கார் மனிதர்களுக்கு நொச்சிக் குப்பம் மீனவர்கள் அழுக்குருண்டைகளாக தெரிவது போல அமெரிக்க அம்பிகளுக்கும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. பார்ப்பனியம் போற்றும் இந்திய ஞான மரபின் உள்ளொளிகளை விதந்தோதும் எழுத்தாளர் ஜெயமோகனும் கூட கேரள மீனவர்களை இத்தகைய குப்பை கூட மனிதர்களாகத்தான் அறம் பாடியிருக்கிறார். எழுத்தாளருக்கே இப்படி என்றால் அவர் வரிகளை படிக்கும் அமெரிக்க அம்பிகளுக்கு இந்திய ஏழைகள் மீது எவ்வளவு எகத்தாளம் இருக்கும்?

படத்தில் உள்ள நவநாகரீக வெள்ளையர்கள் மாடு மேய்க்கும் நாடெல்லாம் விண்வெளி ஆய்வுக்குள் வந்து விட்டால் என்ன செய்வது என்று இனவெறியை வெளிப்படுத்துகிறார்கள் என சிலர் விளக்கமளிக்க கூடும். அப்படிப் பார்த்தாலும் அது மேற்குலகின் மேல் உள்ள விமரிசனமாகத்தான் ஓவியர் வரைந்திருக்கிறாரே அன்றி அதில் இந்தியாவை இழிவு படுத்துவது எது? இப்படி பார்த்தால் சார்லி சாப்ளின் படங்களில் வரும் காட்சிகளில் ஏழைகள், வேலையற்ற இளஞர்கள், உதிரிகள் இழிவு படுத்தப்படுவதாக ஒருவர் கூறலாமே? உண்மையில் சாப்ளின் இத்தகைய எளிய மனிதர்களை அலைக்கழிக்கும் மேட்டுக்குடியினரைத்தானே கேலி செய்கிறார்?

இது புரியாதவனெல்லாம் அமெரிக்கா போய் என்ன கிழிக்கிறான் என்றே தெரியவில்லை.

முகநூலில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அச்சிடும் இதழிலும் மன்னிப்பு வெளியாக வேண்டும் என்கிறார் ஒரு முகநூல் அம்பி. நாசாவில் பணியாற்றுபவர்களே பலரும் இந்திய விஞ்ஞானிகள் தான் என்று அந்த பத்திரிகைக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொருவர். பத்திரிகையின் இணைய பக்கத்தில் இருந்து அந்த கேலிச்சித்திரத்தை நீக்கும்படி பல முகநூல் பயன்பாட்டாளர்கள் இன்னமும் கோரி வருகின்றனர். நாங்கள் இன்னமும் மாடு மேய்த்துக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் எழுதியிருக்கின்றனர். சிலர் மாட்டுடன் செவ்வாய் பயணத்துக்கு தயாராக இருப்பதாக மாட்டுடன் தங்களது புகைப்படத்தைப் போட்டுள்ளனர். சரண்யா ஹரிதாஸ் என்ற பிளாக்கர் ‘எந்த ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியும் இந்த விவசாயி போல டர்பன் உடை அணியவில்லை’ என்று காட்டாமாக வேறு சொல்லியிருக்கிறார்.

இதெல்லாம் சேம் சைடு கோல் என்று கூட இந்த என்ஆர்ஐ மோகத்திலுள்ள அம்பிகளுக்கு புரியவில்லை.

அமெரிக்கா நம்மை இழிவுபடுத்துகிறது என்றால் அந்த கோபம் போபால் விபத்தில் வந்திருக்க வேண்டும். அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் போது எதிர்த்திருக்க வேண்டும். ஈராக்கையும், ஆப்கானையும் குதறியிருக்கும் போது பேசியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் மேல் கீழ் வாய்களை மூடிக் கொண்டு இப்போது ஒரு விவசாயியின் உடையை பார்த்து வன்மத்துடன் கத்தினால் இவர்களை என்னவென்று அழைப்பது?

இந்த கார்ட்டூனில் இனவெறி இருப்பதாக பம்மாத்து காட்டுபவர்களுக்கு  இந்தியாதான் தீண்டாமையின் தலைநகரம் என்ற உண்மை தெரியுமா? அது கயர்லாஞ்சியாக, திண்ணியமாக, கொடியன்குளமாக, பரமக்குடியாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இனவெறி இருப்பதாக சொல்லி ஒரு அமெரிக்க பத்திரிக்கையை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றால், அதுதான் காலந்தோறும் பார்ப்பனியம்!

தப்பு செஞ்சா உள்ளே வைப்பாங்க – இவனுங்க ஏன் ஆடுறானுங்க ?

4

ய்யோ, “அம்மா” கைது! என்று அதிமுகவினர் மட்டும் அலறுகின்றனர் என்று பார்த்தால், படித்த மேல்தட்டு  வர்க்கமும் அலறுவதை கண்டு அரண்டுவிட்டேன்.

தீர்ப்புக்கு முன் நாளே, பத்திரிக்கைகளும்,காணொளிகளும் கூட்டு ஒப்பாரிக்கு தயாராகின. மறுநாள்…, “தீர்ப்பு  இன்னும் சற்றுநேரத்தில், இன்னும் சற்றுநேரத்தில் என்று கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவர் போல சூடேற்றினர்.” கடைசியில் முதல்வர் ஜெயலலிதா கைது” என்று தீர்ப்பும் வந்தது.

இத்தீர்ப்பிக்கு பிறகு ஒரு வாரகாலமாக காஞ்சிபுர நகரின் பேருந்துகளிலும், சுற்றாத்தாரிடமும், வேலையிடத்திலும்,பயணிக்கும்போதும் கண்ட காட்சிகள், கேட்ட கருத்துக்கள்…

“அம்மா” கைதின் எதிரொலி எல்லா டாஸ்மாக்கையும் திக்கு முக்காட வைத்தது.மூச்சு முட்டும் கூட்டம்.

காஞ்சிபுரம் 4காஞ்சிபுரம் கம்மாளத் தெருவில் பஸ் எரிப்பு, ஏற்கனவே எம்.பி. தேர்தல் முடிவுக்கு முன்பே, “அ.தி.மு.க வெற்றி”  என்ற பேனர் வைத்த காஞ்சிபுரம் புல்லட் பரிமளம், இப்போதும் தீர்ப்புக்கு முன்பே “அம்மா வழக்கில் வெற்றி” என்று பேனர்  வைத்தார். “அம்மா”விடம் நல்ல பேர் வாங்கத் துடித்த, “புல்லட்” பரிமளம், தானே, தீக்குளித்து இருக்கலாம், இல்லை, தனியார் பஸ்சை கொளுத்தி வீரம் காட்டி இருக்கலாம்,  ஆனால்,அம்மா அரசு தன்னை எதுவும் செய்யாது என்று தெளிவாக தெரிந்துக் கொண்டு அரசு பஸ்சைக் கொளுத்தி  வடிவேலுப் போல”நானும் ரவுடிதான்” என்று பெயர் வாங்கிகொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை காலை…

காஞ்சிபுரம் பேருந்து நிலையம்,எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு மருந்துக் கடையை திறக்கலாமா? வேண்டாமா? என்று எட்டிப் பார்த்துக்  கொண்டிருந்தார்கள் அதன் ஊழியர்கள்.  அப்போது, இருசக்கர வாகனங்களில் அதிமுக கொடியுடன்  வெறியோடு, வந்த 30க்கும் மேற்பட்ட கும்பல், “ஏய் கடையை மூடு”, என்று நாக்கை மடித்து துருத்தி கட்டளையிட்டனர். வேடிக்கைப் பார்த்தது  அங்கிருந்த போலீசு.

பயணி ஒருவர், “பஸ் எதுவும் போகலை, ஷேர் ஆட்டோக்களும் போகல… பஸ் போகாதா?”, என்றார், நடத்துனரிடம். “பஸ் போகாதானு கேப்பீங்க, போனா கொளுத்துவாங்க, நாங்க என்ன செய்யறது? நாங்க இந்த  விளையாட்டுக்கு வரலை” என்றார், நடத்துனர்.

ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (3)அந்த குழப்பத்தில், ஆட்டோ எடுத்த ஆட்டோகாரர், நாங்கள் சொன்ன இடத்திற்கு சவாரி ஏற்றிக்  கொண்டார். காரணம், ஆட்டோவில் பயணிகள் இருந்தால், தன் ஆட்டோவை பத்திரமாக வீடு சென்று சேர்த்துவிடலாம்  என்ற நம்பிக்கை.

“அம்மா”வின் கைதை வீட்டிலிருக்கும் பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள உறவுக்கார  செல்வியிடம் பேச்சுக் கொடுத்தேன்… “ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டுட்டாங்களாம்!” என்றேன். அதற்கு அவர்,  “போட்டது தப்புதான், ஏன்? மத்தவங்க ஒண்ணும் இல்லாமலா இருக்காங்க? பாவம் பொம்பளைய புடிச்சி உள்ள  வைச்சிட்டாங்க!” என்று பாவப்பட்டார். அவர் பட்டு தொழில் பறிப்போய், குடிகார கணவரிடம் நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பவர். எனக்கு அதிர்ச்சி. வாழ்க்கையையே, கேள்விக்குறியா மாத்தின ஜெயாலலிதாவுக்கு பாவப்படவும்  பெண்கள் இருக்கிறார்கள் என்று.

நான் அவரிடம், “உனக்கு தறி நெய்யற கூலி ஒழுங்கா கிடைக்கிதா? உங்க வீட்டுக்காரு கூலியை  ஒழுங்கா கொடுக்குறாரா? உன் பொண்ணை  படிக்க வைக்க முடிஞ்சதா? குடிக்கிற தண்ணிய…  நடுராத்திரில புடிக்கிறீங்களே…. அது சரியா?” என்று வினவினேன். , “இதே மாதிரி சொத்து சேத்தவனையும்  உள்ளே தூக்கிப்போடுனு, சொல்லாம, ஜெயலலிதாவை ஜெயில்ல போட்டது பாவம்னு சொன்னா எப்படி?” என்றேன். கொஞ்ச நேரம்  யோசித்தவர், பிறகு “ஆமா, கரெக்டுதான்” என்றார்.

திங்கட்கிழமை….

ஆங்காங்கே உண்ணாவிரதம். நெரிசலான பல இடங்களில்  பெண்களுக்கு 500 ரூபாயும், போராட்டம் முடிந்ததும் பிரியாணி, பந்தலில் தண்ணீர், ஜூஸ் என்று ஆள் பிடித்தனர். “….இவங்க…, ஆர்ப்பாட்டத்தாலே வேலைக்கும் போகமுடியாது, கொலுத்து வேலைக்கு போனாலும்,கூலி 180 ரூபாதான்,  சும்மா உட்கார்ந்துக் கொண்டு இருப்பதற்கு ரூ.500 கொடுக்கிறார்கள்” என்றனர் பெண்கள். பந்தல் நிறைந்தது.

ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (1)பேருந்து பயணத்தின்போது,  ஒருவருக்கொருவர் ஜெயா கைதை பேசக் கூட தயங்கினர்.  மருத்துவமனைக்கு செல்லும் முதியவர், “விதியை நினைச்சிக்கினு நாம கெடக்கறோம், வேலையில்லாதவனுங்க  கொழுப்பெடுத்து அலையறானுக? ஆஸ்பத்திரியலயும்,டாக்டருங்க இருக்கிறானுகளோ, இல்லையோ,வலி  உயிர எடுக்குது!” என்றார்.

நான், செங்கல்பட்டு மருத்துவமனையில் கேண்டீன் நடத்தும் சேட்டனிடம், “சேட்டா அம்மாவை உள்ள தள்ளிட்டாங்க தெரியுமா?”  என்றதும், அவர், “ரொம்ப தப்பு பண்ணீட்டாங்கமா,பொம்பளனுக்கூட பாக்காம இப்படி செய்து இருக்கக் கூடாது,  அவங்களுக்கு உடம்பு வேற சரியில்ல, நம்ம ஊரு (செங்கல்பட்டு) எம்.எல்.ஏ. வா இருக்கிற கணிதா சம்பத்தோட  சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 400 கோடி. அப்ப முதலமைச்சரா இருக்கிறவங்க,சினிமாவுல நடிச்சவங்க, ஏன்  நிறைய சொத்து வைச்சிருக்கக் கூடாதா” என்றார்.

