Wednesday, May 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 634

போலி மோதல் புகழ் மோடியை காந்தியாக்கும் ஊடகங்கள்

2

சோராபுதீன் ஷேக் முதல் இஷ்ரத் ஜகான் வரை பல அப்பாவிகளை போலி மோதலில் கொன்ற, 30-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் குஜராத் சிறையில் இருக்கின்றனர். இத்தகைய கொலைகார போலீசு படைக்கு தலைமை தாங்கிய அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் நரேந்திர மோடியும் முறையே பா.ஜ.க தலைவர், பிரதமர் ஆகியிருக்கின்றனர். இப்பேற்பட்டவர்களது “அரசு போலி மோதல் கொலைகள் மீது எந்த சகிப்புத் தன்மையும் காட்டாது” என்று அறிக்கை அளித்திருக்கிறதாம். நம்ப முடிகிறதா? நம்பித்தான் தீர வேண்டும். தி இந்து நாளிதழும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் “அப்பாவி மக்கள் கொல்லப்படுவதில் மத்திய அரசு சகிப்புத்தன்மை காட்டாது”, “Zero tolerance for fake encounters: Modi govt tells SC” என்று நான்கு காலம் தலைப்புச் செய்தியாக அறிவித்திருக்கின்றன.

போலி மோதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
போலி மோதல் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (2011-ம் ஆண்டு)

மோடி எப்போது ஜனநாயக காவலர் ஆனார்? பாம்புகள் எப்போதிருந்து எலியை வெறுத்து விட்டன?

மணிப்பூரில் மத்திய ஆயுதப்படைகளாலும், மாநில காவல்துறையினாலும் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கமிஷனை நியமித்தது. அந்த கமிஷன் அளித்த ஆய்வறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதிலில் “மத்திய அரசு போலி மோதல்கள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அத்தகைய சட்ட விரோதமான கொலைக்குற்றவாளி யாராயிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறது. இதன்படி பார்த்தால் மோடி ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல பாஜக அரசு ஜனநாயகக் காவலராக மாறியிருப்பதாக தோன்றும்.

“இனிமே நான் சத்தியமா லஞ்சம் வாங்க மாட்டேன்…” என்று ஒரு அரசு அதிகாரி சத்தியம் செய்வதான புல்லரிப்பு நமக்கு ஏற்படும். ஆனால், இது போல பல சத்திய பிரமாணங்களை கேட்டு பழகிய நமக்கு, “நான் என்ன சும்மா கொழுப்பெடுத்தா லஞ்சம் வாங்குறேன். மேலதிகாரிகளுக்கு கொடுத்தே ஆகணும்கிறதுக்காகத்தான் வாங்க வேண்டியியருக்கிறது. விக்கிற விலை வாசி, பசங்க படிப்பு செலவு, சொந்தமா வீடு கட்டுவதுன்னு நியாயம நான் வாழ்றதுக்கு வாங்குற சம்பளம் போதுமா? யார் சார் இந்த உலகத்துல லஞ்சம் வாங்காம, தப்பு செய்யாம இருக்காங்க? காசு வாங்குனாலும் வேலையை சுத்தமா செய்யறனா இல்லையா?” என்று பேசுவதை போலவே, போலி மோதல்கள் தொடர்பான மோடி அரசின் அறிக்கையும் பேசுகிறது.

போலி மோதல்
ஆயுதப் படைகளால் கடைக்குள் அழைத்துச் செல்லப்படுபவர், மோதலில் கொல்லப்பட்டதாக சோடிப்பு.

இதெல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து நாளிதழ்களுக்கு தெரியாதது அல்ல. இருப்பினும் மோடிக்கு கூஜா தூக்க வேண்டும் என்று வரும் போது அவர்கள் எந்தக் கூச்சமும் அடைவதில்லை.

“மணிப்பூர் சட்ட விரோத கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சங்கம்” மற்றும் “மனித உரிமை கண்காணிப்பு” ஆகிய தொண்டு நிறுவனங்கள், “கடந்த 30 ஆண்டுகளில் மணிப்பூரில் நிகழ்த்தப்பட்ட 1,528 சட்ட விரோத கொலைகளில் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்திருந்தனர். இத்தகைய கொலைகளை செய்யும் ஆயுதப் படையினரை பாதுகாக்க ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) பயன்படுத்தப்படுகிறது என்றும், சமீபத்தில் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கும்படியும், அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களில் 12 வயது சிறுவனும் அடக்கம்.

இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் திரு ஜே.எம்.லிங்டோ, மற்றும் டாக்டர் அஜய் குமார் சிங் அடங்கிய விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

போராட்டம்
அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர் போலி மோதலில் கொல்லப்பட்டதை எதிர்த்து போராட்டம்.

பொது நல வழக்கில் பட்டியலிடப்பட்டிருந்த போலி மோதல் கொலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமீபத்திய 6 வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆயுதப் படையினரின் சாட்சியங்களை விசாரித்தும், கொல்லப்பட்டவர்களுக்கு கடந்த கால குற்றப் பின்னணி உள்ளதா என்று கண்டறிந்தும், இந்தக் குழு 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

முதலாவது வழக்கில், ஆசாத் கான் என்ற 12 வயது சிறுவன் அவனது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாக அவனது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆயுதப் படையினர் தரப்பிலோ “ஆசாத் கான் ஒரு பயங்கரமான தீவிரவாதி. நாங்கள் அவன் வீட்டை நெருங்கும் போது இன்னொரு சிறுவனோடு வீட்டின் பின்புறமாக தப்பித்து ஓடினான், ஓடும் போது 8 மிமீ துப்பாக்கியால் எங்களை நோக்கிச் சுட்டான். தற்காப்புக்காக ஏகே 47 தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டதில் ஆசாத் கான் குண்டடி பட்டு விழுந்து விட்டான். இன்னொரு சிறுவன் தப்பி ஓடி விட்டான்” என்கின்றனர் ஆயுதப் படையினர்.

demo-against-afspa
AFSPA சட்டத்தை எதிர்த்து கங்களா இல்லம் முன்பு பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (ஜனவரி 25, 2014)

“ஏகே 47 துப்பாக்கி ஏந்திய 20 பாதுகாப்புப் படையினர் 8 மிமீ கைத்துப்பாக்கியால் சுட்ட சிறுவனை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர் என்பது நம்ப முடியாதது. மேலும் சிறுவர்கள் தரப்பில் 2 குண்டுகள் சுடப்பட்டதாக கூறும் ஆயுதப் படையினர் 65 முறை சுட்டிருக்கின்றனர். பட்டப் பகலில் நடந்ததாக கூறப்படும் இந்த மோதலில் ஆயுதப் படையினர் யாரும் காயமடையவில்லை. மணிப்பூர் காவல் துறை  அளித்த தகவல்களின்படி ஆசாத் கானுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு இருப்பதாகவோ, குற்றப் பின்னணி இருப்பதாகவோ நிரூபிக்கப்படவில்லை.

எனவே, முகமது ஆசாத் கான் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு மோதல் இல்லை என்றும் படையினர் தற்காப்புக்காக சுட்டதில் அவன் கொல்லப்படவில்லை” என்றும் ஹெக்டே விசாரணை குழு முடிவு செய்திருக்கிறது.

இரண்டாவது வழக்கில், 20 வயதான கும்போங்மயூம் ஓர்சன்ஜியை நோக்கி ஏகே 47 முதலான கனரக ஆயுதங்களால் 41 முறை சுட்டு 10 குண்டு காயங்களை ஏற்படுத்திய பாதுகாப்புப் படையினர், அதற்கு காரணமாக கும்போங்மயூம் தங்களை நோக்கி 8 மிமீ கைத்துப்பாக்கியால் சுட்டதாக (ஒரு முறை) கூறியிருக்கின்றனர். கும்போங்மயூமின் அம்மா, சம்பவ தினத்தன்று தனது மகன் தனது ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய வெளியில் போனதாகவும், வெளியூர் போவதற்கு முன்பு மகனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வெளியூர் போன பிறகு அவர் கொல்லப்பட்டதாக தொலைபேசி தகவல் வந்ததாகவும் கூறியிருக்கிறார். கும்போங்மயூம் கொல்லப்பட்ட சம்பவம் மோதல் இல்லை என்றும் பாதுகாப்புப் படையினர் சுயபாதுகாப்புக்காக சுட்டனர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் விசாரணை குழு அறிக்கை அளித்திருக்கிறது.

தங்ஜம் மனோரமா
2004-ம் ஆண்டு கொல்லப்பட்ட தங்ஜன் மனோரமா

மூன்றாவது வழக்கில், வெளியில் டீ குடிக்கச் சென்ற கோபிந்த் மேய்த்தேயும், அவரது உறவினர் நோபோ மேய்த்தேயும் வீடு திரும்பவில்லை என்கின்றனர் அவர்களது குடும்பத்தினர். ஆனால், தங்களை தாக்கிய இந்த இளைஞர்களை தற்காப்புக்காக தாங்கள் சுட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் உண்மையான மோதல் இல்லை, பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு இவர்களை கொன்றிருக்கின்றனர் என்று ஹெக்டே கமிஷன் முடிவு செய்திருக்கிறது.

நான்காவது வழக்கில், காணாமல் போன பசு ஒன்றைத் தேடி மிதி வண்டியில் வெளியில் போன 20 வயதான கிரன்ஜித் சிங், இம்பால் மண்டல மருத்துவ நிலையத்தின் பிணவறையில் உயிரற்ற உடலாகத்தான் பார்த்ததாக கூறுகிறார் அவரது தந்தை. இந்த வழக்கிலும் தற்காப்புக்காக சுட்டதில் கிரன்ஜித் சிங் இறந்து விட்டார் என்று பாதுகாப்புப் படையினர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது ஹெக்டே கமிஷன் அறிக்கை.

ஐந்தாவதாக, சொங்தாம் உமாகாந்தா அவரது நண்பரை பார்க்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரை இம்பால் அரசு மருத்துவமனை பிணவறையில் அடுத்த நாள் பிணமாக பார்த்ததாகவும் அவரது அம்மா புகார் கூறியிருக்கிறார். அவரது நண்பரின் தாய் கொல்லப்பட்ட சொங்தாம் தன் மகனை சந்திக்க வந்தபோது அவருடன் ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் வந்ததாகவும், சிறிது நேரத்தில் பாதுகாப்புப் படையினர் வந்து அவரை இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்திலும், பாதுகாப்புப் படையினர் மோதலில் தற்காப்புக்காக உமாகாந்தாவை கொன்று விட்டதாக  சொல்வதை நிராகரித்திருக்கிறது கமிஷன்.

தங்ஜம் மனோரமா
ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட தங்ஜம் மனோரமாவின் உடல்.

ஆறாவது வழக்கில், ஊறுகாய்களுக்கான பாலிதீன் பைகள் வாங்கப் போன அகோய்ஜம் பிரியோப்ரதா வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் மாலையில் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததாக அவரது அம்மா புகார் தெரிவித்திருக்கிறார். இவரது மரணமும் மோதலில் நடக்கவில்லை, பாதுகாப்புப் படையினர் அடித்ததில் இறந்திருக்கிறார் என்று ஹெக்டே அறிக்கை முடிவு செய்திருக்கிறது.

இந்த அறிக்கைக்கான பதிலில்தான் மோடி அரசு தனது தோலில் உள்ள வரிகளை அழித்துக் கொண்டு விசமற்ற சாது பாம்பாக மாறி விட்டதாக தி இந்து நாளிதழும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் பூரித்திருக்கின்றன. ஆனால், தலைப்புச் செய்தியைத் தாண்டி படிக்கும் போது மோடி அரசின் உண்மையான பாசிச முகம் தெரிகிறது.

“போலி மோதல் கொலைகள் பற்றிய விசாரணை என்ற பெயரில் நல்ல எண்ணத்துடன், மோசமான நோக்கமின்றி பணியாற்றும் அப்பாவி பாதுகாப்புப் படையினர் அலைக்கழிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று தொடர்கிறது உள்துறை அமைச்சகத்தின் பதில். அதாவது ‘நல்ல எண்ணத்துடன்’, ‘மோசமான நோக்கமின்றி’ பணியாற்றுவதற்கு இந்திய அரசால் ஏகே 47 துப்பாக்கிகள் கொடுத்து அனுப்பப்படும் ஆயுதப் படையினரை அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி கேட்டு தொந்தரவு செய்யக் கூடாதாம். அவ்வாறு செய்வது, மோடியோ, அல்லது உயர் பதவிகளில் இருக்கும் ஏதாவது ஒரு கேடியோ உத்தரவிட்டால் கண்மூடித்தனமாக அடிபணிவதற்கு அவர்களுக்கு மனத்தடையை ஏற்படுத்தி விடுமாம்.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்களை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தீக்குளித்த பேபாம் சித்தரஞ்சன்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நோக்கத்துடன் பல தலைமறைவு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாகவும், தீய வழிகளிலும், வெளிநாடுகளிலிருந்தும் திரட்டிய பணத்தை அதற்கு பயன்படுத்துவதாகவும் மோடி அரசின் பதில் தெரிவிக்கிறது. ஆனால், இந்திய அரசின் பாதுகாப்புப் படைகள் அப்படிப்பட்ட தலைமறைவு அமைப்புகளை எதிர்கொள்ளும் பெயரில் தங்ஜம் மனோரமா முதல் ஆசாத் கான் வரை ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்திருக்கின்றனர்.

“பாதுகாப்புப் படைகள் இத்தகைய பாதிக்கப்பட்ட பகுதியில் இயங்கி வருகின்றனர். ஆனால், போராளிகளின் ஆதரவாளர்கள் எந்த ஒரு மோதல் கொலையையும் போலி என்று பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது போன்ற ‘போலி’ மோதல் கொலைகளில் ஏதாவது அப்பாவி பாதுகாப்புப் படைவீரர் அலைக்கழிக்கப்பட்டால், அது ஆயுதப் படைகளின் மன உறுதியை குலைத்து விடும்.” 12 வயது சிறுவன், தொலைந்து போன பசுவை தேடிப் போனவர், டீ குடிக்க போனவர், ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர், நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள். கொல்லப்பட்ட 1,528 பேரில் ரேண்டமாக எடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் போலி மோதல் என்று விசாரணை கமிஷன் முடிவு செய்திருக்கிறது. ஆயுதப் படையினர் சொல்லும் கதையின் அடிப்படையிலேயே கூட இந்த ‘பயங்கரமான பயங்கரவாதிகள்’ ஏந்தியிருந்த ஆயுதம் 8 மிமீ கைத்துப்பாக்கிகள்.

பேபாம் சித்தரஞ்சன் நினைவு
பேபாம் சித்தரஞ்சன் நினைவு

“பகைமையான, பாதுகாப்பற்ற சூழலில் இயங்கும் ஆயுதப் படையினருக்கு அடிப்படையான, மிகக் குறைந்த சட்ட பாதுகாப்பை ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் வழங்குகிறது. எனவே ஆயுதப் படையினர் உள்ளூர் காவல்துறையிடமிருந்தும், குற்றவழக்கு விசாரணைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.” என்கிறது மோடி அரசின் அறிக்கை. உள்ளூர் சாதி வெறியன் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை பாலியல் குற்ற முதலைகளே தப்பித்து போய்க் கொண்டிருக்கும் அளவிலான ஓட்டைகளைக் கொண்ட காவல்துறை விசாரணை வலையில் கூட தங்கள் செல்ல ஆயுதப் படைகள் சிக்கி விடக் கூடாது என்பதுதான் மோடி அரசு மணிப்பூருக்கு வழங்கும் ‘ஜனநாயகம்’. இதன்படி ஆயுதப் படைகளின் கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட எந்த குற்றச் செயலையும் மாநில காவல் துறை விசாரிக்க முடியாது.

மணிப்பூரில் அந்த சட்டத்தை நீட்டிப்பதற்கு மாநில சட்டசபையின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற பரிந்துரையையும் அரசு நிராகரித்திருக்கிறது. “அப்படி செய்தால், தேவைப்படும் நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய் விடும்” என்றது. மணிப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் மாதக் கணக்கில் 144 தடையுத்தரவுக்கு உட்படுத்தப்படுவதும், கோவையில் புரட்சிகர அமைப்புகள் பொதுக் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த விடாமல் தடுக்கப்படுவதும், கடலூர் மாவட்டத்தில் யாரும் பேரணி நடத்தக் கூடாது என்ற காவல் துறை அடாவடியும் ஆன இந்திய ‘ஜனநாயக’ நடைமுறைகளின் அதி உயர்ந்த வடிவம்தான் மணிப்பூரில் இயங்கி வரும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்.

இவ்வாறு, மணிப்பூரை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆட்சி செய்யும் தனது உத்தேசத்தை தெரிவித்திருக்கும் மோடி அரசு, அதற்கான நியாயமாக ஒரு காரணத்தை எடுத்து வெளியில் விடுகிறது.

"இந்தியா ராணுவமே, எங்களை ரேப் செய்"
“இந்தியா ராணுவமே, எங்களை ரேப் செய்” – 2004-ல் தங்ஜம் மனோரமா படுகொலையைக் கண்டித்து கங்களா இல்லத்தின் முன்பு மணிப்பூர் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம்.

மனம் போன வன்முறையில் ஈடுபடும் போராளிகளின் முக்கிய இலக்காக அதிகாரிகள் இருக்கின்றனராம். 1,528 பேர் போலி மோதல் கொலைகளில் கொல்லப்படுவதற்கு காரணமான அதிகாரிகள் மீதான வன்முறை எப்படிப்பட்டது? கடந்த சில ஆண்டுகளில் 27 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். “பல  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த மனிதத் தன்மையற்ற கசாப்புக்கு உயிரை பலி கொடுத்திருக்கின்றனர். இந்த அபாயங்களுக்கு மத்தியில்தான் மணிப்பூர் நிர்வாகம் எப்படியோ செயல்பட்டு சாதாரண குடிமகனுக்கு அடிப்படை சேவைகளை வழங்க முடிந்திருக்கிறது.” 1,528 பேரைக் கொன்ற அடிப்படை சேவையை வழங்கும் பணியில் 27 அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தமது உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த சட்டத்தை எதிர்த்து 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மணிப்பூர் மாணவர் பேபாம் சித்தரஞ்சன் தீக்குளித்தார். முன்னதாக, அந்த ஆண்டு ஜூலை மாதம் தங்ஜன் மனோரமா பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மணிப்பூரின் பெண்கள் 17 அசாம் ரைஃபிள்ஸ் ஆயுதப்படையினர் ஆக்கிரமித்திருந்த கங்களா இல்லத்தின் முன்பு தமது ஆடைகளை களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அசாம் ரைஃபிள்ஸ் படையினரின் முகாம் கங்ளாவிலிருந்து மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை பற்றி ஆய்வு செய்ய நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி நியமிக்கப்பட்டது. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்த அந்த கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு குப்பைக் கூடையில் போட்டு விட்டது.

தற்போது, ஹெக்டே கமிஷனின் விசாரணையின் போது பாதுகாப்புப் படையினருக்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியான அடிப்படை உரிமைகள் கூட கொடுக்கப்படாமல், அவர்கள் தம்மைத் தாமே குற்றம் சாட்டிக் கொள்ளக் கூடிய வகையில் சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்கிறது. அதாவது, ‘குற்றம் புரிந்தவனை விசாரித்தால் உண்மை வெளிப்பட்டு விடும், எனவே விசாரணை கூடாது’ என்ற மகத்தான ஜனநாயக தத்துவத்தை மோடியிசத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக மத்திய அரசு முன் வைத்திருக்கிறது.

போலி மோதல் கொலைகள் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க அது குறித்த செய்திக்கு,  முற்றிலும் எதிரான, நேர்மறை டுவிஸ்ட் கொடுத்திருக்கும் ஊடகங்களின் அயோக்கியத்தனத்தை, அல்லது மொள்ளமாரித்தனத்தை பற்றி என்ன சொல்வது?

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜால்ரா ஆஃப் மோடி என மாறி நீண்ட காலம் ஆகி விட்டது தெரிந்த விஷயம் என்றாலும், முற்போக்கு, மனித உரிமை என்று சீன் போடும் தி இந்து நாளிதழின் ஆளும் வர்க்க சாய்வு இங்கு அம்பலமாகியிருக்கிறது. கூடவே இராணுவம், போலீசின் அடக்குமுறையை வெளிப்படையாக ஆதரிக்கும் பாசிசத்தின் முன்னுரையும் மோடி அரசால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

–    செழியன்

மேலும் படிக்க

வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி

1

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 5 (இறுதிப் பகுதி) :
கல்விக் கொள்கையும், வரலாற்றுப் பார்வையும்

பாடத்திட்டம்
அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இன்னது எனத் தெரியாமலேயே பாடத் திட்டக் குழு பாடத்திட்டத்தை வகுக்கிறது.

முன்னர் பாடத்திட்டக் குழுவை துவக்கி வைக்க அமைச்சர் வருவார். அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இதுதான் என்று அப்போது அவர் பேசுவார். இப்போதெல்லாம் அதனை துவக்கி வைக்க அரசு செயலரே வருவதில்லை. எனவே அரசாங்கத்தின் கல்விக் கொள்கை இன்னது எனத் தெரியாமலேயே பாடத் திட்டக் குழு பாடத்திட்டத்தை வகுக்கிறது. அரசாங்கத்திற்கு மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை தனியாக இல்லை. எனக்கு நெருங்கிய உறவில் இருந்த காரணத்தால் இதனையெல்லாம் எம்.ஜி.ஆரிடமே சொன்னேன். “ஐயா மெட்ரிக் பள்ளிகளை அனுமதித்தால் இலவச கல்வி அழியும், தமிழ் வழிக் கல்வி அழியும்” என்றெல்லாம் எச்சரித்தேன். ஆனால் நிதியில்லை என்று கைவிரித்து விட்டார்.

நம்மிடம் ஒருவழிச் சிந்தனைகள்தான் உள்ளன. மாற்றுச் சிந்தனைகள் வளர வேண்டுமானால் கட்டுப்பாடற்ற கல்விதான் அவசியம். “இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் கல்விக் கூடங்களுக்கு வரக் கூடாது” என்று உயர் கல்வி இயக்குநர் கட்டளை பிறப்பித்துள்ளார். “ஓட்டுநர் உரிமம் மாணவர்களுக்கு வழங்கக் கூடாது” என்று சட்டம் போடலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு, “மாணவன் டூவீலரில் வந்தால் முதல்வரை இடைநீக்கம் செய்வேன்” என்பது முட்டாள்தனம். கல்வி பயிலும் இடத்தில் ஐந்து மணி நேரமும் இருசக்கர வாகனம் சும்மாதான் இருக்கப் போகிறது. மீதி நேரம் முழுவதும் அவன் சாலையில் தான் போகப் போகிறான். இந்த விதி நான்கு சக்கர காரில் வருபவனுக்கு பொருந்தாதா? வசதியான மாணவன் காரில் வருவதை அரசு தடை செய்யவில்லை.