முறைகேடா சொத்து சேர்ப்பதெல்லாம் சகஜம் என்ற கருத்து இவருக்கு ஏன் ஏற்பட்டது?

எனக்கு தெரிந்து 6 வருட காலமா ஓய்வின்றி, உறக்கமின்றி உழைப்பவர் இந்த, சேட்டன். தினமும் சுமார் 150 பேருக்கு  உணவு செய்ய குடும்பத்துடன் உழைப்பவர். தினசரி விலையேற்றத்தை தாங்க முடியாமல் தவிப்பவர். அதை  எங்களோடு விவாதிப்பார். இவரிடமிருந்து இப்படி ஒரு பதிலா? நான் எதிர்பார்க்கவில்லை.

அங்கிருந்த, கர்நாடகத்தை சேர்ந்த ராஜ்குமாரும் இந்த கருத்துக்கு உடன்பட்டார். மேலும் அவர், “எவ்ளோ  நல்ல திட்டங்களை தமிழ் நாட்டுக்கு தந்து இருங்காங்க, மற்ற மாநிலங்களில் இவை கிடையாது. நல்லா படிச்சவங்க  அவங்களப் போய் உள்ள வைச்சிட்டாங்களே? …..வெளிநாட்டுல இருந்து வந்த அர்னால்டே…. “அம்மா”வை பாராட்டிப்பேசி  இருக்காரு!,” என்றார்.

அங்கு, வேலைபார்க்கும் செவிலியர்களின் கருத்தும் இதேதான். “அவங்களுக்கு (அம்மா) சுகர், பிபி,  இருக்கு. அதுக்கும் மேல தமிழ் நாட்டு ஜனங்கள் எல்லாம் நம்பி ஓட்டுப் போட்டு உட்கார வைச்சிருக்காங்க,  ….ஜனங்களுக்கு தெரியாதா சொத்து சேர்த்த விஷயம், ஜனங்களை மதிக்காத தீர்ப்பு இது. இதனால, அம்மாவோட  செல்வாக்கு கூடுமே ஒழிய குறையாது,”அம்மாவுக்கு பதிலா அம்மாவே தேர்ந்தெடுத்தெடுத்திருக்கும் ஓ.பி.எஸ் முகத்தை பார்த்தாலே ரொம்ப சாந்தமா, குற்றம் செய்யறமாதிரியே இல்லையே, இவங்களா தப்பு செய்வாங்க” என்றனர். …வெளிநாட்டுலயும் அம்மா பேமசா ஆயிடுவாங்க” என்றனர்.

ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (2)அங்கிருந்த, நோயாளி குருவிக்கார பெண் சீதா,”புடிச்சி உள்ளே போடட்டும், வீடுதர்றேன், பட்டா தர்றேன், மிக்ஸி,  கிரைண்டர் தர்றேன் என்றார், ஆனா ஒண்ணும் தரலை, அதெல்லாம்… எம்.ஜி.ஆரோடு போச்சு” என்றார்

மாலைநேரம்…

ரோட்டில் செல்லவே முடியவில்லை, முஸ்லீம்,கிறித்துவர்கள், இந்துகள் என ரோட்டில் பேனர் வைத்து … யாகம், கூட்டுப்  பிரார்த்தனை, பால் குடம், தீமிதித்தல் என்று, கும்பல், கும்பலாக அதிமுகவினர் வழிமறித்தனர். அவர்களுடன் போலிசும் வழியடைத்து  நின்றது.

அங்கிருந்த பூக்காரம்மாவிடம் பேச்சுக் கொடுத்தபோது, காதுக்கிட்ட வந்து, “…சத்தமா பேசாதே” என்றார், இரகசியமாக.  அவரது அனுபவத்தை சொன்னார்.

“பூ வாங்க, பூக்கடைக்கு போயிருந்தேன். பூ வாங்கிட்டேன், வெளியே வர்றேன், …சினிமாவுல காட்றாமாதிரி எல்லாக்  கடையும் தடதடனு மூடுனாங்க, பஸ் எதுவும் போகல……, என்ன செய்யறதுனே தெரியல….., பயந்துட்டேன். ஆனாலும்  வேற,வேற பஸ்ச புடுச்சி வீட்டுக்கு வந்தேன், எம் பொண்ணு அழுதுட்டு நின்னுது, எப்படிமா  வந்தே?னு, துடிச்சிப்போச்சி. தினம்,தினம் பூவாங்கி வீட்டுக்குவீடு வித்தாதான் பொழப்பு, விக்கிறதுலயேயும் எவ்ளோ  கஷ்டம் தெரியுமா? டிவியில பூ விலை கம்மியா சொல்றாங்க…, நீ என்ன அதிகமா சொல்றே….னு பேரம்  பேசுவாங்க, அவங்களுக்கு எங்கே தெரியப்போவுது எங்க கஷ்டம், பூவை வாங்க காலையில போயிடனும், பஸ்  செலவு,  பூ கட்ற வேலை, பூவை வாடாம பாதுகாக்கறது….னு நான் படற கஷ்டத்தை நினைக்காம,பேசுவாங்க,  ஏம்மேல பாவப்பட…. யாரும் இல்ல, …தப்பு செஞ்சாதானே உள்ளே வைப்பாங்க, …இவனுங்க ஏன்  ஆடுறானுங்கனு தெரியலயே? நீ பத்திரமா போய்ட்டு வா, …குடிகாரனுங்க எதுக்கும் துணிவானுங்க,உஷாரா  போம்மா.” என்றார்.

அங்கிருந்த பள்ளி சிறுவர்களோ, “தமிழ்நாட்டுக்கு பவர் போனா யுபிஎஸ், அம்மாவுக்கு பவர் போனா ஓபிஎஸ்” என்று பாடிக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதா கைது விவகாரம் தமிழகத்தை உலுக்கிவிட்டது என்பது அதிமுக வடிக்கும் கண்ணீரை, உண்மைதான் என்று நம்புவதாக நடிக்கும் கூட்டம் கையளவு. ஆனால், உழைக்கும் மக்களோ “அம்மா கைது” என்ற அளவுக்கு மீறிய  சோக நாடகத்தை  ரசிக்கவில்லை.

டிவியும், பத்திரிகைகளும் ‘அம்மா’ கைது குறித்து தினுசு தினுசா சோக கதைகளை எழுதி மக்களிடம் ஒரு கருத்த உருவாக்க நினைக்கிறாங்க. டிவி சீரியல் பார்த்து வீட்டுப் பிரச்சினைகளை உருவாக்கி கொள்ளும் மக்கள் இந்த பத்திரிகை அறிவாளிங்க சொல்றத மட்டும் நம்பாமவா போவாங்க?

ஆனா கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பேச வைச்சா அவங்களும் உண்மையை ஒத்துக்குவாங்க. அதிமுக ரவுடிங்க ஆள் போட்டு நடத்தும் ரவுடித்தனமும், கூலிக்கு அழச் சொல்லும் ஒப்பாரிகளும் பார்க்க பிரம்மாண்டமா இருந்தாலும் உள்ள கீறிப் பாத்தா பல்லிளிக்கும்.

அது பூக்கார அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு! அவங்கிட்ட பேரம் பேசி வாங்கும் அறிவாளிங்களுக்கு தெரியலையே?

–    மலர்விழி, காஞ்சிபுரம்.

வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்

2

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்துக்குட்பட்ட பொய்கை அரசூர் கிராம தலித்து மக்கள், தொடர்ந்து 40 வருடங்களாக வீட்டு மனைக்காக போராடி வருகின்றனர். இவர்கள் தனி வட்டாட்சியர், தாசில்தார், மாவட்ட ஆட்சியாளர் என்று சந்தித்து மனு கொடுப்பது என்ற வழிமுறையில் போராடிய போது, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும் உடன் ஆதரவளித்து வந்தனர்.

தமிழக கிராமங்கள் பலவற்றில் நிலப்பிரபுக்கள் பல்வேறு முறைகேடான வழிகளில் சுருட்டிய நிலங்களை வைத்து முழு கிராம சமூகத்தையும், கிராம பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் சொத்து சேர்த்தது சட்டபூர்வமாகவோ இல்லை தார்மீக நெறிமுறைப்படியோ எந்த வகையிலும் சேர்த்தி இல்லை. நிலமற்ற விவசாயிகளாக வாழ்க்கையை நடத்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் துண்டு துக்காணி நிலங்களை கூட இவர்களிடம் இப்படித்தான் இழந்து விடுகிறார்கள்.

இந்த போராட்டம் அப்படி பறிகொடுத்த நிலங்களை மீட்பதற்கான ஒரு துவக்கம்.

இதற்க்கிடையில் வி.வி.மு சார்பாக தனி தாசில்தாரைக் கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. இதன் விளைவாக அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் வந்த அதிகாரியால், நில உரிமையாளரை சந்தித்து 2012-ல் நிலத்தை வாங்குவதற்கான ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கப்பட்டது. அதன் பின் மனை சம்மந்தமாக அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கிராம மக்களை கூட்டி அந்த மனையைப் பெற வேண்டும் என்றால் அதற்கு போராட்டம் தான் தீர்வு என்று முடிவு செய்து அதற்கு இளைஞர்கள், தோழர்கள் என 6 பேர் கொண்ட போராட்டக் குழு ஒன்று அமைத்து வீடு கட்டும் போராட்டம்  27-09-14 அன்று நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

வீடு கட்டுவோம். தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்’ என்ற முழக்கத்தோடு 150 சுவரொட்டிகளைத் தயாரிக்கப்பட்டு, 23-09-14 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது. அதன் மறுநாள் தனித் தாசில்தார் நேரில் வந்து ‘ஏன் இது போன்ற போஸ்டர் ஒட்டினீர்கள்? இது சம்மந்தமாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் செய்கிறோம். கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். ஒட்டிய சுவரொட்டியை எடுத்து வந்து தோழர்களிடம் விவாதித்தார்.

தோழர்களும் ‘உங்களிடம் பேசுவதால் எந்த விதமான பலனும் இல்லை. இதற்கு முன்னும் பல முறை பேசி எதுவும் நடக்கவில்லை. போராட்டம்தான் தீர்வு’ என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதற்கிடையில் நில உரிமையாளாரிடம் (ராமலிங்க நாயுடு – நிலப்பிரபு) கங்காணியாக வேலை செய்யும் கண்ணன் என்பவர் தோழர்கள் 3-பேர் மீது காவல் நிலையத்தில் பொய்ப்புகார் கொடுத்தார். இந்தத் தகவலை அறிந்த மக்கள் 100 பேருக்கும் மேல் திரண்டு சென்று காவல் நிலையத்தில் ‘பொய் புகாரை வாப்ஸ் வாங்குங்கள்’ என்று கோரி முற்றுகை இட்டனர்.

அப்போது காவல் உதவி ஆய்வாளார், ‘பேசிக் கொள்ளலாம். முதலில் இந்த இடத்தை விட்டு காலி செய்யுங்கள்’ என்று  சமாளித்தபடி மக்களை அங்கிருந்து போகச் செய்தார். அன்று இரவே பெரிய பிளக்ஸ் பேனர் ஏற்கனவே சொன்ன தலைப்பில் அரசூரில் கட்டபட்டது. அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வருபவர்கள் நின்று கவனித்து படித்துவிட்டுதான் சென்றனர். அவ்வட்டாரத்தில் இது பரபரப்பான செய்தியாக மாறியது. பல நண்பர்கள் ‘இதுதான் சரியான முழக்கம்’ என்றும், ‘இது போன்ற முழக்கத்தை வி.வி.மு தோழர்கள்தான் வைப்பார்கள்’ என்றும் பேசிக் கொண்டனர்.

அதன்பின் போராட்டத்தின் முதல் நாள் 300 பிரசுரங்களை தயார் செய்து இந்த போராட்டதில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு கொடுத்தோம். இரவு ஐந்து இடங்களில் தெரு முனை கூட்டங்களைப் போட்டு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுவது மற்றம்  வெளியூரில் இருக்கும்  உறவுக்காரர்களை வரவழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கருங்காலியாகச் செயல்படும் அல்லக்கைகைளை அம்பலப்படுத்திப் பேசிய பிறகு மக்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். மக்களும் கழி,கீற்று போன்ற வீடுகட்டும் உபகரணங்களை தயார் செய்தனர்.

போராட்டத்தின் முதல் நாள் காலை 8 மணிக்கு நில உரிமையாளர் (நிலப் பிரபு) தாமே முன்வந்து ஊர் நாட்டாமை மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து ‘நிலத்தை நான் இலவசமாக கொடுக்கிறேன். போராட்டம் வேண்டாம்’ எனறு சொல்லி அனுப்பியுள்ளார். அதைப் போராட்ட குழுவிற்கு அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை போராட்ட குழு ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்று காலை 11 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்து எங்களைத் தொடர்பு கொண்டு ‘போராட்டத்தைக் கைவிடுங்கள். பேச்சுவார்த்தைக்கு தயார் செய்கிறேன்’’ என்று ஆய்வாளர் தெரிவித்தார். அதையும் போராட்டக் குழு நிராகரித்து ‘போராட்டதை நடத்துவோம்’ என்று அறிவித்தனர். அதன் பின் நண்பகல் 12 மணி அளவில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்  உட்பட 8 காவல்துறையினர் மற்றும் 3 க்யூ பிரிவு போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கிராமத்திற்குள் முகாமிட்டனர்.

சம்மந்தப்பட்ட தோழர்களிடம் ‘பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். நான் உத்திரவாதம் தருகிறேன்’ என்று நைச்சியமாக பேசினர். ஊர்த் தலைவர் மூலம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அதை தோழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘கிராம மக்களை கைது செய்வோம்’ என்று மிரட்டிப் பார்த்தனர்.  ‘உங்களால் முடிந்ததை செய்யுங்கள்’ என்று மக்களும் பதிலுக்கு கூறினார்கள் . இப்படி பல வழிகளில் போராட்டத்தை முடக்க முயற்சி எடுத்தனர். தலைவர் மூலமாக தூதும் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் ‘ஜெயாவின் தீர்ப்பு இருக்கிறது. அதனால் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ என்ற காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டார். ‘நான் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.

அப்போது தோழர்கள் ‘இதற்குமுன் பள்ளிக் கூடத்திற்கு அடிப்படை வசதி கேட்டு போராடிய போது இது போல உறுதி அளித்தார் ஆய்வாளர். அதன் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று சுட்டிக் காட்டினர். அதுபோல ‘ஊராட்சி ஒன்றியப் பொறியாளர் அப்போது போராட்டத்தை  கைவிட்டால் தான் பேச்சு வார்த்தை என்று கூறினார். அதனடிப்படையில் அப்போது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை’ என்று அம்பலப்படுத்தி பேசினார்.

மாலையில் போராட்டக் குழு கூடி ‘நாளை ஜெயாவின் தீர்ப்பு இருக்கிறது. அதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச வேண்டும்.  அதுவும் மக்கள் மத்தியிலேயே பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும்’ என்ற முடிவு செய்தது. அதனை காவல் ஆய்வாளரிடம் கூறிய போது, ‘உயர் அதிகாரிகள் இப்போதைக்கு வர முடியாது, நேரமில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரியான வட்டாட்சியர் வருவார். அதிகாரிகளை மக்கள் மத்தியில் பேச வைப்போம். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நான் உறுதி ஏற்கிறேன்’ என்று ஆய்வாளர் உறுதி கூறினார்.

இந்நிலையில் போராட்டக் குழு ஒன்று கூடி பேச்சுவார்த்தைக்குத் தயாரானார்கள். பொது மக்கள் 300 பேருடன் தலைவர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தயாரானார். இந்தப் பேச்சு வார்தையில் தனி வட்டாட்சியர்  ‘இன்னும் எனக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுங்கள்’ என்று கேட்டார். ஆனால் மக்களோ ‘நாங்கள் சுவரொட்டி ஒட்டி 5 நாட்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட துறையினைச் சார்ந்த நீங்கள் முறையான நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுக்கிறது’ என சுட்டிக்காட்டிய போது துணை வட்டாட்சியர் ‘நான் இருந்தபோது நில உடமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. அதற்கு பின்னர் செட்டியார் என்பருடைய நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்ற விவரத்தை தெரிந்துகொள்ள முடியாமல் போனது. ஆகவே இரண்டு நில உரிமையாளர்களிடமும் நிலம் தொடர்பான விவரங்களை வாங்கி நாங்களே முன்னின்று அதற்கான நடவடிக்கைளை எடுக்க ஆவன செய்கின்றோம்’ என்றனர்.

அதற்கு மக்கள் ‘கடந்த 5 ஆண்டுகளாக உங்களை நம்பிதான் காத்துக் கொண்டு இருந்தோம் ஆனாலும் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆகவே உயர் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறினார்கள். அதற்கு ஆய்வாளர் ‘அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்ய 15 நாள் அவகாசம் கொடுங்கள். அதற்கு தேவையான ஏற்பாட்டை செய்கிறோம்’ என்று உறுதி அளித்தார். மக்கள் அதனை எழுத்துப் பூர்வமாக எழுதி வந்திருக்கும் அனைத்து அதிகாரிகளும் அதில் கையொப்பம் இட்டுத் தர வேண்டும் என்று கோரினோம். அதன் அடிப்படையில் தனி வட்டாட்சியர் மற்றம் உதவி வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், வருவாய்த் துறை ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கிராம பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் கையொப்பம் இட்டு தந்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என அறிவிக்கப்பட்டது.  

இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். இளைஞர்கள் மத்தியில் முன்னர் அமைப்புடன் நெருக்கம் இல்லாமல் இருந்த நிலைமை தற்போது மாறி அவர்களும் அமைப்பு தோழர்களிடம் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பழகத் துவங்கியுள்ளனர்.

படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி
திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம்.

டாஸ்மாக்கை மூடு – டாஸ்மாக் ஊழியர் போராட்டம் !

1

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் அருகில், டாஸ்மார்க் ஊழியர்கள் தாங்கள்  வேலை பார்க்கும் கடைகளை  படிப்படியாக மூட வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்து கடந்த வியாழன்று (02/10/2014) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

பத்திரிக்கையின் மூலம் இப்போராட்டத் தகவல் அறிந்த பெண்கள் விடுதலை முன்னணி  மற்றும்  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சுவரொட்டிகளும், பிரசுரங்களும் அச்சிட்டு மக்களிடம் விநியோகித்தோம். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தோம்.

எமது தோழர்கள் பந்தலை அடையும் பொழுது, உண்ணாவிரத பந்தல் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களால் நிறைந்திருந்தது. பிஇ, எம்பிஏ படித்த பட்டதாரி இளைஞர்கள், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில், கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் அவலத்தை அவர்களின் உரை மூலம்  நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.

தங்களது 6 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி பலரும் பேசினார்கள்.

  • மது விலக்கை படிப்படியாக அமுல் படுத்து!
  • மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைத்து அறிவித்திடு!
  • மதுக் கடை பார்களுக்கான உரிமங்களை உடனடியாக ரத்து செய்!
  • வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை, மாதம் முதல் தேதி விடுமுறை தினமாக அறிவித்திடு!
  • அரசு வேலைக்கான காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நியமனம் செய்! என்பதே அவர்களின் கோரிக்கை.

போராட்டத்தில் மதுபானக் கடை ஊழியர்கள், தங்கள் அனுபவங்களையும், அல்லல்களையும் கொட்டித் தீர்த்தனர்.

திருவள்ளூரைச் சேர்ந்த ஊழியர், திரு. மாரி பேசுகையில் அன்றாட வேலையின் சிரமங்களையும், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட வழியில்லாத அவல நிலையையும் எடுத்துரைத்தார். இந்த குடியினால் பல குடும்பங்கள் சீரழிவதை கண்கூடாக கண்டதையும் கூறினார்.

தன் பணிச்சுமை  அரசால் அங்கீகரிக்கப்படாத போதும் குடிக்கு அடிமையான ஒருவரை மீட்ட கதையை கூட்டத்தினரிடம் பகிர்ந்தார். குடியிலிருந்து மீண்டவர், தன் துணைவியாருடன் வந்து, மகளின் திருமண பத்திரிக்கையுடன், ரூ. 10,000 கொடுத்து அழைத்ததையும், அவரது துணைவியார்  தன் கணவரை குடியிலிருந்து மீட்டதினால் தன் குடும்பம் சரியான நிலைக்கு வந்துள்ளதையும், தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றிய நிலைமை மாறியதையும் நெஞ்சுருகிப் பேசியதை கூட்டத்தினரிடம் பகிர்ந்துக் கொண்டார்.

பட்டதாரி இளைஞர்கள் மதுபானக் கடைகளில் வேலை பார்த்து பலத் தரப்பட்ட மக்களுடன் பழகிப் பக்குவப்பட்டுள்ளதையும், படிப்படியாக மதுக்கடைகளை மூடிவிட்டு, அரசின் மற்ற துறைகளில் எங்களுக்கு வேலைக் கொடுத்துப் பாருங்கள் , நிலுவையில் இருக்கும் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் காட்டுவோம் என்று அரசுக்கு சவால் விட்டனர்.

அவரைத் தொடர்ந்து பேசிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர் அமிர்தா, அரசு நடத்தும் மதுபானக் கடையை படிப்படியாக மூடக் கோரி அதில் பணிபுரியும் ஊழியர்களே நடத்தும் இந்த போராட்டம் ஒரு நல்ல துவக்கம் என்றும், குடிப்பவர்கள் ஆண்கள், விற்பது அரசு, ஆனால் இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள், குழந்தைகள் தான்! இலவச, விஞ்ஞானப்பூர்வமான கல்வியைக் கொடுக்க முடியாத அரசு மதுபானக் கடைகளுக்கு அதிக இலக்கு வைத்து குடிமக்களிடம் பணம் பறிக்கிறது.  மேலும், நீதிமன்ற தீர்ப்பால், குரோம்பேட்டை அருகே நெடுஞ்சாலையிலிருந்து அகற்றிய மது கடைகளை மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்புப்பகுதி என்றும் பாராமல் கடையை திறக்கமுற்பட்டபோது, அதற்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணி பகுதிப் பெண்களுடன் 10 நாட்கள் போராடி கடையை திறக்க விடாமல் செய்தோம். மேலும், இதற்காக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் என ஒரு இயக்கமாக முன்னெடுத்து அரசு நடத்தும் மதுபானக் கடை ஒழிப்புக்கு முன் நின்று போராடுகிறோம்.

அரசானது பண்டைய சாண்டில்யன் காலந்தொட்டே மக்களை மது போதைக்கு திட்டமிட்டே உட்படுத்தி, மக்கள் அரசை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருக்க மயக்கத்திலேயே  வைத்திருப்பது  இன்றும் தொடர்கிறது.

தொடர்ந்து குடிப்பதினால் குடும்பங்கள் சீரழிவதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுக்கடை ஒழிப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழகமோ குடிமக்களின் நலனை பாரமால், கல்லா கட்டும் நோக்கதோடு  அதன் விற்பனை இலக்கை அதிகமாக உயர்த்துகிறது. மேலும், அரசு மதுபானக்கடைகளை முற்றிலும் ஒழிக்கும் வரை  நமது போராட்டங்கள்  தொடரவேண்டும்  என வலியுறுத்திப் பேசினார்.

பிறகு பேசிய டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு. மோகன், தனக்கு முன் பேசிய பெவிமு தோழர் அமிர்தாவின் உரையில் மக்களின்  குடிகெடுக்கும் பின்னணியில் ஆணிவேராக செயல்படும் அரசின் பங்கைப் புரிந்து விளக்கியதை சுட்டிக் காட்டினார். மேலும்,  கடைகளில் பணிபுரியும் 60% இளைஞர்களே  குடிக்கு அடிமையாகி நோய்களுக்கு ஆட்படுவதை வேதனையுடன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்கள் அலை அலையாய் எழுந்து டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பொழுது தான் அரசை பணிய வைக்க முடியும். மது விலக்கை அமுல்படுத்துமாறு அரசை பணிய வைக்க முடியும், என்றார்.