சோவியத் வகுப்பறை (ஓவியம்)
சோவியத் வகுப்பறை (ஓவியம்)

பெற்றோர்களை வகுப்பறைகளுக்குள் அனுமதிப்பதில்லை. பள்ளி வளாகத்துக்கு வெளியேவே நிறுத்தி அந்நியப்படுத்தி விடுகிறார்கள். இது தவறு.

இங்கிலாந்தில் ஒரு நர்சரி பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கு பதினைந்து குழந்தைகளுக்கு மேல் வகுப்பறையில் கிடையாது. வகுப்பிற்கருகில் அம்மாக்களின் அரட்டை மையம் என்று ஒன்று உள்ளது. அதில் இருக்கும் ஒரு அம்மாவிடம் ஒரு நிமிடம் வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு ஆசிரியர் என்னிடம் பேச வந்தார். அடுத்த ஒரு நிமிடம் கழித்து அவர் மீண்டும் வந்த போது “எப்படி இந்த ராஸ்கல்களை உன்னால் சமாளிக்க முடிகிறது” என்று ஆச்சரியமாக கேட்கிறார் அந்த தாய். “இப்போது உனக்கு எங்களுடைய வேலை புரிகிறதா” என்று அந்த ஆசிரியை அவரிடம் தனது வேலைப்பளுவை புரிய வைக்கிறார்.

சோவியத் ஒன்றியத்தில் எந்த பெற்றோரும் எந்த வகுப்பிலும் சென்று பாடத்தை கவனிக்க உரிமை இருந்தது. நம்மிடம் இரண்டாயிரம் ஆண்டு கால அடிமைப் புத்தி இருப்பதால், நாமே வகுத்துள்ள கட்டுப்பாடுகளை மீறி நடக்கவும், சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் நமக்கு பல மாற்றங்கள் தேவைப்படும்.

முரளி மனோகர் ஜோஷி - மோடி
முரளி மனோகர் ஜோசி அறிவியல் படித்திருந்துமே தனது மதவாத நம்பிக்கையின் பிடிமானத்தில் இருந்தவர்.

முரளி மனோகர் ஜோசி விட்டுச் சென்ற பணியைத்தான் மோடி அரசின் கல்விக் கொள்கையும் பின்பற்றும். எனவே வேதபாடம் வருவது எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் ஸ்மிருதி இரானிக்கு தங்களது இந்துத்துவா கொள்கை பற்றிய அறிவே முழுமையாக இருக்குமா என்பது சந்தேகத்திற்கிடமான ஒன்றுதான். அவரது கல்வித் தகுதியை விட கலாச்சார பின்னணிதான் இந்த பதவியை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.  அவர் ஒரு தொலைக்காட்சி நடிகை என்பதை தாண்டி பெரிய அளவில் அனுபவமுள்ளவர் அல்ல. முரளி மனோகர் ஜோசி இயற்பியல் பேராசிரியர், நிரம்ப படித்தவர். சிறுவயதில் இருந்தே இந்துமகா சபாவில் ஜனசங்கில் இருந்தவர். அவர் அறிவியல் படித்திருந்துமே தனது மதவாத நம்பிக்கையின் பிடிமானத்தில் இருந்தவர். அவர் சொல்வதை ஒரு பிடிமானத்தின் அடிப்படையில் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். இந்த அம்மா சொல்வதெல்லாம் ஒரு கத்துக்குட்டியின் சொல்தான்.

வரலாற்றை மாற்றி எழுத முற்படுவது, வேத கல்வி, சமஸ்கிருத திணிப்பு, இந்தி திணிப்பை எதிர்கொள்ள அல்லது சரிசெய்ய கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். நெருக்கடி காலத்தில் தான் அது பொதுப்பட்டியலுக்கு போனது. இப்போதுதான் நெருக்கடி இல்லையே.

இப்போது கூட தனியார் சட்டக் கல்லூரியை துவங்க கூடாது என தமிழக அரசு சட்டமியற்றுகிறது. இதற்கு மாநில அரசுக்கு உண்மையில் உரிமையில்லை. ஆனால் நீதிமன்றம் இதற்கு தடை போடும். கடைசியில், “நான் முயற்சி செய்தேன் நீதிமன்றம்தான் தடை போட்டு விட்டது” என்று தப்பித்துக் கொள்ளத்தான் மாநில அரசின் இம்முயற்சி உதவப் போகிறது. பெங்களூரு மத்திய சட்டக் கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் வீதம் இருந்தும் தமிழ் நாட்டில் இருந்து இரு மாணவர்கள்தான் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட பீகார் மாநிலத்திலிருந்து அதனை விட அதிகமாக இருக்கிறார்கள். மாணவர்களுக்கு நாம் நிறைய வழிகாட்ட வேண்டியிருக்கிறது.

வரலாற்றுக் கல்வி
தன்னைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் இருந்துதான் வரலாற்றை அங்கு கற்றுத் தரத் துவங்குவார்கள்.

வேலை வாய்ப்பை பொறுத்தவரையில் நமது அரசு புதிய வேலைகளை உருவாக்குவதாக இல்லை. சிறுசிறு வேலைகளை உருவாக்க வேண்டும். பெரிய பெரிய கார் கம்பெனிகள் இங்கு தேவையில்லை. காரைக்குடி சிக்கரி உதவியுடன் குன்றக்குடி அடிகளார் குன்றக்குடியில் இதனை சாதித்தார். ஒவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலையாக மாறியது. சென்னையிலும் மத்திய தோல்துறை தொழிற்பயிற்சி நிறுவனம் இதற்கு முயற்சி செய்கிறது.

அடுத்து வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதலை கல்வி தர வேண்டும். பைக் ரேசிங் செய்ய முயன்று  கொல்லப்பட்ட அந்த பையனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு யமஹாதான் வாழ்க்கை என்று நினைத்தான். அதுவே எமகாதகனாக போய் விட்டது. எது வாழ்க்கை என்ற புரிதல் மாணவர்களிடையே இல்லை. அதைக் கற்றுத் தருவதும் கல்வியின் நோக்கம் தான்.

ஊரும் பேரும்
இன்று எத்தனை பேருக்கு தங்களது ஊர் பெயருக்கான காரணம் தெரியும்.

பிரிட்டனில் வரலாற்றை சொல்லித் தருகையில் மாணவனது குடும்ப பின்னணி வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள சொல்லுவார்கள். பாட்டன், முப்பாட்டன் என எந்தளவு செல்ல சாத்தியமோ அதுவரை தன் குடும்ப வரலாற்றை ஆராய சொல்வார்கள். அதில் ஒரு மாணவன் தன் மூதாதையர் செருப்பு தைக்கும் தொழில் செய்தார்கள் என்பதைக் கூட தெரிந்து கொள்வான். இப்படி தன்னைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் இருந்துதான் வரலாற்றை அங்கு கற்றுத் தரத் துவங்குவார்கள்.

இப்படி சிந்திக்கிறவர்கள் பாடத்திட்டம் வகுக்கும் குழுவில் இருக்க மாட்டார்கள், அல்லது வகுப்பறைகளுக்கு செல்ல மாட்டார்கள் என்பதுதான் இப்போதைய நிலைமை. நம்பிக்கைதான் வரலாறு என்று இப்போது இந்திய வரலாற்று ஆய்வுக் கழக இயக்குநர் கூறியிருப்பது வரலாற்றுக்கான அவரவரது ஊடாடல்களில் ஒன்றே தவிர முழு வரலாறல்ல. உதாரணமாக,  கோத்ரா சம்பவத்தை ஒட்டி, “இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?” என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு. “வைசிராயை சந்தித்தது போல ஆளுபவரைத்தானே அவர் சந்திக்க வேண்டும்” என்று சொன்னால் அவன் வரலாற்று மாணவன் என்றுதான் அர்த்தம். ராமர் பாலம் உண்மை என்றெல்லாம் எழுதி விடுவார்கள் என்று அஞ்ச வேண்டியதில்லை.

வினவுதல்
மாணவன் கேள்வி கேட்பதால் ஏதாவது ஏடாகூடமான கேள்விகள் வந்து விடுமோ என்று நாம் பயப்படுகிறோம்

இன்று எத்தனை பேருக்கு தங்களது ஊர் பெயருக்கான காரணம் தெரியும். ரா.பி. சேதுப்பிள்ளை ஊரும் பேரும் எழுதியதை தொடர்ந்து இதற்கான முயற்சிகள் நடந்தாலும் பெரியளவில் எந்த முயற்சியும் அதன்பிறகு நடைபெறவில்லை. கோயமுத்தூர் மாவட்டத்தில் செட்டிப் பாளையம் பதினைந்தாவது இருக்கும். கவுண்டம் பாளையம் இருக்கிறது, முதலி பாளையம் இருக்கிறது, பெரிய கவுண்டம் பாளையம் இருக்கிறது. சாதியின் பெயரால் ஏன் ஊர் பெயர்கள் ஏற்பட்டன, பாளையம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பாளையம் என்றால் ஒன்றாக வாழும் கூட்டம். ஏன் அப்படி மக்கள் ஒன்றாக கூட்டம்கூட்டமாக வாழ்ந்தார்கள்? இதுதான் வரலாற்றில் விவாதிக்க வேண்டிய விசயம்.
வரலாறு என்பதே கற்பதோ சொல்லிக் கொடுப்பதோ அல்ல, விவாதிப்பது தான். விவாதிப்பதன் மூலம் அவரவர் ஒரு முடிவுக்கு வந்துகொள்ள வேண்டியதுதான். பல பேருக்கு தன் பெயருக்கான காரணம் கூட தெரியாது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள குழந்தைகளுக்கு தன் பெயர்க் காரணம் தெரியும். சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுக்கு அனுஷ்கா, மோனிஷ்கா என வடமொழிப் பெயர்களாகவே இருக்கிறது. இதில் எந்தக் குழந்தைக்கும் தன் பெயர் காரணமும் தெரியாது, அர்த்தமும் தெரியாது.

தீவிரமான காலிஸ்தான் இயக்கம் நடந்த போது அங்கு சில ஆசிரியர்கள் அவர்களது அரசியல் காரணத்துக்காக சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அங்கிருந்தும் அரியானா, தில்லியில் இருந்து அநேகமாக பாதி ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த ஆண்டு தேர்வானார்கள். நான் அங்கு ஒரு கல்லூரிக்கு சென்ற போது பாபர் பற்றிய வகுப்பில் அங்குள்ள நூலகத்தில் அவரைப் பற்றி உள்ள புத்தகங்கள், அவர் பற்றி கட்டுரைகள் வந்துள்ள பத்திரிகைகளை சொல்கிறார் ஆசிரியர். பிறகு குழுக்களாக பிரித்து அதுபற்றி ஆராய்ந்து அறிக்கை தரச் சொல்கிறார். கலைந்து சென்ற மாணவர்கள் பிறகு வந்து அவரவர் அறிக்கையை தருகின்றனர். அதில் எதனை ஏற்கலாம், ஏற்க முடியாது என்பதை விவாதித்து அவர்களையே முடிவு எடுக்க வைக்கிறார். ஒழுங்குபடுத்தும் வேலையை மாத்திரம்தான் ஆசிரியர் மேற்கொள்கிறார்.

இங்கு மாணவன் கேள்வி கேட்பதால் ஏதாவது ஏடாகூடமான கேள்விகள் வந்து விடுமோ என்று நாம் பயப்படுகிறோம். பஞ்சாபில் சாத்தியமானதை இங்கு சாத்தியமாக்க முடியாதா? ஆசிரியர்கள் எப்போதும் கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும். கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள்தான் ஆசிரியராகவும் இருக்க முடியும். கற்றுக்கொள்வதை நிறுத்தும்போது அவர் ஆசிரியராக இருப்பதற்கான தகுதியையும் இழக்கிறார்.

ss-rajagopalan-2

(நிறைவடைந்தது)

முந்தைய பகுதிகள்

கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்

0

ம்போடியாவின் தலைநகர் நாம் பென்-இல் உள்ள பிரதமரும், சர்வாதிகாரியுமான ஹூன் சென் வீட்டை நோக்கி ஒரு பேரணி. அதில் கலந்து கொண்ட கிராட்டி மாகாணம், ஸ்நோல் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகள் 300 பேர் மீது அரசு பாதுகாப்பு படைகள் மின்சார லத்திகளால் கடந்த திங்கள்கிழமை (18-08-2014) தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போராட்டம்
போராடும் விவசாயிகள்

காலை 8 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் நான்கு வயது குழந்தைக்கு தலையில் அடிபட்டுள்ளது. பிரம் சந்தா என்ற நாற்பத்தி ஐந்து வயது பெண்ணின் குழந்தை அது. அதுவரை தாயை கடுமையாக அடித்து கீழே தள்ளி மின்சார ஷாக் வைக்க முயன்ற போலீசார், குழந்தையின் தலைப்பகுதியில் காயம் கடுமையாக இருக்கவே விட்டுவிட்டனராம். ஆனால் மொத்தமாக நடந்த தாக்குதலில் பத்து பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

மக்களிடமிருந்து ஏறக்குறைய 1,500 ஹெக்டேர் விளைநிலத்தை (1652) மிளகு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை பயிரிடுவதற்காக தென்கொரியாவில் இருந்து செயல்படும் ஹரிஸான் விவசாய அபிவிருத்தி கழகம் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு மாவட்ட இணை ஆளுநர் சாம் நால் பிடுங்கிக் கொடுத்துள்ளார். ஏறக்குறைய 1987 முதல் இந்த இடங்களில் விவசாயம் செய்து வந்த இம்மக்களை ஒரேயொரு புகார் மூலம் இந்நிறுவனம் விரட்டியடித்துள்ளது. அதாவது சட்டவிரோதமாக தங்கள் நிலத்தில் பயிர் செய்கிறார்கள் என்று.

25 ஆண்டுகளாக கம்போடிய பிரதமராக உள்ள ஹூன் சென், 2013-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார்.  தனது 74வது வயது வரை அதாவது 2026 வரை பிரதமராக தொடருவேனென அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். அப்படித்தான் கம்போடியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியுமாம். மேற்படி கிராமத்தில் இருந்த 1500 ஹெக்டேர் விளைநிலத்திற்கும் முறையான பட்டாவை 2013 தேர்தலுக்கு முன்னர் 2012-ல் தான் விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுத்தது.

கம்போடிய பிரதமர் ஹூன்சென்
கம்போடிய பிரதமர் ஹூன்சென்

இப்போது, “பன்னாட்டு விவசாய கம்பெனி வந்தவுடன் உள்ளூர் அதிகாரிகள் மக்கள் நலனில் போதிய அக்கறை செலுத்தவில்லை” என்றும், “நிலத்தை அளப்பதற்காக முன்வந்த மாணவ தன்னார்வ தொண்டர்கள் திறமையாக செயல்பட முடியாவிடில் பதவி விலகுங்கள்” என்றும் செவ்வாய்க்கிழமை (19-08-2014) நடைபெற்ற அதிகாரிகளுக்கான உணவுப் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையில் பேசிய பிரதமர் எச்சரிக்கை விடுத்து நாடகமாடியிருக்கிறார். இவ்வளவிற்கும் மேற்படி நிறுவனத்தின் பெரும்பங்கை கையில் வைத்திருப்பவர் அவரது அமைச்சரவையில் தொழில்துறை, சுரங்கத் துறை, மின்துறை அமைச்சர் சூய் செம்-ன் மனைவி தான். அவரது நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பாத ஹூன் சென் உள்ளூர் அரசியல்வாதிகள், மாணவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கிறார்.

“மக்களது பிரச்சினைகளை தீர்க்க முடியாக அலுவலர்கள் எல்லாம் வீட்டுக்கு போகலாம்” என்று பயிற்சிப் பட்டறையில் திட்டவட்டமாக சொல்லி விட்டார் சென். அந்த வகையில் ‘அவரால் தான் தங்களது நிலத்தை மீட்டுத் தர முடியும்’ என்று அவரது வீடு நோக்கி ஊர்வலம் வந்த மக்களின் கணக்குப்படி அவர்தான் முதலில் பதவி விலகிட வேண்டியவராக இருக்கிறார். ஆனால் அதற்கு இன்னும் ஒரு பன்னிரெண்டு ஆண்டுகள் நிலத்தை இழந்த விவசாயிகள் கொலை பட்டினி கிடக்க வேண்டும்.

இரண்டு வாரங்களுக்கு முன் நிலத்தை மீட்பதற்காக தலைநகருக்கு வந்த 90 குடும்பங்களும், கடந்த வெள்ளிக்கிழமைக்குள் பிரச்சினையை தீர்த்து வைத்து தங்களது நிலங்களை திரும்பித் தர வேண்டும் என்று அரசுக்கு கெடு  வைத்திருந்தனர். இதற்காக அங்குள்ள கட்டுமானப் பணிகள் நடக்கும் இடமொன்றில் கூடாரங்களை அமைத்து இந்த விவசாயிகள் தங்கியிருந்தனர். எதிர்க்கட்சியான தேசிய மீட்புவாத கட்சியினர் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி போராட்டத்தை தூண்டுவதாக ஆளும் கம்போடிய மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

உண்மையில் அவர்களது இளைஞர் அணியினர் கட்சி கட்டளையையும் மீறி விவசாயிகளை சந்தித்து உணவுப் பொருட்களையும், போர்வைகளையும் நேரில் சென்று தந்திருக்கின்றனர். தலைநகரின் பெரும்பாலான மக்களும் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஹூன் சென் எதிர்ப்பு
பிரதமர் ஹூன் சென், அவரது மனைவியின் புகைப்படங்களை ஏந்திப்படி அவரது வீடு நோக்கிச் செல்லும் மக்கள்

2003லிருந்து ஏறக்குறைய 21 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்த்த வகையில் அங்குள்ள 4 லட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நிலத்தை பறிகொடுத்த மக்கள் வரிசையாக தலைநகருக்கு வந்து இழப்பீடுகளை பெற்றுச் சென்ற வண்ணமிருக்கின்றனர். வான் சொபாத் என்ற மனித உரிமை ஆர்வலர் இவர்களுக்கு தங்க இடமளித்து வருகிறார். அவருக்கு அரசு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

கம்போடிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லா மெங் கின் நிறுவனமான சுகாகு இங்க்-உடன் அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி 8 கோடி டாலருக்கு 99 ஆண்டுகளுக்கு 133 ஹெக்டேர் பரப்பளவில் தலைநகரத்தில் இருக்கும் போயங் காக் ஏரி குத்தகைக்கு விடப்பட்டது. ஏறக்குறைய 4,252 குடும்பங்கள் அங்கிருந்து 20 கிமீ தொலைவில் நகரத்திற்கு வெளியே தூக்கியடிக்கப்பட்டார்கள். 2007-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது மூன்றுவித நட்ட ஈடுகளில் ஒன்றை தெரிவு செய்ய மக்கள் பணிக்கப்பட்டார்கள். ஒன்று 20 கிமீ தூரத்தில் ஒரு வீடு, இன்னொன்று வேறு ஏதாவது ஒரு இடத்தில் அரசு விரும்புகையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புடன் 500 டாலர் நட்ட ஈடு, இல்லாவிடில் 8500 டாலர் நட்ட ஈடு.

இதை வாங்கிக் கொண்டு வெளியேறிய மக்கள் தாங்கள் இழந்த நிலத்திற்கும், இந்த தொகைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பதை பிபிசிக்கு செவ்வியாக தெரிவித்திருந்தனர். நாம் பென் நகரத்தின் 11 சதவீத அடித்தட்டு மக்கள் இப்படி வெளியேற்றப்பட்ட பகுதிகள் கம்போடியாவின் செம்மஞ்சேரிகள் தான் என்பதை அந்தப் பேட்டிகள் உறுதி செய்கின்றன. இந்த நிறுவனத்துக்கு 2013 பிப்ரவரியில் கம்போடிய நிதி அமைச்சகம் நாட்டின் வறுமையை குறைக்க பாடுபட்டதாக சொல்லி விருது கொடுத்தது தான் காலக் கொடுமை.

அரசு சார்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் யாரும் மனுக்களை வாங்க கூடாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த தடியடிக்கு முன்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் இருவர் வெளியில் வந்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கியிருக்கின்றனர். ஆளும் கம்போடிய மக்கள் கட்சி கேம்ரூஜ் இயக்கத்தில் இருந்து பிரிந்த வியட்நாமிய ஆதரவு பெற்ற போலி கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் நந்திகிராமில் நிலத்தை பறிப்பதை எதிர்த்த மக்களை, போலீசு குண்டர்களுடன், இணைந்து தாக்கிய, பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய தொண்டர்களைப் பெற்ற மார்க்சிஸ்டுகளின் கூட்டணி ஆட்சிக்கு கூட இடது சாரி முன்னணி என்றுதான் பெயர். போலிகள் எங்கிருந்தாலும் கொள்கையால், நடைமுறையால் ஒன்றுபடுகிறார்கள் என்பதற்கு கம்போடியாவும் நமக்கு ஒரு சாட்சி.

இருப்பினும் இந்த செய்தியை ஊடகங்களில் பிரபலமாக்கி பேசும் மேற்குலக ஊடகங்கள், விவசாயிகளின் நிலங்களை பறிப்பதற்கு அடிப்படையான பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயத்தை ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை. அதனால்தான் இந்த சம்பவம் போலிசின் தடியடி என்பதாக மட்டும் சுருக்கி பார்க்கப்படுகிறது.

மறுகாலனியாக்கத்தில் இந்தியா, கம்போடியா என்று வேறுபாடு இல்லை. இதை உணர்ந்து போராடாத வரை விவசாயிகளுக்கும் விடியல் இல்லை.

ஹூன் சென் வீட்டின் முன்பு…

ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

4

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 4

ந்து ஆன்மீக கண்காட்சியில் உதவி பலகை மேசையில் இருந்தவரை அணுகினோம்.

“இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நோக்கம் என்ன சார்?” என்றோம்.

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி
இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்

“நமது நாடு பழம்பெருமைமிக்க நாடுஜி. இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள இயற்கை வழிபாடு, ஜீவராசிகளை வழிபடுவது, நதிகளை வழிபடுவது, பெற்றோர்கள், ஆசிரியர்களை தெய்வமாக போற்றுவது, பெண்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் கன்னி பூஜை, சநாதன தர்மத்தை பின்பற்றுவது, நாட்டுப் பற்றை அதிகரிக்கும் விதத்தில் பாரதமாதாவையும், பரம்வீர் சக்கரா விருது பெற்றவர்களையும் ஆராதனை செய்வது இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்” என்று ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் வரும் சீரியல் ஆக்டர் போலவே விளக்கம் அளித்தார்.

காவிரி நதியை பூஜை போடும் உரிமை கர்நாடக ஜிக்கு மட்டும்தானே என்று கேட்ட போது அரசியல் செய்யதீர்கள் என்றார் அந்த ஜி.

ஹலோ எஃப்.எம் 106.4-ன் கடைக்குப் போனோம். ரேடியோவிற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? “நீங்க எதுக்கு பாஸ் இங்கே ஸ்டால் போட்டிருக்கீங்க” ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்ட போது,

“நாங்க இதுக்கு ஸ்பான்சர் பன்னியிருக்கோம் பாஸ் அதனால எங்களுக்கும் ஒரு ஸ்டால் கொடுத்திருக்காங்க” என்றார்.