தமிழக மக்களை ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் டாஸ்மாக் எனும் குடி போதையை ஒழிக்க அதை விற்பனை செய்யும் ஊழியர்களே முன் வந்து போராடுவது அரிதினும் அரிதான விசயம். இதனால் அவர்கள் வேலை வாய்ப்பு பறிபோனாலும், மாற்று ஏற்பாடுகளுக்கு உத்திரவாதம் இல்லையென்றாலும் அவர்கள் இப்படி ஒரு கோரிக்கை வைத்து போராடுவது மிக முன்னுதாரணமான விசயம். இந்த போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

பாத்ரூமில் கேமரா – சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்

9

’இந்துக்களின் ஜகத்குரு’ என்று பீற்றப்படும் சங்கர்சாரிகளின் காஞ்சி சங்கர மட யோக்கியதைகள் ஊருக்கே தெரியும். கொலையிலும் கூத்தடிப்பதிலும் கொடிகட்டி பறக்கும் மடம் அது. இப்பேற்ப்பட மடம் நடத்தும் கல்லூரிகள் மட்டும் எப்படி இருக்கும்?

ஆம். காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ளது காஞ்சி சங்கரமடத்துக்கு சொந்தமான சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவனிடமும் லட்சக்கணக்கில் பணத்தைக் கறக்கும் கல்விக் கொள்ளையில் தவறாமல் ஈடுபடும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் இதுவும் ஒன்று. மாணவர்கள் மாணவிகளுடன் பேசிக்கொள்ளக்கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, பேராசிரியர்கள் { கடந்தாண்டு படிப்பை முடித்த மாணவர்கள்தான் இந்தாண்டு பேராசிரியர்கள்} குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துவது என பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு அதன் பெயரில் மாணவர்களை ஒடுக்கி வருகிறார்கள். ஷூவில் லேஸ் கட்டவில்லை, தினம்தோறும் ஷேவ் செய்யவில்லை என்றாலும் கல்லூரியில் அலுவலக உதவியாளர்கள்தான் மாணவர்களை தண்டிப்பார்கள். அங்கு அலுவலக உதவியாளர் வேலை செய்பவர்கள் எல்லாம் கல்லூரி நிர்வாகத்திற்கு அடியாள் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

மேலோட்டமாக பார்த்தால் இப்படி கட்டுப்பாடுகள் இருந்தால்தான் மாணவர்கள் ஒழுங்காக வளருவார்கள் என்று சிலருக்கு கருதத் தோன்றும். மாணவர்களைக் கேட்டால் இது கல்லூரி இல்லை, சிறைச் சாலையைவிட கொடுமையானது என்று கதறுகிறார்கள். இந்த பல்கலைக்கு அரசு கொடுத்துள்ள சர்டிபிகேட் யூ .  ஆனால் உள்ளே நடப்பதெல்லாம் ஏ பட ரேஞ்சுக்கான வேலைகள்.

இப்பல்கலைகழக விடுதியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக மாணவிகளின் பாத்ரூமில் கேமரா பொருத்தப்பட்டு வருவதும், அது பற்றி புகார் கொடுத்தால் நிர்வாகம் அமைதியாக இருப்பதுமே இருந்திருக்கிறது. மாணவிகளும் வெளியே சொன்னால் அவமானம் என்று வாய்மூடி அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 10 நாட்களாக பாத்ரூமில் கேமரா வைக்கப்பட்டிருப்பது குறித்து மாணவிகள் விடுதி வார்டனிடம் புகார் அளித்துள்ளனர். அந்த வார்டனோ இதைக் கேட்டு பதறாமல் நிதானமாகபார்க்கலாம், பார்க்கலாம் என இழுத்தடித்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்த அநியாயத்தை கண்டு பொறுக்க முடியாத மாணவிகள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் கூறியுள்ளனர். மாணவர்கள் இதை விசாரித்து அப்படி படம் எடுத்த எலக்ட்ரீசியன் ராஜாவை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்துள்ளனர். தலைமை வார்டனான வாசுதேவன் என்பவர் சொல்லி பெண்கள் பாத்ரூமில் கேமரா வைத்ததாகவும் அந்த மெமரி கார்டை பெண்கள் விடுதி வார்டனிடம் கொடுப்பதாகவும் ராஜா மாணவர்களிடம் கூறியுள்ளான். அவனை பிடித்து நிர்வாகத்திடம் ஒப்படைத்து வாசுதேவனை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

சங்கர ராமன் கொலை வழக்கையே ஊற்றி மூடிய போலீசு இதில் மட்டும் நடவடிக்கை எடுக்குமா என்ன? ராஜாவையும் வாசுதேவனையும் அரைமணி நேரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு பத்திரமாக விடுவித்து விட்டது. சரி லோக்கல் போலீசுதான் இப்படி, மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தால் அவர் நீதியைத் தருவார் என்றெண்ணி மாவட்ட ஆட்சியரகத்துக்கு சுமார் 400 மாணவர்கள் ஊர்வலமாக வந்து மனு அளிக்க வந்தார்கள். 23ம் தேதி பதவியேற்ற புது கலக்டரோ அவரது நிர்வாகமோ சங்கர ராஜ்ஜியத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளை கண்டு கொள்ளவே இல்லை. கலெக்டர் மீட்டிங்கில் இருக்ககிறார் என்ற பதிலே 2 மணி நேரமாக வந்தது.

அந்தக் காத்திருப்பில்தான் மொத்த அரசுமே இந்த கல்விக்கொள்ளையர்களுக்கும், சங்கர மட மைனர்களுக்கும் சேவை செய்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டனர். இதற்கிடையில் காவல் நிலையத்தில் வார்டன் வாசுதேவன் “பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில் இருப்பதை எல்லாம் இண்டர் நெட்டில் அப்லோடு செஞ்சுடுவேன்” என்று மிரட்டிய விசயம் மாணவர்களிடம் பரவ ஆரம்பித்தது. இதன் பிறகே ஆத்திரமடைந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்தார்கள்.

கல்லூரி டீனிடம் முறையிட்டார்கள்.அவரோ நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் என்றார். அதாவது மாணவிகளை மறைவாக படம் பிடித்த அயோக்கியர்களை கைது செய், நடவடிக்கை எடு என்று சொன்னால் அது அநாகரிகமாம். துணை டீன் ரமணனோ தவறுதான் மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம் என்று சொன்னார். ” மன்னிப்பு எங்களுக்குத்தேவை இல்லை, வாசுதேவன் இங்கே வந்து எங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த மெமரி கார்டை ஒப்படைக்க வேண்டும்” என்றார்கள் மாணவிகள். வாசுதேவனை இங்கே கொண்டு வந்தால் அடித்தே கொன்று விடுவீர்கள் என்றது போலீசு.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த ஒரு பொறுக்கி “வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க” என்று கேட்டவுடன் இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள்.

இத்தனை ஆண்டுகளாக காமவெறிப்பிடித்த இந்த பார்ப்பன அக்ரஹார கோட்டையை யாரும் கேள்வி கேட்காமல் பேசாமல் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டது போதும், இனி தன்மானத்தை இழப்பதற்கு உயிரை இழப்பதே மேல் என்று துணிந்தார்கள். அவர்கள் கண் முன்னே பிராக்டிக்கல் மார்க் வரவில்லை, எந்த HODயும் வரவில்லை. பேருந்துகள் வேன்கள், ஆய்வகம் என கண்ணில் பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினார்கள். இது அநாகரீகம் என்றால் இருக்கலாம் , சூடு சொரணை உள்ளவர்களுக்கு தெரிந்த மொழி இதுதானே!

மீண்டும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேசித்தீர்க்கலாம் என்று அமைதிப்படுத்தியது. காலை முதலே தண்ணீர்கூட குடிக்காமல் இருந்த மாணவர்கள் சோர்வடைந்தார்கள். இதற்கிடையில் விடுதிகளில் படிப்படியாக தண்ணீர், மின்வசதிகள் துண்டிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புப் போரில் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர் ஏகாதிபத்திய படைகள் என்ன செய்யுமோ அதை பார்ப்பன பயங்கரவாதகம்பெனிகள் செய்தன. சரியாக இரவு 7.30 மணி. கல்லூரியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.

கல்லூரிக்குள் புகுந்தது போலீசு, வெறிகொண்ட மிருகங்களாக மாணவர்களைக் கடித்துக் குதறியது. மாணவர்களை வீதிகளில் தள்ளி பூட்டுப்போட்டது. வெற்றிக்களிப்பில் புன்னகைத்தது பார்ப்பன பயங்கரவாத காஞ்சி பல்கலைக்கழகம்.

இப்பிரச்சினையை எவ்வளவோ மூடி மறைக்க முயன்ற போதும் மாணவர்களின் போராட்டத்தால் காஞ்சிப் பல்கலை கழகத்தின் பெயர் வராமல் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஒவ்வொரு முறையும் மாணவிகள் இப்படி பாத்ரூமில் கேமரா உள்ளதென்று புகார் கொடுத்தால் ஒரு நாள் விடுமுறை விட்டுவிடுமாம் கல்லூரி நிர்வார்கம்.

இம்முறை 10 நாட்கள் விடுமுறை விட்டுள்ளது நிர்வாகம். போலீசு அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் காய்ந்து போகலாம், தழும்புகள் மறையுமா என்ன? இந்த நிர்வாகத்தின் அயோக்கியத்தனத்துக்கு முடிவே இல்லையா என்று கதறுகிறார்கள் மாணவர்கள். கல்லூரி நிர்வாகமும் அரசும் கூட்டணிக்கொண்டு செயல்படும் போது மாணவர்கள்  ஒரு அமைப்பாக ஒன்றுபடாமல் வெற்றிபெறமுடியாது.

சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களை கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்தப் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டையில் தன்மான உணர்வுடன் சுயமரியாதை உணர்வுடன் முதல் கீறலைப் போட்டிருக்கிறார்கள் மாணவர்கள். சாதி வித்தியாசங்களைக் கடந்து இந்த போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்கை ஊற்றி மூடப்பட்டது போல இந்த விவகாரத்தை மாணவர்கள் விடக்கூடாது. போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம். சங்கர மட பயங்கரவாதிகளை முறியடிப்போம்.

படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

__________________________________________________________

தகவல் – புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம், தமிழ்நாடு. தொடர்புக்கு: 9445112675

___________________________________________________________

கல்யாண படம் பாரு களவாண்ட கதை கேளு

6
https://www.vinavu.com/wp-content/uploads/2014/10/jaya-sasi-6.jpg

1995-ம் ஆண்டு ஜெயா-சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தத் திருமணத்தின் ஆடம்பர வக்கிரம், அதிகார துஷ்பிரயோகம், எடுபிடி வேலை பார்த்த, மற்றும் இதர சங்கதிகளை உள்ளடக்கி  மக்கள் கலை இலக்கியக் கழகம் 1996-ம் ஆண்டு வெளியிட்ட  “கல்யாண கத கேளு” என்ற பாடல். இந்தப் பாடல் “அண்ணே வர்றாரு” என்ற பாடல் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளது.

ஜெயா குற்றவாளியில்லை – துக்ளக் சோ தீர்ப்பு !

35

தீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று சோ எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் இந்த எதிர்பார்ப்பு திமுகவிடம் ஏன் இருந்தது? சந்தேகப்படும் அவர், எல் டிபிள் யூ முறையீட்டில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்கும் போது, அரசியலில் போயஸ் தோட்டத்து ராணிக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமென்கிறார். முக்கியமாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயா என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர் நம்பியாக வேண்டிய ஆணை!

கோடிகளை சம்பளமாக வாங்கிய சட்டம் படித்த மேதைகள் உதவியால் வாய்தா மேல் வாய்தாவாக 18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை ஏதோ ஜெயா தரப்பு உண்மைக்கும், திமுக தரப்பு பொய்மைக்குமான நீதிப் போராட்டம் என்று சித்தரிக்கிறார் சோ. வெண்மணி படுகொலை வழக்கில் “கோபால கிருஷ்ண நாயடு போன்ற மேன்மக்கள் குற்றம் இழைத்திருக்மாட்டார்கள்” என்று சாட்சியை பார்க்காமல், ஆதிக்க சாதி ‘கௌரவ’மாக பார்த்த நீதிபதிகளின் நாட்டில் குன்ஹா எனும் நீதிபதி இப்படி தீர்ப்பளித்திருப்பது சோவாலேயே நம்ப முடியவில்லை.

ஆனால் திமுக மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று உறுதியாக எதிர்பார்த்திருந்தது எப்படி என ஒரு ஆழ்ந்த சந்தேகம் சோவிடம் இருந்தாலும் எச்சரிக்கையாக பேசுகிறார்.

Jaya With-Cho“தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமையும் என்று சொல்லிவிட முடியாது. அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.”

தினமணி வைத்தியின் “கடவுளுக்கே சோதனையா” வாதங்களை விட சோவின் சாதுர்யமான சட்ட நுணுக்க பேச்சைக் கவனிக்க வேண்டும். அதாவது சாட்சிகள் வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பதாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூற முடியும் என்று அடித்துச் சொல்கிறார் சோ. இது சரியா, தவறா என்ற விவரங்களுக்குள் அவர் போகவில்லை.

ஒரு வேளை கணக்கு காண்பிக்கப்படாத சொத்து, அதுவும் வருமான வரித்துறையிடம் அளிக்கப்பட்டது, அல்லது மன்னார் குடி கும்பலால் நடந்த தவறு, அதற்கும் ஜெயாவிற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் இந்த சட்ட நுணுக்கத்தின் பின்னே இருந்தாலும், தீர்ப்பு அவர் நினைத்த மாதிரி ஏன் அமையவில்லை?

தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஏன், திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் நீதிபதி விலை போய்விட்டார், அதை நிறைவேற்றும் அளவு திமுகவிடம் பெரும் பணம் இருக்கிறது என்று சொல்ல வேண்டியதுதானே?

சட்டப்படியும் தவறு, சதிப்படியும் தவறு என்று  கூறிவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு என்று நல்லபிள்ளை போல நடிப்பது ஏன்? அங்கேதான் கவனிக்க வேண்டும், மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் லேடி ஆட்சி, கர்நாடகத்தில் கூட ஜெயாவின் மல்லையா உள்ளிட்டோரின் ஆசி பெற்ற காங்கிரசு ஆட்சிதான் நடக்கிறது. திமுகவோ அரசியல் செல்வாக்கிழந்து பலவீனமாக துவண்டு போயிருக்கிறது.

இந்நிலையில் கருணாநிதி நீதித்துறையை வளைத்து விட்டார் என்று சொல்வதோ, இல்லை மோடி, காங்கிரசு ஆட்சிகள் பணிந்து விட்டதாக அளப்பதோ அதிமுகவின் அடிமட்ட தொண்டர் வேண்டுமானால் பேசலாம். சோ பேசினால் சிக்கிக் கொள்வார். அதாவது சொந்த செலவில் அவர் ஆராதிக்கும் மோடி ஆட்சியை அவரே விமரிசிக்க வேண்டியதாகிவிடும்.

ஆகவேதான் (மோடி ஆசியுடன்) மேல் முறையீட்டில் தீர்ப்பே ரத்தாகிவிடும் என்று வாதிடும் சோ, அதற்கு ஆதாரமாக ஜெயா தொடர்பான ஏனைய வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு ரத்தாகியிருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவாளுக்கான நலனென்று வரும் போது தர்க்கம் பயங்கரமாக உருவெடுக்கிறது.

சட்டத்தின் முடிவு இதுவென்றால் அரசியலில் ஜெயாவுக்கு எந்த குறையும் வராது என்று சத்தியமடிக்கிறார். திமுகவின் 2ஜி விவகாரத்தை பார்த்து மக்கள் ஜெயா மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.

இருப்பினும் ஓ. பன்னீர் செல்வத்தின் அரசு அவர் ஆசீர்வதிக்கும் அம்முவின் அரசு போல இருக்காது என்று சிறு சந்தேகம் மனதில் தொக்கி நிற்கிறது. அதனால், திமுகவின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பினை கணக்கில் கொண்டு புதிய அரசு ஜெயா வழிகாட்டுதலில் ஒழுங்காக நடந்தால் கருணாநிதி, ஸ்டாலினுக்கு செல்வாக்கு வரவே வராது என்று உபதேசிக்கிறார்.

இல்லையென்றால் என்ன நடக்கும்? அப்போதும் கூட ஜெயலலிதாவின் பின்னடைவை விட தமிழக அரசியல் எதிர்காலம் சோதனைக்குள்ளாகிவிடும் என்று கவலைப்படுகிறார். அதாவது ஜெயா குற்றவாளி என்று தண்டனை பெற்று வரும் அரசியல் சூழலால் திமுக வளர்ந்து விட்டால் அதுதான் சோதனையாம்.

மருமகள் உடைத்தால் மண்குடம் பொன்குடமாகும் சங்கதியேல்லாம் அழுகை டிவி சீரியல்களில்தான் வரவேண்டுமென்பதில்லை. அறிஞர் சோவின் அட்வைசில் கூட வரலாம்.

cho-with-jayaஜெயாவுக்காக இடுப்பை ஒடித்து வணங்கும் அடிமை அமைச்சர் கூட்டம் போலல்லாமல் சோ போன்ற சாணக்கியர்கள் மண்டையை உடைக்காமலேயே சட்ட நுணுக்கங்களை நேர்மறை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கு சளைக்காமல் முயல்கிறார்கள்.

“தண்டனை பெற்றால் உடனடி பதவி இழப்பு என்ற விதிமுறை சட்டத்தில் இல்லை; சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் இந்த நிலையைத் தோற்றுவித்திருக்கிறது;….” என்று ஜெயாவின் பதவி இழப்புக்கு ஒரு லா பாயிண்டை கீழே எடுத்து வைக்கிறார் சோ.

“…இந்த மாதிரி குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தான், எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்களுக்கு, அப்பீல் செய்வதற்காக மூன்று மாத அவகாசத்தை மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின், ஒரு உட்பிரிவு அளிக்கிறது. அது செல்லுபடியாகாது என்ற சப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குழப்பத்திற்கும், சிக்கல்களுக்கும் வழி வகுக்கக் கூடியது” என்று 14 மாதங்களுக்கு முன்னர், 24.07.2014 தேதியிட்ட துக்ளக் தலையங்கத்தில் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறார் சோ.

வழக்கமாக “அன்றே சொன்னேன் இன்று பலித்தது” என்று பெருமை பேசும் பாணியில் கூறப்பட்டிருந்தாலும் இதை கொஞ்சம் சீர்தூக்கி பார்த்தால் சோ நமக்கு மொட்டை அடிக்க முயல்வது நன்கு புரியும்.

96-ம் ஆண்டில் போடப்பட்ட வழக்கு 2013 வாக்கில் முடிவை நோக்கி நெருங்குகிறது. ஒருக்கால் அம்முவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்று அய்யர் பரிதவிக்கிறார். அப்போது பார்த்து உச்சநீதிமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவின் ஒரு உட்பிரிவு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு வருகிறது.

உடனே பரப்பன அக்ரஹாரத்தின் தீர்ப்பு தரும் விளைவுகள் சோவின் மண்டையினுள் இறங்கி எச்சரிக்கையாக லா பாயிண்டை எடுத்து முன்வைக்கிறது. ஆக உச்சநீதிமன்றத்தில் அந்த குழப்பம்தான் இன்று ஜெயாவின் பதவியை பறித்திருக்கிறது என்று மதியூக்த்துடன் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

ஆனாலும் மானங்கெட்டு பேசுவதெல்லாம் மதியூகம் என்று நம்பும் கூட்டம் இருக்கும் போது மொட்டை சோவிடம் இல்லை, அவரை நம்புவர்களிடம் இருக்கிறது என்றே நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்!

விசுவாசம் நம்பிக்கை – பன்னீருக்கு போட்டியாக வைத்தி

14

‘அம்மா’வின் அடிமைகள் அமைச்சர்கள் என்ற பெயரில் இடுப்பு வளைந்து, தலை தாழ்ந்து, கண்கள் பனிக்க, இதயம் துடிக்க ஜெயலலிதாவின் வீட்டு வாயிலில், கோட்டையின் முகப்பில், விமான நிலைய ஓடுகளத்தில் தவித்திருப்பது உலகப் பிரசித்தம். அப்பேற்பட்ட அடிமைகளில் ஏக், தோ, தீன் என்ற எண் படி பேதம் இல்லை.

வைத்தி - ஜெயாஅடிமைத்தனம் ஒன்றென்றாலும் அமைச்சர்கள் என்று வரும் போது தர வரிசை இருந்தாக வேண்டும். இந்த மரபு இல்லையென்றால் ஓபியோ இல்லை, சொர்ணாக்கா வளர்மதியோ அனைவரும் முடுக்காமலே படியும் விளையாட்டு பொம்மைகள்தான். அதிலும் அடிமைத்தனம் எனும் பாட்டரி சார்ஜர் காலியாகாமல் நீண்டகாலம் ஓடுபவர் ஓ. பன்னீர் செல்வம்.

சொத்துக் குவிப்பு வழக்கின் நெடிய பயணத்தில் சசிகலா நடராஜன் ஏதும் சதி செய்து கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றி விடுவாரா எனும் பயம் ஜெவுக்கு எப்போதும் உண்டு. மன்னார்குடி கும்பலின் மீது வழக்கு போட்டு அடக்கி வைத்த போது வேறு வழியின்றி ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை வாலாட்டுவதில் நம்பகமானவராக ஏற்கப்பட்டார்.

2001 டான்சி வழக்கு தீர்ப்பை ஒட்டி ஜெ பதவி விலகியுதும், அடுத்த ஆறு மாதங்களுக்கு ஓ.பி முதலமைச்சராக பதவியேற்று முடித்தார். அடிமைகள் ஆள்பவர்களாக நியமிக்கப்பட்டால் அதுவும் ஆண்டானின் காலத்திலேயே அரியணையில் அமர்ந்தால் அது அவர்களுக்கு தண்டனைக்காலமே ஒழிய பெருமைக்குரியது அல்ல.

தற்போதும் அந்த தண்டனைக் காலம் சீசன் 2 வாக வந்திருக்கிறது. அம்மா பரப்பன அக்ரகாரா சிறையில் சிக்கியிருக்கும் போது, அடிமை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

நல்லது, இப்பேர்பட்ட ஓ.பிக்கு யாராவது வாழ்த்து சொன்னால் அதை என்ன சொல்வது?

ஆம், தினமணி ஆசிரியர் வைத்தி 29.09.2014 தேதியிட்ட தலையங்கத்தில் “விசுவாசமும் நம்பிக்கையும்” என்ற தலைப்பில் நாளிதழ் சார்பாக ஓபிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

ஓட்டப் பந்தயத்தில் ஒருவன் ஓடி வந்து வெற்றி பெற்றால் அதை வாழ்த்தலாம். மாறாக ஓட்டப் பந்தயத்திற்கு புரவலராக இருப்பவன் முடிவு செய்து ஓடாத ஒருவனை வெற்றி பெற்றவன் என்று நியமித்து அதையும் சிலர் பதக்கம் கொடுத்து பாராட்டினால் ஓட்டங்களை தாங்கும் பூமித்தாய் எரிமலையாக வெடிக்க மாட்டாளா?

ஓபி, மக்கள் செல்வாக்கிலோ இல்லை ஜனநாயக முறையிலோ முதலமைச்சராக பதவியேற்கவில்லை. இது வைத்திக்கும் தெரியும். அதனால்தான் ஜெயா வழிகாட்டுதல் படி ஆகியிருக்கிறார் என்று சொல்லி விட்டு, அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை அம்மாவிடம் ஏற்படுத்தியிருக்கிறார் என்று வியக்கிறார். பாம்பின் கால் பாம்பறியும். என்ன முன்னது சாதா பாம்பு, பின்னது ஸ்பெசலான நல்ல பாம்பு!

ஆக, தினமணியின் தொலை நோக்கு நெறி முறைப்படி அம்மாவிடம் விசுவாசமாக இருப்பதே பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் போதுமானது. ஆனாலும் ஓபி போன்ற கட்சி அடிமைகளை விட வைத்தி போன்ற ஊடக அடிமைகளுக்குத்தான் ‘அம்மாவிடம்’ விசுவாசம் ஜாஸ்தி!