“சரிங்க ஆனா உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றோம்.

ஹலோ எஃப்எம்
“ஒரு சம்பந்தமும் இல்லைங்க”

“ஒரு சம்பந்தமும் இல்லைங்க” என்றார்.

“சரி இங்கே மக்கள் வர்றாங்களா” என்றோம்.

“வர்றாங்க, பேசுறாங்க.”

“எதுக்கு வர்றாங்க, என்ன சொல்றாங்க?”

“எங்க எஃப்எம் மின் நிகழ்ச்சிகளை பத்தி கருத்து சொல்றாங்க. என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தலாம்னு ஆலோசனை சொல்றாங்க” என்றார். இந்து தர்மத்துக்கு காசு, ரேடியோ தர்மத்துக்கு கருத்துக் கேட்பு என்று பரஸ்பர ஆதாயத்தோடு பட்டையைக் கிளப்பினார்கள்.

இஷேத்ரா பன்னாட்டு உறைவிடப் பள்ளி சார்பாக ஒரு கடை போட்டிருந்தார்கள். “பாரத தருமத்தை இயற்கையான முறையில் சொல்லிக் கொடுக்கிறோம். படிப்பு என்றால் பாடப் புத்தகத்தில் மட்டும் கிடைப்பதில்லை. அதற்கேற்ற சூழல், முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பள்ளிதான் எங்களுடையது. 60 ஏக்கர் நிலத்தில் அமைந்த பள்ளியில் நமது பாரம்பரிய சூழலில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். சுத்த சைவ உணவுதான் போடுகிறோம்; யோகா, தியானம் சொல்லித் தருகிறோம்” என்றார்.

“இதற்கெல்லாம் எவ்வளவு ஃபீஸ்?”

“சராசரியா வருஷத்துக்கு ரூ 1.25 லட்சம் வரும்”

ishetra
பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா

“என்னங்க இது பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா. நம்ம நாட்டோட எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி இலவச கல்வி எல்லாம் இல்லையா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. அங்க நிக்கிறாங்களே அவங்கதான் இதுக்கு நிர்வாகி, போய் கேட்டுக்கோங்க” என்று நழுவி விட்டார். பாரம்பரிய இந்து ஞானமரபின் கல்விக்கு ஒன்றேகால லட்சமெல்லாம் ஒரு விசயமே இல்லை.

வழியில் இரு பள்ளி மாணவர்கள் தட்டில் டம்ளரோடு தண்ணீரை நீட்டினர். அப்போது தாகம் இல்லாததால் வேண்டாம் என்று கூறிவிட்டு நடந்தோம்.

“தம்பி இங்கே வாங்க தண்ணியை எடுத்து குடிங்க” என்றார் ஒரு அந்த ஸ்டாலில் இருந்த பெண்மணி.

சரி குடித்துவிடுவோம் என்று எடுத்து குடிக்கப்போகும் போது ‘ஓம் நமச்சிவாயா’ன்னு சொல்லிட்டு குடிங்க என்றார். எதிரில் ஒரு பள்ளி மாணவர் கூட்டம் வந்துகொண்டிருந்தது, அதில் ஒரு மாணவன் தண்ணீரை குடிப்பதற்கு முன்பு ஓம் நமச்சிவாயாவுக்கு பதிலாக ‘ஜெய் ஆஞ்சநேயா’ என்றான்.

அது என்ன டயலாக் என்று அவனிடமே கேட்டோம்.

“சும்மா ஒரு தமாஷுக்கு தான்”

“அது என்ன ஜெய் ஆஞ்சநேயா.”

“அது ஒரு தெலுங்கு பட டயலாக்ண்ணா”.

“என்ன டயலாக்”

“ஒரு தெலுங்கு படத்துல டிரெய்ன் மேல ஏறி பாலகிருஷ்ணா ஃபைட் பண்ணிட்ருப்பாரு. அப்ப எதிர்ல இன்னொரு ட்ரெய்ன் வரும் அது பக்கத்துல வரும் போது அதை தடுத்து நிறுத்துறதுக்காக கையை நீட்டி ஜெய் ஆஞ்சநேயான்னு சொல்லுவாரு டிரெய்ன் அப்படியே நின்னுடும், செம்ம காமெடி அது, அந்த டயலாகை தான் சொன்னேன்” என்றான்.

அடுத்து ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ என்கிற ஸ்டால். ஸ்டால்காரர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.

“எப்ப பார்த்தாலும் எனக்கு சின்ன ஸ்டாலா தான் தர்றா, வர்றவங்கள் எல்லாம் என்ன இவ்வளவு சின்னதா இருக்குன்னு கேக்குறாங்க நிர்வாகத்திடம் கொஞ்சம் சொல்லுங்கோ, அடுத்த முறையாவது கொஞ்சம் பெருசா வேணும்” என்று தனக்கு சின்ன கடை ஒதுக்கப்பட்டது குறித்து புலம்பிக் கொண்டிருந்தார்.

பக்கத்து ஸ்டாலில் ஒருவர் தினசரி நாம் எப்படி எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தார். அது என்ன ஸ்டால் என்று பார்த்தால் அதன் பெயர் ‘ஸனாதன் ஸன்ஸ்தா’ நாமும் அருகில் போய் நின்று கொண்டோம்.

  • எப்படி குளிக்க வேண்டும்
  • பெண்கள் முடியை அவிழ்த்து விடக்கூடாது, முடிந்து வைக்க வேண்டும், அதை எப்படி முடிய வேண்டும்.
  • எந்த திறப்பு விழாவாக இருந்தாலும் அதை ரிப்பன் வெட்டி திறக்காமல் இந்து முறைப்படி தேங்காய் உடைத்து திறக்க வேண்டும்.
  • ஒரு விழாவில் விளக்கேற்றும் போது மெழுகுவர்த்தியை பயன்படுத்தாமல் திரி விளக்கை பயன்படுத்தி விளக்கேற்ற வேண்டும்
  • குழந்தைகளின் பிறந்த நாட்களை கொண்டாடும் போது கேக் வெட்டி கொண்டாடாமல் பலகையில் உட்காரவைத்து இந்து முறைப்படி கொண்டாட வேண்டும்.
  • பேண்ட், ஷர்ட் போன்ற வெளிநாட்டு உடைகளை அணியாமல் நமது பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்

என்றெல்லாம் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவரே ஜீன்ஸ் பேண்ட் தான் அணிந்திருந்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“நீங்க மட்டும் ஏன் ஜீன்ஸ் போட்டிருக்கீங்க”

“சில தவிர்க்கமுடியாத நேரங்களில் இப்படி இருக்க வேண்டியிருக்கிறது” என்றார். “மற்றபடி நமது பாரம்பரிய உடைகளை உடுத்துவது தான் சரியானது.” என்றார். “சரிங்க ஜி நீங்களே பின்பற்ற முடியாத ஒன்றை மற்றவர்களுக்கு உபதேசிப்பது சரியா” என்றால், “இந்து தர்மத்துக்கு உதவுவது எதுவுமே தப்பே இல்லை” என்றார். குற்றமனசு இல்லாமல் செய்யும் எதுவுமே தவறு இல்லை என்ற சதுரங்க வேட்டை வசனம் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பில்லை.

பசு பாதுகாப்புக்காக பல கடைகள் இருந்தன.

“கால்நடைகள் அழிந்தால் விவசாயமே அழிந்து விடும். நம் ஊரிலிருந்து ஆண்டிற்கு 5000 டன் அளவிற்கு இறைச்சிக்காக கேரளாவிற்கு மாடுகள் கடத்தப்படுகின்றன. இவற்றை கண்காணித்து, தடுக்க வேண்டிய விலங்குகள் நல வாரியம் எதுவுமே செய்வதில்லை. நாங்கள்தான் கால்நடைக் கடத்தல்களை செக்போஸ்ட்டில் தடுத்து நிறுத்தி வருகிறோம்” என்றார் ஒரு பசுப் பாதுகாப்பு ஸ்டால்காரர்.

“உண்மை தான் சார் ஆனால் நீங்கள் பசுக்களுக்காக மட்டும் தான் பேசுகிறீர்கள், மற்ற விலங்குகள் பாவம் இல்லையா” என்றோம்.

“சரிதான் ஆனால் பசு தான் உலகத்தின தாய், அதன் பயன்பாடு தான் அதிகம்”.

“இல்லையே இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் தான் என்று காந்திஜி கூறியுள்ளார். அந்த விவசாயிகளுக்கு உதவியாகவும், பயன்படுபவையாகவும் இருப்பவை காளை மாடு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய்கள் போன்ற விலங்குகள் தானே அன்றி பசு இல்லையே”

“இப்படி எல்லாம் விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தால் பதில் கூற முடியாது, எங்களுக்கு பசுதான் முக்கியம்”.

பசுக்களை காக்கும் இந்த மனிதாபிமானிகள் அதன் சாணி, மற்றும் மூத்திரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பை ப்ரோடக்ட்கள் மற்றும் மூர் மார்கெட்டில் கூறு பத்து ரூபாய் என்று வாங்கி வந்த பாசிமணி ஊசி மணிகளையும் அங்கே விற்றுக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் செட்டிலான என்ஆர்ஐ அம்பிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பசுக்களை ஜீவகாருண்யத்துடன் பராமரிப்பதாக கூறும் இவர்கள் தம் வாழ்நாளில் பசு மாட்டை தொட்டது கூட கிடையாது. பால் கறப்பது, சாணி அள்ளுவது, மாட்டை குளிப்பாட்டுவது என்று பசுக்களை பராமரிப்பது என்று அனைத்தையும் செய்வது நமது உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த குமார் அண்ணன் தான். கண்காட்சிக்கு கொண்டு வந்திருந்த மாட்டை பராமரிப்பதற்கு அவரை கூடவே அழைத்து வந்திருந்தார்கள்.

‘இவங்ககிட்ட சம்பளமெல்லாம் எதிர்பாக்க முடியாது தம்பி, சாப்பாடு போடுவாங்க அப்பப்ப செலவுக்கு காசு கொடுப்பாங்க அவ்வளவு தான்’ என்றார் குமார். பசுவுக்கு கருணை காட்டும் ஜிக்கள் மனிதர்களுக்கு காட்டமாட்டார்கள் என்பது ஆச்சரியமல்லவே?

காளை மாடுகளை துன்புறுத்தும் நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டி விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரிக்கக்கோரும், ஆன்மீக ஜல்லிக்கட்டு என்கிற ஸ்டாலுக்கு அருகில் வந்தோம். அங்கே இருந்தவரிடம்,

“ஆன்மீகத்திற்கும் ஜல்லிகட்டிற்கும் என்ன சார் சம்மந்தம், ஆன்மீக ஜல்லிக்கட்டு என்றால் என்ன” என்றோம்.

“ஆன்மிகத்திற்கும் ஜல்லிக்கட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார், ஆன்மீகம்னு ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டால் தான் ஸ்டால் கொடுப்போம்னு சொன்னாங்க, அதற்காக தான் ஆன்மீக ஜல்லிக்கட்டுன்னு போட்ருக்கோம்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“அதுமட்டுமில்லைங்க எங்க குடும்பத்திற்கே பெரியார் மீதும், கம்யூனிஸ்டுகள் மீதும் பெரிய மரியாதை இருக்கு. மக்களுக்கு ஜல்லிக்கட்டைப் பற்றியும், அதன் மரபை பற்றியும் விழிப்புணர்வூட்டுவதற்காக தான் இது போன்ற கண்காட்சிகளில் ஸ்டால் போடுகிறோம் அதற்கு இந்து, ஆன்மீகம் என்கிற முகமூடிகள் தேவைப்படுகிறது. மற்றபடி ஆன்மீகத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல், கண்காட்சிக்கு ஆள் பிடிக்கும் வித்தையை அறியத்தந்தார்.

அதையடுத்து, பாழடைந்த பழைய மண்டபங்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற ரீச் என்கிற அமைப்பின் (நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு) ஸ்டாலுக்கு சென்றோம்.

‘பழமை மாறாமல் கோவில்களை புனரமைக்க வேண்டுமா எங்களை அழையுங்கள் நாங்கள் வருகிறோம்’ என்று விளம்பரம் வேறு. இந்திய நகரங்களில் குளிர்காலம் வந்தால் ஒண்ட இடமின்றி ஏழைகள் இறந்து கொண்டிருக்கும் போது பாழடைந்த பழைய ஹைதர் காலத்து கட்டிடங்கள் எல்லாம் இருப்பதால்தான் என்ன பயன்? இது தவிர வெஜிடேரியன் ஒன்லி போர்டு போல ஐ சப்போர்ட் வெஜிடேரியன், உப்பு போடாமல் சாபிடுவோர் சங்கம், பானி பூரி லவ்வர்ஸ் போன்ற பக்கோடா என்.ஜி.ஓ கள் எல்லாம் நோட்டீஸ்களில் வரி விலக்கு உண்டென ஆன்மீக பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர்.

ஒரு ஸ்டாலில் எக்கோ டூரிசம் போவதற்கு சாவு வீட்டில் சங்கீதத்தை ரசிக்கும் மனநிலையுடன் நடுத்தரவர்க்கம் கூட்டம் கூட்டமாக பதிவு செய்து கொண்டிருந்தது. மூன்று இரவு, இரண்டு பகலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 560 புண்ணிய திருத்தலங்கள், 300 புண்ணிய தீர்த்த குளியல்கள் என அடுத்த உத்தராஞ்சல் பயங்கரத்திற்கு ஆட்களைத் திரட்டி கொண்டிருந்தனர் ஓம் யாத்ரா என்கிற ஆன்மீக சுற்றுலா கம்பெனியார். சேவைத்துறையில் இந்துமதத்தையும் சேர்த்துவிட்டால் நமது ஜி.டி.பி எகிறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

temple-worshippersஅடுத்து அக்க்ஷர்தம் கோவிலின் ஸ்டால். அருகில் சென்றதுமே “அக்க்ஷர்தம் கோவிலை பற்றி கேள்விப்பட்ருக்கீங்களா, மொத்தம் 105 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கு. அதில் 35 ஏக்கர் கோவில். கோவில் முழுவதும் தங்கம். வெளியே கண்காட்சி அது இது என்று, ஸ்ரீ மாருதி நகர், சென்னைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது, பத்தே நிமிடத்தில் ரெயில் நிலையம், அருகிலேயே மருத்துவமனை” என்று ரியல் எஸ்டேட் தரர்களை போல கோவிலைப் பற்றி அவர் விளக்கிக்கொண்டிருந்தார்.

இந்த கோவில் டெல்லியில் இருக்கிறது. மொத்தம் உள்ள 105 ஏக்கரில் 35 ஏக்கர் தான் கோவில், மீதம் உள்ள இடம் முழுவதும் கண்காட்சியாம். என்ன கண்காட்சி என்றால் கல்யாண ஆல்பம் மாதிரி ஒன்றை திறந்து காட்டினார், அதில் பலவகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. பிறகு பூங்காக்கள். உள்ளுக்குள்ளேயே ஒரு தியேட்டர் இருக்கிறது, அந்த தியேட்டரில் வருடம் முழுவதும் ஒரே படம் தான் ஓடுமாம். ‘bhagavan mystic india’ என்பது தான் படத்தின் பெயர். ஸ்வாமி நாராயண் என்கிற அந்த கோவிலில் உள்ள கடவுள் தான் படத்தின் ஹீரோ. மேலும் உலகம் முழுவதும் உள்ள தண்ணீர் அனைத்தையும் கொண்டு வந்து அங்குள்ள குளத்தில் கொட்டி வைத்திருக்கிறார்களாம். கோவிலுக்கு செல்வதற்கு தான் காசு இல்லை. மற்ற எழுபது ஏக்கரையும் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் துட்டு வேண்டும்.

“அந்தப் படத்தை நீங்கள் இங்கிருந்தே கூட பார்க்கலாம் எங்களிடம் DVD இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள்” என்று நைசாக நீட்டினார், “வேண்டாம்” என்று கிளம்பினோம்.

ஒரு செயற்கையான மரத்தில் பலவகையான அட்டைகளை கட்டி தொங்கவிட்டிருந்தனர். அது என்ன என்று சென்ற போது தான் அது பேசும் மரம் என்றனர்.  அது மெதுவாக பேசி கொண்டிருந்தது. மரத்திற்குள் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார்கள். “இந்த உலகம் என்னால் தான் இயங்குகிறது. இங்கே நடப்பவை அனைத்தும் என்னால் தான் நடக்கிறது. இந்த அரங்கில் கூறப்படுபவை அனைத்தும் எனக்காகவே கூறப்படுகின்றன. சநாதன தர்மம் தான் சரியானது, சநாதன தர்மம் என்பது பிறருக்கு உதவி செய்வது தான்” என்று பேசிக்கொண்டிருந்தது. கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் ‘பாரதமாதாவை’ பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.

treeஇந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு ‘ஸ்பான்சர்’ செய்த கார்ப்பரேட்டுகளின் பட்டியலில் இந்தியாவை கூறு போட்டு பன்னாட்டுக்கு விற்றுக் கொண்டிருக்கும் டால்மியா, பி.கே.பிர்லா, லார்சன் & டியூப்ரோ, எஸ்ஸார், டிவிஎஸ், பஜாஜ், முருகப்பா குழுமம் போன்ற இந்திய தரகு பெரு முதலாளிகளோடு, ஐ.பி.எல் சூதாட்ட புகழ் இந்தியா சிமென்ட்ஸ், சொல்வதெல்லாம் உண்மை புகழ் ஜீ டிவி ஆகிய நிறுவனங்களும் உண்டு.

மறுகாலனியாக்க காலகட்டத்தில் அனைத்தும் நுகர்ந்து எறியப்பட வேண்டிய பண்டங்கள் தான் அதற்கு மதமும் விலக்கல்ல. இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி என்கிற இந்த அரங்கு ஒரு நுகர்வுக்கான காடு என்பதை சனாதன மரத்தின் ஸ்பான்சர் விழுதுகளே அறிவிக்கின்றன. கல்வி நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் என்ன ஆன்மீக உணர்வை வளர்க்கவா இங்கே ஸ்டால் போட்டிருக்கிறார்கள்? அருண் எக்ஸ்செல்லோவுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?

இந்த கண்காட்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த நாட்டின் கனிம வளங்களை எல்லாம் கொள்ளையடிக்கும் பினந்தின்னி கழுகுகள். எஸ்ஸார் என்கிற தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் கம்பெனி ஒரிசாவிலும், சட்டீஸ்கரிலும் நிலக்கரியையும், இரும்புத் தாதுக்களையும் வெட்டி எடுப்பதற்கு வெறியுடன் அலைந்துகொண்டிருக்கிறது. அதுவும் இந்த ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கிறது. அதேநேரம் கண்காட்சி அரங்கில் ஆர்.எஸ்.எஸ் சின் வனவாசி சேவா கேந்திரம் பழங்குடிகளின் உரிமைகளுக்காக ஸ்டால் போட்டிருக்கிறது.

எப்படிப்பட்ட கைக்கூலித்தனம்? ஒரிசாவையும், சட்டீஸ்கரையும் குடைந்தெடுக்கப் போகின்ற கம்பெனியிடம் காசு வாங்கிக்கொண்டு அதனால் சாகப்போகின்ற பழங்குடிகளுக்கான அமைப்பையும் இவர்களே நடத்துவார்களாம். ஆகா எப்பேர்பட்ட தேஷபக்தி!

–    தொடரும்.

–    வினவு செய்தியாளர்கள்.

முந்தைய பகுதிகள்

  1. ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
  2. வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
  3. ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

111

னநாயகத்தின் நான்காவது தூண், சமயத்தில் நான்கு தூண் பாரத்தையும் சுமப்பதாக காட்டிக் கொள்ளும். அவ்வகையில் ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் போல நேரடி நடவடிக்கைகள் எடுத்து தமது கீர்த்தியை பறைசாற்றுவார்கள். இந்த நடவடிக்கைள் பெரும்பாலும் சாலை பள்ளம், விளக்கு பழுது, தேங்கிய குப்பை போன்ற ஆபத்தில்லாத விசயங்களில் இருக்கும். கொஞ்சம் விறுவிறுப்பு வேண்டுமென்றால் பாலியல் பிரச்சினைகளுக்காகவும் சாதாரண நபர்கள், சிறு குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுத்து ஆக்சன் ஹீரோவாக காட்டிக் கொள்வார்கள்.

கருவாடுஇதற்கெல்லாம் அதிகார மற்றும் போலீஸ் வர்க்கத்திடம் சில தொடர்புகள் இருந்தால் போதும். செய்திக்கு செய்தி, நடவடிக்கைக்கு நடவடிக்கை என வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் இந்த ஊடக புலிகள் எவையும் மக்கள் பிரச்சினைகளுக்கு காரணமான முதலாளிகள் அல்லது பெரும் நிறுவனங்களை மட்டும் தவிர்த்து விடுவார்கள். புரவலர்களின் தருமத்தை நாடி பிடித்து பார்ப்பது ஊடக அறமல்ல.

பொதுவாக பெருமாளுக்கு காக்கும் தொழில்தான் பார்ப்பனிய இந்து மதத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவே மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்றால் வேர்க்க விறுவிறுக்க கனஜோராக தொழில் நடக்கும்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாக 17.08.2014 தேதியிட்ட “தி இந்து” (தமிழ்) நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு, “கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்” போல லா பாயிண்டையும் எடுத்து போட்டிருக்கிறார், உலகளந்த பெருமாள்.

“தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம் 1996-ன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை மட்டுமே விற்க வேண்டும்”. இதை மீறி கருவாடு விற்றதால் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று மாம்பலம் மாமா-மாமிகள் சார்பாக பொங்கியிருந்தார், லார்டு லபக்குதாஸ்.

பெருமாளுக்கு கோபம் வந்து விசுவரூபம் எடுத்தால் லோகம் தாங்காது என்று பயந்த, கோயம்பேடு அங்காடி வளாக நிர்வாகக் குழு முதன்மை அலுவலர் பாஸ்கரன் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலக சகபாடிகளுக்கு உத்திரவு போட்டிருக்கிறார். உதவிப் பொறியாளர் ராஜன் பாபு தலைமையிலான ஊழியர்கள் திங்களன்று (18.08.2014) சோதனை நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதாக கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விதியை மீறியதால் இந்த 18 கடைக்காரர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்புவார்களாம். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுமென்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாக உப்பிலியப்பன் தனது வெற்றிச் செய்தியில் வெளியிட்டிருக்கிறார்.

இனி கோயம்பேடு வளாகத்தில் காய்கறி வாங்க வரும் சைவ உணவுப் பழக்கம் கொண்ட அவாள்கள், வெற்றிக்களிப்புடன் பூணூலை இழுத்து விட்டுக் கொண்டே சுத்தபத்தமான சூழலில், நறுமணத்துடன் காய்களை வாங்கி இன்புறலாம். கூடவே காலை நரசுஸ் காஃபி அருந்திக் கொண்டே தி இந்துவை படிக்கும் போது “நம்மவா என்னமா லோகத்துக்கு ஷேமம் செஞ்சுண்டுருக்கா” என்று புளகாங்கிதமும் அடையலாம்.

சீலா கருவாடு
சீலா கருவாடு

தமிழகத்தில் உள்ள நூற்றுக்கு நூறு பலசரக்கு கடைகளிலும் கதவருகே சரம் சரமாக தொங்க விடப்பட்டிருக்கும் கருவாடு பாக்கெட்டுகளை பார்க்கலாம். அங்கேயெல்லாம் எந்த ஜென்மமும் மூக்கை சுளித்ததில்லை. சுளித்திருந்தால் அண்ணாச்சிகளே வெளுத்திருப்பார்கள். இவ்வளவிற்கும் இந்த கடைகளில் இருக்கும் கருவாடுகளெல்லாம் விலை அதிகமில்லாத சிறு வகை கருவாடுகள்தான். இவற்றில் உப்பும், ஈக்கல் போன்ற எலும்பையும் தவிர வேறு எதுவும் இருக்காது. எனினும் உழைக்கும் மக்கள் மலிவு, மணம் கருதி சோற்றுக்கு தொடுகாயாக இதை சமைத்து உண்பார்கள். அறுசுவை விருந்துக்கோ குறைந்த பட்சம் காய்கறிகள் போட்டு செய்யும் சாம்பார் கூட பல குடும்பங்களில் வழியில்லை.

பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?

வஞ்சிரம், இறால் போன்ற விலை அதிகம் உள்ள கருவாடுகளெல்லாம் சற்று வசதிபடைத்தோரே வாங்குவார்கள். நீல்கிரிஸ், ரிலையன்ஸ் பிரஃஷ், ஃமோர் போன்ற தரகு முதலாளிகளின் தொடர் கடைகளில் கூட இறால், வஞ்சிரம் மீன்களின் ஊறுகாய் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது விதிமுறை மீறல் என்று ஆழ்வார்களின் ஆண்டவன் புகார் கடிதம் எழுதி அம்பானி மீது நடவடிக்கை எடுப்பாரா?

ஏற்கனவே “தி இந்து” அலுவலகத்தில் யாரும் அசைவ உணவு எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இணையத்தில் பிரபலம். மகா விஷ்ணுவிடம் குப்பை கொட்டும் ஒரே குற்றத்திற்காக எது சாப்பிட வேண்டும், எது கூடாது என்பதையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்றால் இது பத்திரிகை அலுவலகமா இல்லை சங்கர மடமா?

ஜெயா, மோடிக்கு அஞ்சி, அஞ்சி பத்திரிகை நடத்தும் தி இந்துக் குழுமம், அதற்காக தனது ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பலரை வெளியேற்றியிருக்கிறது. நல்லி எலும்போ, இல்லை மாட்டுக்கறி வறுவலோ சாப்பிடாத ஜென்மங்கள் மோடிக்கும், லேடிக்கும் இடுப்பெலும்பு முறிய சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில் என்ன ஆச்சரியம்?

கருவாடு வறுவல்
கருவாடு வறுவல்

இந்த கருவாடு என்கவுண்டர் செய்தி வந்த அதே பக்கத்தில் “மண்ணடியில் தண்ணீர் விற்ற கடைகளுக்கு நோட்டீஸ் – ‘தி இந்து’ செய்தி எதிரொலி: ஒரே நாளில் அதிரடி” என்று மற்றொரு வெற்றி செய்தி வந்திருக்கிறது. சென்னை பாரிமுனை, மண்ணடியில் உள்ள பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்து, தனியார் லாரிகள் மூலம் நீர் நிரப்பி, குடம் பத்து ரூபாய் என மக்களுக்கு விற்கிறார்களாம். இதை பரப்பிரம்மம் அம்பலப்படுத்திய பின் அதிகாரிகள் ஒரே நாளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து முடித்து விட்டார்கள்.

அரசு முறையாக நீர் கொடுக்க மறுப்பதினால்தானே இங்கே பெட்டிக்கடைகளிலேயே தண்ணீர் விற்கும் நிலை இருக்கிறது. நடுத்தர வர்க்கம் கேன் வாட்டரை 40, 50 ரூபாய்க்கு வாங்குவதெல்லாம் சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை. முக்கியமாக இங்கே தண்ணீரே இல்லை. அந்த பெட்டிக்கடைக்காரர்கள் என்ன கஞ்சா விற்றார்களா, இல்லை தி இந்துவில் வரும் பங்கு சந்தை பக்கத்தில் மோசடி செய்யும் பெரும் நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு நடுத்தர வர்க்க மக்களைத்தான் ஏமாற்றுகிறார்களா? இல்லை தண்ணீர் விற்பனையை எதிர்க்க வேண்டுமென்றால் பெப்சி, கோக்கை எதிர்த்து எழுதி ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து காட்டட்டுமே?

இவ்வளவு ரூல் பேசுகிறவர்கள் தமிழில் “தி இந்து” ஆரம்பித்த போது பாசிச ஜெயாவின் விஷன் 2020 எனும் இலவச இணைப்பை என்ன அறத்தில் கொண்டு வந்தார்கள்? இது பெயிட் நியூஸ் இல்லையா? அரசு விளம்பரங்கள் பெறுவதற்காக அதிமுக அரசுக்கு கூஜா தூக்கும் அடிமைத்தனம் இல்லையா? இதே போல சந்திரபாபு நாயுடு பதவியேற்பின் போதும் வெளியிட்டார்களே? உங்கள் அடிவருடித்தனத்தை கண்டிப்பதற்கு இங்கே மக்களிடம் அதிகாரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் கருவாடு சாப்பிடும் எளிய மக்கள் மீது அடக்குமுறை செய்வீர்களா?

கோயம்பேடுக்கு வரும் பலசரக்கு கடை அண்ணாச்சிகள் மொத்தமாக காய்கள் வாங்குவது போல இந்த கருவாடு பாக்கெட்டுகளையும் வாங்கி மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். விற்பனைக்கு வழியில்லாத சிறிய மீன்களே இப்படி கருவாடாக தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு வருகின்றன. அந்த வகையில் மீனவர் மக்களுக்கு இது ஒரு சிறிய உதவியாக கிடைத்து வருகிறது. காரசாரமாக சாப்பிட ஆசையிருந்தும், மட்டனையோ, சிக்கனையோ அடிக்கடி வாங்க முடியாத மக்கள் அதிகம் விலையுள்ள மீன்களையும் வாங்குவது சாத்தியமல்ல.

இந்த இடத்தில்தான் அனைத்து தேவைகளையும் கருவாடு பூர்த்தி செய்கிறது. இதையும் கூட ஒழிக்க வேண்டுமென்றால் அவன் இந்த உலகிலேயே மிகப்பெரும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு சாட்சாத் தான்தான் அந்த பயங்கரவாதி என்று கம்பீரமாக தெரிவிக்கிறார்.

இன்றைய ‘தி இந்து’ நாளிதழில் எம்ஜிஆருக்கு கருவாடு விற்ற சைதாப்பேட்டை வணிகரைப் பற்றியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவியின் விருப்பத்திற்குரிய தலைவரின் கருவாடுக்கு தனி கவனிப்பு. புரட்சி நடத்த போகும் உழைக்கும் மக்களின் கருவாட்டுக்கு மட்டும் கருவறுப்பா? நடுப்பக்கத்தில் சமஸ் என்பவர் தமிழக மீனவ கிராமங்களுக்கு சென்று உயிரற்ற முறையில் மலிவான என்சைக்ளோப்பீடியா பாணியில் மீன்கள் குறித்தும்,கடல் குறித்தும் எழுதுகிறார். ஆனால் உயிருள்ள மக்கள் சாப்பிடும் கருவாடு மீது இவர்களுக்கு அருவெறுப்பு! சமஸ் கட்டுரை முதன்முதலாக கடலோர மக்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது என்று இந்து பத்திரிகையும் சொன்னது,அதையே பல கருவாடு சாப்பிடாத சைவ உணவுக்காரர்கள் பின்னூட்டங்களில் அங்கீகரித்தார்கள். இது நடிப்பு என்பதற்கு இந்துக் கருவாடு வெறுப்பே சாட்சி.

உழைக்கும் மக்கள், ஜனநாயக அமைப்புகள், மீனவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் அனைவரும் “தி இந்து”வை கண்டிக்க வேண்டும். அரசிடமும் விற்பனைக்கு அனுமதிக்குமாறு போராட வேண்டும். இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இணைய சுவரொட்டிகளை நண்பர்கள் பரவலாக பகிர்ந்து பரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மகா விஷ்ணு தொடுத்திருக்கும் பயங்கரவாதப் போருக்கு எதிராக படை சேருமாறும் அழைக்கிறோம்.

கருவாடு karuvadu_en

திஹார் சிறையில் சஹாராவின் கார்ப்பரேட் அலுவகம் !

7

ளவாணிகளுக்கு நம் ஊரில் என்ன மதிப்பு என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பேருந்தில் எதேச்சையாக மாட்டிக் கொள்ளும் ஜேப்படித் திருடர்களை பொதுமக்கள் ‘கவனிப்பதும்’ நாம் காணாத காட்சிகள் அல்ல. சொம்பு களவாணிகளும், கோழி களவாணிகளும் பிறப்பெடுத்ததே அவ்வப்போது போலீசு பூட்சுகளின் உறுதியை சோதித்துப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் என்பதும் எழுதப்படாத சட்டம்.

சுப்ரதா ராய்
‘சுல்தான்’ சுப்ரதா ராய்

ஆனால், நமது புண்ணிய பாரதத் தாய் வெள்ளைக்காரனிடம் இருந்து விவாகரத்து பெற்று இந்திய ஓனர்களின் கையில் மாட்டிக் கொண்ட சம்பவ நாளிலிருந்து – அட, அதுதாங்க ‘சுதந்திரம்’ பெற்ற நாளில் இருந்து யாருக்காக சேவை ஆற்றி வருகிறாள் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள இன்றைக்கு சகாராவின் சுப்ரதா ராய் வாழ்ந்து வரும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டாலே போதுமானது.

சுப்ரதா ராய் குறித்து வினவு வாசகர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. ஈரோட்டு ஈமு கோழி யாவாரத்தை அகில இந்திய அளவில் மிகப் பெரிய பிளேடு கம்பேனிகளின் பெயர்களின் கீழ் நடத்திய சூட்டு கோட்டு போட்ட பிளேடு பக்கிரி தான் சுப்ரதா ராய்.

தங்களைத் தாங்களே முதலீட்டாளர்கள் என்று மூடநம்பிக்கை வைத்திருக்கும் பேராசை கொண்ட அப்புராணிகளிடமிருந்து முதலீடு என்ற நாகரீகமான பெயரில் 17,000 கோடி ரூபாய்களை சுப்ரதா ராய் ஆட்டையைப் போட்டிருந்தார்.

லோக்கல் திருடர்கள் என்றால் திருடிய காசில் உல்லாசமாக இருக்க தினத்தந்தியின் ‘அழகிகளிடம்’ செல்லும் வழியில் போலீசு மடக்கி பிடரியில் ரெண்டு தட்டி பிடித்து வந்து கைலியோடு குந்த வைத்து போட்டோ பிடித்து நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பார்கள். மீட்கப்பட்ட தேட்டையில் போலீசு அடித்த உள்திருட்டு போக எஞ்சியதை பரிகொடுத்தவர்களுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் வழங்கும் வைபவமும் தினத்தந்தி புகைப்படக் கலைஞரின் முன்னிலையில் நடக்கும். நாம் தான் பலமுறை பார்த்திருக்கிறோமே?

ஆனால், சுப்ரதா ராய் அகில இந்திய அளவில் தொழில் அதிபர் அல்லவா?

எனவே அவரைக் கோழி அமுக்குவது போல் அமுக்கி மயிலைப் பராமரிப்பது போல் சீராட்டி வருகிறது மத்திய அரசு. அன்னார் தனது முதலீட்டாளர்களிடம் ஜேப்படி செய்த தொகையில் ஒரு பகுதியை – அதாவது சுமார் 9.7 ஆயிரம் கோடி ரூபாய்களைத் திரட்ட அன்னாருக்குச் சொந்தமாக லண்டனிலும், நியூயார்க்கிலும் உள்ள இரண்டு ஆடம்பர விடுதிகள் உள்ளிட்ட மூன்று நட்சத்திர விடுதிகளை விற்க தற்போது முயற்சித்து வருகிறார்.  அன்னாரின் முயற்சிக்கு உறுதுணையாக திகார் சிறையில் சுமார் 600 சதுர அடிக்கு நவீன பாணி அலுவலகம் ஒன்றை சிறை நிர்வாகம் அமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த நவீன அலுவலகத்தில் இருந்து சுப்ரதா ராய் இணையம் பாவித்துக் கொள்ளலாம், தொலைபேசிக் கொள்ளலாம், எந்த நேரத்திலும் யாரும் அவரை வந்து சந்திக்கலாம், காணொளிக் கலந்துரையாடல்களில் (video conference) பங்கெடுத்துக் கொள்ளலாம். இந்த நவீன வசதிகளைப் பயன்படுத்தி மேற்படி பிளேடு பரந்தாமன் வரும் ஆகஸ்டு 20-ம் தேதிக்குள் பணத்தைத் திரட்ட வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. ஆனால், பாருங்கள் அவரால் நீதிமன்றம் கெடுவுக்குள் விற்க முடியாமல் போய் விட்டது. எனவே தனது சுகபோகங்களுக்கு மேலும் பதினைந்து நாள் நீட்டிப்பு கேட்டிருக்கிறார்.

தற்போது புருனே சுல்தான் மேற்படி நட்சத்திர விடுதிகளை வாங்க யோசிப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சுல்தானின் கஷ்டத்தை இன்னொரு சுல்தான்தான் புரிந்து கொள்ள முடியும். ஆனால் புருனேயில் சுல்தான்தான் கடவுள், இங்கேயும் சுல்தான்கள் கடவுள்தான் என்றாலும் ஏகப்பட்ட பேர்கள் இருப்பதால் தனி மரியாதை சுற்று முறையில்தான் வரும்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகாவது அவரைக் குப்புறப் போட்டு பல்ராம் நாயுடுவின் ஹைதரபாத் லாட்டின்னா என்னவென்று காட்டுவார்களா என்ன? கிடையாது, அதன் பின் வெளியே வந்து சொந்தக் காசில் சுக போகங்களைத் தொடர்வார்.

சீமைப் பசு போஸ்டர் தின்னும் காட்சியைக் கூட பார்த்து விடலாம்; ஆனால் இந்தியாவில் முதலாளிகளுக்கு வியர்த்து பார்க்கவே முடியாது. அதிலும் அந்த வியர்வைக்கு நீதிமன்றமோ அரசாங்கமோ தெரியாமல் கூட காரண கர்த்தாவாக  இருந்து விட முடியாது. ஏற்கனவே சென்ற ஆண்டு தனது ஊழியர்கள் 11 லட்சம் பேரை ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாட வைத்து கின்னஸ் சாதனை வேறு படைத்திருக்கிறார். பாரத மாதவுக்கே பன்னீர் தெளித்த தேச பக்தரை, பாரத மாதாவின் தவப்புதல்வரான மோடி ஆட்சியில் கை விடுவார்களா என்ன?

“துறவிய போல ஜெயா – சசி” கேலிச்சித்திரம்

0

140819-jaya-sasi-caption

ஜெயா - சசி சொத்துக்குவிப்பு

ஒரு ரூபா சம்பளம் வாங்கின காலத்தில இருந்து இப்ப வரைக்கும் ஒரு ‘தொறவிய’ போல ஜனங்களுக்காக, ‘ஒழச்சு ஒழச்சு’ ஓடா தேய்ஞ்சுகிட்டு இருக்கிற ஒங்கள போயி சொத்து குவிப்பு… அப்படி… இப்படின்னு… கேஸப் போட்டாங்களேக்கா…!

இந்த வழக்குக்காக நாம அலைஞ்ச நேரத்த உருப்படியா செலவு செஞ்சிருந்தா இந்நேரம் தமிழ்நாட்ட ‘வாடகைக்கு’ விட்டுருக்கலாம்!

படம் : ஓவியர் முகிலன்

திருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்

4

திருச்சி கால்டுவெல் கருத்தரங்கம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

1814-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிருஸ்தவ சமயப்பரப்பிற்காக தமிழகத்திற்கு வந்தவர். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மொழி முதலானவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார்.

அவரின் நோக்கம் சமயப்பரப்புரையாக இருந்தபோதும் தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. இவர் 18 மொழிகளைக் கற்றவர். அவர் கற்றறிந்த பிறமொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வு நூலாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக 1856-ல் வெளியிட்டார்.

அதுவரை இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும் அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்றும் உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேலாண்மையை அது உடைத்து நொறுக்கியது.

பார்ப்பன பாசிசம் ஆட்சியை பிடித்திருக்கும் இந்த சூழலில் தமிழ் மொழியின் இருப்பை காலி செய்திடும் அதிகாரத்திமிர் எல்லாத்தளங்களிலும் கோலோச்சுகின்றது. மோடியின் பட்ஜெட்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைக்கேற்ற திட்டங்கள் நிறைந்து இருக்கின்றன. ஆன்மீக வளர்ச்சி, தீர்த்த யாத்திரை ஊக்குவிப்புக்கான தேசிய முயற்சி, பாரம்பரிய நகரங்கள் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டம், கங்கைக்கு நமஸ்காரம், விவேகானந்தர் பிரச்சார இரயில், காஷ்மீர் பார்ப்பனர்கள் மறுவாழ்வு திட்டம் என்று நீள்கிறது சனாதனத் திமிர். இந்திய வரலாற்றை திருத்திப் புரட்டுகிறது மோடி அரசு. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட நிர்ப்பந்திக்கப்படுகிறது.

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது நல்லதுதானே என்று சிலமேதாவிகள் நினைக்கின்றனர். ஆனால், அரசின் அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளியில் சமஸ்கிருதம் கற்று, பூநூல் அணிந்து குடுமியை வளர்த்து அச்சு அசலாக பார்ப்பனர் போலவே மாறிய பின்னும் அம்மாணவர்களை அர்ச்சகர் வேலைக்கு கோயிலுக்குள் விடமறுக்கின்றனர். அர்ச்சகராக முடியாமல், கோயிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கெதிராக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் பார்ப்பன அர்ச்சகர்கள், சு.சாமி, ஜெ மாமி, உச்சிக்குடுமி மன்ற கூட்டணியால் முடக்கப்பட்டுள்ளது.

பூணூலை மறைத்து பயந்த காலம் போய் இன்றைக்கு தைரியமாக இராக்கி கட்டுவது, சாகா பயிற்சி கொடுப்பது, பஜனை நடத்துவது, முசுலீம் கிருஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று பாடல்கள் மூலமாக சிறுவர்களிடம் நஞ்சை விதைப்பது என ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வெறியுடன் களமிறங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

பார்ப்பன, பார்சி, பனியா மற்றும் பன்னாட்டு முதலாளிகளை ஆண்டைகளாக ஏற்கும்படி தொழிலாளர்களும் சிறுபான்மை மக்களும் தலித்துகளும் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். கங்காணி பதவிக்காக ஏ.சி.சண்முகம், கொங்கு ஈஸ்வரன், பாரிவேந்தர், விஜயகாந்த், வை.கோ, ராமதாசு போன்றோர் அலைகின்றனர். ஆர்.எஸ்.எஸ்-ன் அல்லக்கைகளாகிவிட்ட இந்த எட்டப்பர்களை இனம் காண்பதும் வளர்ச்சி, வல்லரசு என்ற வேடத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள பார்ப்பன-பாசிச கும்பலை வீழ்த்துவதும் உடனடி கடமைகளாக நம்முன் நிற்கின்றன.

மறுகாலனியாதிக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. மோடியின் பாசிச ஆட்சியில் செத்துப்போன சமஸ்கிருத மொழியின் மேலாதிக்கமும் சனாதனப் பண்பாடும் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி பெயர் விளங்கா பண்டிகைகளைக் கொண்டாடுவது வரை இந்துத்துவ -சனாதன மீட்சி நடந்து வருகிறது. சமணம், பவுத்தம், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என இருந்த நமது பார்ப்பன எதிர்ப்பு மரபு மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இன்னொரு புறம் தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர அரசு மறுக்கிறது. தாய்மொழி வழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியைக் கொண்டு வந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது.

இவற்றுக்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த “உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி” என்பதும் “பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கையில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவு கூர்வதாகும்.

  • ராபர்ட் கால்டு வெல்லை நினைவு கூர்வோம்!
  • சமஸ்கிருத எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!!

அனைவரும் வருக!

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
தேசிய இன அடையாளங்களை அழிக்கும்
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு!

தமிழின் தனித் தன்மையை நிலைநாட்டிய அறிஞர் கால்டுவெல் 200-வது பிறந்தநாள்

கருத்தரங்கம்

நாள் : ஆகஸ்ட் 22 வெள்ளி
நேரம் : மாலை 6 மணி
இடம் :
கைத்தறி நெசவாளர் திருமண மண்டம்,
உறையூர், திருச்சி

தலைமை :
தோழர். காளியப்பன், மாநில இணைச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

கருத்துரை :

காலனியம் : திராவிட இனம் : கார்டுவெல்

பேராசிரியர். முனைவர். வி.அரசு,
முன்னாள் தமிழ்துறைத் தலைவர்,
சென்னைப் பல்கலைக் கழகம்.

தமிழ் மறு உயிர்ப்பில் கார்டுவெல் பங்கு

புலவர். பொ.வேலுச்சாமி

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

தோழமையுடன்
மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி. மாவட்டம்
தொடர்புக்கு :9095604008

பட்ஜெட் பற்றாக்குறை : ஏழைகள் பணத்தில் முதலாளிகளுக்கு மானியம்

4

மூடி, ஃபிட்ச், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் உள்ளிட்ட ஏகாதிபத்திய தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மோடி அரசின் முதல் பட்ஜெட்டைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, அதில் ஒரேயொரு குறை இருப்பதாக மூக்கைச் சிந்துகின்றன. “இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி மோடி அரசால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீத அளவிற்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்பொழுது) குறைத்துவிட முடியுமா?” என்பதுதான் அவர்களுக்குள்ள பெருத்த சந்தேகம். இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் ஒரு பட்ஜெட்டின் தன்மையை, அதில் அறிவிக்கப்படும் திட்டங்கள், கொள்கைகள் அடிப்படையில் மதிப்பிடுவது கிடையாது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு பட்ஜெட்டில் அளிக்கப்படும் உறுதிமொழியை வைத்துதான் அளவிடுகிறார்கள். பற்றாக்குறையைக் குறைப்பதுதான் சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளமெனக் கூறும் இவர்கள், பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகமாகக் காட்டப்பட்டால், அத்தகைய பட்ஜெட்டை கவர்ச்சி பட்ஜெட், வாக்குச்சீட்டு பட்ஜெட் என நையாண்டி செய்யத் தயங்குவதில்லை.