அந்த விசுவாசத்தை அடுத்து விளக்குகிறார் வைத்தி. சொத்துக் குவிப்பு வழக்கை 2 கோணங்களில் அணுக வேண்டுமாம். கோணம் ஒன்றின் படி, பொது வாழ்க்கையில் இருப்போர் நேர்மை, தூய்மை கடைபிடித்து சட்டத்தின் முன் சமமாக பார்க்கப்பட்டு, தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டுமாம். இதை தார்மீக கோணம் என்று யாருக்கும் நோகாமல் வகுப்பெடுக்கிறார் வைத்தி.

ஒருக்கால் இதன் உள்ளர்த்தம் பிடிபடாமல், அம்மாவை ‘கண்டிக்கிறாரோ’ என்று சந்தேகம் வந்தால் அடுத்து தெளிவாக்குகிறார். அதாவது இந்த வழக்கின் இறுதி முடிவு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தோடு முடியாதாம். உயர்-உச்சம் என்று டெல்லி வரை தீர்ப்பு வந்தால்தான் ஐயா கருத்து சொல்வாராம். ஒரு சாதாரண கீழ் கோர்ட்டு சொல்வதையெல்லாம் உயர்தரமான அறிஞர்கள் ஏற்பது அபச்சாரமில்லையா?

கீழ் கோர்ட்டை விடுங்கள், போலிசு ஒரு அப்பாவி முசுலீமை கைது செய்து பாக் சதி, ஐ.எஸ்.ஐ பீதி என்று சரடு விடும் போது இதே உச்சநீதிமன்ற அணுகுமுறையை கடைபிடிக்காமல் ஏட்டையாவின் எஃப்.ஐ.ஆர் கதையை ஏற்பது ஏன்? அல்லது ராஜபக்சேதான் சட்டப்படி குற்றவாளி என்று எங்காவது நிரூபிக்கப்பட்டிருக்கிறாரா? ஒரே குற்றத்திற்கு அவாளுக்கு பரிகாரம், மற்றவாளுக்கு தண்டனையென்ற நீதி மனுவின் காலத்தில் மட்டுமல்ல தினமணியின் தலையங்க ‘காலத்திலும்’ நீடிக்கிறது.

ஒருக்கால் உச்சநீதிமன்றமும் அப்படி முடிவெடுத்து விட்டால் என்ன செய்வது? அதையும் முன்யூகித்து இப்போதே தீர்ப்பை எழுதிவிட்டார் ஆசிரியர் வைத்தி. அதாவது குற்றங்கள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்கும் முனைப்புடன் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஜெயா தரப்பு வழக்கறிஞர்கள் கூறுவதை தள்ளிவிட முடியாதாம். இதயத்தில் உணர்ச்சியாகவும், சட்டைப் பையில் கருத்தாகவும் வைத்திருக்கும் இந்த நீதியை இவர் தள்ளுவார் என்று டாஸ்மாக்கில் தள்ளாடும் குடிமகன் கூட நம்பமாட்டானே?

அதாவது இந்த பொய்வழக்கின் செட்டப்புகளை நம்புமாறு நீதிபதி குன்ஹா நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். இல்லையென்றால் இப்படியொரு தீர்ப்பை எழுதும் நிலைக்கு அவர் வந்திருக்கமாட்டார். எந்த நீதிபதியாவது, “இந்த வழக்கில் குற்றவாளி குற்றம் செய்யவில்லை. ஆனால் சாட்சியங்கள், சூழல் காரணமாக அவர் குற்றம் செய்திருப்பார் என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது. அந்த சாட்சியங்களை பொய் சாட்சியங்கள் என்று விசாரித்து நிரூபிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. ஆகவே தண்டனை அளிக்கிறேன்” என்று சொல்லுவாரா?

இப்படி பினாத்துவதற்கு பதில் “எந்த விசாரணைக்கும் அப்பாற்ட்டவர் ஜெயா” என்று நேரடியாக சொல்லலாமே? இன்னும் சில நாட்களில் தீர்ப்பு மற்றும் தண்டனை மீது தடையுத்தரவு பெற்று பிணையில் ஜெயா வந்து விடுவார் என்று வைத்தி எதிர்பார்க்கிறாராம். ‘அம்மாவிற்கு’ வந்த சோதனைக்காலம் சடுதியில் போய்விடும் என்று இடுப்பொடிய வணங்கும் அதிமுக அடிமைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறாராம்.

ஒரு சிலநாட்களில் ஜெயா வந்துவிடுவார் என்று பெரிய அப்பாடக்கர் போல லா பாயிண்டு எடுத்து விடும் வைத்தி, இந்த வழக்கை 18 ஆண்டுகளாக வாய்தா ராணி பட்டமே வாங்கி இழுத்து இழுத்து நீதித்துறையை சித்ரவதை செய்ததை என்ன சொல்வார்? ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு அப்பாவிப் பெண்ணின் உரிமைப் போராட்டம் என்று கவி பாடுவாரா?

ஒருக்கால் ஜெயா பிணையில் வந்தாலும், ஓபியின் தண்டனைக்கு பிணை இல்லை. அதனால் முதலமைச்சர் பதவியில் அம்மா அமர முடியாது. கட்சித் தலைவராக இருந்து கொண்டு அவரது வழிகாட்டுதலின் படி ஓ. பன்னீர் செல்வத்தின் மூலம் ஆட்சி நடத்தியாக வேண்டும் என்று புலம்புகிறார். நன்றாக கவனியுங்கள், ஓபி மூலம் ஆட்சி நடத்த வேண்டும் என்று இதே வைத்தி தனது கைப்பட எழுதியிருக்கிறார் என்றால் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி என்று இவர்கள் சோனியாவை கேள்வி கேட்டதும், மன்மோகனை கேலி செய்ததும் என்னய்யா நியாயம்?

ஆக, ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?

அடுத்து, ஜெயாவின் இந்த விதிவசத்தால் மற்ற எதிர்க்கட்சிகளுக்கு பயனேதும் இல்லை, அதிமுகவிற்கு இது எந்த பின்னடைவையும் ஏற்படுத்தி விடாது என்று ஜால்ராவையே மாபெரும் அரசியல் ஆய்வாக முன்வைக்கிறார் வைத்தி.

சோற்றில் உப்பு போட்டு தின்பவராக இருந்தால், ஒரு ஊழல் குற்றவாளி தண்டிக்கப்பட்டிருந்தாலும் அந்த கட்சி, ஆட்சியை எதிர்த்து மக்களிடம் அரசியல் இயக்கம் நடத்த ஒரு எதிர்க்கட்சிக்கும் துப்பில்லை என்றாவது எழுதியிருக்க வேண்டும். போயஸ் தோட்டத்தின் வாயிற் கதவு அம்மாவுக்கு எதிரானவர்களை உள்ளே விடாதது போல வைத்தியின் மூளையிலும் அம்மாவுக்கு எதிரான எதுவும் இல்லை.

போபர்ஸ், 2ஜி, நிலக்கரி போன்ற பல லட்சம் கோடி ஊழல் வழக்குகளோடு ஒப்பிட்டால் இந்த 66 கோடி ஒரு பொருட்டே இல்லை என்று பொதுமக்கள் நினைப்பதால் ஜெயாவுக்கு அனுதாப அலை பொங்கி வழிகிறதாம். அதனால் மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு அடுத்த முதல்வராகி, கருணாநிதி போல 5 முறை முதல்வராக இருக்கும் சாதனையை சமன் செய்வார் ஜெயா என்று ஆசீர்வாதமும் செய்கிறார் வைத்தி. ஜெயா சசி கும்பலின் இன்றைய சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடியில்லையா? தேர்தல் செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அதிமுக பெற்றது ஏழை தொண்டனிடம் பெற்ற நன்கொடையிலா?

பரப்பன அக்ரஹாரத்தில் அமர்ந்து கொண்டு கட்சிக்காரர்களையும், ஓபி போன்ற ஸ்பெசல் அடிமைகளையும் தவிர்த்துவிட்டு அவருக்கு வழங்கப்படும் நாளிதழ்களை ஜெயா படிக்கிறாராம்.

அந்த நாளிதழ்களில் தினமணி கண்டிப்பாக இருக்கும். அம்மாவுக்கு எது நல்லதோ அதுவே உண்மையின் உரைகல் என்று வைத்தி விதி வைத்திருக்கும் போது, விதி வசத்தால் ஓபிக்கு போட்டியாக இவரே உருவெடுக்கலாம்.

______________________________________

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக கும்பலின் வெறியாட்டம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்

12

காந்தியை பற்றி பாடப்புத்தகங்களிலும் பொதுவிலும் ஆளும்வர்க்க அடிபொடிகளால் சொல்லப்படும் கருத்துக்கள் தான் பொதுவெளியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காந்தி உண்ணாவிரதமிருந்தார், ராட்டை சுற்றினார் என்று மாணவர்களுக்கு, அஹிம்சை போதித்தார், சத்யாகிரகம் செய்தார், உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் வகுப்பெடுக்கப்படுகின்றது.

உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்? சாதி பற்றிய காந்தியின் கருத்து என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.

காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உண்மையானதா? என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தலைவர்களின் எழுத்திலும் பேச்சிலும் பார்க்கலாம். குறிப்பாக பார்பன இந்துமதத்தின் சாதிமுறைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெரியார், அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமிருக்கின்றன.

காந்தி யாருக்கான தலைவர்?

பிரிட்டிஷாரை எதிர்த்த காந்தியின் போராட்ட நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார் பெரியார். ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் போராட்டத்தை கட்டியமைத்தவர் தான் காந்தி. பொதுவுடைமை கொள்கை செல்வாக்கு பெறாமல் இருப்பதற்காக காந்தியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை ஆங்கில அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கும் இருந்தது. அந்த புரவலர்களின் உதவியால் காந்தி மக்களை கட்டி போட்டதையும் முக்கியமாக அவரே இதை ஒப்புக்கொண்டதையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார்.

Periyarஇதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:

“கடைசியாக என்ன நடந்தது? என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று.

அதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.

……புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது – வந்தாய் விட்டது என்பது உறுதி.

இந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமுமே நடத்திவைக்கத் தகுந்த மாதிரிக்கு இப்பொழுதிருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வதற்கில்லை.

இப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்ன?என்பதுதான் இந்த தலையங்கத்தின் கருத்து.

இவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா? என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால்,

நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்என்று சொல்லியிருக்கிறார்.

அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை.

அவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப் பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மை கொண்ட பத்திரிகைகள் எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலாகவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிரப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர் களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவேயிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன.

ஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது? என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா? அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம்.

பணக்காரனும் சோம்பேறியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன.

இவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசியமிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும்.

Gandhiஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை – மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.” என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்) சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்) அப்போது ஜனங்கள்பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமையாய் இருந்து வருகின்றது.

இவ்வளவோடு நிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம். மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளிகளான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளிகளாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதியாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர் அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும்.

காந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச் சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின் ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேட்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் ரகசியம் வெளிப்பட்டதா- 19.02.1933

காந்தியின் இரட்டை நாக்கு பற்றி

ஆளும வர்க்க நலனை காப்பாற்றி வந்த காந்தி ஆளும் வர்க்க நலனில் எந்த துரும்பு விழுவதையும் அனுமதிக்கவில்லை.இதற்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக பேசுவது போல பேசி அதை  ஆளும் வர்க்க நலனுக்கு திருப்பிவிட்டார். இதை பெரியார் அவருக்கே உரிய பாணியில் நேரு பற்றிய ஒரு சம்பவம் மூலம் அம்பலபடுத்துகிறார்.

நேரு ஒரு லண்டன் நிருபருக்கு அளித்த பேட்டியில்  பொதுவுடைமை கொள்கையை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடைமை எனக் கருதும் கொள்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அத்தகைய பொதுவுடைமை கட்சியை தான் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி பின்வருமாறு எழுதுகிறார் தந்தை பெரியார்.