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயுக்கு மானிய வெட்டு

“வரி மற்றும் பிற வகையான வருவாய்களின் மூலம் அரசுக்கு வருமானமாக 15.7 இலட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் அதேசமயம், அரசின் செலவுகள் 18 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும்” என இந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. வரவைவிட அதிகமான இச்செலவுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் யூரியா, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள மானியமும் பழைய மாதிரியே தொடர்வதுதான் காரணமென்று குமுறுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். இந்தக்குமுறலுக்கு ஆறுதல் சொல்வதுபோல, “60 ஆண்டு கால மானிய பாரம்பரியத்தை நான்கே மாதங்களில் ஒழித்துக்கட்டி விட முடியாது” என விளக்கமளித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதனை உண்மையாகக் காட்டும் கோயபல்சு பாணியில், பட்ஜெட் பற்றாக்குறைக்கு மானியங்கள்தான் காரணமென தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் நிறுவிவிட முயலுகிறார்கள். இதுவொரு வடிகட்டிய பொய் என்பதை நிரூபிப்பதற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம். ஒவ்வொரு பட்ஜெட் அறிக்கையிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வருமான வரிச் சலுகை மற்றும் சுங்க, உற்பத்தி தீர்வை விலக்குகளால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு எவ்வளவு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வருமான இழப்பையும் பற்றாக்குறையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மானியத்தால் பற்றாக்குறை ஏற்படுவதில்லை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு (2013-14) பட்ஜெட்டில் பல்வேறு மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.45 இலட்சம் கோடி ரூபாய்; கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்ட வருமான, சுங்க மற்றும் உற்பத்தித் தீர்வை வரிச்சலுகைகள் 5.72 இலட்சம் கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 5.24 இலட்சம் கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டில் (2012-13) மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.47 இலட்சம் கோடி ரூபாய்; முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த வரிச்சலுகைகள் 5.66 இலட்சம் கோடி ரூபாய்; அறிவிக்கப்பட்ட பற்றாக்குறை 4.50 இலட்சம் கோடி ரூபாய்.

“பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள 5.50 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கார்ப்பரேட் வருமான வரிச் சலுகைகளை மட்டும் திரும்பப் பெற வேண்டும்” என 2013-14-ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை குறிப்பிடுகிறது.

எனினும், மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட 5.50 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கார்ப்பரேட் வருமான வரி விலக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்பதோடு, மேலும் 22,000 கோடி ரூபாய் பெறுமான வருமான, சுங்க மற்றும் உற்பத்தி தீர்வை வரி விலக்குகள் இந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளன.

நவீன மின்னணு பொருட்களுக்கு வரிவிலக்கு
நவீன மின்னணு பொருட்களுக்கு வரிவிலக்கு

கடந்த 2005-06-ம் ஆண்டு தொடங்கி 2013-14ஆம் ஆண்டு முடிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச் சலுகைகள் 36 இலட்சம் கோடி ரூபாயாகும் எனக் குறிப்பிடுகிறார் பத்திரிகையாளர் பி.சாய்நாத். இந்தத் தொகை மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக உள்நாட்டில் வாங்கியிருக்கும் கடனுக்குச் சமமானது.

இந்தப் புள்ளிவிவரங்கள் கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவைகளை அரைகுறையாக ஈடுசெய்யும் விதத்தில் வழங்கப்படும் மானியங்களைவிட, கையளவேயான கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் புதுப் பணக்கார கும்பலின் நலனை முன்னிறுத்தி அறிவிக்கப்படும் வரிச்சலுகைகளால்தான் பற்றாக்குறை ஏற்படுவதை நிறுவுகின்றன.

ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரிச் சலுகைகள் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியம் அளிக்கப்படும்பொழுது, பற்றாக்குறை குறைவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடையாது. எனில், “ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்” எனத் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் கூப்பாடு போட்டு வருவதன் உண்மையான நோக்கமென்ன? அது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் படிப்படியாக வெட்டுவதுதான். தமது இந்த தீயநோக்கத்தை நியாயப்படுத்திக் கொள்ளவே, மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நாட்டின் வில்லனாகவும், தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளைப் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளாகவும் காட்டுகிறார்கள், தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.

முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் அளித்தால், அவர்கள் பொருட்களை விலை மலிவாகத் தயாரித்து சந்தையில் விற்க முன்வருவார்கள். இதனால் நுகர்வு அதிகரிக்கும். அதனால் உற்பத்தி பெருகும். அதன் விளைவாக வேலை வாய்ப்புகள் கூடும் என்றொரு பயாஸ்கோப்பு படத்தைச் சித்தரித்து வருகிறார்கள் இவர்கள்.

பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் அவர்களின் எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏறத்தாழ 30 இலட்சம் கோடி ரூபாய் பல்வேறு இனங்களில் வரிச் சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆறு ஆண்டுகளில் விலைவாசி குறைந்துவிட்டதா? வேலைவாய்ப்பு பெருகிவிட்டதா? தமிழகத்திற்கு வந்த நோக்கியாவிற்கு அளிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகள் அக்கம்பெனி தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதமளித்ததா? இந்தச் சலுகைகளால் அம்பானியும் அதானியும் உலகக் கோடீசுவரர்களானதைத் தாண்டி மக்களுக்கு என்ன பலன் கிடைத்துவிட்டது?

06-1-captionமுதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, செல்வங்களை விநியோகிப்பதில் உள்ளார்ந்த முறையிலேயே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகின்றன. இந்த ஏற்றத்தாழ்வை எதிர்த்து சமத்துவமான விநியோக முறைக்காக உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகத்தான் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், சேவைகளையும் மானிய விலையில் மக்களுக்கு வழங்கும் உரிமை சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்தப்பட்டது. எனவே, மானியம் என்பது உழைக்கும் மக்களின் அரசியல் பொருளாதார உரிமையேயன்றி, அம்மா உணவகம் போல ஆளுங்கும்பல் கருணை உள்ளத்தோடு போடும் பிச்சையல்ல. மேலும், முதலாளித்துவ ஆளுங்கும்பலுக்குத் தம்மை சேமநல அரசாகக் காட்டிக் கொள்வதற்கும் மானியங்கள் அளிப்பது தவிர்க்கமுடியாத தேவையாகியது.

ஆனால், தனியார்மயம்-தாராளமயத்தின் விளைவாகக் கல்வி, மருத்துவம் தொடங்கி குடிதண்ணீர் வரை அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்த பின், அச்சேவைகளை அரசு மானிய விலையில் அளிப்பதைத் தமது இலாபத்திற்கு குறுக்கே நிற்கும் இடையூறாகத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கருதுகின்றன. வெளிச் சந்தையில் ஓரளவு தரமான அரிசிகூட கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்கப்படும்பொழுது, ரேசன் கடையில் இலவசமாகவோ, குறைந்த விலையிலோ அரிசி விநியோகிக்கப்படுவதை முதலாளித்துவக் கும்பலால் சகித்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் மானியங்களை வெட்ட வேண்டும் என்பதை நிபந்தனையாகவே விதிக்கின்றன உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள்.

சுதந்திரமும் இறையாண்மையும் கொண்டதாகக் கூறப்படும் இந்திய அரசு ஏகாதிபத்திய நிறுவனங்களின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருப்பதோடு, அதனை பட்ஜெட் தயாரிப்புக்கான வழிகாட்டும் சட்டமாகவும் இயற்றி வைத்திருக்கிறது. வாஜ்பாயி தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் உலக வங்கியின் நிபந்தனை, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டமாக உருமாற்றம் பெற்றது. அதற்கடுத்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தனது வருடாந்திர வரவு-செலவு அறிக்கைகள் அனைத்தையும் இந்தச் சட்டத்திற்கு ஏற்பவே தயாரித்தது.

பற்றாக்குறை பட்ஜெட் போடுவது சீர்கெட்ட நிதி நிர்வாகத்தைக் குறிக்கிறது என்றால், உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் இந்த சீர்கெட்ட நிர்வாகத்திற்கு எடுப்பான உதாரணமாகும். ஆனால், உலக வங்கியோ, ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனங்களோ பற்றாக்குறையைக் குறைக்கும்படி அமெரிக்காவை ஒருக்காலும் நிர்பந்திப்பது கிடையாது. மாறாக, தனியார்மயம்-தாராளமயத்தை ஏற்றுக் கொண்ட ஏழை நாடுகள் மீதுதான் இந்த நிர்பந்தம் திணிக்கப்படுகிறது. எனவே, பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதை நாட்டு நலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. உணவுப் பொருள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விற்பனைச் சரக்காக மாற்றி, அவற்றின் உற்பத்தியை, விநியோகத்தை, விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் மறுகாலனியாதிக்க நடவடிக்கையாகும்.

புதிதாகப் பதவியேற்ற மோடி அரசு, இம்மறுகாலனிய தாக்குதலைத் தீவிரப்படுத்தும் முகமாக இந்த நிதியாண்டில் பற்றாக்குறையை 4.1 சதவீதமாகவும்; அடுத்த (2015-16) ஆண்டில் பற்றாக்குறையை 3.6 சதவீதமாகவும், அதற்கடுத்த ஆண்டில் 3 சதவீதமாகவும் குறைத்துவிடுவோம் எனத் தனது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு உறுதியளித்திருக்கிறது. ரயில் கட்டணங்களும் டீசல் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதையும், நெல்லுக்கும் கோதுமைக்கும் மாநில அரசுகள் ஊக்கத் தொகை கொடுக்கக்கூடாதென மைய அரசு கட்டளையிட்டிருப்பதையும், மானியங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செலவு மேலாண்மை கமிட்டியை அமைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும், தேநீர் விற்று பிழைப்பு நடத்திய சாதாரண குடும்பத்தில் பிறந்த எளிய மனிதனாகத் தன்னைக் காட்டி வந்தார் நரேந்திர மோடி. ஆனால், அவர் மன்மோகன் சிங்கையே விஞ்சக்கூடிய உலக வங்கியின் கைக்கூலி என்பதை இக்கட்டணக் கொள்ளை நடவடிக்கைகளும் பட்ஜெட்டும் எடுத்துக் காட்டிவிட்டன.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

ரஜினி, ஜெயமோகன் வழியில் சிம்புவின் இமய யாத்திரை !

4

ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்” இது 25.08.2014 தேதியிட்ட குங்குமம் இதழின் அட்டைப்படக் கட்டுரை தலைப்பு.

ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்
ஆன்மிகம் ஃபர்ஸ்ட், சினிமா நெக்ஸ்ட், சிம்பு டிவிஸ்ட்

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் இரண்டு படங்கள் வருவதால், வழக்கம் போல படங்களுக்கான விளம்பரங்கள், செய்திகளாக, அட்டை கட்டுரைகளாக மாறும் மரபுப்படி வந்திருக்கிறது இந்த நேர்காணல். ஆனால் முதல் முறையாக, ஒரு நடிகர் என்ன பேசுவார் எனும் மரபை ஒடித்து கலகம் செய்திருக்கிறார் சிம்பு.

இந்த நேர்காணல் கருத்துக்களை பார்க்கும் போது இனி அவருக்கு ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் முதல் பின் நவீனத்துவ பேராசிரியர்கள் வரை புதிய ரசிகர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. எனினும் கருத்துக்களில் எது இந்து ஆன்மிகம், எது பிரெஞ்சு பின் நவீனத்துவம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. அதுவா இதுவா என்றால் இரண்டும்தான். இல்லைதான்.

தனது காதலிகளோடு சேர்ந்திருக்கும் படங்களையோ, ஊடலின் போது மிரட்டிய பேச்சுக்களையோ இணையத்தில் சந்தைப்படுத்தி விளம்பர ஆதாயத்தையும் வக்கிரத்தையும் ஒருங்கே கண்டதாக அறியப்பட்ட சிம்புவை பொதுவில் பணக்கொழுப்பெடுத்த ஒரு மேட்டுக்குடி பொறுக்கி என்றே பலரும் அறிந்திருப்பர்.

சினிமா உலகில் இருப்போருக்கு, அவர் நினைத்தால் படப்பிடிப்பிற்கு வருவதும், சமயத்தில் ஒரு ஷாட் முடித்து விட்டு “பை” சொல்வதும், தயாரிப்பாளரிடம் ஏகப்பட்ட வசதிகள் கேட்டு அலப்பறைகள் செய்வதும் என ஒரு வாரிசு குடும்பத்தின் அட்டகாசம் என்றே தெரியும்.

இதெல்லாம் இல்லாமல் சிம்பு எப்படியென நாம் நினைக்கிறோம். அப்படியில்லை இனி புதிய சிம்புவைப் பார்ப்பீர்கள் என்கிறார் பேட்டி கொடுக்கும் சிம்பு. இதனால் இறந்தகால இழிவுகளை மறக்கவோ இல்லை தூற்றுவதையோ அவர் செய்யவில்லை. அதெல்லாம் ஒழுக்கத்தின் பெயரில் கட்டுப்பெட்டித்தனத்தை வைத்திருக்கும் பெரியவர்களின் அணுகுமுறை. பழைய ஜாலி இருந்தாலும் புதிய நிதானமும் வந்திருக்கிறது என்கிறார் சிம்பு.

பாண்டிராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் “நானும் நயன்தாராவும் நடிக்கப் போறோம்னு சொன்னதுமே திரி கிள்ளிப் போட்ட மாதிரி ஆகிருச்சு. லைட் மேனே வந்தா நகராம பார்க்கிறார். ஆடியன்ஸும் நல்லாப் பாப்பாங்க” என்கிறார் இந்த மைனர் மகாத்மா. அதைத்தான் யூடியூப்பில் பார்த்து விட்டோமே என்பதாலேயே லைட்மேனோ இல்லை ரசிகர்களோ இந்தப் படத்தில் (எதிர்) பார்ப்பார்கள் என்று வெளிப்படையாக தனது அறியப்பட்ட பொறுக்கித்தனத்தையே ஒத்துக் கொள்ளும் திறந்த மனது யாருக்கு வரும்?

அதே போல “வாலு” எனும் படத்தை பேசும் போது, “ ‘அந்த’ சமயத்தில் எடுத்த படமா…..நானும், ஹன்சிகாவும் செம கெமிஸ்ட்ரியில் இருக்கோம்” என்று இன்னும் திறந்து பேசுகிறார். இதிலிருந்து பெறும் நீதி என்னவென்றால் படத்தில் மட்டுமல்ல வாழ்விலும் அதே நாயகிகளை காதலிப்பதால்தான் அவருக்கு நடிப்பு இயல்பாக வருகிறது. படமும் எதிர்பார்ப்புடன் நன்றாக ஓடுகிறது. இதனால் திரையுலகில் உள்ள நாயகிகள் அனைவரும் தங்களை சிம்பு இழிவுபடுத்திவிட்டதாக பொங்கி எழுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த செய்திகள் விளம்பர புரமோஷனாக பயன்படுத்தலாம் என்பதால் அனுமதிக்கிறார்கள். ஆனல் சிம்பு மட்டும் உண்மையை பேசுகிறார்.

சிம்பு
அவர் ஏன் இப்படி பொறுக்கியாக இருந்தார்? (இருக்கிறார்?).

அவர் ஏன் இப்படி பொறுக்கியாக இருந்தார்? (இருக்கிறார்?). மற்ற நடிகர்கள் 24 வயதில் நடிக்க வரும் போது இவர் மட்டும் 9 மாதக் குழந்தையிலிருந்தே நடிக்க வந்து விட்டார். கைக்குழந்தைக்கெல்லாம் நடித்த நினைவுகள் எப்படி இருக்கும் என்று திருஞான சம்பந்தரை போற்றும் மண்ணிலிருந்து கொண்டு கேட்காதீர்கள். ஒரு பக்கம் பள்ளி பரீட்சை, மறுபக்கம் சினிமா டயலாக் என்று டைட்டாக வேலை பார்த்த அந்த் சிறுவனுக்கு என்ன நிம்மதி ஏற்பட்டிருக்க முடியும்?

இடையில் தாடிக்கார டாடிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று எதுகை மோகனையில் எஃபெக்டுடன் எட்டு நாள் பேசினால் அந்த பிஞ்சு மனது எப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருக்கும்?

புதுப் பணக்காரர்களுக்குத்தான் ஆடம்பரமும், கேளிக்கைகளும் பிரச்சினைகளை கொண்டு வரும். இவருக்கு எல்லாமும் பிறக்கும் போதே இருந்ததால் பிரச்சினைகள் வேறு விதத்தில் வந்தன. அதுதான் தனிமை. பிறகு இரண்டு வருட இடைவெளி. இதில்தான் நீங்கள் புதிய சிம்புவை பார்க்கிறீர்கள்.

நான் யார், இந்த உலகிற்கு ஏன் வந்தேன், எதற்கு வாழ்கிறேன் போன்ற தேடல் கேள்விகள் ஜெயமோகனுக்குத்தான் சொந்தமென்று நினைக்க கூடாது. இதே வார்த்தைகளில் சிம்புவும் தனக்குள்ளே கேள்விகள் எழுந்துக்கிட்டே இருக்கு என்கிறார். கவனியுங்கள், அவர் எழுந்தது என்று முடித்து விடாமல் எழுந்துகிட்டே இருக்கு என்கிறார் அல்லவா, இதுதான் ஒரிஜினல் தேடல் என்பதற்கு அத்தாட்சி.

அதனால்தான், “தான் சிம்புதானா”ண்ணு அவருக்கு தோன்றுகிறதாம். சிறிய வயதில் நடிப்பு, புகழ், பணம், வசதிகள், காதலி எல்லாம் இருந்தாலும் தனிமையிலேயே அவதிப்பட்டிருந்தார் அல்லவா, அதுதான் இந்த தேடலில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இப்படித்தான் ஆன்மீகம் அறிமுகமாகிறது. “பைபிள், குர்ஆன், கீதை, மெட்டா பிசிக்ஸ், டி.என்.ஏன்னு கலந்து கட்டி” படிக்க ஆரம்பித்திருக்கிறார். இங்கேதான் அவர் ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் வகை பாரம்பரிய இந்துத்துவாவில் இருந்து பின் நவீனத்துவ இந்துவாக மாறுபடுகிறார்.

அதே நேரம் அவரது தேடலில் குர் ஆனும், பைபிளும் இருப்பதால் மார்க்க சகோதரர்களும், பெந்தகோஸ்தே பெரியவர்களும் கூட முயற்சித்தால் யுவன் சங்கர் ராஜா, நடிகை தீபா போன்று பம்பர் பரிசுகள் கிடைக்கலாம். பிறகு ஃபேஸ்புக்கிலும் கொண்டாடலாம். என்ன, இசுலாம் ஒரே நாளில் கொஞ்சம் அல்ட்ரா மாடர்னாக மாறிவிடும், பரவாயில்லையா?

இதன் தொடர்ச்சியாக தியானமெல்லாம் இருந்திருக்கிறார். ஒரு முறை 8 மணி நேரம் தியானத்தில் இருந்த போது அவரது அம்மா பயந்திருக்கிறார். என்ன பயந்தார், பையன் ஏதும் வஸ்துக்களை உண்டு போதை மயக்கத்தில் சிக்கிவிட்டானா என்றா என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. இந்த போதி மர மாற்றத்திற்கு பிறகே அவர், தனது கடவுளுக்கு முகம் கிடையாது என்பதை கண்டுபிடித்திருக்கிறார். கூடவே நண்பனது தோளில் கை போட்டு என்ன மச்சி என்று பேசுவது போல கடவுளிடம் உரையாடுகிறார். கடவுளை டா போட்டு பேசும் நமது மரபில் இது வாழையடி வாழையாக தொடர்வது குறித்து இந்து ஞான மரபு ஆராய்ச்சியாளர்கள்தான் விளக்க வேண்டும்.

ஆரம்பத்தில் ரஜினி போல சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற கனவுள்ளவர் இந்த “என்ன மச்சி, லார்டு” ஆன்மீக மாற்றத்திற்கு பிறகு சினிமா இரண்டாம் பட்சம்தான் என்று மாற்றியிருக்கிறார். ஒருவேளை ரஜினியே இப்படி ஆன்மீகம் என்று மாறிய பிறகே சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்றும் இதை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில், இதைக் கேட்ட உடன் அப்பாவி குங்குமம் நிருபர் நா.கதிர்வேலன், டென்சனாகி தமிழகம் ஏதோ சிம்மக் குரலோன் சிவாஜி கணேசனை இழந்து விடுமோ என்றஞ்சி, “சினிமாவை விட்டு போய்விடுவீர்களா” என்று பதைபதைப்புடன் கேட்கிறார்.

இங்குதான் ஆன்மீகத்தை பற்றிய நித்தியானந்தா விளக்கத்தை ஜெயேந்திரானந்தா ஸ்டைலில், சாயிபாபானந்தா மொழியில், பாருநிவேதிதா களிப்பில், சுயமோகன் வார்த்தைகளில் நடிகர் சிம்பானாந்தா உபதேசிக்கிறார். “ஆன்மிகத்தில் வந்துட்டா கல்யாணம், தாம்பத்யம், தண்ணியடிக்கிறது, அசைவம் கூடாது என்பதல்ல. 24 மணிநேரமும் காவி உடையில் இருக்கிறதும் அவசியமல்ல. கடவுளை நோக்கிச் செல்ல அநேக வழிகள். அதனால் சினிமாவை விட மாட்டேன், என்னை நம்பின ரசிகர்களுக்கு என்னால ஏமாற்றம் தர முடியாது” என்று பட்டையைக் கிளப்புகிறார் சி ஆனந்தா.

முற்றும் துறக்கும் ஆன்மீகத்தையே அவஸ்தை போல கேட்டு பழகியிருக்கும் செவிகளுக்கு இந்த மறைபொருளின் உள்ளொளி மனப்பெருங்கடல் சுனாமி அலைகள் கேட்காது. எல்லாவற்றையும் வைத்துக் கொண்டே ஆன்மிகத்தை பின்பற்றுவது எவ்வளவு பெரிய சிரமம் என்பது லவுகீக வாசிகள் அறியாத ஒன்று. இதனால் அது சிரமம் என்று சொல்வது கூட பிழை. சோமபான, சுரா பானஆன்மிகத்தையே மாபெரும் கொண்டாட்டமாக மாற்றியிருக்கும் பாரிஸ் தேசத்து ஒயின் பின்நவீனத்துவமிது.

சிம்பு
யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?

சிம்புவை கேலி செய்வதாக நினைக்கும் அற்பப் பதர்களுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறோம். ஒருக்கால் சினிமா மைனர்தனத்தை வைத்துக் கொண்டு சிம்பானந்தா ஆன்மிகம் பேசுவதை கேலி செய்தால் நீங்கள் ரோல்ஸ்ராய்சில் முக்தி பரவசமடைந்த ஓஷோவை, கேபிள் டீவி பார்த்து அத்வைதத்தை ஆராய்ந்த பால பெரியவாள், மாமிகளை வைத்து யோகநிலை கண்ட நடு பெரியவாள், சன் செய்தி பார்த்துக் கொண்டே இருட்டை ஆராய்ந்த நித்தி, ஆண் நண்பர்களுக்கான விடுதலையை பாலியல் லேகியத்தில் கலந்து கொடுத்த சாயிபாபா அனைவரையும் கேலி செய்ய வேண்டும். அவ்வளவு ஏன் ஜெயமோகனது குரு நித்ய சைதன்ய யதியையும் கூட கேலி செய்ய வேண்டும்.

அந்த யதி கூட கேரளாவிலிருந்து துறவறம் பூண்டு ஊர் ஊராக அலைந்த போது கூட பின்னொரு நாளில் தனது கல்லூரி சான்றிதழ்கள் தேவைப்படலாம் என்று பத்திரமாக பூட்டி வைத்தே சென்றிருக்கிறார். துறவறம் என்றதும் அவசரப்பட்டு எரித்துவிடவில்லை. பிறகு சென்னை வந்து ஆங்கில அறிவைக் காண்பித்து, ஊரிலிருந்து சான்றிதழ்களை வரவழைத்து பேராசிரியர் ஆகி, அமெரிக்கா வரை வகுப்பு எடுக்க சென்றிருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆகவே யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?

தனது குழந்தை குட்டிகளோடு ஒரு தனித்தீவில் வாழும் அளவுக்கு காசு இருந்தும், ரீல் லைஃபில் மக்களை எப்படி சந்தோஷப்படுத்துகிறாரோ, அதை ரியல் லைஃபில் செய்வதுதான் அடுத்த 30 வருட கனவு என்கிறார் சிம்பு. இந்த பெரிய மனது எத்தனை பேருக்கு வரும்? இதனால் அரசியலுக்கு அவர் அடி போடுகிறாரோ என்ற கேள்விக்கு தனக்கு அரசியல் பற்றி தெரியாது, புரியாது என்று சுயமோகன் போல பணிவுடன் கூறுகிறார்.

சினிமாவை மீறி மக்களுக்கு என்ன பண்ணலாம் என்று அவர் யோசிப்பதை கொச்சைப்படுத்த கூடாது என்பது சிம்பானந்தாவின் வேண்டுகோள். அதனால்தான் “உங்க எல்லோருக்குள்ளும் ஒரு லீடர், குரு இருக்கார். அவர் சொல்றதைக் கேளு! உனக்கெதுக்கு சிம்பு? ரசிகர்கள் என்னை பின்பற்ற வேண்டாம், சொல்லிட்டேன்” என்கிறார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை நினைவுபடுத்தும் இந்த மேதமைத்தனம் இத்தனை சிறிய வயதிலா என்று (ஆச்சரிய)படுத்துகிறார்.

சிம்புவின் படங்களை பார்த்து ரசிகர்கள் ஜன்ம விமோச்சனம் அடைந்தாலும், அவரென்னவோ சிவாஜி படத்தில் ரஜினி ஒரு ரூபாய் காசோடு டீக்கடையில் இருப்பாரே அப்படியொரு மனநிலையில்தான் இருக்கிறாராம். அதனால்தான் சமூக பிரச்சினைகளை பற்றி அற ஆவேசத்துடன் கேட்கிறார்.

மதம், நாடு, இனம் புரிந்தவர்கள் மனிதனை புரியாமல் போனதேன்? ஒரே நாடுன்னாலும் தண்ணி கொடுக்காமல் போவது ஏன்? நடு ரோட்டில் குழந்தைகளை வெட்டி, பாம் போடுகிறான், மனிதர் மீதான அன்பு எங்கே போனது? என்று அந்த கேள்விகள் குங்குமம் இதழில் ஹன்சிகாவின் குறுஞ்சிரிப்பு படத்திற்கு கீழே அணுகுண்டாய் வெடிக்க காத்திருக்கின்றன.

ரஜினி இமயமலையில்
பிறப்பும் இறப்பும் கடந்த முக்கால பாபா சாமியாரை பார்த்து வியந்ததும் பிறகு அதையே பாபா படமாக்கி – அது நட்டமானாலும் – சிறப்பு செய்தது ஊரறிந்த கதை.

வாழ்வில் கிடைத்தது திகட்டினால்தான் இப்படி ஊருக்கு உபதேசம் செய்வார்கள் என்று பொதுப்புத்தியில் இருந்து நா.கதிர்வேலன் கேட்கும் போது அதிரடியாக பதில் வருகிறது: “நான் பழைய சிம்பு இல்ல. சினிமாவில் நடிச்சாலும் ரேசில் இல்லை. ஏன்னா……நான் ஆன்மிகத்தில்இருக்கேன்”. போட்டி மனப்பான்மையை துறக்காமலேயே இந்த சிந்தனையை எதிர்பார்த்து, அது வந்தால்தான் முதலாளித்துவம் சுபிட்சமாகும் என்று கே.ஆர்.அதியமான் கரடியாக கத்துகிறாரே அவர் முதலில் சிம்பானந்தாவிடம் சீடனாக சேர்ந்து இந்த சூட்சுமத்தை கற்க வேண்டும்.

இப்படி ஓவராக ஆன்மிகம் பேசும் சிம்பானந்தாவை திருத்த வேண்டும் என்ற கொலைவெறியோடு அடுத்த கேள்வி “திருமணம் செய்தால் சரியாகி விடுமா” என்று வருகிறது. கடவுள் இப்படி ஆன்மிக ஞானத்தை கொடுத்த பிறகே வந்த துணையையும் வேண்டாமென்று சொன்னதாக புன்னகைக்கிறார் சிம்பானந்தா.

மகாபலிபுரம் பங்களா காக்டெயில் பார்ட்டிகளுக்கு புதுப்புது ஜோடிகளோடு சென்று வந்த சிம்பு திடீரென்று இமயமலை போனது ஏன்?

அந்த பயணம்தான் அவரை சிம்பானந்தாவாக மாற்றியிருக்கிறது. தான் யார் என்ற தேடல், எல்லாமும் இருந்து எதுவுமில்லாததான தனிமை, மத அறிவு அனைத்தும் இமயம் அருளிய ஞானம். இமய மலையெங்கும் துளி அடையாளம் கூட இல்லாமல் திரிந்தவர்தான், பிறகு வெறும் சிம்புவில் ஆனந்தம் இல்லை என்று தெளிந்திருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து இமயம் சென்றவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள். ஒருவர் ரஜினி, இரண்டாமவர் ஜெயமோகன் எனப்படும் சுயமோகன், மூன்றாமவர் சிம்பு எனப்படும் சிம்பானந்தா.

புகழின் உச்சியில் இருக்கும் போது சிம்புவுக்கு நேர்ந்த அலுப்பு ஏற்பட்டு ரஜினி இமயம் சென்று ரிஸ்க் எடுத்து பயணம் செய்த கதைகளும், காட்சிகளும் ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முக்கியமாக அவர் பிறப்பும் இறப்பும் கடந்த முக்கால பாபா சாமியாரை பார்த்து வியந்ததும் பிறகு அதையே பாபா படமாக்கி – அது நட்டமானாலும் – சிறப்பு செய்ததும் ஊரறிந்த கதை.

சுயமோகனைப் பொறுத்த வரை பத்து வருடம் மகாபாரதம் எழுதுவதாக அறிவித்த போது ஆதரித்த மொக்கைகள் பிறகு அவரை கேட்பாரின்றி கைவிட்டு விட்டன. ஊடகங்களில் மகாபாரதத்தை தினமும் 50,000 பேர் படிப்பதாக பிரச்சாரம் செய்தும் ஃபேஸ்புக்கில் ஐந்து பேர் கூட பகிரும் நிலை இல்லை. இந்நிலையில்தான் அவர் ரிஸ்க்கெடுத்து ஜம்முவுக்கு புல்வெளி பயணம் போனார், சமீபத்தில்.

ஜெயமோகன் ஜம்மு
இந்தியாவிலேயே இப்படி புல்வெளிப் பயணம் எனும் மாபெரும் ரிஸ்க் எடுத்து ஜம்முவிற்கு சென்ற முதல் எழுத்தாளர் சுயமோகன்தான்

காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், காணாமற் போயும், இலட்சக்கணக்கான மக்கள் அடக்குமுறையில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு அது விதிக்கப்பட்டது. அதை ஒரு புல்வெளிப் பயணத்தோடு சென்று கண்டறிவது மிகப்பெரும் சவால். ஜம்முவில் ஒப்பீட்டளவில் பிரச்சினைகள் இல்லை என்றாலும் ஜம்முவின் எல்லையில் இருக்கும் காஷ்மீரப் பகுதிக்குள் வேலை நிறுத்தம் நடந்த நாளில் எந்த காயமோ, குண்டுவெடிப்போ இல்லாமல் சென்று மீண்ட சுயமோகனுக்காக இங்கே அவரது அடிப்பொடி அன்பர்கள் மாவிளக்கு யாகமெல்லாம் நடத்தியிருக்கின்றனர்.

இந்தியாவிலேயே இப்படி புல்வெளிப் பயணம் எனும் மாபெரும் ரிஸ்க் எடுத்து ஜம்முவிற்கு சென்ற முதல் எழுத்தாளர் சுயமோகன்தான் என்று விஷ்ணுபுரம் வரலாற்று நிறுவனம் இணையத்தில் பதிவு செய்திருக்கிறது. அவர் மீண்டு வந்தது காஷ்மீர் மக்களின் கருணையா இல்லை மாவிளக்கின் பவரா என்று விவாதிக்காமல் இந்த வீரத்தை போற்றும் அதே நேரத்தில்…………………………..?

ரஜினியின் இமயப் பயணத்தை வணிக ஊடகங்கள் பதிவு செய்தன. சுயமோகனது பயணத்தை ஜெயமோகன்.இன் தளமும், விஷ்ணுபுரம் வட்டமும் பதிவு செய்திருக்கின்றன.

ஆனால் நடிகர் சிம்பு, ஞானி சிம்பானந்தாவாக மீண்ட அந்த இமயப்பயணத்தை மட்டும் இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. இங்கேதான் சிம்பானந்தா ஜம்மென்று நிற்கிறார். அவருக்கு நிகர் எவருமில்லை.

பாலஸ்தீனம் – உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !

6

பாலஸ்தீனம் – உக்ரைன்: மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசு அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்து நடந்துவரும் இப்போரில் இதுவரை ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசா பிராந்தியத்தின் தெருக்கள் எங்கும் ரத்த ஆறு ஓடுகிறது. ஆயிரத்துக்கும் மேலான தடவைகளில் டன் கணக்கில் பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளைக் கொண்டு வான் தாக்குதலை நடத்தி மசூதிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் அனைத்தின் மீதும் பயங்கரவாதத் தாக்குதலை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. இடிபாடுகளின் நடுவே வெள்ளைக் கொடி ஏந்தி நின்ற ஒரு பாலஸ்தீன குடும்பத்தினர் மீதும், ஐ.நா. மன்றம் ஏற்படுத்தியுள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீதும், தொடக்கப்பள்ளியில் தஞ்சமடைந்த மூவாயிரத்துக்கும் அதிகமானோர் மீதும் காட்டுமிராண்டித்தனமாக வான் தாக்குதலையும் பீரங்கித் தாக்குதலையும் நடத்தி மனித உணர்வற்ற மிகக் கொடிய காட்டுமிராண்டிகள் தாங்கள்தான் என்பதை இஸ்ரேலிய இனவெறி பாசிச பயங்கரவாதிகள் உலகுக்கு அறிவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனக் குழந்தைகள்
இஸ்ரேலிய பயங்கரவாதம் : காசா பிராந்தியத்தில் கொல்லப்பட்ட பச்சசிளம் பாலஸ்தீனக் குழந்தைகள்

பாலஸ்தீனத்தின் மேலைக்கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஜூன் மாதத்தில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்று கொன்றதற்குப் பதிலடிதான் இத்தாக்குதல் என்று இஸ்ரேல் நியாயவாதம் பேசுகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்போ இதர பாலஸ்தீன அமைப்புகளோ தாங்கள் இக்கொடுஞ்செயலில் ஈடுபடவில்லை என்றே மறுத்து வருகின்றனர். இருப்பினும், மூன்று இஸ்ரேலியர்களைக் கொன்றுவிட்டார்கள் என்ற நொண்டிச்சாக்கை வைத்து ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டும் நோக்குடன் இப்போரை நடத்தி வருகிறது, இஸ்ரேல்.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரும் மேற்குக் கரை பகுதியில் ஃபதா அமைப்பினரும் பிரிந்து பாலஸ்தீன சுயாட்சி நிர்வாகத்தை நடத்திவந்த நிலையில், ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களுக்கும் ஐக்கியப்பட்ட சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்குவதெனத் தீர்மானித்து, கடந்த ஏழாண்டுகளாகப் பிளவுபட்டிருந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரும், ஃபதா அமைப்பும் ஒன்றிணைவது என்று கடந்த 2014 ஏப்ரலில் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்னும் ஆறு மாதங்களில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதிகளில் புதிய தேர்தல் நடத்தவும் இவ்விரு அமைப்புகளும் தீர்மானித்தன. ஆனால், பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியில் பாலஸ்தீன அமைப்புகளிடையே ஒற்றுமை நிலவக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டமாக உள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியுடன், பெயரளவிலான இந்த சுயாட்சி உரிமையைக் கூட செயல்படுத்தவிடாமல் இதுவரை அவை தடுத்துவந்தன. இதனாலேயே தற்காலிகமாக ஒரு ஒற்றுமைக்கு வந்து ஹமாஸ் அமைப்பும் ஃபதா அமைப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாளே (ஏப்ரல் 24) காசா பிராந்தியத்தில் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் எச்சரித்தது. அதன் தொடர்ச்சியாகவே கடந்த ஜூலை 8-ஆம் தேதியிலிருந்து மிகக் கொடியஇ னப்படுகொலைப் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் இந்த போர்த்தாக்குதலுக்கு ஆதரவாகவே நிற்கின்றன.

பாலஸ்தீன கட்டிடங்கள்
இஸ்ரேலிய போர்த் தாக்குதலில் நொறுங்கிப் போனவை பாலஸ்தீனர்களின் கட்டிடங்கள் மட்டுமா?

குடிநீர், மருத்துவம், மின்சாரம், எரிவாயு, வேலை வாய்ப்பு, வர்த்தகம் முதலான அனைத்துக்கும் முற்றாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் காசா பிராந்தியம் இருத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கே மத்தியதரைக்கடலும், இதர அனைத்து திசைகளிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளும், தெற்கே இஸ்ரேலுக்கு அனுசரணையாக உள்ள எகிப்து நாடும் – என எந்த வழியிலும் ஆதரவற்ற சூழலில்தான் பாலஸ்தீனர்கள் உள்ளனர். காசா பிராந்தியத்துக்குள்ளேயேதான் பாலஸ்தீனர்கள் தமது பிழைப்பையும் இதர அத்தியாவசியத் தேவைகளையும் தேடிக் கொள்ள வேண்டும் எனுமளவுக்கு, திறந்தவெளி சிறைச்சாலையாகவே இப்பகுதி உள்ளது. போதாக்குறைக்கு காசா பிராந்தியத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சுவரையும் இஸ்ரேலிய இனவெறி அரசு அரசு எழுப்பியுள்ளதால், பாலஸ்தீனர்கள் பிழைப்புக்காகக் கூட அச்சுவரைத் தாண்டி அனுமதியின்றிச் செல்ல முடியாது. இதனால் பாலஸ்தீனர்கள் சுரங்கங்களை அமைத்து இஸ்ரேலியப் பகுதிகளுக்குச் சென்று பிழைப்பைத் தேடுவதும், அதேபோல எகிப்து நாட்டுக்கு சுரங்க வழியாகச் சென்று கூலிக்கு உழைத்து அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்து வருவதும் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இதைத்தான் பாலஸ்தீனர்கள் வீடுகளுக்குள்ளேயே சுரங்கம் அமைத்து வெடிகுண்டுத் தாக்குதல் தொடுப்பதாகவும் அவற்றைத் தகர்ப்பதற்காக வீடுகள் மீது தாக்குதலை நடத்த வேண்டியிருப்பதாகவும் நியாயப்படுத்துகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் இயக்கத்தினர் தற்போது நடத்திய தற்காப்புத் தாக்குதலில் இதுவரை 4 இஸ்ரேலிய சிவிலியன்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர். இதை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தும் பயங்கரவாதப் போர் என்று இஸ்ரேலும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் சித்தரிப்பதை யாராவது நம்ப முடியுமா?

இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வாய்திறக்காத அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், கடந்த ஜூலை 17-ஆம் தேதியன்று உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு அதில் பயணித்த 283 பயணிகள் கொல்லப்பட்டதும் ஆவேசத்துடன் அக்கொடுஞ்செயலுக்கு எதிராகக் கண்டனத்தைத் தெரிவித்தன. விமானம் விழுந்து நொறுங்கிய இடமான டொனெட்ஸ் பிராந்தியத்தில் ரஷ்யர்களே அதிகமாக இருப்பதாலும், இவர்கள் உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணையும் நோக்கத்துடன் போராடி வருவதாலும், இவர்களுக்கு ரஷ்ய அரசு ஆதரவளிப்பதாலும் இந்த விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள்தான் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள் என்று அமெரிக்கா உடனடியாகக் குற்றம் சாட்டியது.

10-gaza-cartoonஅமெரிக்கா சொன்னால் அதற்கு அப்பீல் ஏது? அதைத் தொடர்ந்து ரஷ்ய வல்லரசானது மனிதகுலத்துக்கு எதிரான கொடிய குற்றங்களில் ஈடுபடுவதாக அமெரிக்க விசுவாச மேலை ஏகாதிபத்தியங்களும் குற்றம் சாட்டின. “இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்கான ஆயுதங்களை கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யாதான் வழங்கியுள்ளது” என்று சாடினார், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி. “தண்டனை ஏதுமின்றி குற்றங்களில் ஈடுபடும் ரஷ்யா” என்று தலைப்பிட்டு, அமெரிக்காவின் பிரபல வார ஏடான ‘டைம்’ பரபரப்பாகக் குற்றம் சாட்டியது. ரஷ்யா இதனை மறுத்து, முழுமையான விசாரணைக்கு முன்வந்த போதிலும், ஆதாரமின்றிக் குற்றம் சாட்டுவதை சீனா கண்டித்த போதிலும் கோயபல்சு பாணியில் ஏகாதிபத்தியவாதிகள் தொடர்ந்து ரஷ்யா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விமானத்தை கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டுவீழ்த்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. குற்றம் சாட்டப்படும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் விழுந்து நொறுங்கிக் கிடந்த விமானத்திலிருந்து கருப்புப் பெட்டியை (விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமிடையிலான தகவல்களைப் பதிவு செய்யும் கருவியை) மீட்டெடுத்து விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். தாங்கள் விரும்புகிற திசையில் இந்த விசாரணை அமைய வேண்டுமென்பதற்காகவே விபத்து நடந்த உக்ரைனில் அல்லாமல் பிரிட்டனுக்கு இந்தக் கருப்புப் பெட்டி அனுப்பப்பட்டது. உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஐ.நா.வில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ராணுவக் கருவிகள் மற்றும் உயர்தொழில்நுட்பச் சாதனங்கள் ஏற்றுமதி செய்வதற்கும், ஐரோப்பிய நிதிச் சந்தைகளை ரஷ்ய வங்கிகள் தொடர்பு கொள்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று தொழில் வளர்ச்சியடைந்த பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு (ஜி-7) எச்சரிக்கிறது.

பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்படுவதென்பது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே அமெரிக்கா இத்தகைய கொடுஞ்செயலைச் செய்திருக்கிறது. இஸ்ரேலும் செய்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படிக் குற்றம் சாட்டி உடனடியாக தடைகள் விதிப்பதும் அந்நாட்டைத் தனிமைப்படுத்துவதும் நடக்கவில்லையே, அது ஏன்? இப்படியொரு பொதுக்கருத்து திட்டமிட்டே உருவாக்கப்படவில்லையே அது ஏன்? எவ்வாறு பேரழிவுக்கான ஆயுதங்களை சதாம் உசைன் வைத்திருந்தார் என்று பொய்க்குற்றம் சாட்டி ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டதோ, அதேபோல இப்போது ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்தி அதைக் காட்டுமிராண்டி அரசாகச் சித்தரிக்கிறது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். பாலஸ்தீனப் படுகொலைகளை மறைக்க இப்படியொரு சதி அரங்கேற்றப்பட்டு ரஷ்யா நோக்கி உலகின் பார்வை திரும்புவதற்காகவே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் இப்படியொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது ஆதாரங்களற்ற ஊகமாகத் தோன்றினாலும், நடந்தேறும் நிகழ்வுகள் இந்தத் திசையில்தான் செல்கின்றன.

மலேசிய விமானம்
சுட்டுவீழ்த்தப்பட்டு 283 பயணிகளைப் பலிகொண்ட மலேசிய விமானம் உக்ரைனில் விழிந்து கிடக்கும் கோரம்

ரஷ்ய வல்லரசின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவளத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தவும், அதன் எரிவாயு விநியோகத்தையும் அதன் வழியிலான ரஷ்யாவின் பிராந்திய செல்வாக்கையும் தடுத்து முடக்கும் நோக்கத்துடனும் கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றின. அப்பட்டமான முதலாளித்துவப் பாசிச குற்றக் கும்பலின் ஆட்சியை நிறுவி ரஷ்ய செல்வாக்கிலிருந்து உக்ரைனைப் பிரித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்தன.

“ரஷ்ய அதிபர் புடினது விமானத்திலுள்ள மூவண்ண டிசைனும் மலேசிய விமானத்திலுள்ள மூவண்ண டிசைனும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருக்கின்றன. மலேசிய விமானம் புறப்படும் சமயத்தில்தான் புடினும் தனது விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவரது விமானத்தைத் தாக்கும் நோக்கில் உக்ரைனிலுள்ள அமெரிக்கக் கூலிப்படைகள் அதே போன்ற தோற்றத்திலுள்ள மலேசிய விமானத்தைத் தாக்கியிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. ஏனெனில், உக்ரைனில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து அப்போதிருந்தே சி.ஐ.ஏ. உளவாளிகளும் “பிளாக்வாட்டர்” எனப்படும் தனியார் நிறுவனத்தின் கூலிப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டு ரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரேனிய நகரங்களைத் தாக்கி வந்துள்ளன. இந்நிலையில், இந்த விமானத்தை இந்தக் கூலிப்படைகள் தாக்கியிருப்பதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. இருப்பினும், “ஐயோ, பயங்கரவாதம்” என்று ஒப்பாரி வைத்து ரஷ்யா மீது வீண்பழி சுமத்தி, தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த இன்னுமொரு வாய்ப்பாக இவ்விமானத் தாக்குதலை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதே உண்மை.

உக்ரைனில் விமானம் விழுந்து நொறுங்கி அதில் பயணித்த அனைவரும் மாண்டுபோனதும் கண்ணீர் வடிக்கும் ஏகாதிபத்திய உலகம், காசா பிராந்தியத்தில் கொத்துக்கொத்தாக பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உக்ரைன் விமானத்தில் பயணம் செய்தவர்களைப் பற்றிய விவரங்களையும் அவர்களது வாழ்க்கைக் கதைகளையும் படங்களுடன் வெளியிட்டு உலக மக்களின் கோபத்தை ரஷ்யாவுக்கு எதிராகத் திருப்பும் ஏகாதிபத்திய ஊடகங்கள், காசா பிராந்தியத்தில் விளையாட்டுப் பொம்மையுடன் இறந்து கிடக்கும் குழந்தைகளைப் பற்றிய செய்திகளைக் கூட வெளியிட முன்வரவில்லை. உக்ரைன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைப் பற்றிய விவரமாவது இருக்கிறது. ஆனால் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரை உலகுக்கு முழுமையாகத் தெரியவில்லை.