நேரு, காந்தி, பட்டேல்
நேரு, காந்தி, பட்டேல்

“இது உண்மையானால் தோழர் ஜவஹர்லாலுக்கு இந்த குணம் காந்தியாரின் சகவாசத்தால் ஏற்பட்ட குணம் என்று தான் சொல்ல வேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ்வித தந்திர மொழிகள் கூறி இரு கட்சியாரையும் ஏமாற்றி பெருமை அடைவதை அனுசரித்து வருகிறார். உதாரணமாக

“வர்ணாசிரம தர்மம் வேண்டும் அனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,

“ராம ராஜ்யத்க்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்

“ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு”  என்பார்,

“ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,

“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டு. ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,

“ஏழைகள்,  தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது”  என்பார்,

“தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவரகள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டு” என்பார்,

தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டு” என்பார்

இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.

– ஜவர்லாலும் பொதுஉடைமையும், புரட்சி – தலையங்கம் –    17.12.1933

 நாங்கள்  தேசபக்தர்கள் ஆனால் பன்னாட்டு முதலாளிகளுக்கு நாட்டை விற்பது தான் ஒரே வழி, வேலைவாய்ப்பை பெருக்குவோம் ஆனால் அடிமையாக வேலை செய்யவேண்டும் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவோம்  என்றூ இன்று பல வகைகளில்  காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் காந்தியின் வாரிசுகளாக மக்களை தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

காந்தியின் சமகாலத்திலேயே கூட காந்தி ஜெயந்தியை கொண்டாடியிருக்கிறார்கள். அதை குறித்தும் பெரியர் எழுதியிருக்கிறார். காந்தியின் பார்ப்பனிய வர்ணாசிரம் ஆதரவு கருத்துகளை தொகுத்து கூறிவிட்டு, சுயமரியாதை உள்ள எவனும் காந்தி ஜெயந்தி கொண்டாட மாட்டான் என்கிறார் பெரியார்.

காந்தி ஜெயந்தி பற்றி பெரியார்

“கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

……அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான்களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடுவதற்கு அறிகுறியாய் காந்தி ஜெயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவதென்றால் இதன் அக்கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை.

தோழர் காந்தியாருக்கு இன்று ஜெயந்தி கொண்டாடுவதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜெயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜெயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜெயந்தி கொண்டாடத்தக்க “பெரியோர்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜெயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,
அலகிலா விளையாட்டுடையா ரவர்,
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக்கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்திவாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்தி ஜெயந்தி.

…….தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்தியவர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச்சிரம தர்மத்தை ஆதரிப்பதினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பனரல்லாதார் நிலை என்னவா கின்றது?

800px-Gandhi_spinning-EDஅன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாத வர்களுக்கு ஏற்படவேண்டும்”.

இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்

தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9-ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக் கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத் தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப்பாடுபட்ட ஒரு மகானின்ஜெயந்திக்குப் பார்ப்பனரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜெயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜெயந்திக்கு ஒரு உதாரணமாகும்.”

குடியரசு – தலையங்கம் – 15.10.1933

திரு.காந்தியின் உண்மை தோற்றம் – தொழிலாளிகளை எச்சரிக்க்கும் பெரியார்

கிராமவாசிகள் செருப்புத் தைக்க வேண்டுமாம்! ஆடு, மாடுகள் மேய்க்க வேண்டுமாம்! இராட்டினத்தில் நூல் நூற்க வேண்டுமாம்! கைத்தறியில் நெசவு நெய்ய வேண்டுமாம்! ஆனால் பம்பாய்வாசிகள் கோடீஸ்வரர்களாகி, அதற்கு தகுந்த போகபோக்கியங்களை அனுபவிக்க வேண்டுமாம்! இதுதான் சுயராஜ்ஜியத்திட்டமாம்! ஆகவே இந்தப்படியான மனோபாவங் கொண்ட திரு. காந்தியைப் “பாரத நவஜவான்” உண்மை வீரர்கள் “காந்தி ஒழிக!” “காந்தீயம் ஒழிக!!” “காங்கிரஸ் ஒழிக!!!” என்று சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றது?

காந்திக்கு வேண்டுமானால், காந்தீயமென்பதில் நம்பிக்கையிருக்கலாம். ஆனால், நமக்கு இப்படிப் பட்ட காந்தீயம், ஒழிய வேண்டுமா? வேண்டாமா? ஒழியாமல் சமதர்மம் ஏற்படுமா? என்று கேட்கின்றோம். “திரு. காந்தி, இந்தியாவை வெள்ளைக்கார ஆட்சிக்கு முன்னிருந்த பழைய அதாவது ஆதிகாலத்து இந்தியாவுக்குக் கொண்டு போகப் பார்க்கின்றார்”என்று திருவாளர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றது? என்று கேட்கின்றோம்.

“ருசியப் பொதுவுடைமைக்காரர்கள்” “இந்திய கிராம வாசிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், திரு. காந்தி அவர்கள் ஒரு பெரிய துரோகி” என்றும், “காங்கிரஸ், தொழிலாளிகளுக்கும், பாமர மக்களுக்கு மேற்பட வேண்டிய முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை” என்றும் சொன்னதிலென்ன தப்பிதமிருக்கின்றதென்று கேட்பதுடன் நாமிதுவரை சொல்லி வந்த விஷயங்களிலெந்த வெழுத்துக் குற்றமானதென்றும் கேட்கின்றோம்.

…………மதத்தில் பார்ப்பனன் – பறையனென்கின்ற இருபாகுபாடுகளும் ஒழிவதற்கு இருவருடைய கூட்டமுமொழிந்தாக வேண்டுமென்று எப்படி விரும்புகின்றோமோ, அப்படியேதான் சமூக வாழ்வு என்பதிலும், முதலாளி – தொழிலாளியென்பதாகிய பாகுபாடுமடியோடொழிவதற்கு இரு பெயரையுடைய இரு கூட்டமுமொழிந்தாக வேண்டு மென்கிறோம். ஏனென்றால் முதலாளி – தொழிலாளி என்கின்ற பதமே, வைசிய – சூத்திர என்று சொல்லப்படும் வருணாச்சிரம தர்மக் கொள்கைக்கு ஏற்படுத்தப் பட்டதேயாகும்.

வைசியன்- சூத்திரனென்பது வடமொழிப் பதங்கள். அதாவது சமஸ்கிருத வார்த்தைகள். முதலாளி – தொழிலாளியென்பது தென் மொழி பதங்கள். அதாவது தமிழ் வார்த்தைகள். ஆகவே இவ்விரண்டிலும், பாஷை வித்தியாச மென்பது மாத்திரம் தவிர கருத்து வித்தியாசமென்பது சிறிது மில்லையென்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

சூத்திரனென்றால், சரீரத்தில் வேலை செய்பவன் – முதல் மூன்று பேருக்கும் தொண்டு செய்பவன் – அடிமை யென்பவைகளே, அதையுண்டாக்கியவர்களின் வியாக்கியானமாகும். அதுபோலவே தொழிலாளியென்றாலும். சரீரத்தில் வேலை செய்பவன் – மற்றவர்கள் அவசியத்திற்கும், வாழ்க்கையின் தேவைக்குமே வேலை செய்யும் வேலையாள் – தொண்டன் யென்பவைகளேயாகும்.

அவனுக்கும் உணவுமட்டுந்தானளிக்க வேண்டும். இவனுக்கும், ஜீவனத்திற்குப் போதுமான அளவுதான் ஏதாவது கொடுக்க வேண்டும். ஆகவே, இந்தப் பாகுபாடுகளை சனாதன மகாநாட்டிலும், ஆரியதரும பரிபாலன மகாநாட்டிலும், பிராமண மகாநாட்டிலும், பேசும்போது “மனு தர்மம்” “வருணாச்சிரமபாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. இவைகளை விட்டு காங்கிரஸ் மகாநாட்டிலும், அரசியல் மகாநாட்டிலும் பேசும்போது “சுயராஜியம்”, “முதலாளி – தொழிலாளித்தன்மை பாதுகாப்பு” ஆகிவிடுகின்றது. ஆகவே இரண்டு மகாநாடுகளிலும், ஒரே கருத்தின் மீதுதான், ஒரே மனப்பான்மை யுள்ள மக்களால் தான் பேசப்பட்டும், தீர்மானிக்கப்பட்டும் வருணாச் சிரமதர்மம் வெற்றி பெற்று வருகின்றது.

இந்தத் தருமம் வியாபார முறையில் மாத்திரமல்லாமல், விவசாய முறையிலுமிந்தக் கருத்துடனேயே தானிருந்து வருகின்றது. அதாவது, ஜமீன்தாரன் மிராசுதாரன் யென்பவர்களாகின்ற பூமிக்குச் சொந்தக் காரர்களும், விவசாயத்தொழில் செய்யும் கூலியும், அதாவது பண்ணையும்- பண்ணையாளுமாகிய இரண்டு பிரிவுகளும் கூட வைசியன்- சூத்திரனென் கின்றப் பதங்களின் – தத்துவத்தின் கருத்தேயாகும். அதனால்தான், வருணாச் சிரம தரும முறையில் பூமியுடையவர்களையும், வைசிய வருணத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதனாலேயேதான். திரு. காந்தியும், பூமியுடைவர் களையும் அதாவது ஜமீன்தாரர்கள் முறைமையையும் காப்பாற்றப்பாடுபடுகின்றேனென்று அடிக்கடி சொல்லிவருகிறார்.

உதாரணமாக, அதே 12ந் தேதி “சுதேசமித்திரன்” பத்திரிக்கையின் 5-வது பக்கம் 6-வது கலத்தில் “மகாத்மாவும் இனாம்தாரர்களும்” என்கின்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை விளக்கமாய் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, ஜமீன்தாரர்களின் கோஷ்டியொன்று, தங்களுடைய நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக திரு. காந்தி அவர்களை, இம்மாதம் 10-ந் தேதி பம்பாயில் கண்டு கேட்ட பொழுது, “ஜமீன்தாரர்க ளுடைய சொத்துரிமைகளுக்குத் தீங்கிழைக்க நான் கனவிலும் கருத வில்லையென்று சொல்லி யிருக்கிறார்.

இதனாலேயேதான் வருணாச்சிரமதருமம், பிறவியிலானாலும் சரி தொழில் முறைமையிலானாலும் சரி, அடியோடு ஒழிக்கப் பட்டாலொழிய சமதர்மமேற்பட முடியாதென உரைக்கின்றோம். ஆனால் திரு. காந்தியவர் களோ இந்த “வருணாச்சிரமமென்பதைத் தொழில் முறையில்தான் நான் சொல்லுகிறேன்” என்பதாகச் சொல்லிவிட்டு, உடனேயே அதற்கடுத்த வாக்கியத்தில் ஆனால் “தொழில் முறையென்பது பரம்பரைக்கிரமமாக இருக்க வேண்டு”மென்று சொல்லி வருகின்றார். இதற்கும் காரணம் சொல்லும் பொழுது இந்தப்படி அதாவது “தொழிலானது, பரம்பரைத்தொழில் முறையைக் கொண்டதாயிருந்தால்தான் உலகம் கிரமமாய் நடைபெற முடியும், தொழிலுமொழுங்காய் நடைபெறு”மென்று சொல்லி வருகிறார்.

ஆகவே, எந்தக் காரணத்தைக் கொண்டானாலும் சரி, எந்த முறை மையிலிருப்பதானாலும் சரி, வருணாச்சிரம தருமமென்பதை அடியோடு ஒழித்தாக வேண்டியதுதான் மக்களின் முக்கியக் கடமையாகும். வருணாச் சிரமமொழிந்த இடந்தான் விடுதலை – சமதர்ம நிலையமாகும்.

ஆதலால், முதலாளி – தொழிலாளி யென்கின்றத் தன்மை எக்காரணத்தைக் கொண்டும், எம்மாதிரியிலுமிருக்க விடக்கூடா தென்றேதான். பொது மக்களுக்கு நாம் யெடுத்துக் சொல்லுகிறோம்.

-குடி அரசு – தலையங்கம் – 21.06.1931

ஆட்டோ ஓட்டுனர்கள் கிள்ளுக்கீரைகளா – கருத்தரங்கம்

1

“ஆட்டோ ஓட்டுனர்களை கிள்ளுக்கீரைகளாக கருதும் அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்வது எப்படி” என்ற தலைப்பில் 28.09.2014 அன்று மாலை திருச்சி உறையூரில் கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தினை ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் கோபி தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் தோழர் காவேரிநாடான், தஞ்சை வழக்குரைஞர் சதீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் நன்றியுரை கூறினார்.