தாக்குதலை ரசிக்கும் யூதர்கள்
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் வான்வழிப் போர் தாக்குதலைக் குன்றுப் பகுதியில் சோபாக்களில் அமர்ந்து கொண்டு ரசிக்கும் யூத இனவெறியர்களின் வக்கிரம்.

உக்ரைனில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் காசா பிராந்தியத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி கூட இல்லை. “போர்த் தாக்குதலால் வெளியேவர முடியாத நிலையில், கொல்லப்பட்டோரின் பிணங்கள் அழுகத் தொடங்கின; ஒரு சிலர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்து சவ அடக்கத்தைச் செய்துவிட்டு ஓடினோம்” என்று விம்முகிறார் ஒரு பாலஸ்தீனர்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதரவின் காரணமாக, இதுவரை உலக அரங்கில் தனிப்பட்டிருந்த யூத இனவெறியர்கள், இப்போது பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொலைவெறியாட்டத்தை ஆதரித்து பாரீசு நகரில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமளவுக்குத் துணிந்துள்ளனர். போர்த் தாக்குதல் நடக்கும் காசா பிராந்தியத்தை ஒட்டிய குன்றுப் பகுதிகளில் சொபாக்களில் அமர்ந்து கொண்டு நொறுக்குத் தீனி தின்று கொண்டு யூத இனவெறியர்கள் இப்போர்த்தாக்குதலை வாண வேடிக்கை போல வக்கிரமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இது ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்தான் என்று குற்றம் சாட்டும் ஏகாதிபத்தியவாதிகள், அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போர்த் தாக்குதலை ஒரு மாத காலமாக இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாதிகள் நடத்திக் கொண்டிருந்த போதிலும் அந்நாட்டின் மீது கண்டனம் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. உலகெங்கும் இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெருகத் தொடங்கி உலகின் பொதுக் கருத்து வலுப்பெறத் தொடங்கிய பிறகே ஐ.நா. மன்றம் சடங்குத்தனமாக ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதுவும் கூட இஸ்ரேலைப் போர்க்குற்றவாளியாகச் சித்தரிக்காமல், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருதரப்பினரும் போர்த்தாக்குதலைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறுதான் கோரியது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி செய்து ஆதரித்துவருவதாகக் குற்றம் சாட்டி ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகம், இஸ்ரேல் மீது இப்படியொரு பொருளாதாரத் தடை விதிக்க முன்வரவில்லை. அரபு நாடுகள் இஸ்ரேலின் பயங்கரவாதப் போரைக் கண்டும் காணாமல் இருந்த போதிலும், எல்சால்வடார், பிரேசில் சிலி, ஈக்வடார், பெரு முதலான 5 தென்னமெரிக்க நாடுகள் இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது நாட்டின் இஸ்ரேலியத் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டு எதிர்ப்பைக் காட்டியுள்ளன. ஆனால், மோடி அரசு இன்னமும் இஸ்ரேலை தனது நட்பு நாடாகக் கொண்டாடுகிறது. இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டுமென்று ஆக்கிரமிப்பாளனையும் ஆக்கிரமிப்பை எதிர்த்து தற்காத்துக் கொள்பவனையும் வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் இந்துத்துவ மோடி அரசு, தான் யார் பக்கம் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளது.

இந்நிலையில், 1967 நவம்பரில் போடப்பட்ட ஐ.நா. தீர்மானத்தின்படி, பாலஸ்தீன தாயகத்தின் முழுஉரிமையை அங்கீகரித்து, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலை முற்றாக வெளியேறக் கோரியும்,பாலஸ்தீன மக்கள் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்திவரும் இஸ்ரேலிய இனவெறி அரசையும், அதற்குத் துணை நிற்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களையும் அவற்றின் கைக்கூலி மோடி அரசையும் எதிர்த்துப் போராடுவதும், குறிப்பாக, உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவின் கோயபல்சு பாணி பொய்களையும் சதிகளையும் கொலைகளையும் அம்பலப்படுத்தி முறியடிப்பதும்தான் இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது.

– குமார்.
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு

27
ஆர்.எஸ்.எஸ் தலைவன் மோகன் பகவத்

மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகவன் பகவத் பேசியதை “ஏன் இந்துக்களாக இருக்க முடியாது?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்.

mohan-bhagwat-2அதில் “இங்கிலாந்தில் வசிப்போர் ஆங்கிலமும், ஜெர்மனியில் வசிப்போர் ஜெர்மனியர்களாகவும், அமெரிக்காவில் வசிப்போர் அமெரிக்கர்களாகவும் இருக்கும் போது, இந்தியாவில் வசிப்போர் ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? அடுத்த 5 ஆண்டுகளில் நாம் இந்த நாட்டில் இந்துக்களிடையே சமத்துவத்தை உருவாக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும். அனைத்து இந்துக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி நாளில் நடந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பொன் விழாவில் மோகன் பாகவத் பேசிய”தாக பூரிக்கிறது தினமலர். தாமரை நாடாண்டால் காவி வெறியர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்.

இது ஒன்றும் புதிதல்ல. சாவர்கர், ஹெட்கேவார், கோல்வால்கர் முதல் இராம கோபாலன், அசோக் சிங்கால் வரை ஆயிரக்கணக்கான இந்துமதவெறியர்கள் அனைத்து மொழிகளிலும் இந்த மிரட்டலை பேசாத நாளில்லை. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆளும் காலத்தில் சட்டபூர்வ இந்துராஷ்டிர அமலாக்கம் நடந்து வரும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருப்பது வெறும் கருத்தல்ல. அமலுக்கு வரும் ஒரு துவக்கம்.

ஏன் இந்துக்களாக இருக்க முடியாது? என்பது கேள்வியல்ல, ஏற்றுக் கொள்ளாவிட்டால் தண்டனைக்குரிய ஒரு குற்றத்தினை அறிவிக்கும் மிரட்டல். இங்கிலாந்தில் ஆங்கிலம் பேசும் போது இந்தியாவில் சமஸ்கிருதமோ இல்லை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியோதான் பேச வேண்டும் என்பதும், அதற்கான துறை சார் உத்திரவுகளை பாஜக அரசு பிறப்பித்திருப்பதும் வேறு வேறு அல்ல. மற்ற இந்திய மொழிகள் அவாளின் புனித மொழிக்கு கட்டுப்பட்டே காலந்தள்ள வேண்டும் அல்லது ஒழிந்து போக வேண்டும்.

அமெரிக்காவில் வாழ்பவர்கள் அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படுவது ஒரு இடம் சார்ந்த நாட்டின் குறியீடே அன்றி பண்பாடு, மொழி, சமூகவியல், மதம் சார்ந்த ஆதிக்கத்தின்பாற்பட்டதல்ல. இத்தனைக்கும் அங்கே கிறித்தவமே அதிகாரப்பூர்வமற்ற அரச மதமாகவம், வெள்ளை நிறவெறியே அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செய்யும் நிலைமை இருந்தாலும் சட்டபூர்வமாகவும், பொதுப்புத்தியின் கருத்தளவிலும் அங்கே பெரும்பான்மையினரின் மதம் சார்ந்த பண்பாடு “அமெரிக்கனிசமாக” முன்னிறுத்தப்படுவதில்லை.

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் பேசும் இந்து வெறியைப் போன்றே ஆரிய இனவெறியை உயர்த்திய ஹிட்லரும் பேசினான். ஆனால் அதை ஜெர்மனிய மக்கள் இன்று வரையும் ஒரு குற்றவியல் கொடூரமாகவே கருதுகிறார்கள். அதனால்தான் புதிய நாசிசக் கட்சிகள் கூப்பாடு போடும் போதெல்லாம் பெரும்பான்மையான ஜெர்மனிய மக்களும் அவர்களை எதிர்த்து போராடுகிறார்கள். இந்தியாவிலோ அந்த நாசிசம் ஆண்டு கொண்டிருக்கிறது. இதன்படி ஜெர்மனியோடு இந்தியாவை ஒப்பிட்டால் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. சரியாகச் சொன்னால் இந்துமதவெறியர்களின் பாசிசத்தை கண்டு உலக நாடுகள் காறித் துப்பலாம். இந்த கேவலத்தின் விளைவால்தான் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது.

இந்துமதத்தின் எந்த அம்சங்களையும் அறியாமல், ஏற்காமல் வாழும் பழங்குடி மக்களும், வருண அமைப்பின் வெளியே தூக்கி எறியப்பட்ட பஞ்சம மக்களும், சாதிக்குள்ளே அடிமைகளாக இழிவு படுத்தப்படும் சூத்திர மக்களும் வாழும் இந்தியாவில் யார் இந்து? அவாள்களும், ஷத்திரிய, வைசிய, பனியா சாதிகளை தவிர்த்துப் பார்த்தால் இந்தியாவில் இந்துக்கள் அல்லாதோர்தான் பெரும்பான்மையினர்.

‘சூத்திர’ பத்திரிகையான தினத்தந்தி, மோகன் பகவத்தின் பேச்சை சர்ச்சை என்று தலைப்பில் போட்டிருந்தாலும் உள்ளே அவர் பேசியதை இப்படிக் குறிப்பிட்டிருக்கிறது.

“இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்வா (இந்து மதம்) அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர்களையும் உள்ளடக்கிய மதம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.எல்லா இந்துக்களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்”.

இந்த சமத்துவத்தை ஏற்காதோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் குடும்ப இயக்கங்களில் இருக்க முடியாது என்று ஏன் அமல்படுத்தவில்லை? தீண்டாமையை ஏற்காதவன் மட்டுமே காங்கிரசில் இருக்க முடியும் என்று அறிவிக்க முடியுமா என்று காந்திக்கு சவால் விடுத்தார் அம்பேத்கர். அந்த சவாலை காந்தி முதல் சங்க பரிவாரங்கள் வரை இப்படித்தான் கள்ளத்தனமாக எதிர் கொள்கிறார்கள்.

எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்? ஒரு வேளை கிராமங்களில் அப்படி இல்லை என்றால் அந்த இல்லாமைக்கு என்ன காரணம்?

நிலவுடைமையிலும், பொருளாதாரத்திலும் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் தலித் மக்களை விடுவிக்காமல் இந்த சமத்துவம் சாத்தியமில்லை. இது இந்து மதவெறியர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. ஆனால் விரும்பாத ஒன்று. காரணம் சங்க வானரங்கள் அனைத்தும் கொள்கையில் மட்டுமல்ல, கட்டமைப்பிலும் ஆதிக்க சாதிகளை சார்ந்தே உயிர் பிழைத்து வருகின்றன. தேவைப்படும் போது சிறுபான்மை மற்றும் சூத்திர-தலித் மக்களின் உயிரை எடுத்தும் வருகின்றன.

சென்னையில் இவர்கள் நடத்திய ஆன்மீக கண்காட்சியில் தலித் மக்களை ஒடுக்கும் எல்லா சாதிவெறியர்களுக்கும் இடம் கொடுத்துவிட்டு, உத்திர பிரதேசத்தில் ஜாட் சாதிவெறியை முசுலீம்களுக்கு எதிராக திருப்பி இந்துவெறியாக மாற்றி தேர்தலில் வெற்றி பெற்று இரத்தம் சுவைத்த ஓநாய்கள் இப்படி வெட்கமில்லாமல் சைவப்புலிகளாக நாடகமிடுகின்றன.

மகாராஷ்டிரத்திலும், ஹரியானாவிலும் வர இருக்கும் சட்டசபைத் தேர்தல்களில் தலித்களின் வாக்குகளை அள்ளுவதற்குத்தான் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வாய் தனக்கு எதிரான சமத்துவத்தை வேண்டா வெறுப்பாக கதைக்கிறது. மராட்டியத்தில் இந்துமதவெறியர்களோடு தலித் கட்சிகளை கூட்டணியில் இணைப்பதோடு (இது ஏற்கனவே நடக்கும் ஒன்றுதான்) மக்களின் வாக்குகளை கவருவதற்கும் இந்த நாடகம் தேவைப்படுகிறது.

அரியானா எனும் இந்தி பேசும் மாநிலத்தில் தலித்துக்களுக்கு எந்த இடமும் அரசியலில் இல்லை என்றாலும் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருக்கும் அவர்களை, கொத்தாக கைப்பற்றுவதற்கும் இந்த நாடகம் அரங்கேறுகிறது.

முசுலீம்களை எதிர்ப்பதும், ஆதிக்க சாதிவெறியை ஆதரிப்பதும் இந்தியாவெங்கும் இருந்தாலும் இப்படி தலித் மக்களை அரவணைப்பது போல நடிப்பது ஆர்.எஸ்.எஸ்-க்கு தேவைப்படுகிறது. ஆனால் அது நாடகமென்பதை தினமலரின் தலைப்பு சொல்லும் போது அரவிந்தன் நீலகண்டன் போன்று இதயத்தில் ஆதிக்க சாதிவெறியான இந்துத்துவத்தை மறைத்து விட்டு தலித் வேடமிடும் கபடதாரிகள் புரட்சி என்று வரவேற்பார்கள்.

போர்த்திக் கொண்டு படுத்தாலும், படுத்துக் கொண்டு போர்த்தினாலும் இந்து மதவெறியர்களின் ஆன்மா சாதிவெறி என்பதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை.  தேவையெல்லாம் அதை முறியடிப்பதே!

மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

4

யர் ரக உணவு விடுதிக்கு குடும்பத்துடன் சென்று வயிறுமுட்டத் தின்றுவிட்டு, கல்லாவுக்கு வந்து “கையில் காசில்லை” என்று சொன்னால் என்ன நடக்கும்? அங்கேயே தரும அடி கிடைக்கும். அப்புறம் போலீசிடம். பிறகு கம்பியும் எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவு ஏன், காசோலை கொடுத்து வங்கியில் பணமில்லை என்று திரும்பி வந்தால்கூட, சிறைத்தண்டனை உண்டு.

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட கரும்பு விவசாயிகள் அறந்தாங்கி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஆனால், விவசாயிகளிடம் கரும்பை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு, “காசில்லை” என்று கையை விரிக்கிறார்கள் சர்க்கரை ஆலை முதலாளிகள். பணம் கிடைக்காத விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக கெஞ்சுகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள்; முதலாளிகளிடமிருந்து பைசா கூட பெயரவில்லை. அரசாங்கம் விவசாயிக்குப் பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். அல்லது ஆலையை ஏலம் விட்டு, கடனை அடைக்கச் சொல்ல வேண்டும். வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன் போன்ற கடன்களை வாங்கும் சாதாரண மக்களுக்கு நடப்பது இதுதான். ஆனால் சர்க்கரை ஆலை முதலாளிகள் விசயத்தில் நடப்பது என்ன?

சென்ற ஆண்டில் முதலாளிகள் இந்திய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை அடைப்பதற்காக, முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு 7200 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் கொடுத்தது. அதை வைத்தும் விவசாயிகளின் கடனை முதலாளிகள் அடைக்கவில்லை. இந்த ஆண்டு கடன் பாக்கி ரூ 11,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது மீண்டும் மோடி அரசு முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி வட்டியில்லாக் கடன் கொடுத்திருக்கிறது. ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு டன்னுக்கு ரூ 4200 மானியமும் கொடுத்திருக்கிறது.

“இது போதாது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையின் விலை குறைவாக இருப்பதால் எங்களுக்கு நட்டமேற்படுகிறது” என்று புகார் செய்தார்கள் முதலாளிகள். உடனே, இறக்குமதி சர்க்கரைக்கு 40% வரி விதித்து, உள்நாட்டில் சர்க்கரை விலையை உயர்த்தி முதலாளிகள் இலாபம் பார்க்க வழி செய்து கொடுத்தது மோடி அரசு. வாகனங்கள் பயன்படுத்தும் பெட்ரோலில் 5%-க்கு பதிலாக 10% எத்தனால் கலக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சர்க்கரை முதலாளிகள் உற்பத்தி செய்த எத்தனாலை வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு டன் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, மின்சாரம், எரிசாராயம், மொலாசஸ், எத்தனால், கரும்புச்சக்கை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்கிறார் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டி.என்.பிரகாஷ். முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது வடிகட்டிய பொய்.

“தமிழத்தில் 2012-13-ல் பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இலாபத்தில் இயங்கியிருக்கின்றன. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மாநில அரசு அறிவித்த தொகையையும் சேர்த்து விவசாயிகளுக்கு பைசா பாக்கியின்றி பட்டுவாடா செய்துவிட்டு, 214 கோடி ரூபாய் லாபமும் காட்டியிருக்கிறது” என்று கூறுகிறார் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ரவீந்திரன் (பசுமை விகடன்,10.8.2014) ஒரு கூட்டுறவு ஆலையே இலாபம் பார்க்கும்போது, தங்களை பெரிய நிர்வாகப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் தனியார் முதலாளிகள் தாங்கள் நட்டமடைவதாக கூறுவது அப்பட்டமான கிரிமினல் மோசடியல்லவா?

தமிழக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தரவேண்டிய கடன் பாக்கி 527 கோடி ரூபாய். இதனை 29-ம் தேதிக்குள் கொடுக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார் அமைச்சர் தங்கமணி. ஆனால் அந்தக் காலக்கெடுவுக்குள் ஒரு பைசா கூட வரவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகளைப் பொருத்தவரை, ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய் கொடுத்தாலும், அதில் அவர்களுக்கு 15% தான் மிஞ்சும். ஆனால் டன்னுக்கு ரூ 2250-க்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லித்தான் சென்ற ஆண்டு சர்க்கரை ஆலை முதலாளிகள் கதவடைப்பு நடத்தி காங்கிரசு அரசிடமிருந்து ரூ 7200 கோடியைக் கறந்தனர். இதற்கு மேல் மாநில அரசுகள் பரிந்துரைத் தொகைகளை வழங்குகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு டன்னுக்கு 550 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த பரிந்துரைத் தொகையை முதலாளிகள் தர மறுக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு 50% லாபம் கிடைப்பதை உத்திரவாதப் படுத்தவிருப்பதாக தேர்தல் வாக்குறுதியளித்தார் மோடி. அப்படியானால், கரும்புக்கான உள்ளீடு செலவைக் கணக்கிட்டு அதற்கு மேல் 50% வைத்து ஒரு டன் கரும்பின் விலை தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக என்ன நடந்திருக்கிறது? முதலாளிகளுக்கு ரூ 4200 கோடி கொடுத்த மோடியின் உணவு அமைச்சர் பஸ்வான், “கரும்புக்கு மத்திய அரசு தீர்மானிக்கின்ற விலைக்கு மேல் (2250) மாநில அரசுகள் பரிந்துரை விலையைச் சேர்த்துக் கொடுக்கக் கூடாது” என்று தற்போது அறிவித்திருக்கிறார்.

சர்க்கரை ஆலை முதலாளிகளின் கூலிப்படைதான் இந்த அரசு என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்?

– கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!

1

றிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது பிறந்த நாள் விழாக் கருத்தரங்கம் 16.08.2014 அன்று மாலை 6.00 மணிக்கு வேலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் அகிலன் கருத்தரங்கத்தை தலைமை ஏற்று நடத்தினார். “இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீதான தாக்குதலை மோடி அரசு தீவிரப்படுத்தியுள்ள இன்றைய சூழலில், தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய கால்டுவெல் அவர்களுக்கு இச்சமயத்தில் விழா எடுப்பது என்பது மோடி அரசின் தாக்குதலுக்கு எதிரானதொரு போராட்டத்திற்கு உரம் சேர்ப்பதாகும்” என தனது தலைமை உரையில் எடுத்துரைத்தார்.

தோழர் அகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் அகிலன் தலைமை உரை ஆற்றினார்.

மொழி ஆளுமை-கால்டுவெல்லின் பங்கு” என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் தோழர் ஜோ.சம்பத்குமார் உரையாற்றினார்.

“இராபர்ட் கால்டுவெல்லைப் பற்றி இப்பொழுது பேசமாட்டார்கள். பிற்காலத்தில் இவர் அதிகம் பேசப்படுவார்” என வா.வே.சு அவர்கள் அன்று சொன்னதை நினைவு கூர்ந்தார்.

மெகன்சி, எல்லீசு போன்றோரின் தமிழ் மற்றும் திராவிடம் குறித்த ஆய்வுக் கருத்துக்கள் தமிழின் சிறப்புகளை நிலைநாட்ட அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கு பெரிதும் உதவின. சமஸ்கிருதமே பிற இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்று கல்கத்தாவிலிருந்து வில்லியம் ஜோன்ஸ் என்பவர் முன்வைத்த ஆய்வுக் கருத்துக்களை நிராகரித்து, சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதையும், தமிழ் தனித்தே இருந்ததோடு தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக இருந்தது தமிழே என்பதையும் அறிஞர் கால்டுவெல் அவர்கள் தனது ஆய்வுகள் மூலம் நிறுவியதை தக்க ஆதாரங்களுடன் தனது உரையில் எடுத்துரைத்தார்.

ஜோ சம்பத்குமார்
”மொழி ஆளுமை-கால்டுவெல்லின் பங்கு“ என்கிற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் தோழர் ஜோ.சம்பத்குமார் உரை

சமஸ்கிருதமும்-மொழித் தீண்டாமையும்” என்கிற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் வேலூர் மாவட்டத் துணைத் தலைவர் தோழர். சா.குப்பன் அவர்கள் உரையாற்றினார்.

சிற்பி செய்த கற்சிலைக்கு மந்திரங்கள் ஓதி கருவறையில் அதாவது மூலஸ்தானத்தில் வைத்துவிட்டால் அது தெய்வத்தன்மையை அடைந்து விடுவதாகவும், அதன்பிறகு பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அக்கற்சிலையைத் தொட்டுவிட்டால் சாமி தீட்டாகிவிடுகிறது என்று கூறி சாமியில்கூட தீண்டாமையைத் தோற்றுவித்தார்கள்.

ஒரு முறை திருவையாறு தியாகய்யர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடியதற்காக மேடை தீட்டாகிவிட்டது எனக்கூறி மேடையைக் கழுவியதோடு மந்திரங்கள் ஓதி தீட்டுக் கழித்தார்கள். சமஸ்கிருதம் மற்றும் தெலுங்குக் கீா்த்தனைகளை மட்டுமே அங்கு பாடலாம். தமிழில் பாடுவதற்கு அங்கே அனுமதி கிடையாது. தமிழ் அங்கே தீண்டத்தகாத மொழி.

சா குப்பன்
“சமஸ்கிருதமும்-மொழித் தீண்டாமையும்” என்கிற தலைப்பில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் வேலூர் மாவட்டத் துணைத் தலைவர் தோழர். சா.குப்பன்

ஒரு முறை இராமலிங்கனார் அன்றைய பெரியவாள் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தமிழில் உரையாடிய போது, சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்திலேயே பதிலளித்தாராம். சங்கராச்சாரியாருக்கு நன்றாகத் தமிழ் தெரிந்திருந்தும் உரையாடிய இடம் பூஜை அறை என்பதால் அங்கே தமிழில் பேசக்கூடாது என்பதால்தான் சமஸ்கிருதத்தில் பேசினாராம். பூஜை அறையிலும் தமிழ் தீண்டத்தகாத மொழி.