இக்கூட்டத்தில், “மக்களை போதையில் மூழ்கடிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடு” என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி நாடகமும், மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்களும் இடம்பெற்றன. இக்கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தோழமை அரங்கினர், பெண்கள் உட்பட 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தலைமையுரையில் தோழர் கோபி பேசியது:

“ஆட்டோ டிரைவர் என்றால் அதிகார வர்க்கம், கேவலமாக பார்ப்பதும், இழிவுபடுத்துவதும் தொடர்ச்சியாக உள்ளது. முன்னாள் காவல்துறை ஆணையர் கருணாசாகர், இந்நாள் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, ஆர்.டி.ஓ, டி.டி.சி போன்றோர் அனைவருமே தொழிலாளர்களுக்கான மரியாதையோ, அவர்களுக்கான உரிமையையோ கொடுப்பதில்லை. தமது எடுபிடிகள் போல நடத்துகின்றனர்.

மாநகராட்சி ஆணையர் ஆட்டோவை ஒழுங்குபடுத்தப் போவதாக தடாலடி அறிவிப்புகள் செய்து ஸ்டாண்டுகளை கலைப்பது, சங்கங்களை கலைப்பது, குழுவாக பிரிப்பது, சுய உதவிக்குழு மேற்பார்வையில் செயல்பட வைப்பது என தன்னிச்சையாகவும் சர்வாதிகாரியை போலவும் நடந்து கொள்கிறார். இது சங்கங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையையும் பறிக்கும் செயலாகும்.

இதனை எதிர்கொள்வதும் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக போராடுவதும், நமது ஜனநாயக உரிமையாகும். இதுபோன்ற எண்ணற்ற வகையில் டிரைவர்கள் அன்றாடப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க உறுதியாக போராடுவதின் மூலமே இத்தகைய மக்கள் விரோத செயலை தடுக்க முடியும்”

வழக்கறிஞர் சதீஷ், தஞ்சை பேசியதாவது:

“ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சமத்துவ உரிமை, சம உரிமை, சுதந்திர உரிமை, பண்பாட்டு உரிமை, பேச்சுரிமை, நடமாடும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, சமயம் சார்ந்த உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை உட்பட ஏராளமான உரிமைகள் சட்டப்புத்தகத்தில் உள்ளது. ஆனால் இவை நடைமுறையில் இல்லை. உதாரணமாக பால்தாக்கரே இறப்பினை ஒட்டி நடந்த கலவரம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மாணவி, அதை லைக்  செய்த மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, பேச்சு உரிமை லட்சணத்தை அன்று நாடே பார்த்தது.

நடமாடும் உரிமை: 144 தடை உத்திரவு இல்லாத காலங்களிலும் இரவு 11 மணிக்குமேல் மனிதர்கள் தனியாக நடமாட முடியாது. சந்தேகம் என்னும் பெயரில் காவல்துறையினர் கொடுக்கும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தஞ்சையில் ஆட்டோ டிரைவர் தமது வண்டி பஞ்சர் ஆனதால், இரவில் நடந்து சென்று ஸ்பேனர் வாங்கி வரும் வழியில் அவரை விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் அடைத்து வைத்து மறுநாள் காலை விடுவித்தனர். இது நடமாடும் உரிமையும் பறிபோகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

சுதந்திர உரிமை, தொழில் செய்யும் உரிமை என எதுவும் இல்லை. கோடீஸ்வரர்கள் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தாலும் அவர்களை பாதுகாக்கும் அரசு மேற்கண்ட மோசடி பேர்வழிகளின் பெயரைக் கூட அரசோ, வங்கிகளோ அறிவிப்பதில்லை. ஆனால், அமைப்பு சாரா தொழிலாளர்களான ஆட்டோ, தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்டோரை தொழில் செய்வதற்கு எந்தவித அடிப்படை உரிமையும் தராமல் விரட்டியடிக்கின்றனர்.

கல்வி கற்கும் உரிமை இன்று முழுவதும் பறிக்கப்பட்டு கல்வி கடைச் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினரையும், நிர்வாகிகளையும், சமூக விரோதிகள் போல பார்க்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது. நாட்டில் முதலமைச்சர், பிரதமராவதற்கு இந்நாட்டில் கல்வித் தகுதி இல்லை. ஆனால், 30 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டிய ஆட்டோ டிரைவர்கள் இனிமேலும் தமது பணியை தொடர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்ப்பந்திக்கிறது.

சமயம் சார்ந்த உரிமை இன்று இல்லை. தில்லை நடராஜர் கோவில் வழக்கு முதல் அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமை வரை இன்று பறிக்கப்பட்டு சாதிக்கொரு நீதி, சமயத்திற்கு ஒரு நீதி நீடித்து வருகிறது.

மக்களுக்கான இத்தகைய உரிமைகள் எல்லாம் ஏட்டளவு மட்டுமே இருந்து வருகிறது, தமிழகத்தில் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் எந்தவிதமான உரிமையும் இல்லாமல் இந்த அரசினால் சமூக விரோதிகளை போல வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் இவர்கள் மீதான தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கெதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்புவதும், எதிர்த்து போராட முன்வருவதும், புரட்சிகர சங்கமாக அணிதிரள்வதன் மூலமாகவே இந்த அநீதிகளை எதிர் கொள்ள முடியும் என சூளுரைத்தார்.

மனித உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் காவேரி நாடான் பேசியதின் சுருக்கம்;

“ஆட்டோ ஓட்டுநர்களை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்வது எப்படி?” புரட்சிகர உணர்வு கொண்ட சங்கத்தால் மட்டுமே இத்தகைய தலைப்பில் கூட்டம் நடத்த முடியும். காவல்துறை ஆணையர் கருணாசாகரின் அடாவடித்தனத்தை அடக்கிய சங்கம் இது. நிச்சயம் மாநகராட்சி ஆணையர் தண்டபாணியின் அடாவடி செயலையும் எதிர்கொண்டு முறியடிப்போம். சங்கம் வைக்கும் உரிமை தொழில் செய்யும் உரிமை என அனைத்தையும் பறிப்பது, சுய உதவிக் குழு போன்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்களை இணைக்க முயற்சிப்பது, எந்தவித ஒழுங்குமுறைக்கும் ஆணையர் கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கதக்கது.

சுய உதவிக்குழுவினால் பாதிக்கப்படும் பெண்கள் இன்று ஏராளம். இவர்களின் அராஜகத்தால் தற்கொலை செய்வது முதல் மன உளைச்சலுக்கு உள்ளாகுபவர்கள் வரை பெருகி வருகின்றனர். இப்படிப்பட்ட நவீன கந்து வட்டி கும்பலான சுய உதவி குழுவினரின் பொறுப்பில் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களை இணைப்பது என்பது அயோக்கியத்தனமானது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கிளம்பியுள்ள இந்த ஒழுக்க சீலர் ஆணையர், சாரதாஸ், சென்னை சில்க், மங்கள் & மங்கள் உள்ளிட்ட பெரும் வணிக நிறுவனங்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டி ரோட்டையே ஆக்கிரமித்து இருப்பதின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை சில்க் பார்க்கிங்கிற்காக ரோட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி தரப்பட்டுள்ளது. என்.எஸ்.பி ரோடு முழுவதும் சாரதாஸ் வளைத்து போட்டு வானுயர்ந்த கட்டிடம் கட்டியுள்ளது. இதனை ஏன் ஆணையர் தடுத்து நிறுத்தவில்லை.

மத்தியப் பேருந்து நிலையம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் ஆக்கிரமித்துள்ளன. அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு பேருந்திற்கு போகும் பயணிகளை கட்டாயப்படுத்தி தனியார் பேருந்திற்கு அழைத்து செல்கின்றனர். ஏன் ஆணையர் இதனை கண்டு கொள்ளவில்லை.

என்.டி.எல் உள்ளிட்ட கால்டாக்சிகள் திருச்சியில் ஓட அனுமதி இல்லை. ஆனால், தமிழகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர். பகிரங்கமாக விளம்பரம் செய்து சட்டவிரோதமாக தொழில் செய்து வருகின்றனர். அரசும், ஆணையரும் இதை வேடிக்கை பார்ப்பது ஏன்?

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, காட்டுத்தீயை போல அவ்வப்போது எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்த துப்பில்லாத ஆணையர் ஆட்டோ டிரைவர்களை முறைப்படுத்த கிளம்பியுள்ளது கேலிக்கூத்தானது. ஆட்டோ டிரைவர் என்றால், இவர்களுக்கு கிள்ளுக்கீரையாகவே உள்ளது. ஆர்.டி.ஓ, போலீஸ், மாநகராட்சியினர் ஓட ஓட விரட்டுகின்றனர். இவர்களை எதிர்த்து குரல் கொடுப்பது, தமது உரிமைக்காக போராடுவது நமது சங்கம் மட்டுமே, பெட்ரோல் டீசல் விலையை அவ்வப்போது ஏற்றி வரும் தனியார் முதலாளிகளை தடுக்காத இவர்கள் ஆட்டோ டிரைவர்கள் அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கின்றனர் என பேசுவது பித்தலாட்டமானது.

இத்தகைய அதிகார வர்க்கத்தினருடன் இணைந்து நுகர்வோர் அமைப்பினரும் ஆட்டோ டிரைவருக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இத்தகைய நுகர்வோர் அமைப்பினர் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்தினரின் 10 பைசா பிரச்சனைக்காக நீதிமன்றம் வரை சென்று வாதிடும் சூரப்புலிகள், கோடிக்கணக்கான மக்கள் வாங்கும் ரேசன் அரிசி, சுகாதாரமற்ற தண்ணீர், பொதுக்கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், உணவுப் பொருட்களும் அரசினாலும் மாநகராட்சியினாலும், அசுத்தமானவைகளாகவும் பயன்படுத்த முடியாதவைகளாகவும் உள்ளதை எதிர்த்து இந்த சட்ட வாத குழுக்கள் தமது சுண்டு விரலைக்கூட அசைத்ததில்லை. ஏன் என்றால், இவர்கள் அதிகார வர்க்கத்தின் எடுபிடிகள் என்பதே உண்மையாகும். சமீபத்தில் திருச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற நுகர்வோர் அமைப்பினர் விவசாயிகள் மின்சாரத்தை திருடுகின்றனர் என இழிவுபடுத்தினர். இதனை விவசாயிகளும், புரட்சிகர அமைப்பினரும், தகுந்த பதிலடி கொடுத்து காரி உமிழ்ந்தது ஊரறிந்த செய்தி.

ஆகவே, உழைக்கும் மக்களின் துயர் துடைக்க சட்டமோ அதிகார வர்க்கமோ, நுகர்வோர் அமைப்பினரோ, வரப்போவதில்லை. நமக்கான உரிமைகளில் நாம்தான் போராடி பெற வேண்டும். அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பதும், அதிகாரிகளின் அடாவடித்தனத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுவது இவற்றின் மூலமே நமது உரிமைகளை பெற முடியும். இன்றைய உலக மயமாக்கலின் சூழலில் உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்களை நகரத்தை விட்டு விரட்டி அடிப்பதும், அவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதும் இன்றைய கார்ப்பரேட் கொள்ளையர்களின் கொள்கைக்கு அடியாட்களாக வேலை செய்யும் இந்த அதிகார வர்க்கத்தினரிடம் கெஞ்சுவதினால் எந்தவித பயனும் இல்லை. இவர்களை எதிர்த்து உறுதியுடன் போராடுவதின் மூலமே நமது வாழ்க்கையை வாழ்வாதாரங்களை பாதுகாக்க முடியும் என பேசினார்.

ஆணையர் மேற்கண்ட அறிவிப்பை செய்து பல நாட்கள் ஆகியும், அமைதி காத்த சி.ஐ.டி.யு போன்ற அமைப்பினரும் இந்த கருத்தரங்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக போராட முன் வந்துள்ளனர். நமது உறுப்பினர்களின் உரிமைக்காக மட்டுமல்லாமல் பிற சங்கத்தினரையும் தட்டி எழுப்பும் வகையில் இந்த கருத்தரங்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.

இணைப்பு:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி-தமிழ்நாடு.
அழைக்க:9791692512.