ஒரு திருமணத்தில், திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர் வராததால் பார்ப்பனச் சிறுவன் ஒருவனை அனுப்பி வைத்தார்களாம். கருமாதியில் ஓதப்படும் மந்திரம் மட்டும்தான் அவனுக்குத் தெரியும் என்பதால் அந்த மந்திரங்களையே திருமணத்திலும் ஓதிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மறைமலை அடிகள், ஓதப்படுவது கருமாதி மந்திரம் என்பதை மக்களுக்குப் புரிய வைத்து திருமணத்தை நிறுத்தியதோடு பிறகு அவரே தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தாராம். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் கருமாதி போன்ற நமது வீட்டு நிகழ்ச்சிகளிலும் தமிழுக்கு இடமில்லை.

வேண்டுதலுக்காக கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.

சமஸ்கிருதத்தை பிறர் மீது மேலும் திணிக்க எத்தணிக்கும் இத்தருணத்தில் அதற்கு எதிரான போராட்டங்கள் தமிழ் மொழியின் விடுதலையோடும் மக்களின் விடுதலையோடும் சேர்ந்த ஒன்றாகக் கருதி நமது போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தோழர் காளியப்பன்
“தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்” என்கிற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் உரை.

கால்டுவெல் அவர்களின் 200-வது நூற்றாண்டு பிறந்தநாள் விழா தமிழகத்தில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். கால்டுவெல் பற்றி கருணாநிதி அறிக்கையோடு நிறுத்திக் கொண்டார். ஜெயலலிதா கால்வெல் சிலைக்கு மாலை அணிவித்து முடித்துக் கொண்டார். திராவிட என்கிற பெயரைத் தாங்கியுள்ள கட்சிகள் அரசியல் பிழைப்புக்காக வயிறு வளர்க்கும் கட்சிகளாக சீரழிந்துவிட்டன. இந்தச் சூழலில் கால்டுவெல் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்வதன் மூலம் மோடி அரசு தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகளை முறியடிப்பதும், தமிழின் சிறப்பை வளர்த்தெடுப்பதும் நமது கடமை என்பதால் நாம் கால்டுவெல் அவர்களுக்கு தமிழகமெங்கும் விழா எடுக்கிறோம்.

14 ஆண்டுகால கடும் உழைப்பிற்குப் பிறகு “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்கிற நூலை வெளியிட்டு, ‘எதிர்காலத்தில் இதனைவிட சிறந்த ஆய்வுகள் தமிழில் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என தனது விருப்பத்தையும் பதிவு செய்தார் கால்டுவெல். ஆனால் அவர் விரும்பியதைப் போன்றதொரு ஆய்வு இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

செழுமையான, வளமையான மொழியைக் கொண்ட மக்கள் பொருளாதார – நாகரிக நிலையில் ஏன் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த போது கண்டறிந்து அதற்கான காரணங்களையும் ஆய்ந்தறிந்து நூல்களை இயற்றினார் கால்டுவெல்.

தென்னிந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று ஒத்திருப்பதையும், அவற்றுக்கெல்லாம் தமிழே தாயாக இருப்பதையும், தென்னிந்திய மக்களிடையே உடல் அமைப்பிலும் ஒற்றுமை இருப்பதையும் கண்டறிந்து ”திராவிட இனம்” என்கிற கருத்தாக்கத்திற்கு கால்டுவெல் வந்தடைந்தார்.

பார்வையாளர்கள்

பிறப்பால் ஏற்றத் தாழ்வற்றவர்களாகவும், சாதி – தீண்டாமை பாராட்டாதவர்களாகவும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்தார்.

பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தால் உட்கிரகிக்கப்பட்ட நிலையில் தமிழ் மட்டும் தனித்து நின்று தனது தனித்தன்மைய நிலைநாட்டியதையும் கண்டறிந்தார். “தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அதற்கொரு குணமுண்டு!” என்கிற கருத்தாக்கத்துக்கு வித்திட்டது கால்டுவெல் அவர்களின் ஆய்வுகள் என்றால் அது மிகையாகாது.

நடுவண் அரசு இந்தித் திணிப்புக்கு முற்பட்டபோதெல்லாம் தமிழகம் மட்டுமே அதற்கெதிரான போராட்டங்களை தீவிரமாக நடத்தியது. அதனால்தான் இன்றும்கூட வட இந்திய கட்சிகள், ஊடகங்கள் நம்மீது ஒருவித வெறுப்பைக் கொண்டுள்ளனர்.

இன்று மீண்டும் பா.ஜ.க. வின் மோடி அரசு

  • இந்தியை மிகத் தீவிரமாக திணிப்பதும்,
  • சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதும்,
  • வேத-இதிகாசங்களில் சொல்லப்படும் வர்ணதர்மத்தை நியாயப் படுத்த முயல்வதும்,
  • கங்கையை மாசுபடுத்தும் அகோரி சாமியார்களையும் ஆலை முதலாளிகளையும் விட்டுவிட்டு கங்கையில் எச்சில் துப்பினால் அபராதம் என அறிவித்திருப்பதும்,
  • இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத ஆர்.எஸ்.எஸ் காரர்களை இந்தியப் பாட நூல் நிறுவனத்தில் உறுப்பினர்களாக நியமித்திருப்பதும்,
  • ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் நூல்களை குஜராத்தில் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பதும்,
  • சாதி அமைப்பு சரி எனப் பேசுவதும்,
  • சனாதன தர்மம் இருந்த போது மக்களிடையே மோதல்கள் இல்லை எனவும்
  • கிருஸ்தவ-இஸ்லாமியர்களின் வருகைக்குப் பிறகே மக்களிடையே மோதல்கள் உருவானதாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்வதும்,
  • தமிழன் – தெலுங்கன்-மலையாளி-வங்காளி என தனித்தனி தேசிய இனங்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது; இந்தியாவில் இருப்பது இந்து என்கிற ஒரே இனம் மட்டும்தான் என பிற தேசிய இனங்களை மறுதலிப்பதும்,
  • விமானம் பற்றிய அறிவியல் இராமாயணத்தில் இருப்பதாகவும்,
  • காந்தாரியின் கருச்சிதைவு பிண்டங்களை பாட்டில்களில் போட்டு நூறு கௌரவர்களை உருவாக்கியது ஸ்டெம்செல் மருத்துவ அறிவியல் மகாபாரதத்திலேயே நிறுவப்பட்டது என கதை அளப்பதும்

வேறு வேறு அல்ல. இவை எல்லாம் வேத – புராண – இதிகாச புரட்டுகளுக்கு அறிவியல் சாயம் பூசி, வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சியே அன்றி வேறல்ல.

மார்க்ஸ் சுட்டிக் காட்டியதைப் போல அன்று கல்வியை மற்றவர்களுக்கு மறுத்ததன் மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பனர்கள் முயற்சித்தார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் இந்தியாவை “மொழிகளின் தொட்டி” என்பார்கள். சமஸ்கிருதத்தை உலக மொழிகளின் தாய் என்கிறார்கள் பார்ப்பனர்கள். இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழித்தோங்கிய கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கெல்லாம் 11-ம் நூற்றாண்டில் வரிவடிவம் பெற்ற சமஸ்கிருதம் எப்படி தாயாக இருந்திருக்க முடியும்?

தரவுகள் மூலம் உண்மையை நிறுவும் ஐரோப்பிய ஆய்வு முறை பார்ப்பனர்களுக்கு உகந்ததாக இல்லை என்பதாலும், ஆங்கிலேயர்களின் கல்வி முறை மனுதர்மக் கல்வி முறைக்கு எதிரானதாக இருப்பதாலும் இவைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்கள் பார்ப்பனர்கள்.

அதனால்தான் வேத-இதிகாசங்களில் உள்ள புரட்டுகளைப் பற்றி எழுதினால் அதற்குத் தடை விதிக்கிறார்கள். இன்று சமஸ்கிருதம் மந்திரங்களில் மட்டுமே ஓதப்படும் வெறும் ஓசை மொழியாக சுருங்கிப் போயுள்ளது. சனாதனக் கருத்துக்களை மக்களிடையே நிலைபெறச் செய்யவும் நடைமுறைக்குக் கொண்டு வரவும் அவர்கள் நம்மீது சமஸ்கிருதத்தை திணிக்க முற்படுகிறார்கள்.

நமக்கு இன்று தேவை மொழிப் பெருமிதம்; தாய்மொழிப் பெருமிதம்; தமிழ் மொழிப் பெருமிதம். தாய் மொழியே சுயமரியாதைக்கு அடிப்படை. தாய் மொழி அழிக்கப்பட்டால் சுயமரியாதையும் சேர்ந்தே அழியும். எனவே, தமிழ்ப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் ஒன்று படுவோம்! ஓரணியில் திரள்வோம்! ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளுக்கு பதிலடி கொடுப்போம். அதற்காக கால்டுவெல் அவர்களின் 200 வது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் உறுதி ஏற்போம்!.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் இராஜன் நன்றி கூறினார்.

தோழர் இராஜன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் இராஜன் நன்றியுரை

கருத்தரங்கத்தையொட்டி பேருந்துகளிலும் நகரின் பல பகுதிகளிலும் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரியான தருணத்தில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டதாக கருத்தரங்கில் பங்கேற்றோர் பாராட்டினர்.

சுவரொட்டிகள், முழக்கங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

2. தஞ்சையில் ஆகஸ்ட் 3, 2014 ஞாயிற்றுக் கிழமை நடந்த கருத்தரங்கம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை

3. ஆகஸ்ட் 17, 2014 அன்று கோவையில் நடைபெற்ற கருத்தரங்கம்

‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய் – அதுவே உயர்ந்த மொழி – தெய்வ மொழி’ என்று நிலை நாட்டப் பட்ட பார்ப்பனியக் கருத்தியலை தகர்த்து, தமிழே தென்னக மொழிகளின் தாய், அழகும் வளமும் நிறைந்து தனித்தியங்கும் வல்லமை பெற்ற செம்மொழி தமிழ் என்பதைத் தக்க வரலாற்று சான்றுகளுடன் ஆணித்தரமாய் நிலை நாட்டிய அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 200-வது ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கம் 17.08.2014 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு சூலூர் (கலங்கல் பாதை), அரிமா சங்கத்தில் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழர் சுரேஷ், ம.க.இ.க நன்றியுரை வழங்கினார்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
கோவை

கொரிய முதலாளிக்கு சுதந்திரம் – காஞ்சிபுரம் தொழிலாளிக்கு சிறை !

3

யாருக்கு-எதற்கு-ஏன் சுதந்திரம் என்பதறியாமல், 68-வது சுதந்திர தினத்தை அப்பாவித்தனமாக கொண்டாடும் மக்கள் ஒருபுறம். மறுபுறம் மோடி முதல் லேடி வரை ஊடகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை வலுக்கட்டாயமாக கொண்டாடச் சொன்ன இந்த சுதந்திரம் உண்மையில் எப்படி இருக்கிறது?

ஹுண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்துக் கொடுக்கும் ஜி.எஸ்.ஹெச் (GSH) என்கிற பன்னாட்டு நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகிறது. பிற பன்னாட்டு கம்பெனிகளைப் போலவே ஜி.எஸ்.ஹெச் -ம் தொழிலாளர் நல சட்டங்களை மயிரளவு கூட மதிப்பதில்லை. அதற்காகத்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜி.எஸ்.ஹெச் ஒரு கொரிய நிறுவனம். இங்கே பணிபுரியும் 3000 பேரில் 300 பேர் தான் நிரந்தரத் தொழிலாளிகள். இந்த 300 நிரந்தரத் தொழிலாளிகள் செய்யும் வேலை ஒன்றென்றாலும் 100 பேரை தனியாகவும், 200 பேரை தனியாகவும் நிர்வாகம் பிரித்து வைத்திருக்கிறது. இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர்களில் 100 பேர் வெவ்வேறு நிறுவனங்களில் இரண்டு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகு இங்கே வேலைக்கு வந்தவர்கள், இயந்திரங்களை இயக்கும் தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள். ஆனால் அவர்களை தொழிலாளர்களாக வரையறுக்காமல் தொழிலாளிகளுக்குரிய உரிமைகளையும், சலுகைகளையும் நிர்வாகம் வழங்க மறுத்து வருகிறது.

மற்றொரு பிரிவினரான 200 பேரை தொழிலாளர்கள் என்று கூறி அவர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்குகிறது. இந்த 200 பேரில் யாருக்கும் தொழில்நுட்ப அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது. ஆனால் இவர்கள் அவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் பெறுகின்றனர், வேலை செய்கின்ற நேரமும் குறைவு. இந்த 200 பேரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். மொத்தத்தில் இவர்கள் தொழிலாளிகள் என்கிற பெயரில் நிர்வாகத்தின் அடியாட்களாக ஆலைக்குள் இருக்கின்றனர்.

இந்நிலையில் 100 பேராக உள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரும் வர்க்க ஒற்றுமையுடன் 2013-ம் ஆண்டு மே மாதத்தில் ‘புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யில் தம்மை இணைத்துக் கொண்டு ஆலையில் சங்கத்தை துவங்கினர். சங்கம் துவங்கிய நாள் முதல் நிர்வாகம் பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருந்தது. 2013 ஜூலையில் தொழிலாளர் உதவி ஆணையரிடம் நிர்வாகத்தின் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே 43 தொழிலாளிகளை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. தொழிலாளர்களை இவ்வாறு நீக்குவது சட்டவிரோதமானது. தொழிற்தகராறு சட்டம் 1947, பிரிவு 33-ன் படி ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது சம்பந்தப்பட்ட தொழிலாளிகள் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, மாறாக அவர்களின் வேலைக்கு உத்திரவாதமளிக்க வேண்டும்.

ஆனால் ஜி.எஸ்.ஹெச் எந்த சட்டத்தையும் மதிக்காமல் தொழிலாளர்களை வீதியில் விட்டெறிந்தது. நீக்கப்பட்ட 43 தொழிலாளிகளும் 10 பேர், 12 பேர் என்று நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு படிப்படியாக வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். முதல் பிரிவு தொழிலாளிகள் வெளியேற்றப்பட்டதும் பு.ஜ.தொ.மு சார்பாக தொழிலாளர் உதவி ஆணையரிடம் இது சட்டவிரோதம் என்றும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான்கு முறையும் “அப்படியா சரி, ஒரு புகார் கொடுங்க” என்று புகாரை வாங்கி வைத்துக் கொண்ட தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீதமுள்ளவர்களை நீக்குவதற்குள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. “நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையிலிருக்கும் போதே நிர்வாகம் சட்டவிரோதமான முறையில் 43 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது, இது சட்டவிரோதமானது. இது தொடர்பாக தொழிலாளர் ஆணையத்திடம் பல முறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வழக்கு முடியும் வரை பிற தொழிலாளர்களை நிர்வாகம் வேலையிலிருந்து நீக்குவதோ வேறு எந்த நடவடிக்கையுமோ எடுக்கக்கூடாது” என்று நிர்வாகத்திற்கு எதிராக தடையாணை பெறப்பட்டது.

இதற்கிடையில் நிர்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர் விரோதப் போக்காகும் என்று திருப்பெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிர்வாகத்தின் மீது குற்றவியல் சட்டத்தின்படியே நடவடிக்கை எடுக்கலாம். கடந்த 2013 ஜூலையில் போடப்பட்ட இவ்வழக்கு 2014 ஜூலையில் முடிந்தது. வழக்கு விசாரணையின் இறுதியில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தகுதியானவை என்று நிரூபிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு பிறகு நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆணையர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த உத்தரவும் போடவில்லை. ஏன் என்று கேட்டபோது சில டெக்னிக்கல் வேலைகள் இருக்கின்றன அவை முடிந்ததும் ஆர்டர் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

ஒரு புறம் சட்டவிரோத வேலை நீக்கத்திற்கு எதிரான வழக்கு, மறுபுறம் உரிமைகளுக்கான வழக்கு, தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிரான வழக்கு என்று நிர்வாகத்தின் மீது மொத்தம் மூன்று வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஆனால் ஒரு வழக்கில் கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மீண்டும் வேலை நீக்க நடவடிக்கையில் இறங்கியது. 43 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டதற்கு பிறகு வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான தடையாணை அமுலில் இருக்கும் போதே 2014 மே மாதம் 12 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பிற்கு நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுப்பட்டது. “இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19-ன் படி எங்களுக்கு சங்கம் அமைப்பதற்கு உரிமை இருக்கிறது, ஆனால் நிர்வாகம் அந்த அடிப்படை உரிமையை மறுத்து சட்ட விரோதமாக நடந்துகொள்கிறது. எனவே ஒரு குடிமகன் என்கிற வகையில் எங்களுடைய அடிப்படை உரிமைகளை மாவட்ட ஆட்சியராகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்” என்று மனு கொடுக்கப்பட்டது. இதன் மீது மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மீண்டும் ஜூலையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது, அதற்கும் பதில் இல்லை.

தொழிலாளர் ஆணையர், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் என அதிகார மற்றும் நீதித்துறை அனைத்தும் கொரிய முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அனைத்து அரசு அதிகார அமைப்புகளும் ஜி.எஸ்.ஹெச் என்கிற பன்னாட்டு கம்பெனிக்கு விசுவாசமான நாய்களாக நடந்துகொண்டன. இறுதியில் 2014 ஜூலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியரை பார்த்து, “நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக குடும்பத்துடன் உண்ணவிரதம் இருப்போம்” என்று தொழிலாளர்கள் கூறினர். அவரோ, ”அது உங்க உரிமை, உங்க சுதந்திரம், நீங்க இருந்துக்கங்க” என்றார்.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15 அன்று காலை, மாவட்ட ஆட்சியர் கொடியேற்றும் நேரத்தில் “இந்திய குடிமகனின் உரிமைகள் அனைத்தும் காற்றில் பறக்கிறது இதில் கொடியேற்றம் ஒரு கேடா” என்று போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்காக தொழிலாளர்கள் வெவ்வேறு வாகனங்களில் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டிருந்த 500 க்கும் மேற்பட்ட போலீசார் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் வந்து கொண்டிருந்த சிவப்பு சட்டை அணிந்திருந்த அனைவரையும் தடுத்து நிறுத்தி எங்க போற என்று விசாரித்து ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற தொழிலாளர்களை மட்டும் கைது செய்தது.

கைது செய்ய காரணம் வேண்டும் அல்லவா? எனவே தமது வாகனங்களை தாமே அடித்து உடைத்துக் கொண்டு, ஒரு போலீஸ்காரனை விட்டு மற்றொரு போலீஸ்காரனை அடித்து காயமடைந்தது போல செட்டப் செய்துவிட்டு தொழிலாளர்கள் தான் தாக்கினர் என்று கூறி தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, கைது செய்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாகவே போலீசு ரவுடிகள் மிகப்பெரியதொரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். சாலைகளில் தடுப்பரண்களை போட்டு தொழிலாளர்களை சுற்றி வளைத்து தாக்கி கை கால்களை உடைத்திருக்கின்றனர். கைது செய்தவர்களை வாகனத்தில் ஏற்றும் போது முழக்கமிட்ட பல தொழிலாளர்களை குத்தியதில் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியிருக்கிறது. வண்டியில் ஏற்றிய பிறகு வயிற்றில் குத்தி கீழே தள்ளி பூட்ஸ் கால்களால் மிதித்திருக்கிறார்கள். உடம்பில் அடிபடாத இடம் எதுவும் இல்லை என்கிற அளவுக்கு தொழிலாளர்களை அடித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் ஆகஸ்ட் 15 அன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கூடி தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளை கேட்டதற்காக கிடைத்த சுதந்திர தின பரிசு. போலீசின் அனைத்து ரவுடித்தனங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்த்துக்கொண்டு தான் நின்றிருக்கிறார்.

தற்போது 150 தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் ஓய்வு பெற்ற ASP, DSP உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றிருக்கின்றனர். பதவியில் இருக்கின்ற போலீசாரே பொறாமைப்படும் அளவுக்கு இந்த கிழட்டு நரிகள் பன்னாட்டு கம்பெனியின் நலனுக்காக பேயாட்டம் போட்டிருக்கின்றன. மாவட்ட ஆட்சியரின் முன் உரிமைக்காக போராடிய தொழிலாளிகளை ஒடுக்குவதே சட்டத்தின் ஆட்சி என்பதை நிரூபிக்கிறார்களாம். சுதந்திர தினத்தன்று தொழிலாளிகளின் போராட்டம் கருப்பு மையாக மாறிவிடக் கூடாது என அவர்களின் ரத்தத்தை சிந்த வைத்து சிவப்பாக்கி குதூகலித்திருக்கின்றனர்.

தொழிலாளர்களின் கை கால்களை உடைத்து கிரிமினல்களை போல கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறது தமிழக காவல் துறை. கடந்த வாரத்தில் இதே போல புதுச்சேரி மாநிலத்தில் போராடிய தொழிலாளார்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாருதி தொழிலாளர்களுக்கும் இது தான் நேர்ந்தது. இது தான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் போலியானது, பொய்யானது என்பதற்கு இவற்றை விட என்ன நிரூபணம் வேண்டும்?

இந்த சட்டங்களும், நீதிமன்றமும், சமூக அமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களுக்கு எதிரானவை என்பதற்கு இந்த போராட்டம் மட்டுமல்ல நாட்டில் நாள்தோறும் நடக்கும் பல்வேறு போராட்டங்களும் சான்றாக அமைகின்றன.

ஆகஸ்டு 15 சுதந்திரம் மக்களுக்கில்லை என்பதை சுதந்திர தினக் கொடியேற்றத்தின் போதே நிரூபித்திருக்கிறது இந்த அரச வன்முறை. இந்த தொழிலாளிகளுக்கு நேர்ந்ததுதான் தமக்கும் என்று உழைக்கும் மக்கள் உணரும் போது இந்த வன்முறை நேரெதிராக திரும்பும். உரிமைகளையும், உடமைகளையும் இழந்து வாழும் மக்களை எப்போதும் அடிமைகளாகவே நடத்தலாம் என்று ஆளும் வர்க்கம் நினைப்பது ஒரு போதும் தொடராது. சிந்திய ரத்தமும், சிறை வாசமும் அதே தொழிலாளிகளை இரும்பென உறுதிப்படுத்தும்.

அந்த உறுதி உழைக்கும் மக்களையும் பற்றும் போது ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல, அமெரிக்காவோ இல்லை ஆண்டவனோ கூட நினைத்தாலும் உடைக்க முடியாது. அடக்குமுறையை தொடர முடியாது.

பன்னாட்டு நிறுவனம் GSH ஏவி வருகின்ற உரிமை பறிப்பு அடக்கு முறைகளை முறியடிப்போம் !

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்)

–    வினவு செய்தியாளர்.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்.